நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் பேரரசனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு அவனுடைய ஆதிக்கம் இரு கடல் எல்லையைத் தொடும் அளவு பரவியிருந்ததாகவும் கவுதமி புத்ர சதகர்ணியின் ஆட்சி முக்கடல் இடைப்பட்ட பகுதி முழுதும் நிலவியதாகவும் கல்வெட்டுகள் கூறும்.

பராந்தக வீரநாராயண ப ண்டியனின் தளவாய்புரம் செப்பேடு:

“ஹரிச்சந்திரன் நகரழித்தவன் பரிச்சந்தம் பல கவர்ந்தும்

நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன்னியதி நல்கி

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடாயிரம் வழங்கியும்”

என்று கூறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டு செப்பேடு.இன்னும் பல நூல்களிலும் இவ்வாறு ஒரே நாளில் 4 கடல் நீறைக் கொண்டுவந்து குளித்ததாகவும் முக்கடல் நீரில் நீராடியதாகவும் படிக்கிறோம். ஏன் இப்படிச் செய்தார்கள் ,இப்படிச் செய்ய முடியுமா? என்ற சுவையான விஷயத்தை ஆராய்வோம்.

இது உண்மைதான். ஆனால் தினமும் அவர்கள் இப்படிக் குளித்தார்களா என்பதைச் சொல்லமுடியாது. இப்போதும் கூட பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும், பெரிய சந்யாசிகள், குருமார்கள் பிறந்ததின வைபவங்களுக்கும் பல புண்ய தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.நாம் கூட வீடுகளில் கங்கை நீரை அவ்வப்போது பயன்படுத்துகிறோம்.

மன்னர்கள் இப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தங்களுடைய ஆட்சி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்திப் பெருமைப் பட இது உதவியது 2. கடல் நீராடல் புனிதம் என்பது புராண இதிஹாசங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.

பல்யானை செல்கெழு குட்டுவன் யானைகளை வரிசையாக நிறுத்தி அவைகளின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நீராடினான் என்று பதிற்றுப் பத்து (3ஆம் பத்து) பதிகம் கூறுகிறது.. போர்ப் படைகள் பல பெரிய நதிகளைக் கடக்க அந்தக் காலத்தில் யானைகள வரிசையாக நிறுத்தி அதன் மீது சென்றனர். இதை காளிதாசனும் (ரகு. 4-38, 16-33) கூறுவான். அலெக்சாண்டரும் இப்படிச் செய்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூர் கோவில் தீபாராதனை நடந்த பின்னர்தான் சாப்பிடுவானாம். தீபாராதனை முடிந்ததை அறிய அவன் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை நிறைய மணிக் கூண்டு கோபுரங்களை நிறுவினான். கோவில் மணி அடித்தவுடன் ஒவ்வொரு மணிக் கூண்டாக ஒலிக்கும். ஒரு மணிக்குண்டு ஒலியைக் கேட்டவுடன் அடுத்த மணியை தொலை தூரத்திலுள்ளவன் கேட்டு மணி அடிப்பான். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஓசை வந்தவுடன் கட்டபொம்மன் சாப்பிடுவான். இந்த மணிக்கூண்டுகளின் மிச்ச சொச்ச இடிபாடுகள் இப்பொதும் இருக்கின்றன.

மாயா இன மக்கள்

தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 3000 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாயா இன மக்களும் செய்திகளை அனுப்ப வேகமாக ஓடுபவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். மாயா இன மக்களுக்கு சக்கரம் பயன்படுத்தத் தெரியாததால் ஓட்டப் பந்தய வீரர்களை வைத்தே பல காரியங்களைச் சாதித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்போட்டியும் ஒரு வீரன் 26 மைல் ஓடிவந்து செய்தியைக் கொடுத்துவிட்டு இறந்துபோனதன் நினைவாகவே நடைபெறுகிறது. அவன் கிரேக்க வீரன்.

ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் இதன் பெருமையையும் அருமையையும் நாம் அறியலாம்:

மாரத்தன் ஓட்டம் (26 மைல்)- சுமார் 2 மணி நேரம் ஆகும்

ஒரு மணிக்கு 13 மைல் ஓடலாம்

10 மணி நேரத்தில் 130 மைல் ஓடலாம் (ஒரே ஆள் இப்படி ஓட முடியாது. மிகவும் தேர்ச்சி பெற்ற 10 ஓட்டக்காரர்களை அமர்த்தி ரிலே ரேஸ் ஓடச் செய்வார்கள் பழைய கால மன்னர்கள் ).

தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட கரூர், உறையூர், மதுரை ஆகியன இரண்டு கடல்களிலிருந்தும் 150 மைல்களுக்குள்ளாகவே இருந்தன. ஒருவர் காலை ஆறு மணிக்கு கடல் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஓடினால காலை 11 மணிக்கு 65 மைல் வந்து விடலாம். இதுவே குதிரையில் வந்தால் மூன்று மணி நேரத்தில் 75 மைல் வந்து விடலாம். ஆக காலை 6 மணிக்கு குதிரை வீரர்கள் கடல் நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் காலை பத்து மணிக்குள் 100 மைல் வந்துவிடலாம். இதிலும் ஒரே குதிரையில் செல்லாமல் ரிலே ரேஸ் போல குதிரைகளை மாற்றினால் இன்னும் வேகமாக வரலாம். மதுரை பாண்டிய மன்னன் தளவாய்புரம் செப்பேட்டில் கூறியபடி நீராடலாம். நாலாவது கடல் என்று கூறுவது எது என்று தெரியவில்லை. ஒருவேளை வட திசையிலிருந்து வரும் நீராக இருக்கலாம்.

தமிழ்நாட்டுக் கோவிலகளுக்கு இன்றும் கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை ஜலம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. கன்யாகுமரி ஜில்லாவில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் இந்துக்கள் 12 சிவாலயங்களில் தரிசினம் செய்ய சுமார் 50 மைல்கள் சிவாலய ஓட்டம் ஓடுவதை இப்போதும் காணலாம்.ஆக புனித நீர், ஓட்டம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

காஞ்சி முதல் குமரி வரை புறா ரேஸ் வைத்தபோது அந்த தூரத்தை புறா 13 மணி நேரத்தில் கடந்துவிட்டது. ஆக தண்ணிரை இந்தக் காலம் போல பாலிதீன் பைகளில் அடைத்தால் புறாக்கள் கூட இன்னும் வேகமாகக் கொண்டுவந்து விடும்!!

***********

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2

The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

எழுதியவர் எஸ். நாகராஜன்

25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!

ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய இதிஹாஸமாகும்.

கீதையே என் ஹ்ருதயம்

இதன் உயிர்நாடியான பகவத்கீதை (அர்ஜுனா!கீதை என் ஹ்ருதயம்!கீதையே நான் விரும்பும் சாரம் – மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.

“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்” (பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)

புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.

மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!

நளாயனியே திரௌபதி

நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்

ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.

ஹிரண்யகசிபுவே சிசுபாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன்  சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்டகேதுவாகவும் பிறக்கின்றனர்.அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.

பீஷ்மரே அஷ்டவஸ¤க்களில் கடைசி வஸ¤

அஷ்டவஸ¤க்கள்  வஸிஷ்டருடைய சாபத்தாலும் இந்திரனுடைய கட்டளையினாலும் சந்தனு ராஜாவுக்கு கங்கா தேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர்.அவர்களில் கடைசி வஸ¤வே பீஷ்மர்!ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியர்.துவாபர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!ஸப்த மருத்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே

பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே!ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான்.அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.கலியின் அம்சம் கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர்ஜென்ம விவரங்களை ஆதிபர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கிவிடலாம்!

இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஒன்றான மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

காந்திஜி போற்றிய புனர்ஜென்மக் கொள்கை

இதனாலெல்லாம் கவரப்பட்டுத் தான் மஹாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் மஹாபாரதத்தைப் போற்றியதோடு சுதந்திரம் பெற இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது தவிர பதினெட்டு புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் நம்மை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தும்.அவற்றையும் மஹாத்மா காந்தி டால்ஸ்டாய்க்கு இது பற்றி கடிதம் எழுத நேரிட்ட சம்பவத்தையும் இனி பார்ப்போம்!

************************

Hindu Runners !

Ancient Hindu kings gave much importance to holy rivers and seas. They believed that immersing themselves in holy rivers or ponds or seas would wash away their sins. They visited them on auspicious days and bathed there with their family members. We have lots of references to such holy dips in Tamil and Sanskrit literature. Tamil kings visited the Himalayas and on their way they bathed in the holy Ganges. Seran Senguttuvan did this twice two thousand years ago. He brought a stone from the Himalayas and baythedit in the Ganga water and sculpted a statue for a chaste woman called Kannaki.

On special occasions like Coronation of a king or consecration ceremony of a temple or  a Pattabishekam of a head of a Mutt they brought holy river waters from different parts of the country. Some people have even boasted of getting waters from 108 holy rivers and four seas for such ceremonies. The great Gupata king Samudra Gupta boasts that his rule extended to both the seas. It was true he had access to the Bay of Bengal and the Arabian Sea. But Tamils kings are more specific about bathing. They said in the copper plates that they bathed in the waters of four seas on a single day. How is it possible?

Mayan Runners

Mayans in the Central America did not know the wheels. They had no carts. (They used wheels only in Children’s toys). So they used fast runners for different purposes for sending messages or medicines etc. They have even shown such runners in their paintings. They ran very fast like the Marathon runners.

A Cheran king  Palyanai Selkezu Kuttuvan, who ruled Kerala 2000 years ago,  made elephants to stand in a row to bring waters from the three seas, says Sangam Tamil book Pathtru Pathu.  Another king Veerapandiya Kattabomman who lived just 250 years ago built Bell Towers to ring the bell as soon as the main Arti was done in his favourite Skanda Temple at Tiruchendur. When the temple bell rang for the morning Deepa Aradhana (Arti), the bells in the towers rang in succession. They were located at a distance of a furlong or so. Even today we can see the remnants of those towers. He was so devoted to God.

How did they do it?

Dalawaipuram Copper plates  of Paranthaka Veera Narayanan of ninth century CE say that the Pandya king bathed in the waters of Four Seas on the same day. Many other Tamil kings also said the same thing. Gauthami Putra Sathkarni’s rule extended to the three seas.

A Marathon runner can run 13 miles per hour. So if the Pandya king hired relay runners each one can run 13 miles easily and pass the message or the product to another person. If he used horse riders each rider could have covered approximately 25 miles per hour. The holy waters from different seas would have reached his capital city Madurai  in four to six hours. The three great kings of Tamil Nadu Chera, Choza, Pandya had their respective capitals in Vanji (Karur), Uraiyur and Madurai. All these cities are within 150 miles from the three seas (Bay of Bengal , Arabian sea and Indian ocean). More over in Kanyakumari, India’s southern most town, all the three seas meet and people thronged this place for holy dips from time immemorial.

In Kanyakumari  district there are 12 important Shiva temples. On Shivratri day every year, thousands of devoted Hindus run 50 miles and cover all the temples at one go. They were given all facilities all along the route. They chant Govinda while running. This strengthens the unity between the followers of Shiva and Vishnu. There is a story behind this ritual linking Mahabharata and Purusha Mrugam.

Even today, Hindus bring Ganges waters in pots and use it on special religious occasions. Several temples in Tamil Nadu receive Ganges water in trucks on regular basis. Hindus believe that they have to visit Varanasi at least once in a life time and bring the holy Ganges water to Rameswaram in Tamil Nadu and bathe the Shivaling with it. Such beliefs give not only mental satisfaction, but also generate a good income to tourist industry.

 

***************

 

மறுபிறப்பு உண்மையா ?- Part 1

புனர்ஜென்ம உண்மைகள்! – 1

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

ஹிந்துமதத்தின் அடிநாதமான உண்மை: மறுபிறப்பு!

Written by S. Nagarajan

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்தவம்,இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் ஹிந்துமதத்திற்கும் உள்ள  அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம்.

மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது, அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது ஹிந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு; அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.

தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவி தான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர்  நீண்ட ஆயுளுடன் இருக்க,  பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும், ஒருவர் ஏன் செல்வந்தராகவும் இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

ஆனால் பிளேட்டோ,பித்தகோரஸ்,லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் •ப்ராங்க்ளின்,எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ,ஹென்றி•போர்டு, சி.ஜே.ஜங் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னிபெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து

‘ரீ இன்கார்னேஷன்’ என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்க¨லைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மை தான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்!

மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.

இதிஹாஸ, புராணங்கள் கூற்று!

ஹிந்து மத இதிஹாஸங்களான ராமாயணம், மஹாபாரதம் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை; பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களோ நுணுகிப் படித்து உண்மை உணரவேண்டியவை!

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்!

சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, “முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ!ஆகவே தான் கொடுமை கொண்டு  மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது” (கீத்ருஸம் து மயா பாபம் புரா ஜன்மாந்தரே க்ருதம்I யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸ¤தாருணம்II 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்!

சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும் போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன் சீதையைக் கொடுமைப் படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்:”அவர்கள் வெறும் ஊழியர்கள் தான்!அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்!நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவு தான்!” என்று திட்டவட்டமாகக் கூறுகிறாள்! (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம்,39ம் சுலோகம்)

சீதையின் முன் ஜென்மம் தான் என்ன? இதற்கு உத்தரகாண்டத்தில் 17ம் அத்தியாயத்தில் 44 சுலோகங்களில் விடையைக் காண்கிறோம்;வியக்கிறோம்!

சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இது தான்:-

ஒரு முறை ராவணன் பூமியைச் சுற்றி வரும் போது ஹிமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான் காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ,  பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், தன் பெயர் வேதவதி என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும்,தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும்,இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும்,இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும் அதன்பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, “நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல  முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும்.ஆகவே அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன்” என்று கூறி அக்னியில் புகுந்தாள்.

பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான்.அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, “இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள்” என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான்.கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள்.அங்கு ஜனக மஹாராஜன் உழும் போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள்.

உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள்.

கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின்

முற்பிறப்பு ரகசியம் பற்றிய அழகிய பெரிய கதையின் சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராமபட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தரகாண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும் ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை)

உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்! சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை; படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இனி அடுத்து மஹாபாரதத்தைப் பார்க்கலாம்!

(இந்தக் கட்டுரையை எழுதியவர் என் சகோதரர் எஸ். நாகராஜன்)

யானை பற்றிய நூறு பழமொழிகள்

Guruvayur’s famous Valiya Kesavan elephant

 

20 000 Tamil Proverbs என்று ஆங்கிலத்திலும் 20000 தமிழ் பழமொழிகள என்ற எனது இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் ஒரு கடல், சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்

மேற்கூறிய கட்டுரையில் கூறியது போலவே தமிழ் மொழி மிகவும் வளமான ஒரு மொழி. உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் பழமையான சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் 20,000 க்கும் மேலாக இருந்தபோதிலும் அவை தனிப்பாடல்கள், நீதி நெறி புகட்டும் குறள் பாக்கள் என்ற வகையில் சேர்ந்துவிடும்.

இதோ யானை பற்றிய நூறு பழமொழிகள். பாமர மனிதன் ஆனை என்றே சொல்லுவான். யானை என்பது எழுத்து வழக்கு-இலக்கிய வழக்கு

 

Punnathurkotta elephant camp with 64 elephants

1. யானை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே

2. யானைக்கும் கூட அடி சறுக்கும்

3. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல

4. யானையைப் பார்த்து நாய் குரைத்த மாதிரி

5 .யானை உண்ட விளங்கனி

6. யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்

7. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

8. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல

9. யானை முதல் எறும்பு வரை

10. ரத கஜ துரக பதாதி உடன் வந்தான் மன்னன்

11. யானைப் பல் காண்பான் பகல் (பழமொழி)

12. யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும்

13. ஆனைக்கும் பானைக்கும் சரி

14. ஆனக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்

15.யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட கதைதான்

16. யானைப் பசிக்கு சோளப் பொறி

17. யானை கண்ட பிறவிக்குருடர்கள் அடித்துக்கொண்டதுபோல

18. ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்

19. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்

20. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?

Elephant playing drums

21. ஆனையிருந்து அரசாண்டவிடத்திலே பூனையிருந்து புலம்பியழுகிறது

22. ஆனை இலைக் கறி, பூனை பொறிக்கறி

23. ஆனை உயரம் பூனை ஆகுமா?

24. ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவது போல

25. ஆனை ஏறியும் சந்து வழி நுழைவானேன்?

26. ஆனை ஒரு குட்டி போட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை

27. ஆனை கட்டத் தாள், வான முட்டப்போர்

28. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன் ஓட்டை கறுத்தால் உதவி என்ன?

29. ஆனை காணாமற் போனால் அரிக்கன் சட்டி குண்டு சட்டிகளில் தேடுவதா?

30. ஆனை குட்டி போடும் என்று நம்பி லத்தி போட்டது போல

31. ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?

32. ஆனை குத்தும் தோட்டிக்குப் பிணக்கா?

33. ஆனை கேடு அரசு கேடு உண்டோ?

34. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக் குட்டி கேட்கிறதா?

35. ஆனை கொடிற்றில் அடங்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

36. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா?

37. ஆனைக் கவடும் பூனைத் திருடும்

38. ஆனைக்கிட்டுக் கெட்டவன் குடத்தில் கையிட்டாற்போல

39. ஆனைக்கில்லை கானலும் மழையும்

40. ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்

Surin City, Thailand

41. ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல

42. ஆனைக்கு சிட்டுக் குருவி மத்தியஸ்தம் போனாற்போல

43. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா?

44. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்

45. ஆனைக்குத் தேரை இட்டது போல

46. ஆனைக்குத் தேரை ஊனா?

47. ஆனைக்குமுண்டு அவ கேடு

48. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பை கண்டால் பயம்

49. ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையா?

50. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்தாற்போல

51. ஆனைச் சவாரி செய்தவன் பூனைச் சவாரிக்கு அஞ்சுவானா?

52. ஆனை தழுவிய கையால் பூனையைத் தழுவுறதா?

53. ஆனை தன்னைக் கட்ட சங்கிலியைத் தன் கையாலேயே கொடுத்தது போல

54. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது

55. ஆனை நிழல் பார்க்க தவளை அழித்தாற்போல

56. ஆனை படுத்தால் ஆட்டுக் குட்டிக்குத் தாழுமா?

57. ஆனை படுத்தால் ஆள் மட்டம்

58. ஆனை படுத்தால் குதிரை மட்டமாவது இராதா?

59. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?

60. ஆனை புலி வந்தாலும் தாண்டுவாள்

Famous elephant Echo

61. ஆனை போகிற வழியில் எறும்பு தாரை விட்டாற் போல

62. ஆனை போகிற வழியில் போன வீதியில் ஆட்டுக் குட்டி போகிறது வருத்தமா?

63. ஆனை மதத்தால் (கொழுத்தால்) வாழைத் தண்டு, ஆண்பிள்ளை மதத்தால் கீரைத் தண்டு

64. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?

65. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

66. ஆனை மேல ஏறுவேன் வீர மணி கட்டுவேன்

67. ஆனை மேல இடும் பாரத்தைப் பூனை மேல இடலாமா?

68. ஆனை மேல இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்

69. ஆனை மேல போகிறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டா அகப்படுமா?

70. ஆனை மேல போகிறவனையும் பானையோட தின்றான் என்கிறது

71. ஆனையும் அருகம் புல்லினால் தடைப் படும்

72. ஆனையும் ஆனையும் முட்டும் போது இடையில் அகப்பட்ட கொசுகு போல

73. ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன

74. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?

75. ஆனையைக் கட்டி சுளகாலே மறைப்பாள்

76. ஆனையைக் குத்தி சுளகாலே மூடுவாள்

77. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?

78. ஆனையைத் தண்ணீரில் இழுக்கும் முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?

79. ஆனையைத் தேட பூதக் கண்ணாடி வேண்டுமா?

Kenya’s famous elephant

80. ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் (பானையில்) அடைப்பதும், அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்

81. ஆனையை வித்துவானுகும் பூனையைக் குறவனுக்கும் கொடு

82. ஆனையை விற்றா பூனைக்கு பரிகாரம் (வைத்தியம்) செய்யறது?

83. ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான்

84. ஆனை லத்தி ஆனை ஆகுமா?

85. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது

86. ஆனை வாயில போன கரும்பு போல

87. ஆனை வால் பிடித்து கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்து கரை ஏற முடியுமா?

88. ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி

89. ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்

90. ஆனை விழுந்தால் கொம்பு ,புலி விழுந்தால் தோல்

91. ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தில்

92 .யானை தொட்டாலும் மரணம் வரும்

93. யானை முன்னே முயல் முக்கினது போல

94. யானை வந்தால் ஏறுவேன், சப்பாணி வந்தால் நகருவேன்

95. யானை வாய்க் கரும்பும், பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்பி வாரா

96. யானை விற்றால் யானை லாபம், பானை விற்றால் பானை லாபம்

97. யானைக்கு சிம்ம சொப்பனம் போல

98. பன்றிக் குட்டி யானை ஆகுமா?

99 .மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை

100. யானையால் யானை யாத்தற்று

101. சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு வேழமுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து

102.வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்

103. வேழத்தை ஒத்த வினைவந்தால் தீர்வது எப்படி?

104.வேழம் முழங்கினாற் போல

 

இவை ஒவ்வொன்று பற்றியும் ஒரு கதையும் ஆய்வுக் கட்டுரையும் எழுதலாம். அவ்வளவு பொருள் பொதிந்த பழ மொழிகள்.

 

Sri Lanka Elephants

 

Pictures of Sahasralinga in Karnataka, Cambodia

These pictures are taken from other websites.Thanks. Please use these along with the English and Tamil versions of the following articles posted in my blogs:

“The Mysterious Link between Karanataka  and Cambodia“.  Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam.

Above two pictures are from Karnataka Sahasralinga near Sirsi

 

 

 

 

Above pictures are from Cambodia Sahasralinga

Sahasralinga at Parasurameswara temple, Bhuvaneswar

சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசிய தொடர்பு

Sahasralinga in Kanataka

(English version of this article is already posted under “The Mysterious Link between Karanataka “. Related subjects “Cambodia and Indus Goddess: Karnataka-Cambodia Link” and Pandya King Who Ruled Vietnam).

இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.

கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து  17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.

இயற்கை எழில் சிந்தும் இந்த இடத்தைச் சுற்றி பச்சைப் பசேல் என்று மரங்களும் சல சல என்று ஓடும் நதியும் மனதுக்கு இதம் அளிக்கும். ஆற்று நீரோட்டதுக்கு இடையே இருக்கும் பாறைகளில் லிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காட்சி தரும்.

இந்தியாவில் இப்படி ஒரு மகானுக்கு யோசனை வந்து இதை நிறுவியதே ஆச்சரியமான விஷயம். இதையே கம்போடியாவின் காட்டுக்குள் ஓடும் நதியில் யார் செய்தார்கள் என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது! கம்போடியாவிலும் இதை சஹஸ்ரலிங்கம் என்ற சம்ஸ்கிருத பெயரிலேயே இன்று வரை அழைக்கின்றனர்.

கம்போடியாவின் உலகப் புகழ் கோவில் அங்கோர்வட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் கபல் சியான் என்னும் ஊர் இருக்கிறது.அங்கே ஓடும் ஆற்றுக்கு இடையேயும் சஹஸ்ரலிங்கம் செதுக்கப்பட்டுள்ளன. அங்கே மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் லெட்சுமி, விஷ்ணு, ராமர், அனுமார், சிவன் ஆகிய உருவங்களையும் செதுக்கி இருக்கிறார்கள். இதையும், சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் காண நிறைய பயணிகள் வருகிறார்கள். அவர்கள் சபரிமலை போல காடு மேடுகளக் கடந்து வந்துதான் பார்க்கவேண்டும்.

Kbal Spean in Cambodia

கபால் சியான் என்றால் பாலம் என்று பொருள். இயற்கையாகவே அமைந்த கல் பாலம் வழியாக இந்த சஹஸ்ரலிங்க தலத்தை அடைய வேண்டும். ஆற்றின் இரு பக்கப் பாறைகளிலும் மிருகங்களின் சிற்பங்களையும் காணலாம். இந்த ஆறு குலன் மலையின் தென் மேற்கு சரிவில் இருக்கிறது. அருமையான ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழும் அருவி மனம் கவரும் ஒரு காட்சியாகும். ஒரு காலத்தில் மன்னர்கள் புனித நீராட இங்கே வருவார்களாம்.

சஹஸ்ரலிங்கம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கோவில்களை 11 ஆவது 13 ஆவது நூற்றாண்டுகளில் கம்போடியாவை ஆண்ட இந்து மன்னர்கள் முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன் உருவாக்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிவலிங்கம் ஆக்க சக்தியின் வடிவம் என்றும் ஆற்றுப் படுகைகளில் சிவலிங்கங்களை நிறுவினால் தானிய விளச்சல் அதிகரிக்கும் என்றும் கம்போடீய மக்கள் நம்புகின்றனர். கம்போடிய நெல் வயல்களைச் செழிக்கச் செய்வதோடு மக்களை புனிதபடுத்தும் என்பது அவர்கள் நம்பிக்கை.

கம்போடியாவில் நீண்ட காலம் நடந்த யுத்தத்தினால் ஏராளமான இந்துச் சின்னங்கள் சின்னா பின்னமாயின. ஆனால் காட்டுக்குள் இருக்கும் சஹஸ்ரலிங்கம் பாதிக்கப்படவில்லை. கம்போடிய சஹஸ்ரலிங்கத்தைக் காண பண்டேய்ஸ்ரீ என்னும் இடத்திலிருந்து 12 கிலோமீட்டர் போகவேண்டும். மலை அடிவாரத்திலிருந்து கரடு முரடான பாதைகள் வழியாக 45 நிமிடம் மேலே ஏறிச் சென்றால் சஹஸ்ரல்ங்கங்களைக் கண்டு களிக்கலாம். மஹாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது பள்ளி கொண்டிருக்கும் காட்சி அற்புதமாக இருக்கிறது. அவருடைய நாபியிலிருந்து எழும் தாமரையில் பிரம்மா காட்சி தருகிறார்.

கர்நாடகத்துக்கோ கம்போடியாவுக்கோ போக முடியாதவர்கள் யூ ட்யூபில் இவைகளக் காணலாம்.கூகுல் செய்தால் போதும் .எனது ஆங்கிலக் கட்டுரையில் இடங்களின் பெயர்கள் இருக்கின்றன.

வட குஜராத்திலும் ஒரு சஹ்ஸ்ரலிங்கம்

வட குஜராத்தில் பதான் நகருக்குப் பக்கத்தில் சஹஸ்ரலிங்க குளம் இருக்கிறது. இதை கி.பி.1084ல் சித்தராஜ் ஜெய்சிங் என்ற மன்னன் கட்டினான். ஆனால் இப்போது 48 தூண்களுடன் கூடிய கோவில் மட்டுமே இருக்கிறது. அதில் பல குட்டி லிங்கங்கள் இருக்கின்றன. முஸ்லீம் படை எடுப்புகளில் பெரும் பகுதிகள் அழிந்துவிட்டன.

இவை தவிர நாடு முழுதும் ஒரே கல்லில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப் பட்ட சஹஸ்ரலிங்கம் சிலைகளும் உண்டு. ஒரிஸ்ஸா மாநில புவனேஸ்வரில் பரசுராமேஸ்வரர் கோவிலில் இருக்கும் சஹஸ்ரலிங்கம்தான் மிகப் பெரியது, அழகானது. இதையும் பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர் என்று கூகுள் செய்தால் கம்ப்யூட்டர் திரைகளிலேயே காணலாம்.

ஹம்பி நகரில் துங்கபத்திரா நதிக்கரையில் 108 லிங்கங்கள் இருக்கின்றன.

 

ஆயிரம் ஏன்?

யஜூர்வேதத்தில் வரும் புருஷசூக்தத்தில் இறைவனை ஆயிரம் கண்கள், ஆயிரம் தலைகள் நிறைந்தவன் என்று போற்றுகின்றனர். ரிக் வேதத்தில் ஆயிரம்கால் மண்டபம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. நாயக்க மன்னர்கள் கட்டிய கோவில்களில் எல்லாம் ஆயிரம் கால் மண்டபங்கள் உண்டு. இறைவன் எங்கும் நிறந்தவன் , கணக்கில் அடங்காதவன் என்பதற்காக இந்துக்கள் சஹஸ்ரநாமம், சஹஸ்ரலிங்கம், சஹஸ்ர கால் மண்டபம் என்று போற்றுவது மரபு.

************

 

Latest News on Ganges water

Towering peaks

Flowering meadows

Raging waterfalls

Rushing rivers

Dark and Mysterious caves

Strange Hot Water Springs

Snow clad mountains

Ethereal beauty

Divine atmosphere

Invisible Holy men along the 1500 mile Ganges river.

A study by the National Environmental Engineering Institute (NEERI) claiming that water in the Ganga has unique “anti-bacterial” properties has put a question mark on at least three important hydro electric projects on the Alaknanda in Uttarakhand. And forced Prime Minister Manmohan Singh to depute an official emissary to explain matters to environmentalist and former IIT professor G D Agrawal — later rechristened as Swami Gyanswaroop Sanand — of the Ganga Seva Abhiyanam who claims that the river will lose these properties if hydro electric projects come up on its upper reaches.

Mahakumbh is held once-in-12-years on the banks of the river Ganga. This largest religious congregation on earth will be held next year -2013.

The NEERI study, commissioned by the Tehri Hydel Development Corporation and submitted last November, has become a key document for the protestors. It states: “The present study confirmed that the uniqueness of the River Bhagirathi/Ganga lay in its sediment content which is more radioactive compared to other river and lake water sediments.

It has bactericidal properties and can cause proliferation of coliphages that reduce and ultimately eliminate coliforms from overlying water column (a Bacteriophage is a virus that infects bacteria and ultimately kills them. Coliphages infects a particular type of bacteria and kills them) Investigations revealed that particulate matters of Alaknanda have identical anti-bacterial property as that of Bhagirathi.”

Holy Shrines on the river

There are more than 6000 temples dotting the hills of Himachal, built with typical Himalayan timbers. You may visit Pancha Prayags, Panch Kedars, Four Dhams, and Five Hot Springs in the Garhwal hills.

Panch Prayags: Deo Prayag, Rudra Prayag, Karna Prayag, Nand Prayag and Vishnu Prayag

Four Dhams: Yamunotri,  Gangotri, Badrinath and Kedarnath

Panch Badris (Vishnu Temples): Badrinath, Pandukeshwar, Adi Badri, Bavishya Badri and Vridha Badri (Ani math)

Panch Kedars: Kedarnath, Madhya Maheswar, Tunganath, Rudranath and Urgam

Hot Water Springs in the snow: Yamunotri (surya kund), Badrinath, Son Prayag, Madhya Maheswar and Tapovan

Ice Lingas, like the Ice Linga of Amarnath Cave (Kashmir), are formed along the Khatling glacier. The main ice linga of the Garhwal hills is located between Gangotri and Kedarnath. (facts collected from the book on Garhwal Hills)

More about Ganges

In his book “Dictionary of Bhagavad Gita”, R J Venkateswaran says:

Jahnavi is another name of Ganges. Tha Ganges is the 39th longest river in the world and the fifteenth longest in Asia with a length of 2506 kilometres. But from the point of sacredness, it is river without a rival. Lord Krishna says in the Gita (10-37), “ of rivers I am the Ganga”. Sankara, the great philosopher, has praised Ganga as a goddess endowed with remarkabl powers. In his prayer to Mother Ganga, he has said that those who drink her holy waters will have gateway to the highest destiny open to them and that death will not dare to come near them. Sankara has described the river as the holy stream, issuing from Lord Hari’s blessed feet, spotlessly pure. And prays to her to destroy his sins and take him across the ocean of worldliness. Sankara paid his tribute as the saviour of the fallen, mother of great hero Bhisma, blessed you in all the three worlds”.

Sri Ramakrishna Paramahamsa was also a staunch believer in the greatness and goodness of the Ganga Master. Sri Ramakrishna used to describe the water of Ganga as Brahmavari,that is Brahman in the form of water.

Mr Venkateswaran continues, “ The Ganga has fascinated not only the sages and savants of India, but also scholars, philosophers and adventurers from all parts of the world. One of the most authoritative books on the river has been written by Dr Stevan G Darian, Professor of Linguistics at Rutgers University, entitled The Ganges in Myth and History. The author says, “From the time of Vishnu Dharma Shastra in the third century AD, Ganga has played a vital role in Hindu ceremony, in rituals of birth and initiation of marriage and death”.

But Ganges is praised in the Rig Veda and all the Hindu scriptures. Kalidasa and Sangam Tamil literature also attest to its holiness. So we can boldly say that the river has been venerated by the Hindus for more than 3000 years.

(Please read the earlier posts “Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature” and “Great Engineers of Ancient India” to know more about the greatness of the Ganges).

 

***********************

 

கண்ணன் வழி , தனி வழி !

Raja Ravi Varma picture: Krishna and Sathyaki in Kaurava court

( நாமும் அனுமார் ஆகலாம் என்ற கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. அனுமார், அவருக்கு வந்த இடையூறுகளை எவ்வாறு களைந்தார் என்பது முதல் பகுதியில் விளக்கப்பட்டது. இதோ கண்ணன் வழி )

சோதனைகள், பிரச்சினைகள், இடையூறுகள் வந்தால் அவைகளைக் கண்ணன் தீர்க்கும் வழி தனி வழி. மகாபாரதக் கதைகளை கேட்டவர்களுக்கு நூற்றுக் கணக்கான உதாரணக் கதைகள் நினைவுக்கு வரும். இது கண்ணன் பற்றிய ஒரு பாகவதக் கதை.

கண்ணனும் சாத்யகியும் இணை பிரியா நண்பர்கள். இருவரும் யாதவ குல திலகங்கள். ஹஸ்தினாபுரத்துக்கு தூது சென்றபோதும், யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்துக்குச் சென்றபோதும் கண்ணனுடன் சென்றவன் சாத்யகி. மாபாரதப் போரில் 18 நாட்களும் போரிட்டவன். பாண்டவர்களின் ஏழு படைப் பிரிவுகளில் ஒரு படைக்கு தளபதி.

ஒரு நாள் கண்ணனும் சாத்யகியும் தொலைதூரப் பயணம் சென்றனர். பாதி வழியில் இருட்டிவிட்டது. இருவரும் நடுக் காட்டில் கூடாரம் அடித்துத் தங்கினர். யார் பாதுகாவல் காப்பர்கள் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். நாலு ஜாமம் கொண்ட இரவில் மாறி மாறி ஒவ்வொரு ஜாமத்தையும் ஒருவர் காப்பது என்று உடன்பாடு ஆயிற்று.

முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தார். அப்போது ஒரு பூதம் அவனைத் தாக்க வந்தது. சாத்யகி மாவீரன். கோபமும் வீரமும் கொந்தளிக்க பூதத்தைத் தாக்கினான். இவன் தாக்கத் தாக்க பூதம் மேலும் பலம் அடைந்தது, உருவத்தில் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதற்குள் முதல் ஜாமம் முடியவே, கண்ணன் காவல் காக்க வெளியே வந்தான்.

ஒன்றுமே நடக்காதது போல பாவனை செய்துகொண்டு சாத்யகி தூங்கப் போய்விட்டான். அதே பூதம் கண்ணனுடன் மோதியது. கண்ணன் கோபத்தையும் வீரத்தையும் காட்டாமல் அன்பே, ஆருயிரே, என் செல்லமே என்று பூதத்தைத் தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று. இதற்குள் மூன்றாம் ஜாமம். உடனே சாத்யகி மீண்டும் காவல் காக்க வந்தான். கண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். அடி வாங்கிய சுவடே இல்லை. வாரிய தலை கூட கண்ணனுக்குக் கலையவில்லை. விஷமக் கார கண்ணன் முதல் ஜாமத்தில் நடந்தது என்ன என்று ஊகித்தறிந்தான்.

கண்ணன் தூங்கபோன உடனே பூதம் வந்தது, மீண்டும் சண்டை, அடி தடி, குத்து, வெட்டுதான். சாத்யகிக்கு செமை அடி. அவன் தாக்கத் தாக்க பூதம் பெரிதாகியது. சாத்யகிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. கண்ணனை உதவிக்கு அழைத்தால் அவமானம்.. நல்ல வேளையாக அந்த ஜாமம் முடிவுக்கு வரவே கண்ணன் காவல் காக்க வந்தான். எல்லாம் பழைய கதைதான். பூதத்தைப் புகழ்ந்து புகழ்ந்து தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று அவன் அதைப் பிடித்து வேட்டியில் ஒரு ஓரத்தில் கட்டிக் கொண்டு முடிச்சுப் போட்டுவைத்தான். உள்ளே போய், “சாத்யகி விடிந்துவிட்டது. நாம் பயணத்தைத் துவங்கவேண்டும்” என்று கூறினான்.

சாத்யகிக்கு ஒரே ஆச்சர்யம். இது என்ன? அந்த பூதம் என்னிடம் மட்டும்தான் வாலாட்டியதா? கண்ணனிடம் வரவே இல்லையா? என்று நினைத்துக் கொண்டு மெதுவாக கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தான். “கண்ணா, இரவில் ஏதேனும் நடந்ததா? காவல் காப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா?” என்றான் மெதுவாக.

கண்ணனுக்குதான் சுற்றிவளைத்துப் பேசத் தெரியாதே! “ஓ, நீ பூதம் பற்றிக் கேட்கிறாயா? இதோ பார் இதுதான் என்கூட இரவில் சண்டைக்கு வந்தது என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்து பூதத்தைக் காட்டினான். சாத்யகியுடன் சண்டை போட்ட அதே பூதம்! சாத்யகிக்கு ஆச்சர்யம் எல்லை கடந்துபோனது. அவன் கேள்வி கேட்பதற்கு முன்னர் கண்ணனே பதில் கூறிவிட்டான்.

“இதோ பார் சாத்யகி, ஒரு பிரச்சினை அல்லது கோபம் வரும்போது அதைப் பெரிதாக்குவது நாம்தான். அதையே நினைத்து நினைத்து ,அதனுடன் மோத மோத அது பெரிதாகிவிடும். அதே கோபத்தையோ பிரச்சினையையோ ஆற அமர சிந்தித்து ஆத்திரப் படாமல் சிந்தித்தால் பிரச்சினை சிறிதாகிவிடுமென்று சொல்லிக் கொண்டே கண்ணன் அந்த குட்டி பூதத்தைக் காட்டுக்குள் தூக்கி எறிந்தான். அது உருண்டு ஓடி விட்டது.

ஆங்கிலத்தில் பூதத்தை உண்டாக்கி சண்டை போடுவது என்ற சொற்றொடரே (Creating a Phantom and fighting with it) இருக்கிறது. ஆக பிரச்சினையோ சோதனையோ வந்தால் அமைதியாகத் தட்டிக் கொடுங்கள். அது உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிப்போய்விடும்.

*************************

நாமும் அனுமார் ஆகலாம்

Image

வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு. இவைகளைத் தீர்க்க ஒன்று கிருஷ்ணர் ஆகலாம் இல்லையேல் அனுமார் ஆகலாம். அனுமார் ஆனால், அட, குரங்கே ! என்று கேலி செய்வார்கள் என்று நினைக்கலாம். ஆனால் அவர் பிரச்சனைகளைத் தீர்த்த முறையையாவது பின்பற்றலாமே!

கடலைத் தாண்டி சீதையைத் தேடப் போனான் அனுமன். முதலில் அவனுக்கு வந்த தடங்கல் மைநாக பர்வதம் என்னும் மலை. நன்றாக சொகுசாக ஓய்வு எடுக்க அருமையான இடம். நாம் எந்த ஒரு செயலைச் செய்யப் போனாலும் முதலில் அது நமக்கு மிகவும் பிடிக்கும். அதில் சொகுசு கண்டு ஓய்வெடுத்தால் அடுத்த கட்டம் செல்லவே முடியாது. அனுமன் ஏமாறவில்லை. மைநாக பர்வதம் என்ன சொன்னாலும் கேட்காமல், தான் முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்று மீண்டும் விண்ணில் பறக்கத் துவங்குகிறான். சீதையை தேடிக் கண்டுபிடிப்பது ஒன்றே குறிக்கோள்.

அனுமனுக்கு வந்த இரண்டாவது இடையூறு சுரசா என்னும் அரக்கி. அவள் பயங்கரமான உருவம் உடையவள். நமக்கு வரும் பிரச்சனைகளும் முதலில் பயங்கரமாகத்தானே இருக்கின்றன. அதை எண்ணி, எண்ணித் தூக்கம் கூட கெட்டு விடுகிறது. அனுமன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் வழி விட மறுக்கிறாள் சுரசா. யாரானாலும் என் வாயில் புகுந்து பின்னர் வெளியேறலாம் என்கிறாள். அதாவது வாயில் புகுந்தால் அவனுடைய கதி சகதி என்பது அவள் கணிப்பு. அனுமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் உருவத்தை மேலும் மேலும் பெரிதாக்குகிறான். சுரசாவும் வாயை மேலும் மேலும் பெரிதாக்குகிறாள். அனுமன் திடீரென தனது உருவத்தைச் சுருக்கி வாயில் புகுந்து காது வழியாக வெளியே வந்து ஆகாயத்தில பறந்து விடுகிறான்.

இதிலும் நாம் அனுமன் போல மாறி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். சாம, தான, பேத தண்டம் என்னும் சதுர்வித—4 வகையான—உபாயங்களைப் பின்பற்றித் தீர்வு காணலாம். முதலில் சுரசாவிடம் கெஞ்சினான். அவளோ அனுமன் கெஞ்சக் கெஞ்ச மிஞ்சினாள். அவளைக் கோபப்படுத்தி வாயை பிளக்கவைத்து எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விதமாகத் தப்பிக்கிறான். பல விஷயங்களில் நாமும் இப்படித் தீர்வு காண முடியும். வழக்குப் போட்டவனும் நம் மீது குற்றம் சாட்டியவனும் நாம் இப்படித்தான் நடப்போம் என்று நினைக்கும் நேரத்தில் நாம் பெரிய விஷயத்தை சிறிய உருவத்தில் ( சின்ன உபாயம் மூலம்) சந்தித்து அதிலிருந்து நழுவி விடலாம். சுருக்கமாகச் சொன்னால் செஸ் விளையாட்டில் எதிர்பாராத விதமாக காயை நகர்த்தி எதிரியைத் திகைக்கவைப்பது போல இது.

இதற்குப் பின்னர் அனுமன் சந்தித்த இடையூறு சிம்ஹிகை என்னும் அரக்கி. மாயா ஜாலங்களில் வல்லவள். அவள் எல்லோருடைய நிழலையும் அடக்கி ஆள்பவள். அது அவள் மீது பட்டாலே போதும் அவள் நம்மை அடக்கி ஆளமுடியும். அனுமனின் நிழல் கடலில் விழுந்தவுடன் அவனுடைய வேகத்தையே குறைத்துவிடுகிறாள். இதுவரை அனுமன் சந்தித்தவர்கள் அவன் உடலுக்குத் தீங்கு செய்ய எண்ணினார்கள். சிம்ஹிகை அவனது புகழுக்குப் பெயருக்குக் களங்கம் கற்பிக்கப் பார்ப்பதையே நிழல் என்று ராமாயணம் கூறுகிறது. நம் மீது பொறாமை கொண்டவர்கள் நம்மை நியாயமான முறையில் சண்டை போட்டொ, போட்டியிட்டோ வெல்ல முடியாவிட்டால், நம் மீது அலுவலகத்திலோ நம் குடும்பம் பற்றியோ அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் அல்லவா? அதுதான் நிழல் அரக்கி.

சிம்ஹிகையை அனுமன் எப்படிச் சமாளிக்கிறன்? அவளுடைய வாய்க்குள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகிறான். நமக்கு எதிரான அவதூறு, அவப் பெயர்களைத் தருணம் பார்த்து கிழித்தெறிய வேண்டும் என்பது இதிலிருந்து கற்க வேண்டிய பாடம். இதே நிழலை நம் மனத்திலிருந்து வரும் பொறாமை, கோபம் முதலியனவாகவும் வருணிக்கலாம். மொத்தத்தில் ராமாயணம் எவ்வளவு அழகாக நிழல் அரக்கி என்று சொல்கிறது பாருங்கள்!! அற்புதமான மனோதத்துவ வருணனை.

இதற்குப் பின்னரும் இதற்கு முன்னரும் அனுமன் சந்தித்த எதிரிகள், பிரச்சனைகள் எவ்வளவோ. லங்கினி, ராவணன், சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்படி எத்தனையோ சோதனைகளைச் சொல்லலாம். அனுமனின் வாழ்க்கையைப் படிப்பவர்களுக்கு குடும்பம் மற்றும் அலுவலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எளிது. அனுமான் சாலீஸாவைப் படித்தால் மட்டும் போதாது. பொருளை உணரவேண்டும், அதைப் பின்பற்றவேண்டும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலான் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான் (கம்பன்)

அனுமன் கண்ட எல்லா அரக்கிகள் ,சோதனைகளை ஒருவர் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஏற்படும் சோதனைகள் என்றும் விளக்கலாம், வியாக்கியானம் செய்யலாம். இனி கண்ணன் வழியைக் காண்போம்.

கண்ணன் வழி, தனி………தனீ……. வழி ! அதைத் தனியாகக் காண்போம்.