ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514)

IMG_3108

Picture of Nan Tien Temple in Australia

 

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2514

 

Time uploaded in London :– 9-51 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

five buddhas

 

IMG_3105

IMG_3111

 

சிட்னி நகரிலிருந்து சுமார் ஒர் மணிநேரம் காரில் சென்றால் உல்லாங்காங் என்ற இடத்தை அடையலாம். அதற்கு அருகில் புகழ் பெற்ற நான்  டியன் (Nan tien)  புத்தர் கோவில் இருக்கிறது. இது மிகப் பெரிய கோவில். நல்ல இயற்கை வனப்பு மிக்க இடத்தில் கட்டி இருக்கிறார்கள். படிக்கட்டுகள் மூலம் உயர உயர செல்ல வேண்டும். அதற்கும் மேலாக ஒரு பெரிய மணி இருக்கிறது. அதை அடைய இன்னும் மேலே செல்ல வேண்டும்.

 

பசுமையான இந்த பூமியில் நுழையும்போதே மனோரம்யமான காட்சிகள் காத்திருக்கின்றன. உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்கிறார் சிரிக்கும் புத்தர். இது ஒரு அதிஷ்டசின்னமாகக் கருதப்படுவதால் சென்னை, பம்பாய் நகரங்களில் பலர் வீடுகளிலும் இதை இப்போது காணலாம்.

IMG_3116

பின்னர் பெரிய, உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் முதல் நிலை புத்தர் கோவில். பெரிய, உயரமான வண்ண புத்தர். அவருடைய பல அவதாரங்களைப் பிற்கால பவுத்த நூல்கள் கூறுவதால் அது என்ன மைத்ரேயர் என்ற விவரங்களை சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொறித்திருக்கிறார்கள். உள்ளே மவுனமாக பிரார்த்தனை, தியானம் செய்யலாம். செருப்புகள் அணிந்தே உள்ளே செல்லலாம்.

 

ஆனால் இதற்கு மேலே மூன்று புத்தர்கள், அதற்கும் மேலே உயரமான இடத்தில் ஐந்து பல வண்ண புத்தர் சிலைகள் உள்ளன. அங்கே செருப்புகளை வெளியே போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

நான் ஹாங்காங்கிலுள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்குச் சென்ற போது எல்லோரும் செருப்புக் காலுடன் சென்று வணங்குவதைக் கண்டு வியந்தேன்.

இந்த புத்தர் கோவிலில் சிக்குடை, பாதி உடை அணிந்த பெண்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆஸ்திரேலிய வெள்ளைக்காரி, பாதி உடை அணிந்திருந்ததால் அவரை மரியாதையாக திருப்பி அனுப்பினர். வரவேற்பு பகுதிக்குச் சென்றால், சால்வை கிடைக்கும் என்றும் அதைப் போர்த்திக்கொண்டு வரலாமென்றும் சொல்லி அனுப்பினர்.

 

 

IMG_3151

IMG_3118

எல்லா புத்தர் கோவில்களிலும் ஊதுபத்தி வாங்கி கொளுத்தி வைக்கின்றனர். இதற்கென பிரமாண்டமான தொடீகள் உள.

ஆக மிகப்பெரிய, பல வண்ண ஒரு புத்தர், 3 புத்தர், 5 புத்தர் என்று தரிசித்த பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானமும் செய்யலாம். இந்துக்கள் போலக் கையெடுத்துக் கும்பிடாமல், எல்லோரும் ஜப்பானிய முறையில் சிரம் தாழ்த்தியோ, மண்டியிட்டோ வணங்கினர். நானோ கரம் குவித்து, சிரம் தாழ்த்தி, தாழிட்டு வணங்கினேன்.

 

இந்த பிரம்மாண்டமான காம்பவுண்டில் சில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:-

 

அருமையான சைவ உணவு சிற்றுண்டி சாலையில் 13 டாலருக்கு இழை, தழை சகிதம் சைவ உணவு கிடைக்கும். மாமிச சாஸேஜ் போலத் தோன்றும் டோபு, சோயா மொச்சை, காய்கறிக் கூட்டு ஆகியன சுவையும் மணமும் மிக்கவை. பெரிய காண்டீன். சுகமாகச் சாப்பிட்டோம்.

 

எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள்- புத்த பிட்சு சிலைகள், பல போஸ்களில்!

IMG_3120

கோவிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் சீன ராசிகளின்படியான 12 பிராணிகளின் சிலைகளும் அந்தந்த ராசியின் பலனும் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி புகைப் படமெடுக்க பெரும் கூட்டம். அதே இடத்தில் ஒரு அதிர்ஷ்ட மரமும் இருக்கிறது. அதன் மீது ஒரு சிவப்பு நிற ரிப்பனை எறிவர். இதை கோவில்காரர்களே விற்பனை செய்கின்றனர். நாம் நினைத்த காரியம்நிறைவேற இப்படிச் செய்யலாம் என்கின்றனர்.

 

கீழே மரத்தில், அழகான குரங்கு பொம்மைகள் தொங்குகின்றன. மேலே மியூசியம், சீன மட்பாண்ட,பீங்கான் விற்பனைக் கூடம், படம்-புத்தக கலைப் பொருள் விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. மியூசியத்திலிருக்கும் தங்க நிற புத்தர் உருவங்கள் காணவேண்டியவை.

 

பெரிய பகோடா, தனியே ஓரிடத்தில் இருக்கிறது. மேலே ஏறிச் சென்றால் மிகப்பெரிய மணி இருக்கிறது அதை அடிக்க பெரிய மரக்கட்டையைப் பொருத்தி இருக்கிறார்கள். முன்னோர்களின் நினைவாக நன்றி தெரிவிக்க இந்த ஏற்பாடு. முன்னோர்களின் சாம்பல்/அஸ்தி அடங்கிய பேழையை வைக்க ஒரு புத்தர் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிரார்கள். இதற்குக் கட்டணம் உண்டு.

IMG_3134

IMG_3154

 

சிட்னி நகருக்குச் செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய இந்தக் கோவிலில் புகைப்ப்படமெடுக்க நூற்றுக் கணக்கான இடங்கள் உள்ளன. ஆனால் மூன்று பிரதான கோவில்களிலும் புகைப்படமெடுக்கக் கூடாது.

மூங்கில் தோப்பு, தாமரைக் குளம், பிரமாண்டமான மரங்கள் ஆகியன இவ்விடத்தை அலங்கரிக்கின்றன. மேலே மணி அடிக்கச் செல்லும் புல் மேட்டில் பாம்புகள் ஜாக்கிரதை என்ற போர்டு வைத்துள்ளனர். பெரும்பாலும் சீன, ஜப்பானியர் கூட்டமிருந்தாலும் ஆங்காங்கே தமிழ்க் குரல்களும், இந்தியும் பயணிகளிடையே ஒலித்தன.

IMG_3128

கோவிலைப் பார்க்க கட்டணமில்லை. ஆயினும் நாமே அதனழகைக் கண்டு வியந்து உண்டியலில் காசு போட விழைவோம்.

அமைதியான, அற்புதமான, அழகான கோவில்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் (தர்மம்) சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி!!!

 

IMG_3124

 

–subham–

கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே! (Post No. 2513)

mango thongum

Written by S Nagarajan

 

Date: 6 February 2016

 

Post No. 2513

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 IMG_2704

 

 

 

அந்த மாங்காயும் இந்த மாங்காயும்

 

கர்ம பலன் என்பது ஒரு மர்மமான விஷயம். பெரிய முனிவர்களும் கூட அறிய முடியாத இரகசியம். 750 கோடி பேர் இன்று உலகில் இருக்கிறார்கள். அதைத் தவிர கோடானு கோடி எண்ணிக்கையே  தெரியாத உயிரினங்கள் இன்றைய உலகில் உள்ளன. எந்த கர்மத்தால் யாருக்கு என்ன நல்லது அல்லது கெட்டது நடக்கிறது. அது எப்போது நடக்கிறது?

யாருக்கும் தெரியாது. ஆனால் நல்லவை செய்தவர்க்கு நல்லதும் கெட்டவை செய்தவர்க்க்கு கெடு பலனும் வந்து சேரும்.

 

 

நாகசேனரின் விளக்கம்

 

புத்தர் மறுபிறப்பு பற்றியும் கர்மபலன் பற்றியும் போதுமான அளவு விளக்கியுள்ளார்.

ஒரு சின்ன கதை கர்ம பலனின் ஒரு அம்சத்தைப் பற்றி விளக்குகிறது.

நாகசேனர் மஹாராஜா மிலிந்தனுக்கு இதைப் பற்றி விளக்கும் கதை இது.

 

நாகசேனர்: அரசே! ஒரு மாங்காய் தோப்பு ஒருவனுக்கு சொந்தமாக இருந்தது. அதில் இருந்த மரத்தில் ஒன்றின் மாங்காய்களை ஒருவன் பறித்து விட்டான். மாந்தோப்பிற்குச் சொந்தக்காரன் அரசனிடம் சென்று முறையிட்டான். அரசன் மாங்காய்களைப் பறித்தவனைக் கூப்பிட்டு ஏன் பறித்தாய் என்று கேட்டான். அதற்குப் பறித்தவன், “இந்த மனிதர் எநத மாங்காய்களை விதைத்தாரோ அது வேறு மாங்காய்கள். அதை நான் பறிக்கவில்லை. நான் பறித்த மாங்காய் அது அல்லவே!” என்று பதில் அளித்தான். அரசே! இப்படி பதில் கூறியவன் குற்றமிழைத்தவனா, இல்லையா?”

 

மிலிந்தன்: ஐயனே! நிச்சயமாக அவன் குற்றமிழைத்தவனே! அவனுக்கு தண்டனை உண்டு.

 

நாகசேனர்: என்ன காரணத்திற்காக?

மிலிந்தந்: எவ்வளவு புத்திசாலித்தனமாக அவன் பதில் கூறினாலும் அது செல்லாது. பறிக்கப்பட்ட கடைசி மாங்காய் முதலில் நட்ட முதல் மாங்காயிலிருந்தே உருவானது. அதனால் தான்!

 

நாகசேனர்: ஓ! மன்னா! அதே போலத்தான் இந்த உடல் மற்றும் ,மனத்தினால் செய்யப்பட்ட ஒரு நல்லதோ அல்லது கெட்டதோ இன்னொரு உடல், மனம் எடுத்த போது அதன் விளைவை அனுபவிக்கிறது.

 

 

இன்னொரு பிறவி எடுத்த போது முந்தைய ஜன்மம் பற்றிய நினைவும் இல்லை; அதில் செய்த நல்லது கெட்டதும் தெரிவதில்லை.

 

ஆனால் இதனால் விளைவு நம்மைச் சேராமல் இருக்காது. நினைவுக்கும் விளைவுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

எடுத்துக்காட்டாக குற்றம் இழைத்த ஒருவன், அது பற்றிய ஞாபகமே தனக்கு இல்லை என்றால் நீதிபதி ஒத்துக் கொள்வாரா அல்லது குற்றமிழைத்தவன் வயதான காரணத்தினாலோ அல்லது ஆரோக்கியக் கேட்டினாலோ மறதியை அடைந்து அதை செய்ததே தெரியவில்லை என்றால் நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது!

நாகசேனரின் விளக்கத்தை மன்னன் புரிந்து கொண்டான்.

 

 

IMG_2705

புத்தகோஸரின் விளக்கம்

 

இந்த ஜன்மத்தில் எடுத்த ஒரு உருவத்தில் செய்த பிழைக்கு அடுத்த ஜன்மத்தில் விளைவா என்று புத்தரிடம் சீடன் குடதந்தன் வியக்கிறான்.

 

இந்த உடல் பிரக்ஞையில் செய்த செயலுக்கு -விதைத்த விதைக்கு – அடுத்த  ஜன்ம உடலில் உள்ள பிரக்ஞையுடன் இருக்கும் போது விளைவு ஏற்படுவது சரிதானா?

இதற்கு புத்தகோஸர் அருமையாக விடையளிக்கிறார்.

அடுத்தாற்போல விளைவை அநுபவிப்பவன் முந்தைய நபரும் இல்லை; முந்தைய நபர் இல்லாமலும் இல்லை!!

இதற்கு புத்த மதத்தில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

ஒன்று பட்டாம்பூச்சி உவமை.

இன்னொன்று தீ ஜுவாலை உவமை.

 

 

ஒரு பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? முதலில் முட்டை, பின்னர் புழுவாகிறது. பின்னர் கிறிஸ்லிஸ் (Chrysalis) என்ற பொற்புழு நிலையை அடைகிறது.பின்னர் முழு

வண்ணத்துப்பூச்சியாக உரு மாறுகிறது. அதனுடைய ஒரே வாழ்க்கையில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. புழுவாக இருந்த அதே வண்ணாத்திப்பூச்சி இப்போது இல்லை, ஆனால் அதே சமயம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றும் இல்லை! தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு முறையில் ஒன்று இன்னொன்றாகப் பரிமளிக்கிறது.

 

 

தீபம் ஒன்றை இரவு எட்டு மணிக்கு ஏற்றுவதாக வைத்துக் கொள்வோம்.அதன் ஒளி எங்கும் பரவுகிறது. தீப ஜுவாலையைப் பார்க்கிறோம். அதே தீபத்தை காலை ஆறு மணிக்கு மீண்டும் பார்க்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பார்த்த தீப ஜுவாலை இப்போது இல்லை என்றாலும் தொடர்ந்து எரிவதால் இப்போதுள்ள தீப ஜுவாலை மாறுபட்ட ஒன்றும் இல்லை என்றாகிறது.

 

 

வினையின் விளைவு தொடரும்

 

அதே போல ஒரு உயிர் தனது தொடர் கர்மத்தினால் அதன் விளைவை இன்னொரு உடலில் அநுபவித்தே ஆக வேண்டும்.

சரி, தன்னை உணர்ந்த ஞானி ஒருவர் கர்மம் செய்து கொண்டே இருக்கிறாரே என்று கேட்டால் ரமண மஹரிஷி வேதாந்தம் மூலம் விடையளிக்கிறார்.

 

ஞானியின் கர்மம் வறுத்த விதை போல. அது கர்மம் தான் என்றாலும் அதற்கு விளைவு இருக்காது!

இப்படி கர்ம பலனில் ஏராள ரகசியம் இருக்கிறது. முற்றிலும் உணர்ந்தவர் யாரும் இல்லை.

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் கர்ம நியதி. தர்ம நியதி!

**********

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512)

IMG_2594

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2512

 

Time uploaded in London :– 4-57 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2597

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரிலிருந்து இரண்டு மணி நேர தொலைவில் – சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் – கடலோரமாகப் பொங்கும் நீரூற்று இருக்கிறது. இந்த ஊருக்கு கியாம என்று பெயர். இது ஒரு இயற்கை அதிசயம். கடலோரத்தில் குகைகள் இருந்து, அதன் ஒரு வாய் கடலிலும், மற்றொரு வாய் (திறப்பு) நிலத்திலும் இருக்கையில் இதுபோன்ற இயற்கை அதிசயம் உருவாகும் இதை BLOW HOLE என்பர்.

 

கடலின் அலை வீச்சு, காற்றோட்டம் முதலியவற்றைப் பொறுத்து சில நேரங்களில் 60 அடி உயரத்துக்கு வானில் நீர்த்திவலைகள் பீச்சி அடிக்கும். நாங்கள் சென்றபோது சுமார் 20 அடி உயரத்துக்கு மட்டுமே நீர் பொங்கியது. இது காணக் கண் கொள்ளாத காட்சி. அருகில் நின்றால், நம் மீது நீர்த்திவலைகள் பட்டு நம்மை நனைத்துவிடும். இதை இரவு நேரத்தில் வண்ண ஒலியில் காண மின் விளக்குகளும் போட்டிருக்கிறார்கள். அருகில் ஒரு அழகான கலங்கரை விளக்கு உள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இந்த இடத்தில் அழகான கடற்கரை, படகு சவாரி ஆகியனவும் உண்டு. தொலைதூர பாரைகளில் கடற்பறவைகள் அணிவகுத்து நிற்பதையும் கண்டு களிக்கலாம்.

IMG_2600

 

IMG_2595

 

IMG_9229

 

IMG_3099

 

IMG_2604

 

IMG_9224

(படங்கள்:- லண்டன் சுவாமிநாதன்)

 

 

Absent minded Professor (Post No 2511)

220px-Dwight_Morrow

Picture of Dwight Morrow

Written by london swaminathan

Date: 5 February 2016

 

Post No. 2511

 

Time uploaded in London :– 14-59

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

The late Dwight Morrow (US diplomat, politician and businessman), who was very absent-minded, was once reading earnestly on a train when the conductor asked for his ticket. Frantically Mr Morrow searched for it.

 

Never mind Mr Morrow, the conductor said. When you find it mail it to the company I am certain you have it.

 

I know I have it, exploded Mr Morrow. But what I wanted to is, wherein the world am I going!

 

Xxx

lessing

German Author forgot his home!

 

In his old age, Lessing, the German author became very absent minded. Coming home one night with his mind on some work he intended to finish, he found the locked, and discovered that he had not taken his key with him. In answer to his knock, a servant looked out of an upstairs window, and mistaking his master for a stranger, called out

The professor isn’t at Home

 

Very well, Lessing answered meekly as he turned Away

 

Tell him that I will call him another time.

 

Xxx

Forgot his Lunch

J David Stern, former publisher of the New York post was sometimes accused of absentmindedness. Once, as he hastened down the street, he was accosted by a friend, who said, “Come, have lunch with me.
“All right”, said Stern, “f we go to some place nearby. I am already late.”

They entered a restaurant close at hand, and as he ordered, Stern wondered what could be the matter with him for he said, “I am not a bit hungry”

“I beg pardon, sir” the waiter said, “but you just finished lunch five minutes ago”.

 

Xxx

 

NY map

Another story about Dwight Morrow’s notorious absentmindedness. Getting off the train in New York, he hastened into the telegraph office and wired to his secretary: “Why am I in New York? What am I supposed to do?”

He received a prompt answer: that he was on his way to Princeton to deliver a lecture.

 

–subham-

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510)

IMG_2959

Written by london swaminathan

Date: 5 February 2016

 

Post No. 2510

 

Time uploaded in London :– 14-26

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_2960

உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்று பெரும் பவளத்திட்டு (Great Barrier Reef). இது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதைக் காண வேண்டுமென்று 30 ஆண்டுகளாக இருந்த கனவு சமீபத்தில் நிறைவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு உறவினர்கள் அழைக்கவே, இந்த இடத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டுமென்று திட உறுதி பூண்டேன். ஏனெனில் பி.பி.சி.தமிழோசையில் வேலை பார்க்கும்போது “வினவுங்கள் விடை தருவோம்” என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றி சொல்லியிருந்தேன். அப்போது டெலிவிஷன் டாக்குமெண்டரி (TV Documentary) பார்த்த அடிப்படையில் இது பற்றிப் பேசினேன். என்றாவது ஒரு நாள் இதைக்காண வாய்ப்பு கிட்டும் என்று தெரியும்.

 

நான் ஜனவரியில் சிட்னி (Sydney) நகருக்குப் பயணமானேன். அங்கு செல்வதற்கு முன்னாலேயே Great Barrier Reef கிரேட் பார்ரியர் ரீF எனப்படும் பெரும்பவளத் திட்டுகள் பற்றிய விவரங்களையும் சேகரித்தேன். சிட்னி நகரிலிருந்து 1300 மைல் தொலைவில் இருப்பதால் விமானத்தில் சென்றோம். அங்கு பல வீர தீரச் செயல்கள் செய்யும் வசதிகள் உள்ளன. ஆனால் வீட்டிலிருந்து வந்த இருவருக்கு சமுத்திரம் என்றால் அச்சம்.ஆகவே இந்த முறை கொஞ்சம் குறைத்து வாசிப்போம் என்ற பாணியில் சேவையை ஏற்பாடு செய்தோம். ஆகவே ஐந்து மணி நேர கப்பல் (Ferry) சவாரி மட்டும் போதும் என்று சொன்னோம்.

 

 

சிட்னியிலிருந்து 1300 மைல் தொலைவிலுள்ள Cairns கேர்ன்ஸ் என்னும் ஊரிலிருந்துதான் நிறைய படகு சேவை இருப்பதால் அங்கு விமானத்தில் போய்ச் சேர்ந்தோம். பெரும் பவளத்திட்டுகள் பவளப் பூச்சிகளால் உருவாக்கப்படுபவை. அது 1300 மைல் நீளத்துக்குப் பரவியிருந்தாலும் ஒரு சில ஊர்களிலிருந்து சென்று பார்க்கவே வசதி செய்யப்பட்டுள்ளது.

பசிபிக்  சாமா

ஐந்து மணி நேர சேவையில் முதலில் பெரியகப்பலில் எல்லோரையும் ஏற்றிச்சென்று பசிபிக் மஹா சமுத்திரத்தில் (Pacific Ocean) 35 மைல் தொலைவிலுள்ள க்ரீன் ஐலண்ட் (Green Island) என்னும் பசுமைத் தீவில் இறக்கிவிடுவார்கள். உண்மையிலேயே பசுமையான மரங்களுண்டு. நிறைய கடைகளும் காப்பி விடுதிகளும், சின்ன மிருகக் காட்சி சாலையும் இருக்கின்றன. வெண்ணிற மணல் நிறைந்த கடற்கரைக்குச் சென்றால் பலரும் முகமூடி, சுவாசக் குழாய் அணிந்து கடலுக்குள் செல்லுவதைக் காணலாம். எல்லாவற்றிற்குமுதவி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். முன்னமேயே இதற்கெல்லாம் கட்டணம் செலுத்திவிடுவதால், அவர்கள் நமக்காகக் காத்திருப்பர். நாங்கள் போனபோது நிறைய ஜப்பானிய, சீன பயணிகளைத் தான் கண்டோம்.

 

இந்த இடத்தில் மூச்சுக் குழல் (snorkelling) அணிந்து கடலில் மூழ்குவோர், கடலுக்கடியில் செல்லும் குட்டி நீர்மூழ்கியில் (Submersible vehicles) செல்லுவோர், கண்ணாடி ஜன்னல் பொறுத்தப்பட்ட படகில் (Glass Bottomed Boats) செல்லுவோர் என்று பயணிகளை வகைப்படுத்தி அதற்கான கப்பலில் ஏற்றுவர். நாங்கள் கண்ணாடி ஜன்னல் படகுக்குக் காசு கட்டி இருந்தோம். இது 45 நிமிட பயணம். ஒரு பெரிய படகில் எதிரும் புதிருமாக 20+20 = 40 பேர் அமர்ந்திருப்போம். எங்களுக்கு மூன்றடி கீழே படகின் அடிப்புறத்தில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருக்கும். படகு புறப்பட்டவுடன் பெரும் பவளத் திட்டு புராணத்தை படகோட்டி சொல்லுவார். அந்த நேர்முக வருணனை நடக்கும் போதே நாம் கேமரா சகிதம் கீழே பார்த்துக் கொண்டிருக்க, பலவகையான பவளப் பாறைகள், கடல் பிராணிகள், தாவரங்கள், ஆமைகள், வண்ண வண்ண மீன்கள் என்று பார்த்துக் கொண்டே போகலாம். இடையிடையே அவர் மீன்களுக்கான இரையைக் கடலில் எறிவார். அதைச் சாப்பிட மீன்கள் துள்ளிக் கொண்டுவர, அந்த மீன்களைச் சாப்பிட பறவைகள் பறந்துவர எல்லாவற்றையும் கண்டு களிக்கலாம். நாங்கள் 20 வகை மீன்களையாவது பார்த்திருப்போம். சில மீன்கள் மிகப் பெரியவை.

 

இதையும் தாண்டிச் செல்லுவோரை Outer Reef அவுட்டர் ரீF க்கு அழைத்துச் செல்லுவர். அங்கு குட்டி நீர்மூழ்கி வாகனங்களில் ஏறினால் பெரிய ஜன்னல் வழியாக இன்னும் அதிக மீன் வகைகளையும், பெரிய பவளப் பாறைகளையும் காணலாம்.

 

IMG_2945

பவளத்திட்டு மகாத்மியம் அல்லது புராணம்

விண்வெளியில் பறக்கும் வீரர்களும் பவளத்திட்டு இருக்குமிடத்தை எளிதில் காணமுடிகிறதாம். கடலில் சூரிய வெளிச்சம் எந்த அளவுக்குப் போகுமோ அந்த அளவுக்கே பவளப் பூச்சிகள் வளரும். சுண்ணாம்பால் வீடுகட்டி அதில் வசிக்கும். அது இறந்தவுடன் அதன்மீது அடுத்த தலைமுறை வீடு கட்டும் இப்படி வளர்ந்து பல ஆயிரம் ஆண்டுகளில் 1300 மைல் வரை பரவிவிட்டது பெரும்பவளத் திட்டு. இத்தான் உலகின் மிகப்பெரிய உயிர்வாழும் பிராணி. ஆனால் ஒரு பிராணி அல்ல. பல்லாயிரம் பிராணிகள்.

 

இந்தியாவிலும் குஜராத் கடலோரம், தமிழ்நாட்டின் கடலோரத்தில் பவளப் பாறைகள் உண்டு.அவை சிறிய பரப்பளவில் இருப்பவை. மேலும் மீனவர்கள் அதை அழித்துச் சுருக்கிவிட்டனர்.

 

ஆஸ்திரேலியப் பெரும்பவளத்திட்டு வருடத்தில் ஒரு நாள் திடீரென முட்டைகளை வெளியிடும். அந்த நாளில் கடல் முழுவதும் தக்காளி சூப் போல மாறிவிடும். அந்த முட்டைகளைச் சாப்பிட ஏராளமான மீன் வகைகள் படையெடுக்கும். ஒவ்வொறு முட்டையும் பல மைல்கள் நீந்திச் சென்று குடியமரும். யார் இதையெல்லாம் அந்த வாயில்லா ஜீவன்களுக்குச் சொல்லிதந்தார்கள், ஏன் ஒரு குறிப்பிட்ட நாளன்று எல்லாம் கருவை வெளியேற்றுகின்றன, அவைகளைத் தூண்டிவிடுவது என்ன என்பதெலாம் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நான் சென்ற கேர்ன்ஸ் நகரில் பெரிய ஆராய்ச்சி நிலையங்கள் இருக்கின்றன.

 

IMG_2942

இந்தப் பெரும் பவளத்திட்டில்

600 வகையான பவளங்கள்

100 வகையான ஜெல்லி மீன்கள்

3000 வகையான கிழிஞ்சல்கள், சங்குகள், சோழிகள்

500 வகையான கடற்புழுக்கள்

1625 வகையான மீன்கள்

130 வகையான சுறாமீன்கள், மாண்டா ரேய்ஸ்

30 வகையான திமிங்கிலங்கள், டால்பின்கள் உள்ளன.

இந்து சாஸ்திரப்படி முத்தும், பவளமும் நவரத்தினங்களில் சேர்க்கை. இரண்டும் கடல் பிராணிகளால் உண்டாக்கப்படுபவை. செம்பவளம் என்பது ஒரு வகைப் பவளம். ஆனால் கருப்பு முதல் பல வண்ணங்களிலும் பவளங்கள் கிடைக்கும்!

 

மூன்றரை லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு வியாபித்துள்ள இப்பவளத் திட்டு பல நாடுகளின் பரப்பளவுக்குச் சமம். ஐரோப்பாவில் பிரிட்டன், ஹாலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளையும் இப்பவளத்திட்டில் அடக்கிவிடலாம்!

IMG_2961

இங்குள்ள ஜெல்லி மீன்களில் சில மிகவும் விஷம் வாய்ந்தவை. சில சுறாமீன்கள் மனிதர்களை வேட்டை ஆடக்கூடியவை. பெரிய ஆமைகளும் கடல் நண்டுகளும் இங்கே பவனி வரும். ஆஸ்திரேலிய அரசு இதைக் கண்ணும் கருத்துமாக காத்துவருகிறது. இது, அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்கவேண்டியத் இடம்.

 

நாங்கள் ஒரு தவறு செய்தோம். கேர்ன்ஸில் ஒர் இரவு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்துவிட்டு அடுத்த நாள் பிரிஸ்பேன் நகருக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கி இருந்தோம். ஆனால் அங்கு போனவுடந்தான் தெரிந்தது அங்கு வேறு ஒரு அதிசயமும் பார்க்க இருக்கிறது என்பது. அங்கு பக்கத்திலுள்ள பெரிய மலையில் அடர்ந்த பசுமையான மழைவனக் காடுகள் இருக்கின்றன. இதற்கு ஒரு முழு நாள் தேவை. போகும் போது கேபிள் காரிலும் வரும்போது ரயிலிலும் அழைத்து வருவர். காடுகளையும் பெரிய நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். அடுத்த முறை கடலில் நீர்மூழ்கி, வானில் கேபிள் கார் பவனி எல்லாவற்றையும் அனுபவிக்க திட்டமிட்டோம். எல்லாம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே!

IMG_2964

 

IMG_2975IMG_2979IMG_2983

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வாழ்க இயற்கை; வளர்க காடுகளும் பவளத் திட்டும்!

 

–சுபம்-

 

பிக்ஷுவே, அப்போது என்ன செய்வாய்? (Post No. 2509)

IMG_9409 (2)

Written by S Nagarajan

 

Date: 5 February 2016

 

Post No. 2509

 

Time uploaded in London :–  7-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 

புத்தரிடம் புன்னா என்ற பிக்ஷு வந்தார். புத்த தர்மத்தை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வந்த அவரை புத்தர் கனிவுடன் பார்த்தார்.

 

தனக்கான தியான முறை ஒன்றை கருணை கூர்ந்து அருள வேண்டும் என்று அவர் புத்தரிடம் விண்ணப்பித்தார்.

புத்தரும் அவருக்குரிய தியான முறை ஒன்றை உபதேசித்து அருளினார்.

 

பின்னர் புன்னாவை நோக்கிய புத்தர், “எந்த ஊருக்குப் போகப் போகிறாய்?” என்று கேட்டார்.

“சுநபராந்தா என்று ஒரு மாவட்டம் இருக்கிறது. அங்கு சென்று தர்ம பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என்றார் புன்னா.

புத்தர்:-“புன்னா! சுநபராந்தாவில் உள்ள மக்கள் சற்று கடுமையானவர்கள்.அவர்கள் உன் பேச்சைக் கேட்க மாட்டார்கள். உன்னைக் கண்டபடி திட்டப் போகிறார்கள். அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:- “ஆஹா! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள். திட்டத்தானே செய்கிறார்கள். என்னை அடிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “நல்லது.அவர்கள் உன்னை அடித்து விட்டாகள் என்றால், அப்போது நீ என்ன செய்வாய்?”ர்

புன்னா: “ஆஹா! இவர்கள் கல்லை எடுத்து என்னை அடிக்கவில்லை. கையாலே தானே இரண்டு தட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்:” அப்பனே! அவர்கள் கல்லை எடுத்து வீசி அடித்தால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ நல்ல வேளை! இவர்கள் கல்லைத் தானே வீசி எறிகிறார்கள். கழி கொண்டு தாக்கவில்லையே என்று நினைத்துக் கொள்வேன்.”

 

புத்தர்: “அப்பனே, புன்னா! ஒருவேளை அவர்கள் கம்பால் உன்னைத் தாக்கினார்கள் என்றால் அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “நல்லவேளையாக இவர்கள் கம்பு கொண்டு தான் அடிக்கிறார்கள். கொலைகாரக் கத்தியால் தாக்கவில்லையே என்று எண்ணுவேன்”

 

புத்தர்: “ஒருவேளை அவர்கள் கத்தியை எடுத்து உன்னைக் குத்தி விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா: “ஆஹா! இவர்கள் கத்தியினால் குத்தத் தானே செய்தார்கள். என் உயிருக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்கவில்லையே என நினைப்பேன்.”

IMG_9410 (2)

புத்தர்: “புன்னா! ஒருவேளை அவர்கள் கத்தியினால் குத்தி உன் உயிருக்கே ஆபத்து விளைவித்து விட்டால், அப்போது நீ என்ன செய்வாய்?”

 

புன்னா:”ஏராளமான பிக்ஷுக்கள் தங்கள் உடலின் மீது அதிருப்தி கொண்டு, வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து, கத்தி ஒன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.ஆனால் எனக்கோ எந்தவித சிரமுமின்றி ஒரு கத்தி கிடைத்து உயிர் போகவுள்ளதே என்று நினைப்பேன்.”

 

புத்தர்: “நல்லது, மிகவும் நன்று, புன்னா! நீ சுநபராந்தாவில நன்கு பணி ஆற்ற முடியும்.உன்னிடம் பொறுமையும் எளிமையும் இருக்கிறது. உனக்கு காலம் மிகவும் நன்றாக இருக்கிறது

 

நீ நினைத்தபடி தர்ம பிரச்சாரம் செய்யக் கிளம்பு”

 

புத்தர் கருணையுடன் புன்னாவை ஆசீர்வதித்தார்.

 

புன்னா சுநபராந்தா நோக்கி புத்தரின் ஆசியுடன் பயணமானார்!

 

புத்தரின் போதனை: அஹிம்சையும், பொறுமையும், எளிமையும் நேர்மையும் தர்ம பிரச்சாரம் செய்பவர்களுக்கு இன்றியமையாத குணங்கள்.

*********

New COLOURING Book on Astrology! (Post No 2508)

IMG_3073

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2508

 

Time uploaded in London :– 15-58

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3074

A new astrology book by the British astrologer Russell Grant has been published a few months ago. This is a colouring book! One may wonder what astrology has to do with colouring. Is it not children’s work?

 

I bought it for six pounds through amazon.co.uk. Though I wouldn’t recommend anyone to buy it, it features a novel approach to astrology.

 

Sometime ago I read an interview by Russell grant in the Metro newspaper of London. His views on astrology are strange and interesting.

Astrology can’t predict!

When we go to an astrologer we always ask him questions about our future. But Russell Grant says astrology can’t predict your future. You may wonder then what else astrology does.

 

Here are some of the questions about his new book “Art of Astrology”

From Metro’s 60 Seconds with Russell Grant

What is your involvement with the book? You haven’t drawn the pictures, right?

Russell: No, but I wrote everything the most important thing was the section about colour. As someone who has used colour all his life – my father was a set designer at Pinewood – I wanted to include the information about colours and what they mean.

 

What is the point of adult colouring book?

It is about mindfulness. It concentrates the mid—you can forget your anxieties and worries because you are fully focussed on what you are doing in that moment.

 

(Then some questions about his period of depression and how he came out of it.)

IMG_3075

How did you get into astrology?

As a hobby. I was an actor doing a lot of theatre and some TV. I bought a book called Teach yourself Astrology as research at first. I thought it was a load of rubbish – I thought surely humanity is not divided into 12 signs—but when you study it you realise it is not about predictions. You don’t tell the future, it’s about self-potential and the ability to unlock the creative energy within you. Then in 11978 I took part in a presentation about astrology at the Ideal Home Exhibition. I met the Queen Mother, who was supposed to talk to me for three minutes, but the conversation lasted 33 minutes. The next day there was a big picture in the paper calling me ‘astrologer royal’ I never described myself in that way – it was a newspaper headline. That is how it took over my life and it was never meant to.

 

If astrology isn’t about prediction what is it?

In the paper you can use only sun signs. The whole chart works on an individual’s date, time and place of birth, which is unique to them. When someone comes to me for advice they are not asking if they are going to meet a tall dark stranger, they are saying, “I am restless – is now the time to move on? And I will say ‘yes, it is’ or may be ‘wait a while’, I could say. ‘This is great time to go off and live in America, but they can say they don’t want to. We all have free will and choice. A proper astrologer is there to say this is a good time or it is not. If you look at life, what is it all about? Trends and cycles.

IMG_3078

So is there any point in reading horoscopes in newspapers?

It will give you a nugget if it is written by a proper astrologer – it may inspire you.  If it is written by a non- astrologer there is no point.  Before e mail existed I know of some instances where newspapers – none that I wrote for- had made them up if the horoscope hadn’t arrived in the post in time.

 

Now from his book Art of Astrology

“In the last 50 years or so I have been involved in teaching and studying Astrology, people seem to have become more and more confused about what it actually is.

 

The problem lies, in part, with the incredible growth of the internet and social media, and the mixed messages they have spread.

Today, people have access to so many sources, from print articles to websites and apps dedicated to ‘predicting the future’ via ‘star signs’, that there has been a widespread misconception that this is astrology’s sole purpose. It might surprise you to know that astrology does not predict.

 

I believe that Astrology is a key, a tool, a passport that unlocks the door to a detailed understanding of who we are, what forces are at work within us and we can capitalise on them. Essentially Astrology tells us what we as individuals can do and what we are capable of it reveals our potential. Once we understand this, we are free to fulfil that potential to the absolute maximum.

IMG_3080

Colouring book

The book has got lot of illustrations running to 90 pages under 12 zodiac signs. At the end of the book there is colourscopes running to 20 pages.

Russell says

Start playing with colours. Once you have finished your art work, you might find one colour dominates all others; make a note of the colours that standout and also those colours that are missing. One you have listed the colours that dominate, read its interpretation in my rainbow guide. Ask yourself: is something I am missing in my personality of life? You might find it strikes a chord, as the colour sparks off something inside you, perhaps filling in spiritual, psychological or personality link.

 

My summary:- So it is basically a colouring book with lot of information on 12 signs and the rainbow guide at the end will reveal your personality when you finished colouring!

 

–Subham–

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)

IMG_9777

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2507

 

Time uploaded in London :–  8-23 (காலை)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டு பழமையான ஜோக்குகள்; சென்னை சீனிவாசன் , அனுப்பிய விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

 

RES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

மடயசாம்பிராணி

ஒரு நாட்டுப்புரத்து பிரமணன் திருவையாற்றிற்குப் போகப்புறப்பட்டுத் தஞ்சாவூரிலிறங்கி அங்கே வழியில் போய்க்கொண்டிருக்கும் பட்டணத்தானொரு வனைப் பார்த்து ஐயா! திருவையாற்றிற்குப் போவதற்கு வழி எது என்றான்.

 

அதற்கவன், ஸ்வாமி! இப்படி நெடுக வடக்கே பூனீங்கன்னா சந்துபூவுது, அதிலே விழுந்து கிழக்கே பூனா ஒரு டிரையின்சு இருக்குது. அதிலே விழுந்து பூனா ஒரு ஆலமரம் நிக்குது, அதிலே ஏறிப்பூனா ஒரு கூரை வீடு இருக்குது. அதுமேலே ஏறி மேற்கே பூவது வழி என்றான்.

 

இந்தப் பிராமணன் பிரமித்து ஒகோ ஒருக்கால் அப்படித்தான் போகவெண்டுமோ என்று நினைத்துப் பட்டணத்தான் பகர்ந்ததையே நோக்கி சந்திலே விழுந்து, டிரைன்சிலேயும் விழுந்து,  ஆலமரத்து மேலேறி, மறுபடியும் கூரைமீதேறிப்போகும் போது அவ்வீட்டுக்காரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர் மனைவி நெய் பரிமாறும்போது நாட்டுப்புரத்து பிராமணன் கூரை மீதேறிய அதிர்ச்சியால், கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரன் இலையில் இரண்டு மூன்று செத்தை விழுந்தது.  உடனே வீட்டுக்காரன் யார் உயர இருக்கிறது என்றான்.

 

அதற்கு உயர நடந்து கொண்டிருக்கும்  பிராமணன், “ஏண்டா! நான் திருவையாற்றிற்குப் போகிறேன். உனக்கென்ன! நீயேன் கேட்கிறாய்? என்றான். அதற்கு வீட்டுக்காரன், புத்திசாலி மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டி! லவண்டி! திருவையாற்றுக்குப் போகிற வழியில் ஏன் சாதம் போட்டாய்” என்று பலவிதமாய் வைது அடித்தான். இதில் யார் புத்திசாலி என்பதை இதை வாசிப்போர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Xxx

IMG_9769

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை

இவர் சிறுவயதிலேயே சீமைக்குப் போய் ஆங்கில பாஷையில் தேர்ச்சியுற்று பெரிய பரீக்ஷைகள் எழுதி, நமது ஜில்லாவுக்கு டெபுடி கலெக்டர் உத்தியோகம் பெற்றுவந்திருந்தார். அக்காலத்தில் ஹெட்கிளார்க் கிருஷ்ணாராவ் என்பவர்.

 

புரட்டாசி சனிக்கிழமையன்று விடுமுறை கேட்கவேண்டுமென்று கேட்க, சென்ற வருஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாவென்று எஜமான் கேட்க, , ஹெட்கிளர்க் அதிக வணக்கத்துடன், “ஸார்! சென்ற வருஷத்தில், புரட்டாசி சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையன்று வந்ததினால் விடுமுறை கொடுக்கப்படவில்லை” யென்று தமிழில் பதில் சொன்னார்.

 

உடனே எஜமான், “ஆல்ரைட்” என்று தலையசைத்துக் கொண்டு விடுமுறை யளித்தார்

–சுபம்–

இதயத்தை மெதுவாகக் ‘கொல்லும்’ 6 உணவுகள் (Post 2506)

salt-sugar

Written by S Nagarajan

 

Date: 4 February 2016

 

Post No. 2506

 

Time uploaded in London :–  8-08 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை ஹெல்த்கேர் ஜனவரி 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

இதயத்தை மெதுவாகக் கொல்லும் 6 உணவுகள்

.நாகராஜன்

 

உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இதயத்தை மெதுவாகச் செயலிழக்க வைத்து உங்களைக் கொல்லும் ஆறு உணவு வகைகளை நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனித இதயம் ஒரு விசித்திரமான அமைப்புடன் கூடிய அற்புத இயந்திரம். சரியானபடி   பொருத்தமான அளவில் ஊட்டச்சத்து இருந்தாலேயே போதும், அது நீடித்து இயங்கும்!

ஆனால் நாமோ இந்த உண்மையை அறியாமல் நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு நம்மை நாமே மெதுவாகக் கொன்று கொள்கிறோம்!

 

என்ன அநியாயம் இது!

 

அமெரிக்காவில் மட்டும் நான்கு இறப்புகளில் ஒன்று இதய நோயால் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

சரியான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, நீடித்த வியாதிகளைக் கொண்டிருப்பது ஆக இந்த மூன்று காரணங்களே இறப்புக்கான காரணமாகப் பெரும்பாலும் அமைகிறது. இந்த மூன்று காரணங்களை நீக்கி விட்டாலே போதும் இதய நோய் வராமல், நீடித்த ஆயுளை நிச்சயம் கொள்ளலாம்!

 

 

சில உணவு வகைகள் நேரடித் தாக்குதலில் இதயத்தைப் பாதிக்கும். மேலும் சில உணவுகளோ உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி மெதுவாகக் கொல்ல ஆரம்பிக்கும். எடுத்துக்காட்டாக சர்க்கரை நேரடியாக இதயத்தைப் பாதிக்காது. ஆனால் அதிக அளவில் சர்க்கரையை உணவில் சேர்க்க ஆரம்பித்தால் அது உடல் பருமனைக் கூட்டி இதயத்தைப் பாதிக்கும்.

 

 

TRANS FATS

 

வெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட சில கொழுப்பு வகை உணவுப் பொருள்கள் நல்ல கொலஸ்ட்ராலான HDLஐக் குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலான LDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. கொழுப்புகளில் பல வகை உண்டு. ஆங்கிலத்தில் இவற்றை trans fats, saturated fats, polyunsaturated fats, unsaturated fats என்று குறிப்பிடுகின்றனர்.

 

உயிர் வாழ கொழுப்பு சத்து நிச்சயம் தேவை. ஆலிவ் ஆயில், கொழுப்புடைய மீன், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய் முதலானவை தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளவை. இவை மூளையையும் இதயத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்ள இன்றியமையாதவை.

 

பாக்கேஜ்களில் வரும் பிஸ்கட், பாப்கர்ன், க்ரீம் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவற்றை ஒதுக்கி விடுதல் நலம்.

 

 

REFINED GRAINS

 

மெஷினில் தீட்டப்பட்ட அரிசியில் ஊட்டச்சத்து இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளில் விற்கப்படும் உணவு வகைகளை விட்டு விட்டு பாரம்பரிய முறையில் அன்றாடம் சமைத்துச் சாப்பிடுவது இதயத்தைச் சீராக வைக்கும் அருமையான வழிமுறையாகும்.

 

எந்த தானியத்தையும் அரைத்து விட்டால் அதை ஒரு வாரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது. இரண்டு வாரங்கள் என்பது உச்ச பட்ச எல்லை.

 

sugar

SUGAR

க்ளூகோஸ் உடலுக்குத் தேவை தான் என்றாலும், சர்க்கரை சாதாரண அளவில் எடுத்துக் கொள்ளும் போது இதயத்தைப் பாதிக்காது என்ற போதிலும் லாலிபாப் ஒன்றை எடுத்துக் கொண்டு இதர இனிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் உள்ள இனிப்பு ஜீரோ ஊட்டச்சத்து என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

 

ஷுகர் கேண்டி சாப்பிட்டால் சக்தி அதிகமாகும் என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். அதே சக்தியை ஒரு பழத்துண்டு தந்து விடுகிறது. பழம் சீரான ஜீரணத்தையும் ஏற்படுத்துகிறது. லாலிபாப் போன்றவற்றில் உள்ள ரிஃபைண்ட் ஷுகர் (Refined sugar) அடிக்கடி அவற்றை உண்ணத் தூண்டும்; பக்க விளைவுகளை ஏற்படுத்தும். களைப்பையும், தலைவலியையும் ஏற்படுத்தும். ஆகவே செயற்கை சர்க்கரை வகைகளைப் பயன்படுத்தக் கூடாது.

கேன்களில் அடைக்கப்பட்ட பழ வகைகளை வாங்கும் போது அது பழச்சாறாக இருந்தால் அதில் விடமின் ‘சி’யும் அதிக கலோரிகளும் இருக்கும். ஆனால் அவை சிரப்பாக (Syrup) இருந்தால் அதில் ஊட்டச்சத்து இருக்காது.

 

 

FATTY MEATS

இறைச்சி உட்கொள்பவர் என்றால் அது உங்கள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.கேன்களில் அடைக்கப்பட்ட சிக்கன் போன்றவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது இதயத்திற்கு நல்லது.

 

 

ENERGY DRINKS

 

சக்தியூட்டும் எனர்ஜி பானங்கள்

சக்தி தரும் பானங்கள் என்று விளம்பரங்களில் குறிப்பிடப்படும் பானங்களில் காபின், ஜின்செங், விடமின்பி’, சர்க்கரை போன்றவை இருந்தாலும் இவை அனைத்தும் உடனடியாக சக்தியை அதிகப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் கூட, அது உங்கள் இரத்த அழுத்தத்தை பானம் அருந்தியதிலிருந்து இரண்டு மணி நேரம் வரை அதிகப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதயமும் இரத்த அழுத்தமும் சீராக ஒருவருக்கு இருக்கும் வரை இந்த பானங்கள் சரியாகத்தான் இருக்கும். ஆனால் அடிக்கடி இவற்றை குடிக்க ஆரம்பித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; இதயமும் பழுதாகும்!

 

salt

SALT

உப்பு

 

உப்பு இரத்த கனஅளவை உயர்த்தி நாளங்களில் நல்ல ஆரோக்கியமான முறையில் ஓட வைக்க உதவுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் உப்பு தான் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க வைக்க உதவுகிறது. அதிக உப்பு உடலில் சேர்ந்தாலோ அல்லது உப்பை நீங்கள் சீரான முறையில் வைக்கவில்லை என்றாலோ இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே இரத்த அழுத்த பாதிப்பு உடையவர் என்றால் உடனடியாக உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 

உடலுக்கு உப்பு நிச்சயம் வேண்டும். உயிர்வாழ அந்த தாது அவசியமே. ஆனால் அதை ‘அதிகமாக’ எடுத்துக் கொள்ளக்  கூடாது!

 

 

இதயத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகள்

 

சரி, சுருக்கமாகச் சொல்லுங்கள், எவற்றை விலக்க வேண்டும் என்று நீங்கள் கேட்டால் அதைச் சொல்வது எளிது. கீழே உள்ளவற்றை எப்போதாவது சாப்பிடுவது என்று வைத்துக் கொண்டால் ஒரு பயமும் இல்லை. அதை தினசரியோ அல்லது அடிக்கடி சாப்பிடும் ழக்கம் உண்டு என்றால் அவை இதயத்தை பாதிக்கும் எபன்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீஸா

 

பேக் செய்யப்பட்ட கேக்குகள் (Baked Cakes)

கொழுப்புள்ள இறைச்சி வகைகள்

சிக்கன் ஸ்கின் (Chicken skin)

எண்ணெயில் வறுக்கப்பட உணவு வகைகள்

பாஸ்தா

ஐஸ்க்ரீம் மற்றும் இதர உறைநிலை frozen treats

சர்க்கரை உள்ள பானங்கள்

க்ரீம் சாஸ் வகைகள்

கெட்ச் அப்

assorted_ice_cream_cones

 

ஆரோக்கியமான உணவு வகைகள்

 

எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டுமா என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். ஆலிவ் ஆயில், வினிகர், எலுமிச்சை சாறு ஆகியவை நல்லவையே.

 

ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கோப்பை பழத்துண்டுகளைச் சாப்பிடலாம்.

I

இதயத்தைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மேலே கூறியவற்றை மனதில் இருத்திக் கொண்டு உணவுப் பழக்கத்தைச் சற்று மாற்றிக் கொண்டாலே போதும். நீண்ட நாள் வாழலாம் – ஆரோக்கியத்துடன்

******

Eating Habits of Famous Authors (Post No 2505)

shelley

Written by london swaminathan

Date: 3 February 2016

 

Post No. 2505

 

Time uploaded in London :– 18-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Shelley, a vegetarian 

 

Shelley had all the sensualities of the table…….an ineffable contempt, and, like Newton, used sometimes to inquire if he had dined. He was a vegetarian, believing that abstinence from animal food stabilises and clears the intellect. Bread was his staff of life.

 

When he felt hungry he would rush into a bakery, emerge with a loaf under his arm, and stride on, rapidly breaking off pieces and swallowing them greedily.

 

While visiting Shelley, his friend Hogg once ventured to say something about a pudding. “A pudding, said Shelley, is a prejudice”. He did sometimes permit Harriet or Mary to supply a “murdered chicken” for a guest.

 

Xxx

 coffee-tea_2

Coffee or Tea

 

John Randolph, the American statesman, said to a waiter, at the same time handing him his cup and saucer, “Take that away, change it”.

 

“What do you want, Mr Randolph” asked the waiter,

“Do you want coffee or tea?”

 

“If that stuff is tea, said he, bring me coffee, if it is coffee, bring me tea. I want a change”.

 

Xxx

 thackeray

Thackeray’s longing for Oysters!

 

One of the chief reasons for Thackeray’s visit to America was his great desire to eat Massachusetts oysters. The publisher James T Fields knew of the novelist’s secret longing, and as soon as he could get Thackeray in his possession he carried him off to a magnificent oyster spread.

 

Thackeray gazed in delight at the six colossal specimens set before him. Not knowing How to begin the attack he asked his companion in a troubled voice,

“How do I do it?”

 

“This way”, said Fields promptly, and proceeded to dispatch his first oyster. Then in the midst of a profound silence Thackeray did likewise. After a moment Fields anxiously asked him how he felt. Drawing a deep breath, Thackeray replied, “As if I had swallowed a baby”.

 

Xxx

swift

Swift and Pie

 

Jonathan Swift, in travelling, called at hospitable house. The lady of the mansion, rejoiced to have so distinguished a guest, with great eagerness and flippancy asked him what he would have for dinner.

Will you have an apple- pie, sir?

Will you have a gooseberry pie, Sir?

Will you have a cherry pie, Sir?

Will you have A currant pie, Sir?

Will you have A plum pie, Sir?

Will you have A pigeon pie, sir?

 

Any pie, Madam, but a mag-pie? said Swift.

 

—–Subham——