நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் (Post No.8827)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8827

Date uploaded in London – – 19 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் அக்டோபர் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி

ச.நாகராஜன்

பதார்த்த குண சிந்தாமணி நூலில் நவரத்தின வகை என்ற தலைப்பில் ஒவ்வொரு ரத்தினமும் எந்தெந்த வியாதிகளைக் குணமாக்கும் என்பது விவரமாகத் தரப்பட்டுள்ளது.

மாணிக்கத்தின் குணம்

சுரரோகஞ் சந்நிகளின் தோட மதிதாக

முரமான மேக மொழியுந்- திரமாக

வூணிக்கோ ணேத்திரநோ யோடுமர வீன்றவொளி

மாணிக்கத்தால் வசிய மாம்

பொருள் : (சர்ப்பம் கக்கிய) மாணிக்கத்தினால் சரீரத்தில் ஏற்படும் அனைத்து விதமான ஜுரங்கள், சந்நிபாத தோஷங்கள், திரிதோஷதாக ரோகம், வாத பிரமேகம், கண் நோய்கள் ஆகிய இவைகள் ஒழியும். அத்துடன் வசீக்ரம் உண்டாகும்.

(பழைய உரை ‘சர்ப்பம் கக்கிய மாணிக்கம்’ என்று கூறினாலும் அப்படி ஒரு மாணிக்கம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்குரியதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

வைரத்தின் குணம் – இதுவே வஜ்ஜிரம் எனப்படும்

ஆறு விதமாம் வயிரம் அவ்வவற்றுண் மாரசங்கள்

வீறிநிலைத் திருக்கும் மேன்மையினாற் – கூறுமவைக்

கெப்பிணியும் நீக்கும் இணையில வனப்பும் உண்டாஞ்

செப்பிணையின் மாமுலையாய் செப்பு

பொருள் : செப்பைப் போன்ற மார்பகத்தை உடையவளே, தேவ, பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர, சங்கர என்னும் ஆறு வகை வைரங்கள் உண்டு. அவற்றினுள் மகா ரசங்கள் தங்கி இருப்பதனால் அவைகளுக்கு கண்களில் வரும் நோய் உள்ளிட்ட பற்பல ரோகங்களை விலக்கும் சக்தி உண்டு. அழகும் உண்டாகும்.

வைடூரியத்தின் குணம்

சீத வாதத்தொடு சிலேஷ்மம் புளியேப்பங்

காதுசூலைப் பிணிக ளத்தகுமை – மோதுபித்த

மென்று உரைக்கும் நோய்கள் அறும் எப்போதுந் தோடமிலை

நன்று வைடூரியத்தி னால்

பொருள் : வைடூரியத்தினால் சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல் பிடிப்பு வாதகுன்மம், பைத்தியம், அபத்திய முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.

கோமேதகத்தின் குணம்

வாதபித்த கோபத்தை மாற்றுமல கட்டறுக்கு

மோது மந்தாக்கினியை ஓட்டுங் காண் – மீதி

லழறரு விகார மகற்று மொளி செய்யுங்

கழறுகின்ற கோமேத கம்

பொருள் : கோமேதகமானது வாதபித்தமிஸ்ரம், மலச்சிக்கல் மற்றும் ஜுரத்தால் ஏற்படும் துர்க்குணம் ஆகியவற்றை அகற்றும். மினுமினுப்பையும் தரும்.

புஷ்பராகத்தின் குணம்

வீரிய விர்த்தியது மேன்மேலு முண்டாகுங்

கூரிய நற்புத்தியுண்டாங் கூறுங்காற் – பாரிற்

பிணிவருக்க மேகும் பெரும் புட்பராக

மணியாற் புகழுமுண்டாம் வாழ்த்து

பொருள் : புஷ்பராகத்தினால் விந்து விருத்தியாகும். நல்ல நுண்ணறிவு ஏற்படும். புகழ் ஓங்கும். மேக முதலிய நோய்க் கூட்டமும் நீங்கும்.

பவளத்தின் குணம்

சுரதோட மையமுத் தோட சுரங்காச

மருசி கீடத்தாலா மாதம் – பெரும்விந்து

நட்ட மதிதாக நாவறட்சி போமொளியுங்

கிட்டும் பவளத்தாற் கேள்

பொருள் : பவளத்தினால் ஜுர தோஷம் நீங்கும். கபம் சந்நிபாத ஜூரம் விலகும். இருமல் போகும். அருசி, கீட விஷம், விந்து நஷ்டம் ஏற்படுவது ஆகியவை போகும்.நா வறட்சி போகும். அத்துடன் சரீர காந்தி ஏற்படும்.

முத்தின் குணம்

அத்திசுரஞ் சோபை யருசிதுர்ப் பலங்கண்ணோய்

பித்துவிடஞ் சீதளநோய் பேசுகபஞ்-சத்தத்

தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போ

முயிறுநண் முத்திருந்தா லோது

பொருள் : (ஜீவரத்தினம் என்னும்) முத்தினால் அஸ்தி ஜுரம் , வீக்கம், அருசி, தேக மெலிவு, விழி நோய், அக்கினி கீட விஷம், சுட்க சிலேஷ்மம், குரல் வளையில் ஏற்படும் கோழை, அதைரியம், வீரிய நாசம் ஆகிய அனைத்தும் போய் விடும்.

மரகதத்தின் குணம்

தாது தரும் பூதபை சாசந் தமையோட்டு

மீதுவரு புண்ணை விலக்குங்காண் – டீதுபுரி

மச்சை யகற்றும் மதுமேகம் போக்கும்

பச்சை யதுமதுரம் பார்

பொருள் : இனிப்புள்ள மரகதம் விந்துவை தரும். 18 விதமான பூத பைசாசங்க்ளை ஓட்டி விடும். பல விஷங்களை அகற்றும் சக்தி கொண்டது. மதுமேக வியாதியையும் போக்கும்.

நீலத்தின் குணம்

குதிவலி மேகபித்தங் கூறரிய பாண்டு

மதிமயக்க மெல்லா மருளு- மதிநுதலே

புத்தியொடு மென்மேலும் போகசுக முண்டாகுஞ்

சுத்தநறு நீலத்தாற் சொல்

மதி நுதலைக் கொண்டவளே! நீலத்தினால் குதி கால் நோவு தீரும். மேகநீர்,

அதி பித்தம், பாண்டு போகும். மனச்சோர்வு நீங்கும். நல்லறிவு ஏற்படும். சுக்கிலம் மிகுதியாகும். போக சுகம் உண்டாகும்.

*

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ரத்தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. நற்பலனை அதிகரிக்கவும் தோஷங்கள் நீங்கவும் இந்த ரத்தினக் கற்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.  அதே போல நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரத்தின் படியும் ஒவ்வொரு எண்ணுடனும் ஒரு கிரகம் தொடர்பு படுத்தப்படுகிறது. விவரப் பட்டியல் இதோ :-

ரத்தினம்           உரிய கிரகம்    உரிய எண்  உரிய ராசி

மாணிக்கம்          சூரியன்          1        சிம்மம்

முத்து              சந்திரன்          2        கடகம்

பவளம்             செவ்வாய்        9    மேஷம், விருச்சிகம்

மரகதம்           புதன்               5    மிதுனம், கன்னி

புஷ்பராகம்        வியாழன்           3    தனுர், மீனம்

வைரம்           சுக்கிரன்            6    ரிஷபம், துலாம்

இந்திரநீலம்       சனி                8    மகரம், கும்பம்

கோமேதகம்       ராகு               4     கன்னி

வைடூரியம்       கேது               7      விருச்சிகம்

முன்னோர்கள் காலம் காலமாகச் சோதித்து இப்படி, பரிந்துரைக்கும் நவரத்தின வகைகளை தோஷம் இல்லாமல் பார்த்து வாங்கி அணிவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. வெடிப்பு, கொப்புளம், கீறல், ஒளி மங்கி இருத்தல், கரடு முரடாக இருப்பது, இயற்கையில் கிடைக்காமல் சிந்தடிக்காகச் செய்து ரத்தினங்களின் பெயரை அவற்றிற்குச் சூட்டல் ஆகியவை இல்லாமல் நல்ல அசல் ரத்தினக் கல்லே உரிய நல்ல பலனைத் தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்!

tags– நோய், நவரத்தினம்

***

ஒன்பதாம் எண்ணின் அதிசய சக்தி (Post No.7148)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com

Date: 28 OCTOBER 2019

Time  in London – 8-21 am

Post No. 7148

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பிரிட்டனில் ஆர்தர் (King Arthur)  மன்னரிடம் ஒன்பது வைரங்கள் இருந்தனவாம்.

மூட நம்பிக்கைகளிலும் 9 உண்டு! வாலாட்டும் (Magpies) கருங்குருவிகள் 9 வந்தால், பார்த்தால் அபசகுனம்!

இனி இந்து மத ஒன்பதுகளைக் காண்போம்-

நவ (9) கிரகங்கள், அவற்றின் தெய்வீக அம்சங்கள், அவற்றுக்கான தலங்கள்:-

சூரியன் – சிவன் – சூரியனார் கோவில்

சந்திரன் – உமை – திங்களூர்

செவ்வாய்- சுப்பிரமணியன்  – வைதீஸ்வரன் கோவில்

புதன் – திருமால்/ விஷ்ணு- திருவெண்காடு

Navagrahas in Ashmolean Museum, Oxford
Navabhasanam
Nava Dhanya Adai
nava samithu

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  8-49 am (British Summer Time)

 

Post No. 4884

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?

 

அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது

 

‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.

 

கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!

 

நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)

 

கம்பன் இதைச் சொல்கிறான்:-

 

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

 

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

 

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

 

 

அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.

 

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

 

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்– என்பான்.

 

வேதிகை மணி

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

 

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

 

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

 

 

நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!

 

 

ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-

பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு

உற்றது வயிரத்தின் உற்ற தட்டது

சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து

ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே

–பால காண்டம்

 

ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.

 

 

கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:

நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.

இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.

 

My Old Articles: –

 

கம்பன், காளிதாசன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/

18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …

ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/

22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …

 

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …

https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…

13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …

 

மாணிக்கம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/

முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …

 

TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி,  தங்கம் ஆக்கும் கல்

 

சுபம்–