Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரெஞ்ச் மொழியில் விஞ்ஞான கற்பனைக் கதைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஜுல்ஸ் வெர்ன் (JULES VERNE) . இவர்தான் முதலில் துணிகரச் செயல்கள் அடங்கிய அறிவியல் புனைக் கதைகளை எழுதினார். இவருக்குப் பின்னர் எச்.ஜி. வெல்ஸ் , ஆர்தர் கிளார்க், ஐசக் அஸிமோவ் ஆகியோரும் எழுதினர்.
ஜுல்ஸ் வெர்ன் , மேற்கு பிரான்சில் நான்டேஸ் (NANTES) துறைமுக நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். இவரும் பாரிஸ் நகரில் சட்டம் பயிலச் சென்றார். அங்கே அவருடைய மாமா, ஜுல்ஸ் வெர்னை எழுத்தாளர் பலருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்களில் ஒருவர் புகழ் பெற்ற ஆசிரியர் அலெக்ஸ்சாண்டர் டூமா ஆவார்.
படிக்கும் காலத்திலேயே ஜுல்ஸ் வெர்ன் நாடகங்களை எழுதத் துவங்கினார் . சட்டப் படிப்பிலும் தேறினார். அவருக்கு 22 வயதாகும்போதே அவருடைய ப்ரோக்கன் ஸ்ட்ரா (Broken Straw) என்னும் நாடகம் பாரிஸில் மேடை ஏறியது. பின்னர் அவருடைய சிறுகதைகளும் வெளியாகின.
28 வயதில் ஜுல்ஸ் வெர்ன், ஒரு இளம் வயது விதவையை மணந்து 2 குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றார் . வாழ்க்கையை நடத்துவற்குத் தேவையான பொருள் ஈட்டுவதற்காக ஸ்டாக் ப்ரோக்கர் (Stock Broker) ஆனார் (பங்குச் சந்தை ). 35 வயதில் அவருடைய முதல் நாவல் வெளியானது. ‘பலூனில் ஐந்து வாரம்’ என்பது அதன் பெயர். அடுத்த ஆண்டிலேயே ‘பூமி உருண்டையின் மையத்துக்குப் பயணமாதல்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்டாக் ப்ரோக்கரை விட இந்தப் பணியில் நிறைய பணம் கிடைக்கும் என்று கருதி முழுநேரமும் எழுத்துப் பணியில் இறங்கினார்.
வினோதமான எந்திரங்களில் விசித்திரமான சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் புதினங்களை இவர் எழுதியது பிற்காலத்தில் எச். ஜி. வெல்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களுக்கு புதிய ‘ஐடியா’க்களைக் கொடுத்தது 19ஆம் நூற்றாண்டில் விமானம் முதலியன கண்டுபிடிக்கப்பட்ட தருணத்தில் இவருடைய புதினம் வெளியானது . அந்தக் காலத்தில் எவரும் அறியாத விண்வெளிக்கலம் (Spacecraft) முதலியனவும் இவரது நாவல்களில் பவனி வந்தன. ‘கடலுக்கடியில் 20000 லீக் ஆழத்தில்’ என்ற நாவலும் எண்பதே ‘நாட்களில் உலக வலம்’ என்ற நாவலும் இவருக்கு மிகவும் புகழைக் கொடுத்தன. இவை சினிமாக்களாகவும் (திரைப்படம்) உருவெடுத்தன. அவற்றில் வரும் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டன் நீமோ , பிலியாஸ் ஃபாக் என்ற கதா பாத்திரங்கள் உலகறிந்த மனிதர்களாக ஆயினர்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
சுற்றுப்புற சூழலைக் காக்க ஏராளமான எளிய வழிகள் உள்ளன.
சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எந்தப் பொருளையும் வேண்டாம் என்று உறுதிபடச் சொல்லும் மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்க மாட்டேன் என்ற மன உறுதி இப்பொருள்களைச் சந்தைப் படுத்தலைத் தவிர்க்கும்.குளிர்பானங்கள், நீர், தேநீர், காப்பி ஆகியவற்றைப் பருகுவதற்கு பேப்பரிலான கோப்பைகளைத் தரும் போது அவற்றை வாங்க மறுப்பதும் பருகுவதற்கு தரும் ஸ்டிராக்களைத் தவிர்ப்பதும் எளிய செயல்களானாலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் அரிய வழிகளாகும்.
ஒரு T ஷர்ட்டை உருவாக்கத் தேவையான பருத்தியை வளர்க்க 700 காலன் தண்ணீர் தேவை என்பதை உணர்ந்தால் தேவைக்கு அதிகமானவற்றை வாங்க மாட்டேன் என்ற மனப் பக்குவம் உருவாகும். இது போல தேவைக்கு அதிகமாக நாம் வாங்க விழையும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பார்த்து வாங்க ஆரம்பித்தால் விற்பனைச் சந்தையின் போக்கும் மாறும்; ஒருவரின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அண்டை அயலாரும், நட்பும், சுற்றமும் உத்வேகமடைந்து இப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வர்.
பாக்கிங்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஏராளமான கார்ட்போர்ட் பாக்ஸ் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க, கூடுமான மட்டில் நமக்குத் தேவையானவற்றை உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்தே வாங்க வேண்டும். எந்தப் பொருளையும் உள்ளூர் உற்பத்தியாளரிடம் வாங்குவது செலவையும் குறைக்கும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும், சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்தும்.
உடலுக்கானாலும் சரி, தோட்டத்திற்கானாலும் சரி, வயலுக்கானாலும் சரி கெமிக்கல்களை – இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் இயலாவிடில் குறைக்க வேண்டும்.
அறிவியல் ஆய்வு தரும் தகவலின்படி ஒரு வாகனமானது 4.6 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு வருடத்தில் வெளியேற்றுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் எவ்வளவு நச்சு வாயுவை வெளியேற்றி சுற்றுப் புறத்தை மாசு படுத்துகிறது என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.
அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல், சைக்கிளை அதிகம் பயன்படுத்தல் ஆகியவை சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வல்ல எளிய வழிகளாகும்.
தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தலைத் தவிர்ப்பது நீர் வளத்தைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும். ஒழுகும் குழாய்களை உடனடியாகப் பழுது பார்த்தல் வேண்டும். குழாயைத் திறந்து விட்டுக் கொண்டே பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பதால் நீர் சேமிப்பு அதிகமாகும்.
சிந்தித்தால் சிறப்பான வழிகள் தோன்றும் என்பதில் ஐயமில்லை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதையை பரத முனி சொல்கிறார்நாட்டிய சாஸ்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் 6000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனியால் இயற்றப்பட்டது . இதில் 36 அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல்
tags- இந்திர விழா, ‘ஜார்ஜர’, நாட்டியம், நாடகம் கதை, பரத முனி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விஞ்ஞான புனைக் கதை எழுதிய முதல் ஆசிரியர் எச்.ஜி.வெல்ஸ் (H G WELLS) என்பது பலருடைய கருத்து ஆகும்.
ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் என்பது அவருடைய முழுப் பெயர் ஆகும். அவர் இங்கிலாந்தில் பிராம்லியில் (Bromley) பிறந்தார்.அவரது குடும்பம் ஏழைக் குடும்பம்.. ஒரு கடையில் உதவி செய்பவராகப் போனவருக்கு லண்டனிலுள்ள ஒரு விஞ்ஞானப் பள்ளியில் படிப்பதற்கு உபகார சம்பளம் கிடைத்தது.
கல்லூரியில் அவருடைய ஆசிரியர் பிரபல அறிவியல் நிபுணரான தாமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxley) ஆவார். அவர் டார்வின் எழுதிய பரிணாமக் கொள்கையை இவருக்குப் போதித்தார். பிராணிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்து பரிணாம வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் அவை எவ்வாறு வளர்ச்சி அடையும் என்று எச்.ஜி.வெல்ஸ் கற்பனை செய்தார். அவற்றைப் பல நாவல்களில் எழுதினார்.
29 வயது வரை கணக்கராகவும், ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். பின்னர் முழு நேர எழுத்துப் பணியில் குதித்தார். தன் வாழ்நாளில் சுமார் 80 கதைகளையும் ,நாவல்களையும் எழுதினார். அவற்றில் பல விஞ்ஞான கற்பனைக்கு கதைகள். அது போக மீதிக்க தைகள் சமூக, அரசியல் விஷயங்கள் பற்றியவை. வரலாற்றைச் சுவைபட படிக்கும் வகையில் ஒரு புஸ்தகமும் (Outlines of History) எழுதினார்.
வெல்ஸ் எழுதிய முதல் விஞ்ஞான கற்பனைக் கதை டைம் மெஷின் (Time Machine) எனப்படும் காலப் பயண யந்திரம் ஆகும். ஒருவர் வருங்காலத்துக்குப் பயணம் செய்து இந்த பூமி அழியும் காலத்தைக் காணும் கதை அது. எதிர்காலத்தில் இரு வகை மனிதர்கள் உருவாகலாம்; முதல் ரகம் ‘ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்ற இலோய்’ வகுப்பு. இரண்டாவது, செயல் முறைக்கு உகந்த ‘மார்லக்ஸ் வகுப்பு’. இதற்கு அடுத்த படியாக கிரகங்களுக்கு இடையே எழும் சண்டை (வார் ஆ ப் தி ஒர்ல்ட்ஸ்) பற்றி ஒரு கற்பனைக் கதை எழுதினார்.
செவ்வாய்க் கிரக மக்கள் பூமி மீது படை எடுப்பதாவும் அவர்களை பூமியிலுள்ள புழு அளவேயுள்ள கிருமிகள் அழி ப்பதாவதும் எழுதினார் . இந்த இரண்டு புஸ்தகங்களும் இவருக்கு புகழ் ஈட்டின
மனித குலத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் உண்டு என்று நம்பினார். ஆயினும் காலம் செல்லச் செல்ல மனித குலத்தின் கொடூரச் செயல்களும் சுயநலமும் அவருக்கு கவலை ஏற்படுத்தின.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
கடந்த 50 ஆண்டுகளில் மனித குலம் பயன்படுத்தி வரும் வாகனங்களில் படிம எரிபொருள் பயன்படுத்தப் படுவதால் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் பசுமை வாயுக்கள் வளி மண்டலத்தை மாசு படுத்தி வந்துள்ளன. கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பத்தில் 0.85 டிகிரி செண்டிகிரேடு கூடுதலாகி உள்ளது. ஒவ்வொரு பத்து ஆண்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்போது வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.இதனால் தட்பவெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் மட்டம் உயர்கிறது.
உலகின் மொத்த ஜனத்தொகையில் பாதிக்கு மேல் கடலுக்கு 60 கிலோமீட்டர் அருகிலேயே வசித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதால் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவர்.
அதிக வெப்பமான நிலையில் நாம் காற்றை சுவாசிக்கும் போது சுவாசக் கோளாறுகளும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. 2003ஆம் ஆண்டு கோடை காலத்தில் மட்டும் எப்போதும் இல்லாதபடி 70000 கூடுதல் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது. சுத்தமான ஆற்றல் அமைப்புகளை உருவாக்குமாறும் பயன்படுத்துமாறும் அது இடைவிடாது வலியுறுத்தி வருகிறது.
குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்வது, நடந்து செல்வது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்கள் படிம எரிம பொருளைப் பயன்படுத்தும் வாகனப் பயன்பாட்டை மட்டுப் படுத்தும்,
2015ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் செயல்பட, ஒரு செயல்திட்டத்தைத் தந்துள்ளது. அத்துடன் உலகெங்கும் தட்ப வெப்ப மாற்றத்தால் ஏற்படும் சீர்கேடுகளைக் குறித்து மனித குலம் விழிப்புணர்ச்சிப் பெற அனைத்து இடங்களிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்ப வலியுறுத்தியுள்ளது.
ஐந்து வயதுக்கும் கீழாக உள்ள குழந்தைகளும், முதியோரும் தட்ப வெப்ப மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் இந்த அபாயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.
பல அறிவியல் ஆய்வுகள், ‘தட்ப வெப்ப மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்படும்’, ‘சூறாவளிகளும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும்’, ‘தொற்று வியாதிகள் பரவும்’, ‘பல தீவுகளில் வசிப்போரும் கடலோரம் வசிப்போரும் அபாயத்திற்கு உள்ளாவர்’ ஆகியவற்றைத் தெரிவித்துள்ளன. ஆகவே இதைத் தடுக்க ஒவ்வொருவரும் இந்தச் சீர்கேட்டைத் தடுக்கும் ஒரு தலைவனாக தம் தம் பகுதிகளில் செயல்பட வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Atreya asked Bharata the reason for writing Natya sastra.
Bharata said,
Natyaveda was created by Brahma. Long long ago people of this world, goaded by greed and avarice, and jealousy and anger took to uncivilised ways of life.(Literally Gramya = vulgar).
The world was then inhabited by Gods, Demons, Yakshas Rakshasas, Nagas and Gandharvas . Various lords were ruling. At that time gods led by Mahendra approached Brahma and requested him to give them something which would not only teach them but be pleasing both to eyes and ears. Since Sudras are not allowed to listen to Vedas why not create a fifth Veda which would be accessible to all varnas/ castes
Brahma agreed. He dismissed the petitioners and meditated in solitude. Then he took
words from the Rigveda,
music from Sama veda,
movements and make up from Yajur veda and
emotional acting from the Atharvanaveda.
Then he called Indra and others and said,
Here is the Natyaveda. Let the Suras/Devas practise it. It requires persons who are smart, intelligent, observant and self controlled.
Indra pondered and then said that the Suras were unable to practise it since they did not have all the qualifications. Sages are self controlled and grasped with the Vedic knowledge. Then Brahma entrusted it to me.
Brahma said to me
You have a large number of sons and students and so you practise it. So I practised it with my sons and trained them in words, emotions and movements:_
Bharati
Sattavati
Arabhati and
Vrtti
When I informed Brahma what I have done, he promised me to give all the materials required. I myself had seen Siva dancing with movements, gestures and emotions. When I said females were good to perform with grace, he created Apasaras. He created Narada and Gandharva to sing. He provided Swati and his disciples to play on instruments
When I reported to him all the practices were done, rehearsals over, he asked me to perform the first show in the Flag festival of Indra.
I commenced the performance with an interesting
Nandi= benedictory singing of eight sentences from the Vedas. When it was staged with fights and roars resulting in the defeat of the demons by devas Brahma and other gods were so pleased with the performance that they showered presents on the actors:-
Indra gave the flagpole ,
Brahma a crooked stick,
Varuna a gourd
Surya an umbrella
Siva a Siddhi
Vayu a fan
Vishnu a throne,
Kubera a crown
Sarasvati acoustics
And others — Yakshas, Rakshasas and Nagas suitable ones.
After the first show, defeated demons became angry and caused the director to become unconscious on the stage. Indra used his flagpole to thrash all the demons. It crushed —- jarjara— all the demons. Then they all wished that ‘jarjara’ be there for ever to protect them . Indra said So be it.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தியாவில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். அவர் வங்காளி மொழிக் கவிஞர். நாடக ஆசிரியர்,ஓவியர் ஆவார் . இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் நூலுக்காக 1913ல் நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கு இப்பரிசு கிடைத்தது அதுவே முதல் தடவை.
தாகூர், கல்கத்தாவில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். பாதிக் கல்வியை இங்கிலாந்தில் கற்றார். இவரது குடும்பம் பணக்கார குடும்பம். எட்டு வயதிலேயே இவருக்குக் கவிதை எழுதும் ஆற்றல் வந்தது. இவர் எழுதிய ஜனகண மன… இந்தியாவின் தேசீய கீதமாகத் திகழ்கிறது. இதே போல எங்களது தங்க வங்காளம் – அமர் சோனார் பங்களா – வங்கதேசம் என்னும் நாட்டின் தேசீய கீதமாக உளது.
தாகூருக்கு 17 வயதானபோது அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 30 வயதானபோது கிழக்கு வங்கத்தில் உள்ள (இப்போது அது வங்கதேசம் என்னும் நாடு) குடும்ப நிலன்புலன்களைக் கவனிக்கச் சென்றார். அங்கு திரட்டிய கிராமீய கதைகள், நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கை களையும் பிற்காலப் படைப்புகளில் பயன்படுத்தினார்.
தாகூர் பழைய சம்பிரதாய நடையை, பாணியைக் கைவிட்டு, மக்கள் பேசும் மொழியில் எழுதினார். இது வங்காளி மொழியில் பெரிய மாற்றங்களைக் கொணர்ந்தது. இது சம்பிரதாயக் கவிஞர்கள் அறிஞர்களுக்குப் பிடிக்காததால் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது ஆயினும் தாகூர் தளராமல் இந்திய கலாசாரத்தை மேலை உலகில் பரப்பும் பணியை எழுத்து மூலமாக மேற்கொண்டார்.அதேபோல மேற்கத்திய கலாசாரம் குறித்து வங்காளி மொழியில் எழுதினார்.
இதனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தாகூரின் புகழ் பரவியது. இந்திய கலாசாரம், மேற்கத்திய கலாசாரம், தத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். இயற்கை அழகு கொஞ்சும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் இந்த நிறுவனம் பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக் கழகமாக மாறியது. .இறைவனின் படைப்புகள் எல்லாம் ஒன்றே என்றும் அவற்றில் ஒருமைப்படுத்தும் சிந்தனை இழையோடுகிறது என்றும் நம்பினார். பிரிட்டிஷ் ஆடசியிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென்றும் குரல் எழுப்பினார். இவர் கவிதை, நாடகங்களோடு தத்துவ நூல்கள், நாவல்களையும் எழுதியுள்ளார்.
1913ல் இவருடைய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு கிடைத்தது. வங்காளி மொழியில் தான் எழுதிய கவிதைகள் பலவற்றை எடுத்து அவரே மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டதால் இந்தப் பரிசினைப் பெற முடிந்தது. பக்தி என்பது இதன் அடித்தளமாக அமைந்துள்ளது. ‘நான் பாடுவதெல்லாம் உனக்காகவே’ என்பது இதில் இழையோடும் கருத்து ஆகும் இந்த நூல் வெளியானபோது அவருக்கு வயது 49. இரண்டாயிரத்தும் மேலான பாடல்களுக்கு இசையும் அமைத்தார். அவை இன்றும் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் பாடப்படுகின்றன. இவருடைய பாடல்களை சுவாமி விவேகானந்தரும் பாடியுள்ளார். எழுபது வதில் ஓவியம் தீட்டத் துவங்கினார். அதிலும் சிறந்து விளங்கினார்.
தாகூர் பிறந்த தேதி மே 7, 1861
இறந்த தேதி – ஆகஸ்ட் 7, 1941
வாழ்ந்த ஆண்டுகள் – 80
இலக்கியப் படைப்புகள்:-
1878- A POET’S TALE
1894- THE GOLDEN BOAT
1902 – BINODINI (VINOTHINI)
1910- GITANJALI
1910- GORA
1914 – CHITRA
1916- THE HOME AND THE WORLD
1931 – THE RELIGION OF MAN
1939- SHYAMA
1940- MY BOYHOOD DAYS
–SUBHAM–tags- நோபல் பரிசு, ரவீந்திரநாத் தாகூர்., வங்காளி மொழி, ஜனகண மன, கீதாஞ்சலி