டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

யார் மிக மிகக் கீழானவன்?

 

Picture of Hare Krishna Bhajan and dance

சம்ஸ்கிருதச் செல்வம்-2 by S Nagarajan

2. யார் மிக மிகக் கீழானவன்?

 

கவிஞருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது – யார் மிக மிகக் கீழானவன் என்று! அது தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவருடைய தொடர்பை அறுத்து விடலாமில்லையா!

 

சிலர் சொன்னார்கள் பணம் இல்லாதவன் தான் கீழானவன் என்று.

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

சிலர் தனஹீனனைக் கீழானவன் என்று சொல்கின்றனர்

என்று பதிவு செய்து கொண்டார்.

 

பின்னர் மற்றும் சிலரைப் பார்த்துக் கேட்டார். அவர்களோ குணமில்லாதவன் தான் கீழானவன் என்றனர். நற்குணமில்லாதவர்கள் தாம் கீழானவர்கள் என்று அவர்கள் சொல்வதும் கவிஞருக்குச் சரியாகத் தான் பட்டது. அப்படியே அதைப் பதிவு செய்து கொண்டார்.

 

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய:

சிலர் குணஹீனனையே கீழானவன் என்று சொல்கின்றனர்.

 

தனஹீனனா அல்லது குணஹீனனா – இருவரில் யார் கீழானவன்!

 

குழம்பிய கவிஞரின் முன் வியாஸ பகவான் வந்தார்.

கவிஞர் தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க அவர் புன்முறுவல் பூத்தார். இருவரும் கீழானவர் இல்லை என்று கூறிய அவர் சரியான பதிலைச் சொல்லி விட்டுச் சென்றார்.

 

புளகாங்கிதம் அடைந்த கவிஞர் அதை அப்படியே பதிவு செய்து உலக மக்களின் நன்மைக்காக முழுவதுமாகப் பாடி வைத்தார்.

Picture of Harekrishna Chariot Procession in London

வியாஸர் சொன்னது என்ன?

 

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய:

 

அகில வேதத்திலும் விசேஷ ஞானத்தை உடைய வியாஸ பகவானோ நாராயணனை ஸ்மரணம் செய்யாதவனே உண்மையில் மிக மிகக் கீழானவன் என்றார்.

 

பாடலை முழுவதுமாகப் படித்து பெரும் உண்மையை நமக்காகத் தந்த கவிஞருக்கு நன்றி சொல்வோம்!

 

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய: I

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய: II

 

சிலர் தனஹீனனாக உள்ளவர்களைக் கீழானவர் என்று சொல்கின்றனர். சிலரோ குணஹீன ஜனங்களைக் கீழானோர் என்று சொல்கின்றனர். அனைத்து வேதங்களிலும் விசேஷ அறிவு படைத்தவரான வியாஸரோ நாராயண ஸ்மரண ஹீனனாக உள்ளவரையே மிகக் கீழானவர் என்று சொல்கிறார்!

 

அரிய உண்மையைத் தெரிந்து கொண்டோமல்லவா! நாராயணனை அனுதினமும் ஸ்மரிப்போமாக!!

 

இது அமைந்துள்ள சந்தம் வசந்ததிலகா சந்தம்!

 

***************

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-1

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.

 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே! (அவ்வையார்)

அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

 

இனிமை தருமொரு தனிமையை மறைகளி

னிறுதி யறுதியி டவரிய பெறுதியை

இருமை யொருமையில் பெருமையை  வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)

 

இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்

அணுகொனா வகை நீடுமிராசிய

பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்

 

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.

மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.

வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:

 

வாசித்துக் காணொ ணாதது

பூசித்துக் கூடொ ணாதது

வாய் விட்டுப் பேசொ ணாதது

மாசர்க்குத் தோணொ ணாதது

நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது

என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.

பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

 

பேசா அநுபூதி

அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.:

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்,

பேசா அநுபூதி பிறந்ததுவே

 

கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி.

ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கீதையில்

கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)

யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:

ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:

பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.

நாமும் தனிமையில் இனிமை காணும் பக்குவம் பெறுவோம்.

contact london swaminathan at swami_48@yahoo.com

Pallankuzhi (Mancala) Mystery

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

Did the board game Mancala/Pallankuzi/Alagulimane originate in South India? It looks like it.
Pallankuzhi is played on a rectangular board with 2 rows and 7 columns on either side. There are a total of 14 cups (kuzhi in Tamil language). Seeds, shells, small stones are all commonly used as counters in the board game. As the game proceeds, each player distributes the shells over all the pits. The players may capture the shells, as permitted by the rules of the game. The rules of capture depend on the variant of the game played. The game ends when one of the players captures all the shells, and is declared as a winner.

12 counters are placed in each cup except the middle of each row into which only 2 counters are placed. The starting player lifts the counters from any of his holes and, going counter-clockwise, distributes one counter in each hole. If he reaches the end of his cups he goes on his opponent’s side of the board. When the player drops his last counter, he takes the counter. This is what we get from the encyclopaedias. But this game is in many parts of Africa and Indonesian islands. What is the origin? Who invented it? It is a mystery.

 

My research shows that this game originated in India. There are valid reasons to believe so 1.The game is played all over India 2. Wherever Indians went for trade /commerce this game spread to that parts of the world. 3. The words used in the game are of Tamil or Sanskrit origin.4.We have a reference to this game in the ancient Pallava copper plates which is in two parts: Tamil and Sanskrit. Read the details below:

Pallaang Kuzi is the Tamil name and Mancala is the Hindi name for the game.

Picture from Zanzibar

Copper Plate Inscription

Pallava king Simhavarman’s Pallankovil Copper Plates, while mentioning a land donation to a Jain teacher Vajranandhi, gives the four borders of the donated land. One of the borders land mark is PALLANKUZI Ka meaning garden with Pallankuzi or a garden that looks like Pallankuzi with many pits. Whatever the meaning may be we have the word on a copper plate dated to 550 AD.

The Egyptians had played this game 3000 years ago. We have pits on the ground near Pyramids and in Ethiopia. I have already written in my post ‘DID INDIANS BUILD PYRAMIDS?’, that Indian workers were involved in the building of the pyramids. And from them the Africans might have learnt it. Our Trade links were strong with the Indonesian islands according to Kalidas and others. Kalidas refers to “Islands beyond Indian mainland” where from the spices came.

Picture from East Africa

India is a vast country. If the game is played in nook corner of India for thousands of years it must have originated here like Chess and Snakes and Ladders (Paramapatha Sopana Patam in South India). The words used in Mancala and Pallankuzi are native words. We used seeds (Vithai or Kottai in Tamil or shells).

 

Indonesians called this Congkak and Philippines called this Sungka which is the corrupted from of Sankya (Numbers in Sanskrit) Indonesians’ link with India and Madagascar was already explained in my posts: “India –Madagascar Link via Indonesia” and “Ancient Sanskrit Inscriptions in strange places” In my blogs. South East Asian Countries were ruled by Hindus for 1300 years from second century AD.

Picture from Philippines

Only the coastal areas in Africa knew this game which again showed that it was brought to them by ancient mariners. But slowly it got local words for the game and changes in the rules.

African/Caribean words such as Oware, Nanoware, Awale( Awari) have the Tamil word (Vidhai=Virai=Ware=seeds/nuts).

 

Indians were leading in Mathematics in the ancient world. Even the Greeks like Pythagoras learnt it from us. The world has accepted that Chess originated in India and slowly spread to the Western world. Many scholars believed that what we call Pythagoras theorem today, the value of Pi etc went from India. Pallankuzi/ Mancala is no exception. Needless to say it would not have originated in Ancient Africa or Indonesia where mathematical genius was lacking or at least not as good as India.

This game sharpens counting skills and improves mental calculation. Making a quick estimate of the seeds and judging the number of pockets (pits) to be filled requires one to be very attentive. Kannadigas call this game Alugulimane. The Hindi word for this game is Mancala. They attribute Arabic origin (nagala= moved) for this word. It did not make any sense in the meaning or the letters. Wikipedia says this word is used in Egypt, Syria and Lebanon, but it did not mean the same game.

Hindi Name Mancala

Mancala might have come from Mangala (auspicious). Tamils used the words Kasi, Pasu when they capture the counter. Sanskrit words like Sita Pandi, Raja Pandi, Kasi Pandi shows its Indian origin. More over Sita Pandi is the board game Sita played in Asoka vana in Sri Lanka. Native words like 3 Virai (Vidhai) and 6 Virai Attam were used. No mixture of foreign words. Wikipedia adds more than 800 Mancala games are known. This is one of the ancient games of Sri Lanka s well.

There is a long list of names for this game in different parts of the world. So the Arabic origin can’t be right. If anyone sticks to the Arabic origin for the word Mancala, then they have to explain how come it is played in South India with pure Tamil words. They must also explain why it has got different names in other parts of the world. In short Arabic origin is not correct. Arabic learnt all sciences from India which is a well known fact. Hindu numerals are called Arabic numerals because they took it to the western world. I have shown elsewhere in my blogs all the Arabian Night stories are from India adapted for the Arabs. Mancala may be a distortion of the Tamil words Man +Kuzi= sand pits. It is played by the villagers on the floor.

Pictures are taken from various websites. Thanks

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை

1.India-Madagascar Link via Indonesia,

2.Sanskrit Inscriptions in Strange Places,

3.Pandya King who ruled Vietnam,

4.Did Indians build Pyramids?

ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாகும். இது இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. 4.எண்கள், கணக்கு விஷயத்தில் இந்தியர்கள் கண்ட முன்னேற்றத்தை உலகமே ஒப்புக் கொள்கிறது. செஸ் விளையாடு நம் நாட்டிலேயே தோன்றியது. பிதகோரஸ் தியரம், பை என்பன எல்லாம் இந்தியாவில் தோன்றியனவே. செஸ் தோன்றிய சுவையான கதையை “இந்தியா மீண்டும் உலக செஸ் சாம்பிய”னென்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். 5. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அங்குள்ள 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகளும் காளிதாசர் முதலியோரின் குறிப்புகளும் காட்டுகின்றன. இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்லாங்குழியை சொங்கக் ,சுங்க என்று அழைக்கிறார்கள். இது சங்க்யா(எண்ணிக்கை) என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். தென் கிழக்காசிய நாடுகளின் சொற்களில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் இருப்பது மொழியியல் நிபுணர்கள் அறிந்த விஷயமே.

செப்பேட்டில் பல்லாங்குழி

பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:

“ வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்”

பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.

இந்தியில் மங்கலா

இந்தி மொழியில் இந்த ஆட்டத்துக்கு மங்கலா என்று பெயர். இது அராபிய சொல் நகலா (நகர்த்தல்) என்பதில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் இது சரியில்லை என்றே தோன்றுகிறது. முதலில் நகலா என்பதே தமிழ் சொல் நகர்த்து என்பதுடன் தொடர்புடையது! இந்தியாவின் வடகோடி முதல் இலங்கையின் தென்கோடி வரை ராமாயண காலத்தில் இருந்து ஆடப்படும் (சீதாப் பாண்டி) ஆட்டம் எப்படி அராபிய நாட்டில் இருந்து வந்திருக்க முடியும்? மேலும் நகலா என்பதற்கும் மங்கலாவுக்கும் தொடர்பு மிகவும் குறைவு.

உண்மையில் அராபியர்கள் விஞ்ஞான விஷயங்கள் முழுதையும் நம்மிடம் கற்று மேலை உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால்தான் இந்து எண்களை அராபிய எண்கள் என்று மேலை உலகம் கூறுகிறது. அல்பெருனி, இபின் படூடா போன்ற எழுத்தர்கள் இந்திய அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி வியந்து போற்றி இருக்கிறார்கள்.

மங்கலா என்பது மங்களம் (சுபம்) என்ற சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும் இதை எதிர்ப்போர் நம் எல்லோருக்கும் வேறு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். உலகம் முழுதும் 800 வகையான பல்லாங்குழி ஆட்டங்கள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. இந்திக்காரர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுப் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது. அப்படியானால் உண்மை என்ன? மண் கல என்பது மண் குழி என்பதன் திரிபாகவும் இருக்கலாம். பலர் மண்ணில் குழி செய்தும் விளையாடும் படங்கள் என்னிடம் உள்ளன.

இந்த விளையாட்டு தென் இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல இந்தோநேசியா மூலம் மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் ஆப்பிரிக்க எல்லை நாடுகளுக்குள் நுழைந்திருக்கவேண்டும். ஆப்பிரிக்காவிலும் கிழக்குக் கரை அருகிலேயே இது பரவி இருப்பது நோக்கற்பாலது.

ஓவாரி, நானோவாரி ஆவாரி(அவாலி) என்ற ஆப்பிரிக்க பல்லாங்குழி ஆட்டப் பெயர்களில் உள்ள வாரி என்பது தமிழ் சொல்லாகும். வாரி எடுத்தல் அல்லது விரை=வாரி என்று மருவி இருக்கலாம். சிரியா, எகிப்து, லெபனான் நாடுகளில் கூட மங்கலா என்பது ஒரே ஆட்டத்தைக் குறிக்கவில்லை.

இந்தியர்களின் கணிதப் புலமை, செஸ் முதலிய ஆடங்களை உண்டாக்கிய பழமை, தென்கிழக்காசிய நாடுகளை 1300 ஆண்டுகளுக்கு ஆண்ட திறமை, பல்லாங்குழி ஆட்டச் சொற்களின் வளமை ஆகியவற்றைப் பார்க்கையில் நாம் இதை உலகுக்கு ஏற்றுமதி செய்தோமா அல்லது நாம் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோமா என்பதை வாசகர்களே உய்த்துணர்வது கடினமல்ல.

பல்லாங்குழி என்றால் என்ன?

“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)

பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Who is Dhananjayan?

Picture: Dhananjayan with folded hands on left & Pandya king on the right.

 

I was fascinated by the name DHANANJAYAN when I found it in Mahabharata, Alupa coins, Cambodian folk tales, Vishnu Sahasranama, Nagas and history of Madurai Meenakshi temple. I also knew that Dhanajayans are famous names in Bharatanatyam. But I was provoked to do some research in to it when I read Dhanajayan under baby names it is the name of Murugan (Lord Skanda). I think it is wrong because I found no proof for that claim.

 

The most famous Dhanajayan was Arjuna. One of his ten names was Dhanajayan. If the roar of thunder is heard, Hindus used to recite the ten names of Arjuna to avoid thunder striking them. Arjuna got this name when he won the wealth (Dhanam= wealth, Jayan= victor) of Uttarakuru country in the north.

 

Bhagavad Gita Dhanajayan

The name Dhananjayan comes in Vishnu Sahasranama (couplet 70) as one of the names of Lord Vishnu. The meaning according to Sahasranama bhasyam is:

“Arjuna is called so because by his conquest of the kingdoms in the four quarters, he acquired great wealth (Dhanam). Arjuna is a Vibhuti, a glorious manifestation of the Lord, according to the statement of the Gita (10:57): Panadavanam dhananjaya:–among the Pandavas, I am Dhananjaya, says Krishna.”

Pandya Dhanajaya on Coins:

The Alupas, one of the very ancient dynasties of Karnataka, ruled for over a thousand years in the coastal tract of Karnataka. Even Ptolemy (79  to 168 AD) refers to the Alupas. They are referred to in the famous Halmidi (500 AD) inscription. The Alupas belonged to the lunar race and had fish as their royal emblem, exactly like the Pandyas of Madurai. Among the most important titles of the Alupas, were Pandita Pandya and Pandya Dhananjaya. This has been found on coins and inscriptions in Kannada. This shows Pandyas were very familiar with the name Dhanajaya. This takes us to the history of Madurai Meenakshi Temple.

 

Picture of Golden Lotus tank in Madurai Temple

 

Dhanajaya statue in Madurai

The story of the world famous Madurai Meenakshi Temple begins with a merchant called Dhananjaya. (Please read my article THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE in this blog). A merchant by this name travelled to a neighbouring town and returned to his home town Manavur through the thick forest of Kadamaba trees. Since the sun was already set he took rest under a tree. Suddenly he saw bright lights. He hid himself and watched Indra and other angels from the heaven came down to earth doing Puja to a Linga (formless Shiva). He was so excited and reported it to the Pandya king Kulasekara the very next morning. The king visited the place with all his retinue immediately and built a temple over the Shiva Lingam and a city slowly came up around this temple. Anyone can see Madurai as a well planned city in the shape of squares within squares round the temple. It is called lotus city.

The statue of Dhanjaya is in the Golden Lotus Tank pillar inside Maduari temple. This story is narrated in Thiru Vilayadal Puranam in Tamil.

 

Surprise from Cambodia

Mahabharata’s character Arjuna had good connection with the south of India by marrying Chitrangada. They had a son by name Babruvahana/bull vehicle which also links to Shiva whose vehicle is a bull. When we read that Dhananjaya Pandya in Karnataka and Dhannjaya’s early connection with Manalur, the previous capital of Pandya, we see a link between Arjuna-Pandya-Dhananjaya-fish symbol- Bull Vahana/vehicle etc. This calls for deeper research in to this area.


Picture of Halmidi Kannada inscription

 

The next surprise comes from Cambodia. If someone sees names like Rama, Krishna, Buddha in Cambodia one won’t be surprised because we have a history of Hindu rule in South East Asia for 1300 years. (Please read my article THE PANDYA KING WHO RULED VIETNAM). This Dhananjayan is neither a king nor a historical figure. But he was a jester in a folk tale. The famous stories of Tenali Rama are duplicated in Cambodia by replacing Tenali Rama’s name with Dhananjaya. How did his name travel that far from India and how did he become a jester or clown is a mystery. This calls for more research.

Judith Jacob in her book ‘Cambodian linguistics, literature and history’ says:

“Thmenh Chey (Dhmen Jay or Dhananjay) is a story known also in Burma and Thailand. Thmenh Jay is a poor boy who rise, first to be the servant of a rich man, then to upon to attend the king and finally to be the most eminent man in the land. All this he does by his wits and in particular by outwitting his current master in verbal adroitness”.

I have read some of the stories and they are very similar to stories of Tenali Rama.

 

Asvagosha’s Dhanajaya

Asvagosha was one of the great writers of ancient India. He lived in the period of Kushan emperor in first century AD. Unlike other Buddhist writers he wrote in Sanskrit. Many Kavyas and dramas are attributed to him. One of the characters in Asvagosha’s drama was Dhananjaya! Probably Cambodian’s followed this fictional character to create their jester.

 

More Dhananjayans

Dhananjayan is a famous name in Bharatnatyam in Chennai. The couple started their own school in their names. The ancient Djhanajayas include the son of Naga woman Kadru, a Jain author who wrote ‘Dhananjayam’ and a commander in Lord Muruga’s army. This is the only link with Muruga/Skanda. Dhanajayan is one of the names of Agni/fire. Since Vedas connect Agni to Lord Skanda/Murugan we may see some distant link to Murugan.

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

This is already posted in English by me: swami

மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!

பிரபல விஞ்ஞான பத்திரிக்கை செய்தி!

மனிதர்களின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மைதான் என்பதை பிரபல அறிவியல் வார பத்திரிக்கை ஜனவரி 5ம் தேதி இதழில் வெளிட்டிருக்கிறது. ஆதி சங்கரர், புத்தர், ஏசு கிறிஸ்து, குரு நானக் முதலிய பெரியோர்களின் தலையைச் சுற்றி ஒரு வட்டம் பிரகாசமாக வரையப் பட்டிருக்கும். இது தவ சீலர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் நம்மைப் போன்றோர் படங்களில் மட்டுமே காண்கிறோம்.

இவ்வளவு காலமாக இதை ‘பாரா நார்மல்’ (மாய மந்திரம்) என்று அறிவியலுக்கு அப்பால் வைத்திருந்தனர். இப்போது ஒரு ஆராய்ச்சியின் மூலமாக இதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

இதோ நியூ சைன் டிஸ்ட் செய்தியின் சுருக்கம்:

“ ஒரு கிராமப் புற கதை போலத் தோன்றும் செய்தி இது. ஒரு சில மக்கள் மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஒளி வளையத்தைக் காணமுடியும். ஐம்புலன்கள் ஒன்றை ஒன்று குறுக்கிடும் போது சிலர் மற்றவர்களைச் சுற்றி இருக்கும் வண்ண ஒளியைக் காணமுடியும், இது மன உணர்ச்சிக்குத் தக்கவாறு கலரில் வேறுபடும்.

டி.கே. என்னும் ஒருவர் ஆஸ்பர்கர் நோயால் கஷடப்பட்டுவந்தார். அவருக்கு வயது 23. அவர் இப்படி ஒளி வட்டத்தைக் காண்பதாகக் கூறியவுடன் வில்லயனூர் ராமசந்திரன் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு சோதனை நடத்தினார். சோதனைக்காக அவர் முன் ஒரு ஆளை நிறுத்தியவுடன் அவரை சுற்றி நீல வண்ணம் இருப்பதாகக் கூறினார். நீல வண்ணத்தில் நீல எழுத்துக்கள் தெரியாது. மற்ற வண்ண எழுத்துக்கள் தெரியும் அல்லவா? ஆகையால் அவரை ஒரு வெள்ளைத் திரையின் முன் நிற்க வைத்து அவர் தலையைச் சுற்றி நீல வண்ண எழுத்துக்களை காட்டினர். யார் ஒளிவட்டத்தைக் கண்டாரோ அவரால் நீல வண்ண எழுத்துக்களைப் படிக்க முடியவிலை. தலையில் இருந்து விலகி அதே எழுத்துக்களைப் போட்ட போதும் வேறு வண்ண எழுத்துகளைப் போட்டபோதும் அவரால் படிக்க முடிந்தது. இதன் மூலம் நீல நிற ஒளிவட்டம் நிரூபணமானது.

இந்தியாவில் சில சன்யாசிகள், சிலருக்கு உடனே அநுக்ரகம் செய்கிறார்கள் இன்னும் பலரைப் பாராமுகமாக இருந்து விடுகிறார்கள் இதற்கும் நம் தலையைச் சுற்றி இருக்கும் ஒளிவட்டமே காரணம். குழந்தைகளுக்கு இது நன்றாகத் தெரியுமாம். அம்மா அப்பா தலையை சுற்றி இருக்கும் அதே ஒளி வளையம் உள்ளவர்களிடம் குழந்தைகள் எளிதில் போகும். மற்றவர்களைக் கண்டாலேயே அலறும்.

ஒருவர் நல்ல எண்ணத்துடன், நல்ல செயல்கள் செய்தால் இது பிரகாசமாக தெரியும். கெட்டவர்களாக இருந்தாலோ பூர்வஜன்மத்தில் கெட்டது செய்திருந்தாலோ தலையைச் சுற்றி கருப்பு வளையம் தான் இருக்கும். ஞானிகளுக்கு இது நன்கு தெரியும். விவேகானந்தரைப் பார்த்த மாத்திரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் அருள் மழை பொழிந்தார். விவேகானந்தர் நாஸ்தீக வாதம் பேசியபோதும் அவருடைய பூர்வ ஜன்ம புண்யம் நல்லது என்பதால் உடனே உபதேசம் கிடைத்தது. ஒளி வளையத்தை ஒருவரின் ஆன்மீகக் கைஎழுத்து அல்லது தலை எழுத்து என்று சொன்னால் மிகை இல்லை.

 

எனக்கும் கூட இதில் சில அனுபவங்கள் உண்டு. என் தந்தைக்கு மிகவும் வேண்டிய சுவாமிஜி பெரிய கணபதி உபாசகர். மதௌரையில் ஒரு நகரசபை வார்டு தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை என் தந்தை ழைத்துச் சென்று அந்த சுவாமிஜியிடம் ஆசி பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறை அவரை அறிமுகப் படுத்த என் தந்தை முயன்றபோதெல்லாம் சுவாமிஜி வேண்டும் என்றே முகத்தை எதிர்ப்புறம் திருப்பினார். என் தந்தைக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இறுதியில் மதுரைக்குக் கிளம்ப விடை பெறும் போது, இவர் மதுரையில்………….. என்று என் தந்தை துவங்கியதுதான் தாமதம். நீ தேர்தலில் வெற்றி பெறுவாய் போ என்று அவரை ஆசிர்வதித்தார். என் தந்தைக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் சொன்னது போலவே தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அந்த சுவாமிஜியை வேறு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரே விளக்கம் கொடுத்தார்; “ சந்தானம் (எனது தந்தையின் பெயர்)  தனது குடும்பத்துக்காகக் கூட எதையும் கேட்டதில்லை. ஆனால் ஜெயிக்காத ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டுவந்து கேட்டவுடன் நான் கனபதியுடன் “சண்டை போட்டு” அவருக்கு வெற்றி பெற ஆசியை வாங்கினேன் என்றார். எனது தந்தை அழைத்துச் சென்ற ஆள் எல்லா கெட்ட பழக்கங்களும் உடையவரே. நண்பர் என்ற முறையில் என் தந்தை அவருக்கு உதவி செய்யச் சென்றபோது இத்தனையும் நடந்தது. ஆக ஆளைக் கண்டவுடனேயே சந்யாசிகளுக்கு நம்மைப் பற்றித் தெரிகிறது.

 

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ரிக் வேதத்தில் ஒரு சாகை முழுதையும் அத்யயனம் செய்து காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை ஒரு வீடு ஒரு பசு மாடு பெற்றவர். மதுரைக்கு டி.வி.எஸ். பஸ் நிறுவனத்தார் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் உபந்யாசம் செய்ய வருவார். எங்கள் வீட்டில் தங்குவதால் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லுவார். ஒரு நாஸ்தீகர் அவரைச் சோதிக்க இறந்தவரின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்தபோது அதைத் தொட்டவுடன் அவருக்கு ‘ஷாக் அடித்தது போல இருந்தது. உடனே வந்தவரை எச்சரித்து வெளியேற்றினார்.

 

சென்னையில் என் அண்ணன் பொழுதுபோக்காக அரசியல் துறை சினிமா துறையைச் சேர்ந்தோருக்கு ‘ஓஸி’யாக ஜோதிடம் சொல்லுவதுண்டு. சில பாப ஜாதகங்களைக் கையில் எடுத்தவுடன் ஒரே களைப்படைந்து கொட்டாவி விடத் துவங்கி விடுவார். கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கும். தான் முதல் நாள் இரவில் தூங்காததால் களைப்பாக இருப்பதாக சாக்கு போக்குக் கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பி விடுவார்.

 

இந்த சம்பவங்கள் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஜட வஸ்துகளுக்கும் பாப புண்யம் இருப்பதைக் காட்டுகிறது—அதாவது மக்களுடைய பாப புண்யத்தை அது எதிரொலிக்கிறது. என் அண்ணன் லண்டன் வந்தபோது எனக்கு நீண்ட காலமாக வேலை இடத்தில் தொல்லை கொடுத்து வந்த ஒரு பெண்மணியையும் மரியாதையின் பொருட்டு அறிமுகப் படுத்தி வைத்தேன். அவரைக் கண்டவுடன் என அண்ணன் மிக நல்ல பலன்களாகப் பொழியத் துவங்கிவிட்டான். எனக்கோ ஆத்திரம் தாங்க முடியவில்லை. அந்தப் புறம் அழைத்துச் சென்று ஏன் ‘எதிரிக்கு’ உதவினாய் என்று கடிந்து கொண்டபோது அந்தப் பெண் நாட்டை விட்டு லண்டனுக்கு வந்த காலம் முதல் தன் மகள் நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய தாய் கந்த சஷ்டிக் கவசம் படித்ததாகவும் அந்தத் தாயின் பிரார்த்தனை இந்தப் பெண்ணைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போட்டிருப்பதாகவும் கூறினான. என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்காக் புனிதமான ஜோதிட சாஸ்திரத்தை மாற்றமுடியாது! என்றான்.

ஆக ஒருவரின் தாய் தந்தையின் பிரார்த்தனையும் கூட ஒருவரைச் சுற்றி கவசமாக நிற்கமுடியும்!

 

எனது தந்தை ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியைப் படித்துக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. “யமதர்ம ராஜனின் உதவியாளர் பெயர் சித்திரகுப்தன். இவந்தான் நம்முடைய பாவ புண்ணீயங்களைக் கூட்டிக் கழித்துப் போடும் கணக்குப் பிள்ளை. உண்மையில் சித்திர குபதன் என்ரு யாரும் ஒரு ஆள் இல்லை. சித்திர குப்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு ரகசிய வரைபடம், மரைட்ந்த ஓவியம் என்று பொருள். அதாவது நாம் மனோ, வாக் காயம் ( மனம் மொழி மெய்) ஆகியவற்றால் செய்யும் ஒவ்வொரு செயலும் வரைபடம் போலப் பதிவாகி நம்முடைய உண்மைப் படத்தை வரைந்துவிடுகிறது!”

நம்மைச் சுற்றி ஒளி வளையம் பிரகாசம் அடைய நாம் நற்சிந்தனையுடன் வாழ்வோமாக.

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்–பாரதி

1. சிவனுக்கு இணை இல்லை!

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

சம்ஸ்கிருதச் செல்வம்-1 by S Nagarajan

 

  1. 1.  சிவனுக்கு இணை இல்லை!

 

சிறந்த சிவ பக்தர் ஒருவர். அவர் நல்ல கவிஞரும் கூட. சிவனை நினைத்தவுடன் வார்த்தைகள் பிரவாகமாகப் பொங்கி வருகின்றன. பாடுகிறார் இப்படி:

 

கிரீடே நிஷேஷோ லலாடே ஹுதாஷோ

புஜே போகிராஜோ கலே காலிமா ச I

தனௌ காமினீ யஸ்ய தத்துல்யதேவம்

ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே II

 

கிரீடே நிஷேஷோ – அவனுடைய தலையிலே சந்திரன்!

லலாடே ஹுதாஷோ – நெற்றியில் தீ !

 

புஜே போகிராஜோ –புஜங்களைச் சுற்றி பாம்புகளின் ராஜா

 

கலே காலிமா – கழுத்தில் கறுப்பு வண்ணம்!

தனௌ காமினி யஸ்ய தத்துல்யதேவம் – அவனுடைய மனைவி அவனுடைய தேஹத்திலேயே!

 

இப்படிப்பட்டவனுக்கு நிகரான ஒரு தெய்வத்தை நான் அறிந்ததே இல்லை! (ந ஜானே)

Picture of Ardhanareeswara (Shiva and Parvati 50+50)

 

இவ்வளவு ஆச்சரியகரமான ஒரு அற்புத தெய்வத்தைக் கண்ட பரவசத்தில் அவர் இது போல ஒரு தெய்வத்தை நான் அறிந்த்தே இல்லை (கண்டதே இல்லை) என்று நான்கு முறை கூறி வியக்கிறார்.

 

நாமும் ‘ந ஜானே ந ஜானே ந ஜானே ந ஜானே’ என்று கூறி அவரைப் போல வியந்து சிவபிரானைத் தொழ வேண்டியது தான்!

 

கவிஞர் சிவபிரானைக் கண்ட வடிவம் அர்த்தநாரீஸ்வர வடிவம் என்பதால் ஆணுக்குப் பெண் சமம் என்ற அற்புத உண்மையையும் மனதில் கொள்கிறோம். சிவபிரானைத் தொழும் அதே சமயத்தில் தேவியையும் தொழுது வணங்குகிறோம்!

 

கவிஞரின் பக்திப் பரவசம் நம்மையும் தொற்றி விடுகிறது அவரது கவிதை மூலம்!

இது அமைந்துள்ள சந்தம் : புஜங்கப்ரயாதா என்ற சந்தம்!

 

***************

 

Haloes are Real: New Scientist

Picture of halo around Adi Shankara

 

People who have good thoughts have an aura around their heads in bright colours. People who have bad intentions have black circle around their heads, say aura researchers. For long this has been dubbed as Para normal which does not come under science. But now scientists have confirmed haloes around people are true. But yet their interpretation differs from the spiritualists.

Spiritual leaders say that the auras are one’s spiritual signature. Children up to five, can easily see the aura. If it doesn’t match with their parents’ auras children won’t go to them. They will scream the minute someone touches the child. If it matches the same love and affection of the parents,  child smiles at the person and jumps from the lap of his/her mother to the stranger.

Picture of halo around Buddha

Saints favour someone at the very first glance. For others they simply turn their face away to show their disapproval. Sri Ramakrishna Paramahamsa did shower his grace on an atheist like Narendra (later known as Swami Vivekananda) This is because we have an aura which they can easily see. If ours is good then they simply shower their grace on us without any rhyme or reason. If our past karma is bad and strong, they won’t even look at us.

I myself have this experience with some saints. My father took a person from Madurai to a Swamiji (Guru) who was a great Ganapathy Upasaka, for some favour. He was contesting a ward election. Every time my father tried to introduce that gentleman to the Swamiji, he deliberately turned his face away. My father couldn’t believe it, because that Swamiji will do anything for my father. My father felt very awkward because it happened three times during an hour audience. Just before leaving that place for Madurai my father said the same thing for the last time: This gentleman is contesting an election……. Even before my father finished the sentence, Swamiji said that he would win the election. My father was extremely happy and the gentleman won the election. Months after the election my family met Swamiji again on another occasion. He told us, “you know why I turned my face three times. He is a papatma/sinner. I had to fight with Ganapathy to secure his victory. This I did for Santanam (my father’s name). He never asked me any favour even for his family. So I fought with Lord Ganesh for his victory”.

Picture of halo around Guru Nanak

Sri Kuthanoor Singara Subramanya Shastrigal was a Rig Vedic Pundit. He did memorise a whole Shaka and received a gold medal with a shawl, a house and a cow from Kanchi Paramacharya/Shankaracharya. Because of his knowledge in scriptures he was invited by the TVS Company (Bus operators) every year to do religious discourses. He used to tell me lot of incidents. One of them was an encounter with an atheist. He wanted to test him by giving a horoscope of a dead person. As soon as the Shatrigal touched it, he got a shock like an electric shock. Then he threw it on his face warning him not to do such a thing. This shows even a paper has such an effect if it is bad.

Picture of halo on heads of Jesus’ disciples

My eldest brother who does face reading and predictions as a hobby had similar experience. Lot of people from the film world and political fields approach him for future predictions. When he takes in his hand certain horoscopes he couldn’t even see them because he feels tired, yawning and tears started rolling down his cheeks. He will simply tell them that he did not sleep last night and so was very tired. After they left he used to tell us “Oh, my God, the minute I touched the horoscope, I see only darkness. I can’t even read the letters”.

When he came to London, I introduced him to my work colleague who gave me lot of trouble at work. This I did as a mark of respect, because he visited my office. He started giving her very good predictions and promised her bright future. When he came out I asked him why he did this to my sworn “enemy”. He told me that person’s mother was praying for her from the day she left her country for UK. That prayer is around her. Just because she did something wrong to me it wouldn’t change. So our forefathers’ prayers also develop some good aura around us.

 

Aura specialists say inanimate objects also have some aura around it. That is why we worship holy man’s relics like tooth (Buddha), Hair (Mohammed Nabi’s hair in a Kashmir shrine) Jesus’ clothes (Turin shroud) and Padukas/ shoes of great Hindu saints.

My father used to read us from a book about Chitra Gupta, who was Yama’s assistant. Yama was god of death in Hindu mythology. The very word Chitra Gupta means “secret/hidden picture”. He is the accountant of Yama and maintains our account of good and bad deeds. The meaning is very clear. Our word, thought and deeds (Mano, Vak, Kaya) are kept in picture forms i.e Chitra Gupta=secret drawings! So after our death this decides our fate. Science will slowly prove it and accept it.

Now read the Halo story from the famous science magazine:

New Scientist, January 5,2013

IT MAY sound like folklore, but a handful of people really can see colourful “haloes” around others.

Some people claim to experience a form of synaesthesia – a crossing of the senses- that makes them see a coloured light around other people that varies in hue with emotions.

 

A 23-year-old man with Asperger’s disorder, identified as T. K., says he has the condition and it helps him with emotional reciprocity. To explore this claim, Vilayanur Ramachandran at the University of California, San Diego, and his colleagues put a volunteer – who T. K. said had a blue halo – in front of a white screen. T. K. was slower to identify blue letters when they were projected onto the volunteer’s blue halo than if they were projected elsewhere on the screen. He had no difficulty identifying orange letters, wherever they were on the screen.

 

மன்னிக்க வேண்டுகிறேன் !

Written by london swaminathan

Dated 9th January 2013.

 

மனிதன் செய்த தவறுகளை கடவுள் மன்னிப்பாரா?

மன்னிப்பார் என்றே பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன.

கிறிஸ்தவ மதத்தில் “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்று அதை விலைக்கு வாங்குவோர் பாவங்களைக் கழுவலாம் என்று சொன்னவுடன் பெரிய எதிர்ப்பு கிளம்பியது; கிறிஸ்தவ மதம் இரண்டாக உடைந்தது. ரோமன் கத்தோலிக்க தலைமைப் பீடத்துக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்க்கொடி தூக்கி ப்ராடெஸ்டன்ட் பிரிவைத் துவக்கி வைத்தார்.

Picture of confession box inside St Peter Basilica in Vatican. I took it when I went to Vatican in December 2012.

 

மற்ற மதங்களில் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுப் பெறும் வாய்ப்பு உண்டு என்றாலும் விலைக்கு “பாவ மன்னிப்புச் சீட்டு” விற்கும் அளவுக்குப் போகவில்லை. ஆனால் சோதிடர்களும் பூசாரிகளும் பரிகாரம் செய்வதாகச் சொல்லி பணம் வாங்கினர். நம்பிக்கை இருப்போர் அதைப் பயன்படுத்தினர். பலர் அதனால் மன நிம்மதி அடைந்தனர்.

 

இந்து மதத்தில் பாவ மன்னிப்பு உண்டு. ஆனால் ரோமன் கிறிஸ்தவ மதம் போல ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் பெட்டிக்குள் ஏறி ரகசியமாக பாதிரியாரிடம் பேசத் தேவை இல்லை. கடவுளிடம் கெஞ்சிக் கேட்டால் போதும். இன்னும் ஒரு சிறப்பு,  துதிப் பாடல்களிலும் பூஜைகளிலும் மன்னிப்புக் கேட்கும் பகுதிகளும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் இப்படி மந்திரம் இருக்கிறது. பூஜை மந்திரங்களிலும் இப்படி இருக்கிறது. பலர் புனித யாத்திரை, நேர்த்திக் கடன்கள் மூலமும் பாவங்களைத் தீர்ப்பதுண்டு. எல்லா குளங்கள், ஆறுகள், கடல்கள், குறிப்பாக கங்கை ஆறு முதலிய நீர் நிலைகளுக்கும் பாவம் தீர்க்கும் சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

யஜூர் வேதத்தின் சதபத பிராமணத்தில் ஒரு பகுதி வருகிறது. யக்ஞ சாலயில் ஸ்த்ரீகளை அழைக்கும்கால் நீ எவனுடன் சேர்ந்தாய் என்று கேட்பது வழக்கம் அப்படி செய்வது வர்ண (ஜாதி) குற்றமாகும். அப்படிச் செய்திருந்தால் மனத்தினால் யக்ஞத்துடன் சேராதே. நீ பாபத்தைச் சொல்லிவிட்டால் அது குறைவாகிவிடும் உண்மையைச் சொல்லவில்லையேல் குடும்பத்துக்கு ஹானியாகும் (ச.பி. இரண்டாவது காண்டம், ஐந்தாவது பிராமணம்)—ஆதாரம்: யஜூர்வேதக் கதைகள்—எம்.ஆர். ஜம்புநாதன், பக்கம் 11.

Picture: A Hindu going to Batu Caves in Malaysia

Every saint had a past; Every sinner has a future

இந்து மதத்தின் ஒரு சிறப்பு பூர்வ ஜன்மங்களில் செய்த பாபங்களையும் போக்க வழி செய்வதாகும். மேலும் பாவங்களை மஹா பாவம், உப/சிறிய பாவம் என்று வகைப்படுத்தி எல்லாவற்றுக்கும் மன்னிப்பு பெறுவதாகும். ஆண்டுதோறும் ஒரு முறையாவது இப்படி (பிராமணர்க்ள்) வேண்டுவது உண்டு பிராமணர் அல்லாதோருக்கும் பிராமண புரோகிதர்கள் யாகம், யக்ஞம், பூஜை முதலியன செய்யும்போது இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதோ அந்தப் பெரிய மந்திரம்:

மஹா சங்கல்பம்:

அனாத்யவித்யா வாசனயா……………… என்ற மந்திரத்தில்

அனாதியான அவித்யா வாசனையால் வளர்ந்துவரும் இந்தப் பெரிய சம்சார சக்கரத்தில் விசித்திரமான கர்மப் போகில்  பலவிதமான இடங்களில் பலவாறாய்ப் பிறந்து ஏதோ ஒரு புண்ணிய செயலின் நலத்தால் , இந்த மானிட ஜன்மத்தில் பிராமணத் தன்மை அடைந்த எனக்குப் பல பிறவித் தொடரில் பிறவிதோறும் இதுவரை பால்யத்திலும் கௌமாரத்திலும், யௌவனத்திலும் மூப்பிலும் ஜாக்ர சொப்ன சுஷூப்தி நிலைகளில் மனத்தாலும் வாக்காலும் உடலாலும் கர்மேந்திரிய ஞானேந்திரிய வியாபாரங்களால் இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் விளைந்தனவாய்த் தெரிந்தும் தெரியாமலும் செய்துள்ள மகா பாதகங்கள் மகா பாதகங்களுக்கு உடந்தையாய் இருத்தல் சம பாதகங்கள், உப பாதகங்கள் மனத்தைக் கரைப்படுத்தும் வகையில் பொருளீட்டி வாழ்க்கை நடத்தியது, தகுதியற்ற இடத்தில் கொடுத்தல் வாங்கல், ஜாதியின் மேன்மையைக் குலைக்கும் செயல்கள், விஹித கர்மங்களைவிட்டது, இன்னும் இவை போன்று ஒரு முறையோ தெரியாமல் பல முறையோ செய்யப்பட்ட எல்லா பாவங்களும் இப்போதே நீங்குவதற்காக இந்த க்ஷேத்திரத்தில் சரீர சுத்தியின் பொருட்டு பரிசுத்தமான நீரில் ஸ்நானம் செய்கிறேன்.

 

சங்கரர் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்த்லும் பாவ மன்னிப்பு பகுதி உண்டு.

Christian confession and blessing

இதோ மேலும் சில மன்னிப்புக் கேட்கும் துதிகளும் மந்திரங்களும்:

 

தேவராய சுவாமிகளின் கந்தசஷ்டி கவசம்:

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்

***

பகவத் கீதை 18-66:

சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

பொருள்: எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன்.கவலை வேண்டாம்.

 

****

பிழைத்தவை பொறுக்கையெல்லாம் பெரியவர் கடமை போற்றி

—மாணிக்கவாசகர் திருவாசகம்

 

பிழையுள்ள பொறுத்திருவறென்றடியேன் பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே—- அப்பர்

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

—– பட்டினத்தார்

Picture of Fire Walking for atonement

அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை

அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

________

பிழையே பொறுத்து இருதாளிலுற்ற

பெரு வாழ்வு பற்ற அருள்வாயே

——— அருணகிரிநாதரின் திருப்புகழ்

 

பூஜை முடிவில்:

யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருதானி ச

தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே என்று சொல்லி தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்வார்கள்.

பொருள்: பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் வலம் வருவதன் மூலம் நசித்துவிடும்

***

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேஸ்வர:

யத் பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே

பொருள்: மந்திரங்கள் சொல்வதில் ஏற்பட்ட குறைகளும் கிரியைகள் செய்வதில் ஏற்பட்ட குறைகளும், பக்தி ஈடுபாட்டில் ஏற்பட்ட குறைகளும் கடவுளை பூஜிப்பதால் பரிபூர்ணமாகட்டும்

***

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம்

ஸமஸ்த பாப க்ஷயகரம் விநாயக பாதோதகம் சுபம்

அகாலத்தில் மரணம் அடைவதையும், வியாதிகளையும் பாவங்களையும் தடுத்து சுகம் அளிப்பது விநாயகரின் தீர்த்தமாகும்.

When I went to Venice last month I took this photo in St Marco Basilica

இப்படி எல்லாம் பாவ மன்னிப்பு பெறுவது மீண்டும் பாவம் செய்வதற்காக அல்ல. ஒரு முறை தெரியாமல் செய்த பாவத்தை மறுமுறை செய்யமாட்டேன் என்று உறுதி எடுக்கவே இந்த மந்திரங்கள் உதவும்.

1.சூர்யச்ச மா மன்யுச்ச………………………என்ற சந்தியாவந்தன மந்திரத்தில்

அனைத்தையும் இயக்குவிக்கும் சூரியனும் , அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று என்னைக் காப்பாற்றட்டும். இரவில் மனத்தாலும் வாக்காலும் கைகளாலும் கால்களாலும் வயிற்றாலும், ஆண்குறியாலும் எந்த பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் எந்த பாவம் உண்டோ அனைத்தையும் ராத்திரியின் அதிதேவதை நீக்கியருளவேண்டும். இங்கனம் பாவம் நீங்கிய என்னை  மோட்சத்திற்குக் காரணமாகிய சூர்ய வடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்கின்றேன்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளாலும் செய்த பாவத்துக்கு மன்னிப்புக் கேட்கும் அருமையான மந்திரம் இது.

வேங்கடேஸ்வர சுப்ரபாதம்: க்ஷமஸ்த்வம் க்ஷமஸ்த்வம் சேஷ சைல சிகாமினே என்று பிழை பொறுக்க வேண்டுகிறோம். சுந்தரர் பாடிய தேவாரத்திலும் சிவனின் பெருமைகளக் கூறுகையில் கல்லால் அடித்தது, எச்சிலால் அபிஷேகம் செய்தது முதலிய எல்லாவற்றையும் பொறுத்தாயே, உன்னுடைய இந்தக் கொள்கைதான் என்னை உன்பால் ஈர்த்தது என்கிறார்.

இப்படி மனமுருகிப் பிரார்த்தித்து எளிய வழியில் பாவச் சுமைகளை இறக்கிவிடலாமே!

****