வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்! (Post No.4834)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 16-24

 

Post No. 4834

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்!

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார கலெக்டருக்கும் முஸ்லீம் ஆட்சியாளருக்கும் மேலும் இருவருக்கும் இராம பிரான் காட்சி கொடுத்தது பற்றி இதே பிளாக்-கில் எழுதினேன்; அவற்றில் ஏரி காத்த இராமபிரான் கதையை மட்டும் மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

 

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதும் காலம் இது. கொட்டாம்பட்டி சுப்பையா நியூயார்க் செல்லாமலேயே மற்றவர் எழுதியதை தனது பெயரில் போட்டு எழுதலாம்; மலையனூர் மாடசாமி ஜப்பானின் ப்யூஜியாமா எரிமலை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவருக்கு ஜப்பான் எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் நானும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதுராந்தக சோழன் எழுப்பிய ஏரியின் கரை மீதுள்ள கோதண்ட ராமன் பற்றி, புத்தகத்தில் படித்ததை எழுதினேன்; அது முதற்கொண்டு அங்கு நேரில் சென்று தரிசிக்க ஆவல் கொண்டேன். அந்த ஆசை மார்ச் 7, 2018-ல் நிறைவேறியது.

 

அர்ச்சகர் ஆராவமுதன் எங்களுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்கத்திலுள்ள பிளேஸ் துரை கல்வெட்டையும் பார்த்துச் செல்லுங்கள் என்றார். அப்படியே செய்தோம். பிளேஸ் துரை புதுப்பித்த சீதையின் (ஜனகவல்லி) சந்நிதியையும் தரிசித்தோம். அத்தோடு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலையும் அங்கு வரையப்பட்ட தற்கால ஓவியங்களையும் படம் எடுத்தோம். கோவிலில் இருந்த முரசையும் கண்டோம்.

சென்னையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள இந்த ஊர் அனைவரும் காண வேண்டிய ஊர். ராமர் கோவிலாலும், மாபெரும் ஏரியாலும் புகழ் அடைந்த ஊர்.

 

இந்த ஸ்தலத்துக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு; ராமானுஜர் இங்கே பஞ்ச சம்ஸ்காரம் எனும் வைணவச் சடங்கைச் செய்து இராமானுஜராக ஆனது இங்குதான்.

கீழேயுள்ளது  மூன்றாண்டுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

கட்டுரை எண்:-    1951

Written by London swaminathan

Date: 24 June 2015

Uploaded in London at 9-32 காலை

தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:

கதை 1

செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் (Colonel Lionel Place Durai) என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.

அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அ டிக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.

இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.

((மற்ற மூன்று கதைகளை எனது பிளாக்-கில் காண்க))

 

 

 

Anjaneya pictures are from the Hanuman Temple opposite the main shrine.

–subham–

 

குஞ்சிதபாதம் என்றால் என்ன? (Post No.4833)

Written by London Swaminathan 

 

 

Date: 20 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-24 AM

 

Post No. 4833

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

 

சிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

 

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

 

காஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர்! அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.

அகராதியில் இல்லாத தமிழ் சொல்!

குஞ்சிதபாதம் என்றால் என்ன? என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.

 

ஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.

கூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.

 

இன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.

 

நாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம  வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.

 

–SUBHAM—

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2 (Post No.4832)

Date: MARCH 20, 2018

 

 

Time uploaded in London- 5-05 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4841

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

சூரியன் சொல்லத் தொடங்கினார்:

“இவர் அக்னி அல்லர். அசுரனும் அல்லர். உஞ்சவிருத்தி விரதத்தில் சித்தி பெற்ற இந்த முனிவர் சுவர்க்கத்தை அடைந்தார். கனிகளையும் ஜலத்தையும் காற்றை அருந்துபவருமான இவர் சமாதியில் இருந்தார்.

சுவர்க்கம் அடைவதற்குக் காரணமான ஈஸ்வரரை வேத சம்ஹிதைகளால் துதித்தார்.

இந்த வேதியர் ஆசையற்றவர். உஞ்ச சீலத்தை ஆகாரமாக உடைய இவர் அனைத்துப் பிராணிகளின் நலத்திலும் அக்கறை உள்ளவர்.

இப்படிப்பட்டவர்கள் அடையும் உத்தம கதியை அவர் அடைந்தார்.

 

இதைக் கேட்ட நாகன் தன்னிடம் வந்த பிராம்மணரிடம் தான் கண்டதைக் கூறியதோடு, “ஓ! அந்தணரே!அந்த சூரிய மண்டலத்தில் இவ்விதமாக இந்த ஆச்சரியம் என்னால் பார்க்கப்பட்டது. அவர் சூரியனோடு சேர்ந்து சூரியனுடன் சுற்றி வருகிறார்.” என்றான்.

 

இதைக் கேட்ட அந்தணர் நாகனிடம், “சந்தோஷம்! நான் போகிறேன். நான் எதை நினைத்து வந்தேனோ அதை உன்னால் அடைந்து விட்டேன். நான் உஞ்சவிருத்தி விரதத்தை அனுஷ்டிப்பேன். உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்.” என்று கூறிக் கிளம்பினார்.

அவர் உடனடியாக சியவன மஹரிஷியை அணுகினார்.

சியவனரால் ஜனக மன்னனின் இல்லத்தில் நாரதருக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டது.

நாரதர் இதை இந்திரனுக்குக் கூறினார்.

இந்திரன் அனைத்து வேதியர்களுக்கும் இதைக் கூறினான்.

 

இந்த வரலாற்றால் உந்தப்பட்ட நாகனைச் சந்தித்த அந்த அந்தணர் உஞ்சசீலத்தை ஆகாரமாக உடையவராகி வனத்தினுள் சென்றார்.

மிகச் சுருக்கமாக சூரியனைப் பற்றிய விவரங்கள் இங்கு தரப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றில் சூரியனுடைய ஆச்சரியங்களை நாம் காண்கிறோம்.

பல கோடி ஆண்டுகளாக பல கோடி ஜீவராசிகளுக்கு அனைத்தையும் நல்கும் சூரிய சக்தியை அறிவியல் வியக்கிறது.

அறிவியலில் சூரியனின் ஆற்றலைப் பல்லாயிரம் பக்கங்களில் விவரிக்கக் காணலாம்.

ஆனால் சூரிய கிரணங்களில் கிளைகளில் இருக்கும் பட்சிகள் போலச் சித்தர்கள் இருப்பதையும், சூரியனோடு சுற்றும் அந்தணரையும் நாம் அறிவியலில் படிக்க முடியாது.

அதற்கு மஹாபாரதமே துணை!

சூரியனைக் குறித்துப் பல நூறு துதிகள் உள்ளன. ஏன் என்பதற்கான காரணம் சூரியனின் அளவிலா ஆச்சரியங்களே காரணம்!

(ஆதாரம்: மஹாபாரதம், ம.வீ.இராமானுஜாசாரியாரால் பதிக்கப்பெற்றது)

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும்ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல்சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும்குறை கூறவும்கண்டிக்கவும் உரிமை உள்ளதுமற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

***

 

English Collector saw Lord Rama in Madurantakam! (Post No.4831)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-59

 

Post No. 4831

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

There years ago I wrote in this blog an article about Lord Rama giving Darshan to an English collector and a Muslim ruler. From that day I wanted to visit the temple and see the lord for myself. In the first week of March,2018, I and my brother drove to Madurantakam where there is a vast sea like lake. Though the temple is relatively small, it is famous because of Lord Rama’s appearance.

 

Priest Aramuthan explained to us the incident and asked us to visit the Manadap where there is an inscription regarding this. We saw it and I took some photographs. It is said that the collector reconstructed Sita’s shrine as well. She is called Janakavalli. When you read such anecdotes, you admire it; but when you see it it gives thrill and excitement. We become more devoted to Lord Rama.

 

I saw some old temple drums and some modern paintings in the Anjaneya temple opposite the main shrine.

Madurantakam is in Kanchipuram district. One can reach it within two hours from Chennai/Madras. The distance between the tow places is approximately 80 kilometres/50 miles.

I wrote in this blog four anecdotes about God’s love for his devotees where I explained how an English Collector and a Muslim Ruler saw Lord Rama. See below my three year old post.

Post No 1948

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 20-41

 

 

British Collector who saw Lord Rama

During the British rule, Colonel Lionel Place was the collector of Chengalpattu District near Chennai. Madurantakam, a nearby town has a huge lake. Every year the monsoon rains filled the lake and many a time it overflew or its banks breached. During his collectorship between 1795 and 1799, Col. Lionel Place Durai camped there to oversee the repairing of the banks.

 

When he saw big granite pillars in the famous ancient Rama temple he told that it could be used for strengthening the banks of the lake. The priests objected to the proposal saying that Rama would protect the town. But the collector insisted that if God could protect the lake why it breached several times. But he wanted to wait and see what happens in the next few days’ rain. The lake was full to the brim. Worried collector was supervising the banks at the dead of night. Suddenly he saw a flash of light and there stood two people with bow and arrow walking on the banks of the lake. The rain also stopped and nothing untoward happened. The collector knew that it was Lord Rama and his brother Lakshmana who were guarding the lake. He had seen those pictures in the local temple. Collector Place’s name is in the inscription in the temple and the temple was renamed as Eri Kaatha Ramar in Tamil meaning ‘Rama who protected the Lake’– temple. It is on record that Col. Place along with Robert Clive had donated jewellery to the temples in that area including Kancheepuram.

 

Collector Lionel Place

Drums in the temple

–Subham–

நெற்றிக் கண் ! சூடான தோசை ! சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில்! (Post No.4830)

Written by London Swaminathan 

 

 

Date: 19 MARCH 2018

 

 

Time uploaded in London – 6-21 am

 

Post No. 4830

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கோவில் என்றவுடன் கடவுளின்  பெயர், சந்நிதிகள், சிலைகள் என்று வருணிக்கத் துவங்கி விடுவர். எனது அணுகு முறை வேறு: முதலில் ‘புல்லட் பாயிண்ட்ஸ்’- பின்னர் விரிவான விளக்கம்; நானும் என் தம்பியும் மார்ச்  முதல்வாரத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பெருமாளைச் சேவித்தோம். இதோ முதலில் அதிசய மற்றும் சுவையான செய்திகள்:

This is not the main shrine; outside the temple.

1.நெற்றிக் கண் பார்க்கலாம்!

2.அதிசய அழிஞ்சில் மரம் காணலாம் (முந்தைய கட்டுரையில் காண்க)

  1. சூடான தோசைப் பிரஸாதம் சாப்பிடலாம்

4.பாரீஸ் நகர லவ்வர்ஸ் லாக் LOVERS LOCKS போல இங்கே பிராப்ளம் லாக்

PROBLEM LOCK சுவாமிக்கு சார்த்தலாம்

5.நரசிம்மர் சிலையின் மேல் சூரிய ஒளி விழுவதை சில மாதங்களில் காணலாம்

 

தலைப்புச் செய்திகளைக் கொடுத்துவிட்டேன் இனிமேல் விரிவான செய்திகள்:

 

சிங்கப் பெருமாள் கோவில் காஞ்சீபுர மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நரசிம்மர், பாடலாத்ரி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். பாடலாத்ரி என்றால் சிவப்பு மலை. ஜாபாலி முனிவருக்கு இறைவன் காட்சி கொடுத்த இடம்..

 

இங்கு ஒவ்வொரு முறை தீபாரதனை காட்டும் போதும், பட்டர் அவர்கள், நரசிம்மரின் நெற்றிக் கண்ணைக் காட்டுகிறார்.சிவ பெருமானுக்கே உள்ள இந்த அம்சத்தை இங்கே காணலாம் ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்றவுடன் கோபத்துடன் வந்த கோலம் இது. நரசிம்மாவதாரம், பத்து அவதாரங்களில் ஒன்று.

 

பேயாழ்வாரால் பாடப்பட்ட தலம்; 108 வைணவ திருப்பதிகளில் ஒன்று; இது சுமார் 1500 ஆண்டுப் பழமை வாய்ந்த பல்லவ குடைவரைக் கோவில்; ஒரு சிறிய குன்றின்மீது கோவில் அமைந்துள்ளது.

 

நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போது, சூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்; புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும், பசிக்கு உதவும் அருமருந்து இது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அழிஞ்சில் மரத்தைக் காணலாம். இது பற்றிய அற்புதச் செய்திகளை ஆதி சங்கரரின் சிவானந்தலஹரி மூலமும் ஆண்டாளின் நாச்சியார் மொழி மூலமும் ஏற்கனவே எழுதிவிட்டேன்.

 

கோவிலுக்கு வெளியே வந்தால் ஒரு நரசிம்மர் சந்நிதி உள்ளது; அங்கே பூட்டுகளாகத் தொங்கு கின்றன. பாரீஸிலும் பல ஐரோப்பிய நகரங்களிலும் ஆற்றுப் பாலங்கள் தோறும் பூட்டப்பட்ட பூட்டுகளும் அதன் மேல் காதலன்–காதலி பெயர்களும் இருக்கும்; இதன் தாத்பர்யம் என்னவென்றால் அந்த ஜோடி பூட்டு போல இணைந்திருக்குமாம் ( பூட்டைப் பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்குள், ஜோடிப்புறாவில் ஒன்று பறந்துபோனாலும் அதிசயமில்லை!!!)

நரசிம்மப் பெருமாள் கோவிலில் ஏன் இப்படிப் பூட்டு போடுகிறார்கள் என்று வினவியபோது கிடைத்த விடையில், பிரச்சினைகள் உள்ளோர் அது தீரும் வரை இப்படிப் பூட்டுப் போட்டு வைத்திருப்பராம்; பிரச்சனை தீர்ந்த பின்னர் அதை எடுத்துவிடுவராம்.

ஆண்டுதோறும் சில மாதங்களுக்கு நரசிம்ம மூர்த்தி மீது சூரிய ஒளி படுவதும் கோவிலின் சிறப்பு.

 

சாது சந்யாசிகள்

இந்தக் கோவிலுடன் இணைத்துப் பேசப்படும் முனிவர் ஜாபாலி என்பவர் ஆகும். ராமாயணத்தில் ஒரு ஜாபாலி உண்டு. ஆயினும் அவர்தான் இவர் என்று சொல்வதற்கில்லை. சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் கூட வால்மீகி உண்டு; அவர் ராமாயணம் எழுதிய வால்மீகி இல்லை. ஏனெனில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்துக்கு பல ஆயிரம் ஆண்டு முன்னர் நடந்தது ராமாயணம். அவர் ராமனின் சமகால முனிவர்.

 

எந்த ஆண்மகனின் வெற்றிக்கும் பின்னால்  ஒரு பெண் உண்டு- There is a woman behind every man’s success என்று சொல்லுவர்.

அது உண்மையோ இல்லையோ எந்தக் கோவிலின் மஹிமைக்கும் பின்னால் ஒரு முனிவர் அல்லது சித்தர் அல்லது ரிஷி உண்டு There is a Rishi or Saint behind every Hindu Temple என்பது உண்மையே; இந்தக் கோவிலில் ஜாபாலி முனிவர் தொடர்பு இருப்பது போல சித்தர்கள் சமாதி உள்ள கோவில்களும் முனிவர் தொடர்புள்ள கோவில்களும் தன ஆகர்ஷணமும்  (பணம்) ஜன ஆகர்ஷணமும் (மக்கள் கூட்டம்) உடைத்தாய் இருக்கின்றன.

((யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு))

Lovers’ Locks in Seine River Bridge, Paris, France

 

–சுபம், சுபம்–

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! –1 (Post No.4829)

Date: MARCH 19, 2018

 

 

Time uploaded in London- 5-10 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4829

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 1

 

ச.நாகராஜன்

 

மஹாபாரத மர்மங்கள் ஏராளம். அதை முழுதுமாக அறிந்து கொள்ள ஒரு ஆயுள் போதாது.

 

அது விளக்கும் அற்புத இரகசியங்களும் ஏராளம். விண்டுரைக்கும் மர்மங்களும் ஏராளம்.

அதில் ஒன்று தான் சூரிய தேஜஸின் ரகசியம்.

 

சாந்தி பர்வத்தில் 371,372,373,374,375 ஆகிய அத்தியாயங்களில் இதை முழுதுமாகப் படிக்கலாம்.

 

அத்தியாயம் 371 – நாகன் பிராம்மணரைக் கண்டு பேசியது

அத்தியாயம் 372 – நாகன் சூரியனிடத்துள்ள அதிசயங்களை பிராம்மணருக்குச் சொல்லியது

அத்தியாயம் 373 – சூரியன் தன்னிடம் பிரவேசித்த தேஜஸின் வரலாற்றைச் சொல்லியது

அத்தியாயம் 374 – பிராம்மணர் நாகனிடம் விடைபெற்றுச் சென்றது

அத்தியாயம் 375 – பிராம்மணருக்கும் நாகனுக்கும் நடந்த சம்வாதமான கதை உலகில் வந்த முறை

 

இந்த அத்தியாயங்களில் உள்ள சுவாரசியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு காணலாம்.

தர்மாரண்யன் என்ற பெயர் கொண்ட பிராம்மணன் நாகராஜனான பத்மநாபன் என்ற நாகனைப் பார்க்கச் சென்றான்.

அவனைச் சந்தித்த பத்மன், அந்த பத்மன் நானே என்கிறான்.

உடனே பிராம்மணன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் என்று கூறி, “சூரியனிடம் நீ ஆச்சரியமான எதையாவது பார்த்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.

 

உடனே பத்மன், “சூரிய பகவானானவர் அநேக ஆச்சரியங்களுக்கு இருப்பிடம். அவராலேயே மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பிராணிகளும் பிரவிருத்திக்கின்றன.

அவருடைய ஆயிரம் கிரணங்களிலும் நன்றாக சித்தி பெற்ற முனிவர்கள் தேவர்களுடன் கூட, கிளைகளில் பட்சிகள் போல ஆஸ்ரயித்துக் கொண்டு வசிக்கின்றனர்.

 

அவரிடமிருந்து பெரிய வாயுவானது கிளம்பி அவரது கிரணங்களை ஆஸ்ரயித்துக் கொண்டு ஆகாயத்தில் விருத்தி அடைகின்றது.

அவரிடம் இதை விட மேலான ஆச்சரியம் என்ன இருக்கிறது? அந்த வாயுவைப் பிரித்து வர்ஷா காலங்களில் ஜலத்தைப் பொழிகிறார்.

 

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய மண்டலத்தின் மத்தியில் இருந்து கொண்டு  அந்தர்யாமியானவர் பரமமான காந்தியினால் ஜ்வலித்துக் கொண்டு உலகங்களைப் பார்க்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய பாதம் போன்ற சுக்கிரன் ஆகாயத்தில் மேகமாகி வர்ஷா காலங்களில் ஜலத்தை விடுகிறது.

தான் விட்ட ஜலத்தை எட்டு மாதங்கள் இழுக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய விசேஷமான தேஜஸினால் ஆத்மா நிலைத்திருக்கிறது.

 

பூமி ஓஷதியைத் தாங்குகிறது.

அவரிடம் ஆதியந்தம் அற்ற தேவர் இருக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

முற்காலத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற இன்னொருவர் காணப்பட்டார்.

 

அவர் சூரியனுக்கு எதிரே வந்தார்.

அவரை நோக்கி சூரியன் தன் கைகளைக் கொடுத்தார்.

அவரோ தன் வலக் கையைக் கொடுத்தார்.

 

பிறகு அவர் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தார்.

க்ஷண காலத்தில் அவர் தேஜஸ் சூரியனோடு கலந்தது.

சூரியன் யார், வந்தவர் யார் என்று எங்களுக்குச் சந்தேகம் வர சூரியனிடமே வேறொரு சூரியன் போல வந்த அவர் யார் என்று கேட்டோம்.

சூரியன் பதில் சொல்லத் தொடங்கினார்.

– தொடரும்

 

 

DO YOU WANT TO SEE GOD’S THIRD EYE? (Post No.4828)

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 12-38

 

Post No. 4828

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

I wrote about the miraculous properties of Ankola (azinjil tree) found in the Singaperumal Koil temple under the heading Adi Sankara, Andal and Alangium hexapetalum yesterday. There are more interesting titbits about Singaperumal Koil of Kancheepuram District. It is not far from Chennai.

 

Singaperumal koil deity Narasimhar is called Pataladri Narasimha meaning red hill Narasimha. It is a rock cut temple. Narasimha means Man-Lion- one of the ten avatars of Lord Vishnu.

 

When you come around the temple, Hot Dosa is sold for ten rupees each. Other food items are also available. Inside the temple Lord Narasimha’s statue has the third eye. The priest will remove the covering and show it to all the devotees during arti. Normally Lord Siva is associated with the Third Eye. It is rare to see Third Eye in a Vaishnavite temple like Singaperumal Koil.

 

Another interesting aspect is the sun light falling on the deities during two months in a year.

 

There is a saint behind every temple!

It is said that there is a woman behind every man (man’s success). Whether it is true or not, there is a saint behind every temple (temple’s greatness). Probably this is what makes the temple great. In a lot of Tamil temples there are Siddhar Samadhis (greatmen’s grave). This adds power to the temple.

Most of the temples in Tamil Nadu are associated with a saint, seer or a rishi. Singaperumal Koil temple is associated with Rishi Jabali. We come across a Jabali in Ramayana. But it may be another Rishi with the same name. Even poet Valmiki’s name is in 2000 year old Sangam Tamil literature!

 

Paris Lovers Locks and Narasimha Locks

One more interesting tit bit is the locks with the deity Narasimhar in the front part of the temple. In Paris and other western cities, we see Lovers Locks. They put the locks in the bridges to show that the lover and loved would be locked together for ever. But here I was told that they place the locks in front of Narasimha to get their problems solved. Once the problem is solved the loch is removed, I heard.

 

Singaperumal Koil is one of the 108 sacred Vaishnavite Temples and the deity is sung by Peyalvar, one of the 12 famous Vaishnavite saints.

Read about the mysteries of Ankola/ Azinjil tree in the temple posted here yesterday.

 

 

–Subham–

 

 

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

Picture from Guruji Gopalavallidasar post.

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 am

 

Post No. 4827

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.

 

அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

 

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.

 

நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.

இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-

கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?

“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய  திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?

 

 

அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்

 

அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி)  ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய  செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”

 

இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.

 

ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.

 

(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்

‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:

உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.

 

இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது  ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..

சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.

 

மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.

எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.

அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.

 

சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.

இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

 

சுபம் சுபம்

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்! (Post No.4826)

Date: MARCH 18, 2018

 

 

Time uploaded in London- 5-27 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4826

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

BY ச.நாகராஜன்

சுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம், பெல்ஜியத்திற்கு அலுவலக விஷயமாகச் செல்ல நேர்ந்தது.

ரோஸலேர் என்று ஒரு அழகிய சிற்றூர். அங்கு சென்றேன்.

எங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த படி நண்பர் ஒருவர் தங்குமிடம் உள்ளிட்டவற்றை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

அவருக்கு ஒரு ஆசை – என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று.

அழைத்தார். எதற்கு அவருக்கு சிரமம் என்று மறுத்தேன்.

வற்புறுத்தினார். சம்மதித்தேன்.

எனது சக நண்பர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றோம்.

இரவு சுமார் ஏழரை மணி.

வீட்டில் மணியை அடித்தார். கதவைத் திறந்தது அவர் மனைவி.

எங்களை நண்பர் அறிமுகப்படுத்த அவர் புன்னகையுடன் வரவேற்றார்.

 

ஒரு நிமிடம் தான், அவசரம் அவசரமாக உள்ளே ஓடினார்.

பிறகு சுமார் 30 நிமிடங்கள் ஓடின.

நண்பருக்கும் எம்பராஸ்மெண்ட்.

ஏதேதோ பேசினோம்.

30 நிமிடங்களுக்குப் பின்னர் அவசரம் அவசரமாக உள்ளேயிருந்து வந்தவர் மன்னிப்புக் கேட்டார்.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு டி.வி. சீரியல்.

 

 

சில மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது அன்று முடிவுக்கு வந்தது.

 

அதைப் பார்க்க உள்ளே போனேன்.மன்னிக்கவும் என்றார்.

“மன்னிப்பே கேட்க வேண்டாம்.எங்கள் வீட்டுப் பெண்மணிகளும் கூட இப்படித்தான்.போன் வந்தால் கட் பண்ணி விடுவார்கள்.

அரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசுவார்கள். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அம்மா, பெண்ணும் கூட இப்படித்தான்.“ என்றேன்.

 

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

பிறகு நல்ல உணவைப் பரிமாறினார்.

விடை பெற்றோம்.

நல்ல அனுபவம் இது!

 

உலகெங்கும் டி.வி.சீரியல்களின் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் போலும்!

 

தமிழ் டி.வி. சீரியல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். விருப்பமில்லாவிட்டால் கூட அதன் சில சீன்கள் என் பார்வையில் திணிக்கப்படும்.

 

எப்படி ஒருவரை கொலை செய்வது? கேஸைத் திறந்து விட்டு.. தலைகாணியை வைத்து அமுக்கி. பல்வேறு விஷங்களைப் பல்வேறு விதமாக ஜூஸில் கலந்து…

எப்படி ஒருவரை உபத்திரவப் படுத்துவது?

பல்வேறு உபாயங்களைக் கையாண்டு கை கால்களை உடைப்பது, கடத்துவது, காட்டு பங்களாவில் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து அடிப்பது, மிரட்டுவது…

போலீஸ் கேஸ்களில் தவறாக மாட்டி விடுவது.. இத்யாதி, இத்யாதி.

 

கேவலமான சீன்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக நீளும்.

இப்படி ஒரு சீரியல் மட்டும் இல்லை, ஏராளமான சீரியல்கள்!

காலை முதல் இரவு 10.30 வரை இப்படி சீரியல்களின் தொடர்ச்சிகள். எல்லாம் இப்படித் தான்!

இதைப் பார்க்கும் நம் வீட்டுப் பெண்மணிகள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்?

 

 

நெகடிவ் எண்ணங்களினால் மூழ்கடிக்கப்பட்டு “நாசமாய்ப் போவதற்கு”த் தயாராகத் தானே வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் மரணக்காட்சிகள், நல்ல நாட்களில் கோரமான கொலைகள் . – இப்படிப் பார்த்தால் வாழ்க்கை எப்படி நன்கு அமையும்?

 

 

சீரியல் எபிசோட்களை அமைப்பவர்கள் எப்படி நல்ல வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும்?

கர்ம பலன் விடாது. லட்சக் கணக்கானோருக்கு தீய காட்சிகளை இடைவிடாது காண்பிக்கக் காரணமான இவர்கள் எப்படி நலமுடன் வாழ முடியும்?

 

பெரிய பெரிய நிறுவனங்கள் – தொலைக்காட்சித் தொடர்களை அளிப்பவர்கள் – அதன் பொறுப்பாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

 

தேவன் எழுதாத நாவல்களா?

கல்கியின் கதாநாயக, நாயகியர் அனுபவிக்காத அவஸ்தைகளா?

சமூகப் பொறுப்புடன் எழுதிய நல்ல எழுத்தாளர்கள் அல்லவா இவர்கள்?

ராஜாஜி சமூகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு போகும் படி எழுத வேண்டுமென்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை பகன்றார்.

காஞ்சி பரமாசார்யாள் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பொறுப்பு உண்டென்றும், அவர்களின் பேனா முனையிலிருந்து வருபவை நல்லதையே எழுத வேண்டுமென்றும் அறிவுரை அருளினார்.

இன்றைய தமிழ் டி.வி. சீரியல்கள் மெல்லக் கொல்லும் விஷங்கள்!

 

 

இவற்றிலிருந்து விடுபட்டவர்கள் பாக்கியசாலிகளே!

வேலைக்குப் போகும் பெண்மணிகள் சற்று பிழைத்தவர்க்ளே என்று சொல்லலாம்!

 

 

மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்லல், நல்ல பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்தல், அர்த்தமுள்ள அரட்டை அடித்தால் – இவையெல்லாம் எங்கு போயின?

 

 

நமது பெண்மணிகள் சற்று யோசிக்க வேண்டும்.

மெல்லக் கொல்லும் விஷங்கள் உங்களைக் கொல்ல்த் தயார்

உஷார், உஷார், தப்பித்துக் கொள்ளுங்கள்!

***

Adi Sankara, Andal and Alangium hexapaetalum (Post No.4825)

Written by London Swaminathan 

 

 

Date: 17 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-52

 

Post No. 4825

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Great men think alike! So, no one would believe that one copied it from the other. But there is a strange coincidence between Andal and Adi Shankara. Andal has composed two poems Thiruppavai and Nachiar Thirumozi. Adi Shankara mentioned a plant known as Azinjil in Tamil and Ankola in Sanskrit, in his hymn Sivananda Lahari. Though Andal did not mention this plant in her hymn Nachiar Thirumozi, a commentator has mentioned the plant and its strange properties.

In the commentary to Nachiar Thirumozi (4th Thirumozi, Fourth poem), Periyavachan Pillay says the following:

“The Kadamba tree which was burnt down due to the poison spit by the Kaliya snake, came back to life at the touch of Krishna’s feet. One may wonder how was it possible. Don’t you know that the mango seed smeared with Ankola (tree) oil becomes a tree at once and bears fruits? If it is so, cant Vishnus’s feet which secretes Amrita (elixir of life, ambrosia) for ever revive a tree?

 

The common belief is that the seeds of the Ankola (azinjil in Tamil) tree falls on the ground and when the lightning strikes the seedS go and stick to the tree. If the seeds (fruits) are collected at that time and crushed into oil and used on the mango seed, it would sprout into a full tree IMMEDIATELY and bear fruits. Another example is Rama’s feet turned a stone into a woman ( Ahalya)…… The commentary continues……………

 

So the miraculous properties of the Ankola tree are used by the commentators and composers for at least 2000 years.

 

My Visit to Singaperumal Koil

When I went to Singaperumal Koil in the first week of March 2018, I was surprised to see this tree in the hillock around the temple. It was written on the rock that Nachiar Thirumozi commentary speaks about the miraculous property of this plant. It also says that those wanted to become a genius or those who wanted to get married quickly or get an issue, have to take a thread from their clothes and hang it on the tree! As soon as I saw the tree, I remembered my old article about this plant (Please see below)

 

Following is my research article published in this blog on 21st August 2013.

Adi Shankara & Alangium hexapetalum

 

Adi Shankara, the greatest philosopher of India uses lot of similes from nature to illustrate Advaita philosophy. In one sloka he used four birds. I have written about it in my earlier post. One of his interesting observations is about a tree called Ankola in Sanskrit, Alinjil in Tamil and Alangium hexapetalum in botanical term. Its other variety is Alangium salvifolium.

 

‘’ True Bhakti or devotion is explained with the help of Ankola tree and magnet in Sivananda Lahari and Viveka Chudamani of Adi Shankara.

Ankolam nijabeejasanthathi syaskanthopalam suchika………… (Sivananda Lahari, verse 61)

 

 

Sri Shankara has explained what real Bhakti is. The relation between the devotee and Iswara(God) is explained with reference to five examples. They are the tree known as Ankolam and its seeds; the magnet and the needle; a chaste woman and her husband; a creeper and a tree; and a river and the ocean.

 

The ankola tree (Azinjil in Tamil) is found in the forest. It is said that when its fruits fall to the ground, the seeds, liberated from the fruit by some compelling force within, move close to the trunk of the tree, gradually climb up, and get inseparably attached to the tree. During my travels, I was shown this tree in a forest. I saw the seeds sticking o the trunk of the tree, though I was not able to observe the actual movement of the seeds from the ground to the tree. This example of the seeds which fall away from the tree struggling back and attaching themselves to the tree, is denoted by the words ‘’aankolam nija beeja santatih’’.

—- Kanchi Paramacharya’s Talk on February 8, 1958 in Madras (Page 90/91 ‘Acharya’s Call Part 2)

 

Later Tamil literature Seevaka Chintamani refers to this tree. This tree and its parts have got medicinal properties. It has got anti microbial activity. It is traditionally used for tonic and treatment of haemorrhoids (Piles complaint).

Andal posted by Ponnambalam Stapathy