இயற்கையில் கணித இரகசியம்! –2

Post No 1026; Dated 7th May 2014.

அறிவியல் துளிகள் 164

இயற்கையில் கணித இரகசியம்! –2
(பிபனோசி தொடரும் தங்க விகிதமும்) Part 2
by ச.நாகராஜன்

EAR cochlea

snail fibonacci

மனித காதின் அமைப்பும் பிபனோசி தொடர் எண்களின் படியே
உள்ளது! உடல் அமைப்பிலும் பிபனோசி தொடரைக் காணலாம்!

தங்க விகிதம் என்று கூறப்படும் 1.6 என்ற எண்ணின் அடிப்படையிலேயே எகிப்திய பிரமிட் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சுவையான விஷயம். உலகில் மிகவும் அழகிய கட்டிடங்கள் என்று கூறப்படும் கட்டிடங்களைக் கட்ட பெரிய வடிவமைப்பாளர்கள் தங்க விகிதத்தையே தேர்ந்தெடுத்துக் கட்டிடங்களை அமைக்கின்றனர்.

நத்தையின் சுருள் (spiral) வடிவம் பிபனோசி தொடர் எண்களை ஒட்டியே அமைந்துள்ளது. இன்னும் இயற்கையில் அமைந்துள்ள மிருகங்களில் வரிக்குதிரையின் வரிகள், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள், புலியின் உடலில் உள்ள கோடுகள் என அனைத்தையும் ஆராய்ந்த வல்லுநர்கள் இவை அனைத்தும் ஒரு நியதிக்குட்பட்டு இருப்பதைப் பார்த்து வியக்கின்றனர்.

இயன் ஸ்டீவர்ட் (Ian Stewart) என்னும் ஒரு கணித ஆர்வலர் இயற்கையில் உள்ள கணித இரகசியங்களைப் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். பிரபல விஞ்ஞான சஞ்சிகையான ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிக்கையில் பொழுதுபோக்கு கணிதம் என்ற தொடரை எழுதியவர் அவர். இயற்கை அமைப்பில் உள்ள கணித ரகசியங்கள் பற்றி அவர் விளக்கும் அனைத்து விவரங்களும் பிரமிப்பை ஊட்டுபவை.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் இதர விண்கற்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளும் ஒரு கணித நியதியின் படியே சுழல்கின்றன; நகர்கின்றன! சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் காலமான 365 நாட்கள் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பித்தால் எல்லாமே கணித நியதியில் தான் இயங்குகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

வியாழ (Jupiter) கிரகத்தை எடுத்துக் கொள்வோம். அதனுடைய மூன்று உபகிரகங்களின் பெயர்கள் அயோ, யூரோப்பா மற்றும் கனிமெட். இவைகள் வியாழ கிரகத்தை முறையே 1.77, 3.55 மற்றும் 7.16 என்ற நாட்கணக்கில் சுற்றுகின்றன. இந்த எண்களைப் பார்த்தால் ஒன்றின் இரு மடங்கே அடுத்ததாக அமைவது தெரிய வரும். இது தற்செயல் ஒற்றுமை அல்ல; இயற்கையின் கணித நியதியாக அமைந்த ஒரு உண்மை.

jupiter with its satellites

ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி வருவது அதன் வர்க்கம் எனப்படும். இரண்டை இரண்டால் பெருக்கினால் வருகின்ற நான்கு இரண்டின் வர்க்கம். ஒரு எண்ணை அதே எண்ணால் இரு முறை பெருக்கி வரும் எண் அதன் க்யூப் அல்லது கன சதுரம் எனப்படும். இரண்டை இரு முறை இரண்டால் பெருக்கி வரும் எண்ணான எட்டு அதன் க்யூப் ஆகும். கெப்ளர் கிரகங்களைப் பற்றி ஆராயும் போது சூரியனிலிருந்து எந்த ஒரு கிரகத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த கிரகம் உள்ள தூரத்தின் க்யூபை அந்த கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலத்தின் வர்க்க எண்ணால் வகுத்தால் எப்போதும் ஒரே எண் (Kepler’s Laws) வருகிறது என்பதைக் கண்டு அதிசயித்தார். அவர் ஆராய்ந்த ஆறு கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் இப்படி ஒரு அதிசயமான, இரகசியமான கணித ஒற்றுமை ஏன் இயற்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது.! அவரும் அவரது சகாவான டாக்டர் வாட்ஸனும் இதைப் பார்த்து பிரமித்தனர்!

ஓரியன் நட்சத்திர தொகுதியில் உள்ள மூன்று நட்சத்திரங்களை பூமியிலிருந்து பார்த்தால் அது சம தூரத்தில் இருப்பது போலக் காணப்படுகிறது. இது ஒன்றும் தற்செயலாக ஏற்பட்டிருப்பது அல்ல! இயற்கையின் கணித மர்மங்களுள் இதுவும் ஒன்று. மேஷம், ரிஷபம் என ராசிகளை விவரித்து நட்சத்திரங்களை ஆடு, காளை போன்ற உருவங்களைச் சித்தரிக்க வைப்பதும் ஒரு கணித அபூர்வம் தான்!

சூரியனுடைய குறுக்களவை எடுத்துக் கொண்டால் அது பூமியின் குறுக்களவைப் போல சரியாக 108 மடங்காக இருக்கிறது. ஒரு நாளைக்கு நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை 21600. இதுவும் 108இன் மடங்காகவே இருக்கிறது! இதே போல நூற்றுக்கணக்கான பல விஷயங்களைத் தொகுத்துப் பார்த்தவர்கள் 108இன் மகிமையை விளக்குகின்றனர்.

விளையாட்டில் வார்த்தையை மாற்றும் விளையாட்டை எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் முதலில் ஒரு வார்த்தையைக் கொடுத்து அதில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் மாற்றியவாறே கொடுக்கப்பட்ட இன்னொரு வார்த்தையை மிகவும் குறைந்த மாறுதலில் யார் அடைகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம்.இது ஒரு பிரபலமான வார்த்தை விளையாட்டு.

இயன் ஸ்டீவர்ட் உதாரணமாகக் கொடுக்கும் ஒரு விளையாட்டு வார்த்தைப் புதிர் SHIP என்ற வார்த்தையை DOCK என்று மாற்று என்பது தான். இதை அவர் ஷிப்-டாக் தியரம் என்கிறார். (SHIP – DOCK THEROREM) இதில் விசித்திரம் என்னவெனில் வார்த்தைகளை மாற்றிக் கொண்டே போகும் போது, யார் எப்படி மாற்றினாலும் சரி, இடையில் வரும் வார்த்தைகளில் ஒன்று நிச்சயமாக ஆங்கிலத்தில் உயிர் எழுத்து எனப்படும் வௌவல்களில் இரண்டைக் கொண்டிருக்கும். (A,E,I,O,U ஆகிய ஐந்து எழுத்துக்கள் வௌவல்கள் எனப்படும்)
kepler's laws

எடுத்துக்காட்டாக புதிரை விடுவிக்கும் ஒரு வழியைப் பார்ப்போம். இதில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றிக் கொண்டே போகிறோம். SHIP, SLIP, SLOP, SLOT, SOOT, LOOT, LOOK, LOCK, DOCK என்ற இந்த வரிசைத் தொடரில் இரண்டு வௌவல்கள் வரும் வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். இப்படி வௌவல்கள் அமைவதே கணித நியதிப் படி தான் என்பதை நிபுணர்கள் விளக்குகின்றனர். இப்படி எதில் எடுத்தாலும் கணிதத்தின் அடிப்படையில் ஒரு நியதி அல்லது ஒழுங்கு இருந்து கொண்டே இருக்கிறது.

கவிதை அமைக்கும் சந்தஸ் சாஸ்திரம் அல்லது யாப்பிலக்கணம் கவிதை வரிகளில் எத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும் (கட்டளைக் கலித் துறையில் அடிக்கு 16 மற்றும் 17 எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பன போன்ற கவிதை இலக்கணம்) என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சங்கீதத்திலோ தாளம் முதலான அனைத்துமே கணிதம் தான்!
கணித அதிசயம் தொடரும்

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

சார்லஸ் டாட்ஸன் (Charles Dodgson) பிறவி மேதையாகத் திகழ்ந்த பிரிட்டிஷ் கணித நிபுணர். 1854ஆம் ஆண்டு பி.ஏ.-இல் முதல் வகுப்பில் ஹானர்ஸ் பெற்று தேறி ஆக்ஸ்போர்டில் கணித லெக்சரராக நியமிக்கப்பட்டார்.1881 முடிய இப்பணியில் இருந்த அவர் ஏராளமான கணித சம்பந்தமான புத்தகங்களை எழுதினார். அவரது புத்தகங்கள் கணித உலகில் அவருக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்தித் தந்தன. ஒரு நாள் விக்டோரியா மஹாராணியிடமிருந்து தனிப்பட்ட முறையில் அவரே எழுதிய கடிதம் ஒன்று அவருக்கு வந்தது, அவருடைய இன்னொரு புத்தகத்தை உடனே அனுப்புமாறு அக்கடிதத்தில் ராணியார் வேண்டிக்கொண்டிருந்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. அது ‘சிலபஸ் ஆஃப் ப்ளேன் அல்ஜீப்ரய்கல் ஜாமட்ரி’ என்ற புத்தகம். அதைப் பார்த்து ராணியார் திகைத்தார். அவருக்கும் அல்ஜீப்ராவுக்கும் என்ன சம்பந்தம்! விசாரித்துப் பார்த்தவுடன் தான் அவர் உண்மையை உணர்ந்து கொண்டார்!

NPG P7(26),Lewis Carroll (Charles Lutwidge Dodgson),by Lewis Carroll (Charles Lutwidge Dodgson)

‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ (Alice in Wonderland) என்பதை லீவிஸ் கரோல் (Lewis Carroll) என்ற புனைப் பெயரில் எழுதியவர் சார்லஸ் டாட்ஸன் என்றும் அவர் ஒரு பெரிய கணித மேதை என்றும் அறிந்த போது அவர் பிரமித்தார். ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டைப் படித்து பிரமித்த ராணியார் அதே போல இன்னொரு புத்தகத்தைக் கேட்டிருந்தார். அவருக்கு வந்ததோ கணித மேதையின் இரண்டு பிரபலமான கணித புத்தகங்களுள் இரண்டாவது புத்தகம்!

அற்புதமான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்டை எழுதியவர் உண்மையில் ஒரு கணித மேதை என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்!

contact swami_48@yahoo.com
*********************

Quiz on Holy Rivers and Seas

Lake Manasarovar
Himalayan Lake, source of four major river systems of Asia

By London Swaminathan
Post No.1025: Dated 6th May 2014.

1.Why is the holiest river Ganga is also called Bhagirathi?

2. What is the name of the holy lake in the Himalayas, which is the source of four big rivers?
3.What are the three rivers that meet at Triveni Sangam in Prayag?

4.What other big river ran through the areas of Indus River Valley Civilization?

5.On the banks of which river King Janamejaya did his Sarpa Yaga?

6.On the banks of which river is Sringeri Shankaracharya Mutt?

7.What river runs through Trayambakeswar, one of the 12 Jyotir Linga Shrines?

8.Where do you get Salagrama in the river Gandaki?

9. Sri Ragavendra’s Samadhi is on the banks of which river?

10.Sivasamudram Water Falls is part of the River…………………?

ganges4
Holy Ganga

11.What is the name of the Important Water Falls on River Sharavati?

12. What river runs through Ujjain?

13.Vaishnavite poetess Andal used a……….. to look at herself. Fill in the blank

14.What bird is associated with the origin of River Kaveri?

15.What River Lord Shiva created for Gundodaran (one of the Bhutaganas) in Madurai?

16.Why is the sea called Sagara?

17.Who drank the sea according to Hindu Mythology?

18.What is the major river that has a masculine name?

19.Where is the largest temple tank in Tamil Nadu?

20.What is the name of the tank in Kumbakonam where in every 12 year people bathe to get rid of their sins like Kumbhamela?

ganges3

ANSWERS:—
1. Since King Bhagiratha brought her down on the earth she is called Bhagirathi (Bhageeratha was a great engineer who diverted the river. Puranas explain it symbolically through a story) 2. Manasasarovar 3.Ganga, Yamuna, Sarasvati 4.Sarasvati 5.Narmada 6.Tungabadra 7. Godavari 8.Nepal 9.Tungabadra 10.Kaveri 11. Jerasappa or Jog Falls 12. Sipra 13. A Well in the temple 14. A crow overturned the vessel of Agastya 15. Vaigai River in Madurai 16. Sons of King Sagara dug out the ocean 17. Agastya Rishi; (symbolical interpretation of his crossing the sea over to South East Asia, where his staues are found even today) 18.Brahmaputra in Assam 19.Kamalalayam in Tiruvarur– Area occupied 25 acres; 20.Mahamakam Tank in Kumbakonam

Earlier Quiz posted by me:
(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7. தமிழ் தெரியுமா? Tamil Quiz—3
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3

ganges 1
Holy City Varanasi on the banks of River Ganges.
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
27. Post No.937. உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? 27-3-14
28.Interesting Quiz on Logos ( 30 July 2012)
29. Answers for Interesting Quiz on Logos (31 July 2012)

Contact swami_48@yahoo.com

இயற்கையில் கணித இரகசியம்! – 1

By S Nagarajan
Post No.1024 ; dated 6th May 2014

This series is written by my brother S Nagarajan for the Bhagya Tamil Magazine

பாக்யா இதழில் வெளிவரும் அறிவியல் துளிகள் தொடரில் 11-4-14,18-4-14 மற்றும் 25-4-14 இதழ்களில் வெளியான 3 அத்தியாயங்கள்

அறிவியல் துளிகள் 163

இயற்கையில் கணித இரகசியம் ! – 1

(பிபனோசி (Fibonacci) தொடரும் தங்க விகிதமும்)
ச.நாகராஜன்

female-face-for-golden-ratio

“நல்லது எப்போதும் அழகாகத் தான் இருக்கும். அழகானதோ ஒரு போதும் விகிதத்தில் குறைவு படாது”
ப்ளேடோ

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஒரு கணித நியதிக்கு உட்பட்டிருக்கிறது. இதை மெய்ஞானிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர்; வியக்கின்றனர். மெய்ஞானிகள் பிரபஞ்ச லயத்தை கடவுளின் அருள் என்று போற்றும் போது விஞ்ஞானிகளோ அதை இயற்கையின் அதிசயம் என்று வியக்கின்றனர்.

கணிதத்தில் அமைந்துள்ள ஒரு அதிசயத்தை இத்தாலியைச் சேர்ந்த பிபனோசி (Fibonacci) என்ற கணித நிபுணர் கண்டுபிடித்தார். ரோமானிய எண்களை விட ஹிந்து-அராபிய எண்கள் மிக எளிமையாகவும் அபூர்வமாகவும், ஆற்றல் வாய்ந்ததாகவும், பல அதிசயங்களைக் கொண்டுள்ளதாகவும் இருப்பதை அவர் ஆராய்ந்து கண்டார். அவரது தந்தை அடிக்கடி பயணப்பட்டுக் கொண்டே இருந்ததால் அவருக்கு உதவும் வகையில் பிபனோசியும் வெளி நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். உலகின் பிரபலமான கணித மேதைகளைச் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. கணிதத்தில் பல விந்தைகளைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். அவற்றை மேலும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அவர் சுட்டிக் காட்டிய விந்தைகளின் பிரதிபலிப்பு அப்படியே இயற்கைப் படைப்பில் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர்.
Fibonacci
Learnado Fobonacci

ஒரு எண்ணின் முந்தைய இரண்டு எண்களைக் கூட்டி வரும் எண்களால் அமைந்த ஒரு தொடர் பிபனோசி தொடர் என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

0,1,1,2,3,5,8,13,21,34,55 என இப்படி வரு எண் தொடர் பிபனோசி தொடர் ஆகும்.

ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் வருவது ஐந்து. மூன்றையும் ஐந்தையும் கூட்டினால் வருவது எட்டு. இப்படியே இந்தத் தொடரை அமைத்துக் கொண்டே போகலாம்.

இதில் இன்னொரு அதிசயம் – எட்டை ஐந்தால் வகுத்தால் வருவது 1.6. இது தங்க விகித எண் என்று அழைக்கப்படுகிறது.

இயற்கைப் படைப்பில் உள்ள மலர்களை எடுத்துக் கொள்வோம்.
சூரிய காந்தி மலரில் உள்ள இதழ்கள் இடது பக்க சுழற்சி உடையதாகவும் வலது பக்க சுழற்சி உடையதாகவும் அமைந்தி ருப்பதைப் பார்க்கலாம். (இது வரை இப்படி ஒரு விந்தை மலர்களில் இருப்பதைப் பார்க்காதவர்கள் இனியேனும் பார்த்து மகிழலாம்).

fibonacci (1)
சூரிய காந்தி மலரில் இடது பக்க சுழற்சி உள்ள இதழ்கள் 34 என்ற எண்ணிக்கையில் இருந்தால் வலது பக்க சுழற்சி உள்ள் இதழ்கள் 55 என்று அமைந்திருக்கிறது. லில்லி மலரின் இதழ்கள் 3, டெய்ஸி மலரின் இதழ்கள் 21 என அமைந்திருப்பதை எண்ணிப் பார்த்து (எண்ணியும் பார்த்து) வியக்கலாம்.

சூரிய காந்தி மலரின் நடுவில் உள்ள விதைகள் நிரப்பப்படுவது கூட ஒரு அற்புதமான கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 137.5 டிகிரியில் இந்த மலரின் அமைப்பு முழுவதும் இருப்பதைப் பார்த்தால் தங்க விகிதமும் தங்க கோணமும் இயற்கை அமைப்பில் இருப்பதை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

மனித உடலில் கூட இந்த அமைப்பு இருப்பது கண்கூடு. கண்ணாடி முன்னால் ஒருவர் நின்றாலேயே போதும், அற்புதமான இந்த அமைப்பை அவர் உணர்ந்து கொள்ள முடியும். ஒன்று, இரண்டு, மூன்று ஐந்து என இப்படி பிபனோசி தொடரில் உள்ள கணித எண்கள் நம் உடலில் விளையாடுகின்றன. ஒரு மூக்கு, இரண்டு கண்கள், மூன்று பகுதிகளாக உள்ள அங்கங்கள், ஐந்து விரல்கள் என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

sunflower fibonacci
டி என் ஏ (DNA) எனப்படும் மரபணுவை ஆராயும் போது திக்கித் திணறிய விஞ்ஞானிகள் பிபனொசி தொடரையும் தங்க விகிதத்தையும் டி.என்.ஏ. அமைப்பில் கண்டு அதிசயித்தனர். டி என் ஏயில் உள்ள டபிள் ஹெலிக்ஸ் அமைப்பில் ஒரு பக்கம் 34 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) நீளமும் அடுத்த பக்கம் 21 அங்ஸ்ட்ராம் அலகுகள் (angstroms) அகலமும் இருக்கின்றன. (அங்ஸ்ட்ராம் என்பது நீளத்தை அளக்கும் மிகச் சிறிய ஒரு அலகு.ஒரு அங்ஸ்ட்ராம் என்பது டென் டு தி பவர் ஆஃப் மைனஸ் டென் எனக் கூறப்படும். அதாவது ஒரு மீட்டரை எடுத்துக் கொண்டால் பத்து நூறு கோடியில் ஒரு பங்கு தான் அங்ஸ்ட்ராம்!)

இயற்கை பரிணாம வளர்ச்சியில் இந்த எண்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பதை அறிந்த விஞ்ஞானிகள் ஏன் அந்த அமைப்பை இயற்கை தேர்ந்தெடுத்தது என பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து வருகின்றனர். மலர்களில் இந்த அமைப்புக்கான ஒரு காரணம் அதன் வளர்ச்சிக்கான காரணம் தான்! சூரிய ஒளிக்காக ஏங்கும் மலர்கள் அதிகமான விதைகளைப் பெற வேண்டுமானால் இப்படிப்பட்ட கோணத்திலும் விகிதத்திலும் அமைந்தால் தான் அவற்றை அதிகமாகப் பெற முடியும் என்பது தெரிய வருகிறது!

அழகி என்று நாம் கருதும் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டால் அவர்களின் அங்க அமைப்பு அகலத்திலும் உயரத்திலும் 1.6 என்ற தங்க விகிதத்தையே கொண்டுள்ளது.

கையில் விரல்களின் நீளம், கையின் கணுப் பகுதி வரை உள்ள நீளம், முழங்கை வரை உள்ள நீளம் இவற்றை அளந்து பார்த்தால் அளவுகள் பிபனாசி தொடர் எண்கள் அமைப்பில் இருப்பதைப் பார்த்து மகிழலாம்.
(கணித இரகசியம் தொடரும்)
coneflower

அறிவியல் அறிஞர் வாழ்வில்.. ..

ரொனால்ட் ஏ பிஷர் (Ronal A Fisher) ஒரு பிரபலமான கணித மேதை. புள்ளிவிவர இயலில் பெரும் புகழ் பெற்றவர். (தோற்றம் 17-2-1890 மறைவு: 29-7-1962)
(இவரைப் பற்றிய சுவையான சம்பவம் ஒன்றை ஏற்கனவே அத்தியாயம் 105இல் பார்த்தோம்!)

இவரது தாயார் கேதி ஹீத் ஒரு வழக்கறிஞரின் மகள். தந்தையார் ஜார்ஜ் பிஷர் லண்டனில் கிங்ஸ் வீதியில் இருந்த ஒரு ஏலக் கம்பெனியின் உரிமையாளர். இந்த தம்பதியினருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. நான்கு பையன்கள் மூன்று பெண்கள். 1876இல் ஜெப்ரி (Geoffrey) என்ற பையனும் 1877இல் ஈவிலின் (Evelyn) என்ற பெண்ணும் பிறந்த பின்னர் மூன்றாவதாக பிற்ந்த குழந்தைக்கு ஆலன் என்று பெயரிட்டனர். ஆனால் ஆலன் மிகவும் குறைந்த வயதிலேயே இறந்து விட்டதால் கேதி மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார்.

ஆலன் என்ற பெயரில் ஆங்கில எழுத்தான ‘Y’
வரவில்லை, அதனால் தான் அவன் இறந்து விட்டான் என்று கேதி எண்ணினார். இந்த விசித்திர நம்பிக்கையில் நன்கு ஊறி இருந்ததால் அடுத்து பிறந்த எல்லா குழந்தைகள் பெயரிலும் ‘Y’ என்ற எழுத்து வரும்படி பார்த்துக் கொண்டார். இதனால் தான் கணித மேதைக்கு ரொனால்ட் அயில்மர் பிஷர் (Ronald Aylmer Fisher) என்று ‘Y’ வருமாறு பெயர் வைக்கப்பட்டது. அவரும் கேம்பிரிட்ஜில் நன்கு படித்து பிரபலமான கணித மேதையானார்.

விஞ்ஞானிகள் குடும்பத்திலும் விசித்திரமான நம்பிக்கைகள் ஏராளம் உண்டு!

To be continued……………….

Contact swami_48@yahoo.com
^^^^^^^^^^^

புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி பதில் (‘க்விஸ்’)

ganges 1
Holy Ganges

Compiled by London Swaminathan
Post No.1023; Date 6th May 2014.

1.மிகப்பெரிய கோவில் குளம் கமலாலயம் எங்கே இருக்கிறது?
2.கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒரு முறை புனித நீராடும் குளத்தின் பெயர் என்ன?
3.த்ரிவேணி சங்கமத்தில் கலக்கும் 3 நதிகள் எவை?
4.சிந்து சமவெளி நாகரீக காலத்தில் சிந்துநதி தவிர அங்கே பாய்ந்த மற்றொரு புண்ய நதி எது?
5.எந்த நதியின் கரையில் ஜனமேஜயர் சர்ப்ப யாகம் நடத்தினார்?

6.சிருங்கேரி சாரதா பீடம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
7.ராகவேந்திரர் சமாதி எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?
8.எந்த நதிக்கரையில் த்ரயம்பகேஸ்கரம் அமைந்திருக்கிறது?
9.சாலக்ராமம் எந்த நதியில் கிடைக்கும்?
10.சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?

11.ஜோக் அல்லது ஜெரசப்பா நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?
12.கங்கை நதிக்கு பாகீரதி என்று பெயர் வரக் காரணம் என்ன?
13ஆண்டாள், பெருமாளின் மாலையை அணிந்து கொண்டு எங்கே முகம் பார்த்தாள்?
14.காவிரி நதி பாயக் காரணமான பறவை எது? ரிஷி யார்?
15.சிவபெருமானின் பூதகணங்களில் ஒன்றான குண்டோதரனுக்கு உருவாக்கப்பட்ட நதி எது?

ganges2

16. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான உஜ்ஜைனியில் ஓடும் நதியின் பெயர் என்ன?
17.கடலுக்கு சாகரம் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
18.கடலைக் குடித்த ரிஷி யார்?
19.ஆண் பெயரை உடைய பெரிய வட இந்திய நதி எது?
20.இமயமலையில் இருக்கும் மிகப்பெரிய புனித ஏரியின் பெயர் என்ன?

ganges3

ANSWERS:
1.திருவாருர் 2. மஹாமக குளம் 3. கங்கை, யமுனை, சரஸ்வதி (பூமிக்கடியில்) 4. சரஸ்வதி 5. நர்மதா 6. துங்கபத்ரா 7. துங்கபத்ரா 8. கோதாவரி 9. நேபாளத்திலுள்ள கண்டகி நதி 10. காவிரி 11. ஷராவதி 12. பகீரதன் தவம் செய்து கொண்டுவந்ததால் (இமயமலையில் வேறு பக்கம் ஓடிய நதியை பகீரதன் எஞ்ஜினீயர்களைக் கொண்டு சமவெளிக்குத் திருப்பிவிட்டதை புராணங்கள் இப்படிக் கூறுகின்றன) 13. கோவிலில் இருந்த கிணற்றில் 14. அகஸ்தியர்; அவரது தீர்த்த பாத்திரத்தை ஒரு காகம் கவிழ்த்தது 15. மதுரையின் வைகை நதி 16. சிப்ரா நதி 17. சகர மன்னனின் மகன்கள் தோண்டியதால் கடலுக்கான பள்ளம் ஏற்பட்டது. பகீரதன் அதில் கங்கையைப் பாயச் செய்தான் 18. அகஸ்தியர் (தென் கிழக்கு ஆசியாவுக்கு கடல் வழியாகச் சென்று இந்து நாகரீகத்தை நிலை நாட்டியதை புராணங்கள் இப்படிச் சொல்லுகின்றன. அகஸ்தியர் சிலைகள் அந்த நாடுகளில் இன்றும் உள. 19. பிரம்மபுத்ர (மற்ற நதிகள் பெயர் பெண்கள் பெயர்கள்) 20. மானஸ சரோவர்.

Lake Manasarovar

Himalayan Lake, source of four major rivers of India, Pakistan and China

Earlier Quiz posted by me:

(1&2)27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7. தமிழ் தெரியுமா? Tamil Quiz—3
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests

ganges4

17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil
25. Are you familiar with Number Four?
26. நீங்கள் நாலும் தெரிந்தவரா?
27. Post No.937. உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? 27-3-14
28.Interesting Quiz on Logos (30 July 2012)
29. Answers for Interesting Quiz on Logos (31 July 2012)

Contact swami_48@yahoo.com

What India could teach NASA Scientists?

nadi 4

By London Swaminathan
Post No. 1022; Date 5th May 2014.

Our body is the microcosm and the earth is the macrocosm. Whatever we find on the earth we can see in our body. Blood vessels are like the rivers running on earth. Body hair can be compared to the vegetation on earth. There is a proverb in Tamil and other Indian languages saying what you see in Andam is found on Pindam. Andam (egg) is a globular thing meaning earth, universe etc. Pindam is our body. Both are Sanskrit words. Hindus know that the earth is globular in shape from time immemorial.

Hindus know a secret which no Western scientists knew. Your birth chart is in your hand is known to Hindus. If an astrologer who has specialised Nadi Jothidam, looks at your hand he can tell you the planetary positions at the time of your birth. No scientists can explain it scientifically. By looking at your palm he tells where the planets were in the sky the day you were born. This is not astrology but astronomy. The other thing about what is going to happen in future is astrology. I am not writing about astrology. The reason being no one can give you an accurate prediction.

Both my brothers went to see a Nadi Jothida astrologer in Kavalur near Madurai thirty years ago. The astrologer predicted the planetary positions accurately in my brothers’ horoscopes. When they came back home they checked the birth chart which was written by our family astrologer. It was exactly the same. The astrologer even predicted my brother’s would be wife’s name and it came true. How is it possible?
But I must admit that other predictions about future did not come true.

nadi book

(Birth Chart: Every orthodox Hindu family casts a horoscope/ birth chart as soon as their children celebrate their first birth anniversary.

Nadi Jothidam astrologer: They have lot of palm leaf manuscripts where in our future predictions are already written by the ancient sages. But there are more frauds than genuine people in this filed. So one must be careful in approaching any so called Nadi Jothidar)

Your palm shows which planets are stronger in your birth chart. It comes under palmistry as well. Again it is not science. But predicting the exact positions of planets in the sky has got more scientific implications. If the astronomers learn this from the Hindus, they can understand the mysteries of universe better and may even unravel several more mysteries. Before the genuine Nadi Jothidas disappear it is the duty of the scientists to study this ‘science’.

palm 1

Picture from your Finger prints?

There is another mystery in Indian literature. But I don’t think anyone can do it today. This art has disappeared long ago. The Brhatkatha translated into Tamil as Perunkatai has an anecdote. A person tells the features of a beautiful woman from her finger prints. Finger prints are used now in forensic investigation. Ancient Indians used it to identify people, draw pictures etc. if it is revived the criminal investigation will be much more easier. Following anecdote is in Perunkatai, Tamil adaptation of Bruhat Katha:–

A beautiful lady by name Madana Manjika was playing ball game on the terrace of her highly raised building. The ball jumped out and fell on Naravanan who was riding an elephant at that time. Naravanan looked at the girl and the ball and fell in love with her. Madana also looked at Naravanan and fell in love with him. But she did not collect he ball. Naravanan called his friend Gomukhan and asked him to find the owner of the ball.

nadi 3

Gomukhan simply looked at the ball and found out her finger prints in the sandal paste on the ball. He started giving the description of every part of her body . Then told him it must be Madana manjika. It may sound like fiction today. But in those days there were people who could draw the picture of a person by simply looking at the hand or the finger prints.

Even the finger print technology used in the modern criminal investigation had its beginning in India.

nadi2
Please read my Earlier Posts:

Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2
Prayers Good for Your Heart, says Scientists (posted on 10July 2013)

Contact swami_48@yahoo.com

நாடி ஜோதிட ரகசியங்கள்: ‘நாஸா’ விஞ்ஞானிகள் கவனிக்க!

nadi 1

By London Swaminathan
Post No. 1021: Date 5th May 2014.

அமெரிக்க விண்வெளி (நாஸா) விஞ்ஞானிகளுக்கும் தெரியாத விஷயங்கள் நமக்குத் தெரியும்!!

இந்திய இலக்கியங்களில் எவ்வளவோ விஞ்ஞான ரகசியங்கள் உள்ளன. ஒருவர் கண்டுபிடித்த பின்னர் இது எங்கள் சமய நூல்களில் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனரே என்றால் நம்மைப் பார்த்து நகைப்போர் தொகையே அதிகம் இருக்கும். இதுவரை நாம் மட்டுமே அறிந்த பல விஷயங்களை நான் பட்டியலிட்டு எழுதிவிட்டேன். இதோ இன்னும் ஒரு ரகசியம். இதை உலக விஞ்ஞானிகள் அறிந்தால் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

nadi2

நாடி ஜோதிடம் உண்மையா?

நாடி ஜோதிடம் என்னும் துறையில் விஷயம் தெரிந்தவர்களைவிட போலிகளும் மோசடிக்காரர்களுமே அதிகம். ஆயினும் இத்துறையில் சில அபூர்வமான விஞ்ஞான விஷயங்கள் உள்ளன. ஒருவருடைய கைகளைப் பார்த்தே அவர்கள் பிறந்த நேரத்தில் வானத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன என்பதை துல்லியமாகச் சொல்லி விடுகின்றனர். பின்னர் அவர்களுடைய எதிர்கால வாழ்வு பற்றி ஆரூடங்களும் சொல்லுவர்.

ஒருவர் பிறந்தபோது வானில் எந்த கிரகம் எந்த இடத்தில் (ராசியில்) இருந்தது என்பதைக் கூறுவது வான சாஸ்திரம். அதற்குப் பின் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன என்ன நேரிடும் என்று சொல்லுவது ஜோதிடம். இரண்டும் வெவ்வேறு துறைகள். என்னுடைய சகோதரர் இருவர் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருகில் கவலூர் என்னும் கிராமத்தில் இருந்த நாடி சோதிடர்களைப் பார்க்கப் போயினர். கைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே கிரக நிலைகளை எழுதிக் கொடுத்துவிட்டனர். பின்னர் சோதிடமும் கூறினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது குடும்ப ஜோதிடர் ஏற்கனவே எழுதிக் கொடுத்த ஜாதகத்தில் இருந்த கிரக நிலைகளையே அந்த நாடி ஜோதிடர்களும் எழுதி இருந்தனர். இது பெரிய அதிசயம். வரப்போகும் மனைவியின் பெயரையும் கூறியிருந்தனர். அதுவரை எல்லாம் உண்மையாக இருந்தது. ஆனால் எதிர்காலம் பற்றிச் சொன்னது நடக்கவில்லை.

கைகளை மட்டும் பார்த்து ஒருவருடைய பிறந்த நாள் கிரக நிலைகளை சொல்லமுடிவது பல வகைகளில் விஞ்ஞானிகளுக்கு உதவும். இந்தக் கலை அழிவதற்கு முன் இதை விஞ்ஞானிகள் ஆராய்வது நம் கடமை. இந்த ரகசியத்தை அறிந்தால் பிரபஞசத்தின் புரியாத புதிர்களை விடுவிக்கமுடியும். இது இந்துக்கள் உலகிற்கு வழங்கும் ஒரு கொடையாக அமையும்!

nadi book

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்று ஒரு பழமொழி உண்டு. அண்டம், பிண்டம் ஆகிய இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள் அதாவது கோள (முட்டை) வடிவில் இருக்கும் பிரபஞ்சம் அல்லது பூமியைக் குறிக்கும். அதில் இருக்கும் மலைகள், ஆறுகள், தாவரங்கள் ஆகியன உடலில் ரத்த நாளங்கள், முடி முதலியன வடிவில் இருப்பதாகச் சொல்லுவர். இதற்கு மேலும் அழ்ந்த பொருள்களும் உண்டு. நம்முடைய மனமும் பிரபஞ்ச மனமும் ஒன்றாகும் போது காலத்தைக் கடந்து நின்று கடந்த கால, நிகழ் கால, வருங்கால நிகழ்ச்சிகாஇக் காணமுடியும்! மற்றொரு பொருள்: பிரபஞ்சத்தில் எத்தனை அண்டசரசரங்கள் இருக்கின்றனவோ அவைகள் நம்மில் உள்ளன. இமயமலையை பொருட்காட்சி சாலையில் மண்ணில் செய்துவைப்பது போல நம்மை இறைவன் ஒரு சின்ன பொம்மை (மாடல்) யாகப் படித்திருக்கிறான். (‘’பாபாவின் வாழ்வும் ரமணரின் வாக்கும்’’– என்ற கட்டுரைஅயில் முன்னர் இது விளக்கப்பட்டுள்ளது)

ரேகையைப் பார்த்து உருவத்தை வரையும் அபூர்வ கலை!

இன்னொரு விஷயம் ஒருவருடைய கை ரேகைகளைப் பார்த்து உருவத்தையே வரையும் அல்லது சொல்லும் கலை. இந்த அபூர்வ கலை இப்பொழுது அழிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. குற்றவியல் விஞ்ஞானத்திலும் தடய அறிவியலிலும் கை விரல் ரேகைப்பதிவுகள் பயன் படுத்தப்படுகின்றன. இதுவும் முதலில் இந்தியாவில்தான் தோன்றியது.

nadi 3

பிருஹத் கதா என்னும் நூல் தமிழில் பெருங்கதை என்று கவிதை வடிவில் உள்ளது. அருமையான ஒரு இலக்கியம். இதில் ஒரு அபூர்வ காட்சி வருகிறது. மதன மஞ்சிகை என்ற பேரழகி மாடியில் (உப்பரிகையில்) தோழியருடன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கிறாள். அப்பொழுது அந்த வழியாக நரவாணன் என்பவன் யானை மீது பவனி வந்தான். அந்த நேரத்தில் பந்து தவறிப் போய் அவன் மீது விழுந்தது. பந்தை எடுக்க ஓடோடி வந்த ‘அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினான்’. காதல் மலர்ந்தது. பந்தை எடுக்காமல் திரும்பி விடுகிறாள். ஆனால் யார் அந்த நங்கை? அவள் பெயர் என்ன? என்பதெல்லாம் நரவாணனுக்குத் தெரியாது.

நண்பன் கோமுகனிடம் பந்தைக் கொடுத்து இதை எறிந்தது யார் என்று கண்டுபிடிக்கச் சொல்லுகிறான். கோமுகனோ இருந்த இடத்திலேயே அமர்ந்து காரியத்தை முடித்துவிடுகிறான். சந்தனக் கையில் தோய்த்த கையுடன் மதனமஞ்சிகா பந்து விளையாடியதால் அவளுடைய விரல் ரேகைகள் அதில் பதிந்திருந்தன. அந்த சாத்திரத்தில் கோமுகன் வல்லவன். ஆதலால் ரேகையைக் கொண்டே அந்த அழகியின் அங்க அடையாளங் களை வருணிக்கிறான். அந்த அடையாளங்களை உடையவள் மதனா தான் என்பதையும் உறுதிபடக் கூறுகிறான். இதோ அந்த பெருங்கதைப் பாடல்:-

palm 1

“விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
அங்கைக்கு ஏற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக்கு ஏற்ற நன்கு அமைதோளும்
தோளிற்கு ஏற்ற வாள் ஒளி முகமும்
மாப்படு வடு உறழ் மலர் நெடுங் கண்ணும்
துப்பு அன வாயும் முத்துஒளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
சேடு அமைசெவியும் சில் இருங்கூந்தலும்
ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குற்பரப்பும்
மருங்கின் நீளமும் நிறம்கிளர் சேவடித்
தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
அளந்தனன் போல வளம்பட எழுதி
பாவை இலக்கணம் பற்றி மற்று அதன்
நிறமும் நீளமும் பிறவும் தெரியாச்
செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
இதன் வடிவு ஒப்போள் இந்நகர் வரைப்பின்
மதனமஞ்சிகை ஆகும்!”

பெருங்கதை 5-8-100/116

nadi 4

இந்துமதம் வெளியிடும் விஞ்ஞான ரகசியங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகள்:
1.வடக்கே தலை வைக்காதே
2. Post No. 934.மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி1 (Date 26-3-14)
3. Post No.935. மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம்-பகுதி2 (Date 26-3-14)
4. Post No. 951.அபாயநோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர், நாகா, (Date 3-4-14)
5. Post No.1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! (Date 26th April), 2014.
6. அருகம்புல் ரகசியங்கள்
7.நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு
8.நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2
9. ராமரின் புஷ்பக விமானம் எப்படி பறந்தது?
10. தக்காளி ரசத்தின் மகிமை
11. ஒரு வேளை உண்பான் யோகி
12.தீபாவளி ரகசியங்கள்
13.பஜனை செய்வது உடம்புக்கு நல்லது (10 ஜூலை 2013)

nadi book 2

Please read my Earlier Posts:
Is Brahmastra a Nuclear Weapon?
Time Travel by Two Tamil Saints
Hindu’s Future Predictions (Part 1 and art2)
Science Behind Deepavai (Part 1 and Part 2)
Great Engineers of Ancient India
Post No. 933. Medical Science solves Ten Mysteries in Maha Bharata 26-3-14
Head towards North is wrong
‘OM’ BOOSTS BRAIN POWER
Acoustic Marvel of Madurai Temple
Orbiting the Earth: Skanda beat Yuri Gagarin
Hindu God with “an IPod”
Power of Holy Durva Grass
Science Behind Deepavali-1
Science Behind Deepavali-2

Contact swami_48@yahoo.com

Wonderful Syllabus for Women!

chatus shasti kala

Gems,Perfumes,Flowers & Fashion!

Written by London Swaminathan
Post No.1020 ; Date 4th May 2014.

“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)

I cannot stop wondering how progressive India was 2000 years ago! When the world thought women were not fit to study any subject in an educational institution, a person in India prepared a syllabus for women with 64 subjects! He listed all the subjects a woman should master. Later the women’s syllabus was adopted by kings and queens. Was it just on papers only or practised?

My research shows that it was not theoretical, it was practised. Vatsyayana, the Brahmin author of Kamasutra listed all the 64 arts that a woman should learn. We have proof that there were people who were well versed in most of the subjects. One may need some proof to show that Indian women were capable of doing it. We have over 20 poetesses in the Rig Veda and 1500 years later, another 20+ poetesses in Sangam Tamil literature. We have another 15 poetesses composing sexy poems in Gatha Sapta Sati (GSS) in Prakrit language around second century CE.

yaksa-2200 yr
Look at the ornaments in 2000 year old sculptures

One may ask a question whether they were born genius or learnt the subject from a teacher. Nowhere in the world have we seen such a galaxy of intellectual women in any anthology like the Sangam Literature or the GSS. Lopamudra of Rig Veda and Avvaiyar of Sangam literature played active role in public life. Gargi Vachaknu attended the conference of spiritual leaders in the country of Videha and questioned the great philosopher Yajnavalkya. It happened before 800 BCE! His wife Maitreyi told him that she did not want a share in the property because money would not open the gates of heaven. So we know for sure that what Vastyayana wrote was not a paper plan. Draupadi of Mahabaharata , Sita of Ramayana and Savitri of Purana argues their cases like a Supreme Court lawyer. Later we came across another wise lady Ganga Devi, who wrote ‘Madura Vijayam’ detailing her husband’s war expedition to Madurai.

In ancient India, the pursuit of art was not left to the occasional sparks of inspiration or individual taste and tendency. Sixty four arts were part and parcel of their syllabus of study. Every prince and princess, every son and daughter of aristocrats had to gain proficiency in all or most of the arts.

Throughout Sanskrit and Tamil literature we have innumerable references to 64 arts mastered by the kings and other heroes. Tamil Epic Silappadikaram mentioned it. When Kannaki burnt part of Madurai, one of the streets where women who mastered 64 arts were residing, was also affected (See Azarpadu Katai of Silappadikaram).

tm_hindu-indian-jain-sculpture

In devotional literature, Goddess was praised as the source of all the sixty four arts. In Lalita Sahasranamam, Name Number 236 ‘Chathusasti Kalamayi’ means the She is the embodiment of 64 arts. Tamil verse by Kamban says Goddess Saraswati is the one who teaches 64 arts. Bala kandam of Kamba Ramayana alone has at least five references to 64 Arts. Hindus finish all pujas with 16 types of hospitalities known as Shodasa Upachara . Dance, music, applying perfume etc are part of it!

nataraja and narathaki

Madurai Temple itself is based on 64 Arts. One Rajasekara Pandya learnt all but one of 64 arts. He refused to learn dancing, one of the important arts, thinking that it would be an insult to Lord Shiva, who is the universal dancer. But when a poet from Choza country came and mocked at him that his king Karikal Chozan knew all the 64 arts, Rakasekara Pandya also learnt dance. On Shivratri day, he went to Madurai Meenakshi Temple and he was so moved, tears fell down from his eyes, pitying Shiva. He prayed to Shiva, “O My Lord, I know how difficult it is to dance even for an hour. You have been dancing from the day this universe came in to being. It is your rhythm that keeps the universe pulsating. You are the Dancer of all dances of the world. Can you please change your leg just to give rest to the leg (Lord Shiva is called NATA RAJ meaning dancer of the universe keeping cosmic rhythm). Immediately Shiva danced using both the legs alternately. When thousands and thousands visited the temple the next day, they noticed that the left leg on the ground! It changed permanently from right to left. Till this day , Madurai Temple has the miraculous statue. This is one of the 64 Leelas (divine interventions) of Lord Shiva in Madurai.

Women in Business
Sangam Tamil literature talks about women flower vendors and salt merchants. Till this day thousands of women are selling flowers around 100,008 temples in India. (For the number of Indian temples, please read my earlier post). Tamil poets sang about women standing on sea shore, counting the number of boats in the sea. Tamil women had both literacy and numeracy. Saivite saint Karaikal Ammaiyar (Madame of Karaikal) says in one of the verses, “From the day I started learning from my birth…………. This shows that she studied in her early years.
Perfume bottles

Billion Dollar Business!
Women mastered subjects like music, dance, acting, cooking, hair dressing, sewing, languages, painting, decorating, flower arrangement, gemmology, ornament making, gardening, training pets, gambling, word games, aroma therapy, letter writing, magic etc.

One of the 64 arts listed by Vatsyayana was ‘Gandhayukti’ —the Art of Making Perfumes. Now this business is one of the biggest businesses in the world. Indians were the one who made it a subject for study. Now France leads the world in this field. It is said that in ancient days specific methods of manufacturing perfumery articles numbering 174,720 were prevalent in India. Details of all these processes are narrated in the 77th chapter of Brhat Samhita of Varahamihira!! Had Indian women followed Vatsyayana’s syllabus and installed chairs in several universities we would have topped the world.

hairstyle

The hairdo industry and flower industry are big income generating businesses as well. Though we were the one who told the world about such business opportunities, now other countries are leading in the export of tulips and roses and fashion industry.

pinnal 2

The syllabus of Sixty Four Arts is a very strong proof to show that civilization marched from India to different parts of the world. Unless a country is self sufficient in the three basic needs food, shelter and clothing, they can’t think of literature or fine arts. We have produced enormous literature of quality even before the world started writing. We were so fed up with these pleasures that led us to philosophy even before the bright stars like Buddha, Mahavira, Confucius, Zoroaster and Jesus rose up on the horizon. When they created men of high calibre, we even created women of high calibre such as Avvaiyar and Gargi.
Had we followed all the 64 arts listed by Vatsyayana like any other Western country we would have become an economic super power long ago. Now China is producing anything and everything the world needs. From needle to pictures of Hindu Gods, they produce everything. The One dollar shops in the United States and One Pound shops in Great Britain are doing roaring business and minting money. There is no use of blaming us at this point of time. We have to pick up good things from the ancient Idea box and implement it.

Contact swami_48@yahoo.com

64artstelegu

உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!

chatus shasti kala

Written by London Swaminathan
Post No.1019 ; Date 4th May 2014.

“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)

சிலப்பதிகாரத்திலும், கம்பன் பாடல்களிலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், வாத்ஸ்யாயனரின் காமசூத்திரத்திலும் அறுபத்து நான்கு கலைகள் பற்றிப் படிக்கும்போது உடம்பில் புல்லரிக்கிறது! ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?’ என்று உலகமே எண்ணியிருந்த காலத்தில் 64 கலைகளைப் பட்டியலிட்டு ஒவ்வொரு பெண்ணும் அதைப் பயிலவேண்டும் என்று வடமொழியில் எழுதிய பெருமை வாத்ஸ்யாயனரையே சாரும்! பிற்காலத்தில் இது அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆகியோர் அனைவருக்கும் பாட திட்டமானதை இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அன்று வாத்ஸ்யாயனர் எழுதியதை இந்தியர்கள் பின்பற்றி இருந்தால் இன்று உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா ஓங்கி வளர்ந்திருக்கும்.

காம சூத்திர நூலில் வாத்ஸ்யாயனர் எழுதியது, வெறும் காகித திட்டமா? அல்லது செயல்முறையில் பின்பற்றப்பட்டதா என்று ஒரு கேள்வி எழக்கூடும். ரிக் வேதத்தில் உள்ள இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்க இலக்கியத்தில் வந்த இருபதுக்கும் மேலான பெண் கவிஞர்களையும் பார்க்கையில் இது காகித திட்டம் அல்ல. உண்மையில் அறிவாளிகளை உருவாக்கிய திட்டம் என்றே உறுதியாகக் கூறலாம்.

64ArtsinIndianCulture_thumb[13]

சங்க கால இலக்கியத்தை ஒட்டி எழுந்த பிராக்ருத மொழி நூலான காதா சப்த சதியில் 15–க்கும் மேலான பெண்கள் காதல் கவிதைகளைப் புனைந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. காரைக்கால் அம்மையார் பாடிய பாடலில் பிறந்து கல்வி பயின்ற நாள் முதலாக என்று பாடுவதில் இருந்து அவர் முறையாகக் கல்வி பயின்றது தெரியும்.

ரிக்வேத கவிதாராணி லோபாமுத்ராவும், தமிழ் மூதாட்டி அவ்வையாரும் ஒரே இடத்தில் உட்காராமல் விறுவிறுப்பான பொது வாழ்வில் ஈடுபட்டதை இலக்கியத்தில் படிக்கிறோம். திரவுபதியும், சீதையும் பேசிய வசனங்களைப் பார்க்கையில் பெண் என்பவள் வெறும் பேதை அல்ல என்பதையும் உணர்கிறோம்.

“ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்………………
லலிதா சஹஸ்நாமத்தில் 236–ஆவதாக வரும் நாமம் “சதுஷ் ஷஷ்டி கலாமயீ” என்ற நாமம் ஆகும். இதன் பொருள் அறுபத்து நான்கு கலைகளின் ரூபமாயிருப்பவள்.

கம்பன் ஒரு பாடலில் “ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” – என்று சரஸ்வதியைப் பாடுகிறான். கம்ப ராமாயண பால காண்டத்தில் மட்டுமே ஐந்து இடங்களில் 64 கலைகளைக் குறிப்பிடுகிறான்.

மதுரையை கண்ணகி எரித்தபோது பற்றி எரிந்த மதுரை வீதிகளில் ஒன்றில்,

“எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங்கெழு வீதி” — (அழற்படு காதை)

என்று கூறுவதில் இருந்து அந்தத் தெருவில் 8X4X2 = 64 கலைகளைப் பயின்ற இசை மாதர் வாழ்ந்ததை அறிகிறோம்.

nataraja and narathaki

நடராஜன் கால் மாறி ஆடின கதை
மதுரையில் சிவபெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஒன்று கால் மாறி ஆடின படலம். கரிகால் சோழனின் அவைப் புலவன் மதுரைக்கு வந்து ராஜ சேகர பாண்டியனைச் சந்தித்தபோது கரிகால் சோழன் 64 கலைகளில் வல்லவன் என்றும் ராஜ சேகரனுக்கு நாட்டியம் ஆடத் தெரியாதது ஒரு குறை என்றும் இடித்துரைத்தான். சிவபெருமானுக்குப் போட்டியாக ஆடற்கலையைக் கற்கக் கூடாது என்று எண்ணியிருந்த ராஜசேகரன் அன்று முதல் நாட்டியத்தையும் கற்று 64 கலைகளிலும் வல்லவன் ஆனான் என்று திருவிளையாடல் புராணம் கூறும் (காண்க:– கால் மாறி ஆடினபடலம்). அதுமட்டுமல்ல.

ராஜசேகரன், சிவராத்திரி அன்று கோவிலுக்குச் சென்றபோது சிவன் ஒரே காலை ஊன்றி ஆடினால் கால் வலிக்காதா? என்று சொல்லி கண்ணீர் உகுத்தான்.. என்ன அதிசயம்! சிவன் இரு கால்களையும் மாற்றி மாற்றி ஆடினான். உலகம் முழுதும் ராஜசேகரன் பெருமை பரவட்டும் என்று எண்ணிய சிவன், நிரந்தரமாக இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி காட்சி அளித்தான். இன்று வரை மதுரை நடராஜர் சிலை கால் மாறிய நிலையிலேயே நிற்கிறது. ஆக மதுரைக் கோவிலின் வரலாறே 64 கலைகளில் ஒன்றின் மீது அமைந்துள்ளது.
yaksa-2200 yr

Look at the Jewelry in 2200 year old sculpture!

பெண் அறிஞர்கள்
2800 ஆண்டுகளுக்கு முன் விதேஹ மன்னன் ஜனகன் கூட்டிய ஆன்மீக மாநாட்டில் சாக்ரடீசுக்கும் முந்திய பேரறிஞன் யாக்ஞவல்கியனை கார்க்கி என்ற பெண் கேள்வி கேட்டு மடக்கியதை பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் படிக்கிறோம். அவருடைய இரண்டு மனனைவிகளில் ஒருவரான மைத்ரேயி, “சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்க பணம் உதவாதென்றால் எனக்கு சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம்”- என்று கூறியதையும் அறிவோம். ஆக, பெண்களின் பேரறிவு என்பது திடீரென வானில் பிரகாசமாகத் தோன்றி மறையும் எரிகல் அல்ல, நிரந்தரமாகப் பட்டொளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் என்பதை 3000 ஆண்டு இந்திய இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன.

Perfume bottles

பில்லியன் டாலர் ‘பெர்Fயூம்’ பிஸினஸ்

வாத்ஸ்யாயனர் எழுதிய 64 கலைகளுக்கு யசோதரா எழுதிய உரையும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஸ்கர ராயர் எழுதிய உரையும் 64 கலைகள் பற்றி நிறைய விஷயங்களைத் தருகின்றன. இதில் உள்ள விஷயங்கள் வியத்தகு விஷயங்கள். ஒவ்வொரு பெண்ணும், இளவரசன் இளவரசியும் இசை, நடனம், ஓவியம், வீட்டு அலங்காரம், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடுகள், கடிதம் எழுதல், மொழிகள், ரகசியக் குறியீடுகள் கற்றல், பறவை வளர்த்தல், அவைகளைப் பேசப்பழக்குதல், வாசனைத் திரவியங்கள் செய்தல், மூலிகை சிகிச்சை தருதல், மசாஜ் செய்தல், சமைத்தல், சூதாடுதல், இந்திரஜால வித்தைகள் செய்தல் இப்படி எத்தனையோ கலைகளைப் பயின்றனர்.

சிலர் நினைக்கலாம் ஆண்களுக்கு எதற்கு இவ்வளவு கலைகள் என்று. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் ஒவ்வொரு கலையும் அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவியது என்பதைப் படித்திருக்கிறோம்.

64 கலைகளில் சில கலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதில் வரும் வருமானத்தைப் பார்ப்போம். ‘கந்தயுக்தி’– என்னும் கலை உடலில் பூசும் வாசனைத் திரவத்தைத் தயாரிப்பது எப்படி என்று சொல்லுகிறது. இன்று ‘பெர்ப்யூம்’ என்ற பெயரில் பெண்கள் பயன்படுத்துவதை இந்தியாதான் முதலில் ஏறுமதி செய்தது. கடவுளுக்கு செய்யப்படும் 16 உபசாரங்களில் (ஸோடசோபசாரம்) வாசனைப் பொருள் சார்த்துவது ஒரு உபசாரம்! இந்துக்களின் தினசரி வாழ்வே 64 கலைகள்தான்!!

1,74,720 சென்ட் வகைகள்!!!!
இந்தியாவில் ஒரு லட்சத்து எழுபத்து நாலாயிரத்து, எழு நூற்று இருபது வாசனைத் திரவியங்கள் இருந்ததாக வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா கூறுகிறது. இந்த நூலும் நூலின் மீது எழுந்த உரைகளும் இதுபற்றி மிக விரிவாக எழுதி இருக்கின்றன (காண்க:– பிருஹத் சம்ஹிதா , அத்தியாயம் 77 மற்றும் அதன் பாஷ்யம்). இன்று இந்த வணிகம் கோடி கோடியாகப் பணம் குவிக்கும் தொழிலாக விளங்குகிறது. பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் இதில் முண்ணனியில் நிற்கிறது.

hairstyle2

பூ வியாபாரத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள்தான் இதை ஆதிகாலம் முதல் செய்து வந்ததை சங்க இலக்கியத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் இன்று உலகில் ஹாலந்து முதலிய நாடுகள்தான் பூ ஏற்றுமதியில் முன்னனியில் நின்று கோடி கோடியாகக் குவிக்கின்றன. முடி அலங்காரம் உலகில் ஒரு பெரிய பிஸினஸ். இதிலும் நாம் முதலிடத்தில் இல்லை. உண்மையில் வாத்ஸ்யாயனர் எழுதிய எல்லாக் கலைகளையும் நாம் முறையாகப் பயின்று, மற்றவர்களையும் பயிற்றுவித்து நிறைய சம்பாதித்து இருக்கலாம். கோட்டை விட்டுவிட்டோம்.

சென்றதை எண்ணி வருந்துவதை விட இன்று சீனா என்ன செய்கிறது என்று பார்த்தால் நம்க்கு உத்வேகம் பிறக்கும். அமெரிக்கா முழுதும் ஒரு டாலர் கடைகளையும், பிரிட்டன் முழுதும் ஒரு பவுண்ட் கடைகளையும் திறந்து வியாபாரத்தில் சக்கைப் போடு போடுகிறது. அந்தக் கடைகளில் எதை எடுத்தாலும் ஒரு டாலர் அல்லது ஒரு பவுண்ட்தான்! ஊசி நூல் முதல் இந்துமத கடவுளர் படங்கள் வரை எல்லாம் சீனாவில் இருந்து வருகிறது!

Bodhisattva_Ajanta
Ajanta Painting

64 கலைகள் நமக்கு உணர்த்தும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால் மனித இனத்திற்கு நாகரீகத்தைக் கற்பித்ததே இந்தியர்கள்தான். நாகரீகம் என்பது இந்தியாவில் உதித்து உலகம் எங்கும் பரவியது. இதற்கு ஆதாரம் என்ன? உலகில் உணவு, உறைவிடம், உடை ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால்தான் இசையும் நடனமும் இலக்கியங்களும் மலரும். நமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் இவை மலர்ந்ததோடு இன்றுவரை நீடிக்கவும் செய்கின்றன.வேதத்தில் நாட்டியம் பற்றி உள்ளது, சிந்து சமவெளி சிலைகளில் பரத நாட்டியம் இருக்கிறது. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

மற்ற எகிப்து, கிரேக்கம், மத்திய கிழக்கு நாட்டு நாகரீகங்கள் வாழ்ந்து முடிந்து கல்லறைக்குப் போய்விட்டன. அவர்கள் எல்லோரும் எழுதிப் படிப்பதற்கு முன்னால் நாம் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தோம் அத்தனையும் சிந்தனைத் தேன். புத்தரும் ,மஹாவீரரும், ஏசுவும், சொராஸ்ட்ரரும் , கன்பூசியஸும் தோன்றும் முன்னர் நாம் 108 உபநிஷதங்களுக்கு மேல் எழுதிக் குவித்தோம். நாம் எழுதாத பொருள் இல்லை என்னும் அளவுக்கு எல்லாவற்றையும் எழுதினோம். அவைகளில் முதலில் நின்றது ஒன்றே நம் நாகரீக முன்னேற்றத்திற்குச் சான்று.

????????????????
Sigiriya paintings from Sri Lanka

Contact swami_48@yahoo.com

Secret of Gandhi’s Life in 3 Words!!!

uk gandhi

Compiled by London Swaminathan
Post No. 1018; Dated 3rd May 2014.

“If all the Upanishads and all the other scriptures happened all of a sudden to be reduced to ashes, and if only the first verse in the Ishopanishad were left in the memory of the Hindus, Hinduism would live forever.”

With these words Mahatma Gandhi paid tribute to the remarkable Isha Upanishad, which by long tradition usually comes first in Indian collections. This priority it owes to the poetic grandeur and sustained profundity of its language. In only eighteen verses it carves out the fundamental building blocks of mysticism.

To a Western journalist who wanted the secret of Mahatma Gandhi’s life in three words, he said , “Renounce and enjoy!” (tena tyaktena bhunjitah), from the first verse of the Isha Upanishad.

In its intensity the Isha uses strong language. Those who condemn themselves to darkness by denying the divine Self are called ‘atmahano janah’ “killers of the Atman.

item-gandhi-stamp-001

Dionysius the Areopagite once observed that as he grew older and wiser his writings grew shorter and shorter. He would have envied the sage of the Isha Upanishad.

“First Mantra of Isha Upanishad:–
The Lord is enshrined in the hearts of all
The Lord is the supreme Reality
Rejoice in him through renunciation
Covet nothing. All belongs to the Lord”.
( from The Upanishads, Ekanath Eswaran, Arkana (The Penguin Group)

In Sanskrit (From Swami Bhakti Vedanta Prabhupada):—

“Isavasyam idam sarvam
Yat kincha jagatyam jagat
Tena tyaktena bhunjitha
Ma gradhh kasya svid dhanam”

Everything animate or inanimate that is within the universe is controlled and owned by the Lord. One should therefore accept only those things necessary for himself, which are set aside as his quota, and one should not accept other things, knowing well to whom they belong.

Ias-by the Lord; avasyam- controlled;idam- this;sarvam- all;yat kincha – whatever; jagatyam- within the universe; jagat- all that is animate or inanimate; tena – by Him; tyaktena – set apart quota; bhunjitah- you should accept; ma- do not; grdah – endeavour to gain; kasya svid- of anyone else; dhanam- the wealth.

sahanavatu

Contact swami_48@yahoo.com

காந்திஜிக்கு பிடித்த உபநிஷத் மந்திரம்!

item-gandhi-stamp-001

Written by London Swaminathan
Post No. 1017; Dated 3rd May 2014.

உபநிஷத அற்புதங்கள் –பகுதி 5 எனது ஆராய்ச்சிக் குறிப்புகள்
முன்னரே எழுதியது போல இந்தப் பகுதிகள் உபநிஷத தத்துவங்களை விளக்குவது அல்ல. உபநிஷதம் பற்றிய மேம்போக்கான சுவையான செய்திகளைக் கூறுவதே இப்பகுதியின் குறிக்கோள். சென்ற பகுதியில் வெள்ளி- கிரகம் மழை தொடர்பான விஷயங்கள் உபநிஷதங்களிலும் தமிழில் புறநானூற்றிலும் இருப்பதைக் கண்டோம். இதோ மேலும் சில:–

46. மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த உபநிஷத் ஈச உபநிஷத் ஆகும். திடீரென்று ஒரு தீவிபத்து ஏற்பட்டு எல்லா உபநிஷத்துகளும் இந்து மத நூல்களும் அழிந்துவிட்டாலும் ஈச உபநிஷத்தின் முதல் மந்திரம் மட்டும் இந்துக்களின் நினைவில் இருந்தால், அதுவே போதும். இந்துமதம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார் காந்திஜி!!

அந்த மந்திரத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?
இதோ முதல் மந்திரம்:

“ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
த்யேன த்யக்தேன புஞ்சீதா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்”

பொருள்: இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம். அவனே அவைகளை நிர்வகிக்கிறான். ஒவ்வொருவரும் அவருக்கு உரித்தானதை மட்டும் எடுத்துக்கொள வேண்டும். மற்றவர்களுக்குச் சொந்தமானது எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
uk gandhi

47. மகாத்மா கந்தியிடம் ஒரு மேல் நாட்டு பத்திரிக்கை நிருபர் வந்தார். உங்கள் வாழ்க்கையின் (வெற்றியின்) ரகசியம் என்ன? மூன்றே சொற்களில் கூறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார். காந்திஜி உடனே தயங்காமல் RENOUNCE AND ENJOY என்று சொல்லிவிட்டார். இசா உபநிஷத்தின் முதல் மந்திரத்தில் உள்ள “ தேன த்யக்தேன புஞ்சீதா” என்ற மூன்று சொற்களின் சாரம் இது.

தேன = அவரால் (கடவுளால்)
த்யக்தேன = உனக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை
புஞ்சீதா = ஏற்றுக் கொள்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உன் தேவைக்கு மேல் எதற்கும் ஆசைப் படாதே. இப்படி எல்லோரும் கருதினால் உலகில் ‘இல்லை’ என்ற தொல்லை ‘இல்லை ஆகிவிடும்’!
(ஆதாரம்: உபநிஷத், ஏகநாத் ஈஸ்வரன் எழுதிய ஆங்கில நூல்)

gandhi-english

48.கண்ணாடி (தர்பண), வைர ஊசி (வஜ்ர சூசிகா), மணி பார்க்கும் எந்திரம் (கடீயந்த்ர = கடிகாரம்) ஆகியனவும் உபநிஷத்துகளில் குறிப்பிடப் படுகின்றன.

49. கொடிகள், வாகனங்கள் தோன்றியது இந்தியாவில்தான் என்று பல கட்டுரைகள் எழுதினேன். ராமாயண, மஹாபாரதங்களில் கொடிகள் பற்றி நிறைய குறிப்புகள் இருந்தாலும் அந்தக் காவியங்கள் எழுத்தில் வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளில்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவர். ஆனால் உபநிஷதங்களிலும் விருஷப த்வஜ ( விடைக் கொடி- பிரஸ்னோபநிஷத்), மூஷிக த்வஜ (எலிக் கொடி) ஆகியன வருகின்றன.

50. வீணை என்னும் வாத்தியம் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகிறது (2-4-9; 5-4-10)

51.படகுகள்/கப்பல்கள் பற்றி பிருஹதாரண்யக, முண்டக, மைத்ரீ உபநிஷத்துகளில் படிக்கிறோம் 18 படகுகள் கொண்ட ஒரு அணியை முண்டகோபநிஷத்தில் காணலாம் ( முண். 1-2-7)

52. ஜோதிடம் பற்றிய குறிப்புகள் தைத்ரீய சிஷாவல்லியில் வருகிறது (3).

53.தேவாலயம், சிவாலயம் போன்ற கோவில் குறிப்புகள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் வருகின்றன (5-7; 3-3-4). கி.மு 800 வாக்கிலேயே கோவில்கள் இருந்தன என்பதை இது உறுதி செய்கிறது,

54.பஞ்சம் ஏற்பட்டது பற்றி சாந்தோக்ய உபநிஷத் ( 1-10-1) கூறுகிறது. சம்ஸ்கிருத ,தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் 12 ஆண்டுக் காலம் நீண்ட வறட்சி பற்றி வருகிறது. அந்தக் கால உண்மை நிலையை எழுதியதால் இந்த இலக்கியங்களை நாம் நம்ப முடிகிறது. திருவிளையாடல் புராணமும் கூட நீண்ட வறட்சியால் புலவர்கள், பிராமணர்கள் ஆகியோர் வேற்று தேசங்களுக்குச் சென்றதாகத் தெரிவிக்கிறது.

sahanavatu

55. உபநிஷத்துகளில் மிகவும் பழமையானதும் பெரியதும் பிருஹத் ஆரண்யக ( பெரிய காட்டு) உபநிஷத் என்று முன்னரே கண்டோம். இதில் உத்தாலகர் என்பவர் தனது மகன் ஸ்வேதகேதுவுக்கு ஒன்பது உபமானக் கதைகள் மூலம் அத்வைதக் கொள்கையைப் போதிக்கிறார். இந்த குட்டிக் கதை சொல்லும் உத்தியை பிற்காலத்தில் புத்தர், ஏசு போன்றோரும் பயன்படுத்தினர். ஏசுநாதர் இதைக் கற்க இந்தியா வந்ததாகவும் ஒரு சாரார் கூறுவர்.

56. உபநிஷத்துகளில் பிராணிகளும் கூட மனிதனுக்கு உபதேசிப்பதைக் காண்கிறோம்: இடி/மின்னல் த.. த… த…. என்று உபதேசித்ததை முன்னர் தனிக்கதையில் கண்டோம். அன்னப் பட்சிகள் பேசிக்கொண்டதை ஜனஸ்ருதி அறிந்துகொண்டார். சத்யகாமனுக்கு அவன் மேய்த்துவந்த மாட்டுக் கூட்டத் தலைமைக் காளையே உபதேசம் செய்தது. தீ, அன்னம், நீர்மூழ்கிப் (மீன்கொத்தி) பறவை ஆகியவற்றிடமிருந்தும் அவன் கற்றுக் கொண்டான். அவனுடைய சீடன் உபகோசல என்பவன், யாகத் தீயில் இருந்து பாடம் கற்றான். இதை வைத்துதான் சம்ஸ்கிருதத்தில் பஞ்ச தந்திரக் கதைகள், ஹிதோபதேசக் கதைகள் உருவாயின என்றும் கருதலாம்.

57.பிருஹத்ரதன் (பெருந்தேரன்), அஜாதசத்ரு, ஜனகன் போன்ற மன்னர்களின் பெயர்கள் உபநிஷத்துகளில் காணப்படுகிறது. இவர்களுடைய காலத்தைக் கண்டுபிடித்து இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது நமது கடமை.

58. சாப்பாட்டைக் குறைகூறக்கூடாது என்று தைத்ரீய உபநிஷத் கூறுகிறது (தைத்ரீய பிருகுவல்லி-9)

உபநிஷதத் தொடர் முற்றும்.