சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்?

india.1

Article No.1972

Date: 4  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 16-46

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. உலகிலேயே அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரே மொழி இதுதான். அதுவும், இலக்கணம், இலக்கியம், அகராதி, சொற் பிறப்பியல், சாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் முதல் நூல்களைத் தந்த மொழி. 2750 ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கு பாணினி என்னும் முனிவன் எழுதிய இலக்கணத்தைப் பார்க்கையில் அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்மொழியில் இலக்கியம் தோன்றின என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம் ஒவ்வொரு இந்தியனும்.

இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பது தமிழர் வாக்கு. ஆகையால் பாணினி இலக்கணம் வரும் முன்பு வேதம் தவிர வேறு பல நூல்களும் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர் பெயர்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்தம் நூல்கள் நமக்குக் கிடைத்தில.

ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டினால் சம்ஸ்கிருத கட்டமைப்பு உங்களுக்கே விளங்கும்.

சம்ஸ்கிருதச் சொற்கள் எல்லாம் வேர்ச் சொல் ஒன்றிலிருந்து பிறந்தவை. இந்த வேர்ச் சொற்கள் எப்படி வளர்ந்து மலரும் என்பதை பாணினி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லிலும் முன்னொட்டுகளைச் சேர்த்தால் அதன் பொருள் மாறிக் கொண்டே வரும். இதோ பாருங்கள்:-

தமிழில் நாயகன், நாயக்கர், விநாயகர் என்று எவ்வளவோ சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் மூலச் சொல், வேர்ச்சொல் நீ= தலைமை தாங்கு, வழிகாட்டு

நயதி = அவன் வழிகாட்டுகிறான்

அநயத் = வழி நடத்தினான்

நயது = அவனே வழி காட்டட்டும்

நயேத் = அவன் வழிநடத்தலாம்

நிநாய = அவன் வழிநடத்தியிருந்தான்

அநைசித்= முன்னொரு காலத்தில் வழிநடத்தினான்

நேஸ்யதி = வழிநடத்துவான்

அநேஸ்யத்= அவன் வழிநடத்தியிருப்பான்

நீயதே = அவன் வழிநடத்தப் பட்டான்

நாயயதி= அவன் வழிநடத்த வைப்பான்

அநாயயத் = அவன் வழிநடத்த வைத்தான்

நயயது= அவன் வழிநடத்த வைக்கட்டும்

நனனேத்= அவனை வழிநடத்த வைக்கச் செய்யலாம்

நினாயயிசதி= அவன் வழிநடத்தச் செல்ல வைக்க விரும்புகிறான்

நினீசு = வழிநடத்த விரும்புகிறான்

நினீசா = வழிநத்டதிவைக்க விருப்பம்

நேனீயதே = அவன் அதிரடியாக வழிநடத்துகிறான்

manuscript

இந்த வேர்ச் சொல்லுக்கு முன், சில முன்னொட்டுகளைச் சேர்த்தவுடன் எப்படி பொருள் மாறுபடுகிறது என்று பாருங்கள்:

அனு நயதி = வேண்ட

அப நயதி = எடுத்துச் செல்ல

அபி நயதி = மேடையில் நடிக்க ( அபிநயம் செய்)

ஆனயதி = அழைத்து வர

உத்நயதி =எழுப்ப

உபநயதி=  கொடுக்க

நிர்நயதி = முடிவு செய்ய ( நிர்ணயம் செய்ய)

பரிநயதி = கல்யாணம் செய்ய ( உஷா பரிணயம்)

விநயதி = அகற்ற, நீக்க

சம்நயதி = ஒன்று சேர்க்க

புத்தி, போதி மரம், போதனை, புத்தர் முதலிய சொற்கள் நமக்கு நன்கு தெரியும். புத்=அறிதல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து

போத, போதன, புத்தி, போதக, பௌத்த, புத்திமத்(மான்), புத்யதே, போபுத்யதே, போதி தர்ம, போதி சத்வ, புதன் (கிரகம்), புதன் (கிழமை), புத்தர் எல்லாம் வந்தன.

panini_

இதுவே

அனு போத்யதே

அவ போத்யதே

உத் போத்யதே

ப்ர போத்யதே

ப்ரதி போத்யதே

வி போத்யதே

சம் போத்யதே என்றும் பல பொருள்களைத் தரும்.

சம்ஸ்கிருதத்தை – சம்ஸ்கிருத இலக்கணத்தைப் படிக்கப் படிக்க வியப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். உலகில் இன்று காணும் செம்மொழிகள் இல்லாத காலத்தே— அம் மொழிகள் வளர்ச்சியடையாத காலத்தே – ஏனைய மொழிகளில் நூல்களே எழுதாத காலத்தே – இவ்வளவு இலக்கண விதிகள் இருந்திருந்தால்  — 2750 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால்— அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அம்மொழி இருந்திருக்க வேண்டும் என்று வெளிநாட்டினரும் உள்நாட்டு அறிஞர்களும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கின்றனர். கோல்டுஸ்டக்கர் மற்றும் இந்திய சம்ஸ்கிருத அறிஞர்கள் அனைவரும் பாணினியை கி.மு 750 என்று காலம் கணித்துள்ளனர்.

2000 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. பாணினி வினை சொற்களை பத்து வகுப்புகளாகப் பிரித்தார். அவைகல்ளுக்கு அவர் கொடுத்த பெயர்களைப் பாருங்கள்:

sanskrit village

Sanskrit speakers in Karnataka village

பத்து ‘ல’-காரங்கள்!

லட், லன், லிட், லுன், லுட், ல்ருட், லொட், லின், லெட், ல்ருன்.

இவைகளையும் ‘ட்’ –டில் முடிபவை, ‘ன்’ –னில் முடிபவை என்று பிரிக்கலாம். எவ்வளவு மஹா மேதையாக இருந்தால் இப்படியெல்லாம், எளிமைப் படுத்த முடியும்.. சுருக்கி வரைதல் என்பதற்கு உலகில் ஒரே இலக்கணம் பாணினிதான். இவர் இவ்வளவு சுருக்கியதால் கி.மு.நாலாம் நூற்றாண்டிலேயே வரருசி உரை எழுதினார். அதற்குப் பின் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி மஹாபாஷ்யம் என்னும் மிகப் பெரிய விளக்கவுரை எழுதினார். நாம் திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது போல இவர் பகவான் பாணினி என்று போற்றித் துதிக்கிறார்!

யாராவது ஒருவன் சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் படிக்காமல் வரலாறோ, கலை விமர்சனமோ, பண்பாட்டுக் கட்டுரைகளோ எழுதப் புகுந்தால் ஏதேனும் ஒரு இடத்தில் வாழைப்பழத் தோலியில் வழுக்கி விழுந்தது போல, சறுக்கியிருப்பதை காணலாம்— நமக்கும்

இலக்கியத்தில் நகைச் சுவை வேண்டுமல்லவா!!!.

நான் முன்னர் எழுதிய “பாணினி மாஜிக்” என்ற கட்டுரையையும் (ஏப்ரல் 7, 2015) படிக்கவும்.

A.M.>Water, Noon> Butter Milk, P.M.> Milk: Tips for Good Health!

0-2neermor

Article No.1971

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at 17-19

1.Bhojanaante pibhet takram vaasaraante pibhet payah

Nisaante sa pibhetvaari tribhih rogo na jaatyate

Drink butter milk (diluted curd/yogurt) after a meal, drink milk at night and drink water as soon as you get up.Those who follow these three tips will never become sick!

2.Triphalaa: Haritaki, Amalaka, BiBhitaka

Haritakyaamalakabibhitakaaniiti tripalaa—Susruta Samhita 38-56

Those who use the powder made up of the dried Haritaki, Amalaka, BiBhitaka

In the food will be strong and will develop resistance against stomach diseases.

3.Trikatuka: Dried Ginger, Black Pepper, Pippali/long pepper

Pippaliimariichasrungaveraani iti trikatukam – Susruta Samhita 38-58

This can be made as decoction and drunk for good health. Both the Tripalaa and Trikatuka will increase the digestive powers.

Dairy products

Dairy products

4.Trimadhu – Nectars

Ghrtam gutam maakshikam sa vgnjeyam madhuratrayam

That is Ghee (grtam), Jaggery (Gutam) and Honey (Maakshikam) are considered three nectars. Most of the medicines are taken along with it.

If we keep these things handy at home and use it periodically it will be very good.

Ayurveda and Siddha (Tamil) medicines believe prevention is better than cure.

காலையில் நீர், பகலில் மோர், இரவில் பால்!

0-2neermor

Article No.1970

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at காலை 9-20

1.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

2.பிப்பலீ மரீச ஸ்ருங்கவேராணி இதி த்ரிகடுகம்—சுஸ்ருத சம்ஹிதா-38-58

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் உணவில் சேர்ப்போருக்கு நோய்கள் வாரா.

Dairy products

Dairy products

3.ஹரிதக்யாமலகபிபீதகானிதி த்ரிபலா — சுஸ்ருத சம்ஹிதா- 38-56

ஹரிதகி (கடுக்காய்) ஆமலக (நெல்லிக்காய்), பிபீடகா (தான்றிக்காய்) ஆகிய மூன்றையும் காயவைத்து சூரணமாக சாப்பிடுவோரை நோய் அண்டா.

4.த்ரிமது

க்ருதம் குடம் மாக்ஷிகம் ச விக்ஞேயம் மதுரத்ரயம்

க்ருதம் (நெய்) குடம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்) ஆகிய மூன்றும் மதுரம் (இனியவை) எனப்படும். இவை மூன்றும் மருந்துடன் கலந்து சாப்பிட உதவும்.

த்ரிபலா

படங்களுக்கு நன்றி.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்! இரண்டு பையன்கள் கதை!

bharat mata viveka

Article No.1969

Date: 3 July 2015

Written by London swaminathan

Uploaded from London at 8-01 காலை

ஒரு பிராமணனுக்கு இரண்டு மகன்கள். தகுந்த வயது வந்தவுடன் இருவருக்கும் பூணுல் போட்டு, வேத அத்தியயனம் செய்ய குருவிடம் அனுப்பினான்.  நெடுநாள் கழித்து இருவரும் வேதக் கல்வியை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினர். தந்தை, அவ்விருவரையும் நோக்கி வேதாந்தம் கற்றிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

(வேத+ அந்தம்= வேதத்தின் இறுதிப் பகுதி =உபநிஷத்து = பிரம்மத்தை அறிதல்; பிரம்மம்=கடவுள்)

இருவரும் படித்திருக்கிறோம் என்றார்கள். அப்படியானால் பிரம்மம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லுங்கள் என்றார் தந்தை.

மூத்த மகன், தான் படித்த வேதங்கள், உபநிஷத்துக்கள் எல்லாவற்றிலிருந்தும் ஏராளமான மேற்கோள்களைக் காட்டி தனது மேதாவிலாசத்தை வெளிப்படுத்தினான். அப்பா! இது மனதுக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்டது. அதெல்லாம் எனக்குத் தெரியும் என்று சொல்லி முடித்தான். மகனே! நீ பிரம்மத்தை நன்றாகத் தெரிந்து கொண்டவன் போலத்தான் இருக்கிறாய். நீ போய் உன் காரியங்களைக் கவனி என்றார்.

இரண்டாவது மகனை நோக்கி அதே கேள்வியைக் கேட்டார். அவன் ஒன்றும் பேசவில்லை. பதில் சொல்ல முயற்சிக்கவுமில்லை.உடனே அவன் தந்தை, “மகனே! நீதான் உண்மையில் அறிந்தவன். கடவுளின் பெருமை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அப்படி யாராவது வருணிக்க முயன்றால் சம்பந்தா சம்ப்ந்தமில்லாத விஷயங்களை உவமை காட்டி முடிச்சுப் போட வேண்டியிருக்கும். அளவற்ற ஒன்றை, நித்யமான ஒன்றை – அளவுடைய பொருள்களுடனும், அநித்தியமான பொருள்களுடனும்   ஒப்பிட வேண்டி வரும். உனது மௌனம் அநேக ஆயிரம் ஆதாரங்களை காட்டிவிட்டது என்றார்.

ஆதாரம்: ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மொழிகள்.

IMG_3259

தமிழர்கள் இதை ஒரே வரியில் சொல்லிவிட்டார்கள்: கண்டவர் விண்டிலை; விண்டவர் கண்டிலை.

யார் ஒருவன் கடவுளைக் கண்டுவிட்டதாகச் சொல்கிறானோ அவன் இன்னும் முழு சொரூபத்தைக் காணவில்லை. கண்டுவிட்டால் பேசா அனுபூதி பிறந்து விடும். பின்னர் அருணகிரிநாதர் போல “சும்மா இரு! சொல் அற!” — என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

இப்படித் திடீரென்று பிரம்ம ஞானம் தோன்றியவுடன் ஆதி சங்கரர், விவேகாநந்தர், பாரதியார் போல 40 வயதுக்குள் உடலைத் துறந்துவிடுவர்.

“உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” – எனும் யஜுர் வேத ருத்ர மந்திரமும் இதையே செப்பும். வெள்ளரிப் பழத்தின் காம்பு, அது பழுத்தவுடன், எப்படித் தானாக விலகிவிடுகிறதோ, அப்படி எனக்கும் மரணத்திலிருந்து விடுதலை தருவாயாக – என்பதே இதன் பொருள்.

முழு மந்திரம்: “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே, சுகந்திம் புஷ்டிவர்தனம். உர்வாருகம் இவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்”—அனைவரும் அனுதினமும் சொல்லலாம்.அநாயாச மரணம் கிட்டும். அதாவது நாமும் கஷ்டப்படாமல், மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாமல் இறைவனடி எய்துவோம்.

இதே பிளாக்கில் லண்டன்  சுவாமிநாதன் எழுதிய கீழ்கண்ட  திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படியுங்கள்:–

சலாம் முருகாசலாம் முருகா! அருணகிரிநாதரின் தனி வழி!! —வெளியிட்ட தேதி ஜூன் 25, 2014

அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி – வெளியிட்ட தேதி ஜனவரி 16, 2012

சம்பந்தருக்கு அடிமை அருணகிரிநாதர்—  வெளியிட்ட தேதி  ஜனவரி 17, 2013

டாக்டர் முருகனும் ‘பேஷண்ட்’ அருணகிரிநாதரும் – வெளியிட்ட     தேதி ஜனவரி 15, 2013

தனிமையில் இனிமை –அருணகிரிநாதர் — வெளியிட்ட தேதி ஜனவரி 14, 2013

திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் – வெளியிட்ட தேதி  ஜனவரி 22, 2013

நரகத்துக்குப் போவோர் பட்டியல் – வெளியிட்ட தேதி ஜனவரி 23, 2013

தமிழில் திட்டத் தெரியுமாவசைபாடுவது எப்படி? —வெளியிட்ட தேதிஜனவரி 21, 2013

Story of Two Boys: Learning versus Realization!

bharat mata viveka

Article No.1968

Date: 2 July 2015

Written by London swaminathan

Uploaded from London at 19-36

“Those who talk about it has never seen it; those who has seen it never talk about it” – is a popular Tamil saying ( Kandavar Vindilar, Vindavar Kandilar).

“Doing Nothing is Happiness”  is a very famous saying of the great Tamil saint Arunagirinathar (Summaa iruppathe Sukam).

This is explained in the following story which is repated by various saints of India:-

A Brahmin once sent his two sons to a learned pundit to study the Vedas and Upanishads. Having completed their study after twelve years, they returned home. Their father asked one of them

:”Have you understood Brahman?” The boy said “Yes” and started quoting sloka after sloka from the scriptures to explain what Brahman was. Listening patiently to his son’s verbose exposition, the father told him, “Boy, you have not understood Brahman”.

He then asked his other son if he had understood what Brahman was. He did not give any answer, but kept quiet. Tha father asked him the same question twice, thrice and four times. Still the boy remained silent.

The father then said, “My boy, I am delighted to see that you have really understood Brahman”. This goes to show that by silence alone can one know the Truth. What you experience after your thoughts have completely ceased to flit about in mind, does not admit description because it is inexpressible.

IMG_3259

Great Tamil saint Appar is in the picture

“Religion in India is not dogmatic. It is a rational synthesis which goes on gathering in  itself new conception as philosophy progresses.”

“External invasions and internal dissensions came very near crushing Indian civilization many times in its history. The Greek and the Scythian, the Persian and the Moghul, the French and the English have by turn attempted to suppress it, and yet it has its head held high”

– Dr S Radhakrishnan, Philosopher and Ex President of India.

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே

tom tom

தொகுத்து வழங்குபவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்: 1967

தேதி: 2 ஜூலை, 2015; லண்டன் நேரம்: காலை 8-40

மேலும் சில சம்ஸ்கிருத பழமொழிகள்:–

 

1.ஆத்மசித்ரம் ந ப்ரகாஸயேத்

தன்னுடைய குறைகளை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது.

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே/ வெளிச்சம் போடாதே

2.பலாயமானஸ்ய சௌரஸ்ய கந்தைவ லாப:

ஓடும் திருடனுக்கு கோமணமும் லாபம்தான்

(எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்)

3.அபேயேஷு தடாகேஷு பஹுதரமுதகம் பவதி

குடிப்பதற்கு ஏற்றதல்லாத குளங்களில் தண்ணீர் நிரம்ப இருக்கிறது

(கருமியிடம் உள்ள பணம் போல)

4.இதமரண்யே ருதிதமிவ

இது காட்டில் அழுதது போல

5.அர்த்தி தோஷம் ந பஸ்யதி – சாணக்ய நீதி தர்பண:

உனக்கு கார்யம் நடக்க வேண்டுமானால் குற்றம் குறைகளைப் பார்க்காதே

6.அவ்ருத்திகம் த்யஜேத் தேசம்

வருமானம் இல்லாத தேசத்தை விட்டுவிடு (ஓரிடத்தில் வெற்றி கிட்டாவிடில் அதே இடத்தில் வசிக்காதே)

damara madu

7.அசக்தாஸ்தத்பதம் கந்தும் ததோ நிந்த்யம் ப்ரவர்ததே

ஒரு நிலையை எட்ட முடியாதவர்கள் அதை நிந்திப்பர்

(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)

(கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை)

8.அஸ்வா யஸ்ய ஜயஸ்தஸ்ய – சாணக்ய நீதி தர்பண

குதிரை உடையவனுக்கு வெற்றி

9.ஆத்மார்தே கோ ப்ருத்வீம் த்யஜேத் – மஹாபரதம்/பஞ்சதந்திரம்/சாணக்கியய நீதி தர்பணம்

ஆத்மஞானத்துக்காக உலகையே தியாகம் செய்வர்

தன்னுயிரைப் பாதுகாக்க தேசத்தையே விட்டும் செல்லலாம்

10.உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயா: கிம் ப்ரயோஜனம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கரை கடந்த பின்னால் படகினால் என்ன பயன்?

(ஏறிய ஏணியை எத்தி உதைப்பர்)

11.உப்யதே யத் யத் பீஜம் தத்ததேவ ப்ரோஹதி

எதை விதைக்கிறாயோ அதுதான் கிடைக்கும்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

12.க: ஸரீர நிர்வாபயித்ரீம் சாரதீம் ஜ்யோஸ்தனாம் படாந்தேன வாரயிதி – சாகுந்தலம்

சூட்டைத் தணிக்கும் சரத் சந்திர ஒளியை, யார் துணியில் கட்டி எடுக்க முடியும்?

More Stories about Wives!

537_Swami_Rama_Tirtha

Written  by London Swaminathan

Article No. 1966

Dated 1 July 2015.

Uploaded at London time: 15-37

I have already given some stories about wives of Socrates, Milton etc., in my earlier post “Easy way to become a Philosopher”, posted on 15th June,2015

1.Here are more stories:

Swami Rama Tirtha had been to Japan, America and other places. On his return to India his wife went to meet him. In the course of the talk, the wife questioned him, “During the tour in foreign countries far away from me, did you at any time remember me?”.

I have already given some stories about wives of Socrates, Milton etc., in my earlier post “Easy way to become a Philosopher”, posted on 15th June,2015

To this the great Swami gave the characteristic reply, “Is it necessary to remember about my nose? Since it forms a part of my body I need not think of it now and then. So also, since you are a part of my universal body, there is no need for me to think of you as someone separate from me.”

ram tirth 2

2.Story from a Tamil Proverb

The story goes that a certain man who was the important person in a town lost his mother. A lot of people came to console him and said, “O, Your mother was a great person. She was a mother to everyone. Now the village will be like a motherless child”. This is the Tamil way of consoling. One of the youths among the crowd was a fool. He did not know anything, but just pretended to be intelligent by imitating everyone. He also said the same thing to the grieving VIP. It went on very well for a time. But one day another important person in the town lost his wife. Now that he knew what to say in such a bereavement, he first went to express his condolences. He blindly followed the previous condolence message, “ O, Your wife was a great wife. She was not only wife to you but was the wife of whole village. Now the village looks like a wifeless husband”. The people who watched him saying this thrashed him and threw him out!

IMG_2813

3.Dr Johnson about Wife

Of a lady more insipid than offensive, Dr Johnson (1709-1784, English Writer) once said, “She has some softness indeed; but so has a pillow. For my part, I do not envy a fellow one of those honey- suckle wives; as they are but creepers at best, and commonly destroy the tree they so tenderly cling about”

4.Clever and Stupid Wives

When a surprise was expressed at his choice of a wife, Talleyrand (French Bishop, politician and diplomat) replied: A clever wife often compromises her husband; A stupid one only compromises herself.

5.Film Star’s Wife

By mistake a letter directed to a newly married film star was delivered to the house of a poor working man. Upon being opened, it proved to contain a threat that unless a substantial sum of money was paid, his wife would be kidnapped. The working man immediately wrote a reply, “Sir, I don’t have much money, but I am very much interested in your proposition”

6.Wife or Money?

A niggardly farmer lost his wife and scrimped as much as he could on each phase of the funeral expenses down to the bitter end, when he lingered in the graveyard after the mourners had gone, and asked the grave digger, “How much do I owe you?”

“Ten dollars”, said the gravedigger, who was just beginning to fill in the grave.

“That is too much for such a light sandy soil”, said the farmer speculatively

“Light sandy soil or rich loamy soil, ten dollars”, said the grave digger firmly, “or up she comes”.

The farmer hastily paid.

IMG_3394

7.Army Officer’s Wife

A French general’s wife, whose tomngue lashing ability was far famed, demanded that an old servant, who had served her husband during the wars, be dismissed.

“Jacques”, said the general, “go to your room and pack your trunk and leave- depart”.

The old French man clasped his hands to his head with dramatic joy.

“Me — I can go!” he exclaimed in a very ecstasy of gratitude.

Then suddenly his manner changed as with the utmost compassion he added, “But you my poor general, you must stay”.

 

8.Disobedience to Husband

A celebrated French preacher, in a sermon upon the duty of wives, said: “ I see in this congregation a woman who has been guilty of the sin of disobedience to her husband, and in order to point her out to universal condemnation, I will fling my breviary (Book containing Daily Hymns) at her head”.

He lifted his book, and every female head instantly ducked.

basketwali

XXXSubhamXXX

மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!