திரவுபதி அம்மன் கோவில்- இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ……..Part 43 (Post No.12,653)

Temple at Pandiruppu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,653

Date uploaded in London – –  –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 43

93. முத்துமாரி அம்மன் கோவில் , கொழும்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில்  சுமார் 170 வருடங்களாக முத்துமாரி அம்மன் கோவில், இயங்கி வருகிறது  தமிழ்நாட்டிலுள்ள கோவில்பட்டி தாலுகா,  எருக்கன்குடி அம்மன் கோவில் நிலத்தின் மண்ணை  இங்கு கொண்டு வந்து  கோவில் கட்டினர்; சைவப்பெரியார் காளியன் செட்டி குப்பமுத்து என்பவர் முயற்சியில் கோவில் நிறுவப்பட்டது . அரச சுவடிகள் திணைக்கள ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன..திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது. 1954 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

1963 ஆம் ஆண்டு முதல் தைப்பூசத் திருவிழாவை ஆடிவேல் போன்று ஐந்து தினங்கள் கொண்டாடி வந்தனர். அம்பிகை ரதத்தில் எழுந்தருளி கப்பிகாவத்தை சிவன் ஆலயத்தில் மூன்று மூன்று தினங்கள் எழுந்தருளி மீண்டும் கொட்டாஞ்சேனைப் பதியை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 1967 முதல் மாசிமக உற்சவத்தையும் சிறப்பாக ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு 2022ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கருவறையில் முத்துமாரி அம்மனும் பிரகாரங்களில் விநாயகர், விஷ்ணு, நடராஜர், கண்ணகை அம்மன், சிவன், பார்வதி, சுப்ரமண்யர் சந்நிதிகளும் உள்ளன . ரங்கநாத மூர்த்தியின் சயன கோல சுதை உருவத்தையும் தரிசிக்கலாம் இவை தவிர  நாகர், பைரவர் , நவக்கிரக தேவைதைகளும் இருக்கிறார்கள்.

ஆகம விதிகளின்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் பக்தர்கள் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில்  மிகப்பெரிய கூட்டம் சேருகிறது.

XXXXX

94.மட்டக்களப்பு திரவுபதி அம்மன் கோவில்

பாண்டவர்களுடன் தொடர்புடைய கதைகள் இலங்கையிலும்  பிரபலமாகியுள்ளன .

பஞ்ச கன்யா என்று  இந்துக்கள் வழிபடும் பத்தினிகளில் திரௌபதியும் ஒருவர். இந்துக்கள் தினமும் காலைல சொல்லும் பிராத ஸ்மரண ஸ்லோகத்தில்

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்  –

என்று சொல்லி வழிபடுகின்றனர் . இலங்கையில் திரௌபதை அம்மன் வழிபாடு கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு வட்டாரத்தில் பரவலாகக் காணப்படுகிறது . இதை கொங்கு நாட்டிலிருந்து வந்த தாத்தன் என்ற முனிவர் அறிமுகப்படுத்தினார். முதலில் மட்டக்களப்பு வட்டார பாண்டிருப்பு கிராமத்தில் த்ரௌபதீ வழிபாடு துவங்கியது. இப்போது ஆரையம்பதி, பழுகாமம், மட்டக்குழி , புதூர், புளியந்தீவு  ஆகிய இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன . இவை தவிர புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு திரவுபதி அம்மன் கோவிலு ம் பிரசித்திபெற்ற  ஆலயங்களில்  ஒன்றாகும்.

கல் முனைக்கு வடக்கில்  பாண்டிருப்பு கிராமம் இருக்கிறது ;தாதன் என்ற முனிவர் வந்து இறங்கியதை அறிந்து , எதிர்மன்ன சிங்கம் என்ற குறுநில மன்னர் அவரைச் சந்தித்தார். மஹாபாரதக் கதையை அவர் சொல்லக்கேட்டு, அவர் சொற்படி , கொக்கட்டிமரம் சூழ்ந்த சோலையில் அம்மனுக்கு ஆலயத்தை எழுப்பினார். ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்களுக்கு நடக்கும் விழாவில் தீக்குழி இறங்கும் சடங்கும் உண்டு. 18 பர்வங்களின் கதை பாராயணம் செய்து முடிக்கும் கடைசி நாளில்  20 அ டி நீள தீக்குழியில் பக்தர்கள் இறங்கி நடப்பார்கள்.  பஞ்ச பாண்டவர்கள் ஐவர் மற்றும் திரவுபதி போல வேடம் தரித்த 6 பெரும் தீ மிதித்து நடந்த பின்னர் ஏனைய பக்தர்களும் தீ மிதிப்பர். கடலில் ஸ்நானம் செய்வது, தீக்குளித்தோரிடம் புனித சாம்பல் வாங்குவது ஆகியனவும் இந்த வைபவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆகும்.

மகாபாரதத்தில்  திரெளபதி தேவியே  தீ யிலிருந்து வந்ததாகவே சொல்லப்பட்டுள்ளது. அவள்  யாக குண்டத்தில் தோன்றியவள் கற்புக்கரசிகளில் அருந்ததிக்கு நிகரானவர்.

கண்டி மன்னன் விமல தரும சூரியன் 1594-1604 , இந்த தீ மிதி வைபவத்தைக் கண்டு வியந்து, கோவிலுக்கு நிலபுலங்களையும் தானம் செய்தான் இதிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்னரே கோவில் இருந்ததை அறிகிறோம்.

XXXXX

95.உடப்பு திரெளபதி அம்மன்- விஷ்ணு கோவில்

Draupadi Templt at Sri Lanka

இலங்கையின் வடமேற்கில் புத்தளம் இடம்பெறுகிறது. அந்த

மாவட்டத்தில் உள்ள சிற்றூர் உடப்பு கிராமம்; இங்கு  திரெளபதி அம்மன் ஆலயம், ஸ்ரீ வீரபத்ர காளியம்மன் கோயில், ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், குளத்தடி ஐயனார் கோவில், கந்தசுவாமி கோவில்,  ஐயப்ப சுவாமி கோவில் ஆகிய கோவில்கள் இருக்கின்றன.

இந்த ஊரிலுள்ள திரெளபதி அம்மன் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மகாபாரதம் தொடர்பான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளும் நடை பெறுவதாகும் . அத்தோடு தீ மிதிப்பு, தீக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இது ஜூலை- ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் 18 நாள் உற்சவத்தின் முத்ததாய்ப்பாக அமைகிறது .

உடப்பு கிராம மக்களின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தனர் . மன்னாரில் தரை இறங்கிய அவர்கள் தென் திசை நோக்கி நடந்து வந்து இந்த இடத்தில் குடியேறினர்.. இது புவனேக பாஹு மன்னனின் காலத்தில் நடந்தது.

முதலில் சந்தன மரத்தால் ஆன திரவுபதி உருவம் பூஜிக்கப்பட்டது.1907ம் ஆண்டில் அதற்குப்பதிலாக அம்மனின் கற்சிலையை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் மகாபாரதம் போற்றும் கிருஷ்ண பரமாத்மாவின் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று செல்லப்பா குருக்கள் ஆலோசனை வழங்கினார். 1912 முதல் கிருஷ்ணனை மூலஸ்தானத்தில் வைத்துவிட்டு திரெளபதி அம்மனை அர்த்த மண்டபத்தில் விஷேச ந்நிதியில் வைத்து வணங்கி வருகின்றனர் . அங்கே விநாயகர், முருகன் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

ராஜ கோபுரமும், கலை வேலைப்பாடுமிக்க தூண்களும் கோவிலுக்கு மெருகூட்டுகின்றன. கோபுரத்தில் கிருஷ்ண லீலைகளை விளக்கும்

சிற்பங்கள்  காணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் நடக்கும் உற்சவத்தின் கடைசி நாளில் நடக்கும் பூக்குழி (தீ மிதி) வைபவத்தைக் காண அந்த வட்டார மக்கள் எல்லோரும் உடப்பு கிராமத்துக்கு வந்துவிடுவார்கள் .

–subham—

Tags- திரவுபதி, திரெளபதி, கோவில், பூக்குழி, தீக்குழி , தீமிதி வைபவம், பாண்டிருப்பு, உடப்பு

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்! – 1 (Post No.12,652)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,652

Date uploaded in London –  30 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 இந்த 2023 ஆண்டு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் அக்டோபர் 28ஆம் நாள் நிகழ்வதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை! 27-10-23 மாலைமலர் இதழில் வெளி வந்த கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!

முதல் பகுதி

ச.நாகராஜன்

தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மஹாபாரத இதிஹாஸமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.

ஐப்பசி பௌர்ணமியின் சிறப்பு

ஐப்பசி பௌர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.

முதலில் சம்பிரதாய முறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாங்காய்ச் சாறு, சாதம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.

சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.

 பௌர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?

அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.

முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரமனின் ஒரு தலையைக் கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.

 பிரம்மனின் சிரத்தைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.

எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.

 சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பௌர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.

அன்னாபிஷேக பலன்கள்

அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும் கிட்டும்.

நற்பலன்களில் சில:

1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.

2) கர்மவினைகள் கழியும்.

3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.

5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.

6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.

உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்கு பஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.

அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத் தேவையாகும்.

இதன் அதிபதி சிவபிரானே.  இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல் பட, வாயுவின் சேர்க்கையால் நெல் மணி நமக்குப் பூரணமாகக் கிடைக்கிறது.

இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.

ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப் புகழ்கின்றன.

அன்ன தானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது

பீஷ்மரிடம் தர்மபுத்திரர் தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப் பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாஸன பர்வம் 98வது அத்தியாயம்).

அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:

 “உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.

அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.

தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும் போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக் கூடாது.

அறம்,பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான்.  அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்.” – என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit -3 (Post No.12,651)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,651

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 3 ; Part 3

Slokam 7

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

மூடறியாமை தனை மூடுவதற்கே பிரமன்

பீடுபெறு மோனம் பிறப்பித்தான் மூடரெலாம்

மூதுணர்ந்தோர் முன்னிலையில் மோனஞ் சாதித்தலே

தீதிலழ காகுஞ் சிறந்து — 7

xxxxxxxx

Slokam 8


यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்; அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்; ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது; காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது.

கொஞ்ச மதியானான் குஞ்சரம் போலேமாந்து

விஞ்சும் விவேகியென மேவினேன் — மிஞ்சு மதி

உத்தமற் பால் பெற்றபின்னர் உள்ளகந்தை விட்டறிந்தேன்

எத்தனை நாள் மூடனாமென்று -8

Xxxxxx

Slokam 9

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

புழுத்த கழுதையின் புல்லெலும்பை நாய்தன்

கழுத்தை மிகநீட்டிக் கடிக்கும் – வழுத்துஞ் சீர்த்

தேவேந்திரன் வரினும் தேராது கீழுயிர்கள்

ஆவா வா புன்மையுணரா – 9

  Tags – Bhartruhari , Nitisataka , part-3 ,முட்டாள்கள் , மவுனம்கர்வம்,

New Tamil Lesson 11 Verb Kel கேள் Ask or Listen (Post No.12,650)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,650

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

picture line

இது வகுப்பு அறை= Ithu Vakuppu Arai = This (is) a Class Room
அவர் கணக்கு/ கணித ஆசிரியர் = Avar Kanakku Aasiriyar= He (is a ) Maths Teacher
அவர் போர்டில் எழுதுகிறார்.= avar Bordil Ezuthukiraar = Avar, in the board, writes
குழந்தைகள் படிக்கிறார்கள் = Kuzanthaikal Padikkiraarkal = Chikdren Studying (learning)

 xxxxx

கேள்= KEL has got two meanings in Tamil.ASK and LISTEN TO

1.            நான் தினமும் ரேடியோவில் செய்தி கேட்பேன்.

Naan dinamum radiovil seythi ketpen

I, every day/ daily, radio in (on the radio), News, listen.

Everyday I listen to news on the radio.

தினமும் Sanskrit word, so Dinamum;

ரேடியோவில்-  Radio + in; but in English we say on radio;

கேட்பேன்.= KETPEN = will listen to in Tamil future form; but in Tamil it is equivalent to present tense, because anything you do habitually is put is future in Tamil; but in English you only present tense I listen to

2.            அவன் உன்னைக் கேட்டால் நீ சொல்

Avan Unnaik Kettaal, Nee Sol

He , you, if ask, you, tell;

If he asks you you tell;

கேட்டால் KETTAAL Conditional; Kett+ AAL  = Kettaal

உன்னை= You in Accusative form UNN+ AI = UNNAI;

3.            அவன் தமிழ் புஸ்தகம் வேண்டும் என்று கேட்டிருந்தான்

Avan, thamiz pusthakam, Vendum Endru Kettu Irunthaan

He, Tamil Pustakam, want ,  that , had asked/told

He had asked/told  me  that he wanted a Tamil book.

4.            கடன் கேட்பது கெட்ட பழக்கம்

Kadan, ketpathu, ketta , pazakkam

Loan asking bad habit .

Borrowing is a bad habit.

கடன் = kadan.

கேட்பது Ketpathu = asking for = verbal noun.

5.            நீ நல்ல கேள்விகளைக் கேட்டாய்.

Nee, nalla, kelvikalaik, kettay.

You, good, questions, asked .

You asked good questions .

6.            நான் சொன்னால் அவன் கேட்க மாட்டான்

Naan , sonnaal, avan, ketkamaattaan

I, if say, he, wouldn’t listen .

He wouldn’t listen (to me), if I say (it).

If I say it , he wont listen (to me).

7.            அவன் கட்டாயம் உன்னைக் கேட்பான்.

Avan , Kattaayan, unnaik, ketpaan.

He, certainly / definitely / surely/ you will  ask.

He would certainly ask you.

He would certainly question / challenge you (is also possible)

8.            யார் கடன் கேட்டாலும் கொடுக்காதே.

Yaar , kadan, kettaalum, kodukkaathe.

Who(ever) ask loan, don’t give.

Whoever it may be, never give loan (to anyone)

கேட்டாலும் = even ask.

Kettaal = conditional +um= and or even or too

Whenever you use WHATEVER,WHOEVER, WHEREVER,HOWEVER you use this form;  that is conditional form of that verb+UM

Vanthaalum = even if come

Sonnaalum = even if say

Saappittaalum = even if eat

9.            ஒரு நிமிடம் இருங்கள். இதைக் கேட்டுவிட்டுப் போங்கள்.

Oru, nimidam, irungal; ithaik kettuvittup Pongal.

One , minute, wait; this, after listening go .

Wait a minute (please); listen to it and then go.

Kettuvittu = converbial form; meaning is after doing ……..

10.          அவர்கள் மூன்று புஸ்தகம்தான் கேட்டார்கள்.

Avarkal, moondru, pustakam only, asked.

They asked for only  three books.

புஸ்தகம்தான்= emphatic or only = thaan

11.          அது கேட்கிற பொம்மையைக் கொடு

Athu, ketkira, bommaiyaik , kodu

That, asking, toy, give.

Athu = that; though it is used only for lower things, Indian Tamils call children THIS, THAT.

But it is quite opposite in Sri Lanka. They give respect AVAR (he with respect or she with respect)

கேட்கிற= ketkira = present participle,

கேட்ட = ketta = past participle,

கேட்கும் = ketkum = future participle,

12.          நீ அப்பா பேச்சைக் கேட்டகாவிட்டால் அவருக்கு கோபம் வரும்.

Nee, appaa, pechchaik, ketkaavittaal, avarukku, kopam, varum .

You, father , saying, if not listen, to him, anger, would come.

If you don’t listen to what father says, he would be angry.

london swaminathan pesukiraar; ellorum ketkiraarkal = london swaminathan speaks; all listen (to him)

To be continued…………………………………………….

Tags- New, Tamil lesson, part 11, listen, ask

கோப்பாய் முத்துமாரி –இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42 ( Post No.12,649)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,649

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 42

90.கோப்பாய் முத்துமாரி அம்மன் கோவில்

யாழ்ப்பாண நகரிலிருந்து 6 மைல் தொலைவில் கோப்பாய் முத்துமாரி  அம்மன் கோவில் இருக்கிறது. நாச்சிமார் கோவிலாகத் துவங்கிய இந்த ஆலயம் பிற்காலத்தில் முத்துமாரி  அம்மன் கோவிலாக உருமாறியது . கர்ப்பக்கிரகத்திலுள்ள அம்மன் உட்கார்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இருக்கிறாள். இது தவிர உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. விநாயகர், சுப்ரமண்யர், பைரவர் சந்நிதிகளும் இருக்கின்றன.எல்லா இந்துப் பண்டிகைகளும் இங்கே அனுசரிக்கப்படுகின்றன .பெரிய மரங்களும் வயல் வெளிகளும் உள்ள இடம் என்பதால் இயற்கை அழகும் சேர்ந்து அமைதியைக்  கொடுக்கிறது பெளர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. மார்ச் மாதம் வருட உற்சவம் நடக்கிறது . கோவில் தற்காலக் கட்டிடம் என்றாலும் யாழ்ப்பாண மன்னர்கள் இங்கே கோட்டை கட்டி அவ்வப்போது தாங்கினார்கள் என்பதால் இது வரலாற்றில் இடம் பெறுகிறது. அவர்களும் வழிபட்ட கோவில் என்பதை ஊகித்து அறியலாம்.

xxxx

91.வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில்

அற்புதங்கள் நடைபெறுவது ஏன் ?

இந்த ஆலயம் சிவன் கோவிலுக்கு அருகில் சாலையின் குறுக்கே அமைந்துள்ளது. பொதுவாக இந்த வட்டாரம்  குலோத்துங்க சோழனின் அமைச்சர், தளபதி கருணாகரத்  தொண்டைமானுடன் தொடர்புடையது.1070-1118. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமை உடைத்து. 1795-ம் ஆண்டில்  கோவில் கட்டப்பட்டது . இந்தியாவிலுந்து வந்த சிற்பிகள் கட்டிய கோவில் இது.  புண்ணிய மணியகாரனால்  கற்கோவில் எழுப்பப்பட்ட செய்தியையம்  , 15 நாள் சித்திரைத் திருவிழா நடந்த செய்தியையும் 1864ம் ஆண்டு  அரசினர் அறிக்கையிலிருந்து அறிகிறோம்.

கோவிலின் தோற்றத்தின் பின்னால் ஒரு சுவையான கதையும் உண்டு.

ஒரு முதிய  மாது , இந்தியாவிலிருந்து புறப்பட்ட படகில் ஏறிக்கொண்டு தன்னை வல்வெட்டித்துறையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொணடாளாம் அவர்களும்  அவ்வாறே செய்தனர்., கரை இறங்கிய மாது, திடீரென்று மறைந்துவிட்டாளாம். ஆக முத்துமாரியே இப்படி வந்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மனிதர்களாகிய நாம், பிரமுகர் ஆகிவிட்டால், நம்மை அறிமுகப்படுத்த விசிட்டிங் கார்ட் அல்லது பிசினஸ் கார்ட்  VISITING CARD OR BUSINESS CARD ஒன்றை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். இறைவனும் இப்படி ஒரு பிஸினஸ் கார்ட் வைத்துள்ளார். அதுதான் அவர் செய்யம் அற்புதச் செயல்கள் MIRACLES. அதைப்பார்த்தவுடன் நாம் அவருடைய மகிமையை அறிகிறோம்.

சத்யா சாய் பாபாவிடம் SATHYA SAI BABA  அவர் செய்த அற்புதஹங்கள் பற்றிக் கேட்ட பொழுது அவரும் ‘இவை என் விசிட்டிங் கார்ட்’ என்று சொன்னார்.

ஆக , விசிட்டிங் கார்டுக்குப் பின்னாலுள்ள மனிதரிடத்தில் நம் என்ன காண்கிறோமோ அந்த நிலையை அடைய வேண்டும். வெறும் விசிட்டிங் கார்ட்/ அற்புதங்கள் பற்றி மட்டும் பேசிக்கொண்டே  இருக்கக்கூடாது என்பதுதான் இதன் தாத்பர்யம்/ உட் கருத்து .

XXXXXX

92.மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில்

இலங்கையில் மத்திய மலைநாட்டில்  மாத்தளை நகரம் இருக்கிறது. கண்டி நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவு . இலங்கையில் நடைபெறும் தேர்த் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தமானது மாசி மாதம் நடக்கும் மாத்தளை பஞ்ச ரத  பவனி ஆகும். 5 தேர்களில்  5 மூர்த்திகள் பவனி வருவதால் பஞ்ச ரதம் எனப்படுகிறது . மலையகத் தமிழர்களின் காவல் தெய்வமாக முத்து மாரி அம்மன் அருள் புரிகிறார். இந்தியாவிலியர்ந்து 200,  300 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களின் முயற்சியில்  எழுந்தது இந்த ஆலயம் .

கண்டி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கருப்பண்ணர் என்பவர்  ஆசியில் தோன்றிய கோவில் பின்னர் சுப்பையா பிள்ளை என்பவரால் போற்றி வளர்க்கப்பட்டது . பெயர்தான் முத்துமாரி கோவிலே தவிர இங்கு இல்லாத தெய்வங்கள் இல்லை. இந்துக்களில் உள்ள எல்லா சமூகத்தினர் மட்டுமின்றி இலங்கையிலுள்ள எல்லா சமூகத்தினர் பங்கேற்கும் தேர்த் திருவிழாவை நாடே அறியும்  .

பஞ்ச முக விநாயகர், பழனி ஆண்டவர் முதல் ஸ்ரீரெங்கநாதர் வரை  எல்லா தெய்வங்களையும் ஒரு சேர வணங்க  வழி செய்யும் ஆலயம் இது.  மதுரைவீரன், காத்தவராயன், கருப்பண்ண சாமி என்ற தெய்வங்களை இங்கு மட்டுமே காண முடியும் . கோவில் பூஜைகளையும் விழாக்ளையும் அறங்காவலர் சபை அற்புதமாக நடத்திவருகிறது .

கட்டிடக்  கலையிலும் கோவில் முன்னணியில் நிற்கிறது. 108 அடி ராஜ கோபுரம். வண்ண வண்ண சுதைகள் நிறைந்த கோபுரம்.

XXXXX

தென் இந்திய வணிகர்கள் இந்தக்  கோவில் கட்டடங்களுக்குப் பேருதவி செய்தனர் .பின் 1852 ஆம் ஆண்டு தியாகராஜ செட்டியாரால் கட்டப்பட்டது.

பிள்ளையார், மீனாட்சியுடன் சோமசுந்தரேஸ்வரர், முருகன், முத்து மாரியம்மன் மற்றும் சண்டேசுவரி ஆகிய தெய்வங்கள் ஐந்து தேர்களில் நகரினை வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

மாசிமக திருவிழா ஆரம்பமானதுடன் மாத்தளை நகர் விழாக்கோலம் பூண்டு மிக அழகாக காட்சியளிக்கும். . மக்கள் வீடுகள் மற்றும் கடைகளை வாழைமரம்,தோரணம் கொண்டு அலங்கரித்து தேர் திருவிழாவிற்கு ஆயத்தமாவர்.

கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா, தைமாத பிரம்மோற்சவம், மாசிமகம், நவராத்திரி, பௌர்ணமி செவ்வாய் என்பன மிக விசேடமாகவும் மகாசிவராத்திரி, குடமுழுக்கு பூஜைகள், விளக்கு பூஜைகள், ஐயப்ப பூஜைகள் என்பனவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன.  அத்தோடு, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை போன்ற விசேட தினங்களில், அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெறுகின்றன.

1955 ஆம் ஆண்டளவில் அமரர் குமாரசுவாமி தலைமைப் பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயம் முன்னேற்றம் கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. மற்றும் ஆலய சுற்றுப் பிரகாரத்தில் பிள்ளையார் வள்ளி தெய்வானை, சமேத முத்துக்குமார சுவாமி ஆலயம் என்பன 1960 ஆம் அமைக்கப்பட்டதோடு 1963 ஆம் ஆண்டு ஈசான மூலையில் ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோம சுந்தரேச்வரர் ஆலயம் நிர்மாணிக்கப் பட்டது. மேலும் நடராஜர் சபை, முப்பெரும் தேவியர், ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ ரங்கா நாதர் எனப் பல பரிவார மூர்த்திகளும் அமைக்கப் பட்டு 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகப் பெருவிழா நடந்தது.  நேரம் தவறாது காண்டாமணி ஓசையுடன் கூடிய ஐந்து கால பூஜை இன்றும் நடைபெறுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மாத்தளை மா நகரில் பஞ்சரத பவனியை எழுப்பி சரித்திரம் படைத்தது  1983 ஆம் ஆண்டு  ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது சித்திரத்தேரும் ஏனைய ஐந்து தேர்களும் விஷமிகளால்  எரி யூட்டப் பட்டன.. மீண்டும் அம்பிகையின் அனுக்கிரகத்தால் 1992 ஆம் ஆண்டு ஐந்து சித்திரத் தேர்களை கட்டினார்கள் 1993ல் மீண்டும் தேர் விழா துவங்கியது.

—SUBHAM—–

Tags. அற்புதங்கள் நடைபெறுவது ஏன் ? முத்துமாரி அம்மன் கோவில் , மாத்தளை, கோப்பாய், Part 42, வல்வெட்டித்துறை

இலங்கையில் செட்டியார்கள் கட்டிய கோவில்கள் (Post No.12,648)

London Murugan Temple chief priest Sri Naganatha Sivnm started the event of Nagrathar Chettiyar Makara Nonbu by firing the first shot.in London on 28-10-2023. London Swaminathan was the Chief Guest.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,648

Date uploaded in London – –  –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்து மததத்திற்கு நகரத்தார் செய்த சேவை என்ற தலைப்பில் பேசுவதற்கு லண்டன் நகரத்தார் சங்கத்தினர் என்னை அழைத்திருந்தனர் .இந்த நிகழ்ச்சி 28-10-2023ல் லண்டன் முருகன் கோவிலில் நடந்ததது. நான் நான்கு விஷயங்களை எடுத்துக்கொண்டேன். அதில் இலங்கையில் நகரத்தார் சமூகத்தினர் செய்த கோவில் பணிகள் பற்றி நான் சொன்ன விஷயங்கள் பின் வருமாறு :—

(இதுவரை நன் சேகரித்த விஷ்யங்களையே அளித்துள்ளேன். இன்னும் ஏராளமான தகவல்கள் விடுபட்டிருக்கலாம். அவர்கள் நடத்தும் கோவில்களில் தேவார திருவாசக பள்ளிகள் நடத்தப்படுகின்றன; தமிழ்ப் பள்ளிகளையும் நடத்துகிறார்கள் ; பல நூல்களை வெளியிடுகிறார்கள். தமிழ் அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கிறார்கள். கோவில்களில் அவர்கள் பெயர்களில் கட்டளைகளை உருவாக்கி பூஜைகள் நடக்கவும் உதவி செய்கிறார்கள் )

Chief Guest London Swamiathan addressed over 00 Chettiyar people

இலங்கையில் இந்திய வணிகர்கள் நிறைய கோவில்களுக்கு பொருளுதவி செய்து மாபெரும் கோபுரங்களை எழுப்பினர். மலேசியா முதலிய இடங்களில் அவற்றை எழுதிவைத்ததுபோல இலங்கை விஷயத்தில் நகரத்தார் சேவை பற்றி யாரும் தொகுத்து எழுதியதாகத் தெரியவில்லை. ஆகையால் முதலில் நான்  ஏற்கனவே தொகுத்தும் எழுதியும் வைத்துள்ள தகவல்களைத் தருகிறேன்.

40.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் , யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு செட்டியார் கோவில் என்ற பெயரும் உண்டு; காரணம், வைத்திலிங்க செட்டியார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய கோவில் இது . இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் இலங்கையில் இந்துமதம் தழைக்க வித்தூன்றிய ஆறுமுக நாவலர்,  முதலில் சமயச் சொற்பொழிவு ஆற்றிய கோவில் இதுதான்

இந்தியாவிலிருந்து வந்த கோபால செட்டியார்  வணிகம் மூலம் பெரும் பொருளை ஈட்டினார். இதனால் அப்போது ஆட்சி செய்துவந்த ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது  அவருடைய மகன்தான் வைத்திலிங்க செட்டியார். அவரும் முத்துக்குளித்தல் முதலிய தொழில்கள் மூலம் பெரும் பொருள் ஈட்டினார். மேலும் தனது செல்வத்தை தர்மப்பணியில் செலவிட்டார். கூழங்கைத் தம்பிரான் கூறியபடி சிவன் கோவிலை   எடுப்பித்தார். அங்கே வைத்தியநாதனையும் தையல் நாயகியையும் பிரதிஷ்டை செய்தார்.

வண்ணார்பண்ணை கோவில் உருவான வரலாறு சுவையான வரலாறு. போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ வெறியர்கள் இலங்கையிலுள்ள 4000 கோவில்களில் பெரும்பாலானவற்றை தரை மட்டமாக்கி அந்தக் கற்களைக் கொண்டு சர்ச்சுகளையும் கோட்டைகளையும் கட்டினார்கள். நெதர்லாந்து/ ஹாலந்து நாட்டிலுள்ள கிறிஸ்தவர்ளுக்கு மதவெறி கொஞ்சம்  குறைவு . ஆகையால் இந்துக்  கோவில்களைக் கட்டுவதற்கு அனுமதித்தார்கள். ஆனால் அதற்கும் பணம் வசூலித்துவிடுவார்கள் ; வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்காரர்கள் அல்லவா !

பனங்காமம் நல்ல மாப்பாண வன்னியனை தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்தனர் டச்சுக்காரர்கள் . வைத்திலிங்க செட்டியார் தனது செல்வாவாக்கைப் பயன்படுத்தி விடுதலை செய்தார். அதற்கு நன்றி பாராட்டும் முகத்தான்,  அவர் 20,000 பனை மரங்களை கோவில் கட்டுவதற்கான வேலைகளுக்கு அளித்தார் . அவரை விடுதலை செய்யசெட்டியார் கொடுத்த தொகை 1200 டாலர். அது அக்காலத்தில் பெரும் தொகை . டச்சுக்காரர்கள் எவ்வளவு கில்லாடிகள் என்பதை அறிய இது உதவும் .

மாப்பாண வன்னியன் பனை மர நன்கொடையோடு நிற்கவில்லை. வைத்திய நாத சுவாமி- தையல் நாயகி அம்மனின் நித்திய பூஜைக்காக துணுக்கை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தையும் கோவிலுக்கு தானம் செய்தார் அதன் நெல்வயல்களும் குளமும் கோவிலுக்குச் சொந்தமாயின.

xxxxx

43.காரைநகர் சிவன் கோவில்ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாணம்

ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் கோவில்  யாழ்ப்பாண நகரிலிருந்து 10 மைல் தொலைவில் , காரை  நகரில்  திண்ணபுரம் பிரிவில்  அமைந்துள்ளது. பழங்கால ஐயனார் கோவில் இருந்த இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது . வன்னி மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 1518-ம் ஆண்டில், தமிழ் நாட்டிலிருந்து வந்த முத்து மாணிக்கம் செட்டியார்  இப்போது கோவில் இருக்கும் இடத்திற்கு அருகில் ஐயனாரை வழிபட கோவில் கட்டினார். 1618-ம் ஆண்டில் இதை சூறையாட கிறிஸ்தவ மதவெறியர்கள் போர்ச்சுகல் நாட்டிலிருந்து வந்தனர். தெய்வீக ஆற்றலால் கோவில் தப்பித்ததாம். அவர்களைத் தொடர்ந்து வந்த ஹாலந்து நாட்டு கிறிஸ்தவ வெறியர்கள் 1658-ம் ஆண்டில் கோவிலைத் தரை மட்டம் ஆக்கினர்.

Banana Tree Cutting 

One more shot by another priest, followed by Nagarathar Children and elders.

xxx

கேப்டன் கார்டன்  கோவில்/ தீவுக்கோவில் The Captain’s Garden Kovil, is located on Kovil Street, Colombo

இது கொழும்பு நகரில் உள்ள கோவில்

டச்சுக் காரர்கள் ஆட்சிக்காலத்தில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், கோவில் கட்டப்பட்டது . தென்னிந்தியாவிலிருந்து வியாபாரம்  செய்ய வந்த வணிகர்கள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள். ஒரு டச்சுக்கார அதிகாரிக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் குழந்தை பிறக்கும் என்று கேள்விப்பட்டு வணங்கினார். அந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன், அவர் ஏக்கர் கணக்கில் நிலத்தை தானம் செய்யவே, செட்டியார்கள் அங்கே கோவிலை எழுப்பினார்கள் .

 Xxxxx

கேதீஸ்வரம் ஆலயம்

கேதீஸ்வரம் ஆலயம் இருந்த இடத்தையும் அந்த இடத்தை சுற்றியுள்ள 43 ஏக்கர் நிலப் பகுதியையும் திரு. இராம.அரு.பழனியப்ப செட்டியார், அன்றைய பிரித்தானிய அரசிடம் விலைக்கு வாங்கினார். கொழும்பு நகர நகரத்தார் சமூகத்தினர், மற்றும் மலேசியாவில் உள்ள பக்தர்கள் ஆகியோரும் ஈழத் தமிழர்களுடன் சேர்ந்து கோவிலை ஆகம முறைப்படி அமைத்தனர். அங்கு பூஜைகள் நடக்கவும் அவர்கள் உபயம் ஏற்படுத்தினார்கள். இன்று நேரம் தவறாது சீரும் சிறப்புடனும் வழிபாடுகள் நடக்கின்றன. கொழும்பு நகர நாட்டுகோட்டை நகரத்தார் சார்பாக விசேஷ காலங்களில் அபிஷேக ஆராதனைகளும் சிறப்புற நிகழ்ந்து வருகிறது

Xxxx

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோவில் , திருகோணமலை மாவட்டம்

மகாவலி கங்கை நதியின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் சித்திரவேலாயுத சுவாமி கோவில் உள்ளது.  திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் அமைந்துள்ளது. கதிர்காமத்துக்குப் பாத  யாத்திரை செல்லுவோர் தங்கிச் செல்லும் இடம் இது.

இந்தக் கோவிலின் தோற்றம் சுவையான கதை ஆகும். நல்லை நாத செட்டியார் என்பவர். தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து ஆண்டு தோறும் கதிர்காம யாத்திரை செய்துவந்தார். அவர் திருகோண மலைக்கு வந்து அங்கிருந்து யாத்திரையைத் துவங்குவார். பாதி தூரத்தில் உள்ள வெருகலில் எல்லோரும் தங்கி விட்டு கதிர்காம யாத்திரையைத் துவக்குவது போல செட்டியாரும் தங்கினார்.

  . அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் முருகப்பெருமான் தோன்றி அங்கு ஒரு ஆலயம் அமைக்க கட்டளையிட்டார். இதற்கான பொருளும் அவரிடம் வந்து சேரும் என்றும் கனவில் உரைத்தார். கோவில் கட்டுவதற்குத் தேவையான பணம் புதையலில் கிடைக்கும் என்றும் கூறி, முருகன் மறைந்தார் ; இறைவன் சொன்னபடியே அவருக்குப் பொக்கிஷமும்  கிடைத்தது .செட்டியார் ஆலயம் அமைக்க திரவியம் எடுத்த இடம் இப்பொழுதும், திரவியம் எடுத்த இடம் என்னும் பெயரால் அழைக்கப்படுறது..

xxxxx

செட்டிகுளம் சந்திர சேகரன் கோவில்

மதவாச்சி – மன்னார் சாலையில் மதவாச்சியிலிருந்து 15 மைல் தூரத்தில் விநாயகர் சிலை வழிபாட்டில் உள்ளது . சாலைக்கு அப்பால் குளமும், வவ்வாலை என்னும் இடமும் உள்ளன

மதுரை நகரைச் சேர்ந்த ஒரு செட்டியார் கப்பல் உடைந்துபோய், முத்துக்குளிக்கும் மீனவர்களுடன் இவ்வூரில் கரை சேர்ந்தனர். இது நடந்தது.  கி  .பி. 247ம் ஆண்டில்.வீர நாராயண செட்டியார் என்ற பெயர் உடைய அவர் வவ்வாலையில் சந்திரசேகரனுக்கு கோவில் கட்டினார்.  என்று VANNI MANUAL, J P LEWIS வன்னி மானுவல் எழுதிய ஜெ.பி. லூயிஸ் குறிப்பிடுகிறார்

Xxxxx

மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் கோபுரம் கட்டுவதற்கு தியாகராஜ செட்டியார் பொருளுதவி செய்தார்

XXXX

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்—

கோவில்பட்டி தாலுகா இருக்கன்குடியிலிருந்து பூமியிலிருந்து  மண்  எடுத்து வந்து இந்தக் கோவிலைக்  கட்டினர்

இலங்கையில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் எனப்படும் வணிக வைசிக செட்டியார் சமூகத்தவர்களின் பரிபாலனத்தின் கீழ் 1864 ஆம் ஆண்டு முதல் இவ்வாலயம் இயங்கி வருகின்றது.

Xxxxx

நயினாதீவு நாகபூஷணி அம்பாள் கோவில்

பிற்காலத்தில் வீராசாமி செட்டியார் என்பவர் ஏழு பிரகாரங்கள் சூழ அம்பாளை நிறுத்தி கோவில் கட்டினார் என்று தல வரலாறு செப்புகிறது; செட்டியார் கட்டிய கோவிலை 1620-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் உடைத்தபோதும் அம்பாள் விக்கிரகத்தை மறைத்து வைத்திருந்தனர் 1882-ம் ஆண்டில் அம்பாள் விக்ரகம் நாகபூஷணி என்ற பெயரில் பிரதிஷ்டை ஆனது. ஒவ்வொரு கட்டிடமும், சந்நிதிதியும் உருவாக பல பக்தர்கள் பொருளுதவி செய்தனர்

— subham—-

From another website:–

தமிழகத்தின் செட்டி நாட்டிலிருந்து 1760 ஆம் ஆண்டுளுக்கு முன்பே வர்த்தக நோக்குடன் இலங்கைக்கு வந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமது சொந்தச் செலவில் நாட்டின் பல நகரங்களில் கோயில்களைக் கட்டி நிர்வகித்து வந்தார்கள். செட்டியார்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு, காலி, கதிர்காமம், கண்டி, திருகோணமலை, மாத்தளை, யாழ்ப்பாணம், கம்பளை, இரத்தினபுரி, குருணாகல், புசல்லாவை, நாவலப்பிட்டி, நீர்கொழும்பு, மாதம்பை, புத்தளம் ஆகிய நகரங்களில் கோயில்களை அமைத்தார்கள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் கதிர்காமக் கந்தன் ஆலய உற்சவத்திற்காகக் கொழும்பிலிருந்து வருடா வருடம் யாத்திரை சென்று வந்தார்கள்.

கொழும்பு செட்டியார் தெருவில் 1939 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயம், முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்துடன் இணைந்து ஆடிவேல் விழாவினை நடத்துகிறது.

—- subham—–

Tags – இலங்கை, நகரத்தார், செட்டியார், கோவில்கள், சுவாமிநாதன் உரை, மகரநோன்பு, லண்டன் முருகன் கோவில், மாநோன்பு. London Temple

மாரதான் நம்பிக்கை! நடந்தவை தான் நம்புங்கள் (Post No.12,647)

picture- Terry Fox in Marathon of Hope

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,647

Date uploaded in London –  29 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 8

ச.நாகராஜன்

நதியைக் கடக்க அடம் பிடித்த யானை!

நேபாளத்தில் ஒரு சம்பிரதாயம் உண்டு.

ஒரு அரசன் இறந்து போகும் போது அவனது ஆவியை பத்திரமாகக் கடைத்தேறச் செய்ய ஒரு சடங்கு உண்டு.

அதன் படி புனித நதியான பாக்மதி ஆற்றை ஒரு யானை கடக்க வேண்டும். அப்படி அது கடந்தால் அந்த அரசனது ஆவி அதன் முதுகின் மீது உட்கார்ந்து பத்திரமாகச் சென்று கடைத்தேறும்.

ஆனால் இளவரசர் தீபேந்திராவின் ஆவி கடைத்தேறும் சம்பவத்தில் நடந்ததோ வேறு. தீபேந்திரா – பிறப்பு : 27-6-1971; மரணம் : 4-6-2001.

1971ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி திடீரென்று தீபேந்திரா தனது அரண்மனையில் தந்தை மன்னர் பீரேந்திரா, தாயார் ராணி ஐஸ்வர்யா, தம்பி, தங்கை மற்றும் அரண்மனை குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் மூன்று நாட்கள் கோமாவில் இருந்து அவர் பின்னர் இறந்தார். அந்த மூன்று நாட்களும் அவரே அரசராக இருந்தார்,

சம்பிரதாய வழக்கப்படி யானை பாக்மதி ஆற்றில் இறங்கியது. ஆனால் அது முன்னேறிப் போக மறுத்தது.

கோபமடைந்த மக்கள் அழுகிய பழங்களை அதன் மீது வீசி எறிந்தனர். செருப்புகளயும் வீசினர். அது அடியும் வாங்கியது.

உடனே கோபத்தால் சீறி பிளிறி திரும்பி கூட்டத்தை நோக்க மக்கள் அலறி அடித்து ஓடினர்.

பிறகு ஒருவாறாக சகதி நிறைந்த பாக்மதி ஆற்றை அது கடக்க வைக்கப்பட்டது.

நேபாளத்தில் நடந்த அதிசய நிகழ்ச்சி இது.

மாரதான் நம்பிக்கை!

உலக பிரசித்தி பெற்ற மாரத்தான் ஓட்டம் உலகின் தலையான வீரர்களை அடையாளம் காட்டும் ஒன்று.

இந்தப் பெயரில் அதிசயமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

கனடாவைச் சேர்ந்த டெர்ரி பாக்ஸ் (Terry Fox) 1977ஆம் ஆண்டு அவரது 18ஆம் வயதில் அவரது வலது கால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டார்.

மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சை மூலம் அவரது காலைத் துண்டித்தனர் நிபுணர்கள்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அதற்கான ஆராய்ச்சிக்காக அவர் ஒரு நிதி திரட்ட எண்ணினார்.

செயற்கைக் கால் ஒன்று பொருத்தப்பட்டவுடன் ஓட்டத்தின் மூலமாக இந்த நிதியைத் திரட்ட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தனது திட்டத்தை அவர் செயல்படுத்த ஆரம்பித்தார்.

தனது திட்டத்திற்கு அவர் மாரதான் ஆஃப் ஹோப் (Marathon of Hope) என்று பெயர் கொடுத்தார். கனடாவில் நியூபவுண்ட்லேண்டிலிருந்து (Newfoundland) அவர் தனது ஓட்டத்தை ஆரம்பித்தார்.

தினமும் சுமார் 42 கிலோமீட்டர் தூரம் ஓடி 143 நாட்களில் 5373 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். அப்போது அவரது புற்றுநோய் அவரை மீண்டும் பாதித்தது. அதனால் அவர் தனது ஓட்டத்தை நிறுத்த வேண்டி வந்தது.

ஆனால் அவரது இந்த சாகஸ செயலைப் பார்த்து வியந்த கனடிய மக்கள் அவரது திட்டத்திற்கு ஏராளமாக நிதி உதவி அளித்தனர்.

ஆனால் அனைவரும் துக்கப்படும்படி புற்று நோயால் அவர் 1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 22 தான்!

அவரது நம்பிக்கையை நிஜமாக்கும் வண்ணம் கனடிய மக்கள் ஆண்டுதோறும் ‘டெர்ரி பாக்ஸ் ரன்ஸ்’ என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சி விரிவாக்கப்பட்டு கனடா மற்றும் 58 நாடுகளில் ஆண்டு தோறும் நடக்க ஆரம்பித்தது.

லக்ஷக்கணக்கான டாலர்கள் சேர ஆரம்பித்தது. இந்த நிதி கான்ஸரை தீர்க்க உதவும் ஆராய்ச்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்த டெர்ரி பாக்ஸ் ரன்ஸ் நிகழ்ச்சியை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

***

தமிழ் மொழியை வளர்ப்போம் 28102023 -Part 7 (Post No.12,646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,646

Date uploaded in London – –  –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is Part 7

ஆனந்த விகடன் 1935-ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்

அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “ அங்  ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

அங் + + + + + – அங்க தேசத்து அரசன், கர்ணன்

அங்+ +  – கற்றாழை

அங் + + + + + – குறிஞ்சா , சிறுதேக்கு

அங் + + + + – நங்கூரம் , தூக்கி  எடுக்கும் கப்பிக் கயிறு

அங்+ + +   – குதிரை, குதிரை ஏறும்படி

அங் + + + + ++ – மேலாடை

அங் + + +  – பழத்தின் வற்றல்

அங் + + + + + – உலகவின்பம்

அங் + + + + + + – மீனாட்சி

 அங் + + + கனம் – கடுக்காய் மரம்

அங்+ +  – கடைத்தெரு

அங்+  – வாய்திறத்தல்

அங்+ + + +  – அழகுள்ள பெண்கள்

அங்+ +  – மிச்சம், அநித்தியம்,

அங் + + + +  – செவ்வாய் கிரகம் , நெருப்பு

அங் + + + +  – கரி, நெருப்பு

அங்  + + + +   – கருப்பந்தண்டு

அங் + +  – சிறுநெருப்புச் சட்டி,, வெங்காரம்

அங் +  – தீ,  சூரியன், நீண்ட சட்டை , கார்த்திகை நட்சத்திரம்

அங் + + +  — சீதனம்

XXXX

Kurinja

விடைகள்

அங்கர் கோமான் – அங்க தேசத்து அரசன், கர்ணன்

அங்கனி – கற்றாழை

அங்கர வல்லி – குறிஞ்சா , சிறுதேக்கு

அங்கர் யாரி – நங்கூரம் , தூக்கி  எடுக்கும் கப்பிக் கயிறு

அங்கவடி – குதிரை, குதிரை ஏறும்படி

அ ங்கவஸ்திரம் – மேலாடை

அங்கவம் – பழத்தின் வற்றல்

அங்க ரங்கம் – உலகவின்பம்

அங்கய ற் கண்ணி – மீனாட்சி

 அங்கனம் – கடுக்காய் மரம்

அங்காடி – கடைத்தெரு

அங்கா – வாய்திறத்தல்

அங்கனையர் – அழகுள்ள பெண்கள்

அங்காமி – மிச்சம், அநித்தியம்,

அங்காரகன் – செவ்வாய் கிரகம் , நெருப்பு

அங்காரகம்- கரி, நெருப்பு

அங்காகை – கருப்பந்தண்டு

அங்காரி – சிறுநெருப்புச் சட்டி,, வெங்காரம்

அங்கி – தீ,  சூரியன், நீண்ட சட்டை , கார்த்திகை நட்சத்திரம்

அங்கமணி — சீதனம்

—SUBHAM—–

Tags- தமிழ் மொழி வளர்ப்போம், part 7

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit  -2 (Post No.12,645)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,645

Date uploaded in London – –  –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 2

Part 2 ; Slokam 4

प्रसह्य मणिमुद्धरेन्मकरवक्त्रदंष्ट्राङ्कुरा-

        त्समुद्रमपि संतरेत्प्रचलदुर्मिमालाकुलम् ॥

भुजङ्गमपि कोपितं शिरसि पुष्पवद्धारये-

        न्न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ॥ ४॥

4)A man may forcibly get back a jewel from the teeth

of a crocodile : he may cross over the raging waves of the

sea: he can wear an angry serpent on his head as if it

were a garland of flowers: but he cannot win over the

mind of one who is foolish and obstinate-4

ஸ்லோகம்  4

முதலைப் பன்மணியும் முயன்று பெறலாம்

சிதலையில் லிற் பாம்பைச் சிரத்தற்  – புதமலர்த்தார்

ஆக்கி அலைவீசும் ஆர்கலியைத்  தாண்டலாம்

மூர்க்கனைச் சீராக்கலாமோ – 4

ப்ரசஹ்ய மணிம் உத்தரேத் மகர வக்த்ர தம்ஷ்ட்ராந்தராத்

ஸமுத்ரமபி ஸந்தரேத் ப்ரசலதூர்மி மாலாகுலம்

புஜங்கம் அபி கோபிதம் சிரஸி புஷ்பவததாரயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்ருகஜனசித்தம் ஆராதயேத் –1-4

ஒரு முதலையின் வாயிலிருந்து ஒரு ரத்தினத்தை எடுத்துவிடலாம்,

ஒருவன் ஸமுத்திரத்தைக் கூட நீந்திக் கடந்துவிடலாம்,

ஒரு பூவை அணிவது போல ஒரு பாம்பைக்கூட தலையில் சூடலாம்,

ஆனால் பிடிவாதமான முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-4

Xxxxx

Slokam 5

लभेत सिकतासु तैलमपि यत्नतः पीडयन्

        पिबेच्च मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।

कदाचिदपि पर्यटन्शशविषाणमासादयेन्

        न तु प्रतिनिविष्टमूर्खजनचित्तमाराधयेत् ॥ ५॥

5. A man may get oil from sand by violent pressure :

he may drink water from a mirage when oppressed by

thirst : he may get possession of the horn of a rabbitj but

he cannot win over the mind of one who is foolish and

obstinate-5

ஸ்லோகம்  5

எண்ணெய் மணலில் எடுக்கலாம்  கானலைத்

தண்ணீர் குடிக்கச் சமைக்கலாம் எண்ணிலா

கான முயற்கோடு காணலாங் கற்பிலா

ஈனனைச்   சீராக்கலாமோ – 5

லபேத் ஸிகதாசு தைலம் அபி யத்னதஹ பீடயன்

பிபேஸ்ச ம்ருக த்ருஷ்ணிகாஸு ஸலிலம் பிபாஸார்திதஹ

க்வசிதபி பர்யதந் சசவிஷாணம் ஆஸாதயேத்

ந து ப்ரதிநிவிஷ்ட மூர்க்கசித்தம் ஆராதயேத் –1-5

மணலைக் கடைந்து எண்ணை எடுத்துவிடலாம்,

கானல் நீரிலிருந்து குடித்து தாகத்தைத் தீர்த்து விடலாம்

காட்டில் முயல் கொம்பைக் கூடக்கண்டு எடுத்து விடலாம்,

ஆனால் ஒரு முட்டாளின் மனதை மாற்ற முடியாது 1-5

xxxxx

அறப்பளீசுர சதகம்

அறப்பளீசுர சதகத்தை இயற்றிய அம்பலவாண கவிராயரும் இதே கருத்தைச் சொல்கிறார்

15. செயற்கருஞ் செயல்; அறப்பளீசுர சதகம்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போற்செய் யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியா துகாண்!

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மேவுஆர் கொன்றைபுனை வேணியா – விரும்பிய

ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடைமுடியுடையவனே!, சுரர்பரவும் அமலனே – வானவர் வாழ்த்தும் தூயவனே!,

அருமை………தேவனே!, நீர் மேல் நடக்கலாம் – தண்ணீரின்மேல் நடந்து

செல்லலாம், எட்டியும் தின்னலாம் – (கசப்பையுடைய) எட்டிக்காயையும் தின்னலாம், நெருப்பை நீர்போல் செய்யலாம் – (வெப்பமுடைய) தீயை

(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நெடிய பெருவேங்கையைக் கட்டியே

தழுவலாம் – நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்

நீள்அரவினைப் பூணலாம் – (நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்) மேலே அணிந்துகொள்ளலாம், பார்மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம்

– உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் பட்சமுடனே

உண்ணலாம் – அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், பாணமொடு

குண்டு விலகச் செய்யலாம் – அம்பையும் துப்பாக்கிபீரங்கி ஆகியவற்றின்

குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும்வண்ணம் புரியலாம், மரப்பாவை பேசப்பண்ணலாம் – மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம் – அழகிய காடியையும் கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், புத்தி சற்றும் இல்லாத மூடர்தம்

மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது – சிறிதும்

அறிவற்றபேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது, காண் :

Xxxx

Slokam 6

व्यालं बालमृणालतन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं वज्रमणिं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यति ।
माधुर्यं मधुबिन्दुना रचयितुं क्षारामुधेरीहते
नेतुं वाञ्छन्ति यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ॥ 1.6 ॥

வ்யாலம் பால ம்ருணால தந்து பிரஸௌ ரோததும் ஸமுஜ்ரும்பதே

சேதும் வஜ்ரமணிம் சிரீஷ குஸுமப்ராந்தேன ஸன்னஹயதி

மாதுர்யம் மதுபிந்துனா ரசயிதும்  க்ஷாராமுதேரீஹதே

நேதும் வாஞ்சயந்தி யஹ கலான்பதி ஸதாம் ஸூக்தைஹி

ஸுதாஸ்யந்திபிஹி 1-6

வாகை மயிரால் வயிரம் குடையலாம்

மாகமல  நூலால் மதகரியை–யூ கமுடன்

கட்டலாம் தேனாற் கடலு ப்பைப் போக்கலாம்

மட்டியைச் சீராக்கலாமோ —6

முட்டாளுக்கு வலியப் போய் நல்ல வார்த்தை சொல்லி மாற்றிவிட முயலுவோர்

தாமரை மலர்த் தண்டுகளால் ஒரு யானையைக் கட்டிப்போட நினைப்பவரே,

சீரிஷ/அனிச்ச மலரின் காம்பை வைத்து வைரத்தைத் துளை போட நினைப்பவரே

ஒரு சொட்டுத் தேன் துளி விட்டு கடலின் உப்புத்தன்மையை நீக்க விரும்புபவரே (ஆவர்)- 1-6

Xxxx

பஞ்ச தந்திரக் கதைகள் எழுதிய விஷ்ணு சர்மாவும் இதே கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்

விஷ்ணு ஸர்மா சொல்கிறார்,

பெரியதொரு மரத்தை வாளால் வெட்டமுடியாது;

பெரியதொரு பாறையை வாளால் பிளக்கமுடியாது;

குருவியின் புத்திமதி, வாழ்க்கையை எளிதானது

என்ற கொள்கையுடைய குரங்குகளுக்குப் பயன் தராது;

மேலும் ஒரு ஸ்லாகத்தில் சொல்கிறார்,

தகுதியற்றவனுக்குச் சொல்லும் புத்திமதி

வீட்டில் ஏற்றிய ஒளிமிக்க விளக்கை

குடத்திலிட்டு மூடி வைப்பதை ஒக்கும்

—subham—

Tags- Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – 2 அறப்பளீசுர சதகம், பர்த்ருஹரி, பஞ்ச தந்திரம்,  திருத்த முடியாது 

முத்துமாரி அம்மன் இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற ஆலயங்கள்- Part 41 (Post.12,644)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,644

Date uploaded in London – –  –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

pictures are from wikipedia; thanks

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 41

88. திருகோணமலை பத்ரகாளி அம்மன் கோவில்

 திருகோணமலை நகருக்குள் அமைந்த மிகப்பழைய  கோவில் பத்ரகாளி கோவில். இவள்தான் நகரத்தின் காவல் தேவதை என்பதால் நகர காளி என்ற பெயரும் உண்டு. மூலஸ்தானத்தில் கம்பீரமாககே காட்சி தரும் காளிதேவி ,கோவிலுக்கு வரும் பக்தர் மீது அருள் மழை  பொழிந்த வண்ணம் உள்ளாள்.

இலங்கைத் தமிழர்கள் தீபாவளி வரை அனுஷ்டிக்கும் கேதார கெளரி நோன்பும் விரதமும் எல்லோரும் அறிந்ததே  புரட்டாசி மாத விஜய தசமியில் துவங்கும் இந்த விரதம்,  ஐப்பசி அமாவாசை வரை நீடிக்கும். இதற்கான பூஜைகளைச்  செய்து, நோன்புக் கயிற்றையும்  பூஜை சாதனங்களையும் அளிப்பது இந்த பத்ர காளி கோவிலின் சிறப்பு வைபவம் ஆகும் . ஏராளமான பெண்கள் இதற்காக இங்கே வருவார்கள் .

கோவிலின் வரலாறு சோழர் காலத்திலிருந்து துவங்குகிறது ; குளக்கோட்ட  மன்னன் காலம் முதல் ஆதாரங்கள் கிடைக்கின்றன. பழங்காலத்தில் கோவில் இருந்த இடத்தில் 1933-ல் கோவில் கட்டப்பட்டு 1947-ல் விரிவாக்கப்பட் து. மஹா மண்டபம் , கோபுரம் முதலியன கட்டப்பட்டன; கிழக்கு நோக்கிய வாசல், மணிக்கூண்டு கோபுரம் முதலியனவும் கலை வேலைப்பாடு மிக்க  தூண்களும் அமைந்தன.

பிரகாரத்தில் பிள்ளையார், முருகன், பைரவர், நாக தம்பிரான் சந்நிதிகள் இருக்கின்றன. மார்ச் மாதம் நடக்கும் 10 நாள் உற்சவம் தேர்த்  திருவிழாவுடன் நிறைவடைகிறது

கேதார கெளரி விரதம் துவங்கும் முன் வரும் 9 நாட்களிலும், நவராத்திரி விழா மிக விமரிசையாகக் கொண்டாடபடுகிறது . 21 நாள் விரதம் முடிந்தவுடன் பெண்கள் மீண்டும் கோவிலுக்கு வந்து நோன்பினை முடிக்கிறார்கள்.

இந்தக்கோவிலில் 1980ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது ; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி.

xxxx

விக்கிபீடியா தரும் கூடுதல் தகவல் இதோ:

 இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.

வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலை நகரம்  சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.

XXXX

89.நல்லூர் வீர மகாகாளி அம்மன் கோவில்

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் , யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில்,சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது . நல்லூர் வட்டாரத்தில் இரவு முழுதும் நடக்கும் தண்டிகை பவனி, பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பெறும். மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர்  இறங்கிய பின்னர், அவருக்கு மண்டகப்படி தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதமும் வழங்கப்படுவது போல காளி உலா வருகையிலும் மண்டகப்படிகள் உண்டு.

யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை ஏற்படுத்திய முதல் ஆரிய சக்ரவர்த்தி காலிங்க சிங்கை சக்கரவர்த்தி, காலத்தில் நல்லூரின்  நான்கு திசைகளிலும் 4 கோவில்களை கட்டினர். அதில் ஒன்று நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில்.

போருக்குச் செல்லும்போதும், பெரிய வீரதீரச் செயல்களில் ஈடுபடும்போதும் காளி தேவியின் அருளை முதலில் பெறுவது சம்பிரதாயம் ஆகும்;  போர் வீரர்கள் தங்கள் வாட்களுடன் வந்து மன்னருக்கு வெற்றிவாகை சூட்ட சபதம் செய்வது வழக்கம். இன்றும் தொழில் சம்பந்த மான கருவிகளை தொழில் வினைஞர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்து ஆசி வேண்டுகின்றனர்  .

xxx

சோக வரலாறு

யாழ்ப்பாணத்தின் மன்னனாக சங்கிலி இருந்த 16- ஆம் நூற்றாண்டில் ஒரு சோக நிகழ்ச்சி நடந்ததால் , இந்த இடம் வரலாற்றிலும் இடம்பெற்றுவிட்டது . பரராஜசெகராஜ என்ற பெயர்களில் மன்னர் பெயர்கள் அடுத்தடுத்து வரும். அவ்வகையில் சங்கிலி, செகராஜசேகரம் என்ற பெயரில் ஆண்ட காலம் அது 1519- 1564 . போர்ச்சுகீசிய படைகள் யாழ்ப்பாணத்தைச் சூறையாடியபோது பறங்கியர்க்கு எதிராக  சங்கிலிக்கும் விடிய பண்டாரத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது . அதை உறுதி செய்வதற்கு இரு தரப்பினரும் கோவிலுக்கு முன்னர் கூடியபோது அருகிலுள்ள வெடி மருந்து ஆலை வெடித்ததில் பெரும் குழப்பம் ஏற்பட்டது ; அதில் பண்டாரம் இறந்தார் ; சங்கிலிக்கு மிகவும் வருத்தம் ஏற்படவே பரிகாரமாக , அவருடைய நினைவாக பூதராயர் கோவிலைக் கட்டினார் .. சங்கிலிக்கு போர்ச்சு கீசியருக்கும் இடையே போர் மூண்டபோது நடந்த 11 நாள் முற்றுகை நடந்ததும் இந்த இடத்தில்தான் 1560-ம் ஆண்டுப் போரில் சங்கிலி வெற்றிபெற்றார். ஆயினும் பின்னர் ஒரு சண்டையில் பிடிபட்டார்.

1621ம் ஆண்டில் மதவெறி கொண்ட போர்ச்சுகீசியர் காளி கோவிலைத் தரைமட்டம் ஆக்கினர்  . சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமத மறுமலர்ச்சி ஏற்பட்டது. கோவில் அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டது . ஜூன் மாத பெளர்ணமியில் நிறைவுபெறும் 25 நாள் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது

XXX

முத்துமாரி  அம்மன் கோவில்கள்

இலங்கை முழுதும் பல ஊர்களில் முத்துமாரி அம்மன் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன . மாரி அம்மன் வழிபாடு எல்லாக் கிராமங்களிலும் நடைபெறுகிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. கோடையில் வரும் நோய்களிலிருந்து , மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, மாரியை வணங்குவதும் , அவளுடைய வேப்பிலையால் குணம் பெறுவதும் தென் இந்தியாவிலும் உண்டு.  நூறு கோவில்களுக்கு மேல் மாரி அம்மன், முத்து மாரி அம்மன், என்ற பெயர்களில் இந்த வகைக் கோவில்கள் காணப்படுகின்றன.

மாத்தளை, வல்வை, அராலி, பண்டாரிகுளம் , சுன்னாகம், அல்வாய் , ஹேரி, பலகொல்ல , சல்லி,  சாவகச்சேரி , நாவலபிடிய  , கோப்பாய், கொழும்பு கொட்டாஞ்சேனை முதலியன குறிப்பிடத் தக்கவை.

பெரிய நகரங்களில் உள்ள முத்துமாரி அம்மன் கோவில்களை அடுத்தாக காண்போம்

தொடரும் ………………………………………………………..

 ,TAGS– மாகாளி , முத்துமாரி , காளி , அம்மன் , கோவில்கள், கேதார கெளரி விரதம்