MODI IS A MAGICIAN- MODI IS A GHOST BUSTER (Post No.7778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7778

Date uploaded in London – 3 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Sri Narendra Modi , Prime Minister of India has asked every Indian to light candles or lamps at home on Sunday the Fifth April, 2020 to express solidarity with the Anti Corona Virus measures taken by the governments and individuals.

Earlier he asked people to clap hands to express thanks to doctors and nurses. Now many countries including Britain are doing it. Yesterday all the British families joined in the clapping for the second time. It is decided that every week every British would do it. Even the TV channels stopped the broadcasts at that that time.

Some of you may wonder why Modiji is asking us to do it. There are two things.

All political leaders ask their followers to do something in uniformity. Mahatma Gandhiji sang Raghupati Ragava Raja Ram during freedom movement , Netaji raised the slogan Jai Hind, Bhankim Chnadra Chatterji made us to say Vandemataram and now millions of RSS workers say Bharat Mata ki Jai in their daily gatherings/shakas. Religious devotees have their own slogans.

Even the squirrel did contribute tiny pebbles in the Bridge work leading to Sri Lanka according to Ramayana.

Secondly there are some rituals which have their magical effects. For instance, ringing the bells dispel bad waves or vibrations. Clapping the hands drive awa y  snakes and ghosts.  Above all when you believe in certain rituals they boost your confidence. Once your confidence is boosted you get more resistance power to mental and physical sicknesses. Articles about placebo effect and thought power appear periodically  in Science magazines supporting this.

I remember one incident that happened in the recent times. Immediately after the assassination of Indira Gandhi, then Prime Minister of India, thugs led by Congress party leaders killed 3000 children, women and elders of Sikh Community. When the bad news reached Kanchi Shankaracharya Sri Chandra Sekhara Indra Sarasvati (1894-1994) he asked his devotees light 3000 lamps in the temples what are called Moksha Deepas. Though the dead 3000 are not Hindus it was done for the good of the departed souls. Now thousands and thousands are dying, most of them Christians and Muslims and their spirits, ghosts will be around the earth. To show them the right path (Light Path)  it is good to light the lamps and candles.

If you beat your pet dog and throw it out of your doors still it will come around your house wagging its tail to show gratitude because you fed it for years. In the same way dead persons spirits wont leave its surroundings for at least 12 days. When proper ceremonies are done it leaves the earth. Until then it is roaming around your house in darkness. Then it is shown a tunnel of light and passes through it according to Hindu scriptures. So to send the departed souls (in Italy, Spain, Iran and America, China where one city alone lost 48,000 people) to their destination and to purify the atmosphere around earth it is necessary to light the lamps similar to Kanchi Parmacharyas 3000 oil lamps.

I think Modi is getting some Tantrik and Mantrik advice from some saints. Being a Prime Minister of a ‘secular’ country he cant say all these things openly.

Whether you believe in Ghost Free Earth or not, you can always express solidarity with the Anti Corona measures and thanks giving measures to Heath officials initiated by the government.

The least you can do is not to oppose such harmless activities and support whoever does it. Just be an observer if you don’t want to be participant. Be a ‘sarva bhuta hite ratha:’ (Bhagavad Gita)

Loka samastha sukino bhavantu.

Written by London swaminathan

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

MODI’S MESSAGE FROM NEWS PAPERS:–

Prime Minister Narendra Modi on Friday appealed to the people to display their collective resolve to fight the coronavirus disease by lighting a candle, lamp or flashlight of a mobile phone on Sunday evening. He also hailed the efforts put in by the people and authorities to make the 21-day lockdown to fight coronavirus disease Covid-19 a success.

“The discipline and sense of service you showed, is unprecedented. The people and administration have tried to make this routine a success. The way you thanked those at the forefront of fight against coronavirus March 22 has set an example for the world,” PM Modi said in a video message.

“Many of you think what a single person can do? How will he/she be able to fight this battle? And how long will you spend your time under lockdown? We are at home, but not alone. We have the strength of 130 crore countrymen with us,” the prime minister said in his 11-minute video message.

ghostbuster/ˈɡəʊs(t)bʌstə/Learn to pronouncenounINFORMALnoun: ghost-buster

  1. 1.a person who claims to be able to banish ghosts and poltergeists.
  2. 2.an official whose job is to investigate tax fraud.

tags — Narendra Modi,magician, ghost buster, lighting lamps, clapping hands

–subham–

ஒரு நல்ல கதை -வாளும் நாளும் ஒன்று ! (Post No.7777)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7777

Date uploaded in London – 3 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கிரேக்க நாட்டிலிருந்து ஒரு சுவையான கதை !

டமோக்ளிஸ் ஸ்வோர்ட் – (Sword of Damocles) டமக்ளிஸின் வாள் – கதை தெரியாத ஆங்கில மாணவன் இருக்க முடியாது. ஏனெனில் கிரேக்க நாட்டில் தோன்றிய இக்கதை சிசரோ (cicero) மூலம் பரவி, ஷேக்ஸ்பியர் , சாசர் , ஜான் எப் கென்னடி, நிகிதா குருஷேவ் மூலம் உலகம் முழுதும் பரவிய விஷயம்.

கிரேக்க நாட்டின் கீழ் இருந்தது சிசிலி (Syracuse, Sicily, now in Italy) தீவு.

சிராக்கியுஸ் என்ற நகரிலிருந்து சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர், டயோனிஸ் (Dionysius)  என்ற மன்னன் ஆண்டு வந்தான் . நம்மூர் புலவர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் புகழ்வது போல டாமோக்லிஸ் என்பவர் அவ்ருடைய புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.

“மன்னா, நீ மிகவும் அதிர்ஷ்ட சாலி ;  உனக்கு என்ன சுகபோகம்தான். நீ ஒரு நித்ய ஆனந்தன் ; மஹா ஆ னந்தன் ; பிராம்மானந்தன்” — என்று சொல்லிக் கொண்டே இருந்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆனால் மன்னன் டயோனிச்சுக்கோ ஏராளமான எதிரிகள். யார் எப்போது தன் மீது கத்தியைப் பாய்வார்களோ என்று பயந்து கொண்டே ஆண்டான். தனக்கு முடி வெட்டிவிடக் கூட மகளை மட்டுமே அனுமதித்தான். அந்த மன்னன் ஒரு சர்வாதிகாரி. எல்லோரையும் தன் ஒரு விரல் அசைவுக்குள் அடக்கி வைத்திருந்தான் .

பிரதமர் பதவி, ஜனாதிபதி பதவி, மன்னர் பதவி எல்லாம் “நித்ய கண்டம்  பூரண ஆயுசு” போன்றது என்பதை டமாக்கிளிசுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு “அன்பரே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நீரும் இந்த ஆசனத்தில் அமர்ந்து ஒரு நாளாவது இந்த தேசத்தை ஆள வேண்டும் என்பது எம் அவா”- என்றான்

இதைக்கேட்டவுடன் அவருக்கு மிக்க சந்தோசம் ; கட்டாயம் நாமு ம ஆள்வோம் என்று அரியணையில் அமர்ந்தார். மன்னன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு குதிரை மயிரில் ஒரு கொலை வாளினை அவர் தலைக்கு மேல் தொங்க விட்டிருந்தான். அது எந்த நேரத்திலும் தலை மீது விழுந்து கபா லத்தைப் பிளந்து விடும் என்று பயந்தான் டமாக்கலிஸ் . அய்யயோ எனக்கு இந்த மரண பயம் உள்ள பதவி வேண்டாம் அப்பா என்று ஒடி வந்து விட்டான் .

ரு மன்னர் பதவி என்பது  ஆபத்து நிறை ந்தது.  யார் எப்போது குழி பறிப்பார் என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும் . பிரதமர், ஜனாதிபதி பதவி வகிப்போர் , எதிர்க் கட்சியினரின் சதி வேலைகளை சமாளிக்க வேண்டும் . இதனால்தான் பெரிய பதவிகளை சிசரோ போன்றோர் வாளுக்கு ஒப்பிட்டனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியக் கவிஞர்களும் வாள் என்பதை யமனுக்கு ஒப்பிட்டனர்

xxxxx

நாள் என்றால் என்ன?

பகற்பொழுது.

அதாவது ஒவ்வொரு முறை சூரியன் உதிக்கும்போது ஒரு நாள்.

இதைக் கவிஞர்கள் பெரிதும் வருணித்து விதந்து ஓதுவர் .

ஆனால் திரு வள்ளுவனும், குறுந்தொகைப் பாடல் பாடிய அள்ளூர் நன்முல்லை ( மிஸ் சுகுமாரி)யும் , ஆங்கில அந்தகப் புலவன் ஜான் (Milton) மில்டனும், நாலடியார் பாடிய ஒரு புலவனும் நாள் என்பது ஒரு கத்தி, ஒரு வாள் போன்றது என்று வருணித்துள்ளனர் . ஏன் ?

கடவுள் நமக்குக் கொடுத்த வாழ் நாளில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அறுபட்டிக் கொண்டு இருக்கிறது. தலைக்கு மேல் இப்படி ஒரு வாள் , நமக்கு எதிராகச் சதி செய்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அதாவது கூடவே இருந்து நமக்குக் குழி பறித்துக் கொண்டு இருக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதை வள்ளுவன் தன் ஞானக் கண்களால் பார்த்துவிட்டான். உடனே

“நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப்  பெறின்” – குறள் 334

என்றான்.

நிலையாமை என்னும் அதிகாரத்தில் பாடிய பத்து குறள்களும் பத்து ரத்தினங்கள்.

இந்தக் குறளின் பொருள் என்ன?

‘நாள் என்பது காலத்தைக் காட்டும் அளவுகோல் போல பாசாங்கு செய்துவிட்டு, உண்மையில் உயிரை உடம்பினின்று வெட்டும், அறுக்கும் ஒரு வாளாகச் செயல்படுகிறது . இது யாருக்குத் தெரியும்?  ஆராயும் அறிவுடையோர்க்கு  மட்டும் தெரியும்’ .

TIME SEEMS ALL SMILES AND LAUGHTER, BUT VERILY IT IS A SAW THAT CEASELESSLY SAWS AWAY THE LIFE OF MAN.

XXX

குக்கூ என்றது கோழி! என்ற சங்கத் பாடலில் நன்முல்லையும் இதைப் பாடுகிறார். ஒவ்வொரு நாள் வைகறைப் பொழுதையும் வாள்  என்று வருணிக்கிறார். இதோ அந்தப் பாடல் – tamilandvedas.com, swamiindology.blogspot.com

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS SUKUMARI)

–குறுந்தொகைப் பாடல் 157

பாடலின் பொருள்-

“கோழி குக்கூ என்று கூவியது. அதற்கு நேராக எம் தோளைத் தழுவும் காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போன்ற விடியற் காலைப் பொழுது வந்தது. எனது தூய நெஞ்சம் அதனால் அச்சத்தை அடைந்தது”.

இதை ஆங்கிலக் கவிஞன் ஜான் மில்டன் இப்படிப் பாடுகிறான்–

The scythe of time mows down – Milton

அவர்க்கு ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே நாலடியார் பாடிய புலவர்களில் ஒருவர் சொல்கிறார்

((‘சுகுமாரி’ என்பது மல்லிகை, முல்லை, பிச்சிப் பூ   வகையில் ஒன்று. அதைத் தமிழில் ‘நன்முல்லை’ என்று மொழிபெயர்த்துக் கொண்டார் அந்த பெண்பாற் புலவர். பிற்காலத்தில் வி.கோ.சூர்ய நாராயண சாஸ்திரி என்பதைத் தமிழில் ‘பரிதிமாற் கலைஞர்’ என்று மொழிபெயர்த்துக் கொண்டு தமிழ் கூறு  நல்லுகத்துக்கு ஒரு மதுரைப் பிராம்மணன் சேவை செய்ததை நாம் அறிவோம்.))

இதோ நாலடியார்  பாடிய பு லவர்களில்  ஒருவரின் பாடல்

“தோற்றஞ் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றமளந்து நுந்நாளுண்ணும் – ஆற்ற

அறஞ் செய் தருளுடையீ ராகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதாரில்” .–நாலடியார் , பாடல் 7

பொருள் tamilandvedas.com, swamiindology.blogspot.com

“ஒளிமிக்க சூரியனை அளக்கும் ‘படி’ – யாகக் கொண்டு யமன் உங்களுடைய ஆயுளை தினமும் அளந்து கொட்டிக்கொண்டு இருக்கிறான் . ஆகையால் அதிக தருமங்களைச்  செய்து பிறர் இடத்தில் அருள் மழை பொழியுங்கள் . அப்படிச்  செய்யாவிடில் இருந்தும் இறந்தவர்களே” .

Yama, the God of Death devours away your life daily using the resplendent sun as his measure.  Perform therefore virtuous deeds and become compassionate, for otherwise all those that are born will be considered as unborn.

(They alone live who live for others, the rest are more dead than alive – Swami Vivekananda)

ஒருவர்  வாள் என்றார் . இன்னும் ஒருவர் நெல் அளக்கும் ‘படி’ என்கிறார்.

வாழ்க தமிழ்!

Tags –

டமாக்களிஸ் , வாள் , வாழ்நாள் , அறுக்கும் , சிராக்கியூஸ், வாளும் நாளும்

–subham–

வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள் (Post No.7776)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7776

Date uploaded in London – – 3 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!

ச.நாகராஜன்


தமிழ்ப் புலவர்களை ஆதரித்த மன்னர்களும், வள்ளல்களும், ஜமீந்தார்களும் தமிழ் நாட்டில் ஏராளமானோர் உண்டு.

இவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்த சீதக்காதி.. இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்த இவரது இயற் பெயர் ஷைகு அப்துல் காதிறு மரக்காயர் என்பதாகும். ஷெய்க் அப்துல் காதர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

சமய வேறுபாடின்றி அனைவரையும் ஒரு சேர ஆதரித்த சீதக்காதி தமிழ் புலவர்கள் பால் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டவர்.

இவரது காலம் பற்றிச் சரியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும் ஆய்வாளர்கள் இவரை பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்திருக்கலாம் என்கின்றனர். (1650-1720)

இவர் மறைந்ததைக் கேட்டு துக்கம் தாளாமல் அரற்றி அழுது புலம்பிய பாவலர் பலர்.

பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் சீதக்காதி மறைவு கேட்டு இரங்கிப் பாடிய பாடல் இது:

விண்ணுக்கு மண்ணுக்கும் பேராய் விளங்குதே வேந்த்ரனெனும்

கண்ணுக் கினிய துரை சீதக் காதி கமலநிகர்

தண்ணுக் கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த

மண்ணுக்குள் ளேயொளித் தான்புல வோர் முகம் வாடியவே

பாடலின் பொருள் ;- விண்ணுக்கும் மண்ணுக்கும் பேராய் விளங்கும் – விண்ணுலகிலும் மண்ணுலகிலும்  பிரபலமாய் விளங்கும்

தேவேந்த்ரன் எனும் – தேவேந்திரன் என்று கூறப்பட்ட

கண்ணுக்கு இனிய துரை சீதக்காதி – கண்ணுக்கு இனிய துரையாகிய சீதக்காதி

கமல நிகர் – தாமரை மலரை நிகர்த்த

தண்ணுக்கிசைந்த வதன சந்த்ரோதய சாமியானவன் – குளிர்ச்சி பொருந்திய சந்திரோதயம் போன்ற முகத்தை உடைய சாமி ஆனவன்

இந்த மண்ணுக்குள்ளே ஒளித்தான் – இந்த மண்ணுக்குள்ளே மறைந்தான்

புலவோர் – புலவர்களது

முகம் வாடியவே – முகங்கள் வாடிப் போயினவே

மறந்தாகி லுமரைக் காசுங் கொடாமட மாந்தர் மண்மேல்

இறந்தாவ தென்ன விருந்தாவ தென்ன விறந்து விண்போய்ச்

சிறந்தாலுங் காயற் றுறைசீதக் காதி திரும்பிவந்து

பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே

பாடலின் பொருள் :-

மறந்தாகிலும் அரைக் காசு கொடா மட மாந்தர் – மறந்தும் கூட அரைக்காசு கூட ஒருவர்க்குக் கொடாத அறியாமையுள்ள மக்கள்

மண் மேல் இறந்து ஆவது என்ன – உலகில் இறந்தால் உண்டாகும் நஷ்டம் தான் என்ன

இருந்து ஆவது என்ன – அவர்கள் உயிர் வாழ்வதால் உண்டாகும் லாபம் தான் என்ன

இறந்து விண்போய் சிறந்து ஆளும் – இறந்து விண்ணகம் சென்று மேன்மையை அடைந்து அவ்வுலகையும் ஆளுகின்ற

காயல் துரை சீதக்காதி – காயல்பட்டணத்தைச் சேர்ந்த துரையாகிய சீதக்காதி

திரும்பி வந்து பிறந்தாலொழிய – திரும்பி வந்து பிறந்தால் அன்றி

புலவோர் தமக்கு பிழைப்பு இல்லையே – புலவர்களுக்கு பிழைப்பு இல்லை

சீதக்காதி மறைந்ததைக் கேட்டு பெரிதும் வருந்திய இன்னொரு புலவர் நமச்சிவாயப் புலவர்.

அவர் வருந்திப் பாடிய பாடல் இது:

பூமா திருந்தென் புவிமா திருந்தென் பூதலத்தில்

நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் நாவலற்குக்

கோமா னழகமர் மால்சீதக் காதி கொடை மிகுந்த

சீமா னிறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே

பாடலின் பொருள் :

பூமாது இருந்து என் – திருமகள் இருந்து என்ன பயன்

புவி மாது இருந்து என் – நிலமகள் இருந்தால் என்ன பயன்

பூதலத்தில் நாமாது இருந்தென்ன – உலகில் சரஸ்வதி இருந்தால் என்ன பயன்

நாம் இருந்து என்ன – நாமிருந்தால் தான் என்ன பயன்

நல் நாவலர்க்கு – நல்ல வித்வான்களுக்கு

கோமான் – தலைவன்

அழகு அமர் – அழகு அமைந்த

மால் – பெருமையை உடையவன்

சீதக்காதி – சீதக்காதி

கொடை மிகுந்த சீமான் – ஈகை மிகுந்த பெரும் செல்வன்

இறந்திட்ட போதே – அவன் இறந்த பொழுதே

புலமையும் செத்ததுவே – புலமையும் இறந்தது.

இன்னும் சீதக்காதியின் பெருமை பேசும் சோகம் மிகுந்த பாடல்கள் ஏராளம் உண்டு. வள்ளலின் பெருமையையும் புலவர்களின் பெருமையையும் உணர்த்தும் அந்தப் பாடல்கள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.

Tags  —  சீதக்காதி,  இஸ்லாம், நமச்சிவாயப் புலவர், படிக்காசுத் தம்பிரான், வள்ளல்


Seethakathi | Tamil and Vedastamilandvedas.com › tag › seethakathi

Translate this page2 Dec 2013 – சீதக்காதி, தனசெகரன் போட்டோ. Picture of Seethakkathi arch at Keelakkarai. Hits so far 210,636. Post No. 729 dated 2nd December 2013 by london swaminathan. There is a well known proverb in Tamil …

***

SWAMI CROSSWORD 242020 (Post No.7775)

SWAMI CROSSWORD 242020 (Post No.7775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7775

Date uploaded in London – 2 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


ACROSS

1.–(8)- Name of Kartikeya, because he was born here.

6.– (7) – Temple Priest

7.– (7) – narrow path where a goat can walk easily

8.– (7)- chapter in prose books

XXX

DOWN

1. – (7) – wandering monk of Buddhism or Jainism.

2. –(4) – taste

3 – (6)- people of fourth caste

5.– (6)- inter-galactic traveller ; communicating with gods in person- Tri loka sanchari

4.– (7) -wonder, wonderful

-subham —

STRANGE GREEK PRAYERS (Post No.7774)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7774

Date uploaded in London – 2 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

All of us go to temples and pray for one million things. Hindus pray for Moksha which is absent in Semitic prayers. Only people belonging to oriental religions pray to get out of B irth and Death Cycle. Since three   speakers are in museums theory they don’t bother about  Mukti or Moksha.

Hindus’ oldest prayers are in the Rig Veda. Probably those are the oldest prayers in the world. Greeks started writing (literature) only from 800 BCE. Hebrews and Chinese come closer to Hindus. Tamils started writing books from first century BCE. Just after the Latin speakers. Other ancient languages and their works are in museums now.

Greek god ZEUS is like the Indra of Rig Veda. Some people would compare him with Vedic Dyaus, Prajapathi, Jupiter etc.

Let my Father Die, Please!

Here is a bit of information from the book Eureka by Peter Jones:-

Greeks were well aware of the paradoxes inherent in Homer’s view of the gods . The brilliant satirist Lucian, writing in the second century CE, described how Zeus sat up in heaven in front of a collection  of what looked like wells , each with a cover. He lifted the lid off each well to hear what prayers , covenants, oaths, omens and sacrifices in his name were coming through to him.

One man asked to become king, another that his onions and garlic should grow, another that his father should soon die. Some sailors prayed that the north wind should blow, others the south; farmers prayed for rain, people doing the washing for sun.

When ZEUS had listened to them all (groaning, as he did so, at the impossibility of keeping everyone happy), he left his orders, sounding rather like a TV weatherman: “Rain today in Scythia, lightning in Libya, snow in Greece; north wind in Lydia, south wind, take a rest, west wind, raise a storm over the Adriatic Sea; and a few large baskets of hailstones, fall on Cappadocia.”

Zeus

குக்கூ என்றது கோழி- பெண்களின் மாத விலக்கு பற்றி சுவையான பாடல் (Post 7773)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7773

Date uploaded in London – 2 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குக்கூ என்றது கோழி- பெண்களின் மாத விலக்கு பற்றி சுவையான பாடல் (Post 7773)

குக்கூ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் —

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

–அள்ளூர் நன்முல்லை (MISS SUKUMARI)

–குறுந்தொகைப் பாடல் 157

சுகு மாரி என்பது மல்லிகை, முல்லை, பிச் சி பூவகையில் ஒன்று)

பாடலின் பொருள்-

கோழி குக்கூ  என்று கூவியது. அதற்கு நேராக எம் தோளைத் தழுவும் காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போன்ற விடியற் காலைப் பொழுது வந்தது. எனது தூய நெஞ்சம் அதனால் அச்சத்தை அடைந்தது

கருத்து

பூப்புக்காலத்தில் (MENSTRUATION)  தலைவனைப் பிரிந்திருக்க அஞ்சிய தலைவி தன் உண்மை நிலையை மறைத்தது .

(இது மாதவிலக்கு (MENSES) பற்றிய இந்து நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் பாடல் )

இதைப் பாடியவர் ஒரு பெண். பொதுவாகப் பெண்கள் மாதவிலக்கு பற்றிப் பகிரங்கமாகப் பேசமாட்டார்கள். பேசினாலும் மகளிற்கிடையே மட்டும் சம்பாஷிப்பார்கள் ; கணவனிடம் நான் வீட்டில் இல்லை; அல்லது ‘சாமி படம், விளக்குக்கு அருகில் இன்று போக முடியாது’ என்று குறிப்பால் உணர்த்துவர். இது மாதவிலக்கு பற்றிய ஒரு அரிதான பாட்டு. நாலே  வரிகளில் 40 விஷயங்களைச் சொல்லிவிடுகிறார்.

“அடடா , இன்னும் மூன்று நாட்களுக்கு கணவனைக் கட்டித் தழுவ முடியாதே” என்று வருத்தப் படுகிறார்.

இப்போதெல்லாம் நாம் என் நெஞ்சு படபடத்தது. ‘திக் திக்’ என்று அடித்தது ; ‘பக் பக்’ என்று சத்தம் கேட்டது என்றெல்லாம் சொல்கிறோம். அக்காலத்தில் மிஸ் சுகுமாரி ,மிஸ் மாலதி அல்லது மிஸ் மல்லிகா — அதாவது திருமதி முல்லை — அழகாக பாடியிருக்கிறார்.  ‘துட்’ என்றது என்று பாடிவிட்டார்.

உ.வே.சாமிநாதைய்யர் இப்பாடல் விமர்சனத்தில் — அதாவது உரையில் இன்னும் பல விஷயங்களைச் செப்புகிறார் .

‘அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்’ – தொல்காப்பியம் 2-442 என்பது விதியாதலின் தலைவி தான் பூப்பெ ய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள்.

துட்கு – அச்சம்

தலைவனைத் தவிர வேறு  எதுவும் நினையாதாலால் தூய நெஞ்சம் ஆயிற்று.

பூப்புக் காலமாகிய மூன்று நாளும்  தலைவியின் சொற் கேட்கும் அணிமையில்  இருத்தலையன்றி, அளாவளாவுதல் அறநெறியன்று ஆதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று.

பூப்புக் காலத்தில் கணவனும் மனைவியும் நெருங்கி வாழ்ந்தால் என்ன ஆகும் என்கிற பழைய உரைப் பாடல்களையும் உ.வே.சாமிநாதைய்யர் எடுத்துக் காட்டுகிறார்.

முன்நா ளுங்கூடி உறையப்படுங் குற்றமென்னோவெனின் பூப்புக்

புறப்பட்ட ஞான்று நின்ற கரு வயிற்றில் அழியும் ; இரண்டாம் நாள்

நின்ற கரு வயிற்றிலே சாம் ; மூன்றாம் நாள் நின்ற கரு குறு வாழ்க்

கைத் தாம் ; வாழினும் திருவின் றாம் ;அதனாற் கூடப்படாதென்பது ;

‘பூப்பு முதன் முந் நாட் புணரார் புணரின் யாப்புறு மரபினையரு மமரரும்

யாத்த கரண மழியுமென்ப’

எனப்  பிறரும் ஓதினராகலான் அமையாதென்பது’ (இறை.43 உரை) -என்பதனால் பூப்பு நாட்களிற் கூட்டமின்மை உணரப்படும்.

இது சாமிநாதையர் எழுதிய உரை

இந்தப் பாடலில் வாள் போல் வைகறை என்று ஒரு வரி வருகிறது. அது பற்றித்  தனியாக எழுதுகிறேன்

என் கருத்து

மாதவிலக்கு நாளில் கணவன்- மனைவி சேர்ந்து படுக்கக்கூடாது. கருவுற்றாலும் அது அழியும் .கர்ப்பம் கலையும் ; தப்பித் தவறி குழந்தை பிறந்தாலும் அது ஆரோக்கியமாக வாழாது என்பது இந்துக்களின் நம்பிக்கை .

மல்லிகை, முல்லை, பித்திகம் (பிச்சி) முதலிய எல்லாப் பூக்களும் தாவரவியல் கணக்குப் படி ஜாஸ்மினியம் (JASMINIUM) தான் . சம்ஸ்க்ருதத்தில் நூற்றுக்கணக்கான சொற்கள் ஜாஸ்மினியம் (JASMINE ஜாஸ்மின் ) பூக்களுக்கு உண்டு. தமிழர்கள் மாலதி, மல்லிகா, சுகுமாரி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வர். இவற்றில் நன் முல்லை என்பது சுகுமாரி என்ற சம்ஸ்கிருதப் பெயர் ஆகும். “சு” என்ற முன்னொட்டுடன் (PREFIX) நுற்றுக்கணக்கான பெண்கள் பெயர் சம்ஸ்க்ருதத்தில் உண்டு-  சுமதி, சுமலதா, சுகுமாரி, சுகந்தி , சுகன்யா ……..

தமிழில் இதற்கு இணையான “ந” – முன்னொட்டாக வரும்.

நக்கீரன், நன்முல்லை, நப்பின்னை , நக்கண்ணை (சுலோசனா)

 காமக்கண்ணியார் என்ற சங்கப் புலவரை காமாட்சி என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) , உவே.சா. வும் செப்புவர். நிற்க.

மிஸ்  (MISS) என்பதை திருமணம் ஆன , ஆகாத இருவருக்கும் பயன்படுத்தலாம்.

hen hitch hiking

மிஸ் சுகுமாரியின் சங்க இலக்கியப்பாடலைப் பார்த்தவுடன் எனக்கும் கவிதை எழுதும் ஆசை வந்துவிட்டது அட, வைரஸ் பட்டு, வண்ண தோசை போன்ற கவிஞர்கள் சினிமாவுக்கு எழுதியது போல எனக்கும் எழுத ஆசை பிறந்தது. இது என்றோ ஒரு நாள் தமிழ் சினிமாவில் இடம்பெறும் –

குக்கூ என்றது கோழி

டிக்டிக்  என்றது என் ரிஸ்ட் வாட்ச் (WRIST WATCH)

திக் திக் என்றது என் மனம்

பட் பட் என்று அடித்தது ஹார்ட் (HEART)

டொக் டொக்  என்றது டோர் -ல் (KNOCKING AT DOOR)

ஸார் மில்க்  என்றான் பால் காரன் (MILK MAN)

பரிட்சை நாள் என்பதால் பயம் (EXAM DAY MORNING)

(லண்டன் சாமிநாதையர் பரீக்ஷை நாள் அன்று காலையில் எழுதிய கவிதை)

சாமிநாதையர் , கவிதை, நன்முல்லை, மாத விக்கு, பூப்பு, குக்கூ , கோழி, Menses, Menstruation, குறுந்தொகை, பாடல் 157

–SUBHAM–

வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது! (Post No.7772)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7772

Date uploaded in London – – 2 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வர பலம் தவறினாலும் சர பலம் தவறாது!

ச.நாகராஜன்

கம்பனின் சுந்தரகாண்டம் அற்புதமான பாடல்களைக் கொண்ட ஒரு பாடல் களஞ்சியம்.

அனுமனின் ஆற்றலை இதில் காண முடியும்.

கிட்கிந்தா காண்டத்தில் அனுமப்படலத்தில் இராமனிடம் தன்னை யார் என்று தேர்ந்தெடுத்த சொற்களால் அறிமுகப்படுத்திக் கொண்ட அனுமனை ‘யார் கொல் இச்சொல்லின் செல்வன்’ என வியந்து இலக்குவனிடம் கேட்கிறான்

இராமன்! (பாடல் 33)

சுந்தர காண்டத்தில், சொல்லின் செல்வன் என்று இராமனால் வியந்து புகழப்படும் அனுமன் இராவணனைச் சந்திக்கின்ற போது அவனது சொல்லின் ஆற்றலைக் கண்டு வியக்க முடியும்.

சொல்வலன்

சோர்வில்லான்

யார்க்கும் அஞ்சான்

இப்படிப்பட்ட அருங் குணமுடைய அனுமன் – ராம தூதன் – இராவணனைச் சந்திக்கிறான்.

அவன் இராவணனிடம் பேசுவதை பிணி வீட்டு படலத்தில் விவரிக்கிறான் கம்பன். பிணி வீட்டு படலம் சுமார் 140 பாடல்கள் கொண்டது. அநுமன் பிரம்மாஸ்த்ரத்திலிருந்து விடுபட்டு ராவணனை நேருக்கு நேர் சந்திப்பதை இந்தப் படலம் விவரிக்கிறது.

சொல்லின் செல்வன் பேசுகிறான் என்பதால் தேர்ந்தெடுத்த சொற்களை கம்பன் உபயோகிக்கிறான்.

அனுமனை உயர்த்துவதோடு தானும் உயர்கிறான்.

அநுமன் இராவணனோடு பேசும் நீண்ட உரையாடலில் ஒரு பகுதியாக ஒளிர்கிறது 16 கவிகள்.

sri Rama

 அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்:

பாரைஞ் ஞூறுவ பற்பல பொற்புயல்

ஈரைஞ் ஞூறு தலையுள வென்னினும்

ஊரைஞ் ஞூறுங் கடுங்கன லுட்பொதி

சீரைஞ் ஞூறவை சேமஞ் செலுத்துமோ

பாடலின் பொருள் : பாரை நூறுவ பல்பல் பொன்புயம் – உலகை அழைக்க வல்ல பற்பல அழகிய புயங்களும்

ஈர் ஐ நூறு தலை உள என்னினும் – ஆயிரம் தலைகளும் உனக்கு உள்ளன என்றாலும்

சேமம் செலுத்துமோ –  அவை உனக்கு நல்லதை உண்டாக்குமா (ஆக்காது)

அவை ஊரை நூறும் சுடுக் கனல் உன் பொதி – அவை ஊரையே  அழிக்கும் கொடிய கனலினை உள்ளே பொதிந்து பத்திரப்படுத்தி வைத்த

நூறு சீரை – நூறு சீலைகளே ஆகும்.

பிராட்டி என்னும் கனலின் முன் குவித்து வைத்த கந்தைத் துணி போல நீ அழிந்து போவாய் என அற்புதமாக அநுமன் ராவணனுக்குக் கூறுகிறான்.

அடுத்த பாடல் அற்புதமானது.

அதில் சங்கரனிடமிருந்து பெற்ற  வரபலம் தவறாது; அதன் மூலம் ராமனின் சர பலத்தைத் தவறச் செய்யலாம் என எண்ணுகிறாயா; அது நடக்கவே நடக்காது; ராமனின் சரம் தவறாது, (ஆகவே நீ பிழைக்க மாட்டாய்) என்கிறான் அநுமன்.

இதில் அற்புதமான ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

Hanuman in Madura.

ஒரு காலத்தில் இராவணன் கைலை மலையையே அடியோடு தூக்க முயற்சிக்கும் போது கோபம் கொண்ட சிவபிரான் தன் காலை அவன் தலையில் அழுத்த இராவணன் மலையின் கீழ் நசுங்கி அழுது புலம்பினான். பின்னர் தன் தலை ஒன்றை அறுத்து கை நரம்புகளை எடுத்து அதை யாழாக அமைத்துச் சாம கானம் பாட ஆரம்பித்தான். இதனால் மகிழ்ந்த சிவ பிரான் அவனை விடுவித்து வரமும் அருளினார்.

சிவனிடமிருந்து ஒரு வாளைப் பெற்றான். முக்கோடி வாழ்நாளையும் பெற்றான். (மூன்றரை கோடி) எவராலும் வெல்லப்படமாட்டாய் என்ற வார்த்தையையும் பெற்றான்.

முக்கோடி வாழ் நாள் , முயன்றுடைய பெருந்தவம், சங்கரன் கொடுத்த வாள், நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நா என இப்படிக் கம்பன் இராவணனை ஏற்றம் தந்து பிறிதோரிடத்தில் பேசுவான்.

அநுமன் இராவணனின் இந்த வரலாற்றை அவனுக்கு நினைவூட்டி சங்கரன் கொடுத்த வரபலம் இருக்கிறது என்று மகிழாதே. ராமனின் சரபலத்தை நீ தாங்க மாட்டாய் என்கிறான்.

பாடல் இதோ:

புரம்பி ழைப்பருந் தீப்புகப் பொங்கியோன்

நரம்பி ழைத்தன பாடலி நல்கிய

வரம்பி ழைக்கு மறைபிழை யாதவன்

சரம்பி ழைக்குமென் றெண்ணுதல் சாலுமோ

Surpanakha meeting Sri Rama, Deogarh Temple

பாடலின் பொருள் ; புரம் – திரிபுரத்திலும்

பிழைப்பு அரும் தீ புக – எவரும் தப்ப முடியாத பெரும் தீ புகுந்து எரிக்குமாறு

பொங்கியோன் – கோபம் கொண்டு பொங்கிய சிவபிரான்

 நரம்பு இழைத்தன பாடலில் நல்கிய – நரம்புகளைக் கொண்டு நீ பாடிய பாடல்களுக்காக மனமுவந்து உனக்குக் கொடுத்தருளிய வரமானது

பிழைக்கும் – நீ மறைநெறி தவறியதால் தவறிப் போனாலும் போகும்

மறை பிழையாதவன் சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ- வேத மார்க்கம் தவறாத ராமபிரானது அம்பு தவறிப் போகும் என்று நீ நினைப்பது தகுமா . தகாது!

தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது என்று கூறி அநுமன் வாயிலாக ராமாயணத்தின் உயிர் சாரத்தை இங்கு வைக்கிறான் கம்பன் இன்னொரு பாடலில். அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் கம்பனின் – உயிரோட்டமான பிரதான செய்தி – theme!

இராவணன் சிவனின் கீர்த்தியைத் தனது கையின் அழகிய நரம்புகளைக் கொண்டு பாடிய செய்தியை இதற்கு முன்னர் வரும் படலமான ஊர்தேடு படலம் பாடலிலும் (178) கம்பன் இப்படி அழகுற எடுத்துரைக்கிறான்:

“கூடி நான்குயர் வேலையுங் கோக்க நின்று

ஆடினான் புகழ் அங்கை நரம்பினா

நாடி நற்பெயரும் பண்ணும் நயப்பு உறப்

பாடினான்”

இராவணனுக்கு தனது வருகை கடைசி வாய்ப்பு – Last Chance-  என்று துணிச்சலுடன் அநுமன் சொல்வது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரிய பாடல்.

Tribal woman SABARI blessed by Sri Rama, Deogarh Temple

இன்று வீந்தது நாளைச் சிறிதிறை

நின்று வீந்த தலாலிறை நிற்குமோ

ஒன்று வீந்தது நல்லுணர் வும்பரை

வென்று வீக்கிய வீக்கம் விதியினால்

இன்று வீந்தது – இன்றைத்தினம் என்பது அழிந்ததே ஆகும்

நாளை – நாளைய தினம் என்று சொல்லப்படுவது

சிறிது இறை நின்று வீந்தது அலால் – சிறிது நேரம் நின்றதாய் இருந்து அழிவதே ஆகுமல்லாமல்

இறை நிற்குமோ – சிறிது நேரம் நிலை பெற்றிருக்குமோ?

(நிலை பெற்றிருக்காது)

நல் உணர்வு உம்பரை – நல்ல அறிவுடைய தேவர்களை

வென்று வீக்கிய வீக்கம் ஒன்று -வெற்றி கொண்டு தேடித் தொகுத்து வைத்த

உன் வாழ்வின் பெருமையாகிய ஒன்று

விதியினால் வீந்தது – உனக்கு ஏற்பட்டுள்ள விதியின் கொடுமையால் அழிந்து போயிற்று

இந்தப் பாடலை பல்வேறு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.

“தேவர்களை அக்கிரமமாக வென்ற போதே உன் பெருமை போயிற்று. இராம தூதனாகிய் என் வருகையில் உனக்கு மிச்சமிருந்ததில் பெரும்பாலான  பெருமையும் போயிற்று; இன்னும் கொஞ்சம் ஏதேனும் பாக்கி இருந்தால் அது நாளை ராமபிரான் வருகையால் போய் விடும்” என்றும் பொருள் கொள்ள முடியும்.

அருமையான இந்த சுந்தர காண்டத்த்தின் பிணி வீட்டு படலம் அற்புதமான பாடல்களைக் கொண்டதாகும்.

இந்தப் படலத்தில் பகவத்கீதையை அப்படியே மொழி பெயர்த்துக் கம்பன் தருவதையும் இராம பிரானின் உண்மைத் தன்மையையும் அநுமன் கூறுவது மெய்சிலிர்க்க வைக்கும்.

அது அடுத்த கட்டுரைக்கான பொருள். அதை அடுத்துக் காண்போம்

tags — வர பலம், சர பலம், கம்பன் , சுந்தரகாண்டம்,

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 142020 (Post No.7771)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7771

Date uploaded in London – 1 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. – (7 எழு த்து)- கச்சியப்ப சிவாச்சாரியார் செய்த நூல்

5. / (3)வலமிருந்து இடம் செல்க – சட்டசபையில் அ டிக்கடி நடப்பது

6. — (3) முருகனுக்கும் எடு ப்பார்கள் ; கல்லூரி அட்மிஷனுக்கு பெரிய மனிதர் வீட்டுக்கும் எடுப்பார்கள்

7. – (3) பெண்மணி

9. / (4) வலமிருந்து இடம் செல்க – பர்மாவின் தலைநகர்

10 (3) துக்கத்தின் எதிரி

11. (4) – வலமிருந்து இடம் செல்க -தமிழுக்காக மூன்று முறை வைத்த அமைப்பு

கீழே

1. — (5) — சோழ மன்னர்களில் மிகவும் புகழ்  பெற்றவன்.

2. – (3) எழுதலாம், வீட்டை மறைக்கலாம், பந்தல் போடலாம்

3. — (6) பேய்கள் வசிக்கும் மரம் என்பர் கிராம மக்கள்.

4. (5)அயோத்தி மன்னன் பிறந்த தினம்

8. (4) அந்த டாக்டரிடம் போங்கள்  அவருக்கு —– அதிகம்; குணம் உண்டாகும்.அந்த வக்கீலிடம் போங்கள் -அவருக்கு ,,,,,, அதிகம்; வெற்றி கிட்டும்






Xxxxx subham xxxxxx

TEACHER WHO HUGGED A TIGER AND GOT KILLED (Post No7770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7770

Date uploaded in London – 1 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Tamil folk tales

A respectable merchant had his daughter instructed by a famous teacher in the town. After a few years of studying under him, she attained womanhood. On hearing of this, father of the girl called her and said,

My girl! Go and tell your Guru the good news. Don’t forget to give him Guru Dakshina along with coconut, betel nuts and fruits. Accordingly she went to the school master and having given him the betel nut, fruits and the fee, made her obeisance and said,

Sir, bless me and allow me to take leave.

Guru said,

Have I taken pains with you till now for the sake of this worthless money? Your father had already given me enough. I have for many years desired to embrace you. Now is the right time. Do not refuse me. Having said this he moved forward to molest her.

On hearing this the girl of  honourable family trembled and agitated. She shouted at him,

You wretch! Ungrateful traitor! Is it right for you to lust after me? Learned fool! You will speedily be undone.

So saying she escaped from him and ran home. Because her father was busy with his business matters, she did not tell him at once.

In the meantime, the cunning teacher came to the merchant’s house and gave him the very bad news. I heard from your daughter that she has attained puberty. Just now I looked at her horoscope. It happened at the most inauspicious time. It is going to bring utter disaster for everyone in your family.

The merchant got very upset and asked him,

What can I do now?

The teacher told him,

Nothing to worry. Just put her in a basket and float her in the river. God will take care of her.

The merchant also acted hastily and did whatever he said.

While the basket with the girl was floating in the river a king came for hunting. He saw the box and recovered it from the river. When he saw a beautiful teenager inside he sent her to his palace in his golden palanquin. He had hunted a tiger on the day. He put the wounded tiger in the basket and left it in the river.

The teacher had a cunning plan. He came alone and stopped the box. He took it on the head of workers to his house. In the night he scented himself with all sandal paste and fragrant garlands. He took the box into his private room. Burning with evil desire he asked,

What do you say now my girl? As soon as he opened the box the angry tiger sprang upon him and tore him to pieces.

Therefore deceit causes destruction. tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

KING AND THE PARROT STORY

A king kept a parrot as a pet. He liked it very much. One day it left the palace and flew with the birds that came from the heaven. The king got worried. But it came back after several days. It brought him a mango stone/ seed from the heaven. Afterwards addressing the king it said,

If you plant this and make it grow, whoever eats of its fruit, old age will forsake him and youth return. The king felt very happy and did bury the seed in his favourite garden. Every day he watered the tree with utmost care and looked after it very well with proper manure.

After some years having come to maturity it put forth buds, flowered, set its young fruit and bore ripe fruits. Immediately on its bearing ripe fruit the king ordered a mango from it to be cut and brought. He wanted to test it first and so gave it to an old man. The man fell down and died. The king was very angry. He thought that the parrot must have brought a poisonous fruit from his enemy. He thought it was a foreign conspiracy. So he took the parrot from its cage swung it round and striking it against the ground killed it. But it was an innocent bird.

What happened was just before the king’s man brought the mango, a snake fell on the fruit and vomited its poison. And a kite took the snake very next minute. So no one knew the poison in the fruit.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

After the death of old man, the tree was known as the poisonous mango tree. Whilst things were so, a washer man siding with his wife, struck his aged mother. The old woman vexed with her son decided to commit suicide. She came to the tree at the dead of night plucked a fruit and ate it. Immediately she became a sixteen-year-old beautiful girl. The servants came to know about it in the morning and took the girl to the king. He was surprised to see her and gave the fruits to some old people. All of them became very young. The king cried saying,

Alas! I have sinned by killing the innocent bird. I am a wretch. From that day he made a vow not to feel angry at any time.


tags – tiger, teacher, girl, king, parrot, poison, mango, youth, old age

Xxxx subham xxxx

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! (Post No.7769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7769

Date uploaded in London – 1 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?- part 2

நேற்றைய கட்டுரையில் திருக்குறளில் வந்த பார்ப்பான், அந்தணர் குறள்களைக் கண்டோம். இன்று ஒரு அழகான பார்ப்பன மகனைக் காண்போம்.

சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள . அதற்குப் பின்னர் நாலாம் நூற்றாண்டு முதல் திருக்குறள்  உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் உருவாயின. கீழ்கண்ட குறுந்தொகைப் பாடல் சங்க கால நூல்களில் ஒன்றான குறுந்தொகையில்  உளது.

பார்ப்பன  மகனே  பார்ப்பன  மகனே

செம்பூ  முருக்கி  னன்னார்  களைந்து

தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ வுண்டிப் பார்ப்பன  மகனே

எழுதாக் கற்பினின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்து முண்டோ  மயலோ விதுவே

-குறுந்தொகை பாடல் எண் 156

– பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது

பாட்டின் பொருள்-

(தலைவியிடத்தில் ஆசைகொண்ட தலைவனை பாங்கன் இடித்துரைத்த போது , தலைவன் பாங்கனை நோக்கி நீ திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை என்றது )

பார்ப்பன  மகனே ! சிவப்பு நிறப் பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு , அதன் தண்டோடு , கமண்டலத்தைக் கீழே வைத்துக் கொண்டு, விரத உணவு மட்டும் சாப்பிடும் பார்ப்பன மகனே ! என்றும் எழுதப்படாத வேதத்தைக் கற்று வந்தாயே , உன்னுடைய அருமையான  அறிவுரைக்குள்  பிரிந்து போன கணவன் மனைவியைச்  சேர்த்து வைக்கும் மருந்து இருக்கிறதா ? நீ என்னைத் திட்டுவது அறியாமையால் வந்ததே” .

கருத்து – நீ என்னை இடித்துரைப்பதால் பயன் யாதும் இல்லை.

இந்த காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்வோம். காதலனுக்கும் காதலிக்கும் இடையே பிணக்கு; பிரிந்து போய்விட்டார்கள். பாங்கன் என்பது பார்ப்பன தூதன். அவன் வந்து காதலனை அல்லது கணவனைக் கடிந்து கொள்கிறான். அவன் உருவத்தை வருணித்து விட்டு, நீ என்னைத் திட்டுவதை நிறுத்து. நீ

கற்ற வேதத்துக்குள் இருவரையும் சேர்த்துவைக்கும் வசிய மந்திரம் ஏதேனும் இருக்கிறதா? வெறுமனே என்னைத் திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை.

பாடலில் வரும் ‘மருந்து’ என்பதை உ.வே.சாமிநாதையர் ‘பரிகாரம்’ என்று எழுதி அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் .

ஆனால் பாடலில் நான் சொல்ல வந்த விஷயம் வேறு-

பார்ப்பனர் மட்டுமே தூதர் வேலை செய்ய முடியும் என்று தொல்காப்பியமும் சொல்லும்; புறநானுறும் காட்டும். ஏனெனில் அவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்;  பொய் சொல்ல மாட்டார்கள். சிலப்பதிகாரத்திலும் மாதவியிடமிருந்து கோவலனுக்கு மன்னிப்புக் கடிதம் கொண்டு வந்தது பார்ப்பனர் என்றும்  படிக்கிறோம்.

இரண்டாவது முக்கிய விஷயம்– முருக்கு ; அதாவது பலாச மரம் எனப்படும் புரச மரத்தால் ஆன கம்பை , தடியை பார்ப்பனர்கள் / பிம்மச்சாரிகள், சந்யாசிகள் வைத்திருப்பர்; கமண்டலமு ம் ஒரு உறியில் தொங்கும்; இதைப் பழந்தமிழ் நூலான தொகாப்பியமும் செப்பும்-தொல் .மரபு. 70 ; பேராசிரியர் உரை

மூன்றாவது முக்கிய விஷயம் – படிவ உண்டிப் பார்ப்பனன்- இது முல்லைப் பாட்டிலும் (வரி 37); அதாவது கண்ட நேரத்தில், கண்ட உணவைச் சாப்பிட மாட்டார்கள்.

அந்தணர் என்போர் அறவோர் , துறவியர் என்பதை  வள்ளுவத்தில் கண்டோம். அதை உறுதிப் படுத்துகிறது இப்பாட்டு .

எழுதாக் கற்பு

வேதத்தை மிக அழகாக வருணிக்கிறார் பாண்டியன்  நெடுங்கண்ணன் ; வேதத்தை எழுதவே கூடாது ; கேள்வியால் — காதில் கேட்பதால் மட்டுமே – ‘சுருதி’ – கற்க வேண்டும் என்பதை 2000 ஆண்டுக்கு முன்னரே மக்கள் பெருமை படக் கூறினர் .

கற்பு’ என்பதை கற்ற விஷயம் என்று பழைய உரை கூறுகிறது ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்தும் புல ப்படுகிறது . பெண்ணின் ‘கற்பு’ பற்றி தமிழும் சம்ஸ்கிருதமும் விதந்து ஓதுகின்றன. ‘எழுதாக் கற்பு’ என்பதை எழுதினால் அதன் கற்பு , அதாவது புனிதத் தன்மை , போய்விடும் என்று கருதித்தான் பாண்டியன் நெடுங்கண்ணன் அந்தச் சொல்லை இங்கு போட்டாரோ !

மற்ற இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ் புலவர்கள் வேதம் என்பதைக் குறிக்க ‘நான் மறை’, ‘அரு மறை’, ‘வேதம்’  என்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர் .

Xxx

திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 உருவான கதை !

திருக்குறளில் வரும் மொழி மாற்றத்தைக் காட்டி மொழியியல் ரீதியில் அது பிற்கால  நூல்  என்று பேராசிரியர் வையாபுரிப பிள்ளை நிரூபித்தார். ஆயினும் திருக்குறள் பற்றிய மகாநாட்டில் காரசார விவாதம், வெளிநடப்பு நடந்தவுடன் கி.மு. 31

தான் அவரது ஆண்டு என்று ‘கட்டைப் பஞ்சாயத்து’ செய்தனர். இதற்குக்  காரணம் இல்லாமல் இல்லை.

எல்லிஸ் துரை , ஜி  யூ போப் போன்ற கிறிஸ்தவர்கள் செயின்ட் தாமஸ்  சென்னை விஜயம் பற்றிய கட்டுக் கதைகளைப் பரப்பிவிட்டு திருவள்ளுவருக்கு ஏசு கிறிஸ்துவை நன்றாகவே தெரியும் என்று பரப்பிவிடனர் . அவர்கள் மண்டையில் ஆணி அறைந்து சவப்பெட்டிக்குள் அடக்கி வைக்க தமிழர்கள் போட்டார்கள் ஒரு போடு! “ஏசுவுக்கு 31 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்டா ! எங்கள் வள்ளுவன் என்று அடித்துப் பேசினர்” . கிறிஸ்தவர் கூட்டமும் அடங்கியது. வள்ளுவரும் உயிர்தப்பினார். அந்தக்கால மகாநாட்டு பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தோருக்கு விவரம் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வளவு கஷ்டமே பட்டிருக்க வேண்டாம். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலேயே 7 குறள்களில் உருவ வழிபாட்டுடன்தான் கடவுள் வாழ்த்தைத் துவக்கினார். பின்னர் துறவறவியலில் 140 குறள்களில் பகவத் கீதையின் 700  ஸ்லோகங்களை ஜூஸ் பிழிந்து ஒரே கிளாஸ்ஸில் தமிழனுக்குக்  கொடுத்து விடுகிறார் .முதல் குறளையும் கடைசி குறளையும் ஸம்ஸ்கிருதச் சொல்லில் அமைத்து சம்ஸ்கிருதம் அழியக்கூடாதென்று சபதம் செய்கிறார். ஒவொன்றுக்கும் அதிகாரம் என்று சம்ஸ்கிருதப் பெயர் சூட்டுகிறார் .  நூ ற்றுக் கணக்கான குறள்களில் சம்ஸ்கிருதச் சொற்களை பயன்படுத்திவிட்டு “டேய் தமிழா ! கவலைப் படாதே ! திருக்குறள் உள்ளவரை இந்து மதமும் அழியாது; சம்ஸ்கிருதமும் அழியாது” என்று மனதில் நினைத்துக் கொண்டு சமாதி ஆனார்.

–subham–

tags — திருவள்ளுவர் ஆண்டு,  பார்ப்பன மகனே, குறுந்தொகை, அந்தணர் என்போர் யார்?- part 2