WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 5-9 -2021 (Post No.10058)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 10,058

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by LAYASHREE KALYANASUNDARAM

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by LAYASHREE KALYANASUNDARAM

Xxxx

Allahabad HC judge to Centre: Make cow national animal

Justice Shekhar Kumar Yadav said ‘scientists believe that the cow is the only animal that inhales oxygen and exhales oxygen too’.

The court made the observation while denying bail to one Javed, who was charged with offences under the Prevention of Cow Slaughter Act in Uttar Pradesh. (File photo)

Rejecting the bail petition of a man booked under the UP Cow Slaughter Act, Justice Shekhar Kumar Yadav of the Allahabad High Court on Wednesday urged the Central government to bring a Bill in Parliament for “protection of cows” and to declare “cow protection as a fundamental right of Hindus”.

Justice Yadav also advised the Central government to declare cow as the national animal.

“Keeping in mind the circumstances, the cow must be declared national animal and protection of cows must be a fundamental right of Hindus because we know when the country’s culture and faith are hurt, the country becomes weak,” Justice Yadav said.

XXXXXXX

Teachings from Arthashastra, Bhagavad Gita may be added to India’s military training curriculum

Defence sources told News18 that the project was aimed at exploring select ancient Indian texts in the context of strategic thinking and leadership in the Indian Armed Forces

A recent internal study conducted by the College of Defence Management (CDM) has recommended exploring ways of incorporating ‘relevant teachings’ from ancient Indian texts such as Kautilya’s Arthashastra and Bhagavat Gita into the current military training curriculum. The study also suggested setting up an ‘Indian Culture Study Forum’ and a dedicated faculty to research on this possibility.

Located at Secunderabad, CDM is a premier tri services military training institution, where senior officers from the Army, Navy and the Indian Air Force are trained and groomed for higher defence management.

The project titled “Attributes of Ancient Indian Culture and Warfare Techniques and its incorporation in present day strategic thinking and training” was sponsored by Headquarter Integrated Defence Staff, News18 has learnt.

XXXXX

HSS UK condemns ‘Dismantling Global Hindutva’ conference

Cosponsored by departments and centres of more than 60 centres and 45 universities, a three-day ON LINE conference on ‘Dismantling Global Hindutva’ is going to take place between September 10 to September 12. 

 In a statement given to Asian Voice, Dhiraj D Shah, President HSS UK said, “Hindu Swayamsevak Sangh UK vehemently condemns the forthcoming “Dismantle Global Hindutva conference” which has been designed to project Hindus disproportionately and falsely as purveyors of extremism, deny genocide and ethnic cleansing of Hindu people and most troubling, label those who disagree as followers of Hindutva which it defines as Hindu extremism.

The organisers are well known seasoned anti-Hindu/anti-India forces who have a well funded and well-resourced ecosystem in media and academia. Scores of universities (mainly in the USA) seem to have sponsored this hate conference but recent denial of such sponsorship by some universities exposes the falsehood and credibility of the organisers.

Many keynote speakers are known for their open support to ultra-violent Maoist and Naxalite groups which have been conducting armed struggle against the Indian State. The world knows the liberal, inclusive and peace-loving nature of Hindu diaspora which has always contributed to the welfare of all irrespective of race, colour and religion.”  Said Dhiraj D Shah, President H.S.S. UK .

XXXXX

JANMASHTAMI  PROCESSION  IN KASHMIR

After a gap of 32 years, the Kashmiri Pandits organised a Janmashtami procession to celebrate the birthday of Lord Krishna in Srinagar on Monday amid tight security arrangements.

The group began the ‘jhanki’ procession from the Ganpatyar temple in the Habba Kadal area of the city. The yatra covered major spots in the city including Kralkhud, Barbarshah, Amirakadal bridge and Jehangir chowk, a PTI report quoted officials as saying.

The devotees, including people from all age groups, danced alongside the chariot and distributed sweets among people and chanted prayers of “Hare Krishna Hare Ram”.

“This Jhanki Yatra is a beautiful way of celebrating Janmashtami because through this we can show our devotion towards Lord Krishna,” a local told ANI.

“An act of brotherhood has been shown today as all the other communities of Kashmir, cooperated during the Yatra and it was smoothly conducted”, said another local.

XXXXX

PM Modi releases special Rs 125 coin on ISKCON founder’s 125th birth anniversary

Srila Bhaktivedanta Swami Prabhupada founded the International Society for Krishna Consciousness (ISKCON) commonly known as the ‘Hare Krishna movement’.

Prime Minister Narendra Modi Wednesday released a special commemorative coin of Rs 125 to mark the 125th birth anniversary of ISKCON founder Srila Bhaktivedanta Swami Prabhupada via video conferencing.

Prabhupada founded the International Society for Krishna Consciousness (ISKCON) commonly known as the ‘Hare Krishna movement’.

Releasing the coin, PM Modi said, “Today we are celebrating 125th birth anniversary of Srila Prabhupada. It is as if the joy of meditation/devotion and contentment have come together. Millions of followers of Srila Prabhupada Swami and Krishna devotees are experiencing this feeling today all over the world.”

Lauding the religious organisation for its work and services, the prime minister said it has played the role of a brand ambassador of Indian traditions and values.

Talking about ISKCON’s global presence, Modi said he often gives the example of its success while speaking of ‘Aatmanirbhar Bharat’, a programme launched by his government to popularise “made-in-India” products.

“How we feel a sense of belonging and pride when we are greeted with ‘Hare Krishna’ in foreign countries. Imagine how we will feel if we find the same familiarity for ‘made-in-India’ products outside,” he said. Hare Krishna’ is the greeting offered by ISKCON members.

Quoting former prime minister Atal Bihari Vajpayee, PM Modi said that Prabhupada arrived in New York with little idea about his next meal or where he will stay, and his subsequent success in popularising ISKCON is no less than a miracle.

XXXX

Rashtriya Hindu Parishad Protests At Taj Mahal

Members of Rashtriya Hindu Parishad (Bharat) while protesting at the west gate of the Taj Mahal, threatened to lock the monument if action is not taken against an ASI staff member who denied entry to a visitor dressed as Lord Krishna.

The outfit gave a 24-hour ultimatum to the Archaeological Survey of India (ASI) officials to take action against their staff members.

Superintending Archaeologist (Agra circle) Vasant K. Swarnkar said that no promotional activities are allowed at any protected monument without prior permission. Entry was denied as per rules and regulations.

The incident, according to reports took place on Saturday and the outfit staged a protest on Monday.

XXXXXXXXXXXXX

INDIA CELEBRATES TEACHERS’ DAY TODAY. WE WISH YOU ALL A VERY HAPPY TEACHERS DAY

XXXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY LAYASHREE KALYANASUNDARAM

PLEASE WAIT FOR TAMIL NEWS

 tags- Hindu news 592021

ஐரிஷ் நாடக ஆசிரியர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Post No.10,0057)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,057

Date uploaded in London – 5 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் தலைசிறந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித் Oliver Goldsmith . அவர் எழுதிய Vicar of Wakefield  ‘விகார்  ஆப் வேக்பீல்ட்’ நாவலும் ‘ஷீ ஸ்டூப்ஸ் டு கான்கர்’ She Stoops to Conquer நகைச் சுவை நாடகமும் இன்றுவரை விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவர் முக்கியமான ஆங்கில நாடக ஆசிரியராகக் கருதப்படுகிறார்.

அயர்லாந்து நாட்டில் பாலிமஹோன் (Ballymahon)என்னும் ஊரில் கிறிஸ்தவ மதப்பிரசாரகரின் (Clergyman)  மகனாகப் பிறந்தார். தந்தை போலவே  தானும் கிறிஸ்தவ குருவாக எண்ணினார். ஆனால் சர்ச் இவரை ஏற்றுக் கொள்ள வில்லை.அதற்கு முன் அவர் 1755ம் ஆண்டில் டப்ளின் நகர ‘ட்ரீனிட்டி காலேஜில்’ (Trinity College, Dublin) படித்துப் பட்டமும் பெற்றார்.

பின்னர் ஸ்காட்லாந்தில் எடின்பரோ நகரில் மருத்துவப் படிப்பிற்காகச் சென்றார். ஆனால் அதைத் தொடர முடியாமல் பாதியில் விட்டார். 25 வயது வாக்கில் ஓராண்டுக்கு காலத்துக்கு ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்தார் .பாதிப்பயணத்தில்  பண முடை ஏற்பட்டது. தன்னுடைய சங்கீத ஞானத்தைப் பயன்படுத்தி வாத்தியங்களை வாசித்து, தெருவில் துண்டு விரித்து(Busker)  பாட்டுப்பாடி பணம் சேர்த்தார்; தன்னுடைய நகைச் சுவை ஞானத்தையும் பயன்படுத்தி பேசிக்காட்டி காசு வாங்கிப் பிழைத்தார்.

கையில் கால் காசு இல்லாமல் 1756-ம் ஆண்டில் லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார். டாக்டர் தொழில் நடத்தி பணம் சம்பாதிக்க முயன்றார். அதிக வெற்றி கிடைக்காததால் பத்திரிக்கையாளர் ஆனார்.புஸ்தகங்களுக்கு மதிப்புரை எழுதுவதோடு பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளையும் எழுதினார்.

1760-களில் ‘அகராதி புகழ்’ டாக்டர் ஜான்சனைச் சந்தித்தார். அவர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்த்தின் திறமையை அறிந்து பாராட்டினார். 34 வயதில் அவர் எழுதிய ‘ட்ராவலர் / பயணி’ Traveller என்ற கவிதை அவருக்குப் புகழ் சேர்த்தது.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவருடைய ஒரே நாவலான ‘விகார் ஆப் வேக்பீல்ட்’ அச்சானது  ஒரு சமயப் பிரசாகரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களை விவரிக்கும் நாவல் இது.

கோல்ட்ஸ்மித்துக்கு 43 வயதானபோது அவர் எழுதிய நாடகம்தான் (She Stoops to Conquer)  அவரை புகழேணியின் உச்சத்திற்குக் கொண்டுசென்றது .

ஒரு பணக்கார நிலச்சசுவாந்தார் தனது மகளுக்கு நல்ல கணவன் கிடைக்க, படித்த பையனுடன் ஒரு சந்திப்பை ஏற்பட்டு செய்கிறார். அந்த மாப்பிள்ளை மாமனாரின் மாளிகையை, மதுபான விடுதி என்று நினைக்கிறார். எதிர்கால மணப்பெண்ணும் மதுபான விடுதி வேலைக்காரி போல நடந்து கொள்கிறாள். தன் கணவன் தன்னை பணத்துக்காக அன்றி, உண்மைக் காதலின்பேரில் ஏற்றுக்கொள்கிறானா என்று அவள் சோதிக்கிறாள். இதில் நிறைய ‘காமெடி’ வருகிறது. ஏனெனில் பெண்ணின் தாயார் அவளை பணக்கார உறவினனுக்கு கல்யாணம் கட்ட முயற்சி செய்கிறாள். இந்த நாடகம் அந்தக் காலத்திலேயே லண்டனில் மேடை ஏறி வெற்றி நடை போட்டது.

ஆலிவர் கோல்ட்ஸ்மித்

பிறந்த தேதி – நவம்பர் 10, 1728 ( 1730??)

இறந்த தேதி – ஏப்ரல் 4, 1774

வாழ்ந்த ஆண்டுகள் – 45 (43??)

எழுதிய நூல்கள்:-

1764 – The Traveller

1766 – The Vicar of Wakefield

1768 – The Good Natured Man

1770- The Deserted Village

1773 – She Stoops to Conquer

1774 – Retaliation (unfinished work)

-subham-

tags- ஐரிஷ், நாடக ஆசிரியர், ஆலிவர் கோல்ட்ஸ்மித், Oliver Goldsmith

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!! (Post.10,056)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,056

Date uploaded in London – 5 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சர்ச்சிலும் மசூதியிலும் குறள்? ஒத வேண்டுகோள் விடுக்குமா தமிழக அரசு?!!

ச.நாகராஜன்

நாத்திக அரசுக்கு சந்தோஷம் – தன் கையில் கோவில் அகப்பட்டுக் கொண்டிருப்பதை நினைத்து!

கோவிலில் குறள் ஓத ஏற்பாடு செய்யப்போகிறதாம்!

நல்லது, அனைத்து ஹிந்துக்களுக்கும் சந்தோஷமே.

புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் தான் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். மற்ற நூல்கள் கவிழ்ந்து விழ திருக்குறள் மேலே எப்போதும் இருந்தது; உலகப் பொதுமறையானது.

1330 குறள் பாக்களையும் பொற்றாமரைக் குளம் சுற்றி வருகையில் தென்புறச் சுவரில் காணலாம்; படித்து மகிழலாம்!

சில “பகுத்தறிவுகளுக்கு” ஒரு சந்தேகம். அது சந்தோஷம் தரும் சந்தேகம் அவர்களுக்கு

4310 திருக்குறள் சொற்களிலே – 1330 அரும் குறள் பாக்களிலே – கடவுள் என்ற வார்த்தையையே திருவள்ளுவர் சொல்லவில்லையே என்று!

என்னிடம் கேட்ட ஒரு “பகுத்தறிவுக்கு” நான் சொன்ன பதில் இது தான் : “நண்பரே, இப்படி எல்லாம் “பகுத்தறிவு மூளை” பின்னால் ஒரு நாளில் கேட்கும் என்று தான் 133 அதிகாரங்களை வகைப்படுத்தி தொகைப்படுத்தி முறைப்படுத்தி பெயரையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் திருவள்ளுவர்.

முதல் அதிகாரத்தின் பெயரையே கடவுள் வாழ்த்து என்று வைத்திருக்கிறார். கடவுள் என்று சொல்லாமல் திருக்குறளையே ஆரம்பிக்க முடியாது, நண்பரே”

கடவுளை வாழ்த்தினால் தான் திருக்குறள் உள்ளேயே நுழைய முடியும்.

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்க்கு திருக்குறள் சரிப்படாது!

ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் போற்றிப் புகழ்ந்து ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை’ என்பதை ஏற்பவர்கள் தமிழையும் புகழ வேண்டாம், தமிழ்த் திருக்குறள் பக்கமும் வர வேண்டாம்.

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் “பக்தர்களுக்கு” கோவில் தான் எதற்கு, சிலைகள் தான் எதற்கு, ஆகமம் தான் எதற்கு, தேவார, திருவாசகம் தான் எதற்கு? கடவுள் வாழ்த்து என்று ஆரம்பிக்கும் திருக்குறள் தான் எதற்கு!

பேசாமல் விட்டு விட்டுப் போய் விடலாமே!

ஊஹூம், அது எப்படி விட முடியும், கோவிலை!

அங்கே உ.பி.களுக்கு “வேண்டியதெல்லாம்” இருக்கிறது. விடமாட்டார்கள் கோவிலை.

சரி, உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஓதச் சொல்லிய பகுத்தறிவுகள் தங்கள் அன்பு உபிக்களை – உடன்பிறப்புகளை – அணுகி சர்ச்சிலும், மசூதியிலும் இதை ஓத ஏற்பாடு செய்வார்களா? அங்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி 1330 அரும் குறளும் பொறிக்கப்பட்டிருப்பது போல பொறிக்கச் செய்வார்களா?

அவர்கள் மறுத்து விட்டால், அது தங்கள் மதத்திற்கு ஏற்புடையதல்ல என்று அவர்கள் கூறினால் விட்டு விடலாம் – அவர்களைப் புரிந்து கொண்டு.

போகட்டும், ஹிந்துப் பொதுமறையாகவே திருக்குறள் இருந்து விட்டுப் போகட்டும். குறை ஒன்றும் இல்லை! தெய்வப்புலவர் தெய்வப்புலவர் தான். திருக்குறள் ‘திரு’ வாசம் செய்யும் திருக்குறள் தான்!

ஈவெராவின் நெஞ்சில் குத்திய முள் எது என்று ஆராய்ச்சி செய்து, கடவுள் இருக்கிறாரா என்று தினமும் வாதம் செய்து இல்லை என்று சொல்லும் தொலைக்காட்சி மற அரக்கர்களுக்கு (பாப ராக்ஷஸனைத் தமிழ்ப் படுத்தி இருக்கிறேன், அவ்வளவு தான்) திருக்குறளும் வேண்டாம், கடவுளைத் தொழும் கோவில்களும் வேண்டாம். விட்டு விடுங்களேன்!

திருக்குறளில் கடவுள் வாழ்த்த்து என்பதில் தொடங்கி ஏராளமான சொற்களால் கடவுளைச் சுட்டிக் காட்டுகிறார் தெய்வப்புலவர்.

கடவுள், ஆதி பகவன் (குறள் 1) வாலறிவன் (குறள் 2), மலர்மிசை ஏகினான் (குறள் 3), வேண்டுதல் வேண்டாமை இலான் (குறள் 4), இறைவன் (குறள் 5), பொறிவாயில் ஐந்தவித்தான் (குறள் 6), தனக்குவமை இல்லாதான் (குறள் 7), அறவாழி அந்தணன் (குறள் 8) எண்குணத்தான் (குறள் 9), இறைவன் (குறள் 10), உலகு இயற்றியான் (1062) என்று இப்படி எல்லாம் கடவுளைச் சுட்டிக் காட்டி கடவுளின் சொல்ல முடியா குணங்களை எல்லாம் விவரிக்கிறார் அவர்.

பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறேன், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்துக் கடவுள்களை ஏற்றுக் கொள்வார்களா, திருநீறு பூசிக் கொள்வார்களா என்று மதுரை ஆதீனத்தின் புது ஆதீனகர்த்தர் கேட்ட அர்த்தமுள்ள கேள்வியை “மடைமாற்றம்” செய்து ஒரு டிவி, மதுரை ஆதீனகர்த்தர் பைபிளையும், குரானையும் ஏற்றுக் கொள்கிறார் என்று பொய்ச் செய்தி வெளியிட்டது.

தமிழகம் அல்லாத இதர  மாநிலங்களிலும் பாரதம் அல்லாத பிற நாடுகளிலும் இந்தப் பொய் செய்தி வெளியீட்டைக் கேட்டோர் அல்லது இதைப் பற்றித் தெரிந்து கொண்டோர் வியந்து பிரமிக்கிறார்கள், இப்படி எல்லாம் கேடு கெட்ட அளவில் ஒரு ஊடகம் இயங்க முடியுமா, இது தமிழர்க்கும் தமிழுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம் அல்லவா, அவமானம் அல்லவா, இந்து  மதத்திற்கு ஒரு மாபெரும் அவமானத்தை ஏற்படுத்தும் சதி அல்லவா என்று கேட்கின்றனர்.

“இது ஒரு சின்ன சாம்பிள் தான்” என்று தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஹிந்துக்களுக்கே உள்ள மிகப் பெரிய குணமான பெருந்தன்மையையும், கருணையையும், பொறுத்துப் போகும் தனமையையும் அளவுக்கு மீறிச் சோதித்தால்..

சோதித்தால்…?

சிவபிரானின் நெற்றிக்கண் திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை!

***

tags- tags — சர்ச், மசூதி, குறள், 

PLEASE JOIN US TODAY SUNDAY 5-9-2021

5-9-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Ganesh Shrine in Thiruvalanchuzi in Tamil Nadu– 10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY London Swaminathan

–25 MINUTES

Talk by Sri Thirukkudal Mukuntha rajan on Life Story of Alvars

XXXX

SPECIAL PROGRAMME -MAHA KAVI BHARATI’S 100th ANNIVERSARY

SONG BY MR. YOGESWARAN, GERMANY (RECORDED)

வழங்குபவர்

  மேனாள் முனைவர் மஹாதேவ ஐயர் ஜயராம சர்மா ஆஸ்திரேலியா

தலைப்பு

*எனது பார்வையில் பாரதியார்*

XXXX

பாரதி பாடல் வழங்குபவர்

திருமதி ஜனனி ஐயர் ஆஸ்திரேலியா

XXXX

டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், மலேசியா

தலைப்பு – பாரதியின் பக்தி

BHARATI SONGS BY OTHERS

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity592021

October 2020 London Swaminathan Articles, Index-95 (Post No.10055)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,055

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

OCTOBER 2020 INDEX

Index 28 for London Swaminathan’s Articles ,8761;1 October 2020

Panini and Tamil Tolkappian. ,8765;2/10

Swami s crossword 3102020; 8770;3/10

Tamils followed Paninian grammar,8772;4/10

5-10-2020 World Hindu News Bulletin,8777:5/10

Index 29 of London Swaminathan, 8783;6/10

Swami s crossword 7102020;8785;

Arya means a Free man, Dasa means a Slave, 8787;7/10

Super Brahmins and Many Types of Sudras/ Yavanas, 8790;8/10

750 Cities in Ancient India,8793;9/10

Krta Yuga win;,Kali Yuga Lose 8797;10/10

Index 30 for London Swaminathan 11/10

Please join us on Monday

R U an Aryan or a Barbarian, Vadugan or Aravan,8803;12/1

Swami s crossword 13102020:8808

Index 31  for London Swaminathan’s Articles,,,,,,8812;14/10

12-10-2020 World Hindu News Roundup in English 8802a;14/10

Two New Books on Alvars Introduced,8809d, 14/10

Evil Eye Egypt follows India,8814;15/10

Tamil Words in English-1; 8816;15/10

Tamil Words in English-2;8818;16/10

Tamil Words in English ..3;8822;17/10

Tamil Words in English .4;8826;18/10

Tamil Words in English…5;8828

London Gnanamayam Programme :What happened

yesterday?8829a, 19/10

Tamil Words in English  -6;8832;20/10

Tamil Words in English  -7;8837;21/1

Tamil Words in English – 8;8841;22/10

Index 32 for London Swaminathan’s Articles ; 8842;22/10

Tamil Words in English – 9;8846;23/10

Tamil Words in English -10;8852;24/10

Hindus solve South America’s Greatest Mystery-1;8847;23/10

Hindus…. 2;8850;24/10

Tamil Words in English -11 8858;26/10

Gnanamayam Programme on 26 October 2020;8863a, 27/10

26-10-2020 World Hindu News Roundup, 8863-c,27/10

Tamil Words in English -12;8861;27/10

Tamil Words in English – 13:28/10

Tamil Words in English – 14;29/10;8870

Tamil Words in English – 15;8873;30/10

New Tamil Broadcasting Channel launched in London 8876;31/10/2020

Vedic Hindus Domination of Mighty Ocean,8875;31/10/2020

xxxx

அக்டோபர் 2020 கட்டுரைகள் ; லண்டன் சுவாமிநாதன்

தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன்?-1;

8760; அக்டோபர்1, 2020

சைவம் பற்றிய 4 பழமொழிகள் என்ன? 8762;1/10

தொல்காப்பியத்தில் வடதிசை ……….2; 8764; 2/10

கத்தி பற்றிய 6 பழமொழிகள் என்ன? 8766; 2/10

கந்தைத் துணி பற்றிய 6 பழமொழிகள் என்ன?8769; 3/10

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள்; 8768;3/10

தமிழா! இது திருக்குறளடா , கோபப்படாதே ;8773; 4/10

காலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பி.க்கு ஞானமயம்

அஞ்சலி; 8776; 5/10

5-10-2020 உலக இந்து சமய செய்தி மடல்; 8778,5/10

5-10-2020 ஞானமயம் பெங்களூரு செய்தி மடல் ;8779; 5/10

தஞ்சசையிலும் பஞ்சாபிலும்  கபிஸ்தலம் ;8782;6/10

நாக்கு பற்றிய 7 பழமொழிகள் , 8786, 7/10

பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம், 8789;8/10

வைத்தியன் பற்றி 7 பழமொழிகள்,8792, 9/10

காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக்

கொடுப்பது போல, 8795,10/10

சிங்கத்தை ஏமாற்றிய தந்திரக்கார நரி, 8799,11/10

காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர் ,8802,12/10

திருப்பதி அம்பட்டன் கதைதான் ,8819;16/10

முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விடம் ;8823;17/10

மாரியாத்தாளை பெண்டு பிடித்தவனுக்கு, பூசாரி

பெண்சாதி எம்மாத்திரம்? 8825; 18/10

சோறு கண்ட இடம் சுவர்க்கம் ;8836; 21/10

பேராசைதான் தாடகை -ராமநாமம் தாடகையை வீழ்த்தும் , 8835, 21/10

அள்ளிக் குடிக்க தண்ணீர் இல்லை; அவள் பெயர் கங்காதேவி ;8851;25/10

தென் அமெரிக்காவில் புதிர், மர்மம் – மஹாபாரதத்தில் விடை ;8855;25/10

26-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் , 8863- d 27/10

வீரன் சாவதே இல்லை; கோழை  வாழ்வதே இல்லை ;8869;29/10

வேதத்தில் விளையாட்டுகள்;8866;;28/10

வேள்வி, துறவி பற்றிய 30 பழமொழிகள்;8872;30/10

xxxxxxxxxxxxxxxxxxx

சீனிவாசன் எழுதிய கட்டுரைகள் :-

மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்; ஞானமொழிகள்-1;

8796, 10/10

சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும்-1;8806; 13/10

சித்த மருத்துவமும்………..2, 8811;14/10

எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக்கொள்….8815;15/10

டீயில ஊறின பன்னும் , பேஸ்புக்குல கிடச்ச பொண்ணும் ,

8820;16/10

ரகசியம் பரம ரகசியம்-1 ;8831;20/10

ரகசியம் பரம ரகசியம்-2;8834;21/10

ரேஷனுக்கும் பேஷனுக்கும் என்னவித்தியாசம்?8839, 22/10

கடவுளும் மனைவியும் ஒண்ணு ,8844; 23/10

அக்கு வேர், ஆணி வேர், இசைக்கு, பிசகு ;8849,24/10

கடை கண்ணி , நகை நட்டு, ஈவு இரக்கம் – 8854,25/10

(விஷக் ) கடி ஜோக்ஸ் , 8857;

KNIFE AND WIFE ;பெண்களை நம்பாதே -1; 8860, 27/10

MIDDLE CLASS LIFE எவ்வளவு கஷ்டம் தெரியுமா?8865; 28/10

Marriages are made in Heaven, so expect Thunderstorms,8846;22/10

Rich People beg inside, Poor People beg outside the Temples,8845;23/10

Xxx subham xxxx

TAGS – INDEX 95, OCTOBER 2020

‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

ஆலயம் காக்க அனைவரையும் வணங்கிய பாண்டிய மன்னன்- 2 (Post No.10053)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,053

Date uploaded in London – 4 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆலயம் காக்க அனைவரையும் அன்றே வணங்கிய பாண்டிய மன்னன் பராக்ரம பாண்டியன்! – 2

ச.நாகராஜன்

பராக்கிரம பாண்டியன் தென்காசிக் கோவில் கண்டு பாடிய பாடல்களில் இரண்டைச் சென்ற கட்டுரையில் கண்டோம். மீதியுள்ள நான்கு பாடல்கள் இதோ:-

சாத்திரம் பார்த்திங்கன் யான் கண்ட பூசைக டாநடத்தி

ஏத்தியன் பால்விசுவ நாதன்பொற் கோயிலென் றும்புரக்கப்

பார்த்திவன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங்

கோத்திரந் தன்னிலுள் ளார்க்கு மடைக்கலங் கூறினனே

சாத்திர ஆகமங்களில் மிக்க நம்பிக்கை உள்ளவன் பராக்ரம பாண்டிய மன்னன். அதை முதல் வரியில் காணலாம்.

“சாத்திரம் பார்த்து இங்கு நான் கண்ட பூஜைகள் நடத்தி ஏத்தி அன்பால் காசி விஸ்வநாதன் பொற் கோயில் ஒன்றைப் புரக்கப் பார்த்தேன். என் பெயர் கொற்கை பராக்ரம பாண்டியன். நான் கோவில் அன்பர்களுக்கு, கோத்திரம் தன்னில் உள்ளார்க்கு மிக்க அன்புடன்  அடைக்கலம் கூறுகிறேன்!” – ஒரு மாமன்னனின் பணிவு நம் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

அடுத்த பாடல்:-

சேலேறியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய்

லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்னம்

மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர் தம்

பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே

சேல் ஏறிய வயல்களைக் கொண்டது தென்காசி.

“இந்த நல்ல ஊரிலே ஆலயத்தை தெய்வச் செயலாலே சமைத்தேன். இங்கு எனது செயல் அல்ல இது. இந்தக் கோவிலை இன்னும்  மேலே விரிவு செய்து புரப்பார்களின் பதங்களில் பணிந்து வீழ்ந்து அன்பால் அவர்கள் ஏவும் பணிகளைச் செய்வேன் பராக்ரம பாண்டியனாகிய நான்!”

    கோவில் அடியார்கள் இதை மேலும் விரிவு படுத்த மன்னன் வேண்டுகிறான். அப்படிச் செய்வோரின் பொற்பாத கமலங்களில் வீழ்ந்து பணிகிறான். அதுமட்டுமல்ல. அவர்கள் கொடுக்கும் – ஏவும் – பணிகளையும் செய்ய மன்னன் தயார்.

இப்போது நம் கோவில்களைக் கெடுக்க வந்திருக்கும் மகா பாவிகளைப் பாருங்கள்; ஒரு முறை அவர்களை நினையுங்கள். சாத்திரமும் வேண்டாம்; கோத்திரமும் வேண்டாம் என்று கூறும் இந்த நடமாடும் பிணங்களுக்கும் சவமானாலும் கல்வெட்டில் என்றும் நிலைக்கும் விதமாகச் சிவமாக  ஜொலிக்கும் மன்னனையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அடியார்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கோவில்களையும் அதன் அடிப்படைப் பண்பாட்டையும் சிதைக்க இருக்கும் சிற்றறிவுடையோரின் தீய முயற்சிகளைச் சின்னாபின்னமாக்கி, கோவில்களை விரிவு படுத்தாவிட்டாலும் கூட, உள்ளது உள்ளபடி காக்க வேண்டும். இதுவே இன்றைய தலையாய கடமை.

அடுத்த பாடல் இது :-

மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வகுக்கமுன்னின்

றெனைத்தான் பணி கொண்ட நாதன்றென் காசியை யென்றுமண்மேல்

நினைத்தா தரஞ்செய்தங் காவல்புனையு நிருபர்பதந்

தனைத்தா னிறைஞ்சித் தலை மீதி யானுந் தரித்தனனே.

“மனதால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு செயல் இவ்வளவு பெரிய ஆலயம் கட்டுவது என்னும் அரிய செயல். அதை வகுக்க என்னை முன்னின்று தேர்ந்தெடுத்தார் காசி விஸ்வநாதர். அதை நினைத்து ஆதரவு செய்து காவல் புனையும் நிருபர்களின் பாதங்களை இறைஞ்சி தலை மீது நான் தரித்து விட்டேன்.”

இப்படி இன்னும் நெகிழ்கிறான் பாண்டிய மன்னன்.

“கோடானு கோடி பேர் உலகில் பிறக்க என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சிவபிரான் இவ்வளவு பெரிய அரும் செயலைச் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்து அருள் பாலித்தான்.” – என்ன ஒரு உருக்கம், பாருங்கள்!

பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப் பூதலத்திற்

றாந்தங் கிளையுட னேபுரப் பார்கள் செந் தாமரையாள்

காந்தன் பராக்ரமக் கைதவன் மான கவசன் கொற்கை

வேந்தன் பணிபவ ராகியெந் நாளும் விளங்குவரே

பூந்தண் அழகுடைய தோட்டம் சூழ்ந்திருக்கின்ற தென்காசியை இந்தப் புவியில் அந்தக் கோவில் உள்ளிட்ட அனைத்துடனும் காக்கின்றவர்களை திருவானவளின் காந்தன் – லக்ஷ்மி தேவியானவளின் கணவன் – கொற்கையை உடைய அரசனானவன் பணிபவர் ஆகி என்றும் நீண்டு நிலைத்திருக்கும் பெருமையைப் பெறுவார்கள்!

இப்படிப்பட்ட மாமன்னன் வாழ்ந்த தமிழ்நாடு இது. இங்கு ஆலயம் பழித்தலும் அருமறை பழித்தலும் செய்யும் தீயவர் கூட்டம் அதை அழிக்கவும் சிதைக்கவும் முற்படும் போது அதைக் கண்டிப்போம்; காப்போம்!

ஓரிழையில் இணையுங்கள் ஹிந்துப் பெருமக்களே!

         முற்றும்

***

INDEX

பராக்ரம பாண்டியன், தென்காசி தலை நகர்,காசி விஸ்வநாதர் ஆலயம் புதுப்பித்தல்,

பாரோர் அறியப் பணிதல்,உலகில் உள்ள ஒரு அரிய கல்வெட்டு,பாடல்கள் 3 முதல் 6 முடிய,பெருந்தொகை பாடல்கள் 944 முதல்949 முடிய (இரு கட்டுரைகளிலும் தரப்பட்டவை – தலைப்பு : பராக்கிரம பாண்டியன் தென்காசிக் கோவில் கண்டு பாடியவை

tag-  பராக்ரம பாண்டியன்- 2

Tamil and English Words 2700 Years Ago- Part 62 (Post No.10052)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,052

Date uploaded in London – 3 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -62

Tamil and English Words 2700 Years Ago- Part 62

பாணினி சூத்திர எண்கள்:–

6-2-32

Panini used Sushka for Dry,dried

Sushka becomes Sukku in Tamil = dried ginger

Sushka = demon of draught in the rig Veda

சுஷ்க = வறண்ட, காய்ந்த, உலர்ந்த

சுக்கு = காய்ந்த இஞ்சி

சுஷ்ணா = ரிக் வேதத்தில் வறட்சி என்னும் அசுரன்

Xxx

6–2-30

Bahu becomes Vehu, vegu in Tamil

B = V; ப = வ

பஹு = வெகு

Xxx

6-2-33

Panini used Pari

It means Around, Going around

In temples they do tie Parivattam in the head

In English, Pari becomes Peri

Perimeter

பரி = சுற்றி, சுற்றளவு ; கோவிலில் தலையைச் சுற்றிக் கட்டுவது பரி  வட்டம்

லத்தீன் மொழியில் பெரி, பெரிமீட்டர்

Xxx

6-2-36

Panini used Acharya

Acharya becomes Aasiriyar in Tamil; Teacher in English

தமிழில் ஆசிரியர்

டீச்சர் இந்த ஆங்கிலத்தில்

வேடிக்கையான விஷயம்!!! ஆசிரியர் , மாணவர், பாடசாலை — எல்லாம் சம்ஸ்க்ருதச் சொற்கள்

Xxx

6-2-38

Panini used Mahaan, Vreehi, Bharata, Hailihila

மஹான்

Mahan is used for great people

Maha becomes Mega in Latin

Vreehi and Tamil Arisi originated

Hi = Si is already known

Hindu =Sindhu

Vr = A; there’s no proof for it. But

வ் ரீஹி = அரிசி = ஆங்கிலத்தில் ரைஸ் = கிரேக்க/லத்தீன் மொழியில் ஒரைசா சடைவா

எல்லாம் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை

;மொழியியல் தெரியாதோர் அரிசி என்னும் சொல்லிலிருந்து இவை வந்ததாகப் பிதற்றுவர்

We have Oryza sativa for Arici

Oryza, Arisi gives the word Rice in English

So we may assume Ory = Vr

In short Vreehi = Oryza = Arisi = Rice

Bharata gives the name Bharat for India

பாரத = நாட்டின் பெயர்; ஏனெனில் சகுந்தலை மகன் பரதனால் ஆளப்பட்டது. இன்றும் தபால்தலைகளில் பாரத் காணலாம். அரசியல் சட்டத்திலும் பாரத் உள்ளது. அமரர் பரதன்= ரான்மன் தம்பி; அர்ஜுனன் = பாரத குலா ஸ்ரேஷ்டன்

Bharata = son of Sakuntala, brother of Rama, another name of Arjuna;

Bharat is on Indian stamps and Indian constitution.

ஹைலி ஹில= ஜாலியான பெண்; ஹாயாக, உல்லாசமானவள்

Interesting word : Hailihila – Jolly good girl

Xxx

6-2-39

Kshullaka is used by Panini

It means Small, little

Sullaan for small is found even in Rudram

Kshullakebhya

க்ஷுள்ள= சுள்ளான் = பொடியன் யஜுர் வேத ருத்ரத்திலும் உள்ளது

Xxx

6-2-40

Panini used Ushtra, Vaami

Ushtra becomes Ottai, ottakam in Sangam Tamil literature.

Ushtra / camel becomes Uthadu in Tamil.

Camel is Big Lipped = Ushtra animal.

Vaami becomes Woman in English

Here Vaami is used for female animals

Vaami = female horse,mare

Ushtra vaami = female camel

Vaama bhaaga = left side is always allocated for woman.

Right side is Shiva, left side is Sakti

Bible took this from the Hindus and said left rib of Adam became Eve

உஷ்ட்ர = ஒட்டை (சங்க இலக்கியம்); ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் ஒட்டக தானம் உள்ளது

உஷ்ட்ர= உதடு = உதடு வீங்கிய மிருகம் = ஒட்டகம்.

உஷ்ட்ர= உதடு

வாமி = பெண் குதிரை ; வாம = இடது பாகம்= பெண்;

சிவன் = வலது; சக்தி = இடது.

இதை திருடிய கிறிஸ்தவர்கள் , ஆதாமின் இடது விழா எலும்பை முறித்து ஏவாள் உருவானாள் என்று பகர்வர்

வாம என்ற சொல்லில் இருந்து உமன் என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது

Xxx

6-2-51

Abi, Av are prefix

A lot of people think that Tamil doesn’t have prefix

They don’t know that

Appadi, Avvidam, Ange, Avvaaru etc are prefix es

Ippadi, eppadi…………. so on and so forth are other examples

In Sangam literature we have Nan prefix with lot of poets names

A, E, U, Ye are prefixes in Tamil

மொழியியல் தெரியாதோர் சம்ஸ்க்ருதத்தில் முன்னொட்டும், தமிழில் பின்னொட்டும் உளது என்பர்.

தமிழிலும் முன்னொட்டு இருக்கின்றது

அப்படி, அ வ்வாறு , அங்ஙனம் , அங்கே , அவ்விடம்

பெயர்களிலும் உண்டு ; திரு மூலர், மா மூலர்

இதற்கு முன் இ, உ, எ என்று சேர்த்து புதிய சொற்களை உருவாக்கலாம்.

சங்கத்தமிழ் புலவர் பெயர்களில் ‘நல்’ என்ற ஒட்டு மிகுதி; இது சு என்பதன் தமிழாக்கம்

உ.ம். நக் கீரன்; சு மதி, சு கந்தி, நச் செள்ளை , நப் பசலை , நப்பின்னை

To be continued…………………………………

tags- tamil in panini 62

MY VISIT TO PORTSMOUTH AND HOVERCRAFT (Post No.10051)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,051

Date uploaded in London – 3 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

We visited Portsmouth during peak season, i.e. two Music Festivals in Portsmouth and nearby Isle of Wight. So we could not get tickets on that day (28-8-2021) to go to Isle of Wight by Hovercraft. Ferries do go there, but with a long wait. So we watched from the shore. Every half hour one hovercraft came. I had been to Isle of Wight twice but ferry only, during my prison visit to see Hindu Prisoners. There are three high security Hindu prisons. High risk prisoners like rapists and murderers are kept there. (There were nine Sri Lankan Tamil Murders in my area Wembley and Edmonton in London 15 years ago.)

In Portsmouth most of the people keep dogs and cats. So we saw lot of dog walkers with a minimum of two dogs. There is a viewpoint from where you can see the downtown. We went there and saw lot of dog walkers. Our primary aim was to take grandchildren to sea side and we did it on day one (28-8-21). On day 3 , we went to West Wittering Beach near Chisester. Unless you book parking slot for your car, you are not allowed near the beach. We saw at least 1000 cars there. The beach is not good. Because the sea was one furlong away. Probably during high tides, it comes nearer to the car parking area. Moreover, the sand was not sea sand. It was powdery and blackish. So my advice is to check any beach before you go.

(In the year 1990 , the South Indian Society organised a beach tour and we went to Plymouth and Bournemouth. One is full of beautiful pebbles, and another is full of good sand. And on our way to the beaches, we went to the most famous historic monument ‘ Stonehenge’).

If you want to go to all attractions around Portsmouth you need at least one week stay there. After the Covid virus attack, you need pre booking to visit most of the museums and tourist spots. All are ticketed places. So you need a big, fat money purse!

Ferries and boats take you to different places. On two occasions, we took food in Tesco superstores; two birds in one stone. We did shopping as well as eating. The coffee was very good, and children get free food. Vegetarians are punished in Western countries; we get a few items, potato chips or boiled vegetables. We cant blame them; they are barbarians who want to kill million cows and million pigs every minute. Chicken, probably a billion!

That is all about Portsmouth. Bye for now.

PLEASE SEE THE ATTACHED PICTURES OF HOVERCRAFT ETC.

GREAT LONDON SWAMINATHAN!!
SHIP AHOY!

tags – hovercraft, Portsmouth

மல்லிநாத சூரி–புகழ்பெற்ற சம்ஸ்க்ருத உரையாசிரியர் -Part 2(Post.10050)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,050

Date uploaded in London – 3 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மல்லிநாதா தன் விவரணம் ஒவ்வொன்றுக்கும் காவியக் கருவுக்கேற்பத் தலைப்புக் கொடுத்திருக்கிறார். அதன் விளக்கத்தையும் பார்ப்போம்…….

சஞ்சீவினி–காளிதாசனின் ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம் -விவரணம்

காளிதாசனின் சொற்பிரயோகத்தை அரைகுறையாகப்புரிந்துகொண்டு,சகட்டுமேனிக்கு விமரிசத்தவர்களைக் கட்டோடு அவருக்குப் பிடிக்கவில்லை.மேகதூதத்தைச் சரிவரப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் கடந்து விடுகிறதே என அங்கலாய்க்கிறார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதைப் போல் பலவிதமான தரங்கெட்ட வியாக்கி யானங்களால் ஒன்றும் சரியாகப் புரியாமல் மயங்கிக் கிடந்த ரசிகர்களை மிருத சஞ்சீவினி மூலிகைச் சாறு கொடுத்து மீண்டெழ வைப்பது போல் தனது விளக்க வுரை அமைந்திருக்கும் என்று அவரே சொல்கிறார். அதனாலேயே அந்த வியாக்கி யானத்துக்கு “சஞ்சீவினி” எனப் பெயரிட்டார். 

கண்டாபத– பாரவியின் கிராட்டார்ஜுனீயம்- விளக்கவுரை

“கண்டாபத” என்பது பட்டத்து யானை போகும் ராஜபாட்டை, நகரின் முக்கியச் சாலை. அது குண்டு,குழி, மேடு-பள்ளமில்லாமல்,மனதுக்கு இதமளிக்கும் மரங்கள் நிறைந்து ஒரே சீராக அமைந்திருப்பது போன்று,பாரவியின் “கிராட்டார்ஜுனீயம்” உள்ளதாம். அது மாதிரி விளக்கவுரை எனும் ஒரு மணிப்பாதையைக் கட்டமைத்து, சீரற்ற, அபாயகரமான வளைவுகள், குறுகிய ஒருவரே செல்லக் கூடியதுமானப் பாதைகளைப் போன்ற உப்புச் சப்பில்லாத விமர்சனங்களால் பாழடைந்துக் கிடக்கும் ரசிகர் உள்ளங்களைப் பாதுகாப்பான, மனதைக் கொள்ளை கொள்ளும் “பாரவியின் காவிய ராஜபாட்டையில் அழைத்துச் செல்வேன் என்கிறார். இளம் தேங்காயைப்

பிளந்து,இளநீரைப் பருகி, அதனுள்ளே இருக்கும் வழுக்கையைச் சுவைத்து உண்ணும் சுகானுபவத்தை அளிக்கவல்லது கவியின் சொல்லாடல், கவிதை நடை என்கிறார். கண்டாபத எப்படிப்பட்டப் பொருத்தமானப் பெயர்!

சர்வங்கச– கவி மாகாவின் சிசுபாலவதம்–வியாக்கியானம்              

மாகா தனது காவியத்தில், தண்டின் வகுத்துக் கொடுத்துள்ள அலங்கார சாஸ்திர வகைப்பாடுகள்,சாக்ய யோகம், ஜோதிடம், பிராணிகள் பற்றிய ஞானம் என அனைத் தையும் படிப்பவர் மனம் கவரும் வண்ணம் அளித்துள்ளார். அவர் எடுத்துக் கையா ளாதச் சொற்களே கலைக்களஞ்சியத்தில் இல்லை எனலாம் என்றுத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் மல்லிநாதர். எளிதில் புரிந்துக் கொள்ள முடியாத அவரதுக் கடினச்

சொல்லாடலைப் பதம் பிரித்து, அதன் சாரத்தைச் சுவைபட விளங்க வைப்பதே தனது தலையாய நோக்கம் என்கிறார். கச (कस)=பொருளின் சாரம். அங்கச (अङ्कस)= அடிபணிய வைப்பது, தாழ்மைப் படுத்துவது என்று அர்த்தம். சிசுபாலன் கிருஷ் ணனை ஏசி,தாழ்மைப் படுத்த, அந்த வில்லனை அடக்கியாண்டு சம்ஹாரம் செய்கி றான் கிருஷ்ணன். இவ்விருச் செயல்களைக் குறிப்பது தான் “ஸர்வங்கச” வியாக்கி யானத் தலைப்பு

ஜீவாது– ஶ்ரீஹர்ஷரின் நைஷத சரிதம்—விரிவுரை 

நள-தமயந்தி கதையைத் தான் ஶ்ரீஹர்ஷர் சுவாரசியமிக்கச் சரிதமாக ஆக்கியுள்ளார். ஆனால் முடிவு பெறாமலேயே முடிகிறது! இதுவும் அன்றாட வாழ்வின் அவலநிலை யைத் தான் சுட்டிக் காட்டுகிறதோ, என்னவோ? தனது கருப்பொருளாலும், சொற்கள், வாக்கியங்கள் பொருத்தமானதாக அமைந்த விதத்தாலும் இக் காவியம் ஜீவனுள் ளதாக விளங்குகிறது.அரசனோ, ஆண்டியோ வாழ்வில் தினசரி அவன் சந்திக்கும் வெற்றித் தோல்விகள்,அலைக்கழிக்கும் ஆசாபாசங்கள், வஞ்சகம்,புகழ்ச்சி, அரசனும் ஆண்டியாகலாம் எனும் நிதர்சன உண்மை,எல்லாம் தலை விதி வசம் போலவே நடக்கும் என்பனவற்றை இச் சரிதம் சுட்டிக் காட்டுவதால், தன் விரிவுரைக்கு “ஜீவாது” எனத் தலைப்புக் கொடுத்துள்ளார். ஜீவாது (जीवातु) =ஜீவித்திருக்க

வேண்டியச் சாதனங்கள்.

சர்வபதீனா– கவி பட்டியின் பட்டிகாவியம்—திறனாராய்வு

ஶ்ரீராமரின் வீர தீரச் செயல்களைக் கவிதை வடிவில் எடுத்துச் சொல்லி, அதே சமயம் அனைவருக்கும் புரியும்படியாக இலக்கண விதிகளைக் கையாளும் முறை மற்றும் அணியிலக்கணம் ஆகியவற்றை மணிச்சுருக்கமாக விவரிக்கிறது பட்டி காவியம். அதை மேலும் திறனாய்வுச் செய்து ஶ்ரீராமரின் பயணத்துக்கு உற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறார் மல்லிநாதர்—-பதீனா (पथीना)=பயண வழிகாட்டி .அதையே

தன் விரிவுரையின் தலைப்பாக வைத்தார்.

மல்லிநாதாவைப் பற்றிய வாழ்க்கை வரலாறு என்று ஒன்றுமில்லை. ஆனால், மரபுவழி, செவிவழிக் கதைகளாகச் சில நடப்புகள் கூறப்படுகின்றன. அவற்றிலிருந்து இரு சுவாரசியமிக்கச் சம்பவங்களை விவரித்து இக்கட்டுரையை முடித்து வைப்போம்……..

ஆரம்பக் காலத்தில் நடை, உடை பாவனைகளில் அக்கரைக் கொள்ளாதவராகவே மல்லிநாதா இருந்தார். ஒரு சமயம் ராஜா சிம்ஹபூபாலனைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடைகிழிந்து, கந்தலாகியும், சுருக்கம் விழுந்துக் கோணல் மாணலாகவும் தோற்றமளித்தது. கையிலோ ஒரு அசிங்கமான வளைந்த தடி. இதைக் கண்டவர்கள்,’நாட்டு அரசனைப் பார்க்க இப்படியாப் போவது?’ எனக் கேட்டனர், அதற்கு அவர் அளித்த நெத்தியடிப் பதில் இதுவே-

वाससा चीकरिबाकिरेण

किं दारुणा वङ्कर-टिङ्करेण |

सर्वज्ञभूपालविलोकनार्थं

वैदुष्यमेको विदुषां सहायः ॥ 

கிழிந்த ஆடை அணிந்திருப்பது ஒரு பொருட்டே அல்ல, இந்த வளைந்தத் தடி யாருக்கும் ஊறு விளைவிக்காது, ஒரு அறிவாளி ராஜாவைப் பார்க்கப் போகவேண்டுமென்றால் அவருக்கு இருக்க வேண்டியத் தகுதி கல்வியறிவும், சாஸ்திரப் புலமையும் தான்!” என்றவுடன் வம்பர்களின் கொட்டம் அடங்கிவிட்டது.

‘சீக்கரி-பாக்கிரி(கிழிந்த, கந்தல்), வங்கரி-டிங்கரி (சுருக்கம், கோணல்-மாணல்) இவையிரண்டும் தெலுங்கு மொழிச் சொற்கள். அதை உபயோகித்திருப்பதால் மல்லியின் தாய்மொழி சுந்தரத் தெலுங்கு எனத் தெரிய வருகிறது.

அடுத்தச் சம்பவம்:                 

செல்வச் செழிப்புள்ளக் குடும்பத்தில் பிறந்ததாலும், எதிலும் அதிகச் சலுகைக் கொடுத்துச் செல்லமாக வளர்க்கப்பட்டதாலும் படிப்பில் அவ்வளவாக நாட்டம் ஏற்படவில்லை. பணபலம்,வசீகரத் தோற்றம் இரண்டும் சேர்ந்து அவருக்குப் பெண் கொடுக்கப் பலரும் முண்டியடித்து வந்தனர். முடிவில் மெத்தப் படித்த ஒரு வெகு புத்திசாலிப் பெண் அவருக்கு மனைவியானாள். கூடிய சீக்கிரமே அவளுக்குப்

புரிந்து விட்டது மல்லிநாதா அவளுக்கேற்றப் புத்திசாலி அல்ல என்று. ஒருநாள் தெருவில் வீசியெறியப்பட்ட ஒரு மலரை மல்லி புகழ்ந்துக் கூறினார். உடனே அவள், “இந்தப் பூவின் அழகால் என்ன பயன்? அதனிடம் வாசமில்லை, இறைவழி பாட்டுக்கும் உகந்தது இல்லையே!” என மறைமுகமாக அவரைக் குத்திக் காட்டினாள். அதனால் மனதளவில் காயமடைந்தவர், படிப்பைத் தொடர ஒரு குருகுலத்தில் சேர்ந்தார்..அச்சூழ்நிலை கடினமாக இருந்தாலும் அவர் கவனம் பூராவும்படிப்பிலேயே இருந்தது. அவரைச் சோதிக்க எண்ணியக் குருநாதர் சாப்பாட்டில் நெய்க்குப் பதில் வேப்பெண்ணையை இடச் சொன்னார். இன்பக் கல்விச் சுவையில் மூழ்கியிருந்த வருக்கு உணவுக் கசந்தது தெரியவேயில்லை. காலப்போக்கில் அவர் ஒரு சிறந்தக் கல்விமானாகத் திகழ்ந்தார். குருகுலத்திலிருந்து விடைபெறும் நாள் அன்று உணவ ருந்தும் போது சாப்பாடு கசந்ததால் குருபத்தினியிடம் ,”மாதே! இன்று உணவு கசப்பது ஏன்?” எனக் கேட்க குருஜி விஷயத்தை விளக்கினார். கற்றவைக் கற்ற பின்புதான் உணவின் ருசியை அவரால் உணர முடிந்தது! மனத் திருப்தியுடன் வீடு திரும்பியவருக்கு மனைவி நல்ல வரவேற்பளித்தாள்.காவியங்களுக்கு வியாக்கி யானம் எழுதுவது ஆரம்பமானது. கதை இத்துடம் முடியவில்லை, சுவாரசியமானப் பகுதி இனிமேல் தான் வருகிறது..…

கவிஞனின் மனைவிக்குக் கணவன் தன்னைப் பற்றிப் பாடல் எழுதமாட்டானா என்ற ஆதங்கம் இருக்காதா, என்ன? அதையேதான் கேட்டாள் மல்லியின் மனைவியும். 

ரொம்ப வற்பொறுத்தலின் பேரில் மல்லி, பெரிய சாதனையாளன் போல் பாடினார்–“அன்பே! (रामवैरिभगिनीव राजसे !)–ஶ்ரீராமனின் எதிரி ராவணனின் தங்கை சூர்பநகா போல் ஜொலிப்புடன் இருக்கிறாய்!” என்று. எரிச்சல் அடைந்தவள் சரியானச் சந்தர்ப்பம்

அமையக் காத்திருந்தாள். அந்நாளும் வந்தது. மல்லிக்கு ஒரு பழக்கமுண்டு. திறனாறாய்வில் சொல்வது போல் “இத்யார்த்த:” =இது தான் பொதுவான அர்த்தம், “இதி பாவ:”= இதன் உட்கருத்து இதுதான்,எனும் இவ்விரு வார்த்தைகளையும் அன்றாடம் பேசுவதிலும் உபயோகிப்பார். அதை வைத்தே அவருக்குப் பாடம் புகட்ட நினைத்தாள். அப்பாவியாய் மல்லி, “இன்றைக்கு என்ன சாப்பாடு?” என்று கேட்க

மனைவி இப்படிப் பாடினாள்–

 “इत्यर्थ-क्वथितं चैवेतिभाव-तेमनं तथा       இத்யர்த்த-க்வதிதம் ச இதிபாவ: தேமனம் ததா

 सज्जीकृतेद्य भुक्त्यर्थं तुष्यतां भवदाशयः।    சஜ்ஜிக்ருதேத்ய புக்த்யர்தம் துஷ்யதாம் பவதாஷய:|

அதாவது, இத்யார்த்தாவைச் சாதமாக வடித்திருக்கிறேன்; இதிபாவ:வை வ்யஞ் ஜனம்( காய்கறிப் பொரியல்) செய்திருக்கிறேன். மனத் திருப்தியுடன் வயிறார உண்பீர், என் பிரியநாதா!”என்றாளே, பார்க்க வேண்டும்! மனைவியைச் சீண்டினால் இப்படித் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்! மல்லி இதை ஒரு பொருட்டா கவே எடுத்துக் கொள்ளவில்லை. அவளின் சாதுரியப் பேச்சைக் கேட்டு ரசிக்கவே  செய்தார். இதுமாதிரி சாமர்த்தியமானப் பேச்சுக்கள் சிலேடைப் பொங்க அவரது வியாக்கியானங்களில் அங்கெங்கேப் பிரதிபலிப்பதைக் காணலாம்!

இப்போது புரிகிறதா மேலே ஆரம்ப முதல் பத்தியில் சொன்னது எவ்வளவு அவசியம் என்று!

ஜயது, ஜயது சம்ஸ்க்ருதம்!

B.KANNAN, DELHI

நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்.

 சான்று ஆதாரம்: P.G.LALYE – Mallinathamaneeshaa-Osmania University Sanskrit Seminar papers &

                            Makers of Indian Literature.

             Sathaavathani Dr.R. Ganesh- KAVITEKONDU KATHE- English Translation from Kannada

             International Journal of Research and Analytical Reviews-Vol 4,Issue3 2017       —————————————————————————————————————–

TAGS- மல்லிநாத சூரி-2