Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 4 March 2019
GMT Time uploaded in London – 7-36 am
Post No. 6149
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பெரிய மனிதர்கள் பலர் நீண்ட நாள் வாழ்வதில்லை; காரணம்- இவர்களை இறைவன் சில குறிப்பிட்ட பணிகளுக்காக அனுப்பிவிட்டு, அது நிறைவேறியவுடன் மீண்டும் அழைத்துக் கொள்கிறான் போலும்.
மஹா கவி பாரதியார், சுவாமி விவேகாநந்தர், தமிழில் இரண்டாவதாக நாவல் எழுதிய பி. ஆர். ராஜம் ஐயர் ( B R RAJAM IYER) , பரிதிமாற் கலைஞர் என்று பெயரை மாற்றிக்கொண்டு தமிழுக்கு செந்தமிழ் தகுதி கோரிய முதல் தமிழன் வி.கோ. சூரிய நாரயண சாஸ்திரி, மற்றும் கணித மேதை சீனிவாச ராமானுஜன் ஆகியோர் காலச் சுவட்டில் அழியாத இடம் பதித்து விட்டு 40 வயதுக்குள் இறந்து விட்டனர். பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடம்பு சூரிய சந்திரர்கள் உள்ளவரை நீடிக்கச் செய்துவிட்டு மறைந்தனர்.
வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்கு அடுத்தபடியாக கமலாம்பாள் சரித்திரம் எழுதி, தமிழ் உரைநடை இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றவர் ராஜம் அய்யர். அவரைப் பற்றிய பழைய நூல், லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளது. அவரது வாழ்க்கைச் சரிததத்தை இணைத்துள்ளேன். முழுக்கப் படிக்க நேரம் இல்லாதோருக்கு இதோ புல்லட் பாயிண்டில் Bullet points சுருக்கி வரைகிறேன்:
1909 ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் ராஜமையரின் வாழ்க்கை சரிதம் சுமார் 60 பக்கங்கள் இருப்பதால் 4 அல்லது 5 பகுதிகளாகப் பிரித்துத் தருகிறேன். முன்னுரையில் சுருக்கி வரைகிறேன்.
பிறந்த இடம்– மதுரை மாவட்டம் வத்தலகுண்டு
பிறந்த ஆண்டு- 1872
இறந்த ஆண்டு – 1898
காரணம்- குடல் சிக்கல் நோய்
இளமையில் நாஸ்திகப் பிராமணர்
ஆங்கிலக் கவிஞர்களிடையே மோகம்
பி. எல். தேர்வில் தோல்வி
வாழ்க்கையில் மாற்றம்- ஆன்மீக நாட்டம்
விவேக சிந்தாமணி பத்திரிக்கையில் கமலாம்பாள் சரித்திரம் தொடர்கதையாக வெளியீடு
சென்னையில் தங்கி கல்வி கற்றதால், அங்கேயே வாசம்- திருவல்லிக்கேணியில் ஸந்யாசினியுடன் சந்திப்பு
சுவாமி விவேகாநந்தரின் சென்னை விஜயத்தின்போது சந்திப்பு
பிரம்மவாதினி பத்திரிக்கையில் கட்டுரை வெளியீடு- ஐயரின் மஹிமை அம்பலம்
ராஜம் ஐயரின் குரு- சாந்தானந்த ஸரஸ்வதி
அடுத்த பகுதிகளில் விவேகாநந்தருடன் பேசியது, ராஜம் அய்யரைத் தேடி போலீஸ் வந்தது முதலிய சுவையான செய்திகளைக் காண்போம்.
-தொடரும்……………