MANU IN TAMIL VEDA TIRUKKURAL: Rev GU Pope and Father Beschi compare -1 ( Post No.4459)

MANU IN TAMIL VEDA TIRUKKURAL: Rev GU Pope and Father Beschi compare -1 ( Post No.4459)


Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  21-07

 

 

Post No. 4459

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Rev. G U Pope, a Tamil scholar and Christian preacher published The Sacred Kural of Tiruvalluva Nayanar in 1886 with his English translation. Throughout the book he had used his predecessors’ views. He had used Italian Jesuit priest Constantine Joseph Beschi’s Latin translation of Tirukkural, the Tamil Veda and also the translation of Ellis. They have compared some of the Kural couplets with the Manu Smrti, also known as Manava Dharma Shastra.

I will give their list below:

 

 

Role of a King

Valluvar says in his Kural Couplets,

The world clings to the feet of the great leader who wields his sceptre with love for his subjects (Kural 544)

The leader saves his subjects from enemies and flawlessly punishes wrong doers (549)

The judge gives capital punishment to wicked killers like removing weeds from a flourishing field (550)

 

 

Manu says in the Seventh Chapter,

  1. Let him be ever ready to strike, his prowess constantly displayed, and his secrets constantly concealed, and let him constantly explore the weaknesses of his foe.
  2. Of him who is always ready to strike, the whole world stands in awe; let him therefore make all creatures subject to himself even by the employment of force.
  3. Having fully considered the purpose, (his) power, and the place and the time, he assumes by turns many (different) shapes for the complete attainment of justice.
  4. The (man), who in his exceeding folly hates him, will doubtlessly perish; for the king quickly makes up his mind to destroy such (a man).

xxxxxx

Oppression of a Tyrant

Valluvar says in his Kural Couplets,

The leader who does not injure and adopt proper measures each day – his kingdom will perish day by day (Kural 553)

 

Let them that want their greatness to continue begin with sternness and punish within measure (562).

 

Manu says in the Seventh Chapter,

  1. Having fully considered the time and the place (of the offence), the strength and the knowledge (of the offender), let him justly inflict that (punishment) on men who act unjustly.

 

  1. Let the king, having carefully considered (each) affair, be both sharp and gentle; for a king who is both sharp and gentle is highly respected.

xxxxx

Espionage

Valluvar says,

Kural Couplets 581-590

The reports given by one spy must be tested and verified through another spy (Kural 588)

The spies must be sent one by one, apart; if three spies agree, the information shall be confirmed (589)

Able spies watch keenly the officers, kinsmen and the enemies and all for information (584)

 

Manu says in the Seventh Chapter

  1. Let that (man) always personally visit by turns all those (other officials); let him properly explore their behaviour in their districts through spies (appointed to) each.
  2. For the servants of the king, who are appointed to protect (the people), generally become knaves who seize the property of others; let him protect his subjects against such (men).
  3. On the whole eightfold business and the five classes (of spies), on the goodwill or enmity and the conduct of the circle (of neighbours he must) carefully (reflect).

xxxxxxxx Subham xxxxxxxxxxxxx

 

 

 

கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6 (Post No.4458)

Written by London Swaminathan 

 

Date: 4 DECEMBER 2017 

 

Time uploaded in London-  12-34

 

 

Post No. 4458

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இதற்கு முந்தைய ஐந்து பகுதிகளைப் படித்துவிட்டு இதையும் படிப்பது பொருள் விளங்க உதவும்.

எனது விமர்சனத்தை இறுதியில் கொடுத்துள்ளேன்.

 

ஸ்லோகம் 71: தேவர்களுக்கு ஒரு யுகம் என்பது 12,000 தேவ வருடங்கள்; அதாவது நாலு யுகங்கள்.

 

72.தேவர்களின் ஆயிரம் யுகம் பிரம்மனின் ஒரு நாள். இதே போல இரவும் ஆயிரம் யுகம்.

 

73.பிரம்மனுடைய பகல் புண்ணிய காலம்; இரவு சொப்பன காலம். ஆயிரம் யுகங்களுப் பின்னர் பிரம்மனின் ஆயுள் முடிகிறது.

74.பிரம்மா விழித்துக்கொண்டவுடன் பூர், புவ, சுவர் லோகங்களை மீண்டும் படைக்கிறார். ஏனெனில் தினப் பிரளயத்தில் அழிவது இந்த மூன்று உலகங்கள் மட்டும்தான். இதுவே சத், அசத் (நல்லது, கெட்டது).

75.பிரம்மாவின் மனதில் தோன்றிய ஆசை முதலில் ஆகாயத்தைப் படைக்கிறது; அதன் குணம் சப்தம் (ஒலி)

76.அந்த ஆகாயத்திலிருந்து நறுமணம் நிரம்பியதும், தூய்மையுமானதும், வலிமை நிரம்பியதாகவும் காற்று உண்டாகிறது. இதன் குணம் ஸ்பரிசம்; அதாவது தொடும் உணர்ச்சி.

 

  1. அந்த வாயு என்னும் காற்றிலிருந்து ஒளிமிகுந்த தேயு, அதாவது தீ உண்டாகிறது. அதன் குணம் உருவம் (ரூப). அது இருளைப் போக்கும்

 

78.தேயு எனப்படும் தீயிலிருந்து அப்பு எனப்படும் தண்ணீர் உண்டாகிறது. அதன் குணம் ருசி (சுவை). அதிலிருந்து பிருதுவி என்பப்படும் பூமி தோன்றுகிறது; அதன் குணம் (இயல்பு) வாசனை (கந்தம்).

இதுதான் தினப் பிரளயம் என்பது; அதாவது பிரம்மாவின் ஒரு நாள்

 

  1. பன்னீராயிரம் தேவ வருஷம் ஒரு தேவ யுகம் என்று சொல்லப்பட்டதல்லவா? அது போல 71 முறை நடந்தால் ஒரு மனுவின் அதிகாரம் முடிந்ததாகிவிடும்; அதைத்தான் மன்வந்தரம் என்கிறோம்.

 

80.இவ்வாறு அளவற்றதான மன்வந்தரங்களின் சிருஷ்டியும் சம்ஹாரமும் (படைப்பும் அழிப்பும்) பரம்பொருளின் விளையாட்டு போல நிகழ்கிறது’

 

  1. (முதல் யுகமான) கிருத யுகத்தில் தருமமும் சத்தியமும் நான்கு கால்களுடன் நிற்பதால் மனிதர்களுக்குத் துன்பம் என்பதே கிடையாது.

82.மற்ற யுகங்களில் களவு, பொய், வஞ்சகம் ஆகியவற்றால், அறவழியில்லாத வகையில் சம்பாதிக்கப்பட்ட பொருள், கல்வி அறிவால், தர்மம் என்பது ஒவ்வொரு காலாக (பகுதியாகக் ) குறைகிறது.

 

83.கிருத யுகத்தில் மனிதனின் ஆயுள் 400 வருஷம். நோய் நொடிகள், துன்பம் இராது. அவர்கள நினைத்தது நடக்கும்; கிடைக்கும்; தவ வலிமையால் ஆயுளை அதிகரிக்கவும் இயலும்.இதற்கு அடுத்தடுத்த யுகங்களில் வயது நூறு நூறாகக் குறைந்து கொண்டே வரும்

 

84.மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட ஆயுளும், நினைத்ததை முடிக்கும் வல்லமையும், பிராமணர்களின் சாபங்களும் அனுக்கிரகங்களும் யுகத்திற்கேற்றவாறு பலன் தரும்

  1. .கிருத யுகத்தின் தர்மம் வேறாகவும் திரேதா யுகத்தின் தர்மம் வேறாகவும் துவாபர யுகத்தின் தர்மம் வேறாகவும் கலி யுகத்தின் தர்மம் வேறாகவும், யுகத்திற்குத் தக்கவாறு குறைவாக வரும்.

 

86.கிருத யுகத்துக்குத் தவமும், திரேதா யுகத்துக்கு ஆத்ம ஞானமும், துவாபர யுகத்துக்கு யக்ஞம் எனப்படும் வேள்வியும், கலியுகத்துக்கு தானம் எனப்படும் கொடுத்து உதவுதலும் முக்கிய தர்மமாக இருக்கும்

 

87.அந்த பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக,  தனது முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றிலிருந்து முறையே பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ர வருணத்தாரைப் படைத்து அவரவர்களுக்கு உரிய தொழில்களை தனித் தனியாக வகுத்தார்.

 

88.பிராமணர்களுக்கு ஆறு தொழில்களைக் கொடுத்தார்; வேதம் கற்றல், கற்பித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல், வேள்விகளைச் செய்தல், செய்வித்தல்

 

89.க்ஷத்ரியர்களுக்கு வேதம் ஓதுதல், குடிமக்களைக் காத்தல், தானம் கொடுத்தல், வேள்விகள் இயற்றல் முதலிய கருமங்களைக் கொடுத்தார். அத்தோடு பாட்டு, கூத்து, பெண்கள் ஆகியவற்றில் ஈடுபடவும் தடை போட்டார் (கேட்பதற்கோ காண்பதற்கோ, ஆதரவு தருவதற்கோ தடை இலை. தானே அந்தத் தொழிகளில் ஈடுபடுவதற்கே தடை)

 

90.வஸ்யர்களுக்குப் பசுவைக் காத்தல், தானம் கொடுத்தல், வேதம் ஓதுதல், பூமியிலுண்டான இரத்தினம், நெல் தானியங்களில் வியாபாரம் செய்தல், வட்டி வாங்குதல், பயிரிடுதல் ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

 

 

  1. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்யும் தொழிலை ஏற்படுத்தினார்.

xxxx

 

எனது கருத்து

 

மனு நீதி நூலைக் குறை கூறுவோர் அதிலுள்ள எல்லா விஷயங்களையும் ஏற்பதானால்தான் அதைக் குறை கூற  முடியும். மனு தன்னுடைய நீதி த்ருஷத் வதி– சரஸ்வதி நதி தீரத்துக்கு இடைப்பட்ட நீதிகள் என்று சொல்கிறார். மற்றவர்கள் ஏன் அதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்? அதாவது வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்குவது இதுதான்

 

மனு, கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மக்களின் வயது என்றும் ஒவ்வொரு யுகத்திலும் 100 வயது வீதம் குறைந்து கொண்டே வரும் என்றும் சொல்கிறார். மற்ற விஷயங்களில் மனுவின் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வோர் இது பற்றி இயம்புவது யாதோ?

 

குறை கூறுவோரை ஒதுக்கிவிட்டு நாம் இதை (400 ஆண்டுகள் மக்களின் வயது) ஆராயப் புகுந்தால், இதுவரை அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. ஆனால் சண்டை சச்சரவு, நோய் நொடியில்லாத அமைதியான வாழ்க்கை வாழ்வோர் 120 முதல் 150 ஆண்டுவரை வாழ்ந்ததற்கு சான்று உண்டு.

 

மனு தர்மமோ, பகவத் கீதையோ வர்ண ஆஸ்ரமம் பற்றிப் பேசும்போது அது தொழில் முறைப் பகுப்பு என்றே சொல்கின்றன. ஆயினும்  புரோகிதர் மகன் புரோகிதனாகவும் மன்னர் மகன் மன்னனாகவும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஐயர் மகன், ஐயராக இருப்பது தப்பு என்று சொல்லுவோர்,  உ லகம் முழுதும் மன்னன் மகன் மன்னனாக — பரம்பரைத் தொழிலாக — இருந்ததை ஏன் குறை கூறுவதே இல்லை. அது சரி என்றால் புரோகிதர் மகன் புரோகிதனாக இருந்ததைப் பற்றிக் கவலைப் படவோ ஆதங்கப்படவோ உரிமை இல்லை.

 

 

இப்போது அரசியல்வாதி மகன் அரசியல்வாதியாகவும், சினிமா நடிகர் மகன் சினிமா நடிகராகவும் இருப்பதை ஏன் குறை கூறுவதில்லை; ஒவ்வொரு து றையிலும் இப்படிப் பார்க்கிறோம். ஆகவே, அந்தக் காலத்தில் இப்படி இருந்ததில் என்ன வியப்பு? என்ன குறை?

 

யாரும் யாரையும் முன்னேற விட முடியாமல் தடுத்தால் தவறு. அப்படி ஒரு சான்றும் இல்லாமல் பிராமணர்களும் கூட மன்னனாகவும், மன்னர்களும் கூட பிராமணனாகவும் மாறியதை புராண, இதிஹாசங்களில் படிக்கிறோம்.

 

பெரும்பாலும் குலத்தொழில் முறைதான் இருந்தது. தமிழ் மன்னரின் மகன்தான் தமிழ் மன்னரானான். பாமரன் ஆகவில்லை! இதில் ஏன் குறை காண்பது இல்லை?

பிராமணர்- சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள் மட்டுமே இருப்பதாக திராவிட அரசியல்வாதிகள் கிளப்பியதும் பொய்; ஆரியர்- திராவிடர் என்ற இரண்டே இனங்கள்தான் உண்டு என்று வெளிநாட்டினர் பரப்பியதும் பொய்; பிறப்பு மட்டுமே ஜாதியை நிர்மாணிக்கும் என்பதும் தவறு என்பதை புராண, இதிஹாசங்களைப் படிப்போருக்கு நன்கு விளங்கும்.

நான் ஐந்தாம் பகுதியில் சொன்னது போலவே வெவ்வேறு காலக் கணக்கீடு உள்ள பல வெளி உலகங்கள் இருப்பதும் மேற்கூறிய ஸ்லோகங்கள் மூலம் தெரிகிறது.

யுகங்களைப் பற்றிய மநுவின் வர்ணனை மிகவும் அழகானது. கிருதயுகத்தை ஒரு பசுமாடாக கற்பனை செய்தால் அதற்கு 4 கால்கள்; அடுத்தது த்ரேதா யுகம் அதற்கு மூன்றே கால்கள்; அடுத்தது த்வாபர யுகம் அதற்கு இரண்டே கால்கள்; அடுத்தது கலியுகம்; அதற்கு ஒரே கால்; நாம் வாழும் காலம்!

 

யுகங்கள் இறங்கு வரிசையில் பெயர் இடப்பட்டதும் இந்த பசு அல்லது ஒரு டேபிள் (Table or Chair) என்ற கற்பனையில்தான் போலும்! த்ரே=3, த்வா=2; பின்னர் கலியுகம்.

 

நான்கு வருணத்தாரும் உண்டான விதம் ரிக் வேதத்தில் புருஷ சூக்த துதியில் (10-90) வருகிறது. அருமையான கற்பனை; பிராமணன் வாயினால் பிழைப்பதால் (வேதம் ஓதி) முகத்திலிருந்து வந்தான் என்றும் போர்வீரன் தோள் பலத்தால் பிழைப்பதால் தோளிலிருந்து க்ஷத்ரியன் வந்தான் என்றும் உழுதும் வியாபாரம் செய்தும் பிழைப்பதால் வைஸ்யன் தொடையில் இருந்து வந்தான் என்றும் உடல் உழைப்பால் பிழைப்பதால் சூத்திரன் காலில் இருந்து வந்தான் என்றும் சொல்லும்; இந்த உடலில் எந்த உறுப்பு இல்லாவிடிலும் அது மனிதன் இல்லை. அது போல சமுதாயத்தில் இந்த நான்கு உறுப்புகள் இல்லாவிடில் அது சமுதாயம் இல்லை. இன்றும் கூட இந்த நான்கு தொழில்கள்தான் உலகின் மிகப்பெரிய தொழில்கள்: கல்வி; படைகள், வணிகம், உடலுழைப்பு வேலைகள்.

2600-க்கும் மேலான பாடல்கள் அடங்கிய மனுநீதியில் இப்போதுதான் 91 ஸ்லோகங்களை முடித்துள்ளோம்.

 

தொடரும்—————-

 

கம்பன் கவி மந்திரம் (Post No.4457)

Date: 4 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-51 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4457

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 9)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

மழைத்தாரை போலப் பொழியும் காவிய அமுதால் கம்பன் கவி மந்திரம் அமைத்தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

 

பாடல் 58

வில்லெடுக்கும் மீளிகை விரல்தெரிந்த வாளி போற்

சொல்லெடுக்கும் வன்மையி லவைதொடுக்குஞ் சூழ்ச்சியில்

எல்லெடுக்கும் கம்பன்முன் னெதிரடுத்த பாவலர்

புல்லெடுக்கும் போர்மறவர் போலொதுங்கிப் போவரே

 

பாடல் 59

சொல்லினுட் டுவன்றலாம் பொருட்டொரும் தெருட்டலோ

கல்லினுட் டுறுமணுக் கலைத்தெடுத்த லாகுமோ

புல்லுட னுயிர்த்திறன் பொறித்திறன் புலத்திறன்

எல்லைமாய வொன்றினொன் றெழுந்தவா றெழுதவால்

 

பாடல் 60

கடல்மடைதி றந்தகாட்சித் தாயினுங்கம் பன்கவி

அடலடைந்தொ ளிர்சொல்வ னத்துமட்டி னன்றுகாண்

உடலடைந்தி யக்குயிர்போ லொண்பொருளூ டோடியாற்

றிடையடைந்தொ ழுக்குபோலி சையுமுன் னிழுக்குமால்

 

பாடல் 61

நாடிநாடிப் பாவல்லோர் நயந்தசெஞ்சொல் மாமணி

மூடிமூடி வைத்தசெப்பும் முற்றுமுட்டல் செய்வதோ?

தேடித்தேடிச் சென்றுமன்னார் சேர்கிலா மணித்திரள்

கோடிகோடி யாக்குவிக்கும் கம்பனாழி கூலமே

 

பாடல் 62

ஐயின் வாரிக்கொண்டவா ரமுதளாவு சீர்பதம்

கையின் வாரித் தூவினர்மற் றைக்கவிஞர்; கம்பனோ

மெய்யின் வாரிக் கொண்டசொல் விரைமுகந்து போகமே

வையமாரு மாறுவட்டி வட்டியாகக் கொட்டினான்

 

வேறு

பாடல் 63

பொருள்தேடிடப் புகுவார்மிடிப் புரையாடிடல் முறையோ

தெருளாய்ந்துறத் திரிவார்செறி மருள்மாய்ந்திடல் திறனோ

அருனாடிய உளத்தார்கவி யருட்பாவினை மிகத்தாம்

சுருள்குடுசூத் திரமாமெனத் தொகுத்தாரிருள் மிகுத்தார்

 

பாடல் 64

முன்னார்வினை விளைவோகலை முடிப்பார்தவ முடிவோ

மின்னார்தமிழ் மிளிர்மேனியின் மெலிவோ பிணிநலிவோ

பின்னாளுறை வார்கொண்டதோர் பித்தோ கவிமுத்தேன்

சின்னாபின மாக்கிட்டுருச் சிதைத்தார்திருப் புதைத்தார்

 

பாடல் 65

அறியார்செயுந் தீங்கோசிறி தறிந்துமறி யாராய்

வெறியார்புரி வினைமுன்னரே வெளிறாமெனல் மெய்யே

குறியாதுமுன் னார்பாட்டுறை குறைப்பெய்தனர் பின்னார்

செறியாதன செருகாங்கவி யுளவோவுளச் செருக்கால்

 

பாடல் 66

குருடனெறி காட்டக்குறி யிடங்கூடிடல் செலுமோ?

புருடன்வெலாப் போரையொரு  பூவைவெலப் புகுமோ?
அருடன்வரத் தாலாங்கவி யறிவானரு ளிலையேல்

மருடன்வயத் தாராய்தொடர் வழிவிட்டுழல் வாரே

 

பாடல் 67

எல்லார்விரி வெயிலைச்சில ரிருளோவென மருளாப்

புல்லார்சிறு விளக்காலொளி புகட்டப்புகுந் தனரே

முல்லைமுருக்கவிழ்மாமணம் முடையென்றிவ ரடையாம்

வில்லைவெறி யளவாவெறி யளவாமிகுத் துரைத்தார்

 

பாடல் 68

அழகுக்கழ கணிதலருஞ் செயல்யாவினு மரிய

பழுதும்பழக் கனிவைப்படுங் கனியாக்கலும் பழுதே;

மழைத்தாரைபோற் கம்பன்பொழி வான்காவிய வமுதைக்

குழைத்தாரென லன்றிச்சுவை குவித்தாரென லாமோ?

 

பாடல் 69

தெய்வமணம் நாறியுயிர் திளைக்குங்கவித் தெறியற்

செய்வான்வரு மலரோசிறு தரைசிந்தின வலவே;

மெய்வானுறைதரு நின்றவன் மிளிர்மாலர் பொறுக்கிப்

பெய்வாந்தனிப் பிணையலிதைப் பிறிதார்கமழ் பிணிப்பார்

 

பாடல் 70

மின்னற்பிழம் பாலுமெரி வெயிலோன்கதி ராலும்

பொன்னினொளி யாலுஞ்சுவர் போக்கிமணிக் குவைக்காழ்

தன்னிற்புரை தபுத்தேசவி தனதந்துயர் கம்பன்

கன்னிக்கூர் காலம்பொலி கவிமந்திர மமைத்தான்

 

பாடல் 71

கவிமாளிகை புனைவாரிவண் கடந்தேகவின் கிடந்த

சவியோவியச் சமைப்பால்விழி யிமைப்பற்றுயிர்ப் பெடுப்பர்

புவியுள்ளுற யொருவனிதிற் புரைகாணிய விரைவான்

அவிகொள்வன வமுதிற்சுவை யறுபாகமாய் வானே

 

வேறு

பாடல் 72

சொல்கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல்கண்டார் எல்லே கண்டார்; இனிமை யோடிகலுஞ் சந்த

மல்கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல்கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?

 

பாடல் 73

மொழிவளம் மொழிகு வேனோ? மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம் புகலு கேனோ? பொருள்வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ? காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்

 

வேறு

பாடல் 74

பொன்கொண் டிழைத்தமணி யைக்கொடு பொதிந்த

மின்கொண் டமைத்தவெயி லைக்கொடு சமைத்த

என்கொண் டியற்றியவெ னத்தெரிகி லாத

மன்கொண் டமாமதிம ருட்கேவி மாடம்

***

கம்பனின் சொற்களாலேயே கம்பனைப் புகழும் வித்தையைக் கொண்டவர் கவிஞர் சிவராஜ பிள்ளை. கம்பன் கையாண்ட அதே சந்தத்தை அவர் கையாளும் போது சுவை இன்னும் கூடுகிறது.

கம்பன் முன் மற்ற கவிஞர்கள் போர்க்களத்தில் புல் எடுக்கும் மறவர் போல ஒதுங்கி ஒடுங்கி ஓடி விடுவர்.

முன்னவர் செய்த வினையின் விளைவோ என்னவோ! கவிதையின் உரு சின்னாபின்னமாகப் போகும் நிலை! குருடன் வழி காட்டப் போகுமிடம் செல்ல முடியுமா? பெரிய போர் வீரனான புருஷன் வெல்ல முடியாத போரை அவனது மனைவி வெல்ல முடியுமா? கவிஞனின் உளத்தை அறிந்தோரின் அருள் பெறாவிட்டால் அவன் கவிதையின் பொருளை உணர முடியாது.

கம்பனது பாடல்களை ரஸிக்கப் போனவர்கள் சொல் இன்பப் பிரியர்களாக இருப்பின் சொல் இன்பத்திலேயே திளைத்து நிற்பார்கள். அதில் விளங்கும் பொருளின் ஒளி கண்டவர்கள் அதிலேயே லயித்திருப்பர். இப்படிப்பட்ட அபூர்வ கவிஞரின் மொத்த நூலை யார் தான் முடியக் கண்டார்? ஒருவரும் இல்லை!

காலம் வென்ற ஒரு கவி மந்திரம் அல்லவா கம்பன் அமைத்து விட்டான்!

 

மொழிவளத்தைப் புகழ்வதா! கதைத் தருணம் நினைத்துப் பொழிகின்ற தன்மையைப் புகழ்வதா? பொருள் வளத்தைப் புகழ்வதா?

 

என்று இப்படி உளத்திலிருந்து எழும் சொற்களால் கம்பனின் அருமையை விதந்து கூறுகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

இதுவரை 90 பாடல்களில் 74 பாடல்களைப் பார்த்து விட்டோம். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள பாடல்களைப் பார்ப்போம்.                                                                                        அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

*********** SUBHAM ******************

 

 

 

Interesting Story of Dirgatamas in the Veda and Mahabharata (Post No.4456)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  15-07

 

 

Post No. 4456

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Dirgatamas of Rig Veda was one of the famous blind poets like Homer of Greece. But he lived at least a few thousand years before Homer of Odyssey and Iliad. Dirgatamas meant ‘Long Darkness’. He was the son of Mamata and Ucathya. So he is known with two surnames Mamateya and Aucathya. His son was Kakshivan who was also a famous poet in the Rig Veda.

Though he was born blind he recovered his vision at the end. He lived a full hundred years. His name is found in the Rig Veda and Sankayana Aranyaka. In the Aitareya Brahmana, he was praised as the priest of the most famous king Bharata, whose name is given to India that is Bharat. He was thrown in to the river Ganga

 

In his old age by his servants. Traitana attacked him but killed himself. When he was floating in a raft in the River Ganga, he was rescued by the king of Anga Desa. There he married a slave girl by name Usij.

Though there are some contradictions in the Mahabharat version given below, we are able the get the outline of his life story.

Mahabharata version

He was the son of a Brahmana coupe- Uthathya and Mamata. His father’s younger brother Brihaspati forcibly possessed Mamata while she was pregnant.  The child inside her asked Brihaspati not to enter as there was very little space. When Brihaspati still insisted the child inside Mamata’s womb pushed out Brihaspati’s seed. Brihaspati became angry and cursed the baby in the womb to become blind. Thus, Dirgatamas was born blind.

 

He became a very learned seer and married Pradveshi. They had five children including Gautama. Some of the seers in the community hated Dirgatama and persuaded Pradveshi and his sons to send him out. They asked the servants to float him in a raft in the River Ganga so that he could find a better place to live.

 

Dirgatama was lucky to be found by the King Baliraja of Anga Desa. Hearing his full story he wanted to get him a child through his wife Queen Sudeshna. She had no issues and in those days kings without wards to succeed approached Brahmin seers to get them children.

Though Dirgatamas consented, queen Sudeshna did not like the idea of going to bed with a blind man. she feared her child would also be born blind and so she sent one of her maids to him. They had several children including Poet Kakshivanth.

One day the king asked Dirgatamas whether all of the children were his own, Dirgatamas told him the truth. The king insisted that Sudeshna should have a child through Dirgatamas and as a result they had five children: Anga, Vanga, Kalinga, Pundra and Suhya. Each one of them was given a region to rule and they started their own dynasties.

 

This anecdote was narrated by Bhishma to Queen Satyavati to support the suggestion that a Brahmana be invited to produce children in the wives of Vichitraveerya who had died childless.

 

This is in the Adi Parva of Mahabharata.

 

From the stories in the Rig Veda, Aranyakas, Brahmanas and the epic, we are able to get the facts:

Dirgatamas was born blind. He was married and had children. He was hated by some jealous seers. They made his wife and children to send him out of his home. So he was floated in the River Ganges. He was rescued by a king. He produced children thorough King’s wife at the request of the king. They started new dynasties.

The reason attributed to his blindness is also based on medical science. If a pregnant woman was put under pressure through domestic violence o rape, then the child would be affected due to stress. Since Mamata was forcibly taken by her husband’s brother, it was possible that the child was born handicapped.

 

Dirgatamas became famous for his number symbolism and his quotations on one god with different names, four types of sounds and Adam and Eve story (At/dma= adam; Eve= Jeeve Atma) in the two birds on the same branch episode, in which one eating an apple and another being a passive observer. This is in the sculptures of India and post Vedic Upanishads as well. Bible used this story and gave Atma and Jeevatma as Adam/a and Eve/jeeva.

 

Dirgatamas hymn with 52 couplets in the Rig Veda 1-164 is the longest one and most often quoted. His number symbolism made this hymn a very interesting and debatable one. And the subjects he dealt with made this an encyclopaedic verse.

 

–Subham–

 

தீர்கதமஸ் பற்றிய சுவையான கதைகள் (Post No.4455)

Written by London Swaminathan 

 

Date: 3 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-25

 

 

Post No. 4455

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தீர்கதமஸ் ஒரு ரிக்வேத கால ரிஷி. கண் பார்வையற்றவர். குருட்டுக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதிய கிரேக்க மஹாகவி ஹோமர். ஆனால் ஹோமருக்கும் முன்னால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தீர்கதமஸ் ஹோமர் முதலிய அந்தகக் கவிகளைப் பந்தாடிவிட்டார். தீர்கதமஸின் கவிதைகள் ரிக் வேதத்தின் — உலகின் பழமையான நூலின் — முதல் மண்டலத்தில் உள. அவர் ‘கண்டுபிடித்த’ மிக நீண்ட கவி ரிக் வேதப் பாடல் எண் 1-164.  ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை கவிகளைப் புனைவதில்லை. அவர்கள் வானத்தில் மிதக்கும் ஒலிகளைக் கிரஹித்து நமக்கு வழங்குவதால் அவர்களை ‘மந்த்ர த்ருஷ்டா’ என்பார்கள். அதாவது மந்திரத்தைப் பார்த்தவர்கள்; ஞானக் கண்களல் கண்டுபிடித்தவர்கள்; காதால் கேட்டவர்கள்; இதனால்தான் திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்கத் தமிழ்ப் புலவர்களும் “கேள்வி” என்பர்; காதால் கேட்டது ‘ச்ருதி’= ‘கேள்வி’. நிற்க

இவருடைய பெயரின் பொருள்- நீண்ட இருள்

இவர் தாயின் பெயர் மமதா

தந்தையின் பெயர் உசத்யா

ஆனால் இவர் சத்யகாம ஜாபாலா போல தாயின் பெயர் கொண்டு ‘தீர்கதமஸ் மாமதேய’ என்றே அழைக்கபட்டார். அதுவும் புதிரானதே.

சில நேரங்களில் தந்தையின் பெயரால் ‘தீர்கதமஸ் ஔசத்ய’ என்றும் அழைக்கப்பட்டார்.

இவர் பற்றிய செய்திகள் ரிக் வேதத்திலும் சாங்காயன ஆரண்யகத்திலும் காணப்படும். இவர் நூறு ஆண்டுகள்  வாழ்ந்ததாக அவை செப்பும்.

 

 

 

தீர்கதமஸின் 1-164 கவி அறிஞர்களைத் திணறடித்துவிட்டது. 52 கண்ணிகளில் எண்களை வைத்து விளையாடிவிட்டார். இவருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவதரித்த திருமூலர், சிவ வாக்கியர், திருமழிசை ஆழ்வார் ஆகியோரும் எண்களைக் கொண்டு கவிபாடினர். இதற்குப் பலவிதமான பொருள்களைக் கற்பிக்க முடியுமாதலால் அவை  சுவை உடைத்து.

 

இந்தியாவுக்குப் பெயர் கொடுத்த – ‘பாரதம்’ என்று பெயர் கொடுத்த – பரத மாமன்னனுக்கு இவர் புரோஹிதர் என்றும் ஐதரேய பிராம ணம் பகரும்.

பிருஹத் தேவதா என்னும் நூல் இவர் பற்றிய செய்திகளை மொழியும். இவர் கண் பார்வையில்லாமல் பிறந்து பிற்காலத்தில் பார்வை பெற்றாராம்.

வயது முதிர்ந்த காலத்தில் இவரை த்ரைதன என்பவன் தாக்கினானாம். ஆனால் அவன் தற்கொலை செய்து கொண்டான். இவரை ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டனர். அங்க தேசத்தில் இவரை ஆற்றிலிருந்து வெளியே எடுத்துக் காப்பாற்றினர். அங்கு ஒரு அடிமைப் பெண்ணை மணம் புரிந்தார். கக்ஷிவந்த் என்ற மகனை ஈன்றெடுத்தார். அவனும் மாபெரும் கவிஞன் ஆனான்.

 

இனி மஹாபரதத்தில் இவர் பற்றி  காணப்படும் செய்திகளைக் காண்போம்.

 

ஆதி பர்வத்தில் இவர் முற்காலத்திய ரிஷி என்று சொல்லப்படுவதால் இவர் மஹாபாரதத்துக்கு மிகவும் முன்னால் வாழ்ந்தவர் என்பது தெளியப்படும்.

 

பிராமணர்களான மமதாவுக்கும் உதத்யனுக்கும் பிறந்தவர் இவர் என மஹாபாரதம் உரைக்கும்.

ஒரு விநோதக் கதை இதோ:-

மமதா கர்ப்பிணியாக இருந்தபோது உதத்யனின் தம்பி பிருஹஸ்பதி அவளைப் பலவந்தப்படுத்தினார். உள்ளே இருந்த குழந்தை இன்னும் ஒரு வித்துக்கு கர்ப்பப்பையில் இடமிலை என்று அறிவித்தது. அப்படியும் பிருஹஸ்பதி பலவந்தம் செய்யவே புதிய விதையை, மமதாவின் உள்ளே இருந்த குழந்தை வெளியே தள்ளியது. உடனே சிற்றப்பன் பிருஹஸ்பதி ஒரு சாபம் போட்டார். மமதாவின் கர்ப்பத்தில் உள்ள குழந்தை குருடாகப் பிறக்கட்டும் என்று சபித்தார். இதுவே தீர்க தமஸ் கண் பார்வை இழந்த கதை.

 

(என் கருத்து: ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஒருவர் பலவந்தப்படுத்தினால் அந்த அதிர்ச்சியால், குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு என்பதை நவீன அறிவியலும் ஏற்கிறது)

 

காலப்போக்கில் அவர் கவி புனையும் ஆற்றலைப் பெற்றார். பிரத்வேஷி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஐந்து குழந்தைகளைப் பெற்றார்.மூத்த மகனுக்கு கவுதமன் என்பது திரு நாமம். சில முனிவர்களுக்குக் குருட்டுக் கவிஞன் தங்களிடையே இருப்பது பிடிக்காததால் மனைவி பிரத்வேஷியையும் மகன்களையும் தூண்டிவிட்டனர். பிரத்வேஷியும் இந்த வயதான கிழவரைக் கவனிக்க என்னால் இனிமேல் முடியாது என்று அவரை ஒரு படகில் கட்டி கங்கை ஆற்றில் மிதக்கவிட்டனர்.

 

பலிராஜன் என்ற மன்னன் கங்கை நதியில் குளிக்க வந்தபோது படகில் ஒரு கண் பார்வையற்றவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

 

அவருடைய பூர்வ கதைகளைக் கேட்ட மன்னன் தன் மனைவி சுதேஷ்னாவுடன் படுத்டு ஒரு குழந்தையைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். ஒரு மன்னனுக்கு வாரிசு இல்லாவிடில் பிராமண முனிவர்களை அணுகி குழந்தைப் பெற்றுக் கொடுக்கும்படி வேண்டுவது அக்கால வழக்கம்.

ஆனால் இவரிடம் படுக்க மனம் இல்லாத மஹாராணி, தனது தோழிகளில் ஒருவரை அனுப்பி வைத்தார். 11 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர்களில் ஒருவர்தான் கக்ஷிவன ரிஷி என்றும் மஹாபாரதம் இயம்பும். அவர்கள் அனைவரும் தன்னுடைய குழந்தைகளா என்று மன்னன் வினவ, தீர்க தமஸ் உண்மையைச் சொன்னார். பின்னர் மன்னன் தனது மனைவியிடம் வலியுறுத்த அவர் தீர்க தமஸுடன் கூடி ஐந்து பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள்: அங்க, வங்க, கலிங்க, பன்ற, சுஹ்ய. என்ற பெபயருடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு வம்சத்தை ஸ்தாபித்து, நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டனர்.

 

இதை சத்யவதியிடம் பீஷ்மர் கூறினார்.  விசித்ர வீர்யனுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவ்னுடைய மனைவியிடத்தில் பிராமணர்களைக் கொண்டு குழந்தைகளைப் பெறுவதே முறை என்று பீஷ்மர் வலியுறுத்தினார்.

 

மொத்தத்தில் பல கதைகள் சொன்னாலும் அதில் இழையோடும் கருத்துக்களை எவரும் பிடித்துக்கொள்ள முடியும்.

 

தீர்கதஸுக்குப் புகழ் அவர் சொன்ன வேத மந்திரங்களிலிருந்து வந்தது என்பதைக் கட்டுரையின் முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.

 

TAGS:- தீர்கதமஸ், கதை, சுவையான

–சுபம்–

 

பாரதியார் நூல்கள் – 44, வரகவி பாரதியார்’ (Post No.4454)

 

Date: 3 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-38 am

 

Post No. 4454

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 44

பண்டித வித்துவான் தி.இராமானுசன் எழுதியுள்ள வரகவி பாரதியார்

 

.நாகராஜன்

1

மஹாகவி பாரதியாரின்  வாழ்க்கை வரலாறைச்சீரிய தமிழ்ப் புலவர்என்ற நோக்கில் தரும் ஒரு சிறிய புத்தகம் வரகவி பாரதியார். இதை எழுதியவர் மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பண்டித வித்துவான் தி.இராமானுசன் அவர்கள்.

96 பக்கங்களே உள்ள இந்த குட்டி நூல் 1949இல் இரண்டாம் பதிப்பைக் கண்டது. அதன் அப்போதைய விலை பதினான்கு அணாக்கள். (ரூபாய் அணா, தம்பிடி என்ற காலத்தை அறியாதவர்க்கு ஒரு சின்ன குறிப்பு : ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களைக் கொண்டிருக்கும். ஒரு அணாவிற்கு நான்கு காலணாக்கள். ஒரு காலணாவுக்கு மூன்று தம்பிடிகள். ஆக பதினான்கு அணா என்றால் இந்தக் காலத்தில் 87.5 பைசாக்கள்)

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் நூலாசிரியர் கூறுவதில் ஒரு பகுதி: “இதனுள் பாரதியார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, அவர்சீரிய தமிழ்ப் புலவர்என்னும் நிலையிலே காட்சியளிக்குமாறு கோவைப்படுத்தியுள்ளேன். என் முயற்சியில் முழு வெற்றி கிட்டாது போகலாம்! முதலிலே முயன்ற தகுதி எனக்குப் பயன் அளித்தால், அதுவே போதுமானதுஎன்கிறார்.

1949ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பைக் கண்ட இந்த நூல் உண்மையிலேயே ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

வேறு வாழ்க்கை வரலாறுகள் சொல்லாத நிகழ்ச்சிகள் இவை.

 

2

பாரதியாரின் காசி வாசம் பற்றி நூல் கூறுவதில் ஒரு பகுதி:-

பாரதியாரின் அத்தையாரான குப்பம்மாள் காசி வாசி. அவருக்குப் பாரதியாரிடம் பாசம் மிகுதி.தந்தையார்  இறந்த பின், பாரதியாரை இந்து கல்லூரியில் சேரும்படி செய்து மேற்படிப்புக்கும் வழி செய்தவர் அவரே

நெல்லை இந்து கல்லூரியில் பாரதியார் படித்த படிப்பிலே அவர் தம் அத்தையாரான குப்பம்மாளுக்கு உறுதி இல்லை.தம்மோடு பாரதியாரை அழைத்துக் கொண்டு போய்க் காசியிலே படிக்க வைக்க அவ்வம்மையார் விரும்பினார். அதற்கிணங்க நம் கவிஞர், 1898-ஆம் ஆண்டில் காசியை அடைந்தார். அக்காலத்தில் காசியிலே தனிப் பல்கலைக்கழகம் இருந்ததில்லை; அங்குள்ள மத்திய இந்து கல்லூரியைச் சார்ந்த ஓர் உயர்தரக் கலாசாலையிலே சேர்ந்து தான் கல்கத்தா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்குப் பாரதியார் படித்தார். அங்கு நுழைவுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் இரண்டு மொழிகளைப் படிக்க வேண்டும் என்னும் நியதி இருந்தது. காசியிலே தமிழ் படிக்க முடியாது. ஆகவே இந்தி மொழியை விருப்பப்பாடங்களுள் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வாய்த்தது. வடமொழியிலும் கூடுமான வரை நல்ல புலமை ஏற்படும் வசதியும் அவருக்கு ஏற்பட்டது. பாரதியார் இந்தி பேசும் வகையினைக் கண்ட யாவரும், வடநாட்டவர் என்றே அவரைக் கருதி மயங்குவது உண்டாம். பேச்சு மட்டுமா? நடை,உடை, பாவனைகளும் அப்படியே தான் அன்று காட்சி அளித்தன.

**

3

எட்டையபுர மன்னர் காசி சென்று திரும்பும் போது பாரதியாரைத் தம்முடன் வருமாறு அழைத்த செய்தியைத் தொடர்ந்து நூலில் ஒரு பகுதி:-

மன்னர் நம் கவிஞருடன் தமிழாராய்ச்சியும் வேதாந்த விசாரணையும் நடத்தி வருவார் என்பதும் தெரிகிறது. அக்காலங்களில் எல்லாம், நம் கவிஞர் ஷெல்லி தாஸன் என்ற புனைபெயருடன் பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டு வந்தார்.

**

4

மதுரையில் பாரதியார் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய போது நடந்த பல விவரங்களை நூல் சுவைபட விளக்குகிறது. அதில் சில பகுதிகள்..

 

அக்காலத்தில் மதுரைக் கல்லூரியில் கோபாலகிருஷ்ணையர் என்ற புலவர்மணி, தமிழ் விரிவுரையாளராய் இருந்தார். தமிழிலே அவர் பெரும்புலவர்; பிறருக்கு உதவும் பேருபகாரி; நல்ல செல்வாக்கும் உள்ளவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒப்புயர்வற்ற பெரும்புலமை அவருக்கு உண்டு. பாரதியாரிடம் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. பாரதியாரது தமிழறிவு, கவிதை நலன் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி அவர் பிறரிடம் பாராட்டிப் பேசுவது வழக்கம். பாரதியாருக்கு உற்ற நண்பராய் அவர் இருந்ததனாலே தான், மதுரைச் சேதுபதி பள்ளியில் அவருக்கு அலுவல் கிடைத்தது. அவ்வலுவலிலே மூன்று மாதம் தங்கி, பாரதியார் தமிழாசிரியத் தொழில் புரிந்தார்.அதிலும் அவருக்குப் பற்று இல்லை. மூன்றாவது மாதத்தில், அவ்வேலையை விட்டு நீங்கினார். பாரதியார் மதுரையில் இருந்த போது தான் அங்குள்ள தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றி அடிக்கடி புலவர்களுடன் அளவளாவிப் பழகி வந்தார்.

**

5

சென்னையில் அக்காலம் சுதேசமித்திரன் பத்திரிகையைத் தேசபக்தர் சுப்பிரமணிய ஐயர் நடத்தி வந்தார். அவருக்கும், மதுரைக் கோபாலகிருஷ்ணையருக்கும் நல்ல நட்பு இருந்தது. அடிக்கடி மதுரை வரும்போது, அவர் கோபாலகிருஷ்ணையருடன் பத்திரிகை வளர்ச்சி பற்றிக் கலந்து பேசுவது வழக்கம். அதன்படி ஒருமுறை, “எனக்குத் துணை செய்ய ஒருவர் தேவை. அவர் நல்ல தமிழ் எழுதக் கூடியவராயும், தேசீய உணர்ச்சியுடையவராயுக் இருத்தல் நலம். ஒருவர் கிடைத்தால் பார்த்து அனுப்புங்கள்,” என்று தன் நண்பரிடம் சொன்னார். நம் கவிஞரைத் தேசீயத்தில் திருப்பி நலம் காணத் தமிழன்னை தருணம் பார்த்துக் கொண்டிருந்த காலமும் அதுவே ஆகும். காலமும் கணக்கும் ஒன்று சேர்ந்தன. கோபாலகிருஷ்ணையர், பாரதியாரைத் தருவித்துச் சுப்பிரமணிய ஐயருக்கு அறிமுகப்படுத்திவிட்டார். நம் கவிஞர் அவருடன் சென்னை சென்று, 1904ஆம் ஆண்டில் சுதேசமித்திரம் காரியாலத்தில் அலுவலில் அமர்த்து பணி ஆற்றினார்.

6

 

சென்னையில் இந்தியா பத்திரிகை அரசாங்கத்தின் அடக்கு முறைச் சட்டத்திற்குய் உள்ளாகியவுடன் பாரதியாருக்கு ஒரு அன்பர் சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்கு அறிமுகக் கடிதம் கொடுத்து, பாரதியாரை மறைந்துறைய மன்றாடினார்.  ….

இந்த நிலையில் புதுவைக்குப் புறப்பட்டார் பாரதியார்.

புதுவை வாழ்க்கை என்ற அத்தியாயத்தில் பாரதியாரின் புதுவை வாழ்க்கை பற்றிய ஏராளமான செய்திகளை இந்த நூல் சுவைபடத் தருகிறது.

அந்த அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்:-

மறு நாள் இரவு பாரதியார் சைதாப்பேட்டையில் பயணச் சீட்டு வாங்கி இரயில் ஏறிப் புதுவை சேர்ந்தார்; சிட்டி குப்புசாமி ஐயங்காரைக் கண்டு, அறிமுகக் கடிதத்தை நீட்டினார். எளிய வியாபாரியும், நல்ல தமிழறிஞருமாய் இருந்த அவர், பாரதியாரை விரும்பி வரவேற்றார்.

*

சென்னையில் நடந்து வந்தமெட் ராஸ் ஸ்டாண்டர்டுஎன்ற ஆங்கிலத் தினசரி இதழில் பாரதியார் கீதையைப் பற்றி, பேராசிரியர் சுந்தரராமனோடு விவாதமும் நடத்தினார். அதிலே பாரதியாரின் புலமையை அனைவரும் உச்சிமேற்கொண்டு மெச்சிப் போற்றினர். அதிலிருந்தே நம் கவிஞரின் ஆங்கிலப் புலமையையும்வடமொழி மேதையையும் உலகறிந்து புகழலாயிற்ற்!

மகாபாரதத்தை, ‘கிரிப்பித்துஎன்ற வெள்ளைக்காரரும், இரமேஷ் சந்திரதத்தர் என்ற வங்க அறிஞரும் தனித்தனி மொழிபெயர்த்திருக்கின்றனர். அம்மொழி பெயர்ப்புகள்பண்டம் அற்றவைஎன்று பாரதியார் கருதினார். அரவிந்தரும், ஐயரும் அதே கருத்தினை வலுப்படுத்தினர். அதற்காக, நம் கவிஞர் வியாசபாரதத்தைப் படிக்க நேரிட்டது. அதிலிருந்துபாஞ்சாலி சபதம்என்ற இறவாத புதுநூல் ஒன்று நம் கவிஞர் வாக்கில் உருக்கொண்டது.

*

போலிஸார் முதலிலே, பிரெஞ்சு கவர்னரிடம் சென்று அவர்களை அரசாங்க விரோதிகள் என்று சொல்லி, வெளியேற்ற முயற்சி செய்தனர். கவர்னர், ‘தக்க ஆதாரம் இல்லை,’ என்று சொல்லி, அதனை மறுத்து விட்டார். பின்பு, அரசியலார், அந்நியர்களுக்குக் குடியிருப்பு உரிமை இல்லை என்று சொல்லும் சட்டம் ஒன்றைச் செய்யுமாறு கவர்னரைத் தூண்டினர். அதிலே, “சட்டம் நடைமுறையில் வரும் தேதிக்கு முன்னால், ஓர் ஆண்டாகக் குடியேறியிருப்பவர்கள், ஐந்து மாஜிஸ்ட் ரேட்டுகள் கையெசுத்துத் தந்தால், இதிலிருந்து விலக்குப் பெறலாம்என்ற உட்பிரிவு ஒன்று இருந்தது. அதை வைத்து நம் கவிஞர் கலவல சங்கரஞ் செட்டியார் என்ற நண்பரின் மூலம், ஐந்து மாஜிஸ்ட் ரேட்டுகளிடம் கையெழுத்து வாங்கி வந்தார். இம்முயற்சியால், ஐயர், அரவிந்தர், பாரதியார் ஆகிய மூவருமே சட்டத்தின் கொடுமையினின்று தப்பினர்

*

7

கடையம் திரும்புதல் என்ற அத்தியாயத்தில் நிறைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றில் ஒரு நிகழ்ச்சி:-

ஒரு சமயம் பாரதியார் கம்பரைப் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்திலே இருந்த பரலி நெல்லையப்பர் சில கவிக்கு அவரைப் பொருள் சொல்ல வேண்டினார். பாரதியார் இங்கும் அங்குமாகச் சில கவிகட்கு மட்டும் பொருள் சொல்லி, பல கவிகளைக் குறுக்குக் கோடிட்டு அடித்து விட்டார். காரணம் கேட்ட போது, “கம்பர் இங்கே நமக்குப் பாடவில்லை. அவர் பூலோகத்தில் இல்லாதபடி ஏழாவது படி கடந்து நின்று பாடுகிறார். அவர் அறிவு பெரிது!ஒன்றுமே நமக்குப் புலனாகவில்லை!” என்று கூறினாராம். பொருள் விளங்காத பாடலைப் பற்றிக் கவலைப் படவேண்டா என்ற் மனநிலை அவருக்கு இருந்தது உண்மை! என்றாலும், பழங்கவிகளை இகழும் மனப்பான்மை அவரிடம் இருக்கவில்லை. வரகவி பாரதியார், “கம்பர் அறிவு பெரிது! அது நமக்கு விளங்கவில்லை,” என்பதைச் சொல்லும் போது, தமது குறையை உணர்ந்து அதனை எவ்வளவு நயமாகக் குறிப்பிடுகிறார் என்பதைப் பாருங்கள்

**

 

8

வாழ்வின் முடிவுஎன்ற அத்தியாயத்தில் வருகின்ற ஒரு செய்தி இது:-

அன்னி பெஸண்டு அம்மையார், நம் கவிஞரின் பாடல்கள் பலராலும் போற்றிப் பேசப்படுவதனைக் கண்டார். நேருக்கு நேர் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. ஆகவே, சில கவிகளை ஜேம்ஸ் கஸின்ஸ் என்ற மற்றொருவரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து படித்து மெச்சினார்.

**

9

96 பக்கம் தான் என்றாலும் கூட  ஒன்பது அத்தியாயங்களில் பிற நூல்களில் காண முடியாத அரிய செய்திகளை தி.இராமானுசன் விரித்துரைக்கிறார்.

இந்த இரண்டாம் பதிப்பின் இரண்டாம் பக்கத்தில் கீழ்க்கண்ட வரிகள் உள்ளன:

Approved by the Text Book Committee, Madras, for Class use Vide Fort St.George Gazette Supplement to Part 1-B of the Consolidated list of approved books, 24th May, 1949, Page 11 of Part II.

இதன் மூலம் 1949ஆண்டு வாக்கிலேயே பாரதியார் பற்றிய துணப்பாட நூல்கள் அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகளில் பாடநூலாக ஆகியிருப்பது தெரிய வருகிறது.

 

அருமையான பல செய்திகளை அடக்கியுள்ள இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் வரவேற்பர்.

— SUBHAM–

DIRGATAMAS HYMN- A RIDDLE IN THE RIG VEDA (Post No.4453)

Written by London Swaminathan 

 

Date: 2 DECEMBER 2017 

 

Time uploaded in London-  20-45

 

 

Post No. 4453

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The Rig Vedic hymn 1-164 is a great hymn. Probably that is the longest hymn in the oldest book in the world with 52 mantras. It is like an encyclopaedia touching various subjects. It is a riddle because the poet Dirgatamas has used lot of numbers which can be interpreted in many ways. In fact Wilson, Max Muller, Ludwig, Hillebrandt, Griffith, Grasmann and many imitation western Sayanas gave their own interpretations. Even our own Sayana was struggling with the meaning of the mantras. The story of Dirgatamas itself is interesting. He was a blind poet like Homer who lived 100 years. His name meant Long Darkness.

 

First let me give you a beautiful comment on the Hymn RV 1-164 by Umapada Sen in the introduction of his book titled ‘The Rig Vedic Era’ (Calcutta, 1974):–

The Veda is an Indian mass product of a highly advanced civilised society based on class co-operation. It flowered spontaneously, breathing in Indian atmosphere, unassailed by extraneous influences for several centuries, till it was stifled by abrupt and strange appearance of liturgical codes of completely different character.

The clamour for ambiguity or inefficient articulation of the Vedic hymns by the protagonists need not be deplored. The critics should do justice to themselves in case they just take the pains to go through the hymns addressed to the Visvedevas or only the Hymn RV 1-164 and concentrate to find out the meaning of their own accord. Invariably it will dawn that the hymns are ovations addressed to all the luminaries, the then gods to the Rig Vedic singers. The sun, moon, nakshatras (stars), Sapta Rishis (Ursa Major), Pole star (Dhruva) and others being mentioned and their functions, inter related with astral phenomena, minutely described in a riddle type song sung by a poet soliciting a solution.

 

The humble effort in solving the quiz has mainly been confined in rationally arranging the translation of Indologists when necessary and nothing further. Only the respective solutions, e.g. where a luminary is seen to revolve in a chariot with no wheels the axle only spinning without linear motion;  seven luminaries bearing seven distinct names journeying in a chariot but with seven wheels following the sun’s track closely; the variant sun Vishnu, never making a journey in a chariot, encompassing the entire expanse only with three strides and relate to the pole star so on, have been offered.

Logical deductions are palpably conspicuous and do not depend on superfluous elucidation or interpretations of the verses in greater details. It is apparent that the above mentioned allusions respectively relate to the pole star, the Sapta Rishis (Ursa Major), seven planets, Vishnu’s sun (and not ordinary sun’s) three typical positions in the ecliptic, now known as the cardinal points, where through Vishnu’s annual revolution is completed. It would have been sheer folly if any other explanation was suggested. Nowhere, any farfetched idea has been construed or imported, nor any artificial rendering was adopted to spin a yarn or obliterate the real purport of the verse to suit the present deductions.”

xxx

This verse is famous for a few other statements and quoted very frequently for those statements:

 

 

(1).Truth is one; scholars call it with different names!

“They call him Indra, Mitra, Varuna, Agni and he is heavenly nobly-winged Garutman.

To what is One sages give many a title; they call it Agni, Yama, Matariswan”-RV 1-164-46

 

(2).Speech has Four Divisions!

“Speech has been measured out in four divisions, the Brahmins who have understanding know them

Three kept in close concealment cause no motion; of speech, men speak only the fourth division.”—1-164-45

 

Four divisions of speech are

Four Types

1.Paraa, 2.Pasyantii, 3.Madhyamaa, 4.Vaikharii

Chathvaari vaak parimitaa padaani taani vidurbrahmanaa ye maniishinah

Rik Veda 1-164-45

Saayanaa in his commentary mentioned that the four types mentioned by the seers are Paraa, Pasyantii, Madhyamaa and Vaikharii.

 

(3).Adam and Eve Story from the Rig Veda!

“Two birds with fair wings, knit with bonds of friendship, in the same sheltering tree have found a refuge.

One of the twain eats the sweet Fig tree’s fruitage; the other eating not regadeth only” 1-164-20

Kanchi Paramacharya has rightly pointed out that this gave birth to the Story of Adama and Eve and Adam eating the forbidden fruit.

Adam= ADma=Atma

Eve= Jeev (Jeevatma)

Sayana says that the two birds are the vital and the Supreme spirit, dwelling in one body. The vital spirit enjoys the fruit or rewards of actions while the Supreme Spirit is merely a passive spectator.

 

(4).Number Symbolism

“Seven to the one-wheeled chariot yoke the Courser;bearing seven names the single Courser draw it.

Three-naved the wheel is, sound and undecaying, whereon are still resting alhese worlds of being.”- 1-164-2

 

“The seven who on the seven wheeled car are mounted to have horses, seven in tale, who draw them onward.

Seven sisters utter songs of praise together, in whom the names of the seven cows are treasured.”- 1-164-3

Seven Sisters seal is found in the Indus valley civilisation as well.

The Seven: according to Sayana, the seven solar rays, or seven divisions of the year.

Seven sisters: Probably the seven celestial rivers, which as emblems of fertility may bear the name of cows.

 

Dirgatamas is playing with numbers! he used numbers 1 to 10 to denote various things. It gives scope for new interpretations touching from Astronomy to Zoology.

Tamil mystic poets Tirumular, tirumazisai Alvar and Siva vakkiyar followed this number symbolism in their poetry, but 2000 years after Dirgatamas.

 

(5). Vedic Metres

Seven Vedic Metres including Gayatri are mentioned by the poet.

(6) The Path of Knowledge

Unknowing, I ask of those  who know – the sages

as one ignorant for the sakeof knowledge;

who is that ONE in the form of the Unborn

that has supported these six spheres of the world? 1-164-6

 

(7). What is the use of Veda?

What will he do with the hymn of the Veda

who does not know its theme—the Eterna

in the supreme region, in which the Devas dwell?

But those who have come to know That are perfect. – 1-164-39

 

(8).Words of Ambiguity

Boneless one, Unborn image, Suprna, Five-footed, the single, Triplet, the buffalo, Garutman, the Sadhyas, Sraswati etc.  are interpreted differently.

Dirgatamas was one of the latest poets of the Rig Vedic period. Rig Veda covers a time span of at least 500 years. If we cant even understand Dirgatamas, how are we going to understand more ancient poets?

 

As Umapada Sen says one must read the entire hymn and come to one’s own conclusion. Don’t depend upon Western Sayanas’ interpretations. They were not Hindus and moreover they did not live the life of Indians. Unless one lives in the culture, one cannot understand the full meaning, thrust, import and significance of the poem or hymn.

 

(I will give the story of Dirgatamas separately)

–Subham–

 

 

ரிக் வேதத்தில் தீர்கதமஸ் புதிர்! அறிஞர்கள் திணறல்! (Post No.4452)

Written by London Swaminathan 

 

Date: 2 DECEMBER 2017 

 

Time uploaded in London-  13-38

 

 

Post No. 4452

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ரிக்வேதம் எவ்வளவு புதிர்கள் நிறைந்த து; யாருக்கும் எட்டாத கனி; எல்லோரையும் திணறடிக்கும் விடுகதை; சங்கேத மொழியில் விளையாடும் புலவர்களின் சொர்கம் — என்பதை முதல் மண்டலத்திலுள்ள 164-ஆம் எண் துதியைப் (RV 1-164) படித்தால் போதும். இதை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் தீர்கதமஸ் என்னும் முனிவர். அவர் அந்தகர்; அதனால் அவர் பெயர் ‘நீண்ட இருள்’! அவர் மமதா என்ற பெண்மணிக்குப் பிறந்தவர் என்பதால் தீர்கதமஸ் மாமதேயா என்பர். அவருடைய மகன் கக்ஷிவான் அவரும் கவிஞர். தீர்கதமஸ் பற்றிப் பல சுவையான கதைகள் உண்டு; இவரை ஆற்றில் தூக்கிப் போட்டதாகவும் பின்னர் வேறு ஒருவர் காப்பாற்றியதாகவும் சொல்லுவர். நூறு ஆண்டுகள் வாழ்ந்த  வர் என்று வேதம் விளம்புகிறது.

 

இவர் பற்றிய சுவையான கதைகளைக் காண்பதற்கு முன்னர், இவர் போட்ட புதிர் என்ன என்பதைக் காண்போம்.

 

  1. இவர் சொன்ன கவிதைதான் ரிக் வேதத்தில் மிக நீண்ட கவிதை; 52 மந்திரங்கள் (கண்ணிகள்) கொண்டது

2.இவர் பெயரே புதிரானது– நீண்ட இருள்; உலகப் புகழ் பெற்ற கிரேக்க அந்தகக் கவி ஹோமருக்கும் முன்னால் புகழ்பெற்ற அந்தகக் கவிஞர் இவர். பெரும்பாலான புலவர்கள் தந்தையின் பெயரை இணைத்துக் கொள்வர். ஆனால் இவரோ தாயின் பெயரை இணைத்துப் பெண்ணினத்துக்குப் புகழ் சேர்த்தவர். இவர் தனக்கு முன்னால் வாழ்ந்த புரா ண புருஷர்களைப் பற்றிக் கதைப்பதால் இவரை பிற்காலத்தவர் என்றும் அறிவோம்

  1. இவர் எண்களுடன் விளையாடும் விளையாட்டு– அதாவது கவிதையில் எண்களைப் பயன்படுத்தும் முறை – நம் நாட்டு வேத பாஷ்யக்காரர் சாயனரையும், வெளி நாட்டு போலி சாயனர்களையும் திணறடிக்கச் செய்கிறது. வெள்ளைத்தோல் போலி சாயனர்கள் ஏழு என்ற எண்ணுக்குச் சொல்லும் பொருளைப் பார்த்தால் அவர்கள் குழப்பவாதிகள், பாஷ்யக்காரர் கள் அல்ல; உரைகாரர் கள் இல்லை என்பதை உணர்வோம்.

 

4.திருமூலர், சிவவாக்கியர், திருமழிசை ஆழ்வார் போன்றோர் எண்களை சகட்டு மேனிக்குப் பயன்படுத்தி பாடல்களுக்குப் பொருள் விளங்காமற் அல்லது எளிதில் பொருள் சொல்ல முடியாமற் செய்தது எல்லாம் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்தது. ஆனால் தீர்கதமஸோ இவர்களுக்கு எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து எண்க            ளை  பாடலில் பயன்படுத்தினார் என்றால் பொருள் விளங்குவது கடினமே!

 

  1. தீர்க தமஸ் ஏழு என்ற எண்ணைப் பல இடங்களில் பயன்படுத்துகையில் அது ஏழிசையா? வாரத்தில் 7 நாட்களா, சூரியனின் 7 குதிரைகளா (VIBGYOR), ‘செவென் சிஸ்டர்ஸ்’ seven sisters என்று அழைக்கப்படும் பறவை வகைகளா என்று வியந்து ஒவ்வொருவரும் ஒரு விதமாகப் பொருள் கற்பிப்பர்.
  2. இவர் மூன்று என்னும் போதும் ஆறு என்னும் போதும் பருவ காலம் என ஆண்டை (வருடத்தை) வெவ்வேறு விதமாகப் பிரிப்பர் சாயனர்.

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு இந்த மந்திரத்தில் வரும் “ஏகம்சத் விப்ராஹா பஹுதா வதந்தி” என்ற வரிகளே காரணம்; அதாவது வேத காலரிஷிகளு கே தெரியும்– பல்வேறு கடவுள் பெயர் சொன்னாலும் அவை எல்லாம் ஒரே பரம்பொருளைத்தான் குறிக்கும் என்று!

 

இதன் பொருள் “உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் பகர்வர்”.

 

 

  1. தீர்கதமஸ் உலகப் புகழ்பெற்றதற்கு மற்றொரு காரணம், இவர் கதையை பைபிள் திருடியயதாகும். பைபிளின் முதல் அத்தியாயத்திலேயே ADAM AND EVE ஆடம் அண்ட் ஈவ் கதை வருகிறது. ஆடம்=ஆத்/ட்மா; ஈவ்= ஜீவ்+ ஆத்மா இதை ஆடம் ADAM ஈவ் EVE என்று சொல்லிவிட்டனர். ஒரு பறவை பழத்தை உண்டது மற்றொன்று பழம் சாப்பிடவில்லை என்று ஒரே மரத்தில் உள்ள இரண்டு பறவைகள் பற்றிப் பாடியுள்ளார். இதை சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உபந்யாசத்தில் விளக்கியுள்ளார் (பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது கட்டுரையிலும் விளக்கியுள்ளேன்)

  1. தீர்கதமஸின் 52 மந்திரங்கள் அடங்கிய இந்தத் துதியைப் படிப்போர் வியப்பர்; வேதம் என்பதை வெள்ளைக்கார ‘தோழான், துருத்தி’ எல்லோரும் “தத்தக்கா புத்தக்கா இரண்டு காலு, தடுக்கி விழுந்தா நாலு காலு” என்று மொழி பெயர்ப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உமாபத சென் என்பவர் இந்தத் துதியில் சப்தரிஷி மண்டலம், துருவ நட்சத்திரம், சூரியனின் பயணம், பூமியின் சுழற்சி, விஷ்ணுவின் மூன்றடி முதலியன சொல்லப்படுகிறது என்பார்.

12.சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழிபெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

13.மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

14.சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடை செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

 

15.ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழிபெயர்த்துள்ளனர்

 

16.காயத்ரி முதலான 7 யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக  வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

17).1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டைட காண்பது சுவையாக இருக்கும்.

 

 

18.இதில் வானியல், வானிலையியல், பறவையியல், கணிதம், சமயம், சங்கேத மொழி (coded language) , காலக் கணக்கீடு, தத்துவம் என்று பல விஷயங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

ரிக் வேதம் 1-164

ஒரு சில மந்திரங்களைக் கொடுத்துவிட்டு இரண்டாம் பகுதியில் தீர்க தமஸ் பற்றிய சுவையான கதை சொல்லுகிறேன்:-

 

“தெரியாமல்தான் கேட்கிறேன் ஓ முனிவர்களே! தெரிந்தவர்கள்தான் சொல்லுங்களேன்!

அறியாமையால் வினவுகிறேன்; அறிந்துகொள்வதற்காகத்தான்!

பிறவாத அந்த ஒன்று எது? (பிறவா யாக்கைப் பெரியோன் எவன்)

இந்த உலகத்தின் ஆறு பிரிவுகளைத் தாங்கி நிறுத்துகிறதே, அந்த ஒன்று!

1-164-6

 

(இங்கு ஆறு பிரிவு என்பதற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு)

 

“பொருள் விளங்காமல் வேதத்தின் துதியைப் பாடுவோரே! அதை வைத்து என்ன செய்வீர்– தேவர்கள் உறையும் பரலோக சாம்ராஜ்யத்தில் உள்ளவனை (அறியவில்லையே)

அவனை உணர்ந்தோரே அறிஞர்கள்/பூரணம் நிறைந்தோர்”

“இரண்டு பறவைகள் நண்பர்களாக ஒரே மரத்தில் அடைக்கலம் புகுந்தன. ஒரு பறவை பழங்களைத் தின்றன. மற்றொ          ன்று சாப்பிடவில்லை. 164-20

 

(பரமாத்மா- ஜீவாத்/ட்மா= ஆடம் – ஈவ் )

 

“அவர்கள் இந்திரன் மித்திரன், வருணன், அக்னி என்று அழைக்கின்றனர்; இறக்கைகள் உடைய ‘கர்த்மன்’ என்பர்.

ஒரே உண்மைப்பொருளை முனிவர்கள் அக்னி என்றும் யமன் என்றும் மாதரிஸ்வான் என்றும் அழைக்கின்றனர்.

(கடவுள் ஒருவரே)” 164-46

(இன்னும் ஒரு புதிர்! இந்திரன் மித்ரன், வருணன் எல்லாம் தெரியும் ; இவர் சொல்லும் கருத்மான் யார் என்பதாகும்.

 

“கடவுளர், யாகம் மூலம் எல்லாவற்றையும் அடைந்தனர். பழமைச் சிறப்புடைய சாத்யர்கள் வசிக்கும் வானமண்டலத்துக்கு — சுவர்கத்துக்கு — இந்த தேவர்கள் சென்றனர்.” 164-50

 

(சாத்யர்கள் என்பதை சிறு கடவுள்கள் என்று 2000 ஆண்டுக்கு முந்தைய அமரகோசம் சொல்லும். சாயனர் காலத்தில் இச் சொல்லுக்குப் பொருள் விளங்காமல் போய்விட்டதென்று வில்சன் விமர்சனம் செய்கிறார்.

 

“செல்வம் தரும், புதையல் அளிக்கும், நற்பலன் தரும் சரஸ்வதியைக் கொண்டாடுவோம்”. 164-49

 

“வாக் (பேச்சு) என்பதை, விஷயம் அறிந்த பிராமணர்கள் நான்கு வகையாகப் பிரிப்பர். மூன்று ரஹசியமானவை; மனிதர்கள் கதைப்பதோ நாலாம் வகை”. 164-45

 

 

(இதில் மூன்று என்பதை மூன்று வேதம் என்று சிலரும் நாலு வகைப் பேச்சுகளில் மூன்று என்றும் உரை அளிப்பர். நாலு வகைப் பேச்சு: பரா, பஸ்யந்தி, மத்யமா, வைகரி.

 

சரஸ்வதி என்ற சொல்லைக்கூட சூரியன் என்று மொழி பெயர்க்கின்றனர் ஒரு மந்திரத்தில்.

 

மூன்று, ஐந்து, ஏழு, ஆறு போன்ற எண்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு பிரிவு பருவங்களாக மொழிபெயர்த்துள்ளனர் “அறிஞர்கள்”.

 

சுபர்ண என்ற சொல்லுக்கு சரியாக அர்த்தம் காண முடியாத லுட்விக் இதை இடைச்செருகல் என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.

ஏழு என்பதற்கு சூரியனின் ஏழு கிரணங்கள், ஏழு பருவங்கள் என்றும்,  ஏழு சஹோதரிகள் என்பதை ஏழு நதிகள் அல்லது  ஏழு பசுக்கள், ஏழு இசை, ஏழு பறவைகள் என்றும் அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்

 

காயத்ரி முதலான 7  யாப்பிலக்கண அணிகளும் பேசப்பட்டுள்ளன.

கிரிப்பித், வில்சன், லுட்விக், சாயணர், ஹில்ப்ராண்ட், மாக்ஸ் முல்லர் ஆகியோர் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லுவதால் கடைசியாக வந்த வேத மந்திரம் கூட “அறிஞர்களைத்’ திணறவைக்கும் என்பதை அறியலாம். இதற்கு 500 ஆண்டுகளுக்கு முந்தைய மந்திரங்களும் ரிக் வேதத்தில் உள.

 

1 முதல் 10 வரையுள்ள எண்களை வைத்து விளையாடுகிறார் தீர்கதமஸ்! அனைவரும் படித்து விடுகதைக்கு வி டை காண்பது சுவையாக இருக்கும்.

தொடரும்……………..

 

—-சுபம், சுபம்—-

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8 (Post No.4451)

Written by S.NAGARAJAN

 

 

Date: 2 DECEMBER 2017

 

Time uploaded in London- 7-16 am

 

 

 

Post No. 4451

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 8

 

ச.நாகராஜன்

 

11

மாக்ஸ்முல்லரைப் பற்றிய செய்திகளில் அவர் யூஜின் பர்னாஃப் (Eugene Burnouf – 1801-1852) என்ற சம்ஸ்கிருத பேராசிரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார் என்பதும் ஒரு செய்தி.

யூஜின் பர்னாஃப் பாரிஸில் 20 வருடங்கள் சம்ஸ்கிருத பேராசிரியராக இருந்தவர். இவரிடம் மாக்ஸ்முல்லர் 1845ஆம் ஆண்டு சென்றார். 1846இல் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அதாவது மாக்ஸ்முல்லர் தனது 22ஆம் வயதில் பர்னாஃப்பிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஒரே ஒரு வருடம் கற்றுக் கொண்டு, தனது 23ஆம் வயதில், இங்கிலாந்து சென்று விட்டார்,

 

வளமான இலக்கியத்தையும் இலக்கணத்தையும் மொழி நயத்தையும் அவர் ஒரே ஆண்டில் கற்றுக் கொண்டு தேர்ந்த சம்ஸ்கிருத நிபுணராக ஆகி விட்டாரா?

இதை நம்பியா ஈஸ்ட் இந்தியா கம்பெனி அவரிடம் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியைத் தந்தது.

 

இந்த சந்தேகம் இயல்பான சந்தேகமே.

 

பற்பல வருடங்கள் ஆழ்ந்து வேதம் கற்ற பாரம்பரியம் மிக்க  வேத குடும்பங்களில் வந்தவர்களே வேதங்களின் உண்மைப் பொருளை அறிந்திருப்பதாக மார் தட்டிச் சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நுட்பமான விஷயங்களை வேதம் கொண்டுள்ளது.

 

ஆக 23 வயது வாலிபர் ஒருவர் ஒரு வருடத்தில் சம்ஸ்கிருதத்தில் தேர்ச்செ பெற்றார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் நோக்கம் மாக்ஸ்முல்லருக்கு சம்ஸ்கிருத புலமை உண்டா இல்லையா என்பதை ஆராய்வதல்ல.

தாங்கள் கூறியபடி விஷக் கருத்துக்களை அவரால் வித்திட முடியுமா, அந்தத் தகுதி அவருக்கு உண்டா, தங்கள் வழிக்கு அவர் வருவாரா என்பது தான்.

 

மாக்ஸ்முல்லர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டார். கிறிஸ்தவ மிஷனரிகள் குளிரும் விதமாகத் தன் பணியை ஆரம்பித்தார்!

 

12

மாக்ஸ்முல்லர் 1849ஆம் ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டு முடிய – அதாவது சுமார் 25 ஆண்டுகள் வேதங்களை மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதாவது அவரது 26ஆம் வயதிலிருந்து 41ஆம் வயது வரை இந்த ப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த 25 வருடங்களில் சம்ஸ்கிருதத்தை அவர் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சொல்லலாமா?

அவரே வேதங்களை மொழி பெயர்க்கவில்லை என்று சொல்கிறது வரலாறு.

 

அமெரிக்காவின் தலை சிறந்த அறிவியல் பத்திரிகை ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்”.

அதில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியிட்ட இதழில் மாக்ஸ்முல்லர் இறந்ததை ஒட்டிய இரங்கல் செய்திப் பகுதி வெளியானது.

 

அதில், மாக்ஸ்முல்லர் ரிக் வேதத்தை உண்மையில் அவரே மொழி பெயர்க்கவில்லை. அதைப் பெயர் தெரியாத ஒரு ஜெர்மானிய அறிஞரே செய்தார். முல்லர் அந்தப் பணியைப் பணம் கொடுத்து செய்யச் சொன்னார்.” என்று இருக்கிறது.

 

விக்கிபீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Scientific American carried his obituary in the December 8th, 1900 edition of the magazine. It was revealed that Max Muller had in fact usurped the full credit for the translation of the Rig veda which was actually not his work at all, but of another unnamed german scholar whom Muller had paid to translate the text. To quote from his obituary in Scientific American, “What he constantly proclaimed to be his own great work, the edition of the “Rig Veda,” was in reality not his at all. A German scholar did the work, and Muller appropriated the credit for it.”

 

13

வேதங்களைப்பற்றிய தவறான கருத்தைக் கொண்டு அந்தப் பணியை ஆரம்பித்த மாக்ஸ்முல்லர் அதனுடைய சிறப்பை உணர்ந்து (தான் செய்ய வேண்டிய டாமேஜை எல்லாம் செய்து முடித்து விட்டு    – செஞ்சோற்றுக் கடன் கழித்த பின்னர் – ) இந்திய பாரம்பரியத்தையும் அதன் ஆழ்ந்த ஆன்மீக உணர்வையும் பாராட்ட ஆரம்பித்த போது கிறிஸ்தவ மிஷனரிகளால் அதைத் தாங்க முடியவில்லை.

அவரைக் கிறிஸ்தவ மதத்தின் எதிரி என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

ஆடம் லார்ட் கிஃப்போர்ட் (Adam Lord Gifford) என்பவர் ஆண்டு தோறும் இறையியலில் ஒரு தொடர் சொற்பொழிவைச் செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

அதற்கு கிஃப்போர்ட் லெக்சர்ஸ் (Gifford Lectures) என்று பெயர். மிகவும் பிரசித்தமான இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவாளராக 1888ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து வருடாவருடம் இந்த கிஃப்போர்ட் சொற்பொழிவுகளை மாகஸ்முல்லர் நிகழ்த்தினார்.

இந்தச் சொற்பொழிவை நிகழ்த்திய போது முல்லர் சொல்லிய கருத்துக்கள் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு உடன்பாடுடையதாக இல்லை.அதனால் அவரை கிறிஸ்தவ மத எதிரி என்று கூறிக் குற்றம் சாட்டினர்.

இதப் பற்றி விக்கிபீடியா தரும் தகவலின் ஆங்கில மூலம் இது:

Anti-Christian

During the course of his Gifford Lectures on the subject of “natural religion” Muller was severely criticized for being anti-Christian. In 1891, at a meeting of the Established Presbytery of Glasgow, Mr. Thomson (Minister of Ladywell) moved a motion that Muller’s teaching was “subversive of the Christian faith, and fitted to spread pantheistic and infidel views amongst the students and others”, and questioned Muller’s appointment as lecturer.

An even stronger attack on Muller was made ny Monsignor Alexander Munro in St Andrew’s Cathedral. Munro, an officer of the Roman Catholic Church in Scotland (and Provost of the Catholic Cathedral of Glasgow from 1884 to 1892), declared that Muller’s lectures “were nothing less than a crusade against Divine revelation, against Jesus Christ, and against Christianity”. The blasphemous lectures were, he continued, “the proclamation of atheism under the guise of pantheism” and “uprooted our idea of God, for it repudiated the idea of personal God”.

14

இப்படியாக எந்த ஒரு பணியை ஆற்றச் சொல்லி கிறிஸ்தவ மிஷனரிகள் பெரும் பணத்தைத் தந்து மாக்ஸ்முல்லரை நியமித்தார்களோ அவரது அந்தப் பணியில் அவர்கள் திருப்தி அடையவில்லை .

மாக்ஸ்முல்லர் ஆரிய இனம் என்ற பிரிவினைக் கொள்கையை ஏற்படுத்தினார். வேத காலத்தை மனம் போன படி மிகவும் குறைத்து மதிப்பிட்டார். வேதத்தின் பொருளை மாற்றினார்.

என்ற போதும் கூட கிறிஸ்தவ மிஷனரிகள் திருப்தி அடையவில்லை. ஏனெனில் மாக்ஸ்முல்லர் இந்தியாவைப் புகழத் தொடங்கியது அவர்களைத் திடுக்கிட வைத்தது.

சொந்தப் பணத்தில் சூன்யம் வைத்துக் கொண்டது போல அவர்கள் தவித்தனர்.

 

***      (தொடரும்)

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450)

Written by London Swaminathan 

 

Date: 1 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-59

 

 

Post No. 4450

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்   இந்துக்கள் போற்றும்  துருவ நட்சத்திரம்! (Post No.4450)

துருவ நட்சத்திரம் என்பதை அறியாத இந்துக்கள் இருக்க முடியாது. திட உறுதிக்குப் பெயர் எடுத்தவன் துருவன். இந்துக்களின் நூல்களில் சிறுவர்களும் புகழ்பெறுவார்கள்— நசிகேதன், மார்கண்டேயன், துருவன் போன்ற சிறுவர்கள் அ ழியாத இடம் பெற்றவர்களில் சிலர். இந்த துருவ நட்சத்திரத்தை நாம் எப்படி உறுதியின் சின்னமாக, நிலைத்த தன்மையின் சின்னமாகக் கருதுகிறோமோ அது போல ஷேக்ஸ்பியரும் கருதுகிறார். அவர் பல நாடகங்களில் இந்து மதக் கருத்துக்களை எதிரொலிப்பதால் இந்துக் கதைகளை அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஒரு இடத்தில் நாகரத்னம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் தேரையின் த லையில் உள்ள ரத்தினம் என்பார். ஏதோ பராபரியாக நமது நம்பிக்கைகளை அறிந்திருப்பார் போலும். ஓரிடத்தில் காளிதாசனின் சகுந்தலையைப் போலவே மிராண்டா என்னும் அப்பாவிப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறார். இன்னொரு இடத்தில்  ஜூலியஸ்சீசர் வாய்மொழி மூலமாக துருவ நட்சத்திரத்தைப் புகழ்கிறார்.

 

துருவனின் கதை எல்லோரும் அறிந்த கதைதான்:- ஸ்வாயம்புவ மனுவுக்கு இரண்டு புத்திரர்கள் என்று விஷ்ணு புராணம் கதை சொல்கிறது. பிரியவிரதன், உத்தான பாதன் என்ற இரண்டு மகன்களில் உத்தான பாதனுக்கு இரண்டு மனைவியர். ஒருத்தியின் பெயர்  சுருசி; அகந்தையின் சின்னம்; மற்றொருத்தியின் பெயர் சுநீதி; அடக்கத்தின் உறைவிடம்!

 

சுருசியின் மகன் பெயர் உத்தமன்; சுநீதியின் மகன் பெயர் துருவன். எங்கேயாவது அடுத்த பட்டத்துக்கு துருவன் போட்டிக்கு வந்துவிடுவானோ, தன் மகன் உத்தமனை பதவிக்கட்டிலில் அமர விடாமல் தடுத்துவிடுவானோ என்று எண்ணி சின்ன வயதிலிருந்தே துருவனைப் படாதபாடு படுத்தினாள் சு-ருசி. பெயரிலுள்ள ருசி குணத்தில் இல்லை! சு-நீதி மிகவுமடக்கமானவள்  என்பதால் துருவனை ரிஷி முனிவர் கோஷ்டியில் சேர்த்துவிட்டாள். அவர்கள் பேரின்பத்துக்கு வழிகாட்டுவர் என்றும் சொன்னாள்.

 

துருவனும் தாய் சொல்லைத் தட்டாதே என்று ரிஷி முனிவர்களுடன் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். இந்திரனுக்கு அச்சம்! அட, நம்ம பதவிக்கு உயரத்தான் தவம் செய்கிறான் போலும் என்று தடுத்துப் பார்த்தான்; முடியவில்லை. துருவனோ நாராயணனே நமக்கே பறை தருவான் என்று தவம் செய்தது வீண்போகவில்லை.

நாராயணனே நேரில் தோன்றி அவனை அரசு பதவிக்கும் மேலான இடத்தில், துருவ நட்சத்திரமாக உயர்த்தினார் என்று விஷ்ணு புராணம் புகழும்.

துருவ நட்சத்திரம் பற்றி க்ருஹ்ய சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் நூல்களில் பல  இடங்களில் அருந்ததி நட்சத்திரம் பற்றி விதந்தோதுகின்றனர். சப்த ரிஷி நட்சத்திரக் கூட்டத்தில் வசிஷ்ட நட்சத்திரத்தை ஒட்டியுள்ள அருந்ததியை திருமணமான தம்பதிகளுக்குக் காட்டுவதற்கு முதலில் துருவ நட்சத்திரத்தைக் காட்டி அதிலிருந்து அருந்ததி இருக்கும் இடத்தை உணர்த்துவர். ஆகவே 3000 ஆண்டுகளுக்கு முன்னரே அருந்ததி, சப்தரிஷி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றை தமிழர்களும் வட இந்தியர்களும் அறிவர்.

 

ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் ஸீஸர் கூறுகிறார்.
“But I am constant as the Northern Star, of whose true fixed and resting quality, there is no fellow in the firmament”– (Caesar)

 

நான் வட மீன் போல நிலையானவன்; அதனுடைய உறுதியும் நிலைத்த குணமும் உடையவன்; வானத்தில் வேறு எங்கும் காணமுடியாத அருங்குணம் அது- ஸீஸர்

 

ஷேக்ஸ்பியர் நாடகத்தில்  உள்ள இந்த வாசகம் நமது புராணத்திலும் இதிஹாசத்திலும் துருவன் பற்றி புகழப்படும் வாசகம்.

கிரேக்க புராணங்களில் சப்தரிஷி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பெருங்கரடிக் கூட்டம் (Great Bear, Ursa Major) என்று சொல்வரேயன்றி நம்மைப் போல புனிதமோ திட உறுதி பற்றிய குணங்களோ கற்பிக்கப்படுவதில்லை. ஆகவே ஷேக்ஸ்பியர் இந்து நம்பிக்கைகளை அறிந்திருந்தார் என்று சொல்வது மிகையல்ல.

நிறைய திருக்குறள் கருத்துக்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் இருப்பதால் அவற்றையும் பின்னணியில் வைத்து எனது கருத்துக்களை நோக்க வேண்டும். ஆங்கிலத்தில் நாலைந்து கட்டுரைகளில் திருக்குறள்- ஷேக்ஸ்பியர் ஒப்பீடுகளை அளித்துவிட்டேன். விரைவில் தமிழிலும் தருவேன்.

 

சுபம்–