இது எப்படி நடைபெறுகிறது என்பதை நன்கு தெரிந்து கொள்ள இன்னும் பல நூற்றாண்டுகள் பிடித்தன. கடைசி கடைசியாக ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஹங்கேரியைச் சேர்ந்த இரசாயன இயல் வல்லுநரான ஆல்பர்ட் ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi) புறாக்களின் மார்பு தசைகளை ஆராய்ந்த போது வெற்றி கிடைத்தது.
அந்த தசையானது பறவைகளைப் பறக்கும் போது மிக வலிமையாக இருக்கும்படி அமைந்திருந்தது; அது தூள்தூளாக்கப்பட்ட பின்னரும் கூட வளர்சிதைமாற்றதில் அதிக இயக்கத்தைக் கொண்டிருந்தது. ஜெண்ட் கையோர்கி சில திசுக்களை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டார். பின்னர் மிகுந்த கவனத்துடன் வெவ்வேறு இரசாயனங்களை அதில் போடும் போது வெளிப்படும் வெப்பம் மற்றும் வாயுவின் அளவுகளைக் குறித்தார். சில அமிலங்கள் தசை வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை ஐந்து மடங்குக்கும் அதிகமாக அதிகரிப்பதை அவர் கண்டார். அதிசயிக்கத்தக்க வகையில், இந்த அமிலங்கள் எதிர் வினைகளில் தாமாக உட்கொள்ளப்படவில்லை. ஜெண்ட் கையோர்கி சிறிய பாத்திரத்தில் எவ்வளவு போட்டாரோ அந்த அளவை வெளியே எடுக்க முடிந்தது. அமிலங்கள் ஒரு விதமான ரசாயன விளைவில் வேகமாகவோ அல்லது ஊக்குவிகளாக இருந்தோ வளர்சிதை மாற்றத்தைச் செய்து நிலையாக உடைபடுவதும் பிறகு மறுபடி திரும்பி உருப்பெறுவதுமாக இருந்ததை அவர் உணர்ந்தார்.
சில வருடங்கள் கழிந்த பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் இரசாயன நிபுணரான ஹான்ஸ் க்ரெப்ஸ் ழ் ( Hans Krebs) இந்த இரசாயன சுழற்சியை இன்னும் அதிகமாக விவரித்தார். அது தான் நம்மால் இன்று அறியப்படும் க்ரெப்ஸ் சுழற்சியாகும். (Krebs cycle)
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது உயிரியல் வகுப்பில் க்ரெப்ஸ் சுழற்சி பற்றிப் படித்தது உங்களுக்கு சிறிது ஞாபகத்தில் இருக்கலாம் அல்லது ஒருவேளை பரிட்சை முடிந்த பிறகு அதை மறந்திருக்கலாம். நீண்ட நெடுங்காலம் பள்ளியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் க்ரெப்ஸ் சுழற்சி தான். அது எனக்கு ஒரு போராகவும் திகைப்பைத் தரும் ஒன்றாகவும் அப்போது இருந்தது.
வரிசையாக உள்ள டெஸ்குகளில் அமர்ந்து இவற்றின் ராக்ஷஸ பாகங்களை – சசினேட், பைருவேட், அசிடில் சிஓஏ, சைடோக்ரோம் சி (succinate, pyruvate, Acetyl-CoA, cytochrome c) என்று சொல்லக் கேட்டோம். கரும்பலகையில் எழுதப்படுவதைப் பார்த்தோம். நாங்கள் என் ஏ டி மற்றும் எஃப் ஏ ஹெச்2எச் (NAD+s and FADH2s) ஆகியவற்றை எண்ணினோம். பின்னர் ரிடாக்ஸ் எதிர்வினைகளை அவை ஆக்ஸிடைஸ் ஆகி குறைந்த மூலகங்களாக ஆவது பற்றிக் கேட்டோம்.( “redox” reactions as they “oxidized” or “reduced” elements.)
பாடபுத்தகத்தில் இருந்த படங்களை நான் மனப்பாடமாக நினைவில் வைத்துக் கொண்டேன். அம்புக் குறிகள், சிறிய எழுத்துக்கள், ப்ளஸ் மற்றும் மைனஸ் குறிகள் – ஆகிய இவை அனைத்தையும் எதற்காக இந்த சுழற்சி இருக்கிறது என்பதை அறியாமலேயே நினைவில் வைத்துக் கொண்டேன். இதை உணராமலேயே அனைவரும் இருந்தோம். 38 வருட காலம் ஓடிய பெரிய நவீன இடர்ப்பாடில் இது பற்றி ஆறே ஆறு முறை தான் இது பற்றிக் கேட்கப்பட்டது. மூன்று பேரை இது மேடையில் திணற அடித்தது!
கரிம வேதியலில் ஏராளமான அழகிய விஷயங்கள் இருக்கும் போது, இப்படிப்பட்ட திடுக்கிடும் தொடர்புகள் இருப்பது வெட்கக்கேடான ஒரு விஷயம். உயிரியல் வேதியல் நிபுணரான நிக் லேன் (Nick Lane) தனது புத்தகமான ‘ட்ரான்ஸ்ஃபார்மர் : தி டீப் கெமிஸ்ட்ரி ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ (Transformer: The Deep Chemistry of Life and Death) என்ற புத்தகத்தில் எழுதுகையில் க்ரெப்ஸ் சுழற்சி குறிப்பாக மாயாஜாலமான ஒன்று – அது வளர்சிதை மாற்றத்தின் அஸ்திவாரம் மட்டுமல்ல பூமியில் உள்ள சிக்கலான வாழ்க்கையின் அனைத்திற்குமே ஆதாரமானது என்று எழுதுகிறார். மேலும் அது ஒன்றும் புரிந்து கொள்வதற்கு அவ்வளவு சிரமமான ஒரு விஷயம் அல்ல!
இன்றைய நாட்களில், ஏ.பி. உயிரியலை (A.P. Bio) படிக்காமல் விட்டவர்கள் கூட மரபணுக்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். பெருந்தொற்று நோய் வந்தாலும் வந்தது, அதற்கு நன்றி தான் சொல்ல வேண்டும், நாம் அனைவரும் பேசும் போது புரோடீன், எம் ஆர் என் ஏ (mRNA) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டே பேசுகிறோம். லேன் இது பற்றி விவாதிக்கும் போது டி என் ஏ அறிவானது ஒருவகையிலான மரபணு பாரபட்ச நோக்கு தான் என்கிறார்.
வாழ்க்கையின் ரகசியம் முழுவதுமாக முற்றிலும் நமது மரபணுக்களில் எழுதப்படவில்லை. அது நாம் உலகில் எப்படி ஆற்றலை இழுத்துக் கொள்கிறோம் – எப்படி வாழ்க்கை முழுவதும் நடக்கும் போது மெதுவாக எரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பொறுத்தே இருக்கிறது. க்ரெப்ஸ் சுழற்சியைப் புரிந்து கொள்வதானது பயன் தரக்கூடிய ஒன்று. ஏனெனில் அது உயிருடன் இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகிறது.
The treasures looted by the British expedition were shown in Antiques show in Britain. Some of them were sold for £140,000. Many of them are displayed in museums in Britain. What they did not tell the listeners and watchers of TV show is that the British killed 3000 Tibetans during Younghusband Expedition. One person described it as “the Tibetans being knocked over like skittles by the British Maxim guns”, and that a monk who tried to avenge the killing of a brother was hanged, his body left strung up for 24 hours as a warning to others.
Xxx
Sir Robert Napier, a veteran of key empire events such as the surrender of the Sikh army during the Anglo Sikh wars and the entry into Peking in 1860 led an expedition to Ethiopia. His invasion involved 13,000 soldiers, both British and Indian, along with 26,000 camp followers and 40,000 animals, including 44 trained Indian elephants to carry the artillery.. it took three months to traverse 400 miles of treacherous mountain ranges to reach the Emperor’s terrain. With such a force they crushed their enemies who fought only with spears. In one ninety minute skirmish 800 Ethiopian fighters were killed; when Napier’s troops reached the fortress town of Makdala, they swiftly defeated the last 9000 of Tewodros men, losing only two British soldiers
Historian Harold Marcus observed in 1995,
“For a total cost of £ nine million, Napier set out to defeat a man who could muster only a few thousand troops and had long ago ceased to be Ethiopia’s leader in anything but title. Even so, Tewodros did not surrender, instead releasing European
Hostages one by one over the course of several days. When the British eventually reached the Emperor, they found him dead, having committed suicide with a pistol that had originally been a gift from Queen Victoria .
Xxxx
Sathnam Sanghera, author of book Empireland writes,
And when I think of everything that was taken by the British from Maharajah Ranjit Singh’s treasury, it is not the heaps of gold, jewellery, antiques, textiles, paintings and sculptures- even the Kohinoor diamond— that sting, but the rare religious artefacts, which were said to include Guru Gobind Singhs Kalgi, a jewel worn on the front of a turban, and relics of the Prophet Muhammad.
Xxx
DAVID CAMERON , PRIME MINISTER OF BRITAIN BETWEEN 2010 AND 2016
In September 2020, Oliver Dowden, the culture minister/ secretary, was revealed, in a leaked letter, to have warned museums and galleries to cease removing controversial artefacts or risk losing funding.
In short, things have moved on little since the days when, in response to claims made by Greece for the Elgin Marbles and by Nigeria for the Benin Bronzes, museums will simply state that repatriation was illegal under the 1963 British museum act or when David Cameron remarked in 2010 about India’s demand for the return of the Kohinoor diamond,
“If you say yes to one, you suddenly find the British museum would be empty. It is going to be stay put”.
A BBC investigation has found 99 percent of British museum collection was in storage in 2010. All museums are displaying only a small portion of their artefacts or paintings.
(Most the treasures looted by the British around the world are displayed in the British museum, Victoria and Albert Museum in London and Oxford museum/Bodleian library. And there are hundreds of museums around displaying millions of objects plundered by the British explorers and soldiers. Private collectors have another million artefacts. Auction houses help them openly and covertly.)
Xxx Subham xxxx
tags- Kohinoor, diamond, return, David Cameron, British Museum
இரண்டு பாடல்களில் கவிராயர் Adults Only ‘அடல்ட்ஸ் ஒன்லி’ விஷயம் பற்றிக் கதைக்கிறார். இது பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் படித்த நினைவு இல்லை; ஒருவேளை தமிழர்கள் மட்டுமே Specialise ‘ஸ்பெஷலைஸ்’ செய்த விஷயமாக இது இருக்கலாம்.
பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல்
தீமை; மற்றக் கிழமைகள் நலம்.
பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,
மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.
இப்படி அவர் சொன்னாலும் யாரும் இது சரியா, தவறா என்று ஆராய்ந்து புள்ளிவிவரம் சமர்ப்பிக்கவில்லை. அப்படி விவரம் கிடைக்கும் வரை இதை அதிகமாகப் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பது என் சொந்தக்கருத்து.
பிராமணரல்லாத ஜாதிகளில் பெண் (daughter) பிறந்த நேரத்தைவிட பூ ப்படையும் நேரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்து மதத்தில் எல்லாவற்றிலிருந்தும் விடுபட ஒரு சுறுக்கு வழி கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதாவது தவறான நேரத்தில் ஒன்று நடந்தால் அதன் தீய விளைவுகளைத் தவிர்க்க பரிகாரம் (atonement) என்று ஒன்று இருக்கிறது.
இப்படி ஐயருக்கு தட்சிணையோ அல்லது பொருள் தானமோ கொடுப்பதில் தெய்வீக பலன்கள் இருக்கிறதோ இல்லையோ, Psychological சைக்கலாஜிக்கல் — உள்ள இயல் ரீதியாக- பலன் உண்டு. கெட்ட கிழமைகள் என்று சொல்லப்பட்ட நாட்களில் பருவம் எய்திய பெண்களும் பயப்படமாட்டார்கள் அவர்கள் கவலை கொஞ்சமாவது அகலும்.
எடுத்துக் காட்டாக நான் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் BOOK ‘புக்’ செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். விமானம் புறப்படும் நேரமோ, அல்லது நான் வீட்டிலிருந்து டாக்சியில் ஏறும் நேரமோ, அல்லது ஒரு மணி நேரம் பயணம் செய்து ஏர்போர்ட்டுக்குள் நுழையும் நேரமோ அல்லது முதல் முதலில் ஒரு மாதத்துக்கு முன்னர் டிக்கெட் ‘புக்’ செய்த நேரமோ ஏதாவது ஒன்று ராகு காலம், எம கண்டம் நேரமாக இருக்கலாம். அல்லது புறப்படும் நாள் நல்லதாக இல்லாமல் இருக்கலாம். இதையெல்லாம் பார்த்தால் , எல்லாவற்றையும் பற்றிக் கவலைப்பட்டால் , பழைய கால கிராமீய வாழ்வு வாழ வேண்டியிருக்கும். ஒரு கிராமத்தை விட்டு அடுத்த ஊருக்குப்போக அந்தக் காலத்தில் இப்படி பார்த்திருப்பார்கள் போலும்.
Xxx
அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகம்
69. பூப்பு வாரம்
அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே –
அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு
களபமுலை மாதர் புட்பவதிஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் –
கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற
வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.
Xxxxxx
பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு,
மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்என்பது அடுத்த பாடலின் கருத்து அதாவது 12 லக்னப்படி பலன்.. மேலேயுள்ள பாடலுக்கு நான் சொன்ன கருத்து இதற்கும் பொருந்தும்
70. பூப்பு இலக்கினம்
வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்
மாறாது விபசா ரிஆம்;
வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்
வலிதினிற் பிறரை அணைவாள்;
சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்
சீர்பெறுவள் கன்னி யென்னில்;
செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்
தேளினுக் குத்; தனுசுஎனில்
நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;
நீள்மகரம் மான மிலளாம்;
நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ
நெடியபே ரறிவு டையளாம்;
அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்
அதுவென்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அருமை ……. தேவனே!, மேடத்தில் வறுமை தப்பாது வரும்
– மேடஇராசியில் (பூப்படைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும், இடபத்தில் மாறாது விபசாரி ஆம் – இடபராசியில் தவறாமல் தீய ஒழுக்கமுடையளாவள்,
மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் – மிதுனத்தில் வாழ்வும்
திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்து வந்த சடையப்ப முதலியார் பெரும் செல்வர். வந்தோருக்கெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வேண்டுவதைக் கொடுத்து வந்த வள்ளல். அவர் புகழ் சோழ நாடெங்கும் பரவி இருந்தது.
அப்போது புதிதாகப் பட்டம் ஏறிய சோழ ராஜன் சடையப்ப வள்ளலின் புகழைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். தன்னை ஏன் அவர் வந்து காணவில்லை என்று அவன் எண்ணினான். தனது அதிகாரத்தை வைத்து அவரது பொருளையெல்லாம் சோழன் கவர்ந்து கொண்டான்.
என்றாலும் கூட சடையப்பர் அவனை வந்து காணவில்லை.
அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வர்த்தகன் ஒருவன் சோழ தேசம் வந்தான். அவன் தன்னுடன் இழை ஆயிரம் பொன் பெற்ற விசேஷ பட்டாடை ஒன்றைக் கொண்டு வந்திருந்தான்.
அந்தப் பட்டாடையை சோழ மன்னனிடம் அவன் காட்டவே, அதைப் பார்த்து பிரமித்த சோழ மன்னன் அதன் விலையைக் கேட்டான்.
சீன வணிகனும் அதன் விலையைச் சொன்னான்.
விலையைக் கேட்ட சோழன் திகைத்து விட்டான்.
தன்னிடம் அவ்வளவு செல்வம் இல்லையே என்று எண்ணிய அவன் வணிகனிடம் அது வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
வணிகன் நேராக வெண்ணெய்நல்லூர் வந்தான். சடையப்பரிடம் பட்டாடையைக் காட்டினான்.
அதன் நேர்த்தியைக் கண்டு மகிழ்ந்த சடையப்பர் அந்தப் பட்டாடையை வாங்கிக் கொண்டார். தரித்துக் கொண்டார்.
இப்படி, தன்னால் வாங்க முடியாத பட்டாடையை சடையப்பர் வாங்கி அணிந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட சோழ மன்னன் பொறாமையால் மனம் புழுங்கினான். அவரைக் கூப்பிட்டனுப்பினான். ஆனால் அவரோ வரவில்லை.
கோபமுற்ற அவன், உடனடியாக சடையப்பரை தன்னை வந்து காணுமாறு ஆணையிட்டான்.
அவரும் வந்தார்.
“நாம் முன்பு கூப்பிட்ட போது நீர் ஏன் வரவில்லை” என்று கோபத்துடன் கேட்டான் சோழ மன்னன்.
“துடையில் சிலந்தி. ஆகவே தான் வர முடியவில்லை” என்று பதிலளித்தார் சடையப்பர். ஆனால் அதை அரசன் நம்பவில்லை.
இதைப் புரிந்து கொண்டார் சடையப்பர்.
உடனே, தான் அணிந்திருந்த பட்டாடையைக் கீறிக் கிழித்து தன் துடைப்பக்கத்த்தில் சிலந்தியைக் காட்டிய சடையப்பர், “இதனால் தான் வர முடியவில்லை” என்றார்.
செல்வத்தையெல்லாம் சிறுகச் சிறுகப் பறித்து சடையப்பரை வறுமை நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போதிலும், அவர் விலை உயர்ந்த இந்தப் பட்டாடையை வாங்கியதை எண்ணிய சோழன் அதையும் கூட கொஞ்சமும் லக்ஷியம் செய்யாமல் கிழித்து விட்டு தனக்கு துடைப் புண்ணைக் காட்டியதைக் கண்டு வியந்து போனான்.
இப்படிப்பட்ட செய்கையை ஒரு தெய்வீகப் பிரபுவினால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணிய அவன் சடையப்பரை வெகுவாக மதித்து, அவரைத் தானே சென்று காண்பது தான் முறை என்று தேறினான்.
அவரை நன்கு உபசரித்து அனுப்பினான்.
இந்த வரலாறு பெரிதும் பேசப்பட்டது. இதை தொண்டைமண்டல சதகம் தனது 51வது பாடலில் புகழ்ந்து கூறுகிறது.
பாடல் இதோ:
தெள்ளந்தெளிந்தவர் செய்தக்கதோர்முறை செய்யிலையா
எள்ளத்தனை மலையத்தனையாமென்ப தின்றறிந்தோ
முள்ளற்கரிய துடையாடைகீறிய தொன்றுமொரு
வள்ளற்றகைமையோ டொத்துளதாற்றொண்டை மண்டலமே
பொருள் : நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையோர் தாம் செய்யத் தகுந்த செயல்களில் ஒன்றை அவ்வளவாக நிரம்பச் செய்யாமல் ஒரு வகையாகச் சிறிது செய்தாலும் கூட, அது எள்ளத்தனை சிறியதாக இருந்தாலும் கூட, பிறருக்கு அது மலையத்தனை அளவு பெரிதாகும் என்று சொல்வதற்கு உதாரணமாக வெண்ணெய்நல்லூர் சடையப்ப முதலியார் அரசன் சமூகத்தின் முன் தனது துடை ஆடையைக் கிழித்த சிறு செயலினாலேயே கண்டோம். எவ்வாறெனில் அவர் செய்த அந்த சிறு செயலானது அரசனுக்கு பிரமிக்கத் தக்க பெரும் செயலாக இருந்தது. இத்தகைய வேளாண் குடிமையரைக் கொண்டது தொண்டை மண்டலமே.
மனு நீதி நூலை எரிக்கலாமா? புதைக்கலாமா ? என்று ஒரு பட்டிமன் றம் நடந்தது. அதற்கு நான்தான் நடுவர். எல்லோரும் காரசாரமாக விவாதித்தனர். எல்லோரும் பெண்களைப் பாராட்டும் 4 ஸ்லோககங்களில் ஒற்றை மட்டும் காட்டிவிட்டு மற்ற மூன்றையும் மறைத்துப் பேசினார்கள் . பிராமணாள், சூத்திராள் என்ற 40 ஸ்லோகங்களைக் கதைத்து விட்டு இப்போதே எரிப்போம் ; புதைப்போம் என்றனர் . மனு நீதியில் எவ்வளவு ஸ்லோகங்கள் என்று நான் கேட்டேன் விடை தெரியாமல் எல்லோரும் பேந்தப் பேந்த முழித்தனர் . அவர் சூத்திராள் , பிராமணாள் தவிர வேறு என்ன விஷ்யங்களைக் கதைக்கிறார் என்றேன். அதற்கும் பதில் இல்லை. பிராமணர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்ன சொல்கிறார் என்றேன் அதுவும் தெரியவில்லை.
ஏதேனும் அவர் நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரா என்றேன் அவர் அப்படிச் சொல்லக்கூடியவர் இல்லை; ஆகையால் இருக்கவே முடியாது என்றனர்.
நான் சொன்னேன் 40 ஸ்லோககங்களைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை . மேலும் அதைப் பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்ல ப்பட்டார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஆகையால் படித்துவிட்டு மனு நீதியைப்பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரத்தோடு வாருங்கள் என்றேன் . ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்கள் . ((இது எல்லாம் என்னுடைய கனவில் நடந்தது. உடனே நானும் மனு நீதி நூலை முழுக்கப் படித்துவிட்டு இரண்டு புஸ்தகங்கள் எழுதினேன்)).
கீழேயுள்ள இரண்டு புஸ்தகங்களைப் படித்துவிட்டு நீங்களும் அடுத்த பட்டிமன்றத்துக்கு வாருங்கள். மனு ஸ்ம்ருதியை எரிக்கலாமா புதைக்கலாமா என்று முடிவு செய்வோம். எனக்குத் தெரிந்து, மனு நீதி நூலைப் பின்பற்றிய ஒரே ஆள் மனு நீதிச் சோழன்தான். அவருக்கோ நாம் சென்னை ஹை கோர்ட்டிலும் திருவாரூரிலும் சிலை வைத்து ‘ஜே’ போட்டுக்கொண்டு இருக்கிறோம்..
இதோ என்னுடைய இரண்டு தமிழ் நூல்கள்; இவை விரைவில் ஆங்கிலத்திலும் வரும். மனு நீதி வேண்டும் என்று நான் எழுதவில்லை. அதில் என்ன இருக்கிறது என்று விமர்சனம் மட்டுமே செய்துள்ளேன்.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.
(எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் நைசாக , நாசூக்காக என் சுய சரிதையையும் கொடுத்துள்ளேன் ; அடைப்புக்குறிக்குள் நான் நுழைத்திருக்கும் விஷயங்களை படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம்)
xxxx
அறப்பளீசுர சதகம் இயற்றிய அம்பலவாணக் கவிராயர் , புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் புதல்வர் ஆவார். அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் . அவர் சொல்லும் புராண நிகழ்ச்சிகளின் காலம் (மாதங்கள்) இதுவரை பாரும் அறியாத விஷயம் ஆகும். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தைமாதங்களில் புது வீட்டுக்குக் குடிபோகலாம் என்று செப்புகிறார்.
Xxxx
அடுத்த பாடலில் விருந்து உண்ணவும் செய்யவும்ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்றவை நலமானவை என்கிறார்.
நான் பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் இந்த விஷயத்தை அறியேன். குடிபோகக்கூடாத மாதங்கள் தெரியும். ஆனால் அதற்குப் புலவர் சொல்லும் கரணங்கள் எனக்குப் புதுமையானவை..
xxxx
என் சுய சரிதை
((ஒரு முறை ஒரு இலங்கைத் தமிழ் டாக்டர் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்திக்க விரும்பினார். நான் ஒவ்வொரு நாளாகச் சொல்ல அவர் அந்த நாட்களில் வேலை இருக்கிறதே என்று தட்டிக்கொண்டே வந்தார். அதற்கென்ன வியாக்கிழமை வாருங்கள் என்றேன். அவர் பதறிப்போய், “முடியவே முடியாது; எந்தக் கிழமை போனாலும் நாங்கள் வியாழக்கிழமை முதல் சந்திப்பை வைக்க மாட்டோம்” என்றார். அப்போதுதான் எனக்கு வியாக்கிழமை பற்றித் தெரிந்தது. பொதுவாகப்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று பலரும் பாராட்டுவார்கள். மனித குலம் முழுதும் இப்படி எவ்வளவோ வினோதமான நம்பிக்கைகள்! மேலை நாடுகளில் 13-ம் ஆம் எண் அறை கிடையாது . 666 என்ற எண் பேயின் எண் என்பார்கள்.
xxxx
நான் லண்டனில் உலக இந்து மஹாசங்கத்தின் செயலாளர்.
ஒரு நிகழ்ச்சிக்கு நான் தயாரித்த இந்து மஹா சங்க அழைப்பிதழில் பார்டர் border முழுதும் ஸ்வஸ்திகா Swastika Symbol சின்னம் போட்டு அலங்கரித்து இருந்தேன். மேற்கூறிய டாக்டர் எனக்கு போன் செய்து அவருடைய வெள்ளைக்கார (டாக்டர்) நண்பர்கள் அந்த அழைப்பிதழைப் பார்த்து அதிர்ச்சியுற்றதாகவும், அது பயங்கரமான சின்னம் என்றும் கூறினார்.
ஆரியன் என்ற சொல்லையும், ஸ்வஸ்திகாவையும் ஹிட்லர் (Hitler) பயன்படுத்தியதால் வந்த வம்பு அது. நான் சொன்னேன் ; இந்துக்களுக்கு அது மிகவும் புனிதமான சின்னம். இந்தியன் எக்ஸ்பிரஸ் குரூப் பத்திரிக்கைகளின் அதிபர் ராம்நாத் கோயங்காவின் குடும்ப கல்யாண அழைப்பிதழ் எங்கள் வீட்டுக்கு வந்தபோது அதில் பெரிய ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது என்று குறிப்பிட்டேன். இந்தியாவில் வடக்கத்தியர் வீடுகளிலும் கடைகளிலும் ஸ்வஸ்திகா சின்னம் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் .
கார்த்திகை நட்சத்திரம், செவ்வாய்க் கிழமைகளில் எங்கள் குடும்பத்தினர் எந்த புது விஷயங்களையும் செய்ய மாட்டோம்.
இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் நுழைந்ததும் கார்த்திகை நட்சத்திரத்தன்றுதான். அது எனக்குத் தெரியாது. காஞ்சி சங்கராசார்யார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , “அடாடா ! கார்த்திகை நட்சத்திரத்தன்று போகிறார்களே” என்று வருத்தப்பட்டதாக பின்னர் ஒருவர் கூறினார்.
அவரவர் நம்பிக்கை, அனுபவத்தின் பேரிலும், காலாகாலமாக இருந்துவரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் எழுகின்றன தமிழ் சம்ஸ்க்ருத இலக்கி யம் முழுவதிலும் தும்மல், கண்துடிப்பு (Sneezing, Eye Twitching) பற்றி ஒரே மாதிரியான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் மேலை நாட்டில் அப்படி இல்லை.
இதே போல, அம்பலவாணர், சில விஷயங்களுக்குக் காரணம் சொல்கிறார். சில விஷயங்களுக்கு சொல்லுவதில்லை.
திருமூலரும் சம்ஸ்க்ருத நூல்களும் பயணம் செய்யக்கூடாத திசைகளை வார சூலை என்று குறிப்பிட்டுள்ளனர்.. எதையும் பின்பற்றுவதும் புறக்கணிப்பதும் அவரவர் இஷ்டம்.
Xxxx
எனக்கு அடிக்கடி போன் செய்து பல்வேறு விஷயங்களைக் கதைக்கும் ஐயங்கார் இளைஞன், ஒரு நாள் போன் செய்து நாம் எல்லோரும் X Y Z செய்கிறோமே; என் நண்பன் சொல்கிறான் ; அப்படிச்செய்தால் நாம் பிராமணர் இல்லையாமே என்றான்.
எனக்கு ஒரே சிரிப்பு !
நான் கேட்டேன்- உன் நண்பரும் அவரது மனைவியும் லண்டனில் இருக்கிறார்களா ? என்று
ஆமாம், ஆமாம் இங்கேதான் இருக்கிறார்கள் என்றார். நாளைக் காலையில் இரண்டு பேரும் இந்தியாவுக்கு டிக்கெட் வாங்கிச் செல்ல வேண்டும் என்று ஒரு பெரிய பிராமண அறிஞர் சொன்னார் என்று சொல் என்றேன்.
அவர் பதறிப்போய் What? What? வாட், வாட், என்றார் .
திருப்பியும் அதையே அழுத்தம் திருத்தமாக சொல்லி , பிராமணர்கள் கடல்கடந்து போகக்கூடாது என்று மனு நீதி நூல் சொல்கிறது. பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று தொல்காப்பியம் சொல்கிறது. அவர் சாஸ்திர விதிகளில் நம்பிக்கை உடையவர் என்பதால் நாளைக் காலையே இந்தியாவுக்குப் போக வேண்டும் என்றேன். அவர் நைஸாக பேச்சை வேறு திசைக்குத் திருப்பினார். நானும் விட்டுவிட்டேன் .ஆக வேண்டுமென்றால் சாஸ்திரம்; வேண்டாமென்றால் அது தெரியாது போல நடிப்பது என்பது பலருக்கும் வாடிக்கை ஆகிவிட்டது
இன்னும் இரண்டு சுவையான விஷயங்களை பின்னர் எழுதுகிறேன்
என்னுடைய பிராமண உறவினர் லண்டனில் சனிக்கிழமை காலை உண்ணாவிரதம் முடிந்து மலையில் என்னுடன் சுற்றிப்பார்க்க வந்தபோது மக் டொனால்டில் (Chicken in Mc Donald) சிக்கன் ஆர்ட்டர் கொடுத்தார் ; அதற்குப்பின்னர் என்ன நடந்தது என்பதை பின்னர் எழுதுகிறேன் !
மற்றோரு சம்பவம் மதுரையில் செளராஷ்டிர பிராமணன் மாமிசம் சாப்பிட்ட கதை. என் தம்பியிடம் அந்தப் பையன் சொன்னான் : நாங்களும் ஐயர் Iyer தான் ; எங்க அப்பா ஒரு டையர் Dyer (சாயம் ஏற்றும் தொழிலாளி) ஆனால் நாங்கள் கறி (மாமிசம்) மட்டும் சாப்பிடுவோம் என்று சொல்ல , என் தம்பி அதை வீட்டில் வந்து சொல்ல , அன்று முழுதும் ஒரே தமாஷ்தான் ; பின்னர் விரிவாகக் காண்போம்.))
திங்கள்தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு – சித்திரைத்
திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் –
சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா – முற்காலத்தில் ஆனித்திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது,
வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல –
வெற்றியைக்கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள்
சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் – ஆவணித்திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது – புரட்டாசித்திங்கள் இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு –
ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைக்கு உத்தமம் –
தனிப்பாடல் திரட்டிலிருந்து ஒளவையாருக்குப் பிடித்த உணவு வகைகள் என்ன என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது . அவருக்குக் கத்தரிக்காய் கறி மிகவும் பிடிக்கும். அவர் பாடிய தெய்வீகப் பாடல்களிலிருந்து அவர் சுத்த சைவம் – வெஜிட்டேரியன் Vegetarian — என்ற தகவலும் கிடைக்கிறது. அவ்வை என்ற சொல்லிலேயே வயதான மூதாட்டி , இறைவனை நாடும் மாது , திருமணமாகாத பெண் அல்லது கணவனை இழந்த பெண் என்ற பொருள் எல்லாம் வந்து விடுகிறது. தமிழ் நாட்டில் சங்க காலம் முதல் சமீப காலம் அவரை ஆறு ஒளவையார்கள் இருந்ததாக ஒரு புஸ்தகமும் வெளியாகி இருக்கிறது.
“ஒள” என்ற எழுத்தில் துவங்கும் சொல் திருக்குறளிலோ அதற்கு முந்திய சங்க இலக்கியத்தின் 18 நூல்களிலோ கிடையாது . தொல்காப்பியர் , “ஒள” என்ற எழுத்தை மட்டும் குறிப்பிடுகிறார் .
ஆகையால் ஒளவையார் என்றும் எழுதலாம் அவ்வையார் என்றும் எழுதலாம் .
XXX
இனி உணவு வகைகளுக்கு வருவோம்
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்- திரமுடனே
புல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”
புல் வேளூர்ப் பூதன் என்பவன் போட்ட சாப்பாட்டைப் புகழ்ந்து அவ்வையார் பாடிய பாடல் இது .
பூதன் என்பவன் பரிமாறிய வரகரிசிச் சாதம், கத்தரிக்காய் வதக்கல், நுரை பொங்கும் புளித்த மோர் ஆகியனவை மிகவும் சுவையாக இருந்தன . அதை அவன் அன்போடு உபசரித்து படைத்தான். இதற்கு உலகம் முழுவதையும் அவனுக்குக் கொடுத்தாலும் போதாது. அவ்வளவு சுவையானது என்கிறார்.
சாப்பாட்டுப் பட்டியலைப் பார்த்தால் அது ஒரு ஏழை வீட்டுச் சாப்பாடு என்று தெரிகிறது. ஆயினும் பரிவுடன் இட்டதால் அதன் சுவை ஆயிரம் மடங்கு பெருகிவிடுகிறது .
Xxx
அவர் பாடியதாகக் காணப்படும் இன்னொரு தனிப்பாடலும் ,சோற்றின் சுவையை விட அதைப் பரிமாறுவோரின் அன்புதான் முக்கியம் என்று காட்டுகிறது .
(இந்தப்பாடல் 1960ம் ஆண்டுகளில் வெளியான இரண்டு தனிப்பாடல் நூல்களில் இல்லை. ஆனால் 1897-ம் ஆண்டு நூலில் இருக்கிறது .என்னிடம் லண்டனில் மூன்று தனிப்பாடல் நூல்கள் உள்ளன. ஒன்று மிகப்பழைய நூல் ;சந்தி பிரிக்காமல் எழுதப்பட்ட, பழுப்பு நிறம் கண்ட, தூள் தூளாக உடையும் நூல் ; வெளியான ஆண்டு 1897. இராமநாதபுரம் ஸமஸ்தானம் மகாராஜ ஸ்ரீ பொன்னுசாமித்தேவர் அவர்கள் அனுமதியினால், முன்பதிப்பித்த பல பிரதிகளைக்கொண்டும், இன்னும் சில பாடல்களும் நூதனமாக சேர்த்து ,சரவணபுரம் முதலியாரவர்களால் பார்வையிடப் பட்டு, பு. ஏ. இராகவப்பிள்ளை அவர்களது விவேக விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது; 1897 வரு.(க்ஷம்)..
xxxx
கீழ்கண்ட இரண்டு நூல்களில் இல்லை
அதற்குப் பின்னர் 1960ம் ஆண்டு நூல். அது கலைச்செல்வி தொகுத்தது ; அகிலன் எழுதிய முன்னுரையுடன் கூடியது. வெளியீடு — மீனாட்சி பதிப்பகம், கீழ இராச வீதி, புதுக்கோட்டை , ஆண்டு 1960
இரண்டாவது புஸ்தகம் :தமிழ் தந்த கவியமுதம் — கு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம் , சென்னை-14, ஆண்டு 1962.
xxxx
கடை எழு வள்ளல்களில் ஒருவர் முல்லைக்குத் தேரீந்த பாரி . அவருக்கு சங்கவை அங்கவை என்று இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் படைத்த உணவு என்று சிலரும் ‘இல்லை, இல்லை’ அதே பெயரில் வாழ்ந்த இடையன் பாரியும் அவனது மகள்கள் இருவரும் போட்ட உணவு என்று பலரும் கற்பனைக்கு ஏற்றபடி எழுதுவார்கள். ஆயினும் பாடலின் பொருள்தான் நமக்கு முக்கியம்
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்து – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ்
செறியாதோ கைக்கு.
பழைய நூல்களில் உள்ள கருத்து:-
அவ்வையார் மழையில் நனைந்து போய், மிகவும் நடுங்கிக்கொண்டே வந்தார். அவரைக் கண்ட பாரி என்ற இடையன் அவரைக் குடிசைக்கு அழைத்துச் சென்றான் . அவர்கள் கருப்பு நிற சிற்றாடையை அவருக்குப் போர்த்திக்கொள்ள கொடுத்தனர்; குளிர் காய நெருப்பு மூட்டினர்.முருங்கைக் கீரையை நெய்விட்டுச் சமைத்து கேழ்வரகுக் களியுடன் இலையில் இட்டனர் ; அதுமட்டுமா ‘போதும் போதும்’ என்று மன்றாடும் அளவுக்கு பரி மாறிக்கொண்டே இருந்தனர். அதுதான் இந்திர லோக அமுதம் .
கடைசி வரிக்கு இரண்டு பொருள் உண்டு. சிறிது எழுத்துக்களை மாற்றினால் (கடகஞ் செறியாதோ கைக்கு) (கடகம்) வளையல் அணிந்த கைகளென்பதை அந்தக் கைகளுக்கு தங்க வளையல் போட வேண்டும் (கடகஞ் செறியாதோ கைக்கு) ; அவ்வளவு தகுதி உண்டு என்றும் கொள்ளலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பாடலின் பொருளுக்குத் திரும்பினோமானால், எளிய கிராமீய சத்துணவு, அன்புடன் பரிமாறப்பட்டது ‘போதும் போதும்’ என்று சொல்லுமளவுக்கு படைக்கப்பட்டது என்பது தெளிவாகும்.
ஸ்வாமி விவேகானந்தர் இமயமலையில் நடைப்பயணமாக வெகு தூரம் நடந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒரு வயதான மனிதர் ஸ்வாமிஜியைப் பார்த்தார்.
‘ஓ ஸ்வாமிஜி! நான் நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டேன்.
இந்த மலைப் பாதையில் பாதி தூரம் வந்து விட்டேன்.
இனி மீதி தூரத்தை எப்படி ஏறிக் கடப்பது?” என்று அவர் ஸ்வாமிஜியைக் கேட்டார்.
ஸ்வாமிஜி புன்சிரிப்புடன் அவரைப் பார்த்தார், பேசலானார்: “ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்கள் காலடிக்குக் கீழே பாருங்கள். நீங்கள் கடந்து வந்த பாதை தெரிகிறதா? இதை இவ்வளவு தூரம் கடந்தது யார்? நீங்களே தான்! இதே சாலை தான் உங்கள் முன் இருக்கிறது. இதுவரை எப்படி நீங்களே இதைக் கடந்து வந்து சாதித்தீர்களோ அதை இன்னும் உங்களால் செய்ய முடியுமே! நடந்து முன்னேறுங்கள். வெற்றி தான்!”
என்றார்.
ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற அவர் புத்துணர்ச்சி பெற்று அவரை வணங்கி விட்டு மலை மீது ஏறலானார்.
2
ஸ்வாமிஜி ஒரு முறை மேலை நாட்டில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் அதே பெட்டியில் அவருக்கு எதிரில் இருவர் உட்கார்ந்திருந்தனர். அவரது உடையைப் பார்த்த அந்த இருவரும் அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஒருவன் தனது நண்பனைப் பார்த்துச் சொன்னான்: “ இந்த ஆளைப் பார்! இவரை ‘ஃபூல்’ என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
அதற்கு அவனது நண்பன் பதில் சொன்னான்; “இல்லை இல்லை, நீ சொல்வது தப்பு. இவர் ஒரு இடியட். அது தான் சரியாக இருக்கும்.”
இருவரும் மாறி மாறித் தான் சொல்வதே சரி என்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இப்படிப்பட்ட காவி உடை அணிந்த ஒருவருக்கு ஆங்கிலமே தெரியாது என்ற எண்ணம்.
நடுவில் டிக்கட் பரிசோதகர் வந்த போது ஸ்வாமிஜி, “எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டுமே? எங்கே கிடைக்கும்?” என்று தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் கேட்டார்.
அவரும் தக்க பதிலைச் சொல்லி விட்டு அகன்றார்.
இவரது பேச்சைக் கேட்ட எதிரிலிருந்த இருவரும் அசந்து போனார்கள்.
பிரமிப்புடன். “என்ன உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? நாங்கள் இவ்வளவு நேரம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே தானே இருந்தீர்கள்?” என்று கூறினர்.
ஸ்வாமிஜி புன்முறுவல் பூத்தார்.
பிறகு அவர்கள் வியப்புடன், “ நீங்கள் யார்?” என்று கேட்டனர்.
ஸ்வாமிஜி அவர்கள் இருவரையும் தன் பக்கத்தில் தன் தோளுக்கு அருகே இழுத்துக் கொண்டார். நடுவில் ஸ்வாமிஜி இருக்க ஆளுக்கு ஒரு பக்கமாக அவர்கள் இருந்தனர்.
“ஓ! நான் யார் என்றா கேட்கிறீர்கள்! நான் ஃபூலுக்கும் இடியட்டுக்கும் நடுவில் இருப்பவன்” என்றார்.
அவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.
3
ஸ்வாமிஜி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
நரேந்திரன் (பின்னால் விவேகானந்தர் என்ற பெயரைப் பெற்ற ஸ்வாமிஜி) தன் நண்பர்களிடம் ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் கதை சொன்ன விதம் நண்பர்களை ஈர்த்தது. பாடத்தை யாரும் கவனிக்கவில்லை. கதையையே கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆசிரியர் யாரோ முணுமுணுத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்.
“யார் அங்கே பேசுவது?” என்று கேட்டார். பதிலே வரவில்லை.
முணுமுணுப்பு சப்தம் வந்த இடத்தை நோக்கிய அவர் அங்கிருந்தவர்களிடம், “இது வரை நான் என்ன நடத்திக் கொண்டிருந்தேன் சொல்லுங்கள்” என்றார்.
யாரும் ஒன்றும் பேசவில்லை.
நரேந்திரன் மட்டும் அவர் நடத்திய பாடத்தைச் சொன்னார்.
தான் நடத்திய பாடத்திலிருந்து ஆசிரியர் கேள்விகள் கேட்கவே அனைத்திற்கும் அவர் பதிலைச் சொன்னார்.
ஆசிரியர் வியந்து போனார்.
அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் பெஞ்சின் மீது நிற்கச் சொன்னார். அனைவரும் ஏறி நின்றனர்.
விவேகானந்தர் தானும் ஏறி நின்றார்.
“நீ ஏற வேண்டாம். இறங்கு” என்றார் ஆசிரியர்.
“ஸார்! நான் தான் இவ்வளவு நேரம் பேசியது. அவர்கள் கேட்கத் தான் செய்தனர். நான் தான் பெஞ்சின் மீது நிற்க வேண்டும்” என்றார் நரேந்திரன்.
அனைவரும் வியந்தனர்.
ஒரே சமயத்தில் பல விஷயங்களைக் கவனிக்கும் அவதான சக்தியை அவர் அப்போதே கொண்டிருந்தார்.
அது அனைவரையும் வியக்க வைத்தது!
இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்கள் ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் உண்டு.