பெண்கள் வாழ்க Part 15, பெண் கொலை பெரிய பாவம் (Post No.9513)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9513

Date uploaded in London – –20 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் வாழ்க Part 15, பெண் கொலை பெரிய பாவம்

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. பெண்களை கொலை செய்தல் மிகப்பெரிய பாவம் என்று இந்துமத நூல்கள் கூறுகின்றன. தாடகை ஒரு பெண் என்று கூறி கொல்ல மறுக்கிறான் ராமன். ஆனால் அவளிடம் பெண்மையோ தாய்க்கே உரித்தான கருணையோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி ராட்சஸியை வீழ்த்தச் சொல்கிறார் விசுவாமித்திர முனி.      திரௌபதியை அவமான படுத்திய கௌரவர்களை கொடும்

tags —  பெண்கள் வாழ்க15, பெண் கொலை,  பாவம்,

புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்! (Post No.4406)

Written by S.NAGARAJAN

 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-24 am

 

 

Post No. 4406

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 2

பிறவி ஏன்? முக்தி எப்போது – கட்டுரை எண் 4388 வெளியான தேதி ̀12-11-17 – இதைத் தொடர்ந்து வெளியாகும் கட்டுரை இது.

 

புண்ணிய, பாவ கர்மங்களின் விளக்கம்!

 

ச.நாகராஜன்

அத்வைத நோக்கில் புண்ணிய, பாவ கர்மங்களைப் பற்றி இனி காண்போம்,

 

*

 

சரீர பரிக்கிரகத்தினால் ஆன்மாவுக்குத் துக்கம் எனில். அது எத்தனை விதம்?

புண்ணியம், பாவம், மிஸ்ரம் என்று மூன்று விதம்.

 

இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?

புண்ணிய கர்மத்தினால் தேவாதி சரீரம் உண்டாகும்.

பாவ கர்மத்தினால் மிருகாதி சரீரம் உண்டாகும்.

புண்யமும் பாவமும் இணைந்த மிஸ்ராதி (கலந்த) கர்மத்தினால் மனுஷ்யாதி சரீரம் உண்டாகும்.

 

இவைகளில் வித்தியாசம் உண்டா?

அத்ருஷ்டம், மத்யமம்,சாமான்யம் என்று தனித் தனியாக மூன்று வித பேதங்கள் (வேறுபாடுகள்) உண்டு.

இப்படிச் சொல்லப்பட்ட கர்ம பந்தத்தினால் தான் நானாவித ஜனபேதம் உருவாகிறது.

எப்படி எனப் பார்ப்போம்.

ஹிரண்யகர்ப்பாதி சரீரம் புண்யோத்க்ருஷ்ட சரீரம்.

இந்திராதி சரீரம் புண்ய மத்யமம்.

யட்ச, ராக்ஷஸ, பிசாசம் புண்ய சாமானியம்.

 

இந்த மூன்று வித கர்மங்கள் எதனால் ஏற்படுகிறது?

மூன்று வித கரணங்களினால்.

 

அப்படியா? ஆத்மாவினால் அல்லவா?

ஆத்மா அவிகாரி, நிஷ்கிரியன் (அவத்த பேதம்) அவயவம் அற்றவனாவதால் கர்த்ருத்வம் கிடையாது.

 

ஆனால் ஆத்மாவுக்குக் கர்த்ருத்வம் இருப்பது போலத் தோற்றமளிக்கிறதே. இது ஏன்?

அத்தியாசிகமே. (அதாவது ஆரோபிதமே)

 

புரியவில்லை. ஆரோபிதம் என்றால் என்ன?

ஒன்றின் தர்மங்கள் வேறொன்றில் காணப்படுதலே ஆகும்.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஓடம் ஒன்று நதியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓடத்தின் ஓட்டம் நதிக்கரையில் இருக்கின்ற மரங்களிலும், அசையாமல் ஓரே இடத்தில் இருக்கும் தன்மையை உடைய  மரங்களின் தர்மம் ஓடத்திலும் ஆரோபிப்பது போலாகும்.

 

நல்லது, மூன்று கரணங்களும் அசேதனமாக இருக்கின்ற போது, அதற்கு எப்படி கர்த்ருத்வம் உண்டாகும்?

(குறிப்பு: சேதனம் என்றால் உயிருள்ளவைகள். ஜங்கமம் என்று சொல்லப்படும். அசேதனம் என்றால் ஸ்தாவரம் , அதாவது உயிரில்லாத ஜட வஸ்துக்கள்)

அசேதனமன நீரும், காற்றும் மரம் முதலானவற்றை வேருடன் பிடுங்கித் தூக்கிக் கொண்டுபோவது போல,தூக்கி எறிவது போல கர்த்ருத்வம் காணப்படுகிறதில்லையா?

அதே போல மூன்று கரணங்களுக்கும் வேறு கரணங்களின்றிக் கர்த்ருத்வம் காணப்படுகிறது.

 

இந்த மூன்று வித கரணங்களினால் செய்யப்படுகின்ற கர்மங்கள் யாவை?

ஸவிசேஷ சிந்தை, நிர்விசேஷ சிந்தை, பரலோக சிந்தை, பக்தி ஞான வைராக்கிய சிந்தை என்பவையேயாம்.

இவைகளில் மனதினால் செய்யப்படுபவை புண்ணிய கர்மங்கள்- விஷய சிந்தை.

மற்றவர்களுக்கு உபகார சிந்தை,

வேத சாஸ்திரங்களில் பற்றுள்ள சிந்தை,

தர்மம், அதர்மம் என்கிற சிந்தை,

இவை போன்ற புத்தி விகாரங்கள் மன சம்பந்தமான பாவ காரியங்கள்.

அவிசேஷ, நிர்விசேஷ, புண்ய விஷய சிந்தை முதலான பாவ சிந்தையுடன் கலந்து அநுஷ்டிப்பது மிஸ்ர கர்மங்களாகும்.

வேத சாஸ்திரப்படி பகவத் சங்கீர்த்தனம், சத்தியம், பரோபகார வார்த்தை, மிருதுவாகப் பேசுதல், பூர்வ பாஷணம் (தானாக முனவந்து முதலில் பேசுதல்) ஆகியவை வாசிக புண்ய கர்மங்கள் ஆகும்.

வேத சாஸ்திர தூஷணை (இழித்துப் பேசுதல்) வேத தூஷணை,அசத்தியம், கடும் சொல், பொய் சொல்லுதல், கேலி செய்தல் ஆகியவை வாக்கினால் செய்யப்படும் பாவ கர்மங்கள் ஆகும்.

 

வேதாத்தியயனம், தேவ பூஜை காலங்களில் பரநிந்தை, கேலி, அசத்தியம் ஆகியவற்றை அனுஷ்டித்தல் மிஸ்ர பாவ கர்மங்களாகும்.

இப்படியே பலவித பாவ கர்மங்கள் உண்டு.

பிரம்ம ஞானம் உண்டாயிருந்தாலும் கூ மூன்று வித கரணங்களையும் புண்ய கர்மத்திலேயே நிறுத்த வேண்டும்.

***

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)


Written by London Swaminathan


Date: 20 July 2017


Time uploaded in London- 13-50


Post No. 4098


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பவர்மன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னன். கி.பி.900 வாக்கில் ஆட்சி செய்தவன். அவனது பல கல்வெட்டுகள், நடுகல் கல்வெட்டுகளாகும். உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு ஊர் மக்களும் அந்தப் பக்கம் போய்வரும் யாத்ரீகர்களும் வழிபாடு செய்வதை சங்க இலக்கிய நூல்கள் செப்புகின்றன.

 

போர்க்காலங்களில் தாமாக முன்வந்து களபலி கொடுக்கும் வழக்கம் மஹாபாரத காலம் முதல் இருந்து வருகிறது. இதை நவகண்டம் பற்றிய எனது கட்டுரையில் காண்க. அப்படிப்பட்ட நவகண்டம் ஒன்று நடந்த பின்னர் நட்ட கம்பவர்மன் நடுகல்லில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன:-

 

  1. இந்த நாடு கங்கை தோன்றும் கங்கோத்ரி இருக்கும் இமயம் முதல் குமரி வரை ஒன்று!

2.போருக்கு முன், ஒருவன் உயிர்ப்பலி கொடுத்து நாட்டைக் காக்க மக்களுக்கு வீரம் ஊட்டும் வழக்கம் மகாபராத காலம் முதல் — அஸ்தினாபுரம் முதல் — குமரி வரை – இருந்துள்ளது!

 

  1. கல்வெட்டுகளுக்கு தீங்கிழைப்போருக்கு பாவம் வரும்; அவைகளைக் காப்போருக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

உதவிய நூல்; கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பாவ புண்ணியங்களுக்குப் பயந்ததால்தான் நமக்குப் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இன்றோ கோவில் சிலைகளையே திருடி விடுகின்றனர்.

 

மேலும் கங்கையையும் குமரியையும் குறிப்பிட்டதன் காரணம் இவ்விரண்டும் புனித நீர்த்துறைகளாகும். இதன் பொருள் என்ன வென்றால் சாதாரண இடத்தில் பாவம் செய்வதைவிட புனித இடத்தில் பாவம் செய்வது பல மடங்கு கொடியது என்பது தமிழரின் நம்பிக்கை.

 

கல்வெட்டின் பொருள்:-

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் 20-ஆவது ஆட்சி ஆண்டில் இது பொறிக்கப்பட்டது. பட்டை பொத்தன் என்பவனின் வெற்றிக்காக ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் என்பவன் தன்னுடைய தலையை அறுத்து பிடாரியின் பீடத்தில் வைத்தான். அவனுக்கு திருவான்மூர் மக்கள் பறைகொட்டி , கல் நட்டு சிறப்பு செய்தார்கள். நிலமும் கொடையாக அளிக்கப்பட்டது.

 

இக்கொடைக்கு ஊறு செய்வோர் கங்கைக்கரை முதல் குமரி வரையுள்ள மக்கள் செய்த அனைத்து பாவங்களையும் பெறுவார்கள். மேலும் மன்னனுக்கு கால் பொன் அபராதமும் கட்ட வேண்டும்.

 

நாகர்கள் பெயர்கள் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இருபது பேர் வரை உள்ளனர். குபதர் கால கல்வெட்டுகளிலும் பலர் நாகன் என்ற பெயர் உடையவர்கள் ஆவர்.

TAGS: கம்பவர்மன், நவகண்டம்,  கங்கை குமரி, பாவம்

–subham–