Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -24
3-2-54
KAPAATA – DOOR; KATHAVU IN TAMIL
KAPATAPURAM WAS THE SEAT OF SECOND TAMIL SANGAM/ TAMIL ACADEMY
MORE OVER PANDYA KAVATA PERAL IS MENTIONED IN ARTHASASHTRA OF KAUTILYA ; PANDYA KAVATA IS IN VALMIKI RAMAYANA AS WELL. VALMIKI RAMAYANA SAYS IT WAS DECORATED WITH GOLD AND PEARLS.
P= V
KAPATA IS ALSO WRITTEN AS KAVATA WHICH BECOMES KATAVA= KATAVU IN TAMIL (Inter change of words like Madurai becoming Maruthai, Kuthirai becoming Kuruthai)
கபாடபுரம் பாண்டியரின் இரண்டாவது தலை நகர். தென் மதுரையைக் கடல் கொண்ட பின்னர் இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்த இடம் . இதை வால்மீகி ராமாயணம் முத்தும் தங்கமும் நிறைந்த இடம் என்று வருணிக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் பாண்டிய கவா டம் என்ற முத்தைக் குறிக்கிறது கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் .
இதில் ப- வ ஆனதைக் காண்கிறோம். கபட= கவட= கதவ = கதவு
கபாடம் என்னும் ஸம்ஸ்க்ருத்ச் சொல் கதவு என்று மாறுகிறது
மதுரை – மருதை, குதிரை- குருதை ஆவது போல !
XXXX
3-2-56
As- is
Asti – he is
Xxx
3-2-56
Karana is used by Panini as an instrument, a cause, that which makes
Tolkappiar used it in third part as Ritual, Rules
Marriage rules and rituals were created when cheating increased
Aiyar Yaththanar Karanam
No other Sangam poet used it.
கரணம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் சடங்கு, விதிமுறைகள் என்பதைக் குறிக்கிறது
திருமண ச் சடங்குகளை ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று சொல்கிறார் தொல்காப்பியர். இது பாணினியின் புஸ்தகத்தில் ‘ஒரு கருவி’, ‘ஒரு காரணப் பொருள்’ என்று சொல்லப்பட்டுள்ளது. சுப கரண என்றால் மகிழ்ச் சி தரும் என்று அர்த்தம்.
Xxx
3-2-57
Nagna – dress less = naked
xxxx
3-2- 59
Crunj – bend = cringe
Dik – direction
திக்குத் தெரியாத காட்டிலே
திசை அறியும் பறவை
Xxx
3-2-61
Yug, yuj = yoke
Yoga – mind and body working together
யுக -யோக – நுக
ஒன்று சேர்க்கும் = மனதையும் உடலையும் ஒன்றுபடுத்துவது – யோகா
Bit, chit = cut
B = v
Bit = vettu in tamil
Chit +bit = sinnaapinnamaana
சி ட் பிட் = சின்னாபின்னம்
சிட் = கட் = வெட்டு
பிட் – துண்டாக்கு – வெட்டு
Pravid = scholar= prodigy
கிராமணி – கிராமத்து தலைவர்.
சி ட் பிட் = சின்னாபின்னம்
சிட் = கட் = வெட்டு
பிட் – துண்டாக்கு – வெட்டு
Graamani – head of the village or group – used until very recently
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சென்னை கற்றுக்குட்டி நமக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோட்டு நோட்டாக பழங்கால ஜோக் jokes குகளை ஒட்டி வைத்து, சேகரித்து வைத்து இருக்கிறார். சில ஜோக்குகள் — தமாஷ்கள் –சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் . மொத்தத்தில் ‘ஜோக்’ குகள் மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் . இதோ 50 ஆண்டு பழமையான JOKES ஜோக்குகள்.
இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துதான்!!
கூழ் ஆனாலும் குளித்துக் குடி ; கந்தையானாலும் கசக்கிக் கட்டு ; கார்க் ஆனாலும் ஹெலிகாப்டரிலிருந்து பிடுங்கு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்ப ராமாயணத்தில் ராவணனின் வீணைக் கொடி பற்றி கம்பன் பாடிய இடங்களை முன்னொரு கட்டுரையில் கண்டோம். மன்மதனின் மீன் கொடி பற்றியும், மேலும் பலரின் சிங்கக் கொடி இந்திரஜித்தின் பேய்க் கொடி பற்றியும் கம்பன் பாடுகிறான்.
சிங்கம், வீணை , மகரம், மீன் என்றால் உடனே நம் மனக்கண் முன் அந்த உருவங்கள் வந்து விடுகின்றன. பேய்க் கொடி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் ? கற்பனை தான் செய்யவேண்டும்!
முதலில் யுத்த காண்ட பாடலைப் படித்துவிட்டு சிறிது ஆராய்ச்சியும் செய்வோம் .
இந்திர ஜித் போர்க்களம் வந்த காட்சியை யுத்த காண்டத்தில் வருணிக்கையில்
“பேய் ஆர்த்து எழுந்து அடு நெடுங்கொடி பெற்றது அம்மா”
— என்று வியப்புகுறியுடன் பாட்டை முடிக்கிறான் கம்பன்
பொருள்
இந்திரஜித் வந்து விட்டான், வந்துவிட்டான் என்று பேய்கள் ஆனந்தத்தால் கூத்தாடுகின்ற பெரிய கொடிகளைப் பெற்றது இந்திர ஜித் ஏறிய தேர்.
பேய்க் கொடியின் உருவம் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தும் கப்பல்களில் கபாலம் என்னும் மண்டை ஓடுகள் காட்சி தருகின்றன. அவைகளைப் போல பேய் உருவம் பொறித்த , அச்ச்சுறுத்தும் கொடிகளை இந்திரஜித் பயன்படுத்தி இருக்கிறான் . இங்கு ஒரு உள வியல்- மனவியல் குறிப்பும் கிடைக்கிறது
கொடிய குணம் படைத்த துரியோதனனுக்கு பாம்புக் கொடி . பேய்க் குணம் படைத்த இந்திரஜித்துக்கு பேய்தான் கொடி! மனம் போல மாங்கல்யம் !
கும்பகருணன் , ராவணன் தம்பி. அவன் போருக்கு வந்த காட்சியை கம்பன் யுத்த காண்டத்தில் வருணிக்கிறான் மலை போன்ற தோள் , பரந்த மார்பு. ஆனால் அவன் தேரில் சிங்கக் கொடி பறக்கிறது. எல்லா வகையிலும் ராவணனை ஒத்து இருக்கிறான் ஆனால் வீணைக் கொடிக்குப் பதிலாக சிங்கக் கொடி பறக்கிறதே ! யாரப்பா இவன்? என்று விபீஷணனை வினவுகிறான் ராமன். அதற்குப் பதில் கூறிய விபீஷணன் அவன்தான் கும்ப கருணன் என்கிறான். இதோ சிங்கக்கொடி பாடல்…….
வீணை என்று உணரின் அஃ து அன்று விண்தொடும்
சேண் உயர் கொடியது வய வெஞ்சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால்
பொருள்
வானை முட்டும் உயரத்துக்கு கொடி. அதில் வீணையைக் காணவில்லையே .
சிங்கக் கொடி பறக்கிறது . அவனையோ காற் று வேகத்தைக் கடந்து மனோவேகத்தில் பார்த்தாலும் காண முடிவதில்லை . அணிகள் அழகு செய்யும் மார்பை உடைய இவன் யார் ?
இது ராமனின் கேள்வி
xxx
மன்மதனின் மகர கேது
கம்பராமாயணம் பால காண்டத்தில் மன்மதனின் மகரக் கொடி பற்றி பாடினான்.
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – என்று உண்டாட்டுப் படலத்தில் மகர கேது பற்றிச் சொல்கிறான்.
இதன் பொருள் – வைரம் போன்ற உறுதியுடைய வாளை உடைய மன்மதனின் மீன் கொடி — என்று உரை கூறுகிறது மகர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு சுறா மீன் , முதலை என்ற சிறப்புப் பொருள்களும் உண்டு .
–subham—
tags — பேய்க் கொடி , மீன் கொடி , சிங்கக் கொடி , மகர கேது
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 11-1-2021 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
திரு சுவாமிநாதன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஜே – J மற்றும் ஒய் Y ஆகிய இரு எழுத்துக்கள் மாறும் விதத்தைச் சுட்டிக் காட்டி ஜீஸஸ் எப்படி யேசுவாக ஆகிறது என்பதையும் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார்.
இதே போல வங்காள மொழியில் பாகபதம் என்பது தமிழில் பாகவதம் ஆகும். ஷிப் சாகர் என்பது தமிழில் சிவ சாகர் ஆகும். பெங்கால் என்பது வங்காளம் ஆகும்.
இதே போல ஸ்தோத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் தமிழில் தோத்திரம் ஆகும்; ஸ்துதி துதி ஆகும் இப்படி மாறுவது பிரதேச ரீதியிலான இயற்கையாகும்.
இனி ஆதார எழுத்துக்கள் 51. இவற்றில் ‘ய’வும் ஒன்று. அதைப் பற்றிய கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே ஒரு தேவதை உண்டு. பல அர்த்தங்கள் உண்டு. இவற்றை தந்திர சாஸ்திரங்களில் காணலாம். பிரயோக முறையை சிறந்த தாந்த்ரீகர்களே சொல்ல முடியும்.
ய என்ற எழுத்திற்கு மந்த்ராபிதானம், ப்ரகாராந்தர மந்த்ராபிதானம், ஏகாக்ஷர கோச, பீஜ நிகண்டு, மாத்ருகா நிகண்டு, காமதேனு தந்த்ரம் உள்ளிட்ட ஏராளமான தந்திர சாஸ்திரங்களில் பல அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக ப்ரகாராந்தர மந்த்ராபிதானம் என்ற தந்த்ர சாஸ்திரத்தில்
ய என்ற எழுத்திற்கு கீழ்க்கண்ட அர்த்தங்கள் தரப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டலாம்.
Ya denotes : Vani, Vasudha, Vayu, Vikrti, Purusottama, Yuganta, Svasana, Sighra, Dhumra, Arci, Pranisevaka, Brahma, Jati, Lola இவை உள்ளிட்ட சுமார் 55 அர்த்தங்கள் உண்டு. இன்னும் பல்வேறு தந்திர சாஸ்திரங்கள் இன்னும் பல அர்த்தங்களைத் தருகின்றன.
ஸித்த சாபர தந்திரம், சேஷ சம்ஹிதா, பாத்ம சம்ஹிதா ஆகிய நூல்கள் ஒவ்வொரு எழுத்தின் தேவதை, நிறம், அந்த எழுத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பலன் உள்ளிட்டவற்றைத் தருகின்றன.
‘ய’ பற்றி சித்த சாபர தந்திரமும், பாத்ம சம்ஹிதாவும் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்:
‘ய’ பற்றி சித்த சாபர தந்திரம் தரும் அபூர்வ உண்மைகள் :-
இந்த ‘ய’கார தேவியின் பெயர் தீபிநீ. வெண்மையான சரீரத்துடன் 8 கைகளோடு சிம்ம வாஹனம் ஏறி 1) சூலம் 2) வில் 3) பாணம் 4) பாசம் 5) கத்தி 6) கேடயம் 7) வாத ஹஸ்தம் 8) அபயம் என இப்படி 8 வகை ஆயுதத்துடன் பிரகாசிப்பவள் ஆகும்.
பாத்ம சம்ஹிதா தரும் விவரங்கள் :
இந்த ‘ய’காரத்திற்கு வாயு தேவதையாகும். தாம்ர வர்ணம். இரண்டு கைகளிலும் 1) அங்குசம் 2) த்வஜம் தரித்து ஸர்வாபரணங்களுடன் மான் மீது ஏறிக் கொண்டு கம்பீரமாக விளங்குவார்.
இது வாயு தேவதை ஆனதால் காற்று போல் எல்லாவற்றையும் பரிசுத்தமாக்கும் தன்மை உடையது. மேலும் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கும் சக்தி உடையதாகும்.
அருட்பிரகாச வள்ளலார் சிவாய நம என்பதை விளக்கி அருளும் போது சி என்பது பதி என்றும் வா சத்தி என்றும் ய என்பது ஜீவன் என்றும் ந என்பது திரோதை என்றும் ம என்பது மாயை என்றும் குறிப்பிடுகிறார். நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தால் ஏம சித்தியும் தேக சித்தியும் உண்டாகும். ‘சிவாய நம’ எனச் செப்ப செம்பு பொன்னாயிடும் என்ற திருமூலர் வாக்கையும் ‘சிவாய நம் என்று சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்ற அவ்வையார் வாக்கையும் அவர் பிரமாணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
சைவ சித்தாந்த நூல்கள் ய என்ற எழுத்திற்கான சிறப்பு அர்த்தத்தை விரிவாக எடுத்துரைக்கின்றன. உமாபதி சிவாசாரியார் அருளியுள்ள கொடிக் கவியில் நான்காம் பாடல் நம சிவாய என்பதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் ரகசியத்தையும் தருகிறது.
சிவாய நம என்பதில் சிகாரத்தில் சிவமும், வகாரத்தில் அருளும், யகாரத்தில் உயிரும், நகாரத்தில் திரோதான சக்தியும் மகாரத்தில் மலமும் உள்ளன. சிகார வகாரங்களை முதலில் வைத்து உச்சரித்தால் அது வீடு பேற்றைத் தரும். இதை நல்லாசிரியர் அல்லது குருவிடமிருந்து உபதேசம் மூலம் பெறுதல் வேண்டும். அப்போது பலன்கள் தெரியும்.
மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படும் காயத்ரி மந்திரத்தில் – ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி; தியோயன: ப்ரசோதயாத் என்பதில் வரும் 24 எழுத்துக்களும் 24 விதமான சக்தியைத் தருகின்றன.
இதில் வரும் ஸ்ய என்பது இடது மார்பைக் குறிக்கிறது. யாத் என்பது தலையைக் குறிக்கிறது. காயத்ரி என்பதில் வரும் மூன்று எழுத்துக்களில் க என்பது கங்கையையும் ய என்பது யமுனையைய்ம் த்ரி என்பது த்ரிவேணி சங்கமத்தையும் குறிக்கிறது.
காயத்ரி என்பதில் வரும் ய என்பது விஷ்ணுவைக் குறிப்பதாக அருட்பிரகாச வள்ளலார் குறிப்பிடுகிறார்.
காயத்ரி மந்திரத்தில் வரும் எழுத்துக்களின் பயன் குறித்து காயத்ரி வர்ணமாலா ஸ்தோத்ரம் என்று ஒரு ஸ்தோத்ரம் உள்ளது. ஒவ்வொரு அக்ஷரத்தையும் பற்றிய ரகசியத்தை அருளும் ஸ்தோத்ரம் இது.
அதில் ஸ்ய எழுத்து பற்றி வரும் ஸ்லோகம் இது:-
ஸ்யகாரம் தாம்ரவர்ண ச தரண்யா ச சதார்ச்சிதம் |
பசு ஹத்யாக்ருதம் பாபம் ஷகாரோ தஹதே க்ஷணாத் ||
The Syllable ‘Sya’ is of the colour of copper and always worshipped by Dharani (mother earth). The Sins accrued on account of killing or slaying animals will get washed away.
ஸ்ய’ என்ற எழுத்து தாமிரத்தின் நிறத்தைக் கொண்டது. அது பூமாதேவியால் சதா வணங்கப்படுகிறது. மிருகங்களை வதை செய்த பாவம் மொத்தமாக ஒரு க்ஷணத்தில் நீங்கி விடும்.
இப்படிப் பல ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது நமது எழுத்துக்கள்.
இவற்றையெல்லாம் நல்ல முறையில் தொகுத்து அமைத்து செய்யப்பட்டவைகளே நமது அஷ்டோத்திரங்கள், சஹஸ்ரநாமங்கள். அதிலிருந்தே நமது பெயர்களையும் நம் முன்னோர்கள் நமக்குச் சூட்டுகின்றனர்.
இவ்வளவு நன்மைகளையும் தெரிந்து கொண்டு நமசிவாய என்று சொல்லலாம். காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம். ஓம் நமோ நாராயணாய என்று சொல்லலாம்.
இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமசிவாயவே
அன்பர்கள் ராம் குமார் ராய் தொகுத்துள்ள Dictionaries of
tantra Sastra (prachya prakashan, Varansi 221002) என்ற ஆங்கில புத்தகத்தையும், ஊரன் அடிகள் எழுதியுள்ள இராமலிங்க அடிகள் வரலாறு என்ற நூலையும், வீராசாமி பத்தர் எழுதிய Gyatri Mantra என்ற ஆங்கில புத்தகத்தையும் படித்துத் தெளிவு பெறலாம். ஆங்கிலத்தில் உள்ள இன்னொரு நூல் The Glories of Gayatri. இதை எழுதியவர் பாண்டுரங்காசார்யா சீனிவாசாரிய வாக்கர் என்பவர். குருக்ருபா பரகாஸனா. 606, 14வது குறுக்குத் தெரு, Magadi chord Road, Bangalore 560040 வெளியீடாக இது வந்துள்ளது.
நன்றி, வணக்கம்.
அபிசாரம் பற்றி ஒரு அன்பர் கேள்வி கேட்டிருக்கிறார். ஆபிசாரம் என்னும் செய்வினை என்பதை யாரும் செய்யக் கூடாது. அது செய்தவரையே திருப்பித் தாக்கும். ஆனால் அதனால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆசார்யர்களை அணுகி தக்க நிவாரணத்தை அடையும் உபாயத்தைப் பெறலாம்.
Insects – பூச்சி பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் – அவரது ஆராய்ச்சி நூலுக்காக. அவருக்குத் தனியே பதில் அனுப்பப்படும். அனைவரும் பயன்பெறத் தக்க விதத்தில் கேட்கப்படும் கேள்விகளே இந்தப் பகுதியில் இடம் பெறும். நன்றி, வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
JANUARY 10, 2021 SUNDAY—THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER BROADCAST- PART OF GNANAMAYAM
PRAYER BY MISS SWASTIKA PUJARAJA SHARMA FROM GERMANY
UJJAINI TEMPLE REPORT BY MRS BRHANNAYAKI SATHYANARAYANAN FROM BENGALURU
Tiruppugaz -BY MRS JAYANTHI SUNDAR AND MRS SRILATHA SAIRAM
FILM DIRECTOR FROM CHENNAI MR AMSHAN KUMAR’S TALK FOLLOWED BY QUESTION AND ANSWER SESSION
INTRODUCED BY LONDON Mr. R.PATHMANABHAN IYER
LONDON Mr.BALA SUBRAHMANYAN’S – RASAM PAATTU
SONG WRITTEN BY BHAVANANDA
Bharati Episode – No.4 BY SRI VIDHYA FROM DUBAI (8)
APPR. 70 MINUTES
DIRECTOR AMSHAN KUMAR, AUTHOR OF SIX BOOKS,AWARD WINNING DIRECTOR FROM CHENNAI
Mr Amshan Kumar how he was attracted towards documentary production. He resigned a remunerative job in a bank to produce a documentary on Bharatiyar. He explained that very few archives were available from Bharatiyar’s real life and he had to travel to places where Bharai lived or worked.
He also told that his next book is coming out very soon. While answering questions from listeners he told that there are lot of things to be done in this field. Still we have no site where we can get links for all the documentaries.
Amshankumar who visited London three times showed his documentaries and one full length feature film in the past.
Gnanamayam told him that it is interested in showing his documentaries in its channel after getting his permission .
His talk was well received by the lsiteners.
Earlier Mr Pathmanathan Iyer told that Amshankumar is in this field of documentary production for over 25 years and authoring several books.
From Wikipedia:–
Amshan Kumar is an Indian filmmaker and writer. He has won a National Film Award for his documentary film Yazhpanan Thedchanamoorthy – Music beyond boundaries in the year 2015.[1][2][3] This is a lone Tamil non-fiction film to win a National Award in the past 17 years prior to this award [4] He is also a writer on films, his book Cinema Rasanai on film appreciation is being used as a textbook in many universities.[5] His debut feature film Oruththi was selected for the 2003 International Film Festival of India and was screened in the Indian Panorama section.[6][7][8] His second feature film Manusangada was screened in the 39th Cairo International Film Festival and also in the 48th International Film Festival of India (2017) in the Indian Panorama section.[9][10] He lives in Chennai.
Career
Amshan Kumar has made more than twenty five documentaries including Badal Sircar`s Third Theatre, Modern Art in Tamil Nadu,[11] Mangrove Forests, Nobel Laureate C.V.Raman, U.Ve.Saminatha Iyer, Tamil Poet Subramania Bharati[12] and Manakkal S.Rangarajan. His first directorial feature film in Tamil Oruththi selected for was shown in Indian Panorama based on a short novel by the renowned writer Ki. Rajanarayanan . It won the best film awards from Government of Pondicherry and Tamil Association of New Jersey.[13] His documentary on the Tavil Maestro Yazhpanam Thedchanmoorthy won the national award for the best arts/ cultural film in 2015.[3] It is the first Tamil non-feature film to win a National Award in 17 years.[14]
ஸ்வாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார் இப்படி : தான் ஒரு ‘Condensed India’ என்று! (தான் இந்தியாவின் திரண்ட வடிவம் என்று)
உண்மை தான்! அவரது நினைவெல்லாம் இந்தியாவின் சிறப்பையும் வளத்தையும் பற்றி மட்டுமே இருந்தது.
இந்தியாவைப் பற்றியும் அதன் வளமான எதிர்காலத்தையும் பற்றி அவர் பலரிடமும் கூறியுள்ளார்.
அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்:
தனது சீடர்களிடம் இந்தியாவின் பண்டைய புகழோங்கிய காலத்தைப் பற்றி கூறுவது அவரது வழக்கம். ஒரு முறை அவர் இந்தியாவின் பழம் பெருமைகளைக் கூறிவிட்டு, “ஆனால் எதிர்காலத்தில் இந்தியா இதை விட அதிகப் புகழைப் பெறும்” என்றார். தொடர்ந்து அவர், “நான் சொல்வதை நம்புங்கள், இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கப் போகிறது என்ற காட்சியை நான் கண்டேன்” என்றார்.
இன்னொரு முறை இந்தியாவில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி, தனது வருங்கால உரைக்கும் பண்பின் மூலமாக அவர் கூறினார் இப்படி:
“இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இந்தியா சுதந்திரம் பெற்று விடும். சுதந்திரம் எதிர்பாராத விதத்தில் வரும். இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஒரு பெரிய மஹாயுத்தம் வரும். மேலை நாடுகள் தனது உலோகாயதப் போக்கைக் கைவிடவில்லை எனில் இன்னொரு மஹாயுத்தம் வருவதைத் தடுக்க முடியாது.”
இந்தியா பற்றி அவர் கூறினார் : “இந்தியா, சுதந்திரம் அடைந்த பிறகு மேலை நாடுகள் போல உலோகாயதத்தைக் கைக்கொள்ளும். (India, when independent, will embrace the materialism of the West and attain material prosperity to such an extent that it will surpass n past records in that field”). அது கடந்த கால வளத்தை எல்லாம் மிஞ்சி இருக்கும்”.
இத்துடன் அவர் மேலும் கூறியது ;” அமெரிக்கா போன்ற நாடுகள் உலோகாயத வளத்தின் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இது போன்ற லௌகீக வளத்தினால் நிலையான சாந்தியைப் பெற முடியாது என்பதை அறிந்து கொண்டு ஆன்மீகத்தில் அதிகமாக நாட்டத்தைக் கொள்ளும்”.
இன்னொரு முறை அவர் பேசும் போது கூறினார் : “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போன பின் சீனா இந்தியாவை வெற்றி கொள்ளும் ஒரு அபாயம் நேரிடும்.”
இவை ஒவ்வொன்றாக நடந்து வருவதை நாம் பார்க்கிறோம். வளமான நாடாக இந்தியா ஆவதும், இந்தியாவின் ஆன்மீக சக்தியை அமெரிக்கா போன்ற நாடுகள் நாடத் துவங்குவதும் இப்போது ஆரம்பித்திருக்கிறது.
இந்தியாவின் ஏழை எளிய ஜனங்களைப் பற்றி அவர் கவலைப்படாத நாளே கிடையாது.
ஜோஸபைன் மக்லியாட் என்ற சிஷ்யை அவரிடம் ஒரு முறை, “ஸ்வாமிஜி, உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்” என்று கேட்டார்.
ஸ்வாமிஜி உடனே, “லவ் இந்தியா – இந்தியாவை நேசி – (Love India) என்று பதில் அளித்தார்.
சகோதரி நிவேதிதை ஸ்வாமிஜியின் அடிப்படையான இந்த உண்மை அன்பைப் புரிந்து கொண்டு தான், இந்தியாவின் எழுச்சிக்காக வெகுவாகப் பாடுபட்டார்.
ரவீந்திரநாத் தாகூரிடம் ரோமெய்ன் ரோலந்து இந்தியாவைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்ட போது, அவர், “இந்தியாவைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஸ்வாமி விவேகானந்தரைப் படியுங்க்ள்” என்றார். (Read Swami Vivekananda, if you want to know India.”)
வேதாந்தத்தைப் பற்றி வெகு ஆவலுடன் விவாதிக்க வந்த ஒரு பண்டிதரிடம் ஸ்வாமிஜி, “பண்டிதரே! முதலில் பசியால் வாடி உணவுக்காக ஏங்கி அழும் உங்கள் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கானோரை முதலில் பார்த்து அவர்கள் பசிப்பிணியைத் தீர்க்க முயலுங்கள். அதன் பின்னர் என்னிடம் வாருங்கள். வேதாந்தம் பற்றி நிறையப் பேசுவோம்” என்றார்.
இப்படி ஏராளமான நிகழ்ச்சிகள் இன்னும் உண்டு. இந்தியாவைப் பற்றி நன்கு அறிய வேண்டுமானால் அந்த மஹா புருஷரைப் படிக்க வேண்டும் – கவி ரவீந்திரநாத் தாகூர் சொன்னது போல!
வாழ்க ஸ்வாமிஜி! வளர்க அவர் புகழ்; பின்பற்றுவோம் அவர் போதனைகளை!
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
முதலில் நல்ல செய்தியுடன் துவக்குவோம்
சபரிமலைக்கு ரயில் சேவை!
நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த சபரிமலை ரயில்பாதை திட்டத்திற்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது . 23 ஆண்டுகளாக செல வின் ஒரு பகுதியையும் ஏற்க மறு த்துவந்த கேரள அரசு இப்பொழுது பாதிச் செலவை ஏற்க முன்வந்துவிட்டது . இது இந்துக்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் செய்தியாக வந்துள்ளது.
வணிகரீதியான சாத்தியமான திட்டங்களை அடையாளம் காணும் பொருட்டு ரயில்வே அமைச்சகமும் கேரள அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அப்போதிலிருந்து இந்த திட்டத்தின் செலவு 517 கோடியிலிருந்து 2817 கோடி ஆக ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. சபரிமலை ஐயப்ப பக்தர்களின் பலன் அளிக்கும் இந்த திட்டம் 23 வருடங்களாக கிடப்பில் இருந்து, தற்பொழுது பாதி செலவை ஏற்றுக்கொள்ள கேரள அமைச்சரவை முன்வந்திருக்கிறது.
தற்போது இடுக்கி மாவட்டம் எந்த ரயில்வே ஸ்டேஷனையும் பெற்றிருக்கவில்லை. இந்த திட்டம் வழியாக அதற்கு ரயில் இணைப்பு கிடைக்கும்.
சபரிமலையில் ஒரு பசுமையான விமான தளம் அமைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கும் கொண்டிருக்கும் வேளையில் இந்த ரயில்வே திட்டம் வருகிறது.
XXXXX
சபரிமலையில் 14-ந்தேதி மகரவிளக்கு;
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் முடிந்து தற்போது மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
மகரவிளக்கு பூஜைக்கு முன்னர் சபரிமலையில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் உடலில் சாயம் பூசி ஊர்வலமாக செல்வார்கள்.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
XXXX
சபரிமலையில் மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க ஆலோசனை
”சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும்,” என, தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மண்டல – மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது. மண்டல காலத்தில் தேவசம்போர்டு ஊழியர்கள், போலீசார், பக்தர்கள் என, 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சபரிமலை நிர்வாக அதிகாரிக்கு கொரோனா உறுதியானது. இதனால், சபரிமலையை தடை செய்யப்பட்ட பாதுகாப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என, கேரள சுகாதார துறை கூறியது. ஆனால், சூழ்நிலையை தேவசம்போர்டு விளக்கி யதால் அது தவிர்க்கப் பட்டது.
மார்ச் முதல் சபரிமலை வருமானம் நின்று விட்டதால், கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மாநில அரசு, 70 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளது. சம்பளம் மற்றும் செலவினங்களுக்காக மாதம், 50 கோடி ரூபாய் வேண்டும்.
செலவை ஈடு கட்டுவதற்காக மாதம்தோறும் கூடுதல் நாட்கள் கோவிலைத் திறந்துவைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது
XXXXXXXXXXXXX
ராமர் கோவிலுக்கு நிதி சேகரிக்க 100 மில்லியன் மக்களை அணுக ஆர் எஸ் எஸ் திட்டம்
குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் கூறியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக விளங்கும். ராமர் கோவில் கட்டும் பணியில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்பு கள், நிதி வசூலிக்கும். தனிப்பட்ட நபரிடம், 10 ரூபாயும், ஒரு குடும்பத்திடம், 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்து உள்ளோம்.
மொழி, ஜாதி, பிறப்பு ஆகியவற்றால், ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
‘ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று; அனைவரும் சரிசமமானவர்கள்’ என, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், மக்களிடம் பிரசாரம் செய்வர்.
கூட்டுக் குடும்பமாக வாழும், ஹிந்து கலாசாரத்தின் பெருமையை, மக்களிடம் எடுத்துக் கூறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.
ஆந்திராவில் ஹிந்து கோவில்களில் உள்ள சிலைகள் தொடர்ந்து பல மாதங்களாக சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு டுவிட்டரில் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது.
ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை ஜெகன்மோகன் தலைமையிலான அரசு கைது செய்தது. ஹிந்து சிலைகள் மீதான தாக்குதல்களை விஷமிகள் நிறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.
XXXX
ஆந்திர மாநிலத்தில் ஹிந்துக்கோவில்கள் தாக்கப்படத்தைத் தொடரந்து , தாக்கப்பட்ட கோவில்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள புகழ்பெற்ற த்ரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகள் முடிவு செய்துள்ளார்.
இந்தக் கோவில்களை பாதுகாக்கவேண்டும் என்பதே இந்த பாத யாத்திரையின் நோக்கம். அவர் ஜனவரி 17ம் தேதி முதல் கோவில்களுக்கு பாதயாத்திரை செய்யும் திட்டத்தை நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். கடந்த சில மாதங்களில் மட்டுமே 50 கோவில்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்றார்.
இது ஒரு புறமிருக்க , எதிர்க் கட் சியினரின் தாக்குதலுக்கு ஈடு கொடுப்பதற்காக ஆந்திர முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி பல கோவில்களின் பூமி பூஜைகளில் பங்கேற்று வருகிறார். ஆந்திர மாநிலத்தில் பல கோவில்களில் விஸ்தரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூமி பூஜைகள் அறிவிக்கப்பட்டுள்ளன
XXXXX
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி தீவிரம்
நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு வருகிற 12-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.
அதையொட்டி சுவாமிக்கு அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்து படி அலங்காரம் நடைபெறும்.
ஒரு லட்சத்து 8 வடைமாலை தயாரிப்பதற்காக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து ஆர்.கே.ரமேஷ் தலைமையில் 32 அர்ச்சகர் குழுவினர்
வடைகள் தயாரிப்பதற்காக 2050 கிலோ உளுந்தமாவு, 33 கிலோ சீரகம், 125 கிலோ தூள் உப்பு, 650 லிட்டர் நல்லெண்ணை, 10 சமையல் எரிவாயு இணைப்பு கொண்ட அடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வடை தயாரிக்கும் பணி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
வடை தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி நிறைவடையும். அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் இந்த வடை மாலை மதியத்திற்கு மேல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
ஆயிரம் வடைகள் வீதம் சுவாமிக்கு சாத்தும் வகையில் 52 கோர்வைகள் உருவாக்கப்படும் என வடை தயாரிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
XXXXX
உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்: JAGGI VASUDEV வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்குடன்,
ஈஷா (ISHA) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV கலந்துரையாடினார்.
அப்போது, ‛உலகின் கலாச்சார தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்’ என மத்திய அமைச்சரிடம் சத்குரு வலியுறுத்தினார்.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் சார்பில், ‘உள்நிலை விஞ்ஞானம் மற்றும் நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் நடந்த ஆன்லைன் கலந்துரையாடலில், சத்குரு, பேசுகையில்,
உள்நிலை தேடல் மட்டுமே, நம் இயல்பாக இருக்கிறது. அனைத்து உயிர்களையும் சமமாக பார்க்கும் நம்முடைய கலாசாரம், எதிர்கால உலகிற்கான முன்மாதிரியாக மாற வேண்டும். அதற்கு, இந்தியா உலகின் கலாசார தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்,” என்றார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுகையில், சமூக இடைவெளி, துாய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை, இந்திய ஆன்மிக முறை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
இது ஒரு புறமிருக்க………………………………….
‛தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது’ என, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியில் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம், சேதப்படுத்தப்படுகிறது. பக்தர்களால் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி,
வணக்கம்
XXXX
நேயர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக
மகர சங்கராந்தி வாழ்த்துக்கள் உரித்தாகுக .
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி .
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று ஞானமயம் மனதார வாழ்த்துகிறது.