Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru)
Research Paper written by London swaminathan
Research Article No.1664; Dated 21 February 2015.
இயற்கையை மதிக்கக் கற்றுக் கொடுப்பது பாரதப் பண்பாடு! இயற்கையை ‘மிதி’க்கக் கற்றுக் கொடுப்பது மேற்கத்தியப் பண்பாடு!
எங்கள் லண்டனில் அண்டர்கிரவுண்ட் (மெட்ரோ) ரயில்களில் “கால்களை உட்காருமிடத்தில் வைக்காதீர்கள்” – என்று எழுதிப் போட்டிருக்கும். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் எதிரே இருக்கும் ஆசனத்தில் கால்களை வைத்தே உட்காருவர். அவர்கள் உட்காந்திருக்கும் இடத்தையும் யாரோ ஒருவன் இப்படி அசுத்தம் செய்திருக்கிறான் என்பதை ஏன் அவர்கள் அறிவதில்லை?
ஏன் என்றால் இயற்கையை மதிக்கும் “விஷ்ணு பத்னி நஸ்துப்யம்” – போன்ற விஷயங்களை அவர்கள் தாய் தந்தையர் கற்பிக்காததுதான்.
கருங்காலி (எபனி) மரம்
அந்தக் காலத்தில் எல்லா இந்துக்களும் காலையில் எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்று காலையில் நினைவுகூற வேண்டிய நல்ல விஷயங்களைப் பாடல் வடிவத்தில் நினைவு கூறுவர். அதில் ஒரு ஸ்லோகம்:
ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே – என்று சொல்லும்
பொருள்:–நீராரும் கடலுடுத்த நிலமடந்தையே! என் கால்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதைப் பொறுத்தருள்க – என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருப்பர்.
சிறு வயது முதலே, இந்துக்கள் — நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவைகளை “உயிர் வாழத் தேவையான அளவு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய தத்துவத்தைப் போதித்தனர். மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த — ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரமான – “ஈஸாவாஸ்யம் யத் ஸர்வம்” – என்ற மந்திரமும் இதே கருத்துடைத்தே!
கடம்ப மரம்
1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிகிரர் எழுதிய, அற்புதமான ஸம்ஸ்கிருத என்சைக்ளோ பீடியா – பிருஹத் சம்ஹிதா — வில் இறைவனின் திரு உருவங்களைச் சமைப்பதற்கு மரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதில் உள்ள சில சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.
வில்வ மரம்
1.இறைவனின் திரு உருவத்தைச் செதுக்க தெரிந்தெடுக்கப்பட்ட மரத்தை முதலில் பூக்களால் பூஜித்து வழிபடவேண்டும் .உணவு படைக்க வேண்டும்.
2.பிராமணர்கள் கோவில் கட்டுவதானால் தேவதாரு, சந்தனம், வன்னி மரம், மதூக மரம் ஆகிய மரங்களால் சிற்பம் செய்யலாம்;
க்ஷத்ரியர்களாக இருந்தால் அரச மரம், கடிர மரம், வில்வ மரம், அரிஷ்ட மரம்
வைஸ்யர்களாக இருந்தால் ஜீவக (வேங்கை), சிந்து, கடிர ,ச்யாந்தன மரங்கள்
சூத்திரர்களாக இருந்தால் திண்டுல்க, கேசர, அர்ஜுன (மருத மரம்), சார்ஜ, மாமரம், சால (ஆச்சா) மரங்களால் சிற்பம் செய்யலாம்
(இதிலிருந்து அக்காலத்தில் நான்கு ஜாதியினரும் கடவுள் சிற்பங்களை நிர்மாணித்து வழிபட்டது தெரிகிறது.)
வேங்கை மரம்
- வெட்டுவதற்கு முன்பாக மரத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பால், சாதம், கஞ்சி, ஊதுபத்தி, சாம்பிராணி முதையவற்றைப் படைத்துவிட்டு மரத்தில் வசிக்கும் தேவர், அசுரர், பேய்கள், சிவ கணங்கள், முன்னோர்கள், கணபதி, சிவன் ஆகியோரை வழிபட்டுவிட்டு மரத்தைத் தொட்டுக்கொண்டே கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்:
“ஓ, மரமே! ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குவதற்காக உன்னைத் தெரிந்தெடுத் துள்ளோம். உனக்கு நமஸ்காரம். சாஸ்திர விதிகளின்படி செய்வதால் இதை தயவுசெய்து ஏற்றுக் கொள்வாயாக.உன்னிடத்தில் வசிக்கும் அனைவரும் நான்படைத்த படையல்களை ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மரத்திற்குச் சென்று வசிப்பார்களாக. எங்களை மன்னித்துவிடு. உன்னை வணங்குகிறேன்”
–அத்தியாயம் 59,பிருஹத் சம்ஹிதா
ஜம்பூ (நாவல் மரம்); ஜாம்பூத்வீபம் = நாவலந்தீவு
நாவல் பழம்
எவ்வளவு பணிவு பாருங்கள்! இது மூட நம்பிக்கை அல்ல. சங்க இலக்கியச் சன்றுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். ஒரு பெண் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த மரத்தின் கீழ் காதல் செய்ய மறுக்கிறாள். ஏனெனில் அது அவளுடைய சகோதரியாம். இதே போல உலக மஹா கவிஞன் காளிதாசனும் சகுந்தலாவுக்கும்- இயற்கைக்கும் உள்ள உறவு முறையை சாகுந்தலத்தில் வருணித்திருப்பதையும் முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் தந்து விட்டேன். சகுந்தலா என்றாலே – பறவைப் பெண் – என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். இது பாரதீய சிந்தனையின் மகத்தான உயர்வைப் பிரதிபலிக்கிறது. இமயம் முதல் குமரி வரை இது எதிரொலிப்பது என் காதுகளில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது.
வன்னி மரத்துக்கு (ஷாமி மரம்) பூஜை;சுவாமி கணப்தி சச்சிதானந்தா
வனஸ்பதி சிவ பெருமான்
பாரதீயனுக்கு எப்போது இந்த சிந்தனை மலர்ந்தது என்பதை எண்ணும் போது இன்னும் வியப்பு மேலிடுகிறது. மோசஸ் பத்து கட்டளைகளைப் பெறுவதற்கு முன், ஹோமர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதும் முன், சரஸ்வதி நதி தீரத்திலும், கங்கை நதி தீரத்திலும், அகத்தியன் மூலமாக காவிரி நதிதீரத்திலும் ஒலித்த யஜூர் வேதத்தில் – பிறவா யாக்கைப் பெரியோன் ஆன சிவ பெருமானை “வனங்களின் அதிபதி” (வனானான் பதி) என்றும் மரங்களின் அதிபதி என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதே இந்த சிந்தனை பூத்துவிட்டது.
இமயம் முதல் குமரி வரையுள்ள – கங்கை முதல் காவிரி வரையுள்ள — சிவன் கோவில்களில் தினமும் நடக்கும் அபிஷேகத்தின்போது ருத்ரம்-சமகம் என்ற யஜூர்வேத மந்திரத்தைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செய்வர். அதில்தான் மேற்கூறிய மந்திரங்களும் ஓம் நம சிவாய என்ற அற்புத மந்திரமும் வருகிறது. மேலும் சிவனையே காடாக வருணித்து அவன் தலை முடியெல்லாம் பசுமையாகக் காட்சியளிப்பதாகவும் மந்திரம் சொல்லுவர். அதில் அவனை உயிரினங்களனை த்துக்கும் இறைவன் என்னும் “பசுபதி” என்ற சொல்லும் வரும்.
வ்ருக்ஷானாம் ஹரிகேசேப்ய: பசூனாம் பதயே நம:
என்றும் நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேசேப்யோ என்றும் போற்றுவர். இன்னும் பல இடங்களில் நீ பச்சிலை, நீ செடி,கொடி புதர் என்றும் சொல்லுவர்.
விஷ்ணுவையும் இப்படி வருணிப்பர். புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நீ ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று போற்றுவர் (ந்யக்ரோதோ அஸ்வத்த உடும்பரா).
Following is taken From Face book posting by Akila Kalaichelvan: Compare this with point No.2
சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
மரங்களை வளர்ப்போம்!! மரங்களை மதிப்போம்.
அகேசியா கடேச்சு
You must be logged in to post a comment.