Mother’s Love: Gandhari’s First Night

Mother’s Love: Gandhari’s First Night

(Mothers! Choose anyone: work or child; childminder or you).

From the book SITA MUST LIVE: THE ROLE OF WOMEN IN SOCIETY written by Dr M Lakshmikumari:

 

“ An episode from the Mahabharata comes to mind which has some bearing in this context. After the war, the blind king Dritharashtra is consoling his much bereaved queen. He says, “Devi, there is no way out of this tragedy for which you are also responsible. Can you recall the words I spoke on our first wedding night when I entered into our bed chamber and saw you sitting mute and blind? I had hoped to see the world through your eyes but you decided to blindfold yourself without caring for me. No doubt, you earned for yourself the great distinction of being a pathivrata (chaste woman, loyal to husband). When our first child Duryodhana was brought to us, I put him on your lap and begged you to remove your blindfold and look at our first born and drench him with mother’s love, pouring through your eyes. But you cared not. Preserving your unique Pathivratya was more important for you than the well being of your child. Your children were brought up without tasting the rare elixir of mother’s love and no wonder, they grew up rebellious, selfish, non caring as embodiments of adharma. On the other side, Queen Kunti magnanimously gave way for Madri to accompany King Pandu to heaven, nurtured her own and Madri’s children with rare maternal love and care. They grew up to become embodiments of Dharma, and today they stand victorious.

Our present day world is getting filled with blind men and blindfolded women who have no time to take out of their selfish pursuits to care and nurture their children. Children losing their childhood could be the first warning signal— that humanity is about to lose its ‘human hood’.

The above write up was from the book Sita must live.

(I want to add one more episode: swami)

 

Picture of blind Dhritarashtra and blindfolded Gandhari

Mother’s power

A mother’s loving look can do miracles- is illustrated by another episode in the epic. Gandhari was given a boon for his lifelong pathivratya. Whatever or whoever she looks at will become indestructible. When she remembered theboon, she thought of using it to make her son Duryodhana invincible. She asked him to come naked before her so that her look will make him completely indestructible. When he was going all naked, Krishna came and ridiculed him for going naked. Having heard Krishna he covered his groin area with a cloth and appeared before his mum. She looked at him but the groin area did not get the magical protection. Krishna knowing this weakness, reminded Bhima when he had one to one mace fight with Duryodhana. As per Krishna’s signal, Bhima struck Duryodhana in the thigh area and eventually he was killed. A mother can save her child by her love is the moral of the story. Unfortunately the child was not ready to receive it fully in this story. That is the fate of people who follow adharma.

ராமாயண வழிகாட்டி -1

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 1

ச.நாகராஜன்

 

வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் இல்லாத நன்னெறிகளே இல்லை. வேதத்திற்குச் சமானம் என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்ட இந்த நூலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை!

 

சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது. ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார்.

 

24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்று பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

ராமாயணத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல ஸ்லோகங்களை இனம் காட்டும் முயற்சியே ராமாயண வழிகாட்டி.

இதன் மூலம் மூல ராமாயணத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் படிக்கும் ஆசை எழுந்தால் அதுவே இந்த முயற்சிக்கான வெற்றி.

 

மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

 

தன்யா: கலு மஹாத்மானோ முனயஸ்த்யக்த கில்பிஷா

ஜிதாத்மானோ மஹாபாகா யேஷாம் நஸ்த: ப்ரியா ப்ரியே

 

எவர்களுக்கு சுகதுக்கம் இரண்டும் இல்லாமல் இருக்கின்றதோ   அவர்கள் தான் மஹாத்மாக்கள். ஜிதேந்திரியர்கள். மஹாபாக்கியசாலிகள்.முனிவர்கள்.தன்யர்கள். மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 49ஆம் ஸ்லோகம்)

 

மஹான்களுக்கு சீதையின் நமஸ்காரம்

 

ப்ரியாந்ந ஸம்பவேத் து:க்க

       மப்ரியா ததிகம் பயம்

தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே

       நமஸ்தேஷாம் மஹாத்மனாம்

 

சுகமெனக் கொண்டதால் மன அஸந்துஷ்டி இல்லாதிருக்கிறது. துக்கமெனக் கொண்டதால் அனாவஸ்யமான மன ஏக்கம் உண்டாகிறது. எவர்கள் அவ்விரண்டுகளாலும் விடுபட்டிருக்கிறார்களோ அந்த மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம்

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 50ஆம் ஸ்லோகம்)

 

மஹாத்மாக்களை நமஸ்கரிப்பதால் ஆபத்து, மா சம்பத்து ஆகி விடுகிறது! By S Nagarajan

****************

வேத நாயும் மாதா கோவில் நாயும்

படத்தில் சர்ச்சில் பிரார்த்தனை செய்யும் அதிசய நாய்

உலகில் முதல் முதலில் நாயின் பெருமையைப் போற்றியது உலகின் மிகப் பழைய மத நூலான ரிக் வேதம் ஆகும். இந்துக்கள் எப்போதுமே பிராணிகள் தாவரங்களின் பால் அன்பு மழை பொழிபவர்கள். சம்ஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் உள்ள ஆயிரக் கணக்கான குறிப்புகள் இதை உறுதி செய்கின்றன. மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் வியாசரும் வால்மீகியும் நாய்கள் பற்றிய சுவையான கதைகளைச் சேர்த்துள்ளனர். டோக்கியோ விலுள்ள நாய் சிலை உலகப் புகழ்பெற்றது. இப்போது இத்தாலிய மாதா கோவில் நாய்க் கதை ஒன்றும் லண்டன் பத்திரிக்கைகளில் படங்களுடன் வெளியாகி இருக்கிறது. இதோ சுவையான நாய்க் கதைகள்:

 

இத்தாலியில் சான் டொனாசி என்னும் ஊரில் சாண்டா மரியா அசுந்தா மாதாகோவில் இருக்கிறது. அங்கு மரியா மார்கரிட்டா லோசி என்ற பெண்மணி ஏழு வயதான ‘டாம்மி’ என்ற நாயுடன் சர்ச்சுக்கு (மாதாகோவில்) போவது வழக்கம். இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர் காலடியில் ‘டாம்மி’ அமைதியாக அமர்ந்திருக்கும். சென்ற ஆண்டு அவர் இறந்துவிட்டார். அந்த நாய் திடீரென்று கடந்த இரண்டு மாதங்களாக தினமும் சர்ச் மணி அடித்தவுடன் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்துவிடுகிறது! அங்குள்ள பாதிரியாரும் அதை அன்புடன் உபசரிக்கிறார்.

 

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மேலை நாடுகளில் இரண்டாம் உலகப் போரில் சேவையாற்றிய பல நாய்களுக்கு சிலைகள் உண்டு. ஆயினும் போரில் சம்பந்தப்படாத ஜப்பானிய ஹசிகோவின் கதை மிகவும் உருக்கமானது. டோக்கியோ பல்கலைக்கழகத்தில் விவசாயத் துறை பேராசிரியர் யுனோ ஒரு நாயை வளர்த்தார். அதன் பெயர்தான் ஹசிகோ (எட்டாம் எண் என்று அர்த்தம்). பேராசிரியர் தினமும் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும்போது சிபுயா என்ற ரயில் நிலைய வாசலில் அது காத்து நிற்கும். அவர்களது இந்த நட்பு ஓராண்டு நீடித்தது. ஆனால் அவர் 1925ல் மூளையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். அவர் எப்படி ரயில் நிலையத்துக்கு வருவார்? ஆயினும் ஹசிகோ ஒன்பது ஆண்டுகளுக்கு அதே ரயில் நிலையத்துக்கு அதே நேரத்துக்கு தவறாமல் போய் பேராசிரியருக்காக காத்து நின்றது. ஜப்பானின் மிகப்பெரிய பத்திரிகை இந்த நாய் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டவுடன் அது உலகப் புகழ் பெற்றது. 1934 ஆம் ஆண்டு அந்த ரயில் நிலைய வாயிலில் நாயுக்கு ஒரு வெண்கலச் சிலை வைத்தனர். அந்த சிலைத் திறப்புவிழாவுக்கு ஹசிகோவும் வந்தது!

படத்தில் ஹசிகோ சிலை

1935ல் ஹசிகோ புற்றுநோய் காரணமாக இறந்தது. அதன் உடலைப் பதப்படுத்தி டோக்கியோ தேசிய மியூசியத்தில் வைத்திருக்கின்றனர். மஹா பாரதத்திலும் ராமாயணத்திலும் ரிக் வேதத்திலும் இந்துக்கள் ஏன் நாய்க் கதைகளை எழுதினர் என்பது இப்போது நமக்கு நன்கு விளங்கும்.

நாய்கள் நன்றியுடையவை மட்டும் அல்ல. அபூர்வ சக்திகளை யுடையதும் கூட. மனிதனை விட 3000 மடங்கு அதிகம் மோப்ப சக்தி/முகரும் சக்தி கொண்டவை. பூகம்பம், சுனாமி, எரிமலைச் சீற்றம் ஆகியவற்றை பல நாட்களுக்கு முன்னரே அறிந்து ஊளை இடத் துவங்கிவிடும். பூமிக்கடியில் கேட்கும் உறுமல் சப்தத்தை அவை கேட்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

 

ரிக் வேதத்தில் நாய்

ரிக் வேதம் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் உலகில் எழுந்த முதல் மத நூல். அதில் ‘சரமா’ என்ற நாய் இந்திரன் வளர்த்த நாய். அதற்கு சரமேயஸ் என்ற பெயரில் இரண்டு குட்டிகளும் உண்டு. அவை ஒவ்வொன்றுக்கும் 4 கண்கள். அதாவது அவற்றின் சக்தியைக் குறிப்பிட இப்படி சங்கேத மொழியில் வேத காலப் புலவர்கள் மொழிவர். பாணிக்கள் இந்திரனின் பசுக்களைத் திருடிய போது சரமாதான் அவைகளைக் கண்டுபிடித்தது. அதன் குட்டிகளான சரமேயஸ் யம தர்ம ராஜனின் காவலர்கள். அதாவது சாவு வருவதை முன் கூட்டி அறிவிக்கும் சக்தி படைத்தவை!

(கிரேக்கர்கள் இதை ஹெர்மிஸ் என்று மாற்றி அவர்கள் புராணத்தில் சேர்த்துவிட்டனர். சம்ஸ்கிருத ‘ஸ’ கிரேக்க மொழியில் ‘ஹ’ ஆக மாறும். இதனால்தான் ‘சி’ந்து நதி ஆட்களை ‘ஹி’ந்துக்கள் என்று மொழிந்தனர்)

ரிக் வேத காலத்தில் மனிதன் நாய் வளர்த்த செய்தி இதில் கிடைக்கிறது. அது மட்டுமா? அதற்கு பெயர் வைத்தது, அதன் சேவைக்கு நன்றி கூறும் முகத்தான் அவை பற்றி கவிதை பாடியது ஆகியவற்றையும் எண்ணி இந்துக்கள் பெருமைப்படலாம்.

படத்தில் தத்தாத்ரேயர் (ரவிவர்மா ஓவியம்)

மகாபாரதத்தில் நாய்

பாண்டவர்கள் தங்கள் இறுதிக் காலத்தை புனித திசையான வடக்கில் இருக்கும் மேரு மலையை நோக்கி நடந்தே கழிக்க எண்ணுகின்றனர். தர்மபுத்திரனை ஒரு நாய் பின்தொடர்ந்து செல்கிறது. இப்படிப் போகும் வடதிசைப் பயணத்தை மகா பிரஸ்தானம் என்பர். சங்க காலத் தமிழர்கள் வட திசை நோக்கிச் செல்லுவதற்குப் பதிலாக வட திசை நோக்கி அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது புறநானூற்றில் உள்ளது பாண்டவர்கள் ஒவ்வொருவராக சுருண்டு விழுந்து இறந்தனர். கடைசியாக மிஞ்சியது தர்மனும் நாயும்தான். சொர்க்கத்துக்குப் போனபோது நாயை உள்ளேவிட முடியாது என்று சொல்லிவிட்டனர். நாய்க்கு அனுமதி இல்லாவிடில் எனக்கு சொர்க்கமே வேண்டாம் என்று சொன்னார் தர்மர். உடனே அந்த நாய் தான் தர்ம தேவதை என்று சுய ரூபத்தைக் காட்டி இறுதிக் காலத்திலும் தர்மன் கடைப்பிடித்த தர்மத்தைப் பாராட்டியது.

 

ராமாயணத்தில் நாய்

உத்தரகாண்டம் 60, 61 அத்தியாயத்தில் வால்மீகி முனிவர் ஒரு நாயின் கதையைக் கூறுகிறார். ஒரு நாயை ஒரு பிராமணன் அடிக்கவே அது ராம பிரானிடத்தில் புகார் செய்கிறது. ராமன அந்த பிராமணனுக்கு ‘சம்மன்’ அனுப்பவே அவன் கோர்ட்டில் ஆஜர் ஆனான். அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று மந்திரிகளைக் கேட்டபோது பிராமணர்களைத் தண்டிக்கமுடியாது என்று கூறிவிட்டனர். ஆனால் ராமன் அந்த பிராமணனை ஒரு மடத்துக்குத் தலைமை அதிகாரியாக நியமித்து ‘தண்டணை’ கொடுத்தார்! எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உத்தமபுத்திரன், சத்திய ஆத்மா ராமனா இப்படிச் செய்கிறான்? என்று புருவத்தை உயர்த்தினர். இதன் காரணம் நாய்க்குக் கூடத்தெரியுமே என்று ராமன் குறிப்பால் உணர்த்தினார்.

நாய் தன் கதையைக் கூறியது. பூர்வ ஜன்மத்தில் ஒரு மடத்தின்/ கல்வி நிறுவனத்தின் தலைவர் தாம் என்றும் அப்போது பணத்தைக் கையாண்ட குற்றத்தால் இப்போது அந்த பிராமணன் கையில் அடிபட நேரிட்டது என்றும் விளக்கியது. எல்லோருக்கும் விளங்கியது. அந்தப் பிராமணன்அதிகாரியாகப் பதவி ஏற்று தவறு செய்வான், தன்னாலேயே நரகத்துக்குப் போவான் என்று.

இந்தக் கதையில் பல நீதிகள் இருக்கிறது. விரிவஞ்சி விடுக்கிறேன்.

 

ஆதி சங்கரர் கண்ட 4 நாய்கள்

உலக மகா தத்துவ மேதை ஆதி சங்கரர் காசி மாநகரத்தில் 4 நாய்களுடன் வந்த சண்டாளனைப் பாதையில் இருந்து விலகச் சொன்னபோது அவன் கேட்ட கேள்வி ஆதி சங்கரருக்கு ஞானம் அளித்தது. அந்த சண்டாளனை பரமேஸ்வரனாகவும் 4 நாய்களை 4 வேதங்களாகவும் அவர் உணர்ந்தார்..

தத்தாத்ரேயர் என்னும் திரிமூர்த்தி அவதாரம் 4 வேதங்களை 4 நாய்களாக அழைத்து வரும் அற்புதமான படத்தை பாரதம் போற்றும் ஓவியர் ரவிவர்மா அழகாக வரைந்துள்ளார்.

புண்ய சீலர் நாமதேவ் வைத்திருந்த உணவுப் பண்டத்தில் ஒரு பகுதியை நாய் திருடிக் கொண்டு ஓடியது. அவரும் அதன் பின்னால் ஒடினார். எதற்காக? நெய் இல்லாமல் அதைச் சப்பிட்டால் நாயின் குடல் வெந்து விடுமே என்று எண்ணி நெய்யையும் அதற்குக் கொடுக்க ஓடினார்.

இந்து மதம் முழுதும் மரம், செடி, கொடி, பிராணிகள் எல்லாம் போற்றப்படுகின்றன. இப்போது வெளி நாட்டினர் இதை எல்லாம் படம் பிடித்து நாம் இன்று கூறும் புறச் சூழல் விடயங்களை இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவிட்டனர் என்று டெலிவிசனில் காட்டுகின்றனர் (அண்மையில் நாகப் பாம்புகளைப் போற்றும் நாக பஞ்சமி நிகழ்ழ்சிகளை லண்டனில் கண்டோம்)

இந்து என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

 

Please read other animal stories posted earlier in this blog:

1. Animal Einsteins (Part 1 and Part 2)

2. Can parrots recite Vedas?

3. Why do animals worship Gods?

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Elephant Miracles

6). 45 Words for Elephant

7. Can Birds Predict your Future?

8. Two Little Animals That Inspired Indians

9. Three Wise Monkeys from India

10. Mysterious Tamil Bird Man

11. Gajendra Moksha in Africa

12.அதிசய பறவைத் தமிழன்

Contact London Swaminathan at swami_48@yahoo.com

 

Vedic Dog and Church Dog

 

Picture of the dog that regularly attends Mass in an Italian Church

Ramayana Dog and Mahabharata Dog

Dog stories are numerous and very interesting. Hindus were the first to introduce them in to literature. We have the earliest reference to a dog in Rig Veda. That is the oldest reference of this faithful creature. Mahabharata and Ramayana have two interesting dog stories. We have the most famous dog statue in Tokyo railway station. But a church dog story in London newspapers made me to write this article. Let us look at them one by one.

 

Tommy is a seven year old German shepherd dog who used to accompany its owner Maria Margerita Lochi. Margerita went to Santa Maria Assunta Church in San Donaci in Italy. The dog went with her to the church and sat at her feet during mass. Everybody loved the dog. But its owner Maria died last year. The dog has started coming to mass in the Church for the past two months. On the day of Maria’s funeral, it followed her coffin and joined the mourners. Now it comes to the church as soon as the church bell rings for the mass. Father Donato Panna told the news papermen that the dog is well behaved and doesn’t make any sound.

The most famous Tokyo dog Hachiko was raised by a professor at the University of Tokyo. Every day the dog came to Shibuya railway station to receive him. After a year of this strange friendship, Professor H. Ueno died suddenly. He never came to the station, but the dog Hachiko came to the station looking for his master everyday  for nine years!! The dog died of cancer in 1935. Even before it died, a newspaper story about the dog made it a national celebrity. In 1934, one year before its death, people erected a bronze statue in front of Shibuya Railways station and the dog also took part in the opening ceremony! After its death, is body was stuffed and is kept in the National Museum in Tokyo.

 

Now we know why Rig Veda gave so much importance to the first dog in human history, Sarama and its two children Sarameyas. Now we understand why Vyasa of Mahabharata and Valmiki of Ramayana introduced two dog stories in the epics.

Picture of Dattatreya with the four dogs

Dog in Rig Veda

Sarama was the dog of Indra. It pursued and recovered the cows stolen by the Panis. Some scholars interpreted it symbolically. But whatever may be the truth, Hindus were the first one to raise a faithful dog and use it for guarding the property. We gave them due credit and now we know the name for at least 3500 years. It had two children called Sarameyas each with four eyes.  The Greeks copied this story from us and created a character called Hermes (They change S to H and that is how the word Hindu came from the River Sindhu). Rig Vedic Rishis were grateful and immortalised Sarama.

Sarameyas were the watchdogs of Yama.

 

Dog in Mahabharata

Dogs are always associated with Yama, God of Death. If a big calamity or death is going to happen, dogs will know it well in advance and bark or howl for several days before that event. We read such stories before big earthquakes or tsunamis or volcanic eruptions. Scientists now know the reason for their strange behaviour. They are thousand times more sensitive than human beings. They can feel the tremors deep beneath the ground. Their smelling is 3000 times more powerful than humans. When Pandavas decided to end their life, what is called Mahaprathanika, a dog was taken by the eldest of the Pandavas, Dharma (See 17th Parva- Mahaprastanika Parva). Tamils also did some sort of ritual sacrifice called Vatakkiruththal, that is fasting to death facing North. Pandavas also travelled towards Mount Meru in the holy direction North and one by one died on the way. Last was Dharma. When he went to the heaven, God of death refused entry/permission for the dog. Immediately Dharma also declined the offer of entry. He told the guards if the dog was not allowed he would not come in. Then the dog showed its real face, ‘God of Dharma’ itself.

 

We see two points here.1.Dharma wont deviate from the path of dharma( morality) even if it is obtaining heaven.2.Dogs are given so much importance because they are friends of human beings. Rig Veda was the first book to acknowledge it.

Picture of the most famous dog Hachiko in front of Shibuya Railaway Station,Tokyo

 

Dog in Ramayana

The dog story in Uttarkanda (chapter 60,61) of Ramayana has some sense of humour. A dog went to Rama and complained that a Brahmin hurt it without any reason. Immediately Rama summoned him and admonished him. When he asked the ministers what punishment the Brahmin should be given, they told Rama a Brahmin is exempted from punishments. But Rama made the Brahmin a head of an institution to the astonishment of his ministers. When the ministers questioned him about it he told them that the dog knows it well. The dog explained that in its previous birth it was the head of that institution and misappropriated money. So by giving that position he is liable to commit sins and go to hell. Power corrupts and absolute power corrupts absolutely!

 

Adi Shankara and the 4 Dogs

We have lots of references to dogs in Hindu religious literature. Adi Shankara shunned a Chandala( low caste) who came with four dogs. Later he realised that the Chandala was Lord Parameswara and the four dogs were four Vedas. Lord Dattatreya’s four dogs were four Vedas. Lord Bhairava’s vehicle (Vahana) is a dog. Saint Namdev gave a dog his whole food when it stole part of it.

Lord Krishna in Bhagavad Gita (5-18) says,

“ Sages see with an equal eye, a learned and humble Brahmin, a cow, an elephant, or even a dog or an outcaste”.

 

Please read other animal stories posted earlier in this blog:

1. Animal Einsteins (Part 1 and Part 2)

2. Can parrots recite Vedas?

3. Why do animals worship Gods?

4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri

5. Elephant Miracles

6). 45 Words for Elephant

7. Can Birds Predict your Future?

8. Two Little Animals That Inspired Indians

9. Three Wise Monkeys from India

10. Mysterious Tamil Bird Man

Contact London Swaminathan at swami_48@yahoo.com

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

 

Murugan Statue at Batu Caves, Malaysia

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை- 3

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்

அருணகிரிநாதரின் திருப்புகழில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவார செல்வாக்கையும் மாணிக்கவாசகரின் திருவாசகச் செல்வாக்கையும் நன்கு காணமுடியும். இருந்தபோதிலும் அவர் சம்பந்தருக்குதான் அடிமை என்பதை அவரே திருப்புகழ் பாடல்களில் கூறுகிறார். 1300க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இதில் 149 பாடல்களில் அவர் திரு ஞான சம்பந்தப் பெருமானை நெஞ்சாரப் புகழ்கிறார், போற்றுகிறார். அவரைப் போல அமிர்த கவி இயற்ற அருள்  புரியுமாறு முருகப் பெருமானிடம் இறைஞ்சுகிறார். இந்த 149 பாடல் மேற்கோள்களையும் இங்கே கொடுத்தால் இந்தக் கட்டுரை புத்தக அளவுக்குப் பெருத்துவிடும். இதோ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில எடுத்துக் காட்டுகள்:

 

புமியதனில் ப்ரபுவான

புகலியில்வித் தகர்போல

அமிர்தகவித் தொடைபாட

அடிமைதனக் கருள்வாயே;

சமரிலெதிர்த் தசுர்மாளத்

தனியயில்விட் டருள்வோனே

நமசிவயப் பொருளானே

ரசதகிரிப் பெருமானே

 

சம்பந்தரைப் புகலி (சீர்காழி) வித்தகர் என்று புகழ்ந்து அவரது பாடல்களை அமிர்தம் போன்றவை என்றும் போற்றுகிறார்.

பொதுவாக அவர் நால்வரின் தெய்வத் தமிழ் பாடல்களை “ஆரண கீத கவிதை, உபநிடத மதுர கவிதை, ஞானத் தமிழ் நூல்தாளக் கவிதை, பக்திமிக இனிய பாடல்” எனப் பாராட்டுகிறார்.

ஞான சம்பந்தருடன் வாதம் செய்து தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏறிய மதுரை சம்பவத்தைப் பல பாடல்களில் குறிப்பிடுகிறர். எப்போதெல்லாம் சம்பந்தரைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் தமிழைப் புகழ்வதையும் காண்கிறோம். அன்று ஞான சம்பந்தர் இல்லாவிடில் தமிழே அழிந்திருக்கும் என்பது அருணகிரியின் கணிப்பு.

 

செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானமூறு

செங்கனி வாயிலோர் சொல் அருள்வாயே

பஞ்சவனீடு கூனுமொன்றிடு தாபமோடு

பஞ்சவறாதுகூறு சமண்மூகர்

பண்பறுபீலியோடு வெங்கழுவேற வோது

பண்டித ஞான நீறு தருவோனே

 

இன்னொரு பாடலில்

அழுதுலகை வாழ்வித்த கவுணியகுலாதித்த

அரிய கதிகாமத்தில் உரிய அபிராமனே—என்பார்.

சம்பந்தரின் ஊராகிய சீர்காழியில் பாடிய திருப்புகழ்களில் மறவாமல் அவரைப் பாடுகிறார்.

சேனக்குரு கூடலில் அன்று ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து

சேனைச் சமணோர் கழுவின் கண்மிசையேறத்

தீரத் திருநீறு புரிந்து மீனக்கொடியோன் உடல் துன்று

தீமைப் பிணி தீர உவந்த குருநாதா

என்று அற்புதமாகப் பாடுகிறார்.

 

அதே சீர்காழியில் பாடிய வேறு ஒரு பாடலில்

சமயமும் ஒன்றிலை என்ற வரும்பறி

தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்

என்று தமிழையும் ஞான சம்பந்தரையும் ஒருங்கே புகழ்கிறார்.

 

ஒரு பாடலில் பாண்டிய மன்னனை தெற்கு நரபதி என்றும் சம்பந்தரை கவுணியர் பெருமான் என்றும் துதிக்கிறார்:

 

புத்தர் அமணர்கள் மிகவே கெடவே

தெற்கு நரபதி  திருநீறிடவே

புக்க அனல்வய மிகஏடுயவே உமையாள்தன்

புத்ரனென இசைபகர் நூல் மறநூ

கற்றதவமுனி பிரமாபுரம்வாழ்

பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவானே.

 

சம்பந்தரை முருகப் பெருமானின் அவதாரம் என்று போற்றுவது சைவ மரபு. அதை இந்தப் பாடல் உறுதிசெய்துவிட்டது.

சம்பந்தப் பெருமான் ஞானப் பாலருந்தியதையும் பாட மறக்கவில்லை:

உமைமுலைத் தருபாற்கொடு

உரிய மெய்த் தவமாக்கி நலுபதேசத்

தமிழ்தனை கரைகாட்டிய திறலோனே

சமணரைக் கழுவில் ஏற்றிய பெருமாளே— என்பர்.

ஞானசம்பந்தரைப் பர சமயக் கோளரி என்றும் போற்றிப்பரவுகிறார். இருபது பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சம்பந்தரையும் அவர்தம் லீலைகளையும் துதிபாடுவதால் அருணகிரியை சம்பந்தரின் அடிமை என்பதில் தவறு ஒன்றுமிலை.

 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தர் வாழ்க! புகலி வித்தகன் புகழ் பாடிய அருணகிரி வாழ்க!! தெய்வத் தமிழ் வாழ்க!!!

 

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

3.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

 

நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

சம்ஸ்கிருதச் செல்வம்-3 by S Nagarajan 

நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

 

அந்தப் புலவர் ஊர் ஊராகச் செல்பவர். பலரையும் பார்த்த பழுத்த அனுபவஸ்தர். ஒரு நாள் தான் கண்ட நல்லவர்களை எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தார். அவர்களின் மேன்மையை ஒரு பாடலாகப் பாட எண்ணினார். அவர்களை யாருடன் ஒப்பிடலாம்? யோசித்தார்.

 

முதலில் பரந்த கடலைப் பரந்த நெஞ்சம் உள்ள அவர்களுடன் ஒப்பிடலாமா! அது உப்புக் கரிக்குமே

க்ஷாரோ வாரிநிதி:

 

குளிர்ந்த சந்திரனுக்கு அவர்களின் குளிர்ந்த பார்வை மற்றும் மனத்திற்காக ஒப்பிடலாமா?

சந்திரனுக்குக் களங்கம் உண்டே! நல்லவருக்குக் களங்கமே கிடையாதே!

களங்க கலுஸ்சந்த்ரோ

 

பிரகாசமான சூரியனுக்கு அவர்களின் பிரகாசத்தை ஒப்பிடலாமா?

ஆனால் சூரியன் சுட்டெரிக்குமே! அவர்கள் ஒரு நாளும் யாரையும் எரித்தது இல்லையே!

ரவி ஸ்தாபக்ருத:

 

மழை பொழியும் மேகத்திற்கு அவர்களது வள்ளன்மையை ஒப்பிடலாமா? ஆனால் மேகமோ சபல புத்தியுடையது. சில சமயம் பொழியும். சில சமயம் பொழியவே பொழியாது. என்றுமே பொழியும் வள்ளல்களுக்கு அதை ஒப்பிடுவது சரியில்லையே!

சரி வானம் ஒப்பிடுவதற்கு சரிப்படுமா. அதன் அகன்ற தன்மையைச் சொல்லலாமா! ஆனால் வெறும் சூன்யமான இடமாயிற்றே! சரிப்படாது.

 

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல:

 

சரி ஆழ்ந்த தன்மையைக் குறிக்க பாதாளத்தை ஒப்பிடலாமா! அங்கு பாம்புகள் அல்லவா நிறைந்திருக்கும். நல்லோரிடம் விஷம் ஏது?

சரி, ஸ்வர்க்கத்தில் உள்ள கேட்டவற்றையெல்லாம் வாரி வழங்கும் காமதேனுவுடன் ஒப்பிடலாமா? ஆனால் அது  கேவலம் ஒரு மிருகம் தானே! நல்லவர்கள் மனிதர்கள் ஆயிற்றே! ஒப்பிடுவது சரியில்லையே!

 

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

 

சரி,கற்பகத் தருவை ஒப்பிடலாமா! அதுவோ மரம்; அதுவும் சரியில்லை.

சரி,நினைத்ததை வழங்கும் சிந்தாமணிக்கு ஒப்பிடலாமா. ஹூம், அது வெறும் கல்! கல்லுடனா நல்லவர்களை ஒப்பிடுவது?

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

புலவர் குழம்பிப் போனார். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?

யாருடனும் ஒப்பிட முடியாது. தன் இயலாமையை அப்படியே கவிதையாகப் பொழிந்து விட்டார். பாடலை

முழுவதும் பார்ப்போம்:

 

க்ஷாரோ வாரிநிதி: களங்க கலுஸ்சந்த்ரோ ரவி ஸ்தாபக்ருத:

பர்ஜன்யஸ்சபலாஸ்ரயோ(அ)ப்ரபடலாத்ருஷ்ய: ஸுவர்ணாசல: I

ஷூன்யம் வ்யோம ரஸா த்விஜிஹ்ன விதூதா ஸ்வர்கமதேனு: பசு:

காஷ்டம் கல்பதருர்த்ருஷஸ்த்சுரமணிஸ்தத்

கேன சாம்யம் சதாம் II

 

 

கடலோ உப்புக் கரிக்கும்.சந்திரனோ களங்கமுடையது. சூரியனோ சுட்டெரிக்கும். மழைமேகமோ சபலமானது.வானமோ சூன்ய மயம். பாதாளமோ பாம்புகள் நிறைந்தது.ஸ்வர்க்கத்தில் உள்ள காமதேனுவோ ஒரு மிருகம். கற்பகத் தருவோ ஒரு மரம். சிந்தாமணியோ ஒரு கல். நல்லவர்களை யாருடன் தான் ஒப்பிடுவது?!

 

இது அமைந்துள்ள சந்தம்  சார்தூலவிக்ரிதம் என்னும் சந்தம்.

 

*****************  

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை 2

டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்

தமிழ் இலக்கியத்தில் மருத்துவ நூல்களில் நோய்களின் பட்டியலைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியத்தில் ஏராளமான நோய்களை பல (திருப்புகழ்) பாடல்களில் பட்டியலிட்ட ஒரே பக்தர் அருணகிரிநாதராகத் தான் இருப்பார்! இதற்கு என்ன காரணம்?

அருணகிரிநாதர் எல்லோருக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் நோய்களுக்கு ஒரே டாக்டர் முருகப் பெருமான்தான் என்று உணர்ந்ததே ஆகும். கடவுளை டாக்டராகப் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல. ‘ருத்ரம்-சமகம்’ என்ற யஜூர் வேதப் பகுதியில் கடவுளை டாக்டர் என்று துதி பாடுகின்றனர்.

‘அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்’ என்பதில் பிஷக் என்பது டாக்டர் என்று பொருள்.

இந்த ருத்ரத்தில்தான் முதல் முதலாக நமச்சிவாய என்ற அரிய பெரிய மந்திரம் வெளியானது.

பிறவிப் பிணிக்கு மட்டும் இன்றி வாழும் போது உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் முருகனே அருமருந்து என்பது அருணகிரிநாதர் முடிவு.

அருணகிரிநாதர் அவர்தம் திருப்புகழ் பாடல்களில் நோய்களை வரிசைபடுத்தி பாடும் அழகே தனி அழகுதான். அந்தக் காலத்தில் பொதுவாக கவலை தந்த நோய்கள் என்ன என்னும் சமூகவியல் ஆய்வுக்கும் இவை துணை செய்யும் என்பதில் ஐயமில்லை. இதோ சில பாடல்கள்:

 

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

விழிவலி வறட்சூலை காயாசுவாசம்வெகு

சலமிகு விஷப்பாக மாயாவி கார பிணி—-யணுகாதே

 

பொருள்: தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சள்காமாலை ரத்தசோகை, சுரம், கண்வலி, வறள் என்ற வயிற்று வலி, காச நோய் (டி.பி.), மூச்சுப் பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், மாயையால் வரும் விகாரமான நோய்கள் என்னை அணுகாதவாறு காப்பாயாக

டயாபடீஸ் என்னும் சர்க்கரை வியாதி மிக நீண்ட காலமாக இந்திய மக்களை வாட்டிவருவதால பல பாடல்களில் நீரிழிவு, வெகு சலம் என்று குறிப்பிடுகிறார். கண் வலிக்கு தூய தமிழில் விழி வலி என்று கூறுவதும் படித்து இன்புறத்தக்கது.

இன்னும் ஒரு பாடலில்

 

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி—விடமே நீ

ரிழிவுவிடாத தலைவலி சோகை

யெழுகளமாலை—யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறுமுள நோய்கள்

பிறவிகள் தோறு மெனை நலியாத

படியுன தாள்கள்—அருள்வாயே

 

இருமல், முயலகன் என்னும் வலிப்பு நோய், வாதம், மூக்கு எரிச்சல், விஷ நோய்கள், நீரிழிவு (டயபடீஸ்), நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றிவரும் கழலை, மகோதர நோய், நுரை ஈரலில் ஏற்படும் கோழை, நெஞ்சு எரிச்சல், தீராத வயிற்றுவலி, மிகவும் வலி தரக் கூடிய பிற நோய்கள் எந்தப் பிறவியிலும் என்னை அணுகாதபடி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

தீராத தலை வலி என்பது மைக்ரைன் என்னும் ஒற்றைத் தலைவலி ஆகும்.நெஞ்சு எரிச்சல் என்பது அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நோயாக இருக்கலாம். இதோ இன்னும் ஒரு வியாதிப் பாடல்:

 

வாதம் பித்தமிடா வயிறீளைகள்

சீதம் பற்சனி சூலை மகோதர

மாசங்கட் பெரு மூல வியாதிகள்— குளிர் காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி

யோடுந் தத்துவ காரர் தொணூற்று

வாறுஞ் சுற்றினில் வாழ் சதிகாரர்கள்—-வெகுமோகர்

 

இதில் வாத, பித்த, கப நோய்கள், பானை வயிறு, சீதபேதி, ஜன்னி, வயிற்றுவலி, மகோதரம், கண் நோய்கள், மூல வியாதி, குளீர் ஜுரம்,காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி என பெரிய பட்டியலிட்டுவிட்டார்.

இவ்வாறு வியாதிகளைப் பட்டியல் இட்டுவிட்டு இவைகள் வரக்கூடாதென்று அவர் வேண்டுவது அவருக்காக அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். முருக பக்தர்களை இந்த நோய்கள் அணுகாது என்பதோடு, அப்படியே முன்கூட்டியே நோய்வந்தவர்கள் இந்த திருப்புகழ் பாடல்களைப் படித்தால அந்த நோய்கள் பறந்தோடிவிடும் என்பதும் கண்கூடு.

கந்த சஷ்டிக் கவசம் உள்பட பெரும்பாலான கவசங்களில் நோய்களின் பெயர்கள் சுருக்கமாக மட்டுமே வரும். ஆனால் நம் மீது கருணைகொண்ட அருணகிரி அத்தனை நோய்களையும் பட்டியல் போட்டு முருகனிடம் வேண்டி நமக்கு அருள் பாலிக்கிறார்.

இதோ இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் தருகிறேன்:

 

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்தமூல

நீள்குளிர் வெதுப்புவேறு—முளநோய்கள்

நேருரு புழுக்கள் கூடு நான்முக நெடுத்த வீடு

நீடிய விரத்த மூளை— தசைதோல் சீ

பாரிய நவத்துவார நாறுமு மலத்திலாறு

பாய்பிணி யியற்று பாவை— நரி நாய் பேய்

 

இதில் முன்கூறியவாறு வியாதிகளை வரிசைப்படுத்திவிட்டு இந்த 9 துவாரங்கள் உள்ள உடல், புழுக்கள் உடையது. நரியும் நாயும் கோட்டானும் கழுகுகளும் உண்ணும் பாழான உடல் எடுத்து வீண்பொழுது போக்கமாட்டேன் என்கிறார். கடைசியாக சிவஞான சித்தி பெற நோயற்ற உடல் வேண்டும் என்று வேண்டுகிறார்.

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி

வறல் சூலை குட்டமொடு—குளிர்தாகம்

மலநீ ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை

வருநீர டைப்பினுடன் …….. வெகுகோடி

சிலை நோயடைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை

தெளியாவெ னக்குமினி—முடியாதே

சிவமார் திருப்புகழை எனு நாவினிற்புகழ

சிவஞான சித்திதனை—யருள்வாயே

 

இதிலும் வலிப்பு, பித்தம் கண்டமலை, சிலந்திப் புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர் தாகம் நீரிழிவு, மகோதரம், கபம், வாந்தி, மூத்திரக் கடுப்பு முதலான கோடிக்கணக்கான நோய்களை பெற்று உடல் எடுத்து இனியும் திரிய முடியாது. மங்கலம் நிறைந்த உன் திருப்புகழை நாவாரப் பாட சிவஞான சித்தி அருளவேண்டும் என்று வேண்டுகிறார்.

மீண்டும் ஒருமுறை நினைவுகூறுவதில் தவறில்லை. இது அருணகிரி தனக்கு வந்த நோய்கள் அல்லது வரக்கூடிய நோய்கள் என்று நினைத்துப் பாடவில்லை. நம்மை எச்சரிக்கவும், நோய்வந்தாலும் திருப்புகழைப் பாடுவோரை அது ஒன்றும் பாதிக்காது என்று உணர்த்தவுமே இப்படி பல பாடல்களில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.

நாமும் டாக்டர் முருகனை வணங்கிப் பிறவிப் பிணியிலுமிருந்தும் உடற்பிணியிலிருந்தும் விடுதலை பெறுவோமாக.

 

திரு கோபால சுந்தரம் கொடுத்த பொருள் விளக்க உரையை பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளேன். கௌமாரம்.காம்—க்கு நன்றி.

முந்தைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்:

1.தனிமையில் இனிமை: அருணகிரிநாதர்

2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி

Contact London Swaminathan at swami_48@yahoo.com for the list of all the 400+ articles.

யார் மிக மிகக் கீழானவன்?

 

Picture of Hare Krishna Bhajan and dance

சம்ஸ்கிருதச் செல்வம்-2 by S Nagarajan

2. யார் மிக மிகக் கீழானவன்?

 

கவிஞருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது – யார் மிக மிகக் கீழானவன் என்று! அது தெரிந்து விட்டால் அப்படிப்பட்டவருடைய தொடர்பை அறுத்து விடலாமில்லையா!

 

சிலர் சொன்னார்கள் பணம் இல்லாதவன் தான் கீழானவன் என்று.

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

சிலர் தனஹீனனைக் கீழானவன் என்று சொல்கின்றனர்

என்று பதிவு செய்து கொண்டார்.

 

பின்னர் மற்றும் சிலரைப் பார்த்துக் கேட்டார். அவர்களோ குணமில்லாதவன் தான் கீழானவன் என்றனர். நற்குணமில்லாதவர்கள் தாம் கீழானவர்கள் என்று அவர்கள் சொல்வதும் கவிஞருக்குச் சரியாகத் தான் பட்டது. அப்படியே அதைப் பதிவு செய்து கொண்டார்.

 

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய:

சிலர் குணஹீனனையே கீழானவன் என்று சொல்கின்றனர்.

 

தனஹீனனா அல்லது குணஹீனனா – இருவரில் யார் கீழானவன்!

 

குழம்பிய கவிஞரின் முன் வியாஸ பகவான் வந்தார்.

கவிஞர் தன் சந்தேகத்தை அவரிடம் கேட்க அவர் புன்முறுவல் பூத்தார். இருவரும் கீழானவர் இல்லை என்று கூறிய அவர் சரியான பதிலைச் சொல்லி விட்டுச் சென்றார்.

 

புளகாங்கிதம் அடைந்த கவிஞர் அதை அப்படியே பதிவு செய்து உலக மக்களின் நன்மைக்காக முழுவதுமாகப் பாடி வைத்தார்.

Picture of Harekrishna Chariot Procession in London

வியாஸர் சொன்னது என்ன?

 

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய:

 

அகில வேதத்திலும் விசேஷ ஞானத்தை உடைய வியாஸ பகவானோ நாராயணனை ஸ்மரணம் செய்யாதவனே உண்மையில் மிக மிகக் கீழானவன் என்றார்.

 

பாடலை முழுவதுமாகப் படித்து பெரும் உண்மையை நமக்காகத் தந்த கவிஞருக்கு நன்றி சொல்வோம்!

 

 

கேசித் வதந்தி தனஹீன ஜனோ ஜதன்ய:

கேசித் வதந்தி குணஹீன  ஜனோ ஜதன்ய: I

வ்யாஸோ வதத்யகிலவேத விசேஷவிக்ஞோ

நாராயண ஸ்மரணஹீன  ஜனோ ஜதன்ய: II

 

சிலர் தனஹீனனாக உள்ளவர்களைக் கீழானவர் என்று சொல்கின்றனர். சிலரோ குணஹீன ஜனங்களைக் கீழானோர் என்று சொல்கின்றனர். அனைத்து வேதங்களிலும் விசேஷ அறிவு படைத்தவரான வியாஸரோ நாராயண ஸ்மரண ஹீனனாக உள்ளவரையே மிகக் கீழானவர் என்று சொல்கிறார்!

 

அரிய உண்மையைத் தெரிந்து கொண்டோமல்லவா! நாராயணனை அனுதினமும் ஸ்மரிப்போமாக!!

 

இது அமைந்துள்ள சந்தம் வசந்ததிலகா சந்தம்!

 

***************

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை-1

தனிமையில் இனிமை:- அருணகிரிநாதர்

அவ்வையாரிடம் இனியது எது என்று முருகப் பெருமான கேள்வி கேட்க அவர் கூறிய பதில் இது: ஏகாந்தமே இனிது என்று கூறிவிட்டு அதைவிட இனிது ‘சத் சங்கமே’ என்று கூறுகிறார். ஆதி சங்கரரும் பஜ கோவிந்தம் (சத் சங்கத்வே நிஸ் சங்கத்வம்…..) பாடலில் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறார்.

 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே! (அவ்வையார்)

அருணகிரிநாதரும் திருப்புகழில் இதே கருத்தை ‘தனிமையில் இனிமை’ என்று வருணிக்கிறார்.

 

இனிமை தருமொரு தனிமையை மறைகளி

னிறுதி யறுதியி டவரிய பெறுதியை

இருமை யொருமையில் பெருமையை  வெளிபட மொழிவாயே

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள்: இன்பத்தை தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவுசெய்ய முடியாத இருமையில் ஒருமை என்ற கருத்தை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும் (இருமையில் ஒருமை என்பது சக்தி, சிவம் என்ற பேதமற்ற தன்மை அல்லது அஹம் பிரம்மாஸ்மி= அவன் நானே என்ற அத்வைதப் பெரு நிலை)

 

இன்னொரு பாட்டிலும் ஏகாந்த மவுன நிலை பற்றிப் பாடுகிறார்:

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்

அணுகொனா வகை நீடுமிராசிய

பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம்

 

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.

மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.

வேறு ஒரு இடத்தில் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:

 

வாசித்துக் காணொ ணாதது

பூசித்துக் கூடொ ணாதது

வாய் விட்டுப் பேசொ ணாதது

மாசர்க்குத் தோணொ ணாதது

நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது

என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார்.

பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

 

பேசா அநுபூதி

அருணகிரி நாதரே பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் கந்தர் அநுபூதியில் பாடுகிறார்.:

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளாயின பின்,

பேசா அநுபூதி பிறந்ததுவே

 

கடவுளைக் கண்டவர்கள் சும்மா இருப்பார்கள், மோனிகள் (மவுன நிலை) ஆகி சொல்லற்றுப் போய்விடுவார்கள். இதுதான் பேசா அநுபூதி.

ஆயினும் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். சிலர் மட்டும் பிரம்ம சாகரத்தில்= பேரானந்தக் கடலில் குதித்து முத்தெடுக்கப் போகும் முன், “அடடா, இப்பேற்பட்ட பேருண்மையை மக்களுக்கும் சொல்லிவிட்டு வருவோம்” என்று ஓடிவந்து விடுவார்களாம். அப்படிப்பட்ட ஞானிகளில் பரமஹம்சரும் ஒருவர். ஆகையால்தான் நமக்கு இந்த ரஹசியம் தெரிந்தது. ஞானசம்பந்தர், விவேகானந்தர், மாணிக்கவாசகர் எல்லோரும் இளம் வயதிலேயே இறைவனை அடைந்துவிடுவதன் ரகசியமும் இதுவே. சில ஞானிகள் தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்வர். ஞான சம்பந்தர், ராம பிரான் ஆகியோர் இப்படி தன்னுடன் இருந்தவர்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கீதையில்

கீதையில் கண்னபிரானும் ஏகாந்தம் பற்றிப் பேசுகிறார் (6-10)

யோகி யுஞ்சீத சததம் ஆத்மானம் ரஹசி ஸ்தித:

ஏகாகி யதசித்தாத்மா நிராசீ: அபரிக்ரஹ:

பொருள்: எப்போதும் ஏகாந்தத்தில் (ரஹசி) இருக்க வேண்டும் தன்னந்தனியனாய் உடலையும் உள்ளத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆசை இருக்கக் கூடாது. உடமைகள் எதுவும் இருக்கக் கூடாது. யோகியானவுடன் இப்படி உறுதிபெற வேண்டும்.

நாமும் தனிமையில் இனிமை காணும் பக்குவம் பெறுவோம்.

contact london swaminathan at swami_48@yahoo.com

Pallankuzhi (Mancala) Mystery

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

Did the board game Mancala/Pallankuzi/Alagulimane originate in South India? It looks like it.
Pallankuzhi is played on a rectangular board with 2 rows and 7 columns on either side. There are a total of 14 cups (kuzhi in Tamil language). Seeds, shells, small stones are all commonly used as counters in the board game. As the game proceeds, each player distributes the shells over all the pits. The players may capture the shells, as permitted by the rules of the game. The rules of capture depend on the variant of the game played. The game ends when one of the players captures all the shells, and is declared as a winner.

12 counters are placed in each cup except the middle of each row into which only 2 counters are placed. The starting player lifts the counters from any of his holes and, going counter-clockwise, distributes one counter in each hole. If he reaches the end of his cups he goes on his opponent’s side of the board. When the player drops his last counter, he takes the counter. This is what we get from the encyclopaedias. But this game is in many parts of Africa and Indonesian islands. What is the origin? Who invented it? It is a mystery.

 

My research shows that this game originated in India. There are valid reasons to believe so 1.The game is played all over India 2. Wherever Indians went for trade /commerce this game spread to that parts of the world. 3. The words used in the game are of Tamil or Sanskrit origin.4.We have a reference to this game in the ancient Pallava copper plates which is in two parts: Tamil and Sanskrit. Read the details below:

Pallaang Kuzi is the Tamil name and Mancala is the Hindi name for the game.

Picture from Zanzibar

Copper Plate Inscription

Pallava king Simhavarman’s Pallankovil Copper Plates, while mentioning a land donation to a Jain teacher Vajranandhi, gives the four borders of the donated land. One of the borders land mark is PALLANKUZI Ka meaning garden with Pallankuzi or a garden that looks like Pallankuzi with many pits. Whatever the meaning may be we have the word on a copper plate dated to 550 AD.

The Egyptians had played this game 3000 years ago. We have pits on the ground near Pyramids and in Ethiopia. I have already written in my post ‘DID INDIANS BUILD PYRAMIDS?’, that Indian workers were involved in the building of the pyramids. And from them the Africans might have learnt it. Our Trade links were strong with the Indonesian islands according to Kalidas and others. Kalidas refers to “Islands beyond Indian mainland” where from the spices came.

Picture from East Africa

India is a vast country. If the game is played in nook corner of India for thousands of years it must have originated here like Chess and Snakes and Ladders (Paramapatha Sopana Patam in South India). The words used in Mancala and Pallankuzi are native words. We used seeds (Vithai or Kottai in Tamil or shells).

 

Indonesians called this Congkak and Philippines called this Sungka which is the corrupted from of Sankya (Numbers in Sanskrit) Indonesians’ link with India and Madagascar was already explained in my posts: “India –Madagascar Link via Indonesia” and “Ancient Sanskrit Inscriptions in strange places” In my blogs. South East Asian Countries were ruled by Hindus for 1300 years from second century AD.

Picture from Philippines

Only the coastal areas in Africa knew this game which again showed that it was brought to them by ancient mariners. But slowly it got local words for the game and changes in the rules.

African/Caribean words such as Oware, Nanoware, Awale( Awari) have the Tamil word (Vidhai=Virai=Ware=seeds/nuts).

 

Indians were leading in Mathematics in the ancient world. Even the Greeks like Pythagoras learnt it from us. The world has accepted that Chess originated in India and slowly spread to the Western world. Many scholars believed that what we call Pythagoras theorem today, the value of Pi etc went from India. Pallankuzi/ Mancala is no exception. Needless to say it would not have originated in Ancient Africa or Indonesia where mathematical genius was lacking or at least not as good as India.

This game sharpens counting skills and improves mental calculation. Making a quick estimate of the seeds and judging the number of pockets (pits) to be filled requires one to be very attentive. Kannadigas call this game Alugulimane. The Hindi word for this game is Mancala. They attribute Arabic origin (nagala= moved) for this word. It did not make any sense in the meaning or the letters. Wikipedia says this word is used in Egypt, Syria and Lebanon, but it did not mean the same game.

Hindi Name Mancala

Mancala might have come from Mangala (auspicious). Tamils used the words Kasi, Pasu when they capture the counter. Sanskrit words like Sita Pandi, Raja Pandi, Kasi Pandi shows its Indian origin. More over Sita Pandi is the board game Sita played in Asoka vana in Sri Lanka. Native words like 3 Virai (Vidhai) and 6 Virai Attam were used. No mixture of foreign words. Wikipedia adds more than 800 Mancala games are known. This is one of the ancient games of Sri Lanka s well.

There is a long list of names for this game in different parts of the world. So the Arabic origin can’t be right. If anyone sticks to the Arabic origin for the word Mancala, then they have to explain how come it is played in South India with pure Tamil words. They must also explain why it has got different names in other parts of the world. In short Arabic origin is not correct. Arabic learnt all sciences from India which is a well known fact. Hindu numerals are called Arabic numerals because they took it to the western world. I have shown elsewhere in my blogs all the Arabian Night stories are from India adapted for the Arabs. Mancala may be a distortion of the Tamil words Man +Kuzi= sand pits. It is played by the villagers on the floor.

Pictures are taken from various websites. Thanks