Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
போதிசத்வர் கதைகள்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ச.நாகராஜன்
போதிசத்வர் பல ஜென்மங்களை எடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு ஜென்மத்திலும் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம் என்று புத்த மத நூல்கள் கூறுகின்றன. இரு கதைகளை இங்கு மாதிரிக்காக பார்ப்போம்.
நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு புனிதமான மரத்தில் ஆவியாகக் குடியிருந்தார். ஒருநாள் ஒரு ஏழை அந்த மரத்திற்கு அருகில் வந்தான். ஏழை என்பதால் அந்த புனித மரத்திற்கு எதையும் அவனால் நைவேத்யமாக அர்ப்பணிக்க முடியவில்லை. ஒரு சின்ன ரொட்டித் துண்டு தான் அவன் கையில் இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த பொருள்களை அர்ப்பணித்த போது அவனால் ரொட்டித் துண்டை மரத்தின் முன்னால் வைக்க முடியவில்லை. அந்த புனிதமான மரம் இந்த ரொட்டித் துண்டை ஏற்காது என்று அவன் நினைத்தான். அவன் திரும்பிச் செல்ல யத்தனித்தான்.
திடீரென்று போதிசத்வர் அவர் முன் தோன்றினார். “ நண்பனே! எனக்கு ரொம்ப பசியாய் இருக்கிறது. உன் கையிலிருக்கும் ரொட்டித் துண்டை தர முடியுமா? என்று கேட்டார்.
இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அந்த ஏழை தன் கையிலிருந்த ரொட்டித் துண்டை அவரிடம் கொடுத்தான்.
அதைச் சாப்பிட்ட பின்னர் போதிசத்வர் அவனிடம் கூறினார் : “நண்பனே! அதோ இருக்கும் அந்த மரத்தின் அடியில் தோண்டு. தங்கக் காசுகள் கிடைக்கும்!”
அந்த ஏழை மரத்தின் அடியில் தோண்ட நிறைய தங்கக் காசுகள் இருப்பதைப் பார்த்தான். ஆனால் அவற்றை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னனிடம் சொன்னான்.
மன்னன் அவனது நேர்மையை எண்ணி அவனை மெச்சினான். உடனடியாக அவனுக்குப் பல தங்கக் காசுகளைத் தந்ததோடு தன் பொக்கிஷத்தைக் காக்க நேர்மையான அந்த ஏழையே சிறந்தவன் என்று நினைத்து அவனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான்.
நேர்மைக்கு எப்போதுமே பரிசும் மரியாதையும் உண்டு.
*
மதம் பிடித்த யானை!
இன்னொரு சிறிய கதை.
ஒரு சமயம் போதிசத்வர் ஒரு ஜென்மத்தில் துறவியாக இருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அதே கால கட்டத்தில் இன்னொரு துறவியும் வாழ்ந்து வந்தார். போதிசத்வருக்கு இருக்கும் சீடர்களையும் அவருக்கு இருந்த புகழையும் பார்த்து அவர் பொறாமைப் பட்டார்.
அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அந்த பொறாமை பிடித்த துறவி நினைத்தார். சில மாவுத்தர்களை அணுகி எப்படியாவது யானையை போதிசத்வர் மீது ஏவி விடுமாறு சொன்னார். அவர்களில் ஒரு மாவுத்தன் யானைக்கு மதம் பிடிக்கும் அளவு சாராயத்தை ஊற்றிக் குடிக்க வைத்தான். வெறி பிடித்து மதம் கொண்ட யானையை போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கி விரட்டினான். அது அலறியவாறே போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கிச் சாலையில் ஓடியது.
மதம் பிடித்த யானை ஓடிவருவதைக் கண்ட மக்கள் தலை தெறிக்க ஓடினர். ஒரு பெண்மணி யானை வரும் வேகத்தைக் கண்டு பயந்து தன் கையிலிருந்த குழந்தையைப் பதற்றத்தில் போதிசத்வரின் காலடியில் கீழே நழுவ விட்டாள்.
வேகமாக ஓடி வந்த யானை அவர்களை நசுக்கி விடும் நிலையில் போதிசத்வர் அந்த யானையின் நெற்றியில் தன் கையைப் பதித்தார்.
அவ்வளவு தான், அந்த யானை சாந்தமடைந்தது. அதைத் தட்டிக் கொடுத்தார் போதிசத்வர்.
யானை அவர் முன்னால் மண்டியிட்டுப் பிளறியது.
அனைவரும் இந்த ஆச்சரியகரமான சம்பவத்தைப் பார்த்து பிரமித்தனர்;
*
இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்களை போதிசத்வர் கதைகள் தெரிவிக்கின்றன!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் இந்துக்கள் போல இலக்கணத்தை மதிப்பவர்கள் வேறு எவருமிலர். சம் ஸ்கிருதத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே இலக்கணம் பூஜிக்கத்தக்க நிலையை அடைந்தது என்பதைப் பார்க்கையில் உலகின் மூத்த சமுதாயமும் இந்துக்கள் என்று காட்டுகிறது. உலகில் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்தவர்களும் இந்துக்களே என்று காட்டுகிறது. அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் யாப்பு இலக்கணம், சொல் இலக்கணம் வளர்ந்தபோது உலகில் தமிழோ, லத்தினோ, எபிரேயம் எனப்படும் ஹீப்ருவோ , சீன மொழியோ, பாரசீக மொழியோ இலக்கியப்படைப்பு எதுவும் படைக்கவில்லை. இந்தப் பழைய மொழிகளில் தமிழ் இலக்கியம்தான் கடைசியாக வந்தது. அதாவது கடைக்குட்டி. ஆனாலும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. பிற் காலத்தில் தென் கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் கொ கட்டிப் பறந்தது தமிழ் மொழி. ஆயினும் இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்குட்பட்டதே.
இங்கே இலக்கணம் (GRAMMAR) பற்றி மட்டும் காண்போம் . இது ஆறாவது பகுதி.
உலகிலேயே மிகவும் வியப்பான விஷயம் !
இந்துக்களின் பகவத் கீதையில் இலக்கணம்!
ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் துதியில் இலக்கணம்!
ஐயர்கள் நாள் தோறும் முக்காலமும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இலக்கணம்!!
இதற்கு மூலம் உலகிலேயே பழமையான ரிக்வேதத்தில் உளது .
அதைவிட பெரிய அதிசயம் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களின் பட்டியல்!
அதைவிட பெரிய அதிசயம் பத்துவகையான பெயர்ச் சொல் பட்டியல்.
ஆனால் தமிழிலோ சங்க இலக்கியத்தில் ‘இறந்த காலம்’ , ‘இறந்த காலம் இல்லாத காலம்’ என்ற இரண்டுதான்.
அதாவது அப்போதுதான் மொழி துளிர்விடத் துவங்கியது.
நான் சொல்வதெல்லாம் இலக்கணம் (GRAMMAR) பற்றிய விஷயம் என்பதை நினைவிற் கொள் க .
தமிழ் மொழி அதற்கும் முன்னரே இருந்தது. தமிழர்கள் அதற்கும் முன்னரே இருந்தனர். ஆனால் வளர்ச்ச்சி அடைந்த — இலக்கணம் பெற்ற மொழியாக —- தமிழ் இருக்கவில்லை. தொல்காப்பியர் புள்ளி வைத்த எழுத்துக்கள், ஆய்த எழுத்து என்னும் முப்பாற் புள்ளி பற்றிப் பேசுவது எல்லாம் அவரை சங்க இலக்கியத்தை ஒட்டி வைத்துவிடுகிறது.
(தொல்காப்பியர் காலம் என்னும் எனது தொடர் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்; கண்டு கொள்க).
தினசரி பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தில் வணங்கும் காயத்ரீ மாதா 24 எழுத்துக்கள் உடைய யாப்பு இலக்கணச் சொல் ஆகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரீ , உஷ்ணிக் , அனுஷ்டுப், பிருஹதி, பங்க்தி , த்ருஷ்டுப், ஜகதி என்றும் அவர்கள் சொல்லி வணங்குகிறார்கள்
*****
விக்கிபீடியா தகவல்:–
வேத சந்தஸ்கள் (Vedic meter) :-
“இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள் (பதங்கள்), எத்தனை எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:
காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.
ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.
அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.
ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.
பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.
திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.
ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸ் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது”.
****
பிராமண , க்ஷத்ரிய, வைஸ்யர்கள் ஆகிய மூன்று ஜாதிக்காரர்கள் வேதங்களைப் பயில்வதோடு ஆறு அங்கங்களையும் பயில வேண்டும். அதில் வியாகரணம்(Grammar) என்னும் இலக்கணமும், நிருக்தம் (Etymology) என்னும் சொற்பிறப்பியலும் அடக்கம். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இப்படி சிலபஸ் Syllabus கிடையாது. இந்துக்களைப் பார்த்து பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொஞ்சம் அறிமுகப்படுத்தினர் கிரேக்க நாட்டில்.
இதைவிட வேடிக்கையான விஷயம், உலகில் சிறந்த பொருள்கள் யாவையும் நானே என் று அர்ஜுனனுக்குச் சொல்லிய கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் அகாரம் பற்றிப் பேசிவிட்டு ‘சமாசம்’ பற்றியும் பேசுகிறார். கிருஷ்ணனை ‘காப்பி’ copy அடித்த வள்ளுவரும் ஏசுவும் (Jesus) அகாரம் பற்றிச் சொன்னார்கள் . ஆனால் ‘சமாசம்’ பற்றிச் சொல்லவில்லை !
இதில் காலம் பற்றியும் , கருந்துளை எனப்படும் BLACK HOLE ‘பிளாக் ஹோல்’ பற்றியும் முன்னமே தனிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்
சமாசம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதைக் காண்போம்; இவர் ராமகிருஷண மடத்தின் உரை ஆசிரியர்.
‘த்வந்த்வ’ ஸமாஸம்
சொற்களின் புணர்ச்ச்சி ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வகை :
1.அவ்யயீ – (எடுத்துக் காட்டு) – அதிஹரி
2.தத்புருஷம் – ஸீதாபதி
3.பஹுவ்ரீஹி – பீதாம்பரஹ
4.த்வந்த்வ – ராம லக்ஷ்மணெள
த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .
இது அறிஞர் அண்ணா உரை.
கீதையில் இலக்கணம் பற்றிக் கதைப்பதிலிருந்து அது எவ்வளவு முக்கியம் என்று அறி கிறோம் .
அதிலும் கிருஷ்ணர், சமத்துவம் போதிக்கும் சமாசத்தை எடுத்தது சாலப்பொருந்தும் . இதையே வள்ளுவனும் , “சமன் செய்து தூக்கும் கோல் …. “ என்னும் குறளில் எதிரொலிக்கிறான்.
****
பஜ கோவிந்தம் துதியில் பாணினி இலக்கணம்
உலகம் புகழும் தத்துவ அறிஞர் ஆதிசங்கரர் இயற்றிய ‘பஜ கோவிந்தம்’ ஆழ்ந்த தத்துவங்களை, சின்னப் பிள்ளைகள் கற்கும் Nursery Rhyme ‘நர்சரி ரைம்’, போலச் சொல்லும்.
இதை எம். எஸ். சுப்புலெட்சுமியின் குரலில் அனைவரும் கேட்டு மகிழ்கிறோம்.
முதல் பாட்டில் இலக்கண விவாதங்களில் காலத்தை வீணடிப்போரை இடித்துரைக்கிறார் .
பஜகோவிந்தம் முதல் பாடல் —
“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே”
கோவிந்தனைத் துதி. யமன் வந்து கதவைத் தட்டும்போது உன் இலக்கண அறிவு உதவிக்கு வருமா? என்று கேட்கிறார்; இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .
டுக்ருஞ் – என்பது பாணினி சூத்ரம் 1-3-5 உரையில் உளது; ஒரு நாள் ஆதிசங்கரர், காசி நகர தெரு வழியே நடந்து சென்றார். அப்பொழுது ஒரு கிழவன் இந்த சூத்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் ; தள்ளாத வயதில் இறைவனை நினைத்து — அதிலும் காசி மாநகரத்தில் – வணங்காதபடி, இப்படி இந்தக் கிழவன் நேரத்தைச் செலவிடுகிறானே என்று பாடத் தொடங்கினார் ஆதி சங்கரர்.
27 பாடல்களில் முதல் சில பாடல்களை அவர் பாடியதாகவும் ஏனைய பாடல்களை அவருடன் வந்த சிஷ்யர்கள் பாடி முடித்ததாகவும் உரைகாரர்கள் புகல்வர் . கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடுகையில் ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் பாட முடியாதா என்ன?
கட்டுரையின் அடுத்த பகுதியில் ‘தாது’ (Verb Roots) பாடத்தில் வரும் 1970 வினைச் சொற்கள் பற்றியும் பெயர்ச் சொல் கூறும் கண பாடம் பற்றியும் காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் ருத்ராட்சம்! பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
By Kattukutty
ருத்ராட்சத்தை யார், யார்அணியலாம்???
பிரும்மச்சாரிகள், இல்லற வாசிகள், வானப் பிரஸ்தர்,
சன்யாசிகள், மற்றும் பெண்களும்அணியலாம்!
மாலைகட்டவேண்டியஉலோகம்
தங்கம், வெள்ளி, தாமிரம், பட்டு நூல், பருத்தி நூல்.
எதைருத்ராட்சமாலையுடன்கட்டலாம்???
தங்கத்தினால் ஆன மணி, வெள்ளியினால் ஆன மணி, பவழம், முத்து, ஸ்படிகம்.
மாலைஎப்படிஅமையவேண்டும்???
மாலை கட்டும் போது மணிகள் ஒன்றை ஒன்று தொடக் கூடாது.
மணிகள் அனைத்தும் ஒரே அளவாக (size) இருக்க வேண்டும்
ஒரு மணிக்கும் மற்றொரு மணிக்கும் நடுவில் போடும் முடிச்சு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.
21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.
QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN
திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?
ச.நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.
திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?
சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.
திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.
திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.
ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.
இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.
யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.
யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)
என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.
பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.
இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.
ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.
யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.
அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.
Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:
Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)
யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்
என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.
இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.
ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.
ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.
வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,
இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,
அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி
சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.
திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே
மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.
அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்
இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.
எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.
இந்த 126 ஆசனங்கள் யாவை?
சுவஸ்திகாசனம்
கோமுகாசனம்
வீராசனம்
கூர்மாசனம்
குக்குடாசனம்
உத்தான கூர்மாசனம்
தனுராசனம்
மச்சேந்திராசனம்
பச்சிமதானாசனம்
மயூராசனம்
சவாசனம்
மச்சேந்திர சித்தாசனம்
சித்தாசனம்
வச்சிராசனம்
பதுமாசனம்
மச்சேந்திர பதுமாசனம்
முக்த பதுமாசனம்
சிம்மாசனம்
பத்திராசனம்
வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.
ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.
கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.
என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.
அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்
பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.
திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.
பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.
பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.
பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.
திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.
இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.
மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.
இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.
சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.
ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.
படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.
இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.
(My father V Santanam, News Editor, Dinamani, Madurai and a freedom fighter sang such Bharati songs while distributing pamphlets against the British Rule in Chennai Marina beach in the 1940s was arrested and jailed along with national leader K Kamaraj in Vellore Jail)
From my old post in this blog:–
FEARLESSNESS IN ATHARVAVEDA
1.O Indra! God of Supreme Power! Make us fearless of all such things whereof we are afraid of AV 19-15-1 (Yath Indra Bhayamahe……………………….. AV 19-15-1)
****** 2.May the atmosphere give us peace and safety and may both these heaven and earth be secure for us. May we be free from danger from west and east and may there be no fear from north and south AV 19-15-5 (Abhayam Na: ……………………. AV 19-15-5) *****
3.May we be fearless of our friends and even of those who are unfriendly to us, may we never fall in dread of those whom we know and even of those we don’t know: May we remain free from any apprehension by night and in the day time, and may all the quarters be friendly to us AV 19-15-6 (Abhayam mitradha bhayam ………………. AV 19-15-6)
TAGS- FEAR, FEAT NOT, WHERE THE MIND IS, TAGORE, BHARATI, V.SANTANAM