பாரதியாரின் தம்பி (Post No.4076)

Written by S NAGARAJAN

 

Date: 13 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4076

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 34

பாரதியாரின் தம்பி பரலி சு.நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்

 

ச.நாகராஜன்

 

 

பாரதியாருடன் தொடர்பு கொண்டவர்களில் குறிப்பிடத்தகுந்தந்தவர் பரலி.சு.நெல்லையப்பர்.

இவரைப் பற்றிய இந்த நூல் சிறிதென்றாலும் (80 பக்க நூல்) சிறப்பானது. பல முக்கிய விஷயங்களைத் தரும் அரிய நூலாக அமைகிறது.

இதை எழுதியவர் பாரதி அன்பர் எதிரொலி  விசுவநாதன் (திருவாரூர் சு.விசுவநாதன்)

 

 

பரலி சு.நெல்லையப்பர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல் இது.செப்டம்பர் 1969இல் முதல் பதிப்பைக் கண்டது.

18 அத்தியாயங்களில் பாரதியார் பற்றிய பல முக்கிய செய்திகளை அறிந்து கொள்கிறோம்.

நூலில் வரும் சில முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.

 

 

மகாகவி பாரதியார் பிறந்து ஏழு வருடங்களுக்குப் பின் அம்மகாகவியின் பெருமையை நாட்டிற்குணர்த்த இருவர் அடுத்தடுத்துத் தோன்றினர். ஒருவர் வ.ராமசாமி ஐயங்கார். 1889 செப்டம்பர் 17ல் தோன்றியவர்.அடுத்தவர் பரலி.சு.நெல்லையப்பர் 1889 செப்டம்பர் 18ல் தோன்றியவர்.

என்ன ஒரு அதிசயம். இருவரும் அடுத்தடுத்த நாளில் பிறந்திருக்கின்றனர்!

 

 

1908ஆம் ஆண்டு ஒரு நாள் காலை பத்து மணிக்கு வ.உ.சிதம்பரனாரின் வீட்டுக்கு வந்த பாரதியார் எதிர்பாராதவிதமாக பிள்ளையார் வீட்டின் முன் பகுதியில் அமர்ந்திருந்த நெல்லையப்பரின் கையைப் பற்றி ‘ஓய்- நம்மோடு வாரும்’ என்றவாறு வெளியே இழுத்துக் கொண்டு சென்றார்.

 

இது தான் அவரது முதல் சந்திப்பு!

*

சிதம்பரனார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து நெல்லையப்பர் ஒரு கட்டுரையை பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு அனுப்ப அது இந்தியாவில் பிரசுரிக்கப்பட்டு அதன் பிரதி ஒன்று அவர் வீட்டிற்கு வந்தது

*

புதுவைக்குச் சென்ற நெல்லையப்பர் அங்கு சூரியோதயம் பத்திரிகையில் வேலை செய்ய ஆரம்பித்தார். பாரதியின் வீட்டிலேயே (கலவை பங்களாவை விட்டு) தங்க ஆரம்பித்தார்.

*

அரவிந்தர் புதுவைக்கு டூப்ளே என்ற கப்பல் மூலம் பகல் ஒரு மணிக்கு வந்த போது பாரதியார் சீனுவாசாச்சாரியோரோடு நெல்லையப்பரும் அவரை வரவேற்கும் பேறு பெற்றார். நெல்லையப்பர் குடை பிடித்தார். பாரதியாரும் சீனுவாசாச்சாரியாரும் அரவிந்தர் பக்கத்தில் வந்தார்கள்.

 

அரவிந்தரும் பாரதியாரும் ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள்.இடையிடையே எழும் சிரிப்பொலிகள் அவர்களின் தோழமையை எடுத்துக் காட்டும். அரவிந்தருக்குப் பிறகே வ.வே.சு. அய்யர் புதுவை வந்து சேர்ந்தார்.

*

திருப்பள்ளி எழுச்சி சூரியோதயம் பத்திரிகையில் வெளியானபோது முதற் பாட்டில் இரண்டாவது அடியாக,

 

எழும் பசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியத றிவெனும் பரிதி

 

என்பதில் கடைசியான பரிதி என்ற சொல்லை மாற்றி இரவி என்ற சொல்லைப் போட்டால் அழகாக இருக்குமென்றும், மேலே பரவி என்றிருப்பதால் அதனையடுத்து இரவி என்றிருந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்குமென்றும் பாரதியாரிடம் நெல்லையப்பர் சொன்னார். பாரதியார் உடனே இரவி என்ற சொல்லை ஏற்றுக் கொண்டார். இப்படி ஏற்றுக் கொண்டதன் மூலம் பாரதியார் நெல்லையப்பருக்கு தமிழ் ஆர்வத்தையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்.

*

1917ம் ஆண்டில் கண்ணன் பாட்டு இரண்டாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. அச்சிட்ட கண்ணன் பாட்டுப் புத்தகங்களில் ஒரு பகுதியை நெல்லையப்பர் புதுச்சேரியிலிருந்த பாரதியாருக்கு அனுப்பி வைத்தார்.

பாரதியாரின் முழுநூல் ஒன்று புத்தக வடிவம் பெற்று முதன் முதலில் வெளிவந்தது குறித்து பாரதியார் பரமானந்தம் அடைந்தார். ஏதோ செயற்கருஞ்செயல் செய்த தீரனாக நெல்லையப்பரைப் போற்றினார்.

 

கண்ணன் பாட்டுக்கு அடுத்தபடியாக நாட்டுப் பாட்டு,முரசுப் பாட்டு, பாப்பாப் பாட்டு என்ற மூன்றும் நெல்லையப்பரால் பதிப்பிக்கப்பட்டது. 12 பக்கங்கள் கொண்ட முரசுப் பாட்டின் விலை அரையணா தான்.

**

 

நெல்லையப்பர் பதிப்பித்த நூல்களின் விவரங்களை விளக்கமாக இந்த நூலில் காணலாம்.

 

பாரதியாரின் கடைசி நாளான 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று தான் பாரதியார் நோய்வாய்ப்பட்டிருந்த விஷயம் நெல்லயப்பருக்கு எட்டியது. நெல்லையப்பர் திருவல்லிக்கேணி மாடவீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்பவரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரின் உடல் நிலையைக் கவனித்தார். ஆனால் பாரதியார் தனக்கு எந்த மருந்தும் வேண்டாமென்று  டாக்டரிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டார். அன்றிரவெல்லாம் பாரதியார் மயக்க நிலையிலேயே கிடந்தார். நெல்லையப்பரும் அவருடைய நண்பர் லட்சுமண அய்யர் என்பவரும் இரவு முழுவதும் பாரதியார் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்கள். பாரதியார் படுக்கையிலிருந்து  அடிக்கடி எழுவதும்  மீண்டும் படுப்பதுமாக எமனுடன் போராடிக் கொண்டிருந்தார். பின்னிரவு சுமார் ஒன்றரை மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது.

 

பாரதியாரின் பொன்னுடலை நெல்லையப்பர், லட்சுமண் அய்யர், ஆர்யா, ஹரிஹரசர்மா ஆகியவர்கள் சுமக்கும் பேறு பெற்றார்கள்

பாரதியாரை மிகச் சரியாகக் கணித்தவர் நெல்லையப்பர்.

“இந்த ஆசிரியன் காலத்திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பின், இவர் பாடல்களை தமிழ்நாட்டு மாதர்களும், புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை நான் இப்பொழுதே காண்கிறேன்” என்று இவ்வாறு நெல்லையப்பர் பாரதியாரைப் பற்றி எழுதியிருப்பதே அவர் பாரதியாரின் கவிதா சக்தியை எப்படித் திறம்பட மதிப்பீடு செய்திருந்தார் என்பதற்குச் சரியான சான்று.

 

*

இந்த சிறிய அழகிய நூலுக்கு நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை முன்னுரை அளித்துள்ளார்.

நாரண துரைக்கண்ணன் சிறப்புரை, வெ.சாமிநாத சர்மா அறிமுக உரை, பாரதியாரின் புதல்வியார் சகுந்தலா பாரதி வாழ்த்துரை, ம.பொ.சி., ராய.சொக்கலிங்கம் வாழ்த்துரை ஆகியவை நூலுக்குப் பெருமை சேர்க்கிறது..

 

1969ல் வானதி பதிப்பக வெளியீடாக ஒண்ணரை ரூபாய் விலையில் வெளியிடப்பட்ட அரிய நூல் இது.

பாரதி அன்பர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.

 

எதிரொலி விசுவநாதன் பாரதி இயலுக்குப் பெருமை சேர்த்த பாரதி அன்பராகிறார்.

****

அடுத்து இன்னொரு பாரதியார் பற்றிய நூலைக் காண்போம்.

ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் (Post No.4075)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 19-22
Post No. 4075

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அமெரிக்காவில் உள்ளது கொலம்பியா பல்கலைக் கழகம். இதன் தலைவராக நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) இருந்தார். அவர் பெரிய அறிஞர்; நோபல் பரிசு வென்றவர். கல்வியாளர்.

 

அவரும் , அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராண்டர் மாத்யூவும் (Brander Mathews) பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இலக்கியக் கொள்ளை (Plagiarism) என்றால் என்ன என்று விவாதித்தனர். பிராண்டர், தான் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி விளக்கினார்.

 

யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை முதல் தடவை சொன்னால் அதுதான் ஒரிஜினல் (originality);

அதுதான் ஆதி; சுயமான சிந்தனை.

அதையே ஒருவர் இரண்டாவது தடவை சொன்னால் அது இலக்கியக் கொள்ளை- Plagiarism

(பேஸ்புக்கில் பலரும் செய்வது)

மூன்றாவது முறை அதையே ஒருவர் சொன்னால் அவருக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலே இல்லை (Lack of Originality) என்று பொருள்.

அதையே நாலாவது முறை யாராவது சொன்னால், அது ஏதோ ஒரே மூலத்திலிருந்து (drawing from a common source) தோன்றியது என்று பொருள்.

 

இப்படி அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில் பட்லர் குறுக்கிட்டார், “அதையே யாரவது ஐந்தாவது முறை சொன்னால் அதன் பெயர் ஆராய்ச்சி! (Research)

 

எவ்வளவு உண்மை!

xxx

 

சொல் கஞ்சன்!

 

அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ் (President Coolidge)பயங்கரமான கஞ்சன்; அதாவது சொல் கஞ்சன்; பெரிய சந்திப்புகளிலும், பொது விருந்துகளிலும் பேசா மடந்தையாக இருப்பார். அப்படியே பேசினாலும் இரண்டு, மூன்று சொற்களே வாயிலிருந்து வரும்; அதுவும் பெரிய அறிவாளி பேசுவது போல இருக்காது!

 

அமெரிக்காவின் புகழ்மிகு பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson). அவருடைய வீடு ஆமெர்ஸ்ட்(Amherst) எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு கண்காட்சியாக மாற்றி அவருடைய ஒரிஜினல் படைப்புகள், நினைவுப் பொருட்களை வைத்துள்ளனர். அதற்கு கூலிட்ஜ் விஜயம் செய்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே வருகிறார் என்பதால், பொது மக்கள் தொட முடியத பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்க்க அவரை அனுமதித்தனர்.

 

யாருக்கும் காட்டாத புலவருடைய நினைவுப் பொருட்களை எல்லாம் காட்டினர் கண்காட்சி அதிகாரிகள்.

 

அவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். வாயே திறக்காமல்!

 

இவருடைய ஆர்வத்தைக் கண்ட அதிகாரிகள் ஒரு அரிய பொக்கிஷப் பெட்டியைத் திறந்து இவைதான் அவர் கைப்பட எழுதிய கவிதைகள் என்று காட்டினர். அவருடைய கண்கள் அகல விரிந்தன. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

கடைசியில் இரண்டே சொற்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னது என்ன தெரியுமா?

“பேனாவால் எழுதினாரா, ஹூம்; நான் டிக்டேட் செய்வேன்” (சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதுவது டிக்டேசன்)

 

சொல் தச்சர்கள் தமிழிலும் சஸ்கிருதத்திலும் உண்டு; நல்ல வேளை, சொல் கஞ்சர்கள் கிடையாது!

–சுபம்–

Manu and Longfellow: Great Men think Alike (Post No.4074)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 18-24
Post No. 4074

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Tamil saint Tiru Jnana Sambandar says we can lead a good life on the earth; there is no paucity of good things (good ways)here (mannil Nalla vannam Vaazalaam…..)

 

Manu said this first in the Manava Dharma Sastra:

“On the path on which his fathers and grandfathers have walked, on that path of good man let him walk, and he will not go wrong” 4-178

H W LONGFELLOW (1807-1882) said,

 

A PSALM OF LIFE

WHAT THE HEART OF THE YOUNG MAN
SAID TO THE PSALMIST

 

Art is long, and Time is fleeting,
And our hearts, though stout and brave,
Still, like muffled drums, are beating
Funeral marches to the grave.

In the world’s broad field of battle,
In the bivouac of Life,
Be not like dumb, driven cattle !
Be a hero in the strife !

Trust no Future, howe’er pleasant !
Let the dead Past bury its dead !
Act,— act in the living Present !
Heart within, and God overhead !

    Lives of great men all remind us
We can make our lives sublime,
And, departing, leave behind us
Footprints on the sands of time ;

    Footprints, that perhaps another,
Sailing o’er life’s solemn main,
A forlorn and shipwrecked brother,
Seeing, shall take heart again.

Let us, then, be up and doing,
With a heart for any fate ;
Still achieving, still pursuing,
Learn to labor and to wait.

 

Bhagavad Gita 3-21

Whatever a great man does, the same is done by others as well. Whatever standard he sets, the world follows.

Dr Radhakrishnanan comments on this sloka:

“The Gita points out that the great men are the path makers who blaze the trail that other men follow. The light generally come through individuals who are in advance of society They see the light shining on the mountain heights while their fellows sleeps in the valley below”.

 

Swami Chinmayananda says,

“The moral rejuvenation of a society in any period of history can take place only because of the example set up by the leaders of that nation. Students can be disciplined only when teachers are well behaved; the minor officials cannot be kind and honest when the rulers of the country are corrupt and tyrants. Children’s behaviour depends entirely upon , and is ever controlled by, the standard of purity and culture of their parents.

–Subham–

 

 

நாட்டைக் காக்கும் நல்லோர்கள்- செட்டியார்கள் (POST No.4073)

Written by S NAGARAJAN

 

Date: 12 July 2017

 

Time uploaded in London:- 5-31 am

 

 

Post No.4073

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

நாட்டைக் காக்கும் நல்லோர்கள்

செட்டியார்கள் வாழ்க!

 

ச.நாகராஜன்

செட்டியார்கள் வாழ்க என்ற தலைப்பைப் பார்த்தவுடன் நீ ஒரு செட்டியாரா என்று கேட்டால் இல்லை என்ற பதிலைத் தான் நான் சொல்ல வேண்டி வரும்.

 

 

செட்டியார்களை செட்டியாராக நான் இல்லாத போதும அனைவரும் வாழ்த்த வேண்டும் என்றே சொல்வேன்.

ஒரு ஹிந்துவாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக செட்டியாரை வாழ்த்துவதில் பெருமையுறுகிறேன்.

 

 

ஒரு அழியாத பாரம்பரியத்தை அப்படியே மரபு வழுவாமல் பாதுகாத்து வந்ததில் வருவதில் செட்டியார்களின் ப்ங்கு குறிப்பிடத் தகுந்தது.

 

எனவே அவர்கள் பெருமைக்குரியவர்கள். வாழ்த்துதற்குரியவர்கள்.

காசி முதல் இராமேஸ்வரம் வரை யாத்ரீகர்கள் தங்குதற்கு சத்திரங்கள் கட்டியவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்.

காசி விசுவநாதர் கோவிலில் காலை 4 மணிக்கு திருவனந்தல், 11-30 மணிக்கு உச்சிக்காலம், இரவு 9 மணிக்கு சாயரட்சை ஆகிய பூஜைகளும் அபிஷேக அலங்காரங்களும் இவர்களுடைய செலவில் சிறப்பாக இன்றும் செய்யப்படுகின்றன. சிவபெருமான், அன்னபூரணித் தாயார், விசாலாட்சி அம்மன், மற்றும் வாரணாசியிலுள்ள ஏனைய கோவில்களிலும் இவர்கள் கட்டளைகள் உள்ளன

 

வாரணாசிக்குச் செல்லுபவர்கள் கட்டாயம் பார்த்து இன்புறத்தக்க காட்சி விசுவநாதர் கோவிலில் நிகழும் மாலை ஆரத்தி அல்லது படா பூஜை. இது விரிவான சடங்காகவும், ஆடம்பரமாயும், மிகக் கவர்ச்சியாயும், தமிழ்நாட்டு மரபுப்படியும் செய்யப்படுகின்றது. தொன்று தொட்ட பெருமை மிக்க புனித வாரணாசி நகரின் தெய்வீக வாழ்க்கையில் மிக முக்கியமான எழில் கூடிய காட்சி என்று இதைக் கூறலாம்.

 

இந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் குறைவின்றி இனிது நடைபெறுவதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் கல்கத்தாவிலும், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களின் நகரங்கள் சிலவற்றிலும் மூலதனம் வைத்துப் பெரிய கட்டளைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். வாராண்சியில் குடோலியா என்னும் பகுதியிலுள்ள நாட்டுக்கோட்டைச் சத்திரம் (ஹிந்தியில் ‘நாட்கோட் ச்த்ரம் பவன்’ என்பர்) வானுயர்ந்த கல் கட்டிடம்; அதை அறியாதவர் எவரும் இல்லை. இந்த மாளைகையிலிருந்து நாள்தோறும் இருமுறை காலை 11 மணிக்கும் இரவு 8 மணிக்கும் கவின் மிக்க ஊர்வலம் ஒன்று விசுவநாதர் கோவிலுக்குப் புறப்படுகிறது.இந்தை ‘சம்போ’ என்பர்.அபிஷேகத்திற்குத் தேவையான பால், தேன்,பன்னீர், அலங்காரப் பொருள்கள், மலர்கள் ஆகியவை தமிழ் நாட்டு மங்கல இசைக் கருவியான நாதசுரம் முழங்க எடுத்துச் செல்லபப்டுகின்றன. அபிஷேகத்தின் போது தேவார இசைத்தட்டு விசுவநாதர் கோவிலில் ஒலிக்கிறது.

இந்த ஊர்வலம் ஒரு நாள் கூட, ஒரு தடவை கூடத் த்டைபடாமல் நடைபெற்று வந்திருக்கிறது.

 

 

 

1942-ம் ஆண்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் இந்திய நாட்டைப் பெருங் க்லவரத்திற்குள்ளாக்கியது. வாரணாசி நகரம் அந்நாளில் அமைதி குன்றி கொந்தளிப்பாக இருந்தது. ஊர்வலங்கள் தடைப்பட்டன. பலவிதமான கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போதுங்கூட சம்போ குறித்தபடி சென்ற வண்ணமாக இருந்தது, வாரணாசியின் வரலாற்றில் குறிப்பிடத் தக்கது.

 

(ஆதாரம்:- சோமலெ எழுதிய தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் என்ற நூலில் 42ஆம் பக்கத்திலிருந்து இந்த விவரம் இங்கு தரப்படுகிறது)

 

 

காசி விசுவநாதர் ஆலயம் மட்டுமல்ல, பல்வேறு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர்கள் செட்டியார்களே. தங்கள் வருவாயில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆலயத்திற்கென அர்ப்பணித்த சமூகம் செட்டியார் சமூகம்.

தங்குவதற்குச் சத்திரம், உண்பதற்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிய தயாளர்களின் குலம் செட்டியார் குலம்.

செட்டியார்களில் குறிப்பிடத் தகுந்தவர்களின் பட்டியலை எடுப்பது என்றால் அது பெரிய புத்தக் தொகுதியாக மாறும்.

என்றாலும் கூட நேதாஜியை முதன் முதலாகம் படம் எடுத்த ஏ.கே.செட்டியாரை மறக்க முடியுமா?

 

கம்பனில் மனதைப் பறிகொடுத்து முத்தையாவாக இருந்த கவிஞன் கண்ணதாசனாக மாறி தமிழை வளர்த்த கதையைத் தான் சொல்லாமல் விட முடியுமா?

 

கம்பனுக்காகத் தன் சொந்தப் பெயரான சா. கணேசன் என்பதை கம்பனடிப்பொடியாக மாற்றி கம்பனின் பெருமையைப் பரப்புவதே தன் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு சாதனை படைத்த சா. கணேசனை நினைக்காமல் இருக்க முடியுமா?

தமிழை வளர்த்த கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோரையும் அரசு பதவிகளிலும் வணிக நிறுவனங்களிலும், கல்வி நிலை தனி முத்திரை பதித்த ஏனையோரையும், பதிப்பகங்களில் மனதைச் செலுத்தி புத்தகங்களை ஆயிரக்கணக்கில் வெளியிடும் பலரையும், திரைப்படத் தயாரிப்பில் தன்னிகரற்று வலம் வரும் பலரையும் பட்டியலிட்டு மாளாது.

 

இன்று கணினியில் சாப்ட்வேர் துறையிலும் செட்டியார்கள் முன்னணியில் நிற்பதைப் பார்க்கலாம்.

 

தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த செட்டியார்கள் ஹிந்து மதத்தின் தவப் புதல்வர்கள்.

 

அவர்கள் சிறிதும் தடம் பிறழாமல் தங்கள் முன்னோர் வகுத்த வழியில் செல்ல மன உறுதி பூண வேண்டும்.

அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!

Hindus Invented Helmet and Turban!!(Post No.4072)

Written by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 17-39
Post No. 4072
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Who invented Helmets and Turbans? It is Hindus who invented the helmets and turbans according to the Vedas.

Here is the proof:

Aitareya Brahmana, oldest Brahmana, ends with a remarkable spell. It is used against the enemies.

 

“All enemies and foes of him who knows this ceremony die round about him. Round him five deities are dying i.e lightning, rain, moon, sun and fire. The rain when fallen is absorbed by the moon which disappears; the moon at the time of the new is absorbed by the sun which disappears and out of fire the sun is born…..From the sun the moon is born………..From the moon the rain is born…..From rain lightning is born. In this way from the the moon the rain is born…..From rain, lightning is born………..In this way he puts his enemy down even should he wear a STONE HELMET (i.e well armed)”

 

Here the simile ‘Stone helmet’ shows that the Vedic society used it during wars. In the Near East we have some evidence for the use of helmet from 900 BCE. There is no wonder that the Vedic literature, which is older than the Assyrian  also mentioned it.

 

Helmet is called ‘Sipraa’ in the Vedas. It is found in several places in the Rig Veda and other Vedic books (pages 379 and 380 of Volume 2 of Vedic Index have all the references. But scholars are not able to agree on the meaning.)

Asvins use Ayah sipra (iron helmets) RV 1-101-10

Hiranya (gold) sipra, Hari sipra (Yellow) and Hiri sipra are also mentioned. The references are in the oldest and newest sections of the Rig Veda.

This shows that the Vedic society was a very advanced civilization. They fought wars wearing helmets. They celebrated Yagas wearing turbans. Head gear was an important part of their life. Indus Valley gods have horned crowns.

 

Turban

No Vedic ceremony is done without a turban. The chief (Yajaman) is made to wear a turban. Even in the temple Kumbabishekam ceremonies and Yagas we see the chief priest wears a turban. It is called Usniisa in the Vedic literature. Brahmana literature says that the Vratyas (Siddhas of Vedic days) also wore this Usniisa.

Vedic Index by Keith and Macdonell says

“Usniisa denotes the turban by the Vedic Indians, men and women alike (Aitareya Brahmana 6-1). The Vratya’s turban is expressly referred to in the Atharva Veda (15-2-1) and Pancavimsa Brahmana. A turban is also worn at the Vajapeya and the Rajasuya ceremonies by the king as a token of his position ( Satapata Brahmana 5-3-5-23)

In the wedding ceremonies of several communities we see the bridegroom wearing turbans.

 

Turbans and helmets are Hindus’ inventions. Sikh community, who are from the land of Vedas, wear this as a religious symbol.

 

 

-Subham–

கடவுள் கண்டெடுத்த முத்து! (Post No.4071)

Translated by London Swaminathan
Date: 11 July 2017
Time uploaded in London- 10-15 am
Post No. 4071

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதம் என்பது சம்ஹிதை (துதிப்பாடல் பகுதி), பிராமணம் (யாகம் செய்யும் வழிமுறைகள்), ஆரண்யகம், உபநிஷத் (தத்துவ விளக்கங்கள்) நிறைந்தது.

 

இதில் ரஹசிய மொழியில்தான் விஷயங்களைச் சொல்லுவர். இதில் ரிஷிகளுக்குள் ஒரு போட்டி! பேரானந்தம்!

 

ஆங்கிலம் மட்டுமே படித்த, இந்து கலாசாரமே தெரியாத– புரியாத – அறிவிலிகள் இது பற்றி ஏராளமாகப் பிதற்றியுள்ளன. வெளிநாட்டாருடன் போட்டி போட்டுக் கொண்டு மார்கஸீய அரை வேக்காடுகளும் குட்டையைக் குழப்பியுள்ளன.

 

யார் சொல்லுவதை நம்பலாம்?

காஞ்சி, சிருங்கேரி சங்கராசார்யார்கள் போன்ற சந்யாசிகள் சொல்லுவதை நம்பலாம். இந்து மதத்தில் நம்பிக்கை உடையோர் சொல்லுவதை நம்பலாம்.

 

யார் சொல்லுவதை நம்பக் கூடாது?

ஒழுக்கங் கெட்ட, வாழ்க்கையில் சத்தியத்தை, நேர்மையைக் கடைப்பிடிக்காத அதுகளையும் இதுகளையும் நம்பக்கூடாது. வெளிநாட்டிலிருந்து வந்து வேதத்தை மொழி பெயர்த்த பல அதுகளும் இதுகளும் நம்ம ஊர் அரசியல்வாதிகள் மாதிரித்தான். அதாவது ஒரு சாரார் இடமிருந்து காசு வாங்கி மற்றவர்களைத் திட்டுவது,

‘ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கல்ல’ என்று வீட்டில் பேசுவது இவர்களுடைய வாடிக்கை. நிற்க. நல்ல விஷயங்களுக்கு வருவோம்.

பிராமண நூல்களில் கிடைக்கும் சில அற்புதமான மேற்கோள்களைப் பார்ப்போம்

 

“சமுத்ரே த்வா மதனே சாதயாமி இதி.

மனோ வை சமுத்ர:

மனஸோ வை சமுத்ராத் வாசா அ ப்ரயா தேவாஸ் த்ரயீம் வித்யாம் நிரகனன்”

 

“மனம் தான் கடல்;

வாக்குதான் மண்வெட்டி (கரண்டி).

தேவர்கள் அந்த மூன்று வேதங்களையும் தோண்டி எடுத்தனர்”– சதபத பிராமணம் (7-5-2-52)

 

நாம் தமிழில் “கடலில் மூழ்கி முத்து எடுப்போம்” வாருங்கள் -என்று பல சந்தர்ப்பங்களில் சொல்கிறோம். அந்த இடத்தில், படிப்போருக்கு நாம் அரிய விஷயங்களை ஆழ்ந்து இறங்கி கண்டு பிடிப்போம் வாருங்கள், என்பது புரியும். அதைப் போல வேதங்கள் என்பது தேவர்கள்  — அல்லது அவர்களைப் போன்ற ரிஷிகள் — கண்டவை — மனக் கண்ணில் கண்டவை –என்பது தெளிவாகத் தெரியும். இதை அறியாத ஆங்கில மாக்கள் ” பாருங்கள் வேதங்கள் என்பவை பற்றி பலவிதமான கருத்துகள் இருக்கின்றன– ஆகவே அவைகளும் கவிஞர்களால் இயற்றப் ப ட்டவையே’’ என்று வாதிப்பர்.

ஆனால் நம்முடைய நூல்கள் ரிஷிகளை ‘மந்த்ர த்ருஷ்டா’ — மறை மொழிகளைக் ‘கண்டவர்கள்’ என்று சொல்லுகின்றன. ‘இயற்றியவர்கள்’ என்று எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக ‘அபௌருஷேயம்’ (மனிதர்களால் இயற்றப்படாதவை) என்றும் தெளிவாகச் செப்புகின்றன.

 

இப்போது நீங்களே தெரிந்து கொள்ளலாம். வேத வாழ்வைக் கடைப்பிடிக்காத வெளிநாட்டினர் சொல்லுவது சரியா? அல்லது நம்முடைய மூதாதையர்கள் சொல்லுவது சரியா என்று.

 

இங்கு அப்பர் தேவாரப் பாடலை ஒப்பிடுவது சாலப் பொருந்தும்

 

விறகில் தீயினன் பாலில்படு நெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

xxx

 

பிரஜாபதியின் தாடி

பிரஜாபதியின் (பிரம்மா) தாடி முடிதான் வேதங்கள்!

ப்ரஜாபதேர் வை ஏதானி ஸ்மஸ்ரூணி யத் வேத:

–தைத்ரீய பிராமணம் 3-39-1

xxx

சொற்களே வேதங்களின் தாய்!

“வாக் அக்ஷரம் ப்ரதமஜா ருதஸ்ய வேதானாம் மாதா அம்ருதஸ்ய நாபி:”

–தைத்ரீய பிராமணம் 2-8-85

“சொல் என்பது அழியாதது, முதலில் பிறந்தது, வேதங்களின் தாய், மரணமிலாப் பெருவாழ்வின் அச்சு (மூலாதாரம்)”

xxx

சரஸ்வதி

வாக், வாக் தேவி என்பதெல்லாம் சரஸ்வதியையும் குறிக்கும். சாதாரண மக்களுக்கு — பாமர மக்களுக்கு — இப்படி தத்துவ விஷயங்களைச் சொன்னால் புரியாதே என்பதற்காக பிற்காலத்தில் சரஸ்வதி முதலிய உருவங்களைப் படைத்து விளக்கினர். அதாவது எப்படி ரஹஸிய மொழி மூலம் அரிய கருத்துக்ளைத் தந்தனரோ, அதே போல சாதாரண கற்சிலை- விக்ரஹ — உருவங்கள் மூலம் அரிய– பெரிய கருத்துக்களை மனதில் பதிய வைத்தனர்.

xxx

பாகவத புராணம் சொல்லும்:

நான்முகனிடமிருந்து வேதங்கள் தோன்றின; “முன்போல எப்படி சொல் தொகுப்பை உண்டாக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு முகங்களில் இருந்து ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கையும் படைத்தார். அத்தோடு யாக யக்ஞங்கள், துதிகள் ஆகியவற்றையும் உருவாக்கினார்” — பாகவதம் 3-12-34)

(விஷ்ணு புராணமும் இதைச் சொல்கிறது).

xxxx

 

காயத்ரியிலிருந்து உண்டானது வேதம்

ஹரிவம்சம் சொல்கிறது–

“உலகைப் படைத்த பிரம்மா, மூன்றே வரிகள் உள்ள காயத்ரீயைப் படைத்தார் – அதுதான் வேதங்களின் தாய் – அந்த காயத்ரீயில் இருந்து நான்கு வேதங்களும் உருவாயின”

(இதன் உட்பொருள்- நான்கு வேதங்களில் காணப்படும் காயத்ரீ மந்திரம் முழு வேதங்களுக்கும் சமம் ஆனவை.

xxxx

மஹாபாரதம் சாந்தி பர்வதத்திலும்

“வேதானாம் மாதரம் பஸ்ய மஸ்தாம் தேவீம் சரஸ்வதீம், அதாவது, வேதங்களின் தாயான சரஸ்வதி என்னிடம் வசிக்கிறாள்” என்று சொல்லும்.

 

இவ்வாறு வேத, இதிஹாச, புராணம் மூலம் இழையோடும் கருத்துக்களை நாம் நுணுகி ஆராய்ந்தால் என்றுமுள – சாஸ்வதமான-  சத்தியத்தையே வேதங்கள் உரைக்கின்றன என்பது தெளிவுபடும்.

 

 

சுபம்–

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

பசு மாட்டுக்கு பள பள தோல் வந்தது எப்படி? (Post No.4069)

Translated by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 14-46
Post No. 4069

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பசு மாட்டுக்கு கொம்பும் குளம்பும் வந்தது எப்படி என்பதை போன வாரம் சொன்னேன். இன்று அதற்கு பளபளப்பான தோல் எப்படி வந்தது என்று பார்ப்போம். இது சதபத பிராமண (3-1-2-16) த்தில் உள்ள கதை.

 

“பசு மாட்டின் மீதுள்ள அதே தோல்தான் முன்னர் மனிதன் மீது இருந்தது. தேவர்கள் சொன்னார்கள்: ‘இந்த பூமியில் உள்ள எல்லோருக்கும் உணவு மற்றும்  வேறு பொருள்களை தருவது பசுதான்; ஆகையால் நாம் இப்போது மனிதன் மீதுள்ள தோலை எடுத்து பசுமாட்டுக்குப் போர்த்துவோம். அப்படிச் செய்தால் அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கும்’

 

இதன் பிரகாரம் மனிதனின் தோலை உரித்து பசு மாட்டின் மீது போர்த்தினார்கள்; அதற்குப் பின்னர்,  அந்த மாடு வெய்யிலையும், மழையையும் குளிரையும் தாங்கியது

 

மனிதன் தோல் உரிக்கப்பட்டதால், அவனை ஒரு புல்லோ, முள்ளோ அல்லது வேறு ஏதாவதோ  அறுத்தால் அவன் மீது ரத்தம் வருகிறது. பின்னர் தேவர்கள் அவனுக்கு தோல் என்னும் ( தோலுக்குப் பதிலாக) உடையை அணிவித்தார்கள். இதனால்தான் மனிதன் மட்டும் உடை அணிகிறான். ஆகையால் ஒருவன் சரியாக ஆடை அணிய வேண்டும். அப்போதுதான் அவன் முழுமை அடைகிறான். இதனால்தான் அவலட்சணமான மனிதனாக இருந்தாலும் எல்லோரும் உடை அணிவதை  எதிர் பார்க்கிறார்கள்; அதுதான் அவனுடைய தோல்.

 

ஒரு பசு மாட்டிற்கு முன்னால் கூட அவன் நிர்வாணமாக நிற்கக்கூடாது ஏனெனில் பசுமாடு பயந்து ஓடிவிடும்; மனிதன் தன் மீதுள்ள ‘அவனுடைய தோலை’ எடுத்துக் கொண்டு விடுவானோ என்று அதற்கு அச்சம்.

 

 

ஆகையால்தான் நல்ல உடை அணிந்தவன் மீது பசுக்கள் அன்புடன் இருக்கின்றன.

 

இந்தக் கதையில் பல நீதிகள் உள்ளன. மேம்போக்காகப் பார்த்தால் “குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம், பட்டனம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்” என்ற சின்னக் குழந்தை கதை போல இருக்கும். ஆனால் அஸ்வமேதம், ராஜசூயம் வாஜபேயம் போன்ற மாபெரும் யக்ஞங்களை விவாதிக்கும் – விவரிக்கும் — சதபத பிராமண நூலில் இது இருப்பதால் இது ரகசிய மொழியில் – மறை மொழியில் சொல்லப்பட்ட கதை என்பது விளங்கும்

 

யாராவது நிர்வாணமாக நின்றால் பசுக்கள் பயப்படுமாம். இந்த ஆள் உடை இல்லாமல் வ ந்தி      ருக்கிறான்; நம்முடைய உடைகளை (தோல்) எடுத்துக்கொள்வான் என்று நினைத்து ஓடிவிடுமாம்.

 

நல்ல உடை அணிந்தவர்கள் இடம் பசுக்கள் அன்பு பாராட்டுவது இதனால்தான்.

 

இந்தக் கதையிலிருந்து பெறப்படும் நீதிகள் என்ன?

  1. மனிதன் தோலைப் போர்த்துமளவுக்கு பசு உயர்ந்த பிராணி; அது மனிதனுக்கு நிகரானது. இதை ருசுபிக்கும் வகையில் நெட்டிமையாரின் புறநானூற்றுப் பாடல் (எண்.9) முதல் சிலப்பதிகாரம், தேவாரம் வரை பசுவையும் பார்ப்பனனையும் இணைத்துப் பேசியே புகழ்கின்றன.

 

2.இரண்டாவதாக பசுவுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்; ஒர் பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தர வேண்டும்; யாரும் நிர்வாணமாக நிற்கக் கூடாது அதற்காகத்தான் தேவர்கள் உடைகள் கொடுத்து இருக்கிறார்கள்.

 

(மனு ஸ்ம்ருதியும் பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்; பெண்களை அழ வைக்கும் எந்தக் குடும்பமும் வேருடன் அழியும் என்று எச்சரிக்கிறார்.)

 

பசு ஒரு புனிதமான பிராணி மட்டும் அல்ல; மிகவும் உபயோகப்படும் மிருகம். அதன் பால், வெண்ணெய், மூத்திரம், சாணி, தயிர் ஆகிய எல்லா வற்றையும் இந்துக்கள் அன்றாடம் பயன்படுத்துவர்.

 

எல்லாப் பிராணிகளுக்கும் இந்துக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுத்தாலும் பசுவுக்கு தனி இடம்; எறும்பு முதல் யானை வரை – என்ற மரபு வாக்கியம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உள்ளது. இத்தனைக்கும் உதவ இந்துக்கள் தினமும் ஐவேள்வி (பஞ்ச மஹா யக்ஞம்) செய்கிறார்கள். பசுவுக்கும் யானைக்கும் மட்டும் பூஜையும் செய்வார்கள்.

-சுபம்–

 

A Vedic Story: How did the Cow get a Shiny Skin? (Post No.4068)

Compiled by London Swaminathan
Date: 10 July 2017
Time uploaded in London- 10-20 am
Post No. 4068

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

There is a symbolic story in the Satapata Brahmana (3-1-2-16)

“That same skin which belongs to the cow was originally on man. The gods speak, ‘verily the cow supports everything here on earth; come, let us put on the cow that skin which is now on man; therewith she will be able to  endure rain and cold and heat’.

Accordingly having flayed man, they put that skin on the cow, and therewith now she endures rain and cold and heat. For man was indeed flayed; and hence wherever a stalk of grass or some other object cuts him, the blood trickles out. They then put that skin, the garment on him; and for this reason none but man wears a garment, it having been put on him as his skin. Hence also one should take care to be properly clad, so that he may be completely endued with his own skin. Hence also people like to see even an ugly person properly clad, since he is endued with his own skin. Let him then not be naked in the presence of a cow, for the cow knows that she wears his skin and runs away for fear lest he should take the sin from her. hence also cows draw fondly near to one who is properly clad”

 

 

Taittiriya Brahmana has the following passage:

“That a calf extorted a promise from certain sacrifices not to milk a cow within the first ten days after calving, and to let the calf suck for a fifth of the day after milking, and that for all time the promise has been honoured” (2-1-1-4)

Silence is observed when cows are milked.

My comments:

This story shows that the cow is the most sacred animal. It is needless to say that is the most useful animal. The cow is treated like a human being, particularly like a woman, who should be given all respect. Manu Smrti says that a woman must be respected, adorned and adored; if she is made to cry the family will be destroyed lock stock and barrel.

Probably they want us to understand that cows and human beings are same when it comes to giving respect. In Sangam Tamil literature and in the later devotional Tamil literature Brahmins and cows are treated equally.

 

This story can be interpreted in many ways. One should not misbehave in front of the cows or with the cows. One should also note that no other animal is dealt with in this way. Hindus gave respect to all animals  — Sanskrit and Tamil literature has stock phrase “from ant to elephant”—- the animals from plankton to whale should be fed and respected. Hindus do it in life every day. They do use flour to feed the ants when they draw kolams (rangoli) in front of their houses. It is a common decoration seen in front of all the houses in South India. This is part of Pancha Yajna (five sacrifices0 done by all orthodox Hindus.

Also read

How did Cow get Hoofs and Horns? A Vedic Story (Post No.4059)

Posted on  7 July 2017

–Subham–

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்! (Post No.4067)

Written by S NAGARAJAN

 

Date: 10 July 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4067

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பிராத்தனை இரகசியம்

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!

ச.நாகராஜன்

 

பிரார்த்தனையில் மகான்களும் ரிஷிகளும் வேண்டுகின்ற பான்மையே தனி. ஆகவே தான் அவர்களுடைய பிரார்த்தனையையே நாம் சொல்லி உய்ய வழி தேடுகிறோம். புதிதாகச் சொற்களைக் கோர்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

 

அருணகிரிநாதரின் திருப்புகழ் இந்த வகையில் ஒரு தனித் தன்மை கொண்டதாக இலங்குகிறது.

எடுத்துக்காட்டாக இரு இடங்களில் வரும் இரண்டிரண்டான பிரார்த்தனை வேண்டுகோளை இங்கு பார்க்கலாம்.

 

 “மதியால் வித்தகனாகி

மனதால் உத்தமனாகி” (கருவூரில் பாடியது – மதியால் வித்தகனாகி எனத் தொடங்கும் பாடல்)

 

இருக்க வரம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

மதியால் ஒருவன் வித்தகன். ஆனால் அவன் உத்தமன் இல்லை. மகா புத்திசாலித்தனத்தை ஊரை ஏய்ப்பதில் பயன்படுத்தி என்ன பிரயோஜனம்?

 

மனதால் ஒருவன் உத்தமன். ஆனால் சாமர்த்தியசாலி இல்லை. ஊரார் எல்லோரும் அவன் மேல் “குதிரை ஏற”த்தானே செய்வர்.

 

ஆகவே மனதால் உத்தமனாக இருக்கும் ஒருவன் மதியால் வித்தகனாக இருந்தால் தான் அவனும் செழிப்பான். ஊரும் செழிக்கும்.

 

அற்புதமான இந்த இரட்டை வேண்டுகோளை அருணகிரிநாதர் முன் வைக்கிறார்.

 

நானும் வாழ வேண்டும்; நான் சார்ந்திருக்கும்ச் சமுதாயமும் வாழ வேண்டும் என்ற அற்புதமான இந்தக் கொள்கையை என்ன ‘இஸம்’ என்று பிராண்ட் செய்வது.

 

கம்யூனிஸம். சோஷலிஸம் என்று பல இஸங்களைச் சொன்னாலும் அருணகிரிநாதரிஸம் முன்னால் எடுபடுமா, என்ன?

இன்னொரு இடத்தைப் பார்ப்போம்.

“அறிவால் அறிந்து உன்

இரு தாள் இறைஞ்சும்”

அடியார் இடைஞ்சல் களைவோனே

என இப்படி முருகனின் அருள் திறத்தைப் பாடுகிறார். (திருச்செந்தூரில் பாடியது – விறல்மாரனைந்து எனத் தொடங்கும் பாடல்)

 

அறிவால் அறிந்து முருகன் இருதாள் இறைஞ்சும் படியான வாழ்க்கை தர வரம் வேண்டுகிறார் அவர்.

 

ஒருவன் மிகப் பெரிய விஞ்ஞானி. அவன் அறிவால் ஆராயாத விஷயமே இல்லை. ஆனால் அவனுக்கு இறைவன் என்ற மஹாசக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அவன் இருந்து என்ன பிரயோஜனம். அவன் இருந்தும் இறந்தவனே!

 

 

இன்னொருவன் சதா இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாள் நிச்சயம் அவன் இறைவன் அருளால் உய்வைப் பெறுவான். ஆனால் மஹாசக்தியின் உண்மையை அவன் அறிந்து கொண்டால், அந்த அறிவின் அடிப்படையில் தன் பிரார்த்தனையை அவன் புரிந்தால் அவனுக்கு ‘இன்ஸ்டண்ட்  அருள்’ அல்லவா கிடைக்கும்?!

இதைத் தான் அருணகிரிநாதர் விரும்புகிறார்.

இறைவன் தந்த அறிவு அவனை அறிவதற்கே.

 

 

கற்றதனால் ஆய பயன் என்கொல்?

வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (வள்ளுவரின் குறள்)

 

 

இப்படி இரண்டிரண்டாக அவர் வேண்டுவதைத் திருப்புகழ் நெடுகக் காணலாம்.

 

ஆகவே தான் அந்த அருளாளரின் திருப்புகழைப் பாடினால் அனைத்தும் நமக்குச் சேரும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

 

மகாத்மா காந்திஜி கூட மிக மோசமான பாவங்களைப் பட்டியலிட்ட போது இப்படி இரு விஷயங்களை இணைத்தே பட்டியலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்:

 

உழைக்காமல் வரும் ஊதியம்

Wealth without Work

மனசாட்சி இல்லாத இன்பம்

Pleasure without Conscience

ஒழுக்கம் இல்லாத அறிவு

Knowledge without Character

அறப்பண்பு இல்லாத வாணிபம்

Commerce without Morality

 

மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் Science without Humanity

தியாகம் இல்லாத மதம்

Religion without Sacrifice

கொள்கை இல்லாத அரசியல்

Politics without Principle

 

இந்த ஏழு பாவங்களை விலக்கிய சமுதாயம் மேன்மையுறும்.

 

பெரியோர்கள், அருளாளர்கள், மகான்களின் வாக்குகளில் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் உவகையுறுகிறது.

அவர்கள் கூறிய தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தங்களே, வேத மந்திரங்களே, உபநிடதங்களே நமக்குப் போதும். புதிதாக ஒன்றையும் புனைந்து பிரார்த்தனை செய்ய அவசியமில்லை என்று ஆகிறது.

 

 

ஆயிரக்கணக்கான நாமாவளிகள், பாடல்கள், தோத்திரங்கள், மந்திரங்கள் உள்ளன.

நமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அறிவையும் பக்தியையும் இணைத்தவர்களாக ஆவோம்!

அவர்களின் பிரார்த்தனைகளை வாயால் ஓதி மனதால் இருத்தி முன்னேறுவோமாக!

***