சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

Pictures are taken from other sites vaimanika.com and Bharat Gyan.Thanks.

 

சுவர்க்கத்துக்கு நேரடி விமான சர்வீஸ்!!

(This article is posted in English as well)

இந்து மத நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் விமானம் பற்றிய குறிப்புகள் உள்ளன. உண்மையிலேயே காற்றடைத்த பலூன் விமானம் செய்வது பற்றிய சம்ஸ்கிருத நூல்களும் (வைமானிக சாஸ்திரம்) இருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் வரும் விமானங்கள், —-தேவலோக விமானங்கள்!

புறநானூற்றில் உள்ள செய்தியும் திருஞான சம்பந்தர் தேவாரப் படலில் உள்ள செய்தியும் சுவையான செய்திகள். சிவ பக்தர்களை தேவலோக விமானங்கள் ஏற்றிச் செல்லும் என்றும் அங்கு சென்றபின் அவர்கள் அரசர் போல ஆட்சி செலுத்தலாமென்றும் பாடுகிறார். ஆனால் ஒரு நிபந்தனை உண்டு; பக்தி சிரத்தையுடன் ஆடல் பாடலுடன் மனம் உருகிப் பாடுவோருக்கே இந்த விமானம் வரும். இதோ அவருடைய பாடல்:

 

“விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்

வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை

நண்ணிய நூலன் ஞான சம்பந்தன்

நவின்ற இவ்வாய்மொழி நலமிகு பத்தும்

பண்ணியல்பாகப் பத்திமையாலே

பாடியும் ஆடியும் பயில வல்லோர்கள்

விண்ணவர் விமானம் கொடுவர ஏறி

வியனுலகாண்டு வீற்றிருப்பாரே” (முதல் திருமுறை/ சம்பந்தர்)

வெங்குருவில் (சீர்காழியில்) பாடிய தேவாரம் இது.

சிலப்பதிகார காவியம் தோன்றுவதற்கு காரணம் கானக மாக்கள் கண்ட ஒரு அதிசய நிகழ்ச்சியாகும். மரத்துக்கு அடியில் ஒருமுலை இழந்த நிலையில் நின்றிருந்த கண்ணகியை அவர் கணவன் கோவலன் வந்து அழைத்துச் சென்ற காட்சியைப் பார்த்தவுடன் அவர்கள் அசந்து போய்விட்டனர். அப்போழுது காட்டுப் பகுதிகளில் இயற்கை அழகை கண்டு ரசிக்க வந்த செங்குட்டுவனிடம் இதைக் கூறியபோது அவருக்கும் வியப்பு மேலிடுகிறது. அருகே இருந்த தண் தமிழ்ப் புலவன் சாத்தனார் ஆதியோடு அந்தமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாக கூறுகிறார். பின்னர் இளங்கோ அடிகளின் அழியாச் சொற்களில் அற்புதமாக உருவெடுத்தது சிலம்பு. இதோ மலர்மாரி பொழிய கண்ணகி விண்ணுலகம் சென்றதை இளங்கோவின் சொற்களில் படியுங்கள்:

 

“ என்றலும் இறைஞ்சி, அஞ்சி,

இணை வளைக்கை எதிர்கூப்பி,

நின்ற எல்லையுள் வானவரும்

நெடுமாரி மலர் பொழிந்து,

குன்றவரும் கண்டு நிற்பக்,

கொழுநனொடு கொண்டுபோயினார்;

இவள் போலும் நங்குலக்கோர்

இருந்தெய்வம் இல்லை;

(பெரிய தெய்வம், குன்றக் குறவை, சிலப்பதிகாரம்)

புறநானூறு கூறும் புதுச் செய்தி

சங்க இலக்கியத்தில் பழமையான நூல் புறநானூறு. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி

எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி (புறம்.27, மு.க.சாத்தனார்)

சோழன் நலங் கிள்ளி மீது முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலில் நல்வினை செய்வோரை வான ஊர்தி ஏற்றி செல்லும் என்றும் அந்த விமானம் விமானி இல்லாமல் தானாக ஓடும் விமானம் என்றும் கூறுகிறார். வலவன் ஏவா என்று அடைமொழி கொடுத்ததில் இருந்து வலவன் ஓட்டிய விமானங்களும் அக்காலத்தில் இருந்தது சொல்லாமல் விளங்கும். இது போன்ற விமானத்தில் செல்லும் பேறு பெற்றோர் புலவர் பாடும் புகழ்மிகும் செயல்களைச் செய்தவர்கள் என்றும் சாத்தனார் பாடுகிறார்.

ராமர்—ராவணன்- குபேர விமானம்

ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானம் முதலில் குபேரனிடம் இருந்தது. அதை ராவனன் அபகரித்தான். ராமர், இலங்கையை வென்றவுடன் அது அவர் கைக்கு வந்தது. அதில் இலங்கையில் இருந்து அவர் அயோத்தி வரை விரைவாகச் சென்ரறதை நாம் அறிவோம்.

வால்மீகி ராமாயண யுத்த காண்டத்தில் (அத்தியாய 121) தசரத மன்னன் ராமருக்குக் காட்சி கொடுத்த சம்பவத்திலும் தசரதர் விமானத்தில் வந்ததைப் படிக்கிறோம். ஆனால் 5000 ஆண்டுக் கால நூல்களில் மொத்தம் மூன்று நான்கு இடங்களில் மட்டுமே வருவதால் இது உண்மை என்றும் அபூர்வமானது என்றும் அறிகிறோம். சீவக சிந்தாமணி போன்ற நூல்களில் பறக்கும் வாகனங்கள் வந்தாலும் அவை கதைக்குச் சுவையூட்ட எழுந்த கற்பனையா உண்மையா என்று அறிய முடிவதில்லை.

(Two articles on Subbaraya Shastry, author of Vaimanika Shastra, written by my brother S Nagarajan have been posted in this blog last year.)

contact swami_48@yahoo.com

 

Leave a comment

1 Comment

  1. Sowmya

     /  April 22, 2018

    He is a doctor even before he is 18!
    Tamizhans are great da!.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: