பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–