ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம் (Post No.2932)

saw horse

ஆப்ரஹாம் லிங்கன்  ஏமாந்த குதிரை வியாபாரம் (Post No.2932)

 

Article written by London swaminathan

 

Date: 1  July 2016

Post No. 2932

Time uploaded in London :– 6-21 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

skinny horse

ஒரு நாள் ஆப்ரஹாம் லிங்கனும் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் குதிரை வியாபாரம் பற்றி பேச்சு திசை திரும்பியது

 

அங்கே ஒரு நீதிபதியும் இருந்தார். உரையாடலில் நகைச்சுவையும், சவால்களும் இடம்பெற்றன. லிங்கன், ஒரு நீதிபதியுடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.

 

லிங்கன் சொன்னார்:-

நீதிபதி அவர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள். நானும் நீங்களும் குதிரை வியாபாரம் செய்வோம். ஆனால் ஒரு நிபந்தனையை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். குதிரை பேரம் நடக்கும் ஹோட்டலுக்கு வரும் வரை, என்  குதிரையை நீங்கள் பார்க்கக்கூடாது.

உங்கள் குதிரையை நான் பார்க்கமாட்டேன். ஒருவர் குதிரையை மற்றொருவர் வாங்கிக்கொள்ளவேண்டும். யாராவது இந்த பேரத்திலிருந்து பின்வாங்கினால், 25 டாலர் கொடுக்க வேண்டும்.

 

இதைக் கேட்ட நீதிபதி, “பேஷ்!பேஷ்! எனக்கும் சம்மதமே” என்றார்.

 

இருவரும் “குதிரை வேட்டைக்குப்” போனார்கள். பந்தய நாளும் வந்தது. லிங்கந்- நீதிபதி மோதல் பற்றி ஊர் முழுதும் செய்தி பரவியதால் ஒரு பெரும் கூட்டம் அங்கே திரண்டுவிட்டது.

 

முதலில் நீதிபதி தனது குதிரையைக் கொண்டுவந்தார் கூட்டத்தில் பயங்கரமான சிரிப்பொலி. ஏனெனில் குதிரை தெனாலி ராமன் குதிரையைவிட மோசம். எலும்பும் தோலுமாக இருந்தது. பார்க்கவே அருவருப்பு. அதுமட்டுமல்ல, கண் தெரியாத குருடு. நடக்கவும் சக்தி இல்லை. அந்த சிரிப்பொலி அடங்குவதற்குள் ஆப்ரஹாம் லிங்கன் குதிரையில் வேகமாக உள்ளே நுழைந்தார். அவருடைய தோள் மீது சா ஹார்ஸ் – எனப்படும் கருவி இருந்தது. தச்சர்கள் மரங்களை அறுக்க இந்த மரச் சட்டத்தைப் பயன்படுத்துவர். அதன் பெயர் ஆங்கிலத்தில் தச்சர் குதிரை என்பதாகும்; அதாவது உண்மையான குதிரை அல்ல, ஆனால் ஒரு கருவி. இதைப் பார்த்டவுடன் கூட்டத்தில் ஆரவாரக் கூச்சல் விண்ணைப் பிளந்தது.

 

இருவரும் குதிரைகளை மாற்றுப் போட்டுக்கொண்டனர்.

 

லிங்கன் சொன்னார்: ” என் வாழ்நாளில் குதிரை வியாபாரத்தில் மிக மோசமான குதிரையை வாங்குவது இதுதான் முதல் தடவை.”

icewagon43

குதிரையாக  மாறிய மனிதன்!

 

‘மோ’ என்பவரும் ‘அபி’ என்பவரும் இணைபிரியாத் தோழர்கள்; வாழ்நாள் முழுதும் ஒன்றாகவே இருப்பர். ஒருநாள் ரோட்டில் நடந்துகொண்டே, பேசிக்கொண்டிருக்கையில், “நமக்கோ வயதாகிவிட்டது. யாராவது ஒருவர் இறந்தால் என்ன செய்வது?” என்று கேட்டுக் கொண்டனர்.

 

“சரி, யார் முதலில் இறக்கிறார்களோ அவர், மற்றவரை எப்படியாவது தொடர்பு கொள்ளவேண்டும்” — என்று ஒப்பந்தம் செய்தனர். ஓராண்டு கழிந்தது. அபி இறந்துவிட்டார். ‘மோ’வுக்கு தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் கூட மறந்து போனது.

 

ஒருநாள் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தார்.”மோ, மோ” என்று தனது பெயரைச் சொல்லி யாரோ அழைத்தனர். மோ சுற்றிச் சுற்றிப் பார்த்தார். யாரும் காணவில்லை. ஒஹோ, நமக்கு ஏதோ களைப்பு; அதனால் யாரோ கூப்பிட்டதாக பிரமை ஏற்பட்டது என்று நினைத்துக் கொண்டே நடந்து போனார்.

 

மீண்டும் “மோ, மோ” என்று அவரைப் பெயர் சொல்லி யாரோ அழைத்தனர். பக்கத்தில் ஒரு ஐஸ்க்ரீம் வண்டியை குதிரை இழுத்துவந்தது. இது என்னடா மனிதர்களே இல்லை. குதிரை பேசுமா என்று உற்று நோக்கினார்.

ice-man-Calyo

உடனே குதிரை சொன்னது:–

“மோ, நாந்தான் அபி; உன் நண்பன். இப்போது குதிரையாகப் பிறந்துவிட்டேன்”.

 

மோ:– அடக் கடவுளே! நம்பவே முடியவில்லை, அபி. நீ எப்படி இருக்கிறய்; இந்த குதிரைப் பிறப்பில் வாழ்க்கை நிம்மதியாக , மகிழ்ச்சியாக இருக்கிறதா?

 

அபி: — அதை ஏன் கேட்கிறாய்? ஒரே துயரம்தான். கனமான ஐஸ் வண்டியை இழுக்கிறேன். இந்தப் பாவிப்பயல் — ஐஸ்வண்டி சொந்தக்காரன் — என்னை காலை முதல் மாலை வரை ஓய்வே தராமல் வேலை வாங்குகிறான். தண்ணீரோ உணவோ சரியாகத் தருவதில்லை.

 

 

மோ:– அப்படியா? இது என்ன கொடுமை? நான் அவனிடம் பேசி உனக்கு எல்லாச் சலுகைகளையும் வாங்கித் தருகிறேன்.

 

அபி:– ஐயய்யோ! வேண்டவே வேண்டாம். நன் உன் கூட பேசியது தெரிந்தால், அதையும் வைத்து காசுபெறப் பார்ப்பான் இந்தப் பாவிப்பயல். அது மட்டுமல்ல. என்னை “ஐஸ், ஐஸ் வாங்கலியோ, ஐஸ்” என்று கத்தவும் செய்துவிடுவான்.

 

மோ: கடவுள்தான் உன்னைக் காப்பாற்றவேண்டும்; நான் போய்விட்டு வருகிறேன்.

 

(அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஐஸ் வியாபாரம் குதிரை வண்டி மூலமே நடைபெற்றது).

 

–SUBAHAM–