நீதிநெறி விளக்கம் : கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,643)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,643

Date uploaded in London –  28 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நீதிநெறி விளக்கம்

(குமரகுருபர சுவாமிகள் இயற்றியது)

கவின் மிகு சொற்றொடர்கள்

ச.நாகராஜன்

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

மொத்தப் பாடல்கள் கடவுள் வாழ்த்து + 101.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. நீரில் குமிழி இளமை; நிறை செல்வம் நீரில் சுருட்டும் நெடுந்

  திரைகள் (பாடல் – கடவுள் வாழ்த்து)

2. கல்வியின் ஊங்கு இல்லை, சிற்றுயிர்க்கு  உற்ற துணை

3. கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால், மற்று ஓர் அணிகலம்

  வேண்டாவாம் (பாடல் 12)

4. யாரே அழகுக்கு அழகு செய்வார்? (பாடல் 12)

5. முற்றும் உணர்ந்தவர் இல்லை (பாடல் 13)

6. தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது (பாடல் 18)

7. உலையா முயற்சி களைகணா, ஊழின் வலி சிந்தும் வன்மையும்

  உண்டே (பாடல் 50)

8. மெய்வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்; எவ்வெவர்

  தீமையும் மேற்கொள்ளார் (பாடல்52)

9. செவ்வி அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்; கருமமே

  கண்ணாயினார் (பாடல் 52)

10. நிறை கயத் தாழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்

   காண்பு அரிது (பாடல் 53)

11. தெய்வம் உளது என்பார் தீய செயப் புகின் தெய்வமே கண் இன்று

   நின்று ஒறுக்கும் (பாடல் 73)

12. தெய்வம் இலது என்பார்க்கு இல்லை (பாடல் 73)

13. தீயன தீயனவே; வேறு அல்ல (பாடல் 74)

14. மெய்ந் நடுங்க உள் நடுங்கும் நோய் (பாடல் 76)

15. பெரும் பாவம், கற்பு இல் மகளிர் பிறப்பு (பாடல் 83)

16. பரபரப்பினோடே பல பல செய்து ஆங்கு, இரவு பகல் பாழுக்கு

   இறைப்ப (பாடல் 89)

17. வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! ‘யாவரையும் வஞ்சித்தேம்’ என்று

   மகிழன்மின் (பாடல் 93)

18. அஞ்சி அங்கம் குலைவது அறிவு (பாடல் 93)

19. தெய்வம் பறை அறைத்தாங்கு ஓடிப் பரக்கும் (பாடல் 94)

20. மெய் உணர்ந்தார் பொய்ம் மேல் புலம் போக்கார் (பாடல் 98)

21. முற்றத் துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்

   (பாடல் 99)

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit (Post No.12,642)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,642

Date uploaded in London – –  –  27 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

நான்கு மொழிகளில் பர்த்ருஹரியின் நீதி சதகம் – 1

பர்த்ருஹரி இயற்றிய நீதி சதகத்தில் 100 ஸ்லோகங்கள் உண்டு . அவர் யாத்த சிருங்கார சதகம்வைராக்ய சதகத்தில் மேலும் 200 பாடல்கள் இருக்கின்றன. இவைகளை ஸதக த்ரயம்  (100X3 ) என்பார்கள்

நீதி சதகத்தில் உள்ள நூறு பாடல்களை தமிழ், ஆங்கிலம், ஸம்ஸ்க்ருதம் , ஹிந்தி ஆகிய நான்கு  மொழிகளில் காண்போம் . அத்தோடு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ம. மாணிக்கவாசகம் பிள்ளை (ஆண்டு  1925) என்பவர் இயற்றிய தமிழ்ச் செய்யுள் வடிவிலும் அர்த்தத்தைக் காண்போம் காலஞ் சென்ற Sri P R RAMAMURTHY பி.ஆர். ராமமூர்த்தி இதை தமிழ் ஸ்லோக  வடிவிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் கொடுத்துள்ளார். அதையும் அவருக்கு நன்றி சொல்லிப் பகிர்கிறேன் அவர் எல்லா ஸ்லோகங்களையும்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.

பர்த்ருஹரியின் கதையை முன்னரே  கொடுத்துள்ளேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவரது மனையாள் அவரை ஏமாற்றி வேறு ஒருவன் மீது காதல் கொண்டதை அறிந்து துறவறம் பூண்டார் என்பதே கதை.

Slokam 1 பாடல் 1

Concerning Morality. (Translated by B Hale Wortham in 1886

नीतिशतकं भर्तृहरिकृत

दिक्कालाद्यनवच्छिन्नानन्तचिन्मात्रमूर्तये ।

स्वानुभूत्येकनामाय नमः शान्ताय तेजसे ॥ १॥

திக்காலாத்யனவச்சின் னாநந்த சின் மாத்ர மூர்த்தயே

ஸ் வானு  பூத்யேக நாமாய  நமஹ சாந்தாய தேஜஸே -1

1. SALUTATION to the deity who is not definable in time

or space: infinite pure intelligence in incarnate form:

who is peace and glory : whose sole essence is self-know-

ledge.

கால அளவுமங் கருதரிய  தேசத்தின்

மூல அளவு முடிவுமின்றி –ஞாலமெங்கும்

ஞானுபவத்தால்  நாடுசுயஞ்  சோதிமயந்

தானாம் பொருளெமக்குச் சார்பு -1

உரை –

காலத்தினாலோ, வியாபகத் தன்மையாலோ வேரறுக்க முடியாதவனுக்கு வணக்கம் . ஞானமே உருவான எல்லையற்ற தூய அறிவானவன் சாந்தமும் பெருமையும் படைத்தவன் சோதியும் அறிவும் உருவானவன் . அவனுக்கு வந்தனம்

Hindi version is in attached photocopy frm year 1889 book by

Gopinath

Xxxx

Slokam 2

यां चिन्तयामि सततं मयि सा विरक्ता

        साप्यन्यमिच्छति जनं स जनोऽन्यसक्तः ।

अस्मत्कृते च परिशुष्यति काचिदन्या

        धिक् तां च तं च मदनं च इमां च मां च ॥ २॥

2. That woman is attracted by another man whom I

supposed to be always devoted to me : to her another man

is attached : while a certain other woman takes pleasure

in my doings. Fie on her and on him, on the god of love,

on that woman, and on myself.

நான் யாரை நினைக்கிறேனோ அவள் என்னை நாடவில்லை; அவளோ வேறு ஒருவனின் காதல் வய ப்பட்டாள் .அவனோ வேறு பெண்மணியை காதலிக்கிறான் இது போக, வேறு ஒருத்தி என்னைக் காதலிக்கிறாள் . இதை பார்க்கையில்  அவளை , அவனை, மன்மதனை, என்னையே வெறுக்கிறேன் சீ போகட்டும் அவள் இது புலவரின் சுயசரிதம் என்பது உரைகாரகளின் கருத்து

Xxxxx

பர்த்ருஹரி ஸ்லோகம் 2??

இரண்டாவது ஸ்லோகம் வெவ்வேறு பதிப்பில் வேறு மாதிரியாகவுள்ளது

தெரிந்தார் அருவறுத்தார் செல்வஞ் சிறந்தார்

திரிந்தார் அகந்தை செறிந்து — பிரிந்தார் கீழ்

மக்களுக்குக் கேட்கு மதியில்லை  ஆகலிநென்

சொற்களடங்கினவே சோர்ந்து -2

Xxxx

Slokam 3

अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।

ज्ञानलवदुर्विग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥ ३॥

அக்ஞஹ சுகமாராத்ய சுகதரமாராத்யதே விஷேஷக்ஞஹ

ஞானலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி தம் நரம் ந ரஞ்சயதி- 1-3

தெரியாக்கெளிதில் தெரித்தலாம் நன்றாய்

ஒப்பத் தெரிந்தார்க்கும் தெரித்தல் – அரிதன்றால்

அற்பமதியால்  அனைத்தும் உணர்ந்தோமென்னும்

அற்பருக்க்கார் சொல்லுவார் அறிவு  1-3

The ignorant one is easily convinced. It is easier to convince a really knowledgeable person. But even the Creator himself will not be able to convince a fool who, with his half-baked knowledge, thinks that he is the wisest person in the world.(P R TRANSLATION)

எனது உரை

அறியாதவனுக்குச் சொல்லிதருவது எளிது;

புத்திசாலிக்கும் விஷயம் தெரிந்தவனுக்கும் கற்பிப்பது மேலும் எளிது;

கொஞ்சம் படித்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல உலவுகிறானே அவனுக்கு பிரம்மாவும் கூட சொல்லித் தரமுடியாது; அவனை திருப்தி செய்யவும் முடியாது. (1-3)

An ancient saying from the Middle East says:

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

To be continued…………………………

–subham—

Tags- Niti sataka, Bhartruhari, Part 1,  in four languages

காளி கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40 (Post No.12,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,641

Date uploaded in London – –  –  27 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 40

85.வண்ணார் பண்ணை கண்ணத்திட்டி காளி கோவில்

வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது

xxxx

கண்ணத்திட்டி காளிதேவி கோவில்  1782-ல் கட்டப்பட்டது  சிவன் கோவில் கட்டுவதற்காக வைத்தி லிங்கம் செட்டியார் அழைத்து வைத்த சிற் பிகள் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் . 1800 ஆம் ஆண்டில் பத்தர் குடும்பத்தினர் கோவிலை விரிவுபடுத்தினார்கள் . விஷ்வ குல பொற்கொல்லர்கள் தொடர்ந்து நிர்வகித்துவந்தனர் சிவன் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.; சாலையில் எதிரேயுள்ள தாமரைக்குளம் இந்த இடத்துக்கு அழகு சேர்க்கிறது. மூலஸ்தானத்திலிருந்து காளி தேவி அருள்புரிகிறாள் . பரிவார தேவதைகளும் தனி சந்நிதிகளில் இருக்கின்றனர். .

ஒரு நாளைக்கு நான்கு முறை நடக்கும் நித்திய  பூஜைகளுடன் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது 21 நாள் கெளரி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது. 1971ல் கும்பாபிஷேகம் நடந்தது .

xxxxx

86. பிட்டியம்பதி பத்ரகாளி கோவில்

யாழ் நகரில்  இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அருகிலுள்ள சங்கரத்தையில் வயல் வெளிகள் சூழ உள்ள ஆலயத்தில் பத்ரகாளி காட்சி தருகிறாள். கோவிலின் வரலாறு சுவையானது 300 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் வயல்களுக்கு இடையே ஒரு பெரிய புளியமரம் பந்து வளர்ந்து இருந்தது. இந்த மரம் சாகுபடிக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி,  நிலைச் சொந்தக்காரர் அதை வெட்டுவதற்குத் தீர்மானித்தார். அருகில் வட்டுக்கோட்டையிலிருந்து இதற்காக ஆட்களை அழைத்தார். அவர்கள், இந்த மரம் பற்றிக் கிராம மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக வெட்ட மறுத்தனர். அவர்களை அனுப்பிய பின்னர் நில உரிமையாளர் தாமே  வெட்டலாம் என்று கோடரியைத் தூக்கினார். அப்போது மரத்திலிருந்து பாய்ந்த ஒரு பாம்பு அவரை  ஓட ,ஓட  விரட்டியது. அன்று இரவு அவரது கனவில் பத்ரகாளி தோன்றி தனக்கு அங்கே கோவில் அமைக்குமாறு ஆணையிட்டாள்; அதைத் தெடர்ந்து அவர் புளிய மரத்தின் அருகில் ஒரு கொட்டகை அமைத்து காளிதேவி வழிபாட்ட்டைத் துவங்கினார். கோவிலும் படிப்படியாக வளர்ந்து பெரிதானது . அருகிலேயே படிகளுடன் கூடிய கேணி அமைக்கப்பட்டது . விநாயகர், பைரவ மூர்த்தி சந்நிதிகள் கட்டப்பட்டன அருகிலுள்ள புளிய மரத்தையும் சங்கரத்தை மக்கள் வண ங்குகின்றனர்.

 . இந்தக் கோவிலின் சிறப்பு அம்சம்  காளி தேவியுடன் வீரபத்ர மூர்த்தியும் இருப்பதாகும் உள்ளூர் மக்கள் உதவியுடன் ராஜநாயகம், வைரவநாதர் ஆகியோர் முன்னின்ன்று கோவிலை வளர்த்தனர்.

பத்ரகாளி சமேதராக வீரபத்ரர் வணங்கப்படுதற்குப்பின்னால் , ஒரு கதை உள்ளது. புராண  காலத்தில் தக்கன் என்பவன் அதிகார ஆணவத்தால் தலைவிரித்தா டிய போது அவனது கொட்டத்தை அடக்க சிவபெருமான் வீர பத்திரரையும் , பார்வதி தேவி பத்ரகாளியையும் படைத்தார்கள் . அத்துடன் தக்கன் ஆட்டம் அடங்கியது

இங்கு மார்ச் மாதம் அறுவடை முடிந்தவுடன் கோவில் விழா நடைபெறுகிறது. ஆனி உத்தரம், பங்குனி உத்தரத்தை ஒட்டி இரண்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

xxxx

87.வீர மாகாளி அம்மன் கோவில்; சரசாலை

யாழ்ப்பாண  சாவாகச்சேரியிலிருந்து  சில மைல்களில் சரசாலை உள்ளது. இங்கு வீர மாகாளி அம்மன் கோவில் இருக்கிறது   சில நூற்றாண்டு களுக்கு முன்னால்  கதிவேலவர் என்பவர் தமிழ்நாட்டிலுள்ள தலங்களுக்கு யாத்திரை சென்றார்.. தில்லையில் காளி அமான் கோவில் மிகவும் பிரசித்தமானது. சிதம்பரத்திலிருந்து திரும்பிவருகையில் காளி தேவி சிலை ஒன்றி னை கொண்டு வந்து நாவல் மரத்தடியில் பிரதிஷ்டை செய்தார். தில்லை காளி அம்மனைச் சுற்றி கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கர்ப்பக்கிரகத்தில் பெரிய காளி  விக்கிரகம் இருக்கிறது  பிரகாரத்தில் பழைய தில்லை காளியை வைத்தனர்.

Xxxx

செல்வச் சந்நிதி- கதிர்காம பாத யாத்திரை

தமிழ்நாட்டில்  பழனி, ஆந்திரத்தில் திருப்பதி முதலிய தலங்களுக்கு பக்தர்கள் வண்டி வாகனம் ஏதுமில்லாமல் பாத யாத்திரை செய்து ஆண்டவனை வணங்குவதை  இன்றும் காண்கிறோம். இது போல இலங்கையில் பிரசித்தமானது கதிர்காம யாத்திரை. இப்போதும் பக்தர்கள் நடந்தே கதிர்காம யாத்திரையை மேற்கொள்கின்றனர் யாழ்ப்பாணத்துக்கு வடக்கில் 20 மைல் தொலைவில் செல்வச் சந்நிதி முருகன் கோவில் இருக்கிறது அங்கிருந்து ஆண்டுதோறும் புறப்படும்  பாதயாத்திரை பற்றிய செய்தி இதோ

May 6 , 2023

வரலாற்றுச்  சிறப்பு மிக்க கதிர்காம ஆடிப்  பெருவிழாவுக்கு யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் பாத யாத்திரை சனிக்கிழமை புறப்பட்டது .பாத யாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது செல்வச் சந்நிதி ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து, மோகன் சுவாமியால் கதிர்காம பாத யாத்திரைக் குழுத் தலைவரிடம் வேலாயுதம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களிலும் உள்ள 98 ஆலயங்களைத்  தரிசித்து46 நாட்களில் 815 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து, கதிர்காம ஆலயத்துக்கு இந்த பாத யாத்திரை சென்றடையும்.

இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக இது கருதப்படுகிறது. :-

–subham

Tags – -கதிர்காம பாத யாத்திரை, வீர மாகாளி அம்மன், கோவில், பத்ரகாளி, கண்ணத்திட்டி காளி

அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்! (Post.12,640)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,640

Date uploaded in London –  27 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்!

ச.நாகராஜன்

பெரும் புலவர் முனைப்பாடியாரால் இயற்றப்பட்டது.

சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

இந்த நூல் 226 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

S.ராஜம்சென்னை வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டது.

1. மற உரையும்காமத்து உரையும்மயங்கிப் பிற உரையும் மல்கிய

  ஞாலத்து (பாடல் 2)

2. உரைப்பவன்கேட்பான்உரைக்கப்படுவதுஉரைத்ததனால் ஆய 

  பயனும் (பாடல் 3)

3. தண்டிதடி பிணக்கன்புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான்

   (பாடல் 6)

4. ஆவட்டை போன்று அறியாதாரை (பாடல் 8)

5. காட்சி ஒழுக்கொடு ஞானம் தலை நின்று மாட்சி மனை வாழ்தல்

  (பாடல் 12)

6. மீட்சி இல் வீட்டுலகம் எய்தல் (பாடல் 12)

7. நிறுத்து அறுத்துச் சுட்டு உரைத்துப் பொன் கொள்வான் போல

  (பாடல் 22)

8. காய்தல் உவத்தல் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார்

   கண்ணதே (பாடல் 23)

9. ஆராய்ந்து நம்புக நல்ல அறம்! (பாடல் 24)

10. குருட்டுச் செவிடர்கள் கோல் விட்டுதம்முள் தெருட்டி வழி

   சொல்லிச் சேறல் (பாடல் 32)

11. நூல் உணர்வு நுண் ஒழுக்கம் காட்டுவிக்கும்நொய்ய ஆம்

   சால்பின்மை காட்டும் (பாடல் 35)

12. கனை இருட்கண் பல் எலி தின்னப் பறைந்திருந்த பூனையை இல்

   எலி காக்கும் என்றற்று (பாடல் 36)

13. பல கற்றோம் யாம் என்று தற் புகழ வேண்டா (பாடல் 44)

14. அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும் (பாடல் 44)

15. காலொடு கை அமுக்கி பிள்ளையை வாய் நெறித்து பாலொடு நெய்

   பெய்யும் தாய் அனையர் (பாடல் 48)

16. பாம்பு உண்ட நீர் எல்லாம் நஞ்சு ஆம்பசு உண்ட தேம் படு தெண்

   நீர் அமுதம் ஆம் (பாடல் 53)

17. அடங்கி கொடுத்து உண்மின்கொண்டு ஒழுக்கம் காணுமின் (பாடல் 

    55)

18. ஆழி சூழ் வையத்து அறம் (பாடல் 85)

19.  பிறர்க்கு இன்னா செய்தலின் பேதைமை இல்லை (பாடல் 96)

20. கற் பிளப்பில் தீயே போல்பொட்டப் பொடிக்கும் குரோதத்தை

   (பாடல் 101)

21. உயிர் வித்திஊன் விளைத்துகூற்று உண்ணும் வாழ்க்கைசெயிர்

   வித்திச் சீலம் தின்று என்னை(பாடல் 111)

22. காணலாம் கூற்றம் குறுகா இடம் (பாடல் 111)

23. பெண் விழைவார்க்கு இல்லைபெருந் தூய்மை (பாடல் 116)

24. உண் விழைவார்க்கு இல்லைஉயிர் ஓம்பல் (பாடல் 116)

25. மண் விழைவார்க்கு இல்லை. மறம் இன்மை (பாடல் 116)

26. மாறாது தண் விழைவார்க்கு இல்லை தவம் (பாடல் 116)

27. பெருவாழ்க்கை முத்தாஅடை கொண்ட திருவாளா! (பாடல் 117)

28. என்றும் அரங்கு ஆடு கூத்தனே போலும் – உயிர் தான் சுழன்று

   ஆடு தோற்றப் பிறப்பு (பாடல் 119)

29. சோறு யாரும் உண்ணாரோசொல் யாரும் சொல்லாரோ(பாடல்

    126)

30.  உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல் (பாடல் 127)

31. ஆதன் பெருங் களியாளன் அவனுக்குத் தோழன்மார் ஐவராம்

    (பாடல் 130)

32. பிறப்புஇறப்புமூப்புபிணி என்று இந்நான்கும் மறப்பர் மதி இலா

    மாந்தர் (பாடல் 133)

33. வாழ்நாளில் பாகம் துயில் நீக்கிமற்றவற்றுள் வீழ் நாள்இடர்

    மூப்பு மெய் கொள்ளும் (பாடல் 136)

34. அருளால் அறம் வளரும்ஆள்வினையால் ஆக்கம்பொருளால்

    பொருள் வளரும்நாளும்! (பாடல் 142)

35. எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு மக்கட் பிறப்பின் பிறிது

   இல்லை (பாடல் 143)

36. கூலிக்கு அழுத குறை (பாடல் 144)

37. இருளே உலகத்து இயற்கைஇருள் அகற்றும்  கை விளக்கே கற்ற

   அறிவுடைமை (பாடல் 147)

38. நல் அறம் எந்தைநிறை எம்மைநன்கு உணரும் கல்வி என்

   தோழன்துணிவு எம்பி. (பாடல் 161)

39. பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம் வயிற்றுப் பெருமாள்

   பொருட்டு (பாடல் 164)

40. ஈதல்அறிதல்இயற்றுதல்இன்சொல்கற்று ஆய்தல்அறிவார்

   தொழில் (பாடல் 165)

41. பேறுஇழவுசாவுபிறப்புஇன்பம்துன்பம் என்று ஆறு உள

   அந்நாள் அமைந்தன (பாடல் 171)

42. தன் ஒக்கும் தெய்வம் பிறிது இல்லை (பாடல் 172)

43. தன்னில் பிறிது இல்லை தெய்வம்நெறி நிற்பில் (பாடல் 173)

44. தானேதனக்குப் பகைவனும் நட்டானும் (பாடல் 174)

45. தானே தனக்கு மறுமையும் இம்மையும் (பாடல் 174)

46. தானே தனக்குக் கரி (பாடல் 174)

47. மெய் வினவில்தாய் ஆர்மனைவி ஆர்தந்தை ஆர்மக்கள்

   ஆர்நீ யார்நினைவாழி நெஞ்சு (பாடல் 181)

48. அற்ற பொழுதே அறம் நினைத்தில் யாது ஒன்றும் பெற்ற பொழுதே

   பிற நினைத்தி (பாடல் 185)

49. சாவாய்நீ நெஞ்சே (பாடல் 188)

50. பண் அமை யாழ்குழல் கீதம் என்று இன்னவை நண்ணி நயப்ப

   செவி அல்ல (பாடல் 196)

51. தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின்பின்னைத்

   தான் எய்தா நலன் இல்லை (பாடல் 208)

52. மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு குப்பைத்தே குண்டு நீர்

   வையகம் (பாடல் 212)

53. அலை புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற இலையின் கண் நீர்

    நிலாதாகும் (பாடல் 215)

54. எந் நூல்கள் ஓதினும் கேட்பினும் என் செய்யும்பொய்ந் நூல்

     அவற்றின் பொருள் தெரிந்து (பாடல் 224)

55.  அவன் கொல்இவன் கொல்என்று ஐயப்படாதேசிவன் கண்ணே

     செய்ம்மின்கள் சிந்தை! (பாடல் 225)

***

New Tamil Lesson 10 Verb Pesu= பேசு Speak, Talk (Post No.12,639)

London sswaminathan speaking in South Indian Society meeting 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,639

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பேசு =PESU= SPEAK= TALK

1.            எப்போதும் உண்மையே பேசு

Eppthum Unmaiye Pesu

Always, Truth Only, Speak

Imperative sentence; Unmai +ee= Emphasis; Speak

xxxx

2.            அதிகமாகப் பேசாதே.

Adhikam + aaka or AAGA= , அதிகமாக

Adhikamaaka Pesaathe = Too much, Don’t Talk = Don’t talk

Imperative Negative Sententce

All adverbs will have this AAGA or AAKA ending

Vegamaaka= speedily, quickly== வேகமாக

Methuvaaga = slowly, = மெதுவாக

Unmaiyaaka = Truly, Honestly =, உண்மையாக

Sabdhamaaka = Loudly , = சப்தமாக etc

xxxxx

3.            அங்கே போய் சத்தமாகப் பேசக்கூடாது.

Ange , Poy, Saththamaaka, Pesak koodaathu

Prohibitive sentence= பேசக்கூடாது. = Pesak koodaathu

Poy = having gone there, after going there= converbial of verb GO= PO

How do you form Prohibitive?

You add k KOODAATHU with the infinitive of a particular verb

சத்தமாக= சப்தமாக

Examples

Pesa = To speak = k koodaathu

Vara = To come = Varakkoodaathu

Poga = To go= Poga k koodaathu

Ezutha = To write = Ezutha k koodaathu

xxxx

London swaminathan speaking in British Parliament committee room.

4.            கூட்டத்தில் கடைசியில் யார் யார் பேசினார்கள்?

Koottaththil , Kadaisiyil , YAAR YAAR, Pesinaarkal?

In the meeting, at the end, WHO WHO, did speak?

In Indian languges it is common to repeat the words WHAT WHAT, WHEN WHEN,  WHERE WHERE, WHO WHO.

In English you wont use this repetition

பேசினார்கள் = Pesinaarkal = Third person , Plural, Past tense

xxx

5.            நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Naan , ORU, VAARTHTHAI KOODA, Pesavillai

I , single word, even, did not speak

I did not say even a single word .

xxxx

6.            மந்திரி பேசியதும் கூட்டம் கலைந்தது

Manthiri Pesiyathum Koottam, Kalainthathu

As soon as the minister spoke, the crowd/meeting dispersed

கூட்டம்= koottam = used for CROWD OR MEETING

xxxx

7.            அவர் பேசினார் பேசினார் பேசிக்கொண்டேயிருந்தார்.

      Avar Pesinaar Pesinaar Pesikkonde irunthaar.

He spoke, spoke and did continuously speaking .

When sone one does an action continuously, then this repletion comes

Never stopping action.

xxxx

8.            யார் பேசுவது உண்மை என்று எனக்குப் புரியவில்லை.

Yaar Pesuvathu Unmai Endru Enakku , Theriyavillai

Who Speaking Truth that  To me (I) don’t know

I don’t know who is peaking the truth (moral dilemma)

xxx

9.            நீங்கள் மெதுவாகத் தமிழ் பேசினால் எனக்குப் புரியும்.

Neengal Methuvaaka, THamiz, Pesinaal, Enakku, Puriyum

If you speak Tamil slowy I can understand.

மெதுவாக = methuvaaka = adverbial form,

பேசினால் = conditional form,

Puriyum = Impersonal verb, understand

xxxx

10.          எங்கள் சங்கத்தில் அவர் ஒருமுறை பேசியிருக்கிறார்.

Engal, Sangaththil, Avar, Our murai, Pesiyirukkiraar

He has spoken  in our association once.

சங்கத்தில்= sangaththil= in the association;

ஒருமுறை Oru murai  =  one time, once;

பேசியிருக்கிறார்.= Pesiyirukkiraar = has spoken  = compound verb

To be continued………………………..

Tags, New Tamil, Lesson 10, Verb Speak, Talk, Tamil

தமிழ் மொழியை வளர்ப்போம் 26102023 -Part 6 (Post No.12,638)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,638

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

This is Part 6

ஆனந்த விகடன் 1935ம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்

அகராதியிலிருந்து  எடுக்கப்பட்ட “ பரு ” எழுத்தில் துவங்கும் சொற்களைக் கண்டுபிடியுங்கள்; தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியர்களின் இரு கண்கள் என்பதால் எல்லா தமிழ் அகராதிகளிலும் அதிகமான ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும் என்பதை நினைவிற்கொண்டு கட்டங்களைப் பூர்த்தி செய்யுங்கள். பிளஸ் + + + + அடையாளம் , அத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

பரு + + + +   = இறுமாப்பு, எக்களிப்பு, படைக்கலம், மகிழ்ச்சி

பரு  + +    = முரடான வேஷ்டி வகை, பரும் புடவை

பரு  + + +   = பெருவாரி, கறி பதார்த்தங்களோடு அமைந்த அன்னம்

பரு  + + +  = முழந்தாள்

பரு + + + = ஒரு கண்நோய்

பரு  + + +  = கரும்பு

பரு  + +  = வண்டு

பரு  + + + +    = இரும்பு முதலியவற்றைப் பற்றும் கருவி

பரு   + + +  = ஜடாமஞ்சில்

பரு  + + + +   = விவாகம்

பரு   + + +   = புலவர்

பரு   + + + +    = மாகாளிக் கிழங்கு

பரு  + + + = வரிக்கூத்து வகை

பரு  + +  = கப்பற் பாய், கட்டுமரம்

பரு  + + + +  = பருப்புஞ் சாதம்

பரு  + + + +  = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு

பரு + + + +  = குதிரை

பரு + + +  = பார்வதி

பரு  + + + = ஆணிவகை

பரு  + + + = லேசாகக் கடித்தல் , மேற்கடித்தல்.

xxxx

விடைகள்

பரு மிதம்  = இறுமாப்பு, எக்களிப்பு, படைக்கலம், மகிழ்ச்சி

பரு  முறி = முரடான வேஷ்டி வகை, பரும் புடவை

பரு  ம்படி  = பெருவாரி, கறி பதார்த்தங்களோடு அமைந்த அன்னம்

பரு  வேகம் = முழந்தாள்

பரு  வணிகை = ஒரு கண்நோய்

பரு  வயோனி = கரும்பு

பரு  ங்கி = வண்டு

பரு  ங்குறடு = இரும்பு முதலியவற்றைப் பற்றும் கருவி

பரு  ஞ்சாய் = ஜடாமஞ்சில்

பரு   ணயனம் = விவாகம்

பரு   ணிதர்  = புலவர்

பரு   நன்னாரி = மாகாளிக் கிழங்கு

பரு  மணல் = வரிக்கூத்து வகை

பரு  மல் = கப்பற் பாய், கட்டுமரம்

பரு  ப்போரை = பருப்புஞ் சாதம்

பரு  த்திவீடு = பருத்தியின் சுகிர்ந்த பஞ்சு

பரு த்தாரம் = குதிரை

பரு ப்பதி  == பார்வதி

பரு  ப்பாணி  == ஆணிவகை

பரு  ங்கடி == லேசாகக் கடித்தல் , மேற்கடித்தல்

–subham—

TAGS- தமிழ் மொழி, வளர்ப்போம், part 6, ஆனந்த விகடன், அகராதி, 1935

மீனாட்சி அம்மன் கோவில்கள்:  இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற ………39 (Post 12, 637)

Uduvil Meenakshi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,637

Date uploaded in London – –  –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 39

79.உடுவில்  மீனாட்சி அம்மன் கோவில்

யாழ்ப்பாண நகருக்கு வடக்கில் ஆறு மைல்  தொலைவில் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வயல்வெளியில் ஒரு புனிதக் கல் கண்டுபிடிக்கப்பட்டது  அது கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் ஊர்வலமாகச் சென்ற வழியில் இருந்ததால் கண்ணகை அம்மன் என்று மக்கள் வழி படத் துவங்கினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரங்கநாத அய்யர் என்பவர் இந்தியாவிலிருந்து மீனாட்சி விக்கிரகத்தை அங்கே பிரதிஷ்டை செய்து முறையான வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். இப்போது பக்தர் கூட்டம் பெருகி,  பெரிய அளவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலின் புகழ் பரவவே, இலங்கை யிலும் கடந்த 300 ஆண்டுகளில் பல இடங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்கள் தோன்றியுள்ளன. தனியாகக் கோவில் இல்லாத இடங்களிலும் மீனாட்சி பக்தர்கள் சந்நிதிகளை அமைத்துள்ளனர். சுமார் 300 ஆண்டு வரலாறு உடையது உடுவில் மீனாட்சி அம்மன் கோவில்..

XXXX

இலங்கையில் மேலும் பல மீனாட்சி அம்மன் கோவில்கள்

80.மடத்தடி மீனாட்சி அம்மன் கோவில்

காரைதீவு, மாட்டுப்பளை, மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் மதுரையைப் போலவே சித்திரா பெளர்ணமி காலத்தில் விழா நடத்தப்பட்டுகிறது .

வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் ஆவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா 2022 ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்து பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

xxxx

81.ஊரெழு மீனாட்சி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஊரெழு எனும் இடத்தில் அமைந்துள்ளது.

xxxx

82. கந்தரோடைக்கு அணித்தே மாகியப்பட்டி கண்ணகை அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மனும் கண்ணகியும் வழிபடப்படுகின்றனர்

இலங்கை வேந்தன் கஜபாகு 1900 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாட்டில் கண்ணகி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட செய்தி சிலப்பதிகார காவியத்தில் கிடைக்கிறது;  கஜபாகு மன்னன் கொண்டுவந்த கண்ணகி சிலையும் சிலம்பு அடங்கிய சந்தனப் பேழையும் கண்டி கதிர்காமம் வரை ஊர்வலமாகச் சென்றது.

அது முதற்கொண்டு கண்ணகி சிலை சென்ற வழியெல்லாம் கண்ணகை அம்மன் கோவில்கள் தோன்றின. மதுரை நகரினை ஒரு முலையால் கண்ணகி எரித்த செய்தி உலகறிந்தது. ஆகையால் அவளை மதுரை மீனாட்சி அம்மன் போலவே மக்கள் கருதினர். இதனால் பல இடங்களில் மீனாட்சியுடன் சேர்த்தே கண்ணகி வழிபடப்பட்டாள் ; காலப் போக்கில் கண்ணகையை ராஜ ராஜேஸ்வரி முதலிய தேவிகளாகவும் வழிபட்டு அந்த விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ததை  இலங்கைக் கோவில்களின் வரலாற்றை ஊன்றிப் படிப்போர் அறிவர்.

Xxxxx

Pungudu Tivu Raja Rajeswari Temple

இலங்கையில் துர்க்கை அம்மன் வழிபாடு

தெல்லிப்பளை துர்கா கோவில் பற்றி கோவில் எண் 63-ல் எழுதியுள்ளேன்

யாழ்ப்பாண நகரிலிருந்து காங் கேசன் துறை நோக்கிச் செல்லும் சாலையில் எட்டாவது மைலில் தெல்லிப்பளை துர்கா கோவில்  அமைந்துள்ளது. ஏனைய சில துர்க்கை அம்மன் கோவில்களையும் தரிசிப்போம்

83. மிருசுவில் துர்க்கை அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்திலமைந்த மிருசுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.

84.திருகோணமலை துர்க்கை அம்மன்

திருகோணமலை, உவர்மலை துர்க்கை அம்மன் ஆலய த்திலும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உற்சவம் நடக்கிறது ஆலய நவதள இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பூஜைகள் 2022 மார்ச் மாதம் நடந்தது.

மேலே குறிப்பிட்ட கோவில்களுக்கு நேரில் செல்ல இயலாதவர்கள் யூ ட்யூப் YOU TUBE வாயிலாக உற்சவ நிகழ்ச்சிகளைக் காணலாம்.

–SUBHAM–

Tags – துர்க்கை அம்மன், கோவில், கண்ணகை அம்மன், மீனாட்சி அம்மன்

துர்காதாஸின் விஸ்வாசம்! (Post No.12,636)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,636

Date uploaded in London –  26 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

ராஜஸ்தான் ஃபைல்ஸ்!

துர்காதாஸின் விஸ்வாசம்!

ச.நாகராஜன்

ஏராளமான அற்புத வரலாறுகளைக் கொண்டது ராஜஸ்தான்.

வீரத்துடன் முகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னர்களின் சரிதத்தை நாம் தேடிப் பிடித்தாவது படிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட மகத்தான சரிதங்களில் ஒன்று மன்னன் அஜித் சிம்மனுடையது.

அஜித் சிம்மனுடைய தந்தையான மன்னன் ஜஸ்வந்த் சிம்மன் காலமானார். மார்வாட் அரசு அரசனை இழந்தது. ஜோத்பூரில் முடிசூட்டக் கொள்ள முடியாதபடி அஜித் சிம்மனுக்கு அப்போது இளம் வயது.

பார்த்தான் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்!

எப்படியாவது இந்தத் தருணத்தில் மார்வாடை அபகரிக்க அவன் பேராசை கொண்டான்.

ஜஸ்வந்த் சிம்மனுடைய திவானான ஆசகரணனுடைய புதல்வரான துர்காதாஸைத் தன் பக்கம் இழுக்கத் திட்டம் தீட்டினான் அவுரங்கசீப்.

எட்டாயிரம் பொற்காசுகளைத் தருவதாகவும் இளவரசன் அஜித் சிம்மனைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து துர்காதாஸ் விலக வேண்டும் என்றும் அவன் ஆசை காட்டினான்.

துர்காதாஸ் இதற்கு இணங்கவில்லை.

அவுரங்கசீப்பின் சதியிலிருந்து அஜித்சிம்மனைக் காப்பாற்ற அந்த இளவரசனை வெவ்வேறு இடத்திற்கு மாற்றித் தங்க வைத்து அவனது பாதுகாப்பை உறுதி செய்தவண்ணம் இருந்தார் துர்காதாஸ்.

இளவரசன் தனியாக அரசுப் பொறுப்பை ஏற்கும் வரை இப்படி துர்காதாஸ் பாதுகாப்பைத் தொடர்ந்தார்.

உரிய காலத்தில் அஜித்சிம்மன் அரியணை ஏறினார்.

ஒரு நாள் அரசவை கூடியது.

அப்போது அஜித்சிம்மன் துர்காதாஸைப் பார்த்து, “நீங்கள் இளம் வயதில் எனக்குச் செய்த கொடுமையை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை. இடம் விட்டு இடம் ஓட வைத்தீர்கள்! தாங்க முடியாத துன்பத்தைத் தந்தீர்கள். ஒரு நாள் இந்த அரியணையில் நான் ஏறி அமர்வேன் என்பதைத் தெரிந்தும் இப்படி செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு தக்க தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார்.

இதைக் கேட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.

துர்காதாஸோ மென்மையாக, “நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்கத் தயார்” என்றார்.

“கையில் மண்கலயத்தை ஏந்தி ஜோத்பூர் நகரத் தெருக்களில் நீங்கள் பிச்சை எடுத்து உயிர் வாழுங்கள். இங்கே உங்களுக்கு இனி இடம் கிடையாது” என்றார் அஜித்சிம்மன்.

துர்காதாஸ் அங்கிருந்து சென்றார்.

சில நாட்கள கழிந்தன.

ஒரு நாள் ஜோத்பூர் வீதியில் அஜித்சிம்மன் குதிரை மீது அமர்ந்தவாறு சென்று கொண்டிருந்தார். அவரது படை வீரர்கள் அவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர் ஒரு செல்வந்தர் வீட்டின் வாயிலில் மண் கலயத்துடன்  நின்றவாறு துர்காதாஸ் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

குதிரையை விட்டு இறங்கினார் அவர்.

துர்காதாஸிடம் சென்ற அஜித் சிம்மன், “என்ன சௌக்கியமா?” என்றார்.

உடனே துர்காதாஸ், “அரசே! எனது சௌக்கியத்திற்கு என்ன குறைச்சல்? உங்களது ஆட்சியில் அனைவரும் தங்கத் தட்டிலும் வெள்ளித் தட்டிலும் அல்லவா உணவு உட்கொள்கின்றனர்! எனக்கோ இந்த மண் கலயம் ஒன்றே சொத்து. சில சமயம் பிச்சை கிடைக்கும். சில சமயம் கிடைக்காது. உங்களை அங்குமிங்குமாக அலைக்கழித்துக் கூட்டிச் சென்று காப்பாற்றி இருக்காவிடில் நானும் இவர்களைப் போல தங்கத் தட்டிலோ அல்லது வெள்ளித் தட்டிலோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன் – ஒரு கொடுங்கோலன் மார்வாடை அரசாண்டு கொண்டிருப்பான்” என்றார் துர்காதாஸ்.

துர்காதாஸை அணைத்துக் கொண்ட அஜித் சிம்மன், “நீங்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு விஸ்வாசமாய் இருக்கிறீர்கள் என்பதை அனைவரும் உணர்வதற்காகவே தான் இப்படிச் செய்தேன். நீங்கள் எனக்குத் தந்தை போன்றவர் அல்லவா” என்றார்.

இருவர் கண்களும் பனித்தன.

மக்கள் இந்த அதிசயக் காட்சியைக் கண்டு வியப்புற்று மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் துர்காதாஸின் மகிமை தெரிந்தது.

அவரைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்து சென்ற அஜித் சிம்மன் அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கினார்.

ராஜஸ்தான் ஃபைல்ஸில் இப்படி ஒரு உண்மை காட்சி உண்டு!

***

ஆதாரம், நன்றி : கல்யாண கல்பதரு ஆங்கில மாத இதழ் 2016 ஆண்டு மலர்.

இப்போது இந்த ஆங்கில இதழ் நின்று விட்டது.

QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635)

Sarasvati in Japan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,635

Date uploaded in London – –  –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx


 QUIZ சரஸ்வதி பத்து QUIZ (Post No.12.635)

Quiz Serial No.79

1.ஜப்பானில் சரஸ்வதி தேவிக்கு 40-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. அவளை ஜப்பானியர் என்ன பெயரில் அழைக்கின்றனர் ?

Xxxx

2.ஸரஸ்வதி தேவி பற்றி 5000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதம் என்ன சொல்கிறது ?

xxxx

3.சரஸ்வதிக்கான தனிக்கோவில் தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது?

xxxx

4.சரஸ்வதி மீது குமரகுருபரர் பாடிய துதியின் பெயர் என்ன?

Xxxx

5.சரஸ்வதி அந்தாதி பாடிய புலவர் பெயர் என்ன ?

xxxx

6.சரஸ்வதி தேவிக்கு எத்தனை  பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

7.சரஸ்வதியை வணங்க மாணவர்கள் சொல்லும் ஸ்லோகம் என்ன ?

xxxx

8. சரஸ்வதிக்கு எத்தனை கைகள்அவைகளில்  என்ன இருக்கின்றன ?

xxx

9.சரஸ்வதியின் நிறம் என்னவாகனம் என்ன ?

xxx

10. சரஸ்வதியை  வணங்குவோருக்கு என்ன கிடைக்கும் ?

xxx

 ANSWERS விடைகள்

1.பென்சைதன் Benzaiten (shinjitai: 弁才天 or 弁財天; kyūjitai: 辯才天, 辨才天, or 辨財天, lit. “goddess of eloquence”), என்றும் பெ ன்தன் Benten என்றும் அழைக்கின்றனர். இது வந்தனம் , வந்தனா என்ற சமக்கிருதப் பெயரின் திரிபு

xxxx

2.अम्बितमे नदीतमे देवितमे सरस्वति

— Rigveda 2.41.16

அம்பிதமே  நதீ தமே தேவிதமே ஸரஸ்வதி  என்று ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டல மந்திரம் புகழ்கிறது

Best of mothers, the best of rivers, best of goddesses, Sarasvatī.

இதன் பொருள்: தாயே சரஸ்வதி! நீயே தாய்களில் சிறந்தவள் (உலகில், உன்னை விட அன்பு செலுத்தும் தாயைக் காண்பது  அரிது ); நதிகளில் சிறந்தவள் (ஹரப்பா நாகரீகம் துவங்கிய முதல் இடம்); கடவுளரில்  நீயே  சிறந்தவள்.

xxxx

3.திருவாரூருக்கு அருகிலுள்ள கூத்தனூரில் இருக்கிறது. ஒட்டக்கூத்தர் பூஜித்த சரஸ்வதி. கோவில் இது.

இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில்.

ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று. ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது. (Facebook )

xxx

4.சகல கலா வல்லிமாலை

xxxx

 5. சரசுவதி அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர்.

xxx

தமிழ் மொழியில் கலைமகள் என்போம்.; ஸம்ஸ்க்ருத அஷ்டோத்திரத்தில் 108 பெயர்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்தியா முழுதும் பெண்கள் வைத்துக்கொள்ளும் சரஸ்வதி பெயர்கள்- வித்யா, பாரதி , சரஸ்வதி , சாரதா, வாணி, சியாமளா, சாவித்ரி, பார்கவி ஆகும் .

xxx

7.தினமும் காலையில் படிப்பைத் துவங்கும் முன்னால் சொல்ல வேண்டியது :-

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவது மே ஸதா

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।

विद्यारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

பொருள் :- ஸரஸ்வதி தாயே , உன்னை வணங்குகிறேன்; எண்ணியதை எல்லாம் நல்கும் , வரம் அருளும் தாயே, இதோ படிப்பைத் துவங்குகிறேன் ; இதில் வெற்றி பெற எனக்கு எப்போதும் அருள் புரிவாயாகுக.

சம்ஸ்க்ருதம் தெரியாதோர், சகல கலா வல்லி மாலை செய்யுட்களில் சில செய்யுட்களையோ  அல்லது சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டையுமோ (Given at the end) சொல்லலாம்

Xxxx

8.சரஸ்வதி தேவிக்கு 4 கைகள் ; அவைகளில் புஸ்தகம், ஜபமாலை , வீணை, தரமரை மலர் அல்லது அபய ஹஸ்தம் இருக்கும்

xxx

9.அவள் வெள்ளைப்புடவை அணிந்து கையில் வீணையுடன் பளிங்கு நிறத்தில் காட்சி தருவாள் ; அன்ன வாகனத்தில் அமர்ந்து இருப்பாள். வடக்கிலுள்ள சில இந்திய மாநிலங்களில் மயில் வாகனமும் உண்டு

xxx

10. இந்து சமய நூல்களில் பட்டியலிடப்பட்டுள்ள 64 கலைகளும் கைகூடி உலகப் புகழ் அடை வார்கள் .

(64 கலைகளின் பட்டியல் இந்த பிளாக்- கில் உள்ளது )

கம்பர் அருளிய சரசுவதி அந்தாதியில் சொல்கிறார் :–

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய

உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள் இங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லுஞ்சொல் லாதோ கவி. (சரஸ்வதி அந்தாதியின் கடவுள் வாழ்த்து)

xxxxxxxxxx

–சுபம் —

Tags – சரஸ்வதி, க்விஸ் , கேள்வி பதில், நிறம், வாகனம்

பள்ளி மாணவர்க்கான  குறுக்கெழுத்துப் போட்டி25102023 (Post No.12,634)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,634

Date uploaded in London – –  –  25 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(பழைய தமிழ்நாடு பாட நூல் புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

விடைகள்- லண்டன் சுவாமிநாதன் எழுதியது)

விடைகள்

இடமிருந்து வலமாக

1.அறுவடை ;  5.மார்கழி ; 6. சடை; 7. மஞ்சள் ; 9.எலி; 10.புற்று; 13.கரும்பு; 15.சூரியன் ; 16.கைதி

மேலிருந்து கீழாக

1.அரசமரம் ; 2.வலை; 3.ஏர் ; 4.கோழி; 5.மாடு ; 8.சங்கு; 9.எறும்பு ; 11.பேகன் ; 12.நரி; 14.புகை

—-subham—-