முனிவர்கள் விஞ்ஞானிகளா ? பூமியின் வேகம் எப்படித் தெரிந்தது ?(Post.10,538)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,538

Date uploaded in London – –    7 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்கள் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு .

சதுரங்கம் எனப்படும் CHESS செஸ் விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே என்பதை உலகமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஒரு முனிவர், ஒரு அரசனிடம் சென்று இந்த அற்புதமான விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார். நாள் தோறும் நாற்படைகளுடன் கதைக்கும் மன்னனுக்கு வியப்பிலும் வியப்பு! அன்பரே நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் சிரித்துக் கொண்டே , அப்படி ஒன்றும் அதிகம் வேண்டாம். இதோ நான் கற்பித்த செஸ் போர்டில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு அரிசி, அடுத்தகட்டத்தில் 2, அடுத்த கட்டத்தில் 4 என்று இரட்டித்துக் கொண்டே போங்கள் ; 64 கட்டங்களில் எவ்வளவு அரிசி இருக்குமோ அது போதும் என்றார் முனிவர்.

 பூ இவ்வளவுதானா ! இதோ உடனே தருகிறேன் என்றான் மன்னன்.

முனிவர் மீண்டும் சிரித்தார். 32 கட்டங்கள் தாண்டுவதற்கு முன்னர் அவன் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மூட்டைகளைக் கொண்டுவந்தாலும் போதாது என்பது பல நாட்களுக்குப் பிறகு புரிந்தது.

நீங்களும் 64 கட்டம் உள்ள ஒரு செஸ் போர்டில் முதல் கட்டத்தில் ஒரு பைசா காசு வையுங்கள். பின்னர், 2, 4, 8, 16 என்று அதிகரித்துக் கொண்டே போங்கள் . உலக மஹா பணக்காரர் ஆகி விடுவீர்கள் !

XXXX

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 7

அதர்வண வேதம் (அ .வே.) பூமி சூக்தத்தில் உள்ள  63 மந்திரங்களில் 16 மந்திரங்களைக் கண்டோம். மேலும் காண்போம். இதோ வேத கால முனிவர்களின் அபார அறிவை விளக்கும் பகுதிகள் :–

மந்திரம் 17

பூமியைத்  தருமமே தாங்கி நிற்கிறது; நாங்கள் அவள் மீது நடக்கிறோம்; அவள் எங்கள் மீது கருணை மழை பொழியட்டும் ; அவள் விளைச்சல் மிகுந்தவள் ; தாவரங்களின் ,மூலிகைகளின் தாய் ; அவள் உறுதியாக நிற்கிறாள்

இந்த அற்புதமான மந்திரம் நமக்கு அரிய பல செய்திகளைத் தருகிறது. இந்த உலகம் நிலை நிற்கக் காரணம் தனக்கென வாழாத மக்கள்  இருப்பதுதான்  என்றும் பழியைக் கண்டு அஞ்சும் மக்கள் இருப்பதால் தான் என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் பாடியது  இந்த வேதக்  கருத்துதான் . வேத கால புலவன் ஒரே சொல்லில் தர்மம், ருதம் என்று அடக்கிவிட்டான். தாவரங்களும் மூலிகைகளும் , விளைச்சலும் மிக்க பூமி என்பதைப் படிக்கையில் பசுமை மிக்க காடுகள் நிறைந்த, இயற்கை வனப்புமிக்க அழகிய பூமியைக் கவிஞன் நம் மனக் கண் முன் காட்டுகிறான்.

மந்திரம் 17

விஸ்வஸ்வம் மாத ரமோஷதீனாம்  த்ருவாம் பூமிம் ப்ருதிவீம்  தர்மணா த்ருதாம்

சிவாம் ஸ்யோனாமனு சரேம விஸ் வஹா –17

Xxx

மந்திரம் 18

பூமாதேவியே , நீ மஹத்தானவள்; உன்னுடைய வேகமும் , நடுக்கமும் குலுங்கலும் மஹத்தானது .. பலம் வாய்ந்த இந்திரன் உன்னைப் பிழையின்றி பாதுகாக்கிறான்.ஓ பூமியே , எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்வாயாகுக. எவரும் என்னை வெறுக்கக் கூடாது

பூமியின் நடுக்கம் என்னும் பூகம்பம் EARTHQUAKE குறித்து சங்கத் தமிழ் பாடல்களிலும் பிற சம்ஸ்க்ருத புஸ்தககங்களிலும் உள . ஆனால் பூமியின் ‘மஹான் வேகம்’ GREAT SPEED என்ற சொல் ஊன்றி ஆராய வேண்டியவிஷயம் .

சைன்டிபிக் அமெரிக்கன் SCIENTIFIC AMERICAN என்ற புகழ்பெற்ற அறிவியல் பத்திரிக்கை சொல்கிறது :–

பூமி அதன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் மணிக்கு 1000 மைல் .

பூமி, பிற கிரஹங்களைப் போலவே சூரியனையும் சுற்றுகிறது. அப்போது பூமியின் வேகம் மணிக்கு 67,000 மைல்.

சூரியன் எல்லா கிரஹங்களையும் துணைக்கிரஹங்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தை வலம் வருகிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 4,90,000 மைல்

எப்படி பூமியின் வேகம் பற்றி அதர்வண வேதப்  புலவன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடினான்? இந்த வேகம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு நான் வியாக்கியானம் செய்யவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள பூமி முதல் எல்லாவற்றுக்கும் வடிவம் வட்டமே என்று அறிந்து OVAL, GLOBULAR, CIRCLE அண்டம் (முட்டை) என்றும் வானில் சுற்றும் சூரியன், சநதிரன் , குரு ஆகியவற்றுக்கு ஈர்ப்பு விசை இருப்பதை அறிந்து கிரஹ GRIP, GRAB, GRAVITY என்ற சொல்லை பயன்படுத்தினான். எப்படி மிகப்பெரிய கிரகத்துக்கு குரு (வியாழன், ஜுபிட்டர் ) என்று பெயரிட்டான் என்பதை மனைதிற்கொண்டு இதை ஆராய வேண்டும். . முனிவர்கள் மாபெரும்  விஞ்ஞானிகள் !!

இப்போது கடைசி இரண்டு வரிகளைப் பார்ப்போம்.

“எங்களைத் தங்கம் போல ஜொலிக்க வை” என்று புலவன் இறைஞ்சுகிறான். தங்கத்தின் மதிப்பை அறியாதார் உலகில் இல்லை. உலகம் முழுதும் அரசசாங்க வங்கிகளில் ஒவ்வொரு நாடும் குவித்து வைப்பது தங்கக் கட்டிகள்தான் .உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் தங்கம் வருகிறது. ரிக் வேத கால மக்கள் மிகவும் செல்வ செழிப்பில் திகழ்ந்த விவசாயிகள். தானியம், குதிரை, பசு மாடுகள், தங்கம், வீடு, சபை பற்றிய குறிப்புகள் அவர்கள் நாகரீகம் மிக்கவர்கள் , நகர வாழ் மக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரே மந்திரம், இந்திரன் இருபது மன்னர்களை வென்றதாகச் சொல்லி, 5, 6 மன்னர்களின் பெயர்களையும் சொல்கிறது !

சொர்ணம், ஹிரண்யம், என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். 16 வகைத் தானங்களில் ஹிரண்ய தானத்தை தமிழ்க் கல்வெட்டுகளும் செப்புகின்றன. சொர்ணம் என்ற பெயரை இன்றும் பெண்கள் பெயர்களில் காண்கிறோம்.

இதிலுள்ள “மஹா” என்ற சொல் மூலம் ஐரோப்பிய மொழிகளில் மெகா MEGA புகுந்தது.

ஓஷதி என்ற சொல்லை ஓளஷதம் / அவுடதம் என்று இன்றும் தமிழ் மருத்துவ நூல்கள் புகலும் .

கடைசி வரிதான் மிகப் பிரமாதமான வரி !

என்னை யாரும் வெறுக்க வேண்டாம். ராமலிங்க சுவாமிகளும்  ‘திருவருட்பா’வில் இதை இறைவனிடம் வேண்டுகிறார். நான் யாரையும் சீ , நாயே பேயே என்று திட்டக்கூடாது என்று இறைவனிடம் கெஞ்சுகிறார் ; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு” நம்மிடம் இருந்தால் நம்மை யாரும் வெறுக்க முடியாது அல்லவா?

நாம் சிலரைக் கண்டதும் காதல் கொள்கிறோம் . சிலரை காரணம் இல்லாமல் வெறுக்கிறோம். பிள்ளைப் பேறு கூட இல்லாத எம்.ஜி.ஆர் . MGR என்ற நடிகரைக் காண்பதற்காக பல லட்சம் பெண்கள் இரவு மூன்று மணி வரை பொதுக்கூட்ட அரங்கில் காத்திருந்ததை நாம் படித்து இருக்கிறோம். அவரை வீட ஆண் அழகன் உலகில் இல்லையா? இதற்கெல்லாம் ஜாதகமே காரணம். நம் பூர்வ புண்ய பாபம் நம்மை நிழல் போல தொடர்ந்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆக நம்மை வெறுக்காமல் இருக்க நாம் யாரையும் வெறுக்காமல் இருக்கவேண்டும். இதை வள்ளுவன் குறளிலோ , வள்ளளாரின் பாடலிலோ காண்பதில் வியப்பில்லை. பூமி சூக்தத்தின் இடையில் இதை நுழைத்தானே வேதப் புலவன், அவனைத்தான் பாராட்டவேண்டும்

மந்திரம் 18

மஹத் சதஸ்தம்  மஹதீ பபூவித  மஹான் வேக ஏஜதுர்வேபதுஷ்டே

மஹான்ஸ்வேந்த்ரோ  ரக்ஷத்ய ப்ரமாதம்

ஸா நோ பூமே ப்ரரோச்ய  ஹிரண்யஸ்யேவ ஸம்த்ருசி  மா நோ த்விக்ஷத கஸ்சன

  ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        
இயல்பு மென்னிட மொருவரீ
        
திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        
லிடுகின்ற திறமும் இறையாம்
    
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        
னினை விடா நெறியு மயலார்
        
நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        
நெகிழாத திடமு முலகில்


    
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        
தீங்கு சொல்லாத தெளிவும்


        
திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        
திருவடிக் காளாக்கு வாய்
    
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        
தலமோங்கு கந்த வேளே
        
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        
சண்முகத் தெய்வ மணியே– திருவருட்பா

தொடர்ந்து காண்போம் அடுத்த கட்டுரையில் ………..

To be continued……………………

tags-  ஈயென்று நானொரு, முனிவர்கள், விஞ்ஞானி, பூமி,வேகம்

வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 3 (Post No.10,537)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,537

Date uploaded in London – –    7 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

திருப்புகழ்ப் பாடல்களை அடியொட்டி ‘திருப்புகழ் ஞானசச்சிதானந்த வள்ளி கைத்தம்’ எனும் மருத்துவக் குணங்கள் கொண்ட பாடலை இயற்றியுள்ளார். வியாதிகளைக் குணப்படுத்தத் தன்னிடம் எந்தவித விசேஷ சக்தியும் கிடையாது எனவும் தான் வள்ளியின் பாதக் கமலங்களுக்கு அடிமை என்றும் அடிக்கடி கூறுவார். மற்றவர்களுக்குப் பணி செய்வதே தனது தலையாயக் கடமை என்ற உறுதியுடன் இருந்தார்.

திருப்புகழைத் தினமும் குறிப்பிட்ட எந்தப் பாடலுடன் துவக்க வேண்டும் என்பதற்கும் ஒரு வரைமுறை வைத்திருந்தார். ஞாயிறு அன்று ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் துவங்கி அடுத்த சனிக்கிழமை வரை ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் முடிப்பதில் யோக சாஸ்திரக் கலையின் அஸ்திவாரம் காணப்பட்டது. தினமும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட யோக சக்கரம் ஓடுகின்றது என்றும், சனிக்கிழமை அன்று அனைத்து ஆறு சக்கரங்களும் உடம்பில் ஓடுகின்றன எனவும் கூறுவார். விநாயகர் துதியுடன் தொடங்கி,முருகனை வேண்டுதல், அலங்காரம்,அபிஷேகம் என முடியும். திருப்புகழ்ப் பாராயணத் தவநெறி திருமுறை எனும் இதில் ஆறு படை வீட்டின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பாராயணம் முழுவதும் ஆறு யோக சாஸ்திர அடிப்படையில் அமைந்துள்ளது.

சுவாமிகள் இயற்றிய மற்ற நூல்களின் தொகுப்பு அவரது நூற்றாண்டு விழா மலரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது “வேல் மாறல் மகாமந்திர”மாகும்.

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப் பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும். ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற்பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்

அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள வேல்வகுப்பின்,ஔஷத (மருந்து) வகுப்பு-பதினாறு அடிகளை  மேலும் கீழுமாகவும்,  முன்னும் பின்னுமாகவும்  ஏறி  இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து , அதனை நான்கு மடங்காக (16×4=64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்தப்பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்துள்ளார் வள்ளிமலை சுவாமிகள்.6வது அடியாகிய , ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.

இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப் பாகும்.

https://tamildevotionallyrics.blogspot.com/2017/07/vel-maaral-mahamanthiram-parayanam-tamil.html

தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்கிறார். திரிலோக மந்திரவாதி என்பவன் சுவாமிகள் மீது சூனிய மந்திரம் வைத்துவிட அவரால் பேசமுடியாமல் போயிற்று. முருகனின் அருளால் வேல் காப்பு மந்திரம் மனதில் பதிந்து இருந்ததால்,அந்த 64வரிகளையும் வேறுவகையில் 16 வரிகளாக மாற்றி உச்சரிக்க மந்திரவாதியின் முயற்சி எடுபடவில்லை. மாறாக,அவன் உடல் எங்கும் அனல் தகிக்க அலறியவாறு சுவாமிகளிடம் ஓடோடி வந்து சரணடைந்து. இனி அம்மாதிரி தவறைச் செய்ய மாட்டேன் என உறுதி அளித்தான். அவரது அருளால் பாதிப்பிலிருந்து மீண்டான். அதன் மூலம் இம் மந்திரத்தின் மகத்துவம் பற்றிப் புரிய வந்தது. முருகனின் சில அம்சங்களைப்- வேல், மயில்,பாதம்,வள்ளி போன்றவை-புகழ்ந்துப் பாடுவதால் கிடைக்கப் பெறும் ஒருவித தெய்விக அனுப வத்தை விவரிக்க இயலாது என்றும் குறிப்பிடுவார்.

1941-ம் ஆண்டு முதல் 1950 வரை சென்னையிலும், வள்ளிமலையிலும் மாறிமாறி  வசிக்கலானார். வள்ளிமலையில் அவர் தவமியற்றியக் குகை திருப்புகழ்ஆஸ்ரமம்  என்றறியப்பட்டு அன்னமிடும் ஆலயமாகத் திகழ்கிறது. சென்னைக்கு வரும்போ தெல்லாம் லிங்கிச்செட்டித் தெருவில் இருந்த தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை இல்லத்தில் தான் தங்குவார். இவர் அருணகிரியாரின் அனைத்து நூல் களுக்கும் உரையெழுதி வெளியிட்டுள்ளார். இவருடையத் தகப்பனார் வடக்குப் பட்டு சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடிஎடுத்து முதலில் பதிப்பித்தவர். அதனால் அந்த இல்லத்தைத் திருப்புகழின் தாய்வீடு என்றே சுவாமிகள் கருதினார்.

14-4-1950 அன்று மகான் ரமணமகரிஷி சமாதி அடைந்ததைக் காணும் பெரும் பாக்கியம் சச்சிதானந்தருக்குக் கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னைத் தம்புச் செட்டி சாலையில் கந்தர் சஷ்டி ஹோமம் ஒன்றை நடத்தினார்.

ஐந்தாம் நாள் அன்று வள்ளி சன்மார்கம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்து கொண்டிருந்த ஸ்வாமிகளினால் இடையே சில நிமிடங்கள் பேச முடியா மல் வாயடைத்துப் போய் விட்டது. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அதற் குப்  பின் சில மணி நேரம் பொறுத்துச் சீடர்களிடம் பேசியவர் அந்த உபன்யா சத்தின் பொழுது தனக்கு முருகன் நேரில் காட்சி தந்தார் எனவும் அதனால்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்றும் கூறினார். அதன் பின் 12 வது நாள் (1950 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி) கார்த்திகை, அஸ்வினி நட்சத்திரம், திரியோ தசி திதி கூடிய தினத்தன்று மாலை நான்கு மணி அளவில் நெற்றிப் பொட்டின் நடுவில் பிளவு ஏற்பட்டு இரத்தக் கசிவு தோன்ற, அதிலிருந்து ஸ்வாமி களின் ஜீவன் பிரிந்து,சமாதி அடைந்தார்.

வள்ளி மலைப் பகுதியில் ஆலயத்துக்கு அருகில் இருந்த குகையில் (அவர் சமாதி அடைவதற்கு பல நாட்களுக்கு முன்னரே தன்னுடைய சமாதி நிலைக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில்) அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுச் சமாதி எழுப்பப் பட்டுள்ளது. ஒரு புண்ணியப் புருஷரின் ஆன்மா அங்குஅடங்கியிருந்துப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறது.

மகாசமாதி குருபூஜை, திருப்புகழ்ப் பாராயணம், பொங்கி அம்மன் வழிபாடு,  அன்னதானம் போன்ற வைபவங்கள் வெகுசிறப்பாக நடந்தேறுகின்றன.

இறைத் திருவருளால் அறிவுமறி தத்துவமும்,அபரிமித வித்தைகளும். இமைப் பொழுதில் கைவரப் பெற்றவர். இவர் ஒரு ஞானி, யோகி,சித்தர், ஏன் ஒரு பக்தரும் கூட! வாகீச கலாநிதி கி.வா.ஜ.அவர்கள் சுவாமிஜி அருணகிரிநாதரின்

மறு அவதாரமே எனப் பாராட்டுகிறார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் இன்னும் ஓர்படி மேலே போய் திருப்புகழ் சாமி முருகனின்அவதாரமே எனப் போற்றுகிறார்.

ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம் போற்றிவணங்குவோம்.

–subham–

tags- வள்ளி மலை

காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் (Post No.10,536)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,536
Date uploaded in London – – 7 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் : டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் அருமையான நூல்!

ச.நாகராஜன்

சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் திரு சி.ராமகிருஷ்ணன் வழங்கும் நூல் : காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம்!

32 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய நூலை சென்னை வாச்சா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முதலில் விஸ்வாமித்ர மஹரிஷியின் பெருமையுடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.

காயத்ரி மஹா மந்திரத்தை உலகிற்கு- அதாவது விஸ்வத்திற்கு – அருளியிருப்பதால் அவர் பெயரே விஸ்வாமித்ரராக ஆகி விட்டது.

காயத்ரியைக் கண்டவர் விஸ்வாமித்ரரே என்று தைத்ரீய உபநிடதம் 4வது பிரஸ்னம் கூறுவதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – தன்னைச் சொல்பவரைக் காப்பாற்றுவது காயத்ரி மந்திரம் என்ற விளக்கத்தைத் தருகிறார்.
காலையில் ஸ்ரீ காயத்ரியாகவும் நடுப்பகலில் ஸ்ரீ ஸாவித்ரியாகவும் மாலையில் ஸ்ரீ ஸரஸ்வதியாகவும் விளங்கும் தேவியின் தியான சுலோகங்கள் தமிழ் அர்த்தத்துடன் தரப்பட்டுள்ளன.

மொத்தம் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்திரம், மந்திர தேவதை ஸவிதா, வ்யாஹ்ருதிகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் எளிய தமிழில் இனிதே விளக்கப்பட்டுள்ளன.
பூ;, புவ:, ஸுவ: ஆகிய மூன்று வ்யாஹ்ருதிகளுக்கு முன் ஜபிக்கப்படும் ஓம் என்னும் பிரணவம் குறித்து, வேத மேற்கோள்களுடன் விளக்கம் தரப்படுகிறது.
ஓம் என்ற சொல்லுக்கு வேதங்களின் ஜீவன் என்று பொருள். உயர்ந்த பிரம்மமே ஓம்.

இந்த மந்திரச் சொல்லின் அலைகள் ஆகாயத்தில் எப்போதும் இருப்பதை விஞ்ஞான விளக்கத்துடன் தருகிறார் நூலாசிரியர்.
ஓம் தன்னை அநுஸந்தானம் செய்பவரை பர ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆக்கி விடும்.

எடுத்துக் காட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ரமண மஹரிஷி, காஞ்சி மஹா பெரியவாள்!
அ, உ, ம என்ற ஓங்காரத்தில் அ என்பது உலக சிருஷ்டி உ காரம் உலகின் ஸ்திதி மகாரத்தால் உலகை ஒடுக்கும் பிரளயம் ஏற்படுகிறது போன்ற விளக்கங்கள் பல வேத ரகசியங்களைத் தருகின்றன.

காயத்ரியின் ஆவாஹண மந்திரம் ( ஆயாது வரதா தேவி), பின்னர் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மஹா மந்திரம் ஆகியவை அர்த்தத்துடன் விளக்கப்படுகிறது.
நஹ என்ற காயத்ரி மந்திரச் சொல் கூட்டுப் பிரார்த்தனையைக் குறிப்பிடுகிறது.

காயத்ரியை எப்படி ஜபிக்க வேண்டும்? காலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும். நடுப்பகலில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ ஜபித்தல் வேண்டும். மாலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும்.

இதைத் தொடர்ந்து விவேகானந்தர் வேத கால முனிவரைத் தெய்வீகக் காட்சியாகக் கண்ட அனுபவமும் காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரையும் தரப்படுகிறது.

‘காயத்ரி மந்திரமாகிய இந்தத் தீப்பொறியை ஒரு நாளும் நம் பரம்பரையிலிருந்து அணைய விடக் கூடாது’ என்பது பரமாசார்யாளின் அறிவுரை; அன்புரை; அறவுரை.
அழகான அட்டைப் படத்தில் மனதைக் கவரும் காயத்ரி தேவியின் படங்களைக் கண்டு மகிழலாம்.

நேர்த்தியான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை ஒரு முறை படித்தால் காயத்ரி ஜபிப்பவர்கள் அர்த்தம் புரிந்து ஜபிப்பபவர்கள் ஆவர்.

இதுவரை இந்த மந்திரத்தை ஜபிக்காதவர்கள் இனிமேல் ஜபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்வர்.
நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள்.
வெளியிட்ட வாச்சா பதிப்பகம், நல்ல ஒரு பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நூலிற்கு விலை இல்லை என்பது ஒரு சிறப்பு அம்சம்.
ஆனால் மனமுவந்து நன்கொடையாக 20 ரூபாயை தாள் மற்றும் அச்சுச் செலவிற்காக வழங்கலாம்!

நூல் கிடைக்குமிடம் : Vacha Publication
B/2, Arihant Apartments, R.A.Road, Purasaiwalkamm Chennai – 600084
Email : brahmintoday@gmail.com ph 044 26411815 & 044 26432027

முதல் பதிப்பு : ஜனவரி 2017, இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2019
நூல் பிரதிகள் இருக்கிறதா என்பதை மெய்ல்/போன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

tags-  காயத்ரி மந்திரம்


PICTURES OF INDIAN FORESTS 100 YEARS AGO – PART 2 (Post No.10,535)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,535

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I am a lover of Nature. I had been to forests in Tamil Nadu and Karnataka as a Botany student. I browse through any book that has bird or animal or trees. I went through three volumes on Indian Forests. Though there are hundreds of images in the book , most of them are not of good quality or reproduceable. So, I am posting here some good pictures, all are in black and white:

Book Title – THE FORESTS OF INDIA , 3 VOLUMES

BY E.P.STEBBLING

PUBLISHER – JOHN LANE THE BODLEY HEAD LIMITED , LONDON.

YEAR – MCMXXII (YEAR 1922)

part 2

 —subham–

tags– forest pictures-2

LET NO ONE HATE ME -TAMIL VALLALAR & ATHARVANA VEDA (Post No.10,534)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,534

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HYMN TO EARTH BHUMI SUKTAM OF ATHARVANA VEDA (AV) CONTINUED

MANTRA 18 OUT OF 63

A beautiful prayer is in this mantra.

“Let no one hate me. Let me shine like gold”.

And note the adjectives “big and great speed of earth”.

Is it not amazing to see the attributes BIG EARTH, GREAT SPEED?

3000 years ago (date of AV 1000 BCE or before) there was no mobile phone or internet. Not much transport either between two places. And yet the poet describes “Earth! You are Vast and Mighty”.

“Your speed is also mighty”. Now only we know it rotates at the speed of 1000 miles per hour

“Consider the movement of the earth’s surface with respect to the planet’s center. The earth rotates once every 23 hours, 56 minutes and 4.09053 seconds, called the sidereal period, and its circumference is roughly 40,075 kilometers. Thus, the surface of the earth at the equator moves at a speed of 460 meters per second–or roughly 1,000 miles per hour”—Scientific American

And

“As schoolchildren, we learn that the earth is moving about our sun in a very nearly circular orbit. It covers this route at a speed of nearly 30 kilometers per second, or 67,000 miles per hour. In addition, our solar system–Earth and all–whirls around the center of our galaxy at some 220 kilometers per second, or 490,000 miles per hour. As we consider increasingly large size scales, the speeds involved become absolutely huge”- Scientific American

But this information was not available to anyone a few hundred years ago. Hindu saints knew it through their intuition or observation from space!

And let us continue with the same mantra……

The “Moving and Shaking of the Earth”- The Big Blue Marble!

Though Earthquakes are referred to in later Hindu scriptures and 2000 year old Sangam Tamil literature, AV poet also did not miss it.

And look at the beautiful prayer…..

O Mother Earth! MAKE US SHINE FORTH WITH THE BRIGHTNESS OF GOLD.

VEDIC SOCIETY WAS VERY RICH. Very rarely we see the word poverty. The reference to gold and golden jewellery are numerous. It was an agricultural society. Tamils wished everyone to live as many years as the number of stars or number of sand particles on the shore or as many as drops of rain. But one AV hymn says “as many as the grains”. It was a pukka agricultural community.

CHESS & MATHS

Vedic Hindus were great mathematicians. The whole world agrees that Chatur Anga, now known as Chess, is invented by the Hindus. One saint went to a king and taught this beautiful board game chess. The king was amazed and was ready to offer anything he asked. The Hindu saint smiled at him and said, “Not much, put one grain in square 1 of the chess board and then put 2 grains in square and go on doubling like this until you cover all the 64 squares on the chess board. The king thought that he could do it easily.

On the entire chessboard there would be 264 − 1 = 18,446,744,073,709,551,615 grains of wheat, weighing about 1,199,000,000,000 metric tons. This is about 1,645 times the global production of wheat (729,000,000 metric tons in 2014 and 780.8 million tonnes in 2019).”

No one would have thought it. Hindus were great geniuses. There are many secrets with numbers in the Vedas. Westerners who translated Vedas 150 years ago knew nothing about other fields. So, they ignored the big numbers as fancy numbers with no special meaning.

Now we know they were idiots and not scholars.

XXX

Look at the last request of the poet in this mantra…………..

LET NO ONE HATE ME.

Even God would hesitate to say YES to his request.

Every one of us falls in love with someone without any rhyme or reason. In the same way our boss in the office hates one person for no reason and loves or likes someone else for no reason. An actor known as MGR in Tamil film world was liked by millions of people. All women were after him. But he died without an issue! He even attracted an article in the Readers Digest magazine. Million uneducated, illiterate and educated used to wait all through the night to see him. He never came to the meeting right on time. Everywhere he was stopped by surging crowd. I believe it is due to his previous births as king or a popular emperor. God or a real Guru only can cancel any bad Karma from our previous births.

We are also subject to anger and jealousy. We say something in anger and the reactions follow us as like our own shadow. Hatred develops. One of the great Tamil saints is Ramalinga Swamikal also known as Vallalar of Vadalur. He prays to God Let me not hate anyone. Let others also not hate me. I don’t want to call any one You silly fellow! Dog or ghost (Tamil words rhyme with Chi/Nay/Pey)

xxxx

Sanskrit words used in this mantra 18 are Mahat , Mahati, Mahaan, Hiranyam/gold, Mahaan Vega /great speed

And the poet concludes saying “such a beautiful earth is protected by UNERRING Inrda/God”.

Everything in the universe go by mathematical calculations. If there is a mistake that is one millionth of a fraction of a second, universes would collapse. Knowing this, poet says UNERRING god (Indra stands for God) protect the earth. It is very true. Space scientists knew this very well. A very small error will send the satellite billions of miles away from the target.

Here is the poem from Vallalar:-

  ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        இயல்பு மென்னிட மொருவரீ
        திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        லிடுகின்ற திறமும் இறையாம்
    நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        னினை விடா நெறியு மயலார்
        நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        நெகிழாத திடமு முலகில்


    சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        தீங்கு சொல்லாத தெளிவும்


        திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        திருவடிக் காளாக்கு வாய்
    தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

To be continued……………………

tags- tags- chess, hate, hatred, shine, gold, bhumi sukta, grain

தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் –பகுதி 2 (Post. 10,533)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,533

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்று “தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! ” என்ற தலைப்பில்  வெளியேயான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

அதர்வண வேத (அ .வே ) 19ஆவது காண்ட 53, 54 ஆவது மந்திரங்கள் அளிக்கும் மேலும் வியப்பான அறிவியல் செய்திகள் இதோ:-

ஏழு என்ற எண்ணை பல்வேறு பொருள்களில் புலவர் பயன்படுத்துகிறார்.; 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனர் திணறுவது போலவே வெள்ளைக்கார வியாக்கி யானக்காரர்களும் மூச்சு முட்டித்  திணறுகிறார்கள்.

நான் கண்ட விஞ்ஞானக் கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.

வான சாஸ்திரம் (ASTRONOMY AND PHYSICS) படித்தவர்களுக்கும் பெளதீக சாஸ்திரம் படித்தவர்களுக்கும் ஒரு வியப்பான செய்தி தெரியும். உலகில் எல்லாப் பொருட்களும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். நகர்ந்து கொண்டே இருக்கும் இதை பாரதியார், மாணிக்க வாசகர் முதலியோர் அழகாக  பாடியுள்ளனர் . நம் பூமி தன்னைச் சுற்றுவதோடு, சூரியனைச் சுற்றுவதோடு சூரியனுடன் ஓடிக்கொண்டே இருக்கிறது. சூரியனோவெனில் எல்லாக் கிரகங்களையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது . அதாவது பிரபஞ்சம பலூன் போல ஊ

திக் கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்த இந்துக்கள் பூமிக்கும் பிரபஞ்சசத்துக்கும் அண்டம் = EGG SHAPED,GLOBULAR  பிரம்மாண்டம் BIG EGG என்றெல்லாம் பெயர் சூட்டி வெள்ளைக்காரர்களை முந்திச் சென்றனர். உலகிலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை GRAVITY உண்டு; வானிலுள்ள பிரமாண்டப் பொருட்களுக்கு அதைவிட அதிகம் ஈர்ப்பு விசை உண்டு என்று அவைகளுக்கு கிரஹம் GRAHA  என்று அறிவியல் பெயர் சூட்டினார்கள். கிரக என்றால் பிடித்தல், பற்றுதல், ஈர்த்தல் ; ஆங்கிலத்தில் உள்ள கிராவிடி, கிரிப், கிராப் GRAVITY, GRIP, GRAB= GRAHA எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்களே.

முதல் மந்திரத்தில் முனிவர்கள் சூரியனுடன் பயணம் செய்வதை, முதல் கட்டுரையில் சொன்னேன். சூரியனை வருணிக்கும் புலவன், ” எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் என்கிறான். ஆக அவர்களுக்கு வட்ட வடிவ (WHEEL LIKE) கிரகங்களும் தெரியும். அது பால்வெளி MILKY WAY மண்டலத்தில் ஒடிக் கொண்டு இருப்பதும் தெரியும் . அவைகள் தன்னைத் தானே சுற்றுவதும் தெரியும். இதனால் சுற்றும் சக்கரத்தை உவமையாயாக்கினார்கள் !!!!

அவை எல்லாம் எங்கே செல்கின்றன? இதற்கும் மந்திரம் பதில் சொல்கிறது ” இந்த புவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து முதற் தேவனுக்குச் செல்கிறான் ;  இந்த வரிகள் சூரியன், பிரம்ம லோகத்தையோ, சத்திய லோகத்ததையோ நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறான் என்று பொருள்படும்  .

உலகில் இந்துக்கள் சொல்லும் கால அளவு மட்டுமே விஞ்ஞான கருத்துக்களுடன் பொருந்தி நிற்கினறன ; நாம் மட்டுமே பிரம்மாவுக்கு கோடிக்கணக்காண ஆண்டுகளை ஆயுளாகக் கற்பித்துள்ளோம். பிரம்மாவும் கல்பம் தோறும் மாறுவார்  என்கிறோம். இவை எல்லாம் ஊன்றி ஆராயப்படவேண்டிய விஷயங்கள்.

மூன்றாவது மந்திரத்தில் ஒரு அற்புதமான வரி வருகிறது பூரண கும்பம் என்பதை வெள்ளைக்காரர்கள் பீக்கர் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது பொங்கி வழிவதாக மந்திரம் பேசுகிறது. இதைக் காலம் பொங்கி வழிகிறது என்று கொண்டால் , பல விதமாகக் கருத்து சொல்லலாம். சூரியன் என்று கொண்டால் , மிகவும் பொருத்தமாக இருக்கும். சூரியனில் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. ஹைட்ராஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் மூலகமமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்போது வீசும் சுவாலைகளின் உயரமே பல மில்லியன் மைல்கள் . இதை பொங்கி வழியும் பூரண கும்பம் என்று புலவர் வருணிக்கிறார் போலும்.

1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு BIG BANG ஏற்பட்டது. இது நிறைய இடங்களில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது . என்ன முடிவு என்பதும் அறிவியல் அறிஞர்கள் ஊகத்தில் மட்டுமே உளது. இந்துக்கள் இதை ஸ்வயம்பூ (தானாகவே உருவான) தெய்வீக சக்தி என்கின்றனர். இது ஒன்பதாவது பத்தாவது மந்திரத்தில் வருகிறது ; வேத கால இந்துக்களுக்கு எவ்வளவு விஞ்ஞான சிந்தனை, அணுகுமுறை இருந்தது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.

காஸ்மாலஜி COSMOLOGY எனப்படும் அண்டப் பிறப்பியல் தொடர்பான ரி.வே.(RV, அ .வே. (AV) துதிகள்  அனைத்தும் கேள்வி வடிவத்தில் இருக்கும். இது ஒரு பாணி, ஸ்டைல் STYLE, GENRE என்பதை அறியாத வெள்ளைக்காரர் கள், ‘பார்த்தீர்களா, ரிஷிகளுக்கு அந்தக் காலத்திலேயே சந்தேகம் எவ்வளவு இருந்தது!  என்று எழுதி உளறித் தள்ளிவிட்டார்கள் . சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதை பாடிய தாயுமானவ சுவாமிகள் கூட

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா 

      யானந்த பூர்த்தியாகி

   யருளொடு நிறைந்ததெது? தன்னருள் வெளிக்குளே 

    யகிலாண்ட கோடி  யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

   தழைத்ததெது? மனவாக்கினிற்

  றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

   தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது?

   எங்கணும் பெருவழக்காய்

  யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

   யென்றைக்கு முள்ள தெது? மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெது?வது

   கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது  ஆகவும்

    கருதி அஞ்சலி செய்குவாம்

என்று எது ? , எது ? என்று கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைத்து, இறைவனே அது என்பார்; க (யார்) என்று பல்லவி உடைய ஒரு ரி.வே.(RV) பாடல் உளது. அது கூட மாக்ஸ் முல்லருக்குப் புரியவில்லை! ரிஷிகள் ‘சந்தேகப் பேர்வழிகள்’ என்று விமர்சித்துள்ளார்.

ஆங்கிலத்தில் விரிவான கட்டுரை உளது. இரண்டாவது துதியில் (AV .LIV .BOOK  19) உள்ள அறிவியல் விஷயங்கள் இதோ:-

மாபெரும் பிரபஞ்ச வெடிப்பில் BIG BANG  1400 கோடி ஆண்டு சித்திரத்தில் – வரை படத்தில் – எதற்குப் பின்னர் எது தோன்றியது?  என்று கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள் அறிஞர்கள். அதே போல இந்த துதியானது , டைம் டேபிள் கொடுக்கிறது.

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

“Sages inspired with holy knowledge mount him” (SAGES CAN DO TIME TRAVEL)

“Kāla created yonder heaven, and Kāla made these realms of
   earth. (BILLIONS OF EARTHS)


  By Kāla, stirred to motion, both what is and what shall be
   expand.” (EXPANDING UNIVERSE)

“He made, he stirred this universe to motion” (BIG BANG )

“In Kāla erst the text produced what is and what is yet to be.”

“On Time is laid an overflowing beaker” (Boiling Sun?)

நிலம், நீர், நெருப்பு , வளி , அண்ட வெளி, பல உலகங்கள் , பிரம்மம் என்று அடுக்கிக்கொண்டே போகிறார் புலவர் . ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களும் கூட தெய்வீக சக்தி என்று எழுதியுள்ளனர் இது எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி பெயர்ப்பு. அப்போது வான சாஸ்திரம், அண்டத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றி அதிகம் தெரியாது.வேதங்களுக்குப் பின்னர் வந்த பகவத் கீதை முதலியவற்றில் உள்ள காலம் TIME, கருந்துளைகள் BLACK HOLES ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில் நமக்கு முழு சித்திரம் கிடைக்கிறது!

–SUBAHAM—

சூரியன், வாலகில்யர் , சுடர்கொடு, திரிதரும்,  முனிவர்

வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 2 (Post No.10,532)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,532

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

“ஆத்மா த்வம் கிரிஜா மதி:” என்ற சுலோகத்தை விளக்குகிறார். ” நம் உடலே ஐயனும் அம்மையும் உறையும் திருக்கோயில். நாம் நுகர்வது அனைத்தும் அவர்களுக்குச் செய்யும் வழிபாடுகளே. நம் உறக்கமே சமாதிநிலை வழிபாடு. நடந்து செல்வதெல்லாம் அவர்களை வலம்வருதல் போன்றதே.பேசும் சொற்கள் எல்லாம் அவர்களை ஏத்தும் தோத்திரங்களே. நம் செயல்கள் அனைத்தும் ஆராதனைக்கு ஒப்பாகும். இவையெல் லாம் நம்மைத் தவநிலைக்கு உயர்த்துகிறது என அறிந்துகொள்,”  என்றவர் மேலும் தொடர்ந்துக் கூறலானார்,

” இனி நீ வெளிப்படையாகப் பூஜை செய்தால் மட்டும் போதாது. உன் எண்ணங்களும், செயல்களும் உனக்காக எனக் கருதாமல், அனைத்தும் தெய்வத்தின் பொருட்டே என்ற மனநிலையை அடைந்துவிட்டால் ‘நான்-பிறர்’ என்ற பேதம் பாராட்டாத உயர்ப் பதவியை அடைவாய். ஆமாம்,இதே பொருள் கொண்ட பாடல் ஏதேனும் திருப்புகழில் உள்ளதோ?” என்று ஏதும் தெரியாதது போல் மகான் வினவ, ‘மைசூரு சாமி’, வேகமாகத் தலையை ஆட்டி “இருக்கிறது,சுவாமி! அது,’ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து….(1212) என்ற பாடல் தான், என்ன ஒற்றுமை!” என வியந்தார்.

    (உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான்,மனம் என்ற தாமரை மலரை வைத்து,இடையில் அன்பு எனும் நாரைக் கொண்டு,நாக்கு என்ற இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்  என்ற நறுமணத்தைத் தடவி, அது மேலும் ஒளியுடன் விளங்க அதைச் சுற்றிக் குற்றமற்ற ஒரு அறிவு எனும் வண்டு மொய்த்துப் பாடவும்,மாத்ருகா மந்திர மாலையான  இப் பூமாலையை அழகியப் பவளம் போல் சிவந்த உன் பாதங்களில் அணிவிக்கும் பாக்கியத்தை எப்போது பெறுவேனோ?) -சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் இடம் பெறும் மாத்ருகா மந்திரம் முருகன் ‘அ’ முதல் ‘க்ஷ’ முடிய உள்ள 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

மகான் மிகவும் மனம் மகிழ்ந்து,”அப்பனே! திருப்புகழே மகா மந்திரம்.அதுவே உனக்குப் போதுமானது,வேறு நூல்கள் படிக்க வேண்டாம். கந்தபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் முருகன்-வள்ளி வசிக்குமிடமான வள்ளிமலைக்குச் சென்று உன் தவ வாழ்வை மேற்கொள்” என்று ஆணையிட்டார்.

ஶ்ரீசேஷாத்திரி மகானே இனி உன் குரு என்று சொல்லாமல் சொல்லத்தான் தன்னைப் போய்விடு என்று ரமணர் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது சச்சிதானந்தருக்கு.

குருநாதரின் சொற்படி நடக்கலானார். வள்ளிமலை, முருகனின் இச்சாசக்தியும். கானசுந்தரியுமான வேடர்குல நம்பிராஜனின் மகளாகப் பிறந்து, தினைப்புனம் காத்து,தவமியற்றி முருகனை மணந்த வள்ளியின் பீடம். காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் திருவலம் ரயில்நிலையத்துக்கு வடக்கே 15கி.மீ. தொலைவில் உள்ள வள்ளிமலைக்கு 1916-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்த சமயம் வந்தவர்அங்கு பர்வதராஜன்-கன்னிக் குன்றுகளுக்கிடையே ஆசிரமம் அமைத்துக் கொண்டார். அங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருப்புகழின் மேன்மையை விளக்கி,பாடல்களை ராகம்-தாளங்களுடன் கற்றுக் கொடுத்து வந்தார். நாளடைவில் அவரது மகிமையும், புகழும் நாடெங்கும் பரவியது. திருப்புகழ் சுவாமிகள் என்ற புதுப்பெயரும் அவருடன் ஒற்றிக் கொண்டு விட்டது.

சுவாமிகள் தானே கைப்படத் தயாரித்த நான்கு தந்திகளுடைய அரிய இசைக் கருவி ஜதி வாத்தியமாகும். இதை ஒரு பெரிய கோல் மற்றும் சிறிய கோல் ஒன்றால் மீட்டி , மனமுருகத் திருப்புகழ் பஜனை இவர் செய்வது கேட்போர் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிடும். அப்பொழுதுதான் வள்ளி-கந்தன் இருவரையும் நேரில் சந்திக்கும் பாக்கியத்தை அவர் பெற்றார். வள்ளி மீது அளவுகடந்தப் பக்தி கொண்டவர், அவளைத் திருப்புகழ்ப் பாடல் மூலமே புகழ்ந்துப் பாட வேண்டும் எனவும்,அப்போதுதான் அவள் நாம் வைக்கும் கோரிக் கைகளை முருகனிடம் எடுத்துச் சொல்வாள் என்றும் கூறுவார்.

ஒருசமயம், திருப்புகழ் பாடியபடி வள்ளிமலையில் சென்றபோது அவர்முன்னால் ஓர் சிறுமி திடீரென்றுத் தோன்றி,அவரது பாட்டையே பொங்கிப் பொங்கிச் சிரித்து மகிழ்ச்சியுடன் பாடியவாறு மறைந்து விட்டாள்.அதுவுமில்லாமல் அவர் கையிலிருந்த வாத்தியத்தைக் கண்களுக்குப் புலப்படாமல் எடுத்து மீட்டி,. பாட்டிசைத்து மகிழ்ந்தாளாம். யோகிகள் உணரும் சங்கோதை நாதம் மூலம் (கிண்கிணி,சிலம்பு,மணி,சங்கம்,யாழ்,தாளம்,வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,முகில்)அச் சிறுமி வள்ளிதான் என்று புலப்பட்டு விட அவர் பரவசமடைந்தார். அதனாலேயே வள்ளியை அன்றிலிருந்து ‘ பொங்கி ‘ என்றே அழைக்கலா னார்.அவள் வாசித்த வாத்தியத்தைப் ‘பொங்கி வாத்தியம்’ எனப் பெயரிட்டார்.ன (பொங்கி=உற்சாகம்/செல்வம் பெருகுவது).

முருகன் அவருக்கு நேரிடையாக வேதியர் உருவிலும்,இஸ்லாமியப் பெரியவரா கவும்,அன்னதானமிடும் சாதாரண அடியாராகவும் காட்சியளித்து அருள் பாலித்த துண்டு. வள்ளி அவரிடம் பல சித்து விளையாடல்களைக் காட்டியுள்ளாள்.

அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றவர்கள் வாழ்வில் அதிசயங்கள் பல நடந்தேறியுள்ளன. அவர்களுள் ஒருவரான ஸ்வாமி அன்வானந்தாவின் கனவில்தோன்றிய வள்ளி,தனக்கு ஒரு கோயில் எழுப்ப ஆணையிட்டாள். அதற்குத் தகுந்தாற் போல் யாரோ ஒரு வியாபாரி அவரிடம் சிலை ஒன்றைக் கொடுத்து விட்டுச் செல்ல அதுவே ஓர் அரிய வைஷ்ணவி சிலை என்பது உறுதியாயிற்று.

சென்னை அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயில் தலத்தில் அம்மனைப் பிரதிஷ்டை செய்தார்.  12-1-1950-அன்று ஶ்ரீசச்சிதானந்தர் ‘திவின்திர கன்பு வகாப்பு’ என்ற முறையில் அமைந்திருந்தத் திருப்புகழைப் பாடியபடியே அங்கி ருந்த வைஷ்ணவிதேவி சிலைக்குள் தன் சக்தி முழுவதையும் மாற்றினார். 1954ல் ஆலயம் எழுப்பப்பட்டது. பக்தர்களுக்கு அந்த அம்மன் மூலம் திருப்புகழ்ச் சாமியின் அருளும்,ஆசியும் கிடைத்து வருகின்றது.

திருப்புகழைப் பரப்புவதற்கு அவர் கையாண்ட மற்றொரு வழி காலத்தின் கட்டா யமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்நாளில்,புதுவருட நாளன்று மேலதிகாரிகளான துரைமார்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி,பரிசுப் பொருட் களை அளிப்பது வழக்கம்.இதைக் கண்டு ஆறாத் துயரமடைந்த சுவாமிகள், தணிகைத் துரையைப் போற்றி வழிபடாமல் இருக்கிறார்களே என்று அங்க லாய்ந்தார்.அதற்கு மாற்றாக ,நாட்டுப் பற்றுடன், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொள்ளச் செய்யப் படி உற்சவ நிகழ்ச்சியை டிசம்பர் 31,1917, ஜனவரி 1, 1918 முதல் நடத்தலானார். படியேறி வேலனைத் தரிசிக்க மொத்தம் 365  படிக் கட் டுகள் உள்ளன. அவை வருடத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பதாக அமைந் துள்ளன. அன்று பல பஜனைக் குழுக்கள் ஒன்றுகூடி மலை மேல் ஆலயத்தில் மாலைத் தீபம் ஏற்றிய வுடன்,அடிவாரத்தில் முதல் படியிலிருந்து ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ்ப் பாடல் பாடி,நிவேதனம் செய்து ஆரத்தி எடுப்பார் கள்.’தணிகை மலை முருகனுக்கு அரோகரா’ என்ற அடியார்களின் பக்தி கோஷம் விண்ணைப் பிளக்கும்!

சுவாமிகளுக்குப் பின்னர்,’திருப்புகழ் மணி’ டாக்டர் கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகளால் இப்படித் திருவிழா

பிரபலமானது. ‘அடியார் திருக் கூட்ட இறைப் பணிமன்றம்’ என்ற அமைப்பின் மூலம் இவ் விழா தடையின்றி இன்றளவும் நடைப் பெற்று வருகிறது.365 படிகளையும் ஆராதித்துப் படியேறி னால் புத்தாண்டு முழுவதும் நற்பலன்கள் விளையும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை!

to be continued…………………………..

tags- வள்ளிமலை சுவாமிகள்,part 2

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3 (Post No.10,531)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,531
Date uploaded in London – – 6 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3
ச.நாகராஜன்

சங்கதி என்று இன்று பிரபலமாகி இருக்கும் சங்கீத அமைப்பை தியாகராஜரே உருவாக்கினார் என்பது ஒரு சுவையான இசைச் செய்தியாகும்.
ஒரே ராகத்தில் பல கிருதிகளை அவர் இயற்றியிருந்தாலும் ஒவ்வொன்றும் தனிச் சுவையுடன் மிளிரும். தோடி ராகத்தில் அவர் இயற்றியுள்ள பல கீர்த்தனைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

THYAGARAJA ARADHANA HELD IN LONDON 


13வது வயதில் நமோ நமோ ராகவய்யா என்ற முதல் கீர்த்தனையை அவர் இயற்றினார். தொடர்ந்து தனது வாழ்நாளில் அவர் மொத்தம் 24000 கிருதிகளை இயற்றியுள்ளார். இந்தக் கிருதிகளில் இராமாயணம் முழுவதையும் காணலாம். ஆதிகவியான வால்மீகி முனிவர் 24000 ஸ்லோகங்களில் இராமாயணத்தை இயற்றியுள்ளார். அவரே தியாகராஜராக அவதரித்ததாக பக்தர்கள் கூறுவதில் வியப்பில்லை.
அவருக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பையர், வாலாஜா பேட்டை வேங்கடரமண பாகவதர், அவரது குமாரர் கிருஷ்ண பாகவதர், உமையாள் புரம் கிருஷ்ண பாகவதர், அதே ஊர்க்காரரான சுந்தர பாகவதர், சித்தூர் ராதாகிருஷ்ணையர் உள்ளிட்ட பலரும் அவரது சீடர்களே.


ராம நீ சமான மெவரு – ராமா! உனக்கு நிகரானவர் யார்? கரகரப்ரியா ராகத்தில் அமைந்தது இது.


ராமபக்தி சாம்ராஜ்ய – இது சுத்தபங்காள ராகம்.
சாந்தமுலேக சவுக்கியமுலேது – சாமா ராகத்தில் உள்ள இந்த கீர்த்தனை சாந்தம் இல்லை எனில் சௌக்யமில்லை என்கிறது.
பண்டுரீதியில் என்னை சேவகனாக ஏற்றுக் கொள் என்கிறார்.
இந்த கிருதிகளைத் தவிர, பிரகலாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், சீதாராம விஜயம் ஆகிய மூன்று இசை நாடகங்களையும் அவர் படைத்துள்ளார். அவரது கிருதிகளில் தியாகராஜ என்ற அவரது முத்திரையைக் காணலாம்.


சுமார் 700 கிருதிகளுக்கும் மேற்பட்ட அளவில் இவரது பிரபலமான கிருதிகள் இப்போது கச்சேரிகளில் இசைக்கப்பட்டு வருகின்றன. தியாகோபநிஷத் என்றே சொல்லுமளவு ஏராளமான கட்டுரைகள் இவரது கிருதிகளை விளக்கி எழுதப்பட்டு வருகிறது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவரது மனைவியார் காலமானார்.
தியாகராஜரின் இறுதிக் காலத்தில் அவர் துரீயாஸ்ரமம் ஸ்வீகாரம் செய்து கொண்டார். 1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார். அவரது இறுதி நாளன்று அனைவரையும் ராம நாமம் கூறுமாறு பணித்த அவர், மனோஹரி ராகத்தில், ‘பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ’ என்னும் கிருதியைப் பாடினார்; அவரது கரம் சின் முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவரது சிரத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி ராம விக்ரஹத்தில் சென்று ஐக்கியம் அடைந்தது.


அவரது உடல் காவிரி ஆற்றங்கரையில் அவரது குருவான சொண்டி வெங்கடரமணய்யர் சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது. பின்னர்
காவேரிக் கரையோரத்தில் அவரது சமாதி கோவிலாக எழுப்பப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள் திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை இசை விழாவில் நாட, கவுள, ஆரபி, ஶ்ரீ ராகம், வராளி ஆகிய ஐந்து கனபஞ்சக ராகங்களில் அவர் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, அவரை தங்கள் சங்கீத கானத்தால் போற்றி வணங்குகிறார்கள். இந்த ஆராதனையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறுகின்றனர். சுமார் 174 வருடங்களாக இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இசையால் பிரபஞ்சத்தைக் கவர்ந்தவர் தியாகராஜர் என்று சொல்வது ஒரு புகழுரையாகக் கருதக் கூடாது; புத கிரகத்தில் உள்ள ஒரு பெருவாய் எனப்படும் Craterக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது பொருத்தம் தானே! இந்திய அரசாங்கம் அவரைப் போற்றும் விதத்தில் தபால்தலையை வெளியிட்டுள்ளது.
எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமுலு என்று சாதாரணமாகக் கூட இன்று மேடைகளில் கூறப்படும் வார்த்தைகளிலிருந்து பக்கல நிலபடி கொலிசே, ராம நீ சமானமெவரு என்ற உச்ச பக்தி கீர்த்தனைகள் பாடப்படுவது முடிய அங்கு இசைமயமாக தியாகராஜர் இருக்கிறார்; என்றும் இருப்பார்!
இசையால் இறைவனை வழிபட்டு இசை மூலம் முக்தி அடைந்த பெரும் மகானான தியாகராஜரைப் போற்றுவோம்; அவரது கிருதிகளைப் பாடுவோம்; பரப்புவோம்.
நன்றி, வணக்கம்!
*** முற்றும்

TAGS– தியாகராஜ ஸ்வாமிகள் – 3

PICTURES OF INDIAN FORESTS 100 YEARS AGO – PART 1 (Post No.10,530)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,530

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I am a lover of Nature. I had been to forests in Tamil Nadu and Karnataka as a Botany student. I browse through any book that has bird or animal or trees. I went through three volumes on Indian Forests. Though there are hundreds of images in the book , most of them are not of good quality or reproduceable. So, I am posting here some good pictures, all are in black and white:

Book Title – THE FORESTS OF INDIA , 3 VOLUMES

BY E.P.STEBBLING

PUBLISHER – JOHN LANE THE BODLEY HEAD LIMITED , LONDON.

YEAR – MCMXXII (YEAR 1922)

(Please note the size of humans and the trees) 

tags – Indian Forests, Forest images.

to be continued………………………….

to be continued…………………..

வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 1(Post No.10,529)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,529

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

ஞானமயம் பகிரும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.

19-20-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு மகானின் சரிதத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம். வாருங்கள் பயணிக்கலாம்……..

வள்ளிமலை சென்று வணங்குவார் மாநிலத்தில்

வெள்ளிமலை போல மிகவோங்கி-உள்ளியன

எல்லாம் பெறுவர் இனியராய் இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வர் பரிந்து.

    -திருமுருக கிருபானந்தவாரியார்

முருகு என்ற சொல்லுக்கு இளமை,அழகு,தெய்வத்தன்மை எனும்பதினேழு வித அர்த்தங்களைச் சுட்டுகிறது தமிழகராதி. அப்படிப்பட்ட ஆறுமுகன் நமக்கு உணர்த்துவது என்ன,அவனருள் நம்மை என்ன செய்யும், பார்க்கலாமா………

ஒன்றே பரம்பொருள் எனக் காட்டுவான்,இரு வினைகளைப் போக்குவான், மும்மலங்களை அகற்றுவான்,நான்கு வேதங்களின் கருத்தைத் தருவான், ஐந்து புலன்களை அடக்குவான், ஆறு முகங்களின் மூலம் ஆறு ஆசிகளை வழங்குவான், ஏழு நாட்களும் நல்லவையே என்று உணர்த்துவான், எட்டு திசைகளும் உகந்ததே எனக் குறிப்பிட்டு, ஒன்பது கிரகங்கள் விளைவிக்கும் தீமைகளை விரட்டி அடித்து, வாழ்வில் பத்துக்குப் பத்து தந்திடுவான் நம் வேலவன்!  (நன்றி: கௌமாரம்)

தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய விழாக்களில் அப்படிப்பட்டஆறுமுகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நடப்பு ஆண்டின் இறுதி தினம் மற்றும் வரும் புத்தாண்டின் முதல் நாளும் அழகன் முருகனின் “புகழ்”பாடி ஆராதிக்கும் பொன்னாளாகத் தணிகையிலும், சுவாமிமலையிலும் படித் திருவிழா வாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கடந்து போகும் ஆண்டில் விளைந்த நன்மைகள் போல் வரவிருக்கும் வருடத்திலும் நல்லவையே நடந்து, வாழ்வை வளமாக்க,மனமுறுகி முருகனை வேண்டி “மைசூரு சுவாமிகள்” அனுகிரகத்தால் நடத்தப்படும் விழாவே இது.

யார் இந்த “மைசூரு சுவாமிகள்”?

அதன் பின்னணி விவரங்களைச் சுவாமிகளுடன் கூடவே இருந்து,நெருங்கிப் பழகிய ஆனையாம்பட்டி சாது ஶ்ரீகுஹாநந்த பாரதி சுவாமிகள், திரு கல்யாண சுந்தரம் (1957),சுவாமி அன்வாநந்தா (1975),பி.எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோரின் நேரடி அனுபவக் கட்டுரைகளின் வாயிலாகவும், வடதிருமுல்லை வாயில் ஶ்ரீவைஷ்ணவி தேவி ஆலய வெளியீடு ‘வள்ளிமலை வள்ளல்’ என்ற நூல் மூலமும் அறிய முடிகிறது.

கொங்கு நாட்டில் பவானி நகருக்கு அருகில் பூநாச்சி கிராமத்தில் வசித்த சிதம்பர ஜோசியர்-லஷ்மியம்மாள் தம்பதிக்கு வெகுநாட்களாகப் புத்திரப் பாக்கியமில்லாமல் வருந்தினார்கள். ஒரு சமயம் திருச்செங்கோட்டு ஈசனை வழிபட நாகத்தின் மூலம் சமிக்ஞை கிடைக்கப் பெற்று அதன்படி அனுசரிக்க, அவர்களுக்கு 25-11-1870-ல் கார்த்திகை மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. மகேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  அக்குழந்தைக்கு அர்த்தநாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் படிப்பில் நாட்டமில்லாமல் கிராமியக் கலைகளில் ஈடுபாடு கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் ‘குழந்தை திருமணம்’ செய்விக்கப் பட்டதும் மைசூருக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அரண் மனையில் தலைமைத் தவசிப்பிள்ளையாக இருந்த உறவினரிடம் உதவியா ளராகச் சேர்ந்து விரைவிலேயே சமையற்கலையின் நுணுக்கங்களைக் கற்று, நளபாகத்தில் கைதேர்ந்தவரானார். அரச சமூகத்தின் தனிப்பட்டத் தலைமைத் தவசிப்பிள்ளையாகவும் பரிணமித்தார்.

அதுவரை அவரை அணைத்துச் சென்ற அதிர்ஷ்டதேவதை இப்போது விலக ஆரம்பித்து விட்டாள். ஒரு கல்யாணத்துக்குச் சென்றவரை விதி விட்டுவிட வில்லை. அசல் மாப்பிள் ளையைத் தவிர்த்து இவரை மணாளனாக்கி இரண்டாம் திருமணம் செய்து வைத்து விட் டனர். துன்பத்துக்கு மேல் துன்பத்தை அவர் அனுபவித்தக் காலம் அது. மூன்று வருடத் துக்குப் பின் முதல் மனைவி, மூன்று மகள்கள் இயற்கை எய்தினர். தொடர்ந்து 1907-ல் இரண்டாவது மனைவியின் இரு பெண் குழந்தைகளும் இறந்தனர். அத்துடன் தீராத வயிற்று வலியும் சேர்ந்துகொள்ள வாழ்க்கையே வெறுத்துவிட்டது அவருக்கு. பழநி ஆண்டவரின் அபிஷேகத் தீர்த்தத்தை அருந்தினால் உபாதை நீங்கும் எனத் தோழர் கூற 1908-ல் மனைவி,எஞ்சிய ஒரே மகன் நரசிம்மனுடன் பழநி சென்றடைந்தார். அங்கு அன்றாட ஆலயக் கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,அபிஷேகத் தீர்த்தத்தை அருந்திவர வாட்டியக் குன்மநோயும் அரவே அகன்றது. அத்துடன் முருகனின் திருவிளையாடலும் ஆரம்பித்தது.

அக்காலத்தில் மூலவரின் அபிஷேகத்தின் போது திருப்புகழ்ப் பாட்டுக்கு நடனமாடுவதுண்டு. ஒருசமயம் மதுரை தேவதாசி ஒருவர் “வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய,கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள் புரள…”. (813)பாடலுக்கு நாட்டி யமாட,அதில் லயித்து ஓர் ஆனந்தப் பரவசநிலையை அடைந்தார். திருப்புகழ்ப் பாடலைப் படித்து ரசிக்க நினைத்தாலும் எழுத்தறிவு இல்லாமை தடங்கலாக நின்றது.

அப்போது அவருக்கருகில் திடீரெனத் தோன்றிய ஒரு மாயச் சிறுவன் (வேறுயார், ‘அழகன்’ தான்!)தமிழ் சொல்லிக் கொடுக்க முன்வர, துரிதகால இடைவெளியில் கற்றுத் தேர்ந்து,திருப்புகழ் பாடுவதில் புலமைப் பெற்றார்.‌ ஓர் இனந்தெரியாத உள்ளுணர்வு அவரை ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்த,  திருச் செந்தூர்,  திருவண்ணா மலை, இலங்கை எனப் பல தலங்களைத் தரிசித்து விட்டுத் திரும்பவும் அண்ணாமலை வந்தடைந்தார். பகவான் ரமணரைச் சந்தித்து அவருக்குப் பணிவிடை செய்தும், திருப் புகழ்ப் பாடி மகிழ்வித்தும் வந்தார். ரமணர் அவர் கண்களுக்குத் தண்டாயுதபாணி யாகவே காட்சியளித்தார். அங்கு திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் கற்றறிந்தார். அர்த்தநாரியின் எதிர்காலத்தைத் தன் யோகசித்தியால் அறிந்து கொண்டவர் அவரை வட இந்தி யத் தலங்களைத் தரிசித்து வரப் பணித்தார். இமயமலைச் சாரலில் சந்தித்த ஒரு சித்தரால் ஈர்க்கப்பட்டு,அவரிடமே தீட்சைப் பெற்று,சித்தரின் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்று, ஶ்ரீசச்சிதானந்த சுவாமி எனும் சன்னியாச நாமத்தையும் பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பின் ஆவலுடன் ரமணமகரிஷியைப் பார்க்க வந்தவருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.

வந்ததும் வராததுமாய் அவரை ‘உடனே மலையடிவாரம் திரும்பிச் செல்!’ என மகரிஷி கட்டளையிட, ஒன்றும் புரியாதவராய்த் திரும்பினார். அவரது துறவற வாழ்வில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது அச்சம்பவம். கீழே இறங்கியவரை உடலெல்லாம் சேறும் சகதியுமாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் மகான் ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள். சேறும் சகதியும் சந்தன மணம் வீசியது! “வாரும்,வாரும்!சின்ன சாமி அனுப்பினாரா?” என்று வினவியவர், ஶ்ரீசச்சிதானந்தருக்கு ஆதிசங்கரரின் சிவமானஸ ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

XXXXX

to be continued……………..

tags — வள்ளிமலை ,ஶ்ரீ   , சச்சிதாநந்த , ஸ்வாமிகள்,