சத்வ, ரஜோ, தாமச உணவு வகைகள் எவை? (Post No. 2396)

IMG_9939

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2396

 

Time uploaded in London :– காலை 9-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9937

267 உணவுகளின் பட்டியல்:

பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த அருமையான தமிழ் உணவு என்சைக்ளோபீடியாவில் உணவு பரிமாறுவது எப்படி? என்ற விவரங்களை நேற்று வெளியிட்டேன். இதோ 267 உணவு வகைகளில் எவை உத்தம (சத்வ), மத்தியம (ரஜோ), அதம (தாமஸ) உணவு வகைகள் என்ற பட்டியல். இதற்கான அறிவியல் காரணங்கள் ஆராயப்படாவிடினும், இது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகும். 1891-ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் 1912-க்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. இதில் குறிப்பிடப்படாத தமிழ் உணவு வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். யாராவது ஒருவர் இதை மறுபதிப்பு செய்வது பயனுள்ள பணியாக இருக்கும். சேர், வீசை போன்ற அளவை முறைகளை கிலோ முதலிய தற்கால அளவுகளுக்கு மாற்றுவது அவசியம். இதை எழுதியவர் டி.கே.ராமசந்திர ராவ்.

சத்துவ குண, உணவு வகைகள்

IMG_0336 (2)

 

ரஜோ குண, உணவு வகைகள்

IMG_0337 (2)

 

தமோ குண, உணவு வகைகள்

IMG_0338 (2)

நூலிலடங்கிய விஷயங்கள்

IMG_9957 (2)

 

IMG_9945

 

IMG_9946IMG_9947

–சுபம்–

விவேகானந்தரும் நெப்போலியனும்! (Post No. 2395)

VIVEKA QUOTE

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 December 2015

 

Post No. 2395

Time uploaded in London :– 8-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

விவேகானந்தர் சரிதம்

 

ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

 

ச.நாகராஜன்

 

 

கதாம்ருதம் எழுதிய மகான் எம்

 

எம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகேந்திர நாத் குப்தா (ஜனனம் 14-7-1854; சமாதி 4-6-1932) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதியான பின்னர், அன்னை சாரதா தேவியாரின் அருள் பாலிப்பில் வாழ்ந்து வந்தார். அன்னையின் மறைவுக்குப் பின் தாயை இழந்த சேய் போல அவர் துடித்தார். எழுபது வயது நிரம்பிய அவர்.”ஆஹா! அன்னை அல்லவா என்னை 35 வருட காலம் பாதுகாத்தார்! இப்போது அவர் இல்லையே! நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

 

 

பின் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு சிறு ஆசிரமத்தை அமைத்து அங்கு வசிக்கலானார்.

அமைதியையும் ஞானத்தையும் நாடுவோர் அந்த ஆசிரமத்திற்கு வரலாயினர். வேத கால ஆசிரமம் போல அது விளங்க ஆரம்பித்தது.

 

காலையிலிருந்து இரவு முடிய பரமஹம்ஸரின் அருளுரைகளும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அங்கு ‘எம்’மால் நினைவு கூரப்பட்டன.

 

பரமஹம்ஸரின் பக்தரான பாபு என்பவர் உலகியல் வாழ்க்கையில் அதிக துன்பம் அடைந்திருப்பதாக கேள்விப்பட்ட எம், ஒரு நாள் தனது தொண்டர்களில் ஒருவரை அவருக்கு உதவ கல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

அந்தத் தொண்டரிடம்  “பாபுவிடம் ஷிமுல்தலாவுக்கு (பாபு வாழ்ந்த இடம் – வங்காளத்தில் உள்ளது) என்னால் இப்போது வர முடியாது என்று சொல். யாருக்குத் தான் துன்பம் இல்லை, கஷ்டங்கள் இல்லை!” என்று கூறியவர் தொடர்ந்து வாழ்க்கையில் வாழ வேண்டிய முறையை அங்கு கூடியிருந்தோருக்கு உபதேசிக்க ஆரம்பித்தார்.

 

QUOTE VIEVEKA

எம்மின் உபதேச உரை

 

“உலகம் என்பது புயல் அலைகளைக் கொண்ட ஒரு பெரும் கடல். அதில் பலஹீனமானவர்கள் தலையை நிமிர்த்திக் கொண்டு நிலைத்திருக்க முடியாது. துன்பங்களோ, சறுக்கல்களோ ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஸ்வாமி விவேகானந்தர், “ எவர்கள் துன்பங்களையும் சறுக்கல்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் குழந்தைகள்.. பச்சைக் குழந்தைகள்” என்று சொன்னார்.

 

 

ஸ்வாமிஜி தனது நண்பர் ஒருவரிடம். “ உனக்கு தொந்தரவு, தாழ்வுகள், சறுக்கல்கள் என்றால் என்ன என்று தெரியுமா? எவர்கள் அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மனிதர்களா, என்ன?” என்று கேட்டார்.

 

 

பரமஹம்ஸர் ஒரு  முறை சொன்னார்: “சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள் ஐந்து ரூபாய்க்குச் சமம். ஆனால் எவர்கள்  வெற்றி தோல்வியில் மயங்காமல் இருக்கிறார்களோ அவர்கள் எழுபத்தைந்து ரூபாய்க்குச் சமம். அவர்கள் தொட்டவுடன் துள்ளிப் பறந்தோடும் காளைக்குச் சமம். அவர்கள் எந்த ஒரு சந்தோஷமான உணர்வுக்கும் அடி பணீய மாட்டார்கள்”.

 

 

(கிரேக்கத்தில் உள்ள) ஸ்பார்டாவில் ஒரு  முறை பலஹீனமானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கிப் போட்டார்கள். அந்த தேசத்தில் பலஹீனமானவர்களை ஒரு பெரும்  தொந்தரவு என்று நினைத்தார்கள். பலஹீனமானவன் எதையும் சாதிக்க முடியாது. துன்பங்களைச் சந்திக்காதவன் மனிதனா என்ன?

 

மஹாபுருஷர்களின் குணாதிசயங்கள் எவை தெரியுமா? பொறுமை, அபாய தருணங்களில் சீரான முன்னேற்றம், நல்ல காலங்களில் தர்ம சிந்தனை, பேச்சில் நளினம், போர்க்களத்திலோ அபார வீரம் – சிங்கத்தைப் போல!”

 

Statue équestre de Napoléon

L’empereur désigne le port.

 

நெப்போலியனின் நன்றி உணர்வு

 

இதைத் தொடர்ந்து எம் பாண்டவர்கள் துன்பங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டார். பி நெப்போலியனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்னர்ர்.

“நெப்போலியன் படை விரானாக இருந்த போது அவனுக்கு திடீரென்று வேலை போனது.  கஷ்டத்தில் வாடும் அவனது தாயார் அவனுக்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு கடிதம் எழுதினார். அவனால் வேதனையைத் தாள முடியவில்லை. நேராக ஆற்றை நோக்கி ஓடினான். அதில் குதித்து உயிரை விட் நினைத்தான். அப்போது அவனைப் பின்னாலிருந்து ஒரு கரம் தொட்டது. அவனது நண்பர்களில் ஒருவனின் கரம் அது.

 

 

‘என்ன விஷயம்’ என்று அவன் கேட்க நடந்ததை நெப்போலியன் சொல்லி வருந்தினான். உடனே அந்த நண்பன் தன் பையிலிருந்த (இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான) பிரெஞ்சு நாணயங்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான். தபால் அலுவலக நேரம் முடியப் போவதை நினைத்த நெப்போலியன் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் அதை அனுப்ப ஓடினான். காலம் ஓடியது. படிப்படியாக உயர்ந்த நெப்போலியன் சக்கரவர்த்தியாக மாறினான.

ஒரு நாள் தன் நகரில் மக்கள் வெள்ளம் சூழ ஊர்வலமாக வந்த போது வழியில் ஒரு ஓரமாக நின்றிருந்த பழைய நண்பனைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்ட நெப்போலியன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தான்.

 

 

அந்த நிலையிலும் கூட அந்த நண்பன் தான் நெப்போலியனுக்கு பணம் கொடுத்து உதவியதைச் சொல்லவில்லை. ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நெப்போலியன் வற்புறுத்தி அவனுக்கு ஒரு பெரும் பதவியைத் தந்து கௌரவித்தான்.”

napoleon_statue_inside_les_invalides_2_1600

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில்

 

எம் இதைச் சொல்லி நிறுத்தினார். உடனே குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் இது ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போல அல்லவா இருக்கிறது என்று கூறி வியந்தார்.

அந்தச் சீடர் கூறினார்:- “அடடா! நெப்போலியன் எப்படிப்பட்ட அரும் குணம் உடையவன். பொது சபையில் தன் நண்பனை கௌரவித்தானே! ஸ்வாமிஜியின் வாழ்க்கையிலும் இதே போல நிகழ்ச்சி நடந்துள்ளதே! அல்மோராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தனது பழைய கால நண்பர் ஒருவரைச் சுட்டிக் காட்டி வரவழைத்து பெரிதும் கௌரவித்தார். உணவின்றி பசியால் வாடி விவேகானந்தர் அலைந்த காலத்தில் அந்த நண்பர் அவருக்கு ஒரு வெள்ளரிக்காய் கொடுத்து அவர் பசியைப் போக்கினார். அந்த நன்றியை அவர் மறகக்வே இல்லையே” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

 

எம் கூறினார்: “அது தான் மஹாபுருஷர்களின் குணநலமாகும். அவர்கள் ஒவ்வொரு நல்ல செயலையும் -அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை – மறக்க மாட்டார்கள். என்றும் நன்றியுடன் இருப்பர்.”

 

 

இரவு நேர சந்திர ஒளி பிரகாசமாக ஒளிர ஆசிரமத்தின் வனாந்திர சூழ்நிலை ஸ்வாமிஜியின் நினைவால் புனிதம் பெற்றது.

 

நெப்போலியன் வாழ்விலும் ஸ்வாமிஜியின் வாழ்விலும் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையை மனதில் அசை போட்டு வியந்தவாறு சீடர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் கலைந்தனர்.

 

*********

ஸ்வாமி நித்யாத்மனந்தா எழுதிய ‘M – THE APOSTLE AND THE EVANGELIST’ (VOLUME – 1) என்ற நூலில் 346 முதல் 349ஆம் பக்கம் முடிய உள்ள உரையாடலை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை.

வாழை இலையில் உணவு பரிமாறுவது எப்படி? (Post No. 2394)

IMG_0335

Third Edition of 1891 Book

 

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2394

Time uploaded in London :– 13-22

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் ஒரு அருமையான சமையல் புத்தகத்தைக் கண்டேன். சுமார் 350 பக்கங்களுக்கு ராமச்சந்திர ராவ் என்பவர் எல்லா தென்னிந்திய வகை உணவுகளையும், அவற்றின் செய்முறைகளையும், பாத்திரம், அடுப்பு வகைகளையும் அருமையாக விளக்கி எழுத்யுள்ளார். 300 உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் போட்டு அவற்றில் எவை சாத்வீகமானவை, எவை ராஜஸ உணவு, எவை தாமஸ உணவு என்ற பட்டியலும் கொடுத்து இருக்கிறார். இது ஒரு தமிழ் உணவு என்சைக்ளோபீடியா, அதாவது கலைக் களஞ்சியம்.

 

 

இதில் சிறப்பு என்னவென்றால் 1891-ஆம் ஆண்டிலேயே இந்த தமிழ்ப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. என் கையில் தவழ்ந்த பதிப்பு, மூன்றாம் பதிப்பு. அது அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு 1912.

 

பிராமண கல்யாணங்களில் இலையில் எந்த இடத்தில் என்ன உணவுப் பொருட்களை வைக்கவேண்டும், அதை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை படம்போட்டு 1891 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு தைக்கப்பட்ட தையல் இலை பற்றியும், வாழை இலை தொன்னைகள் பற்றியும் சொல்லியுள்ளார்.

 

இந்தக் கட்டுரையில் சுப நாட்களிலும், அசுப கர்மாக்களிலும் உணவு பரிமாறுவது எப்படி என்பதைக் காண்போம். இன்னொரு கட்டுரையில் 300-க்கும் மேலான சத்வ, ராஜச, தாமச உணவுவகைகளின் பட்டியலைக் காண்போம்.

IMG_0007 (2)

IMG_0006 (2)

 

IMG_0008 (2)

 

8c886-donnai4 DONNAI 1

 

b88a5-donnai2

வாழை இலையில் தொன்னை செய்யும் முறை.

 

–சுபம்–

Traditional Way of Serving Food! (Post No. 2393)

IMG_0335

Third Edition of 1891 Book

 

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2393

Time uploaded in London :– 9-54 am

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_0007 (2)

South Indian Hindus, particularly Brahmins, eat food on banana leaves. Villagers eat on stitched leaves. The leaves from Banyan, or Jack fruit trees or Mandarai are stitched together with small sticks (looking like tooth picks) and used for eating food. In addition to the leafy plates, they also make leaf cups from banana leaves and they are called Donnai. Now the custom of using the banana leaves is followed only during weddings or religious ceremonies. People started using metal plates or porcelain or plastic or even paper plates.

 

The banana leaf has got very good medicinal qualities. Moreover Hindus believed in recycling. The left overs on the leaves were eaten by dogs, cattle and other animals. The leaves easily decay and mix with the soil and change into manure.

DONNAI making CHENNAI; family priest is making leaf cups/Donnais in my brother’s house in Chennai.

 

 

There is a traditional way of serving food in Hindu ceremonies. If it is an auspicious event they serve the food in a particular order. If it is an inauspicious event, such as an event for the departed souls, they serve it differently. The following information is taken form an 1891 book – a veritable Tamil encyclopaedia of Food items and recipes. But serving food differs from region to region. So there is no hard and fast rule. Each food item is placed in a particular place on the leaf. The cooks and chefs are very well versed in it.

 

Brahmins never used garlic or onion or Masala ingredients 75 years ago. This is followed until today in all the Tamil temples (Sri Lankan Tamils use onion and garlic). Even non vegetarians served only vegetarian food in social functions.

 

This is the order they follow traditionally (Please see the picture):

1.Salt

  1. Spicy paste (like chutney, but made up of vegetable, known as Thukaiyal or Thuvaiyal in Tamil)

3.Pickles

4.Kosumbary (salty and soaked lentils)

  1. Vegetable Curry, Upperi (nowadays English vegetables such as Cabbage, Beans, Cauliflower, Potatoes, Tomatoes etc are used in the wedding feasts. But they never use it even today in religious ceremonies, particularly ceremonies for the departed souls)
  2. Dhal (boiled tur dhal); they mix it with rice and ghee and eat it as the first course; the second course is Rasam/diluted lentil soup and the third course is Yogurt/curd rice); in between there are a few items added on special occasions.
  3. Chitrannam (lemon rice, Coconut rice etc)

8.Papad, Dhal Vada, Vadaam, Vatral (Vatral is fried dried vegetables i.e. they preserve all the vegetables by salting and drying. When they need it, they shallow fry it)

9.Leafy cups called Donnai are placed in which they pour spicy liquids such as Sambar, Rasam, Kuzampu etc

  1. Sweets such Boli, Laddu, Kozukkattai/Modakam

11.Payasam (sweet liquid made up of vermicelli, Suji/rawa, Sago, Pounded rice or dhal with jiggery)

  1. Rice (staple food of South Indians)
  2. Ghee (melted butter)

 IMG_0014

Ceremonies for Departed Souls

If it is a memorial day such as death anniversary, then the order is slightly changed.

It is 12, 11, 10 and 13.

Then 2 to 9.

(Please see the picture for numbering)

 

–Subham–

காற்றில் அசுத்தம்: 5-ஆவது ஆட்கொல்லி! (Post No. 2392)

The India Gate monument in New Delhi, India, enveloped by a blanket of smog

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 December 2015

 

Post No. 2392

 

Time uploaded in London :– 6-15 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 air pollution 4

  1. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

 

     சுற்றுப்புறச் சூழ்நிலை மாசினால் வெளிப்புறக் காற்றும் மாசு அடைந்து மனிதனின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லி ஆகிறது.

 

 

    உயர் இரத்த அழுத்தம், வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மாசடைந்த காற்று, புகை பிடித்தல், ஊட்டச் சத்தில்லா உணவு ஆகிய நான்கு காரணங்களினால் இந்தியாவில் ஏராளமானோர் இறக்கின்றனர். இதை அடுத்து ஐந்தாவது காரணமாக வெளிப்புறத்தில் ஏற்படும் காற்று மாசினால் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரைப் பறி கொடுக்கின்றனர். க்ளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global burden of Disease) தனது அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளது.

 

 

 

     ஆறுலட்சத்து இருபதினாயிரம் பேர் இப்படி காற்று மாசினால் தங்கள் ஆயுளைக் குறுக்கிக் கொண்டு இறக்கின்றனர் என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இந்தியாவில் இறப்பவரின் எண்ணிக்கை உலகில் இது போல காற்று மாசினால் இறப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையையும் அறிவிக்கிறது.

 

 

    காற்றிலே உள்ள மாசானது சுவாசக் கோளாறுகளையும் இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்குகிறது. இதனால் குறுகிய ஆயுளுடன் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் காற்று மாசின் மோசமான விளைவுகளை அதிகமாகக் காண்கிறோம்.

 

 

   உலகளாவிய அளவில் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் பேர் காற்றில் உள்ள மாசினால் ஏற்படும் வியாதிகளால் இறக்கின்றனர். இரண்டாயிரமாவது ஆண்டில் 8 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்து இப்போது 32 லட்சமாக ஆகி இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் பொருள் என்னவெனில் நாம் மிகவும் அரிதான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 740 லட்சம் மனித ஆண்டுகளை இழக்கிறோம் என்பது தான் என்கின்றனர்.

 

 air pollution

    ஆகவே காற்று மாசு பற்றிய விழிப்புணர்ச்சியை ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் ஏற்படுத்துவது நமது தலையாய கடமை ஆகிறது!

*************

 

 

தமிழர்களின் பழைய “கடி” ஜோக்குகள்! (Post No. 2391)

Cape-Buffaloes-0560

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2391

Time uploaded in London :– 5-50 am

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

 

ஒரு எருமைக்கு இரண்டு எருமை இருக்கும்!

ஒருவன் ஒரு உபாத்தியாயரிடம் சென்று, “ஐயா! எமது பையனைப் படிக்க வைக்க மொத்தச் செலவு என்னவாகும்?” என்றான்

50 ரூபாய் ஆகும் என்று வாத்தியார் சொல்ல அதற்கவன், “ஐயோ! அந்த ஐம்பது ரூபாயிருந்தால் ஒரு எருமைமாடு வாங்குவேனே” என்றான். அதற்கு உபாத்தியாயர், “வாங்கு,வாங்கு, வாங்கினால் ஒரு எருமைக்கு இரண்டு எருமை உன் வீட்டில் இருக்கும்” என்றார்.

 

Xxx

ஒரு கணக்கு

உபாத்தியாயர் பையன்களைப் பார்த்து, “இந்தக் கணக்கு தெரியவில்லையா? உங்கள் நால்வருக்கும் 100 வாழைப்பழம், 60 கொய்யாப்பழம் கொடுத்துவிட்டால், ஒவ்வொருவனுக்கும் என்ன வரும்?” என்று கேட்டார்.

சிறு பையன்:- வயிற்று வலி வரும்!

banana

Xxx

சம்பாஷணை

மகன்:- நம்ம வீட்டில் பேசும் பாஷைக்கு தாய் மொழி என்று ஏன் கூறுகிறார்கள்?

தகப்பன்:- ஏனெனில் வீட்டில் தகப்பன் பேச்சை யாரும் ஏற்காததால் அப்படியாயிற்று.

Xxx

யார் வீரன்?

ஒரு வீரன் “நான் ஆயிரம் பேருடைய  கால்களை வெட்டி வந்திருக்கிறேன், பாருங்கள்” என்றான்.

சூரன்: அடே, முட்டாள்! தலையை வெட்டுவதல்லவோ சுத்த வீரத்தனம்?

வீரன்: அதற்கு நானென்ன செய்வேன்? முன்னமேயே ஒருவன் தலைகளையெல்லாம் வெட்டிக்கொண்டு போய்விட்டானே” என்றான்.

 

Xxx

தடையென்ன பத்தியம் சொல்

இறக்கும் தருணத்திருக்கிற ஒரு பிராமணனருகில் பந்துக்கள் சேர்ந்து, ஓய்! சாஸ்திரிகளே! தாங்கள் பெரியவாள், எல்லாம் அனுபவித்தாயிற்று. சந்நியாசம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கந்த ரோகி, “ஆஹா, ரொம்ப சரி, அதற்குத் தடையில்லை. பத்தியமென்ன?சொல்லுங்கள்” என்றார்

Xxx

 

halwa

காப்பி கிளப் கல்யாணமய்யன்

ஒரு காப்பிக் கிளப்பில் ஜம்பக்கார சாஸ்திரியார் ஒரு சேர் அல்வா வேண்டும் என்று கேட்டார். கல்யாணமய்யன் கட்டிக் கொடுக்கவே, அதற்குச் சாஸ்திரியார், அல்வா வேண்டாம்,  ஜிலேபி கொடு என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஜிலேபி கட்டிக்கொடுத்தவுடனே அதை வாங்கிக் கொண்டு, அவர் மெள்ள மெள்ள பொடி நடையாகச் சென்றார். ஓய், சாஸ்திரிகளே! ஜிலேபிக்கு ரூபய் தரவில்லையே என்று கல்யாணமய்யன் கேட்க, ஜிலேபிக்குப் பதிலாக அல்வா கொடுத்தேனே என்றார். ஓய், அல்வாக்குப் பணம் எங்கே? என்று கல்யானமய்யன் கேட்க, சாஸ்திரியார், அல்வா நான் வாங்கவில்லையே என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Xxxx

 

சொக்காய் தைக்கும் சுப்பிரமணிய மேஸ்திரி

ஒருநாள் சுப்பிரமணிய மேஸ்திரி என்னும் தையல்காரன், தன் மனைவிக்கு ரவிக்கை தைத்துக் கொண்டிருக்கும்போது அதில் அரைகஜம் துணி எடுத்துப் பதுக்கி வைத்தான். கதவுக்கு மறைவில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி, “ஏன் அப்படி செய்தீர்கள்?” என்றாள்.

அதற்கு மேஸ்திரி வழக்கம் மாறாதிருக்கும் பொருட்டும், மறவாதிருக்கும்பொருட்டுமே அப்படிச் செய்தேன் என்று பதில் சொன்னான்.

Xxx

 

குதிரையும் கழுதையும்

ஒரு ஊரில் ஒரு நீதிபதியும் வக்கீலும் மிக நேசமாயிருந்தனர். அவர்கள் காப்பி சாப்பிடப் போகும்போது

நீதிபதி: ஹலோ மிஸ்டர் அரிகரய்யர்வாள்! நாமிருவரும் கழுதையும் குதிரையுமாய் மாறும்பக்ஷத்தில் நீங்கள் எதுவாகவெண்டுமென்று கோருவீர்கள்?

வக்கீல்: – இதைக் கேட்கவும் வேண்டுமா? சந்தேகமின்றி கழுதை ஜென்மமே கோருவேன்

நீதிபதி:– ஏன் அவ்விதம் கோருவீர்?

வக்கீல்:- கழுதைக்கு ஒருதடவையாவது நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் குதிரைக்குக் கொடுத்ததாகக் கேட்டதேயில்லை.

-சுபம்–

 

 

 

 

100 Year Old Tamil Jokes (Post No. 2390)

donkey, horse

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2390

Time uploaded in London :– 16-04

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

Horse & Donkey

A judge and a lawyer were very friendly in a town in Tamil Nadu. One day the judge wanted to belittle the lawyer and said with a smile:

My dear friend, if both of us are to become donkey and horse what would you be?

Lawyer: Sir, definitely a donkey is my preference!

Judge: Why do you want to become a donkey?

Lawyer: I know at least a donkey has got the post of a judge, but a horse has never got it. So I would like to be a donkey!!

Xxx

 

Mother tongue

Why do they call one’s native language a “Mother” tongue?

Because nobody listens to a “ father” in the house!

 

XXX

Who is a Hero?

A hero boasted: Look at me. I have brought the legs of one thousand soldiers. What other proof is required to prove me a hero?

Others said, “No, No, if you have brought one thousand heads of the enemies, they will consider you a great hero”

What can I do? Someone has chopped off all the heads already. That is why I cut the legs!

XXX

Cape-Buffaloes-0560

Two buffaloes!

A village farmer went to a school teacher and asked how much it would cost him to educate his son.

Teacher said : It would cost you Rs.50

Villager: Oh my God! If I have Rs.50, I will buy a buffalo.

Teacher: Please go ahead. Then you will have two buffaloes in the house.

Xxx

 

Dying Brahmin

An age old Brahmin was in his death bed following long period of sickness. During that period he was put on a diet.

Priests came to him and advised him to take Sanyasa (This is the fourth stage in every Hindu’s life: Brahmachary/student, Grahastha/Householder, Vanaprastha/Secluded life in the forest and Sanyasin/Given up all attachments)

 

Immediately the Brahmin said: I am ready. But what is the Patyam/diet?

XXX

 banana

Stomach pain

The teacher asked the students: Don’t you know the answer? It is a simple arithmetic sum. I give all the four of you

100 bananas

And 60 mangoes

What does each one get?

Youngest of the boys : Stomach ache, Sir!

 

XXX

Purattasi Saturday Leave

A man left his native town and studied abroad. He did not know his mother tongue Tamil, but very fluent in English. He was appointed as the Deputy Collector in Tamil Nadu. One of his subordinates went to him and  asked for leave of absence for a Saturday in the month of Purattasi (It is a holy day and prayers are offered to Vishnu).

 

Deputy collector asked him whether there is any precedent to give him holiday. And asked him ‘’did you get this leave last year?’’

 

The subordinate replied humbly and politely in Tamil, “Sir last year it fell on a Sunday. So there was no leave granted”.

Ok, leave sanctioned, said the Deputy Collector!

Xxx

Tailor Subramanya Mestry

A woman came to tailor Subramanya Mestry and gave a piece of cloth for stitching blouse for her. Mestry’s wife was watching it from behind the door. As soon as the woman customer left, he cut a piece from it and hid it in the table drawer. His wife came and asked him why he did that. He replied without any hesitation, “I did it to follow our tradition and to keep something to remind me.”

halwa

 

xxx

Coffee Club Kalyanam Iyer

A clever and cunning man went to Kalyanam Iyer’s Sweetmeat shop.

Man : Please give me one kilo Halwa (Indian sweet).

When he got it he returned it saying he changed his mind.

Man: Give me One kilo Jalebi instead.

He got and walked away without paying for the sweets.

Kalyanam: Hey, give me the money for Jalebi.

Man: I have given you one kilo Halwa for that.

Kalanam: Where is the money for the Halwa.

Man: I don’t have it in my bag. I returned it to you.

 

–Subham–

நட்சத்திரப் பாடல்!(Post No. 2389)

IMG_0349 (2)

Zodiac Coins issued by Mogul Emperor Jehanghir

Compiled by S NAGARAJAN

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 7-40 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ச.நாகராஜன்

 

 

தமிழ் என்னும் விந்தை

 

நட்சத்திரப் பாடல்

 

தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் 27 நட்சத்திரங்கள் தொன்று தொட்டு இடம் பெற்று வந்துள்ளன. இந்த நட்சத்திரங்களைப் புலவர்கள் தம் பாடல்கள் பலவற்றில் பல்வேறு விதமாகக் கையாண்டுள்ளனர். மிக சுவாரசியமான பாடல்கள் அவை.

 

மதுரகவிராயர் என்றொரு புலவர் இருந்தார்.  அவர் இளம் பெண் ஒருத்தியைக் கண்டு மோகித்தார். அப்போது அவருக்கு ஞாபகம் வந்தது 27 நட்சத்திரங்களின் ஒன்றின் பெயர். அதைப் பாடலில் சூசகமாகப் பயன்படுத்திப் பாடலை இயற்றினார்.

 

asrtrology

Zodiac stamps issued by India

பாடல் இதோ:-

 

 

மூவொன்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்    

தாவுந் தனிமிருகந் தானில்லை – நேரே                    

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்            

முலையாளை யான் முயங்குதற்கு

 

 

இதன் பொருளைப் பார்ப்போம்:

வாரிறுக விம்மும் முலையாளை – கச்சு இறுகும் படி விம்மிப் பருத்துள்ள மார்பகங்களை உடையவளை

யான் முயங்குதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு                   மூவொன்ப தென்பதில் – மூன்று ஒன்பது, அதாவது 27 நட்சத்திரங்களில்                                               ஓர் நாளில்லை – ஒரு நட்சத்திரம் இல்லை        மொய்வனத்தில் – அடர்ந்த காட்டில்                          தாவுந் தனிமிருகந் தானில்லை – தாண்டித் திரிகின்ற ஒப்பற்ற மிருகம் இல்லை

நேரே வளையா நடையில்லை – நேராக வளையாத நடையும் இல்லை.

 

 

மூவொன்பதில் ஓர் நாளை இங்கு உத்தரம் என்று கொள்ள வேண்டும். அதாவது 27 நட்சத்திரங்களில் ஒன்று உத்தரம். அவள் நான் கட்டித் தழுவுவதற்கு எனக்கு உத்தரம் – மறுமொழியும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

 

 

மொய் வனத்தில் தாவும் தனி மிருகம் வேங்கையாகும் வேங்கைக்கு இன்னொரு சொல் பொன் என்பதாகும். என்னிடம் தங்கமும் இல்லை.

 

 

நேரா வளையா நடை அன்னத்திற்கே உரியது. அந்த அன்னமும் என்னிடம் இல்லை.

 

பொன்னும் அன்னமும் இல்லாத அவளை எப்படிக் கட்டித் தழுவுவது, அவளோ உத்தரம் தர மாட்டேன் என்கிறா என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.

 

Zodiac, SL

Zodiac Stamps issued by Sri Lanka

ராசிப் பாடல்

இன்னொரு பாடலில் 12 ராசிகளையும் அமைத்துப் பாடியுள்ளார் ஆசுகவிப் புலவர் கவி காளமேகம்.

 

அவரிம் ஒருவர் சவால் விடுத்தார். சவால் விடுத்தவரோ சாதாரணமானவர் இல்லை.  மன்னரிடம் பாடல் பாடி அவன் வியந்து தண்டிகை பரிசை அளித்தால் அவர் சிறந்த தண்டிகைப் புலவர் எனப்படுவார். அப்படிப்பட்ட அருமையான 64 தண்டிகைப் புலவர்களில் அவரும் ஒருவர்.

 

 

அவர் போட்ட நிபந்தனைகள் இவை:

ஒரு வெண்பா பாட வேண்டும். அதன் முதல் சீராக பகருங்கால் (சொல்லப் போனால்) என்று வர வேண்டும். இறுதியிலோ வசையறு மிராசி வளம் என்று ஈற்றடி (கடைசி அடி) அமைய வேண்டும்.  இடையில் 12 ராசிகளின் பெயர்கள் வரவேண்டும். ராசிகளுக்கு அடைமொழிகள் எதுவும் இருக்கக் கூடாது.

 

கடினமான போட்டி தான். கவிஞருக்கு கிடைத்திருப்பது இரண்டே முக்கால் அடி தான். விட்டாரா காளமேகம்.

பாடினார் இப்படி:-

 

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க                  

டகஞ்சிங்கம் கன்னி துலாம் விர்ச் – சிகந்த                 

நுசுமகரங் கும்பமீ நம்பன்னி ரண்டும்                             

 வசையறு மிராசி வளம்

 

 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,  விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு ராசிகளும் முறையே வரிசையாக அமைத்து வெண்பா இலக்கணம் தவறாமல் பாடி வெற்றி பெற்றார் காளமேகம்.

தமிழ் என்னும் விந்தையில் உலக மொழிகளில் இல்லாதபடி நட்சத்திரப் பாடல்கள் ஏராளம் உள்ளன.

 

 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

 

 

மேலே உள்ள நட்சத்திரப் பாடலும் ராசிப் பாடலும் தமிழுக்கே உரித்தான முத்திரைப் பாடல்களில் சில!

********

 

பம்பாய் நகரில் சில அதிசயங்கள்!! (Post No. 2388)

IMG_2814 (2)

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 6-06 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article was published in English

 

எனது மும்பை யாத்திரை!

இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னர் மும்பை சென்றபோது நான் பார்த்த இரண்டே இடங்கள் மஹாலக்ஷ்மி கோவிலும், சித்தி விநாயகர் கோவிலும்தான். இம்முறையாவது ஜுஹு பீச்/கடற்கரை, பயங்கர வாதிகள் தாக்கி நூற்றுக் கணக்காணோரைக் கொன்ற தாஜ் ஹோட்டல், இந்தியா கேட் (இந்தியாவின் நுழைவாயில்), விக்டோரியா டெர்மினஸ் (ரயில் நிலையம்), பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஆகியவற்றைக் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். ஆயினும் எனது சம்பந்தியின் வலியுறுத்தலின் பெயரில், விமானத்திருந்து இறங்கிய நாளன்றே மீண்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கே சென்றோம். ஒரே கூட்டம், அரை நிமிட தரிசனம். கையில் பூ, வாயில் கொழுக்கட்டையுடன் திரும்பினோம். தமிழர்களுக்கு முருகன் எப்படியோ அப்படி மஹாராஷ்டிரர்களுக்கு கணபதி. நாம், அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது போல, அவர்கள் விநாயகரின் எட்டு தலங்களுக்குச் சென்று வருவர். விநாயக சதுர்த்தி அங்கு தேசிய தேசிய திருவிழா!

IMG_2803 (2)

வெளியே வந்தவுடன் கடைகளில் இருந்த, தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத பூ வகைகளையும், சிறிய கொழுக்கட்டை முதல் மிகப்பெரிய ராட்சதக் கொழுக்கட்டைகள் (மோதகம்) வரையும் போட்டோ எடுத்தேன்.

 

நாசிக்கிலிருந்து திரும்பிவந்து மூன்று நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் ‘ஷாப்பிங்’ சென்றோம். பின்னர் ஒரு டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் சென்றோம். இந்தியா கேட்டுக்கு எதிரே புகழ்மிகு டாஜ் ஹோட்டல் இருக்கிறது. அதில் நைசாக உள்ளே நுழைந்தோம் ரிசப்ஷன் வரை சென்று வழ வழ தரையில் நடந்தோம். எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி கேட்டுகள் உள்ளன. நம்மைச் சோதித்தே அனுப்புகின்றனர். காரணம்—எதிரேயுள்ள கடல் வழியாக ரப்பர் படகில் வந்த பயங்கர வாதிகள் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதே. இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

IMG_2790

தாஜ் ஹோட்டலுக்கு எதிரேயிருந்த இந்தியா ‘கேட்’டருகே அன்று கடற்படை விழா நடந்ததால், பக்கத்தில் அனுமதிக்கவில்லை. தூரத்தில் கப்பல்கள் மட்டும் விளக்கொளியில் ஜொலித்தன. தொலைவிலிருந்து இந்தியா கேட்டையும், கப்பல்களையும், நூற்றுக் கணக்கான மின் விளக்கு பொருத்தப் பட்ட அலங்கார குதிரை வண்டிகளையும் பார்த்தோம். நல்ல கூட்டம். குழந்தைகளுடன் வந்தோரும், வெளி நாட்டினரும், அலங்கார குதிரை வண்டிகளில் ஏறி பவனி வந்தனர். ஒரு புறம், சுண்டல், பொறி கடலை விற்பனை நடந்து கொண்டிருந்தது. மறு புறம் இளம் சிட்டுகள் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வியாபாரி ஐம்பது ரூபாய் விலையுள்ள ராட்சத பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்!

 

வீர சிவாஜி வாழ்க (ஜய ஜய பவானி: பாரதி பாட்டு)

 

மஹாராஷ்டிரத்தில் விநாயகருக்கு அடுத்தபடியாக போற்றப்படுபவர் வீர சிவாஜி! பல இடங்களில் இவரது சிலை உண்டு. இந்தியா கேட் வீர சிவாஜி, ஏர்போர்ட் வீர சிவாஜி ஆகியவற்றை காரிலிருந்தே படம் எடுத்தேன். சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி விமான நிலையம். இப்படி ரயில் நிலையம், விமான நிலயம், மியூசியம் எல்லவற்றின் பெயர்களையும் சிவாஜியின் பெயரில் மாற்றிவிட்டனர். மொகலாய சாம்ராஜ்யத்தை விழுத்தாட்டி, முஸ்லீம்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த சிவாஜியின் பெயரை நம் நாட்டிற்கே சூட்டினாலும் அது போ.ற்றப்பட வேண்டியதே.

IMG_9425

 

IMG_9427

பம்பாய் ஐடியா/ யோஜனை

சுவிடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ், அமெரிக்கவிலுள்ள நியூ யார்க், இதாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களுக்குச் சென்றவுடன், சின்னச் சின்ன பயனுள்ள விஷயங்களை எழுதி இவைகளை ஏன் மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாதென்று கேட்டிருந்தேன். பம்பாயிலும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டேன்.

 

பட்டுப்போன மரங்களுக்கு பல வண்ணப் பெயிண்ட் அடித்து அதில் கண் காது மூக்கு வரைந்து அழகு செய்துவிட்டனர். இதுபோல வைரம் பாய்ந்த மரங்களை நாமும் அலங்கரிக்கலாமே!

 

பல இடங்களில் மரத்தின் உச்சியில் மஞ்சள் நிற டயர்கள் தொங்கின. முதலில் அவை ஆபத்துக்கு உதவும் லைப் போட் ( உயிர் காக்கும் படகுகள்) என்று நினைத்தேன். மூலைக்கு மூலை அவைகலைக் கண்டவுடன் டிரைவரிடம் கேட்டேன். அவை எல்லாம் டயர்களுக்கு பங்க்சர் ஒட்டும் கடைகளாம். அதை எளிதில் காட்ட மரங்களின் கிளைகளிலிந்து மஞ்சள் நிற டயர்களைத் தொங்க விட்டுள்ளனர். இது போல ரயில் நிலையங்களைக் காட்டவும் பஸ் ஸ்டாப்புகளைக் காட்டவும் நாமும் சில அடையாளங்களை — தொலைவிலிருந்து எளிதில் காணும் அடையாலங்களைத் தொங்கவிடலாமே.

IMG_9550

லண்டன் ஐடியா

லண்டனில் பல்வேறு மொழிகள் ( 130 மொழிகள்) பேசுவோர் வாழ்கின்றனர். ஆகையால் செண்ட்ரல் மிடில்செக்ஸ் ஆஸ்பத்தியில் ரிசப்ஷன் பகுதிலிருந்து பல்வேறு வண்ணக் கோடுகள் செல்லும். யாரேனும் பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) எங்கே என்றால், சிவப்பு நிறக் கோட்டைக் காட்டி அதைப் பின்பற்றும்படி சைகை காட்டுவர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் FOLLOW THE RED LINE, PLEASE என்பர். இப்படி எக்ஸ்ரே என்றால் நீல நிறம் – என்று முக்கிய டிபார்ட்மெண்டுகளுக்கு கலர் கோடிங் (COLOUR CODING வண்ண அடையாளம்) வைத்துள்ளனர். இதைப் பின்பற்றும்படி வேறு சில மருத்துவ மனைகளுக்கும் நான் எழுதினேன்.

 

சமீப காலமாக லண்டன் விக்டோரியா (VICTORIA STATION) ரயில் நிலயம் போன்ற பெரிய ஸ்டேஷன்களும் பயணிகளுக்கு இந்த கலர் லைன்களப் போட்டு, பஸ், டாக்ஸி டாய்லட் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி கலர் கோடிங் பின்பற்றலாம். பிளட் டெஸ்ட் BLOOD TEST என்றால் உலகம் முழுதும் சிவப்பும், எக்ஸ் ரே X RAY என்றால் உலகம் முழுதும் நீல நிறமும் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குM? இதே போல டாக்ஸி, ரயில், பஸ் ஆகிய நிலையங்களுக்கும் உலகம் முழுதும் ஒரே நிற சைகைகள் இருந்தால் நலம்.

IMG_8067

ஆல மரமும் கரும்பு ஜூசும்

மஹாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் உள்ளன. தென்காசி- செங்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதே போல கரும்புச் சாறும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்போது வெங்காய விலையேற்றமும், தட்டுப்பாடும் இருப்பதால், சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயம் விற்கப்படுவதையும் கண்டோம்.

 

அஞ்சல்தலைக் கண்காட்சி

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தினமும் இலவச ஆங்கில நாளேடுகள், அறையின் வாசலில் கிடக்கும். அதை எடுத்தபோது அதிலிருந்து விழுந்த நோட்டீஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நவி மும்பை (புதிய பம்பாய்) பகுதியில் ஒரு தபால்தலைக் கண்காட்சி- இலவச அனுமதி – என்று அச்சிட்டிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பன்று மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரில் விரைந்தேன். லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த எந்த தபால்தலைக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. மேலும் சென்னை, மதுரை தலைமைத் தபால அலுவகங்களில் பிலாடெலிக் கவுண்டரில் தபால்தலைகள் வாங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தால் விமானங்கள் ரத்தாயின என்று கேட்டு என்ன செய்வதென்று திகைத்தபோது, “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – தபால்தலைக் கண்காட்சி நோட்டீஸ் வந்தது.

IMG_9639

தபால்தலைக் கண்காட்சியில் பல இந்திய தபால்தலைகளை விலைக்கு வாங்கினேன். ஆனால் லண்டனில் 150 வியாபாரிகள் ஸ்டால்களில் தபால் தலைகள் விற்பார்கள். மும்பையில் வெறும் அரசு ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. ஆயினும் கும்பல் கும்பலாக பள்ளி மாணவ மாணவியர் வந்து அஞ்சல்தலைகளைத் ‘தரிசித்த’ வண்ணமிருந்தனர். அதைக் கண்டபோது மகிழ்ச்சி பொங்கியது.

 

தபால்தலை சேகரிப்பு உலகில் அழிந்துவருகிறது. காரணம்: இண்டர்நெட், பேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ். இதுதவிர அஞ்சல்தலைகளின் விலையேற்றம்– நான் பிரிட்டனில் ஆண்டுதோறும் வெளியிடும் தபாலதலைகளை வாங்க நூறு பவுண்டுகளுக்கு மேல் செலவிடுகிறேன். இன்னுமொரு காரணம் தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பதிலாக, போஸ்ட் ஆபீஸ்காரகளே அச்சு முத்திரை குத்தும் வழக்கம் மேலைநாடுகளில் பரவிவருகிறது

IMG_9631

உலக அதிசய தபால் கார்டு!!

அஞ்சல்தலைக் கண்காட்சியில் தபால் கார்ட் (போஸ்ட் கார்ட்), உறை முதலியனவும் வாங்கியபோது வியப்பு மேலிட்டது. ஒரு கார்டின் விலை ரூ 2-50, உறையின் விலை ரூ.4. எங்கள் நாட்டு கணக்கில் இரண்டரை பென்ஸ், நாலு பென்ஸ்!! உலகிலேயே குறைந்த தபால் கட்டணம் இந்தியாவில்தான்! இமயம் முதல் குமரி வரையுள்ள பன்னிரெண்டரை லட்சம் சதுரமைல் பரப்பில்  உள்ளோரைத் தொடர்புகொள்ள இரண்டரை ரூபாய் போதும்! ஐரோப்பாவில் 15 நாடுகளைக் கடக்கும் தூரம் 3500 மைல் (குமரி- காஷ்மீர்).இதற்கு நாங்கள் 60 பென்ஸ் முதல் ஒரு பவுண்ட் வரை ( ஒரு பவுண்ட்= 100 ரூபாய்) செலவிடுகிறோம்.

வாழ்க இந்தியா! வளர்க அஞ்சல் துறை!

IMG_2731

விமானநிலயத்தில் ஒரு சர்ப்ரைஸ் !!

சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமானநிலயத்தில் ட்யூட்டி Fரீ கடைப் பகுதியில் கோண்டு இனப் பழங்குடி மக்களின் ஓவியங்கள் கலைப் பொருட்களை விற்கும் இரண்டு கடைகளைக் கண்டேன். மிக அருமையான வண்ண ஓவியங்கள்; கலைப் பொருட்கள். ஆனால் விலையோ யானை விலை, குதிரை விலை!! பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு புகைப் படமும் எடுத்தேன். நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்டுகள் வனம் என்பதே = கோண்ட்வானா லாண்ட்= காண்ட வனம் என்பதை நிரூபித்து இருக்கிறேன். காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது தென் அமெரிக்காவுக்குச் சென்றவர்களே மாயா இன மக்கள் என்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். ((காண்டவ = கோண்ட், காண்டவ வனம் = கோண்ட்வானா லாண்ட்.))

 

இப்பொழுது இந்தப் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.

 

வாழ்க காண்டவ வன கோண்ட் மக்கள்!

 

–Subham–

 

ANECDOTES ABOUT LAW (Post No. 2387)

aristotle_law_

Compiled by London swaminathan

Date: 13 December 2015

 

Post No. 2387

 

Time uploaded in London :– 14-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Lord John Russel said to David Hume, the philosopher:

“What do you consider the object of legislation?”

“The greatest good to the greatest number”

“What do you consider the greatest number?”

“Number one,” replied Hume.

 

Xxx

legal_quote

Mayor Frank Hague of Jersey City has been one of America’s more notorious characters for many years. He is noted for his peculiar interpretations of the law, beginning with his insistent, “I am the law” policy. He pursues his legal interpretations into more specialised channels however. He has cut down Jersey City’s murder statistics at the expense of manslaughter by rigidly classifying all inter-marital killings as manslaughter, “when a man kills his wife that is not murder, that is manslaughter”, says Hague.

 

law love

Xxx

Abraham Lincoln was once arguing a case against an opponent who tried to convince the jury that precedent is superior to law, and that custom makes things legal in all cases. Lincoln’s reply was one of his effective analogies in the form of a story. He told the jury that he would argue the case in the same way as his opponent and began:

“Od Squire Bagley came into my office one day and said: “Lincoln, I want your advice as a lawyer. Has a man what has been elected justice of the peace a right to issue a marriage license?”

 

“I told him no. whereupon the old squire threw himself back in his chair very indignantly and said, “Lincoln, I thought you was a lawyer. Now Bob Thomas and me had a bet on this thing, and we agreed to let you decide, but if this is your opinion, I don’t want it, for I know a thundering sight better. I have been a squire eight years, and I have issued marriage licenses all that time.”

—Subham—