அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2 (Post No.10,907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,907

Date uploaded in London – –    29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2

இது இரண்டாம் பகுதி ; நேற்று, முதல் பகுதியில்,  ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலுள்ள ஆறு மந்திரங்களைக் கண்டோம். அதில் அகஸ்தியர் பேச்சில் பட்டவர்த்தனமாக SEX செக்ஸ் பற்றிப் பேசியதால் கிரிப்பித் R T GRIFFITH அதை மொழி பெயர்க்க மறுத்தார். லத்தீன் மொழியில் அவர் கொடுத்த அகஸ்தியர் பேச்சின் ஆங்கில வடிவத்தை நான் அளித்தேன். அரைவேக்காடுகளைக் கண்டு வேதம் பயப்படுவதால் அது மர்ம மொழியில் பேசுவது பற்றியும் வேதத்தை விளங்கிக் கொள்ள,  புராண  இதிஹாசங்களைப் பயில வேண்டும் என்று சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகத்தையும் நேற்று சொன்னேன்.

XXXX

ரிக்வேதம் 1-179

முதல் மந்திரத்தில் லோபா முத்திரை சொன்னாள் —

“சுவாமி! நாதா! எத்தனை காலம் உருண்டோடிப் போய்விட்டது; அல்லும் பகலும் உமக்கு சேவை செய்துவிட்டேன்.இப்போது களைத்தும் இளைத்தும் போய்விட்டேனே . என் மேனி அழகெல்லாம் பாழாய்ப் போய்விட்டதே ; சமுதாயத்தில் தர்மம் என்று ஒன்று உளதே ; பிள்ளை பெறுவதற்காக,  ஒரு பெண், கணவனைக் கட்டிக்கொள்ளலாம் அல்லவா?

XXX

இரண்டாம் மந்திரம்

எல்லா முனிவர்களும் சத்தியத்தையே நாடுகின்றனர்; உண்மையையே விளம்புகின்றனர்; தவம் செய்து, வாழ் க்கையின் இறுதி லட்சியத்தை (மோக்ஷம்) நெருங்குகின்றனர்; ஆகையால் காலத்தை வீணடிக்காமல் கணவனும் மனைவியும் இணைய வேண்டும் அல்லவா ?

XXX

அகஸ்தியர் பதில்- மூன்றாம் மந்திரம்

அன்பே ! ஆருயிரே ! நாங்கள் ஏதோ வெட்டிப் பொழுது போக்க தவம் செய்கிறோம் என்று எண்ணாதே; இதனால் இறைவன் நம்மை எப்போதும் காக்கிறார்; அதுமட்டுமல்ல தவம் மூலம் நமக்கு செல்வம் கிடைக்கிறது;  நூறு போர்கள் வந்தாலும் ஜெயிப்போம்; ஒன்றாகச் செயல்படுவோம்.

XXX

நாலாவது மந்திரம் – அகஸ்தியர் பேசுகிறார்:-

லோபாமுத்ரா! தவம் மட்டுமே செய்துவந்த என் மனதில் இப்போது காமம் நுழைந்துவிட்டது. எங்கிருந்து வந்ததோ எனக்கே தெரியவில்லை ; துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த லோபாமுத்ரா வீரியம் மிக்க அகஸ்தியர் மீது பாய்ந்தாள் ; கட்டி அணைத்து முத்தம் இட்டு ஆழ்ந்த மூச்சு விட்டாள்.

(இப்படித் திடீரென்று கணவனும் மனைவியும் கட்டிப்புரண்டதை ஒரு சிஷ்யன் பார்த்துவிட்டான்; அவன் அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுவிட்டதால் எட்டிப் பார்த்தான் ;  உடனே கடவுளிடம் மன்னிப்பும் கேட்டான் )

XXX

ஐந்தாவது மந்திரம் – சீடன் சொன்னது

ஒருவழியாக நான் உண்மையைச் சொல்கிறேன் ; சோமதேவனே ; செய்ததை ஒப்புக்கொள்கிறேன் சோம தேவனே கருணை காட்டு; மனிதனுக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கத்தானே செய்யும்?

XXX

ஆறாவது மந்திரம்

(என் குரு ) குழந்தையைப் பெறுவதற்காக பூமியை ஆழமாகத் தோண்டுவது போல வேலை செய்து கொண்டு இருக்கிறார் ; அவர் பலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார் போலும்; அவர் கடவுளுக்கும் மனிதனுக்கும்  உணவு அளிக்கும் சக்தி  உடையவர் ; இறைவனின் ஆசி அவருக்குக்

கிடைத்துவிட்டது

இவைதான் ரிக்வேத துதியில் உள்ள ஆறு மந்திரங்கள்; நேற்று நான் எழுதியது GRIFFITH AND WILSON கிரிப்பித், வில்சன் ஆகியோரின் மொழி பெயர்ப்பு. இன்று மேலே தந்திருப்பது அஸ்ஸாம் சம்ஸ்க்ருத அறிஞர் தானேஸ்வர் சர்மாவின் மொழிபெயர்ப்பு.

XXX

இதோ சுவையான மஹாபாரதக் கதை:–

இது 18 பர்வங்களைக் கொண்ட மஹாபாரதத்தில் மூன்றாவது பர்வமான ஆரண்ய/ வன  பர்வத்தில் உள்ளது.

தவம் செய்து, ,பழுத்த பழமாக,ப் போன அகஸ்தியர் ஒருநாள் ஜாலியாக WALKING வாக்கிங் போனார். ஒரு பெரிய பள்ளத்திலிருந்து ஒரே கூச்சல்; எட்டிப் பார்த்தார்; அவருடைய தாத்தா, கொள்ளுத்  தாத்தா,பாட்டன், பூட்டன் எல்லோரும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அடக்கடவுளே ! உங்களுக்கு  எல்லாம் என்ன ஆயிற்று? என்றார்.

அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் எல்லோரும் ‘புத்’ (PUTH) என்னும் நரகத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீள உமக்கு ஒரு புதல்வன் பிறக்கவேண்டும். அல்லது எங்களுக்கு விடுதலை இல்லை என்றார்கள்.

அகஸ்தியர் உடனே விரைந்தார்; கல்யாணம் கட்ட ஆசை; ஆனால் உலக மஹா அழகி வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை உணர்ந்த தேவர்கள், அவருடைய தவத்தை மெச்சி, உலக மஹா அழகி களின் சிறந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து பூலோகத்துக்கு அனுப்பினார்கள். அவள் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாக லோபா முத்ரா என்னும் பெண் பிள்ளையாகப் பிறந்தார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தாள் ; வளர்ந்தாள் ; அகஸ்தியர் தான்  எதிர்பார்த்த MISS WORLD மிஸ் வோர்ல்ட் விதர்பாவில் இருப்பதை அறிந்து விரைந்தார்.

“மன்னர் மன்னவா ! உமது மகளை எனக்குக் கல்யாணம் செய்து வை என்றார்; இது என்னடா, சோதனை ; உலக மஹா குள்ள முனிவன் வந்து என் மகள் பேரழகி, ராஜ குமாரியைக் கைப்பிடிக்க ஆசைப்படுகிறாரே ; என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றார். அந்தக் காலத்தில் சாமியார்கள் தாம் செய்த தவ வலிமையால்  சேமித்து வைத்த விந்துவை (SPERM) வீணடிக்காமல் யாராவது ஒருவருக்குக் கொடுத்து பிள்ளையை உண்டாக்குவார்கள் ; இந்த செயற்கை முறை TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி பற்றிச் சொன்னால், பாமர மக்களுக்குப் புரியாது என்பதற்காக “இலையில் விந்து விழுந்தது; அது கர்ப்பமாயிற்று —என்றெல்லாம்” மறைமுக மொழியில் கதைப்பார்கள்; உண்மை என்ன வென்றால் அவர்கள் SEX செக்ஸ் இன்பத்துக்காக ஒரு பெண்ணை அணுகவில்லை ; அதி சக்தி வாய்ந்த விந்து SPERM வீணாக்கக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள்; இதை காளிதாசனும் உறுதி செய்கிறான் ரகு வம்ச அரசர்களின் சிறப்புகள் என்ன என்ன என்று வரிசையாகப் பட்டியல் இடுகையில் செக்ஸுக்காக இல்லாமல் வம்ச விருத்திக்காக, குலக்கொடி தழைப்பதற்காக, பிள்ளை பெறுவோர் ராமனின் முன்னோர் (ரகுவம்சம்) என்று பாடுகிறார். பிள்ளை பெற்றால்தான் விடுதலை என்பதை மனுவும் விளக்குகிறார். “புத்” என்னும் நரகத்தில் விழாமல் “த்ர” = காப்பாற்றுவதால் ஆண்பிள்ளைக்கு “புத்ர” என்று பெயர் வந்தது  என்கிறார் மநு . இது புறநானூற்றிலும் உளது.

கோப்பெருஞ் சோழன் வட திசை நோக்கி அமர்ந்து   சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்தார்; அப்போது பொத்தியார் என்ற புலவர் வந்து நானும் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் .

“சீ, சீ; வீட்டுக்குப் போ; இப்பதான் கல்யாணம் கட்டின; பிள்ளை பெறாமல் சாகக் கூடாது ; “புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா|” என்று பொத்தியாரைத் திருப்பி அனுப்புகிறான் சோழ மன்னன் (காண்க புறம் 222)

புத்ர= புதல்வ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சோழன் பயன்படுத்தியது அகஸ்தியர் கதையை உறுதி செய்கிறது

xxx

அகஸ்த்யர் கதைக்குத் திரும்பி வருவோம்

உலக மஹா அழகியை உலக மஹா குட்டையன் SHORTEST MAN விரும்பிய செய்தி விதர்ப்ப நாட்டு ராணியின் காதில் விழுந்தது; அவளும் திகைத்தாள்; முனிவரின் சாபம் வந்தால் குலம் வேரறுந்து போகும். முனிவரிடம் அழகியை ஒப்படைத்தாலோ நல்ல பிள்ளை கிடைக்கும் ; அம்மாவும் அப்பாவும் தவியாய்த் தவிப்பதை பார்த்தாள் பொன்னழகி, பெண்ணரசி லோபா.

((எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் அவன் அமிதாப் பச்சன் போல இருக்கவும் வேண்டும்; அம்பானி , அதானி போல பணமும் இருக்கனும்; என்னை சமைக்கவும் சொல்லக்கூடாது; சரவண பவன் சாப்பாடு  தினமும் வேண்டும்; வார இறுதியில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை விடுதிகளில் பிரண்ட்ஸ் FRIENDSகளுடன் ஜாலியாக இருந்துட்டு வருவேன்; முகம் சுழிக்கக் கூடாது; ஏதோ ஒரு நாள் வேணா. படுக்கை அறைக்குள். வரலாம்; மத்த நாள் எல்லாம் எனக்குத் ‘தலை வலி’ன்னு சொல்லுவேன்; புரிஞ்ச்சுக்கிட்டு படுக்கை அறைக்குள் வராமல் நீங்க தனியா ப்படுங்க; மேலும் உங்க அம்மா அப்பாவ கூட்டி வச்சு EXTRA LUGGAGE எக்ஸ்டரா லக்கேஜ் ஏற்றக்கூடாது – என்றெல்லாம் கண்டிஷன் போடாம))

, லோபா முத்ரா சொன்னாள் :- அம்மா ஒரு கவலையும் படாதே ; நான் அகஸ்தியரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நின்று போன மூச்சு திரும்பி வந்தது ; கல்யாண மேளம் கொட்டியது டும்……. டும் ……

இதெல்லாம் ரிக் வேதத்தில் இல்லை மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது

இன்னொரு விஷயமும் மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது

மிஸ் லோபா சொல்கிறாள்

“அன்பரே! விரைந்து படுக்கை அறைக்குள் வாரும் ; மாதவிலக்கு முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. சீக்கிரம், சீக்கிரம் ; பிள்ளை பெற அருமையான சந்தர்ப்பம்.

பிள்ளை பெற , லோபா அழைத்தவுடன் எனக்கும் கூட ஒரு மாதிரி பீலிங் FEELING வந்துவிட்டது என்று நுழைந்து இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டதை ரிக் வேதத்தில் கண்டோம். ஆனால் மஹாபாரதம் வேறு ஒரு கதையை நுழைக்கிறது.

அது என்ன கதை? எல்லா பெண்களையும் போல, மிஸ் லோபாவும் ஒரு கண்டிஷன் CONDITION போடறாள் :–

மண மகனே! மண மகனே ! வா வா

உன்  வலது காலை எடுத்து வைத்து  வா வா

வைர நெக்லஸ், வைரத் தோட்டுடன் உள்ளே வா வா

பெரிய ஆசையுடன் காத்திருந்த அகஸ்தியருக்கு பெரிய ‘ஷாக்.’ SHOCK!!

WHAT வாட், வாட் வாட் வாட் WHAT DID YOU SAY டிட் யூ சே? என்று பதறினார்.

லோபா சொன்னாள் :- ஐயா நான் விதர்ப்ப நாட்டு ராஜ குமாரி. தங்கக் கட்டிலில் படுத்து உறங்கிய என்னை மணம் முடித்தீர். என் அம்மா, அப்பாவுக்கும் விதர்ப்ப நாட்டுக்கும் தீங்கு வரக்கூடாது என்று நான் உம்மை மணக்க முடிவு செய்தேன்

சும்மா  இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்  ஆண்டி என்பது போல எனக்கு ஒரு CONDITION கண்டிஷன் போட்டீர் ; எனது காஞ்சீபுரம் பட்டுப்புடவை , தங்கக் காசுமாலை, வைர அட்டிகை, மரகத மூக்குத்தி, மாணிக்க ஒட்டியாணம், முத்துச் சலங்கை எல்லாவற்றையும் அம்மாகிட்ட கொடுத்துட்டு முனிவர் மனைவி போல தழை உடையும் மான் தோலும் அணிய வேண்டும் என்று கண்டிஷன் போட்டீர்கள்.

நானும் செவிமடுத்தேன்; செயலாற்றினேன் ; இப்போது என் கண்டிஷன் இதோ!!  நான் ராஜ குமாரியாக இருந்த காலத்தில் அணிந்த நகைகளுடன் வருக. என்னை அலங்கரித்து அனுபவிக்க!!! என்று போட்டாளே ஒரு போடு.

இது மஹாபாரத வன பர்வத்தில் உள்ளது. அகஸ்தியர் சத்ய சீலன்; தனக்கொரு நீதி மனைவிக்கு வேறு ஒரு நீதி என்று கருதாததால் ‘சரி, அம்மா; அப்படியே செய்கிறேன்’ என்று புறப்பட்டார்.

ரிக் வேத ஆறு மந்திரத்தில் ஒரு மந்திரம் ‘’தவ சக்தியால் செல்வம் கிடைக்கும்’ என்று கூறியது; அதைக் கூறிய அகஸ்தியருக்கு செல்வத்தைச் சேர்க்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது.

லோபா டார்லிங், ஸீ யூ  ஸூன் LOBA DARLING ! C U SOON என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்குப் பின்னர் மஹாபாரதம் இன்னும் சுவையான விஷயங்களைச் சொல்கிறது . அது என்ன கதை?

தொடரும் ……………………………….

TAGS–  மஹாபாரதம், லோபா முத்ரா, அகஸ்தியர், SEXY,  செக்சி உரையாடல் 2 , RV  HYMN 1-179

பெரியவா புளுகினா, பேப்பர்ல போடுவா! சின்னவா புளுகினா….. (Post.10,906)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,906

Date uploaded in London – –   29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கடி ஜோக்ஸ்:ஞான மொழிகள் – 44

Compiled by Kattukutty

கடி ஜோக்ஸ்

1 ஒருத்தன் ஆப்பத்தை சாப்பிடும்போது காதை மூடிக்கொண்டு

சாப்பிட வேண்டும். ஏன்????

2.ஒருத்தன ஓட்டலுக்கு போய் தோசை இட்லி order பண்ணினான்.

ஆன்னா எதுவுமே சூடா இல்லை. …..ஏன்???

3.ஒருத்தன் கேக்கை order பண்ண பேக்கரிக்கு போனானா, அங்கே

அவன் கிட்ட பாஸ் போர்ட் கேட்டாங்களாம்….ஏன்???

4.ஒரு school ல்லே நாளைக்கு exam ம்ன்னு சொன்னாங்களாம்.

ஆனா எல்லோரும் uniform க்கு பதில் கலர் டிரஸ் போட்டுட்டு

வந்தாங்களாம்…..ஏன்???

5.ஒருத்தன் கடைலேர்ந்து காய்கறி வாங்கிட்டு வந்து கீழ் எடுத்து வச்சி

கிச்சு, கிச்சு மூட்டினானாம்……..ஏன்???

6.ஒரு கொத்தனார் இட்லியால வீடு கட்டினானாம்……ஏன்???

7.ஒருத்தன் நகை கடைக்கு போய் மோதிரத்தை வாங்கி கால்லே

போட்டுக்கிட்டானாம்……ஏன்.???

8.ஒருத்தன் பக்கெட்ல தண்ணி புடிச்சானாம், ஆனா பக்கெட்

நிறையவே இல்லையாம் …… ஏன்???

9.103 க்கும் 105 க்கும் நடுவுல என்ன இருக்கு……???

(விடை. 104 இல்லை. )

10.ஆசிரியர் உன் பேரு என்னன்னு கேட்டாரு, அதுக்கு பையன் பசுவுக்கு உடம்பு

சரியில்லைன்னு சொன்னானாம்…..ஏன்???

‘திங்க்’ பண்ணி பாத்தீங்களா??? 

xxxxx

இதோ விடைகள்

1.ஏன்னா அது இடியாப்பம்!!!

2.அந்த ஓட்டல் பெயர் ஆரிய பவன்

3.ஏன்னா அது ப்ளேன் கேக்காம்

4.ஏன்னா அது model exam மாம்!!!

5.ஏன்னா காய்கறி அழாம இருக்கணுமாம்

6.ஏன்னா இட்லி கல்லு மாதிரி இருந்துச்சாம்……

7.ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்….

8.ஏன்னா அவன் பக்கெட்ட கவுத்து வச்சு புடிச்சானாம்

  • ‘0’ தான் இருக்கும்!!!

10.ஏன்னா அவன் பெயர் ‘கெள’ சிக் ஆம்!!!

xxxxxx

பிரியாணியும் வாழ்க்கை மாதிரிதாங்க ……..

‘பீஸ்’ புல்லா இருந்தாதான் நல்லா இருக்கும்

படித்தால்தான் வேலை, கை நிறைய சம்பளம்,

என்று சொல்லித் தரும் சமூகம், விதைத்தால் தான்

சோறு என்று சொல்லித் தர மறந்து விட்டது……!

Xxx

ஏங்க ‘புக்’ பண்ணிடவா?

என்னத்தே?

அதாங்க ஆன்லைன்ல, ஒருசதுர அடிக்கு 5 ரூபாய்

வீதம் புக் பண்ணினா, விடியக்காலை 5 மணிக்கெல்லாம்

வாசல் தெளிச்சு, மார்கழி மாத கோலம் போட்டுட்டு போய்டுவாங்களாம்

xxxxxx

ஞான மொழிகள் – 43

Kathukutty

பெரியவா புளுகினா

பேப்பர்ல போடுவா……

சின்னவா புளுகினா

சிறையிலே தள்ளுவா……

xxx

சிந்திப்பதானால் அமைதியாக சிந்திக்கவும்,

செயல்படுவதானால் உறுதியாக செயல்படவும்,

விட்டுக் கொடுப்பதனால், பெருந்தன்மையோடு

விட்டுக் கொடுக்கவும்.

Xxxx

காகம் தலையில் எச்சம் இட்டதற்காக

எரிச்சல் அடையாதீர்கள்.

எருமைக்கு பறக்கும் சக்தியை

கொடுக்காத கடவுளுக்கு நன்றி

சொல்லுங்கள்!!!

இப்படித்தான் வாழ்க்கையை பாஸிடிவா

எடுத்துக்கணும்.

xxxx

ஒருத்தன் தன்னை அடிக்க வந்தானே

என்று வருத்தப்படுவதை விட்டு

அடிக்காமல்விட்டானே என்று

சந்தோஷப்படவேண்டும்.

இதுதான்டா வாழ்க்கை !!!

xxxx

வாழ்க்கையில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள்……

அதில் நீங்கள் தோற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.

ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவீர்கள்.

Xxx

ஏன்டா உன்ன பிரின்ஸ்பால் திட்றாரு??

அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல போடச்சொன்னாரு

நான் பிரின்ஸ்பால் நாயைக் காணோம்ன்னு

நியூஸ் கொடுத்துட்டேன்???

Xxxx

புருஷன் மனைவியிடம்

அம்மா அப்பாதான் எங்களுக்கு முதல்ல சாமி,

அப்புறம் தான் நீயெல்லாம்…….

மனைவி

அப்டீன்னா அந்த சாமியையே விட்டுட்டு

உங்கள நம்பி வரோமே நாங்க யாரு???

xxxx

CLASS TEST

question – ‘star mark’ (*) the SMALLEST numbers.

1 *39, 42, 67. Wrong

2 *17, 71,17. Wrong. Mark – 0/3

3 *90, 60, 86. Wrong

அப்பா பையனிடம் – மகனே revaluation க்கு அனுப்பு.

கொய்யால, யார் தப்புன்னு பாத்துடுவோம்

Xxxxxx  subham  xxxxx

tags–  ஞான மொழிகள் – 43, ஞான மொழிகள் – 44

CONTROL YOUR ANGER, BECAUSE ……… DR ABDUL KALAM (Post No.10,905)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,905

Date uploaded in London – –   29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

A satisfied life better than a successful life,

Because our success is measured by others

But our satisfaction is measured by our

Own soul, mind and heart!!!

xxx

Relations are sweeter than honey, and greater than

Money, smoother than silk, whiter than milk,

Higher than any tower, and stronger than

Any power, so maintain it !!!

xxxx

The sea is same for all,

Some find pearls,

Some find fishes, some find

their feet get wet.

LIFE is common for all

But we can get what we try for!!!

xxx

The most difficult task to make everyone happy,

The simplest task is to be happy with every one!!!

xxx

A meaningful silence is better

than meaningless words !!!

xxx

Life is like a chemistry

Precipitate your sorrows,

Filter your worries,

Evaporate your glooms and

Get crystals of your joy!!!

xxx

Never wait for perfect moment;

Just take moment, and make it perfect!!!

xxx

The past is in your head,

The future is in your hand!

Xxx

I was in the gathering of Gita lectures.

One of the audiences said I have been following

Gita for the past 35 years!!!

Audience applauded!!!

Finally, he said Gita is my wife!!!

xxxx

CONTROL YOUR ‘’ANGER”

Because it is just one letter away from

“D”ANGER.

DR ABDUL KALAM

xxx

Knowledge decides what to say,

Skill decides how to say,

Attitude decides how much to say,

And

WISDOM decides whether say or not!!!

Xxxx

Why do couples fight?

when i got home last night my wife demanded that

i take her to some place expensive.

I took her to petrol station and the fight started!!!!

xxx

It is important to go to HEAVEN after we leave.

But it is important to create HEAVEN in someone’s heart

Before we leave!!!

xxxx

Every test in our life makes us bitter or better,

Every problem comes to break us or make us.

The choice is ours whether we become

VICTIM or VICTOR.

xxx

Make a mind which never minds,

Make a heart which never hurts,

Make a touch which never pains,

And

Make relations which never ends!!!

xxx

Your cell phone has already replaced

Your watch camera, calendar,and

Alarm clock……..

Dont let it replace your family!

xxx

BANDARA TIMES

ONLY 20 PEOPLE CAN ATTEND A FUNERAL BECAUSE

THE SPIRIT HAS LEFT THE BODY.

BUT 2000 PEOPLE CAN STAND AT THE LIQUOR SHOP

FOR THE SPIRIT TO ENTER INTO THE BODY!!!

xxx

Money is a small coin,

Health is a big coin,

Love is a lucky coin,

Relationship is a sweet coin,

And

Friendship is a gold coin!

***

Tags – Anger, Abdul Kalam,  Wife name, Gita, Friendship,Mind

யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்! (Post No.10,904)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,904

Date uploaded in London – –     29 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகின் எந்த நூலும் தராத  மனம் பற்றிய அதிசயமான ரகசியங்களை  யோக வாசிஷ்டம் தருகிறது

எப்படி ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களாக ஆகிறானோ அதே போல மனமும் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறது; வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.

விதவிதமான கடமைகளை ஒரு மனிதன் செய்யும் போது எப்படி வெவ்வேறு பெயர்களை எடுத்துச் செய்கிறானோ அதே போல மனமும் அதன் வெவ்வேறு செயல்பாடுகளால் வெவ்வேறு பெயர்களைக் கொள்கிறது.

ஒரு மனிதன் எப்படி குளித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறானோ அதே போல மனமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டு செயல்படுகிறது.

வெவ்வேறு வேலைகளினால் வெவ்வேறு பெயர்களுடன் காரியகர்த்தாவாக வேலைகளைச் செய்ய வேண்டியதாகி இருக்கிறது. அப்படி அந்த வேலைகளைச் செய்யும் போது மனமானது ஜீவன் (தனிப்பட்ட பிரக்ஞை), ஆசை, செயல் என்ற பல பெயர்களால் விவரிக்கப்படுகிறது.

மனதிற்கான வெவ்வேறு பெயர்களை யோகவாசிஷ்டம் இப்படித் தருகிறது.

  1. மனம் : முழு பிரக்ஞையுடன் இருப்பது.
  2. புத்தி: ஒரு கருத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் முடிவைப் பெறுவதால் இது புத்தி எனப்படுகிறது.
  3. அஹங்காரம் : “நான்” என்ற ஒரு எண்ணம் உள்ளே இருப்பதால் இது அஹங்காரம் எனப்படுகிறது.
  4. சித்தம் : (எண்ணம்) ஆராய்வதை விட்டு விட்டு ஒரு குழந்தை போல இருக்கும் போது இது சித்தம் எனப்படுகிறது.
  5. கர்ம : (செயல்) : ஒரு இயக்கமும் அந்த இயக்கத்தின் விளைவும் காரணமாக ஆகி செயல்படுவதால் இது கர்ம எனப்படுகிறது.
  6. கல்பனா : காகதாலீய நியாயம் என்று ஒன்று உண்டு.காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தாற் போல என்று சொல்லுவோம்.  தானாகவே ஒன்றைக் கற்பனை செய்து கொள்வதால் இது கல்பனா என்ற பெயரைப் பெறுகிறது.
  7. ஸ்மிருதி (நினைவாற்றல்) ஒரு செயலை முன்னமே செய்தது போல காணும் போது அது ஸ்மிருதி எனப்படுகிறது.
  8. வாஸனா : (ஆசை அல்லது மனப்பதிவு) ஒரு ஆசை அல்லது மனப்பதிவு நுட்பமான ஒன்றாக அது மறைந்த போதிலும் மனப்பதிவாக இருக்கிறது. வார்த்தைகள் அவற்றின் அர்த்தம் அதன் சக்தி ஆகியவை எப்படி நுட்பமாக ஆகாயத்தில் கலந்து இருக்கிறதோ, மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போகிறதோ, அப்போது அது ஆசை எனப்படுகிறது.
  9. அவித்யா : (அறியாமை) ஆத்மனின் இயல்பான இயற்கை சுத்தமானது. இதை அறியாமல் இருக்கும் இன்னொரு நிலை தான் அவித்யா
  10.  மலம் : (அசுத்தம்) ஆத்மனை அழிக்கும் ஒன்றாக அமைவதே மலம். தனது இயல்பான சுயத் தன்மையை மறக்கடிப்பதே மலம்.
  11. மாயா (மாயை) என்றுமுள்ள சத்தை அசத்தாயும், அழியா ஆத்மனை அழியும் ஜீவனாகவும் காண்பிப்பதால் இது மாயா எனப்படுகிறது.
  12. ப்ரக்ருதி (இயற்கை) : பார்ப்பதை எல்லாம் ப்ரக்ருதத்வமாகக் காண்பிப்பதால் இது இயற்கை எனப்படும் ப்ரக்ருதி எனப்படுகிறது.
  13. ப்ரஹ்மோத்யாதி (ப்ரஹ்மா இத்யாதி) நுட்பமான எண்ண வடிவில் இருக்கும் உடலானதாக அமைவதால்  ப்ரஹ்மா எனப்படுகிறது.
  14. ஜீவ: (ஜீவன்) ஜீவனாக இலங்குவதால் இது (தனிப்பட்ட ஆத்மா) ஜீவன் எனப்படுகிறது.
  15. ஆதிவாஹிகதேஹ: ( நுட்பமான எண்ண வடிவிலான சரீரம்) இந்த மனோமயமான எண்ணம் ஒரு ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டது. உருவமில்லாதது. ஒரு குறையுமில்லாதது. ஆகவே இது ஆதிவாஹிகதேஹம் எனப்படுகிறது.
  16.  இந்திரியம் : (புலன்கள்) இது ஆன்மாவை ஆளும் இந்திரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதால் இது இந்திரியம் எனப்படுகிறது.
  17. புர்யஷ்டகம் ( எட்டு வித நகரம்) ஐந்து நுட்பமான பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) ஓசை, தொடுதல், வடிவம் , சுவை, வாசனை ஆகியவற்றை மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றுடன் சேர்ந்து எண்ணங்களின் சேர்க்கையாக இருப்பதால் இது புர்யாஷ்டகம் எனப்படுகிறது.
  18. தேஹபதார்த்தி : இது உடல் என நினைப்பதால் உடலாகிறது. குடம் என நினைப்பதால் அந்தப் பொருளாக ஆகிறது. ஆகவே இது தேஹபதார்த்தி எனப்படுகிறது.
  19. தர்சனானந்தரை சஹ மத பேத: (மற்ற கொள்கைகளுடன்  வேறுபடுதல்)

ஓ! ராமா! அஹங்காரம், மனம், புத்தி என இப்படி என்னால் உரைக்கப்பட்டது அனைத்தும் அவற்றின் இயற்கை குறித்து என்னால் உருவாக்கப்பட்ட வடிவங்களே.  தர்க்கவாதிகளால் இது வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது. சாங்கிய கொள்கையாளரால் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சார்வாகர்களால் (நாத்திகவாதிகளால்) இன்னும் வேறு விதமாகச் சொல்லப்படுகிறது.

என்று இப்படி மனம் பற்றிய ரகசியங்களை வசிஷ்ட மஹாமுனிவர் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தப் பகுதியை நன்கு ஊன்றிப் படித்து மனதின் பல்வேறு இயல்புகளை அறிந்து கொள்ளலாம்.

***

TAGS– யோக வாசிஷ்டம்,  மனம், ரகசியங்கள்!

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN (Post No.10,903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,903

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Next to Rig Veda, Gathas of Zoroaster is the oldest book in the world. The language of the Gathas comes closer to Sanskrit than any other language. The very word Gatha is Sanskrit for song. It is in Prakrit and Tamil. Gatha travelled from Kanyakumari to Iran. Gatha Sapta Sati, the most famous Prakrit anthology and 30 Kathais of most famous Tamil epic Silappadikaram are known to all scholars.

Zrnd Avesta, Veda of Parsis list 16 places as their home. The sixteen places include the Aryana (Haryana? and Sapta Sindhu (later known as Punjab)

First let us look at the 16 places and then go to the comments:-

Even a cursory glance at the list shows big confusion and chaos; worlds like unknown , uncertain, ‘probabl’y are found in the explanations; and then five or six interpretations for each location; last but not the least it covers a vast area of India, Turkmenistan, Azerbaijan , Iran etc. We know that one cant jump from Punjab to Iran without crossing the lands in between. So it covers Iraq and other countries as well. The reason for these vast area is they spread the religion to all these places. Historically we find evidence as well. But the most important words are Aryan land (first in the list) and Sapta Sindhu (last but one in the list). For some scholars the first one is in Iran. All those scholars who support this believed in Aryans coming from Central Asia into India. Now it is found wrong because of the latest findings on River Sarasvati. The river Sarasvati is also found in other places with S=H. it shows clearly they named Hindu original place names wherever they went. We see it in Canada, USA, Australia, New Zealand, Pacific islands and South Africa. Wherever the white people went and plundered the native population, they named those places with some place names in Europe. So they assumed Indians also did that. I don’t need to give the long list. If you look at the place names in the above mentioned countries you can easily identify them.

The last one in the list of 16, is Rasa. The river Rasa which is found in Rig Veda is not identified. The Zoroastrian tradition talks about Hara mountain. The words in Su’mer’ and Pa’mir’, Kh’me’r (in Cambodia) are nothing but Meru, wherever Hindus went they named the rivers ‘Ganga’ and the mountain ‘Meru’. You can even see Meru in East Africa. You can see Ganga in the thick forests of Congo (Ganga) in central Africa or Me kong (Ma Ganga) of South East Asia. So it is a tradition to name the places of your origin. We find the word ‘Ganga’ in Sri Lankan rivers too.

So the unidentified Rasa river , the identified Sapta Sindhu Rivers, the mountain Hara (Kailash or Su Meru), all these point out to Greater India which included Afghanistan where from Mahabharata princess Gandhari and Ramayana Princess Kaikeyi came and married Hindu epic heroes.

In short, all the 16 places mentioned in the list are in Greater India. The people who believed in Aryan invasion , reversed (Ulta) everything.

 Another evidence comes from Manu Smrti. The oldest parts of Manu smriti belonged to the period when Sarasvati was flowing. One of the punishments mentioned in Manu smriti is to walk against the current of River Sarasvati. And that Manu Smriti also used the words Aryan land which is around Haryana/Aryana of today.

In short, the Parsis or Zoroastrians moved from this area to Iran and named places after their homeland India.

Here is what Manu says about Arya Bhumi

Aaryaavartaa – Manu 2-22/3; 10-34

“From the eastern sea to the western sea , the area  between the two mountains  is what wise men call the Land of the Aryans”.  So according to Manu, it was the vast land between the Vindhyas and Himalayas. During Vedic period there was no civilization in South India.

P L Bhargava gives linguistic evidence as well. We will look at it in the second part:-

Vendidad references[ (from Wikipedia)

The main Avestan text of geographical interest is the first chapter of the Vidēvdād. This consists of a list of sixteen

The list is as follows:

  1. Airyanem Vaēǰah = the homeland of Zoroaster and Zoroastrianism, near the provinces of SogdianaMargianaBactria, etc., listed immediately after it.[2] The historical location of Airyanem Vaejah is still uncertain
  2. Gava = Sogdiana;
  3. Mōuru = Margiana;
  4. Bāxδī = Bactria;
  5. Nisāya = a district between Margiana and Bactria. Most historians believe this location is Nisa modern day south of Turkmenistan.[11] some believe Neyshabur. perhaps Maimana;[12]
  6. Harōiva = AriaHerat;
  7. Vaēkərəta = Gandhāra;[13]
  8. Urvā = the exact location of Urva is unknown, some claim Ghazni;[14] Darmesteter believed it to be Urgench in modern day UzbekistanEdward Granville Browne believed it to be Tus in Khorasan Province of Iran (Vandid, darmesteter Page 68);
  9. Xnənta = la region defined as vəhrkānō.šayana- ”the dwelling place of the Vəhrkāna,” where Marquart placed the Barkánioi of Ctesias,[15] an ethnicon analogous with that of Old Persian Varkāna, the inhabitants of Hyrcania, the present Gorgān or, less probably, Hyrcania;[16]
  10. Haraxᵛaitī = Arachosia;
  11. Haētumant = the region of Helmand River roughly corresponding to the Achaemenian Drangiana (Zranka);[17]
  12. Raγa = or Raga, location is modern day in Rey in Tehran province, to be distinguished, given its position in the list[18] from Median Ragā and probably also from Raγa zaraθuštri- of Yashts 19.18;[19]
  13. Čaxra =locations is still uncertain, but DarmesteterDehkhoda, and Hassan Pirnia believe the location is Shahrud[20] Čarx between Ghaznī and Kabul, in the valley of Lōgar,[21] not Māzandarān, as Christensen thought;
  14. Varəna = most of historian believes location is Gilan.[22] also Bunēr,[23] the Varṇu of the Mahāmāyūrī, the ʿAornos of Alexander the Great, the homeland of FerΘraētaona/Frēdōn/Afrīḏūn;[24]
  15. Hapta Həndu = Sanskrit Sapta Sindhu, the area of Punjab;
  16. Raŋhā = Rasā in Vedic geography, at times mentioned together with Kubhā (Kabul) and Krumu (Kurram),[25] a river situated in a mountainous area, probably connected with the Indus River, not with the Jaxartes or with the Volga.[26]

One of the old, thorny problems in studies on Avestan geography is represented by Airyana Vaēǰah (Pahlavi: Ērānwēz), “the area of the Aryans” and first of the sixteen districts in Vd.

Airyana Vaēǰah onto the traditional one of a center of the world where the Peak of Harā rises. The fact that Airyana Vaēǰah is situated in a mountainous region explains its severe climate (Vd. 1.2.3 This is not surprising if we consider the analogy between the Iranian concept of the peak of Harā with the Indian one of Mount Meru or Sumeru. Peak of Harā (ttaira haraysä) in the Avestan tradition.

Look at the order of 16 places. Westerners say Aryana was in Iran. The last but  one is Sapta Sindhu in Punjab. But the chronology of Vedas and Gathas is in reverse order; that is the Rig Veda of Punjab is very old compared to Gatha language (Avestan); So they moved from Vedic land and lived in isolation in Iran for long and the Avestan language of Gathas was born.

I personally see the same in India. Vedic Hindus moved towards south and Tamil evolved. My research shows that any ancient word can be traced to Tamil or Sanskrit. Some words have missing links. Most of the key words can be traced. I already showed how V changes to P in ancient Tamil and Avestan. Tamil tradition says that Shiva sent Agastya to south to write a grammar for Tamil. Only when there is something in common, a person from Himalayas can write grammar for Tamil. Great poets like Kamban and Bharati mentioned Tamil -Agastya link. Kalidasa was the oldest poet to mention Pandya and Agastya link in Raghu Vamsa. So it is a 2100 year old belief.

P L Bhargava also explains it.

To be continued………………………………….

அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1 (Post No.10, 902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,902

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எட்டே இடங்களில் மட்டும் ‘அகஸ்த்ய’ என்ற பெயர் வருகிறது. அவர் இயற்றிய அல்லது அவரால் காணப்பட்ட துதிகள் ரிக் வேதத்தின் முதல் மண் டலத்தில் உள்ளன. அங்கு அவருடைய துதிகள் என்ற கணக்கில் 27 துதிகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன. ( 1-165 முதல் 191 வரை).

அகஸ்தியரின் மனைவி பெயர் லோபாமுத்ரா; பேரழகி; பெரிய பணக்காரி; விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி. அகஸ்தியரோ உலக மஹா குள்ளன்; உலகிலேயே குட்டையான ஆள் என்ற பெயரில் ‘கின்னஸ் சாதனை’ புஸ்தகத்தில் பெயர் ஏற்றிவிடலாம் அவ்வளவு குள்ளம். அவர் ஆணழகனும் இல்லை.  இந்த சூழ்நிலையில் அவருடைய துதிகளில் ஒன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அது ரிக்வேதத்தின் 1-179 ஆகும். அதில் ஆறு மந்திரங்கள் தான் உள்ளன. அதில் என்ன பெரிய செக்ஸ் இருக்கப்போகிறது என்று நினைக்காதீர்கள். அது பற்றி மஹாபாரதம் பெரிதாக பிரஸ்தாபிக்கிறது.

வேதங்களின் தாத்பர்யத்தை- உட்கருத்தை விளக்க வந்தவைதான் புராணங்கள் மற்றும் இதிஹாஸங்கள். ஏனெனில் வேதத்தின் பிற்பகுதியான பிராஹ்மண நூல்களிலும் மறைமுக மொழியில்தான் விளக்குவார்கள். புராண , இதிஹசங்கள்தான் நமக்குத் புரியும்படி பேசும்..

இதுபற்றி எல்லோரும் அறிந்த ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் உண்டு :-

இதிஹாச புராணாப்யாம் வீதம் ஸமுபவ்ர்ம்ஹயேத்

விபேப் யல்பஸ்ருதாத்  வேதோ மாமயம் ப்ரஹரிஸ் யதி

இதன் பொருள்-

வேதத்தைக் கற்போர் இதிஹாச புராணம் மூலம் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்; ஏனென்றால் கொஞ்சம் படித்தவர்களால் தனக்கு ஆபத்து வரும் என்று வேதம் அஞ்சுகிறது

(எவ்வளவு உண்மை பாருங்கள் ! வெளிநாடுகளைச் சேர்ந்த 60 அரைவேக்காடுகள் வேதங்களை மொழிபெயர்த்தோ  விமர்சித்தோ கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த கதைதான் !)

இதனால் SEXY DIALOGUE ‘செக்சி’ உரையாடலின் முழு விவரத்தை அறிய மஹாபாரதத்துக்குச் செல்ல வேண்டும்.

அகஸ்தியர் துதிகளில் போற்றப்படும் கடவுளர்: இந்திரன், மருத்துகள் , அஸ்வினி தேவர்கள், வானமும் பூமியும் (த்யவ்ஸ்/DYAUS – பிருத்வி), விச்வே தேவர்கள், அன்னம் / உணவு; ஆப :- தண்ணீர் , அக்கினி , ஆப்ரி, பிருஹஸ்பதி

அகஸ்தியரின் மற்ற பெயர்கள் – மான, மாந்தார்ய , மான்ய என்பனவாகும் ; ரிக் வேத 7-33 ல் அகஸ்தியர் பிறப்பு பற்றிய விஷயம் உள்ளது அதன்படி அவர் மித்ர – வருணன் ஆகியோரின் விந்துவிலிருந்து உருவானவர். வசிஷ்டரும் , அகஸ்தியரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் மூலம்  பிறந்தனர் என்றும் அறிகிறோம் .

பிற்கால இலக்கியங்களில் அகஸ்தியரின் சாதனைகள் பற்றி நிறைய உள்ளன வாதாபி என்ற அரக்கனைக்  கொன்றது, நஹுஷனை மட்டந்தட்டியது ,விந்திய மலையின் மேல், ரோடு ROAD ROUTE போட்டு  அந்த ப் பாதை மூலம் தென்னாட்டுக்கு வந்தது, கடல் நீரைக் குடித்தது (அதாவது கடல் வழிப்பாதை மூலம் தென் கிழக்காசியாவில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டியது)  , காவிரி நதியைத் திசை மாற்றி ஓடுவதற்கு அணை கட்டியது , தமிழ் மொழிக்கு இலக்கணம் வரைந்தது என்று பெரிய பட்டியல்!!

தமிழுக்கு அவர் இலக்கணம் இயற்றியதை பாரதி, கம்பன், பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோர் பாடியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கவி காளிதாசன், பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் இணைத்து ரகு வம்ச காவியத்தில் பாடியதுதான் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் குறிப்பு!!!

முதலில் உரையாடலைக் காண்போம் ; பின்னர் மஹாபாரதத்தைக் காண்போம்; பின்னர் அறிஞர் கருத்துக்களைக் காண்போம் :-

அகஸ்தியர் துதிகள் பற்றி சாயனர், வேங்கட மாதவா ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .

xxx

இதோ 1-179- 1/2 துதி

லோபா முத்ரா

நான் பல்லாண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவரதமும் உமக்கு பணிவிடை செய்தேன் ; களைத்தும் போனேன் ; முதுமை என்னுடைய மேனி அழகைப் பாதிக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

(இந்து மதத்தில் பெண்கள் பகிரங்கமாக ‘செக்ஸ்’ sex பற்றிப் பேச மாட்டார்கள்; ஆனால் குறிப்பால் உணர்த்துவார்கள் ; அதே போல லோபாமுத்ராவும் எல்லோரும் கணவனுடன் கூடிக் குலவட்டும் என்று பொதுப்படையாகப் பேசுகிறார்)

ரிஷிகளும்  தேவர்களும் சத்தியத்தைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் காலத்தால் அழியாத சட்ட திட்டங்களை வகுத்தார்கள் ; அவர்கள் சொன்னார்கள்; செய்யவில்லை .கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

அகஸ்தியர் பதில்

(அகத்தியர் பதிலை கிரிப்பித்  R T GRIFFITH  மொழி பெயர்க்க மறுத்துவிட்டார். ரொம்ப ‘செக்சி’ என்று கருதினார் போலும். அதை ஜம்புநாத அய்யர்  மேம்போக்காக மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் காமத்துப் பாலையும்  மொழிபெயர்க்க பறங்கித் தலை பாதிரிமார்கள் அஞ்சினர்; திருக்குறளை முழுக்க மொழிபெயர்த்தால்  தமிழன் பெயர் ‘ரிப்பேர்’ ஆகி விடும்; மானம் ‘விமான’த்தில் ஏறிவிடும்; தமிழன் கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தோர் அஞ்சினர். ரெவரென்ட் ஜி.யூ போப் மட்டும்  அதைத் தைரியமாகப் படித்துவிட்டு இதில் என்ன தவறு இருக்கிறது?  என்றார். இரண்டு மந்திரங்களை லத்தீன் மொழியில் கொடுத்துள்ளனர்.)

XXX

அகஸ்தியர் (RV 1-179-3)

நான் தவத்தை இயற்றுவதில் காலத்தைச் செலவிட்டேன். நாம் நம்முடைய விருப்பங்களை இப்போது அனுபவிப்போம். இருவரும்  சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

(குழந்தை பெறுவதற்கு இணையலாம் என்பதை பகிரங்கமாகக் கூறுகிறார். இதன் விளக்கம் விரசம் இல்லாமல் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது அதையும் காண்போம்.)

RV 1-179-4

அகத்தியர் தொடர்ந்து பேசுகையில் ஜெபத்திலும் இந்திரியக் கட்டுப்பாட்டி லும் இருந்தபோதும் காம எண்ணம் வந்தது ஆகையால் லோபாமுத்ரா கணவனுடன் சேருவாளாகுக.

RV 1-179- 5/6

கடைசி இரண்டு மந்திரங்கள் இருவரின்  உரையாடலைக்கேட்டு யாரோ (சீடன்??) எழுதியது போல அமைந்துள்ளது

அந்த சீடன் சொல்கிறான்:

மனிதர்கள் எல்லோரும் காமத்தின் வசப்பட்டவர்கள். இதோ என் அருகிலுள்ள சோம லத்தை செடியிடம் சொல்கிறேன். நான் செய்த பாவங்களை எல்லாம் அகற்றி விடுங்கள்

கடைசி மந்திரத்தில் அகஸ்தியர் தீவிரமாக குழந்தை பெறும் பணியில் இறங்கினார் . என்று வருகிறது

இது பற்றி மகாபாரதம் மேல் விவரம் தருகிறது. அதையும் வெளி நாட்டார் கருத்தையும் பார்ப்போம்.

இந்த துதி வரிசைக் கிரமப்படி இல்லாமல் கடைசியில், ரதி என்ற தலைப்பில், பிற்சேர்க்கைப் பகுதியில் வைக்கப்பட்டது. லத்தீன் மொழியில் உள்ள இரண்டு மந்திரங்களை ஆங்கிலத்தில் பின்னர் கொடுத்துள்ளேன் . தமிழ் சினிமா பாடல்கள் போல இரண்டு அர்த்தத்தில் இவை எழுதப்பட்டுள்ளன. லோபாமுத்ரையும் அகஸ்தியரும் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கினார்கள் என்பதே பொருள்.

The labour which the gods favour is not unprofitable: we conquer all our rivals and rivals.

We must overcome in this battle of a hundred trades, in which we move our two sides together, on both sides.

4 Cupid took me by that bull [the man] who despises me, whether he was born on either side, or on the other, on any side.

Lopamudra denies the bull [her husband] to him: that fool swallows the wise man gasping for breath.

செல்க்ஸ் பற்றிய கவிதை என்பதால் வெள்ளைக்காரப்பயல்கள் ஆயிரக்கணக்கில் இது பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர்  ஆனால் மஹாபாரதத்தில் முழுக்  கதை உள்ளது; இதை ஸ்லோகம் வாரியாக தானேஸ்வர்  சர்மா என்பவர் கொடுத்துள்ளார். இதோ அந்த ஸ்லோகங்க ளின் மொழிபெயர்ப்பு :–

தொடரும்…………………………………………….

tags – அகஸ்தியர் , லோபாமுத்ரா, Sexy , செக்சி,  உரையாடல் , ரிக்வேத,  1-179,

Life is like a Mirror. Smile at it and it smiles back to you (Post No.10, 901)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,901

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

Making 100 friends is not a miracle. The miracle is make a

Single friend who will stand on your side even when 100s

are against you.

xxx

Life is like a mirror. Smile at it and it smiles back to you.

Xxx

If you can’t fly, RUN

If you can’t run, WALK,

If you can’t walk, CRAWL,

If you can’t-crawl,

But keep moving towards GOAL.

ALL THE BEST!!!

xxx

Getting comfortable with the uncomfortable,

Is the only way to grow.

Xxx

We dont always need advise. Sometimes

What we need is hand to hold and an ear to listen,

And a heart to understand.

Xxx

A nice person will always be in memory.

A better person will always be in dream,

But a sincere person will always be in heart!!!

xxx

Distance never kills a relation.

Closeness never builds a relation.

It is caring of one’s feelings that builds

Faith and maintain relation.

xxx

Some women take-up law and become lawyers

Other women lay down the law and become wifes !!!.

xxx

Patience and silence are two powerful energies.

Patience makes you mentally strong,

Silence makes you emotionally strong.

xxx

Good friends are like stars.

You don’t always see them.

But you know that they

are always there!!!

xxx

When people see my messages,

They think that I am addicted to

Messaging and I am free……..

But it is incorrect.

Actually I am addicted to holding

relationships !!!

***

இது எப்படி இருக்கு…..??? !!! (Post No.10,900)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,900

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இது எப்படி இருக்கு…..???!!!

Compiled by Kattukutty

படித்தது…..ரசித்தது ..
சில பிஸினஸ் ரகசியங்கள்!


1

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.

கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:

பாத்து போக கூடாதா? ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?”

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்?

எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு ” தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிக் கொள்’ என்றார்.

மக்களும் இவரது செய்கை, பேச்சை பார்த்துப் பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததை விட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் ” தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளி கிட்டே என்ன பாடு படுவயோ? ” என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். ” அந்த பெரியவர் தான் சார் என் முதலாளி”

xxx

.

2

பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன் வரவில்லை.

சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், ”அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ”போய்யா… அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.

‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு விற்றால்… சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.

அதனால் நான், ‘ஐந்து பத்து ரூபாய்’னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு அவன் வந்து சொன்னதும்… ‘அடடே லாபமா இருக்கே’னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.

அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!” என்றார் முதியவர்.

xxx

3

பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்.

அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

xxx
4

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

“நான் திராட்சை சாப்பிடலாமா?”

மகான் சொன்னார்: “ஓ… தாராளமா”

“அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?”

“ஓ.. பயன்படுத்தலாமே?”

“புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?”

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

“இங்க பாருப்பா… உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?”

“அதெப்படி ஏற்படும்?”

“தண்ணீர் ஊற்றினால்?”

“தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?”

“மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?”

“காயம் ஏற்படும்”

“நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்”
என்றார் மகான்..


                                                                                 ***

tags– பிஸினெஸ் ரகசியம், இது எப்படி இருக்கு



அப்பர் கேள்விகளும் பதில்களும்- 2 (Post No.10,899)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,899

Date uploaded in London – –     28 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அப்பர் குரு பூஜைதினம் – 24-4-2022

உரை – பகுதி 2

ச.நாகராஜன்

நாவுக்கரசர் நாவுக்கு மட்டும் அரசர் அல்ல; தமிழுக்கும் அரசர் அவரே! அற்புதமான அருள் பாக்களைப் பாடியவர் புரட்சிகரமான ஏராளமான கருத்துக்களையும் தேவாரத்தில் ஆங்காங்கே அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம்.

எல்லோரும் மனிதப் பிறவியே வேண்டாம் என்று பாடி இருக்கும் போது அதற்கு மாறாக பூவுலகில் மனிதப் பிறவியும் வேண்டுகின்ற ஒன்று தான் என்று அவர் புரட்சிகரமாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான நிபந்தனை ஒன்றையும் அவர் விதிப்பதை அறியும் போது எவ்வளவு பெரிய பேரருளாளர் அவர், எவ்வளவு பெரிய சிவ பக்தர் அவர் என்பதை அறிய முடிகிறது.

புரட்சிக்கரசர்

சிதம்பர தரிசனம்

கோயில் என்றாலே அது சிதம்பர ஸ்தலத்தைத் தான் குறிக்கிறது.

ஆடல் வல்லானின் அற்புத தரிசனத்தைக் கண்ணுற்ற அப்பர் பாடுகிறார்:-

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

என்ன ஒரு அற்புதமான தெய்வீகத் திரு உரு! வளைந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், அதில் முகிழ்கின்ற குமிண் சிரிப்பு, பவளம் போன்ற மேனி, அதில் தீட்டப்பட்டிருக்கும் அழகிய திருநீறு, இனித்தமுடைய அருள் தரும் பாதங்கள்!

ஆஹா! என்ன ஒரு அற்புதக் காட்சி!

இதைக் கண்டாலே முக்தி நிச்சயம்!

ஆக, இந்தக் காட்சியைக் கண்டு முக்தி பெற்று மீண்டும் மீண்டும் அவன் அருளால் பிறப்பு எடுப்போம். முக்தி பெறுவோம்.

அவன் ஆடல் விளையாட்டை நடத்தட்டும்; நாம் பிறந்து பிறந்து ஆடல் வல்லானின் தரிசனத்தைக் கண்டு கண்டு முக்தி அடைந்து அடைந்து மீண்டும் பிறந்து பிறந்து…..

என்ன ஒரு அற்புதமான கருத்து!

திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் புழுவாகப் பிறந்தாலும் உன் திருவடி மறவாதிருக்க வரம் தா என வேண்டுகிறார்:-

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்

செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே.

எல்லாப் பாடல்களிலும் அடிப்படைக் கருத்தாக இழை ஓடுவது சிவ சிந்தனையே!

‘ஒரு முறை அவனை நினைத்தாலே சிவ லோகம் நிச்சயம்;

ஆக அந்த நினைப்பு இருந்தாலே போதும்;

அதிலும் பிறக்கும் பொதெல்லாம் அவனை மறக்காமல், பிறந்து பிறந்து அவனை நினைந்து நினைந்து அவனைத் தரிசனம் செய்யும் சிவ மயமான சுகத்தை இன்னும் அதிகம் பெற வேண்டும்’ என்பது தான் அவரது பாடலின் அடி நாதக் கருத்து!

அடுத்து அவர் பாடல்களில் ஏனையோரின் பாடலில் காண முடியாத மாற்று யோசனைக் கருத்துகளை ஏராளம் காணலாம்.

எடுத்துக்காட்டிற்கு ஒன்று பார்ப்போம்.

காலன் மட்டும் அறிந்த கழலடி!

தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.

பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.

அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.

ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.

யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?

சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.

சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை. தோல்வி தான் மிச்சம்.

ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது?

யமன் யோசித்தான்.

மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.

Alternative Thinking!!

அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து பாசக் கயிறை வீசினான்.

விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.

அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?

பாடினார் அப்பரி:-

“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து

மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்

பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே

    (ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)

காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!

அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.

இப்படி சுவை ததும்பும் 3066 பாடல்களை முறைப்படி ஓதி, பொருளை ஊன்றி உற்றுக் கவனித்து ஆய்ந்து ஓர்ந்து உணர்ந்தால் அப்படிப்பட்டவர் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.

4,5,6 ஆகிய மூன்று திருமுறைகளை ஓதுவார், தமிழை அறிவார்; தமிழ் கூறும் தெய்வமான சிவனை அறிவார். அவனை அறிந்த அடியார் தம் பெருமையை அறிவார்.

சேக்கிழார் போற்றும் அப்பர்!

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்தை அற்புதமாகச் சித்தரிக்கும் சேக்கிழார் பெருமான் அவரது வரலாற்றை முடிக்கும் போது கூறும் இரு பாடல்கள் நம்மை நெகிழ வைக்கும்.

மண் முதலாம் உலகேத்த மன்னு திருத் தாண்டகத்தைப்

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று

நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி

அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.

வானவர்கள் மலர்மாரி மண்ணிறைய விண்ணுலகின்

மேனிறைந்த ஐந்து பேரியவொலியும் விரிஞ்சை முதல்

யோனிகளாயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி

தானிறைந்த சித்திரையிற் சதயமாம் திருநாளில்.

இந்த சுபகிருது வருட சித்திரை சதய நன்னாள் விழாவில்

நாவுக்கரசர் காட்டிய வழியைச் சிந்திப்போம். அவ்வழியில் நடப்போம். உயர்வோம். உய்வோம்.

இந்த நல்வாய்ப்பினை எனக்கு நல்கிய லண்டன் திரு கல்யாண்ஜி அவர்களுக்கும் ஆகப் பெரிய அறிஞர்களுக்கும் சிவானந்தத்தில் எப்போதும் திளைக்கும் சிவானுபூதிச் செல்வர்களுக்கும் என் நன்றியைக் கூறி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

***

CHANAKYA’S QUOTATIONS; MAY 2022 CALENDAR (Post No.10,898)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,898

Date uploaded in London – –    27 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

XXX

Following 31 quotations are taken from Chanakya’s  work: Chanakya sutras.

FESTIVAL DAYS :- May 1- May Day; 2-Ramzan; 4- Agni nakshatra/ hot Summser begins; 6- Shankara Jayanthi; 15- Buddha Purnima; 28- Agni Nkashtra period ends.

New Moon day- 30;Full Moon Day- 15; Ekadasi Fasting Days- 12,26.

Auspicious Days in May- 4, 8, 13, 15, 25, 26

XXXX

MAY 1 SUNDAY

Sukasya moolam dharmah

Righteousness is the root of happiness

xx

MAY 2 MONDAY

Dharmasya moolam arthah

Wealth is root of righteousness

xx

MAY 3 TUESDAY

Arthasya moolam raajyam

The state is the root of wealth

xx

MAY 4 WEDNESDAY

Rajya moolam indriya jayah

Victory over senses is the root of the state

xx

MAY 5 THURSDAY

Indriya jaya moolam vinayah

Humility is the root of sense control

xx

MAY 6 FRIDAY

Vinayasya moolam vrdhdopa seva

Worship of elders is the root of humility

xx

MAY 7 SATURDAY

Vrdhdha sevayaa vignaanam

Wisdom results from the worship of elders

xx

MAY 8 SUNDAY

A vineetam snehamatrena na mantre kurvati

He should not take into counsel out of love, one who is impertinent

Xxx

MAY 9 MONDAY

Srutavantamupa dhaasudhdham mantrinam kurveeta

One who is learned and free from fraud should be made a minister.

Xxx

MAY 10 TUESDAY

Mantra moolaaha sarvarambaahaa

All things begin with counsel

Xxx

MAY 11 WEDNESDAY

Mantra rakshane kaaryam sidhdhir bhavati

Accomplishment of the task depends on guarding the secret of counsel.

Xxx

MAY 12 THURSDAY

Mantra visraavi kaaryam naasayati

One who lets out the counsel destroys the task

Xxx

MAY 13 FRIDAY

Pramaadhaad dwishataam vasamupayaasyati

Defection to the enemy takes place due to negligence

Xxxx

MAY 14 SATURDAY

Sarva dwaarebhyo Mantri rakshitavyah

Ministerial advice should be kept secret from all quarters

Xxxx

MAY 15 SUNDAY

Mantra sampadhaa raajyam vardhate

The country prospers by proper ministerial counsel

Xxx

MAY 16 MONDAY

Sreshta tamaam mantra guptimaahuh

The secrecy of ministerial counsel is of supreme importance

Xxxx

MAY 17 TUESDAY

Kaaryaandhasya Pradeepo mantras

Counsel is a beacon to the one blind of action

Xxx

MAY 18 WEDNESDAY

Mantra chakshusaa parichchidhraanyava lokayanti

Through ministerial eyes others’ weaknesses are seen

Xxx

MAY 19 THURSDAY

Mantra kale na satsarah kartavyah

At the time of taking ministerial advice there should be no quarrels

Xxxx

MAY 20 FRIDAY

Vignaanena aatmaanam sampaadayet

With wisdom one can prosper

Xxx

MAY 21 SATURDAY

Sampaaditaatmaa jitaatmaa bhavati

The prosperous one becomes the victorious one

Xxx

MAY 22 SUNDAY

Jitaatmaa sarvaartah samyujyate

The victorious one attains all the riches

Xxx

MAY 23 MONDAY

Artha sampath prakruti Sampadam karoti

Economic prosperity creates prosperity for the people

Xxx

MAY 24 TUESDAY

Prakruti sampadaa hyanaayakamapi raajyam neeyate

If the people are prosperous, even a leaderless state can be governed

Xxx

MAY 25 WEDNESDAY

Prakruti kopah sarva kopebhyo gareeyaan

People s fury is the greatest of the fury

Xxx

MAY 26 THURSDAY

Avaneetasvaa milaa bhaadasvaa milaabah sreyaan

To be without a master is better than having an arrogant master

Xxx

MAY 27 FRIDAY

Sampaadhyaatmaana manvichchet sahaayavaan

After equipping oneself fully, one should seek an ally

Xxxx

MAY 28 SATURDAY

Naasahaayasya mantra nischayah

One without an adviser has no certainty of counsel

Xxxx

MAY 29 SUNDAY

Naikam chakram paribhramayati

One wheel does not move the vehicle

Xxx

MAY 30 MONDAY

Sahaayah sama sukhadukkahah

The true aide serves alike, in prosperity and adversity

Xxx

MAY 31 TUESDAY

Mani pratimaani namaatmanidweetiyam mantramut paadayet

A self respecting ruler should appoint as counsellor,one who is inferior to him and respect s him

XXXX SUBHAM XXXX

tags – maxims, quotations, Chanakya