பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ.

ப்ஹரடி2

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 10 November 2015

Post No:2316

Time uploaded in London :– காலை- 4-56

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்றவர்களின் ஒருவரான பி.ஶ்ரீ எழுதிய நூல் இது. 195ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதிப்பாக வெளி வந்த இந்த நூல் பின்னர் தொடர்ந்து 1963, 1966 என மேலும் பதிப்புகளைக் கண்ட சுவையான நூல்.

பி.ஶ்ரீ பற்றி அறியாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். கவிதைச் சுவையை ரஸித்து ரஸித்து அனுபவிப்பவர். மற்றவரை அனுபவிக்கச் செய்பவர்.

முத்தான பத்து அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள்:- கவிஞர் திரும்பினார், இதுவோ தமிழ், பாரதியின் நாட்டுப் பற்று, பாரதியாரின் தோழர்களுடன், கடைச் சங்கத்தில் புரட்சிக் கவிஞர், விருந்தும் மறு விருந்தும், பாரதியாரும் டாக்டர் நண்பரும், ஒரு நாளும் இல்லாத திருநாள், பாரதி சித்தாந்தம், மனம் வெளுக்கும் சாணை ஆகிய அருமையான பத்து அத்தியாயங்களை 116 பக்கங்களில் தருகிறது இந்த நூல்.

பாரதியார் பாடும் விதம்

முதல் கட்டுரையில் பாரதி பாடும் விதத்தை பி.ஶ்ரீ குறிப்பிடுகிறார் இப்படி: “இவர் பாட ஆரம்பித்து விட்டால் ஒரே வியப்பு – உணர்ச்சி மேலிட்டு நிற்கும். பாடப் பாட வசீகர சக்தி அதிகரித்துக் கொண்டே போகும். பராசக்தி வீர முரசு கொட்டிக் கோழைகளுக்குத் தைரியத்தை ஊட்டுவது போலவும், தரும முரசு கொட்டி அதருமத்தை வீழ்த்துவது போலவும் தோன்றும். பொதுவாகப் பாரதியாரின் தேசீய கீதங்களையெல்லாம் ஒரு வகையில் ’முரசுப் பாட;ல்கள்’ என்றே குறிப்பிடலாம்.

அடுத்த கட்டுரையில் அவர் பாரதியாரின் தமிழ் பற்றி ‘இதுவோ தமிழ்’ என வியக்கிறார். அவரது சொற்களைப் பார்ப்போம்: “பால கங்காதர திலகர், விபின சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரையும் தேசீய மும்மூர்த்திகளாகத் தமிழ் இளைருலகத்திற்குக் காட்டியவர் பாரதியார். லஜபதி ராய் ‘நாடு கடத்தப்பட்ட’தும் அது குறித்துப் பாரதியார் பாடிய பாட்டை ஒரு மாணாக்கன் இசையோடு உருக்கமாய்ப் பாடக் கேட்ட பின், ‘இதுவோ தமிழ்’ என்று வியந்து போனேன்.

தோழருடன் பாரதியார்

‘பாரதியாரின் தோழர்களுடன்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ வையாபுரி பிள்ளையின் அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலின் பதிப்புரையில் வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்… பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. பாரதியாருக்குத் தாகம் அதிகமாயிருக்கிறதென்பதைக் குறிப்பால் உணர்ந்தேன். உடனே ‘ஐஸ்’ இட்டு ஆரஞ்சு நீர் கொண்டு வரும்படியாக ஒருவனை அனுப்பினேன். இதைத் தெரிந்து கொண்டு, ‘தண்ணீர் போதுமானது’ என்று அவர் கூறினார். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அந்தணர்கள் அல்லரென்று சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய ஓர் அபூர்வமான ஒளி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைக் பாராட்டுவதில்லையென்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும் ‘எல்லோரும் ஒன்ரென்னும் காலம் வந்ததே’ என்றும் அவர் தமது சுதந்திரப் பள்ளிற் பாடியுள்ளமை என் நினைவிற்கு வந்தது. முடிவில் நான் கொண்டு வரச் சொன்ன பானத்தையே பருகி நீர் வேட்கையைத் தணித்துக் கொண்டார்.

பாரதியின் சித்தாந்தம்

இன்னொரு நிகழ்ச்சியை ‘பாரதி சித்தாந்தம்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ விவரிக்கிறார். அதில் முக்கியமான ஒரு பகுதி:-“கவிதை என்றால் என்ன? அதனால் என்ன பயன்?’ என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ‘ஜயமுண்டு, பயமில்லை’ என்று பாடத் தொடங்யே, ‘பயனுண்டு பக்தியினாலே’ என்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கி விட்டார்…

இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்தி விட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, ‘அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகிறோம். பாடுவீர்களா?” என்று வெகு வினயமாய்க் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. ‘இதை’ பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே!’ என்றார் டாக்டர் சஞ்சீவி.

‘ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர், அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்: தீமையுடன் போர் – இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக் கொண்டு போக வேண்டியிருக்கிறதே, அது தான் என் தொழில்!” என்றார் பாரதியார்.

இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளை பி.ஶ்ரீ தனக்கே உரித்தான பாணியில் அழகுறச் சொல்கிறார்.

பி.ஶ்ரீ. யார்?

இனி பி.ஶ்ரீயைப் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.

பி.ஶ்ரீயைப் பற்றி பிரபல எழுத்தாளர் தேவன் அவர்கள் பம்பாய் கோரேகான் தமிழ்ச் சங்க மலருக்காக எழுதிய ‘நான் கண்ட பி.ஶ்ரீ.’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது (இந்தக் கட்டுரையை, சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1959ஆம் ஆண்டு நடந்த மாநாட்டை ஒட்டி வெளியிட்ட சிறப்பிதழில் மறு பிரசுரம் செய்தது)

தமிழ் உலகத்திற்குக் கம்பன் கவிதா நயத்தை திராக்ஷா பாகமாக எடுத்துக் கொடுத்தவர் பி.ஶ்ரீ. அவர்கள் எத்தனை முறை கம்பனைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் தெவிட்டாத சுவையுள்ளது ராம காதை என்பதை இன்றும் எடுத்துக்காட்டி வருகிறவரும் அவர் தான்…..

கவி பாரதியாருடன் 1918ம் வருஷம் முதல் மூன்றாண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டு வந்தார். பாரதியார், பி.ஶ்ரீ அவர்களின் இல்லத்திற்கு வருவது வழக்கம் என்பதை நான் அவரிடமிருந்தே கேட்டறிந்திருக்கிறேன். தவிர, பாரதியாரின் இளமைப் பருவத் தோழரான வேதநாயகம் பிள்ளை இல்லத்திலும் வேறு பல இடங்களிலும், பாரதியாரே தம் பாடல்களைப் பாடக் கேட்டுக் கேட்டுப் பரவசமாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பி.ஶ்ரீ. தம்மை “தமிழின் ஆயுள் மாணவன்” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த திருப்தியும், பெருமையும் கொள்வார்.”

*

தேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய ரஸிகர், உலக மகாகவி ஒருவரைப் பற்றி எழுதி இருக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும்; தம் இல்லத்தில் உள்ள நூலகத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

*****************

சுப்பிரமணியர் மீது விகடத் துதி

murugan vattam

Compiled by London swaminathan

Date: 9 November 2015

Post No:2315

Time uploaded in London :– 17-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த பாடல்.

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

இராகம்- எதுகுல காம்போதி, தாளம்- ஏகம்

பல்லவி

சொல்லையா கந்தா- துரை மகனே அதைச்

சொல்லையா கந்தா

murugam balan

அநுபல்லவி

தெள்ளுமயிலிருக்கத் தெய்வானையும் இருக்க

வள்ளி மயிலுக்காக வனந்தேடிப் போனதென்ன (சொல்லையா…)

சரணங்கள்

தாரமிரண்டிருக்கத் தால மாமனுமிருக்க

ஆருமறியாத அகதிபோலானதென்ன (சொல்லையா…)

அன்னை தந்தைகளிருக்க அம்மான் மகளிருக்கச்

சன்னாசிக் கோலமான சங்கதியெல்லாம எனக்குச் ((சொல்லையா…)

தந்தையைச் சுற்றிவந்து தமையன் கனியெடுத்தான்

மந்தையைச் சுற்றிவந்து மதிகெட்டுப் போனதென்ன (சொல்லையா…)

கூறிய அஞ்சுமுகன் குழந்தை நீயானாக்கால்

ஆறுமுகமான அதிசயத்தையெனக்குச் (சொல்லையா…)

உற்றுவளர்த்த பிள்ளை ஒன்றுக்கிரண்டிருக்க

பெற்றதகப்பன் முந்திப் பிச்சையெடுத்துண்டதென்ன (சொல்லையா…)

வல்லப்புரம் செயிக்க மாட்டாமலுங்களப்பன்

பல்லைத் திறந்துவிட்ட பரியாசத்தையெனக்குச் (சொல்லையா…)

சேமநிதியிருக்கத் திருப்பாற்கடலிருக்க

மாமன் பசித்ததென்று மண்ணைவாரியுண்டதென்ன (சொல்லையா…)

மண்ணையுண்டு மாமன் வயிற்றுக்குப் போதாமல்

வெண்ணைதிருடியுண்ட விபரமெல்லாமெனக்குச் (சொல்லையா…)

சைவசமயத்துக்குத்  தலைவனீயானாக்கால்

தையல் குறத்தியை நீ சம்மந்தஞ்செய்ததென்ன (சொல்லையா…)

மங்கையிருவரையும் மணம் செய்துவைத்துவிட்டுப்

பங்கமில்லாத சடைப் பண்டாரமானதென்ன (சொல்லையா…)

சீப்பிட்ட கூந்தல் வள்ளி தெய்வானையைக் கலந்து

சாப்பிட்டிருக்காமல் சன்யாசியானதென்ன (சொல்லையா…)

தேவியிருவருக்கும்  தீராத சண்டையினால்

கோவித்துக் கொண்டிருந்தக் கோலமெடுத்தாயோ (சொல்லையா…)

-சுபம்-

BIG INDIAN BUCKET ON A LONDON ROAD!

IMG_7661

Article Written by London swaminathan

Date: 9 November 2015

Post No:2314

Time uploaded in London :– 8-35 AM

( Pictures were taken by london swaminathan ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7657

Indian artist Subodh Gupta has created an art installation near the famous Victoria and Albert Museum (V&A) In South Kensington, London. This is part of India festival run by the V & A.

This huge bucket has become a huge attraction to the tourist crowd that frequents all the museums in South Kensington area in London.

Subodh Gupta uses everyday objects and turns them in to “sculptures” through this Big Bucket;  Subodh wants to show the world how much natural resources are wasted. Here in this installation, he has shown the stainless steel utensils spill over the bucket like water over flowing  a bucket. He has used lot of ever silver pans, plates, cups, pots and pans to create this. The shiny utensils show the temptation for newer things. The empty vessels also tell us that the world is still a poverty stricken place, but with a bright future. The bucket is shiny. This bucket will be standing on the road until January 2016.

A lot of tourists stand near the bucket and pose for photos. It has become a great attraction.

 IMG_8443

IMG_7656

DIWALI IN LONDON

V and A had arranged two days of Deepavali festival in the museum on 7th and 8th November 2015. Cultural programmes including music and dance were held. Two women from Prakruti Dance organisation in Harrow did a story telling event for children. The story was based on Ramayana. They did a bit of dance and music and made the children to participate in the drama.

Later a musical concert was also held. Famous musicians from India and West Africa presented this concert. Award winning flautist Keith waithe,  Sitar player Mehboob Nadeem, Tabla player Sanju Sahai, Vocalist Pooja Angra presented a fusion music concert. In addition to the music, dance and storytelling, Rangoli  was also done.

Hindu Forum of Britain, the umbrella body of over 130 Hindu organisations, held it its annual Diwali festival inside the Parliament building on 4th of November 2015. David Cameron, British Prime Minister is giving his annual Deepavali lunch on 10th November 2015. Various organisations including South Indian Society, UK hold Diwali dinners separately.

IMG_7631

IMG_7629

IMG_8424IMG_7649IMG_7635

Pictures of V&A Museum Diwali Events in London.

London Mayor organised a Diwali event in Trafalgar Square (London) in October itself to the surprise and opposition from the orthodox Hindus.

IMG_6839IMG_6840

Pictures from Trafalgar Square Diwali event in London.

–SUBHAM—

காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

car-batteries

Radio Talk written by S NAGARAJAN

Date: 9 November 2015

Post No:2313

Time uploaded in London :– 7-50  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

By .நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015

Part 2 posted on 7th November 2015

Part 3 on 8th nov. & Part 4 on 9th nov.15

4.காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

மின்வெட்டு அதிகம் உள்ள இந்த நாட்களில் நமது அன்றாட தேவைகளுக்காக பாட்டரிகளை அதாவது மின்கலங்களை அதிகமதிகம் பயன்படுத்தும் வழக்கம் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பயன்படுத்தப்பட்ட பின்னர் இந்த மின்கலங்களை அறிவியல் பூர்வமான வழிகளில் அல்லாமல் மனம் போன போக்கில் கழிவாகத் தூக்கி எறிவது  சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கிறது! கூடவே ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மின்கலங்களில் காரீயம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 14.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு காரின் மின்கலத்தில் 8.7 கிலோகிராம் அளவு ஈயம் உள்ளது. இதை விடப் பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளில் உள்ள இன்வர்டர்களில் சுமார் 16 கிலோ எடையுள்ள ஈயம் உள்ளது.

பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் இவைகளைத்  துண்டு துண்டுகளாக்கித் தூக்கி எறியும் போது வெளிப்படும் ஈயத் தூசு, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த ஈயத்திலிருந்து வெளிப்படும் நச்சு இரத்த ஓட்டத்தில் உயர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.அத்தோடு சிறுநீரகத்தைப் பழுதடையச் செய்யும்.சிறுவர்கள் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நடத்தையில் மாறுபாடும் ஏற்படும்.

batteries_mixed_2

இப்படி பல்வேறு மனித அங்கங்களைப் பாதிக்கும் ஈயக் கழிவை உரிய முறையில்  அப்புறப்படுத்த வேண்டும்.

ஈயம் சில அழகு சாதனங்களிலும் சேர்க்கப்படுகிறது. பெயிண்டுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள்,சில வகை மண்பாண்டங்கள் ஆகியவற்றிலும் ஈயம் கலக்கப்படுவதால் இவை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் போது நீரும்   நிலமும் காற்றும் மாசுபட வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே ஈயம் எதிலெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவைப் பெறுவதோடு அதைக் கழிவாக அப்புறப்படுத்தும் போது உரிய முறையில் நிபுணர்களின் துணையோடு அப்புறப்படுத்துவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.

இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்; சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்!

****************

6 Interesting Anecdotes on Dictionaries!

IMG_7877

Article Written by London swaminathan

Date: 8 November 2015

Post No:2312

Time uploaded in London :– 19-04

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1.Mark Twain

Mark Twain occasionally attended the services of Dr.Doane, later Bishop of Albany, but then Rector of an Episcopal church in Hartford. One Sunday morning, Twain said to him at the end of the service, Dr Doane , I enjoyed your service this morning. I welcomed it like an old friend. I have, you know, a book at home containing every word of it.

You have not, said Dr Doane indignantly.

I have so.

Well, you send that book to me. I would like to see it.

I will send it, promised Twain.

The following day he sent Dr Doan an unabridged dictionary.

Xxx

Concise-Jacket

2.What is the use of dictionary?

Why don’t you buy a dictionary? Asked the man whose friend repeatedly consulted him as to the spelling of certain words.

What would I do with a dictionary? , was the reply.

If I can’t spell the words, I couldn’t find them and if I can spell them, I don’t need a dictionary.

Xxx

3.French dictionary!

A committee of the French academy employed in the preparation of the Academy dictionary, defined the word CRAB: a small red fish which walks backwards.

Commenting on this definition, the celebrated naturalist Cuiver said:

“Your definition, gentlemen, would be perfect only for three exceptions. The crab is not a fish, it is not red and it does not walk backwards”.

french

Xxx

4.Samuel Johnson’s Dictionary

A bookshop owner gave Johnson the idea of producing one of greater accuracy and in 1746 he agreed a fee to produce such a work. With funds available he and his wife Tetty moved to a large new house at Gough Square off Fleet Street in London and six assistants were employed to help with the task. In France forty scholars of the Académie Française took forty years to produce a dictionary of their language but Johnson boasted that an Englishman could complete the equivalent work in just three. In creating it he read not only works of literature but also history, science, theology, and other subjects. Despite his intentions Johnson failed to prevent it becoming an objective work, with numerous personal opinions and jibes included within the definitions. The description for the word ‘dull’ became: “To make dictionaries is dull work.” The task eventually took three times longer than planned but Dictionary of the English Language was published in two large volumes in April 1755 and contained almost forty three thousand entries. It remained the pre-eminent British reference until the publication of the Oxford English Dictionary in about 1930.

IMG_7874

xxx

5.Objectionable Words

Two ladies, encountering Dr Johnson soon after the publication of his “Dictionary”, complimented him for having omitted gross, indelicate, and objectionable words.

“What, my dears!” said Dr Johnson, “have you been searching for them?”

Xxx

Noah_Webster_United_States_postage_stamp_1958

6.Which Webster?

There is a Congressional legend about the newly elected congressman who, in his maiden speech on the floor of the House, said, “As Daniel Webster makes clear in his famous dictionary…….”

He was interrupted from the floor by a cry of “Noah Webster wrote the dictionary.

“Noah nothing”, replied the speaker, “Noah built the ark!”

(Daniel Webster was an American senator and statesman and Noah Webster was an American lexicographer and English spelling reformer).

–Subham–

வேடிக்கையான தமிழ்ப் பழமொழிகள்!!!

gold necklace

Article Written by London swaminathan

Date: 8 November 2015

Post No:2311

Time uploaded in London :– காலை 7-14

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

“தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலைமருமகளுக்கு!”

ஒரு பெண்ணை அவளுடைய மாமியார் கொடுமைப் படுத்தி வந்தாளாம். ஒரு நாள் அவள் பொறுமை எல்லைமீறிப் போனது. அப்பொழுது கணவனும் ஊரில் இல்லை. உரலில் மாவு இடித்துக் கொண்டிருந்த போது வழக்கம்போல மாமியார் வந்து வசைமாறி பொழிந்தாள். பின்னர் மாமியார் மத்தியான வேலைத் தூக்கம் போட்டார். அதுதான் தக்க சமயம் என்று கருதி, மருமகள் உலக்கையைக் கொண்டு,  மாமியாரின் மார்பில் ஒரு போடு போட்டார். அவருக்குப் பேச்சு நின்று போய் மூச்சுத் திணறல் வந்தது. மாமியார் போட்ட கூச்சலைக் கேட்டு பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக் காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

பேச்சு நின்று போன மாமியார், இறப்பதற்கு முன்னர், குற்றவாளியைக் காட்டிக் கொடுக்க எண்ணி, தனது மார்பைத் தொட்டுக் காட்டிவிட்டு, உலக்கையைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு, பின்னர் மருமகளையும் சுட்டிக்கட்டினாள். அதாவது மாமியார் சொல்ல வந்தது:-

என்னை உலக்கையால் மார்பில் அடித்தது தன் மரு மகளே என்று.

ஆனால் மருமகளோ மஹா கெட்டிக்காரி. எல்லோரும், மாமியார் என்ன சொல்கிறார்? எங்களுக்குப் புரியவில்லையே? என்று கேட்டனர். அவள் சொன்னாள்:–

மாமியாருக்கு என் மீது கொள்ளை அன்பு. நான் மாவு இடிக்கப் பயன்படுத்திய உலக்கை எனக்கே சொந்தம் என்றும் அவர் மார்பில் அணிந்திருக்கும் வைர நெக்லசும் எனக்கே கிடைக்க வேண்டும் என்றும் அவர் சைகை காட்டுகிறார் ; ஏனென்றால் நான் தான் வீட்டுக்குத் தலை மருமகள் என்றாள். இதற்குள் மாமியாரின் உயிரும்பிரிந்தது. எல்லோரும் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது நம் கடமை என்று சொல்லி, மருமகளுக்கே உலக்கையையும், வைர நெக்லசையும் அளித்தனர்!!

IMG_4564

அடுப்பே வனவாசம்,கடுப்பே கைலாசம்

மாமியாரின் கொடுமைக்கு உள்ளான ஒரு மருமகளின் புலம்பல் இது. எனக்கு வனவாசமும், கைலசமும் போல இந்த மருமகள் பொறுப்பு இருக்கிறது

அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதிப் பார்ப்பருமில்லை

இது இன்னுமொரு மருமகளின் புலம்பல்: யார் என்னைக் கவனிக்கிறார்கள்? என்னை அரிசி போலவும் நடத்துவதில்லை; உமியா என்று ஆராய்வதுமில்லை; ‘உப்புக்குச் சப்பை, ஊருக்கு மாங்கொட்டை’ என்பது போல என் வாழ்வு இருக்கிறது – என்பது இதன் பொருள்.

pestle mortar

சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல

ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெண்கள், மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார். கொஞ்சதூரத்தில் அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பெண்கள் மரத்தில் கட்டிய தூலியில் போட்டு வைத்திருப்பர். குழந்தை திடீரென்று அழத்துவங்கினால், யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள். இதோ குழந்தை அழுகிறது. என்ன என்று பார்த்துவிட்டு வருகிறேன்” — என்று சொல்லி உலக்கையைக் கை மாற்றுவார். அவ்வளவுதான். குழந்தையைக் கவனிக்கப்போன பெண், வீட்டுக்கே போய்விடுவாள். திரும்பி வரமாட்டாள். யார்  உலக்கை பிடித்தார்களோ அவர்கள் சூரிய அஸ்தமனம் வரை மாவு இடித்தாக வேண்டும்!!

இதுபோன்று எங்கெங்கெல்லாம் ஒருவர் இன்னொருவர் தலையில் வேலையைச் சுமத்திவிட்டு நழுவுகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பழமொழி பயன்படுதப்படும்.

razor

திருப்பதி அம்பட்டன் கதை

இதுபோல திருப்பதி பற்றியும் ஒரு கதை உண்டு.திருவிழாக் காலங்களில் நிறைய பேர் முடி காணிக்கை கொடுத்து, மொட்டை அடித்துக்கொள்ள வருவார்கள். அவர்கள் கொடுக்கும் காசு மீது ஆசையுள்ள நாவிதர்கள் எல்லோரையும், ‘இங்கே வா, இங்கே வா’ என்று அழைத்துக் கூலியை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் முடியைச் சிரைத்துவிட்டு, அடுத்த மண்டபத்தில் புதிய வாடிக்கை பிடிக்கப் போய்விடுவர். பாதி முடி கொடுத்தவர்கள், வெளியே போனால் நகைப்புக்கு இடமளிக்கும். ஆகையால் அவிழ்த்த துணியோடு அவனுக்காக காத்திருப்பர்.

இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அல்லது சுய லாபத்துக்காக யாராவது ஒருவர் அரைகுறை வேலை செய்தால் அதற்கு திருப்பதி அம்பட்டன் வேலை என்று பெயர்!!

–சுபம்–

அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

globe india

Radio Talk written by S NAGARAJAN

Date: 8 November 2015

Post No:2310

Time uploaded in London :– 7-05  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மனித குலம்  முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் ஒரு அடையாளமாக பொலிவியா நாட்டின் அன்னைபூமி சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்குள்ள உரிமைகள் போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை அன்னை பூமி சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை,மனிதனின் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை,சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை,இயற்கையின் சமச்சீரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசை தடுப்பதற்கான உரிமை,மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு.

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்!” என்பது தான்! அன்னை பூமி தன்னுள் ஆயிரக்கணக்கான உயிர்களை உருவாக்கி அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறாள். பிரபஞ்ச அமைப்புடன் ஒன்றி இணக்கமுடன் சமச்சீரைப் பாதுகாத்து வருகிறாள்! எல்லாவித சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அவற்றின் சுய நிர்வாகத்தையும் அவள் கொண்டிருக்கிறாள் என்ற பெரு நோக்கத்தின் அடிப்படையில் அன்னை பூமியின் உரிமைகளுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டு, அன்னை பூமியும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள மனிதர்களைப் போலவே சட்டபூர்வமாகப்  பாதுகாக்கப்பட்டவள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சட்டங்களை உலகின் பல நாடுகளும், பல நாடுகளில் உள்ள மாநிலங்களும் இப்போது இயற்றி வருவது ஒரு நல்ல செய்தி!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் நகரசபைகள் அன்னை பூமியின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.

அன்னை பூமியின் சட்ட ரீதியான உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து மனித குலம் இனியாவது தூய நீரையோ அல்லது தூய்மையான காற்றையோ இதர சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையோ மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்.  கூடாது.

நமக்கு வாழ்வளித்து நம்மைக் காக்கும் நம் அன்னை பூமியை நாம் காப்போமாக!

**************

7 Interesting Classroom Anecdotes!

1960-Childrens_Day

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2309

Time uploaded in London :– 18-20

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).Faithful Student:

A young woman named Murphy was the teacher of kindergarten grade in Massachusetts school (USA). She had taught her class to repeat together the 23rd Psalm (In the Bible). As the little voices chorused out, she seemed somewhere to detect a false note. She heard the children one by one, until at last she came across one little boy who was concluding the Psalm with the words,

“Surely good Miss Murphy shall follow me all the days of my life.”

(Actual line in the Psalm: “Surely Goodness and Mercy shall follow me all the days in my life.”)

Xxx

61-Dec-UNICEF

2).Lucidity of Description

For sheer lucidity of expression, it is difficult to match the young lady who wrote on her examination paper the following in reply to the question, “What is a bolt and what is a nut?”

“A bolt is a thing like a stick of hard metal, such as iron, with a square bunch on one end and a lot of scratches going round and round the other end. A nut is similar to the bolt only just the opposite, being a hole in a little square of iron sawed off short with rings also around the inside of the hole.”

Xxx

3).Eyes for…………….

What are your eyes for? The little child in the kindergarten was asked.

To see with

And your nose?

To smell with.

And what are your ears for? Was the last question.

To keep clean, the child replied.

Xxx

No5

4).Five years wasted!

After a lecture by the late Francis Wayland Parker, great Chicago (US) educator, a woman asked:

How early can I begin the education of my child?

When will your child be born?

Born? she gasped. Why?  He is already five years old!

My goodness, woman, he cried, don’t stand here talking to me – hurry home; already you have lost the best five years.

Xxx

5).Above Average Student!

A certain mother wished to enter her five year old daughter in a kindergarten, the age requirement of which was six. To the disapproving teacher the mother explained,

She can easily pass the six year old test.

Say some words, the teacher said rather sceptically to the child.

The little girl surveyed the teacher with dignity, and turning to her mother, asked,

Purely irrelevant words?

Xxx

skeleton

6).We saw Dead Circus!

As a special treat the teacher took her class to visit the museum of natural history. The children returned home excitedly, and rushing into his house, one of the little boys greeted his mother exuberantly, saying,

What do you think we did today, mother! The teacher took us to a dead circus.

Xxx

7).Chairman of Udder Committee!

A little girl who was attending a progressive school had a cold one morning and her mother suggested that she remain home from school.

But, I can’t mother, the child insisted, this is the day when we start to make clay model of a cow and I am chairman of the udder committee.

milking by iron raju,fb

–Subham–

லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–

தேனீக்களை அழிக்கும் பேப்பர் ‘கப்’புகள்!

Paper-Cups

Radio Talk written by S NAGARAJAN

Date: 7 November 2015

Post No:2307

Time uploaded in London :– 6-03  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

  

By ச.நாகராஜன்

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

((Part 1 was published yesterday))

flower and bee, IE

இயற்கை படைத்த அரிய உயிரினத்தில் ஒன்றான தேனீக்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மையான செய்தி! இதற்குக் காரணம் மனிதர்களாகிய நமது அஜாக்கிரதையான செயல் தான் என்பது இன்னும் அதிகத் துன்பமூட்டும் உண்மையாகிறது.

அன்றாடம் பேப்பர் ‘கப்’களில் (Paper Cups) அதாவது பேப்பரினால் செய்யப்பட்ட கோப்பைகளில் காப்பியையும் டீயையும் ஏந்திக் குடித்து அவற்றை வீசி எறிகிறோம். இந்த கப்களில் உள்ள காப்பி மற்றும் டீயின் எஞ்சிய இனிப்பை அருந்த வரும் தேனீக்கள் மீண்டும் பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

ஆலைகள் பெருகி வரும் இந்த நாட்களில் இயற்கையான மரங்களும் மரம் சார்ந்த சூழ்நிலையும் இல்லாததால் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தேனீக்கள் தள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் காப்பி மற்றும் டீயை விற்கும் விற்பனை நிலையங்களில் தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக  ஒரு நாளுக்கு 1225 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவற்றில் அன்றாடம் சுமார் 680 தேனீக்கள் சராசரியாக இறந்து கிடப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.

இயற்கையான சூழ்நிலையில் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரிக்கும் தேனீக்கள், இப்போது மலர்கள் அடங்கிய தோட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் தமது உணவுக்காக கழிவாகக் கிடக்கும் கப்களுக்கு வருகின்றன. இப்படி தேனீக்கள் இறப்பதற்கு காலனி கொலாப்ஸ் டிசீஸ் (Colony collapse disease) என்று பெயர்.இந்த தேனீக்களை அழிக்கும் நோய் பல நாடுகளிலும் பரவி தேனீக்களின் இனத்தையே அழித்து வருவது வருத்தமூட்டும் செய்தி.

இத்துடன் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொலைத் தொடர்புக்கான கோபுரங்களிலிருந்து வரும் மின் அலைகளாலும் தேனீக்கள் அல்லல்பட்டு அழிகின்றன.

honey bee

சுறுசுறுப்புக்கே உதாரணமாக விளங்கும் அற்புத தேனீக்களை அழிக்க நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இனி பேப்பர் கோப்பைகளில் காப்பி  மற்றும் டீ அருந்துவதில்லை என்ற நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்; அனைவருக்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அவர்களையும் பேப்பர் கோப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடச் செய்வோம்!

***************