சிந்து சமவெளி மன்னர்கள் பெயர் எப்படி இருக்கும்?

313183-mahabharat.jpg

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1393; தேதி 6 நவம்பர், 2014.

சிந்து சமவெளி எழுத்துக்களை இதுவரை யாராலும் படிக்க முடியவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன் கப்யூட்டரில் போட்டுப் பார்த்து இது திராவிட வகை மொழியாக இருக்கலாம் என்று பின்லாந்து, சோவியத் ஆய்வாளர் கள் சொன்னார்கள். இதுவரை அது ருசுப்பிக்கப்படவில்லை. ஏற்கனவே இது பற்றிக் கருத்துச் சொன்ன அறிஞர்களும் குழம்பிப்போய் திராவிட, ஆரிய சகதியில் சிக்கி மாற்றி மாற்றி உளறிக்கொட்டி கிளறி மூடி வருகிறார்கள். எல்லோரும் சாண் ஏறினால் முழம் சறுக்கி விழும் ஆராய்ச்சி இது!! இத்தனை அதி நவீன வசதிகள் இருந்தும் ஏன் சிந்து வெளி எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை?
ஏன் என்றால் “முதல் கோணல், முற்றும் கோணல்” — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. சின்னக் குழந்தைகளிடம் ஒரு முறை இருட்டில் காற்றில் ஆடும் தென்னை மரத்தைக் காட்டி, அது பேய், தோட்டத்துக்குள் போகாதே என்று அம்மா சொல்லிவிட்டால் அது அடி மனதில் பதிந்து வாழ்நாள் முழுதும் அக் குழந்தை — பெரியவன் ஆன பின்னரும் –— பயப்படும். இது போல வெளிநாட்டில் இருந்து மதத்தையும் ஆட்சியையும் நிலைநாட்ட வந்த சிலர் இதற்கும் ஆரிய—திராவிடப் பேய் வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். நம்மவர்கள் அதில் சிக்கி சாண் ஏறி முழம் சறுக்கி விழுகிறார்கள்.

நாளைய தினம் சிந்துவெளி எழுத்துக்களை யாராவது படித்துவிட்டாலும் அதில் ராமாயண, மஹாபாரத, வேத, புராண விஷயங்கள் இருக்கும். அப்போது பல அறிஞர்கள், அது எல்லாம் திராவிடர்களிடமிருந்து ரிக்வேத ரிஷி முனிவர்கள் கற்றுக் கொண்டது என்று சொல்லி, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை”– என்பர்!

யாரவது ஒருவர் வடமொழியையும் தமிழ் மொழியையும் படிக்காமல் இந்தியா பற்றி எழுத வந்தால் அவர்களை அரைகுறை என்று அறியுங்கள். வடமொழி, தென் மொழியில் உள்ள விஷயங்களை திரித்து எழுதினால் அவர்களை குதர்க்கவாதிகள் என்றும் பி.எச்டி. ஆய்வுப்பட்டத்துக்காக பொய் சொல்லுகிறார்கள் — அல்லது உலக …………………………….. மகாநாட்டில் பொன்னாடைக்காக இப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஒதுக்கிவிடுங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், லண்டன் பல்கலைக் கழகத்தில் பேச வந்த அஸ்கோ பர்போலாவிடம் Asko Parpola ஒரு சில நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. உங்களுடைய Deciphering the Indus Script “டிசைபரிங் தி இண்டஸ் ஸ்கிரிப்ட்” படித்தேன். அதற்குப் பின் எழுந்த ஆய்வு பற்றி இன்றைய சொற்பொழிவில் எதுவும் புதிதாகச் சொல்ல வில்லையே என்று கேட்டேன். “அதற்குப் பின் ஒன்றும் புதிது இல்லை” — என்றார். அதாவது இந்த ஆய்வு தேக்க நிலையை அடைந்துவிட்டது. நிற்க.

சிந்து சமவெளியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு யாரோ ஆட்சி செய்துள்ளனர். அதுவும் பல நகரங்களில் பலர் ஆட்சி செய்திருக்கவேண்டும். பழைய சுமேரிய, இந்திய நாகரீக வரலாற்றைப் பார்க்கையில் இது தெரிகிறது. இந்தியாவில் 56 தேச மன்னர்கள் ஆண்டது போல சுமேரியா, கிரேக்கத்தில் பல நகர அரசுகள் இருந்தன. அப்படியானால் 20 ஆண்டுக்கு ஒரு மன்னர் வீதம் குறைந்தது 75 மன்னர்கள் சிந்து வெளியில் ஒரு நகரத்தை மட்டும் ஆண்டிருக்க வேண்டும். ஹரப்பாவுக்கும் (பாஞ்சாலம்), மொஹஞ்சதாரோவுக்கும் (சிந்து) தனித்தனி அரசர் என்றால் இன்னும் இரு மடங்கோ மும்மடங்கோ மன்னர்கள் இருந்திருப்பர். அவர்கள் பெயர் என்ன?

Krishna-Arjuna

மாற வர்மன், சடைய வர்மன்?
“மஹாபாரதம் யார்? எவர்?” (சுபாஷ் மஜூம்தார் தொகுப்பு) — என்ற ஆங்கில நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தபோது ஒரு ஆராய்ச்சி செய்தேன். எந்தப் பெயர் அதிகமாக பின் ஒட்டாக வருகிறது? என்று பார்த்தேன். வர்மன், கேது, சேனன், தத்தன், பதி, வதி, மதி ( பதி, வதி, மதி என்பது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன் ) எனப் பல பெயர்கள் வந்தாலும். இதில் மிகவும் அதிசயம்!! வேத காலம் முதல் சமீப மன்னர் காலம் வரை — அம்புலிமாமா கதைகள், வேதாளம்-விக்ரமாதித்தன் கதைகள், கதா சரித் சாகர/கதைக் கடல் கதைகள் வரை — சில பெயர்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. குறிப்பாக வர்மன் என்ற பெயர் இந்தியா மட்டுமின்றி தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது.

ஆக என் கருத்து — சிந்து வெளி மன்னர்கள் சேனன், கேது (கொடி), வர்மன், தேவன், ரதன் என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். குடும்பப்பெயர்கள் பதி, வதி, மதி என்ற பெயரிலேயே முடிந்திருக்க வேண்டும். அப்பர் வீட்டிலும், காரைக்கால் அம்மையார் விட்டிலும் திலக வதி, புனித வதி இருந்தது பற்றி எனது ஆய்வுக்கட்டுரையில் சொல்லிவிட்டேன். இது வேத கால சரஸ் வதி யில் துவங்கியது.

cheran flag

சேனன், கேது, தத்த, அயன
உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் பதி, வதி, மதி, சேன, கேது ரத ஆகியவற்றில் முடியும் பெயர்கள் நிறைய இருக்கின்றன ( காண்க: வேதிக் இண்டெக்ஸ், கீத் & மக்டொனல்)
நம்மில் யாரவது ஒருவர் இந்த பின் ஒட்டுப் பெயர்களை சிந்து சம்வெளி எழுத்துக்களில் கண்டுபிடித்துவிட்டால் புதிர் விட்டுப் போகும்.

இதோ மஹா பாரதப் பெயர் பட்டியல் ( இது முழு ஆய்வு அல்ல. ஒரு சாம்பிள் மட்டுமே):–

சேன (ன்)– என்ற பெயரில் முடிபவை; 24 எடுத்துக் காட்டு:– பீம சேன, சித்ர சேன, த்யூமட சேன
வர்ம (ன்) – என்ற பெயரில் முடிபவை;13 எடுத்துக் காட்டு:– கேது வர்மன், க்ருத வர்மன்
கேது – என்ற பெயரில் முடிபவை; 9 எடுத்துக் காட்டு:– ஸ்வேத கேது, கேது என்றால் கொடி என அர்த்தம்.
தத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– பக தத்த, வ்யாக்ரதத்த
பதி+வதி– என்ற பெயரில் முடிபவை;13+3 எடுத்துக் காட்டு:– மாத்ரவதி, மாயாவதி,
த்யூம (ன்)– என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– த்ருஷ்டத்யும்ன
ரத (ன்)– என்ற பெயரில் முடிபவை; எடுத்துக் காட்டு:– ஜெயத்ரத, பகீரத,
ஆயுத / யுத்த (ன்) – என்ற பெயரில் முடிபவை; 3 எடுத்துக் காட்டு:–ஹலாயுத
அஸ்வ (ன்) – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–பிருஹதஸ்வ
மானன் – என்ற பெயரில் முடிபவை; 5 எடுத்துக் காட்டு:–அன்சுமான
வான (ன்) – என்ற பெயரில் முடிபவை; 6 எடுத்துக் காட்டு:– ருமன்வான
தேவ – 8; சஹதேவ
ஜய – 6
வசு -5
இப்படி பல பெயர்களை வைத்து ஆராயலாம். ரிக் வேத கால ரிஷிகளின் பெயரில் அயன என்று முடிவோர் பெயர்களே அதிகம். பிற்காலத்தில் இது அருகிப் போய்விட்டது.

கால வாரியாக, புத்தக வாரியாக பெயர்களைத் தொகுத்து ஒப்பீட்டால் பல விடுகதைகளுக்கு விடை கிடைக்கும்.
–சுபம்–

என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
பதி – வதி — மதி சிந்து சமவெளியில் உண்டா? அக்டோபர் 20, 2014
ரிக்வேதத்தில் ஹரப்பா நகரம் – நம்பர் 1. 2014
சிந்துசமவெளி பாடகர்கள்: ஹாஹா ஹூஹூ — அக்டோபர் 2014
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

TAMIL-Sindhu samaveli- piramanar thotarpu ((Post No 1033, Date 10-5-14)
Hariyupia-harappa posted 30-10-14
Indus Valley-Brahmin Connection (Post No 1034, Date 10-5-14)
Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature
Flags: Indus Valley- Egypt Similarity
Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?
Indra on Elephant Vahana in Indus Valley
Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012
Indus Valley Cities in Ramayana Dec.18, 2012
Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013
Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014
Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013
‘Sex Worship’ in Indus Valley

Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)
The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012
Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14
Indus Valley Civilization- New Approach , posted on May 29, 2011

contact swami_48@yahoo.com

Mahabharat names Vs Indus Valley Names

Krishna-Arjuna
Research paper written by London Swaminathan
Research article No.1392; Dated 5th November 2014.

I was going through the names of Mahabharata characters in “Who is who in the Mahabharata?” by Subash Mazumdar. An approximate list of suffixes or surnames is as follows:

Sena — 24 names, e.g Chitrasena, Shursena, Dhumatsena, Sinsena, Bhimasena
Ketu – 9 names, E.g.Shvetaketu
Varman –13 names, E.g Ketuvarma , Kshatravarma, Kritavarma,Dhritavarma ,Satyavarma
Pati+Vati — 11+3 names, Madhravati, Mayavati, Prabhavati
Datta — 6, Vygradatta, Bhanudatta, Bhagadatta
Dyuman – 6, Dhrstadyuman
Ratha – 5 e.g.Chitraratha, Jayadratha (Indus Valley area), Bhagiratha
Mana – 5 Anshumana, Shrenimana
Ayudha/Yudhdha -3, Halaydha

Vasu – 5
Asva – 6 E.g. Brhadasva, Vyusistasva
Wana – 6 E.g. Sharadwana, Rumanvana
Ayana – Krishna Dwaipayana
Deva—Sahadeva, Vasudeva, Shrutadeva,Shakradeva

313183-mahabharat.jpg
Sena ending, Ketu ending and Pati/Vati ending names are in the Vedic literature as well. This shows that these names are being used for thousands of years. Even in the Kathasaritsagara and Vikram and Vetal we come across same suffixes like Sena and Varman and Datta. So if at all we look for some names in the Indus valley it should be Sena, Varman, Ketu, Pati, Vati, Mati ending names. If we keep it in mind and identify these suffixes in the Indus valley script, we can succeed in the deciphering it.

I have already written an articles about Pati, Mati, Vati ending names in Vedas and Epics.
We have to prepare a list of Vedic names and epic names and compare it for further research.

contact swami_48@yahoo.com

பதிற்றுப்பத்து ரகசியங்கள்!

cheran-senguttuvan
Cheran Senguttuvan in procession with Kannaki statue

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1391; தேதி 5 நவம்பர், 2014.

சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள்ளன. இதற்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க் கணக்கு நூல்கள் உள்ளன. இந்த 36 நூல்களைத் தவிர ஐம்பெருங் காப்பியங்கள் உள்ளன. இவற்றைப் படித்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். இது தவிர தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், கம்பராமாயணம் என்பன கடல் போல் பெருகும்.

இவைகளை எல்லாம் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் நிங்கள் அதமர். இவைகளை எல்லாம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்தால் நீங்கள் மத்யமர். இவைகளைப் படிக்கத் துவங்கி விட்டாலோ நீங்கள் உத்தமர்.

இவைகளோடு சம்ஸ்கிருதம் என்னும் பெருங் கடல் – மஹா சமுத்திரம் – மொழியில் உள்ள நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டாலோ மஹா அறிவாளி— பேரறிஞர் –ஞானி ஆகிவிடுவீர்கள். நிற்க.

இவற்றில் மேல் கணக்கு நூல்களில் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்ற இரண்டு தொகுப்புகளில் உள்ள 18 நூல்களும் பழம் தமிழகத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எட்டுத் தொகையில் ஒரு நூல்தான் பதிற்றுப்பத்து.— பதிற்றுப்பத்தில் நூறு பாடல்கள் இருக்கவேண்டும் ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்காததால் 80 பாடல்களே உள்ளன. இவை அனைத்தும் சேர மன்னர்கள் பற்றியவை.

map-sangam-1
Location of Chera Nadu in South India

இனி பதிற்றுப்பத்தில் உள்ள சில அதிசயச் செய்திகளை மட்டும் காண்போம்:

1.புறநானூற்றில் பாடல் இரண்டில், அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி தென்படுகிறது. ஆயினும் தமிழில் முதல் அந்தாதிப் பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது. இதைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், அபிராமி பட்டர் போன்றோர் இதை நூறு பாடல் வரை மேலும் விரிவாக்கினர்.

2.பிரான்சிலும், சுவீடனிலும், பிரிட்டனிலும் பல மியூசியங்களுக்குச் சென்றபோது நவரத்னக்கற்ளுடன் ஜ்வலிக்கும் கிரீடங்களைக் கண்டு வியந்தேன். அது போல நூறு மடங்கு மதிப்புள்ள கிரீடங்கள், மணி முடிகள் நமது நாட்டில் இருந்தன. இப்போது அவைகள் எங்கே? என்ற கேள்விக்குப் பதிற்றுப்பத்தில் விடை உள்ளது. இரண்டாம் பத்தில், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஏழு மன்னர்களை வென்று அவர்களுடைய மணி முடிகளை உருக்கி தங்க மாலை செய்துகொண்டார் என்று பாடுகிறார் குமட்டூர் கண்ணனார். — இதே கதைதான் வடக்கிலும். காளிதாசனும் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறான்! — கடைசியாக இருந்த கிரீடங்களை முஸ்லீம் படை எடுப்பாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதற்கும் பின்னர் எஞ்சியிருந்ததை நம்மவரே செட்டியார் கடையில் போட்டு நகை செய்துகொண்டு விட்டனர்!!

3.பதிற்றுப்பத்தில் 2-ஆம் பத்தில் முதல் எழுவள்ளல்களில் ஒருவரான அக்குரன் என்பவரை சேர மன்னனுடன் ஒப்பிட்டுப் புகழ்கின்றனர். நமக்கு கடை எழுவள்ளல்கள் தெரியும். ஆயினும் இந்த முதல் ஏழு வள்ளல்களில் அக்குரன் யார் என்று உ.வே.சா. போன்ற மாமேதைகளுக்கும் தெரியவில்லை. நாம் அறிந்த மஹாபாரத அக்குரன் திறமைசாலி, ராஜ தந்திரி, கிருஷ்ணனின் நண்பன். ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, பாகவதத்திலோ இல்லை. ஒருவேளை இது கர்ணனாக இருக்கலாமோ என்று ஐயுறுவோரும் உண்டு.

750px-Chera_monarchs_family_tree

4.இமயவரம்பனைப் பற்றிய அதிசயச்செய்திகளில் ஒன்று அவன் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகும். அவன் மேலைக் கடலில் வாலாட்டி வந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்னே கட்டி, தலையில் எண்ணை ஊற்றினானாம்.

தமிழர்களின் காவல் மரங்கள்

5.வேறு எங்கும் காணப்படாத தமிழ் வழக்கம் —– ஒவ்வொருவரும் காவல் மரம் வைத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதாகும்.— கடற் கொள்ளையர்கள் ஒரு தீவுக்கு நடுவில் காவல் மரமாக ஒரு கடம்ப மரம் வைத்திருந்த தாகவும் அதனை சேரலாதன் வெட்டி வீழ்த்தி அதில் வெற்றி முரசு செய்து கொண்டதாகவும் நூல் இயம்புகிறது. இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் மாமரத்தை வெட்டியதையும் கந்தபுராணம் வாயிலாக அறிகிறோம். இங்கும் அதைச் சொல்லி முருகனுக்கு இணையானவன் சேரன் என்கிறார் புலவர். — நன்னன் என்பானுடைய காவல் மரம் வாகை. அதை களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வெட்டி வீழ்த்தியதை ஒன்பதாம் பத்தில் காணலாம்—. பழையன் என்பானுடைய காவல் மரம் வேப்ப மரம். அதை சேரன் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தியதை ஐந்தாம் பத்தில் காணலாம்.

6.ஐந்தாம் பத்தில் சரகர், சுஸ்ருதர் போன்றோர் வடமொழியில் எழுதிய மருத்துவ அறுவைச் சிகிச்சை போல ஒரு குறிப்பு வருகிறது. சேர மன்னனின் வீரர்கள் ஊசி கொண்டு தைக்கப்பட்ட மார்பை உடையவர்கள். அந்த ஊசி மீன்கொத்திப் பறவையின் கூரிய அலகு மாதிரி இருக்கும் என்று பரணர் பாடுகிறார்.

cheran flag
Chera Flag: Bow and Arrow

தமிழர் செய்த கொடிய செயல்

7.ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் போற்றிப் புகழ்கிறார். இந்தக் காலத்தில் இது நடந்திருந்தால் பத்திரிக்கை நிருபர்கள் பரணரையும், செங்குட்டுவனையும் சொற்களால் பிரட்டிப் பிரட்டி அடித்திருப்பர். அது என்ன அப்படிப்பட்ட கொடிய செயல்? செங்குட்டுவன் பல சிற்றரசர்களையும் பேரசர்களையும் வென்றான். கணவனை இழந்த பெண்மணிகளின் கரிய கூந்தலைக் களைந்தான். அம் மயிரால் திரிக்கப்பட்ட கயிற்றால் யானைகளை வண்டியில் பூட்டி, பழையன் என்பானுடைய காவல் மரத்தை தலை நகரத்துக்கு எடுத்துச் சென்றான்.

பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் ———————-

8.உழவர்கள் பகன்றைப் பூவை தலையில் சூடிக்கொண்டு நிலத்தை உழுததை அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் படிக்கலாம். அவர், பெரிய கப்பல்கள் பழுது பார்ப்பதை உவமையாகப் பயன்படுத்துவதால் அக்காலத்தில் கப்பல் பொறியியல் ( Marine Engineering) மரைன் எஞ்சினீயரிங் ) நன்கு முன்னேறி இருந்தது தெரிகிறது. புகார் நகர சதுக்க பூதங்களைச் சேரன் தனது வஞ்சிக்குக் கொண்டுவந்ததையும் அவர் பாடுகிறார்.

9.அவரே கட்டிப் புழுக்கு என்னும் ஒரு உணவுப் பண்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரை முதலியவற்றின் விதையை இடித்துப் பொடியாக்கிச் சர்க்கரை கலந்து செய்வது கட்டிப் புழுக்கு ஆகும். இது கொங்கு நாட்டு உணவு.

Kodungallur_Bhagavathi_Temple
Kodungallur Bhagavathy/Kannaki Temple

10.எட்டுத்தொகையில் மிகவும் கடினமான நூல் பதிற்றுப்பத்து தான். இதைக் கண்டுபிடித்து நமக்கு அளித்தவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பதிற்றுப்பத்தில் மற்ற சங்க நூல்களைவிட கூடுதலாக மாமிச உணவு, குருதி கலந்த சோற்று பலி, வேள்வி, தேவலோகம், பூதம், துணக்கை ஆடல், இமயம் – குமரி சொற்றொடர், சிவன் – திருமால் முதலியவற்றைக் காண்கிறோம்.

பதிற்றுப்பத்தில் உள்ள வடவைத் தீ ( கடலில் தோன்றும் வடமுகாக்னி) சொர்க்க பூமியான உத்தரகுரு, பலவகை முரசுகள், வடநாடு போலவே எதிரி நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதல், தங்கக் காசு பரிசுகள், பாலைக் கவுதமனார் என்ற பிராமணர் வேள்வியில் மாயமாய் மறைந்தது, சதுக்க பூதங்கள், உன்ன மரம் ஜோதிடம் போன்ற அதிசயச் செய்திகளை ஏற்கனவே தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதிவிட்டேன்.

பதிற்றுப் பத்தைப் படித்துப் பயன் பெறுக!

–சுபம்–

Eighteen groups of Indians!

devasura
Devas and Asuras churning the milky ocean

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

Foreign “scholars” and foreign invaders like the British, French, Portugese and the Dutch divided Hindus into four groups : Aryans ,Dravidians, Mundas and the Kiratas. This is not found anywhere in the Vedas or ancient Tamil literature. The words were used here and there to mean cultured (Aryan), southerner (Dravidian), tribe or hunters (Kirata) etc, they were never used as four groups together. But Tamil and Sanskrit literature divided the ancient people of India into 18 groups. They were called the children of a Hindu god or a sage. They were never described as foreigners who migrated into India. On the contrary Greeks, Egyptians, Babylonians and several other communities said that they came from a far away land to those places. They described their place of origin was similar to paradise.

We read in the Sanskrit Ramayan and Mahabharata about these people and the Tamil literature (Nachinarkiniar’s commentary on Tolkappiam and Puram. Verse 201) also said that 18 groups of people were brought to South India by Agastya. They were

1.Devas
2.Yakshas
3.Rakshasas
4.Nagas
5.Gandharvas
6.Asuras
7.Kinnaras
8.Daityas
9.Danavas
10.Vidhyadharas
11.Siddhas and Saranas
12.Garudas
13.Kimpurushas
14.Nirutas
15.Bhutas
16.Pisacas
17.Andharas
18.Bhogabhumi dwellers

There are some lists with some minor changes. Nachinarkiniyar commentary did not give the list. But Tamil Nighandu ‘Pinglam’ has given the above list.

They are broadly grouped them into four groups
1.Yakshas, Gandharvas, Kinnaras, Kimpurushas, vidhyadharas, Siddhas
2.Rakshas, Asuras, Daityas, Danavas
3.Bhuta, Pisacas, Naitruta/Niruthar
4.Garudas
5.Nagas
6.Devas, Munis, Bhogabhumi dwellers
Vishnu Sahasramnama shortens the list to seven groups:
Sura (Devas or sages),
Nara (civilised humans),
Kaga (people wearing bird/Garuda symbols like Jadayu, Sampathi),
Go (people with animal symbols like Vanaras with monkey symbols, Jambavan with bear tattoo),
Bogi (people with snake totems),
Gandhrva / Apsaras (Indus to Tibet dwellers),
Daityai: (uncivilised city or forest dwellers).

Samudra manthan

Samudra manthan (Churning the ocean)

During the Upanishad period we heard about only three groups: humans (Nara), Devas (Sura) and Asuras (demons) and they got the Magic word “Da” (Datta, Damyata, Daya) from the god. They went together to God. It shows all the Hindus or living beings were classified into only three groups and they were treated equally.

Later they were divided into more groups. This is similar to four Vedic castes branching out into thousands of castes and sub castes in today’s India. But one thing is very clear in our literature. Either they are black or white, demon or deva they were all called sons of sages or sons of Prajapati. All blacks were made supreme gods: ugly black skinned Vyasa and Agastya were typical examples. Women refused to come to bed with them. We knew why Pandu was born pale, Dhritarashtra was blind and Lopamudra gave Agastya an impossible task. Black Krishna, Black Draupadi, Black Rama, Black Vishnu, Black Kali, Black Vyasa and Black Agastya were all worshipped as Gods or great Rishis. This shows that all foreign propaganda about the superiority of white skinned Aryans over the black skinned Dravidians of India was false.

The Eighteen Ganas (Janas) have various interpretations. Are they all humans? or some of them Semi divine? or Divine?

The answer is both human and divine.

Asuras are historical. All the Assyrian kings and Persians called themselves Asuras or descendants of Asuras.

Yakshas are also historical, who resided in Sri Lanka once and then driven out by Ravana. Mahavamsa says that the first wife of Vijaya was a Yakshini. It also described how Buddha terrified the Yakshas and drove them out of the island.
Assurbanipal_op_jacht

Assyrian king Asura Banipal

Gandharvas and their associates occupied Indus valley, Kashmir and part of the Himalayas. Only when the Indus script is deciphered we will know the truth. Nagas are also historical and they are well attested in Sangam Tamil literature, Gupta inscriptions and several other documents. Over twenty Tamil poets have Naga suffix. Gonds are all Nagas. I have explained already that the word Gond came from Khandava Vana residents and the land was called Gond wana= Khanda vana. Tamil literature gives more information about Nagadwipa. They used the word for any land that existed in the sea far from the eastern shore of India. If anyone leaving from any Indian port like Kolkatta or Tutukkudi in Tamil Nadu and travel through Bay of Bengal (Indian ocean) then they are said to have travelled to Nagadwipa. If they travel beyond that point they were said to have travelled to Patala Loka (South America, Central America and United States of America). Any place south of equator was called Patala in general.

I have already written a post about Kanchi Parmacharya’s 1932 Chennai talk on Kapila Arantya becoming California (USA). Please read “ Is California, Kapilaranya?”

Most of the 18 Ganas are historically documented and recorded in Indian, Sri Lankan and South East Asian inscriptions and literatures. If anyone reads our literature, particularly Valmiki Ramayana, with these 18 Ganas in mind and note all the references to these groups, new history will emerge.
churning3

So, let us drop the racist words like “Aryan, Dravidian, Munda and Kirata” and rewrite the Indian history. If we do it, we will come across many more wonders. These racist words have prevented us from deciphering the Indus script. These racist words have placed Indian History only from the period of Buddha. But Glorious India existed thousands of years before the Buddha!
Rewrite Indian History!

(Pictures are used from various sites;thanks)

யாழ்ப்பாணம் மயில்வாகனப் பிள்ளை சதுரங்க பந்தம்

jaffna_maptamil

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1389; தேதி நவம்பர் 4, 2014.

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 7

யாழ்ப்பாணம் மயில்வாகனப் பிள்ளை என்னும் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் 1911ஆம் ஆண்டு ஒரு அற்புதமான கவிப் பூங்கொத்தை வெளியிட்டுள்ளார்.

‘நகுலேச்சுர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதிப் பிரசித்த நொத்தாரி மயிலிட்டி க.மயில்வாகனப் பிள்ளை இயற்றின’ என்று இயற்றியவரின் பெயரைக் குறிப்பிட்டு 1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ‘நாவலம்’ அச்சுக்கூடத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவர் 1906ஆம் ஆண்டு Notaryயாக வலிகாமம் மேற்குப் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.1907ஆம் ஆண்டு நகுலேச்சுரரைத் துதி செய்து இந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிடுகிறார். ஏராளமான சித்திரக் கவிகளைக் கொண்டுள்ள இந்த நூலை 2004ஆம் ஆண்டு மறு பதிப்பாக சென்னை மேடவாக்கம் தேன் புத்தக நிலையம் வெளியிட்டுத் இந்த நூல் மறையாமல் காத்து தமிழுக்குப் பெரும் சேவையைப் புரிந்துள்ளது.

நூலில் இடம் பெற்ற சதுரங்க பந்தத்தை மட்டும் இங்கு காண்போம்:
நீதா சதாபயனே நீபலர்க்குஞ் சாலமயற்
றீதார் மனமகற்றச் சீர்நகுலை – யேகலாற்கொன்
னீடார் மிடற்றகலா நீலா கமலபதா
நீதா பலமகலா நீ

இதன் பதவுரையும் நூலில் தரப்பட்டுள்ளது:

கொள் நீடு ஆர் மிடற்று அகலா நீலா – பெருமை நீடுதல் பொருந்திய கண்டத்தினிடத்தே. நீங்காத நஞ்சக் கறையை உடையவரே!

கமலபதா – தாமரை மலர் போன்ற பாதங்களை உடையவரே!
நீதா – நீதியை உடையவரே!

நீ பலர்க்கும் சால மயல் தீது ஆர் மனம் அகற்றச் சீர் நகுலை ஏகலால் – தேவரீர் பலர்க்கும் (அவர்களுடைய) மனத்திற் பொருந்திய மயக்கமாகிய தீமையை மிகவும் நீக்கும் பொருட்டுச் சிறப்பாகிய
நகுலேச்சுரத்தின் கண் எழுந்தருளுதலால்,
பலம் அகலா நீ – பேறு நீங்காத தேவரீரே!
நீ சதா பயனே தா – தேவரீர் எப்பொழுதும் பேற்றினைத் தந்தருள்க.

இந்தப் பாடலை சதுரங்க பந்தமாக அமைக்கும் விதம் பற்றிய குறிப்பைப் பின் வருமாறு கவிஞர் தருகிறார் :

சதுரங்க பந்தம்

“அது நிரைக்கு எவ்வெட்டாக எட்டு நிரை கொண்ட அறுபத்து நான்கு அறைகளிலே, நான்கு பக்கத்து ஈற்று நிரைகளிலும் நான்காம் அடி தோன்ற, எழுத்துகள் பொதுவின்றி அமையப் பாடுவது”
இந்தக் குறிப்பில் நாம் அறிவது : 64 எழுத்துக்கள் 8 x 8 கட்டங்களில் அமைக்கப்படும் போது ஒவ்வொரு பக்கத்திலும் கடைசி அறைகளில் நான்காம் அடியாகிய ‘நீதா பலமகலா நீ’ என்பது தோன்றும் என்பதே!
இனி பாடலை சதுரங்கக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:

new bandham7

இந்தப் பாடலை எப்படிப் படிப்பது?
பாடல் செல்லும் கட்டங்களின் வழியைக் காண்போம்: 1,2,10,9,17,18,19,11,3,4,12,20.28.27.26.25.33,34,35,36,37,29,21,13,5,6,14,22,30,38,46,45,44,43,42,41, 49,50,51,52,53,54,55,47,39,31,23,15,7,8,16,24,32,40,48,56,64

பாடல் முழுதுமாக அமைந்து விட்டது. அத்துடன் நான்கு பக்கங்களிலும் “நீதா பலமகலா நீ” என்ற கடைசி அடியும் அமைந்து விட்டது. (ஈற்றடி மேலே சதுரங்க அறைகளில் மஞ்சள் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஈற்றடி மேலே இடமிருந்து வலமாகவும் கீழே வலமிருந்து இடமாகவும் அமைந்திருக்கிறது. அதே போல வலப்பக்கம் மேலிருந்து கீழாகவும் இடப்பக்கம் கீழிருந்து மேலாகவும் அமைந்துள்ளது.

251px-Sri_Lanka_map
பாடலை அமைத்த கவிஞரின் கவிதைத் திறன் கண்டதால் ஏற்பட்ட வியப்புடன் தமிழ் காட்டும் விந்தை ஒன்றை அறிந்ததால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது!
Written by my brother S Nagarajan for nilachara.com:– swami
*****************

Vidura, Christ and Valluvar

href=”https://tamilandvedas.com/wp-content/uploads/2014/11/vidura_and_dhritarashtra.jpg”>Vidura_and_Dhritarashtra
Vidura and Dhritarashtra from Wikipedia

Research paper written by London Swaminathan
Research article No.1388; Dated 3rd November 2014.

A person who has experienced the pain of injury would never do harm to others, because that person knows how painful it would be. This message was given to us by three great people in the history.

Dr Rajendra Prasad, first President of India, unveiled the portrait of Vidura, a great saint, philosopher and the statesman of Mahabharata period at Bijnor in Uttar Pradesh in 1960. He said that Vidura was the first saint in the world, who gave the message,

Na tath parasya sandhadyath pratikuulam yadatmana: 7-17
“Do not do unto others as you wish others not to do unto you – Vidura Niti

3015576-vidur-niti-hindi

Vidura lived just before Kaliyuga which began in 3100 BCE. He always spoke truth. He warned about the evil designs of Duryodana when he planned to burn down the wax palace where Pandavas were staying. Vidura made a tunnel and left a boat for the Pandavas to escape. He even warned Dhritarashtra about his own son Duryodana. Dhritarashtra treated him like a brother. At the end he accompanied him, Gandhari and Kunti to the forest.

Mahabharata Santiparva 167-9 also repeats the same message in a positive way:

Tasmaad dharma praaadheenena bhavitavyam yataatmanaa
Tathaa cha sarvabhuutesu vartitavyam yathaatmani

Hence, by self control and by making right conduct (dharma) your main focus, treat others as you treat yourself.

Great men think alike. Jesus Christ and Valluvar gave the same message after 3000 years!
Tamil poet Tiruvalluvar in his Tirukkural (318) says

When a man has experienced pain caused by harm done to him, how can he cause pain to others?

Jesus Christ also said the same in the Bible,

Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)

Three great people living in three different ages gave the same message. But do we follow them? is the big question.

contact swami_48@yahoo.com

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

chinese drums from incredipedia
Drum in China

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)

எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.

???????????????????????????????
Drums in Japan

பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.

மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:

‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
garo tribals of meghalaya
Drums in Meghalaya, India

வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.

(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)

ஆடம்பரம் – தோன்றிய வரலாறு

வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.

துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.

chenda vadhya
Chenda Mela in Kerala

போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்

வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.
kollam
Drums in Kollam, Kerala

‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!
jaffna
Drum in Jaffna Temple, Sri Lanka

contact swami_48@yahoo.com

தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்

modi in Japan
Prime Minister Modi in Japan trying to play on drums

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.

((கட்டுரையின் மற்றொரு பகுதியில் ரிக் வேதத்தில் வரும் அதிசய வாத்தியம் ‘’பூமி துந்துபி’’, ரிக்வேத கால ‘’ஆர்க்கெஸ்ட்ரா’’, தமிழில் உள்ள ‘’ஆடம்பரம்’’ என்னும் சொல்லின் பொருள், பல ஆங்கிலச் சொற்களின் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவேன்.))

தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.

1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)

2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.

rajasthani drum
Rajasthani Drum

3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.

4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்

5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
nagara,rajasthan
Nagara drum, Rajasthan

6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.

7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.

8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).

9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Thiruvalluvar-
Valluvar with Punul

.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.

இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)

(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
valluva-nayanar1
Valluvar from English book

11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா
முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,
முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.

தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்

12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:

bangalorebulldrummachine
Bangalore Temple drum operated by machine

காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.

இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.

TashaF
Marathi drums

Pictures are taken from other websites;thanks.

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

modi in Japan
Prime Minister Modi in Japan with Japanese PM.

Research paper written by London Swaminathan
Research article No.1385; Dated 2nd November 2014.

Very interesting information about musical instruments is available in the Rig Veda, oldest book in the world. Sangam Tamil literature which came 1700 years after the Rig Veda, adds more interesting details about Drums!

Bhagavad Gita begins (1—12 to 19) with musical instruments that were used on the battle ground! “Conches, kettledrums, tabors, drums and trumpets blared forth and the noise was tumultuous. And the terrible sound, echoing through heaven and earth rent the hearts of Dhrtarashtra’s sons”. When we read this description we can imagine the noise it created in the battle field.

(English word tumultuous is derived from the Sanskrit word Dumula)

The use of drums in the war started in the days of the Rig Veda and continued through the Sangam period. Sangam Tamil poems were composed in the first three centuries of modern era. The most interesting information comes from the Rig Veda about Bhumi Dundubhi! It means Earth Drum.

jaffna
Temple Drum in Jaffna in Sri Lanka

Dundubhi is an onomatopoetic word : Dum Dum = dum dum dhubi= drum. (The English word drum must have come from this). It is mentioned in RV 1-28-5; 6-47-29; 6-47-31. Atharva Veda and other Vedic literature repeat it many times. A special sort of drum was the earth drum, made by digging a hole on the ground and covering it with a hide. This was employed in the Mahavrata, a rite performed at the winter solstice, for the purpose of driving away the influences hostile to the return of the sun; bhumi dundubhi is mentioned in the Samhitas and Brahmanas. Taitriya Samhita vii.5-9-3 and other books refers to it. Though drums are found in all ancient civilizations from Egypt to Peru, no where we come across earth drums. Other references in the Rig-Veda are about war drums.

( From Vedic Index by Keith and Macdonell)

kollam
Drums in Kollam, Kerala

Rig Vedic Word Adambara in Tamil!

Another interesting word is Adambara. Even modern day Tamils use this word for pomp and ostentation. Not many people know that it came from the Rig Veda. Tamils say that they celebrated the marriage with Adambara. Actually it was the drum used in such ceremonies. It occurs in Vajasaneyi samhita 30—19
Lambara and Vanaspati are other drums mentioned in the Vedic literature. Of all the Hindu gods, Shiva was the one who is associated with drums like Damaruka. Tamil and Sanskrit language came from this Damaruka sound according to Panini and Tamil poet Paranjothi. The basic 14 sounds of Sanskrit language called Maheswarani Sutrani came from Shiva’s drum.

The English word tomtom also came from India. In India, kings’ and governments’ announcements came through tom toming. I myself have seen it in Madurai during my childhood days. When there is a breakout of infectious disease or 144 ban they announced it by tomtoming! We, children used to stand round the drumme,r and look at him curiously!

chenda vadhya
Chenda Vadhya in Kerala

Vedic Orchestra

During Mahavrata festival, grand music festival was organised. Agnihotram Ramanujachariar gives the following information:

“We have concrete information from the Vedas of prevalence of the orchestral music. A grand music festival with different instruments is associated with the Mahavrata Yaga. In this yaga (fire ceremony) the Udgata is seated in a chair, the Hotha in a swing and the Adhwaryu on a plank. Hotha prays to god while swinging. The wives of the performers of the Yaga sing along with the Udgata with a variety of instruments. The following instruments are mentioned in this connection:

A Vana with 100 Strings ( my comment: Vana might have given the Tamil word Pana- singer; Yaz Pana; P=V=M are interchangeable)

Naady (pipe), Thunava (wooden lute), Shanka (conch)
Kanda Veena, Godha Veenaka ( a small veena covered with the skin of godha)
Agati (cymbals), Pichchola, Apa Ghatalathika, Karkarika
Ghata karkarika, Shambala veena Ghatari with vandanam (plectrum)
Thaluka Veena, Alabu, Kapisharsaki etc.

At the same time women standing in a circle with water pots on their heads singing rhythmically, keeping time with their feet. This is like modern Tamil Karakam dance”
(From “The Hindu Speaks on Music”)

garo tribals of meghalaya
Garo Tribes of Meghalaya, India

Interesting Information on Ancient Tamil Drums

Sangam Tamil literature has hundreds of words about drums (Murasu, Parai, Kinai and Panai). A lot of percussion instruments are listed in Amarakosa and other Nighandu dictionaries in Sanskrit and Tamil.

1.Tamil forts had drums on the top floor of the forts near the entrance. Kamban in his Tamil Ramayana says that the drums were beaten on top of the gate at Ayodhya. Sangam Tamil literature says that there were three types of drums constantly beaten and they were Kodai, Padai, Mana Murasu meaning Donation, Army and Auspicious messages (Pathitru pathu 2- 4/9). In another place in the same book, they are described as Tyaga, Veera, Nyaya Murasus.

2.Drums were considered dwelling place of deities. They were worshipped with flowers and rice and meat balls (Pathitrupathu 2-17 lines 5 to 8).

3. When the person in charge of worship of drums chanted the Mantras holding the offering in his hands, even the ghosts were trembling. Those meat balls mixed with blood and rice won’t be touched even by the ghosts and ants says Pathiru pathu 3—30/39.

4.Murasu or Drum was considered one of the ten royal symbols. When Saivite saints sang about Shiva as a King they included drum in one stanza. Tamil poet Bharati who composed “Bharat Mata Dasanga”, sang about Drums as one symbol of Bharatmata.

???????????????????????????????
Drums in Japan

4. One of the Sangam poets who came to see a king was dead tired and he slept on the cot meant for placing the drum. It is a crime fit for capital punishments. But the king was sympathetic to the poet and rewarded him amply.

5.War drums will be covered with the hide of a heroic bull. The hide of a bull which killed a tiger will be chosen for this purpose. This is repeated in several places in Sangam literature.

6.Abithana Chinthamani, Tamil encyclopaedia, adds that the drums were decorated with garlands, peacock feathers and Uzinjai flowers and took it in a procession.

chinese drums from incredipedia
Chinese drum from increpedia

Communication through Drums
African countries are for famous for communication through drums. The tribes exchanged information through drum beats. It is like a language understood by the tribal communities. Tamils also followed such a system and the poets were aware of it (Akam.63 and Kuruntokai 390). When the robbers saw a caravan of business people crossing through the forest or arid land they started beating the Thannumai drum and attacked the merchants. Even the sound will shake anyone. So they sent waves of fear by beating the drums – say Tamil poets.

The most popular book of Tamil language Tirukkural which is called Tamil Veda was written by a drummer. The author Tiru Valluvar belonged to Valluvar caste who used to announce the orders of the king by beating the drum from top of an elephant. Though he belonged to Pariah caste he held a high position is the caste. Valluvars used to be priests for the caste. The word Parai means a drum and Pariah means an announcer (by beating the drums).

Hundreds of different percussion instruments are available throughout India.

contact swami_48@yahoo.com

மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?

krishna war

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.

மஹாபாரதப் போர் நடந்ததா? பகவத் கீதை உண்மையா? போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா? 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா? இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை? தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா? அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா? இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்?

இதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- குதர்க்க வாதிகளை – மிதிப்போம் – கால்களால் அல்ல!!—சொற்களால் மட்டும் !!!

( பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon? பிரம்மாஸ்திரம் உண்மையா? என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது! வாழ்க நம் வாசகர் வட்டம்)

krishna-bhishma

அக்குபங்சர் உத்திகளைப் பயன்படுத்தி 58 நாட்களுக்கு பீஷ்மர் இருந்தார்.

உண்மையில் நடந்தது

பாரபட்சமின்றி மஹாபாரதத்தைப் படிப்போர், அதில் உள்ள அத்தனையும் உண்மையில் நடந்தது என்பதை அறிந்து, படித்துச் சுவைத்து ரசித்து, மகிழ்வர். அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் எத்தனை பொருள் பொதிந்தது என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவர். அந்த ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

பாரதப் போரின் காலம் என்ன?

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.
தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

Chakra vyuha
ஹலபேடு என்னும் இடத்தில் சக்ர வ்யூஹம் கல்லில் செதுக்கப்படுள்ளது

முஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.

இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.

இனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

mbh-war cambodia
கம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

Ellora - Mahabhatara
எல்லோரா குகைக் கோவிலில் இருந்து

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

arjuna
அர்ஜுனன் அல்லது பகீரதன் தவம், மாமல்லபுரம்

மார்கசீயவாதிகள் இதை ஒரு வர்க்கப் போராட்டம் என வருணிப்பர். ஆகையால் இடது சாரிகள், இதை ஒரு சிறிய உள்ளூர் சண்டையாகக் காண்பர். எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.

halebedu
ஹலபேடு சிற்பங்கள்

சரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.

contact swami_48@yahoo.com