LORD AGNI ! WE ARE HERE TO PRAY FOR OUR FRIENDS- SAYS RIG VEDIC SEER (Post No.10,153)

OCTOBER 2021 CALENDAR – MORE QUOTES FROM THE FOURTH MANDALA OF RIG VEDA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,153

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FESTIVAL DAYS – OCT.2- GANDHI JAYANTHI, 6- MAHALAYA AMAVASAI,7- NAVARATRI BEGINS, 14- SARASVATI PUJA, 15- VIJAYA DASAMI/DASARA,19-MILADI NABHI,

NEW MOON DAY- OCT.6, FULL MOON DAY-  OCT.20,  EKADASI FASTING DAYS- OCT.2, 16

AUSPICIOUS DAYS – OCT. 25, 27,

From Fourth Mandala

OCTOBER 1 FRIDAY

O AGNI, O MOST BRIGHT, O RADIANT GOD, WE COME WITH PRAYERS FOR HAPPINESS OF OUR FRIENDS 5-24-4

XXX

OCTOBER  2 SATURDAY

Victorious Agni, bring us that vanquished in the war. FOR YOU ARE WONDERFUL AND TRUE, GIVER OF STRENGTH IN HERDS OF COWS 5-23-2

XXX

OCTOBER  3 SUNDAY

Agni, the great who ward not off the anger of your power and might. Stir up the wrath and hatred due to one who holds an alien creed 5-20-2

XXX

OCTOBER  4 MONDAY

Immortal Agni, Heroes illustrious, lofty fame, who at the synod met for praise presented me with fifty horses 5-18-5

XXX

OCTOBER  5 TUESDAY

GREAT POWER IS IN THE BEAM OF LIGHT; Sing praise to Agni, to the god whom men have set in foremost place like Mitra with their eulogies 5-16-1

XXX

OCTOBER 6 WEDNESDAY

May he born newly, conquer his assailants; round him they stand as round an angry Lion 5-15-3

XXX

OCTOBER 7 THURSDAY

When like a Mother, spreading forth to nourish to cherish and regard each man that lives

Consuming all the strength that you have got, you wander round, yourself, in varied fashion 5-15-4

xxxx

OCTOBER 8 FRIDAY

Agni, Mark with attention this our speech,

O Agni, you victorious one, you strong- jawed, as the Lord of Home, the Atris with their exalted songs praise you.5-22-4

xxx

OCTOBER  9 SATURDAY

Agni, lofty Asura, meet for worship, Steer of Eternal Law, my prayer I offer. 5-12-1

Xxx

OCTOBER  10 SUNDAY

Agni your friends those who have turned them from you, they have become ungracious. They have deceived themselves by their own speeches, uttering wicked words against the righteous 5-12-5

Xxx

OCTOBER  11 MONDAY

You,Agni, as the felly rings the spokes encompassed the gods. I yearn for bounty manifold 5-13-5

Xxx

OCTOBER  12 TUESDAY

Now,Agni, come to succour us; let priests draw nigh to offer gifts; And let the patrons of our rites SUBDUE ALL REGIONS OF THE EARTH.5-10-6

xxx

OCTOBER 13 WEDNESDAY

Agni, for you is this sweetest prayer of mine; dear to your spirit be this product of my thought.

AS GREAT STREAMS FILL THE RIVERS SO OUR SONGS OF PRAISE FILL YOU AND MAKE YOU YET MORE MIGHTY IN YOUR STRENGTH 5-11-6

xxxx

OCTOBER 14 THURSDAY

Agni shears the field and wilderness, with flashing teeth and Beard of Gold, deft with his unabated might 5-7-7

Xxx

OCTOBER 15 FRIDAY

Agni, Master of the house hold, with Hair of Flame, with High Flag, multi form, distributor of wealth, Kind Helper, Good Protector, Drier of the Floods 5-8-2

Xxx

OCTOBER  16 SATURDAY

Agni,,as an infant newly born, the kindling sticks brought to life, Sustainer of the tribes of men, skilled in well-ordered sacrifice 5-9-3

xxxx

OCTOBER  17 SUNDAY

Yes,you are very hard to grasp, like the offspring of wriggling SNAKES. When you consume many woods like an ox, Agni in the mead 5-9-4

XXXX

OCTOBER  18 MONDAY

As a skilled craftsman makes a chariot, a singer I, Mighty One, this hymn for you,have fashioned. If you accept it gladly, may we obtain thereby the heavenly Waters 4-2-11

XXXX

OCTOBER  19 TUESDAY

Most Youthful Agni, verily you help the one who praises you, safely over all his troubles. We have seen the thieves and open foes. Unknown have been the plotting s of the wicked 4-3-11

XXXX

OCTOBER 20 WEDNESDAY

Agni, flaming high, shall never yield us to calumny, to him who wrongs us 4-3-12

XXX

OCTOBER 21 THURSDAY

Over all woes and dangers, Jatavedas/Agni, bear us in a boat across a river 4

XXX

Spread yourself out, you soft as wool. The holy hymns have sung to you 4-5-4

OCTOBER 22 FRIDAY

Open yourselves the Doors Divine, easy of access for our aid 4-5-5

XXX

OCTOBER  23 SATURDAY

Many seek Agni, man has found to be the Stay of All. He gives flavour to our food, the home of every man that lives 5-7-6

XXXX

OCTOBER  24 SUNDAY

Ila,Sarasvati,Mahi, three goddesses who bring us weal, Be seated harmless on the grass 4-5-8

XXXX

OCTOBER  25 MONDAY

When ghee is poured on him,Agni, he mounts on them like children rides on the back of their father.5-7-5

XXXX

OCTOBER  26 TUESDAY

Vanaspati, wherever you know the gods mysterious names, send our oblation s hitherward 4-5-t

XXXX

OCTOBER 27 WEDNESDAY

O my friends, offer to Agni, your appropriate praise, appropriate food 5-7-1

XXXX

OCTOBER 28 THURSDAY

Agni,Worshipful House Friend, our own auspicious guest, lauded by the sages.

That strength the Bull with 1000 horns possesses. In might, O Agni, you excelled others 4-1-8

XXX

OCTOBER 29 FRIDAY

He/ Agni conquers godless and malign enchantments and sharpens both his horns to gore the Rakshasas 4-2-9

XXXX

OCTOBER  30 SATURDAY

Ila,Sarasvati,Mahi, three goddesses who bring us weal, Be seated harmless on the grass 4-5-8

XXX

OCTOBER  31 SUNDAY

The youthful Mother keeps the Boy / Agni in secret pressed to her close, nor yields him to the Father. But he lies upon the arm, the people see his unfading appearance before them 4-2-1

—-SUBHAM —–

 tags – October 2021, Calendar, Vedic quotes, Fourth Mandala

இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி ! – PART 2 (Post No.10,152)

Agriculture in Rig Veda

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,152

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேர சோழ பாண்டியர்கள் உலகிலேயே நீண்ட காலத்துக்கு அடித்துக்கொண்டு செத் தொழிந்தார்கள் . இது போல வடக்கே நடந்த ஒரு யுத்தம் இது. அதாவது ஒரே இனத்தில் உட் பூசல் ; அரக்கர்கள் இல்லாத மதநூல் உலகில் எந்த மதத்திலும் இல்லை. போர் நடைபெறாத பகுதி இந்தப் பூவுலகில் எதுவுமே இல்லை. இது போல ரிக் வேத காலத்திலும் உட்பூசல் , வெளிப்பூசல்கள் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் இனப் பூ ச்சு பூசிய அயோக்கியத்தனத்தை மார்க்சீய கும்பலும் மாக்ஸ் முல்லர் கும்பலும் செய்தன. இந்து மத நூல்கள் எவற்றிலும் இந்துக்கள் வெளியிலிருந்து வந்ததாக எழுதவில்லை. தேவர்களும் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று ஏங்குவதாக புராணங்கள் சம்ஸ்கிருதப் பாடல்களில் பாடுகின்றன.

பொன் மயமான இலங்கை வேண்டுமா? என்ற வினா வந்த போது “ஜனனி ஜன்ம பூமிஸ் ச ஸ்வர்காதபி கரீயஸி “– என்று இராமபிரான் சொல்கிறான். “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” –என்று பாரதி அதை மொழி பெயர்த்தார். அதாவது அயோத்தி மாநகரமுள்ள கோசல நாடு சுவர்க்கத்தை விடச் சிறந்ததாம். இப்படி நதிகளுக்கும் நாட்டிற்கும்  ‘தாய்’ என்ற பட்டம் சூட்டிய  கலாசாரம் இந்து கலாசாரம். இதை ரிக் வேதத்தில் இருந்து கிரேக்கர்கள் ‘காப்பி’ copy   அடித்து உலகிற்குப்  பரப்பினர்  .

இதோ இரண்டு யமுனைக் குறிப்புகள்:-

ரிக் வேதம் 5-52-17

ஒரு படையாகத் திரண்ட, ஏழு ஏழான (7X7+49) சக்தர்களா மருத்துக்கள், எனக்கு நூற்றுக் கணக்கான பசுக்களை அளிப்பார்களாகுக . நான் யமுனைக் கரையிலே புகழ்பெற்றுள்ள பசுக்களின் செல்வத்தை அடைவேனாக . குதிரைகளின் செல்வத்தை அடைவேனாக.

இந்த துதியிலும் ஒன்பதாவது மந்திரத்தில் (ninth mantra)  பருஸ்ணி என்ற பஞ்சாப் நதியின் பெயரை ரிஷி குறிப்பிடுகிறார். ஆக ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதியில் ஆயிரம் மைல் இடைவெளியில் ஓடும் நதிகள் வருகின்றன. இந்த இரண்டு நதிக்கரைகளில் இரண்டு மோதல்களில் சுதாஸ் வெற்றி பெற்றதாக ஏனைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த யுத்தத்தில் விசுவாமித்திரர் – வசிஷ்டர் இடையேயான  பெர்சனாலிட்டி க்ளாஷும் Personality Clash (உரைகளில்) வருகிறது.

மிகப்பழைய யுத்தம் இப்படி பரந்த நிலப்பரப்பில் நடப்பது அவர்களின் ஆட்சிப் பரப்பை காட்டுகின்றன. ராமாயணமும் மஹா பாரதமும் இதை உறுதிப் படுத்து கின்றன ; கிருஷ்ணன் தன் தலைநகரை உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து 800 மைல்களுக்கு அப்பாலுள்ள குஜராத் மாநில துவாரகா துறைமுகத்துக்கு மா ற்றினான். அது ஒரு சுனாமி தாக்குதலில்  அழிந்ததை மஹாபாரதம் பேசுகிறது. இப்பொழுது 5000 ஆண்டுப் பழமையான அமைப்புகளை கடலடி தொல்பொருட்த் துறையினர் நமக்குக் காட்டுகின்றனர் . அவருக்கும் முந்தியவர் ராமன் !

xxx

ரிக் வேத 7-18-19

இந்த துதி முழுதும் வரலாற்றுக்குறிப்புகள் உடையது. இதில்தான் தெளிவாக பருஷ்ணி – யமுனை – சுதாஸ் வெற்றி வருகிறது. யமுனை பற்றிய குறிப்பை மட்டும் தருகிறேன்

போரிலே அவன் (King Sudas) பேதனைக் கொன்றபோது யமுனைக் கரையில் வசித்தவர்களும் , திரிசத்தவர்களும் இந்திரனைப் புகழ்ந்தார்கள். அஜாசர்களும் சிசுருக்களும் யக்ஷவர்களும் அவனுக்குப் போரிலே கொல்லப்பட்ட குதிரைகளின் தலைகளைப் பலியாக்கி நிறையாக அளித்தார்கள் “.

இந்தப் பாடலில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் எழுதுவேன்.

இறுதியாக மார்க்சிஸ்ட் , மாக்ஸ் முல்லர் சவப்பெட்டிகளில் ஆணி அடிப்போம். ரிக் வேதம் முழுதும் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன. இவைகளும், அவர்கள் ‘நாடோடிகள்’ அல்ல என்பதைக் காட்டும். ரிக்வேதத்தில் ஸபா, தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் முதலியவையும் வருகின்றன. அந்த சபை/ அவை என்பதை இன்று இந்தியா முழுதும் பயன்படுத்தி வருகின்றனர் .

ரிக் வேதத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வேடிக்கையான துதி ‘சூதாட்டக்காரன் புலம்பல்’ ஆகும். இது நம்ம ஊர் குடிகாரன் புலம்பல் போன்ற பாட்டு. அவன் கூட விவசாயத்தின் பெருமை யைச் சொல்கிறான்.

டேய் சூதாட்டக்காரா — தனக்குத் தானே சொல்லி புலம்பும் காட்சி —

டேய் சூதாட்டக்காரா ; நான் சொல்றத நம்புங்கடா ; எவனும் சூதாட்டம் ஆடாதீங்கடா ; நிலத்தைப் பண்படுத்தி , விவசாயம் செய்யுங்க; இதில் கிடைக்கும் காசு பணத்தில் சுகமாக வாழுங்க!  அங்கு பசுக்களும் சாப்பிட்டு வளரும் ; வீட்டிலே மனைவியும் இருக்கா . இதையே எனக்கு சவிதா/ சூரிய தேவன்  சொன்னான் .10-34-14

இதற்கு முந்திய மந்திரங்களில் மனைவி விரட்டி அடித்த புலம்பல் எல்லாம் வருகின்றன. அதனால்தான் இந்த மந்திரத்தில் விவசாயம் செய்து உழைத்து காசு சம்பாதித்தால் ‘வீட்டில் மனைவியும் இருப்பாள்’ என்ற வரி வருகிறது . இதை அனைவரும் படித்து (கவிதை 10-34; சூதாட்டம் பற்றியது) மகிழவேண்டும். சூதாட்டம் என்பதை எடுத்துவிட்டு சாராயம் குடித்தல் என்று போட்டாலும் பொருந்தும்.

வள்ளுவனும் சூதாட்டம், கள் பற்றி எழுதி இருப்பதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இது தமிநாட்டிலும் பெரிய தீங்கு விளைவித்தது புரிகிறது. ஆக —  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லோரும் தொழு துண்டு பின் செல்வர் — என்று விவசாயத்தை ரிக் வேதம் போற்றுவதால் ,மாக் ஸ்முல்லர் , மார்கஸியவாதிகளின் சவப்பெட்டியில் ஓங்கி ஆணி அறைந்துவிட்டோம் . இனி அந்தப் பிரேதங்கள் எழுந்திருக்காது!!!

–சுபம்—

tags- யமுனை நதி 2

ஸ்ரீ குமரகுருபரர்! – 1 (Post No.10,151)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,151

Date uploaded in London – 29 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-9-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஸ்ரீ குமரகுருபரர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சைவ நெறியும் தமிழ் மொழியும் செழிக்க பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த பெரும் மகான் குமரகுருபரர் ஆவார்.

இவரது அவதாரப் பெருமையை கொண்ட நாட்டை மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் வெகுவாகப் புகழ்கிறார்.

“செந்தமிழுஞ் சந்தனமுந் திசையெல்லாம் பரிமளிக்க

மந்தவளி யுமிழ் மலய வளர் குடுமி நின்றிழிந்து

கொந்தவிழு மலர்வீசிக் குளிர்கெழுமுத் தெடுத்திறைந்து

முந்தவெழு புனற்பொருனை முழுவளத்த தந்நாடு”

என்ற பெரும் பெருமையை உடைத்த பாண்டிய நாட்டிலே தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அவதரித்தார் குமரகுருபரர். ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலிக்கு 18 மைல் கிழக்கே தாம்பிரவர்ணிக் கரையில் உள்ளது. அதற்கு மூன்று மைல் கிழக்கே ஆழ்வார் திருநகரி இருக்கிறது. திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 18 மைல் தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தின் வடபாகத்தில் கைலாயநாதர் ஆலயம் உள்ளது.  இந்த ஊரில் சைவ வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் அவர். குழந்தைக்கு ஐந்து வயது வரையில் பேச்சு வரவில்லை. இதனால் மன வருத்தமுற்ற பெற்றோர் குழந்தையை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று முருகப் பிரானைத் தொழுது இலை விபூதி பிரசாதத்தைப் பெற்று முருகனிடம் குழந்தையை அடைக்கலமாகத் தந்தனர். முருகப் பெருமானின் அருளால் குழந்தை பேசத் தொடங்கியது. முருகன் அவரது கண் முன் தோன்றி ‘நீ யார்’ என்று கேட்க குமரகுருபரர் ‘அடியேன்’ என்றார். இறைவன் ஒரு கணத்தில் சைவ சித்தாந்த நல் உணர்வை அவருக்கு நல்கி ‘குருபரன்’ என்ற பெயரை இட்டு மறைந்தார். அன்றிலிருந்து அவர் குமரகுருபரன் என்று அறியப்படலானார்.

முருகனின் திருவருளால் அவர் தூய தவ வாழ்க்கையை வாழத் தொடங்கினார். முதலில் கந்தர் கலி வெண்பாவை இயற்றினார். பின்னர் தனது ஊருக்கு வந்து கயிலைக் கலம்பகம் என்ற நூலை இயற்றினார்.

தல யாத்திரை ஒன்றை மேற்கொண்ட அவர், திருநெல்வேலி, குற்றாலம், திருக்கானப்பேர், திருவாடானை உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு, பின்னர் மதுரையை அடைந்தார்.

அப்போது மதுரையை திருமலை நாயக்க மன்னர் சிறப்புற ஆண்டு வந்தார்.

திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் 1623முதல் 1659 முடிய என நிர்ணயித்துள்ளனர். ஆகவே குமரகுருபரர் வாழ்ந்த காலம் இது என கொள்ளலாம்.

மன்னர் திருமலை நாயக்கரது கனவிலே தோன்றிய மீனாட்சியம்மன், “என் புதல்வன் எம் அருள் பெற்றுப் பாடிய நூலை நான் கேட்க விரும்புகின்றேன்” என்று கூறி அருளினார்.

காலையில் திருமலை நாயக்கர் தமது அவையினரிடம் ‘இந்த ஊருக்கு யாரேனும் பெரியவர் வந்திருக்கிறாரா என்று வினவினார்.

“மன்னரே! ஆமாம். ஐந்து வயது வரை பேசாமல் இருந்து முருகன் அருளால் பேசத் துவங்கிப் பேரருளாளராக விளங்கும் குமரகுருபரர் மதுரைக்கு வருகை புரிந்துள்ளார். அவர் ஒரு பிள்ளைக் கவி பிரபந்தத்தை இயற்றியுள்ளார் என்று  அவர்கள் பதில் கூறினர்.

இதைக் கேட்ட திருமலை நாயக்கர் மனம் மிக மகிழ்ந்து அவர் தங்கியிருந்த திருமடத்திற்குச் சென்று அவரை வணங்கி அவரது நூலை அரங்கேற்றுமாறு வேண்டினார்.

பேரவை ஒன்று கூட, அரங்கேற்றம் ஆரம்பமானது. அப்போது வருகைப் பருவம் படிக்க ஆரம்பித்த நாளில் அங்கயற்கண்ணிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் குழந்தை வடிவினளாய் ஆனாள் அம்மன். குழந்தை ஓடி வந்து மன்னரின் மடி மீது அமர்ந்தது. ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்” என்ற பாடலை, குமரகுருபரர் பாட ஆரம்பிக்க அரசர் கழுத்திலிருந்த முத்தாரத்தை எடுத்த குழந்தை குமரகுருபரரின் கழுத்திலே அணிவித்தது.  பின்னர் மறைந்தது. இதனால் குமரகுருபரரின் பெருமை அனைவருக்கும் நன்கு விளங்கியது. திருமலை நாயக்கர் அவரை பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமரச் செய்து அவருக்கு உயரிய மரியாதையை அளித்தார். அங்கு ‘மீனாட்சி அம்மை குறம்’, ‘மீனாட்சி இரட்டை மணி மாலை’ ஆகிய நூல்களை குமரகுருபரர் இயற்றினார்.

ஒரு நாள் மன்னர் உணவு உட்கொள்ளக் காலதாமதமானது. உடனே குமரகுருபரர் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்ற திருக்குறளைக் கூறினார். இதைக் கேட்ட மன்னர் ‘இது எங்குள்ளது’ என்று வினவ குமரகுருபரர் திருக்குறள் பற்றிய விளக்கத்தை அளித்தார். அது போன்ற நீதி நூல் ஒன்று இயற்றுமாறு அவர் வேண்ட குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்ற ஒரு அற்புதமான நூலை இயற்றினார். இதனால் மகிழ்ந்த மன்னர் திருமலை நாயக்கர் இருபதினாயிரம் பொன் வருவாயை உடைய அரியநாயகி புரம் என்ற ஊரை அவருக்கு ஈந்தார். அவர் மதுரைக் கலம்பகம் என்ற நூலையும் இயற்றிப் பாடினார். (தொடரும்)

TAGS – குமரகுருபரர் 1 

இந்து விரோத கும்பல் மீது யமுனை நதி கொடுத்த செமை அடி ! – PART 1 (Post No.10,150)

RIVER GANGA MEETING YAMUNA, BOTH ARE IN DIFFERENT COLOURS.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,150

Date uploaded in London – 28 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாக்ஸ் முல்லர் (Max Muller) தலைமையிலான சுமார் 30 வெள்ளைத் தோல் கும்பலும் வெளிதேச விசுவாசம் கொண்ட  இந்து மத விரோத Marxist  , மார்க்சீய கும்பலும் பரப்பிவந்த அப்பட்டமான பொய்க்கு ரிக் வேத யமுனை நதி குறிப்புகள் செமை அடி ,மிதியடி கொடுத்துவிட்டன .

உலக மகா கவிஞன் சுப்ரமண்ய பாரதி, காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி, பி.ஆர் அம்பேத்கார் முதலிய நூற்றுக் கணக்கான அறிஞர்கள் , பெரியோர்கள் தூக்கி எறிந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்றும் திரும்பத்திரும்பச் சொல்லுவோருக்கு அடி மேல் அடி கொடுக்கிறது ரிக் வேதத்தில் உள்ள நதி சூக்தம் முதலிய குறிப்புகள்.

இதோ விவரம்:

200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரனின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. இந்தியாவைப் பிடித்ததை எப்படி நிய்யப்படுத்துவது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான் , போட்டான் ஒரு வெடி குண்டை. 700 ஆண்டு முஸ்லீம் ஆக்ரமிப்புக்கும் 300 ஆண்டு வெள்ளைக்காரன்

ஆக்ரமிப்புக்கும் ஒரு பொய்யைச்   சொல்லி நியாயம்  கற்பித்தான்.

“இங்கே பாருங்கடா ! 700 ஆண்டுக்கு உங்களை முஸ்லீம் ஆண்டான். அதுக்கு முன்னாடி கைபர் கணவாய் வழியாக ஆரியன்னு ஒத்தன் வந்தான். அவன் இந்த நாட்டு சொந்த குடி மக்களை எல்லாம் விரட்டிட்டு உங்களை ஆண்டான். அது போலத்தான் நாங்களும். அவங்க ஆண்டபோது சும்மா இருந்தீங்க. பேசாம வாயைப் பொத்திக்கினு கிடங்க ; இல்ல, இந்தப் பாரு; துப்பாக்கி, பீரங்கி.”

இதை மாக்ஸ்முல்லர் கும்பல், மார்க்சீய கும்பல், தமிழ் நாட்டில் திராவிடக் கழகம், ஜஸ்டீஸ் பார்ட்டி JUSTICE PARTY முதலியன திரும்பத் திரும்ப சொன்னார்கள். 1921 வாக்கில் சிந்து சமவெளி நாகரீக தடயங்கள் கிடைத்தவுடன் அதை திராவிட நாகரீகம் என்ற பொய் சொல்லி,

“பாத்தீங்களா, நாங்க அன்றே சொன்னோம் ; இன்னிக்கு ப்ரூப் PROOF பும் கிடைச்சிருச்சு” .

இது அப்பட்டமான அபத்தக் கதை என்பதை கடந்த 50 ஆண்டுக்கால  அணுசக்தி BARC ஆராய்ச்சியும், நாஸா NASA என்னும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பும் நிரூபித்துவிட்டன  (சரஸ்வதி நதியின் 4000 ஆண்டு பழமை, சிந்து வெளியில் திராவிட எலும்புக் கூடுகள் கிடைக்காமை , குதிரை எலும்பு சர்ச்சைகள் பற்றி தனியே எழுதிவிட்டதால் இங்கு விளக்க வில்லை; சிந்து வெளி பற்றிய எனது 25, 30 கட்டுரைகளைப் படிக்கவும் )

இந்தக் கட்டுரையில் யமுனை நதி தரும் சான்றுகளை மட்டும் காண்போம் .

RV 10-75-5

முதலாவது பத்தாம் மண்டலத்தில் 75ஆவது துதியில் உள்ள ஜந்தாவது மந்திரத்தைக் கேளுங்கள்:

“கங்கையே! யமுனையே! சரஸ்வதியே ! சுதுத்ரியே! பருஸ்னியே!  அசின்னையோடு  , மருதவிருதையே , விதஸ்தையே , என்னுடைய இந்த துதியை ஏற்றுக்கொள்ளுங்கள் ; சுசோமையோடு ஆர்ஜீகியே ; நான் சொல்லுவதைக் காது கொடுத்துக் கேளுங்களேன் (PLEASE ,PLEASE ப்ளீஸ் ,ப்ளீஸ் )

முதலில் இது பற்றி என் கருத்துக்கள் :

கிழக்கிலுள்ள நதி முதல் மேற்காகச் சொல் கிறார்கள் ; அதாவது வேத கால இந்துக்கள் நாகரீகம் உலகிலேயே மிகப் பழைய நகரமான காசியில் இருந்தது. பின்னர் சரயு நதியின் மீதுள்ள அயோத்தி, யமுனை நதி மீதுள்ள மதுராவுக்குப் போனது. பின்னர் ஈரான் நாடுவரை இந்த்துக்களாட்சி ஏற்பட்டது. இதை வெள்ளைக்காரன் ‘உல்ட்டா’ ஆக்கினான். அதாவது தலை  கீழ் வரிசையில் சொன்னான். அது அது தப்பு  என்பதை வேறு இரண்டு யமுனைக் குறிப்புகள் காட்டுகின்றன. ரிக் வேத்தின் பத்து மண்டலங்களில் கங்கை பற்றிய குறிப்புகள் பழைய மண்டலங்களிலும் சிந்து என்பது பிந்திய மண்டலங்களிலும் வருவதை ஸ்ரீகாந்த் தலகெரி Srikant G Talageri போன்ற அறிஞர்கள் அண்மைக்காலத்தில் காட்டியுள்ளனர்.

இது பற்றி வேத கால ஹரப்பா மக்கள் (சிந்து வெளி நாகரீகம்) THE VEDIC HARAPPANS BY BHAGWAN SINGH என்ற புஸ்தகம் எழுதிய பகவான் சிங் என்பவர் 1957-ம் ஆண்டில் முகர்ஜி எழுதியதையும் சுட்டிக்காட்டிவிட்டு ஒரு அருமையான கேள்வி எழுப்புகிறார் . கங்கை முதல் ஆப்கானிஸ்தான் வரை  ஓடும் நதிகளை எல்லாம் தனது சொந்த தாய் என்று வருணித்ததுவிட்து ‘நான் கதறுவதைக் கேளுங்கள்’ என்று இந்த நதிகள் சூக்தம் கூறுகிறது. வேத கால இந்துக்கள் நாடோடிகளாக இருந்தால் இப்படி பல ஆயிரம் மைல் இடைவெளிகளில் ஓடும் நதிகளை தன சொந்த தாய் என்று வருணிப்பானா? அப்படிப்பட்ட நாடோடிகளைக் காட்ட முடியுமா ? என்று .

இங்குதான் மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்களின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இந்த இரண்டு கும்பல்களும் வேதகால இந்துக்களுக்கு ‘ஆரிய’ என்ற பெயரைச் சூட்டி அதற்கு இனவாத கலர்/ சாயத்தைப் பூசி அவர்களை “நாடோடிகள் ” NOMADS’ என்று வருணிக்கின்றன. ஆக முதல் பொய்யை , முழுப்பொய்யை உடைத்தோம் . இனி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடி யாது!!

யமுனை நதி பற்றி அகநாநூறு , சிலப்பதிகாரத்தில் கிருஷ்ண பரமாத்மாவுடன் தொடர்பு படுத்தும் பாடல்கள் உள. கங்கை, இமயம் பற்றி பல பாடல்கள் உள . ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களும் இதைப் பாடிப்பரவினர் ; போற்றித் துதித்தனர் .

அடுத்த இரண்டு குறிப்புகள் வரலாற்றுக் குறிப்புகள் . உலகில் நடந்த மிக முக்கியப் போர்களில் ஒன்று ‘பத்து ராஜ யுத்தம்’ (DASA RAJNA YUDDHA) ; இந்த ‘பத்து அரசர் போர்’ பற்றியும் அதில் விசுவாமித்திரரை குல குருவாகக் கொண்ட மன்னன் சுதாஸ் வெற்றி பெற்றது பற்றியும் ரிக் வேதம் நெடுகிலும் பாடல்கள் உள்ளன. ஆகையால் இது மிகப்பழைய போர், மிகப்பெரிய போர் என்பதில் ஐயமில்லை.

இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரிக் வேதம் பயிலுவோர் இதைப்பாடி வருகின்றனர். அதில் மன்னன் சுதாஸ்,  யமுனை நதிக்கரையில் வெற்றி பெற்றான் என்றும் வருகிறது. இந்த இடத்தை மொழி பெயர்த்த வெள்ளையர்கள் முழி பிதுங்கிப் போனார்கள் ; சில வெள்ளைத் தோல்கள் , எங்களுக்குப் புரியவில்லையே என்று வியப்புக் குறிபோட்டன. ஹாப்கின்ஸ் என்ற பயல், ‘இது வேறு யமுனை நதி??’ என்று கேள்விக்குறி போட்டான்.

இவை என்ன காட்டுகின்றன ?

TO BE CONTINUED…………………………..

TAGS-  இந்து விரோத கும்பல் , யமுனை நதி , செமை அடி, ரிக் வேதம், RV.10-75

LONDON CALLING GNANAMAYAM 27-9-2021(Post No.10,149)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,149

Date uploaded in London – 28 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

XXX

27 -09– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  Kovai Sri Suresh Guruji

TALKS BY SRI A V SWAMINATHA SIVACHARYAR,

FOUNDER SIVAPURAM TRUST, MAYILADUTHURAI

&

THILLAI SRI KARTHIKEYA SIVAM, ADHI SAIVAR NALA VAZVU MAIYAM, KLLAKURICHI

(TWO SAIVAITE SCHOLARS SPEAK ON THE NEW BOOK ‘ SRI KACHIAPPA SIVACHARYAR PURANAM’)

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT  Kumara Gurupara Swamikal -15 mts

DR N KANNAN’S TALK from Chennai—ON Alvar Pasurams– 10 mts.

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

APPR.75 MINUTES.

Tags- BROADCAST2792021

LONDON CALLING THAMIZ MUZAKKAM 26-9-2021 (Post No.10,148)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,148

Date uploaded in London – 28 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

USUAL TIME- LONDON TIME 2 PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM, PLEASE USE OUR ZOOM LINK.

Duration- approximately one hour

XXX

26-9-2021 SUNDAY PROGRAMME as broadcast

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer – Miss Shriya Vijayakumar, Chennai

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON Akilandesswari Temple in Tiruchi-  10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts (with Mrs Srilatha Sairam and Mrs Radhika Srikanth)

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS

NITHYA SOWMY

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY LONDON SWAMINATHAN

Bharati Song Mannum Imayamalai Engal Malaiye…… by three little girls

–25 MINUTES

Talk by Thirukkudal Mukuntharajan on Alvar Charithram

XXXX subham xxxx

Tags –  broadcast26921

பாரதி போற்றி ஆயிரம் INDEX -2 (Post No.10,147)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,147

Date uploaded in London – 28 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பாரதி போற்றி ஆயிரம் INDEX -2

ச.நாகராஜன்

Sl    sl no of      Total no      Poems’ nos and the Poet          Article no   Published

No  Poems      of                                                                         Date

                           Poems

51) 333-350   18    18) அருட்கவிஞர் அ.காசி        4740        14-2-18

52) 351-357   7     7) அருட்கவிஞர் அ.காசி         4745        15-2-18

53) 358-366   9     9) அருட்கவிஞர் அ.காசி         4749        16-2-18

54) 367-376   10    10)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4753        17-2-18

55) 377-386   10    10)    “      “                  4757        18-2-18

56) 387-395   9     9)     “      “                  4765        20-2-18

57) 396-402   7     7)     “      “                  4772        22-2-18

58) 403-411   9     9)     “      “                  4779        24-2-18

59) 412-420   9     9)     “      “                  4792        28-2-18            

60) 421-429   9     9)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4803        2-3-18

61) 430-441   12    12)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4806        4-3-18 

62) 442-454   13    13)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4810        13-3-18

63) 455-463   9     9)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4816        15-3-18

64) 464-475 12 12)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4842        23-3-18

65) 476-484   9     9)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4854        27-3-18

66) 485-491   7     7)கவிஞர்

                    கே.பி.அறிவானந்தம்           4870        1-4-18

67) 492-525   34    34) “    “                        “     “

68) 526-549   24    24)  “       “                  4876        3-4-18

69) 550-569   20    20) “        “                    “     “

70) 570-578   9     9)  “        “                  4882        5-4-18

71) 579-587   9     9)  “  “                    “     “

72) 588-600   13    13) “         “                  4890        7-4-18

73) 601-613   13    13)  “       “                    “     “

74) 614-621   8     8)   “       “                  4900        10-4-18

75) 622-631   10    10)   “ “                    “     “

76) 632-641   10    10)  “       “                  4909        13-4-18

77) 642-653   12    12)  “        “                    “                “

78) 654-665   12    12)  “       “                  4915        15-4-18

79) 666-691   26    26)புலவர் கு.ப.பெருமாள்        4925        18-4-18

80) 692-701   10    10)புலவர் கு.ப.பெருமாள்        4931        20-4-18

81) 702-727   26    26)புலவர் கு.ப.பெருமாள்        4944        24-4-18

82) 728-741   14    14)புலவர் கு.ப.பெருமாள்        4950        26-4-18

83) 742-778   37    37) “        “                  4955        28-4-18

84) 779-819   41    41)    “      “                  4965        1-5-18

85) 820-851   32    32)    “      “                  4975        4-5-18

86) 852-883   32    32)    “      “                  4981        1-5-18

87) 884-918   35    35)    “      “                  4988        8-5-18

88) 919-948   30    30)    “      “                  4995        10-5-18

89) 949-976   28 1)புலவர் நாகி, புதுவை             5001        12-5-18

                                     2)புலவர் சீனு, புதுவை

               1)இலந்தை ராமசாமி, கனடா

               1)கவியோகி வேதம், சென்னை

               1)பாவலர் எஸ்.பசுபதி, கனடா

              2) கல்லாடன், புதுவை

              1) பாவலர் அண்ணா தருமலிங்கம், புதுவை

              1) புலவர் செ.இராமலிங்கன், புதுவை

              2) புலவர் துரை.மாலிறையன், புதுவ

              2) பாவலர் சூரிய விசயகுமாரி, புதுவை

              1) கவிஞர் தே.சனார்த்தனன், புதுவை

              1) பாவலர் வே.முத்தையன், புதுவை

              1) பாவலர் கி.பாரதிதாசன், பிரன்ஸ்

              1) கவிஞர் வ.பழனி, புதுவை

              1) கவிஞர் மு.தியாகராசன், புதுவை

              2) கவிஞர் இராச.தியாகராசன், புதுவை

              1) புலவர் மு.இறைவிழியனார், புதுவை

              2) பாவலர் சிவ. இளங்கோ, புதுவ

              2) முனைவர் உரு.அசோகன், புதுவை

              2) கவிஞர் ந.இராமமூர்த்தி, புதுவை

90) 977-1000 24 977-1) ஹா.கி.வாலம்            5008        14-5-18

                                       978-1) ப.ஜீவானந்தம்

                979-1) தேனம்மை லட்சுமணன்

                 980-1) கு.சா.கிருஷ்ணமூர்த்தி

                 981-990-10) மன்னை பாஸந்தி

                 991-1000-10) ச.நாகராஜன்

***

கவிஞர்களும் பாடல் எண்ணிக்கையும்!

பாடல் இயற்றியவர்கள் முன் திரு, திருமதி, பாவலர், கவிஞர் என்ற அடைமொழிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்! பல பட்டங்களையும் பெற்றுள்ள கவிஞர்கள் இவர்கள் என்பதால் பட்டங்கள் அனைத்தையும் இங்கு தரவில்லை. ஆங்காங்கு கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் கட்டுரைகளில் தரப்பட்டுள்ளன.

01)    V.G. சீனிவாசன்                       6

02)    இரகுபதி சாமிநாதன்                  6

03)    கலைமோகன்                        3

04)    மு.சதாசிவம்                         2

05)    கா.தேவராசக்கனி                     1

06)    சூ.கிரிதரன்                           6

07)    ம.க.சிவசுப்பிரமணியன்                6

08)    பாரதிதாசன்                          44

09)    நாமக்கல் கவிஞர்                    44

10)    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்      1

11)    அழ.வள்ளியப்பா                     5

12)    கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை    35

13)    கண்ணதாசன்                        38

14)    பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர்        16

15)    நா.சீ.வரதராஜன்                      4

16)    சங்கு சுப்பிரமணியன்                 1

17)    மதிவண்ணன்                        2

18)    ஆர்.பி.சாரதி                         1

19)    கவிஞர் தமிழழகன்                   10

20)    கவிஞர் K.ராமமூர்த்தி                 18

21)    சௌந்தரா கைலாசம்                 5

22)    அருட்கவிஞர் அ.காசி                 112

23)    கவிஞர் கே.பி.அறிவானந்தம்           299

24)    புலவர் கு.ப.பெருமாள்                 283

25)   புலவர் நாகி, புதுவை                  1                                

26)    புலவர் சீனு, புதுவை                  2

27)    இலந்தை ராமசாமி, கனடா            1

28)    கவியோகி வேதம், சென்னை          1

29)   பாவலர் எஸ்.பசுபதி, கனடா            1

30)    கல்லாடன், புதுவை                  2

31)    பாவலர் அண்ணா தருமலிங்கம்,

      புதுவை                             1

32)    புலவர் செ.இராமலிங்கன், புதுவை     1

33)    புலவர் துரை.மாலிறையன், புதுவை    2

34)    பாவலர் சூரிய விசயகுமாரி, புதுவை  2

35)    கவிஞர் தே.சனார்த்தனன், புதுவை     1

36)    பாவலர் வே.முத்தையன், புதுவை      1

37)    பாவலர் கி.பாரதிதாசன், பிரன்ஸ்       1

38)    கவிஞர் வ.பழனி, புதுவை             1

39)    கவிஞர் மு.தியாகராசன், புதுவை      1

40)    கவிஞர் இராச.தியாகராசன், புதுவை    2

41)    புலவர் மு.இறைவிழியனார், புதுவை  1

42)    பாவலர் சிவ. இளங்கோ, புதுவை 2

43)    முனைவர் உரு.அசோகன், புதுவை     2

44)    கவிஞர் ந.இராமமூர்த்தி, புதுவை       2

45)    ஹா.கி.வாலம்                        1

46)           ப.ஜீவானந்தம்                        1

47)    தேனம்மை லட்சுமணன்               1

48)    கு.சா.கிருஷ்ணமூர்த்தி                 1

49)    மன்னை பாஸந்தி                    10

50)    ச.நாகராஜன்                         10

50 கவிஞர்கள் 1000 பாடல்கள்!

வாழி பாரதி! வாழி கவிஞர்கள்!! வாழிய பாரத மணித் திருநாடு!!!

***

Tags- பாரதி போற்றி ஆயிரம் INDEX -2

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 62 (பகுதி 2)- Post No10,146

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,146

Date uploaded in London – 28 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 62 (பகுதி 2)

புதுவையில் மகாகவி பாரதி : முனைவர் R.கோபாலன் சாஸ்திரி

      இந்த நூலில் உள்ள ஐந்தாம் அத்தியாயம் சு’வை புதிது, பொருள் புதிது, வளம் புதிது’.

நூலாசிரியர் கோபாலன் சாஸ்திரி ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கடுக்காக முன் வைத்து பாரதியாரின் கவிதைகளில் உள்ள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது என்பதை நன்கு நிரூபிக்கிறார். பாரத மாதாவிற்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிய புதிய கவியாக பாரதியார் மிளிர்கிறார். பத்து உறுப்புக்களைக் கொண்ட தசாங்கம் பாட்டியல் நூல்களில் தனியதோர் இடங்கொண்டது என்பதை விளக்கும் ஆசிரியர், தசாங்கத்தையும் பாரதியார் பாரதமாதாவிற்கே சாற்றுகின்றதை நன்கு விளக்குகிறார். நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி ஆகிய பத்தையும் அட்டவணை போட்டு விளக்கி அதற்கான ராகத்தையும் தந்திருக்கிறார். விநாயகரை பாரதியார் பல்லுயிரும் இன்புற்று வாழப் பிரார்த்திக்கிறார். அரவிந்தரும் தனது சாவித்திரி காப்பியத்தில் சாவித்திரி இறைவனை  உலகில் உள்ள அனைத்துமே மகிழ்ச்சி அடைதல் வேண்டும் என்று வேண்டுகிறாள். இதை நூலாசிரியர் அழகுற விளக்குகிறார். இந்த அத்தியாயத்தில் பாரதி தன் வாழ்க்கையில் கண்ட மூன்று தெய்வ தரிசனங்களை விளக்குகிறார். 1) பிள்ளைப் பருவத்தில் வாணியின் தரிசனம் 2) 1905இல் சகோதரி நிவேதிதா காட்டிய பாரத மாதாவின் தரிசனம் 3) புதுவையில் குள்ளச்சாமி பாரதிக்கு காட்டிய ஞான தரிசனம். அங்கேயே கோவிந்தசாமி என்ற ஞானி பாரதியாருக்கு அவரது தந்தையையும் தாயையும் காட்டி அருளினார். பாரதி சித்தர்களைப் பற்றி ஆங்கிலத்திலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பற்றிய ஆய்வையும் காண முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக “சாவுக்குச் சாவு வந்து விடும்” என்பது பற்றிய கருத்து அழகுற விளக்கப்படுகிறது.

 ஆறாவது அத்தியாயம் ‘நீச பாரதம்’ போய் ‘மகா பாரதம்’ பிறக்க – என்ற அத்தியாயமாக அமைகிறது.

பெண்களுக்கான சமநீதியை பாரதியார் எப்படி விரும்பினார், பெண்களை அவர் எப்படிப் போற்றினார் என்பதை இந்த அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. ‘பக்தியினால் இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி’ என்ற பாடலை பாரதியார் ஆவேசத்தோடு பாடுவார். நம்பிக்கை உள்ளோர் எந்த இடர்ப்பாடுகளையும் எதிர் கொண்டு வெல்வர் என்பது பாரதியின் சித்தாந்தம்.

அடுத்த ஏழாம் அத்தியாயம் – ‘தத்துவமும் உரைநடைத் திறனும்’

பாரதியாரின் கவிதைகளைப் பெரிதும் பாராட்டுவோர் கூட அவரது தத்துவத்தையும் உரைநடைத் திறனையும் முழு அளவில் கவனிப்பதில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்த அத்தியாயம். பாரதியாரின் எழுத்துக்கள் சிணுங்கல் மழையல்ல; அது பெருமழை. பெருமழையாக அனைத்தையும் விரைவில் சொல்லி விட வேண்டும் என்பது பாரதியாரின் கோட்பாடு. அதற்கு அவர் தந்த பெயர் ‘கபஞ்ச சீக்கிரம்’. பாரதி யோக சூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். (முதல் பகுதியான சமாதி பாகத்தை அவர் மொழியாக்கம் செய்துள்ளார்) கீதையைச் சொன்னவர் ஒரு அரசர்; கேட்டவரும் ஒரு அரசரே. போர்க்களமே ஞான உபதேசக் களமாக மாறுகிறது. இதை பாரதியார் ‘ஓர் அற்புத நாடகத் தொடக்கம்’ என்கிறார். பகவத் கீதையில் பாரதியாரின் முன்னுரை அனைவரையும் கவர்கிறது. ‘கீதை சாகாக் கலையைக் கற்றுக் கொடுக்கும் நூல்’ – இப்படிப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் இந்த அத்தியாயத்தில் நூலாசிரியர் அழகுறத் தருகிறார்.

மற்றும் ஞானரதம், பாரதியின் தலையங்கங்கள் பற்றிய பல தகவல்களையும் இந்த அத்தியாயத்தில் காண்கிறோம்.

 கடைசி அத்தியாயமான எட்டாம் அத்தியாயம் – ‘பாரதியில் முருகுணர்ச்சி’ என்பதாகும்.

பாரதியின் பாக்களில் அழகுணர்ச்சியை எப்படி எல்லாம், எங்கெல்லாம் கண்டு ரசிக்கலாம் என்பதை விளக்குகிறது இந்த அத்தியாயம். பாரதி என்ற கடலில் மூழ்கி முத்துக் குளிக்கும் அரிய சாதனையை கோபாலன் சாஸ்திரி செய்திருக்கிறார் இங்கு. சொல் ஒன்று வேண்டும் என்ற கவிஞன்  விண்ணையும் மண்ணையும் இணைத்து அண்டப் பெருவெளிக் காட்சியைக் காணும் பாங்கு வியத்தற்குரியது. கவி என்பவன் சத்தியத்தின் குரலைக் கேட்பவனே. ‘கவயஹ ஸத்ய ச்ருதயஹ’! அடுத்து பாரதியார் அழகுத் தெய்வத்திடம் ஏழு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான பதில்கள் பெறப்பட்டதும் அலசி ஆராயப்படுகிறது. இதை விளக்கும் விதம் அருமை அருமை என்று சொல்லலாம். விட்மன், ஹோ கூஷின், பைரன் ஆகியோர் பற்றிய விவரங்களையும் முது மொழிகளை பாரதியார் கையாண்ட விதத்தையும் இந்த அத்தியாயம் தந்து நம்மைக் களிப்புறச் செய்கிறது. ‘சிங்கம் நாய் தரக் கொளுமோ’, ‘கோயிற் பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போல்’ உள்ளிட்ட பல அழகிய புதுமொழிகளைப் படைத்தவரும் பாரதியாரே. வசன கவிதையில் பாரதியார் கையாளும் அங்கதம் பற்றியும் ஆண்டாள் பற்றி பாரதியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரை உள்ளிட்ட பல புதிய விவரங்களையும் படிக்கும் அன்பர்கள் பாரதியாரில் நாம் காண வேண்டியவை ஏராளம் உள்ளன என்பதை உணர்வர்.

மொத்தத்தில் இந்த நூல் பாரதி அன்பர்கள் சுவைக்க வேண்டிய ஒரு தெள்ளமுதம்.

நூல் வெளியீட்டாளரின் சென்னை போன் நம்பர் :9940682929 (எல்கேஎம் பப்ளிகேஷன், தி.நகர்)

***

tags- பாரதியார் நூல்கள் – 62 (பகுதி 2)

RIVER YAMUNA BAFFLED MAXMULLER GANG AND MARXIST GANG – Part 2 (Post No.10,145)

AROUND 3150 BCE, KRISHNA MOVED HIS CAPITAL 800 MILES WEST OF MATHURA TO DWARAKA. AYODHYA OF RAMA IS IN DEEP EAST. VARANASI/KASI IS FURTHER EAST.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,145

Date uploaded in London – 27 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let us now look at the importance of the three references to River Yamuna in the Rig Veda:

The reference to river Yamuna links it with the most famous war in the Vedas. It is called Dasa Rajna Yuddha (War of Ten Kings)

On 1 June 2015, I wrote:-

Now let us look at the details of the Ten Kings War.

The Dasarajna or the Battle of the Ten Kings, is an important historical event alluded to in various hymns of the Rig Veda.

Sudas was the king of Bharata Kingdom. He belonged to Trstu family. At first Visvamitra was their priest. He led him to victorious campaigns on the banks of Vipas and Sutudri. Later there was some misunderstanding and Vasistha was appointed as the priest and Visvamitra was sacked. Thereupon a long and bitter rivalry ensued between the two priests and, in revenge, Visvamitra led ten kings against the Bharata kingdom.

The ten kings were from the kingdoms of Puru, Yadu, Turvasa, Anu and Drhyu, Alina, Paktha, Bhalanas, Siva and Visvanin. In the bloody and decisive battle on the banks of River Parusni, the Bharats emerged victorious, utterly routing the ten kings. The kings of Anu and Druhyu kingdoms were drowned, while Purukutsa, King of the Puru Kingdom met his death.

There was another battle in which Sudas fought with Ajas, Sigrus and Yaksus who had united under King Bheda; but these new assailants also met the same fate and were defeated, being slaughtered on the River Jamuna.

By the time of this war, the Vedic Hindus covered a vast territory, from the banks of Jamuna in the east to Iran in in the west. In modern terms it covers the North India ,Pakistan ,Afghanistan and Iran! The earliest part of the Rig Veda sings about Ganges. So the ten people can’t be tribal chiefs. When it comes to Chera, Choza and Pandyas of Tamil kingdoms we don’t dub them as tribal chiefs. There were umpteen tribals and chieftains, but yet these three were called kingdoms. In the same way all the ten names gave big dynasties in India. Even Morton Smith’ conservative estimate gives a long list of Yadava (Yadu) kings from 1800 BCE and Puru Kings from 1800 BCE.

xxx

Shrikant G Talageri comments on this war :

Through logical argument Shrikant G Talageri has shown that the Vedic Hindus marched from East to the West. All our epics and mythologies are also confirming it. We know the exact location of Ayodhya of Ramayana, Brindhavan of Bhagavata Purana and the Indraprastha/Delhi of Mahabharata . all these places are in the East. Now we know that Kasi/Benares/Varanasi is the oldest city in the world. Because of two Monsoons and Changing river systems we don’t have much archaeological proofs. The oldest parts of the Rig Veda contain references to Ganges and Yamuna (also called Jamuna). Both these are in Sangam Tamil literature too. That means the name and fame of these rivers were known to people in the southern most part of India. Geographically speaking, it overs a vast area, which is the largest country at that time.

xxx

Max Mullers and Marxists Torn to pieces

The gangs which dubbed Vedic Hindus as nomads are torn to pieces by these references. Vedas refer to several kings, kingdoms and patriotic feelings of the Hindus. Bhagawan Singh in his book ‘The Vedic Harappans’ puts forth a beautiful argument:

“More than the names of the rivers , emotional attachment to a wide area is indicative of a national and cultural unity not to be found among people who are not highly advanced.  The passion with which the poet (RV.10-75-5) sings,

‘Favour this my land, O Ganga, O Yamuna, O Sutudri , O Parusni, O Askini, O Vitasta, O Marudvratha, O Arjikiya with Susoma, hear my call…………. Is by itself a proof of a cultural unity across the state boundaries. Another significant feature of the list of rivers, in their order from the East to West beginning from Ganges, in accordance with the course of Aila expansion and its outflow beyond northwest (Mookerji, 1957)

Has a nomadic or semi agricultural community ever emotionally associated itself with such a vast area stretching over a thousand kilometres? Could such a consciousness emerge without political and cultural unity? Has people with its roots somewhere else, even after the occupation of a country, ever attached so passionately and reverently with rivers and mountains in newfound land? No one took care to ask these questions, as the answers could be counterproductive. The geographical area mentioned in RV 10-75 broadly covers the entire Harappan area from East to West. (Now there are over 1500 Harappan Civilization sites up to Delhi)”.

xxx

My comments

Max Muller gang and Marxists gang treated Hindus as idiots and wrote and commented according to their whims and fancies. What we must take into account is

Neither of them believed in Hindu religion nor United India. Their loyalty lied elsewhere.

Neither of them took the Puranic list of kings as historical. They started Indian History from Buddha Period (Sixth Century BCE). They believed in the list of Kings in Sumer and Egypt, but not India.

Those idiots say that India did not have anyone ruling before Buddha. That means from 2500 BCE Indus Valley Civilization up to Buddha , India had no kings!!!!!

Neither of them practised Hinduism. They never believed in Re birth, Karma Theory or Miracles listed in Hindu Buddhist, Jain and Sikh Scriptures.

They never accepted our calculation of Time,

Above all, these gangs ignored all the references to Agriculture in the Vedas. There is a beautiful poem about Gambling in the Rig Veda. Even the addicted gambler in his monologue says,

Play not with dice; No! Cultivate your land; enjoy the gain (harvest) and deem that wealth sufficient ( RV.10-34-13)

There are scores of references to agriculture, through it is a religious book!

Even if one doesn’t believe in Hindus’ march towards west, one cannot ignore the vast area mentioned from Yamuna to Iran and the patriotic fervour of Vedic Hindus towards their country.

Last but not the least, the idiots who translated the Vedas could not even identify several lakes and rivers. They could not even agree among themselves whether they are lake names or river names or names of insects or food!!!! Big jokers give us a lot of jokes in their commentaries.

We must reject all the arguments of those gangs and start afresh.

“Long Live the Vedas; Beat the Drum saying this; Let there be victory in all the Eight Directions”— Tamil Poet Bharati

REFERENCES:–

RV 5-52-17

17. The mighty ones, the seven times seven, have singly given me hundred gifts.

     I have obtained on Yamuna famed wealth in kine and wealth in steeds.

RV 7-18-19

19. Yamuna and the Trtsus aided Indra. There he stripped Bheda bare of all his treasures.

     The Ajas and the Sigrus and the Yaksus brought in to him as tribute heads of horses.

RV 10-75-5

5. Favour ye this my laud, O Ganga, Yamuna, O Sutudri, Parusni and Sarasvati:

     With Asikni, Vitasta, O Marudvrdha, O Arjikiya with Susoma hear my call.

 

Tagged with dasarajna battle – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › dasarajna-battle

1 Jun 2015 — So the fact of the matter is Dasa Rajna Yuddha (Ten Kings War) is really a war between ten kingdoms. The reason for this is that the 20 plus …

–SUBHAM—

TAGS- River Yamuna, Dasarajna Yuddha, War of Ten Kings, Rig Veda

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம்! (10,144)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,144

Date uploaded in London – –   27 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம்!

வானைக் காவில் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்

தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்

ஆனைக் காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர்                      ஏனைக்  காவல் வேண்டுவார் ஏதும் இல்லையே!

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்புலிங்க ஸ்தலமாக விளங்கும் திருவானைக்கா ஆகும். இது திருச்சி நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தலமாகும்.

மூலவர் திரு நாமம் : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

அம்பிகையின் திரு நாமம் : அகிலாண்டேஸ்வரி, வடிவுடைய மங்கை    

ஸ்தல விருக்ஷம் : வெண் நாவல் விருக்ஷம் 

தீர்த்தம் :பிரம புட்கரிணி, இந்திர தீர்த்தம்

தலப் பெயர்கள் : ஞானபூமி, அமுதீச்சரம்

பெயருக்கேற்ப இத்தலத்தில் கோவிலின் மூல ஸ்தானத்தில் எப்போதும் ஜலம் இருக்கும். சுவாமி சந்நிதி சிறியது. திருச்சாலகம் என்ற பெயரை உடையது. காவிரியின் மட்டமும் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட மட்டமும் ஒரே அளவு என்பதால் காவிரியில் நீர் பெருகும் போது லிங்கம் நீரில் அமிழ்ந்து விடும்.         

மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இந்தத் தலத்தில் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை பூஜை செய்து கொண்டு வந்தன. வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேலாக  கூடு கட்டும். யானை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு  தனது துதிக்கையில் காவேரி தீர்த்தத்தை ஏந்தி வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும். இதனால் சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். சிலந்தி ஒரு நாள் இதைக் கவனித்துக் கடும் கோபம் கொண்டது. யானையின் துதிக்கையில் அது நுழைந்து கடிக்க ஆரம்பித்தது. யானை வலி பொறுக்காமல் புரண்டு மரணம் அடைந்தது. சிலந்தியும் மாய்ந்தது. இச்சிலந்தியே மறு ஜன்மத்தில் கோட்செங்கச் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை உள்ளே வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. இங்கு தவம் புரிந்து வந்த ஜம்பு மஹரிஷியின் தலையில் நாகமரம் ஒன்று உருவாயிற்று. அவர் தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்ததால், இதற்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தத் தலமும் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உண்டு. அம்பாள் கோவில் இரு பிரகாரங்களுடன் விளங்குகிறது. அம்பாள் இன்றும் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இப்படி தேவியானவள் ஈஸ்வரனைப் பூஜிப்பதைக் குறிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒரு சிவாச்சார்யர் மதிய பூஜையின் போது புடவை அணிந்து ஈஸ்வரனைப் பூஜிப்பது இன்றளவும் நடந்து வருகிறது.

முதல் பிரகாரத்தில் சந்திரன், சூரியன்,ஸரஸ்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோ இருக்கின்றனர்.

இங்கு அம்பாள் உக்கிரத்துடன் இருந்து வந்தாள். இந்தத் தலத்திற்கு வந்த ஆதி சங்கரர் அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டி அம்பாளுக்கு ஸ்ரீசக்ர தாடங்கத்தைச் சாற்றினார். சந்நிதிக்கு எதிரில் பிள்ளையான விநாயகரை அம்பிகையின் உக்கிரம் தணிகிறபடி பிரதிஷ்டை செய்ததோடு பின்பக்கத்தில் வள்ளி, தேவஸேனா சமேத சுப்ரமண்யரையும் பிரதிஷ்டை செய்தார். அம்பாளைக் கருணை நிரம்பியவளாகச் செய்தார். 3 அங்குல குறுக்களவுள்ள தாடங்கத்தின் பிரகாசத்தை 25 அடி தூரத்திலிருந்தும் பார்த்து மகிழ முடிகிறது.

இங்கு பிரம்மாவுக்குக் காட்சி தந்த தர்மபுரி நாயகி ஸமேத சங்கரேஸ்வரர் ஆலயம் ஸ்வாமி கோவிலின்  முதல் பிரகாரத்தில் இருக்கிறது.இங்கு வில்வ மரத்தையும் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீராமரால் கட்டப்பட்ட பெரிய மண்டபமும் வல்லப கணபதி கோவிலும் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் சனீஸ்வரர், தண்டாயுதபாணி, இந்திரனால் பூஜிக்கப்பட்ட விசாலாக்ஷி ஸமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட பல மூர்த்திகள் உள்ள சிறு கோவில்களும் உள்ளன. நான்காம் பிரகாரத்தின் எட்டுத் திக்குகளிலும்  எட்டு பிள்ளையார் கோவில்களும் நான்கு பக்கங்களில் அக்ரகாரங்களும் உள்ளன.

ஈஸ்வரனான சம்புநாதர் சித்தர் வடிவம் கொண்டு வேலைக்குத் தக்கபடி பொன்னாகும் வண்ணம் வேலையாட்களுக்குக் கூலியாக விபூதி கொடுக்கப்பட்டு பெரிய கோபுரமும் பிரகாரமும் நிர்மாணிக்கப்பட்டதாம். ஆகவே இந்த பிரகாரத்தை விபூதி பிரகாரம் என்பார்கள். மதில் திருநீறிட்டான் மதில் என்று அழைக்கப்படுகிறது. எவர் ஒருவர் இரு தினம் இங்கு பிரதக்ஷிணம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்கிறாரோ அவருக்கு அனைத்து காரியங்களும் ஜயமாகும், அவருக்கு மறு ஜென்மம் கிடையாது, இது சத்யம் என்று புராணம் கூறுகிறது. கோவிலுக்கு மேற்கில் வீரகண்டேஸ்வரர் ஆலயமும் ராம தீர்த்தமும் உள்ளன.

இந்தத் தலத்திற்கு 1923ஆம் ஆண்டு, ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதத்தில்  விஜயம் செய்த காஞ்சி மஹா பெரியவாள் தாடங்கங்களை விதிப்படி ஜீரணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு அணிவித்தார். இதே கோவிலின் வடபுறத்தில் வெகு காலமாக புதர்களினால் மூடப்பட்டு மறைந்திருந்த பஞ்சமுகேஸ்வரர் ஆலயத்தையும் அவரே ஜீரணோத்தாரணம் செய்தார். கோவிலில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.        

                 திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:                                                           

துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர்                               

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்                                      

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு                              

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே  

male priest in woman’s silk sari

                                நன்றி வணக்கம்!            

   ***

tags- திருவானைக்கா, அகிலாண்டேஸ்வரி,   ஜம்புகேஸ்வரர்,  ஆலயம்,