Tamil Grammar Mistakes in Bharati’s poems!(Post No. 2601)

 

IMG_3645 (2)

Compiled by london swaminathan

Date: 5 March,2016

 

Post No. 2601

 

Time uploaded in London :–  13-35

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

Some of Bharati’s friends were discussing about some mistakes in Bharatis poems and they argued that he did not follow the rules of prosody. Somehow Bharati came to know about this gossip. Immediately he called them and asked which came first Tamil or Grammar. They were unanimous in saying that Tamil came first and then the grammar came.

Bharati said, “Good. That is right. Please allow the Tamil language to go in its own way. Le the grammar follow the langage”. All of them kept quiet and left the place. Grammar is to show the structure of a language and guide it. But it should never devour the language is the view of Bharati according to Akkur Ananthachary who narrate this anecdote in Tamil ( from the 1936 publication of A.A. ‘Bharati’s Life history’).

 

Following is the view of R Srinivasan, given in his book, Facets of Indian culture):–

Grammar can never produce good literature; rather, it may hamper it. Language is more fundamental, it is a living aspect of human intercourse; grammar is only a code, a record of certain standard forms adopted by great literary geniuses. A poet does not care a straw for our grammar, grammar may stifle a poet, and he rebels and breaks thorough the prison house of grammar into spacious realms of poetic fantasies, untrammelled by any conventional fetters.

 

Adi Shankara on Sanskrit Grammar

Great philosopher Adi Shankara also mocks at Sanskrit grammarians who involves them in heated discussions wasting their time. In his Bhaja Govindam, he says in the very first verse:-

 

Adore the Lord, Adore the Lord, Adore the Lord,

O fool! When the appointed time for departure comes, the repetition of grammatical rules will not, indeed, save you.

 

Bhaja Govindam Bhaja Govindam

Bhaja Govindam Muudhamate

Sampraapte sannihite kale

Na hi na hi raksati dukrn karane

 

–subham–

கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!(Post No. 2600)

Tiger_new

Compiled by london swaminathan
Date: 5 March,2016

 

Post No. 2600

 

Time uploaded in London :–  11-03 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

tiger you tube

டைகர் வரதாச்சாரியார் பிரபல பாடகர். இவரை ஒரு கச்சேரிக்கு அழைத்திருந்தனர். பாடகரோ கற்றுக்குட்டி; அவருக்கு வயலின் வாசித்தவரோ மஹா மேதை; இசைத்துறையில் ‘ பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’! அல்லது கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம். கச்சேரி முடிந்தது. “இப்பொழுது டைகர் அவர்கள், ஒரு சில சொற்கள் சொல்லுவார்” என்று சொல்லி அவரைப் பேச அழைத்தனர். எப்பொழுதும் சுடு சொற்களைப் பெய்தறியாதவர் அவர். ஆனால், அன்று பாடியவர் அவர் காதில் கொஞ்சம் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டார் போலும்!

 

எல்லோரையும் பொதுப்படையாக வரிசையாகப் பாராட்டினார். இறுதியில் சொன்னார். “வயலின் வாசித்தவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? நமது வயலின் மேதை ஒரு பெருங்கடல்’. ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். பெருங்கடலில் தூய கங்கை நதி போன்ற நதிகளும், சாக்கடை மணம் வீசும் கூவம் போன்ற நதிகளும் சங்கமம் ஆவது இயல்புதானே!”

 

(சென்னை வழியாக ஓடும் கூவம் நதி, சாக்கடைக் கலப்பினால் நாற்றம் அடிக்கும் நதியாக இன்று ஓடுகிறது.)

Xxx

purandara stamp

புரந்தரதாசருக்கு சவுக்கடி!

கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.

 

பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.

 

ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,

 

 

இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!

வாழ்க புரந்தரர் நாமம்!

 

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

 

My previous articles on music:- 

Ganges and Coovam Rivers in Carnatic Music! (Post No.2597) 4-3-2016

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

-subham-

பஞ்ச மாபாதகம், 5 கர்ம சண்டாளர்கள், 5 நடைப் பிணங்கள் (Post No. 2599)

dussehra-16

A Kid scared while A artist dressedup at Ravana enjoying with Spectators during Dussehra celebrations in Sector 46 of Chandigarh on Thursday, October 22 2015. Express Photo by Kamleshwar Singh

Compiled by london swaminathan

Date: 5 March,2016

 

Post No. 2599

 

Time uploaded in London :–  7-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

Already published in English; source:Encyclopaedia of Numeralas, Volume 1, The Kuppusami Sastri research Institute,Chennai 600 004, Year 2011; தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்.

 

முதல் 4 நேற்று வெளியிடப்பட்டது.

 

5.பஞ்ச நம்பக்கூடாதவர்

ஜாமாத்தா க்ருஷ்ணசர்பஸ்ச பாவகோ துர்ஜனஸ்ததா

விஸ்வாசோ நைவ கர்தவ்ய: பஞ்சமோ பகினீசுத:

ஜாமாத்தா- மாப்பிள்ளை/மருமகன்

க்ருஷ்ண சர்ப- நல்ல பாம்பு

பாவக: – தீ

துர்ஜன – கெட்டவர்கள்

பகினீ சுத: – சகோதரி மகன்

 

6.பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

7.பஞ்சநடைப்பிணம்

ஜீவந்தோபி ம்ருத: பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே

தரித்ரோ, வ்யாதிதோமூர்க: ப்ரவாஸீ நித்யசேவக:

தரித்ர – ஏழை

வ்யாதித: – நோயாளி

மூர்க: – முட்டாள்

ப்ரவாஸீ- வெளிநாட்டில் வசிப்பவன்

நித்யசேவக: – வாழ்நாள் முழுதும் வேலையாளாக இருப்பவன்

 

8.பஞ்சக்லேசம் (ஐவகைக் குறைகள்)

அவித்யா அஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேசா: பஞ்ச க்லேசா: (யோக சூத்ரம் 2-3)

அவித்யா- அறியாமை/ கல்லாமை

அஸ்மிதா – அகம்பாவம்

ராக – ஆசை

த்வேஷம் – வெறுப்பு

அபிநிவேச – எப்படியாவது உயிர்வாழவேண்டும்  என்ற எண்ணம்

anti god poster

9.பஞ்ச கர்மசண்டாளர்கள்

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–சுபம்–

 

 

காந்திஜியும் பத்திரிகையாளர்களும் (Post No.2598)

gandhi-stamps-2

Picture of Stamps on Gandhi from other countries.

Written by S Nagarajan

 

Date: 5 March 2016

 

Post No. 2598

 

Time uploaded in London :–  5-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டில்  மஹாத்மா காந்திஜியின் அணுகுமுறையே தனி.

 

1946ஆம் ஆண்டு.  முஸ்லீம் லீக் DIRECT ACTION DAY-ஐ அறிவித்திருந்தது. அப்போது கல்கத்தா நகரில் காந்திஜி இருந்தார். அவர் முக்கியமான பத்திரிகையாளர்களை அழைத்தார். நகரில் நடந்த கலகங்கள் பற்றிய ஒரு அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வேண்டினார். பெரிய அறிக்கை ஒன்றை அவ்ர்கள் தயார் செய்தனர்.

 

 

காந்திஜி நிர்மல்குமார் போஸை அழைத்தார். (இவர் அப்போது காந்திஜியுடன் சேவைக்காகத் தங்கி இருந்தார். பின்னாளில் ஷெட்யூல்ட் கேஸ்ட்ஸ் அண்ட் ட் ரைப்ஸ் கமிஷனராக டில்லியில் பதவி வகித்தார்)

 

 

அந்த அறிக்கையில் உண்மையானவற்றை மட்டும் சிவப்பு பென்சிலால் குறிக்கப் பணித்தார்.

அவர்களின் கருத்துக்களையும் ஊகங்களையும் விட்டு விடச் சொன்னார்.

 

இதை நிர்மல் குமார் போஸ் செய்தார். பின்னர் தான் அறிக்கையையே காந்திஜி கையில் எடுத்தார்.

முஸ்லீம் லீக் மந்திரிகளை அழைத்து தானே நேரடியாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வருவதாகக் கூறினார்.

அது உடனே ஏற்கப்பட நகரின் பல பகுதிகளுக்கும்

காந்திஜி சென்று பார்த்தார்.

 

Gandhi-Stamps

Picture: Gandhi stamps from foreign countries

திரும்பி வந்ததும் தன்னிடம் கொடுக்கப்பட்ட அறிக்கையில் ஏராள்மான மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் இருந்ததாகத் தெரிவித்தார்.

 

‘Razed to the ground’ – அடியோடு தரைமட்டமாக்கப்பட்டது என்று குறிக்கப்பட்ட குடிசைகளில் சுவர்கள் அப்படியே இருந்தன. சில ஜன்னல்களும், கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இதே போலத் தான் 1946இல் நவம்பர் மாதம் நவகாளிக்குச் சென்ற காந்திஜி உண்மையான அறிக்கையைத் தயார் செய்து தருமாறு வற்புறுத்தினார். பீஹாரிலும் இப்படியே சொன்னார். நவகாளி அறிக்கையை சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவர் தயார் செய்ய பீஹாரில் காங்கிரஸ் அரசே அறிக்கையைத் தயார் செய்தது.

 

 

‘உண்மையைத் தேடு’ என்பதை காந்திஜி ஒரு நாளும் விட்டுக் கொடுக்கவில்லை – முக்கியமாக பத்திரிகையாளர்களிடம்.

மனம் போன போக்கில் செய்திகளை மிகைப்படுத்தி தங்கள் ஊகங்களையும் கருத்துக்களையும் கலந்து பரபரப்புச் செய்திகளைத் தரும் போது அது சமுதாயத்திற்கு விஷத்தைத் தந்தது போல ஆகிறது!

 

 

இந்தப் போக்கை அவர் மென்மையாகக் கண்டித்தார்.

இன்று காந்திஜி நம்மிடையே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் இன்னும் மோசமாக ஆகி விஷக் கருத்துக்களையும் பொய்யையும் உண்மை போலத் தருகின்றனர்.கூடவே டி வி சானல்கள் தவறான செய்திகளை எப்போதோ எடுத்த லைப்ரரி ஷாட்டுகளை இடை இடையெ புகுத்தி மக்களைப் பயமுறுத்தி அவர்களைத் தவறான முடிவு எடுக்கத் தூண்டுகின்றன.

 

 

இப்போது இரு நாட்களாக ( மார்ச் 3,4, 2016 ) வரும் செய்திகள் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது நரேந்திர மோடியை எப்படியெல்லாம் இஷ்ரத் ஜஹான் கேஸில் ஃப்ரேம் செய்யப் பார்த்தார் என்ற திடுக்கிடும் செய்திகள் வருகின்றன.

அரசு அதிகாரிகள், நுண்ணறிவுப் பிரிவு, போலீஸ் இவற்றுடன் பத்திரிகையின் பல பிரிவினரும் இதற்குத் துணை போயிருக்கும் செய்திகளைப் பார்த்து திடுக்கிடுகிறோம்.

 

 

இனிமேல் காந்திஜி போல செய்தி அறிக்கைக்கு சிவப்பு பென்சிலால அடிக்கோடிட்டு அதில் இருக்கும் உண்மை செய்திகளை எடுக்க வேண்டியது தானோ!

 

ஆனால் நிர்ம்ல் குமார் போஸ் அல்லது அவரைப் போன்ற ஒருவர், இந்தப் பணியை இப்போது ஏற்க வந்தால், அதற்கு அவசியமே இல்லை. சிவப்பு பென்சிலே தேவை இல்லை. பல பத்திரிகைகளைக் குப்பையில் தூக்கிப் போட்டு விடலாம்’ என்று சொல்வார்.’

 

அதில் உண்மை ஏதேனும் இருந்தால் தானே சிவப்பு பென்சில் வேண்டும்!!

 

உண்மையை விரும்புவோ சிந்திக்க வேண்டும்.

அப்படிச் சிந்திப்பவர் ஏராள்மாகப் பெருகினால் சத்தியத்தைத் தேடிய அந்த மகானுக்கு உண்மையான அஞ்சலி செய்தவர்கள் ஆவோம்.

 

(குறிப்பு: நிர்மல் குமார் போஸ் எழுதிய Report for fact : A personal account என்ற கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.Univiersity of Mysore 1969ஆம் ஆண்டு வெளியிட்ட ”Gandhi and the West “ என்ற நூலின் முதல் கட்டுரை இது.)

 

******

 

Ganges and Coovam Rivers in Carnatic Music!(Post No.2597)

Tiger_new

Compiled by london swaminathan

Date: 4 March,2016

 

Post No. 2597

 

Time uploaded in London :–  16-12

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

tiger you tube

Tiger Varadachary was a famous vocalist. At a Carnatic music concert in which, by a strange turn of circumstances, a senior violin vidwan of high rank had to accompany a beginner,  Tiger Varadachariar was asked to say a few words at the end.  Tiger never uttered a word of disparagement about anyone. He complimented all the party in general terms. Bout the violinist he said: “What shall we say of our senior vidwan? His experience and knowledge are deep like an ocean. He is verily a mighty sea which receives ito its wide bosom such pure and holy rivers like the Ganges as also the gutter water of Coovam”.The implications are obvious.

 

Cooum/ Coovam was a highly polluted river in Chennai/Madras and known for its bad smell.

Xxx

 

purandara stamp

Purandaradasa flogged!

Many miracles are attributed to Sri Purandaradasa, Father of Carnatic music. His Ishta devata was Sri Vittalaraya of Pancharpur. Allowing for possible exaggerations, certain incidents may be said to be authentic. In the temple at Pandharpur, there is a Dwajasthamba (Flag Staff) called Dasarasthamba. Pilgrims entering the temple worship this pillar first before entering the holy of holies. There is an anecdote connected with this.

 

In Pandharpur there was a Devadasi (singer and dancer of the temple) who was also a true devotee of Lord Vittala. One day the Lord himself in the guise of Purandaradasa went to the dancer and desired to see her dance and hear her song. The dancer who was a great admirer of Purandaradasa as a devotee sang and danced, with self-forgetful devotion. Highly pleased with her performance the visitor presented her with a bracelet. Next morning it was found that the bracelet of the image of Lord Vittaa in the temple was missing and it came out that Purandaradasa had given it to the dancer. In spite of his entreaties Purandaradasa was dragged to the temple, tied to the post and flogged.  At that moment a Voice was heard from the inner shrine saying that it was the Lord who disguised as Purandaradasa went to the dancer, because the dasa had some little karma to work out and by that apparent disgrace and flogging Purandaradasa had been completely cleared of all old karma and became a free soul, a ‘Mukta’ . The Lord also indicated his desire that the pillar should thereafter be considered a sanctified post and named Dasarasthamba.

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990)

 

My previous articles on music:–

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

 

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

 

-subham-

பஞ்சாமிர்தம், பஞ்சாங்கம், பஞ்சகவ்யம் பஞ்சயக்ஞம் என்றால் என்ன?(Post No.2596)

buy-palani-panchamirtham-online

Compiled by london swaminathan

Date: 4 March,2016

 

Post No. 2596

 

Time uploaded in London :–  14-57

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

(Already published in English a few days ago)

 

1.பஞ்சாமிர்தம்

ஐந்து வித பொருட்களைக் கலந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் ‘ஜாம்’ பொன்ற பொருள் இது. ‘பஞ்ச’ என்றால் ஐந்து என்று பொருள்; பஞ்ச பண்டவர் என்றால் ஐந்து பாண்டவர் என்பதை ஒவ்வொரு இந்துவும் அறிவர்.

பஞ்சாமிர்தம் பற்றிய ஸ்லோகம்:-

துக்தம் சசர்கரஞ்சைவ க்ருதம் ததி ததா மது

பஞ்சாம்ருதமிதம் ப்ரோதம் விதேயம் சர்வகர்மசு (சப்தகல்பத்ரும:)

துக்தம் – பால்

சர்கரா – சர்க்கரை

க்ருதம் – நெய்

ததி – தயிர்

மது – தேன்

தற்காலத்தில் இத்துடன் பலவகை பழங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

 

urine of cow

2.பஞ்சகவ்யம்

கோமூத்ரம், கோமயம், க்ஷீரம் ததிசர்பிஸ்ததைவ ச

கவாம் பஞ்ச பவித்ராணி புனந்தி சகலம் ஜகத் —(சப்தகல்பத்ரும:)

 

கோ மூத்ரம் – பசுவின் மூத்திரம்

கோ மயம் – சாணி

க்ஷீரம் – பால்

ததி – தயிர்

சர்பி – நெய்

Cow-Urine-Article

3.பஞ்சாங்கம்

ஐந்து அங்கம் என்பது இதன் பொருள்; அவையாவன: திதி, நட்சத்திரம், வாரம், யோகம், கரணம்

திதி- ஒரு மாதத்தை இரண்டு பகுதிகளாக பிரித்திருக்கிறோம்; பிரதமை (முதல்) திதி முதல் 15ஆவது நாள் அமாவாசை வரும். மீண்டும் பிரதமை முதல் கணக்கிட்டு 15 ஆவது நாள் பௌர்ணமி வரும். சுருக்கமாகச் சொல்லப்போனால் சந்திரனனின் நிலை.

வாரம்: ஞாயிறு முதல் சனி வரையுள்ள ஏழு நாட்கள் அல்லது கிழமைகள்.

நட்சத்திரம்:- நிலவு அதன் வட்டப்பாதையில் எந்த நட்சத்திரத்துடன் கூடியிருக்கிறதோ (உண்மையில் கூடியிருப்பதாகத் தென்படுகிறதோ) அது அந்த நாளின் நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன.

யோகம்:- சேர்க்கை என்று பொருள்; இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கைக் காலம். ஒரு கிழமையும், ஒரு நட்சத்திரமும் கூடும் போது அது நல்லதா, கெட்டதா (அமிர்த யோகம், மரண யோகம், சித்த யோகம்) என்று அறிய உதவும். இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ளதால் 27 யோகங்களிலெது என்றும் சொல்லலாம்.

கரணம்- திதியில் பாதி

panchangam

4.பஞ்சயக்ஞம்

பிரம்மயக்ஞோ ந்ருயக்ஞஸ்ச தைவயக்ஞஸ்ச சத்தம

பித்ருயக்ஞோ பூத யக்ஞ: பஞ்சயக்ஞ: ப்ரகீர்திதம்

பிரம்ம யக்ஞம் – வேத பாராயணம்

நர யக்ஞ – ஏழைகளுக்கும், விருந்தினர்களுக்கும் உனவு படைத்தல்

தைவ யக்ஞம்- இறைவனுக்குப் படைத்துவிட்டு உண்ணுதல்

பித்ருயக்ஞம் – தென்புலத்தார்க்கு நீர்க்கடன் செலுத்தல் (முற்காலத்தில் தினமும் செய்தனர். இப்பொழுட்து ஆண்டுக்கு 12 முறை முதல் 96 முறை வரை செய்கின்றனர்)

பூதயக்ஞம்: – எறும்பு முதல் யானை வரைக்கும் உணவளித்தல்; குறிப்பாக பசு மட்டுக்கு இலை, தழை அளித்தல்

மனு தர்ம சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் (எண் 43) காண்க.

5mahayagna

–சுபம்–

பத்திரிகையில் புல்லுருவிகள் (Post No.2595)

weeds

Written by S Nagarajan

 

Date: 4 March 2016

 

Post No. 2595

 

Time uploaded in London :–  8-55 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

 

பத்திரிகையில் புல்லுருவிகள்

 

ச.நாகராஜன்

Weed-spiky

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை. இதன் சுதந்திரத்தைக் காக்க அஞ்சாமல் பல கஷ்டங்களை மேற்கொண்டவ்ர்கள் பலர்.

 

எடுத்துக்காட்டாக ராம்நாத் கோயங்காவைச் சொல்லலாம்.

 

இந்தியாவில் அநியாயமாக எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் உண்மை நிலை எதையும் வெளியிட முடியாத் நிலை உருவாயிற்று. தணிக்கை முறை அமுலுக்கு வந்தது.

 

ஆனால் அஞ்சா நெஞ்சர் கோயங்கா கடுமையாக அவசர நிலையை எதிர்த்தார். இந்தியந் எக்ஸ்பிரஸ்,தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளில் தலையங்கம் தீட்டினால் அது தடை செய்யப்பட்டது. அந்த இடம் முழுவதும் கறுப்பால் நிரப்பப்பட்டது -எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம்.

 

கோயங்காவிற்கு நெருங்கியவர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவானவர்கள் அவரிடம் ஆலோசனை கூறினர்.

“எதற்காக இந்த எதிர்ப்பு? அந்த அம்மையாரின் ஆட்கள் உங்களிந் வேட்டியை உருவி விட்டு விடுவார்கள்” என்றனர்.

 

சிரித்தார் கோயங்கா. மற்றவர்கள் திகைத்தனர்.

 

“நான் எப்படி உருவானவன் தெரியுமா? உடுக்க ஒன்றுமில்லாமல் தெருவில் அலைந்து திரிந்து கிடைத்ததைச் சாப்பிட்டவன். இதெல்லாம் என் கடிந உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசு. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேட்டியை உருவி விட்டால் பழைய நிலை வந்தது என்று சந்தோஷப்படுவேன்” என்றார்.

 

அனைவரும் அவரது தீரமான வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்தனர்.

 

அவசரநிலை காலத்தில் ஒவ்வொரு செய்தியையும் அவரே பார்த்துப் பார்த்து வெளியிட்டார். அஞ்சவில்லை.

இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களாளும், தேச பக்தர்களாலும், தேசீயத் தலைவர்களாலும் அவசர நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

தேசம் பிழைத்தது.

goenka

தேர்தல் வந்தது. இந்திரா காந்தி அவமானகரமாகத் தோற்றார். தன் தவறை உணர்ந்ததாக அவர் கூறினார்.

அதற்குக் காரணங்களுள் ஒன்று: இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ப்த்திரிகைகள் என்பதை வரலாறு இன்று வரை கூறுகிறது. நாளையும் கூறும்.

 

ஆனால் இன்றைய நிலை?

 

இந்தியாவிற்கு எதிராக நினைத்ததை எழுதும் சூழ்நிலை. தேசத் துரோகிகளுக்குத் துணை போவது, தேசத்தின் ந்லனுக்கு உகந்தவற்றைத் தெரிவிக்காமல் மறைப்பது, முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த செய்திகளை மிகைப்படுத்தல், ஹிந்துக்களை கேவலப்படுத்த காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் அவர்களின் பாதிப்புகளை  வெளியிடாமல் இருத்தல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய நிலைக்கு எதிராக பகிரங்கமாக ஆதரவு அளித்தல், இத்யாதி இத்யாதி!

 

இவற்றையெல்லாம் பணத்திற்காகவும் அல்லது ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும் செய்வது அழகா? இந்தப் புல்லுருவிகளை மக்கள் இனம் காண்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசும் உச்ச நீதி மன்றமும் ஏதாவது செய்ய வேண்டாமா?

 

கருத்துச் சுதந்திரம் என்பது பேணி வள்ர்க்கும் தேச சுதந்திரத்தை பலி கொடுக்க பயன்படுத்தக் கூடாது.

இப்படிச் செய்பவர்களை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே தாமாகவே முன் வந்து வழக்கைப் பதிவு செய்து உரிய தண்டனைய அவர்கள் குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் விதிக்கலாமே!

 

நாங்கள் தான் பத்திரிகை மற்றும் டிவி சானல்கள் பற்றி குறைகள் இருந்தால் அதைத் தெரிவிக்க வடிகால் அமைத்திருக்கிறோமே என்பது போதாது.

உடனடி நடவடிக்கையை அரசும் போலீசாரும், நீதி மன்றமும் உடனே எடுக்க வேண்டும்.

 

இதுவே உண்மையான ஜனநாயகவாதியாகவும் தேச சுதந்திரத்தில் அக்கறையுமுள்ள் ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கிறது.

 

நண்பர்கள் அனைவரும் ஃபேஸ் புக் உள்ளிட்ட பதிவுகளில் வெகு ஜன எழுச்சியாக இந்த பத்திரிகைகள், டி வி சானல்கள் பற்றி நிறைய உண்மையான செய்திகளைப் பரப்பி விட்டால் இவர்களின் முகத்திரை கிழியும்.

 

ஆனால் இவர்களைப் பற்றிய உண்மையான செய்திகளை ஆதாரங்களுடன் தருதல் மிக முக்கியமானது. செய்வோம்; சுதந்திரம் காப்போம்! தேச துரோகிகளுக்கு இங்கு இடமில்லை என்பதைத் தெளிவு படுத்துவோம்.

 

அடுத்த கட்டுரையில் மகாத்மா காந்திஜி பத்திரிகையாளர்களை கலவரங்கள் நடந்த சமயத்தில் எப்படி அணுகினார் என்பதைப் பார்ப்போம்.

மாமனிதர் கோயங்காவின் நினைவுக்கு அஞ்சலியோடு இந்தக் கட்டுரையை முடிப்போம்

******

 

If England leave India………(Post No. 2594)

ilove my india

Compiled by london swaminathan

Date: 3 March,2016

 

Post No. 2594

 

Time uploaded in London :–  14-56

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

Harold Laski (British political theorist and economist) has this story to tell:-

I discussed recently with a Hindu I knew – a man of great culture- the question of Indian Independence.

“If England were to withdraw from India,” I said, “wouldn’t the country relapse into a state of anarchy – much like what it was in the 18th century when Clive and Hastings laid the foundation of the British Raj?

 

My friend assented sadly, “Yes, I suppose you are right.”

 

“And that would be followed by a tyranny, or several tyrannies, would it not?”

“Yes, probably”.

And the pendulum would swing back to the anarchy again?”

“Yes”, he said, “yes, I am afraid it would!”, “but it will be our tyranny and our anarchy!’

ilaskih001p1

Harold Laski

–From the Thesaurus of Anecdotes (published before Indian Independence)

மார்ச் 2016 காலண்டர் (மன்மத ஆண்டு மாசி/பங்குனி) Post No.2593

siva's 12 shrines

சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2593

 

Time uploaded in London :–  9-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

முக்கிய நாட்கள்:- 7 சிவராத்திரி, 9 சூர்ய கிரஹணம், 14 காரடையான் நோன்பு, 22- ஹோலி/காமன் பண்டிகை, 23 பங்குனி உத்தரம், 25 புனித வெள்ளி, மேலை நாடுகளில் ஈஸ்டர் விடுமுறை 25 முதல் 28 முடிய.

 

முகூர்த்த நாட்கள்:- 6, 10, 11,18, 25

அமாவாசை:- 8/9

பௌர்ணமி:- 22/23

ஏகாதசி:- 5, 19

 

sivaya nama

மார்ச் 1 செவ்வாய்க்கிழமை

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்

உடல்நலம் பெற சூரியனை வழிபடுக

மார்ச் 2 புதன்கிழமை

அம்போஜினீ லோசன முத்ரணம்  கிம் பானு அவனஸ்தங்கமிதே கரோதி-மிருச்சகடிகம் 10-58

சூரியன் மறையாத போது தாமரை மலர் கண்களை மூடுமா? (குவியுமா)

மார்ச் 3 வியாழக்கிழமை

இந்தனம் அப்கதக்த அபி அக்னி: த்விஷா நாத்யேதி பூஷணம் –சிசுபாலவதம் 2-23

பெரும் விறகுக் குவியலைக் கொண்டு ஜகஜ்ஜோதியாக எரியவிட்டாலும், சூரிய ஒளியை விஞ்ச முடியாது.

மார்ச் 4 வெள்ளிக்கிழமை

சூரியனைக் கண்ட பனி போல

சூரியனைக் கண்ட இருள் போல

மார்ச் 5 சனிக்கிழமை

செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல

 

 

மார்ச் 6 ஞாயிற்றுக்கிழமை

அப்ராத் விமுக்தஸ்ய திவாகரஸ்ய மரீசய: தீக்ஷ்ணதரா பவந்தி- சுபாஷிதரதனாவளி

மேகமில்லாத நாட்களில் வெய்யில் அதிகம் சுடும்.

மார்ச் 7 திங்கள் கிழமை

உதயந்தம் சூர்யம் சர்வே ப்ரணமந்தி

உதய சூரியனை எல்லோரும் வணங்குகின்றனர்.

மார்ச் 8 செவ்வாய்க்கிழமை

சூரியனைக் கண்ட தாமரை போல

மார்ச் 9 புதன்கிழமை

உதிதே ஹி சஹஸ்ராம்சௌ ந கத்யோதோ ந சந்த்ரமா – சுபாஷித ரத்னகண்டமஞ்சுஷா

சூரியன் உதித்து விட்டால், மின்மினிப்பூச்சியுமில்லை, சந்திரனுமில்லை!

மார்ச் 10 வியாழக்கிழமை

சூரியனுக்கு முன் மின்மினி  போல

 

siva girl

மார்ச் 11 வெள்ளிக்கிழமை

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல

மார்ச் 12 சனிக்கிழமை

சூர்யாபாயே ந கலு கமலம்  புஷ்யதி ஸ்வாமபிக்யாம் – மேகதூதம் 2-18

சூர்யன் அஸ்தமித்தபின்னர், தாமரையின் அழகு அதிகரிக்காது

மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமை

சூர்யே தபதி ஆவரணாய வ்ருஷ்டே: கல்பேத லோகஸ்ய கதம் தமிஸ்ரா – ரகுவம்சம் 5-13

சூரியன் பிரகாசிக்கையில், அடர்ந்த மேகத்தினால் வந்த இருள், நம் பார்வையை மறைக்க இயலுமா?

மார்ச் 14 திங்கள் கிழமை

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரிநாடன் திகிரிபோல், பொன்கோட்டு

மேரு வலந்திரிதலான் (சிலப்பதிகாரம்)

மார்ச் 15 செவ்வாய்க்கிழமை

ஆனால் ஆதிவாரம், ஆகாவிட்டால் சோமவாரம் (ஆதிவாரம்=ஞாயிற்றுக்கிழமை)

holi,ht

 

மார்ச் 16 புதன்கிழமை

வர்ஷணம் அனுசரதி சூர்யா தப:

மழைக்குப்பின், சூரியனின் ஆட்சிதான்.

மார்ச் 17 வியாழக்கிழமை

சஹஸ்ரகுணம் உத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரஸம் ரவி: – ரகுவம்சம் 1-18

கதிரவன் (கடல்) நீரை உறிஞ்சுவது

ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்குத்தான்!

மார்ச் 18 வெள்ளிக்கிழமை

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

ஓ அற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி- (திருமுருகாற்றுப்படை).

மார்ச் 19 சனிக்கிழமை

சூர்யஸ்ய கிம்  தீப ப்ரதர்சனேன – கஹாவத்ரத்னாகர்

சூரியனைக் காட்ட விளக்கு தேவையா?

மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது, நண்டு வேண்டாம், சாறு விடு.

 

dj-06-holi-02

 

மார்ச் 21 திங்கள் கிழமை

ரஜஸா ரவிர்  அபிபூயதே நஹி – கஹாவத்ரத்னாகர்

தூசிப்புயலால், சூரியனை வெல்லமுடியாது.

மார்ச் 22 செவ்வாய்க்கிழமை

சூரியன் எழுமுன் காரியம் ஆடு.

மார்ச் 23 புதன்கிழமை

சூரியனைக் கிரகணம் பிடித்தது போல, என்னைச் சனியன் பிடித்தான்.

மார்ச் 24 வியாழக்கிழமை

ருதே ரவே: க்ஷாலயிதும் க்ஷமேத க:

க்ஷபாதமஸ்காண்டமலீமசம் நப: – சிசுபாலவதம் 1-38

இருள் சூழ்ந்த ஆகாயத்தைச் சுத்தம் செய்து, விளக்கம்பெறச் செய்ய சூரியனைத் தவிர யாருக்கு இயலும்?

மார்ச் 25 வெள்ளிக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையை மறைப்பாரில்லை

pasupathinath,nepal

 

மார்ச் 26 சனிக்கிழமை

தாரா நைவ ப்ரகாசந்தே  பானௌ பாதீஹ பாஸ்வரே – கஹாவத்ரத்னாகர்

சூரியன் இருக்கையில் விண்மீன்கள் கண்சிமிட்டாது

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை

க: ப்ரதீபோ ரவே: புர:?- கதா சரித் சாகரம்

சூரியனுக்கு முன் விளக்கு எதற்கு!!!

மார்ச் 28 திங்கள் கிழமை

தமஸ்தபதி கர்மாம்சௌ கதம் ஆவிர்பவிஷ்யதி – சாகுந்தலம் 5-14

சூரியனிருக்கையில் இருள் ஏது?

மார்ச் 29 செவ்வாய்க்கிழமை

க: சக்த: சூர்யம் ஹஸ்தேனாச்சாதயிதும்?

–அவிமாரக

சூரியனைக் கையால் மறைக்கமுடியுமா?

 

holi-hand

மார்ச் 30 புதன்கிழமை

சூரியவிளக்கு இருக்க சுடர் விளக்கு எதற்கு?

மார்ச் 31 வியாழக்கிழமை

சூரியன் முன்னே சந்திரன் தோன்றினது போலே

(சம்ஸ்கிருதப் பழமொழிகளின் தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

–சுபம்–

 

தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை (Post No. 2592)

IMG_9769 (2)

Written by S Nagarajan

 

Date: 3 March 2016

 

Post No. 2592

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

amma

நையாண்டி மடல் எண் 3

முட்டாள்கள் முன்னேற்ற சங்கம்: எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! ஆங்கிலத்தில் பிடித்த ஒரே வார்த்தை CUTTING!!

.நாகராஜன்

 

 

என் இனிய முட்டாள்களே!

ஒரு அவசர விஷயமாக இந்த மடலை எழுத வேண்டியுள்ளது. அது அவசியமும் கூட என்பதை இந்த மடலைப் படித்து முடிக்கும் முன்னர் அறிந்து கொள்வீர்கள்!

 

நிதி! கழகத்திற்கு நிதி! எனக்கல்ல; நமக்கல்ல! கழகத்திற்கு!

 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு என்றான் ஐயன்! அதற்கு என்ன பொருள்? காசு வேண்டும் இங்கே பிழைப்பதற்கு என்று பொருள். அதற்கு முன்னர் ஐயன் கூறியது அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை!

 

இதற்கான உரையைக் குல்லுக பட்டர்களும் கோமாளி ஆசாரியர்களும் கொக்கரிக்கும் சாணக்கியர்களும் தவறாகச் சொல்லி இருப்பதை இங்கு நான் கண்டிக்கிறேன். இவ்வுலகம் தவிர இன்னும் ஒரு மறு உலகம் எப்படி இருக்க முடியும்? ஆக பொருள் பற்றிக் கூறும் ஐயன் கூற வந்தது தான் உண்மையில் என்ன? மாற்றிப் படியுங்கள்! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அவ்வுலகம் அருள் இல்லார்க்கு இல்லை! பொருள் இல்லை என்றால் இவ்வுலகில் பிழைப்பு ஓடாது. அந்த உலகில் பொருள் இல்லாவிடில் பொருளின் அருளும் இல்லாமல் போய் விடும். அதாவது உங்களுக்கு அதன் விளைவாகக் கிடைக்க வேண்டிய ‘சம்திங்’ கிடைக்காது! (இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஐயனுக்கு அரிய உரை ஒன்றை எழுதியுள்ளேன். விலை இருநூறு ரூபாய் மட்டுமே! கழக அலுவலகத்தில் பணமாகக் கொடுத்து நிறைய பிரதிகள் வாங்குங்கள்! நீங்கள் படித்தீர்களா என்று நான் கேட்கவே மாட்டேன்,  பணம் கொடுத்தீர்களா என்று மட்டுமே கேட்பேன், அது உங்களுக்கே தெரியும்!)

Word Cutting On Button With Hand Pushing

Word Cutting On Button With Hand Pushing

ஆக கழகத்திற்கு அந்தப் பொருள் – நிதி வேண்டும்! ஆரம்ப காலத்திலிருந்தே நான் செல்வத்தின் மீது கொண்டிருக்கும் பற்று உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும்!

 

என்னிடம் நிதி தாருங்கள்! ஆனால் கணக்கு மட்டும் கேட்காதீர்கள். மு.மு,க ஆரம்பிக்கும் முன்னர் பழைய நாட்களில் என்னிடம் கணக்குக் கேட்டவர் என்னைப் படுத்திய பாடும் நான் அவரைப் படுத்திய பாடும் நாடறியும்; ஏடறியும்; நல்லோர் அறிவர்.

 

ஆகவே இனி இன்னொருவர் இந்தத் தவறைச் செய்யாதீர்கள்; தறி கெட்டுப் போகாதீர்கள் என்று உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

 

கழகக் கூட்டங்களில் மாலை போடும் கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது நான் தான்! ஆனால் இன்று என்ன  நிலை! அந்தக் காலத்தில் ஐம்பது காசுகளுக்கு மாலைகள் கிடைக்கும்; இன்றோ அதன் விலை ஐநூறு ரூபாய்! அடேயப்பா. ஆகவே வேண்டாம் இந்த மாலைகள். காசுகளாகவே கொடுத்து விடுங்கள். யாரிடம் கொடுப்பது என்று மயங்காதீர்கள். மலைக்காதீர்கள். மேடையிலே என் கண் முன்னே இருக்கும் நிதிச் செல்வனிடம் மட்டுமே கொடுத்து விடுங்கள். கொடுத்த விவரத்தை ஒரு கார்டிலும் எழுதிப் போட்டு விடுங்கள். மொத்தக் கணக்கை நானே சரி பார்த்துக் கொள்வேன்.

 

துண்டுகள், பட்டுச் சால்வைகளா! பரவாயில்லை. அதை மறு சுழற்சி செய்யத் தனி பிரிவு ஒன்று அமைத்துள்ளேன். ஆகவே துண்டுகள் விற்கும் நமது பிரிவிலே மட்டுமே வாங்குங்கள்! விலையை மற்ற கடைகளோடு ஒப்பிடாதீர்கள்! என் செயல்களை மற்றவரோடு ஒப்பிடுவது என்றுமே எனக்குப் பிடிக்காது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 

செல்வத்தில் சிக்கல் ஏறப்டக்கூடாது, நிதியில் நெருக்கடி ஏற்படக் கூடாது என்று என் அருகில் இருக்கும் பெயர்களில் எல்லாம் செல்வத்தைச் சேர்த்திருக்கிறேன். கலைச் செல்வம், கவிதைச் செல்வி என்றும் பல நிதிகளைப் பெயர்களிலும் நான் சேர்த்து வைத்திருப்பதை வீடறியும்; நாடறியும்; நீங்களும் அறிவீர்கள். நிதி நெருக்கடி வராத ஒரு அபார வழியை நான் இப்படிக் கண்டுபிடித்திருக்கும் அரிய செயலை, புதிய முறையைக் கண்டு அமெரிக்க நிதி ஆய்வாளர்களே வியக்கின்றனர்; வீறு கொண்டு இது போலச் செயலாற்ற விழைகின்றனர்.

amma2

இனி என் கதவைத் தட்டுங்கள்  நிதியைக் கொட்டுங்கள்.

ஒன்றே ஒன்றைக் கூறி இந்த மடலை முடிக்கிறேன்.

 

தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அம்மா! அட, அப்புறம் பெற்றவளை எப்படி அழைப்பது என மருகாதீர்; மயங்காதீர். தாய் என்று அழையுங்கள். தங்கம் நிகர் அன்னை என்று ஆர்ப்பரியுங்கள்!!

 

அம்மா உணவு போட்டாள்; அம்மா சைக்கிளில் ஏறச் சொன்னாள்; அம்மா லேப் டாப்பில் படிக்கச் சொன்னாள். அம்மா மருந்தை வாங்கச் சொன்னாள்; அம்மா பேனை போடச் சொன்னாள் என்று சொன்னால் என் ப்ளட் பிரஷர் எகிறுகிறது. ஆகவே தாய் என்று சொல்லி, தலைவன் இவனைக் காத்திடுங்கள்.

 

ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை கட்டிங்! இது இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா! இதை எப்படி நான் முறைப் படுத்தி, வகைப் படுத்தி உங்களையும் என்னையும் வாழ வைத்துள்ளேன் என்பதற்கு தனி ஒரு மடல் தேவை. அது வரை பொறுத்திருங்கள்!

 

மறந்து விடாதீர்கள்; நிதி அளிக்க; சாதியினால் இதைக் கேட்கவைல்லை; நீதியினால் கேட்கிறேன் என்பது உங்களுக்கே நன்கு தெரியும்.

 

என் இனிய முட்டாள்களே! தம்பிக் கரும்புகளே! இனிப்பான நிதியை இன்றே வழங்குங்கள் என்ற  சுயநலமற்ற சின்ன ஆசையைச் சொல்லி நீங்கள் வேண்டி விரும்பி எழுதப் பணித்த இந்த மடலை முடிக்கிறேன்.

நீதி நிலைக்கட்டும்; நிரம்ப்பட்டும் எ கஜானா!

 

அன்பு

மு.க. த.

முட்டாள்கள் கழகத் தலைவர்