அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்-  பிராணிகள் கற்பிக்கும் பாடம் -3 (Post.10,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,401

Date uploaded in London – –   2 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர், நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே! எனக்கு  பலம் தருக!! என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியானத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையும்  புலவர் குறிப்பிட்டதன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

17.வருணன்

வேத காலத்தில் வணங்கி வந்த வருண பகவானை, இந்திரனை, விஷ்ணுவை  தொல்காப்பியர் தமிழ்க் கடவுளராகச் செப்புவதிலிருந்து  தமிழர்களும் வேத கால இந்துக்களும் ஒன்றே என்று தெரிகிறது. அந்த மூவரையும் தினமும் மூன்று வேளைகளில் பிராமணர்கள் மட்டும்  இன்றும் சந்தியாவந்தன வேளைகளில் வணங் க்குவதால் பிராமணர்கள்தான் ‘ஒரிஜினல் தமிழர்கள்’ என்று தொல்காப்பியர் சொல்லுவதும் தெளிவாகிறது. வருணன் கடல் தெய்வம் என்று தொல்காப்பியர் சொல்லுவதை  வால்மீகி ராமாயணத்திலும் காண்கிறோம். அவன் கையில் பாசக் கயிறுகள் உண்டு. அவனை 1000 கண்ணுள்ள உளவாளி என்று வேதம் புகழ்கிறது. நாங்கள் அறிந்தோ அறியாமாலோ செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு கொடு என்று பிராமணர்கள் தினமும் மாலை நேர மந்திரத்தில் மன்றாடுகிறார்கள்.அப்பேற்பட்ட வருணன் போல பலம்  கொடு என்று அதர்வண வேத முனிவர் பாடுகிறார்.

 18. அரச குமாரன்

இங்கு க்ஷத்ரியவீரன் போல பலம் தருக என்று வேண்டுகிறார் புலவர். ; நம் நாட்டிற்குப் பெயர் ‘பாரதம்’. காரணம் என்ன? பரதன் என்ற வீரச் சிறுவன் ஆண்ட நாடு இது. அவன் சிறு வயதிலேயே சிங்கக்குட்டிகளைப் பிடித்து விளையாடுவான் என்று பாரதியாரும் காளிதாசனும் பாடுகின்றனர் அப்பேற்பட்ட அரசகுமாரனின் பலத்தைக் கொடு  என்று வேண்டுவதில் வியப்பில்லை

19. முரசு

முரசு என்னும் drum டமாரம் குறித்து வேதத்திலும், சங்கத் தமிழ் நூல்களிலும் , பகவத் கீதையிலும் காண்கிறோம். அதை அடித்தவுடன் வீரம் வெளிக்கிளம்பும்; எதிரிகள் வயிற்றில் புளி கரைக்கும்! ‘வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே’ என்கிறார் பாரதியார் . முரசு கட்டில், அரண்மனை முற்றத்தில் இருக்கும்’ . அதை மரியதையுடன்  பூஜை செய்யவேண்டும். ஒரு புலவர்  அதில் களைப்பில்/அசதியில் தூங்கியதை அறி ந்தும் அவனை மன்னன் மன்னித்து பரிசு வழங்கிய செய்தி சங்கத் தமிழ்ப் பாடல்களில் உளது. ரிக் வேத காலம் முதல், முரசின் ஆற்றல் பேசப்படுகிறது. ‘பூமி துந்துபி’ என்ற பெயரில் பூமியில் குழி வெட்டி, பிராணிகளின் தையல் போர்வையைப் போர்த்தி, டமாரம் அடித்து, உலகையே கலக்கிய செய்தி வேதத்தில் உளது .அப்பேற்பட்ட பலம், எனக்கு வேண்டும் என்கிறார் முனிவர்.

20.அம்பு

தயார் நிலையில் உள்ள அம்பு DRAWN ARROW என்று முனிவர் சொற் பிரயோகம் செய்கிறார். ராமபிரான் வில்லின் நாணில் ஒரு அம்பினைப் பூட்டினால் உலகே அஞ்சுமாம் . சுக்ரீவன் வைத்த test டெஸ்டில் / பரீட்சையில் ராமன் ஒரே அம்பில் 7 மரா மரங்களைத் துளைத்ததை நாம் அறிவோம். ‘வில்லுக்கு விஜயன்’/ அர்ஜுனன் என்ற சொல்லையும் நாம் அறிவோம். இன்றும் உல க வில் வித்தைப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியர்களுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவது வில் வித்தையே. அத்தகைய வில்லின் ஆற்றலை எனக்கு நல்கு என்கிறார்  முனிவர் .

21.குதிரை

அஸ்வமேத யாகம் என்னும் குதிரை யாகம் இந்துக்களுக்கே உரித்தான சிறப்பான போர் உத்தி ஆகும் . ‘’தைரியம் இருந்தால் என் குதிரையைப் பிடி’ என்று சவால் விட்டு, குதிரையை, வீரர்கள் பின் தொடர, அனுப்புவார்கள். அது செல்லும் நாடெல்லாம் அதை அனுப்பிய சக்கரவர்த்திக்குச்  சொந்தம். அதாவது கப்பம்/ வரி கட்ட வேண்டும். இப்படி 100 அஸ்வ மேத யக்ஞம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும். இன்றும் எஞ்சின்களின் சக்தியைக் குறிக்க ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லே பொறியியலில் பயன்படுத்தப்படுகிறது அஸ்வ என்பது குதிரையை மட்டும் குறிக்காமல் வேகம் SPEED , POWER என்றே பொருள்படும் என்பதை  இந்த ஹார்ஸ் பவர் HORSE POWER  சொல் பிரயோகம் காட்டும். அது மட்டுமல்லாமல் குதிரை விந்துவின் HORSE SEMEN  வீரியம் பற்றியும் ஒரு அதர்வ வேதப் பாடல் இருக்கிறது. கி.மு 1300க்கு முன்னர், அதாவது 3300 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருத எண்களுடன் கக்கூலி எழுதிய அஸ்வ சாத்திரம் நமக்கு TURKEY ருக்கியில் கிடைத்துள்ளது. ஆக குதிரையை வளர்ப்பு மிருகமாக அறிமுகப்படுத்தியது இந்துக்களே. அப்பேற்பட்ட குதிரையின் வேகம், பலம், வீரியம் எனக்குக் கிடைக்க  வேண்டும் என்கிறார் கவிஞர்

22. மன்னன் சூளுரை 

இறுதியாகப் புலவர் பட்டியலில் காணப்படுவது மன்னனின்  வீர கர்ஜனை; இதை தமிழில் ‘சூளுரை’ என்பர். வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட மட்டும் மன்னரின் வீர முழக்கம் ஏற்பட்டதாக எண்ணிவிடக்கூடாது. எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவர்கள் தலைவர்கள்.இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை கீழே விழும் என்று வீர கர்ஜனை செய்தால் அதை முடித்துக் காண்பிப்பார்கள் .துரியோதணனைப் பிளந்து அவன் ரத்தத்தைத் தடவிய பின்னரே கூந்தலை முடிப்பேன் என்றாள் திரவுபதி ; அதை நிறைவேற்றியும் காட்டினாள் ; அவள் க்ஷத்ரிய குலப் பெண் . ஆக அரசனின் வீர முழக்கம் வெற்றுரை அல்ல ; வீர உரை.  முனிவர் வேண்டுவதும் அத்தகைய ஆற்றலே!

xxx

எனக்கு பலம் கொடுங்கள் என்று 4 வரிகளிலும் அதிதி தேவியிடம் முறையிட்ட முனிவர் ஏன் 22 பொருட்களைப் பட்டியலிட்டார் என்பதை ஒவ்வொருவரும் யோசித்தால் இன்னும் பல விளக்கங்கள் கிடைக்கக்கூடும்.

Xxxx subham xxxx

Tags-  வருணன், ஒரிஜினல் தமிழர், முரசு,. அதர்வண  வேதம் , பாடம் 3, குதிரை

மஹாகவி காளிதாஸ்! – 3 (Post No.10,400)

POET KALIDAS IN UJJAIN, MADHYA PRADESH
POET KALIDAS IN SHANGHAI, CHINA
Poet Kalidas in  Akshardham, Delhi 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,400

Date uploaded in London – –   2 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி காளிதாஸ்! – 3

                                                         காளிதாஸரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்துள்ளன. அவர் எத்தனை சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்?                                                    

கணினி யுகத்தில் இன்று வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயமே! என்றாலும் கூட http://www.tamilandvedas.comஇல் திரு லண்டன் சுவாமிநாதன் எழுதியுள்ள ஒரு ஆய்வுக்கட்டுரை இது பற்றிய சில விவரங்களைத் தருகிறது.    Amazing Statistics on Kalidasa என்ற அந்தக் கட்டுரை காளிதாஸன் சுமார் 2,11,429 சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும் என்று தெரிவிக்கிறது. 37 படைப்புகள் அவருடையவை. அவரது 3 நூல்களுக்கு மட்டும் 93 விளக்கவுரைகள் – பாஷ்யங்கள் உள்ளன. 1250 உவமைகளை அவர் கையாண்டுள்ளார். ரகுவம்சத்தில் 29 அரசர்களை அவர் குறிப்பிடுகிறார். இப்படி பல விவரங்களைத் தரும் கட்டுரையை நீங்கள் www.tamilandvedas.com கட்டுரையில் படிக்கலாம்.                            விக்கிரமாதித்தன் அரசவையில் இடம் பெற்றிருந்த மேதைகளில் மஹாகவி காளிதாஸரின் கவித் திறன் பாரதமெங்கும் பரவி இருந்ததை வரலாறு வியப்புடன் பொன்னேட்டில் பொறிக்கிறது! மஹரிஷி அரவிந்தரோ,  “வால்மீகி, வியாஸர், காளிதாஸர் ஆகியோர் புராதன இந்தியாவின் சாரம்என்று வியந்து கூறுகிறார். அறநெறி, அறிவுத்திறன், உலகியல் பொருள் ஆகிய மூன்றிலும் ஆர்யர்கள் எவ்வளவு மேம்பட்டிருந்தனர் என்பதை அவர்கள் தங்கள் நூல்களில் சித்தரிக்கின்றனர் என்று மேலும் கூறும் அவர் மனித ஆன்மாவின் மேம்பாட்டை அவர்களது கவிதைகள் சித்தரிக்கும் பாங்கைப் புகழ்கிறார்.                                                                                                                                                எது எப்படியானாலும் காளிதாஸர் பல் துறை மேதை. சொற்களையும் அதன் ஆழத்தையும் சொல்லும் பாங்கையும் மனித குலத்திற்குச் சொல்ல வேண்டியதையும் அறிந்த விற்பன்னர் அவர். அவரது காவியங்களின் வர்ணனைகள் தென் பாரதத்தையும் வட பாரதத்தையும் அற்புதமாக வர்ணிப்பதால் அவர் நாடு முழுவதும் சுற்றி வந்த பயணி என்பதும் அவர் ருதுக்களை வர்ணிப்பதை வைத்து அவர் இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர் என்பதும் தெரிய வரும். ரகுவம்சம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், அபிஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், ருதுசம்ஹாரம் ஆகிய அற்புத கவிதை காவியங்களில் ஜோதிடக் குறிப்புகளையும் தேவ ரகசியங்களையும் காளிதாஸர் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்வது அவர் அருள்சக்தி படைத்த மாமேதை என்பதோடு பல்கலை வித்தகர் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

காளிதாஸரின் ரகு வம்சமும் குமார சம்பவமும் இதிஹாஸமாகும்.  மேக தூதம் கண்டகாவியமாகும். அபிக்ஞான சாகுந்தலம், விக்ரமோர்வசீயம், மாளவிகாக்னி மித்ரம் நாடகங்களாகும். சிருங்கார ரஸத்தைச் சுவைபடச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே தான்! சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என்ற இரு வகை அலங்காரங்களைக் கையாளுவதிலும் அவர் நிபுணர்!                                      

காளிதாஸரைப் பற்றி நூற்றுக்கும் மேலான சுவையான சம்பவங்கள் உள்ளன.இவரது முழு வாழ்க்கையை அறிவதோடு இவரது நூல்களைப் படிப்பது இந்திய கலாசாரத்தை அறிய விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.                                

                                                                                                                        காளிதாஸர் நூற்றுக்கணக்கான நட்சத்திர ரகசியங்களை தன் நூல்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுக் கொண்டே செல்கிறார். மாதிரிக்கு, ஸோமதாரையை ஸ்வர்க்க பத்ததி என்றும் (ரகுவம்சம் 9-87) அஸ்வினி நட்சத்திரத்தை குதிரை தலை போல இருக்கிறது (தன்வி கோடகமுகாக்ருதௌ த்ரிபே) என்றும் அவர் கூறுவதைக் குறிப்பிடலாம்! நவீன வானவியல் நிபுணர்கள் நட்சத்திர தொகுதிகளைப் பற்றி இன்று என்ன கூறுகிறார்களோ அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விளக்கமாக அவர் குறிப்பிட்டிருப்பது வியக்க வைக்கும் விஷயம்!

உத்தரகாலாம்ருதம் என்ற ஜோதிட நூல் காளிதாஸரால் இயற்றப்பட்டதாகக் காலம் காலமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒரு இலக்கிய மேதையே இதை எழுதி இருக்கக் கூடும் என்பதால் மஹாகவி காளிதாஸரே நிச்சயமாக இதை இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுவர்.ஆனால் இதை எழுதியவர் இன்னொரு காளிதாஸர் என்றும் (பிற்காலத்தில் புழக்கத்தில் வந்த சரஸ சல்லாபம், உத்யோகம் போன்ற வார்த்தைகளையும் ஆந்திர மற்றும் பாரசீக பாஷைகளைப் பற்றிய அவரது குறிப்புகளினாலும்) அவர் 16 அல்லது 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த நூலின் சுவடிகள் சென்னையில் உள்ள கவர்ன்மெண்ட் ஓரியண்டல் மானஸ்க்ரிப்ட் லைப்ரரி உள்ளிட்ட பல நூலகங்களில் உள்ளன.வேத ஜோதிடத்தை உத்தர காலாம்ருதம் போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை என்ற புகழ் இந்த நூலுக்கு உண்டு.பல்வேறு அறிஞர்களின் விளக்க உரையுடன் எல்லா கடைகளிலும் இது கிடைக்கிறது.           

                                                                                                                12 பாவங்களின் முக்கியத்துவம். கிரஹங்களின் முக்கியத்துவம், குளிகை, மாந்தியை நிர்ணயிக்கும் விதம், ஒரு மனிதனின் ஆயுளை நிர்ணயிக்கும் முறை,கேந்திர திரிகோணங்களின் முக்கியத்துவம், ராஜயோகம், விபரீத ராஜ யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட ஏராளமான யோகங்கள் பற்றிய அபூர்வமான விளக்கங்கள், தசா காலமும் அதன் பலன்களும் என்று இப்படி ஜோதிட களஞ்சியமாக அனைத்து விஷயங்களையும் இந்த நூல் விளக்குகிறது.இதை ஒரு ஜோதிட பொக்கிஷம் என்றும் ஜோதிட புதையல் என்றும் ஜோதிடர்களும் ஜோதிட ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.                                                                                                                                                                        காளிதாஸர் இந்தியாவின் சாரம் என்றால் உத்தரகாலாம்ருதம் ஜோதிடத்தின் சாரம் என்று ஒரே வரியில் கூறி விடலாம்!      

                                                                                              காதலின் மென்மையையும் மேன்மையையும் உணர வேண்டுமா? தேவ ரகசியங்களை அறிய வேண்டுமா? மனித மனத்தின் உன்னதமான அகல நீள ஆழங்களை தரிசிக்க வேண்டுமா?பாரதம் போற்றும் ஆன்மீக சிகரத்தில் ஏற வேண்டுமா? ஜோதிடக் கடலை ஒரே மடக்காகக் குடிக்க வேண்டுமா? இவை அனைத்துக்கும் ஒரே வரியில் பதில் உண்டு: காளிதாஸரைப் படியுங்கள்! காளிதாஸரை மட்டும் படியுங்கள், போதும்!!   “PORTABLE INDIA” “எடுத்துச் செல்லப்படக்கூடிய பாரதம்” என்று சுருக்கமாக அறிஞர்களால் அவர் வர்ணிக்கப்படுகிறார்.                                                            காலத்தை வென்ற கவிஞர்களுள் சம்ஸ்கிருத மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளிலேயே முதல் இடத்தைப் பிடிப்பவர் காளிதாஸரே என்பதில் ஐயமில்லை. வாழ்க காளிதாஸர் புகழ்! நன்றி, வணக்கம்!

IDIOT WHO BECAME AN EINSTEIN OF LITERATURE
KALIDASA IS EQUAL TO 100 SHAKESPEARES

*** முற்றும்

TAGS — காளிதாஸ், KALIDASA, காளிதாசர் 

WHO IS LONDON SWAMINATHAN- 11- VISIT TO SAMADHIS CONTINUED (Post No.10,399)

MANTRALAYA VISIT; ON THE BANKS OF RIVER TUNGABHADRA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,399

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON SWAMINATHAN AS TAMIL- MALAYALEE HEALTH ADVOCACY PROJECT MANAGER

Sri Santhanandha of Pudukkottai visited our house several times in Madurai. I had been to Pudukkottai Bhuvaneswari Temple and Judge Swamigal Adhishtanam (Samadhi). I went to Skandashram in Chennai as well.

In 2015, I had been to Shirdi Sai Baba temple with his Samadhi and a few of his disciples Samadhis.

When I had been to Delhi in 1977, I was booked in Delhi City Tour Bus. I was taken to Gandhiji Samadhi at Raj Ghat and Nehru Samadhi.

I had been to Puttaparthi several times from 1963 and as a routine everybody goes to Baba’s mother Eswaramba’s Samadhi.  I also went there with the group.

Just before the Covid out break in 2019  I was in India . I went to Tirukkovilur and had the Darshan of Sri Gnanananda Swamigal Samadhi. I had his darshan long back at Madurai. We went to the upstairs of Pazakkadai Thangavelu’s Fruit shop and had his blessings. I went with my parents.

 I was so fascinated by Sri Sadasiva Brahmendra’s short and sweet Sanskrit Kritis. So I made it a point to visit Nerur to have his darshan. When I went there, I was wondering what made him to come to a remote village and attain Samadhi. Because of such great saints, some remote places become famous. It is the  same story with every Swamiji. Puttaparthi, Shirdi and many other villages were unknown before the birth of great men. Some places like Tiruvannamalai and Tirukkovilur are already famous because of ancient temples.

When I went to Pondichery I went to the Samadhis of Aurobindo and Mother. At Kanchipuram I went to Paramacharyas Samadhi

At Truvannamalai I had the Darshan of Samadhis of Sri Seshadri Swamikal and Sri Ramana Maharishi. Since other Samadhis were not open at the odd time we went, we stood outside and paid our obeisance.

I had been to Haridwar twice and Rishikesh once . At Rishikesh, we went To swami Sivananda’s Samadhi.

During my last trip to India in 2019 I had been to Melmalaiyanur and had the darshan of Sannu Munivar Samadhi. At Karur temple we saw Karuvur Siddhar Samadhi.

I used to wonder how come Ramalinga Swamikal , also known as Arutprakasa Vallalar, praised Chennai as Dharuma migu Chennai, i.e. Chennai filled with Dharma (location of charitable activities). My impression of Chennai is a city of bad politicians, immoral film actors and actresses and drunkards;  but when I studied the Siddhar Samadhis , I came to know over 100 Siddhar Samdhis are located in Chennai and its suroundings. And famous Saivite and Vaishnavite shrines sung by great saints are there. So I requested my friend to take me on his motor cycle to as many Samadhis as possible and he took me to a few Samaadhis of known and unknown Sidhdhars.

LOT OF FAMOUS TEMPLES IN Tamil Nadu has at least one Siddhar Samadhi there. Madurai Meenakshi Temple has one Siddhar Shrine very near Durga Shrine. It may be one of Siddhar Samadhis.

I had been to Manthralayam in December 1997.

At Mantralayam,  myself and my brother Prof.Suryanarayanan were waiting in the queue before Mantralaya Shrine . We were talking in Tamil. Then a woman just behind us asked whether we come from Tamil Nadu. When I said I am coming from Madurai and I worked for Dinamani for 16 years before going to London. Immediately she said my father’s name because she had been to Pattimandram (Tamil Debates)  at Dinamani Office Madurai. She was famous speaker Mrs Sarasvathy Ramnathan, Principal of Pallathur Women’s College.  She was very happy to meet us. Somehow our topic touched about Andhra and the Prakrit literature that flourished on the banks of Godavari. We touched the subject of most famous Prakrit book Gatha Sapta Sati. Then I told her though I read many English translations, it is a pity that none is available in Tamil. Immediately she told me that she got the Tamil Translation by M G Jagannatha Raja of Rajapalayam. She promised me to send it to me and to my surprise it came within two weeks to my brother’s college where he was working as the Principal. Till this day I have been using it in my comparative literature research. It was a memorable trip. The book is still on my desk with her signature.

Wherever I go to Ashrams,  I buy some books or pictures just to support the great Ashrams that have come over the shrines of the saints.

Being a resident of Madurai until 1986, I had been to Kulanthaiyananda Swamigal Adhistanam at Arasaradi. Once it must be a place with some trees and groves. Now it has become a junction of two roads with very heavy traffic. There is a powerful Sri Chakra installed.

Please see the links given below as well:–

Yatra to Shirdi Baba Samadhi (Post No. 2373) | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/12/08 › yatra-to-shir…

8 Dec 2015 — I was planning to visit Shirdi for several years and at last it … My driver told me that there will be tea stalls along the road for those …

Nerur | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › nerur

30 Apr 2019 — SAMADHI OF A GREAT SAINT IN NERUR (Post No.6328) … More in my previous posts. … Sadasiva Brahmendra – A Siddha who did …

Tirukkovilur | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › tiru…

·

16 Mar 2018 — WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S … Rama Temple, Vadalur Vallalar Ashram and Tirukkovilur Tapovanam.

MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223) – Swami’s …

http://swamiindology.blogspot.com › 2019/04 › more-t…

3 Apr 2019 — This is a non- commercial blog. … Each temple gave me some interesting new information. … Namakkal Namagiri thayar temple. To be continued…………………………….

WITH MY BBC COLLEAGUES IN 1987; LOCATION- WOODNORTON NEAR BIRMINGHAM

—subham—

 AM  CONDUCTING A QUIZ PROGRAMME FOR rADIO vERITAS BEFORE 1987
Please see the links given below as well:–

tags-  london swaminathan 11, samadhis, swamijis,

NERUR SADHASIVA BRAHMENDRAL SAMADHI
Mahabalipuram , year 2002

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம் -2 (Post.10,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,398

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர் நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே எனக்கு  பலம் தருக என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியா னத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையு ம்  புலவர் குறிப்பிட்ட தன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

பட்டியல்  இதோ:

4.நெருப்பு

தீ (FIRE) என்பதை புகழ்ந்து வேதங்களில் ஆயிரக்கணக்கில் மந்திரங்கள் உள்ளன . பிராமணர்கள் வீட்டில் ஒரு காலத்தில் மூன்று யாக குண்டங்கள் இருந்தன என்று சங்கத் தமிழ் நூல்கள் சொல்லும் ; ‘முத்தீ அந்தணர்’ என்று சங்க நூல்கள் பிராமணர்களை புகழ்ந்து பாடும் . அதில் கார்ஹபத்யம் என்னும் அக்கினி அணையவே அணையாது. அதிலிருந்துதான் அவர்கள் யாக யக்ஞங்களுக்கு அக்கினி எடுப்பார்கள். ஒருவரின் இறுதிச் சடங்கின் போது அந்த அக்கினியால் சிதைக்கு தீ மூட்டுவர். அதற்கு முன்னர்  அவருடைய மகன், பேரக்குழந்தைகளுக்கு திருமணம் ஆகி இருந்தால் அதிலிருந்து அவர்களும் ஒரு சட்டிப்பானையில் ஒரு அக்கினி மூட்டி இருப்பர். இது அணையவே அணையாது. அதாவது பல நூறு தலைமுறைகளுக்கு வாழையடி வாழையாக அக்கினி தொடரும். மின்சார விளக்கும், தீப்பெட்டிகளும் இல்லாத காலத்தில் அடுப்பெரிக்கவும் இந்த அக்கினியே உதவியது. அது மட்டுமல்ல. பிராமணச்   சிறுவர்கள் தினமும் காலையில் அக்கினி மூட்டி ஸமிதாதானம் செய்கையில் எனக்கு ‘ஓஜஸ், தேஜஸ், வர்ச்சஸ் , மேதை போன்ற புத்தி’ தா என்று சொல்லி உடலில் பல இடங்களில் ஹோம சாம்பலை இட்டுக்கொண்டனர் . சுருக்கமாகச் சொல்லின் அக்கினி போல வாழ்வில் ஒளி நிரம்ப வேண்டினர்.

5.பிராமணன்

நெருப்புக்கு அடுத்தாற்போல் பிராமணனை வைத்திருப்பது சிறப்புடைத்து. ஏனெனில் பிராமணன், க்கும் சக்தி, அழிக்கும் சக்தி, இரண்டும் படைத்தவன் ; அகலாது அணுகாது தீக்காய்வார் போல அவர்களிடம் இருக்க வேண்டும். இதையே ஒரு தமிழ்ப் புலவர் ‘பழகினும் பார்ப்பாரை தீப்போல் ஒழுகு’ என்பார். எவரேனும் ஏதேனும் குற்றம் செய்தால் சபித்து விடுவார்கள்; அது பலித்துவிடும் ; நான் சொல்லுவது புத்தர் தம்ம பதத்தில் 26 ஆவது அதிகாரத்தில் சொல்லும் உண்மைப் பார்ப்பனரை ! பிராமணன் கொலை செய்தாலும் அரசனையே வீழ்த்தினாலும் அவனுக்கு தண்டனையை கிடையாது என்கிறார் புத்தர் தம்மபதத்தில்; இதையே மநுவும் செப்புவான். இது எல்லாம் ‘நடமாடும் தேவர்’= ‘பூசுரர்’ என்று ஸ்ம்ருதிகள் சொல்லும் உண்மைப் பார்ப்பனர் பற்றியது. சாணாக்கியன் போன்ற பலம் கொண்ட பார்ப்பனர் பற்றியது ; பிராமண விரோத நந்த வம்சத்தை வேரொடு பிடுங்கி எறியும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சாணக்கிய சபதம் செய்த பார்ப்பனனைப் போல பலம் தா! என்கிறார் புலவர்

(எச்சரிக்கை :– மது பான விடுதி , மாதர் கேளிக்கை விடுதி, மதுரை முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடைக்குச் செல்லும் சென்னை பார்ப்பனர்களை ஒப்பிட்டு நொந்து போய் விடவேண்டாம்!)

6.சூரியன்

சூரியனைப் பற்றி அதிகம் எழுதத் தேவையே இல்லை ; அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் 12 முறை கீழே விழுந்து வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்ததால் கண் ஒளி கிடைத்தது. உடல் ஆரோக்கியமாக இருந்தது. மூன்று வருணத்தினர் பூணுல் அணிந்து, நாள் தோறும் 3 முறை சூரியனை வணங்கி காயத்ரீ மந்திரம் சொல்லி வணங் கினர் ; இதனால் எல்லோரும் மேதாவியாக இருந்தனர் . சூரியன் இருந்தால்தான் மழை பெய்யும்; தாவரங்கள் வளரும்; உணவு கிடைக்கும் ; கிருமிகள் அழியும் என்று வேத மந்திரங்களே விஞ்ஞான உண்மையையும் பேசுகின்றன .

7.யானை

யானையின் மகத்தான பலம் , நினைவு ஆற்றல் ஆகியன உலகப் பிரஸித்தம் . அது மட்டுமல்ல. “யானையால் யானையாத்தற்று” = ‘யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடி’ என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் சொன்னதை வள்ளுவரும் குறளில் சொல்லுவதை காணலாம் .தமிழர்களின் ‘சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடி’ என்பதற்கு சமம் இது; கணபதியின் உருவத்தை யானையில் காண்பது இந்துக்களின் சிறப்பு

8.சிறுத்தை (Cheetah)

புலிக்கு உள்ள வீரம் சிறுத்தைக்கும் உண்டு. ஆயினும், புலியை விட சிறுத்தை ஒரு படி மேல்; இப்பொழுது ‘என்சைக்ளோபீடியா’, ‘கின்னஸ் புஸ்தக’த்தைத் திறந்து பார்த்தால் உலகிலேயே அதி வேகம் உடைய பிராணி சிறுத்தை என்பதை (Fastest Animal on Earth – Cheetah) அறிவோம். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர் இந்துக்கள். ஆகவே சிறுத்தை (Panther, leopard, Cheetah)  போல எனக்கு பலம் தா என்று அதிதி தேவியை வேண்டுகிறார் புலவர்/கவி/ ரிஷி/முனிவர்.

சிறுத்தைக்கு சீட்டா cheetah என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் . இதுவே சம்ஸ்க்ருத, அல்லது தமிழ் சொல்லின் அடிப்படையில் பிறந்தது போலும் ; சித்ரக அல்லது சீறுவது என்ற இரண்டு வேர்ச் சொல்லுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

9.தங்கம்

தங்கம் என்ற உலோகம் இல்லாத பழைய கலாசாரம் உலகில் இல்லை. மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகங்களில் ஒன்று இது ;  தங்க பஸ்பம் சாப்பிட்டு 100 ஆண்டு வாழும் முறையையும் மனிதன் கண்டான். பெண்களும்  அதை அணிந்து மகிழ்ந்தனர்; மற்றவர்களை மகிழ்வித்தனர். சுடச் சுடரும் ஒளிரும் பொன் போல என்பதிலிருந்து இதன் சிறப்பு விளங்கும். ஞானிகளைப் பொறுத்தவரையில் காமினி ,காஞ்சனம் (பெண்ணும், பொன்னும் ) எதிரிகள் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் பல கதைகள் மூலம் விளக்குவார்; முனிவர்கள் ‘ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர்’ என்று கீதையிலும் (6-8; 14-24)தாயுமானவர், சேக்கிழார் பாடல்களிலும் (பெரிய புராணம்) காண்கிறோம். ஆகவே தங்கமும் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறது. அது வீட்டில் இருந்தால் பலம் (asset)  என்பதை அறிந்தே அதை பெண்களின் உடலிலும் பூட்டினர்.

10.தண்ணீர்

உலகில் தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் சம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உண்டு. தண்ணீரைப்  பற்றியும் அதன் அற்புத குணங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான மந்திரங்கள் வேதங்களில் உள்ளன. தண்ணீரை ‘அமிர்தம்’ என்று வேதம் தொடர்ந்து புகழ்கிறது. அதை அப்படியே திருவள்ளுவரும் ‘அமிழ்தம்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினால் பாடுகிறார். இந்துக்கள் பனி மூடிய இடங்களிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று சொல்லும் ஆட்களுக்கு ‘செமையடி, மிதியடி, தடாலடி’ கொடுக்கும் பாடல்கள் இவை. பிறப்பு முதல் இறப்பு வரை தண்ணீரைப் பயன்படுத்தும் ஒரே இனம் இந்துக்கள். நீரின்றி அமையாது உலகு என்ற வேதக் கொள்கையை அப்படியே வள்ளுவனும் சொன்னான். இன்றும் பிராமணர்கள், தினமும் மூன்று முறை தண்ணீரை வைத்து சந்தியாவந்தனம் செய்கின்றனர். வேதத்தில் உள்ள ஹோமியோபதி ஹைட்ரோதெரபி (Homeopathy and Hydrotherapy) பற்றி இதே ‘பிளாக்’கில் கட்டுரைகள் உள .

11. பசு

மனித இனத்துக்கு இந்துக்கள் கண்டுபிடித்துக் கொடுத்த மாபெரும் கண்டுபிடிப்புகள்:–

பசுமாடு, குதிரை, இரும்பு,  டெசிமல் சிஸ்டம் /தசாம்ச எண்கள் , யோகம், ஆயுர்வேதம்

இவை அனைத்துக்கும் சான்று உலகிலேயே பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் உளது. எகிப்திய, பாபிலோனிய,சீன, மாயா நாகரீகங்களில் அவை இல்லை. இருந்தாலும் போற்றும் அளவுக்கும் இல்லை; அவை போற்றப்படுவதும் இல்லை. கோ மாதாவும் பசும் பாலும் இந்துக்கள் உலகிற்கு அளித்த மாபெரும் கொடை

 12.ஆண்மகன்

ஆண்மை என்றால் என்ன, பெண்மை என்றால் என்ன என்பதை விளக்கத் தேவையே இல்லை. ரிக் வேதம் முழுதும் எனக்கு ‘வீர மகன்’ பிறக்க வேண்டும் என்று பாடுகின்றனர். இன்றும் உலகில் மிகப்பெரிய தொழில் ராணுவம் ஏன் ? வீர மகன்கள் இருந்தால்தான் நல்லோர் வாழ முடியும். போர் புரிய மறுத்த அர்ஜுனனை உன் ஆண்மையை இழந்து பேடியாக மாறிவிட்டாயா? என்கிறார் கிருஷ்ணன். ஆக, புலவர் 22 டாபிக் topics குகளில் ஆண் மகன் (புருஷன் = பெர்சன் person is derived from purusha என்ற சொல்லின் மூலம்) என்பதையும் சேர்த்தத்தில் வியப்பில்லை

13.ரதத்தின் அச்சு

‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்று வள்ளுவன் சொன்ன வாக்கு இந்த வேத மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டதே; ‘அச்சு’ என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல். அதிலிருந்து பிறந்ததே ஆக்சிஸ் Axis என்னும் English  சொல். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்ற வாமன அவதாரக் கதையை விளக்குவதே ‘அச்சு’ உவமை. ‘தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே’; சிலர் அமைதியாக இருந்து பெரும்பணி ஆற்றுவார்கள் என்பதே இதன் பொருள். பெரிய தேருக்கு –திருவாரூர்த் தேருக்கு அச்சு கழன்றால் என்ன ஆகும்? ஆக. அச்சு போல என்னை ஆக்கு என்கிறார் புலவர். அச்சு போன்ற பலம்!

,14.எருது

சிந்து சமவெளியில் அதிகம் காணப்படும் முத்திரை எருது (BULL) . வேதம் முழுவதும் இந்திரனை எருது, காளை என்றே புலவர்கள் பாடுகின்றனர். காட்டு மிருகங்களில் சிங்கம் எப்படியோ ப்படி நாட்டு மிருகங்களில் எருது. இதனால்தான் கிருஷ்ணர் காளை அடக்கியதை சங்கத் தமிழ் நூலான கலித்தொகை பாடுகிறது ; மஞ்சு விரட்டு ,ஜல்லிக்கட்டு என்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இது பாகவத புராணத்தில் உளது; யாதவ குல மக்கள் இன்று வரை நமக்கு காத்து அளிக்கின்றனர். ‘காளை போல பலம் தா’ என்று புலவர் பாடுவதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையா?

15.வாயு

வாயு வேகம், மனோ வேகம் என்பன  வேதம் முழுதும் வரும் உவமைகள். தமிழனும் இதே உவமையைக் கையாளுகிறான் புயற்காற்றைக் கண்டவர் களுக்கு இதன் பொருள் நன்கு புரியும் ; ஆக , காற்று போல பலம் தா என்பது ஒரு பொருள்; சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல (ஆக்சிஜன் ) நான் இருக்க வேண்டும் என்பது இன்னொரு பொருள்; ஏனெனில் பிராணாயாமம் என்னும் ஆயுளை அதிகரிக்கும் டெக்னீக்கைக் கண்டுபிடித்து நாம்தான்;  தினமும் அதை பிராமணர்களும் மூன்று வேளைகளில்  விதித்தது இந்து மதம்; அந்தக் காலத்தில் 3 வருணத்தாரும் செய்தது ‘சந்தியா வந்தனம்- பிராணாயாமம்’; இந்தக் காலத்தில் பிராமணர்களும் மறந்து வருவது கலியுகத்தின் தாக்கம். ‘மருத் தேவர்கள்’ பற்றிய பாடல்களில் மாருதியின் (காற்று தேவன்) புகழைக் காணலாம் .

16.மழை – .

மழையின் சிறப்பு, பலம், முக்கியத்துவத்தை வேதம், ‘பர்ஜன்யன்’, ‘மருத்’ பாடல்களில் வலியுறுத்துகிறது . வள்ளுவன், ‘வான் சிறப்பு’ என்ற பத்து குறள்களில் விளக்குகிறான். கபிலர் என்ற பிராமண புலவரோ அங்கதச் செய்யுளில்  .மழையை புகழ்கிறார் ; எல்லோரும் பாரி, பாரி என்று என் இப்படி பாரியையே பாடுகிறார்கள் ? உலகில் மாரியும் (மழை ) உளதே! என்பார்; ஆக, முனிவர் வேண்டுவது மழை போல சிறப்பு!

To be continued……………………………..

tags – அதர்வண வேதம், பிராணிகள் , பகுதி 2, பாடம்

மஹாகவி காளிதாஸ்! – 2 (Post No.10,397)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,397

Date uploaded in London – –   1 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி காளிதாஸ்! – 2

போஜ மஹாராஜனுக்கு ஒரு ஆசை வந்தது. தான் இறந்து விட்டால் அதற்கு சரம கவியை எப்படி காளிதாஸன் பாடுவான் என்று அவனுக்குத் தோன்ற தனக்கு ஒரு சரம கவியைப் பாடுமாறு போஜன் காளிதாஸனை வேண்டினான். ‘ஐயோ, இப்படிக் கேட்கலாமா என்று கண்ணீர் சிந்திய காளிதாஸன் மன்னனை விட்டு உடனே அகன்றான். சில நாட்கள் கழித்து போஜனே மாறு வேடம் பூண்டு காளிதாஸன் சென்ற இடத்தைக் கண்டு பிடித்து அவனைச் சந்தித்தான். ‘எங்கிருந்து வருகிறீர்? என்று மாறுவேடம் பூண்ட மன்னனைப் பார்த்து சகஜமாக காளிதாஸன் கேட்கவே, உடனே போஜன் ‘தாரா நகரிலிருந்து வருகிறேன் என்றான். மன்னரின் நினைவாகவே இருந்த காளிதாஸன் ‘மன்னர் போஜன் சௌக்கியமா என்று ஆவலுடன் கேட்டான். “ஐயோ, அந்த விஷயம் உங்களுக்குத் தெரியாதா? மன்னர் போஜன் இறந்து விட்டார் என்று ஒரு பொய்யைச் சொன்னான் போஜன்.

இதனைக் கேட்ட காளிதாஸன் தாங்க முடியாத துக்கத்தால் ஆவென்று அலறினான். அவன் வாயிலிருந்து துக்கம் தாளாமல் சரம கவி ஒன்று வந்தது இப்படி:                                                                      

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி |                       

 பண்டிதா: கண்டிதா: சர்வே போஜராஜே திவம் கதே||                                        

अद्य धारा निराधारा निरालम्बा सरस्वती।
पंडिताः खंडिताः सर्वे भोजराजे दिवंगते।।                                                                                                           

 “தாரா நகரம் நிராதரவாய் ஆகி விட்டது! கலைத் தெய்வமான சரஸ்வதி ஆதரவற்றவளானாள். போஜராஜன் ஸ்வர்க்கம் அடைந்து விட்டான் என்பதால் எல்லா பண்டிதர்களும் துக்கத்தால் துடிக்கின்றனர்.”

காளிதாஸன் வாக்கு சரஸ்வதி வாக்கு என்பதால் இதை மகிழ்ச்சியுடன் கேட்ட போஜ  மன்னன் உடனே கீழே விழுந்து இறந்து போனான். அனைத்து மக்களும் அங்கு கூடி, நடந்ததை உணர்ந்து காளிதாஸனிடம் கூற உடனே தான் பாடிய கவிதையைச் சற்று மாற்றிப் பாடினான் காளிதாஸன் இப்படி:                                                                          

அத்ய தாரா சதாதார் சதாலம்பா சரஸ்வதி|                           

பண்டிதா: மண்டிதா: சர்வே போஜராஜ்யே புவம் கதே ||                                                                                                                                                                       

अद्य धारा सदाधारा सदालम्बा सरस्वती।
पंडिताः मंडिताः सर्वे भोजराजे भुवंगते।।                                              

தாரா நகரம் ஆதரவுள்ளதாக ஆகி விட்டது. சரஸ்வதி தேவி ஆதரவுள்ளவளாகி விட்டாள். பண்டிதர்கள் போஜராஜன் பூமிக்கு வந்து விட்டதால் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர். இப்படிப் பாடியவுடனே போஜராஜன் உயிர் பெற்று எழ அனைவரும் மகிழ்ந்தனர்.

போஜன் என்னவெல்லாம் மனதில் நினைத்தானோ அதையெல்லாம் கண்டு பிடித்துக் கவிதையாக்கும் வல்லமை காளிதாஸன் ஒருவனுக்கே உண்டு. இதற்கு ஏராளமான சம்பவங்கள் உரிய கவிதையுடன்.சொல்லப்படுகின்றன –  எடுத்துக் காட்டாக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் காணலாம்.

ஒரு முறை போஜனுடைய நாட்டில் காட்டு மிருகங்கள் பயிர்களை அழிக்க, குடி மக்கள் மன்னனிடம் வந்து முறையிட்டனர். உடனே போஜன் காடு நோக்கிச் சென்று கொடிய மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். நெடுநேரம் ஆன பின்னர் தாகம் அவனை வருத்த அவன் ஒரு சோலைக்குச் சென்று நீர் அருந்தி களைப்பு நீங்கப் பெற்றான். அப்போது குரங்கு ஒன்று நாவல் மரம் ஒன்றின் மீது ஏறி கொம்புகளை அசைத்து சேஷ்டை செய்தது.கிளைகள் ஆடவே, பழுத்திருந்த சில நாவல் பழங்கள் அங்கிருந்த தடாகத்திலே விழுந்தன. அதனால் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற சப்தம் எழுந்தது. இந்த விந்தையான ஒலிக்குறிப்பை மனதில் கொண்ட போஜன் மறு நாள் அரசவை கூடியதும் ‘குளுகுக் குளுகுக் குளு என்ற ஒரு பாதத்தைச் சொல்லி மீதி கவிதையை முடிக்குமாறு கவிஞர்களிடம் கூறினான். அனைத்துக் கவிஞர்களும் இதென்ன ‘குளுகுக் குளுக்கு என்று நகைத்தனர். காளிதாஸன் மட்டும் உடனே ஒரு ஸ்லோகத்தை இயற்றினான்:

“ஜம்பூ பலானி பத்க்வாநி பதம்தி விமலே ஜலே                                          

கபி கம்பித சாகாப்யோ குளுகுக் குளுகுக் குளு”

என்று சொல்லி நாவல் மரக் கிளையை குரங்கு அசைக்க கொம்பில் பழுத்திருந்த நாவல் பழங்கள் தடாகத்தில் விழுந்த போது எழுந்த சப்தம் குளுகுக் குளுகுக் குளு என்றான். போஜன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தான். அனைத்துக் கவிஞர்களும் மக்களும் காளிதாஸரின் கவிதா சாமர்த்தியத்தை முற்றிலுமாக உணர்ந்தனர்.

உலகினர் காளிதாஸருக்கு அளித்த மரியாதையைக் கண்டு தண்டி முதலான பெரும் கவிஞர்கள் பொறாமை கொண்டனர். ஒரு முறை யார் பெரிய கவிஞர் என்ற பெரும் போட்டி ஏற்பட்டது. முடிவு எட்டாத நிலையில் அனைவரும் சரஸ்வதி தேவியின் முன் கூடினர். சரஸ்வதி தேவியை நடுவராகக் கொண்டு விவாதத்திற்கு முடிவு கட்ட அனைவரும் முனைந்தனர். சரஸ்வதியை வணங்கி யார் பெரிய கவிஞர் என்று கேட்க அசரீரி ஒன்று எழுந்தது. ‘கவிர் தண்டி கவிர் தண்டி! “தண்டியே கவிஞன் தண்டியே கவிஞன் – இந்த முடிவைக் கேட்ட அனைவரும்  ஆஹா ஆஹா என்று கூவினர். தண்டிக்கோ மிகுந்த சந்தோஷம். காளிதாஸர் திகைத்தார். “அப்போது நான்? என்று மிகுந்த வருத்தத்துடன் அவர் சரஸ்வதியைப் பார்த்துக் கேட்க அசரீரி ஒலி மீண்டும் எழுந்தது. ‘அஹம் த்வமேவ, அஹம் த்வமேவ் நானே நீ நானே நீஎன்ற இந்த ஒலியைக் கேட்டதும் தண்டி உட்பட்டோர் காளிதாஸரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். அப்படி சரஸ்வதியின் அருள் கடாக்ஷம் பெற்ற சரஸ்வதி தேவியின் அவதாரம் அவர் என்பது இந்தச் சம்பவத்தால் நிரூபிக்கப்பட்டது.

மஹாகவி காளிதாஸனைப் புகழ்வோர் அனைவரும் ‘உபமா காளிதாஸஸ்ய என்று உவமைக்கு ஒரு கவி காளிதாஸன் என்று கூறுகின்றனர். உதாரணத்திற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம். ரகுவம்சத்தில் சுயம்வரத்தில் இந்துமதி தன் மணாளனை வரிப்பதற்காக வரிசையாக நின்றிருந்த ராஜகுமாரர்கள் அருகிலே செல்லும் போது ‘அவள் ஒளிச்சுடர் போல சென்றாள் (சஞ்சாரிணி தீப ஷிகேன ராத்ரௌ 6 -67) என்கிறார்.

சுடர் அருகே வந்தவுடன் நம்பிக்கையுடன் பிரகாசமாகும் மன்னர்களின் முகம் அவள் நகர்ந்தவுடன் இருண்டதாம்! அற்புதமான இந்த உவமையைப் பல வித அர்த்தங்களுடன் கூறி உலகம் கொண்டாடுகிறத்!                            ரகுவம்சத்தின் ஆரம்ப ஸ்லோகமே உலகைக் கவரும் ஒரு ஸ்லோகமாகும்.

வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்த ப்ரதிபத்யதே|                      

 ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ!

ஜகத்தைப் பரிபாலிக்கும் பார்வதியும் பரமேஸ்வரனும் ‘சொல்லும் பொருளும் போல’ என்று இங்கு காளிதாஸர் குறிப்பிடுகிறார். இதை பிற்காலக் கவிஞர்கள் ஏராளமானோர் அப்படியே எடுத்தாள்வதைக் காணலாம். எடுத்துக் காட்டாக அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் 28ஆம் பாடலில் ‘சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ என்று கூறுவதைச் சொல்லலாம்.

**

to be continued…………..

tags மஹாகவி, காளிதாஸ்! – 2

அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்- பிராணிகள் கற்பிக்கும் பாடம்-1 (10,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,396

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகத்தில் ஈசாப் (Aesop)என்னும் கிரேக்கநாட்டு அடிமை எகிப்தில் இருந்தபோது இந்துக்கள் சொன்ன கதைகளை பிராணிகள், பட்சிகள் பற்றிய சிறுவர் கதைப் புஸ்தகமாக (Animal Fables) வெளியிட்டதை நாம் அறிவோம். அதற்கு முன்னரே மஹாபாரதத்தில் புறாக்கள், ஒரு அகதிக்காக, தீயில் விழுந்து தியாகம் செய்த கதை மஹாபாரதத்தில் உள்ளது . தர்ம புத்திரன் செய்த யாகத்தில் பாதிப் பொன்னிறத் தோலுடைய கீரிப்பிள்ளை (Mongoose) வந்து எல்லோரையும் அசத்தியதையும் நாம் அறிவோம். இலங்காபுரி ‘கிரிமினல்’ ராவணனை ஒழிக்க ஒரு அணிலும் மண் போட்டு அணை கட்டியதை ஆழ்வார் பாடல் மூலம் நாம் அறிவோம்.  அந்த .ராமாயணத்தில் பல பறவைகள், கரடி, குரங்குகள் அணை கட்ட உதவியதையும் நாம் அறிவோம். சிபிச் சக்ரவர்த்தியின் புகழை உலகிற்கு நிலை நாட்ட இந்திரனும் அக்கினியும் கழுகு , புறா வடிவில் வந்த கதையை நாம் சங்க இலக்கிய புறநானுற்றிலும், பிற்கால சிலப்பதிகாரத்திலும் பயிலுகிறோம். மனு நீதிச் சோழனிடம் நீதி கேட்ட பசுவின் கதையையும் அறிவோம். ஊருக்கு ஊர் யானையும் பசுவும் பாம்புகளும் சம்பந்தப்பட்ட கோவில்கள் இருப்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால் இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது.

பாகவத புராணத்தில் தத்தாத்ரேய மகரிஷி பறவை, பாம்பு முதல் பரத்தை ( Prostitute)  வரையுள்ள ஒவ்வொருவரிடமும் தான் கற்ற பாடத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன . நான் இதுவரை சொன்ன எல்லா விஷயங்களும் இந்த ‘பிளாக்’கிலேயே பத்து ஆண்டுகளாக வந்துள்ளன. இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இன்று காண்போம்.

முதலில் இதில் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்கள் பட்டியலைப் பாருங்கள்; பின்னர் இதை ஒரு பள்ளிக்கூட மாணவனிடம் கொடுத்து ஒவ்வொரு விஷயம் பற்றியும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதுக  என்று சொல்லுங்கள். அதே நேரத்தில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு பதிவு செய்துகொண்ட ஒரு இளைஞனிடம் ஒரு ஆராய்சசிப் புஸ்தகம் எழுதுக என்று சொல்லி 22 பேரிடம் கொடுங்கள். ஆனால் எல்லாம் இந்துமதம் சம்பந்தப்பட்ட சங்கத் தமிழ் இலக்கியத்திலிருந்து மட்டுமே, வேத இதிஹாச புராணங்களில் இருந்து மட்டுமே கதைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் . அதிசயப்படும் அளவுக்கு விஷயங்களைப் படிப்பீர்கள் .

பட்டியல்  இதோ:

சிங்கம் , புலி, பாம்பு, நெருப்பு,

பிராமணன், சூரியன், யானை, சிறுத்தை ,

தங்கம், தண்ணீர், பசு, ஆண்மகன்,

ரதத்தின் அச்சு, எருது, வாயு ,மழை

வருணன்  , அரச குமாரன், முரசு ,அம்பு,

குதிரை, மன்னன் சூளுரை 

இதில் சிலர் ரதம், அச்சு ஆகியவற்றை தனித்தனியேயும் பிரிப்பர். ஆயினும் 20க்கு மேலான விஷயங்களை சொல்லி அந்த பலம் அல்லது குணம், அல்லது புகழ் எனக்கு வரவேண்டும் என்று ஒரு ரிஷி பாடுகிறார்.

இதோ துதியும் அதிலுள்ள 4 மந்திரங்களும்

XXX

அதர்வண வேதம் ஆறாவது காண்டம்  துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு -பலம்

1.சிங்கம், புலி ,நெருப்பு, பாம்பு, பிராமணன், சூரியனில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

2.யானை, சிறுத்தை, பொன், புனல், பசு ,புருஷர்களில், எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

3.இரதம் , அச்சு, எருதின் பலம், வாயு, மழை  வருணனது  உக்கிரத்தில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

4.இராஜன்யன் துந்துபி சரம் அஸ்வ பலம் புருஷ கர்ஜனையில் எந்த பலமுண்டோ அந்த பலத்தோடு இந்திரனை பிறப்பித்த சுபகையான தேவி எங்களுக்கு வருக .

கருத்து- பலம், சக்தி ஆகியவற்றைப் பெற;

சுபகை யான தேவி – அதீதி

Xxx

எனது கருத்துக்கள்

முதலில் நாலு மந்திரங்களிலும் ‘பல்லவி’ (refrain) இருப்பதைக் காணுங்கள். ஆகையால் இது எல்லோரும் கூடி, கோஷ்டியாக (chorus)  பாடிய பாடல் என்று தெரிகிறது. அதாவது எழுத்து வடிவில் இலக்கியங்கள் வருவதற்கு முன்னர் இருந்த வாய் மொழி (oral literature)  இலக்கியம். அதர்வண வேதத்தை ‘தள்ளிப்போன, கோணல் பார்வை, காமாலைக் கண் உடைய’ வெள்ளைக்காரர்களும் கூட கி,மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளர். நாமோ கி.மு 3150ல் வியாசர் பிரித்த நாலு வேதத்தில் ஒன்று என்று நம்புகிறோம். எப்படியாகிலும் இப்படி 22 பொருட்கள் மூலம் பாடம் கற்பிப்பது உலகில், மனித வரலாற்றில் இதுவே முதல் தடவை .

இன்றும் கூட பஜனைப் பாடல்களிலும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளிழும் ‘பல்லவி’ வருவதை பார்க்கிறோம்; வெள்ளைக்ககாரர்களுக்கு நோட்டு புஸ்தகம் இல்லாமல் பாட முடியாது. நம்மவரோ குரு -சிஷ்ய பாவத்தில் கற்றுக்கொண்டதை அப்படியே மனப்பாடமாக மேடையில் பாடுவதை இன்றும் காணலாம். அதாவது இது வாய் மொழி  இலக்கியம்

மேலும் சாதாரணமாக “எனக்கு  பலத்தைக் கொடு , புகழைக் கொடு , சக்தியைக் கொடு” என்று கேட்கும் பாடல்களும் வேதத்தில் நிறையவே உள்ளன. இந்தப் புலவர் மட்டும் சிங்கம், புலி, யானை, சிறுத்தை, தங்கம் தண்ணீர், குதிரை பசு தேர் என்றெல்லாம் பாடுகிறார் !!

மிக முக்கியமான விஷயம் வெள்ளைக்காரர்கள் (male chauvinists) ஆண் ஆதிக்க வெறி பிடித்தவர்கள். அவர்களுடைய மதங்களில் பெண்களுக்கு இடமே இல்லை. ஆனால் நாமோ பெரிய மனிதர்களைப் பெற்றெடுத்த தாயைத்தான் முதலில் வணங்குவோம். எல்லா கடவுளையும் பெ  றெடுத்த அதிதி தேவியை வணங்கும் பாடல் இது. உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதம் முழுதும் ‘கடவுளரின் தாய்’ என்று அதிதி பாடப்படுகிறாள் .

இன்னும் ஒரு விந்தை, பழங்கால எகிப்திய, கிரேக்க, பாபிலோனிய மதங்களில் இருந்த அன்னைத் தெய்வங்களை இப்பொழுது மியூசியங்களில் மட்டுமே காணலாம். ஆனால் ‘அதிதி’ பெயரை எங்கள் லண்டனில் உள்ள பெண்களிடமும் காணலாம். அதாவது இந்து மதம் பெண்களை வணங்கும்  மதம்; வாழும் மதம்!. அதிதியை மியூசியத்துக்கு அனுப்பாத மதம்!

இப்பொழுது ‘சப்ஜெக்’டுக்கு வருகிறேன் ; ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு சில எடுத்துக் காட்டுகளைத் தொட்டுக் காட்டுவேன் வள்ளுவர் காப்பி அடித்த தேர் ‘அச்சு’ உவமையும் பின்னே வருகிறது !

xxxx

சிங்கம் Lion

1.சிங்கம் – ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – என்பது ஸம்ஸ்க்ருதப் பழமொழி. ‘மிருகங்களின் இந்திரன் (ராஜா) நீயேதான்’ என்பது இதன் பொருள். காட்டுக்கு ராஜா சிங்கம் என்பது இந்துக்களின் கண்டுபிடிப்பு. சிம்மாசனம்= அரியணை என்பது நமது சொற்றொடர் . கேஸ் +அரி கேசரி= ‘மயிர் மிருகம்’ என்பதை ரோமானியர் சீசர் என்று பயன்படுத்தினர் (கே =சே சர் ). நான் ரோம் நகரிலுள்ள வத்திக்கான் மியூசியத்தில் கல்லாலான மிகப்பெரிய சிம்மாசனத்தைக் கண்டேன். ‘அரிமா நோக்கு’ என்பதும் ஸம்ஸ்க்ருதப் பழ மொழி . அப்படித் திரும்பி ஒரு கம்பீரமான LOOK ‘லுக்’ விடுமாம் !அது போல எனக்கு பலம் தா என்று புலவர் வேண்டுகிறார்.

xxx

புலி Tiger

புலியைப் பற்றி இந்துக்கள் பாடியது போல வேறு எவரும் பாடவில்லை . வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் “புலி போன்ற வீரம் உடைய சின்னப் பையா! ராமா! எழுந்திருடா! என்று விசுவாமித்திரர் பாடுகிறார்- உத்திஷ்ட ! ‘நர’ ‘சார்தூல’ = ஆண்களில் புலி போன்றவனே! எழுந்திரடா மகனே! என்பது பொருள். புறநானூற்றிலும் புலி , வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே சாப்பிடும் என்று புலவர்கள் பாடுகின்றனர் ( இது உண்மையா என்று இயற்கை சம்பந்தப்பட்ட டாக்குமெண்டரிகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்துவருகிறேன் ); புலியின் வீரத்தை உணர்ந்த இந்துக்கள் குழந்தைகளுக்கு ‘புலிப்பல் தாலி’ அணிவித்தனர். கடவுளருக்கு புலியை வாகனமாகக் கொடுத்தனர் . சிந்து வெளி முத்திரைகளில் புலி தேவதை டான்ஸ் (dancing tigress in Indus valley Seals )ஆடுவதையும் பார்க்கிறோம்.

xxx

பாம்பு Snake

பாம்பு பற்றி பத்து புஸ்தகம் எழுதும் அளவுக்கு இந்துமதத்தில், தல புராணங்களில் கதைகள் உள்ளன. நல்லதற்கும் பாம்பு; கெட்டதற்கும் பாம்பு உவமை வரும்; குண்டலினி சக்தியை எழுப்புவதைக் கூட பாம்பை சுருண்ட நிலையில் இருந்து எழுப்புவது என்ற உவமை மூலம் விளக்குவார்கள். அந்த பாம்பினை எழுப்பிவிட்டாலோ பத்து ‘பாபா’ அளவுக்கு அற்புதங்கள் செய்து காட்டலாம்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையில் கூட பாம்பினை நல்ல உதாரணத்துக்குப் பயன்படுத்துவார். காளீயன் போல ஒரு பாம்பு அட்டஹாசம் செய்துவந்தது  . ஒரு முனிவர் அதை ‘அடங்கி ந’ட என்று அதட்டினார். அதுவும் அப்படியே வாழ்ந்தது. அடுத்த முறை அதே முனிவர் அந்தப் பாம்பினைக் கண்டபோது அது குற்றுயிரும் கொலையுசிருமாக கிடந்தது. ஏ பாம்பே ! என்ன ஆயிற்று  உனக்கு? என்று வினவினார் முனிவர். “அட போங்க முனிவரே; எல்லாம் உம்மால் வந்ததுதான் ; நீங்கதான் ‘அ டங்கி இரு’ என்று சொன்னீங்க; இந்தப் பாவிப்பயங்க போற வரும்போதெல்லாம் என் மீது கற்களை வீசி அடிக்கிறாங்க”.

முனிவர் சொன்னார்- நான் உன்னை கடிக்காமல் அடங்கி இரு என்றுதான் சொன்னேன். உனது குணமான சீற்றத்தைக் காட்டி உன்னைப் பாதுகாத்துக்கொள்ளாதது உன் தவறு என்றார் முனிவர். ஆக பாம்பு போல எதிரிகளைப் பயமுறுத்தும் குணத்தை எனக்குத் தா என்கிறார் இந்த மந்திரத்தில் . அதுமட்டுமல்ல ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. ‘நல்லார் அவையில் புகுந்த பாம்பினைக் கூட நல்லோர் கொல்ல மாட்டார்கள்’ என்ற சங்க இலக்கியப்  பாடல் , ரிக் வேதத்தின் கடைசி மண்டலத்திலுள்ள ‘பாம்பு ராணி’ பற்றி எல்லாம் இந்த பிளாக்கில் ஏராளமான கட்டுரைகள் உள ; படித்து  மகிழ்க

To be continued…..

Tags-  அதர்வண வேதம்,         பிராணிகள், கற்பிக்கும் பாடம், 

LONDON CALLING ‘GNANAMAYAM’ BROADCASTS ON 28th , 29th NOVEMBER 2021 (Post.10,395)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,395

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

28-11-2021 SUNDAY PROGRAMME

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

xxx

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  MRS RANJANI DASARATHI, CHENNAI

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   KANJANUR TEMPLE 10 MTS

KANTHAR ANUBHUTHI– by MRS JAYANTHI SUNDAR’S GROUP  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–20 MINUTES

SONGS.

Talk by London swaminathan : SOMA BANAMUM SURA BANAMUM in Tamil – 10 mts

XXXX

APPR. 60 MINUTES

Xxxx

29 -11– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  MRS RANJANI DASARATHI

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON POET KALIDAS

Talk by  DR CHITRA,BENGALURU

இலக்கியங்களில் தமிழனின் அறிவியல் திறன்

SONG BY Miss Keerthana (Pachai Mayil Vahanane)

DR N KANNAN’S TALK from Chennai—ON ALVARS 12 mts.

APPR. 50 MINUTES

— SUBHAM —-

 tags- broadcasts 28,29 nov.21

மஹாகவி காளிதாஸ்! – 1 (Post No.10,394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,394

Date uploaded in London – –   30 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 29-11-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

மஹாகவி காளிதாஸ்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

மஹாகவி காளிதாஸ் என்றவுடனேயே இந்தியர்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். அப்படிப்பட்ட மாமேதை. உலகப் பெரும் கவி அவர். அவர் பிறப்பு பற்றிய பல்வேறு மாறுபட்ட வரலாறுகள் உள்ளன. அவருடைய தந்தையாரின் பெயர் சதாசிவம் என்றும் உஜ்ஜயினி நகருக்கு அருகில், சரஸ்வதி நதிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில்  பிராமண குலத்தில் அவர் பிறந்தார் என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. இளம் வயதிலேயே அவரது பெற்றோர் இறக்க, அவரை ஒரு மாட்டிடையன் வளர்த்து வரலானான். காளிதாஸன் ஒன்றுமே அறியாத முழு மூடனாக  வளர்ந்து வந்தார். அந்தக் காலத்தில் காசி நகரை பீம சுல்கா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வசந்தி என்ற அற்புத அழகுடைய புத்திசாலியான பெண் ஒருத்தி இருந்தாள். சிலர் அவள் பெயரை பிரியகுண மஞ்சரி என்றும் கூறுவர்.

 அனைத்தையும் கற்று விட்டோம் என்று மமதை கொண்ட ராஜகுமாரியின் ஆணவத்தை அடக்க அரசவையில் இருந்த பண்டிதர்கள் ஒரு பெரும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு நாள் மரத்தின் நுனியில் உட்கார்ந்தவாறே அடி மரத்தை வெட்ட முனையும் முழு மூடனான காளிதாஸைப் பார்த்து தமது சூழ்ச்சியை நிறைவேற்றுவதற்கான சரியான நபர் அவனே என்று தீர்மானித்து அவனிடம் “எதுவும் பேச வேண்டாம்; அரசகுமாரியின் முன்னர் சைகைகளாலேயே எதையும் சொல்; பொன்னும் பொருளும் மிக்க வாழ்க்கை உண்டு” என்று கூறி அவனை அழைத்துச் சென்றனர். அரசகுமாரி கேள்விகளை சைகை மூலம் கேட்க நினைத்து ஒரு விரலைக் காட்டினாள். ஒன்றும் புரியாத காளிதாஸன் இரண்டு விரல்களைக் காட்டினான். ‘பிரபஞ்சத்திற்கு, ஒரு காரணம் தானே’ என்று ராஜ குமாரி கேட்க உடனே அரசவை பண்டிதர்கள் காளிதாஸன் இரண்டு விரல்களைக் காண்பித்தது பிரபஞ்சத்திற்கு இரு வித காரணங்கள் உண்டு என்று அற்புதமான வியாக்யானம் தந்தனர். இது இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. ராஜகுமாரி சக்தி ஒன்றே என்பதைக் குறிக்க ஒரு விரலைக் காட்ட காளிதாஸன் இரு விரலைக் காட்ட அதற்கு சக்தியானவள் சிவமாகவும் சக்தியாகவும் இரு விதமாக இருப்பதாக பண்டிதர்கள் வியாக்யானம் கூறினர். பின்னர் ராஜகுமாரி தனது உள்ளங்கையை விரல்கள் நீட்டி இருக்கும் படி காடட காளிதாஸன் அவளைக் குத்துவது போல முஷ்டியைக் காட்டினான். இதற்கு பண்டிதர்கள் பூதங்கள் ஐந்து என்பதைச் சுட்டிக் காட்டியதாக ராஜகுமாரி கூறியதற்கு ‘ஆமாம் அந்த ஐந்து பூதங்களே உடலை உருவாக்குகின்றன என்று தன் முஷ்டியைக் காண்பித்தான்’ என்று கூறி வியாக்யானம் செய்தனர். வியந்து போன ராஜகுமாரி காளிதாஸனை மணம் செய்து கொண்டாள், ஆனால் முதல் இரவிலேயே காளிதாஸனின் ‘புலமை’ அவளுக்குத் தெரிந்தது! தான் எப்படிப்பட்ட சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. காளிதாஸனிடம் அவள் காசி நகரில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று வணங்குமாறு கூறினாள்.  மனம் நொந்த  காளிதாஸன் காளியின் முன் சென்று தன் தலையை அர்ப்பணிக்க முற்பட்ட போது அவள் பிரசன்னமாகி அனுக்ரஹிக்க, காளிதாஸர் கவி மழை பொழிய ஆரம்பித்தார். அது பாரதமெங்கும் பொழிந்து உலகெங்கும் விரிந்தது.

இந்தச் சம்பவத்தையே வெவ்வேறு விதமாக பல நூல்கள் சித்தரிக்கின்றன.  காளி தேவி அனுக்ரஹத்தைப் பெற்ற காளிதாஸன் மீண்டும் ராஜகுமாரியைச் சந்திக்க, அவள், ‘அஸ்தி கஸ்சித் வாக் என்று கேட்டாள். அதாவது “இப்போது நீங்கள் வாக்வன்மையில் நிபுணரா என்று கேட்டாள். அவளை காளிதாஸன் வணங்கினான். ஆகவே, தான் தாரம் என்ற நிலையிலிருந்து தாயாக உயர்ந்துவிட்டதாக ராஜகுமாரி கூறி அவனை அனுப்பினாள். ராஜகுமாரி சொன்ன மூன்று வார்த்தைகளை முதலாகக் கொண்டு மூன்று காவியங்களைக் காளிதாஸன் அற்புதமாக இயற்றினான். அஸ்தி என்ற வார்த்தையைக் கொண்டு ‘அஸ்தி உத்தரஸ்யாம் திஷிஎன குமார சம்பவத்தையும் ‘கஸ்சித் என்ற வார்த்தையைக் கொண்டு ‘கஸ்சித் காந்தா என்று மேக தூதத்தையும் ‘வாக் என்ற வார்த்தையைக் கொண்டு ‘வாகர்த்தாவிவ என்று ரகு வம்சத்தையும் தொடங்கினான்.                                    இன்னொரு பரம்பரைச் செய்தியின் படி காளிதாஸர் மனம்  நொந்து ஒரு ஆற்றங்கரை படித்துறைக்குச் சென்ற போது அங்கு துணி துவைக்கும் கற்களைப் பார்த்தார். அடித்துத் துவைக்கப்படும் கற்கள் மழுமழுவென்று மழுமழுப்பாகவும் உருண்டையாகவும் இருக்க அருகே உள்ள ஏனைய கற்கள் சொரசொரப்பாகவும் எந்த வித அழகான வடிவமும் இன்றி இருப்பதையும் பார்த்தார். அவருக்கு பொறி தட்டியது போல ஞானம் ஏற்பட்டது, தன் அறிவை மழமழப்பான கற்கள் போல ஆக்க புத்திகூர்மையைத் தீட்டினால் போதும் என்று படிக்க ஆரம்பித்தார்; பெரிய மேதையானார்.

காளிதாஸனின் காலத்தைப் பற்றி ஏராளமான விவாதங்களை சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பண்டிதர்களும் இன்றளவும் நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு என்று பலரும் சொல்ல சிலர் கிறிஸ்துவுக்கு முன்பே அவரது காலம் என்கின்றனர். அத்துடன் காளிதாஸன் என்ற பெயரில் மூன்று கவிகள் இருப்பதையும் பலர் உறுதிப்படுத்துகின்றனர். காளிதாஸன் விக்ரமாதித்தன் சபையில் ஆஸ்தான கவியாக இருந்ததைப் பல நூல்கள் கூறுகின்றன.

தனது நகரத்திலிருந்து யாத்திரையாகச் சென்ற காளிதாஸன் தாரா நகரத்தை அடைந்தான். தாரா நகரத்தை அப்போது ஆண்டு வந்த போஜ மஹாராஜனுக்கும் காளிதாஸனுக்கும் இடையே ஆழ்ந்த நட்பு உருவானது; அது ஆத்மார்த்தமானது.      

ச்சதஸ் திஷ்டதோ வாபி ஜாக்ரத: ஸ்வப்னோவாபி வா |                  மா பூன்மத: கதாசித் மே த்வயா விரஹிதம் கவே ||                      

 “ஓ! கவிஞரே! இருக்கும் போதும் நடக்கும் போதும் தூங்கும் போதும் விழித்திருக்கும் போதும் என்னுடைய மனம் உம்மை விட்டு அகலுவதே இல்லை என்று இப்படி போஜன் காளிதாஸரை நினைத்து உருகி ‘எப்போதும் உம்முடைய நினைவாகவே நான் இருக்கிறேன் என்கிறான்!

**

tags– மஹாகவி ,காளிதாஸ்,

Amazing Animal Lesson in Atharvana Veda (Post No.10,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,393

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In one hymn of the Atharvana Veda one seer/rishi is giving an amazing lesson about Nature, particularly animals.

I have already written about Wordsworth and Dattareya in Bhagavatha Purana using Nature to teach us different things. But thousands of years before the Bhagavatha Purana, and epics , Atharvana Veda use animals in a hymn to teach us certain virtues. Probably that is the first verse in human history using animals and their qualities to teach human beings.

We have already seen the pigeons sacrificing their lives to save a refugee (Mahabharata), eagle and dove showing the great qualities of Sibi Chakravarti (Sangam Tamil literature Purananuu and later epic Silappadikaram), squirrel helping Rama in building a bridge to Sri Lanka (Alvar Hymns) and monkeys, bears and eagle helping Rama to destroy demons (Ramayana). Hundreds of stories about snakes are also in the Hindu mythologies.

But look at this unique hymn:-

The saint has used at least 22 animals and objects. If you give the topics to a school student for essay writing exercise , he would write something good about each of the topics. Tamils have used them as well; though Tamil is at least 1000 year junior to Sanskrit, that is the second ancient language in India, probably in the whole world (I have shown through 150 articles that Tamil and Sanskrit are the mothers of all ancient languages)

1.Lion

2.Tiger

3.Adder /Snake

4.Fire

5.Brahmin

6.Sun

7.Elephant

8.Leopard

9.Gold

10.Waters

11.Kine/Cows

12.Men

13.Chariot

14.Dice

15.Bull

16.Wind

17.Rain God

18.Noble

19.Drum

20.Drawn arrow

21.Man’s roar

22.Horse’s vigour

38. For brilliance (AV. Book 6, hymn 38; sukta 211)

[Atharvan (varcashāmaḥ).—caturṛcam. bṛhaspatidevatyam uta tviṣidevatyam. trāiṣṭubham.]


1. What brilliancy (tvíṣi) is in lion, in tiger, and what in adder, in fire, in the Brāhman, what in the sun: the fortunate goddess that gave birth to Indra—let her come to us, in union with splendor.


2. What brilliancy is in elephant, in leopard, what in gold, in waters, in kine, what in men (púruṣa): the fortunate goddess etc. etc.


3. In chariot, in dice, in the bull’s strength (vā́ja), in wind, in rain-god, in Varuṇa’s vehemence (çúṣma): the fortunate goddess etc. etc.


4. In a noble (rājanyà), in the drum, in the drawn [arrow], in the horse’s vigor, in man’s roar (?): the fortunate goddess etc. etc.

xxxx

My comments

This is a Prayer for Strength, Energy and Glory

The beauty lies in the fact that the seer used only four mantras to give you 22 messages or more

You can see the refrain in all the four mantras. That means it was sung by the poets in chorus; all oral literature will have this refrain. We see it in bhajans and vocal music. Indian singers never use books or written scripts like westerners. They keep 100s of songs in their memory. A big difference between the westerners and Hindus.

Most important point is it is a prayer to the greatest Goddess Aditi; even I have a friend by name  Aditi in London. Aditi  is the mother of Gods including Indra. She is praised all through the Rig Veda, the oldest book in the world. Hindus are the only race in the world, who did not send their goddesses to Museums. All other Goddesses are in the Museums! Aditi is used through out South Asia and South East Asia in naming girls.

Now I am not going to write essays on 22 topics. Actually I can even write a book on each topic just by using the ancient Tamil Sanskrit literature . Here is only a sample

1.Lion- ‘Swayameva Mrgendratha’ is the Sanskrit saying. No one need to democratically elect lion as the King of the Forest. By its own virtue it is the king accepted by all animals. The word Caesar came from Kesa Ari (Hairy Animal) Cesa Ari= Caesar. I even saw stone Simhasana in Rome/  Museum. It is a typical Hindu concept.

2.Tiger- Valmiki praised Rama as a tiger. That formed the first sloka of famous Venkateswara Subrabatham of Tirupati Balaji. Narasardoola = manly tiger= Lord Rama

Sangam Tamil literature say, that the tiger wont eat its prey if it falls on its left side.

3.Adder /Snake- snake is used for good and bad things; even today we use snake poison as antidote. Ramakrishna Paramahamsa fable shows that snakes can still hiss to protect itself. Through snake he teaches us a lesson. Be good but don’t be timid.

4.Fire- Fire is used in 1000s of mantras in the Four Vedas. The main prayer  is “I should become bright as Light/Fire”. Everyday orthodox Brahmins use Fire for getting Varchas, Ojas, Tejas and Medhas

5.Brahmin- Brahmin stands for scholars. Buddha in his last chapter in “Dhammapada” explains the greatness of Brahmins. Tamil kings gave Brahmins land and gold. The lesson is scholars with character will be honoured. A Tamil verse says Fire and Brahmins are same. Don’t go too close or too far. Like getting the warmth of fire , stand at an optimum distance.

6.Sun- every culture has something good to say about Sun. Hindus pray to him for eye sight and general health; they sing the glory of sun as killing virus, germs and perhaps of giving Vitamin D. Hindus worship Sun every day.

7.Elephant- Mighty power of elephant and  good memory of elephant are praised. Using one elephant to catch another is used by Kautilya and Tiruvalluvar. Five blind men and the elephant is in Hindu, Buddhist and Jain literature. The elephant that sought help from Vishnu is a famous episode found in the sculptures of Gupta period.

8.Leopard- like tiger, its ferocious attack is praised and compared to the heroism of kings.

9.Gold- used for good and bad things. Gold (basma) is used as medicine; gold also stands for greediness. Ramakrishna Paramahamsa gives lot of quotations on Kamini Kanchana (Women and Gold) Bhagavad Gita and Tamil devotional hymns say Gold and  broken tile look the same for a saint. But the brightness of gold is praised even by Tamil Valluvar

10.Waters; Everyday Brahmins praise the magical and medical qualities  of water in their thrice a day Water oblation . Tamil poet Vallvular praised it as ‘Amrit’ using the same Sanskrit word.

11.Kine/Cows- Go matha/ Mother Cow is praised through out the Vedas. Cow dung is used as anti-bacterial stuff and fuel. Cow’s urine in small quantity is drunk by Hindus for maintaining health. Milk is one of the greatest Hindu discoveries. Throughout Vedas milk is praised. No other literature comes nearer to Vedas in praising Milk and Cows.

12.Men- Great men inspire all of us; we all follow in the foot prints of Great Men.

13.Chariot- Even Tamil Tiruvalluvar use the Axis of a chariot as a simile. (Achu/axis used by Tiru valluvar is a Sanskrit word);  don’t belittle short fellows; they are like axis of a chariot. So even chariot’s axis can teach you a lesson.

14.Dice- Playing with dice sung by Tamil Valluvar and Mahabharata show how bad is gambling. There is a beautiful poem on the evil of gambling in  the Rig Veda.

15.Bull- used through out Tamil and Sanskrit poems as symbol of heroism .

16.Wind- used for speed as Vayu vegam; in Tamil and Sanskrit songs,  poets use Wind for its Speed. Many Tamil kings are praised possessing the qualities of Pancha Bhutas- Water, Fire, Earth, Wind and Sky/ether.

17.Rain God- Rain god is praised and prayed for rains.

18.Noble- they are the philanthropists. They support poets and singers.

19.Drum- Drum symbolises King in Tamil literature. Rig Veda describes the drumming that scares the enemies. Tamil literature says a king who is going to wage a war will move the White Umbrella and the Drum on an auspicious day.  The biggest drum called Bhumi Dundubhi is praised in the Rig Veda.

20.Drawn arrow-  there are a few proverbs and sayings about it. The meaning is It never stops; it must hit the target.

21.Man’s roar- This is what Hindu Kings do before go to war. They make war cries and vows to inspire their fellow fighters

22.Horse’s vigour – it is the basis of Asvameda Yaga. The speed of the horse as well as the sexual vigour of the horse are used as similes in the Vedas.

All these points are easily understood by the Hindus. In one hymn with only 4 mantras the seer teaches so much!

My old articles:-

The Connection between William Wordsworth and Dattatreya

https://tamilandvedas.com › 2011/11/10 › the-connecti…

10 Nov 2011 — Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from


Nature is our Teacher | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › nat…

7 Nov 2013 — The motto is LET NATURE BE YOUR TEACHER. … Sri Adi Shankara is the author of Viveka Chudamani in Sanskrit. He also gives lot of similes …

You’ve visited this page 3 times. Last visit: 12/06/21


Wordsworth | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › wordsworth

10 Nov 2018 — We see William Wordsworth and Oscar Wilde singing the beauty of forests in English. xxx. Now let us compare … Let Nature be your teacher.

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

https://tamilandvedas.com › 2014/11/02 › bhumi-dund…

2 Nov 2014 — The most interesting information comes from the Rig Veda about Bhumi Dundubhi! It means Earth Drum. jaffna. Temple Drum in Jaffna in Sri Lanka.

Xxx Subham xxx

tags – tags- animal lesson, Atharvana Veda, 22 things

பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24 (Post.10,392)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,392

Date uploaded in London – –   29 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் INDEX-24; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -24

XXXX

சம்ஸ்க்ருத உயிர் எழுத்துக்கள்

ஸம்ஸ்க்ருத மொழியில் எ , ஒ என்ற இரண்டு குறில் எழுத்துக்கள் இல்லை

க்ரு – என்ற உயிர் எழுத்து உண்டு

: = இரண்டு புள்ளிகள் விசர்க்கம் எனப்படும்; இது முந்தைய உயிர் எழுத்துக்குத் தக்கவாறு

ஹ ஹா ; ஹி ஹீ , ஹு ,ஹூ என்றெல்லாம் ஒலிக்கும் /மாறும்.

XXXX

ஓ – வர்க்க சொற்கள்

ஓஜஸா  15-13  சக்தியால்

ஓஷதீஹி  15-13 பயிர்களை/தாவரங்களை

ஓம் 8-13  ஓம் என்னும் பிரணவ மந்திரம் ; அ  , உ, ம என்பது

விஷ்ணு , சிவன், பிரம்மாவைக் குறிக்கும்

ஓம்காரஹ 9-17 ஓம்காரம்

XXX

ஒள – வர்க்க சொற்கள்

ஒளஷதம் – 9-16 மருந்து

XXXX

க – வர்க்க சொற்கள்

கச்சித்  6-38 இல்லையா , அல்லவா

கட்வமல – லவணாத்யுஷ்ண –

தீஷ்ண – -ருக்ஷ -விதாஹினக 17-9 கசப்பு, புளிப்பு, உவர்ப்பு கடுஞ்சூடு உரைப்பு , எரிப்பு

கதரத் 2-6 எது

கதய 10-18 சொல், விவரி

கதயன்தஹ 10-9 அவன் விவரித்துச் சொல்லும்போது

கதயிஷ்யாந்தி  2-34 சொல்லுவான், பேசுவான்

கதயிஷ்யாமி  10-19  விவரிப்பேன்

கதம்  1-37 எப்படி, எவ்வாறு

கதாசன 2-47 ஒருபொழுதும்

கதாசித் 2-20 எந்த நேரத்திலும்

கபித்வஜஹ  1-20 குரங்குக் கொடி உடையவன் ; அர்ஜுனன்

கொடியில் அனுமன் சின்னம்

கபிலஹ 10-26 கபில ரிஷி/ முனிவர்

கமல பத்ராக்ஷ  11-2 தாமரை இதழ் வடிவ கண் உடையோன்

தாமரைக்கண்ணான் (திருக்குறள் 1103)

கமலாஸனஸ்சதம்  11-15 தாமரையில் அமர்ந்தவன்

கரணம் 18-18 கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள்

கரிஷ்யதி 3-33  செய்வான், செய்கிறான்

கரிஷ்யஸி  2-33 நீ செய்வாய்

கரிஷ்யே  18-73 செய்கிறேன்

கருணஹ  12-13 உயிர்களிடத்தில் கருணை/அன்பு உடையவன்

கரோதி  4-20 செய்கிறான்

கரோமி 5-8 செய்கிறேன்

கரோஷி 9-27 நீ செய்கிறாய்

கர்ணம்  11-34 கர்ணனை

கர்ணஹ  1-8 கர்ணன்

கர்தவ்யம்  3-22 கடமை

கர்தவ்யானி 18-6 செய்யவேண்டிய கடமை / கர்ம

கர்த்தா  3-24 செய்பவன், கர்த்தாவாய்  இருப்பினும்

கர்த்தாரம்  4-13 செய்பவனை

கருதும் 1-45 செய்வதற்கு

கர்த்ருத்வம் 5-14 கர்த்தாவாய் இருத்தலை

கர்ம  2-49 ஒருவனின் செய்கை, செயல்

36 WORDS ADDED FROM PART 24 OF GITA WORD INDEX

XXXX SUBHAM XXX

TAGS – பகவத், கீதை சொற்கள் -24, GITA INDEX 24