ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 1-12-2024

Written by London Swaminathan

Post No. 13,959

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM POPULAR TAMIL AND ENGLISH DAILIES AND EDITED FOR BROADCAST.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் முதல்  தேதி 2024-ம் ஆண்டு

********

வங்காளதேசத்தில் சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்க சென்ற சாமியார்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் இந்து பேரணி ஒன்றில் வங்காளதேச கொடியை அவமதித்து விட்டார் என தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனை அடுத்து, அவர் கடந்த 25-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரி போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சாமியார் சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு, மருந்து மற்றும் பணம் ஆகியவற்றை கொடுப்பதற்காக ருத்ரபிரோதி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாதசியாம சுந்தர் ஆகிய 2 சாமியார்கள் சென்றுள்ளனர். அப்போது அந்நாட்டு போலீசாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் :

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும்பாஜக மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

, வங்கதேசத்தில் இடைக்கால அரசால் இந்து கோயில்கள் எரிப்பு, இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் பிரச்சனை உருவாகும்போதெல்லாம் இந்து மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் கரு.நாகராஜன்  கூறினார்.

இந்து மக்களை காக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்றும், வங்கதேச இந்து மக்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்பதகாவும் கரு.நாகராஜன் கூறினார்.

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் மீது, வன்முறை கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்துவதால் பதற்றம் நீடிக்கிறது.

வங்க தேசத்தில் ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சிறுபான்மை ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சின்மாய் கிருஷ்ண தாஸ், ஏற்கனவே இஸ்கான் தலைவராக இருந்ததால், இஸ்கான் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணி  

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாரதீய ஜனதா கட்சி யினர் பேரணி நடத்தினர்.

கொல்கத்தாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமான பாரதீய ஜனதா கட்சியினர்  வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

**********

அடுத்ததாக ஆந்திர மாநில செய்தி

திருப்பதி லட்டு விவகாரம் – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கியது

திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது. திருப்பதி, ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குக் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்தவிசாரணை குழுவுக்கு பதிலாக புதிய சுதந்திரமான ‘சிறப்பு புலனாய்வுக் குழு’ (எஸ்ஐடி) அமைக்க உத்தரவிட்டது

அதன்படி, சிபிஐ இந்த மாத தொடக்கத்தில் 5 அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தொடங்கியது.

********

அடுத்ததாக தமிழ் நாட்டுச் செய்திகள்

இசைவாணிரஞ்சித் மீது நடவடிக்கை தேவை:

கஸ்தூரிக்கு ஒரு நீதி;  இசைவாணிக்கு ஒரு நீதியா ?

இந்துக்கள் கேள்வி

ACTRESS kASTURI

: ”சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்’ என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார்.

திருத்தணி: சேகர்பாபு ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருக்கிறார்; அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஐயப்பனை வணங்கும் உண்மையான பக்தர் என்றால், இசைவாணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இசைவாணிக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தையும் கைது செய்ய வேண்டும்.

அண்மையில் வேறு ஒரு விஷயத்தில், மன்னிப்புக் கேட்டும் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார் ; அவர் எனக்கு ஒரு நீதி இசைவாணிக்கு ஒரு நீதியா என்றும்  கேட்டிருக்கிறார்.

 இசைவாணி மீது ,சில நாட்களுக்கு முன்னால், பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில்  பாரதீய ஜனதாக கட்சி பிரமுகர்களும் ஹிந்து முன்னணி, மஸ்துார் யூனியன் பிரமுகர்களும் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர்.

 அதில், இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். ‘ஐம் சாரி ஐயப்பா’ என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல் ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். ஹிந்துக்களின் நம்பிக்கையை அவர் இழிவுபடுத்தி உள்ளார்; அய்யப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதுாறு செய்கிறார் என, பல்வேறு தரப்பிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளும் போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

 மதுரையில் பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ”இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதித்துறையை நாடுவோம். இது ஒரு திட்டமிட்ட சதி. இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது” என்றார்.

பாரதிய பார்வர்டு பிளாக் புகார்

சபரிமலை ஐயப்பனை இழிவு படுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக்., கட்சியினர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தனர்.

 அகில பாரத இந்து மகா சபா மாநில மகளிர் அணித் துணைத் தலைவர், நிர்மலா மாதாஜி, கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் பானுமதி ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.

*******

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற  கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிய நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

******

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி:

 சென்னை: ‘கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில்சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.

நிபந்தனை

பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.

அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ”ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ”கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.

XXXXXXXXX

பிற மாநிலச் செய்திகள்

 சம்பல் ஜமா மசூதி ஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

 உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதி ஆய்வு தொடர்பான வழக்கின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தும்படி, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 உ.பி.,யில் சம்பல் மாவட்டத்தின் சந்தவுசி என்ற இடத்தில், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது.

ஹிந்து கோவிலை இடித்து இந்த மசூதி கட்டப்பட்டதாக, சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்தனர். இதை கடந்த 19ல் விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த 24ல், மசூதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி வழங்கிய மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகத்தினர் மேல் முறையீடு செய்தனர்.

மாவட்ட நீதிமன்றத்தில், 2025 ஜன., 8ல், இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் வரை, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை தொடராது என, நம்புகிறோம்.

சம்பல் மாவட்டத்தில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். இரு சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்ட அமைதி குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

*******

ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருந்ததா ஏ.எஸ்.ஐ.க்கு கோர்ட் நோட்டீஸ்

ராஜஸ்தானில் பிரசித்தி பெற்ற ஆஜ்மீர் தர்காவில் சிவன் கோயில் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆஜ்மீர் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி விளக்கம்து.

அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.

இங்கு சிவன் கோயில் இருப்பதாகவும் அந்த இடத்தை ஆய்வு செய்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில் 1911-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹர்விலாஸ் ஷர்தா என்பவர் எழுதிய புத்தகத்தில் புலந்த் தர்வாசா உட்பட அஜ்மீர் தர்காவைச் சுற்றி இந்து சிற்பங்கள் மற்றும் உருவப்படங்கள் தெரியும் என மேற்கோள் காட்டப்பட்டது.

இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதி இந்திய தொல்லியல்துறை , ஆஜ்மீர் தர்கா கமிட்டி ,சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு அடுத்த விசாரணையை டிச. 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

******

இடஒதுக்கீடுக்கான மதமாற்றம் ஒரு மோசடி!

இடஒதுக்கீட்டுப் பலன்களுக்காக மட்டுமே மத மாற்றம் செய்வது அரசியல் சாசனத்தின் மீதான மோசடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இந்து தந்தை மற்றும் கிறிஸ்தவ தாய்க்கு பிறந்த பெண் ஒருவர், சில மாதங்களிலேயே கிறிஸ்தவராக ஞானஸ்நானம் செய்யப்பட்டார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சேரியில் மேல்பிரிவு எழுத்தர் பணிக்காக இந்து மதத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தபோது, அதனை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.

இதனை எதிர்த்து கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தையாக இருந்தபோது ஞானஸ்நானம் செய்யப்பட்டது என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த பதிவை ரத்து செய்ய அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என தெரிவித்தது.

தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தை தழுவுவதாகக் கூறுவது, இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் இடஒதுக்கீட்டு கொள்கையின் சமூக நெறிமுறைகள் தோற்கடிக்கப்படும் என கூறிய உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு

டிசம்பர்      எட்டாம் தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்.

—-subham—-

TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல் 1-12-2024, HINDU NEWS

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—3 (Post No.13,958)

Written by London Swaminathan

Post No. 13,958

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Final Part

Sri Ramakrishna Paramahamsa refers to Sri Chaitanya Mahaprabhu in more places.

Lord Chaitanya used to have three sorts of states

1.the conscious state in which the mind dwelt on the gross and the subtle bodies.,

2.the semiconscious  in which the mind soared to the casual body felt the the caul bliss, and

.the state of in-turned consciousness (superconscious state) in which the mind used to merge completely in the Mahakarana- the Great First Cause.

There is a great similarity between this and five sheaths or kosas of the Vedanta. the First Cause is beyond these kosas. When the mid used to merge in  this First Cause  , Sri Chaitanya used to fall in Samadhi; this is known as Nirvikalpa samadhi  or Jada Samadhi

****

One day while a disciple was shampooing his feet , the Master said, referring to this act of service, “This has a deep significance “. Then placing his hand on his own heart, he said, “If there is anything (Divine) in it , then (by this act of service) ignorance and Avidhya will vanish at once for all “

And then he added with a serious look , “There is no outsider here. That day I had a vision. Harish was near me then. I saw Sachitananda coming out of the sheath ( his body). Having come out, He said, I incarnate in every age. I thought I was delirious. So, I kept quiet. Then I heard that He was even saying, “Even Chaitanya worshipped Sakti.”

These Chaitanya references or anecdotes were taken from the book Sayings of Sri Ramakrishna.

****

Some years ago I got a hundred year old book and posted  Chaitanya’s quotations. I attach it here:

Live Like a Tree: Chaitanya’s Advice! (Post No.4099)

Date: 20 July 2017


Post No. 4099

“A man must attain the nature of a tree, which lives solely for the benefit of others, before he can become a true worshipper”—Chaitanya Mahaprabhu

Chaitanya was a great devotee of Lord Krishna. His principal place of worship is Nadia in West Bengal. He has a big following in Bengal and adjacent states. Krishna devotees consider him as an incarnation of Lord Krishna himself. They say that amongst the many incarnation of Vishnu four are most important

the White incarnation named Ananta

the Red incarnation named Kapila

the Black incarnation named Krishna

the Yellow incarnation named Chaitanya

Chaitanya was born in CE. 1484 in Nadia and died at Puri in 1527

His father was a Brahmin named Jagannath Misra and his mother’s name was Suchi. Their first son Visvarupa became a religious mendicant. Second son Chaitanya was born when his mother was old. Consequently the child was very weak and did not take milk for three days. They thought that the child would die soon and hung him in a tree in a basket. A Brahmin called Adaitya happened to pass at that time, saw the child and thought that it was a divine child. He wrote Hare Krishna mantra in  the sand below the tree with his toe. Chaitanya’s mother took it as a positive sign and took the child back into the house. The child quickly recovered and took food. 

Chaitanya s a youth made good progress in learning. He married twice, first at the age of eleven a girl named Lakshmi, and on her early decease, he married another girl Vishnupriya. They lived together for some time. When Chaitanya was 24, he decided to find a way to solve the distresses of mankind. He took off his sacred thread and became an ascetic. Leaving his home, parents, and wife, he spent six years as a wandering saint (Bairagi), travelling all over India teaching his doctrines, acquiring followers, and extending the worship of Lord Krishna. 

Varanasi has been the meeting point of scholars from time immemorial Buddha, Adi Shnkara and other saints went to Varanasi and convertedgreta people to their faiths. Chaitanya also went to Kasi (Varanasi= Benares) and converted the chief pundit Prakashananda to his faith. 

Chaitanya was a great reformer; his success may be traced to his extraordinary fervour and his love for men. He preached utterly unselfish love to Vishnu/Krishna.

Worship from interested motives was not worship at all, but shop keeping, barter – he said.

The chief tenets of his faith are:

1.A disregard of caste distinctions

2.Emphasis was laid on mendicant life

3.     All must worship Krishna with a rosary made up of Tulsi beads

4.     He taught his followers to follow Radha, the beloved mistress of Krishna. The best form of devotion was that which Radha, as the beloved mistress of Krishna, felt for him.

5.They must exercise Bhakti (devotion) in Krishnain five ways:

Quite contemplation of the deity- Santi

The devotion of a servant to his master – Dasya

Friendship to him – Sakhya

Love to him resembling h love of children to their parents – Vatsalya

Passionate attachment of a girl to her lover or as the Gopis felt for Krishna -Madhurya.

He allowed widows remarriage and forebode the drinking of intoxicants and the eating of fish and meat.

He preached against animal sacrifices and Tantric practices.

He saw visions of Krishna and his attendant Gopis and terminated his life by walking into the sea in one of these ecstatic moments. Another version says that he entered the sanctum of Lord Jagannath and disappeared in a flash of light. We have similar disappearances in the lives of Tamil saints Sambandar, Vallalar and Andal.  Chaitanya before his disappearance gained many adherents and honours. The independent King of Orissa became his disciple. As Chaitanya left no issue, Aditya and Nithyananda, became the leaders of the new faith.

Source book: Wilkin’s Hindu Mythology

—Subham—

Tags- Sri Ramakrishna, on Chaitanya, third part, Wilkin’s Hindu Mythology

ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.


குவலயமெங்கும் குமரனைப் போற்றுவோம்

ஞான தீபம் ஏற்றுவோம்

திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

எல்லாம்வல்ல அறுமுகசிவனாகிய ஸ்ரீ முருகப்பெருமான் அனுக்கிரஹம் துணைக்கொண்டு,

 உலகநலனை வேண்டி முருகப்பெருமானுக்குகந்த கார்த்திகை தீபதினத்தைக்

கொண்டாடும் விதமாக

எதிர்வரும் குரோதி வருடம்

கார்த்திகை மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று

உலகளாவிய முருகன் அடியார்கள் கந்தப்பெருமானை சிந்தையில்கொண்டு சந்தக்கவிச் சக்ரவர்த்தி ஸ்ரீ அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மற்றும்

கந்தரனுபூதி கந்தரலங்காரம் முதலியவற்றில்

ஏதேனும் ஓர் பாடலை பாடி வீடியோவாக அனுப்பினால்

எங்களது ஞானமயம் முகநூல் பக்கம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் 13/12/24

வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்படும். பதிவுகளை

10/12/24ஆம் தேதிக்குள்

அனுப்பி வைக்கவும்.

Telegram or WhatsApp No +447739415067

Email gnanamayam@hotmail.com

வேலும் மயிலும் துணை, வேலும் மயிலும் துணை என்று இடையுறாது ஓதி, வேண்டிய பேறு பெற்றோர் பலர்.

இணையம் மூலம் நடைபெறும்

இவ்விழாவில் குருமுதல்வர்கள் ஆசியுரைகளும், உலகளாவிய இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளும் பாகவதர்களின் பிரவசனங்களும்

சைவ அறிஞர்களின் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

முருகன் அடியார்கள் அவர்களின் குழந்தைகளை கையில் வேலுடன் முருகர் அலங்காரம் செய்து, முருகன் பாடலை பாடச் செய்து தீபத்திருநாளை சிறப்பாக கொண்டாடி கந்தன் திருவடியில் சமர்ப்பிப்போம்.

  வேலையும் மயிலையும் நினைப்பதால் அங்ஞானம் நீங்கி மெய்ஞானம் பெற்று நீண்ட ஆயுளும் சகல பேறுகளும் கிடைக்கும் எனபது திண்ணம்.

சாற்றுவோம் திருப்புகழ் மாலை

போற்றுவோம் முருகனின் தாளை

வாசிப்போம் கந்தனின் நூலை

பூசிப்போம் குமரனின் வேலை

—SUBHAM—-

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

TIME:  ONE PM LONDON TIME; 6-30 PM IST

VIA ZOOM, FACE BOOK, YOU TUBE

JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

World Hindu News in Tamil presented by Vaishnavi Anand from London

***

Talk by Bengaluru Nagarajan on Books written by Late Srinivasan’s

***

Talk by Brahannayaki Sathyanarayan on SRI VAIKUNDAM temple from Bengaluru

***

Talk on Navagrahas by Chennai Srinivasan; Rebroadcast in Memory of Late Santanam Srinivasan .

***

Tiruppugaz songs recorded by Kalyanji

***

Anchored by London Swaminathan

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

சென்னை சந்தானம் சீனிவாசன் நூல்கள்

—subham—

QUIZ வேமனா பத்து QUIZ (Post No.13,957)

Written by London Swaminathan

Post No. 13,957

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.வேமனா யார்? எங்கு பிறந்தார் ?

வேமனா ஆந்திர பிரதேசத்தில் கோதாவரி மாவட்டத்த்தில் பணக்கார ரெட்டி குடும்பத்தில் 1652-ஆம் ஆண்டில் பிறந்தார் 

****

2.அவர் எதனால் புகழ் பெற்றார் ?

அருணகிரிநாதர் போலவே விபச்சாரிகள் பின்னால் அலைந்து, பின்னர் யோகியாக மாறி, தெலுங்கு மொழியில் கவிதை மழை பொழிந்து. சிவபிரானை போற்றியதால் புகழ் பெற்றார் .

****

3.அவருடைய முதல் குரு யார்? இரண்டாவது குரு யார்?

அவரது அண்ணன் அணுவேம ரெட்டி அந்த வட்டாரத்து அரசர். அவருடைய மனைவி  நரசம்மா, வேமனாவின் முதல் குரு.  அவரது கடையில் வேலை பார்த்த அபிராமா என்ற வேலைக்காரன் இரண்டாவது குரு.

****

4.எப்படி இவர்கள் குரு ஆனார்கள் ?

அண்ணியான நரசம்மா அவருக்கு அன்பும் ஆதரவும் காட்டி நல்ல உபதேசங்களை சொல்லி அவரைத் திருத்தப் பார்த்தாள். அதனால் அவரை வேமனா முதல் குரு என்று புகழ்ந்தார் . கடைக்கார வேலையாளுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் இவருக்கு கிடைத்ததால் அவரை– அபிராமாவை—  இரண்டாவது குரு என்று புகழ்ந்தார்.

****

5.அபிராமாவுக்குக் கிடைக்க வேண்டிய உபதேசம் எப்படி வேமனாவுக்குக் கிடைத்தது?

வேமனா நடத்திய கடையில் அபிராமா வேலை பார்த்துவந்தார்; தினமும் காலையில் ஆறு மணிக்கு வராமல் தாமதமாக வந்தார். காரணம் என்னவென்றால் தான் காலைப் பிரார்த்தனை செய்யாமல் வரவே முடியாது என்று அபிராமா சாத்தித்தார். வேமனாவுக்கு நம்பிக்கை இல்லை ; ஒரு நாள் மறைவில் நின்று அதிகாலையில் அபிராமா செய்வதையெல்லாம் கவனித்தார். அவர் காலையில்,எழுத்து பூக்களை பறித்து ஒரு யோகியின் கால்களில் சமர்ப்பித்து வழிபடுவதை மறைவிலிருந்தே கவனித்தார்; அந்த யோகி “அபிராமா நாளைக்கு வா; நான் சமாதி அடையப்போகிறேன் அதற்கு முன்னால், உனக்கு ஒரு உபதசம் தருகிறேன்” என்றார்.  இதைக் கேட்ட வேமனாவுக்குத் தான் அந்த உபதேசத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உதயமாயிற்று. அண்ணன் மனைவி நரசம்மாவுக்கு ஒரு ஆபரணம் வேண்டும் என்றும் அதை அபிராமா மறுநாள் கட்டாயம் செய்துதர வேண்டும் என்றும் அண்ணனான அரசன் மூலம் கட்டளை பிறப்பிக்கச் செய்தார் ; அரசன் கட்டளையைத் தவிர்க்க முடியாமல் அந்த வேலையில் அபிராமா ஈடு பட்டார். அதே நேரத்தில் வேமனா, அந்த யோகி இருக்கும் இடத்திற்குச் சென்று தனது எஜமானன் அபிராமா இன்று வரமுடியாததால் தன்னை அனுப்பி பூக்களை சமர்ப்பிக்க அனுப்பினார் என்று சொன்னார். யோகியும் மூன்று முறை அபிராமா வருகிறானா பார், பார் என்று சொல்லி வேமனாவை அனுப்பினார்;. அபிராமா வரவில்லை. சமாதி அடைவதற்கு முன்னர் வேமனாவின் காதில் சிவ பஞ்சாட்சரத்தை ஓதிவிட்டு சமாதி அடைந்தார். அன்று முதல் வேமனா பெரும் யோகியாக மாறினார்  

*****

6.அபிராமாவை குரு என்று சொல்லி வேமனா அவரது காலில் விழுந்தது ஏன்?

உபதேசம் பெற்ற வேமனா , தான் பொய் சொல்லி அபிராமாவை ஏமாற்றியதை எண்ணி வருந்தினார் கடைக்குச் சென்று வேலையாள் அபிராமாவின் காலில் விழுந்தார் . உனக்குக் கிடைக்கவேண்டிய உபதேசத்தை நான் பெற்றுவிட்டேன்; என்னை மன்னிப்பாயாக என்றார்; கடைக்கு எஜமானரான வேமனா, தனது காலில் ஏன் விழுகிறார்  என்று அபிராமாவுக்கு ஒன்றும் புரியவில்லை . பின்னர் வேமனா நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார்

****

7.வேலையாள் அபிராமாவுக்கு வேமனா எப்படி நன்றி செலுத்தினார் ?

அருணகிரிநாதர் பிரபுட தேவராயனை பல திருப்புகழில் பாடி நன்றி தெரிவித்தது போலவும் ,கம்பன் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் பாடி நன்றி தெரிவித்தது போலவும் வேமனா தனது குருவான வேலைக்கார அபிராமாவைப் பாடிப் பரவியிருக்கிறார்.

****

8.வேமனாவின் பாடல்கள் எத்தனை ? அதன் சிறப்புகள் என்ன ?

வேமனாவின் சுமார் நாலாயிர   பாடல்களைத்  தொகுத்துள்ளார்கள். அவர் ஆந்திர பிரதேசம் முழுதும் யாத்திரை செய்து பாடிய பாடல்கள் அவை.. வேலைக்காரன் அபிராமாவுக்கு தான் செய்த தீங்குகளுக்கு மன்னிப்புக் கோரியும் அவரது குணங்களைப்  புகழ்ந்தும் பாடிய பாடல்களும் அண்ணி நரசம்மாவின் அருங்குணங்களைப் போற்றிப்  பாடிய பாடல்களும் அந்தப்பாடல்களில் இடம்பெற்றன. அத்வைத வேதாந்தக் கருத்துக்களை முக்கியமாகப் பாடினார் .. அவரது கவிதைகள் பல பொருட்களைத் தரும் வகையில் அமைந்தன. ஆழமான, ஆனால் தெளிவான பாடல்கள் அவை.

*****

9.அவர் மீது எழுதப்பட்ட புஸ்தகம் எது ?

அவரது சீடர்களில் ஒருவர் வேமனா மீது சம்ஸ்க்ருத மொழியில் சதகம் இயற்றியுள்ளார்  அவர் நடத்திய பல அற்புதங்கள் இதில் இடம்பெறுகின்றன .

அவர் வாழ்க்கை பற்றி சில தெலுங்கு திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. பலர் நூல்களையும் எழுதியுள்ளார்கள். 

****

10.அவர் எங்கு, எப்போது சமாதி ஆனார் ? அவர் என்ன அற்புதங்களை செய்தார் ?

வேமனா பிறந்த ஆண்டு பற்றி வாதப் பிரதிவாதங்கள் இருப்பதால் சமாதியான ஆண்டு கிடைக்கவில்லை; கதிரி என்னும் கடாருப்பள்ளியில் அவருடைய சமாதி உள்ளது  சுமார் 300 ஆண்டு வீச்சில் இவரது காலத்தைக் கணிக்கின்றனர் . சி பி பிரவுன் நிறைய ஆராய்ச்சி செய்து முடிவு செய்த ஆண்டு 1652  (.பிறந்த ஆண்டு).

அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை ; எப்போதும் ஒரு முலாம் பழத்தைக் கொடுப்பார் . அதில் பொன்னோ ரத்தினக் கற்களோ இருக்கும். இது பல முறை நடந்துள்ளது  இடி விழுந்தும் கூட அவர் சமாதி சேதம் அடையவில்லை. அவரே அதிலிருந்து தோன்றி பின்னர் சமாதிக்குள் நுழைந்தார். அவரது வாக்குகளும் கவிதைகளும் தெலுங்கு மக்களின் பேசசு வழக்கில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகினறன.

–SUBHAM—

TAGS– வேமனா, தெலுங்கு, கவி ,யோகி , ஆந்திரம், கதிரி அபிராமா, வேலையாள், நரசம்மா , குரு, QUIZ வேமனா பத்து

மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி? (Post No.13,956)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.956

Date uploaded in London – 1 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

21-11-24 Kalkionline குழும பத்திரிகையில் வெளியான கட்டுரை.

மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி?

ச. நாகராஜன்

சில சின்ன நீதிகளைப் பார்க்கலாமா? வேறொன்றுமில்லை மேலாண்மை நிர்வாகத்தில் – மானேஜ்மெண்டில் – முன்னேறுவதற்காகத் தான்!

சும்மா உட்காரும் இடம்!

காகம் ஒன்று உயரமான மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் அது ஒன்றுமே செய்யவில்லை. சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தது ஒரு முயல்.

அது காகத்தைப் பார்த்துக் கேட்டது: “நானும் உன்னைப் போலவே நாள் முழுவதும் சும்மாவே உட்கார்ந்திருக்கவா?

உடனே காகம் சொன்னது: “ஏன் முடியாது? உட்கார்ந்திருக்கலாமே?”

ஆகவே உடனே முயலும் மரத்தின் அடியில் சும்மாவே உட்கார்ந்திருந்தது.

அப்போது திடீரென்று அங்கு வந்த நரி ஒன்று முயல் மீது பாய்ந்து அதை ஒரே அடியில் கொன்றது; தின்றது!

இதில் என்ன மேலாண்மை நீதி பொதிந்து இருக்கிறது?

சும்மாவே ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்க நீ மிக மிக மேலான உயரத்தில் இருக்க வேண்டும். (அதாவது கம்பெனி சேர்மனாகவோ அல்லது சி இ ஓ ஆகவோ இருக்க வேண்டும்!)

யாரிடம் மோதுகிறோம் என்பதை யோசித்துப் பேசு!

இரண்டு சண்டைக் கப்பல்கள் ஒத்திகைக்காக கடலில் விடப்பட்டன. கடுமையான கால நிலை. கிட்ட இருக்கும் எதையும் கூடச் சரியாகப் பார்க்க முடியாத படி பனி மூட்டம்!

ஆகவே கப்பலின் காப்டன் மேல் தளத்திற்கு வந்து தானே அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தான்.

இருள் சூழ்ந்தது. மேல் தளத்தில் இருந்த ஒருவன் காப்டனிடம், “காப்டன், எதிரில் ஒரு வெளிச்சத்தைப் பார்க்கிறேன்” என்றான்.

காப்டன் கேட்டான் : “அந்த வெளிச்சம் நகர்கிறதா அல்லது ஒரே இடத்தில் இருக்கிறதா?”

“ஒரே இடத்தில் இருக்கிறது காப்டன்” என்று பதில் வந்தது.

அப்படியானால் ஒரு அபாயகரமான மோதல் ஏற்படப்போகிறது! உடனே காப்டன், சிக்னல்மேனை அழைத்தான்: உரக்கக் கூவினான்:  எதிரில் வரும் கப்பலுக்கு ஒரு சிக்னலைக் கொடு. இப்படியே போனால் மோதப்போகிறோம். ஆகவே அதை 20 டிகிரி திருப்பி விடச் சொல்”

உடனே பதில் சிக்னல் வந்தது: “நீ உன் வழியை 20 டிகிரி மாற்றிக் கப்பலைத் திருப்பிச் செல்”

கப்பல் காப்டனுக்கும் பெரும் கோபம் வந்தது: “என்னையா மாற்றிப் போகச் சொல்கிறாய்! நான் பெரிய சண்டைக் கப்பலின் காப்டன்! என்ன ஆகும் தெரியுமா? மரியாதையாக மாற்றிச் செல்”

உடனே பதில் வந்தது: “நான் லைட் ஹவுஸ். என்னால் மாற முடியாது நான் உனக்கு வழிகாட்டி!. நீ தான் மாறிப் போக வேண்டும்!”

நீதி: யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை நன்கு யோசித்துப் பேசு. இல்லையேல் விளைவு விபரீதமாகத் தான் இருக்கும்!

பிரச்சினையை எதிர் கொண்டு கலங்காமல் இருப்பது தான் அமைதி

அரசன் ஒருவன் ஒரு முறை தனது அரசாங்கத்தில் ஓவியர்களுக்கான ஒரு போட்டியை அறிவித்தான். அமைதியை நன்கு சித்தரிக்கும் ஓவியத்திற்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்தான். ஓவியங்கள் வந்து குவிந்தன. அவற்றில் இரண்டை நடுவர்கள் தேர்ந்தெடுத்து அரசனிடம் இறுதி முடிவை எடுக்குமாறு கூறினர்.

இரண்டு படங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருந்தன.

முதல் படத்தில் ஒரு அழகிய பிரம்மாண்டமான ஏரி. அதைச் சுற்றி அற்புதமான பெரிய மலைகள். மேலே அழகிய நீல வானம். எங்கும் அமைதி.

அடுத்த படம் அதே போலத் தான் இருந்தது. பிரம்மாண்டமான ஏரி. சுற்றி கடுமையான பாறைகளை உடைய மலைகள். ஆனால் வானத்தில் கரும் மேகங்கள் இருக்க மழை பொழிந்து கொண்டிருந்தது. மின்னல் பளீர் பளீரென்று வீசிக் கொண்டிருந்தது. மலையின் ஒரு புறத்திலிருந்து அருவி ஒன்று விழுந்து கொண்டிருந்தது. அரசன் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தான். அருவி கொட்டிக் கொண்டிருந்த போது அந்த பாறைக்குப் பின்னால் ஒரு சிறிய பொந்து இருந்தது. அதில் ஒரு பறவை கூடு கட்டி இருந்தது. தன் குஞ்சை அது அணைத்துக் கொண்டிருந்தது. ஒரே அமைதி!

அரசன் இரண்டாவது படமே சிறந்தது என்று கூறித் தன் முடிவை அறிவித்தான். அனைவரும் ஏன் என்று கேட்டனர்.

அதற்கு அரசன் கூறினான்: “அமைதி என்றால் சத்தமே இல்லாத இடத்தில், பிரச்சினையே இல்லாத இடத்தில், கடுமையான உழைப்பே இல்லாத இடத்தில் ஏற்படும் ஒன்று என்று அர்த்தமில்லை. அமைதி என்பது இவை அனைத்திற்கும் நடுவில் உன் மனதை அமைதியுடன் வைத்து வாழ்வது தான்; முன்னேறுவது தான். அதோ அந்தப் பறவையைப் பாருங்கள். இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் ஒரு கூட்டைக் கட்டித் தன் குஞ்சை அது எப்படிப் பாதுகாக்கிறது! இதுவே அமைதிக்கான சிறந்த ஓவியம்!”

அரசனின் முடிவை அனைவரும் மெச்சினர்.

நீதி: போட்டி மிகுந்த சூழ்நிலையில் தான் கம்பெனி வளரும். அப்போது இதயத்தை அமைதியுடன் உற்சாகமாக வைத்து சூழ்நிலையை எதிர்  கொள்ள வேண்டும்.

மாற்றி யோசி

ஒரு டூத் பேஸ்ட் கம்பெனியில் விற்பனை சற்று சரிந்து விட்டது. விலையைக் கூட்டினால் இன்னும் விற்பனை பாதிக்கும். டூத் பேஸ்ட் டியூபை பெரிதாக்கினாலோ அல்லது சிறிதாக்கினாலோ விலை கூடும் அல்லது குறையும்.

என்ன செய்வது?

தலைமை நிர்வாகி அனைவரையும் ஓரிடத்தில் கூட்டினார். இதற்கு என்ன செய்வது என்று யோசனை  கேட்டார். சிறந்த யோசனைக்கு மாபெரும் பரிசு என்றும் அறிவித்தார்.

ஏராளமான யோசனைகள் கூறப்பட்டன.

ஆனால் மாற்றி யோசித்த ஒருவர், “என்னிடம் ஒரு சின்ன யோசனை உள்ளது. அதைச் செய்தால் விற்பனை இரட்டிப்பாகும். விலையும் கூட்டவே வேண்டாம். சைஸையும் மாற்றவே வேண்டாம்: என்றார்.

நிர்வாகி ஆச்சரியப்பட்டுப் போனார். “சொல்லுங்கள், என்ன யோசனை?” என்று ஆவலுடன் கேட்டார்.

“ஒன்றுமில்லை. இப்போது டியூபில் பேஸ்ட் வரும் ஓட்டையைக் கொஞ்சம் பெரிதாக்கலாமே” என்றார் அவர்.

ஓட்டை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவில் சிறிதே பெரிதானது. டியூபுகள் சீக்கிரம் தீரத் தீர விற்பனை அமோகமாகப் பெருகியது.

நீதி : மாற்றி யோசியுங்கள்; முன்னேறலாம்!

***

தமிழ் தெரியுமா? – 30-11-2024 (Post No.13,955)

Written by London Swaminathan

Post No. 13,955

Date uploaded in London – 30 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

குறுக்கே இடம் வலமாக செல்க

     1    
     2    
     3    
        4 
     5    
       6  
         7
          
       9   
      10   
      11   
          
      13   

1.பாரதியார் காக்கைச் சிறகிலும் இவரைப் பார்த்தார்

2.மாடு தின்னும் புலையா – உனக்கு மார்கழித் திருநாளோ என்று திட்டு வாங்கியவர்

3.கோரக்க நாதர் இந்த ஒன்பது பேருக்கும் தலைவர்

4.க்ஷத்திரிய வம்சத்தைச் சேராத அரசர்கள் ; சாணக்கியனால் அகற்றப்பட்டவர்கள் .

5.எல்லா நாடகங்களிலும் இந்த ஒன்பதில் சில உணர்ச்சிகளாவது இருக்கும்.

6.இந்த ஓன்பதை யும் மாலையாகத் தொடுத்து பாரதியார் ,அகத்தியர் வரை பாடியுள்ளனர்

7.இந்த ஒன்பதும் எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது

8.கண்ணன் ஆசைப்பட்டு திருடிய வெண்ணெய்க்கு இந்தப் பெயர் உண்டு

9.அலிக்கு சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் சொல்

10.எல்லோரும் சொந்தம் கொண்டாடும் ஆழ்வார்

11.இந்த ஆள் இல்லாவிட்டால் தீபாவளியே கிடைத்திராது.

12.எப்போதும் ஆடிக்கொண்டே இருப்பார்

13.எப்போதும் உக்கிரவடிவில் இருப்பார்; லெட்சுமியை அரவணைப்பார்.

*****

ANSWER

ந்லாலா1    
ந்னார்2    
நார்3    
ந்ர்ள்4 
ம்5    
த் தி ம்6  
க்கிங்ள்7
நீ ம்8    
பும்ன் 9   
ம்மாழ்வார்10   
காசுன்11   
ரான்12    
சிம்ன்13   

–subhaam–

Tags–தமிழ் தெரியுமா? – 30-11-2024

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—2 (Post No.13,954)

Museum on Chaitanya Mahaprabhu at Baghbazar

Written by London Swaminathan

Post No. 13,954

Date uploaded in London – 30 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

There are more interesting anecdotes from the book Sayings of Sri Ramakrishna:

“Where the devotion is genuine, even the most ordinary things make the devotee remember God and lose himself in Him. Have you not heard how Lord Chaitanya was merged in Samadhi at the thought,

Once, while passing through a village, Sri Chaitanya came to know that the inhabitants of that village earned their living by making drums. At once he exclaimed, ‘This is the earth of which drums are made,” and immediately lost all external consciousness. For he thought that out of that earth drums were made which were used in congregational music and that the music again, was in praise of God who is the Soul of our souls and the Beauty of beauties.

 In this way a train of ideas flashed upon him, and he was at once engrossed in God. Likewise, when a man has true devotion to his Guru, he is certainly reminded of him by the sight of his relatives. Not only that. Even if he meets people from the Guru’s village his thoughts are at once directed to the Guru himself. He prostrates before those people constantly, sprinkles the dust of their feet over his body, feeds them sumptuously and renders all other kinds of service to them.


At this stage the disciple fails to see any defect in his Guru.
Now only can he say, “Even if my Guru frequents taverns, he is the Lord, the Eternal Bliss, all the same.”

As a human being a Guru cannot be a repository of virtues alone and be free from any defect whatsoever. The disciple, on account of his devotion, no longer sees the Guru as man but as God Himself, just as one sees everything yellow, because of a jaundiced eye. His devotion then reveals to the devotee that God alone is everything; it is He that has become the master, the father and the mother, man and beast, the animate and the inanimate.”

****

Sometimes there appears that unique composite light which may be called lunar-solar light., and to this may be compared the unique incarnations like Chaitanya Deva, who are marked alike by Bhakti (love) and Gnan (knowledge). Their case is like the sun and the moon appearing in the firmament at one and the same time, the manifestation of Gnana and Bhakti in one and the same person is as unique an occurrence as the phenomenon referred to above.

****

The Prema or ecstatic love is attainable only by a few. Those few are men of extraordinary powers entrusted with a divine commission. Being heirs to Divine powers and glory, they form a class of their own. To this class belong  incarnations of God like Chaitanya Deva, and their devotees of the highest order, who are parts of the Lord.

****

The bhakta as a rule does not long for Brahma Gnana but remains content with realising the divine person alone—my Divine Mother, or any of Her infinite forms of glory, such as the Divine Incarnations of Krishna and Chaitanya Deva, the visible revelations of God he is anxious to ensure that the whole of his ego is not effaced in Samadhi. He would fain have sufficient individuality left to enjoy the vision Divine as a person. He would fain taste sugar, rather than become sugar.

****

 Sri Ramakrishna was one day expounding the gist of Sri Gauranga’s cult in the following words: “This faith insists that man should at all times try to cultivate three things–delight in the ‘name’ of the Lord, loving sympathy for all living beings, and service to devotees. God and His ‘name’ are identical. Knowing this, one should take the ‘name’ of the Lord with great Love and fervour. The devotees of God should be respected and adored in the conviction that there is no difference between the Lord and his worshippers, between Krishna and the Vaishnava. With the knowledge that the whole universe is the household of the Lord, one should show pity to all creatures … ” Uttering the last words ‘pity to all creatures’ in a rather abrupt fashion, the Master went into Samadhi. Sometime after returning to a semi-conscious state the Master exclaimed, “Pity to creatures! Pity to creatures! Sirrah! you who are lower than even a worm, how dare you speak of showing pity to creatures! Who are you to show pity to them? No, no, it is not pity to creatures, but service to them in the consciousness that they are verily God Himself.”

****

 So I say, in the beginning there is much fuss of Karma. But the more you proceed towards God, the less will it grow. Finally comes the complete renunciation of work and the attainment of Samadhi. Generally, the body does not remain long after the attainment of Samadhi. But in the case of some it remains for the work of teaching the world. Sages like Narada and Divine Incarnations like Sri Chaitanya are examples of this.

After a well is dug some throw away all the spades and baskets, but others preserve them with the idea that they may be of some use to any of their neighbours. Such great souls are moved with pity at the sight of the sufferings of the world. They are not so selfish as to care only for the attainment of Jnana for themselves.

To be continued………

Tags– Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu— Part 2

QUIZ நிம்பர்கர் பத்து QUIZ (Post No.13,953)

Written by London Swaminathan

Post No. 13,953

Date uploaded in London – 30 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.நிம்பர்கர் எங்கு எப்போது பிறந்தார் ?

நிம்பர்கர் ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் பதினோராம் நூற் றாண்டில் பிறந்தார் . ஒரு நூலை இவர் பெயரில் தவறாக ஏற்றி யவர்கள் இவர் இதற்கு  மிகவும் முன்னால் வாழ்ந்ததாகவும் கூறுகின்றனர்

அவர் பிறந்த ஊர் ஆந்திரத்தில் வைடூயூர்யபட்டம் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஊர் ஆகும் .

****

2.அவரது தாய்  தந்தையர் யாவர் ?

அருண முனி , ஜெயந்தி தேவி

****

3.அவருடைய பெயரின் பின்னால் உள்ள கதை என்ன?

ஒரு முறை அவர் சமண முனிவர் ஒருவருடன்  காலை முதல் மலை வரை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் உணவினையே  மறந்துவிட்டு கருமமே கண்ணாயினார் போல இருந்து விட்டனர். நிம்பர்கருக்கு திடீரென உணவு பற்றி நினைவு வரவே சமண முனிவரை சாப்பிட அழைத்தார். சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட மாட்டார்கள் என்று அவர் சொல்லவே , நிம்பர்கர் வருத்தத்துடன் வானத்தைப் பார்த்தார் அப்போது  வேப்ப மரத்தின் வழியே சூரியன் தோன்றவே இருவரும் மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர்; இதனால் இவருக்கு வேப்பமர சூரியன் என்ற பெயர் ஏற்பட்டது வேப்ப மரம் – நிம , நிம்ப + அர்க- சூரியன் / கிரணம் 

****

4.நிம்பர்கரின் குரு யார் ?

நாரத முனியே இவருக்கு கோபால மந்திரத்தை உபதிசித்ததாக தொண்டர்கள் நம்புகின்றனர். இவரை சூரியன் அல்லது விஷ்ணுவின் சுதர்சன அம்சம் உடையவர் என்றும் பக்தர்கள் போற்றுவர்.

****

5.அவருடைய போதனை என்ன ?

துவைத அத்வைதம் என்பது அவர் போதித்த முறை ஆகும்

சங்கர் – அத்வைதம்

ராமானுஜர்- விசிஷ்டாத்வைதம்

மத்வர்- த்வைதம்

வல்லபர்- சுத்த அத்வைதம்

நிம்பர்கர் – துவைத அத்வைதம்  போதித்தனர் . இவையெல்லாம் பகையின் பல நிலைகள். இறைவனை தன்னிடமிருந்து வேறாகக் கருதி அல்லது அவருடன் ஒன்றாக கருதி வழிபடும் பல படிகள் ஆகும்.

****

6.நிம்பர்கரின் சீடர்கள் யாரை வணங்குகிறார்கள் ?

அவர்கள் ராதா கிருஷ்ணரை வழிபடுகிறார்கள்; அதாவது ராதையும், கிருஷ்ணரும் அவர்கள் வழிபடும் தெய்வங்கள்; கிருஷ்ணனே உயர்ந்த கடவுள்; பாகவதமே உயர்ந்த புஸ்தகம் என்பது அவர்களுடைய அணுகுமுறை. வைஷ்ணவ வழிபாட்டிலுள்ள நான்கு வழிகளில் இதுவும் ஒன்று.

****

7.அவர் எழுதிய நூல்கள் என்ன ?

பல நூல்களை அவர் எழுதினாலும் பிரம்ம சூத்திர உரையும் வேதாந்த பாரிஜாத செளரபிய நூலும் பிரபலமான நூல்கள் ஆகும் அவர் எழுதிய நூல்களின் பட்டியல்:

·         Vedanta Parijat Saurabh– Commentary on the Brahma Sutras

·         Sadachar Prakasha– a treatise on karma kanda

·         Commentary on the Bhagavad-Gita

·         Rahasya Shodasi- Sri Gopala Mantra explained

·         Prapanna Kalpa Valli-Sri Mukunda Mantra explained

·         Prapatti Chintamani– On Supreme surrender

·         Pratah Smarana Stotram

·         Dasa Shloki or Kama Dhenu– Ten Verses

·         Savisesh Nirvisesh

·         Sri Krishna Stavam

·          

****

8.கோபால மந்திரம் என்பது என்ன ?

நிம்பர்க்கருக்கு நாரதர் பதினெட்டு அக்ஷரம் கொண்ட கோபால மந்திரத்தை உபதேசித்தார் அந்த மந்திரம்-

க்லிம் கிருஷ்ணாய  கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா 

பக்தர்கள் சொல்லும் மஹா மந்திரம்

ராதே  கிருஷ்ண ராதே  கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ராதே ராதே

ராதே ஷ்யாம் ராதே ஷ்யாம்

ஷ்யாம் ஷ்யாம் ராதே ராதே.

****

9..நிம்பார்க்க சம்பிரதாயத்துக்கு வேறு பெயர்கள் உண்டா?அவர்களுடைய குரு பரம்பரை என்ன?

உண்டு. குமார சம்பிரதாயம் , ஹம்ச சம்பிரதாயம், சனகாதி, சம்பிரதாயம் என்றும் அவர்களை அழைப்பார்கள்

ஹம்ச பகவான் இதை சனகாதி முனிவர் நால்வருக்கு அளித்த பின்னர், அவர்கள் நாரத முனிவருக்கு வழங்கினர்.

நாரதர்தான் நான்கு வைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கும் ஆசிரியர். அவர் நிம்பர்க்கருக்கு பதினெட்டு அக்ஷரம் கொண்ட கோபால மந்திரத்தை உபதேசித்தார்.

****

10.அவர் உபதேசித்த ஐந்து வழிகள் என்ன ?

நிம்பர்கரின் அணுகுமுறையை பேதாபேதம் என்பார்கள்; அதாவது பேதம்+ அபேதம் . அவர் இறைவனை அடைய  ஐந்து வழிகளைக் காட்டினார்; அவை கர்மம் (சடங்குகள்) வித்யா (ஞானம்) உபாசனை அல்லது தியானம்பிரபத்தி (சரண் அடைதல்) , குருபசத்தி — குரு வினிடம் சரண அடைதல்

—SUBHAM—

TAGS- கோபால மந்திரம், நிம்பர்கர் , துவைத அத்வைதம் ,  

  ஶ்ரீ அன்னை – 2 (Post No13,952)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.952

Date uploaded in London – –30 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 24-22-2024 ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

 ஶ்ரீ அன்னை – 2

   ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் – சில முக்கிய குறிப்புகள்

   ————————————————————————————-

கீழ்க்கண்ட விசேஷ நாட்கள் ஆசிரமத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்களின்  பட்டியல் ஸாதகர்களுக்காகத் தரப்படுகிறது.

தேதி       மாதம்             விவரம்                வருடம்

 1         ஜனவரி   புதுவருட தியானம்                    

21         பிப்ரவரி   ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம்        1878

29          பிப்ரவரி     தி கோல்டன் டே                 1956

24         ஏப்ரல்     ஸ்ரீ அன்னை இறுதியாக புதுச்சேரி வந்தது  1920

15         ஆகஸ்ட்     ஸ்ரீஅரவிந்தர் பிறந்த தினம்               1872

17         நவம்பர்   ஸ்ரீ அன்னையின் மஹா சமாதி            1973            20         நவம்பர்      ஸ்ரீ அன்னையின் அடக்கம்              1973

24         நவம்பர்      ஸித்தி தினம்                           1926

1-2       டிசம்பர்     ஆசிரமம் பள்ளியின் ஆண்டு விழா        1943

 5         டிசம்பர்    ஸ்ரீஅரவிந்தரின் மஹா சமாதி             1950

 9          டிசம்பர்      ஸ்ரீஅரவிந்தரின் அடக்கம்                1950

            ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள் 

            ———————————————–

01.பூரணயோகத்தில் சாதனைக்கும், புறவாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை; அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உண்மையை கண்டு கடைப்பிடித்தொழுக வேண்டும்.

02. தெய்வீக அருளையே சார்புற்று, எல்லா சந்தர்ப்பங்களிலும் அதன் உதவியையே நாம் நாடி அழைக்க கற்போமாகில், அது அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்விப்பதைக் காண்போம்.

03. நாம் பிரார்த்தன செய்வதைப் போலவே வேலை செய்வோமாக; ஏனெனில், வேலையே உடல் இறைவனுக்குச் செய்யும் மிகச் சிறந்த பிரார்த்தனையாம்.

04. இறைவனை விட்டு புறம்பாய் எங்கேயும் நீ ஆதரவை நாடாதே. உன் தேவைகளின் பூர்த்திக்கு – எதுவாக இருந்தாலும் – இறைவனைத் தவிர வேறு எவரையும் அண்டாதே. எந்த விஷயத்திலும் எந்த சமயத்திலும் ஆதரவிற்கும், உதவிக்கும், ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் தன்மை ஒருக்காலும் உன்னிடம் இருக்கவே கூடாது. இதற்கு விதிவிலக்கே இல்லை. இறைவனைத் தவிர வேறெதனிடத்தோ அல்லது வேறெவரிடமோ சார்புற்று நம்பிக்கை வைக்காதே. ஏனெனில் வேறெதையோ அல்லது வேறெவரையோ நீ உன் ஊன்றுகோலாகக் கொள்வையேல், அது  முறிந்து போவதைக் காண்பாய்.

05. உண்மையாக நீ கனவிலும் ஆர்வத்துடனிருந்தால் உனது ஆர்வத்தில் நீ சித்தியடைய உதவாத சந்தர்ப்பமே கிடையாது. எல்லாமே உனக்கு உதவ வரும் – தானே தானான பூரணப் பேருணர்வே உன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தியது போல! நீ உனது புறவுணர்வின் அஞ்ஞானத்தில் இதைப் புரிந்து கொள்ளாதிருக்கலாம், அந்த சந்தர்ப்பங்களை வரும்போது நீ அவற்றை மறுத்தொதுக்கலாம், நொந்து கொள்ளலாம், மாற்ற முயற்சிக்கலாம். சிறிது காலத்திற்குப் பின் உனக்கு கொஞ்சம் ஞானம் வந்திருக்கும். உனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சிறிது தொலைவு ஏற்படும்போது உனக்குத் தேவைப்பட்ட முன்னேற்றம்

06. தற்புகழ்ச்சிக்கும் அர்த்தமில்லை. தன்னை இகழ்ந்து கொள்வதிலும் அர்த்தமில்லை. தெய்வம் உன்னை மதிப்பிடட்டும்; இதுவே உண்மையான தன்னடக்கம்.

07. உடலால் உழைத்துக் கொண்டே ஒருவன் முற்றும் ஒருமுனைப்பட்டு ஸாயுஜ்யாநுபவம் பெறலாம் என்பது என் சொந்த அநுபவம்.ஆனால் இதற்கு கொஞ்சம் அப்பியாசம் தேவை; இதன் பொருட்டு வம்பளப்பை அறவே ஒழித்தல் அவசியம். நம்மை தெய்வத்தினின்று தொலைவில் நிறுத்துவது பணியல்ல, வம்பளப்பே.

08. நீ விடாது முயன்றால், காரிய ஸித்தி நிச்சயம். என் துணைபற்றி ஐயுற வேண்டாம்; அது உனக்கு என்றும் உண்டு. தெய்வத்தின் பால் செய்யும் முறையீடு என்றும் வீண் போனதில்லை.

9.நாம் உழல்வது அஞ்ஞானத்தில்; நமக்கோ ஒன்றுமே தெரியாது. நாம் கோருவது உண்மையில் தேவை தானா என்று கூட நாம் பரமனைக் கேட்பதில்லை; ஆனாலோ பரமனை அந்தத் தேவையை பூர்த்தி செய்து நமக்கு திருப்தியை உண்டுபண்ணும்படி அவனிடம் முறையிடுகிறோம்… . நமக்கு என்ன தேவை என்று நம்மை விட அவன் பரமனாய் இருப்பது பற்றி பரமனுக்குத் தெரியாதா? ஆகவே நம் உண்மைத் தேவையை நமக்கு பரமன் அருள்வான்.

10. நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

11. ஸ்ரீ அரவிந்தர் நம்மை எச்சரிக்கிறார்:- மந்தம், சோம்பர், எளிதில் திருப்தி அடைதல், இவை  முயற்சிக்கு விரோதி; இவை யாவும் மனித சுபாவத்தில் அடங்கும். போராட்டத்தைக் கண்டு பின் வாங்கல், பலன் கிடைக்குமுன்  ஓய்வை நாடல், ஸாதனா யாத்திரையில் கொஞ்சம் முன்னேறியதும் திருப்தி அடைந்து விடல் , சிறிய முன்னேற்றத்தை ஒரு பெரிய அற்புதமாக கல்பனை செய்துகொளல் – நடுவழியில் நின்று விட இவற்றை சரியான காரணங்களாகக் கொள்கிறோம். நம் சேதனம் வரம்பற்று விரிவடைதலும், சேதனம் விசுவ சேதனமாதலிலுமே உண்மையான ஓய்வு. இந்த உலகம் போல் விசாலமாவோம்; நமக்கு அப்போது இடைவிடா ஓய்வுண்டு.

12. இலட்சியமற்ற வாழ்க்கை இரசமற்றது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் இலட்சியத்தைப் பொறுத்திருக்கிறது நீங்கள் அதில் சுவைக்கும் இரசம். உங்கள் இலட்சியம் உயர்ந்தும் விரிந்தும், தன்னலமற்றும், பற்றற்றும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையும் பயனுளதாகும்.

13. மனிதன் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் முழுவதும் இடையறாது கல்வி பயில வேண்டும்.

14.உடல்,பிராணன், மனம், சைத்திய புருஷன், ஆன்மா என்ற இவ்வைந்து முக்கிய அங்கங்களைக் கொண்டவன் மனிதன். இவ்வைந்து அங்கங்களுக்கும் பயிற்சி அளிக்கவல்ல முறையையே பூரணக் கல்வி எனலாம்.

15. ஒருவன் தான் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் பூராவும் தன் உடலுக்குப் பயிற்சி அளித்து வர வேண்டும். உடற்பயிற்சி வயதைப் பொறுத்ததல்ல; எந்த வயதில் வேணுமானாலும் அதைத் தொடங்கி, விடாது செய்து வரலாம். உடல் பயிற்சி மூவகைத்து :- 1) உடலை முழு சுவாதீனத்துக்கு கொண்டுவருதல் 2) உடலின் எல்லா உறுப்புகளையும் சீராய் முறையோடு வளர உதவுதல் 3) அங்கக்கோணலால் ஏற்படும் குறை ஏதேனும் இருப்பின் அதை நேராக்கல்

16. தன்னைத் தான் ஆளுவது, தன் சுபாவத்தின் மாற்றம் இதுவே ஸித்தி.

17. மனிதனை உயரிய வாழ்க்கைக்கு தயாரிக்கும் உண்மையான மனப்பயிற்சி ஐந்து     முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வைந்து அம்சங்களும் ஒன்றை ஒன்று தொடரும். இவ்வைந்து அம்சங்களாவன :- 1) மனம் ஒருமுனைப்படும் திறன், சக்தி, இவற்றின் வளர்ச்சி 2) மனம் விரிவடைதல், மனம் விசாலமாதல், மனம் செறிவுறுதல் ஆனவற்றின் பெருக்கம், வளர்ச்சி 3) வாழ்க்கைக்குத் துணையாக உதவ நாம் தேர்ந்தெடுத்த கருத்தையோ அல்லது வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியத்தையோ அல்லது உன்னத ஆதர்சத்தையோ நடுநாயகமாகக் கொண்டு நம் எண்ணங்கள் அமைதல் 4) எண்ணங்களை அடக்கி ஆளல், கெட்ட எண்ணங்களை விட்டொழித்தல், நாம் வேண்டும்போதோ அல்லது நாம் வேண்டியதையோ நினைக்கும் சக்தி 5) மனதில் அமைதி, பரிபூரண சாந்தி, நம் இருக்கையின் உச்ச ஸ்தானத்திலிருந்து வரும் அநுபூதிகளை மேலும் மேலும் ஏற்கவல்ல மனோ சாமர்த்தியம்.

18. பிறர் குறையை எடுத்துச் சொல்லாதே. பிறர் சுபாவக்குறையை நீக்கவோ அல்லது திருத்தவோ உனக்கு சக்தி ஏற்பட்டதும் அக்குறையை நீக்கு.

19. சில கருத்துகள் இந்த மண் உலகையே மாற்றித்தர வல்லவை. இவற்றையே நாம் “வாக்கால்” வெளிப்படுத்த வேண்டும். இவையே சிதாகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள். இவையே புவியை அதன் பரம உன்னத இலட்சியத்தின் வழி நடத்திச் செல்ல உதவக் கூடியவை.

20. ஒருவன் தன் ஆத்மாநுபவங்களைப் பற்றி ஒருபோதும் வம்பளக்கக் கூடாதென்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. இப்படி வம்பளப்பதால் அநுபவத்தில் குவிந்து சேர்ந்த சக்தி ஒரு நொடி நேரத்தில் உருவற்றுப் போவதைக் காணலாம்.

21. நாம் எதில் நாட்டங்கொள்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். இது அனைவருக்கும் தெரிந்ததே. நீ தெய்வம் ஆக விரும்புவையேல் தெய்வத்திடத்து மட்டுமே நாட்டங்கொள்ள வேண்டும்.

22. இறைவனின் பெருங்கருணை எப்போதும் உண்மையான பிரார்த்தனைகளை பூர்த்தி செய்கிறது.

23. பரிபூரண சரணாகதிக்கு வழி :- 1) உன்னுடைய விருப்பப்படியே நடக்கட்டும், என் விருப்பப்படி அல்ல 2) நீ விரும்பியபடியே, நீ விரும்பியபடியே 3) நான் ஒழிவில் காலமெல்லாம் உன்னவனே

24. இறைசக்தியைப் மட்டுமே நினை. அது உன்னுடன் இருக்கும்.

25. தெய்வீகசக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும். அப்போது நிலையான அற்புதங்களை அது நடத்தும்.

அன்னையை வணங்குவோம்; அவன் அருளைப் பெறுவோமாக!

***