BEAUTIFUL SRIMUSHNAM TEMPLE (Post No.4844)

Written by London Swaminathan 

 

 

Date: 23 MARCH 2018

 

 

Time uploaded in London – 15-22

 

Post No. 4844

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

I visited Sri Mushnam temple in the first week of March 2018 and amazed to see the beautiful sculptures.

Some facts about the temple for future visitors:

 

Where is it?

Very near Vridhachalam (Virudhachalam) in Tamil Nadu. Easy to travel from Chidambaram.

 

Who is the presiding deity?

Sri Bhuvaraha swami/ Vishnu in Varaha avatara- with Goddess Ambujavalli (Lakshmi).

 

Varaha Avatara (boar incarnation) is one of the Ten famous Avataras of Lord Vishnu.

Whose temple is this?

Though it is very ancient, we have records from Vijayanagara Empire and Hoysala times.

 

What is the special features of this temple?

Beautiful sculptures with women’s hair do. The plait of the hair in some of the statues are very natural.

Devotees believe Lord Vishnu in three forms in this temple—Bhuvaraha, Bodhi/ Asvatta tree- Ficus religiosa and Nitya pushkarani- the tank.

 

During festival times, the deity is taken to a mosque in a nearby village and the Muslims pay respects to the god.

 

Colourful Tower

 

The tower is a seven storeyed one with colourful sculptures and on the top there are nine Kalsas.

The murti/ staue is accompanied by Bhdevi and Sridevi

 

The temple entrance has lot of carvings identical to Vridhachalam temple. Both must be constructed by the same sculptors.

Danda Theertham (water source) was made famous by Madhavacharya and people from Karnataka and other states visit this place during special festival the Theertham.

 

Significance of the Statue

The main statue is believed to be a Swayambhu (spontaneous appearance). It is made up of Salagrama. The meaning is fossil stone with the impressions of sea creatures. Hindus—particularly Vaishnavites—respect all the fossil stones with when and conch impressions as the form of Vishnu. In other parts of the world, these fossils are valued by the geologists and palaeontologists. They tell the story of the earth.

 

Here in Srimushnnam, it might have been an ancient stone with such symbols and later sculpted in to Bhuvaraha.

 

Another significance of this place is the birth place of one of the  Shankaracharyas of Kanchi Kamakoti peetam, samadhi of one of the Ahobilam jeeyars and the theertham established by Sri Madhwacharya.

There is a Shiva temple as well.

Geologically, historically and by religious Sthala puranas (local religious history) this is a very ancient place.

 

But it is not sung by the famous Tamil Vaishnavite saints- Alvars.

 

The sculptures at the gate show several dancing postures, which reminds one of Chidambaram temple.

 

One must do some research comparing these dance mudras in Chidambaram, Virudhachalam and Srimushnam.

 

 

Kuzanthai Amman Shrine

Another unsual thing about the temple is there is one Goddess shrine called Kuzanthai amman shrine (kuzanthai = baby).

Those who wish for issues pray here. There are seven goddesses (sapta matas) under a neem tree.

 

Every temple as some special features. The idol in the main shrine itself is unique. In other places Lord Vishnu appar with four hands with Conch and Wheel (Sanga, Chakra). Here he holds both of his hands on his waist reminding Panduranga.

 

You may hear many more specialities from the Bhattacharya/ priest when you visit the temple.

 

Every temple has a special prasada (eatable) and this temple has special laddu.

 

Like all the Nayak temples of Madurai, Tiruvannamalai, we have 1000 pillar Mandap/hall here.

16 Pillar Mandap

In all the Nayak temples we have 16 pillar mandap; here we have one Purushasukta mandap where Vedic recitation is held. It is aid that like the music pillars of Nayak temples, we can hear musical sound here with the help of stones. There are beautiful Yali (mirror image of Leo= leonine= lion like) and knights. All the sculptures in the temple are unique and beautiful.

Mandapa= hall

 

-subham–

 

 

இந்துக் கடவுள் மீது மாணவர் ‘தாக்குதல்’ (Post No.4843)

Srimushnam Temple– Stone slab on the ancient statues.

 

Written by London Swaminathan 

 

 

Date: 23 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-08

 

Post No. 4843

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

இந்த முறை இந்திய விஜயத்தில், முன்னர் பார்க்காத பத்து கோவில்களையும், முன்னர் பார்த்த மூன்று கோவில்களையும் தரிசித்தேன்; வைதீஸ்வரன்கோவில் எங்கள் குல தெய்வம் என்பதால் லண்டலிருந்து பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் குல தெய்வ தரிசனம் உண்டு; சிதம்பரம், மயிலை கபாலீஸ்வரரைத் தரிசிக்க நேரம் இருந்ததால் மீண்டும் சென்றேன்.

 

பார்க்காத இரண்டு கோவில்களில் பார்த்த இரண்டு தாக்குதல்களை மட்டும் இதில் சொல்வேன்; கோவிலின் சிறப்புகளைத் தனியாகப் பகர்வேன்.

 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு பிரகாரத்தில் பல ஓவியங்கள் மிகவும் பரிதாப நிலையில் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேக நடையில் வந்தேன். அதில் ஒரு படம் என்னை SUDDEN STOP ஸடன் ஸ்டாப் – நிறுத்த– வைத்தது. படம் முழுதும் ஒரே எண்கள்.

உடனே நான் என் தம்பியிடம் சொன்னேன்:

அடக் கடவுளே! இவர்களுக்கு லாட்டரி டிக்கெட் நம்பர்களை எழுத வேறு இடமே இல்லையா? இப்படி எழுதினால், விழக்கூடிய பரிசுகளையும் ஆண்டவன் விழாமல் செய்து விடுவானே! என்றேன்

 

என் தம்பி- மதுரையில் கல்லூரி பிரின்ஸிபாலாக இருந்தவன். மாணவர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்தவன். அவன் சொன்னான்-

இல்லை, இல்லை- இவை அனைத்தும் ஹால் டிக்கெட் எண்கள் HALL TICKET NUMBERS  என்று; பரீட்சையில் குறுக்கு வழியில் பாஸாக இப்படியெல்லாம் முயற்சி!

 

நிற்க- சாகர டயத்துல (இறக்கும் நேரத்தில்) சங்கரா, சங்கரா என்றால் கூட உதவுவான். ஆனால் படிக்காமலேயே ஹயக்ரீவர் படத்தில் எழுதினால் உதவுவானா?

பிரகாரத்தில் இருந்த ஹயக்ரீவர் படத்தில் இப்படி ஹால் டிக்கெட் HALL TICKET (பரீட்சை மண்டபத்தில் நுழைவதற்கான- அனுமதிச் சீட்டு) என்களை எழுதி இருந்தனர்.

 

சிவன் கோவிலில் ஹயக்ரீவர் இருந்தது அதிசயமே. ஆனால் அங்கு கண்டதெல்லாம் தற்கால ஓவியங்களே.

யார் அந்த ஹயக்ரீவர்?

 

விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து — என்பது பொதுவான கணக்கு; ஆனால் பாகவதம் முதலிய பரந்தாமன் புகழ் பாடும் நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களின் பட்டியல் உள்ளது. வான் புகழ் வள்ளுவனோ — திருவள்ளுவ ஐயங்காரோ–

(திருவள்ளுவர் ஐயரா, ஐயங்காரா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

ஆயிரக்கணக்கான அவதாரங்கள் உண்டு என்கிறான்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்  – குறள் 50 என்பான்.

 

யாரெல்லாம் அறவழியில் நின்றனரோ அவர்கள் எல்லோரும் ஆகாயத்தில் (உச்சியில்– நமக்கும் மேலே) இருக்கும் கடவுள் என்பான்.

 

ஆகையால்தான் இந்துக்கள் நட்சத்திரங்களுக்குக்கூட ஸப்தரிஷி, அகஸ்தியர், துருவன் என்று பெயர் சூட்டியுள்ளனர். நிற்க- SUBJECT-ஸப்ஜெக்டுக்கு வருவோம்.

 

குதிரை முகக் கடவுள்  ஹயக்ரீவர் — விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். அறிவுக்கும், விவே கத்துக்கும் உறைவிடமானவர். அவரை வணங்குவோருக்கு ஸரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷம் (கடைக்கண் பார்வை) இருக்கும்.

 

ஹயக்ரீவரை வழிபடுவது சாலச் சிறந்தது; ஆயினும் அவர் படம் மீது இப்படித் தாக்குதல் — கிறுக்கல்– நடத்துவது நலம் பயக்காது.

 

ஸ்ரீமுஷ்ணம் கோவிலிலும் இப்படி ஹயக்ரீவரைப் படாதபாடு படுத்தி இருந்ததாக நினைவு. நிற்க

 

பல கோவில்களில் மாணவ, மாணவியர் கூட்டம் கூட்டமாகக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அட! பக்தி பெருகிவிட்டதே என்று மெய் சிலிர்த்தேன். பிறகுதான் புரிந்தது இது பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ‘’கர்மண்யேவாதிகாரஸ்தே, மா பலேஷு  கதாசன’’- வகையறா அல்ல என்பது.

‘செயலைச் செய்; அதன் பலன் மீது பற்று வைக்காதே’ – என்பது பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் அருளிய முக்கியப் பொன்மொழி.

 

கோவிலிலோ குழந்தைகள், கருமத்தின் பலனை எதிர்பார்த்துத் தொழுதனர்– பரவாயில்லை- இது முதல்படிதானே- முன்னேறட்டும்.

Virudhachalam Sivan Temple

 

காதலர் தினமும் சிவராத்ரியும்

 

இத்தருணத்தில் வேறு ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்வது சாலப் பொருந்தும். ‘’இடமாறு தோற்றப் பிழையாக இராது’’– என்றே எண்ணுவேன்.

 

எனது அண்ணன் குடும்பத்தின் இனிய நண்பர் ரமேஷ் ராமசாமி. அவருடன் பல்வேறு விஷயங்களைக் கதைத்தபோது ஒரு துணுக்கு வெளியானது.

 

“அண்ணா, எனக்கு ஒரே ஆச்சர்யம். ஆண்டுதோறும், சிவராத்ரி இரவில் சென்னையிலுள்ள எல்லா சிவன் கோவில்களுக்கும் செல்லுவேன்; இவ்வாண்டு சிவராத்ரியின் போது எல்லாக் கோவில்களிலும் கூட்டம் மிகமிகக் குறைவு. ஏன் என்றே தெரியவில்லை”.

 

நான் சொன்னேன்

“நீ பசி மயக்கத்தில் இருந்திருப்பாய். சிவராத்ரி உபவாசத்தில் கண்ணை மறைத்திருக்கும்:

 

இல்லை அண்ணா- எல்லா கோவில்களிலும் பிரசாதமும் கிடைக்கும்.

 

அடக் கடவுளே! இது தெரிந்தால் நானும் இரவு முழுதும் கண்விழித்து சிவராத்ரி ”உபவாஸம்” இருப்பேனே என்று JOKE ஜோக் அடித்துவிட்டு வேறு ஸப்ஜெக் SUBJECTSட்கள் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

 

 

அவரிடன் சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பல கோவில் தலங்கள் பற்றி யோஜனைகள் பெற்று மறுநாள் நானும் என் தம்பியும் காரில் ஏறினோம். எனக்கு திடீரென்று தூக்கிவரிப்போட்டது- புத்தர் போல ஞானோதயம் ஏற்பட்டது.

 

காரில் சென்றவாறே என் தம்பியிடம் சொன்னேன்;

அடக் கடவுளே ரமேஷ் சொன்ன விஷயத்தில் பெரிய தாத்பர்யம் இருக்கிறது. இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. பிப்ரவரி 13 செவ்வாய்க் கிழமை சிவராத்ரி-  பிப்ரவரி 14, 2018 புதன்கிழமை செயின்ட் வாலன்டைன் டே ST VALENTINE’S DAY– காதலர் தினம். அதனால்தான் சிவராத்ரிக்குக் கூட்டம் குறைவு. எல்லோரும் காதலர் தினத்துக்கு லீவு போட்டு டிக்கெட் புக் பண்ணியிருப்பர். ஆகையால் சிவ பெருமானை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டனர் போலும் – என்றேன்

 

இது எனக்கு திடீரென்று எப்படி ஞாபகத்துக்கு வந்தது என்றால்– வாரம்தோறும் லண்டன் நார்த் விக் பார்க் ஹாஸ்பிடலில் NORTHWICK PARK HOSPITAL, LONDON இந்துக்களுக்கு 20 நிமிடம் ஒதுக்கியுள்ளனர். புதன் கிழமை தோறும் பிராரத்தனை நடத்துவோம்; பிப்ரவரி 14 புதன் மட்டும் உங்கள் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று கிறிஸ்தவ குருமார் எங்களிடம் வேண்டிக்கொண்டார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்; அவர்களைப் பொருத்தவரை வாலன்டைன் ஒரு புனிதர். அதற்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை.

 

 

கோவில் மீது அதிகாரிகள் தாக்குதல்!

 

நாங்கள் சென்ற சில கோவில்களில், எலெக்ட்றிகல் பிட்டிங்க்ஸ், கற்பலகைகளை வைத்து, ஓவியங்களையும் அழகிய சிலைகளையும் மறைத்து எழுப்பி இருந்தனர்.

யார் டொனேஷன்/ DONATION கொடுத்ததில் இது வந்தது அல்லது யார் இதை என்று திறந்து வைத்தனர் என்றெல்லாம் கற்பலகை  , எழுப்பி, சிமென்ட் பூசி உறுதியாகச் சிலைகளை மறைத்தனர். சில கோவில்களில் ட்யூப் லைட்டின் வெளிச்சத்தையும் மறை க்கும் அளவுக்கு உபயதாரரின் பெயர்கள் பிரகாஸித்தன!!

 

கடவுள் எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடுப்பாராக..

 

சென்ற ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது தஞ்சை ஜில்லாவில் ஒரு பிரபல கோவிலுக்குச் சென்று இருந்தோம். பட்டர் எங்கே என்று கேட்டோம்; இதோ வீட்டுக்குப் போயிருக்கிறார்; சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்று கோவில் சிப்பந்தி உரைத்தார்.

சொன்னபடியே பட்டர் விரைந்து வந்தார்; கையில் பிளாஸ்க் FLASK- கூடவே ஒரு டம்ப்ளர். அழகாக சந்நிதியின் ஒரத்தில் சுவாமிக்கு முன்னால் சம்மணம் போட்டு அமர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாகக் காப்பியை– ஆவி பறந்தது– என் நாக்கிலும் ஜலம் ஊறியது– ரசித்து, ருசித்துக் குடித்தார். சுமார் பத்து நிமிடங்கள் உருண்டு ஓடின. கையைக் கொஞ்சம் ஜலம் வைத்துத் துடைத்துக் கொண்டார்.

 

யார் யாரெல்லாம் அர்ச்சனைக்கு வந்துள்ளீர்கள்? தட்டையும் அர்ச்சனை சீட்டையும் கொடுங்கோ என்றார். நாங்களும் பயபக்தியுடன் தட்டைக் கொடுத்தோம்

 

கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடு- என்றும் பிரார்த்தித்தோம்.

 

திராவிட ரவுடியுடன் சந்திப்பு

பல ஆண்டுகளுக்கு முன்னர் குல தெய்வ தரிசனத்துக்காக வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபோது இதைவிடக் கொடுமையான சம்பவம் நடந்தது–

 

கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் ஒரு பெரிய “கும்பல்” வட்டமாக உட்கார்ந்து இருந்தது. பணம் எண்ணுவதை ஆவலோடு நானும் வேடிக்கைப் பார்த்தேன்; திடிரென்று பணம் எண்ணும் ஒருவர் வாயில் இருந்த ரத்தச் சிவப்பான வெற்றிலை எச்சிலைத் துப்பினார்- பிரகாரத்திலேயே–!!! பக்கத்தில் பார்த்தால் அவர் துப்பிய எச்சல் நிறையவே இருந்தது- அருவெறுப்பின் சிகரம்- அசிங்கத்தின் உச்சம்! ஒரு முறை…. முறைத்தேன். அவரும் பூனை முறைப்பது போல என்னைப் பார்த்து ஒரு முறை….. முறைத்தார். எனக்குப் பயம் வந்துவிட்டது நைஸாக நழுவிவிட்டேன். இது என்ன அக்கிரமம்? கடவுளுக்கு முன்னாலேயே இப்படித் துப்புகிறானே – என்று

 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அஸரீரி குரல் கொடுத்தார்.

 

கண்ட கண்ட தோழான் துருத்தி,  பள்ளன் பறையனை எல்லாம் கோவில் அதிகாரியாகப் போட்டால் இப்படித்தான் ஸார் நடக்கும் என்று.

 

என்று திராவிட ரவுடிகள் கோவிலில் புகுந்தார்களோ அன்றே கடவுள் வெளியேறிவிட்டார் போலும்; இல்லாவிடில் அவர்கள் கோவில் நகைகளை எல்லாம் மாற்றி, கோவில் சிலைகளை எல்லாம் விற்று, போலிகளை வைத்ததால் கடவுளுக்கு பவர் POWER போய்விட்டதோ என்னவோ.

“அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்ற தமிழ்ப் பழமொழியில் நம்பிக்கை கொண்டு விடை பெற்றேன்

 

–சுபம், சுபம் —

 

பாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842)

PICTURE OF ACTORS FROM BHARATIYAR DRAMA (ACTED BY RAMANAN AND DIRECTED BY RAMAN)

Date: MARCH 23, 2018

 

 

Time uploaded in London- 7-36 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4842

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 464 முதல் 475

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்

 

 

பக்தி யிலக்கியம் என்றே தமிழைப்

    பாரே போற்றிடினும்

சக்தி என்புகழ் பாடிய நூல்கள்

   சாற்றும் படியில்லை

இக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்

    ஏனோ எழவில்லை

தக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்

    தமிழ்நூல் அதிகமில்லை

 

சங்க இலக்கியத்துள் – சிவத்தைச்

சார்ந்தெனைச் சிலவரிகள் பாடிவைத்தார்

தங்கும் சிலம்பினிலே – இளங்கோ

தகவறு கொற்றவைத் துதியுரைத்தான்

 

கலிங்கத் துப்பரணி – கூத்தன்

கவித்துவ தக்கயா கப்பரணி

வலிமையைத் தருகின்ற – காளியாய்

வடித்தென் பெருமையைச் சாற்றினவே

 

குமர குருபரனோ – என்னைக்

குழந்தையாய் கண்டினிய கவிபாடினான்

அமர்ந் ததனைப்போலே – புலவோர்

அரும்பிர பந்தங்கள் சிலபாடினார்

 

தாயுமா னவனென்மேல் – செய்ய

தமிழ்ப்பதி கம்சில வடித்திட்டான்

ஏயும் வடிவுடைமாலை – வடலூர்

இராம லிங்கமும் கொடுத்திட்டான்

 

அபிராமி பட்டன்தான் – அரிய

அந்தாதி ஒன்றினைச் சூட்டிநின்றான்

அபிமானத் துடனதனை – இந்நாள்

அனைவரும் ஒருமனதாய் ஓதுகிறார்

 

என்புகழ் பாடயிவை போதுமோ?

  இனியொரு வரைத்தமிழ் காணுமோ?

என்றயென் ஏக்கத்தைத் தீர்க்கவே

   இங்குவந் தாய்நீயும் பாரதி

உன்செயல் யாவுமென் செயலதாய்

   உரைத்திட்ட நீசக்தி தாசனாய்

என்றுமென் புகழ்தனைத் தீட்டினாய்

   எண்ணற்ற கவிமலர்கள் சூட்டினாய்

 

எந்தன்மேல் அரியநற் காவியம்

    ஏதும்நீ இயற்றாமல் போயினும்

செந்தமிழ்க் கூறிடும் பிரபந்தம்

    சிறப்பாக உருவாக்கா திருப்பினும்

சந்தங்கள் நிறைந்தநற் பாக்களால்

    சக்தியென் புகழ்நாளும் பாடினாய்

இந்நாளுக் கேற்றபடி தந்ததால்

    எல்லோரும் என்புகழைப் பாடினார்

 

தேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்

தேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்

நேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்

நறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்

 

பாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்

பதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்

பூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல

புகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்

 

மூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்

முளரிமா திருவரை முன்னுரைத் தாலும்

தோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்

தோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்

 

ஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்

அறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்

ஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே

அறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

 

–Subham–

SUPERSTITIOUS STUDENTS’ ‘ATTACK’ ON HINDU GOD!! (Post No.4841)

Exam Fever- Student devotees inside Sri Mushnam Temple

Written by London Swaminathan 

 

 

Date: 22 MARCH 2018

 

 

Time uploaded in London – 20-46

 

Post No. 4841

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

When I went to India to attend the fifth World Saiva Siddhanta Conference held in Chennai in the first week of March, 2018, I visited a few temples which I had never seen. A friend of mine Ramesh Ramasamy of Chennai gave us some ideas.

 

Casually he mentioned that he used to visit all the Siva Temples the whole night on Shivratri day and to his surprise there was less crowd in all the temples this year. I told him probably it was only his illusion. But he insisted again that the difference in the number of devotees was very visible. I couldn’t give him any reasonable explanation.

 

When we were going in the car it suddenly flashed on my mind that this year Shivaratri fell on Tuesday the 13th February. The next day was St.Valentines day! So now I knew why there was less crowd the previous night. They have already decided to use 14th  night instead of 13th for something else!

Hayagrivar inside Virudhachalam Sivan Temple

This shows that for many, Bhakti or devotion to god is very seasonal or flexible. The reason I am writing about this is, I was surprised to see students’ scribbling on a picture in the Vridhachalam Shiva temple. It was God Hayagreeva’s picture. I told my brother, “what is this nonsense? people even started writing lottery ticket numbers on God’s picture?”. My brother who was the principal of a college told me, “No they are hall ticket numbers of the students. They believe that by writing the hall ticket numbers on the picture would get them good marks since Hayagriva is considered the God of Wisdom and Knowledge!”

 

Hayagriva is considered one of the Avatars (incarnations) of Lord Vishnu. There is nothing wrong in believing in the power of Lord Hayagriva—the horse faced God. But writing the hall ticket numbers on the picture of Lord Hayagriva and spoiling the temple painting is a wrong thing.

I also saw lot school students frequenting Sri Mushnam Vishnu (Bhuvaraha) temple. Then only I realised that it was Exam time in Tamil Nadu. A group of girls were going from one shrine to another with great devotion. Like elders looking for a short cut to solve their problems, youngsters also try to get good marks in the easy way.

Sivan Temple, Virudhachalam

What to do next?

Temple authorities must erect some fence or barrier around Goddess Sarasvati and Hayagriva. I saw this in Sri mushnam temple as well.

 

–subham–

 

மயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840)

Written by London Swaminathan 

 

 

Date: 22 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-23

 

Post No. 4840

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நாங்கள் மதுராந்தகம், வடலூர்திருக்கோவிலூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு இடங்களைக் காண திட்டம் இட்டோம்; அது நிறைவேறியது; அத்தோடு போனஸாக மேலும் சில இடங்கள் கிடைத்தன (March 7 to 11, 2018)

சில நண்பர்களின் ஆலோசனைப்படி சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டோம்; எல்லா இடங்களிலும் இறையருள் கிடைக்கப் பெற்றோம்.

 

உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’

 

அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது; ‘கார்கள் கோவிலின் வாசல் வரை செல்லும். பல படிகள் ஏறி சந்நிதியை அடையலாம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருந்தது.

 

மயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.

 

மயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.

மயிலம் கோவில் சுவரில் நல்ல ஓவியங்கள் (தற்காலத், தவை) இருந்தன. ஆனால் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லததால் எடுக்கவில்லை. ஒரு அழகிய சிலயை மட்டும் படம் எடுத்தேன்.

 

இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்

மயிலம் வரலாறு, பொம்மபுர ஆதீன வீர சைவ மடத்தின் வரலாறு ,இங்கு இருந்த பாலசித்தர் வரலாறு, பரம்பரையாக வந்த ஆதீனகர்த்தர் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விஷயங்கள் விக்கி பீடியாவில் உள்ளது .

 

இங்கு முருகன், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் காட்சி தருகிறார். வெளியில் ஒரு கடையில் தேனும்- தினை மாவும் கிடைக்கும் என்று எழுதி இருந்தது பழங்காலக் கதைகளை நினைவுபடுத்தியது. ஒரே பகற் பொழுதில் பல கோவில்களைக்  குறிவைத்ததால் ஆழ்ந்து ஆராய முடியவில்லை.

 

திருப்புகழ் பாடல் 546 ( மயிலம் ) 

தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா …… தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ …… எனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா …… விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னு஡டே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா …… லழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா …… ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா …… யிடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் …… வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானு஡ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் …… குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் …… பெருமாளே.

(Thiruppugaz from tamilvu)

 

 

–SUBHAM–

விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 2 (Post No.4839)

Date: MARCH 22, 2018

 

 

Time uploaded in London- 7-18 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4839

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

9-3-18 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 2

.நாகராஜன்

 

உலகின் தலை சிறந்த அறிவியல் இதழ்களான நேச்சர், ஸயிண்டிஃபிக் அமெரிக்கன், ஸ்பேஸ், லைவ் ஸயின்ஸ் இவை அனைத்தையும் வாங்கிக் கட்டுபடியாகாது. மாதம் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தக் கவலையின்றி அனைத்து முக்கிய அறிவியல் தகவல்கலையும் இங்கு படித்து மகிழலாம்.

50 ஆண்டு கால் சாதனைகளின் தொகுப்பு தொடர்கிறது:

குறுகிய கால விண்வெளிக் கல மிஷன்

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் விண்கலமான ஃப்ரீடம் 7இல் 15 நிமிடங்களே பறந்தார். இப்படிப் பறந்த முதல் அமெரிக்கர் என்ற புகழை  ஈட்டினார். 115 மைல் உயரத்தில் பறந்த அவர் புறப்பட்ட ஃப்ளோரிடா தளத்திற்கு 302 மைல் தள்ளி அட்லாண்டிக்கில் தொப்பென இறங்கினார். 1971இல் அபல்லோ 14இல் சந்திரனுக்கு அவர் சென்ற போது 47 வயதான அவர் இன்னொரு உலகின் பரப்பில் நடநத அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதிக தூரம் சென்றவர்

பூமியிலிருந்து அதிக தூரம் சென்ற ரிகார்டு 47 வருடமாக முறியடிக்கப்படவில்லை.1970 ஏப்ரலில் அபல்லொ 13 மிஷனில் கலம் சந்திரனின் எதிர்ப் பக்கம் சென்றது. 158 மைல் உயரத்தில் பறந்த அது 2,48,655 மைல் தூரம் தள்ளி இருந்தது. இதுவே பூமியை விட்டுச் சென்ற அதிக பட்ச தூரமாகும்.

 

அதிக நேரம் விண்வெளியில் கழித்தோர்

ரஷிய விண்வெளி வீரர் ஜென்னடி பாடல்கா 878 நாட்கள் 5 விண்கலப் பயணங்களில் இருந்துள்ளார். அமெரிக்க பெண்மணி பெக்கி விட்ஸன் 665 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

நீண்டகாலம் தொடர்ந்து விண்ணில் இருந்த கலம்

இந்தப் பெருமை இண்டர்நேஷனல்  ஸ்பேஸ் ஸ்டேஷனைச் சாரும்.100 பில்லியன் டாலர் செலவில் சுழலும் லாப் கலமான இது 2000, நவம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் தொடர்ந்து யாரேனும் இருந்து வருகின்றனர். அக்டோபர் 31, 2000இல் ஸ்டேஷனுக்கான க்ரூ அனுப்பப்பட்டதையும் சேர்த்தால் இரு நாட்கள் அதிகம். ஆக இது தான் விண்வெளியில் மனிதர் இருக்கும் அதி நீண்ட காலம்!

நீண்ட ஸ்பேஸ் ஷட்டில் மிஷன்

கொலம்பியா STS -80 கலம் 1996, நவம்பர் 19இல் விண்ணில் ஏவப்பட்டது. இது திட்டப்படி டிசம்பர் 5இல் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் காலநிலை சரியில்லை. ஆக இரு நாட்கள் கழித்துத் திரும்பியது. ஆக இது விண்ணில் இருந்த நேரம், 17 நாட்கள், 16 மணி நேரம். இது தான் அதிக பட்ச நேரம் கொண்ட ஷட்டில் மிஷன்!

சந்திரனில் அதிக நேரம்

1972, டிசம்பரில் ஹாரிஸன் ஷ்மிட், யூஜென் கெர்னான் ஆகியோர் அபல்லோ 17 இல் பறந்து 75 மணி நேரம் மூன்று நாட்களுக்கும் மேலாகக் கழித்தனர். சந்திரப்பரப்பை ஆராய்ந்தனர். மொத்தம் 22 மணி நேரம் மூன்று முறை நடந்தனர்.

1969 ஜூலை 20இல் அபல்லோ 11இல் பறந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தனது ஈகிள் ல்யூனர் மாடுலில் இறங்கினார். அவரது சகா பஸ் அல்ட்ரின் பின்னால் இறங்கினார்.  2 மணி நேரம் 31 நிமிடம் நடை நீடித்தது. இது ஹாலிவுட் படம் ஒன்றின் நீளம் என்பது அதிசயிக்கத்தக்க ஒரு ஒற்றுமை!

அதிவேக விண் பயணம்

அபல்லோ 10 சந்திரப் பயணம் பயங்கர வேகத்தைக் கொண்டதாக இருந்தது. 24,701 மைல் பர் ஹவர். 1969 மே 26இல் இது திரும்பி பூமிக்கு வந்தது. இதுவே இதுவரையிலான உச்ச பட்ச ஸ்பீட்!

அடுத்த இரண்டு மாதத்தில் நிகழ விருக்கும் பிரம்மாண்ட உலக சாதனைக்கான ஒரு சோதனை முன்னோட்டமாக இருந்தது இது.

விண்வெளி வீரர் மேற்கொண்ட அதிகபட்ச பயணங்கள்

இரு நாஸா வீரர்களான ஃப்ராங்க்ளின் சாங்-டையஸ், ஜெர்ரி ரோஸ் ஆகிய இருவரும் ஏழு முறை நாஸா ஷட்டில்களில் பயணித்துள்ளனர். சாங் 1986 முதல் 2002 முடியவும் ரோ 1985 முதல் 2002 முடியவும் இந்தப் பயணங்களை மேற்கொண்டனர்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

கொரிய வீராங்கனையான சோயியான் யி (Soyeon Yi), இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் வெற்றிகரமான தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஷிய சோயுஸ் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருநதார்.

ஸ்பேஸ்  ஸ்டேஷனிலிருந்து கலம் விடுபடும் போது அவசரமாக விடுவிக்கவேண்டியதாயிற்று..அத்னால் சீக்கிரம் வரும் பாதை மாறி பின்னர் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்பட்டது..

க்லம் வளிமண்டலத்தில் கீழே தானாகவே அதன் அழுத்தத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. வேகமாக, அதலபாதாளத்தில் அபாயகரமாக கல்ம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது. சாதாரணமாக் மூன்று நான்கு ஹெலிகாப்டர்கள் வட்டமடித்து பாதுகாப்பை உறுதி செய்யும். அன்று ஒரு ஹெலிகாப்டரையும் காணோம்.

கலம் தானாக தரையில் மோத சோயியான் யி கதவைத் தானே திறக்க அங்க சற்று தூரத்தில் இருந்த ஆட்டிடையர்கள் திகைத்துப் போனார்கள்.

 

புல்வெளியில் படுத்துக் கிடந்த அவரை கழகஸ்தானிய இடைப் பெண்மணி ஒருத்தி தூக்கி உதவினார்.  அவர்களுக்கு விண்வெளித் திட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. விண்வெளி சூட்டை அணிந்திருந்த அவர்கள் அயல்கிரக வாசிகள் போலவே தோற்றம்ளித்தனர். எல்லோருமாகச் சேர்ந்து சோயுஸ் க்லத்தில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவரை வெளியில் கொண்டு வந்து உதவினர்.

கள்ளங்கபடமில்லாத அவர்களிடம் மொபைல் இருக்கிறதா என்று கேட்க அவர்கள் திகைத்தனர்.. பின்னர் கலத்தினுள் சென்று ஜிபிஎஸ் உதவியுட்ன் இருக்குமிடத்தை நிரணயித்து கலத்தின் மூலமாகவே கீழே உள்ள தரை ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டனர்.

கடைசியாக 300 மைல் தொலைவிலிருந்து ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்ந்தது.

முதல் முதலில் விண்ணுக்கு ஏகி பூமி திரும்பும் தங்கள் முதல் வீராங்கனை தரை இறங்குவதை கொரியர்கள் ஆவலாகப் பார்த்த போது இந்த விபரீதம் ஏற்படவே அனைவரும் கலங்கிப் போனார்கள்.

கடைசியில் எல்லாம் சுபம் என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

 

“வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபமாக இது ஆனது என்றார் சோயியான் யி!

 

சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் (Post No.4838)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 21-16

 

Post No. 4838

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

தமிழ்நாட்டில்  விழுப்புரம் அருகிலுள்ள திருவக்கரை– வக்ரகாளியம்மன் கோவிலாலும், பாடல் பெற்ற சிவன் கோவிலாலும் பக்தர்கள் இடையே பிரபலமான இடம். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது.

 

புவியியல் துறையினர் ஒரு போர்டா (board)வது வைத்து மக்களை ஈர்க்க வேண்டும்

என்ன அதிசயம்?

திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் பரப்புக்கு இந்தக் கல் மரங்கள் இருந்தாலும், சிறிய இடத்தை மட்டும் பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுமதி இலவசம். ஒர் காவற்காரர் மட்டும் அங்கேயிருந்து வருவோர் போவோரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குகிறார்; பாராட்ட வேண்டிய பணி.

 

கல் மரம் என்றால் என்ன?

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கல் போல ஆகி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் cell போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா silica எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டர்.

 

இந்த மரங்கள் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.

 

அது எப்படித் தெரிந்தது?

இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் இப்படி அடித்து வரப்பட்டிருக்கும் என்பது அவர்களின் துணிபு.

 

இந்த மரங்கள் பூக்கும் தாவரங்கள் (angiosperms), பூவாத் தாவரங்கள்(gymnosperms) ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்ததாகும்.

 

இவற்றைப் பாதுகாப்பதால் என்ன நன்மை?

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர் அருகில்கூட ஒரு கல் மரப் பூங்கா உளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் (annular rings) இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரியும்.

இதை முதலில் 1781ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பியர் பார்த்து எழுதி வைத்துச் சென்றார். இப்பொழுது இது புவியியல் துறையின் (Geological Survey of India) கட்டுப்பட்டில் இருக்கிறது

மரங்கள் பற்றிய விவரங்கள், அவை எப்படித் தோன்றின என்ற விவரங்கள் அனைத்தும் பெரிய போர்டுகளில் இரு மொழிகளில் எழுதியும் வைத்துள்ளனர்.

 

சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன.


(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

—சுபம்—

NATURAL WONDER NEAR VILUPPURAM (Post no.4837)

Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 12-46

 

Post No. 4837

Pictures shown here are taken from various sources.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

There is a natural wonder near Viluppuram. At 20 miles from Viluppuram, is Tiruvakkarai where there is a fossil wood park. Many people who visit the famous Vakrakali temple and the Siva temple do not know about the fossil wood or stone tree park. I would suggest the Geological Survey of India who maintain the park place sign posts near the temple.

 

Tiruvakkarai has hundreds of fossilised trees spreading over a vast area—247 acres. The entry is free. It has got trees 20 million years old. They were washed away millions of years ago and buried under the earth. They are now wood stones. The department has installed big boards in Tamil and English explaining it to laymen. They have done a very good job. A watchman is getting the signatures of visitors on a note book, which must be appreciated.

 

There is another fossil wood park near Perambalur.

Scientists have found out the types of trees. Following are the facts given on the board at Tiruvakkarai:-

Fossilwood of Mesembrixylon schmidianum (gymnosperms/non -flowering plants)

Peuce schmidiana (angiosperms/flowering plants)

 

How big the trees are?

30 metres long with a diameter of 1-5 metres

 

How did the trees become stones?

During the petrification period, the organic matter inside the tree is replaced with silica/sand

 

How did they know they were washed away from another area?

Absence of roots and branches indicate toward in this direction.

Who discovered it?

In 1781 an Europena recorded the occurrence of it.

What is the use of preserving it?

These trees tell the age of the earth and the flora and fauna of an area.

Trees’ annual rings are preserved even in the fossilised wood.

They are of Mio-pliocene Sedimentary Rocks.

In some parts of the world they even indicate the drought, volcanic eruptions happened millions of years ago.

 

 

–subham–

 

Meaning of Kunjithapaatham! (Post No.4836)


Written by London Swaminathan 

 

 

Date: 21 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 AM

 

Post No. 4836

Pictures shown here are taken from various sources.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

When we went to Chidambaram Nataraja  Temple in the first week of March 2018, we requested the priest to give us Kunjithapaatham. He was kind enough to bring a few and gave us the prasadam (offering from the god).

 

What is Kunjithapaatham?

It has got two meanings:

1.The hanging foot of Lord Nataraja while he is dancing

  1. The ring like ornament adorning the foot of Lord Nataraja.

 

It is commonly used by the Saivites to name their children.

 

When I googled for Kunchithapaatham, lot of Mr and Mrs Kunchithapathams only came! But one bit of information came from Mahaperiyava blog as well.

Mahaperiyava= Kanchi Shankaracharya Senior also known as Paramacharya (1894-1994)

 

What is it made up of?

When we got it at Chidambaram temple, we found it was made up of fragrant Vettiver (see the picture)

Botanical name- Vetiveria Zizanioides; also Chrysopogon zizanioides

 

 

Kanchithapaatham and Kanchi Shankaracharya

One year before Kanchi Paramacharaya- Sri Chandra Sekara Indra Sarasvati (1894-1994) attained Samadhi, he expressed his wish to visit Lord Nataraja temple in Chidambaram. But his devotees were very hesitant to take him to Chidambaram as he was very weak. A miracle happened. The Dikshitar priests of Chidambaram temple came to him with the Kunjithapaatha prasadam from the feet of Lord Nataraja. Sri Shankaracharya reverently took it and placed it on his head. Probably to show that he is going to adorn the feet of Lord Siva soon or to show to his devotees he is none other than Lord Shiva himself.

 

Where is the significance of it?

Whoever gets it will be lucky and get the grace of god.

–Subham–

 

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835)

Date: MARCH 21, 2018

 

 

Time uploaded in London- 6-30 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4835

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL. The may be subject to copyright.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. முதல் கட்டுரை வெளியான தேதி 10-2-18 கட்டுரை எண் 4723

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2

 

ச.நாகராஜன்

 

7

சில ஆண்டுகளுக்கு  முன்னர் எவ்வளவு தூரம் ஒருவர் ஒரு நாளைக்கு நடக்க வேண்டும் என்று கேட்டிருப்போமேயானால் அறிவியல் பூர்வமான பதில் வந்திருக்காது.

ஆனால் இன்றோ அப்படியில்லை.

ஏராளமான ஆய்வுகள் 10000 காலடி நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.

அடிப்படை உண்மை இது தான்:- நடைப்பயிற்சி ஆரோக்கிய மேம்பாட்டைத் தருகிறது என்பதே.

ஒவ்வொரு 20 காலடி நடைக்கும்  ஒரு கலோரி எரிக்கப்படுகிறது. ஆக 10000 அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைத்தால் 500 கலோரி குறைகிறது! ஒரு வார முடிவில் இது ஒரு பவுண்ட் எடைக் குறைப்பிற்குச் சமம்!

 

8

எவ்வளவு தூரம் நடந்தோம் எத்தனை ஸ்டெப்ஸ் வைத்தோம் என்பதைக் கணக்கிடுவது இப்போது சுலபம். அதற்கென Pedometer உள்ளது. வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளும் மீட்டர் எளிதானது; விலை குறைவானது; எவ்வளவு நேரம் நடந்தோம். எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தோம் என்பதை இது துல்லியமாகக் காட்டும்.

அர்பானா சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மக்கின்லி ஆரோக்கிய மையம் என்ற மையம் உள்ளது. இது தரும் ஒரு தகவல் சுவையானது.

ஒரு நாளைக்கு 2500 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் – நீங்கள் மிக மோசமான அளவு செயல்பாடற்றவர்!

ஒரு நாளைக்கு 5000 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடற்றவர்!

5000 முதல் 7500 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால், பரவாயில்லை, ஓரளவு நீங்கள் செயல்பாடுள்ளவர் !

7501 முதல் 10000 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடுள்ளவர்.

10001க்கு மேல் என்றாலோ நீங்கள் அதிகம் செயல்பாடுடையவர்.

கலோரி எரிப்பை மேம்படுத்த 2000 ஸ்டெப்ஸ் என்ற அளவு ஒரு இலக்காகும். இது ஒரு மைல் தூரம் நடப்பதைக் குறிக்கிறது. அதாவது 100 கலோரி எடைக் குறைப்பிற்கு இது சமம்.

ஆக 10000 ஸ்டெப்ஸ் என்பது ஒரு மாஜிகல் நம்பர் – எடைக் குறைப்பிற்கான, ஆரோக்கித்தை உறுதி செய்வதற்கான ஒரு மாய எண் என்றே கருதப்படுகிறது!

 

9

10000 அடிகள் என்ன மாஜிக்கை உடலில் செய்யும்? நீங்கள் உணவால் பெறும் கலோரிகளை கணிசமான அளவு எரித்தால் தான் உடலின் எடை கூடுவது நிற்கும்.

பொதுவான ஒரு விதி என்னவெனில் ஒரு பவுண்ட் கொழுப்புச் சத்து 3500 கலோரிகளுக்குச் சமமாக ஆகிறது.

ஆக இதை அடைவதை ஒரு வார இலட்சியமாகக் கொள்ளலாம்.

ஆனால் பருமனாக ஒருவருக்கு இந்த விதி பொருந்தாது. ஏனெனில் அவர் நடப்பதற்குச் சற்று கூடுதல் சக்தி தேவையாக இருக்கிறது. 180 பவுண்டுள்ள ஒருவர் ஒரு மைல் தூரம் நடந்தால் அவர் 100 கலோரிகளையே எரிக்க முடியும் என்பது பொது விதி!

ஆனால் ஒல்லியான ஒரு நபர் இதே தூரம் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை எரிக்க முடியும்!

அது மட்டுமல்லை, வேகத்தைப் பொறுத்தும் கலோரி எரிப்பு அமைகிறது!

சராசரி நடைப் பயிற்சியின் வேகம் மணிக்கு  3 மைல் ஆகும்.

இதை இன்னும் விளக்கமாகச் சொல்வது என்றால் 160 பவுண்ட் எடையுள்ள ஒருவர் மெதுவாக மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 30 நிமிடம் நடந்தார் எனில் அவர் எரிப்பது 102 கலோரிகளாகும். ஆனால் அவரே மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் நடந்தால் அவர் எரிப்பது 157 கலோரிகளாகும். அதாவது 54 சதவிகிதம் கூடுதலாக!

இது ஏன் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும்  சுலபம்!

வேகமாக நடந்தால் இன்னும் அதிக தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியும், இல்லையா!

 

 

10

இன்னும் ஒரு சின்ன உண்மையும் இருக்கிறது! உங்களின் தற்போதைய எடைக்காக உங்களுக்கு 1800 கலோரி தினமும் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். ஆனால் நீங்களோ ஒரு நாளக்கு எடுக்கும் உணவில் 2300 கலோரிகள் உள்ளது என்றால், 10000 ஸ்டெப்ஸ் நீங்கள் தினமும் எடுத்து வைத்தாலும் அதிகப் படி உள்ள 500 கலோரியைத் தான் உங்கள் நடைப் பயிற்சி கழித்து பாலன்ஸ் செய்கிறது. ஆக மொத்தக் கணக்கில் ஜீரோ பாலன்ஸ் தான் இருக்கும்! எடை குறையாது.

10000 ஸ்டெப்ஸை Pedometerஐ வைத்துத் தான் போட்டேன், எடை குறையவில்லையே என்று அங்கலாய்க்கக் கூடாது!

உணவில் எடுத்தது 2300 கலோரிகள்

அன்றாடச் செயல்பாட்டில் எரித்தது 1800 கலோரிகள் + நடைப் பயிற்சியில் எரித்தது 500 கலோரிகள் = 2300 கலோரிகள்

பாலன்ஸ் 0. ஆக எடைக் குறைப்பு இருக்காது!

11

ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் ஸ்டெப்பை எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கிறது.

முயற்சியுடன் முதல் காலடியை எடுத்து வைத்தால் மற்றதெல்லாம் சுலபம்; நோக்கத்தை மனதில் இறுத்திக் கொண்டால்  அனைத்தும் தானே நடக்கும்! எல்லாம் உங்கள் கையில் தான் சார் இருக்கிறது என்று சொல்வது வழக்கம்!

ஒரு தடவையாவது, சற்று மாற்றிச் சொல்வோம்  – எல்லாம் உங்கள் காலில் தான் சார் இருக்கிறது!

வாழ்த்துக்கள்!

***

குறிப்பு : 1 பவுண்டு எடை = 0.45359 கிலோகிராம்

1 கிலோகிராம் எடை = 2.2046 பவுண்டு

கீழே தரப்பட்டுள்ள அட்டவணை உடல்பயிற்சி , கலோரி எரிப்பு, உடல் எடை ஆகியவற்றை உங்கள் எடைக்கும் பயிற்சிக்கும் தகப் பார்த்து  பயனடையலாம்!