இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம் (Post No.8033)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8033

Date uploaded in London – 24 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம்

அட்டை (Leech) என்பது நீரில் வாழும் பிராணி . இதை பல நோய்களைத் தீர்க்க மனிதர்கள் பயன்படுத்தினர். இப்பொழுதும் மேலை நாடுகளிலும் ஆயுர்வேத வைத்திய சாலைகளிலும் அட்டையைப் பயன்படுத்துகின்றனர்.

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது.

சுஸ்ருதரும் அட்டை வைத்தியம் பற்றி எழுதி இருக்கிறார். அவர் சொல்வதாவது –

சுஸ்ருத சம்ஹிதை 1-13-13

ஜலம்  ஆஸாம் ஆயுர் இதி ஜலாயுகாஹா .

ஜலம்  ஆஸாம் ஒக  இதி ஜலாயுகாஹா. ,

தா த்வாதச ; தாஸாம்  ச விஷாஹா  சத் , தாவத்ய ஏவ நிர் விஷாஹா

தத்ர ச விஷாஹா…

அத நிர் விஷாஹா…. இத்யேதா அ விஷா வ்யாக்யாதாஹா.

தாஸாம் யவன பாண்ட்ய ஸஹ்ய  பவுத்தநாதீனி க்ஷேத்ராணி ;

தேஷு  மஹாசரீர  பலவத்யஹ  ஸீக்ரபாயின்யோ  மஹாசனா நிர்விசாஸ் ச

விஷே சேன பவந்தி.

பொருள்

அட்டையை ஜல ஆயுகா என்று அழைப்பர் ; ஏனென்றால் தண்ணீரே அதன் உணவு ( ஆயுஹ் =உணவு  );

மற்றொரு அர்த்தம்

 தண்ணீரே அதன் வீடு என்பதாகும் ; ஒகஸ் = வசிக்கும் இடம்

அவைகளில் 12 வகைகள் உள்ளன. அவற்றுள் ஆறு  வகை விஷமற்றவை விஷமுள்ள வவகைகள் பின்வருமாறு …………………………………………

…….. விஷம் இல்லாத  வகைகள்  இவை ; கிடைக்குமிடங்கள் — யவன, பாண்ட்ய, ஸஹ்ய, பவுத்தன முதலியன ; இங்கே காணப்படும் அட்டைகள் மிகப்பெரியவை.; வலுவானவை; ரத்தத்தை விரைவில் உறிஞ்சுபவை; அதிகம் சாப்பிடும்; ஆனால்  விஷம் கிடையாது.

எப்படி வேலை செய்கிறது?

அட்டையின் எச்சிலில் (Saliva), அதாவது உமிழ் நீரில் அபூர்வ ரசாயனப் பொருட்கள் உள்ளன. 1.முதலாவது இது ரத்தத்தை உறையாமல் வைக்கிறது. 2.இரண்டாவதாக ரத்தத்தை இளகச் செய்கிறது.  3.அட்டை ஒருவரை கடிக்கும்போது வலி தெரியாமல் செய்ய சுரக்கும் திரவம் மயக்க மருந்து போல செயல்படுகிறது. 4.மேலும் ரத்தம் உறிஞ்சும் குணம் பாம்புக்கடி விஷம், சிலந்திக்கடி விஷயம் முதலிய விஷங்களை வெளியேற்ற உதவுகிறது. 5.உடலில் வெவ்வேறு  இடத்தில் அட்டையைக் கடிக்க வைத்தால் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். 6.மேலும் உடலில் நடைபெறும் ஜீரணம், உணவு தன்மயமாதல் முதலியவற்றிலும் உதவுகிறது. அட்டையைப் பயன்படுத்துகையில் 130 வெவ்வேறு ரசாயனங்கள் சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அட்டை வைத்தியம் எகிப்து, கிரேக்கம் முதலிய நாட்டு படைப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதற்கு 3000, 4000 ஆண்டு வரலாறு இருக்கிறது. மெசப்பொட்டேமியா மாயா , அஸ்டெக் நாகரீகங்களிலும் பயன்பட்டது.

இந்தியாவில் சில ஆயுர்வேத மருத்துவ சாலைகளில் இது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா முதலிய நாடுகள் இதை விஞ்ஞான  பூர்வமானது என்று அங்கீ கரித்திருப்பதால் இந்த சிகிசிசை அங்கு கிடைக்கிறது.

என்ன நோய்கள் குணமடையும்?

இருதய நோய்கள், எக்சிமா என்னும் சொறி சிரங்கு, இரத்த சம்பந்தமான நோய்கள், கீல் வாதம், மூட்டுவலி முதலிய வியாதிகளைக் குணப்படுத்த அட்டை வைத்தியம் பயன்படுகிறது. டெமி  மூர் (Hollywood Actress Demi Moore)  என்னும் அமெரிக்க நடிகை, தான் இதில் பலன் அடைந்ததாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

ஒருவருடைய முகத்திலுள்ள(Facial wrinkles) சுருக்கங்களை நீக்கி இளமைப் பொலிவு அதிகரிக்க அட்டை வைத்தியம் உதவும். முகத்தில் பல இடங்களில் அட்டையைக் கடிக்க வைத்தால் அது சுரக்கும் மயக்க மருந்தானது முகத்தின் தசைப் பகுதியை மரத்துப்(Partial paralysis) போகச் செய்யும்; இதன் மூலம் முகத்தின் தோலில் காணப்படும்  சுருக்கங்களை அகற்றலாம்..

2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுஸ்ருதர் உலகத்தின் முதல் அறுவைச் சிகிச்சை நிபுணர்; இதை உலகம் முழுதும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் அவருடைய சிலையை வைத்து மரியாதை செய்திருக்கின்றன. லண்டனிலுள்ள வெல்கம் மருத்துவ ஆய்வு நிலையம் இவருடைய அறுவைச் சிகிச்சை கருவிகளைக் காட்சிக்கு வைத்தது (அதற்குச் சென்று வந்த பின்னர் இந்த பிளாக்கில் படத்துடன் கட்டுரை எழுதியுள்ளேன்.).

Demi Moore

அட்டையின் விலை என்ன?

சுஸ்ருதர் அந்தக் காலத்திலேயே 12 வகைகளைக் குறிப்பிட்டு ஆறுவகைகளுக்கு விஷம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். ஐரோப்பியர்களும் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்தக் கட்டுரை எழுதும் நாளில் ஒரு அட்டை விலை எட்டு (euro) யூரோ, அதாவது 8X 83 ரூபாய் =  664 ரூபாய்.

ஆயுர்வேத நூல் களில் ரக்த மோக்ஷ கர்ம (ரத்தத்தை வெளியற்றல்)அல்லது ஜலூகா அவசரண சிகிச்சை என்பர் மேலைநாடுகளில் Hirudin Therapy ஹிருதினோ தெரபி என்பர். ஒரு முறை சிகிசிசைக்கு ஆகும் செலவு , கட்டுரை எழுதும் நாளில் 40 யூரோ .ஒரு யூரோ = 83 ரூபாய்

ஒரு சிகிச்சசைக்கு ஆகும் நேரம் 1 மணி அல்லது ஒன்றரை மணி. எத்தனை அட்டைகள் தேவை என்பது சிகிச் சையைப் பொறுத்தது . ஒரு அட்டையைக் கடிக்க வைக்கையில் முள் குத்தும் உணர்ச்சி ஏற்படும். பின்னர் வலி தெரியாமல் இருக்க அட்டையே ஒரு திரவத்தைச் சுரந்து விடும் அது இருப்பதே தெரியாது . அது ரத்தத்தைக் குடித்து திருப்தி அடையும் வரை  எடுக்க முடியாது. ஏனெனில் ரம்பம் போன்ற பற்களால் சதையைப் பிடித்துக் கொண்டு இருக்கும். ரத்தம் உறிஞ்சி வயிறு நிரம்பிய பின்னர் அதுவே விலகும் வீக்கம் , காயம் வராமல் இருக்க ஒரு திரவத்தைச் சுரந்து விட்டு பிடியைத் தளர்த்தும் அதாவது தான்  பயன்படுத்திய அதே மிருகத்தை மீண்டும் பயன்படுத்துவதற்காக இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு!

ஒரு அட்டை 15 ml (எம் எல் மில்லி லிட்டர்) வரை ரத்தத்தை உறிஞ்சும் . பின்னர் ஓராண்டு வரை கூட சாப்பிடாமல் உயிர் வாழும் . ஜெர்மனி முதலிய நாடுகள் ஒரு அட்டையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம் என்று சட்டம் இயற்றியுள்ளன. அவற்றை உடனேயே கொல்லக்கூடாது என்ற மனிதாபிமா அடிப்படையில் ‘ஓய்வூதியம் பெறும் ‘ அட்டைகளுக்காக தனி குளத்தை கட்டி வைத்துள்ளனர். செய் நன்றி மறக்கக் கூடாதல்லவா ?

tags – இரத்தம் , அட்டை, வைத்தியம், leech therapy, சுஸ்ருதர்

**** subham ******

2900 ஆண்டுக்கு முன் இந்தியர் செய்த மூளை அறுவை சிகிச்சை! (Post No.2754)

brain

Written  BY S NAGARAJAN

Date: 24 April 2016

 

Post No. 2754

 

 

Time uploaded in London :–  15-28

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பாக்யா 2016, ஏப்ரல் 22 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

2900 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மருத்துவர் செய்த மூளை அறுவை சிகிச்சை!

 

ச.நாகராஜன்

brain stampr1

2900 ஆண்டுகளுக்கு முன்னரே திபெத்திய மருத்துவர்கள் மூளை அறுவை சிகிச்சை செய்தனர். அதை மிகவும் பிரமாதமான முறையில் செய்ய இந்திய மருத்துவர் ஒருவரே உதவி செய்தார் என்ற ஆய்வுச் செய்தி பரபரப்பூட்டும் ஒரு செய்தி!

லாஸாவில் உள்ள திபெத்திய பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் கர்மா ட்ரின்லே (Karma Trinley) திபெத்திய கலைக் களஞ்சியமான திரிபிடகத்தை ஆராயப் புகுந்த போது அவர் இந்த உண்மையைக் கண்டுபிடித்தார்.

திரிபிடகம் என்பது  புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெரும் அறிவுக் களஞ்சிய நூல். அதில் சூத்ரங்கள், வினயா, அவி-தர்மா ஆகியவை தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. முதலில் வாய்வழியாக பரப்பப்பட்ட திரிபிடகம் பின்னால் கி,மு.மூன்றாம் நூற்றாண்டில் நூலாக எழுதப்பட்டது. சம்ஸ்கிருத திரிபிடகத்தை திபெத்திய மொழியில்  மொழியாக்கம் செய்தனர்.

 

 

இது இரு பகுதிகளைக் கொண்ட நூல்.முதல் பகுதி காங்யுர். அடுத்த பகுதி டாங்யுர். காங்யுர் புத்தரின் போதனைகளைத் தொகுத்துத் தருகிறது. டாங்யுர் காங்யுர் கூறும் புத்தரின் போதனையை விளக்குவதோடு விரிவுரையையும் தருகிறது. இதில் தத்துவம், தர்க்கம், இலக்கியம்,மொழியியல்,கலை, வானவியல், மருத்துவம், கட்டிடக்கலை, பஞ்சாங்க கணிதம் உள்ளிட்ட அனைத்து கலைகளும் அடங்கியுள்ளன.

 
இந்தியாவிலிருந்து மிகச் சிறந்த அறிவுத் தொகுதிகள் திபெத், சைனா, சிலோன்,பாலி, சுமத்ரா ஆகிய அண்டை நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

brain stamps2 (2)

 

திபெத்தைச் சேர்ந்த கூர்மையான அறிவை உடைய ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் இந்திய தொழில்நுட்பத்தால் கவரப்பட்டு அவற்றை நன்கு கற்று தங்கள் நாட்டில் அதைப் பரப்ப ஆர்மபித்தனர். குறிப்பாக மருத்துவத் துறையில் மிகப் பெரும் விற்பன்னரான தன்வந்த்ரி மற்றும் அவரது சீடரான சுஸ்ருதர் ஆகியோர் மிக அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தனர். இவற்றைத் தொகுத்த சுஸ்ருதர்  சுஸ்ருத சம்ஹிதா என்ற நூலை இயற்றினார். அதில் அரிய மருத்துவ விஷயங்களை அவர் விளக்கியுள்ளார்.

 

 

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூலை கி.பி,ஐந்தாம் நூற்றாண்டில்  மிகப் பெரும் புத்த மத மேதையான நாகார்ஜுனர் திருத்திப் பதிப்பித்தார்.

 

சுஸ்ருதர் 127 விதமான அறுவைச் சிகிச்சைக்கான நுட்பமான கருவிகளைப் பற்றி விளக்குகிறார்.

 

மன்னர் பிம்பசாரனின் மருத்துவரான ஜீவகன் உலகின் அதி நவீனமான மூளை அறுவைச் சிகிச்சையைச் செய்து புகழ் பெற்றார். மண்டையோட்டில் துளையிட்டு  ஒரு புழுவை எடுத்து ஒரு மனிதனை அவர் குணப்படுத்தியது அனைவரையும் வியக்கச் செய்தது.

 

 

இது மட்டுமின்றி மிஸௌரி கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட டெலகிராப் இதழில் 9000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இருந்த பல் வைத்தியர்கள் பல்லில் துளையிட்டு அங்கு சொத்தையை அகற்றுவதில் நிபுணராக இருந்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர்.

 

brain2

அவர்களது ஆய்வு விவரமாக குழுவின் தலைவரான ஆண்ட்ரியா க்யூஸினாவால் (Andrea Cusino) எழுதப்பட்டு பிரப்ல அறிவியல் இதழான ‘நியூ ஸயிண்டிஸ்ட்’ இதழில் பிரசுரிக்கப்பட்டது. ம்ஹர்ஹர் என்ற இடத்தில் கிடைத்த தொல் படிமங்களை ஆராய்ந்த அவர்கள் இப்படிப் பல்லில் மிகச் சிறிய துளையைப் போட மிகவும் சிறந்த கருவியை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று வியப்புடன் தெரிவித்தனர்.

 

இதே வழியில் திரிபிடகத்தை இப்போது ஆராய்ந்த கர்மா ட்ரின்லே இந்திய மருத்துவரான ட்ஸோஜியல் (Tsogyel)  மூளை அறுவை சிகிச்சை நட்ந்த போது கூட இருக்க மட்டும் அனுமதிக்கப்பட்டர் என்னும் செய்தியைத் தருகிறார்.

 

 

திரிபிடகம் தரும் சுவையான ஆபரேஷன் தகவல்கள் விரிவாக அவரால் விளக்கப்படுகின்றன.

 

வலி தாங்காத நோயாளி தன் தலையை படார் படாரென்று வலிமை வாய்ந்த பொருள்களின் மீது மோத வைத்து வலியைத் தணித்துக் கொண்டாராம். இரண்டு ட்வீஸர்களை வைத்து மூளை அறுவைச் சிகிச்சையை திபெத்திய மருத்துவர்கள் ஆரம்பித்த போது இந்திய மருத்துவர் ஓவென்று அலறினாராம்.

முதலில் ட்வீஸர்களை சூடு படுத்தி அதைத் தூய்மைப் படுத்துங்கள் என்று கூற அவரது அறிவுரையைப் பின்பற்றி ஆபரேஷன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாம். இந்திய மருத்துவர்கள் செய்த மூளை அறுவைச் சிகிச்சைகள் பெரும் மருத்துவ முன்னேற்றத்தின் அறிகுறி.

 

 

இப்படி நாளுக்கு நாள் இப்போது நடந்து வரும் ஆய்வுகள் அதி நவீன உத்திகளையும் சாதனங்களையும் வைத்து செய்யப்படுபவை.

 

அறிவியல் பூர்வமாக இந்தியாவின் புராதன பெருமை இப்போது நிரூபிக்கப்பட்டு வருவதைப் பார்த்த ஸ்வீடனைச் சேர்ந்த பிரபல ராஜதந்திரி க்வுண்ட் ப்ஜோர்ண்ட்ஜெர்னா (Count Bjornstjerna) , “ஹிந்துக்களின் மிக உயரிய நாகரிகம் மேற்கே எதியோப்பியா,எகிப்து, போனீஷியாவிலும் கிழக்கே சயாம், சைனா, ஜ்ப்பானிலும் தெற்கே சிலோன், சுமத்ரா, ஜாவாவிலும் வடக்கே பெர்ஸியா, கால்டியா கால்ஸிஸ் வழியே கிரேக்கம் மற்றும் ரோமிற்கும் பரவின .பூவுலகில் உள்ள எந்த ஒரு நாடும் ஹிந்துக்களின் புராதனமான நாகரிகம் மற்றும் மதத்தைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது” என்று புகழாரம் சூட்டுகிறார்.

 

 

சுதந்திரம் பெற்ற இந்தியா அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் பழைய பெருமையை மீண்டும் பெறும் என்று நம்பலாம்!

 

laser

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ஆண்ட்ரியாஸ் வெஸல்லஸ் (Andrea Vesallus 31-12-1514 –  15-10-1564) என்பவரே நவீன உடல்கூறியலின் தந்தை எனப்படுபவர். மனித உடலை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த விஞ்ஞானி இவர். பிரேதங்களை இவர் கூறிட்டுப் பார்க்கும் போது இவரது மாணவர்கள் அருகிலிருந்து பார்ப்பது வழக்கம்.

1564ஆம் ஆண்டு அவர் ஜெருசலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்.  அங்குள்ளவர்கள் இவரை பேராசிரிய்ராகப் பணி புரியுமாறு வேண்டினர். ஆனால் அவர் இதை ஏற்கவில்லை.

 

 

கப்பலில் திரும்பிய அவர் கடல் புயலில் மாட்டிக் கொண்டார். அவரது கப்பல் உடைய, ஜகிந்தோஸ் என்ற தீவில் அவர் கரை ஒதுங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அங்கேயே இறந்தார். அங்கோ அவரிடம் பணமே இல்லை. கடனாளியானார். அந்தத் தீவின் வழக்கப்படி யார் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கு பணம் ஒதுக்கவில்லையோ அவரது சடலம் மிருகங்களிடம் வீசப்படும். ஐம்பதே வயதான அவர் பரிதாபகரமாக இறந்தார்.

 

அவர் புனிதப் ப்யணம் மேற்கொண்டதைக் கொச்சைப் படுத்தும் விதத்திலும் பல கதைகள் பரப்பப்பட்டன. அவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவரை பிரேத பரிசோதனையின் போது அறுத்துப் பார்த்த போது அவரின் இதயம் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் ஆகவே அவர் மீது விசாரணை கமிஷ்ன் நிறுவப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஆனால் மன்னர் இரண்டாம் பிலிப் அதை மாற்றி அவரை நாடு கடத்தியதாகவும் கதைகள் பரப்பப்பட்டன.

இப்போது  பழைய ஆவணங்களை எடுத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் உடல் கூறியலின் தந்தையான அவருக்கா இந்த அவப்பெயர் என்று வியந்து உண்மையை உலகிற்கு முன் வைக்கின்றனர்.

********

 

 

 

வேதத்தில் 107 மூலிகைகள்

susrutha statue in Haridwar

Picture of Susrutha statue in Haridwar.

உலகிலேயே மிகவும் பழைய நூல் வேதங்கள். அவை சம்ஸ்கிருதத்தில் உள்ளன. எப்படி சங்கத் தமிழ் பாடல்கள் பழைய செந்தமிழில் உள்ளதோ அப்படியே வேதங்களும் பழைய வைதீக சம்ஸ்கிருதத்தில் இருக்கின்றன. எப்படி உரைகாரர்களின் உரை இல்லாமல் சங்கத் தமிழ் பாடல்களைப் புரிந்துகொள்ளமுடியாதோ அப்படியே, சாயனர் போன்றோரின் உரை இல்லாமல் வேதங்களையும் புரிந்து கொள்ளமுடியாது. தமிழ் இலக்கியத்தை விட 1500 ஆண்டுகள் பழமை உடையவை வேதங்கள் என்பதால் சாயனர் உரை கூட முழு அர்த்தெத்தையும் கொடுப்பதில்லை. ஆனால் வேதத்தை விளக்கவந்த இதிஹாச புராணங்களும், தேவார திருவாசக திவ்விய பிரபந்தங்களும  அவைகளின் உள்ளார்ந்த கருத்துக்களை நமக்கு புலப்படுத்துகின்றன.

 

 

மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சரகர், சுஸ்ருதர் போன்ற பெரியோர்கள் வடமொழியில் எழுதிய நூல்கள் வேத கால அறிவை அறிய ஓரளவுக்குத் துணை செய்கின்றன. ரிக், யஜூர், சாம ,அதர்வணம் –ஆகிய நான்கு வேதங்களில் மிகவும் பயனுடைய வேதம் அதர்வண வேதம் ஆகும். மனிதன் பிறந்து, வளர்ந்து, மணம் புரிந்து, இறக்கும் வரை உள்ள சடங்குகளுக்கு அதில் பல மந்திரங்கள் உள்ளன.

 

 

உலகிலேயே பழைய சமய நூல் ரிக் வேதம். அதில் பத்தாவது மண்டலத்தில் 97ஆவது பாடல் முழுதும் மூலிகைகளின் பெருமையைப் பேசுகிறது. உலகிலேயே மிகப் பழைய மூலிகைப் பாடல் இதுதான். இரசாயன ஆயுதத்தால் தாக்குண்ட லெட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் மூலிகை மலையையே எடுத்து வந்ததை ராமாயணம் மூலம் நாம் அறிவோம். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அனுமன் தான். இதற்குப் பின்னும் முன்னும் அயுர்வேதம் என்ற மிகப் பழைய மருத்துவ முறை இருந்ததை அறிய ராமாயணம் மஹாபாரதம் போன்ற இதிஹாசங்கள் உதவுகின்றன.

 

charaka

107 மூலிகைகள்

ரிக் வேதப் பாடல் 107 மூலிகைகள் பற்றிப் பாடுகிறது. துரதிருஷ்டவசமாக நாம் அந்த 107 மூலிகைகள் என்ன என்பதை அறிய முடியவில்லை. ஆயினும் ஆயுர்வேத நூல்கள், வேறு நூற்றுக் கணக்கான மூலிகைகள் பற்றி நமக்கு அறிவுறுத்துகின்றன. பிராமணர்கள் யாக யக்ஞங்கள் செய்ய மிகவும் பயன்படுத்துவது அரச மரமே. இதை ரிக்வேதம் பகழ்கிறது. சிந்து –சரஸ்வதி நாகரீகத்திலும் மிகவும் அதிகமாகக் கானப்படுவது இந்த அரச மரமே.

 

ரிக் வேதம் விளக்காத விஷயங்களை அதர்வண வேதம் விளக்குகிறது. அபூர்வமான பல தாவர தாயத்துக்கள் பற்றிப் பாடுகிறது. இவை வேத கால மக்களின் நம்பிக்கைகளை விளக்குகிறது. வேதகால மக்கள் மூலிகைகளின் மருத்துவப் பலன்களோடு அவைகளை தெய்வீக குணம் உடையவை என்று நம்பினர். அவைகளின் மாய, தந்திர குணங்களிலும் நம்பிக்கை வைத்தனர். அவைகளுக்கும் சந்திரனுக்கும், சோம பான மூலிகைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பினர். மூலிகை தாயத்துக்களால் கணவன் மனைவி உறவு பலப்படும் என்றும் நம்பினார்கள்.

 

வேத காலத்தில் தாவரவியல் அறிவு, புறச்சூழல் அறிவு பரவி இருந்தது. நூற்றுக் கணக்கான மூலிகை, மரம் செடி, கொடிகளின் பெயர்களை சம்ஸ்கிருத இலக்கியத்தில் காணுகிறோம்.

 

 

அதர்வ வேத அற்புதங்கள்

நாலாவது வேதமான அதர்வண வேதத்தில் குஸ்ட, ஷிலாச்சி முதலிய தாவரங்கள் பற்றியும், ஜங்கிட மணி, பர்ண மணி முதலிய தாயத்துக்கள் பற்றியும் அபூர்வ விஷயங்கள் காணக்கிடக்கின்றன. பர்ண மணி பலாச மர இலைகளால் செய்யப்பட்டது. இன்று வரை யாகத்தில் பயன்படுத்தப்படும் கரண்டிகள் பலாச மரத்தால்தான் செய்யப்படுகின்றன. இப்போதைய அறிவைக்கொண்டு இவை என்னென்ன என்பதை அறிய இயலாவிட்டாலும் அந்தக் காலத்தில் இருந்த அபூர்வ மூலிகை மணிகளை நாம் அறிய முடிகிறது.

 

 

தாயத்து மூலம் கணவனின் அன்பைப் பெற ஒரு மனைவி முயற்சிக்கும் பாடலும், விஷ அம்பிலிருந்து உடலில் பாய்ந்த விஷத்தை வெளியே ஏற்றும் பாடலும்,ஜங்கித மணி—பர்ண மணியின் அபூர்வ குணங்களைக் கூறும் பாடலும், பல மரங்களின் பெயர்களும் படித்து இன்புறத்தக்கவை. நீண்ட முடி வளர உதவும் ரேவதி என்ற மூலிகையும் பாடப்படுகிறது. அருந்ததி, அகத்தி என்று ரிஷிகளின், ரிஷிபத்தினிகளின் பெயர்களும் மூலிகைகளுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

மனிதர்களுக்கு மட்டுமின்றி இரண்டு கால், நான்கு கால் பிராணிகளுக்கும் நன்மை வேண்டும் பாடல் அதர்வ வேத முனிவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும். வேதங்களே மிகப் பழையவை. அவை மூலிகை பாற்றிப் பாடுகையில் “புராதனமான” என்ற சொல்லைப் பயபடுத்துவதைக் காண்கையில் இந்த அறிவு பல்லயிரக்கணக்கான ஆண்டுகளாக இருப்பது தெள்ளிதின் விளங்குகிறது.

 

 

(இந்த விஷயம் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரையில்– 107 Miracle Herbs in the Hindu Vedas– பாடல் எண்கள், முழு வாசகங்கள் ஆகியனவற்றைக் காணலாம்).

இந்திய கலாசாரம் பற்றி 650 கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே  கிடைக்கும் படித்து மகிழ்க.

Contact swami_48@yahoo.com