Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 November 2018
GMT Time uploaded in London –11-20 am
Post No. 5655
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
இந்துக்கள் இயற்கைப் பொருட்களையும் செயற்கைப் பொருட்களயும் கடவுளரையும் ஏழு ஏழாகப் பிரித்து இருப்பதை நாம் அறிவோம்.
பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு குகை தாண்டி’ என்றெல்லாம் எழுதினர்.
நாம் உலகை ஏழு த்வீபங்களாக (பெருநிலப்பரப்பு) பிரித்தோம். கடல்களை ஏழாகப் பிரித்தோம்.
உதிரம் = இரத்தம்
1000 ஆண்டுகளுக்கு முன்னர், கம்பன் காலத்தில், மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால் கம்பன் இது பற்றி ஒரு பாடலில் பாடுகிறான்.
உப்புதேன் மதுஒண் தயிர் பால் கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்
தப்பிற்று அவ் உரை இன்று ஓர் தனிவினால்
-யுத்த காண்டம், மூல பல வதைப்படலம்
பொருள்
பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.
ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்), சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்
TAGS–
-subham–