
Written by London swaminathan
Date: 6 July 2016
Post No. 2947
Time uploaded in London :– 14-41
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
அந்தணர்களாகப் பிறந்து சாஸ்திர அறிவில்லாதவனை, கண்ணிருந்தும் குருடன் என்று கருதுவர் சான்றோர். இதை அழகாகச் சொல்லும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம்:–
ஸ்ருதிஸ்ம்ருதீ து விப்ராணாம் சக்ஷுஷீ த்வே வினிர்மிதே
கானஸ்தத்ரைகயாஹீனோ த்வாப்யாம் அந்த: ப்ரகீர்தித:
அந்தணர்களின் இரண்டு கண்கள் வேதமும் தர்ம சாஸ்திரங்களும் (சுருதி, ஸ்ம்ருதி) ஆகும்.
இதில் ஒன்று தெரியாதவன் ஒற்றைக் கண்ணுடையோன்.
இரண்டும் தெரியாதவன் குருடன் என்று அறியப்படும்.
திருவள்ளுவர் இதையே வேறுவிதமாகச் சொல்லுவார்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர் (திருக்குறள் 393)
நல்ல நூல்களைக் கற்று, ஞானத்தைப் பெற்றவர்களையே கண்கள் உடையவர் என்று சொல்லுவார்கள்; கல்வி அறிவு பெறாதவர்களை, முகத்தில் இரண்டு புண்களை உடையவர் என்று இகழ்வார்கள்.

xxxxx
கர்ம சண்டாளர்கள் யார்?
பிறப்பினால் சண்டாளர்கள் யார் என்பதை நாம் அறிவோம்.
தொழில் ரீதியில் , தாங்கள் செய்யும் செயல்களால், சண்டாளர் நிலைக்குத் தாழ்பவர் யார் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் விளக்குகிறது:–
தூஷகஸ்ச க்ரியாசூன்யோ நிகஷ்டோ தீர்ககோபன:
சத்வார கர்ம சண்டாலா ஜாதிசண்டால உத்தம:
பிறரைக் காரணமில்லாமல் திட்டுபவன் (பொறாமை காரணமாகவோ,வெறுப்பு காரணமாகவோ)
சாத்திரப்படி விதிக்கப்பட்ட வழிபாடுகளை விட்டவன்
பேராசைக்காரன்
நீண்ட காலத்துக்கு கோபத்தைத் தக்கவைப்பவன்
ஆகிய நால்வரும் செய்ய்யும் தொழிலால்ல் சண்டாளர் நிலைக்குத் தாழ்ந்து விடுவர்.
///////////////// SUBHAM////////////////////


You must be logged in to post a comment.