திருவாசகம் என்னும் தேன்! – Part 2 (Post No.9852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9852

Date uploaded in London – 15 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருவாசகம் என்னும் தேன்! -2

ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:- Second Part

திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று கூற திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது. ஆக இந்தப் பாடல்களில் 51 அதிகாரத்தில் உள்ள பதிகங்களில் 21798 சொற்களும் திருக்கோவையாரில் 11805 சொற்களும் ஆக மொத்தம் 33603 சொற்கள் நம்மிடம் இன்று உள்ளன. சிவனே தமிழ் என்பதால் அவனே இதை அருளினான். ஆக இந்த 33603 சொற்களில் உள்ள சொல் ஒவ்வொன்றும் உயிர் காக்கும் அமிர்தத் துளியாகும். ஒவ்வொரு சொல்லும் தேனென இனிக்கிறது.

யஜுர் வேதத்தில் நடு நாயகமாக உள்ளது ஸ்ரீ ருத்ரம். இந்த ஸ்ரீ ருத்ரத்தில் நடு நாயகமாக வகிப்பது நமசிவாய என்னும் மந்திரம். இதைத் தொடர்ந்து உச்சரிப்பவர் சிவனாகவே ஆகிறார். ஸ்ரீ ருத்ரம் ஓதுவது என்பது அனைவராலும் முடியாது. ஆனால் திருவாசகத்தை யார் வேண்டுமானாலும் ஓதலாம். நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உளமுருகிப் பாடும் போது நெஞ்சில் சிவபிரான் நம்மை விட்டு நீங்காத

நிலை தானே வந்து அடையுமல்லவா!

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்ன

டிகள் கண்டு இன்று வீடு உற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர்.

இன்று அறிவியல் ஒத்துக் கொள்ளும் மறுபிறவித் தத்துவம் இந்து மதத்தின் தனிப் பெரும் ரகசியத் தத்துவம் ஆகும். REINCARNATION  எனப்படும் மறுபிறவித் தத்துவத்தை ஐயான் ஸ்டீவன்ஸன் நூலில் 20 cases suggestive of Reincarnatin  என்பதில் காண்கிறோம். எட்கர் கேஸ் என்ற முற்பிறவி கூறும் திறன் படைத்த அறிஞர், 2000 பேருக்கு அவர்களுடையமுன் பிறப்பு விவரங்களைக் கூறி இருக்கிறார். அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். அறிவியல் அறிஞர்கள் மறுபிறப்பு உண்டு என்பதை நிரூபித்து விட்டனர். ஆனால் மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே அந்தப் பிறப்பை அறுக்கும் வழியை மணிவாசகர் ‘மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் என்பதால் நமக்குச் சொல்லியருளி நல் வழியைக் காண்பிக்கிறார்.

திருவைந்தெழுத்து – அதாவது நமசிவா

ய – ஓரெழுத்தொரு மொழி ஐந்து சேர்ந்த ஒரு தொடர் மொழி ஆகும்.

இதில் ந என்பது நடப்பு ம என்பது மறைப்பு சி என்பது சிறப்பு வ என்பது வனப்பு. யா என்பது யாப்பு. இதில் யா குறுகி ய என்று ஆனது. வ நீண்டு வா என்று ஆனது.

சிறப்பு வனப்பு ஆகிய இரண்டும் சேர்ந்து சிவ என்று ஆனது.

அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற  பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப, செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

சிவ நாமத்தின் மகிமையை முற்றிலுமாகச் சொல்லவே முடியாது. நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற சொற்களில் இவ்வளவு அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன.

மனிதனைப் பாதிப்பவை ஐந்து மலங்கள் அதாவது பஞ்ச மலங்கள் ஆகும்.

ஆணவம் என்பது அறிவை மயக்கும். கன்மம் என்பது ஆன்மாவுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கும். மாயை என்பது தநுகரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். மாயேயம் என்பது தநுகரண புவன போகங்களாய் வந்து பொருந்தும். திரோதாயி என்பது  மலத்தின் வழி நின்று அறிவை மறைக்கும். ஆக இவையே பஞ்ச மலங்களாகும்.

இவையே  பிறப்புக்குக் காரணம். இந்த பஞ்ச மலங்களை நீக்க வல்லது பஞ்சாக்ஷரமே. பஞ்ச மலங்களை நீக்க வல்லான் ஒருவனே. சிவனே அவன். ஆகவே,

‘பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெம்மான், ‘பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க, மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி, என்று போற்றி பஞ்ச மலங்களை அறுத்து பிறப்பை அறுக்கும் மன்னவனை, தென்னவனை, தென்னாடு உடைய சிவனைப் போற்றுங்கள் என்கிறார் அவர். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி என்று உருகிப் பாடுகிறார் அவர்..

திருவாசகம் படிப்பது என்பது அமிர்தத் துளிகளை அன்றாடம் பருகுவது போன்ற ஒரு அரும் செயலாகும்.

மணிவாசகருக்கும் இறைவனுக்கும் நடந்த யார் சதுரர் என்ற ஒரு போட்டி பற்றி அவரே விளக்குகிறார். இருவருக்கும் நடந்த போட்டியில் தானே வென்றதாகவும் அவர் உறுதி கூறி அதை நிலைப் படுத்துகிறார்.

சிவ பிரான் கேட்கிறார்: “ என்ன, நீயே வென்றாயா? உனக்கு நீயே நீதிபதியா? காரணத்தைச் சொல்லு, பார்ப்போம்?

மாணிக்கவாசகர் தர்க்கரீதியாக, ஆணித்தரமாக தன் தீர்ப்பை வாசிக்கிறார் இப்படி:

தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை

‘இது உண்மையா என்கிறார் மாணிக்கவாசகர். ‘ஆம் உண்மை தான்; நீ உளம் உருகி என்னைக் கேட்டாய், நான் என்னைத் தந்தேன் என்கிறார் சிவபிரான்.

சங்கரா யார் கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்

யாது நீ பெற்றது ஒன்று என்பால்

காலமும் கணக்கும் நீத்த காரணன், கற்பனை கடந்த ஜோதி நீ என்னிடம் வந்து விட்டாய்; என்னிடம் இருந்து எதை நீ பெற்றாய்? ஒன்றே ஒன்றைச் சொல் பார்ப்போம்! யார் கொலோ சதுரர்?!

சிவன் புன்னகை மலர்ந்து தலை அசைக்கிறார், உனது நீதி சரிதான் என்று,

தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச் சங்கரா யார் கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

கடைசி வரியில் நான் வெற்றி பெற்றாலும் உனக்கு என்ன கைம்மாறு என்னால் செய்ய முடியும்? ஜீவ சொரூபம் போகச் செய்து சிவ சொரூபமாக என்னை ஆக்கி விட்டாயே இதற்கு என்னால் பிரதியாக என்ன செய்ய முடியும் என்று உள்ளம் உருகி காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கக்  கூறுகிறார்.

இதைப் படிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது.  கண்ணீர் மல்குகிறது.

இப்படி ஒரு சுவை மிக்க அமிர்தப் பாடலை வேறெங்கும் பார்க்க முடியுமா? மூன்று இடங்களிலே அவர் சதுர என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் வரும் சதுரர் என்ற சொல்லை அவர் பயன்படுத்திய விதமும் இடமும் சொல்லும் விதமும் ஒப்புமை காண முடியா ஒரு அற்புதக் கவிச் செல்வமாகும்.

திருவண்டப் பகுதியின் முதல் நான்கு வரிகளைப் பார்ப்போம்:

அண்டப் பகுதியின்  உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.

என்ன அற்புதமான ஒரு காட்சியை அழகான தமிழில் தருகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

பல கோடி அண்டங்கள்! பால்வீதி மண்டலத்தைப் பற்றிப் பேசும் விஞ்ஞானிகள் அடடா, பல பல கோடி பால் வீதி மண்டலங்கள் உள்ளன. அவைகளைக் கொண்டிருப்பது போல இருப்பது ஒரு பிரபஞ்சம்  மட்டும் அல்ல – ஒரு universe அல்ல நாங்கள் கண்டு அறிவது multiverse  பல் பிரபஞ்சங்கள் என்கின்றனர். இந்த பிரபஞ்சங்களும் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்காக உள்ளன ஒரு  மிலிமீட்டர் இடைவெளியில் உள்ளன என்கின்றனர்.

Nature, Scientific American, Live Science  ஆகிய அறிவியல் இதழ்களில் இது பற்றிப் படிக்கும் போது வியப்பும் திகைப்பும் பிரமிப்பும் ஏற்படுகிறது. மல்டிவர்ஸ் பற்றி முதலில் கூறிய ஹ்யூ எவரெட் (Hugh Everett) என்ற விஞ்ஞானியை இன்று அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.

இவர்கள் இன்று சொல்வதை அன்றே நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்று சுருங்கச் சொல்லி விளக்கி விட்டார் அவர்.இன்று 13-7-2021 LiveScience இதழில் வெளிவந்துள்ள கட்டுரை சுவாரசியமான ஒன்று. மனிதனின் உடம்பில் உள்ள அணுக்களைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் அவை மொத்தம் – 7 ஆக்டில்லியன் – 7 octillion, or 7×10^27 (7 followed by 27 zeros), –என்று கணக்கிட்டுள்ளனர். காலக்ஸிகள் மட்டும் நாம் கண்ணால் பார்க்கின்ற பிரபஞ்சத்தில் 10^12  உள்ளனவாம். (10^12 galaxies in the observable universe) சரி, பிரபஞ்சம் அணு மயம் என்றால் எத்தனை அணுக்கள் உள்ளன?

இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய, அணு தரும் தன்மையில் ஐயோன் காண்க, ஐயா போற்றி, அணுவே போற்றி என்று இப்படி எல்லாம் திருவண்டப்பகுதியிலும், போற்றித் திருவகவலிலும் கூறுகிறார் மாணிக்க வாசகர்! அதாவது சூரியக் கதிரில் பல துகள்களைப் பார்த்து நாம் ‘சே, இவை தூசி’ என்பது போல அகிலாண்டங்கள் கோடானு கோடியும் சிவபிரானுக்குத் தூசியாம் என்கிறார் இப்படி.

விஞ்ஞானிகள் இன்று தரும் கட்டுரையில் நாம் காண்கின்ற பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எத்தனை என்றால் அவற்றின் எண்ணிக்கை இது தான் – ஒன்றுக்குப் பக்கத்தில் 82 சைபர்களைப் போட்டுக் கொள்ளுங்கள் என்று விடையைத் தருகின்றனர். ட்ரில்லியன், ஜில்லியன், ஆக்டில்லியன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான். நாம் பார்க்கின்ற இடத்தில் மட்டுமே இவ்வளவு அணுக்கள் என்றால் கோடானு கோடி பிரபஞ்சங்களில் எத்தனை அணுக்கள்? அறிவியல் அறிஞர்களுக்குத் தலை சுற்றுகிறது. ஆனால் மாணிக்கவாசகருக்கு இறைவன் தரும் காட்சி அளப்பரும் தன்மை வளப்பெரும் காட்சியாக அமைகிறது.

அளக்க முடியாதது; ஆனால் வளப்பெரும் காட்சி என்கிறார்.

திருவண்டப் பகுதி போல உலகில் இன்னொரு பாவைப் பார்க்க முடியுமா என்ன?

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார். திருவாசகம் நம்மை பக்தி சிகரத்தின் உச்சியில் ஏற்றும். சிவஞான அறிவைப் பெருக்கும். ஆயிரக்கணக்கில் அருமையான ரகசியங்களையும், நாம் உய்த்துணர்வதற்கான வழிகளையும அருளும்.

மாணிக்கவாசகரின் பொன்னடி போற்றுவோம். அவர் பெருமை பேசுவோம். திருவாசகத் தேனை அள்ளி அள்ளிக் குடிப்போம். அதன் பயனையும் பெறுவோமாக.

தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்.

அருள் வாதவூரர் சொல அம்பலவர் தாம் எழுதும்

திருவாசகத்தைத் தெளிந்தால்  – கருவாம்

பவகதியும் நீங்கிப் பரமரருளாலே

சிவகதியும் உண்டாம் சிவம்

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வாய்ப்பளித்த அனைவருக்கும், இந்த உரையைச் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக! நன்றி, வணக்கம்             .

xxxxx

tag–திருவாசகம் -2

90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ் (Post No.9851)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9851

Date uploaded in London –14 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ்

விஞ்ஞான கற்பனைக் கதைகளை (Science Fiction)  எழுதுவதில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ஐசக் அஸிமோவ்  ISAAC ASIMOV . ரஷ்யாவில் பிறந்து சிறு வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்த விஞ்ஞானி.

புதினங்கள் (Novels) பலவகை- காதல் கதைகள், பயங்கரக் கதைகள், பேய்-பிசாசு கதைகள், கொலை- துப்பறியும் கதைகள், சோக வாழ்வுக் கதைகள் என பலப் பல. சமீப காலத்தில் உருவான ஒரு வகை,  அறிவியலைப் பயன்படுத்தி என்ன என்ன அதிசயங்கள் நடக்கலாம் , என்ன என்ன குற்றங்கள் நடக்கலாம் என்ற புதிய வகை ஆகும். பெரும்பாலும் வெளி உலக வாசிகள் (E.T.)வருகை, அங்கே நாம் பயணித்தல் (Inter Galactic Travel)  , வெளி உலக வாசிகளுடன் போர் (Space War) என்று பல அதீத கற்பனைக் கதைகள் (Science Fiction) . இவற்றில் பெரும் வெற்றி அடைந்தவர் ஐசக் அஸிமோவ் .

ஐசக் அஸிமோவ் பிறந்த தேதி – ஜனவரி 2, 1920

இறந்த தேதி – ஏப்ரல் 6, 1992

வாழ்ந்த ஆண்டுகள் – 72

எழுதிய மற்றும் ‘எடிட்’ செய்த புஸ்தகங்கள் எண்ணிக்கை – 500

எழுதிய கடிதங்கள் – 90,000

விஞ்ஞான புனைக்கதைகளை (Science Fiction)  எழுதுவதில் 50 ஆண்டுக் காலத்துக்கு எழுதுவோர் போட்டி இன்றி புகழ் ஈட்டியவர் . ரஷ்யாவில் பிறந்த அவர், மூன்று வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி எட்டு வயதில் , அமெரிக்கக் குடி மகன் ஆனார்.

சிறுவனாக இருந்த பொழுதே அஸிமோவ் விஞ்ஞான விஷயங்களை ஆர்வத்தோடு பயின்றார். கார்ட்டூன் புஸ்தகங்களை படிப்பதற்கு அவருடைய தந்தை அனுமதி மறுத்தார். ஆனால் ஒரு புஸ்தகத்தில்  கதைகளுக்கு முன்னர் விஞ்ஞான (Science Wonder Stories) என்ற சொல் இருந்ததால்  அதை  தந்தை அனுமதித்தார்.

அந்தப் புஸ்தகம் முழுதும்  அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளே இருந்தன. ஐசக்கும் அவைகளில் மயங்கியனார் . கிட்டத்தட்ட அத்தகைய  புஸ்தகங்களுக்கு அடிமை ஆனார்.

17 வயதில் முதல் அறிவியல் கற்பனைக் கதையை எழுதினார். அதைப் படித்த அவருடைய தந்தை பிரபல சஞ்சிகையொன்றுக்கு (Prestigious Magazine) அனுப்பும்படி சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார் . அனால் பெருத்த ஏமாற்றம்; அந்தக் கதை வெளியாகவில்லை. ஆயினும் அந்த இதழின் ஆசிரியரான ஜான் கேம்ப் பெல் (John campbell) என்பவரைச் சந்தித்துப் பேசினார். அவர் இவருக்கு நல்ல யோசனைகளை வழங்கி நீண்ட காலத்துக்கு வழிகாட்டியாக இருந்தார். பின்னர் பல கதைகளையும் வெளியிட்டார்.

பள்ளிக்கூடத்தில் அசிமோவுக்குப் பிடித்த பாடம் அறிவியல்தான். 1948ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் (Ph.D)  பட்டம் பெற்றார் 1949 முதல் 30 ஆண்டுகளுக்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி (Bio Chemistry in Boston University) எனப்படும் உயிர் வேதியல் பாடத்தைக் கற்பித்தார்.

முப்பது வயதிலேயே பெப்பிள் இன் தி ஸ்கை (Pebble in the Sky) என்ற முதல் நாவலை வெளியிட்டார். ரோபோ(I, Robot) என்னும் இயந்திர மனிதன் பற்றிய புனைக் கதைகளை அதே ஆண்டில் வெளியிட்டார். 400 புஸ்தகங்களுக்கு மேல் அவர் வெளியிட்டார்.

ஆயினும் பெரும்பாலானவை பாமர மக்களுக்கு விஞ்ஞான விந்தைகளை விளக்கும் புஸ்த கங்கள் தான்.புதினங்கள் எவ்வளவு புகழ் சேர்த்தனவோ அவ்வளவு புகழை விஞ்ஞானப் புஸ்தகங்களும் சேர்த்தன. அவருக்கு அறிவியலென்பது அத்துப்படி ஆனதால்  எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் அதன்  மூலம்

என்னென்ன அற்புதங்கங்கள் நிகழும் என்று  அறிவித்தார். படங்கள்  மூலம் காட்டினார். பல்வேறு விருதுகளையும் ஐசக் அசிமோவ் வென்றார். அவரது படைப்புகள் பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுள்ளும் அடிகோலின .

அவருடைய முக்கிய புஸ்தகங்கள்:

1950- PEBBLE IN THE SKY

1950 – I.ROBOT

1951 – THE STARS , LIKE DUST

1951- 53 – FOUNDATION (3 VOLUMES)

1954- THE CAVES OF STEEL

1957- THE NAKED SUN

1969- NIGHTFALL AND OTHER SSTORIES

1972- THE GODS THEMSELVES

1976- THE BICENTENNIAL MAN

1986- FOUNDATION AND EARTH

–SUBHAM

Tags- ஐசக் அஸிமோவ் , விஞ்ஞான கற்பனைக் கதை, Science Fiction) Isaac Asimov,

.

ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு (Post.9850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9850

Date uploaded in London –14 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் சூரிய கிரகணம்– மீண்டும் ஆய்வு

உலகிலேயே மிகப் பழைய புஸ்தகமான ரிக் வேதத்தில் சூரிய கிரஹணம் பற்றி அத்ரி முனிவர் பாடியதை பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினேன். இப்போது மேலும் சில விவரங்களைக் காண்போம்.

சூரிய கிரஹணம் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு ரிக் வேதத்தின் காலம் கி.மு.3000, அதாவது சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்கு முந்தையது என்று உமாபதி சென் நிரூபித்ததை முன்னர் கண்டோம். அதே போல, மஹாபாரதப் போரில் ஜெயத்ரதனுடன் நடந்த சண்டையில்  இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை நிலத்தில் சாயும் என்று அர்ஜுனனை சூளுரைக்கவைத்தார் கிருஷ்ணன் ; அன்று சூரிய கிரஹணம் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். மாலையில் பூரண சூரிய கிரஹணம் ஏற்படவே ஜயத்ரதன் சண்டை முடிந்துவிட்டது என்று அசட்டையாக இருந்த பொழுது, அர்ஜுனனை ஏவி,  ஜயத்ரதன் தலையைத் துண்டித்து சுக்கு நூறாக சிதற வழிவகுத்தார் கிருஷ்ணன்.

மஹாபாரதப்போர் 18 நாட்கள்தான் நடந்தன. அது அமாவாசையன்று துவங்கியது. சூரிய கிரஹணங்கள் அமாவாசையிலும் சந்திர கிரஹணங்கள் பவுர்ணமியில் மட்டுமே நடக்கும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மை. அப்படியிருக்க ஜயத்ரதன் இறந்த அன்று எப்படி மீண்டும் அமாவாசை வரமுடியும்? என்று கேட்டோருக்கும் விளக்கம் உண்டு.

மஹாபாரதப் போர் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவில்லை. இடையிடையே போருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டது . அதாவது போர்ச் சேதங்களை அகற்றவும், காயமடைந்தோரை குணப்படுத்தவும் இடையிடையே ‘லீவு’ எடுத்துக்கொண்டனர். அந்தக் காலத்தில் தர்ம யுத்தம் நடந்ததால் மாலை சூரிய அ ஸ்தமனத்துக்குப் பின்னர் போர் செய்ய மாட்டார்கள். ஆயுதம் இல்லாதவரைத் தாக்க மாட்டார்கள். புற  முதுகு காட்டி ஓடுவோரைக் கொல்ல  மாட்டார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் எவரும் வராத இடங்களில் மட்டுமே போர் நடைபெறும். சமயச் சடங்குகள், பண்டிகைகளை அனுஷ்டிக்க இடையிடையே போர் நிறுத்தப்படும் என்பனவெல்லாம் மஹாபாரதம், ராமாயணம் ஆகியவற்றினை ஊன்றிப் படிப்போருக்குத் தெரியும். ஆக, மகா பாரத யுத்தத்தில் இரண்டு அமாவசைகள் வந்ததும் அதில் ஒரு நாள் பூரண சூரிய  கிரஹணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரஹணம் என்பதில் வட்டமான சந்திரனோ சூரியனோ நிழலின் கீழ் வருகையில் யாரோ அதை விழுங்குவது போல இருக்கும்; பாமர மக்களுக்கு  நிழல் விஷயங்களை விளக்குவது கடினம் என்பதால் “பாம்பு விழுங்குகிறது” என்று சொன்னார்கள். ஆனால் இந்து மத அறிஞர்களுக்கு கிரஹண சாஸ்திரம் அத்துப்படி என்பதை வேதங்களில் வரும் குறிப்பிலிருந்து அறிய முடியும். பூரண சூரிய கிரஹணம் என்பது ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடிக்க முடியாது.

ஓரிடத்தில் அத்ரி முனிவர் நாலு மந்திரம் ஓதி முடிப்பதற்குள் சூரியன் மீண்டும் வெளி வந்ததை எப்படி ரிஷி முனிவர் பாடினார் என்ற அற்புதத்தைக் கீழே காணுங்கள்.

ரிக்வேதம் 5-40-5/6/7/89

பாடியவர் ரிஷி பெளமோ அத்ரி

சூரியனே!  அசுரனின் புதல்வனான ஸ்வர்பானு , உன்னை இருளால் போர்த்தியபோது , தான் எந்த இடத்தில் நிற்கிறான் என்பதை அறியாமல் , கலங்கி நிற்கும் ஒருவனைப் போல, உலகங்கள் தோன்றின.

இந்திரனே நீ ஸ்வர்பானுவால் சூரியனின் கீழே பரப்பப்பட்டிருந்த மாயைகளை விலக்குங்கால் அத்ரி, இருளால் மறைக்கப்பட்டு தன்  செயல்களில் தடைப்பட்டிருந்த சூரியனைத் தனது துரீய பிரம்மத்தால் கண்டான்.

அத்ரியே துரோகி , பசியால் உணவை விரும்பி, பயங்கரமான இருளோடு உனக்குரிய என்னை புசிக்காமல்  இருப்பானாகுக. நீ மித்திரனாய் இருக்கிறாய். உன்னுடைய செல்வம் சத்தியம் ஆகும். நீயும் அரசனான வருணானும் சேர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள் .

பிறகு பிராமணனான அத்ரி , கற்களை சேர்த்து சோமத்தைப் பிழிந்து, தேவர்களை ஏத்தி வணக்கத்தோடு , அவர்களை போற்றி , சூரியனுடைய கண்ணை வானிலே ஸ்தாபித்தான் . அவன் ஸ்வர்பானுவின் மாயைகளை க் கலைத்தான்.

அத்ரி புதல்வர்கள் , அசுரப் புதல்வனான ஸ்வர் பானுவால் ஏவப்பட்ட இருளால் மறைக்கப்பட்ட சூரியனை மீட்டர்கள். அவைகளை விடுவிக்க வேறு எவராலும் இயலவில்லை

1. COME thou to what the stones have pressed, drink Soma, O thou Soma’s Lord,

     Indra best Vrtra-slayer Strong One, with the Strong.

2. Strong is the stone, the draught is strong, strong is this Soma that is pressed,

     Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.

3. As strong I call on thee the Strong, O Thunder-armed, with various aids,

     Indra, best Vrtra-slayer, Strong One with the Strong.

4. Impetuous, Thunderer, Strong, quelling the mighty, King, potent, Vrtra-slayer, Soma-drinker,

     May he come hither with his yoked Bay Horses; may Indra gladden him at the noon libation.

5. O Surya, when the Asura’s descendant Svarbhanu, pierced thee through and through with darkness,

     All creatures looked like one who is bewildered, who knoweth not the place where he is standing.

6. What time thou smotest down Svarbhanu’s magic that spread itself beneath the sky, O Indra,

     By his fourth sacred prayer Atri disoovered Surya concealed in gloom that stayed his function.

7. Let not the oppressor with this dread, through anger swallow me up, for I am thine, O Atri.

     Mitra art thou, the sender of true blessings: thou and King Varuna be both my helpers.

8. The Brahman Atri, as he set the press-stones, serving the Gods with praise and adoration,

     Established in the heaven the eye of Surya, and caused Svarbhanu’s magic arts to vanish.

9. The Atris found the Sun again, him whom Svarbhanu of the brood      Of Asuras had pierced with gloom. This none besides had power to do.

आ याह्य अद्रिभिः सुतं सोमं सोमपते पिब |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
वर्षा गरावा वर्षा मदो वर्षा सोमो अयं सुतः |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
वर्षा तवा वर्षणं हुवे वज्रिञ चित्राभिर ऊतिभिः |
वर्षन्न इन्द्र वर्षभिर वर्त्रहन्तम ||
रजीषी वज्री वर्षभस तुराषाट छुष्मी राजा वर्त्रहा सोमपावा |
युक्त्वा हरिभ्याम उप यासद अर्वाङ माध्यंदिने सवने मत्सद इन्द्रः ||

यत तवा सूर्य सवर्भानुस तमसाविध्यद आसुरः |
अक्षेत्रविद यथा मुग्धो भुवनान्य अदीधयुः ||
सवर्भानोर अध यद इन्द्र माया अवो दिवो वर्तमाना अवाहन |
गूळ्हं सूर्यं तमसापव्रतेन तुरीयेण बरह्मणाविन्दद अत्रिः ||
मा माम इमं तव सन्तम अत्र इरस्या दरुग्धो भियसा नि गारीत |
तवम मित्रो असि सत्यराधास तौ मेहावतं वरुणश च राजा ||
गराव्णो बरह्मा युयुजानः सपर्यन कीरिणा देवान नमसोपशिक्षन |
अत्रिः सूर्यस्य दिवि चक्षुर आधात सवर्भानोर अप माया अघुक्षत ||
यं वै सूर्यं सवर्भानुस तमसाविध्यद आसुरः |
अत्रयस तम अन्व अविन्दन नह्य अन्ये अशक्नुवन ||

XXX

ரிக் வேதத்தில் மேலும் பல இடங்களில் சூரிய சந்திர கிரஹணம் பற்றிய குறிப்புகள் உள . சந்திரனுக்கு ஒளி கிடையாது, அது சூரிய ஒளியையே பிரதி பிலளிக்கிறது என்பதையும் வேதகால ரிஷிகள் அறிவர். பிற்காத்தில் காளிதாசன்  முதலிய ஸம்ஸ்க்ருதக் கவிஞர்களும் இதைப் பாடியுள்ளனர்

ரிக் வேதம் 1-84-15ம் சூரிய கிரஹணத்தையே குறிக்கும் என்பது ஆன்றோர் கருத்து –

சலனமாகும் சந்திர மண்டலத்தில் மறைக்கப்பட்டுள்ள துவஷ்டாவின் — கற்பிப்பவனின் ஒளியை சூரியனுடைய கதிர்கள் என அவர்கள் இப்போது அறிந்தார்கள் –1-84-15

13. With bones of Dadhyac for his arms, Indra, resistless in attack,

     Struck nine-and-ninety Vrtras dead.

14. He, searching for the horse’s head, removed among the mountains, found

     At Saryanavan what he sought.

15. Then verily they recognized the essential form of Tvastar’s Bull,

     Here in the mansion of the Moon.

16. Who yokes to-day unto the pole of Order the strong and passionate steers of checkless spirit,

     With shaft-armed mouths, heart-piercing, health-bestowing?

     Long shall he live who richly pays their service.

इन्द्रो दधीचो अस्थभिर्व्र्त्राण्यप्रतिष्कुतः |
जघान नवतीर्नव ||
इछन्नश्वस्य यच्छिरः पर्वतेष्वपश्रितम |
तद विदच्छर्यणावति ||
अत्राह गोरमन्वत नाम तवष्टुरपीच्यम |
इत्था चन्द्रमसो गर्हे ||


को अद्य युङकते धुरि गा रतस्य शिमीवतो भामिनो दुर्ह्र्णायून |
असन्निषून हर्त्स्वसो मयोभून य एषां भर्त्यां रणधत स जीवात ||
क ईषते तुज्यते को बिभाय को मंसते सन्तमिन्द्रं को अन्ति |
कस्तोकाय क इभायोत राये.अधि बरवत तन्वे को जनाय ||
को अग्निमीट्टे हविषा घर्तेन सरुचा यजाता रतुभिर्ध्रुवेभिः |
कस्मै देवा आ वहानाशु होम को मंसते वीतिहोत्रः सुदेवः ||
तवमङग पर शंसिषो देवः शविष्ठ मर्त्यम |
न तवदन्यो मघवन्नस्ति मर्डितेन्द्र बरवीमि ते वचः ||
मा ते राधांसि मा त ऊतयो वसो.अस्मान कदा चना दभन |
विश्वा च न उपमिमीहि मानुष वसूनि चर्षणिभ्य आ ||

XXXX

OLD ARTICLES

சூரிய கிரகணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

16 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). பாக்யா … ஆனால் முழு சூரிய கிரகணம் என்பதோ அற்புதமான ஒரு விஷயம்” – நீல் டி க்ராஸ் டைஸன் … 1133 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி சூரிய கிரகணம் ஒன்று … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் …


சூரிய கிரகணம் தந்த அறிவியல் …

https://tamilandvedas.com › சூர…

  1.  

31 Mar 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி. சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் … புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் …


சூரிய கிரஹணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

· 

7 Dec 2017 — உமாபாத சென் என்பவர் ரிக்வேத காலம் என்ற புத்தகத்தில் பல சுவையான செய்திகளைத் தருகிறார். ரிக் வேதத்தில் உள்ள சூரிய …

Missing: கிரகணம் ‎| Must include: கிரகணம்


இந்துக்கள் கண்டுபிடித்ததை …

https://tamilandvedas.com › இந்த…

  1.  

2 May 2015 — சந்திரனின் மீது படும் சூரிய ஒளியே அதன் பிரகாசத்துக்கு … ரிக்வேத கால இந்துக்கள் இந்த நாட்டில் தோன்றிய குதிரைகள் … சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வணத்திலும் உள.


Tamil | Tamil and Vedas | Page 137

https://tamilandvedas.com › category

  1.  

19 Oct 2012 — சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான …


உலக விஞ்ஞானிகள் வியக்கும் …

https://tamilandvedas.com › உலக-…

17 Oct 2012 — சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான …

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE …

https://tamilandvedas.com › 2017/12/08 › date-of-rig-v…

  1.  

8 Dec 2017 — Solar eclipses narrated in the Veda cannot be overlooked. In passage 10-138-4 of the Rig Veda, it is said Indra ‘maseva suryo vasu puryam …


in the Veda | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › in-the-veda

  1.  

DATE OF RIG VEDA THROUGH SOLAR ECLIPSE-3000 BCE (Post No.4470). Compiled by London Swaminathan. Date: 8 DECEMBER 2017. Time uploaded in …


Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature …

https://tamilandvedas.com › tamil-arti…

  1.  

Translate this page

29 Dec 2011 — Tamil Article: Solar Eclipse in Tamil and Sanskrit Literature … OLDEST HISTORIAN IN THE WORLD; RIG VEDA REVEALS-2 (Post.9655) May …

—SUBHAM—

TAGS – ரிக்வேதம், சூரிய கிரகணம்,  ஆய்வு

திருவாசகம் என்னும் தேன்! -1 (Post No.9849)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9849

Date uploaded in London – 14 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஞானமயம் ஆனி மக நாளன்று (13-7-2021) மாணிக்கவாசகரின் குருபூஜை நாளையொட்டி சிவஞான சிந்தனை மணிவாசகர் குருபூஜை தினத்தை உலகளாவிய விதத்தில் சிறப்பாக இணையதள வழியே கொண்டாடியது. இந்த விழாவில் திருவாசகம் என்னும் தேன் பற்றி ஆற்றிய உரை:-

திருவாசகம் என்னும் தேன்! -1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.நமஸ்காரம்.

SPEAKER BENGALURU S. NAGARAJAN

இன்று மாணிக்கவாசகரின் குரு பூஜை நாள். சிவஞான சிந்தனையை  உலகெலாம் உள்ள அனைவரும் பெறவும், தரவும் ஒரு அருமையான வாய்ப்பை இணைய வாயிலாக வழங்கி இருக்கிறார் லண்டன் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி. அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திருவாசகத்திற்கு விளக்கமோ அர்த்தமோ கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் பண்டு தொட்டு பெரியோர்கள் திருவாசகத்தை விளக்க பெரும் ஆதீனகர்த்தர்களும், சைவப் பெரியோர்களும், குறிப்பாக அதைப் பாடம் கேட்டுப் பொருளுணரும் சைவப் பெரியோர்களும் மட்டுமே தகுதியானவர்கள் என்று சொல்லி வந்திருக்கின்றனர்.

மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஒரு சுவாரசியமான சம்பவத்தை தனது நல்லுரைக் கோவை நூலின் நான்காம் பாகத்தில் குறிப்பிடுகிறார். திருச்சியில் இருந்த பட்டாபிராம பிள்ளை என்ற டெபுடி கலெக்டர் தமிழின் பால் மிக்க பற்றுள்ளவர். தக்க பண்டிதர்களை பல நூல்களுக்கும் உரை எழுதச் சொல்லி வேண்டுவது அவர் பழக்கம். இப்படி அவரது அரும் முயற்சியினால் பல உரை நூல்கள் வெளி வந்தன. அப்போது திருவானைக்காவில் பெரும் தமிழறிஞர் திரு தியாகராஜ செட்டியார் வாழ்ந்து வந்தார்.   தியாகராஜ செட்டியார் மீதுள்ள மதிப்பின் காரணமாகவும் அவரது ஆழ்ந்த தமிழறிவின் மீது கொண்ட வியப்பினாலும் அவரை திருவாசகத்திற்கு உரை எழுதச் சொல்லி பல முறை பட்டாபிராம பிள்ளை வற்புறுத்திய போது அவர் மறுத்தார். மீண்டும் மீண்டும் அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்.. ஒரு நாள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு பாலத்தின் மீது களைப்புடன் அவர் நடந்து வருகையில் எதிரில் வந்த அந்த நண்பர் திருவாசக உரை எழுத வேண்டும் என்பது பற்றி வழக்கம் போலக் குறிப்பிடவே, தியாகராஜர், “அதற்குப் பெரும் தகுதி அல்லவா வேண்டும், வேதம், உபநிடதம், யோக சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்தும் அல்லவா படித்திருக்க வேண்டும், இன்னும் வற்புறுத்தினால், இதோ இந்த ஆற்றில் குதித்து விடுவேன். பட்டாபிராம பிள்ளை வற்புறுத்தியதால் தியாகராஜ செட்டியார் ஆற்றில் வீழ்ந்து உயிரை விட்டார் என்ற அவப் பெயர்  உமக்கு வரும்” என்று சொல்ல நண்பர் பயந்து போய், இனிமேல் இது பற்றி உங்களிடம் கேட்க மாட்டேன் என்றாராம். ஆக பெரும் பண்டிதர்களும் கூட விளக்க முடியா மாணிக்க வாசகரின் திருவாசகம் எப்படிப்பட்ட அரிய இறை நூல் என்பது நமக்குத் தெரிய வருகிறது.

 மணிவாசகர் சொல்லச் சொல்ல திருச்சிற்றம்பலமுடையான் தன் கையால் எழுதிய பெரும் வாசகத்தை மனம் உருகிப் படிக்கலாம்; அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளைப் பெறலாம்!

ஆனால் திருவாசகத்தின் விளக்கவுரையை மேற்கொள்ளாது அதன் பெருமையை எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் அல்லவா!

அந்தத் தொண்டர் தம் திருக்கூட்டத்தில், சிவனடியாரின் அடியானாக, திருவாசகத்தின் அருமை பெருமை பற்றிப் பேச யானும் ஒருவன் என்று இங்கே உங்கள் முன் வந்துள்ளேன். இணையம் வழியாக உலகத்தை எட்டிப் பார்த்து அவர் தம் பெருமையைப் பேச, இன்று மணிவாசகப் பெருமானின் குருபூஜை தினத்தை விட வேறு எந்த நாள் தான் சிறப்பாக இருக்க முடியும்.

திருவாசகப் பெருமை

திருவாசகப் பெருமையைப் பற்றி சிவப்பிரகாச சுவாமிகள் அருளியுள்ள அருளுரையைப் படித்தாலேயே நமக்கு அந்தப் பெருமை புரியும்.

விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்

காரணன் உரையெனும் ஆரண மொழியோ

ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்

மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ

யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்

வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி

நெஞ்சு நெக்கு உருகி நிற்பவர் காண்கிலேம்

திருவாசகம் இங்கு ஒரு கால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்து உகக் கண்கள்

தொடுமணற் கேணியின் சுரந்து நீர் பாய

மெய்ம்மயிர்ப் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே!

ஆக ‘வேதத்தை ஓதி  நெஞ்சுருகி விழி நீர் பெருக்கும் அன்பரைக் காணேன்; ஆனால் திருவாசகம் ஓதி உளம் உருகும் நல்லோரைப் பார்க்கிறேன். ஆகவே திருவாசகம் அன்பர்க்கு எளிது; யார் வேண்டுமானாலும் அதை ஓதலாம்’ என்கிறார் அவர்.

அடுத்து அருட்பிரகாச வள்ளலார் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்தவர். அவர் கூறுகிறார்:

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ் சுவை கலந்தென்

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்கிறார் அவர்.

திருவாசகத்தை ஓதும் முறையை அவர் மிக அருமையாக இப்படி விளக்கியுள்ளார்.

பாடுபவர், தான் கலந்து பாட வேண்டும்; ஊன் கலந்து, உயிர் கலந்து பாட வேண்டும். அப்போது தான் திருவாசகப் பெருமை புரியும்.

பழைய காலம் போல ஓரிடத்திற்குச் சென்று தினமும் பாடம் கேட்டுப் பொருளுணரும் வசதி இன்றைய உலகில் உலகெங்கும் பரவியுள்ள தமிழ் அன்பர்களுக்கு இல்லை; ஆகவே தான் இணைய வழியாகப் பொருளுணர்ந்த பெரியோர் தம் உரை கேட்க விழைகிறோம். காலப் போக்கில் சுவடிகள்  படிப்பது மாறி அச்சுப் பதிப்புகள் வரவே கற்றறிந்த பெரியோர் பலர் உரைகளைத் தர ஆரம்பித்தனர்.

திருவாசகத்தை நன்கு உணர்ந்த பெரியோர்கள் நாற்பது பேர் உரைகளை எழுதியுள்ளனர். அவர்களது உரைகள் நமக்குப் பொருள் விளங்க உதவி புரியும்.

1835ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கற்றறிந்த சில வித்வான்களுடன் மூலத்தைப் பரிசோதித்து முதல் பதிப்பை வெளியிட்டார். பின்னர் பல நல்ல பதிப்புகள் வந்து விட்டதால் திருவாசகம் எங்கும் கிடைக்கும் ஒன்றாக ஆகி இருக்கிறது.

 GNANAMAYAM FOUNDER SRI KALYANASUNDARA SIVACHARYA

1897இல் ப.வாசுதேவ முதலியார் பல வித்வான்கள் எழுதிய உரையை வெளியிட்டார். 1933இல் கா.சுப்பிரமணியப் பிள்ளை ஒரு உரையை எழுதினார். 1954இல் சீகாழித் தாண்டவராயர் ஒரு உரையை வெளியிட அதன் அருமையையும் பெருமையையும் உணர்ந்த அன்பர் பலர் அதைப் படித்து திருவாசகத்தை நன்கு அனுபவித்தனர்.  திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ச.தண்டபாணி தேசிகர் 1964இல் ஒரு அற்புதமான உரையை வெளியிட்டார். அதன் பின்னர் 1968இல் சுவாமி சித்பவானந்தர் ஒரு உரையை வெளியிட்டார். மிக விரிவான இந்த உரை இன்றளவும் அனைத்து அன்பர்களாலும் வாங்கப்பட்டு படிக்கப்பட்டு வருகிறது.

இந்த உரைகளை இன்று படிக்க வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என்று மணிவாசகப் பெருந்தகை சொல்வதால் சொல்லிய பாட்டில் உள்ள, அந்தப் பொருளை உணர பெரியோர்களின் உரையை நாட வேண்டி இருக்கிறது. முடிந்த போதெல்லாம் இன்று இப்போது இங்கு கேட்பது போல் அவர் தம் உரைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.

வடமொழியும் தென்மொழியும் கற்று அதில் வல்லார்கள் வேதக் கருத்தையும் உபநிடதக் கருத்தையும் பிட்டுப் பிட்டு வைக்கும் போது திருவாசகத்தில் இல்லாதது ஒரு வாசகத்திலும் இருக்காது என்ற அனுபவ உண்மையை அவர்களின் விளக்கம் நமக்குத் தருகிறது.

__தொடரும்

TAGS-

tags- திருவாசகம்-1, தேன்  

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன் (Post No.9848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9848

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your

40 வயதுக்குள் 50 புஸ்தகம் எழுதிய அமெரிக்க நாவல் ஆசிரியர் ஜாக் லண்டன்

இயற்கையின் கோர தாண்டவத்தையும் எதிர்த்து நின்று மனிதர்களும் மிருகங்களும் எவ்வாறு வெற்றிபெறுகின்றன என்பதை கதைகளில் சித்தரித்தவர் JACK LONDON ஜாக் லண்டன். இவர் வெள்ளைக்காரர்கள்தான்  உயர்ந்தவர்கள் என்றும் , கடவுள் இல்லை என்றும் நம்பியவர் .  ஆயினும் இவை இரண்டும் இவரது புகழுக்குத் தடைக் கற்களாக நிற்கவில்லை. 40 வயதுதான் வாழ்ந்தார். அதற்குள் 50 புஸ்தகங்களை வெளியிட்டு புகழுடன் மறைந்தார் .

பிறந்த தேதி – ஜனவரி 12, 1876

இறந்த தேதி – நவம்பர் 22, 1916

வாழ்ந்த ஆண்டுகள் – 40

பனி மூடிய அலாஸ்கா ALASKA போன்ற இடங்களிலும் மனிதர்களும் ஓநாய் போன்ற பயங்கர  நாய்களும் குன்றாத உற்சாகத்துடன் எப்படி முன்னேறுகின்றன என்று தி கால் ஆப் தி வைல்ட் THE CALL OF THE WILD முதலிய நாவல்களில் காட்டுகிறார்.

எவருக்கு உடலிலும் உள்ளத்திலும் பலம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாழ வேண்டும் FITTEST SHOULD SURVIVE , வெள்ளை நிற தோல் உடையோர் WHITE PEOPLE ARE SUPERIOR மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற கொள்கையுடையவர். அமெரிக்காவில் குடியேறிய சீனர்களை மஞ்சள்  ஆபத்து YELLOW PERIL என்று வருணித்தார்.

சான்பிரான்சிஸ்கோ SFC நகரில் பிறந்தார். கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் OAKLAND வளர்ந்தார்.அவருடைய தாய் முறையான திருமணம் இன்றி இவரை ஈன்றெடுத்தார் ; தந்தை வீட்டைவிட்டு ஓடிப்போனார். உள்ளத்தில் கதைகள் ஊற்றெடுத்தாற் போல வரவே 50 புஸ்தகங்களை எழுதித் தள்ளினார்,

ஓக்லாண்ட்டில் துறைமுக தொழிலாளர் கும்பலில் சேர்ந்து பணிபுரிந்து 17 வயதில் கப்பல் ஏறினார். இந்த கடல் பயண அனுபவம் இரண்டு நாவல்களுக்கு அடித்தளமாக அமைந்தது. வீடற்றோர் போல HOBO பொது இடங்களில் தூங்கும் நாடோடி போலவும் வாழ்ந்தார். இதனால் அடிக்கடி சிறை செல்ல நேரிட்டது. இறந்த சிறைவாசங்கள் , தன் வாழ்க்கையில் முன்னேற உதவுவதாவும் எழுதினார் .

பள்ளிக்கல்வி முடிப்பதற்குள் உணவுப் பொருள்களை டின்களில் அடைக்கும் ஆலைகளிலும் CANNERIES , லாண்டரிகளிலும் LAUNDERIES வேலைசெய்தார். 24 வயதான போது , முதல் கதைத்தொகுப்பை வெளியிட்டார்

1897-98-ம் ஆண்டுகளில் தங்கம் கிடைக்கும் இடங்களை நோக்கி மக்கள் கூட்டம் வெறி பிடித்தார் GOLD RUSH போல ஓடியது. அந்த தங்க வேட்டைக்காக இவரும் கனடாவுக்குச் சென்றார். மக்கள் எளிதில் வசிக்கமுடியாத இடங்களில் போராட்ட வாழ்வு நடத்தியது,  பின்னர் இரண்டு புகழ் மிகு படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது . உடல் வலு உள்ளோரே வாழத் தகுதி உடையோர் மற்றவர்கள் செத்து மடியட்டும் என்ற கொள்கை உடையவர் என்றாலும் ஏழைகள் படும் துன்பத்தினையும் ஒரு (PEOPLE OF THE ABYSS) சில நாவல்களில் வடித்தார். சமூகத்தில் தீண்ட தகாதவர்கள் போல ஒதுக்கப்பட்டவர்களைப் பற்றி இவர் எழுதி வெற்றி பெற்றது பிற்கால எழுத்தாளர்களுக்கு கருப் பொருளாக அமைந்தது. கடலோடியாக இவர் நடத்திய வாழ்வு SEA WOLF ஸீ வுல்ப் என்ற நாவலுக்கு  வழிவகுத்தது. எழுத்து மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்த எழுத்தாளர் என்று பெயர் எடுத்த போதிலும் அற்பாயுசில் உயிர் நீத்தார்; ஜான் லண்டன், கவிதைகளையும், கட்டுரைகளையும்  எழுதினார்.

அவரது படைப்புகள்:

1900 – THE SON OF THE WOLF

1902 – CRUISE OF THE DAZZLER

1903 – CALL OF THE WILD

1903- PEOPLE OF THE ABYSS

1904- SEA WOLF

1906 WHITE FANG

190 – THE ROAD

1908 – IRON HEEL

1909 – MARTI EDEN

1910- BURNING DAY LIGHT

இவரது நாவல்களையும், கதைகளையும் வைத்து பல திரைப்படங்கள் , டெலிவிஷன் தொடர்கள் வந்துள்ளன. கானகத்தின் குரல் என்ற தலைப்பில் ஜாக் லண் டனின்   கால் ஆஃப் தி வைல்ட் நாவலும் வெளியிடப்பட்டுள்ளது.

–SUBHAM-

tags -40 வயது, 50 புஸ்தகம், நாவல் ஆசிரியர், ஜாக் லண்டன் ,Jack London, 

LONDON CALLING (HINDUS) 12-7-2021 (Post No.9847)

WRITTEN BYLONDON SWAMINATHAN

Post No. 9847

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-7- 2021 MONDAY PROGRAMME as broadcast

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -6 MTS

PRAYER – MRS ANNAPURANI PANCHANATHAN

ASHTAPATHI -22 BY LONDON SRI BALA SUBRAHMANYAN -8 mts

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Bodhendral

– 12 MTS

ABHANGAM BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

London swaminathan Talk read by Sri Kalyanasundaram, Producer, Gnanamayam- 5 mts

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags-  broadcast1272021

LONDON CALLING (TAMILS) 11-7-2021 (Post No.9846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9846

Date uploaded in London –13 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

11-7-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON MumbaiSri Siddhi Vinayakar Temple10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  15 mts

Kumari Hiranmayi Raghavan

Mrs Kavitha Subramanian 

Mrs Latha Murthy

Mrs Radhika Shrikanth recite Thiruppugaz.

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast 1172021

பகவந்நாம போதேந்திரர் (Post No.9845)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9845

Date uploaded in London – 13 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 12-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

போதேந்திரர்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். புண்ய பூமியான பாரதத்தில் தெற்கே நாயன்மார்களும், ஆழ்வார்களும் பதிகங்களாலும் பாசுரங்களாலும் பக்தி மழை பொழியச் செய்தனர். அதே போல வடக்கே, சைதன்ய மஹா பிரபு, மீராபாய், ஜெயதேவர், துளஸி தாஸர், சமர்த்த ராமதாஸர், பத்ராசல ராமதாஸர் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மகான்கள் தோன்றி பக்தி மார்க்கத்தைப் பரப்பினர்.

இஸ்லாமியரின் படையெடுப்பால் பல கோவில்கள் அழிக்கப்பட்டன ; என்றாலும் இந்து தர்மத்தைப் பாதுகாத்து இன்றைய தலைமுறையினர் வரை அப்படியே அந்த தர்மத்தை வழுவாது வழங்கியவர்கள் இந்த அருளாளர்களே. இவர்களில் குறிப்பிடத் தகுந்த பெரும் மகானாக அவதரித்தவர் பகவந் நாம போதேந்திர சுவாமிகள்.  ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்ட, இறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்தது; தனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேத, தர்ம, சாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்; அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால், அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவே, அவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும், அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள், புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்; காசிக்குச் சென்றார். முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர், இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூற, ஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால் போதும், அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமே, அனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும், நெற்றியில் குங்குமப் பொட்டுடனும், பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர், தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர், அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள், நாளை வந்து பாருங்கள் என்று அவர், அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார். அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்; நலம் பெறுவோம்

நன்றி வணக்கம்!

ஸர்வ லோக சரண்யாய போதேந்த்ர குரு மூர்த்தயே!

ஸ்ரீதரார்ய ஸ்வரூபாய நாமோத்ராய மங்களம் ||

நன்றி, வணக்கம்!

***

OLD ARTICLES IN THE BLOG ON BODHENDRAL



Do Saints’ Samadhis have Divine Power? Can They do …

https://tamilandvedas.com › 2014/06/11 › do-saints-sa…

  1.  
  2.  

11 Jun 2014 — Shirdi Baba Shrine with Samdhi Written by London Swaminathan Post No.1099; Dated 11th June 2014. Hindus believe that by visiting the …

tags- பகவந்நாம, போதேந்திரர், 

இந்தியாவில் பிறந்து நோபல் பரிசை வென்ற ஆங்கில சிறுவர் கதை ஆசிரியர் (Post.9844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9844

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜங்கிள் புக் JUNGLE BOOK  என்ற கதையையும் அதை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ரட்யார்ட் கிப்ளிங்கையும் RUDYARD KIPLING அறியாதோர் வெகு சிலரே. அவர் பம்பாயில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கில தம்பதிகளுக்குப் பிறந்தார். ஐந்து வயதுக்குப் பின்னர் இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியாவில் பல பதவிப் பொறுப்புகளில் இருந்தார்.

பிறந்த தேதி – டிசம்பர் 30, 1865

இறந்ததேதி – ஜனவரி 18, 1936

வாழ்ந்த ஆண்டுகள் – 70

1907ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. அதிலிருந்தே அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர், இந்திய சுதந்திர எதிர்ப்பாளர் என்பது விளங்கும் . அதுமட்டுமல்ல கதா பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் இந்தக் கருத்துக்களும் இனவேற்றுமையும் காணப்படும். ஆயினும் கதை சொல்லுவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்  காலத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் தம்பதிகளுக்குப் பிறந்தார் என்பதால் இதில் வியப்புமில்லை. இந்தியா  பற்றி எழுதிய கதை, கவிதைகளில் தான் நேசித்த விஷயங்களையும் சொல்கிறார். 17 வயது வரை இங்கிலாந்தில் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தைக் துவக்கி தனது கதைகளையும், கவிதைகளையும் வெளியிடத் துவங்கியவுடன் புகழ் பரவியது. 29ஆவது வயதில் அமெரிக்காவில் இருந்தபோதுதான் ஜங்கிள் புக் JUNGLE BOOK என்னும் காட்டு மிருகங்கள் பற்றிய கதை எழுதினார். இது அவரது மகளுக்குச் சொல்லிய கதையின் அடிப்படையில் அமைந்தது.  காட்டு விலங்குகளிடையேயே வாழ்ந்த ஒரு சிறுவன் பற்றிய கதை இது . 1899ல் அவரது மகள் இறந்தவுடன் குடும்பம் இங்கிலாந்துக்கே திரும்பிவந்தது.

இந்தியாவில் நடக்கும் துணிகர, சாகசச் செயல்களை அடிப்படையாகக் கொண்டு கிம் KIM  என்ற நாவல் எழுதினார். இது நேருஜிக்கு மிகவும் பிடித்த  நாவல். ‘இப்போது’ மிருகங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதை 37 வயதில் நகைச் சுவையுடன் எழுதினார்.

வன விலங்குகள் பற்றி இவர் எழுதியதையே சிறியோரும் பெரியோரும் விரும்பிப் படித்தனர். ஆங்கிலேயர்கள் தொலைதூரப் பிரதேசங்களில் செய்த சாகசங்களை எழுதியதால் ஆங்கிலேயரும் விரும்பிப் படித்தனர். முதல் உலகப் போரில் கிப்ளிங்கின் 18 வயது மகன் இறந்தான். இதற்குப் பின்னர் அவர் எழுதியவற்றில் இந்த சோகம், துயரத்தின் தாக்கத்தை காணலாம்.

-சுபம்–

Publications

1888 – SOLDIERS THREE

1888 – BAA, BAA, BLACK SHEEP

1890 – WEE WILLIE WINKIE

1892- BARRACK ROOM BALLADS

1894- THE JUNGLE BOOK

1899- STALKY AND CO

1901- KIM

1902 – JUST SO STORIES

1906- PUCK OF POOK’S HILL

–SUBHAM—

tags- நோபல் பரிசு, ரட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக்  , ஆங்கில,  சிறுவர் கதை ஆசிரியர், Rudyard Kipling

August 2019 London Swaminathan Articles; Index 81 (Post No.9843)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9843

Date uploaded in London –12 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9700 PLUS POSTS.

August 2019 Index 81

Women in 100 Hindu Law Books,6711;1 August, 2019

My visit to Chennai museum-8;6712; 1/8

Swami s Mahabharata Puzzle 1819;6714;1/8

Swastika Mystery, Not found in the Middle East,6717;2/8

My visit to Chennai museum-9; 6719;2/8

My visit-10;6724; 3/8

Animal Medicines and anAmulets in Tamil and Shakespearean works , 6721;3/8

Greatness of Number Six in Hinduism and Judaism, 6729;4/8

My visit -11;6730;4/8

Where is God? One orange if you tell me, 6733; 5/8

My visit-12; 5/8; 6735

Number 6 means Brahmins 6737;6/8

Swami s Idea corner- Quotations on currency notes and Missing Cauldron,6738;6/8

Doctors Anecdotes, 6742; 7/8

Swami s crossword 7819;

Largest and Longest Stone Inscription in tho world, 6746;8/8

What is the true meaning of Sloka? Did Sholapur become Sloka? 6752;9/8

Number Six in the oldest Tamil Book, 6757;10/8

More about Music Pillars in Hindu temples, 6759;10/8

Roll on the road and get rid of your sins,6762;11/8

List of 150 Great Hindu Astronomers &300 Sanskrit books

on Astronomers ,6763;11/8

Swami s crossword 12819;6767:12/8

Is he gone yet? Newspaper phone call to a sick VIP,6768;12/8

Sickness in the guise of a lady,6772;13/8

Archbishop s Strange Disease, 6779;14/8

Swami s crossword 15819;6884;

Story of Golden Bowl in Lalita Vistara and Borobudur 6882;15/8

The Story of the Greedy Merchants,6888;16/8

Swami s crossword 16819;6889

Sacred Number Seven,6893;17/8

World Wonder in Chennai- Oldest working Steam Engine,

6896;18/8

More about Holy Seven,6901;19/8

Swami s crossword 19819;6902

Chennai Sea Wonder, 6905;20/8

Seven Worst Sins and Seven Virtue s, 6906;20/8

The Mystery of Hindu skeleton Lake gets deeper, 6909;21/8

Hindu Wonder near Madurai,6910;21/8

Swami s crossword 21819;6912

Train went back for an old lady, 6916;22/8

Tirupati Temple Wonder and Tamil Wonder,6922;23/8

Horse and Husband! Medical Jokes!6926;24/8

Number Seven in Rigveda, Greece, Australia,China and

Middle East ,6928;24/8

London Mahalakshmi Templ e Ratha Yatra,6932;25/7

Swami s crossword 25819;632;

Astrology Dictionary, Tamil English Dictionary from

Sri Lanka ,6936;26/8

Four Wives of Krishnadevaraya, 6937;26/8

Swami s crossword 26819;6938

Notting hill Carnival in London,6940;27/8

Krishnadevaraya s visit to Kumbakonam Mahamakam, 6941;27/8

List of Sexy Plants,6946;28/8

Swami s crossword 29819;6950

Sweeter than liquor is Love,6953;30/8

Seven Valued Logic in Jainism, 6957;31/8

Xxx

TAMIL ARTICLES FROM AUGUST 2019

நூறு சட்ட புஸ்தகங்கள்! ஸ்ம்ருதிகள், 6709; ஆகஸ்ட் 1, 2019

கொண்டுவந்து போட்டு கொளுத்து , 6710; 1/8

தமிழ்ப் புதிர் 1819; 6713

சுவஸ்திகா இல்லாத இடம் எது?6716; 2/8

த.கு.போ. 2819, 618

த.கு.போ . தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி

சென்னை அருங்காட்சியக  வளாகத்தில் அரிய மரங்கள் ;6722; 3/8

இரண்டாம் உலக மஹா யுத்தம் – மலே சியாவில்

ஜப்பானியர் அட்டூழியம்- 1 , 623, 3/8

அலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்க்ருதம், 6726, 4/8

இரண்டாம் உலக …. 2, 6727; 4/8

த.கு.போ 4819; 6728

ஆறாம் நம்பர் அகிசயங்கள் ! இந்துமத-யூத மத ஒற்றுமை; 6732; 5/8

த.கு.போ 5819; 6734

800 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுப் புலவர்கள்- மேலும் சுவையான செய்திகள் ,6739, 6/8

கல்வெட்டுகளில் ஜோதிடமும் சங்கீதமும், 6741, 7/8

ஆறு கால பூஜை,அருகலாஉற்சவம், 6 THOLIL 6751

வாளும் குண்டூசியும் – காந்திஜியும் நாதிர்ஷாவும்

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய் தி, 6756,

துலுக்கப்  படைகளை விரட்டிய அனுமன் பாடல் 6758,19/8

த .கு.போ.8819; 6747

75 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா, 6748, 8/8

ஹிட்லரும் முசோலோனியும் , 6749, 8/8

தொல்காப்பியத்தில் உயிரியல் விஞ்ஞானம்,6761, 11/8

லண்டன் சாலையில் உருண்ட பக்தர்கள் , அதிசயக் காட்சி ,6765,12/8

150 இந்திய வானிலை விஞ்ஞானிகளும் 300 சம்ஸ்க்ருத நூல்களும், 6766, 12/8

ஐயர் குடுமி அவிழத்தது ஏன் ?6770, 13/8 (சாணக்கியன் )

150 இந்திய ….2 (6773), 13/8

டாக்டரிடம் நோயாளியின் கடைசி வேண்டுகோள், 6776, 14/8

150 இந்திய …..3, 6773, 14/8

ஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும் (பாரதிதாசன் கவிதை , 6778, 14/8

பெண் வடிவில் நோய் போனது, 6881, 15/8

த.கு.போ 15819,6883

சுஜாதா கொடுத்த தங்கக் கிண்ணம், 6886, 16/8

ஐயோ பாதிரியாரே ! அது என் கால், பெண் வெட்கம்; 6887, 16/8

வியாபாரிகளின் பேராசை- பழைய கதை, புதிய வியாக்கியானம், 6891, 17/8

த.கு.போ.17819, 6892

தில்லை சிதம்பரத்தில் 75 மரம், செடி , கொடிகள் ,6897, 18/8

த.கு.போ.18819, 6892

அதிசய எண் ஏழு , புனித எண் 7, 6900, 19/8

தமிழ் இலக்கியத்தில் எண் ஏழு, ,6904, 20/8

த.கு.போ.20819, 6907

இமயமலை ஏரி அதிசயம்,- உலகப் பத்திரிகைகள் அலசல், 6911, 21/8

மதுரை அருகில் அதிசய நந்தி உருவம் கண்டுபிடிப்பு, 6915,22/8

த.கு.போ.21819, 6913

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -1, 6917, 22/8

த.கு.போ.23819, 6923

த.கு.போ.24819, 6929

த.கு.போ.27819, 6942

கோவில் செங்கலில் வெளிநாட்டுக்காரர் உருவம், ,6919,23/8

கால் முறிவுக்கு அதிசய சிகிச்சை !கிழவிக்காக

திரும்பிப்போன ரயில் 6920,23/8

இலங்கைக்கு இலவச  சுற்றுலா -2, 6921, 23/8

திருப்பதியில் அதிசயம் ! உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் ,

6925, 24/8

தமிழ் இசையில் எண் ஏழு ,6927, 24/8

தமிழ் தமாஷ் : உ.வே.சா.  ஐயங்கார் ஜோக்ஸ் , 6931, ,25/8

குதிரையா, கணவனா ? எது முக்கியம்?6935, 26/8

மாமன்னர்  கிருஷ்ணதேவராயரின் 4 மனைவி மர்மம், 6943, 27/8

தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா  5800 கிலோ

6945, 28/8

மன்னர் வருகிறார் , கும்பகோணத்தில் பலத்த பாதுகாப்பு ; மதுரையில்

3 நாள் தங்கல், 6947, 28/8

த.கு.போ.29819, 6951,29/819,6951

பாம்பும் வசம்பும்,6949, 29/8

விநாயக சதுர்த்தி வழிபாட்டின் இரகசியங்கள், 6948, 29/8

கச்சேரியில் டிங்கிள் , டிங்கிள் , லிட்டில் ஸ்டார் ,6954, 30/8

த .கு.போ.31819, 6960

தமிநாட்டுப் போர்க்களங்கள், 6958

நூறு கோண் – ஒரு அணு- தமிழ் ரகசியங்கள் , 6959, ஆகஸ்ட் 31, 2019

–subham—

Tags- Index August 2019, Index 81