அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—1 (Post.13,201)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,201

Date uploaded in London – –   3 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான் 1997, 1998 ஆம் ஆண்டுகளில் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து நோட்ஸ் / குறிப்புகள் எடுத்தேன். புஸ்தகத்தின்  மார்ஜினிலும் நிறைய குறிப்புகளை எழுதினேன் . அவைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் கனிந்துவிட்டது ; இதற்குமுன் திருவாசகத்தேனும் திருமந்திர ஜுசும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகமும் பிரசுரித்ததுவிட்டேன் ; புதிய விஷயங்களை இப்போது சப்ஜெக்ட்வாரியாகக் காண்போம். முதலில் நான் பி.எஸ்சி (B Sc Botany, Madurai University) பட்டம் பெற்ற தாவரவியலை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் 3 அதிசய விஷயங்களை , சுவையான செய்திகளைத் தருகிறேன்

1. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் குறிப்பிடப்படும் மூன்று தெய் வீக மரங்களை ஒரே பாட்டில் திருமூலரும் தனது திருமந்திரத்தில் கூறுகிறார்

2.இன்னும் ஒரு பாட்டில் சிவனுக்குரிய 14 புஷ்பங்களைக் கூறுகிறார். உடனே கபிலர் என்ற பிராமணப் புலவர் எழுதிய சங்க கால குறிஞ்சிப் பாட்டு நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறது

3. ரிக்வேதம் போலவே திருமந்திரம் பல செய்திகளை (Symbolism) அடையாளக் குறியீடுகளால் , சங்கேத மொழியால் (coded language)  சொல்கிறது.  உரைகள்/ பாஷ்யங்கள் இல்லாவிடில் நாம் அவைகளை மாஜிக் என்ற வகையில் சேர்த்துவிடுவோம். கதத்தரிக்காய் விதை போட்டேன்; பாகற்காய் முளைத்தது என்று அவர் ஏன் சொல்கிறார் என்று காண்போம்.

xxxx

விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் திருமந்திரமும்

நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம்.

ஸூலப: ஸூவ்ரத: ஸித்த: ஸத்ருஜிச்சத்ருதாபன:

ந்யக்ரோதோ தும்பரோ அஸ்வத்தஸ்  சாணூராந்த்ர நிஷூதன:88-விஷ்ணு சஹஸ்ரநாமம் –shloka-88

Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah         

Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||V.S.88||

Nyagrodha – Ficus indica (Banyan Tree)

Udumbarah-Ficus glomerata (Aththi in Tamil)

Asvatthah- Ficus religiosa (Arasu in Tamil)

இதில் ந்யக்ரோத அவுதும்பர , அஸ்வத்த  என்பன ஆல் , அத்தி, அரச மரங்களைக் குறிக்கும் சம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்

இதில் குறிப்பிடப்படும் ஆல் , அரசு, அத்தி; இவை மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் ; அதில் ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவை

குடும்பம் மோரேசி ; உட்பிரிவு – பைகஸ் ; 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தாவரவியலாளர் இதை ஒரே குடும்பமாக, ஒரே உட்பிரிவாக அறிவித்தனர். ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே (மஹாபாரத்தின் ஒரு பகுதி) இந்த மூன்றையும் தெய்வீக மரங்கள் என்று வியாசர் எழுதிவிட்டார் . அதை திருமூலர் ஒரே பாட்டில் சொல்லி பூடகமாக வேறு கருத்தை விளக்குகிறார் . திருமூலருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்துபடி!

ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்ற பெயரில் ஆலமரம் குறிப்பிடப்படுகிறது; உலகிலேயே பெரிய மரம் இதுதான் (பரப்பளவில்).

பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).

தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)

புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.

1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 திருநீறு ,திருமந்திரம்

ஆறாம் தந்திரத்தில் திருநீறு என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல் இது.

திருமூலர் சொல்லும் கருத்து

வேத கால யாக யக்ஞங்களில் ஆலம் , அரசம், அத்தி ஸமித்துக்களை (குச்சிகளை) போட்டு எரிப்பார்கள்; அதன் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளுவார்கள் இதுவே விபூதி எனப்படும் .இவ்வாறு திரு வெண்ணீறு அணிபவரே உண்மையான சிவனடியார்.

அவ்வையாரும்

மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி என்று சொல்கிறார்

பட்டாங்கு என்றால் சாஸ்திரம் மெய்ப்பொருள், உண்மை என்று தமிழ் அகராதி சொல்லும். விபூதி இட்டவர்கள் பெரியவர்கள்; விபூதி இடாதவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதையே திருமூலரும் சொல்கிறார்

பிச்சை இடுவோர் பெரியார் (தானம் செய்பவர்கள்) ; தானம் செய்யாத கருமிகள் கீழார் என்ற கருத்தும் பொருந்தும். அதுவும் பகவத் கீதையிலும் அதற்கு முன்னர் வேதத்திலும் உள்ள கருத்தே .

ஆயினும் மூன்று மரக்குச்சிகளை எரிப்பதை திருநீறு என்ற அத்தியாயத்தில் சொல்லுவதால் விபூதியையே திருமூலர் சொல்கிறார் . திருமூலர் வாழ்ந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. லின்னேயஸ் மூன்று தாவரங்களையும் ஒரே குடும்பமாக வகுத்தது 200 ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் வேத வியாசரோ இதை விஷ்ணுவின் அம்சமாக பாடியிருப்பது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதிலிருந்து இந்துக்கள் உலக மஹா தாவர இயல் (Great Botanists) அறிஞர்கள் என்பது விளங்கும் .

xxxx

சிவபெருமானுக்கு உகந்த 14 புஷ்பங்கள்

உலகில் பூவையும் பழத்தையும் காயையும் இலையயையும் புல்லையும் தினமும் க டவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே; இதை இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களில் தினமும் காணலாம். இதை பகவத் கீதையில் கண்ணனும் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்ற ஸ்லோஅகத்தில் சொல்லிவிட்ட்டார். அதை புறநானுற்று பிராமணப் புலவர் கபிலரும் அப்படியே மொழிபெயர்த்துவிட்டார் (காண்க புறம்.106)

திருமூலர் சொல்லும் 14 பூக்கள்

தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், பலா, மாதவி, மந்தாரம், தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய 14 பூக்களைக் கொண்டு சிவனை வழிபட வேண்டும்.

மாதவி= குருக்கத்தி; வகுளம் = மகிழ்;

1003 அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1

தேவாரமும், திருவாசகமும் பல இடங்களில் இந்தப் பூக்களைக் குறிப்பிடுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் 99 தமிநாட்டு மலர்களைக் காண்கிறோம். அதற்கு முன்பாக காளிதாசனும், வால் மீகியும் பூக்களை பட்டியலிட்டாலும் கபிலரைப் போலவோ திருமூலரைப் போலவோ ஒருசேர சொல்லவில்லை. திருமாலைஃப் பொரு த்தமட்டில் துளசி மட்டுமே போற்றப்படுகிறது . சைவர்கள் மலர்ப் பிரியர்கள் !

xxxx

கத்தரிக்காய் பாகற்காய் ஆக மாறிய மாஜிக்

திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்ற அத்தியாயத்தில் எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் பாடல்கள் கிடைக்கின்றன . பரம்பரை பரம்பரையாக வந்த உரைகளை சிலர் எழுதி வைத்துள்ளதால் நாம் பொருள்கொள்ள முடிகிறது. மதுரை நகர பாரத்துவாஜ கோத்திர பார்ப்பனன் நச்சினார்க்கினியன் உரை இல்லாவிடில் சங்க இலக்கியப் பாடல்களை நாம் புரிந்துகொள்ள இயலாது; அதே போல திருமந்திரத்துக்கும் பழைய உரைகள் உள்ளன.

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது

தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.” 2868.

To be continued……………………………………………….

tags- விஷ்ணு ஸஹஸ்ர நாமம்,  திருமந்திரம் , திருமூலர் , 14 பூக்கள், அதிசய தாவரங்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பாதுகாக்க வணிக நிறுவனம் தந்தவர்! – 2 (Post 13,200)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.200

Date uploaded in London – — 3 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 2 

ச. நாகராஜன் 

சேஃப் தயாரிப்பு

1901-ல் கோத்ரெஜ்  பாதுகாப்பான ‘சேஃப்’  (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.

அப்போது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேஃப்களும் அழிந்து போயின.

இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேஃபை வடிவமைத்தார்.

இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.

தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-இல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.

.கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்

ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், ‘ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.

‘எது வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.

எனது உறவினாரான பாய்ஸிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.

நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவ்ரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.

அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ் .அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.

 ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்திலிருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.

 சோப் தயாரிப்பு

1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.

ஆனால் இயல்பான அவரது “எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்” அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெஸண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.

 இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நௌரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.

ஆனால் சுதேசித் தயார்ப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வளியுறுத்தினார்.

 சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ்.

 நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

எலிஸபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.

மறைவு

1936-ல் கோத்ரெஜ் மறைந்தார். 

ஆதி கோத்ரெஜ்

இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர்  ஆதி கோத்ரெஜ்.

அவருக்கு வயது 82 (பிறப்பு 3-4-1942)

 இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.

சமீபத்தில் விண்ணில் பறந்த சாடலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்

 வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ்

தயாரிப்பைப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.

 இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் – சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட்,, நூபுர் ஹென்னா, ஹேர் கேர், காட்ரஜ் பர்னீச்சர், காட்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,-   மிக மிக நீண்ட கோத்ரெஜ் தொழில்துறையின் பட்டியல் தொடரும்.

 வெற்றிக்கான தாரக மந்திரம்

கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?

மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.

 ENTERPRISE AND ETHICS 

 – THE TWO PILLARS OF THE EMPIRE! 

வணிகம் – நன்னெறி நடைமுறைகளுடன் 

சாம்ராஜ்யத்தின் இரு தூண்கள்!

***

More ( Botanical ) Secrets from Vishnu Sahasranama- 2 (Post No.13,199)

Mighty Banyan Tree (Nyagrodha/ Vata/ Mahavrksha/ Bania tree)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,199

Date uploaded in London – –   2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Long before Swedish botanist Carl Linnaeus classified plants, Hindus studied all plants and classified them in their own way. In Vishnu Sahasranama (VS) we see three plants of the same family are called divine trees.

shloka-88

Sulabhah Su-Vratah Siddhah Shatru-jit Shatru-tapanah         

Nyag-rodhodumbaro’Svatthah ChanurAndhra-Nishudanah ||88||

Nyagrodha – Ficus indica (Banyan Tree)

Udumbarah-Ficus glomerata

Asvatthah- Ficus religiosa

All these Ficus trees come under same family Moraceae. 5000 years before Carl Linnaeus, Vyasa classified them correctly.

These three trees are divine trees representing Lord Vishnu. Adi Shankara says in his commentary:

Nyagrodha- That which remains above all and grows downward. That is He is the source of everything that is manifest.

Udumbarah – one who as the supreme cause is above the sky, that is superior to all.

Asvattah – That which does not last for the next day. Krishna also quoted this tree in 15-1. Elsewhere he says He is Asvattah among the trees.

All these trees are worshipped from the days of Rig Veda. Krishna spoke to Arjuna only under the banyan tree in Kurukshetra.Rig Veda described banyan tree as Maha Vrksha. In another place Tree growing downward.

Buddha attained wisdom only under Asvatta tree.

Sticks of all these trees are used in Yaga-Yajna fire.

xxxx

Lord Krishna gave Bhagavad Gita lectures under this banyan tree in Kurukshetra

Tamil Tirumular used the same trees!

5000 years ago Vyasa did a botanical wonder. 1000 years ago Tamil Siddha Tirumular, A Saivite migrant from Kashmir, composed 3000 poems and the book is known as Tirumanthiram. He is praising the Vibhuti (holy ash found on the foreheads of Saivites) in one of his poems as follows, Here Tirumular also pointed out that the sticks of these trees burnt in Yaga fire and made into holy ash (Vibhuti-Tiruneeru) gives one the status of brahmins and they belong to high caste. Famous Tamil poetess also supported Tirumular by saying (மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி) those who smear holy ash on forehead are high caste people and those who don’t are of low caste according to scriptures.

Holy Ashes elevate to Brahma Status

asvatta nyagroda udumbara

They that are in its fire purified

Shall in truth be transformed divine;

Reaching the Feet of the Eternal, the Immaculate

They shall attain Brahma’s form

And ever be of Order Divine.

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

ஆறாம் தந்திரம்/  3 திருநீறு / திருமந்திரம்

Vata/ Banyan Tree Savitri Vrata

It is interesting to see the same three trees are venerated all over India from the south of the country to the northern Himalayas from Vedic days until this day. Even today orthodox Brahmin boys do Samithaadhaanam every day with the sticks of Asvatta tree and smear the ash on his body. This is the origin of Vibhuti , that is holy ash.

—subham—

Tags- Holy ash, Vibhuti, Tiruneeru, Tirumanthiram, Tirumular, Vishnu sahasranamam, three Ficus trees

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 28 (Post No.13,198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,198

Date uploaded in London – –   2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 28

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 28

xxxx

297.பிரமியத்திற்கு

சரக்கொன்னை பூவையும் கொழுந்தையும் அரைத்துப் பாலில் கலக்கி உண்டுவந்தால்  பிரமியம்- வெட்டை – பாண்டு- காமாலை  இவைகள் சாந்தியாகும்.

xxxx

கிருமிகள் நீங்க

சரக்கொன்னை  கொழுந்தை வைத்துப் பிளந்த சாற்றில் சீனி சக்கரை கலந்து சுமார் அரைக்கால் படி உள்ளுக்குக்  கொடுத்தால் கிருமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும்.

xxxx

திமிருக்கு

சங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப் பாலும் ஒன்ராய்க்  கலந்து

ஒரு வேளைக்கு கால்  படி வீதம் மூன்று நாள் கொடுக்கத்  தீரும்

xxxx

பொது மருந்து

சதுரக் கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானை யில் ஒரு படி துண்டு வரை போட்டு 4 படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடு கட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசி மாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் செய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகலமும் சாந்தியாகும் .

xxxx

சா

வெள்ளை நீர் சுருக்கு

சார பருப்பை பால் விட்டரைத்து ஜாலாமிசரியூறி ய தண்ணீரில் கலந்து அதற்குத் தகுந்த பால் விட்டு சாப்பிடவும். இப்படி 4-5 வேளை சாப்பிட நீர்க்கடுப்பு, வெள்ளை விழுதல் நீங்கும்.

xxxx

பேதியைக் கட்ட

சாதிக்காய் ஒன்றை சிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வறுத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதக்கிக்கொண்டு அபினி 1 விராகனிடை ஜாதிக்காய் 4  விராகனிடை மாதுளம் தோல் 5  விராகனிடைஇதுகளை கல்வத்திலிட்டு தேன்விட்டு பதமாய் அரைத்து கடலையளவு உருட்டி பேதிக்குத் தக்கபடி முலைப்பாலிலாவது வாழைப் பூ கிஷாயத்திலாவது  இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்

xxxx

ஆரோக்கியத்திற்கு

சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தாப  சுரம் போகும் தாது புஷ்டியுண்டாகும் . ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால்  பசும்பால் சாப்பிடவேண்டியது .

xxxx

பிள்ளைகள் நீராமை கணத்திற்கு

சாரணைக்காய்  மூக்குரொ ட்டக்காய் பொடுதலைக்காய் சீரகம் துளசி ஓர்நிரையாய் தட்டிப்போட்டு கிஷாயம் செய்து வார்க்கவும் சாந்தியாகும்

xxxx

வாதவலி பிரமேகத்திற்கு

சாரடைக்கிழங்கைப் பாலில் அரைத்துக்கலக்கியுண்டுவந்தால் சீதளம் நீரேற்றம் தடிப்புகுன்மம்  வாதவலி  சிரங்கு பிரமேகம் இவை தீரும் .xxxx

சி

கண்நோய் உள் மூலத்திற்கு

சிறுகொண்ணை மூலத்தை அரைத்துப் பாலில் கலக்கி யுண் டு வந்தால் கண்நோய், உஷ்ணம்,  உள் மூலம் இவை தீரும் .

xxxx

கீல் வாய்வுக்கு

சித்துழாப்பட்டை கொண்டுவந்து அதற்குச் சரியிடை சுக்கு திப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் – தும்பராஷ்டம்- வாய்விளங்கம்  இதுகள் போட்டு யிடித்து காரசாரம் சேர்ந்த பச்சைக் கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப் போல மிச்சமாய் விட்டுக்கொண்டு சாப்பிடவும் . இரண்டுவிசை மலம் கழியும் .  கீல் வாய்வு உடனே  தீரும் . 2-3 வேளை சாப்பிட வேண்டியது..

xxxx

கால் பிளவுக்கு

சிவன் வேம்பு மூலத்தை பால் விட்டரைத்து  பாலில் கலக்கியுண்டுவந்தால் சில்லறை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான் ரிண ங்கள் யாவும் தீரும் .

xxxx

309. அனேக ரோகத்திற்கு

சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தியிடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து  சமனிடை சீனிசக்கரை கலந்து  சீசாவில் வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்றுவந்தால் 18 விதமான குஷ்ட உற்பத்தி  பாத த்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு – படர் தாமரை – நமை – அரிப்பு-  தேகத்தில் முள்ளுக்குத்துவது போல் குத்தல் – திமிர் – தலை நோய் –  இவைகள் தீரும். இச்சாபத்தியம் .

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 28 ,

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பாதுகாக்க வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (Post No.13,197)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.197

Date uploaded in London – — 2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 

ச. நாகராஜன்

என்ன வீட்டை பத்திரமா பூட்டியாச்சா? 

வீட்டை விட்டு வெளியூர் செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உறுதி செய்தி கொள்வது “வீட்டை நல்லா பூட்டியாச்சா?”, கோத்ரெஜ் பூட்டு தானே? என்பது தான்! 

பாடுபட்டு உழைத்து நகைகளை வாங்கி திருமணம் நடத்தத் தயாராக இருக்கும் குடும்பத்தினர், “நகையெல்லாம் பத்திரமா ?”, கோத்ரெஜ் லாக்கரில் தானே வச்சிருக்கே?” என்று கேட்கும் போது, பெருமையுடன் பதில் இப்படி வரும்: “கவலையே பட வேண்டாம். கோத்ரெஜ் லாக்கர் தான், சுவரோடு பதிக்கப்பட்டது, யாரும் தூக்கிக் கொண்டு போக மூடியாது. டிஜிடல் லாக் கொண்டது” என்று பதில் வரும்.

 ஆம். நமது சொத்துக்களையும் பத்திரங்களையும் விலை உயர்ந்ததாக நாம் கருதுபவையையும் பத்திரமாகப் பாதுகாப்பது கோத்ரெஜ் நிறுவனத்தின் தயாரிப்புகளே.

இதை நிறுவியவர் வணிக நிறுவனத்தில் உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயரிய கோட்ப்பாட்டைக் கொண்ட சிறந்த தேசபக்தி கொண்ட தேசபக்தரான அர்தேஷிர் கோத்ரெஜ் ஆவார்.

பிறப்பும் இளமையும்

 பாரம்பரியம் மிக்க பார்ஸி குடும்பத்தில் 1868-ம் ஆண்டு புரியோர்ஜிக்கும் தோஷிபாய் கூத்தராஜிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார் அர்தேஷிர் கோத்ரெஜ். அவரது தந்தையார் வீடு, நில உடைமைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

1871-ல் அவர் குடும்பப் பெயரை கோத்ரெஜ் என்று மாற்றிக் கொண்டார்.

 திருமணமும் பேரிழப்பும்

1890-ல் பதினெட்டே வயதான ஆர்தேஷிருக்கும் பச்சுபாய் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து ஒரு பெரிய சோக நிகழ்வு அவர் வாழ்வில் நடைபெற்றது.

 1891, ஏப்ரல் மாதம் 25-ம் நாள் பச்சுபாயும் அவரது நெருங்கிய உறவினரான பிரோஜ்பாய் ஷொராப்ஜி கம்டினும் ராஜாபாய் கோபுரத்தில் ஏறிப் பார்ப்பது என்று தீர்மானித்தனர். அந்த கோபுரம் 279 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம். அதில் இருவரும் ஏறி உச்சிக்குச் சென்ற போது இரண்டு பொல்லாத போக்கிரிகள் அழகிகளான அவர்களை அணுகி தவறாக நடக்க முயற்சித்தனர்.

உடனே இருவரும் அந்த கோபுரத்திலிருந்து கீழே குதித்தனர். மரணமடைந்தனர்.

இது பெரிய அதிர்ச்சியையும் இழப்பையும் அர்தேஷிர் கோத்ரெஜுக்குத் தந்தது.

தன் வாழ்நாள் முழுவதும் அவர் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை.

 வக்கீல் படிப்பு

1894-ல் வக்கீல் படிப்பை முடித்த அவருக்கு நல்ல கேஸ்கள் வந்தன. ஜான்ஜிபாரில் ஒருவருக்கு வக்காலத்து வாங்க ஒத்துக்கொண்ட கோத்ரெஜ் அந்த கேஸில் உண்மைக்கு அல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். இது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது மனசாட்சியின் படி நடந்து கொள்ளத் தீர்மானித்த அவர் கேஸிலிருந்து விலகினார். “கேஸில் எனது பக்கத்தை மட்டும் நான் பார்க்கவில்லை, இரண்டு பக்க உண்மைகளையும் பார்த்தேன், விலகினேன்” என்று பின்னால் அவர் கூறினார்.

 மருந்து தயாரிப்புகள்

அடுத்து என்ன செய்வது?

மெர்வான்ஜி முன்செஞ்சர்ஜி என்பவர் ஒரு சிறந்த வணிகர். அவரிடம் சென்ற கோத்ரெஜ்  தொழில் தொடங்க 3000ரூபாய் கடனாகக் கேட்டார். இதனால் வியந்து போன அவர் எதற்காக என்று கேட்டார். சர்ஜிகல் கருவிகள் செய்வதற்காக என்று பதில் வந்தது.

“இதை உங்கள் தந்தையாரே சந்தோஷமாகத் தருவாரே, என்னிடம் எதற்கு வர வேண்டும்” என்று வியப்புடன் அவர் கேட்டார்.

 “என் தந்தையாரிடம் நான் கேட்டால் அவர் அதை இனாமாகத் தந்து விடுவார். எனக்குத் திருப்பிக் கொடுக்கும்படியான கடன் தான் வேண்டும்” என்றார் கோத்ரெஜ்..

மனம் மகிழ்ந்த மெர்வான்ஜி 3000 ரூபாயைக் கொடுத்தார். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்க ஆரம்பித்தார் கோத்ரெஜ். தயாரிப்புகள் தரத்துடன் பிரமாதமாக அமைந்தன. அவர் தான் வேலை பார்த்த கம்பெனி உரிமையாளரிடம் அவற்றைக் காட்டவே அவர் பிரமித்தார். ஆனால் அவர், “இதை ‘மேட் இன் இண்டியா’ என்று போடக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.

இதை உடனே மறுத்த தேசபக்தரான கோத்ரெஜ் இந்தத் தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

 அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் அவர் ஆழ்ந்தார்.

போலீஸ் கமிஷனரின் அறிவிப்பு

 அப்போது பம்பாய் போலீஸ் கமிஷனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  ஏராளமான வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போகின்றன. நல்ல பாதுகாப்பை அளிக்க அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்பதே அவர் அறிவிப்பு.

சிந்தனையில் ஆழ்ந்தார் கோத்ரெஜ்.

 நேராக மெர்வான்ஜியிடம் சென்றார். தனக்கு நல்ல பாதுகாப்பான பூட்டைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதாகக் கூறினார்.

‘இதற்கு முன்னர் யாருமே பூட்டு செய்யவில்லையா என்ன?’ என்று கேட்டார் மெர்வான்ஜி.

அதற்கு பதிலாக, “நான் சிறந்த நல்ல பூட்டைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

உடனே தேவையான பண உதவியைச் செய்தார் மெர்வான்ஜி.

215 சதுர அடியே கொண்ட ஒரு சிறிய ஷெட்டில் தன் தொழிற்சாலையை ஆரம்பித்தார் கோத்ரெஜ்.

\மிகுந்த உழைப்பின் பேரில் தினசரி ஆராய்ச்சி செய்து யாரும் திறக்க முடியாத நான்கு லீவர் கொண்ட பூட்டு ஒன்றை அவர் தயாரித்தார்.

சந்தையில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. உடனே அடுத்தபடியாக இரண்டு சாவிகள் கொண்ட ஒரு பூட்டைத் தயாரித்த அவர் இரண்டாவது சாவி தேவையான மாற்றங்களை பூட்டின் உள்ளே செய்யக் கூடிய வகையில் புதுமையாக வடிவமைப்பைச் செய்தார்.

 இதைத் தொடர்ந்து யாருமே எளிதில் திறக்க முடியாத பாதுகாப்பைக் கொண்ட பல வடிவமைப்புகளைக் கொண்ட பூட்டுகளை அவர் தயாரிக்க ஆரம்பித்தார்,

ஒவ்வொரு பூட்டுக்கும் ஒரு சிறப்பான பெயர் சூட்டப்பட்டது. ஒன்றின் பெயர் கார்டியன் லாக். இன்னொன்றின் பெயர் டிடெக்டர் லாக்.

 நிறுவனம் படிப்படியாக உயர்ந்தது. பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்

to be continued…………………………………..

More Secrets from Vishnu Sahasranama! – Part 1 (Post.13,196)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,196

Date uploaded in London – –   1 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

I wrote three research articles on VS here from 2012. This is the fourth one.

Sahasra means 1000; praising God with 1008 names is unique to Hinduism. It has been there for more than 2000 years ; this we know from Tamil references to 1000 names very often in its literature. The very word 1000 occurs many times in the Rig Veda, the oldest book in the world. Because of Hindus’ discovery of ZERO and decimal system, we are able to launch space shuttles and satellites ; without Hindu numerals no country in the world could have achieved anything.

Tamil word for 1000, AAYIRAM, also came from Sanskrit SAHASRA, according to all linguists.

Vishnu Sahasranaama (V.S.) is the oldest available sahasranaama; later other sahasranaamams were composed.

In V.S. we find Botany, Big Bang Theory, Number Symbolism, History, Zoology, Invention of Flags, Stars, Mysterious Soma plant, Medicine, Magical cures, Sound Effect, Concept of Time, Metals, Linguistics (Metaphors, similes), colours, names of all Hindu Gods etc.

If one reads Adi Shankara’s commentary on V.S, one could discover more wonders.

Tamil Veda Tirukkural echoes many points found in VS.

Tamil Tirumanthiram (3000 hymns) followed it in many places.

xxxx

BIG BANG THEORY

The big bang is how astronomers explain the way the universe began. It is the idea that the universe began as just a single point, then expanded and stretched to grow as large as it is right now—and it is still stretching!

How long did all of this take? Well, we now know that the universe is 13,800,000,000 years old—that’s 13.8 billion. That is a very long time.

When the universe began, it was just hot, tiny particles mixed with light and energy. It was nothing like what we see now. As everything expanded and took up more space, it cooled down.

The tiny particles grouped together. They formed atoms. Then those atoms grouped together. Over lots of time, atoms came together to form stars and galaxies.

The first stars created bigger atoms and groups of atoms. That led to more stars being born. At the same time, galaxies were crashing and grouping together. As new stars were being born and dying, then things like asteroids, comets, planets, and black holes formed!

The above piece of information is from NASA.

xxxx

My comments

All the above words are found in VS or its ancient commentaries.

No encyclopaedias say WHY it happened. Only VS gives the answer.

1.ATMA YONI, and  2.SWAYAM JATO in VS.

Adi Shankara explains,

Aatmayonih – one who is the source of all; that is there is no material cause other than Himself for the universe.

Swayaam – jaatah- He is also the Instrumental cause. Shankara quotes Brahma Sutra 1-4-39. This Sutra (formula) establishes that Sri Hari Himself is the material and instrumental cause of the world.

Now let us forget Hari and look at it.

Hindus were the first to think about How the Universe began. It is in the Rig Veda, which is at least 4000 years old according to Prof.Wilson (He beats Max Muller in translation).

Rig Veda explains it beautifully in RV. 10-129, 10-121, 10-90 etc. There are thousands of articles on these hymns. We can’t find any such hymn in Sumerian or Egyptian or Mayan or Greek.

One may wonder whether the ancient seers knew the modern meaning of words like Time, Universe, Atom etc, we get the answers from other hymns.

God is described as SAHASRA KOTI YUGADHARINE.

Koti in Hindu mathematics is Ten Million.

One sloka in the appendix Benefits Section of VS described God as He is the one who bears 1000 Ten Million Yugas. Yuga is 432000 years.

Even in Children’s hymns of Hindus we come across SAHASRA KOTI (1000 Ten Millions) as God’s attribute.

In short, no scientist gave the reason for Big Bang; but VS says it is God who did this. Even if you forget Hindu God, Hindus were the one who thought about it and found an answer.

This  is supported by the very first sloka/couplet of VS, which describes  GOD as beyond Time.

BHUTA, BHAVYA, BHAVAT Prabuh.

The Meaning  He is The Master of the Past, Future and Present. As He is beyond the sway of Time in its three aspects, He is eternal being, and that His Majesty is undecaying.

Vedas said that he is Kaalathrayaathetah- Beyond Time

Wo in the world thought about Time other than Hindus?

We see past,  present,  future (tenses) only in grammar books of other cultures.

(in my other articles, I have shown that Hindus believed in Time Travel which showed Einstein is only part right).

xxxx

My Old Articles on VS

Secrets of Vishnu Sahasranama (July 13, 2012)

xxxx

INFLUENCE OF VISHNU SAHASRANAMA ON WORLD HISTORY (Post No.7372)22 December 2019

xxxx

Three Books on a ‘Deity with a Thousand Names’: Vishnu Sahasranama (17 April 2015)

xxxx

Vishnu Seal in Indus Valley Civilization (October 9, 2011)

To be continued…………………….

Tags- More secrets, Vishnu Sahasranama, Big Bang Theory, Concept of Time

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 6 (Post No.13,195)

AMLA/ எம்பிலிகா அப்பிசினாலிஸ் /நெல்லிக்கனி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,195

Date uploaded in London – –   1 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 6

76. Lumnitzera racemosa Willd.

லும்நிட்சேரா  ரேஸிமோசா

ஒரிஸ்ஸாவில் பாம்புக்கடிக்குப் பயன்படும் இந்த மூலிகையின் வட்டார பெயர் சுருண்டா.

XXXX

F24. Family: Commelinaceae 

77. Commelina paludosa Blume

குடும்பம் கம்மலினேசி

கம்மலினா பாலூடோசா

கஞ்சுனா என்ற பெயரில் பாகிஸ்தானிகள் பயன்படுத்தும் மூலிகை இது.

XXXX

F25. Family: Convolvulaceae 

78. Ipomoea pes-tigridis L. புலிச்சுவடி

குடும்பம்- கன்வல்வுலேசி

ஐபோமியா பேஸ் டைக்ரிடிஸ்

புலிச்சுவடி (Ipomoea pes-tigridis)

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் பாம்பு கடித்தால் இதன் வேரைப் பயன்படுத்தி சிகிச்சை தருகின்றனர்.

XXXX

F26. Family: Cornaceae 

79. Alangium salviifolium (L. f.) Wangerin /அழிஞ்சில் 

கார்னேசி

அலங்கியம் சால்விபோலியம் /அழிஞ்சில் 

ஒரிஸ்ஸாவில் இதன் பெயர் தோல் அங்கு ; ஒரிஸ்ஸா மக்கள் இலையின் சாற்றை பாம் பு கடித்த இடத்தில் தடவுகிறார்கள். கோவை ஜில்லா பலலங்குடி மக்களும் இதை பயன்படுத்துகின்றனர்

XXXX

F27. Family: Costaceae 

80. Costus speciosus (J. Konig) Sm. / வெண்கோட்டம்

குடும்பம்- காஸ்டேசி

காஸ்டஸ் ஸ்பீஸியோசஸ் /வெண்கோட்டம்

வெண்கோட்டம் (Cheilocostus speciosus)      Crepe Ginger, Setawar Tawar, Spiral Flag, Cane Reed, Malay Ginger, Wild Ginger, Spiral Ginger, White Costus,

ஒரிஸ்ஸா மற்றும் அருணாசல பிரதேச மக்கள் கிழங்கு அல்லது தண்டுப் பகுதியைக் கொண்டு சிகிச்சை தருகின்றனர்.

XXXX

F28. Family: Cucurbitaceae 

81. Luffa acutangula (L.) Roxb. பேய்ப்பீர்க்கு

குடும்பம்- குகுர்பிடேசி

லுF பா அக்யுடங்குலா/ பேய்ப்பீர்க்கு

இதன் தளிர்களை உத்தர பிரதேசம் சோன் பத்ரா வட்டார மக்கள் உபயோகிக்கின்றனர்.

Common name: Bitter Luffa, wild luffa, wild ribbed gourd, wild ridge gourd • Bengali: তিতা ধুন্দুল tita dhundul • Gujarati: કડવી ઘિસોડી kadvi ghisodi • Hindi: बन तुरई ban turai, कड़वीतुरई Karviturai, कड़वीतोरी Karvitori • Kannada: ಕಹಿಹೀರೆಯ ಬಳ್ಳಿ kahihireya balli • Konkani: कोडु घोसाळे kodu ghosaale • Manipuri: ꯃꯌꯡ ꯁꯦꯕꯣꯠ Mayang sebot • Malayalam: കാട്ടു പീച്ചില്‍ kattu peechil, കാട്ടു പീച്ചിങ്ങ kattu peechinga • Marathi: दिवाळी divali, कडूदोडकी kadu-dodaki • Sanskrit: जालिनी jalini, तिक्त कोषातकी tikta-koshataki • Tamil: ஆகாசவேணி akaca-veni, பேய்ப்பீர்க்கு pey-p-pirkku, தித்தகோசாதகி tittakocataki • Telugu: అడవి బీర adavi bira, చేదు బీర chedu bira, వెర్రి బీర verri bira • Urdu: بن ترئي ban turai • Mizo: Awmpawng

XXXX

82. Momordica dioica Roxb. ex Willd.

மோமோர்டிகா டயோசியா

ராஜஸ்தான் ஆள்வார் ஜில்லா மக்கள் பயன்படுத்தும் மூலிகை .

XXXX

83. Trichosanthes tricuspidata Lour.

ட்ரைகோசாந்தஸ் ட்ரைகுஸ் பிடேடா

மஹாராஷ்டிரா நாசிக் வட்டார மக்கள் இதன் பழங்களையும் வேரின் சாற்றியும் கொண்டு பாம்புக்கடி க்கு சிகிச்சை வழங்குகின்றனர்

XXXX

F29. Family: Cyperaceae 

84. Cyperus rotundus L. / கோரை

குடும்பம் – சைபிரேசி

சைப்ரஸ் ரோட்டுண்டஸ் / கோரை

கோரை (coco-grass, Cyperus rotundus)

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் இதன் கிழங்கினைப் பொடிசெய்து பசு வெண்ணெயுடன் பயன்படுத்துகின்றனர்.

XXXX 

F30. Family: Euphorbiaceae 

85. Drypetes assamica (Hook. f.) Pax & K. Hoffm.

குடும்பம் – யூபர்பியேசி

ட்ரைபிடஸ் அஸ்ஸாமிகா

அந்தமான் வட்டார தீவு மக்கள் இலையின் சாற்றைப் பயன்படுத்துகிறர்கள்.

XXXX

86. Emblica officinalis Gaertn.

Vernacular name: Awala (Nasik district, Maharastra, India)

எம்பிலிகா அப்பிசினாலிஸ் /நெல்லிக்கனி

Common name: Amla, Indian gooseberry • Hindi: आँवला Aonla • Manipuri: ꯍꯩꯀ꯭ꯔꯨ Heikru • Marathi: आँवला Amla • Tamil: Nelli • Malayalam: Nelli, Nellikka • Telugu: Usiri, Usirikaya • Kannada: Betta nelli, Amalaka • Oriya: Aonla • Gujarati: ambala • Sanskrit: Dhatri, amalaka • Mizo: Sunhlu • Angami: Tsiehusi, Ciehu

மஹாராஷ்டிரா நாசிக் மக்கள் அவலா என்று அழைப்பார்கள் . தண்டின் கஷாயத்தைக் குடிக்கச் சொல்கிறார்கள் .

XXXX

87. Euphorbia hirta L.

யூபோர்பியா ஹிர்டா

இந்துமகா சமுத்திரத் தீவு மக்கள்  இதன் இலைகளையும், நேபாள மக்கள் வேரினை மசித்தும் பயன்படுத்துகின்றனர்.88. Pedilanthus tithymaloides (L.) Poit.

XXXX

F31. Family: Fabaceae 

89. Abrus precatorius L.

குடும்பம்- பேபேசி

ஆ ப்ரஸ் ப்ரெகடொரியஸ் / குண்டுமணி

 குன்றிமணி , குன்றி, குண்டு மணி, மனோசீலை, குன்று மணி, குன்றி வித்து.

அருணாசலப்பிரதேச மக்கள் இந்த விதையின் பொடியைக் கொஞ்சமாக எடுத்து ஆண்ட்ரோ கிராபிஸ் பணிக்குலேடா/ நிலவேம்பு (Andrographis paniculata) விதையுடன் சேர்த்து எலுமிச்சம்பழச் சாற்றில் கொடுக்கின்றனர்.

XXXX

90. Aeschynomene indica L.

Vernacular name: Kodi thuvarai (Tirunelveli hills, Tamil Nadu, India)

ஏஸ்கைனோமெனி இண்டிகா / கொடித் துவரை

இந்த கொடித் துவரை இலைகளின் கஷாயத்துடன், நில வேம்பு, பூவரசு வேர் ,எட்டி மரம் பட்டை சேர்த்து 40 நாட்களுக்குக் கொடுப்பார்கள்; நெல்லை ஜில்லா மலைப்பகுதிகளில் இந்த வைத்தியம் உள்ளது.

TO BE CONTINUED………………………………….

tags–பாம்புக் கடி,   , 200  மூலிகை,  மருந்துகள் , part 6

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3 (Post No.13,194)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.194

Date uploaded in London – — 1 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3 

ச.நாகராஜன்

இன்னும் ஒரு முக்கியமான புத்தகம்

ACQUARIAN GOSPEL OF JESUS THE CHRIST  

By

LEVI

Published by

DEVORREST & CO

Los Angeles , U.S.A

இதில் 21 முதல் 35 முடிய 15 அத்தியாயங்கள் இந்தியாவிலும் திபெத்திலும் ஏசு கிறிஸ்து வாழ்ந்த சரித்திரத்தை விரிவாக விளக்குகிறது.

இதுவரை நாம் மேலே இரு அத்தியாயங்களில் கூறியவற்றை அப்படியே இங்கு காணலாம்.

அதில் இல்லாத சில புதிய விவரங்களும் இதில் தரப்படுகிறது.

அவற்றில் சில:

ஏசு ஒரிஸாவின் அரசு இளவரசனான ராவணா என்பவருடன் இந்தியாவிற்கு வந்தார். ராவணா பாலஸ்தீனத்திற்கு வணிகம் சம்பந்த்மாகச் சென்றவர்.

ஏசுவின் குரு பரத அராபா (Barata Araba). இவர் ஏசுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அவருக்கு ஹிந்து வேதங்கள் உள்ளிட்டவற்றைக் கற்பித்தார்.

வித்யாபதி என்பவர் கபிலவாஸ்து கோவிலின் தலைமை புரோகிதர் மற்றும் ஒரு பெரிய மகான் ஆவார். அவர் ஏசுவை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.

ஏசு அலெக்ஸாண்ட்ரியாவில் மகான்களின் சங்கத்தில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்தும் கூடப் பல மகான்கள் கலந்து கொண்டனர்.

ஏசு ஹிந்து வேதங்களையும் அவெஸ்தாவையும் பெரிதும் விரும்பினார்.

The Bible In India – Hindu Origin of Hebrew and Christian Revealation

By

M. Louis Jacolliot 

இந்தப் புத்தகமும் பல உண்மைகளைக் கூறுகிறது.

இந்தியப் பெரியார் ஆன சாது T.L. வாஸ்வானி

East and West Series No 91, January 1995 (Published by Mira Institute, Poona)-ல் ஏசு இந்திய யோகிகளுடன் இந்தியா வந்ததைக் குறிப்பிடுகிறார். இங்கு அவர் புத்தமதம் மற்றும் வேதங்களைக் கற்றார். அவர் பூரிக்கும் வந்தார். அங்கு கடலுக்கும் கோவிலுக்கும் இடையே உள்ள ஒரு பெரிய தோட்டத்தில் ஒரு நல்ல அமைதியான இடத்தில் தங்கினார்.

இது தவிர, இன்னும் பல அதிகாரபூர்வமான இந்தியாவில் வெளியிடப்பட்ட வெளியீடுகள் கிறிஸ்து இந்தியாவிற்கு வந்ததை உறுதிப் படுத்துகின்றன.

பவிஷ்ய மஹா புராணம் ஏசுவை யுஸ் யூசூப் (Yus Yusuf)

என்ற பெயரால் குறிப்பிடுகிறது. அவர் ராஜா சாலிவதனுடன் உரையாடல் நிகழ்த்தியதையும் அது குறிப்பிடுகிறது.

இந்த எழுத்தாளர் 11-11-1975 அன்று  ஜகந்நாத் பூரிக்கு சென்றிருந்த சமயம்  ஶ்ரீ சதா சிவ ரத்ன சர்மா, தலைவர், முக்தி மண்டல், பூரி,

அவரிடம் ஒரு சம்ஸ்கிருத  கைப்பிரதியைக் காண்பித்தார். சாது டிப்னி என்ற அது பனை ஓலையில் எழுதப்பட்ட ஒன்று. கிறிஸ்டா என்று அது ஏசு கிறிஸ்துவைக் குறிப்பிடுகிறது.

அவரும் அவரது பக்தர் சாது சுந்தர் தாஸும் மோஹல்லா ஜெய் டோடா என்ற கோவிலில் வாழ்ந்து அங்கேயே படித்ததாகவும் ஓலைச் சுவடி குறிப்பிடுகிறது.

சாது வாஸ்வானி இவை அனைத்தையும் குறிப்பிடுகிறார்.

அது ஒரு சிதிலமான கட்டிடம். பழைய காலத்தில் அங்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அங்கு பழங்காலத்து நாணயங்கள் வேறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

உள்ளூர் கிறிஸ்தவர்களில் பலர், ஏசு அங்கு பூரியிலிருந்த போது தங்கியதாகவும் அந்த இடத்தில் இப்போது Sisters oldners blessed Sacraments Convent School Puri

கட்டப்பட்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.

ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துகிறார். அதில் ஹிந்துக்களும் கூட கலந்து கொள்கின்றனர்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திபெத்திய கைப்பிரதி இன்றும் லாமாக்களிடம் இருக்கிறது. அதனுடைய போட்டோ காபி

UNKNOWN LIFE OF JESUS CHRIST என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் & நன்றி:

The Vedic Path – April 1976.

Reproduced in Ideas / Exchange, Jullunder, Issue no 197, 198 & 199.

                                              ***          இந்தத் தொடர் முற்றும்

What is Your Birth Star? I will tell You Who You Are!- Part 2 (Post No.13,193)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,193

Date uploaded in London – –   30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part Two

ईर्षुर्लुब्धो द्युतिमान्वचनपटुः कलहकृद्विशाखासु ।
आढ्यो विदेशवासी क्षुधालुरटनोऽनुराधासु ॥ ९ ॥
[इर्ष्युर्]

īrṣurlubdho dyutimānvacanapaṭuḥ kalahakṛdviśākhāsu |
āḍhyo videśavāsī kṣudhāluraṭano’nurādhāsu || 9 ||
[irṣyur]

9. A person born when the Moon passes through the asterism of Viśākhā will be jealous of another’s prosperity, will be a niggard, wall be of bright appearance and of distinct speech, will be skilled in the art of earning money, will be disposed to bring about enmity between persons. A person born when the Moon passes through the asterism of Anurādhā will be rich, will live in foreign lands, will be unable to bear hunger and will be inclined to move from place to place.

xxxx

ज्येष्ठासु न बहुमित्रः सन्तुष्टो धर्मकृत्प्रचुरकोपः ।
मूले मानी धनवान् सुखी न हिंस्रः स्थिरो भोगी ॥ १० ॥

jyeṣṭhāsu na bahumitraḥ santuṣṭo dharmakṛtpracurakopaḥ |
mūle mānī dhanavān sukhī na hiṃsraḥ sthiro bhogī || 10 ||

10. A person born when the Moon passes through the asterism of Jyeṣṭhā will have very few friends, will be cheerful, virtuous and of irascible temper. A person born when the Moon passes through the asterism of Mūla will be haughty, rich, happy, not disposed to injure other men, of firm views and will live in luxury.

xxxx

इष्टानन्दकलत्रो वीरो दृढसौहृदश्च जलदेवे ।
वैश्वे विनीतधार्मिकबहुमित्रकृतज्ञसुभगश्च ॥ ११ ॥

iṣṭānandakalatro vīro dṛḍhasauhṛdaśca jaladeve |
vaiśve vinītadhārmikabahumitrakṛtajñasubhagaśca || 11 ||

11. A person born when the Moon passes through the asterism of Pūrvāṣāḍha will have an agreeable wife, will be proud and will be attached to friends. A person born when the Moon passes through the asterism of Uttarāṣāḍha will be obedient, will be learned in the rules of virtue, will possess many friends, will be grateful, will return favours received and will be generally liked.

xxxx

श्रीमाच्छ्रवणे श्रुतवानुदारदारो धनान्वितः ख्यातः ।
दाताढ्यशूरगीतप्रियो धनिष्ठासु धनलुब्धः ॥ १२ ॥

śrīmācchravaṇe śrutavānudāradāro dhanānvitaḥ khyātaḥ |
dātāḍhyaśūragītapriyo dhaniṣṭhāsu dhanalubdhaḥ || 12 ||

12. A person born when the Moon passes through the asterism of Śravaṇa will be prosperous and learned, will have a liberal-minded wife, will be rich and of wide-spread fame. A person born when the Moon passes through the asterism of Dhaniṣṭhā will be liberal in his gifts, will be rich, valiant, will be fond of music and will be a niggard.

xxxx

स्फुटवाग्व्यसनी रिपुहा साहसिकः शतभिषक्सु दुर्ग्राह्यः ।
भद्रपदासूद्विग्नः स्त्रीजितधनपटुरदाता च ॥ १३ ॥

sphuṭavāgvyasanī ripuhā sāhasikaḥ śatabhiṣaksu durgrāhyaḥ |
bhadrapadāsūdvignaḥ strījitadhanapaṭuradātā ca || 13 ||

13. A person born when the Moon passes through the asterism of Śatabhiṣaj will be harsh in his speech, will be truthful, will suffer grief, will conquer his enemies, will thoughtlessly engage in works and will be of independent ways. A person born when the Moon passes through the asterism of Pūrvabhādrapada will suffer from grief, will place his wealth at the disposal of his wife, will be of distinct speech, will be skilled in earning money and will be a niggard.

xxxx

वक्ता सुखी प्रजावान् जितशत्रुर्धार्मिको द्वितीयासु ।
सम्पूर्णाङ्गः सुभगः शूरः शुचिरर्थवान्पौष्णे ॥ १४ ॥

vaktā sukhī prajāvān jitaśatrurdhārmiko dvitīyāsu |
sampūrṇāṅgaḥ subhagaḥ śūraḥ śucirarthavānpauṣṇe || 14 ||

14. A person born when the Moon passes through the asterism of Uttarabhādrapada will be an able speaker, will be happy, will possess children and grand-children, will conquer his enemies and will be virtuous. A person born when the Moon passes through the asterism of Revatī will possess perfect limbs, will be of amiable manners, will be deeply learned, will never covet the property of other persons and will be rich.

[Note—The effects described in this chapter will fully come to pass if the Moon be powerful.]

— subham—

 tags- What is Your Birth Star? prediction, Brhat Samhita, Varahamihira, Part 2 

ரமணர் பற்றிய சுவையான புதிய நூல் ‘அஹம் ஸ்புரணா’ (Post No.13,192)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,192

Date uploaded in London – –   30 APRIL 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரமணர் பற்றி  எவ்வளவோ நூல்கள் வந்துவிட்டன; அவர் சமாதி அடைந்தோ 75 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி 30-12-1879 TO 14-04-1950

இன்னும் புதிய நூல்களா ? ஆமாம் அஹம் ஸ்புரணா – ஆத்ம ஞானத்தின் ஒளிக்கீற்று  என்ற புதிய நூல் புதிய விஷயங்களுடன் வெளி வந்துள்ளது.

எப்போது?

2023ம் ஆண்டு

யார் வெளியிட்டது ?

ஒப்பன் ஸ்கை பிரஸ் OPEN SKY PRESS

அஹம் ஸ்புரணா என்றால் என்ன பொருள் ?

ஸ்புரணா என்றால் துடிப்பு. நான் என்னும் துடிப்பு என்பதே தலைப்பு

என்ன புதிய விஷயங்கள் உள்ளன?

1936 ஆம் ஆண்டு கஜபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலையிலுள்ள  ரமணாஸ்ரமத்துக்கு வந்தார். ஆங்கில இலக்கியத்தல் புலமை பெற்றவர். அவர் ஆச்ரமத்தில் தங்கிய ஆறு மாத காலத்தில் ரமணரின் உரையாடல்களை அப்படியே குறிப்பு எடுத்து வைத்திருந்தார்.  அந்தக் குறிப்பேட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அப்படியே ஆங்கிலத்தில் புஸ்தகமாக வெளியிட்டார்கள்.

அதை பெங்களூரு சந்தானம் நாகராஜன் அப்படியே தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்து தந்துள்ளார்.

சந்தானம் நாகராஜன், இளம் வயதிலேயே  மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள ரமணர் வீட்டிற்குச் சென்று தியானம் செய்தவர் . நமது பிளாக்கில் எண்ணற்ற ரமணர் கட்டுரைகளை எழுதியவர். அப்படி ஆழம் இருந்ததால் மொழிபெயர்ப்பில் தெளிவும் இருக்கிறது . . ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரி , காஞ் சி பரமாசார்யாரின் (1894- 1994)  தெய்வத்தின் குரல் போல எளிதில் ரமணர் உரைகளைப் படித்துவிடமுடியாது ; ஏனெனில் உயர்ந்த தத்துவ விசாரணையை அவர் திரும்பத் திரும்ப சொல்கிறார் . நான் யார் என்று சிந்திக்கச் சொல்கிறார். இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு பதில் வழியாக வரும்

xxxx

இந்தப் புஸ்தகத்தில் ஒரு தனிச் சிறப்பு

எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் நீங்கள் படித்து புதிய விஷயங்களை அறியலாம். தொடர்ச்சியாக படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படி படித்தாலும் அதிலும் பலனுண்டு.

எத்தனை பக்கங்கள் ?

362+ அட்டைகள்

விலை என்ன?

புஸ்தகத்தில் விலை குறிப்பிடப்படவில்லை.

எத்தனை அத்தியாயங்கள் ?

ஐம்பதுக்கும் மேலான அத்தியாயங்கள்

1936 ஜூலை 6 முதல் 1936 செப்டம்பர் 30 வரையில் ஆஸ்ரமத்தில் என்ன நடந்தது என்ற சுவையான விஷயங்களை அறிய முடிகிறது. 

xxxx

வேறு என்ன உள்ளன ?

ரமணரின் , அவர்களுடைய சீடர்களின்,  அற்புதமான படங்கள் உள்ளன . காஞ்சிப் பெரியவர்  பால் பிரன்டன் ( PAUL BRUNTON ) என்பவரை ரமணரிடம் அனுப்பியதும் அவர் A SEARCH IN SECRET INDIA   செர்ச் இந்த சீக்ரெட் இண்டியா என்ற புகழ்மிக்க புஸ்தகத்தையும் நாம் அறிவோம். அவருடைய படமும் உள்ளது.

ஒபன் ஸ்கை பிரஸ் இயக்குனர் ஜான் டேவிட் எழுதிய முன்னுரையில் புஸ்தத்தின் தேவை, அதை உருவாக்கும்போது ஏற்பட்ட இடர்ப்பாடுகள் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளார். அதைப் படித்தவுடன் புஸ்தகத்தின் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடி விடுகிறது. புஸ்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த பெங்களூரு நாகராஜன், மற்றும் தட்டச்சு செய்து உதவிய பலருக்கும் நன்றியுரை கூறியிருக்கிறார்.

கஜபதி ஐயர் 1948ம் ஆண்டு தான் எடுத்த குறிப்புகளுடன் ரமண மகரிஷியை சந்தித்தார். உடனிருந்த ராஜேஸ்வராநந்தாவும் புஸ்தகமகா அது வெளியாவதற்கு ஆதரவு தெரிவித்தார்.

பகவான் ரமணர் சிரித்தவாறே சொன்னார் ,

பார் இந்தக் குழந்தை எவ்வளவு அழகாக எல்லாவற்றையும் எழுதி இருக்கிறது .

ரமணர் அனுமதியின்றி குறிப்பு எடுத்ததை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தபோதும் பரவாயில்லை என்று ஒரே வரியில் ‘அப்ரூவல்’ கொடுத்துவிட்டார் பகவான்.

திருவண்ணாமலை அதிதி ஆஸ்ரமத்தின் நிறுவனர் சுவாமி ஹம்சானந்தா எழுதிய அழகான முன்னுரையில் இந்தப் புஸ்தகத்தில் பெருமையை எடுத்துரைக்கிறார் . இதில் உள்ள விஷயங்களை  ஐயப்படவேண்டியதில்லை என்று அவரும் முத்திரை குத்தியுள்ளார்

புஸ்தகம் முழுவதையும் சுருக்கித் தருவது மதிப்புரையாகாது  ; ஆகையால் இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் தருகிறேன்

16 ஜூலை 1936

காலமும் விஞ்ஞானமும்

காலம் பற்றி அருமையாக விளக்கும் ரேவதி-காகுத்தமி கதை (THEORY OF TIME DILATION) இதில் உள்ளது. 1930-களில் ஐன்ஸ்டீனின் கொள்கைகள் பெரிதும் விவாதிக்கப்பட்டதால் ரமணர் இதுபற்றி பேசியிருக்கலாம்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் !

ஒரு சின்னப்பையன் ஆஸ்ரம தியான மண்டபத்தில் பம்பரம் விளையாடினான் . எல்லோருக்கும் அது தொல்லை தந்தது. பையனின் அப்பா, உடனே நிறுத்து என்று அதட்டினார். அப்பா, இந்த பம்பரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது; அது ஆடி முடித்தவுடன் நன் இனிமேல் விளையாடவில்லை என்றான். தந்தைக்கோ கடும் கோபம். அவனை அப்படியே தூக்கித் தாயின் மடியில் அமர்த்திவிட்டுப்போன்னார் . தாயும் சிறுவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி தூங்க செய்துவிட்டார். இத்தனையையும் ரமணரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் சிறுவனின் தந்தை ரமணரிடம் சென்று பல தத்துவக் கேள்விகளைக் கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். ரமணர்  சொன்னார்: உன் கேள்விக்கு உன் மகனே பதில் சொல்லிவிட்டானே (பம்பரம் ஆடி முடியும் வரை காத்திரு) என்றார். அவரவர் பூர்வ ஜென்ம கருமவினை (ஆடி அடங்கும் வரை) ஆடி முடியும் வரை பலன் கிடைக்காது. முயற்சி செய்வதில் தவறில்லை .

இப்படி பல சுவையான நிகழ்வுகளும் புஸ்தகத்தில் இருப்பதால் மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது . அனைவரும் வாங்கிப் படிக்கவேண்டிய நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.

Aham Sphurana | Bhagavan Sri Ramana Maharishi | Open Sky Press | Spirituality | Tamil | Pustaka

₹650.00₹650.00

XXX

OLDR ARTICLE ON THE SAME BOOK

அஹம் ஸ்புரணா – தமிழில் (Post No.12,962)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,962

Date uploaded in London      28 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நூல் மிக அழகிய முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் ஓம் என்னும் பகவானின் மேலை நாட்டு பக்தர்.

தமிழில் இதை திருத்தமுற வெளியிட வழி வகுத்தவர் pustaka.comஇன் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ்.

நூல் பற்றிய விவரங்களை www.openskypress.com இல் பெறலாம்.

இணையதளத்தில் உள்ள பெரும் விற்பனை நிலையங்களில் ஆர்டர் செய்து நூலைப் பெறலாம்.

Opensky pressஇன் Whatsapp நம்பர் : 49 152 22 473 253

xxxx

புத்தக அறிமுகம் , அஹம் ஸ்புரணா ,ரமணர்