Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
50 ஆண்டுப் பழமையான இலங்கைத் தமிழ் மலர்
ஒன்றில் இலியத், ருபாயத் காவியங்கள் குறித்தும்
ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய 24,000 சொற்கள் பற்றியும் இரண்டு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. படித்து
மகிழுங்கள்
from the British Library Catalog:— My pictures taken at Stratford Upon AvonShakespeare Beer!!!!!!!!!!!!!!!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1. (6) – enemy of Nagas
6. (4) – Petals of this Flower is used to make Gulkand
7. – big noise, sound in Sanskrit
8. – Urad dhal in Sanskrit with which South Indians make Vadai
10.– founder of Indina physics also known as Vaiseshika
11. – friend in Sanskrit
1. (5) – oldest woman philosopher in the world who challenged a great scholar in a big philosophers conference
2. (8) – King and Queen in Chess Chatur Anga
3. (5) – simile in Sanskrit and Tamil
4. – firm; also the name of Pole Star which is named after a Hindu boy
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
ச.நாகராஜன்
ஒலி என்று எடுத்துக் கொண்டால் ஒரு ஒலிக்கு ஒரு அதிர்வெண் அல்லது ஃப்ரீக்வென்ஸி தான் இருக்கிறது. ஒரு போர்க்கைத் தட்டி அதிலிருந்து ஒரு ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு ஃபோர்க்கை அதே போலத் தட்டினால் அதே ஃப்ரீகவென்ஸியுடன் – அதிர்வெண்ணுடன் தான் ஒலி எழும்பும்.
இதை சுலபமாக அளக்க முடியும்.
நாம் ஒரு பாட்டைப் பாடும் போது அதில் ஒரு ஸ்வரத்தைக் கையாளும் போது நமக்குள் ஒரு நல்ல அனுபவம் ஏற்படுகிறது – மெய் சிலிர்க்கிறது,தலையை ஆட்டுகிறோம்! ஆஹா எனக் கத்துகிறோம். இசை நம்மிடம் ஏற்படுத்தும் உடனடி விளைவு இது!
திருடனைக் கண்டுபிடிக்கும் ஒரு புது விதமான எச்சரிக்கை மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பெயர் ‘தி இன்ஃபெர்னோ’ (The Inferno). அந்த எச்சரிக்கை மணி குறைந்த அதிர்வெண் உள்ள ஓசைகள் பலவற்றை எழுப்பும்.அதில் ஒன்று இன்னொன்றுடன் மோத பலவேறு ஓசைகள் எழும்பும்; அது உளவியல் ரீதியாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவிதமாகத் தலை சுற்றும்; வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்தும். கவனசக்தியைச் சிதற அடித்து எதைச் செய்ய எண்ணுகிறோமோ அது கவனத்திலேயே இல்லாமல் போய்விடும். இந்த மணியின் ஓசையால் திருட வந்தவன் திகைத்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் மலைப்பான். அவனால் திருட முடியாது!
விஞ்ஞானிகள் ஒலி அலைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளார்கள். அவற்றின் மூலமாக ஒலி வெவ்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டுள்ளனர்.
வளர்ப்பு பிராணிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது ஒரு வித ஃபாஷன். வளர்ப்புப் பூனையைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சும் போது அது ஒரு வித மியாவ் ஓசையை எழுப்பும். அது வளர்ப்பவரின் மன இறுக்கத்தைத் தளர்த்துகிறதா? இதை ஆய்வு செய்து பார்த்து விடலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
விஞ்ஞானியான எலிஸபத் வான் மக்கெந்தலர் (Elizabeth Von Muggenthaler) ஒரு படி முன்னே போய், அப்படி பூனை எழுப்பும் ஓசை அது இயல்பாக நோய் தீர்க்கும் ஒலி என்றும் அது எலும்புகளையும் உடலின் அங்கங்களையும் வலிமைப் படுத்தும் ஓசை என்றும் தெரிவித்தார்!
பூனையின் இந்த ஓசை சராசரியாக 27 முதல் 44 ஹெர்ட்ஸ் என்ற அளவில் இருக்கிறது.
இந்த அளவு ஓசை எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது; எலும்புகளின் அடர்த்தியை (density) அதிகரிக்கிறது; இதர அங்கங்களுக்கும் வலுவூட்டுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே போல அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை (Ultra Sound treatment) மருத்துவ மனைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் உடைந்த எலும்பை ஒட்ட வைப்பதற்கும் சீக்கிரமே அவை குணமடைவதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.
அற்புதமான இசையை இசைத்தால் தாவரங்களும் அபரிமிதமாக வளர்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இசை விற்பன்னர் தான் இசை அமைக்கும் போது என்னென்ன ஸ்வரங்களைப் பயன்படுத்தினாரோ அதே ஸ்வரங்களைப் பயன்படுத்தினால் தான் அந்த நல்ல விளைவு ஏற்படுகிறது என்றும் வெவ்வேறு வகையில் ஓசைகளை எழுப்பும் போது அந்த நல்ல விளைவு ஏற்படுவதில்லை என்பதும் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதே போன்ற ஆய்வுகள் பாக்டீரியாக்களை வைத்தும் நடத்தப்பட்டன. ஒரு விதமான நல்ல அதிர்வெண்கள் மூலம் அவை பெருகுகின்றன என்பதும் இன்னொரு விதமான அதிர்வெண்ணில் அவை சாகின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை வைத்துப் பார்த்தால், நமது முன்னோர்கள் சில ஒலிகளைத் திருப்பித் திருப்பி ஏன் கூறச் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த விதமாகத் திருப்பித் திருப்பிக் கூறுவது வியாதிகளைத் தீர்க்கிறது.
பறவைகளின் பாட்டொலி சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஒரு நல்ல பயனை விளைவிக்கிறது.
வசந்த காலம் வந்தால் பறவைகளின் உற்சாக ஒலி நம்மைப் பரவசப்படுத்துகிறது.
இந்த அற்புதமான் மெல்லிசை சுற்றி இருக்கும் தாவரங்களின் இலைகளை வளரச் செய்கிறது; மலர்களைப் பூக்க வைக்கிறது.
வசந்த காலத்தில் இது அவசியம். ஆனால் கோடைகாலத்தில் வளர்ந்து விட்ட நிலையில் மலர்களுக்கும் இலைகளுக்கும் இந்த இனிய ஓசை அவ்வளவாகத் தேவை இல்லை.
தாவரங்களில் ஏற்படும் இரசாயன மாற்றம் – அதாவது போட்டோசிந்தஸில் – (Photosynthesis) இரவில் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசித்து உதய காலத்தில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் செயல் பறவைகளின் இனிய ஒலிகளால் ஊக்கப்படுத்தப் படுகிறது.
இப்படி இனிய ஒலி எங்குமே ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அறிவியல் சோதனைகளாலும் நேரடி அனுபவங்களாலும் நாம் உணர்கிறோம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
எரிமலை மீது குண்டு வீச்சு என்ற தலைப்பில் நான் தினமணியில் மே3, 1992ல் ஒரு கட்டுரை எழுதினேன்.
27 ஆண்டுகளுக்குப் பின்னரும் அந்த எரிமலை இன்னும் அவ்வப்போது பொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
கடைசியாக மவுன்ட் எட்னா எரிமலையின் சீற்றம் 2018 டிசம்பரில் நடந்தது. சிசிலி தீவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டு கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த முறை எரிமலையின் சிகரத்தில் தீச்சுவாலை பீறிட்டு எழாமல், பக்க வாட்டு மலையைப் பிளந்து கொண்டு எரிமலை சீறியது. இப்படி பக்கவாட்டில் வெடிப்பது பத்து ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் நடந்துள்ளது
Dinamani article written by London Swaminathan in 1992.DINAMANI NEWSPAPER 3rd May 1992Mount Etna Volcanosubham
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1992 மே 3ம் தேதி சீனாவில் பரம்பரை ஆட்சி என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். அங்கும் குடும்ப ஆட்சிப் பிரச்சினை இருந்தது. 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதைய நிலவரம் தெரியவில்லை.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
பாக்யா 1-11-2019 இதழில் அறிவியல் துளிகள்
தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 435
நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித்
விநாயக் பானர்ஜி!
ச.நாகராஜன்
இந்த ஆண்டில் (2019) அறிவிக்கப்பட்ட
நோபல் பரிசுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்துள்ளன என்றால் அது
மிகையல்ல.
இந்தியாவில் மும்பையில் பிறந்து கல்கத்தாவில்
வளர்ந்து டெல்லியில் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் விநாயக் பானர்ஜி
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைத் தன் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் சக ஆய்வாளர்
மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.
இந்தியாவின் பெருமிதத்திற்கான தருணம்
இது.
ரபீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன்,
ஹர் கோபிந்த் கொரானா, மதர் தெரஸா, எஸ். சந்திரசேகர், அமார்த்ய சென், வி.ராமகிருஷ்ணன்,
கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து ஒன்பதாவதாக இந்தப் பரிசை வென்றுள்ள இந்தியர்
என்ற பெருமையைப் பெறுகிறார் அபிஜித்! (பிறப்பு : 1961 பிப்ரவரி 21- வயது 58)
அவர் பரிசு பெற்றதற்கான காரணம் இன்னும்
அதிக பெருமையைத் தரும். உலகளாவிய விதத்தில் வறுமையைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய
சோதனை பூர்வமான ஆய்வுக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பாக்யாவின் வாழ்த்துக்களை உளங்கனிய
நோபல் பரிசை வென்ற அபிஜித் அவர்களுக்கு வழங்குகிறோம்.
அடுத்து, மொபைல் போன், கம்ப்யூட்டர்,
லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம்
லிதியம்-அயான் பேட்டரிகளைக் கண்டுபிடித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனத்திற்கான
நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பேராசிரியரான ஜான் குட்எனஃப்
(John Goodenough)-க்கு வயது 97. நோபல் பரிசைப் பெற்றவர்களிலேயே
மிக அதிக வயதுடையைவர் இவர் தான் என்ற சாதனையும் இவரைச் சேர்கிறது. நோபல் பரிசு பெற
வயது ஒரு தடை இல்லை என்பதை இந்தப் பரிசு நிரூபிக்கிறது!
இவருடன் இந்தப் பரிசைப் பகிர்பவர்கள்
ஸ்டான்லி விவ்விங்ஹாம் (வயது 77) என்ற பிரிட்டிஷ்-அமெரிக்க பேராசிரியரும், அகிரா யோஷினோ
(வயது 71) என்ற ஜப்பானியப் பேராசிரியரும் ஆவர்.
படிம எரிபொருள் பயன்பாட்டை நீக்கி
மறுசுழற்சிக்குள்ளாக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்ததே இவர்களின் சிறப்பு. நீடித்துழைக்கும்
பேட்டரியினால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகிறது என்பதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றலைச்
சேமிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இது அடித்தளமாக அமையும்.
அடுத்து இயற்பியலில் 2019ஆம் ஆண்டுக்கான
நோபல் பரிசு பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் அரிய
சேவை ஆற்றியதற்காகவும் பிரபஞ்சத்தில் பூமி எந்த இடத்தை வகிக்கிறது என்பதை அறிந்து கூறியதற்காகவும்
மூவருக்கு அளிக்கப்படுகிறது.
பரிசில் பாதியை ஜேம்ஸ் பீபிள்ஸ் பெறுகிறார்.
மீதிப் பாதியை மிகேல் மேயரும் டிடியர் க்லாஸும் பெறுகின்றனர். சோலார் வகை நட்சத்திரத்தைச்
சுற்றி ஒரு எக்ஸோ பிளானட் இருப்பதைக் கண்டு பிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் பரிசு
வழங்கப்படுகிறது.
(சூரிய மண்டலத்தில் அனைத்து கிரகங்களும்
சூரியனைச் சுற்றியே வருகின்றன. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இதர நட்சத்திரங்களைச் சுற்றி
வரும் கிரகங்கள் எக்ஸோபிளானட் என்று குறிப்பிடப்படுகின்றன.)
சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை இவர்கள்
சுட்டிக் காட்ட பால்வீதி மண்டலத்தில் சுமார் 4000 எக்ஸோபிளானட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே தான் இவர்களை நோபல் கமிட்டி பாராட்டி பரிசை அளித்துள்ளது.
அடுத்து சமாதானப் பரிசைப் பெறுபவர்
எதியோப்பியாவின் பிரதம மந்திரியான அபி அஹ்மத்
அலி. எதியோப்பியாவுக்கும் அண்டை நாடான எரிட்ரியாவிற்கும் நடந்து வந்த மோசமான போரை முடிவுக்குக்
கொண்டு வந்ததற்காக இந்த சமாதானப் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் இவருக்கு
வயது 43 தான்.
ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில்
எதியோப்பியா எரிட்ரியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் எரிட்ரியா மக்கள் ஓட்டெடுப்பில்
தனித்து இருப்பதை விரும்பவே அப்படியே இரு நாடுகளும் 1993இல் தனி நாடுகளாக ஆயின. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாட்மே என்ற
எல்லை ஓர நகரின் உரிமை பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. பெரும் வன்முறை எழுந்தது.
2000 முதல் 2002க்குள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டு எல்லை கமிஷன்
பாட்மே நகரை எரிட்ரியாவிற்கு வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் எதியோப்பியா அந்த நகரைத்
தரவில்லை. ஆகவே ஒரு போர் சூழ்நிலை நிரந்தரமாக அங்கு உருவானது. எரிட்ரியாவை உலகினர்
‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என அழைக்க ஆரம்பித்தனர். எரிட்ரியாவில் நீடித்த எமர்ஜென்ஸி
அறிவிக்கப்பட்டது. 18 வயது ஆனவுடன் தேசீய சேவைக்காக அனைத்து எரிட்ரியாவாசிகளும் அழைக்கப்பட்டனர்.
பெரும்பாலானோர் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் எதியோப்பியாவின் பிரதம
மந்திரியாக அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே சுறுசுறுப்புடன்
செயல்பட ஆரம்பித்த அபி நூறு நாட்களுக்குள்ளாகவே பல்லாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு
ஒரு தீர்வு கண்டார். முதலில் எதியோப்பியாவில் இருந்த எமர்ஜென்ஸியை ரத்து செய்தார்.
ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.
பன்னாட்டு எல்லை கமிஷன் கூறுவதை ஏற்பதாகவும்
அவர் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை
ஆரம்பமாயின.
அதிக உற்சாகத்துடன் இப்படி தீவிரமாக
சமாதானத்திற்காகப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் அபியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சமாதானப்
பரிசு தருவதாக நோபல் பரிசுக் கமிட்டி கூறி இருப்பதை உலகில் சமாதானத்தை நிலை நிறுத்த
விரும்பும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.
என்ற போதும் இந்த சின்ன வயதிலேயே இப்போது
தான் பிரதம மந்திரியான ஒருவருக்கு சமாதான பரிசை அளிப்பது சரிதானா என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர்.
எரிட்ரியாவும் இந்த அளவிற்கு சமாதானத்தில் முனைப்பு காட்டவில்லையே என்பது தான அவர்களின்
அங்கலாய்ப்பு.
ஆனால் போர் நிறுத்தப்பட்டு விட்டது.
தடை செய்யப்பட்டிருந்த ஊடகங்கள் தடை நீங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன.
நல்ல மாறுதலை உலகம் வரவேற்கும் இந்த
நிலையில் அபி அஹ்மதுக்கு உலகமே வாழ்த்துத் தெரிவிக்கிறது – நாமும் தான்.
இன்னும் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான
நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
அறிவியல் அறிஞர் வாழ்வில் :;
சோவியத் விண்வெளி வீரரான அலெக்ஸி லியனோவ்
முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு மே மாதம்
30ஆம் தேதி பிறந்த லியனோவ் தனது 85வது வயதில் அக்டோபர் 11ஆம் தேதி 2019இல் மரணமடைந்தார்.
1965ஆம் ஆண்டு துணிந்து விண்கலத்திலிருந்து
வெளியே வந்து நடந்து அவர் சாதனை படைத்தார். மனிதனை சுமந்து சென்ற 17வது விண்கலத்தில்
மார்ச் 1965இல் அவர் விண்வெளி ஏகினார். விண்கலத்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே
அவரது விண்வெளி உடை உப்ப ஆரம்பித்தது. அவரது சகாவான பவேல் பெலயாவாலாலும் உதவிக்கு வர
முடியவில்லை. இப்படி உப்பிய நிலையில் அவரால் மீண்டும் விண்கலத்திற்குள் நுழையவே முடியாது.
துணிந்து தன் விண்வெளி உடையின் அழுத்தத்தைக் குறைக்க அதிலிருந்து காற்றை வெளியேற்ற
ஆரம்பித்தார். இதனால் விண்கலத்தை அடைவதற்குள் அவரது ரத்தத்தில் நைட்ரஜன் கொதிக்க ஆரம்பிக்கும்
என்பது அவருக்கு நன்கு தெரியும். ஒரு வழியாக விண்கலத்திற்கு மீண்டார். 12 நிமிடம்
9 விநாடிகள் விண்கலத்திற்கு வெளியே இருந்து விண்வெளியில் மனிதன் இருக்க முடியும் என்பதை
அவர் நிரூபித்தார். பின்னர் மறுநாள் 19-3-1965 அன்று பூமி திரும்பினார். இதனால் சந்திரனில்
மனிதன் இறங்க முடியும் என்பது நிரூபணமானது.
விண்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன்
தன் பார்வையை பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திய லியனோவ், “ஆஹா பூமி உருண்டையாக இருக்கிறது.
மேலே நட்சத்திரங்கள். கீழே நட்சத்திரங்கள். இடப்புறமும் வலப்புறமும் நட்சத்திரங்கள்!
சூரியனின் ஒளி என் முகத்தில் அடிக்கிறது” எனக் கூவினார்.
1975இல் மீண்டும் விண்வெளி சென்ற லியனோவ்
அங்கு அபல்லோ விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்தித்தார்.
மொத்தத்தில் 113 முறை அவர் பூமியின்
சுற்றுப்பாதையில் வலம் வந்தார். 7 நாட்கள் 32 நிமிடங்கள் அவர் மொத்தமாக விண்வெளியில்
இருந்திருக்கிறார்.
அவரை கௌரவிக்கும் வண்ணம் ஏராளமான விருதுகள்
அவருக்குத் தரப்பட்டுள்ளன.
அவரது மறைவு குறித்து விண்வெளி ஆர்வலர்கள்
தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Longest in the world, Kalabhurahi, Karnatakamalik-i- maidanBangalorechennaiMadras Museum
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Ancient Hindus
used many apparatuses in their chemical,
medical and alchemical experiments and preparations. If anyone looks at the
ancient medical books they will come across these yantras or devices.
Somadeva explains
the following in his Sanskrit work –