முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 28 (Post No.13,198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,198

Date uploaded in London – –   2 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 28

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 28

xxxx

297.பிரமியத்திற்கு

சரக்கொன்னை பூவையும் கொழுந்தையும் அரைத்துப் பாலில் கலக்கி உண்டுவந்தால்  பிரமியம்- வெட்டை – பாண்டு- காமாலை  இவைகள் சாந்தியாகும்.

xxxx

கிருமிகள் நீங்க

சரக்கொன்னை  கொழுந்தை வைத்துப் பிளந்த சாற்றில் சீனி சக்கரை கலந்து சுமார் அரைக்கால் படி உள்ளுக்குக்  கொடுத்தால் கிருமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும்.

xxxx

திமிருக்கு

சங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப் பாலும் ஒன்ராய்க்  கலந்து

ஒரு வேளைக்கு கால்  படி வீதம் மூன்று நாள் கொடுக்கத்  தீரும்

xxxx

பொது மருந்து

சதுரக் கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானை யில் ஒரு படி துண்டு வரை போட்டு 4 படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடு கட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசி மாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் செய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகலமும் சாந்தியாகும் .

xxxx

சா

வெள்ளை நீர் சுருக்கு

சார பருப்பை பால் விட்டரைத்து ஜாலாமிசரியூறி ய தண்ணீரில் கலந்து அதற்குத் தகுந்த பால் விட்டு சாப்பிடவும். இப்படி 4-5 வேளை சாப்பிட நீர்க்கடுப்பு, வெள்ளை விழுதல் நீங்கும்.

xxxx

பேதியைக் கட்ட

சாதிக்காய் ஒன்றை சிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வறுத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதக்கிக்கொண்டு அபினி 1 விராகனிடை ஜாதிக்காய் 4  விராகனிடை மாதுளம் தோல் 5  விராகனிடைஇதுகளை கல்வத்திலிட்டு தேன்விட்டு பதமாய் அரைத்து கடலையளவு உருட்டி பேதிக்குத் தக்கபடி முலைப்பாலிலாவது வாழைப் பூ கிஷாயத்திலாவது  இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்

xxxx

ஆரோக்கியத்திற்கு

சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தாப  சுரம் போகும் தாது புஷ்டியுண்டாகும் . ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால்  பசும்பால் சாப்பிடவேண்டியது .

xxxx

பிள்ளைகள் நீராமை கணத்திற்கு

சாரணைக்காய்  மூக்குரொ ட்டக்காய் பொடுதலைக்காய் சீரகம் துளசி ஓர்நிரையாய் தட்டிப்போட்டு கிஷாயம் செய்து வார்க்கவும் சாந்தியாகும்

xxxx

வாதவலி பிரமேகத்திற்கு

சாரடைக்கிழங்கைப் பாலில் அரைத்துக்கலக்கியுண்டுவந்தால் சீதளம் நீரேற்றம் தடிப்புகுன்மம்  வாதவலி  சிரங்கு பிரமேகம் இவை தீரும் .xxxx

சி

கண்நோய் உள் மூலத்திற்கு

சிறுகொண்ணை மூலத்தை அரைத்துப் பாலில் கலக்கி யுண் டு வந்தால் கண்நோய், உஷ்ணம்,  உள் மூலம் இவை தீரும் .

xxxx

கீல் வாய்வுக்கு

சித்துழாப்பட்டை கொண்டுவந்து அதற்குச் சரியிடை சுக்கு திப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் – தும்பராஷ்டம்- வாய்விளங்கம்  இதுகள் போட்டு யிடித்து காரசாரம் சேர்ந்த பச்சைக் கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப் போல மிச்சமாய் விட்டுக்கொண்டு சாப்பிடவும் . இரண்டுவிசை மலம் கழியும் .  கீல் வாய்வு உடனே  தீரும் . 2-3 வேளை சாப்பிட வேண்டியது..

xxxx

கால் பிளவுக்கு

சிவன் வேம்பு மூலத்தை பால் விட்டரைத்து  பாலில் கலக்கியுண்டுவந்தால் சில்லறை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான் ரிண ங்கள் யாவும் தீரும் .

xxxx

309. அனேக ரோகத்திற்கு

சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தியிடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து  சமனிடை சீனிசக்கரை கலந்து  சீசாவில் வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்றுவந்தால் 18 விதமான குஷ்ட உற்பத்தி  பாத த்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு – படர் தாமரை – நமை – அரிப்பு-  தேகத்தில் முள்ளுக்குத்துவது போல் குத்தல் – திமிர் – தலை நோய் –  இவைகள் தீரும். இச்சாபத்தியம் .

தொடரும் …………..

Tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 28 ,

Leave a comment

Leave a comment