நடந்தவை தான் நம்புங்கள்! – 21 (Post No.11,057)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,057

Date uploaded in London – –    28 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 21

ச.நாகராஜன்

1

திருமண கவுன்ஸிலிங்!

மனைவியுடன் ஒத்துப் போக முடியாத ஒருவர் மனம் நொந்து திருமண கவுன்ஸிலிங் செய்யும் உளவியல் நிபுணரை நாடினார்.

உளவியல் நிபுணர் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுப் பிறகு சொன்னார்: “ ஒரு நாளைக்கு ஐந்து மைல் வீதம் ஓடுங்கள்; ஒரு வாரம் கழித்து என்னைக் கூப்பிடுங்கள்” என்றார்.

அவரது அறிவுரையை சிரமேற்கொண்டார் பாதிக்கப்பட்டவர்.

ஒரு வாரம் கழித்து அவர் உளவியல் நிபுணரை அவர் கூறியபடியே போனில் தொடர்பு கொண்டார்.

“மனைவியுடன் இப்போது எப்படி இருக்கிறது நிலைமை?” என்று கேட்டார் நிபுணர்.

“எனக்கெப்படி தெரியும்? நான் நீங்கள் கூறியபடியே ஐந்து மைல்கள் தினமும் ஓடி முப்பத்தைந்து மைல்கள் கடந்து வந்து விட்டேன்” என்றார் நண்பர்!

பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளினின் அறிவுரை இது:

கல்யாணத்திற்கு முன் இரு கண்களையும் அகலத் திறந்து வையுங்கள்; கல்யாணத்திற்குப் பின்னர் அரைப் பார்வையாகப் பாருங்கள்!”

(Keey your eyes wide open before marriage, half shut afterward – Benjamin Franklin)

2

ட்வெயினின் மனைவியின் கோபம்!

பிரபல எழுத்தாளரான மார்க் ட்வெய்ன் (Mark Twain 1835-1910) ஆடை விஷயத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்த மாட்டார். இது அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. காலர், டை இல்லாமல் கூடவா ஒரு இடத்திற்கு ஒருவர் போவார் என்று அவர் அங்கலாய்ப்பார்.

ஒரு நாள் அடுத்த வீட்டிற்குச் சென்று திரும்பி வந்த மார்க் ட்வெயினைப் பார்த்து திடுக்கிட்டார் அவரது மனைவி.

காலர், டை இல்லாமல் அடுத்த வீடு சென்று திரும்பி இருக்கிறார் அவர்.

வந்ததே கோபம் அவருக்கு, வெளுத்து வாங்கி விட்டார்.

உடனே மார்க் ட்வெய்ன் ஒரு டையையும் காலரையும் பார்சல் செய்து ஒரு கடிதத்துடன் அடுத்த வீட்டிற்கு ஒரு பையன் மூலம் அனுப்பினார்.

“ஒரு அரைமணி நேரம் இந்த காலர், டை இல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். இப்போது நான் போடாமல் விடுபட்டதை அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து இதை நன்றாகப் பார்த்து விட்டு என் மனைவியை சமாதானப் படுத்துங்கள், காலரையும் டையையும் திருப்பி அனுப்பி விடுங்கள்!”

3

பயனுள்ள வாக்கியம்!

எட்டாவது வகுப்பில் படிக்கும் பையனைப் பார்த்து ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை ஒரு கேள்வியைக் கேட்டார்: “ஒரு பயனுள்ள வாக்கியத்தைச் சொல்லு பார்ப்போம்!

பையன் தயங்காமல் உடனே கூறினான்: “எல்லோரும் அழகான உங்களைத் தான் அருமையாகச் சொல்லித் தரும் டீச்சர் என்று கூறுகின்றனர்.”

மனம் மகிழ்ந்த டீச்சர், “சரி, அதில் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டார்.

“எனக்கு அதிக பட்ச மார்க் கிடைப்பது தான்!” என்றான் பையன்!

4

கடவுளுக்கான மார்க்!

வில்லியம் லையான்ஸ் பெல்ப்ஸ் (William Lyons Phelps 1865-1943) புகழ் பெற்ற யேல் யுனிவர்ஸிடியின் புரபஸர். ஆங்கிலப் பேராசிரியரான அவர் ஒரு சமயம் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் ஒன்றைக் கொடுத்து விடை எழுதச் சொன்னார்  மாணவர்களிடம்.

ஒரு மாணவன் எழுதிக் கொடுத்தது இது : “கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் இந்தக் கேள்விக்கான விடை! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!”

வில்லியம் பேப்பரைத் திருத்திப் பையனிடம் கொடுத்தார்: “ கடவுளுக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டிருக்கிறது உனக்கு எஃப் (பெயில்) வழங்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

5

குய்ன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்!

இங்கிலாந்து ராணியான குய்ன் இரண்டாம் எலிஸபத் (Queen Elizabeth II

1926- )  க்ளமிஸ் கேஸில் (Glamis Castle) என்ற இடத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பாதிரியார் ஒருவர் வந்தார். அப்போது எலிஸபத்திற்கு வயது பத்து. திரும்பிச் செல்லும் போது பாதிரியார், “லில்லிபெட்” (Lillibet) என்ற புத்தகத்தை எதிர்கால ராணியாருக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்.

உடனே எலிஸபத் கூறினார்: “அது கடவுளைப் பற்றிய புத்தகமாக மட்டும் இருக்க வேண்டாம்.  எனக்கு கடவுளைப் பற்றி எல்லாம் தெரியும்!”

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,056)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,056

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- Part 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ரிபுஹு  6-5 எதிரி, பகைவன்

ருத்ராணாம் 10-23 ருத்திரர்களில்

ருத்ராதித்யாஹா  11-22 ருத்திரர்கள், ஆதித்யர்கள்

ருத்வா 4-29  தடுத்து

ருதிரபிரதிக்தான்  2-5 ரத்தம் தோய்ந்த

ரூபஸ்ய 11-52  ரூபத்தை

ரூபம்  11-3  வடிவத்தை

ரூபாணி 11-5  உருவங்களை

ரோமஹர்ஷணம் 18-74 புளகாங்கிதம்,மயிர் கூச்சரித்தல்

ரோமஹர்ஷஹ 1-29  மயிர்க்கூச்சம்

xxx

ல எழுத்தில் துவங்கும் சொற்கள்

லப்தம்  16-13 அடையப்பட்டது

லப்த்வா 4-39   அடைந்து

லப்தா  18-73 அடையப்பட்டது

லபதே 4-39 அடைகிறான்,

லபந்தே 2-32  அடைகிறார்கள்

லபஸ்வ 11-33 அடை, பெறு

லபே 11-25 அடைதல்

லபேத் 18-8 அடைதல்

லப்யஹ 8-22 அடைதற்குரியவன்

லாகவம் 2-35 எளிமையை, எள்ளி நகையாடும் நிலையை        

லாபம் 6-22 லாபத்தை

லாபாலாபெள 2-38  லாப நஷ்டங்களையும்

லிங்கைஹி 14-21 லட்சணங்களால், அடையாளங்களால்

லிப்யதே 5-7 தொடுதல் , பற்றுதல்

லிம்பந்தி 4-14 பற்றிக்கொள்ளும்

லுப்த பிண்டோ தக்ரியாஹா 1-42

லுப்த ஹ 18-27 லோபியும்

லேலிஹ்யஸே 11-30 நக்கித் துளாவுகிறாய்

லோக க்ஷயக்ருது 11-32 உலகை அழி க்கும்

லோகத் ரயம் 11-20 மூவுலகங்களும்   30 words

லோகத்ரயே 11-43 மூவுலகிலும்

லோக மஹேஸ்வரம் 10-3

லோக  சம்க்ரஹம் 3-20 உலகை நல்வழிப்படுத்தவும்

லோகஸ்ய  11-43 உலகத்திற்கு

லோகம்  9-33 உலகை

லோகஹ 3-9 உலகம்

லோகாத்  12-15 உலகத்திடமிருந்து

லோகான் 6-41 உலகங்களை

லோகாஹா 3-24 உலகங்கள்

லோகெ 2-5 உலகத்தில்

லோகேஷு 3-22 உலகங்களில்

லோபஹ -14-12 பேராசை

லோபோப ஹத சேதஸஹ 1-38

Xxx

வ – வில் துவங்கும் சொற்கள்

வக்தும் 10-16 சொல்லுவதற்கு

வக்த்ராணி 11-27 வாய்களில்

வக்ஷ்யாமி  7-2 சொல்கிறேன்  

வசனம்  1-2  இந்த வார்த்தையை

வசஹ 2-10 வார்த்தையை

வஜ்ரம் 10-28 வஜ்ராயுதம்

வத  3-2  கூறுவாயாக

வததி 2-29  பேசுகிறான்

வதநைஹி 11-30 வாய்களால்

வதந்தி 8-11 கூறுகின்றனர்

வதஸி 10-14 கூறுகிறாய்

வதிஷ்யந்தி  2-36 பேசுவர்

வயம்  1-37 நாங்கள்

வர 8-4   சிறந்தவன்

வருண 10-29 வருணன்

வர்ண சம்கரகாரகைஹி  1-43 ஜாதிக்கலப்பை விளைவிக்கும்

வர்ண சம்கரஹ 1-41  ஜாதிக்  கலப்பு

 60 words added from part 60 of Gita word index

To be continued………………………………

Tags- Gita Index 60

MY VISIT TO NELLAI SHIVA TEMPLE (Post No.11,055)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,055

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I VISITED NELLAIAPPAR- KANTHIMATHI TEMPLE ON 5TH JUNE 2022.

Here are some interesting details in bullet points

1.Tirunelveli, shortened as Nellai, is an ancient town situated 100 miles south of Madurai. We covered it in 3 hours by car. Since this was my third or fourth visit to Nellai, I went straight into Shiva’s shrine and goddess’ shrine. During my previous trip, when I went there with Dr R Nagaswamy, world famous historian and archaeologist, as part of an archaeological tour (year 1977??), he gave us a long lecture on the historical significance of the temple.

(We were so hungry on the day and so me and Setupati High School teachers Mr V G Srinivsan and NCC master Srinivasan went to a near by Halwa shop and had good quantity of the sweet as dinner! Nellai is famous for its Halwa. In my city London, we get only corn flour halwa called Bombay Halwa. But it in Madurai and Nellai, they make the Halwa through a laborious process. They take the milk out of pounded wheat and boil it with milk, spices and ghee. During this India trip also we had Nellai Halwa)

2.Nellai Shiva temple is larger than Madurai Meenakshi temple and has as many important sculptures as Madurai temple

3.Sung by Thiru Gnana Smabandar, the greatest of the Saivite saints ; so has a history of at least 1400 years.

4.Like all ancient temples of Tamil Nadu, we have both Shiva (main shrine) and Vishnu shrine. Vishnu statue here is unique in having Shiva inscribed on him. Lord Shiva has two shrines here (Venuvana Nathar and Nellaiappar)

5. Like all Tamil temples, we have Sthala Vrksha (Plant of the Shrine) as Bamboo.

6.Ancient Sangam Tamil book ‘Madurai Kanchi’ refers to this place as Saaliyur. Both Saali and Nel (llai) mean paddy. So the town is at least 2000 year old.

7.Over 50 inscriptions are in the temple, covering a period  from 946 CE until modern times.

8.Like Madurai temple, we have Musical Pillars, 1000 Pillar Mandapa (Stone hall), Vasantha Mandapa etc. Musical Pillars here are considered the oldest among such pillars. We see such musical pillars in Andhra and Karnataka s well.

9.The Ratha/Chariot/ Ther in Tamil is famous for its wooden sculptures. It is one of the ancient wooden Chariots in Tamil Nadu.

10. Madurai has Velli Ambalam (Silver shrine of Nataraja) and Nellai has Thaamira Sabhai (copper shrine). One has to do some research on the copper attached to the river name (Taamrabarani) and Taamra sabha.

11.The sculptures here show Nayak influence. Like Madurai we have Golden Lotus Tank. Zodiac Signs, a woman with a child, Rathi, Manmatha, Arjuna and other sculptures are remarkable.

12.Seven Mandapas (Stony Halls) including the 1000 Pillar Mandapa have many beautiful sculptures. Ravana lifting Kailash is in one Mandapa.

13.Bhadra Deepa (10,000 lamps) and once in six years Laksha Deepa ( 100,000 lamps) festival on Thai Amavasai is an unique festival.

14.Kubera Lingam shrine is also equally famous. Only three temples in Tamil Nadu have Kubera Lingam, which brings wealth to any worshipper.

15.Every famous temple in Tamil Nādu is attached to one Siddha/Saint and this temple is attached to Amavasai Paradeshi who lived for 120 years.

16.Festivals are celebrated throughout the year, most of them covering ten to fifteen days.

17. Many sub shrines in the temple such as Polla Pillayar shrine, Arumuka Nayinar shrine, Thillai Govindar shrine,Jura Devar shrine, Sarasvati shrine, Manjana Vadivamman shrine, Dakshinamurthy Shrine and Pittapurathi Amman shrine are sought by the devotees for getting particular boons from the gods.

18.From Sambandar to Muthu Swami Dikshitar, one of the Karnatka Sangeetha Trinity, all Saivaite saints composed Kritis, Pathikams and Keerthanas on Shiva and Goddess Kanthimathi residing here. Sri Kanthimathim in Hemavathi Raga sung by Sri Muthuswami Dikshitar in Sanskrit, is popular among musicians.

19.There is a story behind the name of the town- Paddy Town/ Tiru Nel Veli. A brahmin by name Vedha Sarma was drying the paddy grains for the offering (Naivedhyam) and there was a flash flood in the river. When he prayed to god Shiva, he came and made a protective fence around the paddy and so the town got the name Tiru Nel/Paddy, Veli/Fence. Tiru stands as an honorific prefix signifying holy shrine or sung by a holy man. Another secular interpretation is the town is surrounded / fenced by paddy fields.

–subham–

tags- 

Nellai, Tirunelveli, Kanthimaathi, wooden sculptures, Thamrasabha, Musical pillars, 

பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்! (Post No.11,054)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,054

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்!

ச.நாகராஜன்

பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டர்கள் அடைந்த திவ்ய அனுபவங்கள் ஏராளம்!

அவர்கள் தங்கள் அனுபவங்களை, புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளனர்.

டி.கே.சுந்தரேச ஐயர் தனது அனுபவங்களை ‘அட் தி ஃபீட் ஆஃப் பகவான்’ (At the Feed of Bhagavan’ by T.K. Sundaresa Iyer) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

1929ஆம் ஆண்டு. தீபாவளிக்கு முதல் நாள் இரவு. ஆசிரமத்தில் செட்டிலான அவரது முதல் ஆண்டு அது.

பகவான் அவரை கங்கா ஸ்நானம் செய்ய வீட்டிற்குப் போகுமாறு கூறினார்.

பகவானின் தரிசனமே கங்கா ஸ்நானம் தானே என்று நினைத்தார் அவர்.

என்றாலும் பகவானின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.

இரவு வீட்டிற்கு வரைந்தார். இரண்டு மணிக்கு மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி கங்கா ஸ்நானத்தை முடித்தார்.

உடனே பகவானின் ஆசீர்வாதம் பெற ஆசிரமத்திற்கு விரைந்தார்.

வழக்கம் போல பகவான் சோபாவில் அமர்ந்திருந்தார். மணி அதிகாலை 3.30 இருக்கும்.

திடீரென்று பகவானின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிய ஆரம்பித்தது.

ஆலய உற்சவ காலங்களில் விக்ரஹத்தைச்  அமைக்கப்படும் ஒளி வட்டம் போல அது இருந்தது. பகவான் பிரகாசமான புன்னகையுடன் ஒளிர்ந்தார். ஶ்ரீ நடராஜரின் தரிசனத்தை அவர் தருவது போல சுந்தரேச ஐயருக்குத் தோன்றியது. உடனே தேவாரப் பாடலை அவர் பாட ஆரம்பித்தார்.

ஒரு அரை மணி நேரம் இந்த தெய்வீகக் காட்சி நீடித்தது. பிறகு மறைந்தது.

பகவான் நான்கு மணிக்கு சுண்ணாம்பு தடவிய வெற்றிலை பாக்கை வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார்.

தான் கண்ட காட்சியை சுந்தரேச ஐயர் பகவானிடம் தெரிவிக்க அவர் புன்னகை பூத்தார்.

இதே விதமான அனுபவத்தை ஆக்டர் வால்தியம் ஆஸ்டார் (Dr. Valtheim-Ostaur) என்பவரும் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற இந்த அனுபவத்தை புத்த லாமாவான அனாகரிகா கோவிந்தா தனது நூலான ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் திபதியன் மிஸ்டிசிஸம் (Foudations of Tibetian Mysticism by Buddhist Lama Anagarola Govinda – page 164) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

வால்தியம் ஆஸ்டார் பகவானின் முன் அமர்ந்து அவர் கண்களைப் பார்க்க திடீரென்று பகவானின் உடல் ஒளிமயமாக ஆரம்பித்தது. ஒளி அதிகமாகி வெள்ளை நிறமாயிற்று. இந்த உருவிலேயே அவர் அமர்ந்திருந்தார்.

ஆஸ்டார் இதை பகவானிடம் தெரிவித்த போது அவர் இதை வழக்கம் போல ஒன்றுமில்லை என்று கூறி விட்டார். இது மனதின் கற்பனை என்று அவர் கூறி விட்டார்.

வழக்கம் போல அவர் இப்படிக் கூறினாலும் ஆஸ்டார் தான் கண்ட காட்சி உண்மையே என்பதை உணர்ந்து ஆனந்தித்தார்.

இது போன்றே பல அன்பர்களும் பல திவ்ய காட்சிகளை பகவான் திருவுருவம் முன்னர் பெறுவது வழக்கம்!

ஒரு தெய்வீக அவதாரமே அவர் என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று!

***

tags –

tags- ரமணர் ,நடராஜ தரிசனம், 

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 59 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,053)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,053

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 59 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம்

யோகேஸ்வராத் 18-75 யோகேஸ்வரனிடமிருந்து

யோகை ஹி  5-5 யோகிகளால்

யோத்ஸ்யமானான் 1-23  போரிட விரும்பி

யோத்ஸ்யே 2-9 போரிடுவேன்

யோத்தவ்யம் 1-22 போரிட வேண்டும்

யோத்தகாமான் 1-22 போர் செய்ய விரும்பி

யோதமுக்யைஹி 11-26 பெரிய / மூத்த தளபதிகள்

யோதவீரா ன் 11-34 துணிச்சல்மிக்க வீரர்கள்

யோத்தாஹா 11-32 வீரர்கள்

யோனிஷு 16-19 யோனிகளில் , கருப் பைகளில்

யோனிம்  16-20 யோனியை 

யோனிஹி 14-3 யோனி

யெளவனம் 2-13 இளமை

XXX

ர – சொற்கள்

ரக்க்ஷஆம்சி 11-36 ராக்ஷஸர்கள்

ரஜஸஹ 14-16 ரஜோ குணத்திற்கு

ரஜசி 14-12  ரஜோ குண

ரஜஹ 14-5 ரஜோ குணம்

ரஜோ குண ஸமுத்பவ 3-37 ரஜோ குணத்தில் உதித்தது 

ரண ஸுமத்யமே  1-22  யுத்த ஆரம்பத்தில்

ரணாத் 2-35  போரிலிருந்து

ரணே  1-46  போர்க்களத்தில்

ரதாஹா  5-25  நாடுவோர்

ரதம் 1-21   தேரை    

ரதோத்தமம் 1-24  சிறந்த ரதத்தை

ரதோ பஸ்தே  1-47  தேர்த் தட்டின்மேல்  –  25 words

ரமதே 5-22 களிப்பு, சந்தோசம் அடைதல்

ரமந்தி 10-9  ஆனந்தம் அடைகின்றனர்

ரவிஹி  10-21 சூரியன்

ரஸனம் 15-9 நாவு, ருசி

ரஸ வர்ஜம் 2-59 ருசி நீங்கலாக

ரஸஹ  2-59 ருசி

ரஸாத்  மகஹ 15-13

ரஸ் யாஹா 17-8 ரசம் மிக்க

ரஹஸி  6-10 தனிமையில்

ரஹஸ்யம்  4-3 ரகசியம்

ராக்ஷஸீம்  9-12 ராக்ஷசத் தன்மை

ராக த்வேஷ வியுக்தைஹி 2-64  விருப்பு, வெறுப்பற்றவை

ராக த்வேஷவ்  3-34 — விருப்பு வெறுப்புகள்  

ராகாத்மகம் 14-7 ஆசை வடிவினாகியது

ராகீ 18-27 ஆசை வாய்ப்பட்டவன்

ராஜ குஹ்யம் 9-2 ரகசியங்களுள்  சிறந்தது

ராஜன் 11-9  திருதராஷ்ட்ர மஹாராஜா

ராஜர்ஷயஹ  4-2 ராஜ ரிஷிகள்

ராஜ வித்யா 9-2 வித்தைகளுக்கு  அரசன்

ராஜஸஸ்ய 17-9   ராஜஸ குணம் உடையோருக்கு

ராஜஸம் 17-12 ராஜஸ குணம்

ராஜஸஹ  18-27 ராஜஸ குணம் உடையவன்

ராஜ ஸாஹா 7-12 ரஜோ குண சம்பந்தம் உள்ளவை

ராஜா 1-2 அரசன்

ராஜ்ய ஸுக லோபேன  1-45  அரச இன்பத்தில் பேராசைகொண்டு

ராஜ்யம்-  8-17 நாடு, அரசு

ராஜ்யேன 1-32  அரசால், ராஜ்யத்தால்

ராத்ரிஹி 8-25 இரவு

ராத்ர் யாகமே 8-18 இரவு வருகையில்

ராமஹ  10-31 ராமபிரான் – 55 words

ரிபுஹு 6-5 எதிரி

ருத்ராணாம் 10-23 ருத்திரர்களில்

தொடரும்

Tags- கீதை இண்டெக்ஸ் 59, கீதை, பகவத் கீதை, இண்டெக்ஸ் , சொற்கள்

57 WORDS ADDED FROM THIS PART.

உப்பு வேண்டுமா , வேண்டாமா?- Part 2 (Post No.11,052)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,052

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உப்பு என்பது சோடியமும் குளோரினும் கலந்து உண்டாக்கிய சோடியம் குளோரைடு (Sodium Chloride)  என்பதைக் கண்டோம்.

“உப்பிட்டவரை உள்ளவும் நினை” என்ற பழமொழியை வைத்து சமையல்காரரைக் கிண்டல் செய்வதும் உண்டு. இந்தப் பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. முதல் அர்த்தம் ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாதே’, ‘உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்யாதே’ என்பதாகும் . அதாவது யார் உனக்குச் சோறு போட்டார்களா வர்களுக்கு என்றும் நன்றி பாராட்ட வேண்டும்; நன்றி சொல்லாவிடினும் அந்த வீடு இரண்டாகும்படி துரோகம் செய்யாதே என்பதாகும். இதே பழமொழியைக் கொண்டு  கிண்டல் செய்வதும் உண்டு. சமையல் செய்த யாராவது ஒரு உணவுப் பண்டத்தில்  அதிகம் உப்பு போட்டுவிட்டால், சிரித்துக் கொண்டே, உப்பிட்டவரை ‘உள் அளவும்’ நினை என்று சொல்லுவார்கள். அதாவது சாப்பாட்டில் போட்ட அதிக உப்பு ‘உள் வரை’க்கும், ‘அடி வயிறு’ வரைக்கும் போய்விட்டது என்பது கருத்து!

கடுமையான இருமல் இருந்தால், தண்ணீரில்  உப்பு போட்டுக் கொப்பளித்தால் போதும்; இருமல் மறைந்து விடும். சிலவகை இருமல்களுக்கு மட்டுமே இந்த வைத்தியம் செல்லுபடியாகும்.

xxx

SODIUM

இப்போது சோடியம் பற்றிய ரசாயன தகவலுக்கு வருவோம்.

சோடியம் என்பதன் ரசாயனக் குறியீடு என்ஏ (Na) என்ற ஆங்கில எழுத்துக்கள் ஆகும். நேட்ரியம் (Natrium) என்ற லத்தீன் மொழிச் சொல்லின் சுருக்கம் இது. சோடா (Soda) என்பது அதன் பொருள்.இதைக் கண்டுபிடித்த ஹம்ப்ரி டேவிஸ் இதற்கு சோடானம் என்று பெயரிட்டதாகவும் சொல்லுவர் ; அதாவது தலைவலிக்கு மருந்தாகப் பயன்பட்டது சோடிய உப்பு.

நாம் குடிக்கும் ‘சோடா’ என்பதை சோடியம் பை கார்பனேட்  (Sodium Bicarbonate) உப்பு கொண்டு தயாரித்தனர்.

சோடியத்தின் வரலாறு

சோடியத்தின் வரலாறு பைபிளில் (Jeremiah 2; 22) துவங்குகிறது . அதில் இதை நைட்ர் (Nitre) என்று குறிப்பிட்டனர் ஆதிகாலத்தில் நைல் நதி வெள்ளப் பெருக்கெடுத்த காலங்களில் அது எகிப்திலுள்ள நே ட்ரோன் (Natron Valley) பள்ளத்தாக்கை நிரப்பியது. வெள்ளம் வடிந்தவுடன் அங்கு சோடியம் கார்பனேட் படிகங்களாகத் தங்கின. பின்னர் சஹாரா பாலைவனத்திலும் சோடா உப்பு கிடைத்தது. பைபிளிலும் இதை சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருளாகக் (Cleaning agent) குறிப்பிடுவர். முன்காலத்தில் சோடியம் கார்பனேட் , வாஷிங் சோடா (Washing Soda)  என்னும் பெயரில் சுத்தம் செய்ய உபயோகிக்கப்பட்டது.

xxxx

பொருளாதாரப் பயன்பாடுகள்

ஜெர்மனி, போலந்து, அமெரிக்கா , பிரிட்டன் முதலிய நாடுகளில் பலவகை சோடியம் உப்புக்கள் (ஹாலைட்Halites ) இயற்கையில் கிடைக்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் வேறு ஒரு  வகை (Trona ட்ரோனா ) சோடியம் உப்பு கிடைக்கிறது

உப்பளம் மூலம் சோடியம் குளோரைடு என்னும் உப்பு எடுப்பது உலகின் பல பாகங்களில் நடக்கிறது. ஒவ்வொரு வகை உப்புக்கும் ஒரு உபயோகம். சோடியம் ஹைட்ராக்சைடு  (Sodium Hydroxide) குழாய்கள், கழிவறைகளில்  உள்ள அசுத்தங்களை அகற்றிவிடும்.

உப்பு, சோடியம் பைகார்பனேட் முதலியன உணவுத் துறையில் பயன்படுகிறது .

கண்ணாடி செய்யும் தொழில், தீயணைக்கும் கருவிகள் (சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட்) ஆகியவற்றிலும் சோடியம் உப்புக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

சோப்பு தயாரித்தல், காகிதக் கூழை சுத்தம் செய்தல், துணிமணிகளைத் துவைக்கும் பவுடர் (Detergents) செய்தல் முதலிவற்றிலும் சோடியம் உப்புக்களைக் காணலாம்

சோடியம் மெட்டல்( Sodium Metal) என்பது 99-9 சுத்தமான சோடியம் ஆகும். இதை சாலை விளக்கு (Sodium Lamps)  முதல் சாயத் தொழில் (dyes), கார்களில் உள்ள பாதுகாப்புக் காற்றுப் பை (air bags in cars) வரை பல இடங்களில் உபயோகிக்கிறார்கள்.

கடல், சமுத்திரம் தவிர உள்நாட்டுப் பாறைகளிலும் உப்பு கிடைக்கிறது இவை முன்காலத்தில் கடல் நீர் பாய்ந்த இடங்கள் ஆகும்.

சோடியம் என்பது வெள்ளி போல நிறம் உடைய ஒரு மென்மையான உலோகம் (Silvery white, soft metal)  ஆகும். இது காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலந்து எரிந்துவிடும் ஆதலால் பாரப்பின் (Paraffin)  திரவத்தில் சேமித்து வைப்பார்கள்.. தண்ணீரில் போட்டால் வேகமாக ஓடி ஹைட்ரஜனை உண்டாக்கும். சில நேரங்களில் தீப்பிடித்து எரிந்துவிடும். பொதுவாகக் காற்றுப்பட்டு எரிகையில் சோடியம் பெராக்ஸைடு உண்டாகிறது. அம்மோனியா திரவத்தில் போட்டால், அதில் கரைந்து, நீல நிற திரவமாகக் காட்சி தரும்.

ரசாயனக் குறியீடு – Na என்ஏ

அணு எண் – 11

கொதி நிலை – 883 டிகிரி C

உ ருகு நிலை – 98 டிகிரி C

இயற்கையாக கிடைக்கும் ஐசடோப் – சோடியம் 23.

கதிரியக்கம் கிடையாது.

செயற்கையாக உருவாக்கும் சோடியம்-24 கதிரியக்கம் உடையது. இதை மருத்துவத்தில் பயன்படுத்துவர்.

திரவ நிலையில் உள்ள சோடியத்தை (liquid Sodium) அணுசக்தி உலைகளில் (Nuclear Breeder Reactors) வெப்பத்தைக் கடத்தும் பொருளாகப் (coolant) பயன்படுத்துகின்றனர். ஆனால் 125 டிகிரிக்கு மேல் சூடாக்கிய சோடியம் தீப்பிடித்து வெடிக்கும் அபாயம் உண்டு.. அப்போது அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம். ஆயினும் பிரான்ஸ் நாட்டில் 6000 டன்  திரவ சோடியத்தால் அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்கிறார்கள். தீப்பிடித்தால் அணைப்பதற்கு மார்க்கலினா (Marcalina)  என்ற ரசாயனத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் சோடியம் திரவத்தையும் அடுத்தடுத்து வரும் வட்டமான பெட்டகங்களில் (inner loop, outer loop)  வைத்துள்ளனர்.

–subham—

Tags- சோடியம், சோடியம் குளோரைடு , பைகார்பனேட், வாஷிங் சோடா, சோடா

செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்! (Post No.11,051)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,051

Date uploaded in London – –    26 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மாலைமலர் 7/6/2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்!

ச.நாகராஜன்

ஹலோ!

ஆன்யோஹஸயோ? (கொரிய மொழியில் ஹலோ! என்று பொருள்!)

அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேகம் பிரமிக்க வைக்கும் ஒன்று. இந்த வேகத்தில் உருவாகும் நவீன சாதனங்களை எப்படிப் புரிந்து கொள்வது? பயன்படுத்துவது?

ஒரு பாராசூட் எப்போது வேலை செய்து தன் பயனைத் தரும்? அது விரிந்து திறந்த போது தான், பத்திரமாகப் பறந்து தன்னைப் பிணைந்து கொண்டிருப்போரைக் கீழே இறக்கும். அது போல மனது திறந்து விரிந்தால் தான்  சிறப்பான பணியை அது செய்து அனைத்தையும் புரிந்து கொள்ளும். இப்படித் திறந்த மனதுடன் செல்ல வேண்டிய செயற்கை அறிவின் சிகர நகரம் சியோல்!

இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் எவை என்று தனியே திட்டமிடவே வேண்டாம். தென் கொரியாவின் தலை நகரமான சியோல் விமான நிலையத்தில் இறங்கியது முதல் அனைத்தையும் பார்த்து வியப்படைய வேண்டியது தான்.!

நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான ஹோட்டல்கள் நம்மை வரவேற்கும். உள்ளே குளியலறையின் விளக்குகள் சென்ஸார் அடிப்படையில் தானே இயங்கி ஆள் இல்லை எனில் தானே இணைப்பைத் துண்டிக்கும். நீங்கள் பாத்டப்பில் இருந்து திரையைப் போட்டு குளிக்கும் போது விளக்கு அணைந்தால் திரையிலிருந்து கையை மட்டும் வெளியில் நீட்டி சென்ஸரை நோக்கிக் காண்பித்தால் விளக்கு எரியும்.

அடுத்து பழைய காலம் போல கழிவறையில் சுத்தம் செய்து கொள்ள இந்திய பாணியில் இடது கையைப் பயன்படுத்தவே வேண்டாம். அதி நவீன டாய்லெட்டிற்கான கண்ட்ரோல் பானல் மட்டும் இருபது பட்டன்களைக் கொண்டிருக்கும். அதில் தேவையானதை அமுக்கினால் நீர் பீச்சி அடித்துப் பாய்ந்து சுத்தத்தைச் செய்து விடும்!

கையில் கட்டி இருக்கும் கடிகாரம் போன்ற ஒரு வளையத்தில் அனைத்து விதமான கட்டளைகள் உள்ளன. அது தான் எல்லாமே – லிப்டை இயக்க, கதவைத் திறக்க, வீட்டில் உள்ள குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய.

கார் உள்ளே நுழையும் போது அதன் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்யப்பட்டு வீட்டில் உள்ளவர்களுக்குக் கார் வந்து விட்டது என்பதை அறிவிக்கிறது.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெளியில் கால நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் கருவி ஒன்று குடையை எடுத்துக் கொள்ளுங்கள், மழை வரப் போகிறது என்று அன்பான அறிவுரையைத் தருகிறது.

பெற்றோர்களோ, உறவினர்களோ வீட்டிற்கு வருகை புரிந்தால் அவர்களது ‘முகத்தைப் பார்த்து’ அடையாளம் கண்டு கொண்டு அவர்களது போட்டோக்களை வீட்டிற்குள்ளே அனுப்புகிறது; அவர்களை அனுமதிக்கிறது.

சமையலறையில் உள்ள நவீன் சாதனங்கள் தாய்க்குலத்தை வியப்பின் உச்சிக்கே இட்டுச் செல்லும். அதி ருசியான பண்டத்தை எப்படிச் சமைப்பது என்பதை டெமோவாக ஒரு கருவி காட்டும்; சமைப்பதையோ சில கருவிகள் சில நிமிடங்களில் முடித்து விடும். குப்பைகளைப் போட உள்ள தோட்டிகளில் கையை மேலே காண்பித்தால் தொட்டியின் மூடி திறந்து கொள்ளும். குப்பைகளை முறத்திலிருந்து கொட்டியவுடன் மூடிக் கொள்ளும்.

ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு, தகவல் தரும் தொழில்நுட்ப உத்திகள், ஸ்கேனிங், வயர்லெஸ் ஆபரேஷன் நடைமுறைகள் என அத்தனையும் கொண்டுள்ள வீடுகள், ஹோட்டல்கள் அடங்கியது சியோல்.

இதெல்லாம் உண்மை தானா என்று ஆராய ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க எழுத்தாளரான கேரி ஷ்டின்கார்ட் (Gary Shteynngart)  அங்கு சென்றார். பல விருதுகள் பெற்ற பிரபல எழுத்தாளரான அவர் சியோலை நன்கு பார்த்த பின் அதை செயற்கை அறிவின் தலைநகரம் என்று சொல்லிப் புகழாரம் சூட்டி விட்டார்.

தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்கள்

இதையெல்லாம் எப்படி நம்புவது என்று அவரைப் போலவே திகைக்கும் அனைவரும் தென்கொரிய தொலைக்காட்சி சீரியல்களை வீட்டில் இருந்த இடத்திலிருந்தே பார்த்தால் போதும். க்ராஷ் லேண்டிங் ஆன் யூ, ஸ்டார்ட் அப், மேரியேஜ் காண்ட்ராக்ட்,39 உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நினைத்த உயரத்திற்கு பட்டனை அமுக்கினால் உயரும் கணினி டேபிள், இரண்டாக மடியும் செல் போன், அதைத் திருப்பினால்  கணினியாக மாறும் அதன் வடிவமைப்பு, எந்தக் கேள்வியைக் கேட்டாலும் உடனே பதில் அளிக்கும் வாய்ஸ் அஸிஸ்டண்ட் கருவி என்பன உள்ளிட்ட பல சாதனங்களை மிக சாதாரணமாகப் பார்க்கலாம். தென்கொரிய சீரியல்களில் செண்டிமெண்டும் உண்டு. தமிழில் உள்ள அம்மா என்ற சொல் தான் தென் கொரிய மொழியிலும்; அதே போல அப்பா என்ற அதே சொல் தான் தென் கொரிய மொழியிலும்! ஸ்க்யுட் கேம் (Squid Game)  என்ற தொலைக்காட்சி சீரியல் உலகினரின் கவனத்தை ஈர்க்க, பல்லாயிரம் பேர் அதைப் பார்த்து வருகின்றனர்.

இன்னும் ரொபாட்டுகளின் பயன்பாடு அங்கு அதிகமாகி வருகிறது. லட்சக் கணக்கான டேடா எனப்படும் தரவுகளைக் கொண்டு சியோல் உலகின் முதல் தரமான ஸ்மார்ட் சிடி ஆகப் போகிறது.

இப்படி அதி நவீனமாக உள்ள சியோல் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட ஒரு பழம்பெரு நகரமாகும்.

இங்கு பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:

கையாங்போகுங் அரண்மனை

பண்டைய காலத்தில் கொரியாவை ஆண்ட ஜோஸியன் வம்சத்தில் கட்டப்பட்ட கையாங்போகுங் அரண்மனை அனைவரையும் ஈர்க்கும் பிரம்மாண்டமான நான்கு வாயில்களைக் கொண்ட அரண்மனை.

நம்சென் டவர்

சியோல் நகரின் முக்கிய கவர்ச்சி நம்சென் சியோல் டவர் ஆகும். நம்சென் மலையின் மீதுள்ள இது ஆண்டுக்கு 120 லட்சம் பயணிகளை ஈர்க்கிறது. கேபிள் கார் மூலம் உச்சியை அடைந்து அங்கிருந்து சியோல் நகரைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி. பல்வேறு படங்களில் இடம் பெற்ற கோபுரம் இது. கடல் மட்டத்திலிருந்து 479.7 மீட்டர் உயரம் உள்ளது இது.

இன்னும் இரு வானளவிய ஸ்கைஸ்க்ரேபர்கள் இங்கு உள்ளன. 123 அடுக்குமாடிகள் உள்ள லோட்டே வோர்ல்ட் டவர் 555 மீட்டர் உயரம் உள்ளது. 63 ஸ்குயர் என்ற கட்டிடம் 249 மீட்டர் உயரம் உள்ளது.

பக்ஹான் ஹனாக் கிராமம்

பாரம்பரியமான கட்டிடங்களைக் கொண்டுள்ள பக்ஹான் ஹனாக் கிராமம் 600 வருடங்களுக்கு முன்பு உருவான ஒரு கிராமம். பார்க்க வேண்டிய ஒரு இடம் இது. இதன் அருகில் உள்ள சியாங்கே நீரோடைக்குச் சென்று ஓய்வெடுப்பதோடு உணவையும் முடித்துக் கொள்ளலாம்.

நம்டாமுன் மார்கெட்

10000 கடைகள் உள்ள மார்கெட் நம்டாமுன் மார்கெட்டில் கிடைக்காத பொருளே இல்லை. துணிகள், மேக் அப் சாதனங்கள், உணவு வகைகள் என்று அனைத்தும் கொண்ட இது தென் கொரியாவின் மிகப் பெரிய சந்தையாகும். 1414இல் தொடங்கிய இந்த சந்தை பழம் பெரும் சந்தை என்ற பெயரைப் பெற்ற ஒன்றாகும்.

போங்குன்ஸா ஆலயம்

புத்த மத துறவியான யான் ஹோ என்பவரால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆலயம் போங்குன்ஸா ஆலயம். இந்த ஆலயத்தில் அற்புதமான கலை அம்சங்களைப் பார்த்து மகிழலாம். இங்கு தங்குவதற்கான ஒரு விசேஷ ஏற்பாடும் உண்டு. புத்த மத துறவியைப் போல ஆடை அணிந்து இங்கே ஒரு நாள் தங்கி ஆன்ம பலத்தை அடைய வழி வகுக்கும் திட்டம் இது. இங்குள்ள துறவிகளைச் சந்தித்து அவர்களுடன் பேசி யார் வேண்டுமானாலும் ஆன்மீக சம்பந்தமான தங்கள் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம்.

டீ ஹவுஸ்

சியோல் வந்தவர்கள் அருகில் உள்ள இன்ஸாடாங் சென்று டீயை அருந்தாமல் திரும்ப முடியாது. பாரம்பரியமான தேநீரை அதற்குரிய தனிச்சுவையுடன் தர, அதை அருந்துவதில் தான் தேநீர் மகிழ்ச்சி உள்ளது.

நார்யாங்ஜின் மீன் சந்தை

தென் கொரியா கடல் உணவு வகைகளுக்கான தனிப் புகழ் பெற்றது.  நார்யாங்ஜின் மீன் சந்தையில் மட்டும் 700 கடைகள் உள்ளன. வகை வகையான கடல் வகை உணவுகள் சமைத்து பரிமாறப்படும் இந்த சந்தையில் அதிகாலையில் சந்தை ஏலம் உண்டு. அதைப் பார்க்கவும் கூட்டம் கூடும்.

பக்ஹான்ஸன் தேசிய பூங்கா

பக்ஹான்ஸன் தேசிய பூங்கா 1300 வகையான தாவர வகைகளைக் கொண்டுள்ள ஒரு அரும் பூங்கா ஆகும்.

இன்னும் மாஜிக் ஐலேண்ட், பான்போ பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான இடங்களை நாம் அங்கு தங்கி இருக்கும் காலத்திற்கு ஏற்றபடி திட்டமிட்டுப் பார்க்கலாம்.

கொரியாவின் சமீப கால வரலாறு

இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியா 1945, செப்டம்பர் 2ஆம் தேதி ஜப்பான் சரணாகதி அடைந்ததை ஒட்டி தென் கொரியா, வட கொரியா என்று இரண்டாகப் பிரிந்தது. 72 வருடங்களுக்கு முன் வட கொரியாவுடன் போரிட்டு அதன் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக ஆனது. பின்னர் அது பல்வேறு அரசியல் மாற்றங்களைக் கண்டு அறிவியலில் முன்னேற ஆரம்பித்து தற்போது உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

கிழக்காசியாவில் உள்ள நாடான தென் கொரியா 38741 சதுர மைல் பரப்பைக் கொண்டது. ஜனத்தொகை ஐந்து கோடியே பதினைந்து லட்சம். இந்த ஜனத்தொகையில் இருவருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் சியோலிலோ அல்லது அதன் சுற்றுப்புறத்திலோ வசிக்கின்றனர். வயதானவர்களை அதிகமாகக் கொண்டுள்ள நாடு இது. அத்துடன் உலகில் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களின் நாடு என்ற பெருமையையும் இது பெறுகிறது.

உலகின் பிளாஸ்டிக் சர்ஜரியின் தலை நகரம் என்று சியோலுக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. அவ்வளவு பேரும் இளமையாக இருக்கலாம்! கண் இமைகளுக்கு சர்ஜரி, தொங்கும் கழுத்துகளுக்கு சர்ஜரி, தோலை பளபளப்பாக்கும் ஊசி – இப்படி உடலை இளமையாக்கும் விந்தைகள் இங்கு  மட்டுமே உண்டு!

ரோபோ நாடு

உலகின் அதி சிறந்த ரோபோ இருக்குமிடம் கொரியாவின் அட்வான்ஸ்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கட்டிடத்தில்.

அதன் பெயர் ஹ்யூபோ! (Hubo)!

ரொபாட்டுகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து பார்த்தால் இது ஐந்தாம் தலைமுறை ரோபோவாகும். இலேசு ரக விமானத்தை உருவாக்கும் அலுமினியத்தால்   உருவாக்கப்பட்டு   வெள்ளி போல ஜொலிக்கும் ஹ்யூமனாய்ட் தான் ஹ்யூபோ. இதன் உயரம் ஐந்து அடி, எடை 200 பவுண்டு.

அதற்கு இரண்டு கைகள்,இரண்டு கால்கள் உண்டு. தலைக்குப் பதிலாக  அதி நவீன லேஸர் தொழில்நுட்பம் அடங்கிய ஒரு காமராவும் உண்டு. ஒவ்வொரு கணத்திலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முப்பரிமாணத்தில் அறியும் சக்தி கொண்டது அது   

உலகின் தலை சிறந்த ரொபாட் எது என்பதற்கான போட்டி ஒன்று 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

   தென்கொரியாவின் கொடியை தனது பின்னால் ஏந்திக்  கொண்டிருக்கும் ஹ்யூபோ செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ள படிக்கட்டுகளின் மீது சர்வ சாதாரணமாக ஏறுகிறது.  அதன் கேமரா, படியை ஸ்கேன் செய்கிறது. தவழும் சின்னக் குழந்தை போல அது ஒவ்வொரு படியாக ஜாக்கிரதையாக ஏறுகிறது.

மற்ற ரொபாட்டுகள் எல்லாம் கீழே விழுந்த நிலையில்  ஹ்யூபோ மட்டும் அனைத்துத் த்டைகளையும் வென்று முன்னேறியது ஹ்யூபோ ஜாக்கிரதையாக காரை ஓட்டுகிறது.எதிரே உள்ள சாலையை நன்கு ஸ்கேன் செய்கிறது.  கதவைத் திறக்கிறது. வால்வைத் திறந்து மூடுகிறது.

இதையெல்லாம் செய்து காட்டி, இறுதியில் போட்டியில் வென்றது ஹ்யூபோ தான்!

இதனால் தென்கொரியாவை உலக நாடுகள் புதிய பார்வையுடன் பார்க்க ஆரம்பித்தன.

தமிழகத்தில் உள்ளோர், குறிப்பாக 14 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள், இளைஞர்கள் தென் கொரியாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

முடிந்தவர்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு அங்கு சென்று பார்த்து உத்வேகத்தைப் பெறலாம். தமிழ்கத்தையும் உலகின் தலை சிறந்த முதல் தரமான அறிவியல் நகரமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளலாம்.

தென் கொரியப் பயணம் மனதிற்கு உற்சாகம் தரும் பயணம் மட்டும் அல்ல; அறிவியல் சிகரத்தில் நம்மை ஏறவைக்கும் ஒரு பயணமாகவும் அமையும்!

குமாவோ! (கொரிய மொழியில் நன்றி என்று பொருள்!)

***

tags- கொரிய மொழி, தென்கொரியா

உப்பு வேண்டுமா? வேண்டாமா? (Post No.11,050)- Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,050

Date uploaded in London – –    25 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ , ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பன போல குறைந்தது உப்பு பற்றிய 30 பழமொழிகளை , பழமொழி புஸ்தகங்களில் காணலாம். இதைச் சொன்னவுடன்  உடலுக்கு உப்பு தேவையா, இல்லையா? என்ற கேள்வி எழும். உப்பு என்பதன் விஞ்ஞானப் பெயர் சோடியம் குளோரைட் (SODIUM CHLORIDE). அதாவது சோடியம், குளோரின் என்ற மூலகங்களால் (தனிமங்களால்) உண்டான கூட்டுப்பொருள் (COMPOUND).

இன்று சோடியம் என்ற தனிமம் குறித்து விரிவாகக் காண்போம்.

முதலில் சோடியம் குளோரைடு (உப்பு) பற்றி சுவையான செய்திகளைக் காண்போம்.உப்பு சாப்பிட்டால் உடலுக்கு கெடுதி என்று கருதி நியூயார்க் நகரிலுள்ள எந்த உணவு விடுதியிலும் சாப்பாடு  மேஜையில் (டைனிங் டேபிள் ) உணவு, மிளகுப் பொடி பாட்டில்களை வைக்கக்கூடாது என்று அந்த நகர மேயர் உத்தரவிட்ட செய்தியைப் படித்திருப்பீர்கள். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செய்தி.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் 15 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருப்பதால் மேயர் ப்ளூம்பெர்க் (MAYOR BLOOMBERG)  இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகவும் சோடியம் குறைந்த உணவு உடலுக்கு நல்லது என்று அவர் சொன்னதாகவும் பத்திரிகைகள் எழுதின.ஆயினும் லண்டன் போன்ற நகரங்களில் உணவு விடுதிகளில் இன்றும் சாப்பாட்டு மேஜைகளில் உப்பு குப்பியும் மிளகுப்பொடி குப்பியும் (salt and Pepper Cellars) உள்ளன.

உணவில் உப்பு இருப்பது பற்றி எதிரும் புதிருமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய கோவிட் வைரஸ் உலகையே தலைகீழாக மாற்றிவிட்டது உப்பு சாப்பிடாத நியூயார்க்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிட் வைரஸ் தாக்கி இறந்தனர். இதற்கு அவர்களுடைய ரத்த அழுத்தம் (High Blood Pressure) காரணமா, போதை பொருள் உபயோகம் காரணமா அல்லது உப்பு குறைந்த உணவு காரணமா என்ற கேள்விகள் எழும். இனிமேல்தான் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரும். வழக்கம்போல உப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.

இதை விட சுவையான செய்தியைக் காண்போம். உலகில் அதிகமான வயதான மக்கள் (old people) வசிப்பது ஜப்பான் நாட்டில்தான். நீண்ட வாழ்க்கை  வாழும்(Longest Life span)  மக்கள் உடைய நாடும் ஜப்பான்தான். அவர்கள்தான் அதிகமாக உப்பு உபயோகிக்கின்றனர் . அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடந்த 20 ஆண்டுகளில் எடுத்த சர்வே முடிவுகளும் எதிரும் புதிருமாகவே உள்ளன. உப்பினால்  மரணம் குறையும் என்றும், உப்பினால் சாவுகள் அதிகரிக்கும் என்றும் அவை காட்டின.

அப்படியானால் என்னதான் முடிவு?

ஒவ்வொருவரின் உடல்வாகு, பிறந்தது முதல் அவர்கள் சாப்பிடும் பொருட்கள் , மற்றும் அப்போதுள்ள நோயின் வீரியம் ஆகிய எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டால் சரியான முடிவு கிடைக்கும்.

உதாரணமாக உங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருந்து, மருத்துவர்கள் அதற்கான ரத்த பரிசோதனை செய்து, உப்பைக் குறையுங்கள் என்று சொன்னால் அவர் சொல்லுவதைக் கேட்க வேண்டும். அவருடன் விதண்டாவாதத்தில் இறங்கக்கூடாது.

எங்கள் வீட்டிலும் ஒரு வாக்கு வாதம் நடந்தது. ஒரு முறை விருந்தினர்கள் வந்தபோது ‘சாப்பாட்டில் உப்பு’ என்பது பற்றி பேச்சு திரும்பியது. “ஆமாம், ஆமாம், காய்கறிகளிலேயே உப்பு இருக்கிறது. தனியாகச் சேர்க்க வேண்டியது இல்லை” என்று ஒருவர் வாதாட, சாப்பிட வந்த விருந்தினர் சொன்னார், “நீங்கள் ஒன்று ! என் தாத்தா கைப்பிடி உப்பை அள்ளி சாப்பாட்டில் போட்டுக் கொள்வார். இன்றுவரை ஒரு வியாதியும் இல்லை. மருந்தும் சாப்பிட்டுவதில்லை” என்றார் . (அவர் பூர்வ ஜென்மத்தில் ஜப்பானில் பிறந்தவர் போலும்!)

உலகம் முழுதும் இயற்கை ஆர்வலர்கள் குரல் எழுப்பி, (Ban on Whale Hunting) திமிங்கில வேட்டைக்குத் தடை அல்லது கட்டுபாடு விதித்தும் கூட இன்றும் ஆராய்ச்சிக்காக திமிங்கிலம் பிடிப்பதாகச் சொல்லி ஜப்பானியர்கள் திமிங்கிலத்தைப் பிடித்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த உப்புக் கண்ட கடல் உணவுதான் அவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது போலும் !

xxx

நிற்க . சோடியம் குளோரைடை (உப்பை) ஒதுக்கிவிட்டு சோடியத்துக்கு வருவோம். நாம் கண்டறிந்த 118 மூலகங்களில் சோடியம் (Sodium) என்பது உடலுக்கு இன்றியமையாத ஒரு (element) தனிமம். முதலில் உயிரினங்கள் உப்பு நீர்க் கடலில் தோன்றின என்பதை நினைத்தால் இதன் பயன் எப்படிப்பட்டது என்பது புரியும்.. நமது உடலில் சுமார் 100 கிராம் சோடியம் உள்ளது. இதுவும் பொட்டாசியமும் ரத்த அழுத்தத்தையும் செல் களுக்கு இடையேயான அழுத்தத்தையும் (Blood Pressure and Osmotic pressure) கட்டுப்படுத்துகின்றன. நரம்புகள் வழியாக மின்சார துடிப்புகளை எடுத்துச் செல்கின்றன (movement of electrical impulses along nerve fibres) . இந்தப் பணியை சோடியமும் பொட்டாசியமும் செய்கின்றன. சோடியம் அணுக்கள் செல்களுக்குள் சென்றவுடன் வெளியே தள்ளப்படும் பின்னர் பொட்டாசியம் தன் வேலையைச் செய்யும். இதை சோடியம் பம்ப் (sodium Pump)  என்பர். நமது உடலில் உள்ள சக்தியில் 40 சதவிகிதம் இந்த சோடியம் பம்ப் வேலைக்குப் போய்விடுகிறது!

வேர்வை, சிறுநீர் முதலியன வழியாக நிறைய சோடியம் வெளியேறுவதால் நமக்கு உடலில் சோடியம் தேவைப்படுகிறது.  ஆனால் நிறைய உப்பு சாப்பிட்டால் வாந்தி முதலியன ஏற்படும்.

ஒருவர் வாழும் பண்பாடு, மற்றும் தனி நபரின் ருசியைப் பொறுத்து சோடியத்தின் தேவை 2 கிராம் முதல் 20 கிராம் வரை மாறுபடுகிறது. காய்கறி முதலிய இயற்கை உணவுகளில் இருந்து 3 கிராம் கிடைக்கிறது. அதற்கு மேல் நாமாக உணவில் போடும் உப்பு மூலமும் சோடியம் கிடைக்கிறது. சிலவகை கடல் வாழ் மீன்கள் (Tuna Sardines) , முட்டை, ஊறுகாய்  மூலம் அதிகம் கிடைக்கும். ஜப்பானியர்கள், கடல் வாழ் உயிரினங்களை அதிகம் சாப்பிடுவதால் அவைகளை பதப்படுத்த சேர்த்த உப்பும் சேர்ந்து மற்ற இன  மக்களை விட  இரு மடங்கு சோடியம் பெறுகிறார்கள் 

மனிதர்களுக்கு உப்பு ருசி தேவைப்படுவது போல காட்டில் வாழும் மிருகங்களுக்கும் கூட உப்பு ருசி தேவைப்படுகிறது. இதனால் அவை உப்புள்ள பாறைகளை நக்கி, இன்பம் பெறும். வனப் பாதுகாவலர்கள் பிராணிகளுக்கு உப்பு கலந்த மண்ணைப் போடுவதும் உண்டு

கடல் உப்பு போல நிலத்தில் இருந்தும் உப்பு கிடைக்கிறது

மருத்துவத்தில் சோடியம்

சோடியம் குறைந்தால் நரம்புப் பிடிப்பு, சதை பிடிப்பு ( cramps, muscular spasms) ஏற்படும். உடலில் சென்ற விஷம் முதலியவற்றை வெளியே (emetic) கக்க வைக்க உப்பு நீர் பயன்படுகிறது. ஆயினும் சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள் இருந்தால் சோடியம் உள்ள (குறிப்பாக உப்பு) உணவு வகைகளை சாப் பிடாதீர்கள் என்று டாக்டர் ஆலோசனை கூறுவார் .உப்பை வெளியேற்ற முடியாமல் உடல் திணறுகையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது பிற நோய்களுக்கு வழிவகுக்கும்.. அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்து டாக்டர் ஆலோசனை வழங்குவார் . இதில் 3 வகை உண்டு. (Low salt, No salt, Salt free) உப்பே கூடாது, இயற்கையில் காய்கறிகளில் உள்ள உப்பு மட்டும் போதும், அல்லது டேபிள் சால்ட் போன்றவற்றையோ உப்புள்ள பிஸ்கட் , வறுவல் ஆகியவற்றையோ சாப்பிடக் கூடாதென்று டாக்டர் சொல்லுவார். அதை அப்படியே பின்பற்றுவது நோய் குறைய உதவும்.

உயிர் காக்க உதவும் ஒரு அமிர்தம் உப்பு என்றும் சொல்லலாம். வெப்ப மண்டல நாடுகளில் வயிற்று ப் போக்கு ஏற்பட்டு லட்சக் கணக்கான குழந்தைகள் இறக்கின்றன. தொடர்ந்து வயிற்று ப் போக்கு ஏற்பட்டால், உடலில் இருந்த நீர் எல்லாம் வெளியேறி உடலில் நீரற்ற வறட்சி (dehydration) ஏற்படும். அந்த நேரத்தில் உப்பு கலந்த குளுக்கோஸ்(Glucose)  ஏற்றி உயிரைக் காப்பாற் றுகிறார்கள் . அப்போது உடலில் ஏற்றும் திரவத்தில் பொதுவாக 20 கிராம் குளுக்கோஸ், 2 கிராம் உப்பு, 3 கிராம் சோடியம் சிட்ரேட், 1-5 கிராம் பொட்டாசியம் குளோரைடு இருக்கும்.

தொடரும்…..

tags-உப்பு, சோடியம், சோடியம் குளோரைடு, மருத்துவப் பயன், குளுக்கோஸ்

NAGAS AND DRAVIDIAN KINGS DEFEATED BY SAMUDRA GUPTA -2 (Post No.11,049)

Indus Valley Snake Goddess

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,049

Date uploaded in London – –    25 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

NAGAS AND DRAVIDIAN KINGS DEFEATED BY SAMUDRA GUPTA -2 (Post No.11,049)

Dr T V Mahalingam of University of Madras has written an article titled ‘SOME NAGA DYNASTIES OF DECCAN’ in the Professor P.Sundaram Pillai Commemoration Volume, Saiva Siddhantha Publishing Society, Tirunelveli, 1957.

Following are some interesting points about the Nagas of South India from the volume: –

Nagas became powerful from sixth century AD ( CE). They enjoyed considerable political power between 10th and 12th centuries (CE).

xxx

The Sendrakas

Ruled Bombay and Mysore states- 5th, 6th, centuries- Feudatories of Kadampas and Chalukyas- Lineage of Bhujagendras.

xxx

The Senavaras

Jain family of Rulers- Kadur and Shimoga of Karnataka- 690 CE-  period of Aluva king Chitravahana and Vinayaditya- references up to 1128 CE available.

(My comments- One of the Tamil commentators name is Senavaraiyar. Was he a Naga??)

xxx

The Sindas

Deccan – 11,12,13th centuries- Tiger and deer emblems- Sindas of Bhagalkot: Nagavamsa founder Sinda Dharaneendra born at Ahichatra in the Sindhu/ Indus area. (Though it is in modern Uttar Pradesh, it was the capital of Northern Punjab; mentioned even in Mahabharata)

Sindas of Yelburga: 11,12, 13th centuries

Sindas of Belagavati: from Chitradurga and Shimoga areas of Karnataka

(Nagas may have come from Sindhu Desa / Indus Valley; Vedas have reference to snake queen; Indus has snake seals)

Xxx

Nagas of Bastar

They are from Madhya Pradesh- born in Kashyapa gotra- Tiger emblem- Snake Flag- 1000 CE- Maasuni Desa.

(In Tamil Masunam means python)

(It is interesting to note that Duryodhana also had Snake Flag. His father’s name Dhritarashtra is also a Naga Name! any connection with Nagas??)

Xxx

An article titled ‘NEMESIS AND SOME MAHABHARATA EPISODES’, M A Mehendale in Professor R N Dandekar volume , 1984, gives the details about Khandava Vana burning in the Adi Parvan of Mahabharata. Krishna and Arjuna burnt the Khandava Vana and only seven people escaped: Naga Taksaka, his son Asvasena, four young birds (sarngas). The forest was burning for six days. They did it for farming. It was a common practice of ancient rulers to burn forests to reclaim lands for farming and new buildings. Even Tamil Kings had the epithet’ Kadu Thiruththi Naadu Akkiya’ = Those who changed forests into living places.

Tribals are warned to vacate; but birds and animals died. Is it right or wrong is an ongoing debate. When new dams are built or new roads are laid in the elephant’s corridor/paths, lot of deaths happen. But those who go for it argue, we need it for development.

Four Sarnga Birds- The birds escaped from forest are not birds , but people with bird totem, according to some scholars. We have Jatayu (people with eagle emblem and Jambhavan (people with bear emblem in Ramayana)

Xxx

Nagas in Rajatarangini of Kalhana of Kashmir

Kalhana narrates an interesting story of a Brahmin meeting two Naga beauties and marrying one of them. R S Pandit, who translated the work, adds the following in the foot note: Verses 201 to 279 of first chapter of Rajatrangini narrates the legend of Chandralekha- the lady of the crescent moon. Kalhana picks this out of many stories relating to the Nagas from the ancient folk lore of Kashmir.

The Nagas, the semi divine beings, are according to legend, the original inhabitants of Kashmir. Their dwelling places are the lakes, springs, pools of water. In the heavens they appear as clouds and rain torrents of water and cause hail storms. The word Naga survives this day in Kashmir in various place names and commonly used for a spring in the form of a doublet- Caima Naga- half Perssian and half Samskrta.

The 79 verses in Sanskrit confirm many things about Nagas found elsewhere. They live in water. They wear blue clothes. It is in 2000 year old Sangam Tamil literature as well. The slokas give the origin of Amarnath Yatra, where we see the natural formation of Shiva linga in ice.

Taksaka Naga

Taksaka Naga was the one escaped from Khandava Vana burning. Foot note for sloka 220 adds-

The Taksaka Naga is worshipped to this day. The sacred spring is at Zevan (Jayavana in Sanskrit) about five miles from Sri Nagar.

Sloka 267 refers to Amaranatha Yatra

Sloka 268 has the following foot note:

On the route of the pilgrimage to the Amaranatha on the mountain top there is a lake which according to legend is Susravas, it is called Sesanag now. The colour of the water is white. There is another lake popularly called Zamatur Nag- the Jaamaatr lake of Kalhana-  which means the lake of the son in law in Sanskrit.

My comments

Blue colour cloth is associated with the Nagas in Tamil and Sanskrit literature.

The name Kallada found in Tamil literature and Rajatarangini is a Naga name. He was also from Kashmir like Tirumular of Tirumantiram

Nagas were devotees of Lord Siva

They had the same names throughout India , mostly with CHITRA (painted figures); the reason being they had tattoos of snakes on their bodies (Oviyar Clan in Tamil).

They lived near water sources such as lakes, tanks and rivers and oceans.

Xxx

Neela Nagan in Tamil literature

Sirupaanaatrup patai is a Sangam Tamil book, where Ay is praised a great philanthropist. Ay Andiran was a chieftain of the Western Ghats who was considered one of the Seven Last Philanthropists. He is praised thus because he donated the rare and valuable cloth given by Neela Nagan to Lord Shiva. He was praised sky high in Purananuru by the Brahmin poet Mudamosiyar.

The verses in Sangam literature also confirmed

Blue colour Nagan- Neela Nagan

They are famous for their beautiful clothes with flower designs.

They lived in Tamil Nadu and Sri Lanka 2000 years ago (I have already given the names of Nagas from Mahavamsa. They ruled parts of Sri Lanka 2200 years ago. Twenty ancient Tamil poets have Nagan suffix; Maruthan Ilanagan was the most famous of them)

Though Ay Andiran is praised as a Velir clan king, my research shows Ay Andiran is Ajendran. He married many women and all of them committed Sati when he died according to Purananuru. His wives wore Thaali (Mangala sutra) only because he donated everything he had to the poets and bards except that Mangala sutra. When he died, Indra loka played orchestra to welcome him according to Pura Nanuru, oldest book of Sangam Tamil corpus.

Andiran= Andrew= Ayndiran= Indra

Ay = Aja (used for Brahma, Siva and unconquerable king in Sanskrit. Aja was one of the Raghu Vamsa kings; forefather of Lord Rama)

Xxx

Mani Nagan and other names are in Gatha Sapta Sati.

The names found for Snakes in Paramapatha Sopana Picture- Board game of South India are:-

Dhrtarashtra, Takshaka,, Karkodaka, Duryodana etc

xxx

Read also my articles:

Serpent Queen:Indus Valley to Sabarimalai – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2012/06/17 › serpent-quee…

17 Jun 2012 — The famous serpent queen figure is of a priestess holding two snakes in her two hands. The same motif is found throughout in India from Vedic …

Snakes and Snake Bites in Mahabharata! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2015/03/snakes-and-snake-bites-in-mahabharata.html

  1.  

10 Mar 2015 – The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came ..

included the Olmec, the Mixtec, the Toltec, the Aztec, and the Maya.

snake miracle | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/snake-miracle/

  1.  

 (for old articles go to tamilandvedas.com ORswamiindology.blogspot.com). sesha … Though there is no religion or culture without a snake in it, Hindus are the only community who worship snakes from the Vedic days until today. There are millions of … All the Hindu gods are linked with a snake in one way or another. All the .

Are Mayas, Indian Nagas? | Tamil and Vedas

  1.  
  2.  

28 Apr 2012 – Maya calendar begins on 11th August 3114 BC. Indiancalendar Kaliyuga begins in 3102 BC. But Hindu mythology is very clear about their existence long before Kali yuga. Kaliyuga is the last of the four yugas. But Mayas are silent about their existence before this date 3114 BC. The amazing co incidence …

Amazing Similarities between Mayas and Hindu Nagas | Tamil and …

https://tamilandvedas.com/…/amazing-similarities-between-mayas-and-hindu-nagas/

  1.  
  2.  

28 Apr 2012 – Amazing Similarities between Mayas and Hindu NagasAmazing Similarities between Mayas and Hindu Nagas ( The first part of this article is Are Mayas, Indian Nagas?) 1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC 2. Maya appearance:Maya people of Central America …

Naga Yakshi | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/naga-yakshi/

  1.  

We have Nagapanchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resorces to the minimum. Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent …

Gondwana | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/gondwana/

  1.  

They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami. Like any other village community they have their own stories for everything. They are well versed in arts and building. They have divided themselves into four different castes lie the four divisions of work in ancient Hindu society. They form the biggest tribe …

More articles about Manasa devi etc are in my blogs.

–subham–

 Tags- Nagas, Neela Ngan, Ay Andiran, Blue cloth, Snake flag, Taksaka, Nagas in Rajatarangini, Kashmir, Kalladar

செப்பு மொழிகள் இருபத்தொன்று! (Post No.11,048)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,048

Date uploaded in London – –    25 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

செப்பு மொழிகள் இருபத்தொன்று!

ச.நாகராஜன்

  1. Statistics are like a bikini. What they reveal is suggestive, but what they conceal is vital.

Aaron Levenstein 1911-1986 American Academic attributed

புள்ளி விவரம் ஒரு பிகினியைப் போன்றது. அது காட்டுவது ஊகத்திற்கு உட்பட்டது. அது மறைத்திருப்பதோ முக்கியமானது!

  • Asked what it was like to kiss Marylene Manroe : It is like kissing Hitler!

 Tony Curtis -1925-2010 American Actor

மர்லின் மன்ரோவை முத்தமிடும் போது எப்படி இருந்தது என்று அமெரிக்க நடிகர் டோனி கர்டிஸைக் கேட்ட போது அவர் கூறியது:

“ஹிட்லரை முத்தமிடுவது போல இருந்தது!”

  • During the making of Lifeboat in 1944, Mary Anderson asked Hitchcock what he thought her ‘best side’ for photography was : ‘My dear, you are sitting on it’.

Alfred Hitchcock 1899-1980 British born film Director

ஹிட்ச்காக்கை மேரி ஆண்டர்ஸன் லைஃப் போட் என்ற படத்தை எடுக்கும் போது, ‘போட்டோ எடுக்கும் போது தனது அருமையான அங்கம் எது’ என்று கேட்டார்.

உடனே ஹிட்ச்காக், “டியர், அதன் மீது தான் நீ உட்கார்ந்திருக்கிறாய்!” என்றார்.

  • I have not failed. I have just found 10000 ways that won’t work.

Thomas Alva Edison, 1847-1931 American Inventor

அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிஸன் கூறினார் : “நான் தோல்வி அடையவில்லை. செயல்படாத 10000 வழிகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவு தான்”

  • There cannot be a crisis next week. My schedule is already full.

Henry Kissinger B: 27-5-1923-  American Politician

“வரும் வாரம் ஒரு நெருக்கடியும் ஏற்படாது. வரும் வாரத்திற்கான எனது ஷெட்யூல் ஏற்கனவே முடிந்து விட்டது” என்றார் ஹென்றி கிஸ்ஸிங்கர்!

  • Cricket is basically baseball on valium.

Robin Williams 1951-2014  American Actor

வாலியம் போட்டுக் கொண்டு பேஸ் பால் ஆடினால் அது தான் கிரிக்கட்!

  • The covers of this book is too far apart!

Ambrose Bierce 1842-1914 American Writer

இந்த புத்தகத்தின் முன் அட்டையும் பின் அட்டையும் வெகு தூரத்தில் இருக்கிறது!

  • Biography should be written by an acute enemy.

Arthur James Balfour  1848-1930  British Conservative Statesman

வாழ்க்கைச் சரித்திரம் ஒரு கடும் எதிரியால் தான் எழுதப்பட வேண்டும்!

  • The Art of Biography

Is different from Geography

Geography about maps

Biography about Chaps.

Edmund Clerihew  Bentley  1875-1956 English Writer

வாழ்க்கைச் சரித்திரம்

பூகோளத்தை விட வித்தியாசமானது

பூகோளம் வரைபடம் சம்பந்தமானது

வாழ்க்கைச் சரித்திரமோ ஆட்களைப் பற்றியது!

10) You may easily play a joke on a man who likes to argue – agree with him!

E.W.Howe  1853-1937 American Novelist

எப்போதும் எதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டே இருப்பவரைத் தோற்கடிக்க ஒரு வழி உள்ளது; ஏற்அவர் சொல்வதை உடனடியாக ஆமோதிப்பது தான் அது!

  1. Age is a question of mind over matter.

If you don’t mind, it doesn’t matter.

Leroy (‘Satchel’) Palge 1906-1982 American Baseball Player

வயது என்பது அந்த மேட்டரைப் பற்றி மைண்ட் கூறுவது;

அதை மைண்ட் செய்யவில்லை எனில் அது மேட்டரே இல்லை!

  1. For an actress to be a success, she must have the face of a Venus,

The brains of a Minerva,

The grace of Terpsichore,

The memory of Macaulay,

The figure of Juno,

And the hide of a rhinoceros.

Ethel Barrymore 1879-1959. American Actress

ஒரு நடிகை வெற்றிகரமானவளாக இருக்க வேண்டுமெனில்

அவளுக்கு வீனஸ் போன்ற முகமும்

மினர்வாவின் மூளையும்

டெர்ப்சிசோரின் நளினமும்

மெக்காலேயின் நினைவாற்றலும்

ஜுனோவின் எழிலும்

ரினோசெரஸின் ஒளிந்திருக்கும் தன்மையும்

வேண்டும்.

பிரபல நடிகை ஈதல் பாரிமோர் கூறியது

13) Now my own suspicion is that the universe is not only queerer that we suppose, but queerer than we can suppose!

J.B.S.Haldane 1892- 1964 Scottish Mathematical Biologist

பிரபஞ்சம் நாம் நினைத்ததை விட விசித்திரமானது ஆனால் எனது சந்தேகம் என்னெவெனில் அது நாம் நினைக்க முடிவதை விட இன்னும் விசித்திரமானது!

14) Every woman should have four pets to her life: a mink in her closet; a Jaguar in her garage, a tiger in her bed and a Jackass who pays for everything.

Paris Hilton 1981-   American Heiress

ஒவ்வொரு பெண்மணியும் நான்கு செல்லப்பிராணிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

அலமாரியில் ஒரு நரி, காரேஜில் ஒரு சிறுத்தை, படுக்கையில் ஒரு புலி, அனைத்திற்கும் பணம் கொடுக்க ஒரு ஆண் கழுதை!

15) An atheist is a man who has no invisible means of support.

John Buchan 1875-1940 Scottish Novelist

ஒரு நாத்திகன் என்பவன் மறைமுக ஆதரவு இல்லாத ஒருவன்!

16) Thanks to God; I am still an atheist.

Luis Bunuel 1900-1983 Spanish Film Director

கடவுளுக்கு நன்றி! நான் இன்னும் ஒரு நாத்திகனாகவே இருக்கிறேன்!

17) Atheism is a non-prophet organization

George Carlin 1937-2008 American Comedian

நாத்திகம் என்பது லாபமில்லாத (தீர்க்கதரிசி இல்லாத) ஒரு நிறுவனம்!

18) Every woman should marry an archaeologist because she grows increasingly attractive to him as she grows increasingly to resemble a ruin.

Agatha Christie  1890-1976 English Writer

ஒவ்வொரு பெண்மணியும் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளரைக் கல்யாணம் செய்து  கொள்ள வேண்டும். நாள் ஆக ஆக அவள் அவனுக்கு கவர்ச்சியாக இருப்பதோடு இன்னும் அதிக வருடம் ஆகும் போது சிதிலமடைந்த ஒரு பழைய காட்சிப் பொருள் போல இருப்பாள்!

19) Mark Twain about Heaven and Hell

I have friends in both places.

Mark Twain 1835-1910 American Writer

மார்க் ட்வெயின் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிக் கூறினார் இப்படி; “எனக்கு அந்த இரண்டிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்!”

20) Twenty-four hour room service generally refers to the length of time that it takes for the club sandwich to arrive.

Fran Lebowitz 1946-  American writer

24 மணி நேர ரூம் சேவை என்பது நமக்கு க்ளப்பில் சேண்ட்விச் வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொதுவாகக் குறிப்பிடும் ஒன்றாகும்.

21) There was a young lady named Bright,

Whose speed was far faster than light,

She set out one day,

In a relative way,

And returned on the previous night.

Arthur Buller  1874-1944 British Botanist and mycologist

அந்த இளம் பெண்ணின் பெயர் ப்ரைட்

அவளது வேகமோ லைட் – ஒளியை விட அதிகம்!

அவள் ஒரு நாள் கிளம்பினாள்

ஒப்புவமைத் தத்துவத்தின் படி!

விளைவு,

தான் கிளம்பிய இடத்திற்கு முதல் நாள் இரவே வந்து சேர்ந்து விட்டாள்!

All quotations from Oxford Dictionary of Humorous Quotations by Gyles Brandreth

ஆதாரம் : ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரி ஆப் ஹ்யூமரஸ் கொடேஷன்ஸ் – ஜில்ஸ் ப்ராண்ட்ரெத்

***

Tags- செப்பு மொழிகள், இருபத்தொன்று,