அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

அதிசய ரத்தினக் கற்கள்- கம்பன் பாடல்களில்! (Post No.4884)

 

Research article Written by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  8-49 am (British Summer Time)

 

Post No. 4884

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழில் ராமாயணத்தைத் தந்தான் கவிச் சக்ரவர்த்தி கம்பன். அவன் காலத்தில் சோழ வள நாடு சோறு மட்டுமின்றி ரத்தினக் கற்களிலும் செழிப்பாக இருந்தது. இதை அ வனது பாடல்களில் காண முடிகிறது. அது மட்டுமா?

 

அதிசய நாக ரத்தினம் பற்றியும், தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் ‘ஸ்பர்ஸ்வேதிக்’ கல் பற்றியும் கம்பன் பாடுகிறான். இது அக்கால நம்பிக்கைகளை எடுத்துக் காட்டுகிறது

 

‘ஸ்பர்ஸவேதி’ என்னும் கல்லை சித்தர்கள் வைத்திருந்தார்கள் என்றும் அதனால் அவர்கள் வேண்டிய அளவுக்குத் தங்கக் கட்டிகளைப் பெற்றார்கள் என்றும் இந்துக்கள் நம்புவர். மேலை நாட்டிலும் மத்திய காலத்தில் இப்படி ஒரு நம்பிக்கை இருந்தது.

 

கம்பன் சொல்வான்; ராமன் ஒர் ஸ்பர்சவேதிக் கல் போலும்; அவன் தொட்டதெல்லாம் தங்கம் ஆகி விடுகிறதே என்று!

 

நாகரத்தினம் உண்டு என்றும், இதைக் கொண்டே நாகங்கள் இரை தேடும் என்றும் தமிழர்கள் நம்பினர் (காளிதாசன் காவியங்களிலும், சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ள விஷயங்களை ஏற்கனவே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் கொடுத்துள்ளேன்)

 

கம்பன் இதைச் சொல்கிறான்:-

 

சுந்தர காண்டத்தின் நிந்தனைப் படலத்தில் சீதையைத் தேடி அசோக வனத்துக்குள் வந்த ராவணனை வருணிக்கும் கம்பன் செப்புவான்:-

 

ஒரு மணி தேடும் பல் தலை அரவின்

உழைதொறும் உழைதொறும் உலாவி

 

காம மயக்கத்தால் சீதை இருக்கும் இடத்தை மறந்து போன ராவணன், தன் ஒப்பற்ற மாணிக்கத்தை  இழந்த பல தலைப் பாம்பு போலப் பற்பல இடங்களிலும் அவளைத் தேடித் திரிந்தபடி வந்தான்.

 

 

அனுமன் கடலைத் தாண்டிய வேகத்தில் கடல் நீர் கிழிந்ததாம். அதில் பாதாள லோகமும் அங்கே வாழும் நாகர்களுடைய ரத்தினங்களும் மின்னியதாம்.

 

கீண்டது வேலை நல் நீர் கீழ் உறக் கிடந்த நாகர்

வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன

–கடல் தாவு படலம், சுந்தர காண்டம்.

 

உருக் காட்டுப் படலத்தில் ராமனின் மோதிரத்தை அனுமான் சீதையிடம் கொடுத்தவுடன், மாணிக்கத்தைத் தேடும் பாம்புக்கு அந்த ரத்தினம் கிடைத்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்ளுமோ அது போல சீதையின் மன நிலை இருந்ததாம்.

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்– என்பான்.

 

வேதிகை மணி

அதிசயமான வேதிகை மணி பற்றிய பாடலும் சுந்தர காண்டம் உருக்காட்டுப் படலத்திலேயே வருகிறது:-

நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம்

பூண்டது ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே

ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்

தீண்டு அளவில் வேதிகை செய்தெய்வ மணிகொல்லோ

 

பொருள்:-

நீண்ட கண்களையும் சிறந்த அணிகலன்களையும் உடைய சீதையின் மின்னல் போன்ற உடலின் நிறமானது, மோதிரத்தின் ஒளியால் பொன்னிறம் பெற்றுப் பொலிவும் பூண்டது. இது உண்மை! எனவே, இராமனது மோதிரம் தன்னை நெருங்கும் எல்லாப் பொருள்களும் தன்னைத் தீண்டுகிற மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத் தன்மை பெற்ற ஸ்பரிசவேதி என்னும் ரசவாத குளிகைதானோ?

 

ஆரண்ய காண்டம், சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணன் மாணிக்கத் தேரில் ஏறி வந்ததாகவும் அங்கே ஒன்பது மணிகளால் (நவரத்னம்) ஆன மரங்கள் இருந்ததாகவும் கூறுகிறான்

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான்

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற

 

 

நவரத்தினத் தேர், நவரத்தின மோதிரம்!

 

 

ராமன் ஏறிய தேர் பற்றிய வர்ணனை மிகவும் சுவையானது;-

பொன் திரள் அச்சது வெள்ளிச் சில்லி புக்கு

உற்றது வயிரத்தின் உற்ற தட்டது

சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்து

ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடும் ஒப்பதே

–பால காண்டம்

 

ராமனின் தேரின் அச்சு-தங்கம், சக்கரம்-வெள்ளி, தேர்த் தட்டு- வைரம், பார்டர்- நவ அர் ரத்தினக் கற்கள், சூரியனின் ஒற்றைச் சக்கரம் போன்றது.

 

 

கிட்கிந்தா காண்டம், கார்காலப் படலத்தில் நவ ரத்தின மோதிரம் பற்றிய வருணனை வருகிறது:

நானிறச் சுரும்பும் வண்டும் நவமணி அணியின் சார- என்ற பாடலில் பல நிறங்களுடைய சுரும்புகளும் வண்டுகளும் நவ மணிகள் இழைக்கப் பெற்றுக் கைகளில் அணிந்து கொள்ளும் மோதிரம் வளை போலக் காந்தள் மலரில் மொய்த்தன– என்று வருகிறது.

இவ்வாறு நவரத்தினம், தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் நிறையவே உள்ளன. இவை சோழர் கால செல்வ வளத்தின் எதிரொலி என்றால் மிகையாகாது.

 

My Old Articles: –

 

கம்பன், காளிதாசன் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-காளிதாசன்/

18 Oct 2016 – விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள். மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218).காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32. திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த …

ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரத்தினக்-கற்கள்/

22 வகை ரத்தினக் கற்கள். மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம்என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை …

 

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று …

https://tamilandvedas.com/…/நாகரத்தினம்-பற்றி-…

13 Feb 2015 – முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது …

 

மாணிக்கம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மாணிக்கம்/

முடிவுரை: யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே …

 

TAGS- ரத்தினக் கற்கள், நவரத்தினம், நாக ரத்தினம், வேதிகை மணி,  தங்கம் ஆக்கும் கல்

 

சுபம்–

உண்மைத் தமிழருக்கு ஒரு க்விஸ்- கேள்வி பதில் (Post no.4883)

Compiled by London Swaminathan 

 

Date: 5 April 2018

 

Time uploaded in London –  5-42 am (British Summer Time)

 

Post No. 4883

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கீழ்கண்ட பொருள் பொதிந்த — அர்த்த புஷ்ட்யுள்ள – அக்ஷர லக்ஷம் பெறும் வாசகங்களை யார் சொன்னார்கள்? எந்த நூலில் உரைத்தார்கள்; செப்பு! செப்படா, தமிழா!

 

1.வேதங்கள் பாடுவள் காணீர் – உண்மை

வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்

ஓதருஞ் சாத்திரம் கோடி – உணர்ந்

தோதி யுலகெங்கும் விதைப்பாள்

xxx

2.இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்

தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்

xxxx

3.மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

xxx

4.ஊன நாடகமாடு வித்தவா

உருகிநானுனைப் பருகவைத்தவா

ஞானநாடகமாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே

xxx

5.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

xxxx

6.வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி

சேணியன் போற்றக், கடல் பள்ளிமுன் தொழ தீங்கரும்பைக்

கோணியன் வாழ்த்தக், கருமான் துகில்தனைக் கொண்டு அணிந்த

வேணியன்  ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே

xxx

7.இனி பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை

xxx

8.முத்தமிழ்த் துறையின் முறை போகிய

உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்

xxx

9.பதினோர் ஆடலும், பாடலும் கொட்டும்

விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு

xxxx

10.விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்தவாறே

xxx

 

விடைகள்

1.பாரதி, பாரதியார் பாடல்கள்; 2. திருமூலர் எழுதிய திருமந்திரம்; 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்; 4. மாணிக்கவாசகர், திருவாசகம்; 5. பாரதிதாசன் பாடல்கள்; 6. காளமேகம்,  தனிப்பாடல்கள்; 7. சங்க கால அவ்வையார் ,புறநானூறு; 8. கம்பன், கம்ப ராமாயணம்; 9. இளங்கோ, சிலப்பதிகாரம்; 10. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70 & 71 (Post No.4882)

Date- 5 April 2018

 

British Summer Time- 4-59 am

 

Written by S Nagarajan

 

Post No.4882

 

Pictures are taken from various sources;thanks.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70

  பாடல்கள் 570 முதல் 578

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாரதி பத்துப்பாட்டு

 

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

 

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

 

காதல் போயின் சாதல் என்றே

    கழறும் படிசெய்தாய்

நீதம் அதுவே என்றிடும் வண்ணம்

    நீடுற உரைத்திட்டாய்

ஆதலி னாலே நீயே எந்தன்

    ஆரு யிரைக்கவரும்

காதல னாக வந்தாய் எந்தன்

    கான மதைக்கேட்டாய்

 

பாட்டினில் உன்போல் இதயந் தன்னை

    பறிகொடுத் திடுவோர்கள்

நாட்டினி லெங்கும் இருந்திடு வாரோ

    நானுந் தன்மேலே

காட்டிய காதலில் உள்ளம் நெகிழ்ந்தாய்

    கனிவுட னதையேற்றாய்

ஏட்டிலும் காணா காதல் இதுவென

    எனைப்பி ரிந்தே சென்றாய்

 

ஆயினு மென்ன காதல் தனையே

    அவம தித்தல்போல்

ஆயிடை மறுநாள் நானொரு குரங்கிடம்

    அதே பாடல் பாட

ஏயின அம்பாய் காயம் பட்டாய்

    என்மேல் கோபமுடன்

போயினை எந்தன் காதல் தனையே

    போலியென் றேநினைத்தாய்

 

குரங்கி லிருந்தே மனிதன் வரவென

    குறித்தார் நூல்களிலே

மரங்க ளின்மேல் தாவிட லாலே

    மனமே குரங்கென்றார்

குரங்கை விரும்பும் எந்தன் மனமும்

    குரங்காய் நினைத்தாயோ?

தரங்கெட்ட குயில் எனவே வெறுத்துத்

     தனியாய் தவித்தாயோ?

 

மூன்றாம் நாளில் நீவரும் போதில்

    முன்னிலும் கொடுமையதாய்

நான்செய் செயலை நேரினில் கண்டாய்

    நாடியோர் மாட்டினிடம்

மீண்டும் அந்தக் காதல் பாடல்

    மோகத் துடனிசைக்க

ஏன்தான் இந்தக் குயிலைக் கண்டேன்

    எனநீ நொந்தனையே

 

காதலைநீ மதித்திடல்தான் உண்மை யென்றால்

    கருத்தற்ற குரங்கிடமும் மாட்டைக் கண்டும்

காதல்பாட் டிசைத்திடுதல் சரியா என்றே

    கடுங்கோபத் துடன்நீயும் கேட்டு நின்றாய்

வாதமேதும் செய்யாமல் கண்ட தெல்லாம்

     மாயையென்றே நானெடுத்து உரைத்த போதில்

ஏதமென அதையேற்க மறுத்து விட்டாய்

     என்றாலும் அதையுணர்த்தல் எளிதே யல்ல

 

நடவாத ஒன்றினையே நடந்த தாக

     நாமறிந்தோர் சிலநேரம் சொல்வ துண்டு

திடமாக அதைநம்பும் சிலபே ராலே

     தீங்குகளும் சிலநேரம் நிகழ்வ துண்டு

படமாகக் கண்முன்னே நீயே நேரில்

    பார்த்ததையே நானிங்கு மாயை யென்றால்

தடம்மாறும் என்பேச்சை நம்பப் போமோ

     தானதனைச் சிந்தித்தென் கதையைச் சொன்னேன்

 

முன் ஜென்மச் சிந்தனை இல்லாத பேரிந்த

     மேதினியில் எங்கும் இல்லை

இன்றதனை உணர்ந்திடின் அதிலுற்ற காதலையே

     எண்ணுவார் மாற்ற மில்லை

அன்றந்தப் பிறவியில் நான் கொண்ட காதலை

     அழகாகப் பாடித் தந்தாய்

என்றுமென் நினைவினை எந்நாளும் நிலைபெறும்

    இலக்கியமாய் சூடத் தந்தாய்

 

இக்காலம் கதைகளை எவ்வடிவில் கண்டாலும்

    யாவிலும் ஆழமாக

முக்கோணக் கதைகளே பெருமளவில் வருமதன்

     முன்னோடி நீயே யன்றோ

அக்காலந் தனில்நீயும் அருமையுள நாடகமாய்

     அரியயென் முன்ஜென் மத்தை

எக்காலத் திலுமெவரும் எண்ணியே வியந்திடவே

     ஏற்றமுற இயம்பலானாய்

  குயில் பார்வையில் பாரதி தொடரும்.

xxxxxxxxxxxxxxxxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 71

  பாடல்கள் 579 முதல் 587

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

அருமை யான அரச மரபின் செம்மலாய்

பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

 

கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

 

திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

இடமு டனொரு கால மென்ப தின்றியே

தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

 

காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

 

உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

     உயிரையே எனக்காகத் தந்த போதில்

திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

     மறுபடியும் நானிங்கு பிறந்து வந்தேன்

கடவுளே செய்திட்ட சதியோ என்ன

     கருங்குயிலாய் நானிங்கு தோன்றி வந்தேன்

 

முன்பிறப்பில் தனிலுற்ற இவற்றை யெல்லாம்

     முழுமையாய் உன்னிடத்தில் சொன்ன போதில்

என்னயிது இவையெல்லாம் மெய்யோ பொய்யோ

     ஏற்பதோ வேண்டாமோ எனக்கு ழம்பி

பின்னுமதன் உண்மைதனைக் காண்ப தற்கு

    பேடையேஉன் காதலன்யார் என்று கேட்டாய்

முன்னிற்கும் நீயேதான் என்று சொல்ல

     முகமலர்ந்து எனைத்தொட்டாய் பெண்ணானேன் நான்

 

 குயிலாக எனையேற்றல் இயலா தென்றே

     குமரியாய் மாற்றினாய் என்ற போதும்

செயிரறு செல்லம்மா தனைவி டுத்து

     சேர்ந்தென்னு டனிங்கு சிலநாள் வாழ்தல்

உயிர்ப்புள மட்டிலும் கனவில் கூட

     ஒருபோதும் பொருந்தாது எனயெ ழுந்தாய்

பயின்றிடத் தக்ககாவி யமாய் மாற்றி

     பாவடிவில் யாவையுமே பாடித் தந்தாய்

 

இக்கதையின் பொருள்தன்னைக் காண்ப தற்கு

     எவரேனும் முனைவாரோ என்று கேட்டாய்

அக்கறையாய் அவ்விதமே கூர்ந்து நோக்கி

     ஆய்வு செய்தோர் உண்டெனினும் அவர்க்குள் ளேயும்

மிக்கபல முரண்பாடும் அதனா லிங்கே

     மேலும்பல விவாதமும் விளைந்த தன்றோ?

தக்கபடி இதன் பொருளை நீயும் அந்தத்

     தெய்வமும் அன்றியார் உணர்ந்து சொல்வார்?

 

பாரதி உன் குயில்பாட்டை பூரணமாய் உணர்ந்தவர்கள்

      பாரினிலே எவரு மில்லை

சாரமுள அதன்பொருளை உணர்ந்திட்டேன் என்றெவரும்

      சாற்றிடவும் துணிச்ச லில்லை

வேரத்னைக் காணாமல் வேதாந்த விருட்சத்தை

      விளைவிப்பார் யாரு முண்டோ?

யாரதனைப் படித்தாலும் பொருள்பலவாய் தோன்றிடவே

     யாத்தாயோர் கவிதை வாழி!

 

குயில் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

***

 

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்! (Post No.4881)

 

Written by London Swaminathan 

 

Date: 4 April 2018

 

Time uploaded in London –  17-51 (British Summer Time)

 

Post No. 4881

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பழமொழி விளக்கக் கதை

எல்லோருக்கும் பஞ்சாங்கம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தியாஜ்யம் என்றால் பலருக்கும் தெரியாது.

தியாஜ்யம் என்றால் நல்ல காரியங்கள் செய்யக்கூடாத காலம்.

 

 

‘ஒவ்வொரு நாளிலும் கழிவாகிய மூன்றே முக்கால் நாழிகை’ என்று ஆனந்த விகடன் அகராதி கூறும். ‘நக்ஷததிரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாத காலம்’ என்று அபிதான சிந்தாமணி சொல்லும்.

‘த்யஜ’ என்ற ஸம்ஸ்க்ருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள். எல்லாவற்றையும் விட்டவரை ‘தியாகி’ என்று ஸம்ஸ்க்ருதத்தில் சொல்லுகிறோம். தமிழிலும் அந்தச் சொல் எல்லோருக்கும் தெரிந்ததே.

 

ஒரு நாளில் 60 நாழிகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 24 நிமிடங்களுக்குச் சமம். ஆக ஒரு நாளில் விலக்கப்பட்ட காலம் என்பது மிகவும் குறைவே  .பஞ்சாங்கத்தில் நல்ல நேரமும், அல்லது நல்லது, கெட்டது இல்லாத சம நிலைக் காலமே அதிகம். அப்படி இருந்தும் சிலர்  எப்போதும் கெட்ட காலம் என்றே கருதுவர்.

 

இதைக் கொஞ்சம் விளக்கமாகக் காண்போம். சிலர் முழுக்க முழுக்க Negative நெகட்டிவ் – எதிர் மறைச் சிந்தனை உடையவர்கள். எதைச் சொன்னாலும் அதில் குறையை மட்டுமே எடுத்துக் காட்டுவர். நாவிலிருந்து நல்லதே வராது.

 

மழை பெய்தால் விமானம் பறக்காது என்பர். இடி இடித்தால் விமானம் கீழே எரிந்து விழும் என்பர்.

 

வட இந்தியாவில் ரயில் விபத்து நடந்தால் சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை ரத்து செய்துவிடுவர். இப்படித் தான் மட்டும் கெட்டது போதாது என்று நிற்காமல், மற்றவர்களுக்கும் துர் போதனை செய்வர். சுருக்க மாகச் சொன்னால் வாயில் நல்லதே வராது.

 

மதுரையில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பின்புறம் ‘எல்லீஸ் நகர்’ என்று பழைய பிரிட்டிஷ் துரையின் பெயரில் ஒரு பொட்டல் காடு இருந்தது. அங்கு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டி விளம்பரம் செய்தது. எனக்கும் ஏ.என்.சிவாரமனின் (Editor, Dinamani) மகனுக்கும் பத்திரிக்கையாளர் கோட்டாவில் (ஒதுக்கீட்டில்) போட்டியே இல்லாமல் வீடு கிடைத்தது.

 

என்னுடன் வேலை பார்த்த மற்றொரு சப் எடிட்டர் வீட்டுக்கு நல்ல செய்தி சொல்லப் போனேன். அவர் தனது தந்தை பற்றி முன்னரே எச்சரித்திருந்தார். அவர் கண்களுக்குப் படாமல் மாடிக்கு வரும்படி சொல்லி இருந்தார். இருந்த போதிலும் அவர் தந்தை என் கண்ணில் பட்டு விட்டதால், மரியாதையின் பொருட்டு “மாமா சௌக்கியமா?” என்று கேட்டுவிட்டேன்.

 

அவ்வளவுதான்!

 

“ஏண்டா! சுடுகாட்டில் வீடு வாங்கி இருக்கிறாயாமே!”– என்று துவங்கி விட்டார். அவர் சொன்னது ஓரளவு உண்மைதான். அந்த எல்லீஸ் நகர் கிறிஸ்தவர்களுக்கு இடுகாடாகவும் மற்றொரு பக்கம் இந்துக்களுக்குச் சுடுகாடாகவும் இருந்தது. ஆயினும் நான் சிரித்துக் கொண்டே ‘’ஆமாம் ஆமாம் சிவனுடைய பூமியில் வீடு கிடைத்தது அதிர்ஷ்டமே’ என்று சொல்லிக்கொண்டு மாடிக்குப் போனேன்.

அந்த சஹ ஊழியர்- சப் எடிட்டர் என்னைக் கடிந்து கொண்டார். நான் தான் என் அப்பா கண்ணில் படாமல் ஓடி வா என்றேனே’ என்றார் நான் சிரித்து மழுப்பி விட்டேன்.

 

சிலருக்கு நல்லதையே காண முடியாது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த சுமாமிஜி, அந்தப் பெரியவரை – துரியோதணன் என்று அழைப்பார். அப்படியானால் என்ன என்று நாங்கள் சிரித்துக் கொண்டே கேட்போம். பெரிய செல்வந்தன் என்று சொல்லி சுவாமிஜி மழுப்பி விடுவார். பின்னர்தான் எனக்கு மஹாபாரதக் குட்டிக்கதை தெரிய வந்தது.

 

 

குட்டிக்கதை

ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா தர்மபுத்ரனையும் (யுதிஷ்டிரன்) துரியோதணனையும் அழைத்து உலகில் உள்ள நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று அனுப்பினார். 24 மணி நேரம் கழித்து இருவரும் திரும்பி வந்தனர்.

என்ன! கண்டு பிடித்தீர்களா? என்று கண்ணன் கேட்டான்.

தருமர் சொன்னார்: கண்ணா, உலகில் கெட்டவரே இல்லையே; எப்படி எனக்கு இப்படி ஒரு கஷ்டமான பணியைக் கொடுத்தாய்? யாரை நான் கெட்டவர் அல்லது நல்லவர் என்று சொல்ல முடியும்; எல்லோரும் நல்லவர்களே என்று சொல்லி ஒவ்வொருவரின் நல்ல குணங்களையும் விளக்கத் துவங்கிவிட்டார்.

 

துர்யோதணனோ நேர் மாறாக, கண்ணா! இது என்ன அசட்டுப் பிசட்டு என்று நல்லவன் ஒருவனைக் கண்டு பிடித்து வா என்று என்னை அனுப்பினாய். அவ்வளவு பெயர்களும் அயோக்கியர்களே என்று எல்லோருக்கும் அயோக்கியப் பட்டம் கட்டினான்.

 

கண்ணன் நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு இருவரையும் சென்று வாருங்கள் என்று அனுப்பினார்.

 

உலகில் பல அயோக்கியர்கள் மற்றவர்களை அயோக்கியர்கள் என்று அழைக்கும் போதே நமக்கு அந்த கீழ்ஜாதிகளின் தன்மை புரிந்து விடுகிறது.

 

ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் கெட்ட காலம் (தியாஜ்யம்= விலக்கப்ப்ட்ட காலம்) என்பது போல இவர்களுக்கு தங்களைத் தவிர மற்ற எல்லோரும் அயோக்கியர்களே.

 

ஆகவே Negative Vibrations நெகட்டிவ் வைப்ரேஷன் உடையோரைச் சந்திக்காமல் இருப்பதே நலம். அவர்களுடைய வியாதி சில நேரத்தில் நம்மையும் தொற்றிக் கொள்ளக் கூடும். ஏனெனில் கல்யாணத்துக்காக ஜாதக் கட்டைக் கையில் தூக்குவோர் கூட ஏதேனும் நெகட்டிவ்/ வேண்டாத செய்தி வந்தால் அப்பொழுது அக்காரியத்தை நிறுத்தி விடுவர்; அல்லது அப்போது கைக்குவந்த ஜாதகத்தை ஒதுக்கி விடுவர்.

 

ஆகவே கனியிருப்பக் காய் கவறாமல் இனிய சொல்லைச் சொல்ல வேண்டும். மங்களச் சொற்களைச் சொல்ல வேண்டும். எப்போதும் இப்படி எண்ணிப் பழகினால்தான் உரிய நேரத்தில் உரிய சொற்கள் வரும்.

 

பல அரசியல்வாதிகள், திருமணக் கூட்டங்களில் அபசகுன, அமங்களச் சொற்களைப் பேசுவதை நாம் பத்திரிக்கைகளில் படிக்கிறோம்; நகைக்கிறோம்!!!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

 

–subham–

POEMS ON INDIA (Post No.4880)

Compiled by London Swaminathan 

 

Date: 4 April 2018

 

Time uploaded in London –  7-42 am (British Summer Time)

 

Post No. 4880

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

Following are some of the poems about India composed by famous people. Tamil poet Bharati has composed lot of verses on India in Tamil. I will give the English translations of those separately.


FREEDOM

Freedom from want and hunger
Freedom from disease
Freedom from ignorance and illiteracy
Freedom from caste and communal tensions
Freedom from foreign interference
These are not just dreams
These are free India’s aspirations
And for their fulfilment each one of us must be
Prepared for hard work and sacrifice
Together we can
Together we must
—–Directorate of Advertising and Visual Publicity, Govt. of India

Xxx

 


HAIL TO THE MOTHER!

Mother, I bow to thee!
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleams
Cool with thy winds of delight
Dark fields waving, Mother of might
Mother free.
Glory of moonlight dreams
Over thy branches and lordly streams,
Clad in thy blossoming ,
Mother, giver of ease
Laughing low and sweet!
Mother, I kiss thy feet
Speaker sweet and low!
Mother, to thee I bow.
——Bankim Chandra Chatterjee

Xxx

 

An Adieu

 

India, farewell! I shall not see again

Thy shining shores, thy peoples of the sun

Gentle, soft mannered, by a kind word won

To such quick kindness! O’er the Arab main

Our flying flag streams back; and backwards stream

My thoughts to those fair open fields I love,

City and village, maidan, jungle, grove,

The temples and rivers! Must it seem

Too great for one man’s heart to say it holds

So many many Indian sisters dear,

So many unknown brothers? That it folds

Lakhs of true friends parting? Nay! But there

Lingers my heart, leave-taking; and it roves

From hut to hut whispering “he knows and loves!”

Good-bye! Good-night! Sweet may your slumbers be,

Gunga! And Kasi! And Saraswati!

—Edwin Arnold

March 8, 1886

 

xxxx

Past Glory

My country! In thy days of glory past
A beauteous halo circled round thy brow
and worshipped as a deity thou wast—
Where is thy glory, where the reverence now?
Thy eagle pinion is chained down at last,
And grovelling in the lowly dust art thou,
Thy minstrel hath no wreath to weave for thee
Save the sad story of thy misery!
Well—let me dive into the depths of time
And bring from out the ages, that have rolled
A few small fragments of these wrecks sublime
Which human eye may never more behold
And let the guerdon of my labour be,
My fallen country! One kind wish for thee!

 

Henry Louis Vivian Derozio (1819-1831,Kolkata)

 

xxxx

Munshi’s Poem

Beyond the rugged plane

Andd the flowing stream

And life on these

Shines forth the

Light of knowledge

That Indian stands for.

–Kulapati K M Munshi

 

xxx

Sarojini Naidu’s Poem

Thy Future calls thee with a manifold sound

To crescent honours, splendours, victories vast;

Waken, O Slumbering Mother, and be crowned,

O friend, my country’s friend, O voice incarnate, free,

O India’s soul!

–Sarojini Naidu

 

xxx

 

Concern for India

Heavens have concealed thunderstorms under the horizons
Let not the nightingale of the garden remain unaware of the danger
Get concerned about the motherland
O! I innocent compatriot. Trouble is
In store for you,
There are signs of your destruction
In the skies above
Look at what is happening now, and
What is in store for the future,
Nothing would be gained by harping-on the tales of the past
Take heed, sons and daughters of Hind

—Poet Iqbal’s  poem,
Taswir I Dard

 

SARE JAHAN SE ACCHHA SONG

 

Our India is the best amongst the countries of the world. We are its nightingales and it is our garden.

That highest peak – neighbour of the sky is our guard.

A thousand rivulets play in its lap.

And due to them it has become the envy of the heaven.

religion does not teach us mutual hatred. we all are Indians and India is our country.

—Poet Iqbal (English translation of his Sare Jahan se achha Hindustan Hamara

 

xxx

BHARAT AMAR
INDIA, my INDIA, where first human eyes awoke to heavenly light!
All Asia’s holy place of pilgrimage, great Motherland of might!
World mother, first giver to human kind of philosophy and sacred lore,
Know ledge thou gav’st to man, God love, works, art, religions open door,
O even with all that grandeur dwarfed or turned to bitter loss and maim
How shall we mourn who are thy children and can vaunt thy mighty name?
Before us still there floats the ideal of these splendid days of gold
A new world in our vision wakes, Loves India we shall rise to mould.
India, my India, who dare call thee a thing for pity’s grace today?
Mother of wisdom, worship, works, nurse of the spirits inward Ray!
—-Dwijendra lal

Xxx

 


BHARATHOM

Spreading her glory everywhere
India is developing
Adding strength and influence
India prospers day by day.

At the onset of dawn
With her darkness gone
Happiness flourishes on
In the minds of everyone

Oh, Motherland, like a Kamadhenu
When your chains are broken
There in the faces of villages
Is seen the smile of prosperity

The depressed, and the lazy
The sufferer and the greedy
Shall have no place
And with these will go illiteracy.
Vennikulam Gopalakurup

—A poem in Malayalam prescribed for fourth standard in Kerala

Xxxx

 

from A H H Murray’s book Highway to Empire

–subham–

எண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்! (Post No.4879)

Date- 4 April 2018

 

British Summer Time- 6-03

 

Written by S Nagarajan

 

Post No.4879

 

 

எண்களின் ரகசியம்

 

பதிமூன்றும் முப்பதும்! : மேலை நாட்டினரின் மூட நம்பிக்கை!

 

ச.நாகராஜன்

 

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களை மூட நம்பிக்கை மிகுந்தவர்கள் என்று பிரிட்டிஷார் கேலி செய்வது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால் அதிக மூட நம்பிக்கைகள் கொண்டவர்கள் அவர்களே!

 

இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம் உண்டு. இங்கு 13ஆம் எண்ணைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

 

13 என்றாலே மேலை நாட்டவர்களுக்கு அலர்ஜி. பல மாடி அடுக்குக் கட்டிடத்தில் 12ஆம் மாடிக்குப் பிறகு 14ஆம் மாடி தான். பதிமுன்றே கிடையாது.

 

பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு இப்போது இந்தியாவிலும் கூட இதே நிலை தான். அதே போல 13ஆம் எண் அறையும் கிடையாது. 12 ஏ என்று இருக்கும்!

இதற்கான காரணங்கள் பல.

 

13 ஒரு அதிர்ஷ்டமற்ற எண்.

என்றாலும் ஏசு கிறிஸ்துவிடமிருந்து தான் இந்த எண்ணைப் பற்றிய கெட்ட அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஏசுவின் இறுதி சாப்பாட்டில் அவர் 12 சீடர்களுடன் இருந்தார்.ஆகவே 13 என்பது அதிர்ஷ்டம் கெட்ட எண்!

தூக்குமரத்தில் தூக்குப் போடுபவனுக்கான கட்டணம் 13 பென்ஸ்.

ஆகவே 13 என்பது அதிர்ஷ்டமற்ற எண்ணாம்! உண்மையில் தூக்குப் போடுபவனுக்கு 13 ½ பென்ஸ் தரப்பட்டது. அரை பென்ஸ் தூக்குக் கயிறுக்கான பணம். ஆகவே 13 பென்ஸ் என்று கொள்ளப்பட்டது.

தூக்கு மேடைக்கு ஏறும் படிகள் 13. ஆகவே 13 அதிர்ஷ்டமற்ற எண்.

 

பெண்களின் மாதவிடாயும் கூட 13 எண்ணின்

அதிர்ஷ்டமின்மைக்கு ஒரு காரணமாம். ஆண்டுக்கு 13 முறை அவர்கள் மாதவிலக்கை அடைகின்றனராம்!

 

13 எழுத்துக்கள் பெயரில் இருந்தால் அபாயமாம். ஏனெனில் கொடும் கொலைகளைச் செய்த கொலையாளிகள் 13

எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையே உடையவர்களாக இருந்தார்களாம். இதற்கான பெரிய் பட்டியலே தயார்!

13ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்தால் மாபெரும் ஆபத்து! அன்று எந்த வித வியாபாரமும் செய்யக் கூடாது. மீறிச் செய்தால் நஷ்டமும் துரதிர்ஷ்டமும் பீடிக்கும். ஆகவே பல பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் முடங்குமாம் அன்று!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

ஆகவே பிரிட்டிஷாரோ அல்லது இதர மேலை நாட்டினரோ ஹிந்துக்களைப் பற்றி இழிவாகக் கூறுவதற்கோ அல்லது விமரிசிப்பதற்கோ தகுதியானவர்கள் இல்லை.

அடுத்து எண் முப்பது சபிக்கப்பட்ட எண்ணாம் – அவர்களின் கருத்துப் படி! ஏனெனில் ஜுடாஸ் ஏசுவை காட்டிக் கொடுக்க அவன் பெற்ற பணம் 30 வெள்ளிக் காசுகள். இன்னொரு நம்பிக்கை ஏசு கிறிஸ்து தனது உபதேசங்களை அவரது 30ஆம் வயதில் செய்ய ஆரம்பித்தாராம்!

 

ஆக ஐஸ்பெர்க்கின் டிப் என்று சொல்வார்களே அது போல மேலை நாட்டினரின் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இந்த 13!

 

இப்படி ஏராளம் உண்டு. பின்னால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது விரிவாகக் காண்போம்!

***

 

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 

பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 3 April 2018

 

Time uploaded in London –  14-59 (British Summer Time)

 

Post No. 4878

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

((நல்லவர்களுக்குப் பிறந்தவர்கள் இதை ஷேர்‘ share  செய்வார்கள்; அல்லாதோருக்குப் பிறந்தவர்கள் இதை எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு தான் எழுதியது போலப் போடுவர்; அப்படிப் போடுவோரின் குடும்பத்தினரை நம்பாதீர்கள்))

பெண்களிடம் ஏன் ரஹசியத்தைச் சொல்லக்கூடாது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. நாகர்களும் ஒரு நாட்டுப்புற கதை சொல்லுவார்கள் (நாகர்கள் யார் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வாசிக்கவும்).

 

கருடனுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகைமை மஹா பாரதக் கதைகளில் இருந்து உலகம் எங்கும் பரவியதால் இன்றும் பல நாடுகள் பாம்பைக் கவ்வும் கருடனைக் கொடியிலும், அரசாங்க முத்திரைகளிலும், கரன்ஸி நோட்டுகளிலும், நாணயங்களிலும் பொறித்துள்ளார்கள்

 

கருடன்- நாகர் சண்டை பற்றிய ஒரு கதைதான் இது. கருடனுக்குப் பயந்து ஒரு நாகம் ஓடி வந்தது. மனித உருவம் எடுத்துக் கொண்டது.  ஒரு பெண் பரிதாப்பப்பட்டு அவனுக்கு  அடைக்கலம் கொடுத்தாள். உடனே அந்த நாகம் உனக்கு கைம்மாறாக 500 யானைகள் தருகிறேன் என்று சொன்னது; நாட்கள் உருண்டோடின. அந்தப் பெண்ணின் பேராசை எப்போது எனக்கு 500 யானைகள் தருவாய்? எப்படித் தரப்போகிறாய் என்று நச்சரிக்க வைத்தது.

 

இந்த நாகமோ அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி , தான் யார் என்ற உண்மையைச் சொல்லிவிட்டது. பெண்களுக்கோ ரஹஸியத்தைக் காக்கும் சக்தி கிடையாது. உடனே அவள் இன்னொரு பெண்ணிடம் சொன்னாள். அந்தப் பெண்ணோ ஊருக்கே அச்செய்தியை தம்பட்டம் அடித்தாள்.

 

இந்த நாகத்தைத் தேடிக்கொண்டிருந்த கருடனும் மனித உருவில் சுற்றியதால் அவனுக்கும் செய்தி எட்டியது. உடனே நாகத்தைத் தேடி வந்து கொன்றது.

 

கதை புகட்டும் நீதி:– பெண்களிடம் ரஹஸியம் எதையும் சொல்லக் கூடாது.

உதயணனும் வீணையும் கதை

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் வத்ஸ நாட்டை ஆண்ட மாபெரும் மன்னன் உதயணன். அவனுடைய கதை ஏராளமான தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. அந்த உதயணனின் ஒரு கதை இதோ:

 

உதயணன் ஒரு காட்டில் மான்களைத் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சபர (வேட்டைக்காரன்) குலத்தவன் ஒரு அழகிய பாம்பைப் பிடித்துக் கூடைக்குள் அடைத்தான். அதைப் பார்த்த உதயணன் பரிதாபப்பட்டு, ‘’அன்பனே அந்த பாம்பை வெளியே விட்டு விடேன்’’ என்றான்.

பாம்பைப் பிடித்த வேட்டைக்காரன் சொன்னான்:

இதோ பார் என் தொழில் பாம்பாட்டி வேலை; இதை ஆட வைத்து காசு பணம் சம்பாதிப்பது என் தொழில். ஆகவே என்னை வற்புறுத்தாதே என்றான்

 

 

உதயணன் சொன்னான்: இந்தாருங்கள் எனது தங்க கங்கணம். இதை வைத்துக் கொண்டு   பாம்பை விடுதலை செய்யுங்கள் என்றான். அந்த நாகம் அவனுக்கு ஒரு வீணையைக் கொடுத்தது. அதை அவன் வாசித்தால் யானைகளும் வந்து நிற்குமாம். அவன் வேண்டிய யானைகளைப் பிடித்துக் கொள்வானாம்.

 

 

அந்த கங்கணத்தில் ஸஹஸ்ரநீகா என்று மன்னன் பெயர் எழுதி இருந்ததால், அதை வேட்டைக்காரன் கொண்டு சென்று மன்னனிடம் கொடுத்தான். அதை யார் கொடுத்தார்கள்? அது எப்படி வந்தது? என்பதை எல்லாம் விசாரித்து அதன் மூலமாக அவன் 14 ஆண்டுகள் பிரிந்திருந்த தன் மனைவியையும் மகனையும் (உதயணன்) கண்டு பிடித்தானாம்.

ஜீமூத வாஹனன் கதை

 

உதயணன் கதை போலவே ஸம்ஸ்க்ருத நாடகம், கதைகளில் அதிக இடம் பிடித்தது ஜீமூத வாஹனன் கதை ஆகும். அவனது தியாகம், கருடனிடமிருந்து நாகர்களை விடுவித்தது. இந்தக் கதை ஹர்ஷனின் நாகானந்தம், பிற்காலத்தில் ப்ருகத்கதை, கதாசரித் சாகரம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.

 

பஞ்ச தந்திரக் கதைகளில் இரண்டு கதை

 

ஹரிதத்தா என்ற விவசாயி எவ்வளவோ சாகுபடி செய்தும் விளைச்சல் கிடைக்க வில்லை. ஒரு நாள் அவனுடைய நிலத்தில், ஒரு பெரிய பாம்பைக் கண்டான். அதற்குப் பால் வார்த்தான். மறு நாள் அந்த இடத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்தது. அதுமுதல், தினமும் பாம்புக்குப் பால் வார்த்தான். தினமும் ஒரு தங்கக் காசு கிடைத்தது. இதை அவன் மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேராசை பிடித்தவன். ஒரு யோஜனை தோன்றியது. பாம்பு வசிக்கும் இடத்தில் புற் றில் நிறைய தங்கக் காசுகள் இருக்கிறது போலும் ஆகையால் அதைத் தோண்டிப் பார்ப்போம் என்று சென்றான.

 

பாம்புப் புற்றைத் தோண்டுகையில் பாம்பு கடித்து இறந்தான். தன் மகனின் தீய செயலுக்கு தந்தை வருத்தம் தெரிவித்தான். பாம்பும் அவனுக்கு ஒரு விலை உயர்ந்த நகையைக் கொடுத்து இனிமேல் வரவேண்டாம் என்று சொன்னது.

இன்னொரு கதையும் நாகம் பற்றியது. மனிதர்களுக்கு ஒரு நாகம் பிறந்தது. அதை ஒரு அழகிய பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். முதல் நாள் இரவில், அந்த நாகம் மனித உரு எடுத்து முதல் இரவு அறைக்குச் சென்றது. அந்த நேரத்தில் நாகத்தின் பெற்றோர்கள் அந்தப் பாம்பின் தோலை எரித்து விட்டனர். பின்னர் அந்த நாகம் மனித உடலுடனேயே இருந்தது.

 

 

இவ்வாறு நாகம் பற்றிய பல கதைகளில் அதைப் பாம்பாகாவும், மனிதனாகவும், பாதி பாம்பு, பாதி மனிதனாகவும் சித்தரிப்பது உண்டு.

 

உண்மையில் நாகத்தின் உருவத்தை வரைந்தோ அதன் முத்திரையை அணிந்தோ இருந்தோரை நாகர்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்; காலப் போக்கில் பாம்பும் மனிதனும் இடம் மாறி சுவை ஊட்டும் கதைகளாக மாறிவிட்டன.

–சுபம்–

 

 

 

WHY SHOULDN’T YOU TELL A WOMAN A SECRET? A NAGA STORY (Post No.4877)

WRITTEN by London Swaminathan 

 

Date: 3 April 2018

 

Time uploaded in London –  7-43 am (British Summer Time)

 

Post No. 4877

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

There are lot of stories in India about the Naga race. They were the people who wore snake charms or totem symbols or perhaps their leaders wore Naga/snake crowns. But in course of time people started believing they were real snakes or serpents. All stories develop like this in all parts of the world. Facts are hidden in myths. Let us look at some stories: –

 

The conflict between the snake and garuda/eagle have given birth to several stories around the world. Lot of countries have flags or emblems or coins or currencies showing the enmity between the Garuda/eagle and the snake. India has such stories from the Mahabharata to Puranas

 

The Naga who revealed the secret to a woman!

Once a Naga fleeing in fear of a Garuda/ eagle assumed human shape and took refuge in a house. The lady of the house agreed to hide the person for a fee of 500 elephants.  After sometime the lady asked the Naga how and where from he was going to get 500 elephants. The Naga fell in love with her and revealed his real identity. The lady revealed this secret to another woman. That woman disclosed this to Garuda who was in the human form. Garuda took the human form to search for the fleeing Naga. The result was the poor serpent / naga was killed by the eagle. The moral of the story is NO WISE MAN SHOULD DISCLOSE A SECRET TO A WOMAN. This is a folk tale told along with the Naga stories

 

KING UDAYANA OF VATSA AND THE LUTE

Once Udayana , the king of Vatsa kingdom, was roaming in a forest  in pursuit of a deer. At that time he saw a serpent caught by a hunter. Moved with pity the king asked the hunter to release the serpent and promised him to give something else. The hunter replied, “My Lord, this is my livelihood. I maintain myself by exhibiting snakes. I ma a snake charmer. They dance to my tunes. On hearing this Udayana gave him his costly golden bracelet and then the hunter released the snake. The serpent was very much pleased with the king and it gave him a wonderful lute.

 

The hunter saw the name of King Sahsranika on the bracelet and so he took it to the king. This lead to the reunion of the consorts Sahsranika- Mrgavati who were separated for 14 years. Mrgavati was Udayana’s mother.

 

It is said that Vatsa raja used the lute to capture wild elephants.

 

STORY OF JIMUTA VAHANA

The feud between the Garuda and Naga has found a place in most of the Sanskrit literature. The fairy tale of Jimutavahana is very popular and Katha Sarit Sagra narrates this story twice.   Brhat Katha Manjari and 25 tales of Vetala also narrate this story. King Harsa has dramatized this story in his play Nagananda. Nagas freed from the danger of Garuda due to the sacrifice of Jimutavahana is the theme in the story.

PANCHATANTRA HAS TWO STORIES ON NAGAS

 

Pancha tantra, the oldest fable book in the world has two stories on Nagas

In the Story of Poor Brahmana and the Gold Granting serpent, we find the following story:-

 

Haridatta was a poor agriculturist and he had very little production in his field. One day he saw a snake in his field. He worshipped it and offered it milk. Next day when he came to the field he found a gold coin where he saw the snake the previous day. He started offering milk to the snake every day. And he obtained a gold coin every time he went to the field. Haridatta’s son, knowing this miracle, became very greedy. He thought the ant hill where the snake lives must be full of gold coins. So he planned to kill the snake and dug out the ant hill. The snake bit him and he died. His father felt very sorry. The snake gave Haridatta a costly jewel and asked him not to come again.

 

Different versions of the story are found in western literature as well. They have copied it from India. Greek story teller Aesop also copied lot from Pancha Tantra fables.

There is another story in Panchatantra where the snake appears as the son of human parents. On the day he was married to a woman, he assumed human form in the wedding night. His father burnt the snake’s skin and prevented him from returning to animal form again.

 

Such stories present Nagas as humans and animals.

 

–subham–

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 68 & 69 (Post No.4876)

Date- 3 April 2018

British Summer Time- 6-25

Compiled by S Ngarajana

Post No.4876

 

பாரதி போற்றி ஆயிரம் – 68

  பாடல்கள் 526 முதல் 549

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஐந்தாம் அத்தியாயமான கண்ணன் பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

ஐந்தாம் அத்தியாயம்: கண்ணன் பார்வையில் பாரதி

1 முதல் 24 வரை உள்ள பாடல்கள்

திருமாலின் அவதாரம் பத்தினுள் யான்மட்டும்

     திகழ்தனிப் பெருமை பெற்றேன்

ஒருமைப்பா டிதுவென்ன பாரதம் எங்கணும்

     உயர்திருக் கோயி லுற்றேன்

கருதரிய எண்ணற்ற காவியங் கள்இந்தக்

     காசினியில் பெற்று வந்தேன்

உருவினில் மனிதனாய் இருப்பினும் தெய்வமென

     உணர்ந்திடும் செயல்பு ரிந்தேன்

 

சிறையினில் பிறந்தவன் என்றபோ தும்பிறவிச்

     சிறைதனை நீக்க வந்தேன்

மறைந்துநான் வாழ்ந்திட நேர்ந்தபோ தும்மாயை

     மறைந்திடச் செய்து வாழ்ந்தேன்

கறையென்று சொல்லிடும் லீலைகள் புரிந்தாலும்

     களங்கமற் றுத்தி கழ்ந்தேன்

உறைந்திடும் களத்தினுள் உலகுய்ய கீதையை

     உரைத்துவழி காட்டி நின்றேன்

 

என்றுமென் தாசனாய் திகழ்அக் ரூவர்போல

     எண்ணற்ற பேர்க ளுண்டு

தன்னரும் தோழனாய் கருதியே இணைந்திட்ட

     தனஞ்செயன் நட்பு முண்டு

அன்பினால் வளர்த்தெந்தன் அன்னையாய் விளங்கிய

    யசோதை பாச முண்டு

நன்னிய ராதைபோல் நாயகி பாவத்தில்

     நாடிய பக்த ருண்டு

 

ஒவ்வொரு வருமெனை  ஒவ்வொரு நிலையினில்

    உணர்ந்திடக் கூடு மென்றால்

செவ்விய பல்வேறு நிலைகளில் ஒருவரே

     சேவிக்க இயல்வதுண்டோ

எவ்விதம் பாரதி நீமட்டும் எனக்குளே

      இத்தனை வடிவு கண்டாய்

இவ்விதம் இதற்குமுன் கண்டவர் யாருமிலை

     இனிவரப் போவ தில்லை

 

எந்தனைத் தாயாகக் கண்டபின் சேயாக

     எவ்விதம் காணயியலும்? – நெஞ்சில்

வந்திக்கும் குருவாக ஏற்றபின் சீடனாய்

     மதித்திடல்தா னெவ்விதம்? – மேலும்

விந்தையாய் அரசனொடு சேவகன் எனயிரு

     வியன் நிலை அமைவதுண்டோ? – இன்னும்

அந்தமார் நாயகன் தானேநா யகியாக

     ஆகிடும் நிலையுமுண்டோ?

 

என்றாலும் இத்தனை வடிவங் களில்காண

     என்னாலே இயலுமென்று என்றும்

என்மீது கொண்டதோர் பக்தியா லல்லவா

     எண்ணற்ற பாவடித்தாய் இங்கு

இன்றுமதை ஆய்வோர்கள் ஒவ்வொரு நிலைக்குமோர்

     இலக்கணம் கண்டவுந்தன் அரிய

பன்முகச் சிந்தனையின் படிமங்க ளைக்கண்டு

    பாங்குடன் போற்றுகின்றார்

 

போர்க்களம் தன்னில் பகவத்கீ தைதனை

     புகன்றிடும் போதினிலேநான்

யார்யாரின் வடிவில் இருக்கின் றேனென

     யாவையும் உரைக்கையிலே அதில்

பார்த்தனாய் உள்ளேன் பாண்டவ ருள்ளென

     பகர்ந்ததை நினைத்தாயோ? – கவிதைத்

தேர்தனில் என்னை இருத்தியே பாக்களாம்

     தெறிகணைத் தொடுத்தாயோ?

 

தெய்வத்தை உணர தோழமை முதலென

     தேர்ந்துனை அருச்சுனனாய் யாவும்

செய்தன்று என்னுடன் இருந்தவன் நீயென

     செப்பிடும் வகையினிலே எந்தன்

துய்யநற் குணங்களைத் தொகுத்தளித் தாயென்னை

     சிலிர்த்திடச் செய்துவிட்டாய் வாழ்வில்

உய்வுற வேண்டுவோர் உனைப்போல் தோழமை

     உணர்ந்தால் உயர்ந்திடுவார்

 

அன்னையின் வடிவினிலே எந்தன்

     அற்புத தரிசனம் நீயுணர்ந்தாய்

விண்ணையும் கடந்துசென்ற அந்த

     விராட்சொ ரூபத்தை உணர்த்திவிட்டாய்

தண்ணொளி தருநிலவும் பிறவும்

     தாய்தரு பொம்மைகள் எனக்கண்டாய்

நண்ணும்பொய் வேதங்கள் நீ

     நகைத்திடத் தந்ததும் சொல்லி வைத்தாய்

 

தந்தையின் நோக்கினிலே எந்தன்

     தன்மையை உரைத்திட முயலுகையில்

விந்தைப் பயித்தியமாய் கண்ட

     விசித்திரச் செயல்களைப் பாடலுற்றாய்

எந்தயி டத்திருப்பேன் நான்

     எங்கெதைச் செய்வேன் எவரறிவார்?

அந்தநி லைதன்னை மிக

    அற்புதம் என்றிடப் பாடிவைத்தாய்

 

சேவகன் எனநீயும் எனை

    செப்பிட முயல்கையில் யான்வியந்தேன்

ஏவலைச் செய்பவனாய் சொல்ல

    எவ்விதம் துணிந்தாய் எனநினைந்தேன்

காவல் புரிபவனாய் எனைக்

     காட்டிய பொழுதினும் மிகநயமாய்

மேவரும் தெய்வமென எந்தன்

    மேன்மையும் எளிமையும் கலந்துரைத்தாய்

 

அரசன் என்பவனை இந்த

     அகிலம் எவ்விதம் தூற்றுமென

தரமுடன் விரித்துரைத்தாய் எந்தன்

     சக்கரம் சுழன்ற மறுகணமே

தருமம் தழைத்ததென்றே எந்தன்

     தகுதியை யாவரும் உணரவைத்தாய்

கருத்தில் பதிந்திடவே இந்தக்

     கண்ணனின் தன்மையை எடுத்துரைத்தாய்

 

எங்கணும் வெற்றியே எதிலும் வெற்றி

    எனைப்போல் பெற்றவர் எவரும் இல்லை

இங்கெவர் இவ்விதம் உரைத்திட் டாலும்

    யாவும் தோல்வியாய் முடிதற் கூடும்

அங்கதை மாற்றியே தோல்வி நேர்ந்தால்

    அவன்செயல் என்றதை ஏற்பின் உள்ளப்

பங்கயம் தனில்நான் உதிப்பே னென்று

    பகர்ந்திட்ட சீடனென என்னைக் கண்டாய்

 

கண்ணனைக் குருவாகக் கொள்க யென்றே

     கருத்தற்ற கிழவனவன் சொன்னதாலே

நண்ணிய போதிலென் செயல்கள் கண்டு

     நாடியதே தவறென்று நினைத்து விட்டாய்

உண்மையுள மெய்ப்பொருளை ஓர்நா ளில்நான்

    உபதேசம் செய்தபோதில் எனையுணர்ந்தாய்

கண்ணிலுறும் தோற்றமல்ல ஆன்ம ஞானம்

    கருத்திலும் இறையுணர்வு என்று கண்டாய்

 

தீராத விளையாட்டுப் பிள்ளை யாக

     தெருவிலே செய்திட்ட குறும்பை யெல்லாம்

நேராகக் கண்டவன்போல் பாடி நின்றாய்

    நீயுமந்த கோபியருள் ஒருவன் தானோ?

சீரான அப்பாடல் கேட்கும் போதில்

     சிறுவயதின் நினைவெல்லாம் தோன்றச் செய்தாய்

ஆராத ஆவலுடன் எந்தன் உள்ளம்

    ஆயர்பா டிச்செல்ல ஏங்கு தப்பா

 

தனக்கொரு பெண்குழந்தை வேண்டு மென்று

     தவித்திட்ட யசோதையாம் எந்தன் தாயார்

எனக்கேயோர் பெண்ணைப்போல் அலங்க ரித்து

    ஏக்கமது தீர்ந்திட்டாள் அந்த நாளில்

உனக்குமது போலாசை வந்த தாலோ

     ஒருநொடியில் பெண்குழந்தை யாக்கி வைத்தாய்

அனந்தம்பா எனக்கெனநீ இசைத்திட் டாலும்

    அச்சின்னஞ் சிறுகிளிக்கோ ஈடே யில்லை

 

நாயகி பாவத்திலே என்னை

நாடிய பொழுதினிலே

தூயநின சிந்தையதும் திரிந்து

துயரப் பட்டதெலாம்

ஆயபல் கருத்துக்கள் அதிலே

ஆழ்கடல் முத்தெனவே

ஏயநற் கவிதைகள் நீயும்

ஏக்கமுற் றுப்பாடினாய்

 

பாங்கிகள் அருகிருந்தால் என்னைப்

பார்த்திடச் சென்றிடவே

ஆங்கவர் தடையெனவே அவரை

அனுப்பியே வைத்ததுவும்

ஓங்கிய மரங்களுள் காட்டில்

ஓய்வின்றித் தேடியதும்

தேங்கிய காதலினால் நீயும்

தெவிட்டாமல் பாடிவைத்தாய்

 

கன்னியர் பலரென்னைக் காதலித்தார் அக்

    காதலைக் கவியாகச் சொல்லிவைத்தார்

என்னையே பெண்ணாகப் பார்த்தவர்கள் புவியில்

    எங்குமெந் நாளிலும் இருந்ததில்லை

துன்னிய வடிவெலாம் நானாகினேன் என்று

     தூயநற் கவியாகப் பாடிவைத்தாய்

என்னதான் நினைத்துக் கண்ணம்மாவாய் கண்டு

    எந்தனை நீயங்கு உருவகித்தாய்

 

பெண்ணாக நீயென்னைக் கண்டிட்டாலும் அதில்

    பழம்பிற விக்கதையில் ஆணாக்கினாய்

திண்மையுள ராமன்நான் என்றபோது  உன்னை

    சீதையெனும் பெண்ணாகச் சொல்லிக்கொண்டாய்

வண்மையுள நரசிங்கம் நானாகிட நீ

     மகிமையுள மைந்தனெனும் உறவுசொன்னாய்

உண்மைநிலை இவற்றுக்குள் ஆய்ந்தாலன்றோ உன்

     உள்ளத்தின் பக்திதனை உணரக்கூடும்

 

பன்னிரு ஆழ்வார்கள் தாமளித்த அரிய

    பாசுரங் களென்னும் கடலினிலே

அன்புரு கவிஞநீ மேகமாகி பல

     அருங்க ருத்துக்களாம் நீரைமொண்டு

இன்னிசைக் கலந்து என்மேலே தேன்போல்

     இனியகவி மழையாகப் பொழிந்துவிட்டாய்

என்றுமென் நெஞ்சினுள் நினைவென்னும் நல்ல

    ஏற்றமிகு பயிரினை விளையவைத்தாய்

 

நண்பனாய்க் காண பார்த்தனுண்டு எனை

    நாயகனாய்க் காண ராதையுண்டு

திண்ணிய குருவாய் சாந்தீபினி பண்பு

    திகழ்கின்ற சீடனுக்கு சாத்யகியே

நண்ணிய தாயென யசோதையே நாளும்

    நாடும்பிள்ளைமைக்கு கோபியரே

எண்ணிட இதுபோல் நாயகிக்கு உவமை

    எவருண்டு எவ்விதம் பாடினாயோ?

 

பற்பல மருத்துவம் இருந்தாலும் அதன்

     பாதைகள் வெவ்வே றானாலும்

முற்றிய பிணியைத் தீர்ப்பதற்கே அவை

    முயன்றிடும் என்பது இயல்பன்றோ?

அற்புத பாவனை எதிலேனும் மக்கள்

    அறிந்தெனை நாடி அடைந்திங்கு தம்மை

ஏற்றிடும் பிறவிப் பிணிதீர நீ

    ஏந்திய மருத்துவ நெறிகளன்றோ?

 

முனிவருள் பிருகு தேவரிஷி தம்முள்

    முகடெனும் நாரதன் ருத்திரருள்

முனிந்திடும் சங்கரன் வசுக்களிலே நான்

     மூண்டெழும் அக்கினி தளபதியுள்

இனியதமிழ் முருகன் யட்சருளே எவரும்

     ஈடில்லா குபேரன் எனகீதை

தனில்சொன்ன நானினி கவிஞருள்நான் என்றும்

     தமிழ்க்கவி பாரதி என்பேன்வாழி!

 

 

கண்ணன் பார்வையில் பாரதி முற்றும்

 

xxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 69

  பாடல்கள் 550 முதல் 569

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

1 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

வானப் பறவையென வாழினும் பூமியில்

கான மிசைக்கும் கருங்குயில்நான் எங்கும்

பயிலும்நல் பாட்டோச கேட்டாலே மக்கள்

குயிலின் குரலென்றே கூறி மகிழ்ந்திடுவார்

ஆடலும் பாடலும் ஆங்கொன்றி னுக்கொன்று

நாடும் துணையாகி நானிலத்தில் தாமிணையும்

ஆட மயிலென்றும் அவ்வாறே இன்சுவையாய்ப்

பாடக் குயிலென்றும் பாங்காய் உரைத்திடுவார்

ஆனாலும் என்ன பயன் ஆடும் மயிலுக்குத்

தானாக முன்வந்து தேசியச் சின்னமெனும்

உன்னதத் தன்மை உவந்தளித்தா ரென்னை

என்னகார ணத்தாலோ எல்லாரும் மறந்திட்டார்

இவ்விதம் நேர்ந்ததை எண்ணிக் கலக்கமுற

செவ்வையாய் ஓங்கும் சிறப்பளித்தாய் பாரதியே

முப்பெரும் பாட்டெழுதி மூன்றினுள் ஒன்றாக

இப்பறவை தன்னை இலக்கிய மாக்கிவிட்டாய்

கண்ணன் திரௌபதிக்குக் காணும் வரிசையில்

கன்னங் கரியயெனைக் காவிய மாக்கிவிட்டாய்

கண்ணன் கடவுள் கருதுமுயர் பாஞ்சாலி

பெண்டிரில் தெய்வமென பேசும் பெருமையுற்றாள்

என்ன தகுதி இவரோ டிணைத்திந்த

சின்னஞ் சிறுகுயிலை சீர்பெறச் செய்தாய்

குயிலெங்கும் கூவும் குரலோசை தன்னை

இயல்பாய் செவிமடுப்பார் எங்கணும் உண்டு

அதிலுறும் இசையை அனுபவித் தாங்கே

மதிப்போர் சிலரேனும் மாநிலத்தில் தாமுண்டு

கேட்ட இசைதன்னில் காவியம் கண்டிட

பாட்டுத் தலைவாநின் போல்வேறு யாருண்டு?

புதுவை நகரின் புனிதமுள்ள தோப்பு

எனைத்தந்து உந்தன் எழில்கவிதை பெற்றதுவோ?

அன்றாடம் செல்லும் அருமையான தோப்பதனில்

அன்று நிகழ்ந்திட்ட அற்புதம் தானெதுவோ?

எந்நாளும் கேட்கும் எமதுகுர லோசைதான்

அந்நாளில் உன்மனதை அவ்விதமேன் ஈர்த்ததுவோ?

உன்பாட்டில் எல்லோரும் உள்ளம் உருகிடுவார்

என்பாட்டில் நீமகிழ என்னதான் உள்ளதுவோ?

என்னதான் காரணம் யாருமறி யாரெனினும்

என்பெயரால் காவியம் இன்தமிழ்தான் பெற்றதுவே!

பாரதிநின் பாடல்களில் காதல் தன்னைப்

     பாடாத இடமென்று எதுவும் இல்லை

பாரதனில் நாம்காணும் காட்சி யெல்லாம்

     பாங்குடைய காதலன்றி ஏது மில்லை

சாரமுள அதன்சிறப்பைச் சொல்வ தற்கும்

     சாகாத காவியமாய்ப் படைப்ப தற்கும்

சீராகஎன் கதையைத் தேர்ந்திட் டாயோ?

     சிறுகுயிலின் காதலென இசைத்திட் டாயோ?

குயில் பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

xxxx

 

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு (Post No.4875)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 2 April 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 4875

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் 

 

பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் 

 

ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது!!!)

 

ஸர்ப்ப , நாக என்ற இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களில் இருந்து ஆங்கிலச் சொற்கள் ஸ்நேக் (ஸ் நாக(S+nake)) ஸெர்பெண்ட் (serpent), ஆகியன வந்தன என்பது பலருக்கும் தெரிந்திருக்கும் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையுள்ள ஊர்ப் பெயர்களில் ஆயிரக் கணக்கான பெயர்களில் நாக அல்லது ஸர்ப்ப வருகின்றன. இன்றும் பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமியையும் வருண பஞ்சமியையும் கொண்டாடும் நாடு நமது இந்தியாதான். நாக பாஸம் என்ற அஸ்த்ரத்தின் நினைவாக நமது ஏவுகணைகளுக்கும் நாம் ‘நாக’ பெயர் சூடியுள்ளோம்.

 

 

நாகர்- பாண்டவர் மோதல் காரணமாகப் புறப்பட்ட மாய தானவன் என்ற நாகன் தென் அமெரிக்க மாயன் (Mayan Civilization) நாகரீகத்தை ஸ்தாபித்ததையும், குப்தர் கல்வெட்டுகளில் பலர் நாகர் பெயர்கள் இருப்பதையும், சங்க காலப் புலவர்களில் இருபதுக்கும் மேற்பட்ட நாகர்கள் பெயர்கள் இருப்பதையும், சிந்து சமவெளி- ரிக் வேதம் ஆகியவற்றில் நாக ராணி (Snake Queen) பற்றி காணப்படுவதையும், நல்லோர் அவையில் புகுந்த நாகத்தைக்கூட இந்துக்கள் கொல்ல மாட்டார்கள் என்ற இலக்கியக் குறிப்புகளையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வடித்தேன். இப்போது மேலும் ஒரு புத்தகததைப் படித்தேன். சுவையான குறிப்புகளைச் சுவைத்தேன்; அவைகளை உங்களுடன் பகிர்வேன்.

காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் ராஜ தரங்கிணி என்ற நூலை கல்ஹணர் என்ற பிராஹ்மணன் 1000 ஆண்டுகளுக்கு முன் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதினான். அவனுக்கு முன்பாக நீல மத புராணம் என்ற புஸ்தகத்தில் கூறிய பல விஷயங்களை அவனும் குறிப்பிட்டுள்ளான்.

 

காஷ்மீருக்கும் நாகர்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கே நாகர் என்பதை மலை ஜாதி மக்கள் என்று கொள்ளாமல் உண்மையான பாம்பு என்றே கொண்டு எழுதி இருப்பதால் இன்னும் சுவை கூடுகிறது. எததனையோ நாகர் பெயர்களை மஹாபாரதம் முதலிய நூல்கள் குறிப்பிட்டாலும் அதிகமான நாகர் பெயர்களின் பட்டியல் நீலமத புராணத்தில்தான் இருக்கிறது. 527 நாகர்களின் பெயர்கள் இதில் உள்ளன!

 

அபுல் பாஸல் என்பவர் மொகலாய மன்னன் அக்பரின் சபையில் பிரதம மந்திரி. அவர் எழுதிய நூலிலும் காஷ்மீரில் நாகர்கள் பற்றிய நம்பிக்கைககள், கதைகளைத் தொகுத்து நமக்கு அளித்துள்ளார்.

 

தென்னாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில்களே இல்லை என்றே சொல்லலாம்

 

கிரேக்க நாட்டில் பாம்பு வழிபாடு

நம்முடைய புராண விஷயங்களைக் காப்பியடித்து உருத்தெரியாமல் திரித்தவர்கள் கிரேக்கர்கள்- கிருஷ்ணர் செய்த பல லீலைகளை ஹெர்குலீஸ் செய்ததாக கிரேக்கர் சொல்லுவர். கிருஷ்ணன் கொடிய காளீயன் என்ற பாம்பை அடக்கி ஒடுக்கியது போல ஹெர்குலீஸும் ஒரு பாம்பை த்வம்சம் செய்ததாகக் கதை. அபல்லோ (Apollo Vs Python) என்னும் தெய்வம் பைதானுடன் (மலைப்   பாம்பு) சண்டை இட்டதாக இன்னும் ஒரு கதை.

 

கிரேக்க நாட்டில் மலைக் குகைகள், பாதாள அறைகள் ஆகியவற்றில் இருந்து ஆரூடம் சொல்லுவோர் மீது கிரேக்கர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

 

கடமஸ் (Cadmus) என்பவன், அவனது ஆட்களைக் கொன்ற பாம்பை சண்டை போட்டுக் கொன்றதாகவும் புராணக் கதைகள் பேசுகின்றன.

 

எகிட்னா (Echidna) என்ற ஸர்ப்ப தேவதையைப் புணர்ந்து நாக வம்ஸத்தை ஹெர்குலீஸ் தோற்றுவித்தாராம்.அவர்கள் (Scythians) சிதியர், சகரர் எனப்படுவர்.

 

கிரேக்க நாட்டில் டெல்பி, த்ரோபோனியஸ் ஆகிய இடங்களில் குறி சொல்லும் அறைகளில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன எபிடேரஸ் என்ற இடத்தில் இருந்த பாம்புகளுக்கு இரண்டாம் நூற்றாண்டு வரை பால் வார்க்கப்பட்டது. புனித இடங்களைப் பாது காக்கவும், குறிகள் சொல்லவும், கடவுளைக் குறிக்கவும், நோய்களைத் தீர்க்கவும் பாம்புகள் உதவுவதாக கிரேக்கர் கதைகள் உள்ளன.

 

அலெக்ஸாண்டரின் தாய் ஒலிம்பியாஸ் அவரது வீட்டில் ஒரு பாம்பு வளர்த்ததாக ப்ளூடார்ச் (Plutarch) எழுதியுள்ளார். அலெக்ஸாண்டர் ஒரு நாக கன்னிகைக்குப் பிறந்ததாக லூஸியன்(Lucian)  எழுதி வைத்தார். ஒரு வேளை நாகர் வம்ஸத்தில் பிறந்த பெண், அவருடைய தாயார் போலும்!

 

 

இதாலியில் இந்தியப் பாம்புகள் இறக்குமதி

ரோமாபுரியை ஆண்ட டைபீரியஸ் Tiberius (கி.பி.14-37) ஒரு செல்லப் பிராணியாக ஒரு நாகத்தை வளர்த்து வந்தார். ஒரு நாள் எறும்புகள் அதைக் கடித்துக் குதறி இருந்ததைக் கண்டார். பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு நாகப் பாம்பை இறக்குமதி செய்து ஏதென்ஸ் நகரத்தில் ஜூபிடர் ஒலிம்பியஸ் கோவிலில் வைத்தார். பாம்பைக் கொன்ற பாபத்துக்குப் பரிகாரம் செய்ய இப்படி காணிக்கை கொடுத்தார் போலும்!

 

மினர்வா (Minerva) என்னும் தேவதை லவாகூன் என்பவரைக் கொல்ல இரண்டு பாம்புகளை அனுப்பியதாக ரோமாபுரி வரலாறு சொல்லும்.

 

அந்த இடம் புனிதமானது என்பதற்காக சுவரில் இரண்டு பாம்பு ஓவியங்கள் வரையப்பட்டனவாம்.

 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிபியோ ஆப்ரிகானஸ் (Scipio Africanus) என்ற ரோமாபுரி தளபதி ஒர் நாகத்தால் (நாக கன்னிகை) வளர்க்கப்பட்டாராம்.

 

அகஸ்டஸ் சீசரின் தாயார் அடியா ( Atia), அகஸ்டஸை ஒரு நாகத்திடம் பெற்றுக் கொண்டதாக நம்பினார். இந்தக் கதைகளில் சம்பந்தப்பட்டவர் எல்லாம் நாக வம்ச மனிதர்களாக இருக்க வேண்டும்.

 

கிரேக்க ரோமானிய நாணயங்களில் பாம்பு உருவங்கள் இருப்பது 2000 ஆண்டுக்கு முந்தைய நம்பிக்கைகளை உறுதி செய்கின்றன.

அழகிகளும் நாகங்களும்!

 

ஆர்கிவ் ஜோனோ (Argive Juno) கோவில் அருகில் ஒரு  இருண்ட பெரிய குகையில் ஒரு பாம்பு வசித்ததாக ஏலியன் (Aelian) எழுதுகிறார். லாடியத்தில் (Latium) வசித்த கன்னிப் பெண்கள் உண்மையில் கற்புக்கரசிகளா என்று கண்டறிய ஆண்டுதோறும் இந்தக் குகைக்குள் கன்னிப் பெண்கள் அனுப்பப்படுவராம். அவர்கள் கொடுக்கும் உணவுகளை அந்த நாகம் ஏற்றால் அவர்கள் கன்னித் தன்மை அழியாதவர் என்பது உறுதி ப்படுவதோடு அவ்வாண்டு அமோக விளைச்சல் கிடைக்குமாம். இதே போல் எபிரஸ் (Epirus) என்னும் இடத்தில் நிறைய பாம்புகள் இருந்தனவாம். அங்கு கன்னிப் பெண்கள் நிர்வாண நிலையில் உணவுகளைக் கொண்டு செல்வராம். பாம்புகள் சாப்பிட்டால் நல்ல அறுவடை நடக்குமாம்.

இப்படிப் பாம்புகள் பற்றிப் பல நம்பிக்கைகள் இருந்ததை மேற்குறித்த   கிரேக்க ரோமானிய எழுத்தர்கள் மூலமும் ஆசிரியர்கள் மூலமும் அறிகிறோம்.

 

My Old Research Articles

நாகர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்/

யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்டநாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர்தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால்பாண்டவர்களுக்கு …

நாகர் கதை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாகர்-கதை/

அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் –பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் …

 

Tamil | Tamil and Vedas | Page 64

https://tamilandvedas.com/category/tamil/…:/tamilandvedas…/64/ –

8 Dec 2012 – மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன? மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்பாண்டவர்கள்– நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள்படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் …

நாக ராணி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/நாக-ராணி/

Minoan Snake Goddess 1600 BC. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாகராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் …

 

 

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் …

swamiindology.blogspot.com/2016/04/post-no-2722.html

13 Apr 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). sesha, pullaboothangudi. Wave. பாம்புத் தலை வடிவில் பேரலைகள்!! நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ …

 

Picture from Meera Rai post

Serpent Queen:Indus Valley to Sabarimalai | Tamil and Vedas

Serpent Queen:Indus Valley to Sabarimalai

17 Jun 2012 – British archaeologist Arthur Evans excavated at the palace of Knossos in Crete and revealed to the world the fascinating details of a new civilization that existed between 2700 BC and 1500 BC coinciding with theIndus Valley Civilization. The famous serpent queen figure is of a priestess holding two snakes …

 

 

 

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

 

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

(for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

 

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

Are Mayas, Indian Nagas?

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

 

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

 

–சுபம்–