வேதங்களில் எண் 17 ஒரு ரஹசிய எண்! (Post No.3919)

Research article Written by London Swaminathan

 

Date: 18 May 2017

 

Time uploaded in London: 16-43

 

Post No. 3919

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I have already posted the English version of this article yesterday)

 

வேதங்களை சங்க காலத் தமிழர்கள் மறை என்று அழகாக மொழி பெயர்த்தனர். ஏனெனில் நிறைய ரஹசியங்கள் நிறைந்தவை. மறை என்றால் மறைவான பொருளுடைத்து. அதனால்தான் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் வேதத்தின் அர்த்ததைப் பற்றிக் கவலைப்படாமல் அதை சொல்லி வாருங்கள்; அந்த மந்திர சப்தமே பலன் தரும் என்பர்; அது மட்டுமல்ல ஒரு அழகான கதையும் சொல்லுவார்.

 

ஒரு கண் தெரியாத குருடன் விளக்கை எடுத்துச் சென்றதைப் பார்த்து எதிரே வந்தவர்கள் பரிகசித்தனராம். அவன் அவர்களைப் பார்த்து,எனக்கு கண் தெரியாதது உண்மையே; உங்களைப் போன்றோர் இருட்டு நேரத்தில் என் மீது மோதி விடக் கூடாதல்லவா? என்றானாம்.

 

இதே போல நாம் வேதத்தின் பொருள் விளங்காத, அந்தகர்களாக இருந்தாலும், வேதம் என்னும் விளக்கை- ஞான தீபத்தைக் கையில் ஏந்திச் சென்றால் — எதிர்காலத்தில் ஆதி சங்கரர் போன்ற ஒரு தீர்க்கதரிசி தோன்றி உலக மக்களை உய்விப்பர் என்னும் கருத்து வரும்படி காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் 91894-1994) அருள்மொழி வழங்கியுள்ளார்.

 

வேதத்தின் பொருளை விளக்க முற்பட்ட, மொழிபெயர்க்க முன்வந்த வெளிநாட்டுக்காரகள் வரிக்கு வரி இந்துக்களைக் குறை கூறுவர். அந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஒரே சிரிப்பாக வரும். அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை உளறுவாயன் உளறல் என்று சொல்லுவதா அல்லது தமாஷ் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இதை நீங்களே கண்டு பிடிக்கலாம்.

 

ஒரு குறிப்பிட்ட மந்திரத்துக்கு ஒவ்வொரு ஐரோப்பியரும் என்ன பொருள் சொல்லுகின்றனர் என்று அருகருகே வைத்துப் பார்த்தால் குபீரென்று சிரித்து விடுவீர்கள். புத்தரும் ஆரிய என்ற பதத்தைப் பிரயோகித்தார்; சங்க இலக்கியப் புலவர்களும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பாரதியாரும் ஆரிய என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவர்கள் அனவரும் கனவான்கள், பண்பாடுடையோர், முனிவர்கள், இமயமலை வாழ் மக்கள் என்ற பொருளில் பயன்படுத்தினர். ஆனால் வெள்ளைக்கார்கள் மொழி பெயர்ப்பு முழுவதிலும் ஆரியர் என்பது ஒரு இனம் என்று மொழிபெயர்த்து அதற்கு அடுத்தவரியில் இது திராவிடர்களுக்கு எதிரானது என்று சேர்த்து இருப்பர். இந்தப் பொருள் எந்த இந்திய இலக்கியத்திலும் இல்லாதது.

எங்கெல்லாம் அவர்களுக்குப் பொருள் தெரியவில்லையோ அங்கெல்லாம் இது ஆரியர்களின் உளறல் (gibberish) என்றும் ஒரு வரி சேர்ப்பர்; சில இடங்களில் இது யாருக்கும் பொருள் விளங்காத விஷயம் (obscure) என்பர். உண்மையில் வேதம் முழுதும் அடையாள பூர்வமாக, சங்கேத (symbolism) மொழியில் பல விஷயங்களைச் சொல்ல வந்த நூல். பிற்காலத்தில் தமிழில் அப்பர், திருமூலர், சிவ வாக்கியர் போன்ற பெரியோரின் பாடல்களில் இப்படி எண்களைப் பயன்படுத்துவதைக் காண லாம். அறிஞர் பெருமக்களின் வியாக்கியானத்தால்தான் அவைகளின் உட்பொருளை நாம் அறிய முடியும்..

வேதத்தில் உள்ள எவ்வளவோ ரஹசியங்கள் பற்றி பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இன்று 17 என்ற மாய எண்ணின் குறிப்புகளைக் காண்போம்.

 

யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சமகத்தில் இப்படி எண்களை அடுக்கிக் கொண்டே போவர். உலகின் மிகப் பெரிய எண்கள் பிராமண நூல்களில் உள்ளன. அதற்குப் பின்னர் அதை சமண பௌத்த நூல்கள் செப்பின. தசாம்ச (Decimal, Binary) முறையை உலகிற்குக் கற்பித்து பூஜ்யம் என்ற எண்ணை உருவாக்கி உலகில் கம்யூட்டர் மொழியை உருவாக்க உதவினர். ஆனால் எண் 17 என்று எதற்காக ஒரு விநோத எண்ணைத் திரும்பத் திரும்ப குறிப்பிடுகின்றனர் என்று தெரியவில்லை. இதுபற்றி யஜூர் வேத தைத்ரீய சம்ஹிதையில் குறைந்தது ஆறு ஏழு இடங்களில் வருகிறது

 

பிரஜாபதியின் எண் 17 என்று ஒரு இடத்தில் சொல்லுவர்.

 

ஆறு, குளம், ஏரி, கடல், மழை நீர் முதலிய இடங்களில் இருந்து யாகத்துக்கு நீர் கொண்டு வரவேண்டும் என்ற பட்டியலில் 17 நீர்நிலைகள் என்று முடிப்பர்.

 

 

யாகங்களுடன் இணைந்தது குதிரை பூட்டிய தேர் பந்தயம் ஆகும் . இதில் ஒரு வீரன் 17 அம்புகள் எய்தி இடத்தைக் குறிப்பான் என்று வருகிறது

அப்பொழுது 17 டமாரங்கள் முழங்க வேண்டுமாம்.

 

இன்னும் ஒரு மந்திரம்:

 

ஒரு அசைச் சொல்லுடன் அக்னி வாக் (பேச்சு)கை வென்றான்

இரு அசைச் சொற்களுடன் அஸ்வினி தேவர்கள் உற்சாகத்தை வென்றனர்

விஷ்ணு மூன்று அசைச் சொற்களுடன் மூவுலகத்தை வென்றார்

சோமா நான்கு அசைச் சொற்களுடன் காலநடைகளை வென்றார்

பூசன் ஐந்து பங்க்தியை வென்றார்

பிரஜாபதி 17  சொற்களுடன் 17 மடங்கு ஸ்தோமாவை வென்றார்.

 

இப்படிப் பல மந்திரங்கள்!

 

யாகத்தில் 4 முக்கிய புரோகிதர்கள், அவர்களுக்கு உறுதுணையானோர் நால்வர், அவர்களுக்குப் பல வகைகளில் எடுபிடி வேலை செய்வோர்– என்று 17 பேரைச் சொல்லுவர்.

17 என்பது ஒரு மர்மமான எண்!

 

“தமிழில் பழ மறையைப் பாடுவோம்” என்று பாரதி முரசு கொட்டினான். “வேதம் என்று வாழ்க வென்று கொட்டு முரசே” என்றான் பாரதி.

 

நாமும் முடிந்தவரை வேதத்தை வாழ்த்துவோம். அது நம்மை வாழ்த்தும்; வாழ்விக்கும்.

-சுபம்-

 

நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5 (Post No.3918)

Written by S NAGARAJAN

 

Date: 18 May 2017

 

Time uploaded in London:-  5-53 am

 

 

Post No.3918

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

மிட்டா முனிசாமி செட்டி (1897)யின் விதி விளக்கம் நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டு தரப்படுகிறது. நூலின் பகுதிகள் படிப்பதற்கு ஏதுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதல் 4 அத்தியாயங்களைப் படித்து விட்டு இதைத் தொடரவும் 

1934ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ள் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும் – விதி விளக்கம் – 5

ச.நாகராஜன்

 

  1. ராகுவும் கேதுவும்

 

      சந்திரன் மற்ற கிரகங்களை விட பூமிக்கு வெகு அருகில் உள்ளது. ஆகவே முன்னோர்கள் விதி விளக்கத்திற்குச் சந்திரனை முக்கிய காரணமாக அங்கீகரித்திருக்கின்றனர். சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் கும்ப மாதத்திலிருந்து கடக மாதம் வரை – அதாவது மாசியிலிருந்து ஆடி மாதம் வரை அருக்கன் வீதி அல்லது சூரியன் பாதைக்கு வடக்கிலோ அல்லது மேற்கிலோ சந்திரனின் வீதி இருக்கும்.

சிங்க மாதம் முதல் மகர மாத ஆரம்பம் வரை – அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை – சூரியன் பாதைக்குத் தெற்காக அல்லது கீழ்புறமாக சந்திர வீதி அமையும்.

ஆவணி முதல் தை வரை சந்திரனுக்கு வலிமை கிடையாது.

ஆகவே தான் ஆவணிக்குப் பிறகு ஹிந்துக்கள் சாதாரணமாக விவாகம் செய்வதில்லை.

 

மேலே கூறிய சூரியன் பாதையும் சந்திரன் பாதையும் சந்திக்கும் நிலைகள் இரண்டு. அவையாவன வடக்கு சந்திப்பு ஒன்று; மற்றொன்று தெற்கு சந்திப்பு.

வடக்கு சந்திப்புக்கு ராகு நிலை என்றும் தெற்கு சந்திப்புக் கேது நிலை என்றும் பெயர்கள் நம் முன்னோரால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ராகுவும், கேதுவும் கிரகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே தான் கிரகங்கள் ஒன்பதென்று ஏற்பட்டிருக்கின்றன.

பூமியானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாக வானியல் சாஸ்திரப் படி சுழன்று வருவதினாலும் சூரியனைச் சுற்றி வருவதினாலும் மேற்காட்டிய சந்திப்புகளின் இடம் ராசிக்கு ராசி மாறிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மாறுவதால் ஒரு குறிப்பிட்ட ராசியிலிருந்து மறுபடி அந்த ராசிக்கு ராகு வருவதற்கு சுமார் 18 வருடம் 7 மாதம் ஆகிறது.

  • சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் போதும்,
  • ஒவ்வொரு நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போதும்
  • அந்தந்த நட்சத்திரத்தின் இயற்கை அமைப்பின் இயல்பினாலும்
  • தற்கால நிலைமையினாலும்

மானிடரின் விதி விளக்கமாகிறது.

எந்த கிரகத்தின் அதிகாரம் நடக்கிறதென்று அறிந்து அந்தந்த நட்சத்திரங்களுக்கு  அந்த கிரகத்தின் திசை நடப்பு என்று அனுஷ்டானத்தில் வைத்துக் கொண்டு தற்கால விதியை விளக்கலாமென்று கொண்டு கீழ் வருமாறு திசையை நிர்ணயித்திருக்கின்றனர்:

 

அசுவதி  மகம்  மூலம்                      கேது 7 வருடம்

பரணி  பூரம் பூராடம்                    சுக்கிரன் 20 வருடம்

கார்த்திகை  உத்திரம் உத்திராடம்         சூரியன்  6 வருடம்

ரோகிணி  ஹஸ்தம் திருவோணம்        சந்திரன் 10 வருடம்

மிருகசீரிஷம் சித்திரை  அவிட்டம்       செவ்வாய் 7 வருடம்

திருவாதிரை ஸ்வாதி சதயம்              ராகு    18 வருடம்

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி              குரு    16 வருடம்

பூசம் அனுஷம் உத்திரட்டாதி               சனி   19 வருடம்

ஆயில்யம் கேட்டை ரேவதி               புதன்   17 வருடம்

                                              ————-

        மொத்த வருடங்கள்                     120

                                              ————-

மேலே காட்டிய திசை பலன் விதி விளக்கத்திற்கு மூலாதாரமாக அமைகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் சகல அனுஷ்டானத்திற்கும், அனுபவத்திற்கும் சரிவர வருவது சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தினால் ஏற்படும் திசை தான்.

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்:

அதாவது, அசுவதியில் பிறந்தவனுக்கு கேது திசை. அந்த திசைக்கு 7 வருட அதிகாரம் உண்டென்றாலும், பிறந்த காலத்தில் அசுவதியில் அன்றைய ஆதி அந்த வியாபகம் முழுவதும் கேது திசை என்பதால், ஜனன கால மணி நேரத்தில் ஜெனன காலத்தில் சென்ற நாழிகை போக இனி செல்ல வேண்டிய இருப்பு நாழிகை வீதமாகக் கேது திசை பாக்கி இருக்கும்.

இவற்றுடன் திதி பற்றிய விதிகளையும் நன்கு அறிந்து கொண்ட பின்னரே பலன்களைச் சொல்ல வேண்டும்.

 

****

Who is right? Ramana or Kanchi Paramacharya? (Post No.3917)

Reply from London Swaminathan

 

Date: 17 May 2017

 

Time uploaded in London: 20-14

 

Post No. 3917

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

Who was DRAVIDA SISU? 16 may 2017

 

With reference to your blog with the above title, you state that Dravida Sisu refers to Sankara Himself.

According to Bhagavan Sri Ramana Maharshi, the term refers to Sambandhar.  Since Ramana was an acknowledged jnani and jeevanmukta, His devotees would take that to be the correct interpretation.  Here is the extract from Suri Nagamma’s “Letters from Ramanasramam”:

 

85. DRAVIDA SISU:

Yesterday, Sri Bhagavan said that Sankara sang about Sambandha in Soundarya Lahari, referring to him as ‘dravida sisu’ didn’t he?  Last night I took out Soundarya Lahari with a Telugu commentary and saw the sloka written by Sankara about Sambandha which is  as follows:

O Daughter of the Mountain, I fancy that the ocean of the milk of poesy rising out of Thy heart verily caused the milk of Thy breasts to flow. On swallowing this milk given by Thy Grace, the Dravidian child became a poet among great poets.

The Telugu commentary stated that the words ‘dravida sisu’ in the sloka meant Sankara himself. On the next day, I mentioned this to Bhagavan. Sri Bhagavan replied, ‘The Telugu commentators must have stated it wrongly. The Tamizh Soundarya Lahari stated that the words ‘dravida sisu’  meant Sambandha and not Sankara. And He sent for the Tamizh book and red out all that was written in it about the reason for Sambandha receiving the title dravida sisu and explained to us as follows:

Sambandha was born in an orthodox brahmin family in the town of Sirkazhi. The parents were Sivapada Hridayar and Bhagavatiyar.  The parents named the child ALudaya Pillaiyar. When the child was three years old, one early morning, the father took him to Tiruttoni Appar Kovil. There in the tank, when he was taking bath, he immersed into the tank for repeating the aghamarshana mantram. When the child on the steps, could not see his father, he cried, Father, Father! Parvati and Lord Siva appeared in the sky, seated on the sacred bull and gave darsan to the child. Siva directed Parvati to give the boy a golden cupful of her breast milk, the milk containing Siva Jnana. She did accordingly. The boy drank the milk and became free from sorrow and the divine couple disappeared.

Having drunk the milk of Jnana, and feeling quite satisfied and happy, Sambandha sat on the tank steps with milk dribbling from the corners of his mouth. When the father came out of the tank after his bath, he saw the boy’s condition and angrily asked, flourishing a cane, ‘Who gave you milk? Can you drink milk given by strangers? Tell me who that person is or I will beat you.

Sambandha immediately replied by singing, ten Tamizh verses. The gist of the first verse is: ‘The Man with kundalas (sacred ear rings), the Man who rides the sacred bull, the Man who has white moon on His head, the Man whose body is smeared with the ashes of the burning ghats, the thief who has stolen my heart, He who came to bless Brahma the creator, when the latter did penance, and He who occupies the sacred seat of Brahmapuri, He, My Father is there, and She, my Mother who gave me milk is there!’ So saying he described the forms of Siva and Parvati as he witnessed with his eyes and who gave him milk to drink and also pointed towards the temple tower.

It was clear from the verses, that the people who gave milk to the child were no other than Parvati and Lord Siva. People gathered round. From that day onwards the boy’s  poetic flow began to run unimpeded. That is why Sankara sang, Thava Stanyam Manye… The commentators therefore decided that the word dravida sisu referred to Sambandha alone. Nayana also wrote of him as dravida sisu in Sri Ramana Gita.

regards,

vanamali

MY REPLY:

 

Thanks. No doubt Ramana was one of the greatest saints of modern era.  Kanchi Paramacharya also acknowledged his greatness and sent Paul Brunton to him. Paramacharya says Shankara lived before first century BCE  I believe Paramacharya.
Link for my old research article

Adi Shankara & Mysterious Sundara Pandya ! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2014/08/adi-shankara-mysterious-sundara-pandya.html

2 Aug 2014 – Age of Adi Shankara is shrouded in mystery. Most of the scholars …. Swami’s Indology Blog. Flipcard … Recent; Date; Label; Author. Loading.

 

 

Dravida Sisu | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/dravida-sisu/

There is no positive proof to support this date. The confusion in datinghappened because of another Shankara who was a copy of Adi Shankarain all aspects.

 

 

–Subham–

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916)

Research article Written by London Swaminathan

 

Date: 17 May 2017

 

Time uploaded in London: 19-46

 

Post No. 3916

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Vedas are full of mysteries. So-called foreign translators and scholars have bluffed their way through the Vedas for over 250 years. Every book written by a foreigner on the Vedas is a big joke book.  If you look at another foreigner’s book for the meaning or an interpretation for the same word or mantra you will have a big laugh. I have been enjoying such jokes every day.

 

Number symbolism is in the Vedas from the very beginning. This shows that the Vedic seers are very great intellectuals. They were the inventors of decimal system. No foreigner or an Indian scholar can give a reasonable explanation for such numbers. Though Appar alias Tirunavukkarasar used number symbolism to some extent in the seventh century and later Tirumular and Sivvakkiyar, to name a few, we are not able to get the full meaning of the verses. No wonder Vedas are beyond our reach.

 

That is why great saints like Kanchi Paramacharya (1894-1994) advised us not to look at the meaning and follow it blindly. A great intellectual like Adi Shankara would appear one day and guide us. Kanchi Paramacharya rightly used an analogy: a blind person holding a lamp was laughed at by the people and he told them that though he was blind he did not want them to stumble upon him when it was dark. We are blind with the Vedic interpretations but if we take the lamp (Vedas) with us it would help others.

Here is the mystery of Number Seventeen in the Soma Yagas and other Yajnas (Fire ceremonies):

 

Agni with one syllable won speech

The Asvins with two syllables won expiration and inspiration

Visnu with three syllables Three worlds

Soma with four syllables the four- footed cattle

Pusan with five syllables the Pankti

Prajapati with SEVENTEEN syllables, the  SEVENTEEN fold Stoma

–Taittiriya Samhita, Yajur Veda

 

There are four priests in sacrificial rites: (Hotr, Udgaatr, Adhvaryu, Brahman). They have four assistants. It increased to SEVENTEEN later, with each one allocated different work. Why 17? It is a mystery!

At a Soma sacrifice, in the midday pressing of Soma plants (for juice), a Kshatriya shoots SEVENTEEN arrows to measure out a racing space; then three of the sacrificer’s horses are yoked to his chariot while four horses are yoked to each of his four other chariots. A ritual race takes place to the beating of SEVENTEEN drums and the sacrifice comes out victorious.

 

The sacrificers drew water from Sarasvati, Sindhu rivers, streams, tanks and stored rain water; altogether SEVENTEEN kinds of water were used in the fire sacrifices. Why 17? It is a mystery.

So many rituals like this are unexplainable. When William Jones pointed out the similarities between European languages and Sanskrit these people said Aryans migrated into India from outside.

Thousands of customs and rituals in the Vedas and Hindu epics are found nowhere outside India. If at all some traces are found, there the Hindu influence is very visible. This shows Hindus went outside several thousand years ago from India to different places on earth and slowly they lost their customs or changed or adapted them to suit the local needs. Number SEVENTEEN is one of them.

Rare coincidence! This article is written on SEVENTEENTH of May 2017

17-05-17

-Subham-

 

விஞ்ஞானிகள், கணித மேதைகள் ஜோக்குகள்! (Post No.3915)

Written by S NAGARAJAN

 

Date: 17 May 2017

 

Time uploaded in London:-  6-27 am

 

 

Post No.3915

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

நகைச்சுவை விருந்து

 

விஞ்ஞானிகள், கணித மேதைகள் பற்றிய ஜோக்குகள்!

 

ச.நாகராஜன்

 

 

ஆஹா! அக்கவுண்டண்ட்!

 

,டாக்டர்கள், விஞஞானிகள், அபாரமான கணித மேதைகள் ஆகியோரைப் பற்றி வெளி வந்துள்ள ஜோக்குகள் ஏராளம்.

அவற்றில் சில:

 

ஒரு டாக்டர், ஒரு எஞ்னியர் மற்றும் ஒரு அக்கவுண்டண்ட் ஆகியோர் உலகின் முஜிதல் தொழில் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

டாக்டர் ஆவேசத்துடன் கூறினார்: “ ஏவாள் ஆதாமின் விலா எலும்பிலிருந்தே படைக்கபட்டாள், தெரியுமா? அது ஒரு சர்ஜிகல் ஆபரேஷன் தானே! டாக்டர் தொழில் தான் முதல் தொழில்!

எஞ்சினியர் கோபத்துடன் அதை மறுத்துக் கூறினார்: “ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைப்பதற்கு முன்னர் அவர் ஒழுங்கற்ற குழப்பமான நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு ஒழுங்கை நிலை நாட்டினார். குழப்பத்தை முடிவு கட்டி ஒழுங்கை நிலை நாட்டுவது ஒரு எஞ்சினியர் செய்யும் வேலை. ஆகவே எஞ்சினியரிங் தான் முதல் தொழில்”

மிக மெதுவாக அக்கவுண்டண்ட் கேட்டார்” “அது சரி, குழப்பத்தை உருவாக்கியது யார்? அது தானே எங்கள் வேலை!”

 

நாஸா விஞ்ஞானியின் குழந்தை

 

நாஸா விஞ்ஞானி ஒருவர் தன் குழந்தைக்கு விண்வெளி பற்றி அன்றாடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் குழந்தையிடம், “ நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டார்.

நான் விண்வெளியில் பறக்கும் வீரனாக ஆக விரும்புகிறேன் என்றது குழந்தை.

விஞ்ஞானிக்கு ஒரே சந்தோஷம். “சரி, விண்வெளியில் எங்கு போகப் போகிறாய்?” என்று கேட்டார் அவர்.

“சந்திரனுக்கு மட்டும் போக மாட்டேன். ஏனெனில் அங்கு ஏற்கனவே சிலர் சென்று சாதனை படைத்து விட்டனர்” என்று தீர்க்கமாகக் கூறிய குழந்தை, “நான் சூரியனுக்குப் போகப் போகிறேன்” என்றது.

“ஐயோ! சூரியனுக்கு நீ போக முடியாதே! அது பயங்கர வெப்பத்துடன் இருக்குமே” என்றார் விஞ்ஞானி.

“அது பற்றி கவலைப்பட வேண்டாம். நான் ராத்திரியில் தான் போவதாக உத்தேசம்” என்று பதில் சொன்னது குழந்தை!

 

இயற்பியல் விஞ்ஞானியும் கணித மேதையும்

 

ஒரு இயற்பியல் விஞ்ஞானியும் ஒரு கணித மேதையும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

கணித மேதை எதையும் துல்லியமாக கணிதரீதியாக மட்டுமே அணுகுவார்.

விஞ்ஞானி மேதையிடம் சொன்னார்: “நண்பரே! காரின் சிக்னல் வேலை செய்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அது சரியாக வேலை செய்கிறதா பாருங்கள்” என்றார்.

விஞ்ஞானி சிக்னல் ஸ்விட்சைப் போட்டார்.

மேதை கூறினார்: “ ஆஹா! இப்போது அணைந்து விட்டது. இப்போது எரிகிறது. இப்போது அணைந்து விட்டது. மறுபடியும் எரிகிறது…”

விஞ்ஞானி தலையில் கையை வைத்துக் கொண்டார்!

***

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (Post No.3914

Written by London Swaminathan

 

Date: 16 May 2017

 

Time uploaded in London: 17-58

 

Post No. 3914

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

தம்மபதம் என்பது புத்தமதத்தினரின் வேதப் புத்தகம்

திருக்குறள் என்பது தமிழர்களின் வேதப் புத்தகம்

 

 

பசிப்பிணி என்னும் பாவி

 

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225)

பசியைப் பொறுத்துக் கொள்வது தவசிகளின் வலிமை; ஆனால் அவர்களுக்கு உணவு கொடுக்கும் இல்லறத்தான் வலிமை அதைவிடப் பெரியது

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

நல்ல குணங்களை மறக்கச்செய்யும் பசியைத் தீர்ப்பது பெரிய புண்ணியம்; அதாவது பிற்காலத்துக்குச் சேர்த்துவைக்கும் வங்கிக் கணக்கு போன்றது

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் (228)

செல்வத்தைச் சேர்த்துவைத்து பிறருக்கும் கொடுக்காமல், தாமும் அனுபவிக்காமல் இருப்பவர்களுக்கு, தானம் செய்வதிலுள்ள இன்பம் என்ன என்றே தெரியாது.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்லுவார்:

உண்மையே பேசு

கோபப் படாதே

கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு

இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (தம்ம.224)

xxxx

வாய்மை

உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்

உள்ளத்துளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்ல நினைக்காமல் இருந்தால் அவன் உலக மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பான்.

 

புத்தர் சொல்கிறார்:

நல்ல குணம் உள்ளவனாக இருந்து, யார் அறவழியைப் பின்பற்றுகிறானோ, யார் உண்மை பேசுகிறானோ,  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறானோ அவனை உலக மக்கள் அனைவரும் விரும்புவர் (தம்ம. 217)

 

xxx

பிறன் மனை நோக்கா பேராண்மை

 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண் ( 146)

பொருள்:

பிறருடைய மனைவியை விரும்பி நெறி தவறி நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழிச்சொல் என்ற நான்கும் எப்போதும் நீங்காது.

 

புத்தரும் இதையே மொழிகிறார்:

மற்றவனுடைய மனைவியை அபகரிப்பவனுக்கு நான்கு விஷயங்கள் நடக்கும்:-

அவன் மதிப்பையும் மரியாதையையும் இழப்பான்;

அவன் மன சஞ்சலத்துன் வாழ்வான்;

எல்லோரும் அவனைத் தூற்றுவர்;

அவன் நரகத்தில் வீழ்வான் (தம்மபதம்-309)

 

xxx

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

 

இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் (குறள் 369)

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் (370)

 

பொருள்

ஒருவன் ஆசையெனும் துன்பத்தைக் கைவிட்டால் அவனுக்கு இன்பம் வந்து குவியும்.

ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது அதனை விடக் கற்றுக்கொண்

டால், அழியாத இன்பத்தைப் பெறலாம்.

 

ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)

 

கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)

 

–சுபம்–

Buddha and Valluvar on Vegetarianism and Hypocrisy: Great men Think alike (Post No.3913)

Written by London Swaminathan

 

Date: 16 May 2017

 

Time uploaded in London: 10-55 am

 

Post No. 3913

 

Pictures are taken from various sources; such as Face book, Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Please read the First part published on “Buddha and Valluvar: Great Men Think alike”, posted on 13th May

 

Tirukkural was written by Thiruvalluvar

Dhammapada is the Holy Book of the Buddhists.

VEGETARIANISM

 

Better to refrain from killing and abstaining from eating the flesh obtained thereby, than kindlin a thousand sacrifice fires (Kural -259)

All living beings will raise their hands in worship to him who has never taken a living beings life and has abstained from eating meat (Kural -260)

 

And Buddha in Dhammapada says

A man is not a great man because he is a warrior and kills other men; because he hurts not living beings he in truth is called a great man (270)

 

HYPOCRISY

 

It matters not whether a man shaves his hair or allows it to grow in flowing locks if he could refrain from what the world shuns (Kural -280)

And Buddha in Dhammapada says,

Not by the tonsure, a shave head, does a man become ‘samana’, a monk. How can a man be a samana/monk if he forgets his religious vows, if he speaks what is not true, if he still has desire and greed (264).

He says the same in couplets 141 and 393 of Dhammapada.

 

Adi Shankara in his Bhaja Govindam also echoes his views,

Adi Shankara’s Bhaja Govindam says,

“The ascetic with matted locks, the one with his head shaven, the one with hairs pulled out one by one, the one who disguises himself variously with the ochre coloured robes – such a one is a fool who, though seeing does not see. Indeed, this varied disguise is for the sake of the belly”.
This verse in the hymn is attributed to Totaka, a disciple of Shankara.

 

CHARITY

The ability of those who perform penance to endure hunger is not equal to that of the householder to appease the hunger of others (Kural 225)

The graceless misers who hoard up their wealth and eventually lose it, do not know the pleasure which the wise derive in giving to the poor (Kural 228)

And Buddha in Dhammapada says,

Speak the truth, yield not to anger, give what you can to him who asks: these three steps lead you to the gods.-(Dhamma 224)

 

TRUTHFULNESS

 

If a man could conduct himself true to his own self he would be in the heart of all in the world (Kural 294)

Buddha says,

He who has virtue and vision, who follows Dhamma (Dharma= righteousness) the Path of Perfection, whose words are truth, and does the work to be done – the world loves such a man (217)

 

—–to be continued

 

–Subham—

கம்யூனிஸ ஜோக்குகள்! (Post No.3912)

Written by S NAGARAJAN

 

Date: 16 May 2017

 

Time uploaded in London:-  6-08 am

 

 

Post No.3912

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நகைச்சுவை விருந்து

 

கம்யூனிஸ ஜோக்குகள்!

ச.நாகராஜன்

 

கம்யூனிஸ ஜோக்குகள் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் எப்படியெல்லாம் கம்யூனிஸம் அடக்கி விடும் என்பதைத் தெரிவிப்பவை. கம்யூனிஸ கொள்கைகள் அது பிறந்த நாட்டிலேயே செத்து மடிந்த போதும் கூட இன்றும் காம்ரேடுகள் இங்கு அதைக் கட்டி அழுவது விசித்திரமே!

 

சில கம்யூனிஸ ஜோக்குகள் இதோ:-

சராசரி நாள்!

 

கம்யூனிஸ்ட் ஆட்சியில் நாட்களைத் தள்ளுவது கஷ்டம் தான்!

ஆனால் காம்ரேடுகள் அதை ஒப்புக் கொள்வார்களா, என்ன?

நாளைய தினத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் ரஷியாவில் சொல்லப்படும் அறிவிப்பு :

இன்று சராசரியான ஒரு நாள். – நேற்றைய தினத்தை விட மோசமான நாள்; நாளைய தினத்தை விட நல்ல நாள்!

 

 

உண்மையையே சொல்லும் ப்ராவ்தா

 

ப்ராவ்தா என்ற ரஷிய பத்திரிகை செய்தியை வெளியிடும் விதத்தைப் பற்றி ஏராளமான ஜோக்குகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:-

 

ப்ராவ்தா பத்திரிகைக்கு வந்த ஒரு டெலிபோன் அழைப்பு:-   ஐவான் ஐவனோவிச் லண்டாவ் இன்ஸ்டிடியூட்டில் (Landau Institute) உள்ள தனது லாபரட்டரியில் கோல்ட் ஃப்யூஷன் (cold fusion) சோதனையில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறாராமே, நீங்கள் பிரசுரித்திருக்கும் அந்தச் செய்தி  உண்மையா?

 

இதற்கு ப்ராவ்தாவின் பதில்:

 

ஆமாம், அந்தச் செய்தி உண்மை தான். ஆனால் அதில் சில சின்னத் திருத்தங்கள் உள்ளன. இன்ஸ்டிடியூட் லண்டாவில் இல்லை. அது டப்னாவில் (Dubna) உள்ளது. சோதனையைச் செய்தது ஐவான் ஐவனோவிச் அல்ல; செய்தவர் பியோட்ர் பியோட்ரோவிச். அவர் சாதனை படைத்தது கோல்ட் ஃப்யூஷனில் இல்லை; மாறாக அவர் செய்தது இஸ்ரேலுக்கு ஓடிப்போனது தான்!

 

 

கடவுளும் உருளைக்கிழங்கும்

 

விஞ்ஞான ரீதியாக விவசாயம் செய்வதில் முனைந்த மாஸ்கோ அரசின் போலிட்பீரோ விஷயம் தெரித தனது காம்ரேட் ஒருவர் தலைமையில் குழு ஒன்றை மாஸ்கோவிற்கு அருகில் உள்ள ஒரு கூட்டுறவுப் பண்ணைக்கு அனுப்பியது.

 

“உருளைக்கிழங்கு விளைச்சல் எல்லாம் எப்படி இருக்கிறது, தோழரே! என்று கேட்டார் குழுவின் தலைவர்.

“பிரமாதமாய் இருக்கிறது, காம்ரேட் என்று ஆரம்பித்த விவசாயி, ‘ எல்லா உருளைக்கிழங்குகளையும் ஒரே இடத்தில் சேகரித்துக் குவித்தால் அது தரையிலிருந்து கடவுளின் சொர்க்கம் வரை போய் விடும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

குழுத் தலைவர் கோபமாக, “ என்ன சொல்கிறாய், தோழா, இது சோவியத் யூனியன். இங்கு கடவுளே கிடையாது, உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.

 

“ஆமாம், ஆமாம், இது சோவியத் யூனியன் தான். இங்கு உருளைக்கிழங்கும் கிடையாதே, அது தெரியாதா உங்களுக்கு?

என்று பதில் சொன்னார் அந்த விவசாயி.

 

 

நான்கு பேருக்குத் தெரியும் நடந்தது என்னவென்று!

 

வார்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு புகைவண்டியின் பெட்டி ஒன்றில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.

ஒருவர் ரஷியர்; இன்னொருவர் ஒரு விவசாயியின் வயதான மனைவி. மூன்றாமவர் ஒரு இளவயது அழகி; நான்காமவர் போலந்தைச் சேர்ந்த ஒரு லாஜிக் புரபஸர்.

 

நெடு நேரம் புகைவண்டியில் அவர்கள் பேசாமலேயே அமர்ந்திருந்தனர்.ஒரே நிசப்தம்!

 

திடீரென்று புகைவண்டி ஒரு குகைக்குள் சென்றது. பெட்டியில் ஒரே இருள். திடீரென்று நிசப்தத்தைக் கலைக்கும் வகையில் ஒரு முத்தமிடும் சப்தம் கேட்டது; அடுத்து பளார் என்று ஒரு அறை விழுந்த சப்தம் கேட்டது.

 

புகைவண்டி குகையிலிருந்து வெளியேற, வெளிச்சம் வந்தது.

ரஷியர் மிகவும் கலவரமான முகத்துடன் வெளிறிக் காணப்பட்டார். அவரது ஒரு கன்னம் மற்றதை விடச் சிவந்து இருந்தது.

இப்போதும் கூட யாரும் பேசவில்லை. அவரவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் நினைத்தது என்ன, தெரியுமா?

 

வயதான பெண்மணி நினைத்தது:-  ரஷிய மடையனுக்கு நன்கு வேண்டும். அழகி கொடுத்த அடி பிரமாதம்!

ரஷியர் நினைத்தது:- என்ன அநியாயம்! போலந்துக்காரன் கொடுத்த முத்தத்திற்கு நானா பலிக்கடா? என்னை எதற்கு அடிக்க வேண்டும்?

 

இளம் அழகி நினைத்தாள்:- என்ன விசித்திரம் இது! ரஷிய ஆபீஸர் அந்த வயதான பெண்மணியையா முத்தமிட வேண்டும்? என்ன அநியாயம்?

 

போலிஷ் லாஜிக் புரபஸர் நினைத்தார்:- அடடா! தேசபக்தியுள்ள அருமையான போலந்துக்காரன் அல்லவா நான்! என் கையை நானே முத்தமிட்டுக் கொண்டு கொடுத்தேன் ஒரு அடியை ரஷியனின் கன்னத்தில்! யாரும் அதை புரிந்து கொள்ளவில்லை, யாராவது புத்திசாலியாக இருந்தால் தானே!

 

***

 

 

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், பெரியோர் எல்லாம்……….. (Post No.3911)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 20-03

 

Post No. 3911

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வெற்றி வேற்கை என்றும் நறுந்தொகை என்றும் அழைக்கப்படும் –கொற்கை வாழ் பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் யாத்த–  நூல் நம் எல்லோருக்கும் அறிமுகமானதே.

 

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்

கல்விக்கழகு கசடு அற மொழிதல்

…………………………………………………………………..

என்று தொடரும் செய்யுளில்

 

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

உற்றோர் எல்லாம் உறவினர்அல்லர்

நீண்டுகொண்டே போகும்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் — என்ற ஒரு வரியை மட்டும் ஆராய்வோம். ஏனெனில் இதை கம்பன், வள்ளுவன் போன்ற பல புலவர்கள் கையாளுகின்றனர்.

 

பாமர மக்களும்கூட

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே

–என்று பலவகையாகச் சொல்லுவர்.

 

இது எல்லாம் பெரும்பாலும் திருமாலின் வாமனாவதாரத்தை அடிப்படையாக வைத்தெழுந்த பழமொழிகள் போலும்.

 

வாமனனாக (குள்ளனாக) வந்து மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையே பாதாள உலகத்துக்கு அனுப்பினான் ஓங்கி உலகலந்த ‘உத்தமன்’

 

.சுருக்கமாக, இதன் மூலம் சொல்லவரும் செய்தி:

உருவத்தை வைத்து ஆளை எடை போடாதே.

 

வாமனாவதாரம் (த்ரிவிக்ரமாவதாரம்) திருக்குறளிலும் (610), ரிக் வேதத்திலும் (1-22-7; 1-155-4) கூட இருக்கிறது.

பெருமாளுக்கு வெட்கம் – கம்பன் வியப்பு

கம்ப ராமாயணம், சுந்தர காண்டம், உருக்காட்டு படலத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் அனுமனின் உருவத்தைக் கண்டு விஷ்ணுவே வெட்கம் அடைந்தார் என்கிறான் கம்பன்.

 

ஏண் இலது ஒருகுரங்கு ஈது என்று எண்ணலா

ஆணியை அனுமனை அமைய நோக்குவான்

சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்றுஎனா

நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்

 

பொருள்:-

திரிவிக்ரம அவதாரத்தால் எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்த திருமால், ‘வலிமையற்ற சாதாரண குரங்கு இது’ என்று அலட்சியம் செய்ய முடியாத அச்சாணி போல உள்ளவனாகிய அனுமனைக் கண்டு, மிக உயர்ந்த பெருமை ஒரே இடத்தில் இருப்பது அன்று என்று எண்ணி நாணமடைந்தான்.

 

இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையிடம் அனுமன் தன் தோளிலேயே சுமந்து சென்று ராம பிரானிடம் ஒப்படைக்கிறேன் என்று சொன்னான். சின்னக் குரங்கு போல உள்ள அனுமனால் அதைச் சாதிக்க முடியுமா என்று சீதை சந்தேகப்பட்ட போது அனுமன் விஸ்வரூபம் எடுத்து ஓங்கி வளர்ந்து சீதைக்கு முன் நின்றான். அதைப் பார்த்து, அனுமனுக்கும் முன்னால் இப்படி வளர்ந்து விஸ்வரூப தரிசனம் எடுத்த திருமாலுக்கு வெட்கம் வந்து விட்டதாம்

அடடா! ஓங்கி வளர்வதில் எனக்கு நிகரில்லை; அந்தப் பெருமை முழுதும் என்னுடைத்தே என்று எண்ணினேனே; மிக உயர்ந்த பெருமைக்கு ‘பேடன்ட்’ (Patent) வாங்கி விட்டதாக நினைத்தேனே. இப்பொழுது இந்தச் சின்னக் குரங்கு அரிய பெரிய செயலைச் செய்ததால் சிறியோர் எல்லாம் சிறியோர் அல்ல என்று புரிகிறது என்று சொல்லி திருமாலே வெட்கப்பட்டாராம்.

 

என்னே கம்பன் காட்டும் அற்புத சித்திரம்!

–சுபம்—-

ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா? (Post No.3910)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 12-33

 

Post No. 3910

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

–சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமா? கணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் சுட்டெரிப்பேன் அவ்வாறு செய்வது ராமனின் வில்லாற்றலுக்கு இழிவு உண்டாக்கும் என்று உணர்ந்து அத்தொழிலைச் செய்யாது விட்டேன் – என்று அனுமனிடம் சீதை சொல்கிறாள்.

 

என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள், உடனே ராம பிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறியது இது.

நீ ஒரு ஆண்மகன்; உன் தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது என்றும் வாதிடுகிறாள்.

 

அதாவது ராமனின் வில் ஆற்றலுக்காவது அவர் தனது சொந்த சக்தியைச் செலவழிக்க வேண்டும். ஆனால் பத்தினிப் பெண்ணாகிய சீதைக்கோ அது கூடத் தேவை இல்லை. உடல் வலிமையின்றி மன வலிமையால் சாபம் போட முடியும்.

 

பெண்களுக்குள்ள இந்த அபார சக்தியை வள்ளுவனும் போற்றுவான்:

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு தெய்வத்தைக் கும்பிடாமல் கணவனையே தெய்வமாகக் கும்பிட்டுத் துயில் எழும் பெண்/ மனைவி பெய் என்று சொன்னால், அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும் என்பான் வள்ளுவன்.

 

கண்ணகியும் தன் சொல்லால் மதுரையைச் சுட்டெரித்தாள்.

சாவித்ரி எமனுடன் வாதாடி, கணவன் உயிரை மீட்டுக் கொண்டு வந்தாள். சந்திரமதி, தமயந்தி போன்றோரும் துயரங்களைக் கடந்து வெற்றி பெற்றனர்.

திரவுபதியும் தான் எடுத்த சபதத்தை பாண்டவர்களின் மூலம் நிறைவேற்றிக் காட்டினாள்.

 

 ஆகையால் சொல்லால் சுடுவேன் என்று சூ ளுரைத்தது பொருத்தமே.

 

அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், இந்தியப் பிரதமர் கைகளில் அணுகுண்டுகளை ஏவிவிடும் பட்டன்” (switch or Button) இருக்கிறது. ஆயினும் அச்சக்தியைப் பிரயோகிக்காமலேயே பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அது போல பத்தினிப் பெண்களிடமும் அபார சக்தி இருக்கிறது அதை எவ்வளவு கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு கவனத்துடன் பயன்படுத்துவார்கள். அதை வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள்; பெண்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள்.

 

ராமனின் வில்லாற்றலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது, ராவணன் என்ற அரக்கனை அகற்றும் பணியை அவதார புருஷனாகிய ராமனே செய்யட்டும் என்று சீதை பொறுமையாக இருக்கிறாள்.

 

வால்மீகி ராமாயணத்தில் இது போன்று உலகங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் வல்லமை பற்றிப் பேச்சு இல்லை.

 

வால்மீகி ராமாயணத்தையே கம்பன் பின்பற்றினாலும், பல இடங்களில் அவன் புதுக் கதைகளையும், புது வசனங்களையும் சொல்லுவது அவன் வேறு சில  ராமாயணங்களின் கதைகளையும் எடுத்தாண்டதைக் காட்டுகிறது. அவனே மூன்று ராமாயணங்கள் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட மூன்றில் இன்று நமக்குக் கிடைப்பது வால்மீகி ராமாயனம் ஒன்றே.

 

கம்பனைப் பயில்வோம்; கவின்சுவை பெறுவோம்.

-Subham–