My Visit to Palm Beach in Australia (Post.14,044)

Written by London Swaminathan

Post No. 14,044

Date uploaded in Sydney, Australia – 2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken by london swaminathan

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Australia is full of beaches, rain forests and national parks. If you go out of cities, you will see nothing but tall trees touching the sky or waves crashing on the coast. The country has Pacific Ocean on the east and Indian Ocean in the West and the South.

Palm beach is one of the famous beaches, approximately one hour drive from Sydney. You can enjoy swimming in the Pacific Ocean or boating or hand gliding etc. at Palm Beach.

It is at the end of three different beaches in a peninsula area. We pass Avalon Beach, Bilgola beach, Whale Beach and reached Palm Beach. At every beach we saw hundreds of cars parked.

(Palm Beach is a suburb in the Northern Beaches region of Greater Sydney, in the state of New South Wales, Australia. Palm Beach is located 41 kilometres north of the Sydney central business district.)

It is a safe beach for children and youths. There are shallow areas where one can swim safely. Moreover, the coast guards are readily stationed there to keep an eye and save people. On the beaches, they plant two flags at a distance and in between any one can enter the sea without any fear.

We went there on New Year’s Day (1-1-2025) and there were 200 to 300 cars. One must pay Parking charge for the cars. Good public bus service is also available connecting all the beaches.

If you want to go in the sea in a ferry, they charge 20 dollars per head for one hour ride; children go free.  I took a seat in the upper deck so that I can take good pictures. The sea is full of Blue Bottle jelly fish which is poisonous. Only when you step on it you are affected. I saw five to ten dead jelly fish on the shore.

***

Three families went to the beach with all the tents and packed lunches. We enjoyed the feast on the shore under shady trees.

Children went for swimming under adult supervision. Youngsters, young couples were taking sun bath. In Australia sun cream is a must to avoid skin cancer. The weather reports add this UV factor in everyday weather report.

***

London Swaminathan’s Foot prints on Sands of Time 1-1-2025

Mighty Pacific Ocean

In the far north is Cairns where from one can go to see Great Barrier Reef; during my last trip in 2015, we hired a glass bottomed boat and saw the living corals and the fish that live in coral reef under the sea.

  • The Great Barrier Reef has 2900 reefs and an incredible 900 islands
  • It covers 2600 kilometres in length
  • Australian coasts are often nicknamed ‘Surfers Paradise,’ due to having a number of world-class surfing spots such as Crescent Head in New South Wales and Noosa Heads in Queensland
  • Australia’s marine environment houses 4000 different fish species, 500 coral species and 50 types of marine mammals
  • More than 85 percent of Australia’s population lives within 50 kilometres of the Australian coastline
  • This geographical feature and interests in sports help Australia to get more medals in Olympic and World Tennis. Australia always maintains its position within the first ten countries in the Olympic Medal Table.

***

Bluebottle Jelly Fish

The bluebottle jellyfish has a toxic sting, but it’s not usually harmful to humans:

The bluebottle’s tentacles contain stinging capsules that release a toxic mixture of proteins and phenols. This venom is deadly to small fish and other sea creatures, but not usually to humans.

Scientific name: Physalia physalis

Alternative name/s:

Indo-Pacific and Portuguese Man o’War

Similar species:

Physalia physalis, Portugese man-of-war

Size Range

Float: 2 cm – 15 cm

Introduction

The Bluebottle, Physalia physalis, is a common, if unwelcome, summer visitor to Sydney beaches. At the mercy of the wind, they are sometimes blown into shallow waters, and often wash up onto the beach.

On the eastern coast of Australia, it is the NE winds and warmer currents that bring them and other organisms that make up the armada or fleets of blue coloured floating colonial cnidarians and their predators, to beaches on the incoming tides.

The float is a bottle or pear-shaped sac that can exceed 15 cm. It is mainly blue, though its upper margin may show delicate shades of green or pink. It is a living, muscular bag that secretes its own gas, which is similar to air. The float has aerodynamic properties and it seems likely that sailing characteristics may be modified by muscular contraction of the crest.

The Bluebottle belongs to the phylum Cnidaria, which includes corals and sea anemones.

Physalia physalis is commonly encountered in the summer months on the eastern coast of Australia, and during Autumn and winter in southern Western Australia

The Bluebottle, Pacific man-o-war, is found in marine waters in the Indian and Pacific Oceans.

–Subham—

Tags-  Palm Beach, Pacific Ocean, Blue bottle jelly fish, coral reef, My visit

முப்பத்து மூவர்; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 11 (Post.14,043)

Written by London Swaminathan

Post No. 14,043

Date uploaded in Sydney, Australia – 2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முப்பத்து மூவர் திருப்பாவை ஆராய்ச்சிக்கட்டுரைகள்-11

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

வேதகாகத்தில் ‘மிஸ்டர் முப்பது’ Mr Thirty  என்று இந்திரனுக்குப் பெயர்; அதாவது திருவாளர் முப்பது; ஏனெனில் அவர் முப்பது என்ற தொகுதியுடைய வேத கால தெய்வங்களுக்கு தலைவர் . இந்திரன் என்பது ஒரே ஆளின்/ தெய்வத்தின்/ பெயர் அல்ல. அது பிரதமர், ஜனாதிபதி, தலைவர் என்பது போலப் பதவியின் பெயர்; இதைக் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) போன்ற பெரியோர்கள் தமது சொற்பழிவுகளில் விளக்கியுள்ளார்கள்; அது தெரியாத வெள்ளைக்கார அரை வேக்காடுகளும் அவர்களைப் பின்பற்றும் அரைகுறை அறிஞர்களும் ‘இந்திரன் அதைச் செய்தான் இதைச் செய்தான்’ என்று ஒரே ஆளின் பேரில் கதை கட்டிவிட்டுள்ளனர் . நிற்க. 

***

முப்பத்து மூவர் என்பதுடன் கோடி என்ற எண்ணைச் சேர்த்து முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லுவது வழக்கம். அதாவது கடவுளின் உருவங்கள் எண்ணற்றவை என்பதே இதன் பொருள். எடுத்துக்கட்டாக நாம் அஷ்டோத்திரம் (108) என்றும் சஹஸ்ர நாமம் (1008)  என்றும்  பெயர்களைச் சொல்லி வழிபடுகிறோம் இறைவனின் குணங்களை இப்படி 108, 1008 எண்களால் குறிப்பிடுகிறோம். லலிதா சஹஸ்ர நாமக்  கதைகளிலும் தேவிக்குப் பல கோடி பெயர்கள் இருக்கும் சம்பவம் வருகிறது.

***

தேவர்கள் எண்ணிக்கை 33. அவர்கள் யார் யார் ?

ஆதித்யர்கள் 12;

ருத்ரர்கள் 11;

வசுக்கள் 8;

அஸ்வினி தேவர்கள் 2= 33

இவர்களுக்கு இந்திரன் தலைவன்

இவர்களைத் துவாதச ஆதித்தர், ஏகாதச ருத்ரர், அஷ்ட வசுக்கள் , அஸ்வினி தேவர்கள் அல்லது நாஸத்யர்கள் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவர்.

இந்த விஷயம் வேத கால இலக்கியம் முழுவதிலும் வருவதைச் சங்க நூல்களும் செப்புகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமதத்தின் அத்தனை தகவல்களையும் தமிழர்கள் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. பரிபாடல்திருமுருகாற்றுப்படை மற்றும் சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் முப்பத்து மூவர் இடம்பெறுகின்றனர்.

****

பரிபாடல் வரிகள்

விதியின் மக்களும்

மாசிலெண்மரும் பதினோரு கபிலரும்

……..

தாமா விருவரும்  — பரிபாடல்  3

(கபிலர் – காசிபன் மக்கள் பன்னிரு ஆதித்தர் )

****

நாலெண் டேவரும் நயந்து நிற்பாடுவார் —பரிபாடல்  3

(வசுக்கள், திவாகரர்/ஆதித்தர், உருத்திரர், மருத்துவர் என நால்வகைப்பட்ட தேவர்களும் விரும்பி நின்னைப் புகழ்வர் )

****

உலகிருளகற்றிய பதின் மருமிரிருவரும் 

மருந்துரையிறுவருவருந்திருந்து  நூலெண்மரும்

ஆதிரை முதல்வனிற்கிளந்த 

நாதர் பன்னொருவரும்— பரிபாடல் 8

****

நால்வேறியற் கைப்பதி னொரு மூவர்  — திருமுருகாற்றுப்படை

****

நால்வகைத்த தேவரும் மூவறுகணங்களும்

பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து

வேறு வேறு கடவுளர் சாறு சிறந்ததொரு பாடல் — சிலப்பதிகாரம்

***

பரிபாடல் முதலிய நூல்களில் விரிவாகச் சொன்ன தகவலை ஆண்டாள் ஓரிரு சொற்களில் முப்பத்து மூவர் என்று சுருக்கிச் சொன்னதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.  33 என்ற எண்ணைச் சொன்னாலே தமிழர்களுக்கு உடனே புரிந்து விடும்; அந்த அளவுக்குத் தமிழர்கள் வேதங்களை அறிந்திருந்தனர் என்பதை ஆண்டாள் பாசுரம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பரிபாடலில் உள்ள பெரும்பாலான விஷயங்கள், ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாலும் அவரது வாசகங்கள் சங்க கால வாசககங்களுக்கு அருகிலிருப்பதாலும் அவரை ஒன்பதாவது நூற்றாண்டில் வைக்காமல் ஏழாவது நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைப்பதே பொருந்தும்.

—subham—-

Tags– முப்பத்து மூவர், திருப்பாவை, ஆராய்ச்சிக்கட்டுரைகள் 11

ராமாயணத்தில் வரங்கள் (25) குருஜனங்கள் ஆசியால் சபரி ஸ்வர்க்கம் ஏகியது! (Post No.14,042)

Rama blessing Sabari

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,042

Date uploaded in Sydney, Australia – –2 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (25)

ராமாயணத்தில் வரங்கள் (25) குருஜனங்கள் ஆசியால் சபரி ஸ்வர்க்கம் ஏகியது!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் எழுபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது சபரி ஸ்வர்க்கமடைவது என்னும் ஸர்க்கம்.

ஶ்ரீ ராமரும்  லக்ஷ்மணரும் கபந்தனால் காண்பிக்கப்பட்ட வழியில் பம்பையை நோக்கிச் சென்று அங்கு சபரியின் அழகான ஆசிரமத்தைக் அடைந்தனர். அவர்கள் அங்கு சபரியைக் கண்டனர்.

சபரி அவ்விருவர்களையும் கை கூப்பித் தொழுது ராமருடைய திருவடிகளில் விழுந்து சேவித்தாள்

ராமர் சபரியை நோக்கி, “உனது தவம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதா, உனது விரதங்கள் முடிவு பெற்றனவா,  மனத்திருப்தி உனக்கிருக்கிறதா” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

உடனே சபரி, “தேவரீருடைய தரிசனத்தால் இப்பொழுது என்னால் தவத்தின் பயன் அடையப்பட்டது. இப்பொழுது எனது தவம் சபலமாயிற்று. ஆசிரியர்கள் நன்கு பூஜிக்கப்பட்டவர்களாக ஆனார்கள். இப்பொழுது தான் எனது பிறவி வாழ்வுற்றதாக ஆகிறது. ஸ்வர்க்கமும் கிடைக்கப் போகிறது. தேவரீரது குளிர்ந்த கடாக்ஷத்தால் பரிசுத்தையாக ஆகிறேன். தங்களது பிரசாதத்தால் சாச்வதமான உலகங்களை அடையப் போகிறேன்” என்று கூறினாள். பின்னர் தொடர்ந்தாள்;

சித்ரகூடம் த்வயி ப்ராப்தே விமானைரதுலப்ரபை: |

இதஸ்தே திவமாரூடா யானஹம் பர்யசாரிஷம் |\

யான் அஹம் – எவர்களுக்கு நான்

பர்யசாரிஷம் – தொண்டு புரிந்து வந்தேனோ

தே – அவர்கள் (அதாவது சபரியின் குருஜனங்கள்)

இத: – இவ்விடத்திலிருந்து

த்வயி – தேவரீர்

சித்ரகூடம் – சித்ரகூடத்தில்

ப்ராப்தே – எழுந்தருளியபொழுது

அதுலப்ரபை: – ஒப்பற்ற ஒளி கொண்டு விளங்கும்

விமானை: – தெய்வ விமானங்களில் ஏறிக்கொண்டு

திவம் – சுவர்க்கத்திற்கு

ஆரூடா: – எழுந்தருளிவிட்டார்கள்.

தைஸ்சாஹமுக்தா தர்மக்ஞைர்மஹாபாகைர்மஹரிஷிபி: |

ஆகமிஷ்யதி தே ராம: சுபுண்யமிமமாஸ்ரமம் ||

தர்மக்ஞை: = தர்ம ஞானமுடையவர்களும்

மஹாபாகை: – மஹா புண்யாத்மாக்களும்

மஹரிஷிபி: – முனிவர் பெருமான்களுமான

தை: ச – அவர்களாலேயே

அஹம் – நான்

உக்தா: – பின்கண்டவாறு ஆக்ஞாபிக்கப்பட்டேன்

ராம: – ஶ்ரீ ராமர்

சுபுண்யம் – மகா புனிதமான

இமம் தே – இந்த உனது

ஆஸ்ரமம் – ஆசிரமத்தில்

ஆகமிஷ்யதி – எழுந்தருளப்போகிறார்

ச தே ப்ரதிக்ருஹீதவ்ய: சௌமித்ரிசஹிதோதிதி: |

தம் ச த்ருஷ்டா வரான் லோகான்க்ஷயாம்ஸ்த்வம் கமிஷ்யஸி ||

சௌமித்ரி சஹித: – லக்ஷ்மணரோடு கூட

ஸ: – அவர்

தே அதிதி: – உனது அதிதியாய்

ப்ரதிக்ருஹீதவ்ய: – பூஜிக்கப்பட வேண்டியவர்

த்வம் ச தம் – நீயும் அவரை

த்ருஷ்ட்வா – தரிசித்து விட்டு

வரான் லோகான் – சிறந்த உலகங்கள

கமிஷ்யஸி – அடைவாய்

          ஆரண்ய காண்டம் 74-வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14,15,16

புருஷோத்தம! பம்பையின் கரையிலுண்டான பல்வகை கனி கிழங்குகள் தேவரீருக்கென்றே அடியேனால் பரிபாலித்து வைக்கப்பட்டிருக்கிறஹு”

என்று இவ்வாறு சபரி ராமரை நோக்கிக் கூறினாள்.

பின்னர் தனது வனத்தை அவர்களுக்குச் சுற்றிக் காண்பித்தாள்.

ராமர் சபரியை நோக்கி, “உனது மனோரதத்தை நீ அடைவாயாக” என்று கூறினார். உடனே சபரி தனது உடலை அக்னியில் சமர்ப்பணம் செய்து ஸ்வர்க்கத்திற்கு புறப்பட்டாள்.

இங்கு சபரி தொண்டு புரிந்த குருஜனங்கள் அவளுக்கு சுபமான ஆசியைத் தந்தார்களா அல்லது வரத்தை வழங்கினார்களா என்பது சரியாகத் தெரியவில்லை.

என்றாலும் அவர்களின் அனுக்ரஹத்தால் சபரி ராமரை தரிசித்தாள்; ஸ்வர்க்கம் ஏகினாள் என்பது நன்கு தெரிய வருகிறது

***

Hindu Crossword 112025 (Post No.14,041)

Written by London Swaminathan

Post No. 14,041

Date uploaded in Sydney, Australia – 1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Crossword 112025

1 2 3  4 5
          
  6       
      7   
8         
          
      9   
 10        

ACROSS

1.Nine Gems in Hindu literature

6. Rim, Felly of a wheel, Thuderbolt, Part of Jain Tirtankara, Lord Ganesh name

7.Juice

8.Debatable, Worthy of arguing, disputable in Sanskrit and Indian languages

9.Residence  of Hindu religious heads

10. Maruti’s Mother

DOWN

1. Cause, Motive, Sign, Pretext in Sanskrit and Indian languages.

2.Forest Man in Sanskrit is Monkey in Ramayana

3.Great epic of India that covered up to Sri Lanka.

4.Twins of Rig Veda

5.Husband of Rathi burnt to ashes by Lord Shiva.

N1AV2AR3ATN4AM5
I A A  A A
M N6EMI S N
I A A R7ASM
T8ARKYA T A
T A A  Y T
A   N M9ATH
 A10NJANA  A

—Subham—

Tags- Hindu Crossword 112025 .

January 2025 Calendar ; Tulsidas Sayings (Post No.14,040)

January 2025 Calendar ; Tulsidas Sayings (Post No.14,040)

Written by London Swaminathan

Post No. 14,040

Date uploaded in Sydney, Australia – 1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

FESTIVAL DAYS:– JANUARY 1-New Year Day; 6-Guru Gobind Jayanthi; 10-Vaikunda Ekadasi; 12- Swami Vivekanandar Jayanthi ; National Youth Day ;  13- Bogi Festival; Arudra Darisan; 14- Makara Sankranti/Pongal 15- Cattle Festival; Kanu Pongal; ;Tiruvalluvar Day; 16-Farmers Day; 23- Netaji Jayanthi; 26-Republic Day; 29-Thai Amavasai; 30- Gandhiji’s Death Anniversary

*****

New Moon Day – 29; Full Moon Day-13; Ekadasi Fasting Days -10, 25

Auspicious Days

  • January 16: Thursday, with a Subh Tithi of Tritiya 
  • January 19: Sunday, with an auspicious marriage muhurat from 12:28 PM to 8:28 PM 
  • January 23: Thursday, with an auspicious marriage muhurat from 3:38 PM to 5:06 PM 
  • January 24: Friday, with an auspicious marriage muhurat from 7:17 AM to 5:37 PM 
  • January 26: Sunday, with an auspicious marriage muhurat from 2:04 PM to 7:32 PM 

*****

Sayings from Goswami Tulsidas

January 1 Wednesday

1. “सेवा सोई सप्रेम करी, जाकी छोटी न जाइ।” (Seva soi saprem kari, jaaki chhoti na jaai.)

Tulsidas emphasizes that true service is rendered with love and without any feelings of inferiority. 

***

January 2 Thursday

  2. “राम से बड़ा राम का नाम।” (Raam se bada Raam ka naam.)

the power in the name of Lord Rama, surpasses even Rama Himself in sanctity and effect.

***

January 3 Friday

3. “बिनु सतसंग विवेक न होई।” (Binu satsang vivek na hoi.)

Without keeping the company of the righteous., one cannot develop discernment or the ability to make wise decisions.

***

January 4 Saturday

4. “धीरज, धर्म, मित्र, और नारी। आपद काल परखिये चारी।” (Dheeraj, dharma, mitra, aur naari. Aapad kaal parakhiye chaari.)

This proverb explains that a person’s patience, fidelity to dharma (righteousness), the loyalty of friends, and the virtue of a spouse are truly tested during times of crisis.

***

January 5 Sunday

5. “कामी नारी पियारी जिमी, लोभी प्रिय जिमि दाम।” (Kaami naari piyaari jimi, lobhi priya jimi daam.)

Through this saying, Tulsidas draws a parallel between a lustful person’s affection for women and a greedy person’s love for wealth, illustrating the nature of desire and attachment.

***

January 6 Monday

6. “जहाँ सुमति तहँ सम्पत्ति नाना।” (Jahaan sumati tah sampatti naana.)

where there is good intellect and understanding, wealth of various kinds naturally follows.

***

January 7 Tuesday

7. “सोइ सुखवा सो सुखी जाना।” (Soi sukhava so sukhi jaana.)

true happiness is what one perceives as happiness.

***

January 8 Wednesday

8. “तुलसी मीठे वचन से सुख उपजत चहुँ ओर।” (Tulsi meethe vachan se sukh upjat chahun or.)

sweet and pleasant words spread happiness in every direction.

***

January 9 Thursday 

9. “जाकी रही भावना जैसी, प्रभु मूरत तिन देखी तैसी।” (Jaaki rahi bhaavna jaisi, prabhu moorat tin dekhi taisi.)

God manifests Himself to the devotee in the form that matches the devotee’s feelings and devotion.

***

January 10 Friday

10. “संत नहीं तीन लोक में, जो बैरी संग न नेह।” (Sant nahi teen lok mein, jo bairi sang na neha.)

true saints are those who love even their enemies, advocating for universal love and compassion.

***

January 11 Saturday

11. “दीन दयाल विरिद संभारी। हरहु नाथ मम संकट भारी।” (Deen dayaal virid sambhaari. Harahu naath mam sankat bhaari.)

Tulsidas prays to God, who is compassionate towards the downtrodden, to alleviate his heavy burdens and troubles, demonstrating his faith in divine benevolence.

***

January 12 Sunday

12. “तुलसी सब कुछ सहज में होई।” (Tulasi sab kuch sahaj mein hoi.)

everything happens naturally and effortlessly; nothing is forced.

***

January 13 Monday

14. “बिगरी बात बने नहीं लाख करो किन कोय।” (Bigri baat bane nahi laakh karo kin koy.)

some things cannot be mended despite efforts.

***

January 14 Tuesday  

13. “प्रभु ताको जानीये नीको, जो प्रभु संग करै बैर।” (Prabhu taako jaaniye neeko, jo prabhu sang karai bair.)

Consider even those who are adversarial towards God as good.

****

January 15 Wednesday

15. “तुलसी वह जानीये देही, जो पर विपत्ति काटे नेही।” (Tulsi vah jaaniye dehi, jo par vipatti kaate nehi.)

a true human is one who aids in alleviating others’ adversities and troubles.

***

January 16 Thursday 

16. “बिनु हरि कृपा मिलहि नहीं संता।” (Binu Hari kripa milahi nahi santa.)

without the grace of God, one cannot attain the company or the presence of saints .

***

January 17 Friday

17. “काल करे सो आज कर, आज करे सो अब।” (Kaal kare so aaj kar, aaj kare so ab.)

one should keep pace with time and avoid procrastination.

***

January 18 Saturday

18. “जाके प्रिय न राम वैदेही।” (Jaake priya na Ram Vaidehi.)

those who do not hold Lord Rama and Sita dear miss out on true happiness in life.

***

January 19 Sunday

20. “तुलसी जग आये कौन भले, कौन मंदे।” (Tulsi jag aaye kaun bhale, kaun mande.)

who becomes good or bad after coming into this world ; actions define a person’s character.

***

January 20 Monday

21. “सब नर करहिं परस्पर प्रीती।” (Sab nar karahin paraspar preeti.)

all humans should love each other.

***

January 21 Tuesday

19. “जग में बैरी कोई नहीं, जो मन शीतल होय।” (Jag mein bairi koi nahi, jo man sheetal hoy.)

if your mind is calm and pure, you have no enemies in this world.

 ***

January 22 Wednesday

 “सत्यम अमर्यादितम नाम।”

(Satyam amaryaditam naam.)

 Truth is beyond limits.

***

January 23 Thursday 

बिनय करत कूकरत चितै भवानीं।”

(Binay karat kookarat chitai bhavani.)

With devotion and humility, remember Goddess Bhavani (a form of Durga).

***

January 24 Friday

“बिनती करत मराठा जोई।”

(Binati karat maratha joi.)

 Pray with utmost devotion.

***

January 25 Saturday

“सुनत दुनु भाग्य आपदानु।”

(Sunat dunu bhagya aapadaanu.)

Listening to both sides of a story is good fortune.

***

January 26 Sunday

“रघुबीर बिन ना मांगौँ चानौं।”

(Raghubeer bin naa maango chaanau.)

Without the grace of Lord Rama, do not ask for anything else.

***

January 27 Monday

“Lust, anger, vanity and covetousness are all paths leading to hell. Abjuring, all these adore the Hero of Raghu’s line, whom saints worship.”

***

January 28 Tuesday

“Nothing is unattainable, my Lord, to him who enjoys Your grace. Through Your might, a mere shred of cotton can surely burn a submarine fire (the impossible can be made possible).”

***

January 29 Wednesday

“साधु रूप कर जीवन उधारण कांपू।”

(Saadhu roop kar jeevan udhaaran kaampu.)

: The life is uplifted by adopting a saintly character.

***

January 30 Thursday 

“कृपा कटाक्ष तव प्राण जाय।”

(Kripa kataaksha tav praan jaay.)

A mere glance of your grace can save one’s life.

***

January 31 Friday

 “जो दीन के हित रूपी करि धारी।”

(Jo deen ke hit roopi kari dhari.)

 He who takes the form of what is beneficial for the humble and needy.

—Subham—

 Tags–Tulsidas, Quotes, Sayings, Ramcharitmanas, Tulsi Ramayana 

ஜனவரி 2025 காலண்டர்; வள்ளலார் பொன்மொழிகள் (Post No.14,039)

Written by London Swaminathan

Post No. 14,039

Date uploaded in Sydney, Australia – 1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்/ வள்ளலார் பொன்மொழிகள்

வள்ளலாரின் தெய்வமணிமாலை பாடலிலிருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள்

****

பண்டிகை நாட்கள்:– ஜனவரி 1-புத்தாண்டு தினம்; 6-குரு கோவிந்த ஜெயந்தி; 10-வைகுண்ட ஏகாதசி; 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி ; தேசீய இளைஞர் தினம் ;  13- போகிப் பண்டிகை; ஆருத்ரா தரிசனம் 14- பொங்கல்/ மகர சங்கராந்தி 15- மாட்டுப்பொங்கல் ;கணுப்பொங்கல்- திருவள்ளுவர் தினம்; 16-உழவர் தினம்; 23- நேதாஜி ஜெயந்தி 26-குடியரசு தினம்; 29-தை அமாவாசை; 30- காந்திஜி நினைவு தினம்

*****

அமாவாசை- ஜனவரி 29; பெளர்ணமி-13; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25

சுப முஹுர்த்த நாட்கள்

  • January 16: Thursday, with a Subh Tithi of Tritiya 
  • January 19: Sunday, with an auspicious marriage muhurat from 12:28 PM to 8:28 PM 
  • January 23: Thursday, with an auspicious marriage muhurat from 3:38 PM to 5:06 PM 
  • January 24: Friday, with an auspicious marriage muhurat from 7:17 AM to 5:37 PM 
  • January 26: Sunday, with an auspicious marriage muhurat from 2:04 PM to 7:32 PM 
  • *****

ஜனவரி 1  புதன் கிழமை

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

***

ஜனவரி 2  வியாழக் கிழமை

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

****

ஜனவரி 3  வெள்ளிக் கிழமை 

மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

****

ஜனவரி 4  சனிக் கிழமை

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

ஜனவரி 5  ஞாயிற்றுக் கிழமை

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத

இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ

திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல்

இடுகின்ற திறமும்

****

ஜனவரி 6  திங்கட் கிழமை

இறையாம்

நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள

நினைவிடா நெறியும்

****

ஜனவரி 7  செவ்வாய்க் கிழமை

அயலார்

நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று

நெகிழாத திடமும்

****

ஜனவரி 8  புதன் கிழமை

உலகில்

சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்

தீங்குசொல் லாததெளிவும்

திரம்ஒன்று வாய்மையும் து‘ய்மையும் தந்துநின்

திருவடிக் காளாக்குவாய்

****

ஜனவரி 9  வியாழக் கிழமை

வள்ளல்உனை உள்ளபடி வாழ்த்துகின் றோர்தமை

மதித்திடுவ தன்றிமற்றை

வானவரை மதிஎன்னில் நான்அவரை ஒருகனவின்

மாட்டினும் மறந்தும்மதியேன்

****

ஜனவரி 10  வெள்ளிக் கிழமை 

கள்ளம்அறும் உள்ளம்உறும் நின்பதம்அ லால்வேறு

கடவுளர் பதத்தைஅவர்என்

கண்எதிர் அடுத்தைய நண்என அளிப்பினும்

கடுஎன வெறுத்துநிற்பேன்

****

ஜனவரி 11  சனிக் கிழமை

எள்ளளவும் இம்மொழியி லேசுமொழி அன்றுண்மை

என்னை ஆண் டருள்புரிகுவாய்

என்தந்தை யேஎனது தாயேஎன் இன்பமே

என்றன்அறி வேஎன்அன்பே

****

ஜனவரி 12  ஞாயிற்றுக் கிழமை

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

எனைப்பற்றி டாமல்அருள்வாய்

****

ஜனவரி 13  திங்கட் கிழமை

சேமமிகு மாமறையின் ஓம்எனும் அருட்பதத்

திறன்அருளி மலயமுனிவன்

சிந்தனையின் வந்தனைஉ வந்தமெய்ஞ் ஞானசிவ

தேசிக சிகாரத்னமே

****

ஜனவரி 14  செவ்வாய்க் கிழமை

அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர்

அடிமலர் முடிக்கணிந்தோர்க்

கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்

தற்பமும்வி கற்பம்உறுமோ

****

ஜனவரி 15  புதன் கிழமை

வள்ளல்உன் சேவடிக்கண்

மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை

வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு

பித்துண்ட வன்குரங்கோ

****

ஜனவரி 16  வியாழக் கிழமை

பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ

பேதைவிளை யாடுபந்தோ

காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங் கோபெருங்

காற்றினாற் சுழல்கறங்கோ

காலவடி வோஇந்த்ர ஜாலவடி வோஎனது

கர்மவடி வோஅறிகிலேன்

****

ஜனவரி 17  வெள்ளிக் கிழமை 

கற்ற்மே லவரொடும் கூடிநில் லேன்கல்வி

கற்கும்நெறி தேர்ந்துகல்லேன்

கனிவுகொண் டுவதுதிரு அடியைஒரு கனவினும்

கருதிலேன் நல்லன்அல்லேன்

குற்றமே செய்வதென் குணமாகும்

****

ஜனவரி 18  சனிக் கிழமை

 அப்பெருங் குற்றம்எல் லாம்குணம்எனக்

கொள்ளுவது நின்அருட்குணமாகும் என்னில்என்

குறைதவிர்த் தருள்புரிகுவாய்

பெற்றமேல் வரும்ஒரு பெருந்தகையின் அருள்உருப்

பெற்றெழுந் தோங்குசுடரே

****

ஜனவரி 19  ஞாயிற்றுக் கிழமை

 . சேவலம் கொடிகொண்ட நினைஅன்றி வேறுசிறு

தேவரைச் சிந்தைசெய்வோர்

செங்கனியை விட்டுவேப் பங்கனியை உண்ணும்ஒரு

சிறுகருங் காக்கைநிகர்வார்

****

ஜனவரி 20  திங்கட் கிழமை

நாவலங் காரம்அற வேறுபுகழ் பேசிநின்

நற்புகழ் வழுத்தாதபேர்

நாய்ப்பால் விரும்பிஆன் து‘ய்ப்பாலை நயவாத

நவையுடைப் பேயர் ஆவார்

****

ஜனவரி 21  செவ்வாய்க் கிழமை

நீவலந் தரநினது குற்றேவல் புரியாது

நின்றுமற் றேவல்புரிவோர்

நெல்லுக் கிறைக்காது புல்லுக் கிறைக்கின்ற

நெடியவெறு வீணராவார்

****

ஜனவரி 22  புதன் கிழமை

பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ

பெய்சிறையில் இன்னும்ஒருகால்

பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்

பெறுந்துயர் மறந்துவிடுமோ

****

ஜனவரி 23  வியாழக் கிழமை

இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்

இறப்பிக்க எண்ணம்உறுமோ

எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்

இருந்தவடு எண்ணுறானோ

****

ஜனவரி 24  வெள்ளிக் கிழமை 

கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு

காசுக்கும் மதியேன்எலாம்

கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்

கலந்திடப் பெற்றுநின்றேன்

****

ஜனவரி 25  சனிக் கிழமை

உடைஉண்டு கொடையும்உண்டு

உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்

உளம்உண்டு வளமும்உண்டு

தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள

செல்வங்கள் யாவும்உண்டு

தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்

தியானமுண் டாயில் 

****

ஜனவரி 26  ஞாயிற்றுக் கிழமை

உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை

ஒல்லைவிட் டிடவுமில்லை

உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை

உனைஅன்றி வேறும்இல்லை

இளையன்அவ னுக்கருள வேண்டும்

****

ஜனவரி 27  திங்கட் கிழமை

எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே

என்உயிர்க் குயிராகும்ஓர்

ஏகமே ஆனந்த போகமே யோகமே

என்பெருஞ் செல்வமே

****

ஜனவரி 28  செவ்வாய்க் கிழமை

நன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான

மூர்த்தியே முடிவிலாத

முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்

முத்தாடும் அருமைமகனே

****

ஜனவரி 29  புதன் கிழமை

பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்

பற்றருளி என்னைஇந்தப்

படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்

பண்ணாமல் ஆண்டருளுவாய்

****

ஜனவரி 30  வியாழக் கிழமை

நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை

நாடாமை ஆகும் இந்த

நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட

நாய்வந்து கவ்விஅந்தோ

தான்கொண்டு போவதினி என்செய்வேன்

ஜனவரி 31  வெள்ளிக் கிழமை 

தளராமை என்னும்ஒருகைத்

தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன்

தன்முகம் பார்த்தருளுவாய்

வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை

மழையே மழைக்கொண்டலே

வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே

மயில்ஏறு மாணிக்கமே

தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

*****

MY OLD ARTICLES /POSTS

வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)  29 September   2021   

****

மேலும் 30 வள்ளலார் பொன்மொழிகள்நவம்பர் 2021 நற்சிந்தனை காலண்டர் (10,280) October 312021

****

டிசம்பர் 2021 காலண்டர் – 31 வள்ளலார் பொன்மொழிகள் (Post No.10,386) November 28, 2021

****

—-Subham—-

Tags- வள்ளலார் , பொன்மொழிகள் , அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள்

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி! (Post No.14,038)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,038

Date uploaded in Sydney, Australia – –1 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

23-12-24 KALKIONLINEல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.

மூளை ஆற்றல் 

மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டி! 

ச. நாகராஜன் 

எந்த மொழி ஆகட்டும் அதில் வரும் எந்தப் பத்திரிகை ஆகட்டும், அது கொண்டிருக்கும் ஒரு முக்கியமான அம்சம் – குறுக்கெழுத்துப் போட்டி.

வேலை வெட்டி இல்லாமல் இதை ஏன் குடைந்து கொண்டிருக்கிறாய் என்று குறுக்கெழுத்துப் போட்டியுடன் போராடிக் கொண்டிருப்பவர்களை கிண்டல் செய்பவர்களை அன்றாடம் நாம் பார்க்கிறோம்.

ஆனால் அது மூளைக்கு வேலை கொடுத்து புத்திகூர்மையை வளர்க்கும் ஒரு போட்டி என்பதை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

குறுக்கெழுத்துப் போட்டி முதன் முதலாக 21-12-1913 அன்று நியூயார்க் வோர்ல்ட் என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டது.

இதை உருவாக்கியவர் ஆர்தர் வைன் (Arthur Wynneஎன்னும் ஒரு பத்திரிகையாளர் தான்.

இதை வோர்ட்  க்ராஸ் என்று முதலில் கூறி வந்தனர். பின்னர் க்ராஸ் வோர்ட் பஸில் என்று பெயர் மாறியது.

இது அடைந்த வரவேற்பைப் பார்த்த இதர பத்திரிகைகளும் இதை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க ஆரம்பித்தன.

இப்போதுள்ள கட்டங்கள் போல் அல்லாமல் முதலில் இது டயமண்ட் வடிவத்தில் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் இதன் வடிவம் இப்போது உள்ளது போல மாறியது. 1942ல் நியூயார்க் டைம்ஸ் இதை முதன் முதலாக பிரசுரிக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான், இதன் புகழ் பெரிதும் பரவி விட்டது.

யார் சிறந்த புதிர்களை அமைத்துத் தருகிறார்களோ அவர்களுக்கு நியூ யார்க் டைம்ஸ் வியக்க வைக்கும் ஊதியத்தைத் தந்தது. ஞாயிற்றுக்கிழமை புதிர் என்றால் 1500 டாலர். இதர நாட்களில் வரும் புதிர் என்றால் 500 டாலர்.

நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்துப் போட்டியை 2 நிமிடம் 14 வினாடிகளில் பூர்த்தி செய்து சாதனை படைத்தவர் ஸ்டான்லி நியூமேன் என்பவர். 1996ல் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

1926ம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் இந்த புதிரைத் தீர்க்க முடியாத ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் இந்த புதிரை விடுவிப்பவர்களுக்கு அது தெரியும் என்று எழுதி இருந்தார். ஆனால் அந்த புதிர் விடுபடவே இல்லை.

இந்தப் புதிர்களில் ஆறு வகைகள் இருந்தன.

புதிர்கள் வர வர அதற்கான புத்தகங்களும் வரலாயின. இன்று உலகில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உருவாகி விட்டன. முதல் புத்தகம் 1924இல் வெளியானது.

இந்தப் புதிரில் வந்த மிகப் பெரிய வார்த்தை 56 (ஆங்கில) எழுத்துக்களைக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்து ஆயிர்த்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் உருவானது தான் நாம் பார்க்கும் ஸ்க்ராபிள் என்னும் புதிர்.

இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தவுடன் இது பாரிஸ் நகரில் தடை செய்யப்பட்டது. காரணம் இதில் ரகசிய சங்கேத செய்திகளை அனுப்பி நாசவேலைகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால் தான்!

இங்கிலாந்தில் ரூபஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரோஜர் ஸ்குயிரெஸ் (Roger Squires )75000 குறுக்கெழுத்துப் போட்டிகளை உருவாக்கினார். இவற்றை விடுவிப்பதற்கான 20 லட்சம் துப்புகள் (Clues) தரப்பட்டன. இவை 33 நாடுகளில் இந்தப் போட்டியின் ஆர்வலர்களால் விளையாடப்பட்டன.

7”x7” கட்டத்தில் 91000 சதுரக் கட்டங்களில் 28000 துப்புகள் தரப்பட்டிருந்த குறுக்கெழுத்துப் புதிரை கின்னஸ் புக் ஆஃப் ரிகார்ட்ஸ் மிகப் பெரிய குறுக்கெழுத்துப் புதிர் என்று பதிவு செய்திருக்கிறது.

சாமானியன் முதல் அரசர் மற்றும் அரசிகளாலும் இது வரவேற்கப்பட்டது என்பது ஒரு சுவையான செய்தி.

மிகப் பெரிய குறுக்கெழுத்துப் போட்டியில் 244971 கட்டங்கள் இருந்தன. இதை விடுவிக்க 66,666 துப்புகள் தரப்பட்டன. இதை ஜப்பானைச் சேர்ந்த நிகோலி கம்பெனி தயாரித்திருந்தது.

குறுக்கெழுத்துப் போட்டி ஆர்வலர்களுக்கு . “cruciverbalists” என்று ஒரு விசேஷ பெயரும் உண்டு

ஏராளமான உயிர் எழுத்துக்கள் இருப்பதால் இத்தாலிய  மொழியில் குறுக்கெழுத்துப் போட்டியை அமைப்பது என்பது ஒரு கஷ்டமான காரியம் என்று சொல்லப்படுகிறது,

பயன்கள் என்ன?

குறுக்கெழுத்துப் போட்டியை சரியாக பூர்த்தி செய்வதால் என்ன பயன்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு பெரும் பட்டியலே தரப்படுகிறது.

மனதிற்கான பயிற்சி இது. மனோவேகம் அதிகரிப்பதோடு பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உருவாகிறது. நினவாற்றல் கூடுகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோய் தடுக்கப்படுகிறது.

மூளையின் மோட்டார் திறமைகள் (நரம்பு இயக்கு தசை) அதிகமாகின்றன. மன அழுத்தம் குறைகிறது.

மூளையில் டோபமைன் அதிகரிக்கிறது. இதனால் மனோநிலையும் மூளை திறமையும் கூடுகிறது.

இடது மற்றும் வலது பக்க மூளை ஆற்றல் செயல்படுவதால் முழு மூளை ஆற்றலை இது ஊக்குவிக்கிறது.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இந்த புதிரை விடுவிக்க ஆரம்பிக்கும் போது குடும்பத்தில் ஒரு குதூகலம் ஏற்படுத்துகிறது.

குழந்தையிலிருந்து அதிக வயதானவர்கள் வரை, ஆண், பெண் பாகுபாடின்றி, தேசம், இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து அனைவரும் புதிர் விளையாட்டில் ஈடுபடலாம்.

மொத்தத்தில் உடன்மறை சிந்தனை ஆற்றல் கூடுகிறது.

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதில் பல வித அணுகுமுறையைக் கையாள நேர்வதால் பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி அதிகரிக்கிறது.

மூளைக்கு உற்சாகம் தருவதோடு இவை அதிகம் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சமூக ஊடகங்களில் தேவையற்று நேரத்தைக் கழிப்பது போன்றவற்றைத் தடுத்து அதனால் ஏற்படும் தீமைகளைத் தடுக்கிறது.

என்ன, குறுக்கெழுத்துப் போட்டி வெளியாகியுள்ள பக்கத்தை எடுப்பதற்கு கிளம்பிவிட்டீர்களா? வெற்றி பெற வாழ்த்துக்கள்!

***

Hindu Crossword311224 (Post No.14,037)

Written by London Swaminathan

Post No. 14,037

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2345
     6
  7   
8     
  9   

ACROSS

1.humility, polite conduct; boy’s name

6. (right to left); old age; gerontology is derived from this Sanskrit word

7.bird,

8.weapon used with Mantras,

9.Pranava mantra; primordial sound

DOWN

1.boon, 2.Word Night is derived from this Sanskrit word

3.Rig Vedic word for enemy, weapon, envious, unkind

4.Big Fire Sacrifice that goes with Asvamedha, Rajasuya etc

5.Indumathi’s husband in Raghuvamsa of Kalidasa; also Brahma, Goat  

311224

V1IN2A3Y4A5
A ARAJ6
R K7AGA
A8STRA 
M A9UM 

—subham—

Tags-Hindu Crossword311224

திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-10 (Post No.14,036)

Written by London Swaminathan

Post No. 14,036

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவெம்பாவை- திருப்பாவை  ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10

1

தமிழில் நமக்குக் கிடைத்த பாவை நூல்கள் இரண்டு ; அவை திருவெம்பாவையும் திருப்பாவையும்  ஆகும்.

****

2

மாணிக்கவாசகர்  இயற்றியது திருவெம்பாவை;இருபது பாடல்கள் உடையது

ஆண்டாள் இயற்றியது திருப்பாவை; முப்பது பாடல்கள் உடையது.

*****

3

மாணிக்கவாசகர் காலம்  என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர் என்று நிரூபித்துள்ளேன் ; ஆகையால் ஆண்டாளுக்கு முந்தியவர் மாணிக்க வாசகர்

****

4

திருவெம்பாவையிலும் திருப்பாவையிலும் ஒரே மாதிரியான சொற்கள் வருவதைப் பார்த்தவுடன் ஒருவரைப் பார்த்து ஒருவர் காப்பி copy  அடித்தார்களோ என்று எண்ணுவோம். அது சரியல்ல; பாவை என்பது ஒரு வகைப் பாடல் (genre) ; பரணி என்பது போல ; ஆகையால் ஒரே அமைப்பு இருக்கும் .

இரண்டு பாவைகளும் மணலில்  பாவை  உருவத்தைச் செய்து காத்தியாயனீ தேவியை வழிபடும் நோன்பினைக் குறிப்பிடுகின்றன .

****

5

இரண்டின் நோக்கமும் ஒன்றே ; கண்ணனைப் போல அல்லது சிவனடியாரைப்போல கணவன் அமைய வேண்டும் ; நாடு செழிக்க  நல்ல மழை பெய்ய வேண்டும்  இந்த இரண்டு நோக்க்கங்களையும் பாடல்களில் காணலாம் .

****

6

மேலும் இரண்டும், மார்கழி மாதத்தில் பாடப்பட்டவை திருப்பாவையில் 3 இடங்களில் மார்கழி வருகிறது ; திருவெம்பாவையில் ஓரிடத்தில் வருகிறது .

***

7

இரண்டும் பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை

மிருக சீர்ஷ நட்சத்திரம் அல்லது திருவாதிரை பெளர்ணமி திதியை ஒட்டி நடந்தவை .

***

8

திருப்பாவையில் முப்பதாவது பாசுரத்தில் நாந்திச் செய்யுள் என்னும் பலச் சுருதியைக் காண்கிறோம் . திருவெம்பாவையில் அது இல்லை; ஏனெனில் திருவாசகம் என்னும் பெரிய நூலில் திருவெம்பாவை ஒரு சிறிய பகுதியே.

****

9

மழை பெய்ய பிரார்த்தனை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

        நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

        ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள

        பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

        வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!-3

****

   ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து

பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-4

**

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்

தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்–திருவெம்பாவை 16

இதை ஆழி மழைக் கண்ணா! பாசுரத்துடன் ஒப்பிடுக

*****

10

ஆண்டாளின் நோக்கம் சிற்றஞ் சிறு காலே பாடலிலும் மாணிக்கவாசகரின் நோக்கம்/ குறிக்கோள் 19 ஆவது திருவெம்பாவையிலும் வருகின்றன

சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய். (29)

****

 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்

எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்

எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

*****

11

போற்றி போற்றி

இரண்டு பாவைகளிலும் போற்றி போற்றி  என்று துதி பாடுவதையும் காண்கிறோம் :

அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !

பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !

கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !

குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !

என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!- திருப்பாவை

****

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். திருவெம்பாவை 20

******

  12

குடைந்து நீர் விளையாடுதல்

திருப்பாவையில் ஏழு பாடல்களிலும் 1,2, 3, 4, 13, 20, 26 திருவெம்பாவையில் ஆறு பாடல்களிலும்12, 13, 14, 15, 17,  18  நீராடல் வருகின்றது . மார்கழிக்  குளிரில் ‘ஜில்’ என்ற தண்ணீர் பட்டவுடன் இருள் அகன்று ஒளி வருவது போல அறியாமை அகன்று ஆத்ம எழுச்சி ஏற்படும். காரணம்? பிரம்ம முஹூர்த்த நேரத்தில் இறைவன் பெயரைச் சொல்லி நீராடுவதால் அந்த மாதம் முழுதும் ஆன்மீக நாட்டத்தை எழுப்பும்.

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று

புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.13

**

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்

செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

எய்யாமற் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்

**

………………………….

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

இன்றும் கேரளத்தில் பெண்கள் இப்படி நீராட செல்வதைக் காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் என்ன செய்தனர் என்பதைக அவர்கள் திருவாதிரை கொண்டாடுவதை காட்டுகின்றன.

****

13

நிறைய சொற்களில் ஒற்றுமையையும் காணலாம்; கிளியே , நேரிழையீர் என்று பெண்களை அழைப்பது மற்றும் வாய்ப்பேச்சில் காட்டியத்தைச் செயலில் செய்யவில்லையே என்று கிண்டல் செய்வது / ஏசுவது , சிவ பெருமானையும் கண்ண பரமாத்வையும்  பல சொற்களால் வருணிப்பது , பறவைகள் எழுப்பும் ஒலியை வருணிப்பது — இப்படி நிறைய ஒப்பிடலாம்

****

14

நகைகள் பற்றி ஆண்டாள் பாடல்களில் காண்பதைப் போல

திருவெம்பாவையிலும் நகைகள் பற்றி மாணிக்கவாசகர் பா டியுள்ளார்

*****

15

இரண்டு நூல்களிலுள்ள பாடல்களும் பாவாய் என்று முடிகின்றன

*****

16

திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா பாடலில் முழங்கையில் நெய் ஒழுக /வழிய சர்க்கரைப் பொங்கல் அல்லது அக்கார அடிசில் உண்பது போல திருவாதிரையில் களியும் அதற்குத் துணையாக கூட்டும் உண்ணப்படுகின்றன.

இன்றும் தமிழ் நாட்டில் பிராமணர் வீடுகளில் திருவாதிரைக் களியும் கூட்டானும் சமைக்கப்படுகின்றன. கடை முழுக்கு என்னும் தை நீராடல்  காவிரிக்கரையில் மிகவும் பிரசித்தம். வைகை நதியில் நீராடிய காலத்தில் பாண்டிய நாட்டிலும் இது நடந்ததை பரிபாடல் என்னும் சங்க நூல் வருணிக்கிறது

*****

சிவனடியார்களும், பரம பாகவத அடியார்களும் ஒரே நோக்கத்துடன் அனுஷ்டித்த காத்யாயனி பாவை நோன்பு, இரண்டாயிரம் வருட தமிழ்ப் பெண்கள் வரலாற்றினைப்/ பண்பாட்டினை நமக்கு  வெள்ளிடை மலை என உணர்த்துகின்றன/ காட்டுகின்றன என்றால் மிகையாகாது.

XXXX

திருவெம்பாவை பற்றிய எனது பழைய கட்டுரைகள்

தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்! (Post No.5003)Date: 12 May 2018

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441) Date: 12December 2016

பாரதிதிருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333),  12 DECEMBER 2019

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)

மார்கழித் திங்கள்மடி நிறையப் பொங்கல் ! (Post No.10,486) 25 December 2021

மாணிக்கவாசகரின் காலம் என்னமிகப் பெரிய சைவப் புதிர்!! Post No 880 Date: 2-3- 2014

மாணிக்கவாசகரின் காலம்—2

Post No. 882 Date: 3-3- 2014

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post …

Tamil and Vedas

https://tamilandvedas.com › மா…

23 Dec 2016 — மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் ..

திருவாசகத்தில் ரிக் வேதம்! (Post No.9829) 8 JULY   2021        

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

Date: 25 JANUARY 2018

கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)

Date: 26December 2016

நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470) Date: 21 December 2016

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Date: 22December 2016


திருவாசகம் பற்றிய அரிய தகவல்கள்-1 (Post No. …

Tamil and Vedas

https://tamilandvedas.com › திர…

14 July 2023 — திருவாசகத்தில் 658 பாடல்கள் இருக்கின்றன. இந்த அதிசய நம்பரை மாணிக்கவாசகரே முதல் …

திருவாசகம் பற்றி அரிய தகவல்கள் – பகுதி—2 …

Tamil and Vedas

https://tamilandvedas.com › திர…

15 July 2023 — அவர்களுடன் தில்லையாடி வள்ளியம்மை என்ற 13 வயதுப் பெண்ணும் சிறையில் …

QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12253)

Tamil and Vedas

https://tamilandvedas.com › quiz-…

Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. QUIZ மாணிக்கவாசகர் பத்து QUIZ (Post No.12,253). WRITTEN BY LONDON …

—subham—

Tags- திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு ; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் 10

ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி பெற்ற வரம்! (Post No.14,035) 

Rama killing the demons

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,035

Date uploaded in Sydney, Australia – 31 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (26)

ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி என்ற அசுரன் பெற்ற வரம்!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் வரங்களைப் பார்த்ததைத் தொடர்ந்து இப்போது நாம் கிஷ்கிந்தா காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள வரங்களைக் குறித்துப் பார்க்கலாம்.

கிஷ்கிந்தா காண்டத்தில் பதினோராவது ஸர்க்கமாக அமைவது வாலியின் பராக்ரமத்தை வர்ணிப்பது என்ற ஸர்க்கமாகும்.

சுக்ரீவனுடன் நட்பு கொண்ட ராமர் அவனுக்கு உதவி செய்ய விழைந்தார்.

உற்சாகம் கொண்ட சுக்ரீவன் அவரைப் போற்றிப் புகழ்ந்தான்.

பின்னர் வாலியின் பராக்ரமம் பற்றி ராமருக்கு விரிவாக எடுத்துரைக்க ஆரம்பித்தான். 

சூர்யோதயத்திற்கு முன்பேயே மேற்கு சமுத்திரத்திலிருந்து கிழக்கு சமுத்திரத்திற்கும் தெற்கு சமுத்திரத்திலிருந்து வடக்கு சமுத்திரத்திற்கும் வாலி அனாயாசமாகத் தாண்டிச் செல்வதுண்டு. மலைகளின் உச்சியில் ஏறி கொடுமுடிகளை செருக்குடன் பிடுங்கி எறிவதுண்டு.

பராக்கிரமசாலியான துந்துபி என்ற ஒரு அரக்கன் எருமை உருவம் தரித்து ஆயிரம் யானை பலத்தைக் கொண்டிருந்தான்.

ஸ வீர்யோத்ஸேகதுஷ்டாத்மா வரதானாஸ்ட மோஹித: |

ஜகாம சுமஹாகாய: சமுத்ரம் சரிதாம் பதிம் |\

வீர்யோத்ஸேக துஷ்டாத்மா – பலத்தின் கர்வத்தால் துஷ்ட ஸ்வபாவமுடையனும்

வரதானாத் – வரம் பெற்றதால்

மோஹித: – தலைக்கனம் பிடித்தவனும்

சுமஹாகாய: ச – பேருருவமும் உடையவனுமான

ஸ: – அவன்

சரிதாம் – நதிகளுக்கு எல்லாம்

பதிம் – அரசனான

சமுத்ரம் – சமுத்திரத்திற்கு

ஜகாம – சென்றான்

சமுத்திரத்தைப் போர் புரிய துந்துபி அழைக்க சமுத்திரம் அவனுடன் தன்னால் போரிட இயலாது என்று கூறி இமயமலைக்குச் சென்று அந்த மலையுடன் போரிடலாம் என்று கூறியது. உடனே இமயமலை சென்ற துந்துபி இமயமலையைப் போருக்கு அழைக்க இமயமலை தன்னால் துந்துபியுடன் போரிட முடியாது என்று தன் இயலாமையைத் தெரிவித்தது.

இப்படி துந்துபியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்த சுக்ரீவன் துந்துபியைப் பற்றித் தொடர்ந்து விவரித்தான்.

சமுத்திரத்தாலும் இமயமலையாலும் தன்னுடன் போரிட முடியாது என்று துந்துபி அறிந்து கொண்டான்.

அவனுடன் போரிடத் தக்கவன் வாலியே என்று இமயமலை கூற, கிஷ்கிந்தை சென்று வாலியுடன் போர் புரிந்து துந்துபி மரணமடைந்தான்.

மேலே உள்ள ஸ்லோகத்தில் கூறியபடி

இங்கு சுக்ரீவன் பேசுகையில் ‘வர தானாத்’  என்று கூறுவதைப் பார்க்கலாம்.

துந்துபி வரம் பெற்றதால் தலைக் கனம் கொண்டவனாக ஆனதை சுக்ரீவன் குறிப்பிடுகிறான்.

ஆனால் எப்படிப்பட்ட வரங்கள், யாரால் அவனுக்கு வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இங்கு காணப்படவில்லை.

என்றாலும் கூட அவன் வரம் பெற்ற செய்தியை நாம் அறிகிறோம்.

***