Story-‘Aasaa Dukhasya Kaaranam’ (Post No.4748)

Date: 15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-47

 

Written by London swaminathan

 

Post No. 4748

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

There is no misery, if there is no desire- says Tamil poet Tiruvalluvar (Kural 368)

 

‘’Aasaa Dukhasya Kaaranam’’ , (Desire invites Misery) says a Sanskrit proverb.

 

‘’Striving for wealth with different designs, we follow our desires like cattle’’- says Rig Veda 9-19(3)

 

‘’Desire, which is never extinguished by the enjoyment of desired objects only becomes more intense like a fire fed with butter ‘’– Manu Smrti 2-94

 

There is a Telugu folklore in a hundred year old book. The story is as follows:

Four friends lived in Chitrapur and they were extremely poor. They decided to practise austerities. After some time, Goddess Kali appeared before them and gave them a talisman each. Since they asked for richness and happiness she told them to place the talisman on their heads and walk northwards. She told each one of them to dig the earth when a person’s talisman fell on the earth and take whatever one gets.

 

The four friends set out on their travel. At a distance, the talisman of the first man fell on the ground. Immediately he dug out the earth, an enormous quantity of copper was found. he told the other three friends that he was very happy and wanted to go back. Everyone agreed.

When they walked further north the second person’s talisman fell on the ground. The spot was dug into and he found enormous quantity of silver. He told them that he also wanted to go back like the first man. The other two proceeded further. one of the person’s talisman fell on the ground and the ground was dug into. There was enormous quantity of gold. By this time both of them were very tired. So the person who found gold said to the other man to come back with him and he would share the gold. But the fourth man who was very greedy still had the talisman on his head. He told the gold- man to go back and then proceeded further north.

 

After some time he was very happy because his talisman fell on the ground. He thought that he was  going to see mine of diamonds. But there was only iron when he dug into the ground. He was very tired and could not even take back the iron. He came such a long distance and already friends had gone back. So he could not take any of the iron. More over it would be uneconomical to transport from such a  long distance. He was dis appointed.

Now he learnt “ The man with unlimited desire is indeed poor but, if one is satisfied with what one has, can be rich” (Bhartruhari)

–Subham —

 

அவனின்றி ஓர் அணுவும் அசையாது- கதை (Post No.4756)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 8-53 am

 

Written by London swaminathan

 

Post No. 4756

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்; அவன் வாரி வழங்கும் வள்ளல்; கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்தான். அவனிடம் பரிசு பெற்ற பலர் அவனைப் பாராட்டினர். ஆனால் அறிஞர் பெருமக்களோ எல்லாம் இறைவன் செயல் என்று தனி மனிதன் துதியில் இறங்கவில்லை.

 

பரிசு வாங்கியவர்களில் ஒருவர் அரசனை இந்திரனே, சந்திரனே, பாரியே ஓரியே, காரியே என்று புகழ்ந்தார். வேறு ஒரு அறிஞர் ‘’அவனின்றி ஓர் அணுவும் அசையாது  — எல்லாம் ஈசன்  செயல் — ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று சொன்னார்.

‘’ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருதஹ கஸ்யஸ்யத்வித்தனம்’’

—–ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரம்

 

பொருள்

 

இந்த உலகம் முழுவதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது; எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் உள்ளது; அவரவர்களுக்குரியதை அனுபவியுங்கள்; பிறருடைய செல்வத்துக்கு ஆசைப் படாதீர்கள்

 

 

எத்தனை முறை பரிசு கொடுத்தாலும் இதே கதைதான். அரசனோ தன்னைப் புகழ்வதையே விரும்பினான். இறைவன் பற்றிய புகழ்ச்சியை அவன் விரும்பவில்லை. ஆனால் அறிஞர் பெருமக்களிடம் என்னைப் புகழ்ந்து பேசுங்கள், பாடுங்கள் என்று சொல்லத் துணிவும் இல்லை.

 

ஒரு முறை இதை அறிஞருக்கு குறிப்பால் உணர்த்துவோம் என்று கருதி இருவரையும் அழைத்தான்; தன்னை எக்காலமும் முக்காலமும் புகழும் ஒரு ஆளுக்கு ஒரு பூசணிக்காய்க்குள் ரத்தினக் கற்களை நிரப்பிக் கொடுத்தான் அதை வாங்கியவர் வெறும் பூசணிக்காய் என்றே நினத்தார். குறைந்த மதிப்புள்ள இரண்டு நாணயங்களை அறிஞரிடம் கொடுத்தார். இருவரும் புதிய பரிசுப் பொருட்களுடன் அரண்மனையிலிருந்து வீடு சென்றனர்.

 

பூசணிக்காய் வாங்கியவருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லை. அவர் வீட்டின் வழியாகச் சென்ற அறிஞரை அழைத்து நீங்களே இந்தப் பூசணிக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்; அவரும் அதை மனமுவந்து ஏற்று, என்னிடமுள்ள இரண்டு காசுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

 

அறிஞர் பெருமகன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பூசணிக்காயைக் கொடுத்து சமைக்கச் சொன்னார். அவள் அதை வெட்டிய அடுத்த நிமிடம் ரத்தினக் கற்கள் கீழே விழுந்தன. உடனே அந்த அறிஞர் நமக்குத் தேவையானதற்கு மேல் எதுகிடைத்தாலும் அதற்கு ஆசைப்படக்கூடாது; ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிஷத மந்திரத்தைச் சொல்லி, அரசனிடமே அந்த ரத்தினக் கற்களைக் கொடுத்து பூசணிக்காய் விஷயத்தைச் சொன்னார். அரசனனுக்குகு பெரும் வியப்பு!!

 

நான் இந்த ஆளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக காய்க்குள் மறைத்து ரத்தினக் கற்களை வேறு ஒருவருக்குக் கொடுத்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று  நினைக்கிறதே’ என்று வியந்தான். பின்னர் அ’வனின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது   உண்மையே என்பதை ஏற்று தனது தவற்றையும் அறிந்தான்.

அவனுடைய அஹங்காரம் அகன்றது; யார் யாருக்கு என்ன என்னவென்பதை இறைவன் ஏற்கனவே நிச்சயித்து விட்டான்; நான் ஒரு கருவி மட்டுமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இறைவனின் கணக்குப்படியே எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்தான்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

xxxx

MY OLD ARTICLES:

 

Indran | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/indran/

24 Dec 2016 – அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை …

பழமொழிகளில் இந்துமதம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பழமொழிகளில்-இந்த…

அவனின்றி ஒரு அணுவும் அசையாது (20). Picture: Sri Krishna. பிள்ளையார் சுழி போட்டாயிற்று பிள்ளையார் பிடிக்க குரங்கானது உரு ஏறத் திரு ஏறும் ஒன்றாகக் காண்பதே காட்சி ஆருமில்லார்க்கு தெய்வமே துணை (அகதிக்குத் தெய்வமே துணை) தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் (தனக்கும் …

You visited this page on 16/02/18.

இறைவன் செயல் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/இறைவன்-செயல்/

ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும் போது ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது‘ …

 

–சுபம்–

 

 

ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு (Post No.4754)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-23 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4754

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஸ்ரீ ஜோஸியம் பிப்ரவரி 2018 இதழில்  வெளியாகியுள்ள கட்டுரை

 

 ஸ்ரீ ராமரின் ஜோதிட அறிவு

 

.நாகராஜன்

 

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடம் எவ்வளவு பழமையானது என்பதைச் சுட்டிக் காட்ட வால்மீகி ராமாயணம் ஒரு சரியான சான்று. ஆதி காவியம் என்று அறிஞர்களால் புகழப்படும்  உலகின் முதல் காவியமும் பெரும் காவியமுமான ராமாயணத்தில் வால்மீகி முனிவர் ஜோதிடக் குறிப்புகளைத் தவறாமல் முக்கியமான இடங்களில் சொல்லிக் கொண்டே போகிறார்.

சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

ராமரின் ஜோதிட, ஹோரா அறிவு

முதலில் ராமர் ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்னர் நல்ல நேரத்தைத் தானே பார்த்துத் தொடங்குபவர் என்பதற்கு அவர் சீதையை நோக்கி இலங்கை செல்லப் புறப்பட நிர்ணயித்த தினமே ஒரு சான்று.

ஹனுமார் இலங்கையை நோக்கிச் செல்ல ராமரே ஒரு நல்ல வேளையைக் குறிப்பிட வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராமர் கூறுவது:

“இப்போதே நல்ல வேளையாக இருக்கிறது. சூரியன் வானத்தின் நடுவில் வந்து விட்டார். இந்த விஜய முகூர்த்தமே சிலாக்கியமானது. இன்று உத்தர பல்குனி (உத்தரம்) நட்சத்திரம். நாளை ஹஸ்தம். (அது எனது நட்சத்திரமான புனர்வசுவிற்கு ஏழாம் நட்சத்திரமாக ஆவதால் சுபமில்லை. அதாவது ஜன்ம நட்சத்திரத்திற்கு வத தாரை; உத்தர நட்சத்திரம் சாதக தாராபலம்) என்று இவ்வாறு ராமர் சுக்ரீவனிடம் கூறுகிறார்.

பகலில் உள்ள 30 நாழிகைகளில் 20 நாழிகைக்கு மேல் 22 நாழிகை முடிய உள்ள நேரம் விஜய முகூர்த்தம் எனப்படும். வெற்றி பெறுவதற்கான சரியான வேளை அது என்று ராமர் நிர்ணயிக்கிறார்.

 

ஆக இப்படி ஜோதிடத்தின் துணை கொண்டு நல்ல வேளை நிர்ணயித்த ராமர் வெற்றி பெற்றதில் வியப்பேதும் இல்லை.

ராமரின் ஜாதகம்

அடுத்து ராமரின் ஜனனம் முதல் பட்டாபிஷேகம் வரை வால்மீகி முனிவர் தரும் ஜோதிடத் தகவல்கள் பிரமிக்க வைப்பவை.

ராமர் சித்திரை மாதம் நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில் அவதரிக்கிறார். சந்திரன், சூரியன்,குரு, சுக்ரன்,செவ்வாய், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருக்க சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் போது கடக லக்னத்தில்  அவர் அவதரிப்பைதை பால காண்டம் சித்தரிக்கிறது.

 

பட்டாபிஷேக நாள்

ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர் சுக்ல ஸப்தமி, புஷ்ய (பூசம்) நட்சத்திரத்தில் வசிஷ்டரால் சீதையுடன் ரத்ன சிம்மாசனத்தில் அமர வைக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடக்கிறது.

ராமர் காட்டிற்கு கிளம்பியது புஷ்ய  நட்சத்திரத்திலேயே. ஆக பதினான்கு வருடங்கள் முடிந்து அவர் மீண்டும் அயோத்திக்கு வருகிறார். அவர் சைத்ர (சித்திரை மாதம்) சுக்ல பக்ஷத்தில் கிளம்பியவர். பால்குன (பங்குனி மாதம்) கிருஷ்ண பட்சம் முடிந்த போதே வருடக் கணக்கில் 14 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.

ஆகவே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றவர் பாரத்வாஜ ரிஷியின் உத்தரவின் பேரில் அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு கழிக்கிறார்.,முன்னதாக ஹனுமாரை அனுப்பித் தான் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவிக்க உத்தரவிடுகிறார்.

பிறகென்ன! அயோத்தி மாநகரமே குதூகலத்துடன் தயாராகிறது.

 

சகுன சாஸ்திரம்

இங்கு நாம் பார்த்தவை ஒரு சில குறிப்புகளை மட்டும் தான்!

ராமாயணத்தை முழுவதுமாக ஜோதிட ரீதியில் படிக்க ஆரம்பித்தால் ஜோதிட சாஸ்திரம், சகுன சாஸ்திரம், ஹோரா சாஸ்திரம் ஆகியவை பற்றிய பல முக்கிய குறிப்புகளைப் பெறலாம். (சீதை பெற்ற சுப சகுனங்களை வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் 29ஆம் அத்தியாயம் விவரிக்கிறது.)

வேதாங்கங்களின், ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிடத்தின் பெருமை ஆதி காலத்திலிருந்தே ஹிந்துத்வ வாழ்க்கை முறையில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழலாம்!

***

 

குறிப்பு: வால்மீகி ராமாயணத்தில் வரும் விரிவான ஜோதிடக் குறிப்புகள் பலவற்றை  ஸ்ரீ ஞானானந்த பாரதி ஸ்வாமிகள் எழுதிய 432 பக்கங்கள் உள்ள  ஸ்ரீ வால்மீகி ஹ்ருதயம் என்ற நூலில் காணலாம்.

–Subham–

பாரதி போற்றி ஆயிரம் – 54 (Post No.4753)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4753

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 54

  பாடல்கள் 367 முதல் 376

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

 முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

செந்தமிழ் நந்தமிழ் பைந்தமிழ் வண்டமிழ்

   தண்டமிழ் எனவே புலவோர்கள்

சிந்தைதான் மகிழ்ந்திடச் சந்ததம் எந்தன்மேல்

   சிந்துகள் பாடியே மகிழ்ந்தார்கள்

வந்தனை செய்தெனை அன்னையென் பாரிளமை

   மாறாத கன்னி என்றுரைப்பார்

எந்தன்மேல் கொண்டுள்ள அன்பினால் சொல்வதால்

   யாவையும் சமமாய் ஏற்றுவந்தேன்

 

என்றுயான் தோன்றினேன் எங்குதான் தோன்றினேன்

   என்பதை எவரும் அறிந்ததில்லை

இன்றதைச் சொல்லவே எண்ணற்ற ஆய்வுகள்

   ஏற்றுளோர் கூட உணர்ந்ததில்லை

அன்பினால் உரைத்திடும் முதற்சங்க வரலாற்றை

   ஆய்வாளர் என்போர் ஏற்கவில்லை

முன்னவர் மொழிந்தகல் தோன்றிமண் தோன்றாத

   முன்பிறந் தேனதில் மாற்றமில்லை

 

கல்லுடனே மண்கூடத் தோன்றாத காலத்தே

   கழறுமொழி தோன்ற லுண்டோ?

சொல்லுதற்கே பொருத்தமில்லை என்றுரைப்போர் சற்றதனை

   சிந்தித்தால் பொருள்வி ளங்கும்

எல்லையில்லா புவியதனில் மலைகள்தான் முதன்முதலில்

   எங்கணுமே தோன்றிற் றென்பார்

செல்லரித்தல் போலவைதான் தேய்ந்துதேய்ந் தல்லவோ

   செய்யமண்ணாய் ஆன தென்பார்

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலமெனில் கல்மண்ணாய்க்

   கரைந்தயிடைக் கால மன்றோ?

சொல்லுதற் கரிதான அந்நாளில் மனிதகுலம்

   தோன்றியது வரலா றன்றோ?

நல்லதொரு மொழியாக நாவினிக்கப் பேசிடவே

   நானன்னாள் பிறந்தே னன்றோ?

வல்லவர்கள் பலகாலும் ஆய்வுபல செய்தன்றோ

   வன்மையுடன் தேர்ந்து ரைத்தார்

 

இவ்வகையில் ஆய்ந்து பார்த்தால் – அந்நாள்

   இவ்வுலகில் தோன்றி வந்த

செவ்விய முதன்மை மொழியே – இந்த

   செய்யதமிழ் மொழியாம் யானே!

எவ்வகையில் பார்த்த போதும்  – இதனை

   எவருமே மறுத்தற் கில்லை

உவ்விடக் கதிரவன் போல் – அன்றோ

   உயர்வினைப் பெற்றே னன்றோ?

 

அகத்திய முனிவ நென்பான் – எனக்கு

   அரியநல் இலக்க ணத்தை

அகமெலாம் நிறைந்து போற்ற – அன்று

   ஆக்கினான் என்று ரைப்பார்

தகவறு நூல்க ளெல்லாம் – புலவோர்

   சங்கங்கள் அமைத்துத் தந்தார்

இகத்தினில் எனக்கு ஈடாய் – இயம்ப

   எவருமில்லை என்று வாழ்ந்தேன்

 

பிரளயம் பிரளயம் பிரளயமே – அதில்

   பூமியின் ஒருபகுதி தாழ்ந்ததுவே!

தரணியில் லெமூரியா கண்டமென்றே – சொல்லும்

   தனிப்பெரும் தென்குமரி மூழ்கியதே!

மரணத்தின் பிடியிலே உயிர்களெல்லாம் – சென்று

   மடிகையில் நூல்களை யார்காப்பார்?

பெருநிதி யாய்வந்த இலக்கியங்கள் – அந்தப்

   பிரளய வெள்ளத்தில் அழிந்தனவே!

 

என் செய்வேன் எவ்விதம் வாழ்ந்திடுவேன் – இனி

   எவ்விதம் தரணியில் நிலைபெறுவேன்?

என் தேகம் எனிலெந்தன் நூல்களன்றோ? – அவை

   எல்லாமே போயினுயிர் நிலைப்பதேது?

என்பெயர் சொல்லவும் யாருமின்றி – உலகில்

   எனக்கென அடையாளம் ஏதுமின்றி

என்னுயிர் அடங்கியே வீழுவேனோ? – அன்றி

   எவ்வித மேனுமுயிர் வாழுவேனோ?

 

காலமே எனையழிக்க நினைத்த போதும்

   காவலன் பாண்டியன் காத்து நின்றான்

சீலமாய் தென்மதுரை சென்று சேர்ந்தான்

   சீருடன் தமிழ்ச்சங்கம் மீண்டும் கண்டேன்

வாலறிவன் அருளாலே கடலை வென்றான்

   வடிம்பலம்ப நின்றபாண் டியனாய் நின்றான்

சாலவே அவனாலே எழுச்சி பெற்றேன்

   சங்கயிலக் கியங்களால் உயர்வு பெற்றேன்

 

நக்கீரன் கபிலனொடு பரண னென்றே

   நற்புலவர் என்மைந்தர் பலரும் வந்தார்

முக்கண்ணன் கவிதையாய் இருந்திட் டாலும்

   மொழிந்தது குற்றமெனில் துணிந்து சொன்னார்

எக்காலும் ஓய்வின்றி நடந்து சென்று

   எங்குமுள வாழ்க்கையினைப் பதிவு செய்தார்

இக்காலம் வரையந்த சங்க நூல்கள்

   ஏற்றத்தால் நானுயர்ந்து வாழ்கின் றேனே..

       

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

 

Isavasyam Idam Sarvam Story (Post No.4752)

Date: 16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-52

 

Written by London swaminathan

 

Post No. 4752

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

There is a famous Upanishadic couplet saying that everything is controlled and owned by God. One should not be greedy to take other’s property.

 

There is a story to illustrate this point. There was a king who had some ego problem. He gave lot of gifts to the poets and bards and expected everyone to praise him as the Anna Data (Giver of Food). Once he called two of his beneficiaries and asked them who gave them money and everything. One of them was a sycophant and replied immediately,

Oh, My Lord, You are the one who helped me and without you people would have died of hunger.

The other person, who is a great scholar said, everything is given by God. Isavasyam Idam sarvam.

 

The king did not like this answer. He wanted to hear the praise of every one. But he did not dare to say it in public. The king wanted to teach him a lesson. He sent them home.

 

Later the king filled the inside of a big pumpkin  with costly gems and sent it to the person who praised the king. The scholar who praised god instead of the King was given two small coins. They were not of big price.

 

The person who received the pumpkin did not know what was inside and so he decided to sell the pumpkin. He was very dissatisfied with the king. At that time the scholar who got two coins was passing his house. The person with a big pumpkin told the scholar to take the pumpkin. He readily agreed and gave his two coins to him.

 

When the scholar went home, opened the pumpkin and found it was full of costly gems. Then he ran to the king and told that he got a treasure from a pumpkin. The person who sold the pumpkin was also there and he told the king that he sold it to him for two coins of lesser denomination.

 

The king realised his mistake and felt everything in the world was done by God and controlled by God. The king’s vanity was completely cured by this occurrence.

Unassisted by the hand of Providence, human endeavours are fruitless.

 

He remembered the famous first couplet of Isavasyopanishad:

 

Isavaasyamidam sarvam yathkinchajagathyaam jagath
Thena thyakthena bhunjeethaah, maa gridhah kasyaswid-dhanam

“All things of this world, the transitory, the evanescent, are enveloped by the Lord who is the real Reality of each. Therefore, they have to be used with reverent renunciation, without covetousness or greed for they belong to the Lord and not to any one person”.

 

–Subham–

பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை (Post No.4751)

Date:16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Written by London swaminathan

 

Post No. 4751

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆசை பற்றி தமிழில் நிறைய பாடல்களும் பழமொழிகளும் உண்டு; அவை எல்லாம், பேராசைப்பட்டால் வரும் தீமைகளை எடுத்துரைக்கும்.

 

ரிக்வேதம், மனு ஸ்ம்ருதி, திருக்குறள் ஆகிய அனனைத்தும் போதிப்பது இதுவே.

 

நாம் செல்வத்திற்காக நம் ஆசைகளை நிறைவேற்ற பல திட்டங்கள் போட்டு அவைகளை ஆடு மாடுகள் மேய்வது போலப் பின்பற்றுகிறோம் – ரிக் வேதம் 9-19

 

ஆசைகளைப் பூர்த்தி செய்து அனுபவிப்பது என்பது தீயில் நெய் ஊற்றுவதற்கு இணையானது; ஆசைகள் என்றும் அவியாது – மனு 2-94

 

அவா இல்லார்க்கில்லாகும் துன்பம்- குறள் 368

 

தூஉய்மை என்பது அவாவின்மை- குறள் 364

 

ஒருவனை வஞ்சிப்பதோரும் அவா – 366

 

அவா= ஆசை

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

குறள் கதை:–

 

தெலுங்கு மொழியில் வழங்கிவரும் ஒரு நாட்டுப்புற கதையைக் காண்போம்:

சித்ராபூர் என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் இருந்தனர்; அவர்கள் வறுமையில் வாடினர்; வழி தெரியாது ஏங்கினர். ஒரு சாமியாரைக் கண்டனர். அவர் ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து காளி தேவியைப் பூஜியுங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

 

 

காளி தேவி பிரசன்னமானாள்; அன்பர்களே! உங்கள் பக்தியை மெச்சுகிறேன். என்ன வேண்டும் ? என்று வினவினாள்.

 

அவர்கள் சொன்னார்கள்: இன்பமும் செல்வமும் வேண்டும் என்று. அவள் உடனே நான்கு தாயத்துகளைக் கொடுத்து இதை ஒவ்வொருவரும் தலையில் வைத்துக்கொள்ளுங்கள். வடக்கு நோக்கிச் செல்லுங்கள். ஒவ்வொருவர் தாயத்து பூமியில் விழும்போதும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்து கிடைப்பதை எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.

 

 

அவர்களும் அகம் மகிழ்ந்து உளம் குளிர்ந்து வட திசை நோக்கி ஏகினர். சிறிது தொலைவு சென்றவுடன் முதலில் ஒருவன் தாயத்து விழுந்தது. அவன் தோண்டிப் பார்த்தான். அங்கே தாமிர உலோகக் கட்டிகள் நிறைய இருந்தன. முடிந்த மட்டும் மூட்டை கட்டினான். நண்பர்களே! எனக்கு பரம திருப்தி; நான் கிராமத்துக்குத் திரும்பிச் சென்று புது வாழ்வு படைப்பேன் என்றான்; நண்பர்களும் ஆமோதித்தனர்.

இன்னும் கொஞ்சம் நடந்தனர் மற்ற மூன்று பேர்.

 

இரண்டாமவன் தலையில் இருந்த தாயத்து விழுந்தது. அவன் நிலத்தைத் தோண்டினான்; வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. அவனுக்கு பரம சந்தோஷம்; நபண்பர்களிடம் விடை பெற்று சித்ராபூருக்குத் திரும்பி புது வாழ்வு வாழ்ந்தான்.

 

இதற்குள் மற்ற இருவருக்கும் களைப்பு மேலிட்டது; பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது; இருந்தும் தலையில் தாயத்து இருந்ததால் முன்னேறினர்.

 

 

வெகு தொலைவு சென்றபின்னர் மூன்றாமவன் தாயத்து தரையில் விழுந்தது. அங்கே தோண்டினான். நிறைய தங்கக் கட்டிகள் இருந்தன. அவன் சொன்னான்

இதோ பார்! கொஞ்ச நேரத்தில் இருண்டு விடும்; சூரியன் மலை வாயில் விழுந்து கொண்டிருக்கிறான்; நீ முடிந்த மட்டும் உனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக் கொள்; நான் முடிந்தவரை எனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்கிறேன் என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை அவனுக்குப் பேராசை; இனியும் போனால் ஞ் வைரக் கட்டிகள் கிடைக்கும் என்று எண்ணினான்.

 

மூன்றாவது ஆள் வணக்கம் சொல்லி விடை பெறவே நான்காமவன் பயணத்தைத் தொடர்ந்தான். வெகு தொலைவு சென்ற பின் தாயத்தும் தலையில் இருந்து விழுந்தது. ஆசையோடு தோண்டினான்; வெறும் இரும்புக் கட்டிகளே இருந்தன; பொழுதும் சாய்ந்தது. இரும்பைத் தூக்கிக் கொண்டு இனியும் நடக்க முடியாது என்று வெறும் கைகளோடு வழீ தெரியாமல் தட்டுத் தடுமாறி கிராமத்தை நோக்கி நடை போட்டான்.

கிராம மக்களுக்கு பேராசை பெரு நஷ்டம் என்பதை விளக்கவும் அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே; கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழக் கற்றுக்கொள் என்பதற்காக இக்கதைகயைச் சொல்லுவர்.

 

ஆசை பற்றிய தமிழ்ப் பழமொழிகள் இதோ:

 

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை

 

ஆசை காட்டி மோசம் செய்கிறதா?

ஆசை பெரிதோ, மலை பெரிதோ?

 

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

My  Old Article

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 …

https://tamilandvedas.com/…/ஆசை-பற்றி-30-பழமொ…

Translate this page

29 Aug 2016 – ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி. செப்டம்பர் 12 திங்கட்கிழமை. ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி. செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை. ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை …

 

 

–subam–

 

 

ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய முறைகள்! – 1 (POST NO.4750)

Date: 16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-09 am

 

WRITTEN by S NAGARAJAN

 

Post No. 4750

 

PICTURES ARE TAKEN from various sources.THEY MAY NOT BE DIRECTLY LINKED TO THE ARTICLE.THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 1

 

ச.நாகராஜன்

 

எனக்கு ஜோதிடம் தெரியாது. ஆனால் ஜோதிடக் குறிப்புகள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது உண்டு. நண்பர்களுடான விவாதங்களும் உண்டு.

 

 

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் சென்னை செல்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸில் மனைவியுடன் ஏறினேன். வண்டி கிளம்பி விட்டது.எங்களுக்கு மிடில் பெர்த்தும் அப்பர் பெர்த்தும். மற்றவர்கள் ஒரே குடும்பம். சௌராஷ்டிரர்கள். கீழ் பெர்த், எதிர்ப் பக்கம் 3 பெர்த். ஆனால் வண்டி கிளம்பியவுடனேயே சாப்பாடு மூட்டையை விரித்து விட்டார்கள். எதிர்த்த பக்கம் கீழ் பெர்த்தில் அவர்களது சாமான்கள்.

 

என் மனைவிக்கு கீழே ஒண்டக் கூட இடமில்லை. இப்படியே திருச்சி வரை நிற்க முடியுமா?

மிகவும் இள வயதினரான அவரை ரிக்வெஸ்ட் செய்தேன். கொஞ்சம் இடம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்யுமாறு. ஹூம், முடியாது என்று கூறி விட்டார். எதிர்த்த பக்க இடம் – ஹீம், சாப்பிட்ட பின்னால் முடிந்த போது தான்! பிறகு ஒரு வழியாக நானே இறங்கி வந்தேன். நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டாம் சார்! நாங்கள் எங்கள் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறோம். கொஞ்சம் நகர்ந்தால் சங்கிலியை எடுத்து பெர்த்தை மாட்டிக் கொள்ளலாம்?

 

“ஹூம்,முடியாது. சாப்பிட்ட பின்னர் பார்க்கலாம்!”

நடந்ததைக் கவனித்த சக பயணிகள் இது அடாவடித்தனம் என்றனர்.

 

ஆனால் நண்பர் கண்டு கொள்ளவே இல்லை.

திடீரென்று அவரை உற்றுப் பார்த்தேன்.

“என்ன முறைக்கறீஙக?

“முறைக்கல!உங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்றேன்.”

“என்ன!!?”

 

கொஞ்ச நாளைக்கு முன்னால உங்க காதிலே ஆபரேஷன் செய்தீர்களா? அது சக்ஸஸ்.இனி மேல் காது பற்றிய பிரச்சினையே உங்களுக்கு ஆயுசுக்கும் கிடையாது.”

“சார்!” என்று அவர் அலறி விட்டார்.

 

தன் குடும்பத்தினரை எழுப்பி விட்டார். அவர்களும் எனது பேச்சைக் கேட்டு பிரமித்தனர்.

“யாருக்குமே இது தெரியாது. ரகசியமாக வைத்திருந்தோம் சார்” என்றனர் குடும்பத்தினர்.

என் மனைவியிடம் மன்னிப்பு கேட்டு அவரை சீட் முழுவதும் தந்து உட்காரச் சொன்னார் நண்பர் ஜேஎல்-! என்னை வலுக்கட்டாயமாக உட்கார்த்தி அவர் தரையில் உட்கார்ந்தார்.

எப்படி சார்? சொன்னீர்கள். என்னிடம் ஜாதகம் இருக்கிறது. ஆனால் நான் எதையுமே சொல்லவில்லையே!

இரவு 10 மணி வரை அரட்டை. அவரிடம் என் போன் நம்பர் முகவரியைத் தந்து “சென்னையிலிருந்து வந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்” என்றேன்.

 

படுக்கப் போகுமுன்னர்,”சார், என் மண்டை வெடித்து விடும் சார்! எப்படிச் சொன்னீர்கள் காதில் ஆபரேசன் என்று” என்று கேட்டார்.

“அவர் வலது கையில் இருந்த ஒரு மேட்டில் இருந்த ஒரு பழுப்பு மச்சத்தைக் காண்பித்தேன். இது முன்பு இல்லை. இப்போது வந்தது. இது காதில் ரண சிகிச்சையைக் குறிக்கும். அது பெரிதிலிருந்து சிறிதாகி வருகிறது. ஆபரேஷன் சக்ஸஸ். இது மறையும் போது  முற்றிலும் குணமாகி விடுவீர்கள்.கையைக் கையை ஆட்டிப் பேசினீர்கள் இல்லையா, அப்போது கவனித்தேன், ஆபரேஷன் விஷயத்தை!” என்றேன்.

 

அவரும் அவர் குடும்பத்தினரும் என்னை பிரமிப்புடன் பார்த்தனர.

ஒரு பிரபல ஆங்கில மருத்துவ – கைரேகை நிபுணர் ஒவ்வொரு வியாதிக்கும் கைரேகைக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதியுள்ள சுவாரசியமான புத்தகத்தைப் படித்ததன் விளைவு இது!

நண்பர் ஜேஎல்- நெடுங்கால நண்பராக இருந்தார்.

கால ஓட்டத்தில் அவர் பெரிய வியாபாரி. நான் வேறு தொழில்.

ஒரு சின்ன இடத்தை இரண்டு மணி நேரம் பிடிக்க ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய முதல் முறை இது!

தப்பு தப்பு தான்!    ( இன்னும் இரு பகுதிகள் வரும்)

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 53 (Post No.4749)

Date: 16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-49 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4749

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 358 முதல் 366

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

பாரதியின் மொழிப்பற்று

பாகாக இனிக்கின்ற பாக்கள் தந்த

   பாரதியின் கவித்தொகுப்பில் நுழைந்தே யானும்

சாகாத தெய்வமொழி தமிழே என்று

   சாற்றுதற்கு வாய்ப்பினையே உவந்து ஏற்றேன்

ஆகா!இத் தமிழ்ப்பாக்கள் அனைத்தும் என்றும்

   அழியாத படைப்பென்றே அதன்சீர் போற்றி

மாகாளி பராசக்தி அருளை வேண்டி

   மனமுவந்து இசைக்கின்றேன் மகிழ்ந்து கேட்பீர்!

 

வீடுதோறும் நூலகமும் இருத்தல் வேண்டும்

  வீடுதோறும் கலைக்கூடம் அமைத்தல் வேண்டும்

நாடுமுற்றும் மொழிப்பற்று வளர்ந்தே யோங்க

   நகரெங்கும் பள்ளிகளும் பெருக வேண்டும்

நாடுகின்ற தொழிலாலே வளமை யேற்க

   நமக்குவேண்டும் மொழிப்பற்று என்று கூறி

பாடுகின்ற பாக்களிலே உணர்ச்சி யூட்டி

   பக்குவமாய் பாரதியும் இசைக்கக் கேட்டோம்

 

 

மொழிப் பற்று தெய்வபக்தி தேசப்பற்று

   முப்பற்றும் பாரதியார் முழங்கக் கண்டோம்

மொழிகளிலே முத்திறத்தைச் சாற்று பான்மை

   முத்தமிழுக் கீடில்லை புவியி லெங்கும்

எழிலாகப் பழங்கதைகள் நித்த நித்தம்

   இயம்புவதால் பயனில்லை! வீணே நேரம்

அழியாத புகழ்நாட்டும் புதுமை நூல்கள்

   அருந்தமிழில் இயற்றிடவே வழியுங் கண்டோம்.

 

அமிழ்தமென அருந்தமிழில் விருந்து வைத்தே

   அனைவரையும் சுவைக்கவைத்த கவிஞர் ஏறே!

தமிழேதான் உயிர்மூச்சாய் ஏற்கச் செய்து

   தாய்நாட்டை உயர்நாடாய் போற்றச் செய்ய

இமிழ்கடல்சூழ் உலகமெலாம் தமிழே ஓங்க

   எந்நாளுங் கவிபாடிப் பாடுபட்ட

தமிழகத்தின் தீரனேஉன் தொண்டு வாழ்க!

   தீந்தமிழின் மொழிப்பற்றை வளர்த்தாய் போற்றி!

 

அடுத்தடுத்து துன்பந்தான் அடைந்திட்டாலும்

   அதற்கஞ்சா வேங்கைபா ரதியே யன்றோ!

எடுத்திட்ட எழுதுகோலால் எவரும் போற்ற

   ஏடுதனில் கவியாறே ஓடக் கண்டோம்

விடுத்திட்டார் கவிக்கணையை பகைவர் மீது

   விழிப்புணர்வை நம்நெஞ்சில் பாயச் செய்தார்

கொடுத்த அவர் பாட்டடையின் தேனைத் துய்த்து

   கிளர்ந்தெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வோம்!

 

ஈனமுள எண்ணமெலாம் நீங்கி மாந்தர்

   இன்பநிலை எய்திட நல் வழியைக் காட்டி

கானயிசை ஏழ்கடலின் உள்ளும் வீசக்

   கனித்தமிழ்த்தே னிசைத்த எம்பா ரதியே வாழ்க!

வானார்ந்த பொதியின்கண் வளர்ந்து செல்வ

   வளமையெலாம் பெற்றுயர்ந்த தமிழின் மாண்பை

ஆனாத நூற்கடலை, வியந்து போற்றும்

   அருமைமிகு பாரதியின் திறமே வெல்க!

 

மனத்தினிலே வாய்மைதான் தோன்றிவிட்டால்

   மணக்கின்ற சொல்லைத்தான் உதிர்ப்போ மன்றோ!

புனிதமிகு பாரதியின் பிறப்பைக் காணப்

   புரிந்ததுவோ அருந்தவமோ பார தந்தான்.

புனலினது பெருக்கைப்போல் உணர்ச்சி வெள்ளம்

   புவியினிலே பாரதியின் பாட்டி லுண்டு

இனிதுவந்து தமிழமுதைச் சுவைத்து யாமும்

   இங்கமரர் சிறப்பினையே பாடக் கேட்டோம்!

 

எண்ணத்தில் தூய்மையுடன் வாழ்த்துக் காட்டி

   இணையில்லா மொழிப்பற்றை நமக்கு ஊட்டி

பண்ணிசைக்கும் யாழைப்போல் சிந்து பாடி

   பாரதத்தின் விடுதலைக்கே உணர்வை யூட்டி

மண்ணகத்தில் பக்திநெறி தழைக்கச் செய்து

   மாத்தொண்டு புரிந்துவந்த கவிஞர் வாழ்க

அண்ணலுக்கும் ஆண்டாண்டு விழாவெ டுத்து

   அகிலமெங்கும் அவர்பெருமை பாடு கின்றோம்.

 

பத்ரையின் மாற்றொத்த பொன்னைப் போன்ற

   பாரதியின் பாநயத்தை இன்னுஞ் சொல்ல

முத்தனைய கவிகளுமே எனக்குப் பின்னே

   முகிழ்த்திடவே காத்திருக்க யாமும் கண்டோம்!

தித்திக்கும் தமிழ்மொழியின் மாண்பைக் கண்டோம்

   திகட்டாமல் சுவைத்திடவே உங்க ளைப்போல்

சித்தமுடன் செவிசாய்க்க விரும்பு கின்றேன்

   சபையோரே! விடை தருவீர் வணக்கம்! நன்றி!

தொகுப்பாளர் குறிப்பு:
எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத்தில் 11-12-2001-இல் கலைமாமணி விக்ரமன் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் அருட்கவிஞர் காசி பாடியது.

மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலின் இறுதியில் இந்தப் பாடல் உள்ளது. நூலின் விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம். 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை

****

வள்ளுவன் கதை: அழுக்காறு என ஒரு பாவி (Post No.4747)

Date:15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 13-12

 

Written by London swaminathan

 

Post No. 4747

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

பொறாமை பற்றிய ஒரு சுவையான கதையைப் படியுங்கள்.

 

வள்ளுவன் பத்து குறட்பாக்களில் அவ்வியம் பற்றிப் பாடுகிறான். பொறாமை எனப்படும் தீய குணத்தினால் செல்வம் அழியும் என்கிறான். அழுக்காறு இல்லாதவனுக்கு அது ஒரு பெரிய வரம் என்கிறான்

 

இதோ சில வரிகள்:

 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

 

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

 

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 

பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

 

ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி ஜோடி. கணவனுக்கு வேலை இல்லை. குடும்பம் வறுமையில் வாடியது. மனைவியின் நச்சரிப்பு தாங்கவில்லை. திரை கடலோடியும் திரவியம் தேடு என்கிறார்களே. நீங்கள் கடல் தாண்டிக் கூட செல்ல வேண்டாம்; அடுத்த ஊருக்காவது போய் வேலை தேடுங்கள் என்றாள்; அவனும் நச்சரிப்பு தாங்காமல் சரி என்றான்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

அவளுக்கு ஏக சந்தோஷம்; அறு சுவை உண்டி சமைத்தாள். பெரிய பித்தளை பாத்திரத்தில் (சம்புடம்) கட்டுச் சோறு கட்டிக் கொடுத்தாள். அவனும் வழி நடந்தான். மாலை நெருங்குகையில் களைப்பு மேலிடவே ஒரு மரத்தடியின் கீழ்ப் படுத்தான். அதற்கு முன் உணவு சம்படத்தை ஒரு மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டான்.

 

களைப்பில் நன்றாகக் கண் அயர்ந்தான். இவனது அதிர்ஷ்டம் அந்தப் பக்கமாகப் பார்வதி பரமேஸ்வரன் பூமி வலம் வந்தார்கள்.

இவனுடைய உணவுப் பாத்திரத்தில் இருந்து புறப்பட்ட நறுமணம் ஈரேழு உலகங்களையும் வியாபித்து  நின்றது.

பார்வதி: நாதா! வாசனை மூக்கைத் துளைக்கிறது; நாக்கில் ஜலம் ஊறுகிறது. அங்கே படுத்திருப்பவன் சாப்பாட்டைக் கொஞ்சம் ருசிப்போமே என்றாள்.

சிவனும் அப்படியே ஆகட்டும் என்றார். சுவைக்கப்போன இருவரும் முழு உணவையும் சாப்பிட்டு முடித்தனர். மரத்தடியில் தூங்கினவன் எழுந்தால் ஏமாறக்கூடாதென்பதற்காக பித்தளை சம்புடத்தை தங்கமாக மாற்றி நினைத்த போதெல்லாம் உணவளிக்கும் அக்ஷய பாத்திரமாகச் செய்து மரத்தின் கிளையில் தொங்க விட்டனர்.

 

அவன் தூங்கி எழுந்ததபோது பசி  வயிற்றைக் கிள்ளியது.  இலையை விரித்தான்,பாத்திரத்தைத் திறந்தான். ஒன்றுமில்லை. அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பருக்கைகளாவது கிடைக்கட்டும் என்று அதை கவிழ்த்தான். என்ன அற்புதம்? அறு சுவை உணவு இலையில் விழுந்தது சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிராமத்துக்கு ஓடினான். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து தனது கதைகளை விஸ்தாரமாய்ச் சொல்லி சாப்பாடு போட்டான்.

 

அப்படிச் சாப்பிடவர்களில் அடுத்த வீட்டுக் காரியும் இருந்தாள்; அவளோ பொறாமையின் ஒட்டுமொத்த வடிவம்; அவளும் இரவோடு இரவாகத் திட்டம் போட்டாள். கணவனுக்கு தலையணை மந்திரோபதேசம் செய்து அவனை மறு நாளே அயலூருக்கு அனுப்பிவைத்தாள்; மந்திரோபதேசத்தின் முக்கிய அம்சம்—அடுத்த வீட்டுக்காரன் செய்தது போலவே எல்லாம் செய்யவேண்டும். இவனும் நடைவழிப் பயணத்தின் பாதியில் ஓய்வு எடுத்தான்; மரக்கிளையில் பித்தளைப் பாத்திர உணவைத் தொங்கவிட்டான். கண்ணயர்ந்து எழுந்தபோது சம்படம் மாறி இருந்தது. ஆயினும் இருட்டு நேரம் ஆதலால்     அ ப்படியே வீட்டுக்கு ஓடி வந்த மனைவியிடம் கொடுத்தான்.

 

அவளோ அவசரக்காரி; ஆத்திரக்காரி; பாத்திரத்தில் என்ன இருக்கிறது, என்ன பாத்திரம் என்பதைப் பார்க்காமல் ஊரையே அழைத்தாள் விருந்துக்கு.

உண்மையில் நடந்தது என்ன வென்றால் அவன் உறங்கியபோது பார்வதி பரமேஸ்வரனுக்குப் பதிலாக ஒரு பிரம்ம ராக்ஷஸ் (பேய்) தம்பதியினர் அந்தப் பக்கம் வந்து அவனுடைய அறுசுவைச் சாப்பாடு எல்லாவற்றையூம் சாப்பிட்டுவிட்டு, அவனது தீய எண்ணத்தை உணர்ந்து அந்த பாத்திரத்தில் ஒரு மூக்கறுப்பு கருவியை வைத்துச் சென்றனர்.

 

ஊரே கூடியபோது மனைவி அதைத் திறக்கவே, அதனுள்ளே இருந்த பேய் அவளுடைய மூக்கையும் அருகில் சாப்பிட உட்கார்ந்த எல்லோருடைய மூக்கையும் அறுத்துத் தள்ளியது.

ஆக ‘அழுக்காறு என்னும் பாவி’, அந்த பொறாமைக்கார மனைவியையும் அவளுடன் சேர்ந்தோரையும் தண்டித்தது.

நீதி- அவ்வியம் பேசேல்

 

–சுபம்–

இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2 (Post No.4746)

Date: 15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-56 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4746

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

இருந்தும் இறந்தவர் யார், யார்? – 2

 

ச.நாகராஜன்

 

5

சுபாஷித ஸ்லோகம் ஒன்று இருந்தும் இறந்தவர் யார் என்பதைச் சொல்கிறது :

 

ஜீவந்தோபி ம்ருத பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே! |

தரித்ரோ வ்யாதிதோ மூர்க: ப்ரவாஸி நித்யஸேவக: ||

ஸ்லோகத்தின் பொருள் : இருந்தாலும் இறந்தவர் தாம், இந்த ஐந்து பேர்கள்!

ஏழை, வியாதியுள்ளவன், முட்டாள், அன்ய தேசத்தில் வாசம் புரிபவன், எப்போதும் பிறருக்கு ஊழியம் செய்பவன் இந்த ஐந்து பேரும் ஜீவித்திருந்தாலும் கூட செத்ததற்கு ஒப்பானவர்கள்!

 

 

நீண்டகாலமாக தரித்ரனாக உள்ளவன், நீண்ட காலம் தீராத வியாதி உள்ளவன், அறிவே இல்லாத நிரந்தர முட்டாள், நீண்ட காலம் பிற தேசத்தில் வாழ்பவன், வாழ்நாள் முழுவதும் பிறருக்கு ஊழியம் செய்து கொண்டே இருப்பவன் ஆகிய இந்த ஐவரை எப்படி உயிருடன் இருப்பதாகச் சொல்ல முடியும்?!

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

6

அம்பலவாணக் கவிராயர் என்ற புலவர் அறப்பளீசுர சதகம் என்ற நூலில் நூறு செய்யுள்களை இயற்றித் தந்துள்ளார். வாழ்வாங்கு வாழும் போது அறிய வேண்டிய அற்புத நெறிமுறைகளைத் தரும் நூல் இது.

 

அதில் எண்பதாவது பாடலில் பயனில்லாதவை எவை என்று ஒரு பட்டியலைத் தருகிறார்; அதில் ஒரு வரி:

 

சாம் மரண காலத்தில் உதவாத புதல்வன் ஏன்?

என்று கேள்வி கேட்கிறார்.

மரண காலத்தில் உதவி செய்யாத புதல்வன் இருந்து தான் என்ன பயன்? அவன் இருந்தும் இறந்தவனே தான்!

 

 

7

 

 

 

மகாகவி பாரதியார் சிவசக்தியை நோக்கிப் பாடும் பாடல் உளத்தை உருக வைக்கும் ஒரு பாடல்!

நல்லதோர் வீணை செய்தே – அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

என்று ஆரம்பிப்பவர்,

சொல்லடி சிவசக்தி – எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி சிவசக்தி! – நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

என்கிறார்.

சுடர் மிகும் அறிவு எதற்குப் பயன்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மாநிலம் பயனுற வாழச் செய்யும் வல்லமை மூலம் அனைவரும் பயனுற வாழ வழி வகுக்கும் சுடர் மிகும் அறிவுடையவனே உண்மையில் வாழ்பவன். அதில்லையேல் அவன் நிலச் சுமையென வாழ்பவனே. அதாவது இருந்தும் இல்லாதவனே!

 

8

மொத்தத்தில் குடும்பத்திற்கும் பிறருக்கும் நல்ல முறையில் உதவி அவர்களை உயரத்தில் ஏற்றுபவனே வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் ‘வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’.

 

 

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் கடலில் மாண்ட பாண்டிய மன்னனான இளம்பெருவழுதி பாடியது. அதில் நல்ல தமிழன் ஒருவனின் இலக்கணத்தைப் பாண்டிய மன்னன் சொல்வது நம்மை பிரமிக்க வைக்கும். பாடல் இது தான் :

 

 

உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்

அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமியருண்டலு மிலரே முனிவிலர்

துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி

உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுந ருண்மையானே (பாடல் 182)

 

 

பாடலின் பொருள்:

இந்த உலகம் இருப்பதன் காரணம் இது தான்!

இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாலும் கூட அதைத் தனியே தான் ஒருவனே உண்ணமாட்டார். யாருடனும் வெறுப்பில்லாதவர்.பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி அது தீர்தல் பொருட்டு மடிந்திருத்தலும் இலர். புகழ் கிடைப்பதாக இருந்தால் தம்முடைய உயிரையும் கொடுப்பர். பழி வருவதாக இருந்தாலோ உலகம் முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்; அயர்வே இல்லாதவர். இவ்வளவு பெற்றி உடையவராக தமக்கென்று முயலாமல் பிறர் பொருட்டென முயல்வார்.

அப்படிப்பட்டவர் இருப்பதால் அல்லவா இந்த உலகம் நிலை பெற்றிருக்கிறது!

பாண்டியனின் கூற்றின் சாரம் பிறர்க்கென வாழ்பவரால் அல்லவா உலகம் நிலை பெற்று இன்னும் இருக்கிறது!

 

 

9

 

இருந்தும் இறந்தவர் யார் என்று பல பெரியோர்கள் கூறியதை ஆராயப் புகின் நாம் பெறுவது பல உண்மைகளை!

ஆரோக்கியமான வாழ்வைக் கொண்டு, அற வழியில் பொருள் ஈட்டி, மன நிம்மதியுடன் மற்றவர்களுக்கு உதவி புரிந்து நீடு வாழ வேண்டும் என்பது தான் சாரம்!

***