Written by London Swaminathan
Date: 18 NOVEMBER 2017
Time uploaded in London- 15-22
Post No. 4408
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன் றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதை காணலாம். ஆகவே மனு நீதி எனப்படும் மானவ தர்ம சாஸ்திரத்தை ஒவ்வொருவரும் படித்து சரியான முடிவுக்கு வரலாம். நானும் எனது கருத்துக்களை ஆங்காங்கே உதிர்க்கிறேன்.
அம்பேத்கர் போன்றோர் கோபத்தில் எரித்த நூல் இது. ஆனால் காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர். மனு சொல்லும் விஷயங்களும் அவருடைய அணுகு முறையும் உலகம் வியக்கும் ஒரு புதுமையாகும். முழுக்கப் படித்த பின்னரே இதை எடை போட வேண்டும் என்பது என் கருத்து.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு
என் னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
இதில் சொல்லப்படும் விஷயங்கள்
முதல் அத்தியாயம்
1.சுவாயம்பு மனு மனதை ஒருமுகப் படுத்தி பிரம்ம நிஷ்டையில் இருக்கி றார். அப்போது ரிஷி முனிவர்கள் அவரிடம் வந்து, அவரைப் பூஜித்து, அவர் சொல்லப்போகும் விஷயம் என்ன வென்று கேட்கின்றனர்.
2.தெய்வீக புருஷரே! நான்கு வர்ணத்தாருடைய, மற்றும் இடைப்பட்ட ஜாதிகளுடைய தருமங்களை முறையாக வரிசையாக எங்களுக்குச் சொல்ல வேண்டும்.
விளக்கம்: 4 வர்ணம்- பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர்
இடைப்பட்ட சங்கர ஜாதிகள்-அநுலோமன், பிரதிலோமன், அந்தராளன், விராத்தியன்
தெய்வீக புருஷர்- பரிபூரணமான ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகியவற்றை இயல்பாக உடையவர்.
3.உங்களுக்கு மட்டுமே சகல வேதத்தின் உண்மையும் தெரியும். அளவிடமுடியாத, சாஸ்திரம், அறியாதவர்களால் அறியப்படாத உண்மையை அறிந்தவர் நீர் ஒருவரே. யாகாதி கர்மங்களையும், ஆத்ம ஞானத்தையும், அக்னிஷ்டோமம் முதலிய கர்மங்களின் பலனையும் அறிந்தவர் நீர் ஒருவரே.
4.பெரிய, உயர்ந்த மஹரிஷிகளின் சந்தேகங்களையும் தெளிவிக்கத்தக்க ஞான தேஜஸ் உடைய அந்த மநுப் பிரஜாபதியானவர், இப்படிக்கேட்ட ரிஷிகளைப் பூஜித்து இதோ கேளுங்கள் என்று சொல்லத் தொடங்கினார்.
5.பிரளய காலம் பற்றி முதலில் சொல்லத் தொடங்கினார். இந்த உலகமானது முதலில் மூலப் பிரக்ருதியில் ஐக்கியமாய், இருளில் மறைந்த பொருள் போல கண்ணுக்குத் தோன்றாததாகவும், அடையாளமில்லாததாகவும், சப்தத்தால் அறிய முடியாததாகவும், தர்க்க நூல் அறிவு கொண்டு ஊகிக்க முடியாததாகவும் , உறங்கினது போல இருந்தது.
6.பிரளய காலம் முடிந்த பின்னர், நம்மைப் போல கர்ம வினையினால் பிறக்காமல், தன்னிச்சையால் தோன்றும் ஸ்வயம்புவான (தான் தோன்றி) கடவுளானவர் ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் பிரகாசிக்கச் செய்பவராய் தோன்றினார். அவரை புற இந்திரியங்களால் அறிய முடியாது; ஒருவராலும் தடுக்க முடியாத சக்தி உடையவர் அவர்.
7.ஐம்புலன்களால் அறிய முடியாதவர்; மனத்தினால் மட்டும் அறியத்தக்கவர், உருவமில்லாதவர்; சிந்திக்கமுடியாத மஹிமை உடையவர் பிறப்பு-இறப்பில் லாதவர், சகல வேத புராணங்களினால் பிரசித்தமானவர், தாமாகவே பிரகாசித்தார்.
8.அந்த பரமாத்மாவானவர் எல்லா உயிர் இனங்களுக்கும் உறைவிடமான தன் உடலில் இருந்து பல்வேறு உயிர்களைத் தோற்றுவிக்க எண்ணினார். முதலில் தண்ணீரைப் படைத்தார். அதில் சக்தி ரூபமான விதையை விதைத்தார்.
9.அந்த விதையானது இறைவனின் இச்சையினால் தங்க நிறமான முட்டையாக மாறியது. அதில் பிரம்மனைப் படைத்து அவருக்குள் நுழைந்தார்; அந்தப் பிரம்மனுக்கு பிதாமகன் என்று பெயர்.
- அந்த நீரானது நரன் என்ற பெயருடைய இறைவனால் படைக்கப்பட்டதால் நார என்கிற பெயரைப் பெற்றது. அந்த நாரம் என்கிற பெயரை உடைய நீரில் வசிப்பதால் நாராயண என்று பெயர் பெற்றது (நார+ அயன) நார=நீர், அயன= வீடு
என் கருத்து
முதல் பத்து ஸ்லோகங்களில் BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்சத் தோற்றம் பேசப்படுகிறது.
மேலும் நீரின்றி அமையாது உயிரினம் என்ற விஞ்ஞானக் கருத்தும் பேசப்படுகிறது
கிரேக்கர்கள் முதலியோர் நம்மிடமிருந்து கடன் வாங்கிய ‘பஞ்ச பூதம்’, முதல் பத்து ஸ்லோககங்களில் உள்ளது
பிரபஞ்சம், உலகம் எல்லாம் கோள வடிவில் (Globular, round), முட்டை வடிவில், உருண்டை வடிவில் இருப்பதை கண்டு பிடித்ததும் இந்துக்களே. அந்தக் கருத்தும் இங்கே இருக்கிறது. இதற்கு முன்னர் பிராமண நூல்களிலும் வேதத்திலும் உள்ளது.
முதல் பத்து ஸ்லோகங்களிலேயே அறிவியல் உண்மைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல. மொழி இயல் உண்மை ஒன்றுமுளது. நீர் என்னும் தமிழ்ச் சொல், ரிக் வேதத்தில் இருப்பதாக சுநீத் குமார் சாட்டர்ஜி போன்ற அறிஞர்களும் ஏமாந்துபோயினர். ஆனால் நீரெய்ட்ஸ் (Nereids = Water Nymphs) கிரேக்க மொழியில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு சொல் கிரேக்க மொழியில் இருந்தால் அது சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை மொழி இயல் அறிஞர்கள் ஒப்புக்கொள்வர். ஆனால் அதுவும் தவறு என்பதைது என் ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன். கிரேக்க மொழியில் 30, 40 பழைய தமிழ்ச் சொற்கள் இருப்பதைப் பட்டியலிட்டுள்ளேன். உண்மை என்னவென்றால், உலகம் முழுதும் நம்மவர் நாகரிகத்தைப் பரப்பியபோது இவைகளும் அங்கே சென்றன. ஆக மூல மொழி சம்ஸ்கிருதம்-தமிழுக்கும் முந்திய மூல மொழி ஆகும்.
TAGS:– மனு நீதி, மனு ஸ்மிருதி, அர்த்தம், ஸ்லோகம், பிரபஞ்ச உற்பத்தி
॥ मनुस्मृति अथवा मानवधर्मशास्त्रम् ॥
अध्याय १
मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।
प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ Bछ्.Sछ्॥
भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।
अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ Bछ्.Sछ्॥
त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयंभुवः ।
अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ Bछ्.Sछ्॥
स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।
प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ Bछ्.Sछ्॥
आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।
अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ Bछ्.Sछ्॥
ततः स्वयंभूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।
महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ Bछ्.Sछ्॥
योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।
सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥
सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।
अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ Bछ्.Sछ्॥
तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।
तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ Bछ्.Sछ्॥
आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ Bछ्.Sछ्
CHAPTER I.
- The great sages approached Manu, who was seated with a collected mind, and, having duly worshipped him, spoke as follows:
- ‘Deign, divine one, to declare to us precisely and in due order the sacred laws of each of the (four chief) castes (varna) and of the intermediate ones.
- ‘For thou, O Lord, alone knowest the purport, (i.e.) the rites, and the knowledge of the soul, (taught) in this whole ordinance of the Self-existent (Svayambhu), which is unknowable and unfathomable.’
- He, whose power is measureless, being thus asked by the high-minded great sages, duly honoured them, and answered, ‘Listen!’
- This (universe) existed in the shape of Darkness, unperceived, destitute of distinctive marks, unattainable by reasoning, unknowable, wholly immersed, as it were, in deep sleep.
- Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.
- He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).
- He, desiring to produce beings of many kinds from his own body, first with a thought created the waters, and placed his seed in them.
- That (seed) became a golden egg, in brilliancy equal to the sun; in that (egg) he himself was born as Brahman, the progenitor of the whole world.
- The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana.
-தொடரும்
You must be logged in to post a comment.