REBIRTH AND REINCARNATION IN RIG VEDA! (Post No.10163)

REBIRTH PICTURE FROM WIKIPEDIA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,163

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

REBIRTH AND REINCARNATION IN RIG VEDA! (Post No.10163)

(A reader has sent me a question asking whether it is true that Hindus got the concept of Rebirth and Karma theory from Buddhism and Jainism. Here is my reply; I will give it in Tamil as well)

Rig Veda is the oldest book in the world dated between 1500 BCE and 4000 BCE. It has references to rebirth, and transmigration of soul. Buddhism and Jainism borrowed it from Hindus and blown it out of proportion.

Hindus believed in four values Dharma, Artha, Kama and Moksha. Other oriental religionists followed them, but their scriptures don’t approve them in crystal clear terms. Hindus did value them proportionately and practised them in four stages of life Brahmacharya, Grahastha asrama, Vanaprastha and Sanyasa. If we need examples, we have lots in the Mahabharata, oldest and longest epic in the world, and 2000 year old Sangam Tamil literature.

If anyone says that these concepts of Rebirth, Karma Theory and Reincarnation came from Buddhism or Jainism, that means they did not study Brhad Aranyaka Upanishad (The Big Forest Treatise). Buddha took the words Nirvana, Karma etc from this Upanishad which is dated 850 BCE even by the white skinned, Yellow eyed/jaundice eyed, ill motived, non-believers of the West.

Before giving evidence from the Vedas and Upanishads I wanted to alert Hindus about dating. Hindu calendars very clearly date the beginning of Kaliyuga in 3102 BCE. Hindu inscriptions support this in at least two or three very early inscriptions. Bhagavad Gita and its source book Mahabharata give thousands of references to rebirth and Karma theory. If we don’t believe the Hindu dating and believe the date given by Anti Hindu non -believers, it is our fault.

But I admit that all Hindu scriptures were ‘updated’ in language, style and contents from time to time, but yet we can clearly see the original idea or concept in it. Foreigners took the latest updated word and dated them. But they did not do it to Hebrew or Greek literature or Sumerian or Egyptian literature. If anyone studies them, we can see there is controversy in every literature.  When we compare the volume of such literature there is nothing in Greek or Hebrew before the period of Brhad Aranyaka Upanishad. Vedas were very old compared to them.

Before going any further, I wanted to give you one more bit of information. There are many funeral hymns in the Rig Veda. No one could understand them fully.  White skinned people added notes now and then such as ‘they are obscure’, ‘the meaning is not certain’; ‘they may be taken from elsewhere and attached here’; ‘they are jumbled’, ‘they may be later additions’. None of them are the words of Sayana, but they alleged that they follow Sayana in translations.

Sayana himself came just 700 years before our time. But Vedas are at least 3000 years before him. No one could understand them fully.

xxx

Evidence from the Rig Veda

The word ‘Amrtam’ occurs in the Rig Veda hundreds of times. The meaning is very clear. It gives eternal life. Where ? You are with God or in Heaven for ever. That means you are not reborn; you are out of the Samsara Chakra- the cycle/wheel of birth and death.

xxx

‘Rebirth is even offered as a reward’ – says Satapata Brahmana (SB. 1-5-3-14); dated 800 BCE by foreigners; well before Buddha and Mahavira.

Later Puranas claim that even the Devas (angels in the heaven) long for a life on earth, in the holy country of Bharat.

Xxx

Agni consumes only the body, and the departed soul, ‘the unborn part’ (RV. 10-16-4) issues forth as from the father or mother (SB 2-2-4-8) furnished with a body, all lustrous (RV.10-56-1) and free from imperfections (Atharva Veda. A.V.6-120-3)

Xxx

Heaven is full of light

All the funeral hymns talk about dead body travelling as Light.

The heavenly delights are described in RV.9-113- 7 to 11

“There are eternal light and swift waters; there movement is unrestrained; there is spirit food and satiety; there are joy, glee, gladness and the fulfilment of all desires.

A few more heartening touches are added by other texts :-

RV 10-135-7

AV.3-29-3; 4-34

SB. 14-7-1-32/33

Agni (after cremation) carries the newly departed to this place RV 10-154-2 to 5.

Xxx

What is Hell?

In contrast to heaven, Hell is described as

‘Deep place’, ‘endless abyss’, ‘intangible darkness’ (RV.4-5-5; 7-104-3 and 7

‘Lowes’t, ‘black’, ‘blind darknes’s – AV.8-2-24;5-30-11; 9-2-10

We find the word ‘Naraka, Naraka loka’ in Yajur Veda and Atharva Veda.

Torments of Hell are touched in in AV. 5-19 and described in greater detail in SB. 2-6-1 and JB.1-42-4

Xxx

Punya in bank account

You earn more punya – currency notes given for your  good deeds- and save them in your account; you will be using this currency in Heaven.

Merits of sacrificial and charitable acts accrue to the departed in heaven (RV.10-14-8; VS 18-64).

Karma appears in AV.

Xxx

Rebirth in RV

Macdonell sees probable germ of metempsychosis ( the  transmigration at death of the soul of a human being or animal into a new body of the same or a different species.) in RV 10-16-3 where the departed spirit is asked to go, among other places, to the plants and stay there with bodies.

Growing belief in Rebirth becomes evident in the Brahmanas (SB and TB).

Words like ‘Punar Mrtyu’ ( re death)  and ‘Punar asu’ ( coming to life again)

, ‘Punar Aayaath’ (rebirth) in GB.

All brahmanas are dated before Buddha and Mahavira.

Departed soul is asked ‘to come home again’ in RV.10-14-8

And Agni is supplicated to see that he may assume life and obtain progeny in RV.10-16-5

Xxx

Quotes in Upanishads and Bhagavad Gita

A lot of quotes about Karma and Rebirth are in the Upanishads. Bhagavad Gita summarises it beautifully well in its second chapter. Most of the Hindu devotees know them. Sangam Tamil literature, mostly secular in contents, which came after all these books, also refer to rebirth, Punya, Papa, Hell, Heaven etc. Later Tamil Devotional scriptures have innumerable references to karma theory and rebirth.

Even beggars’ folk songs refer to them and they go from house to hose or street to street begging for alms!

xxx

Warning to sceptics

Hindu literature is vast; the religious scriptures available in Sanskrit, are incomparably vast. If we draw a line in 850 BCE, there is none in other religion. You may find them in ‘Museum Religions’ or ‘Fossil Religions’ such as Sumerian, Babylonian and Mayan. Coming to Hebrew Bible or scriptures , they are later than the 20,000 mantras of four Vedas. And unlike Vedas, they have contradictory and conflicting matter. We know about the Dead Sea scrolls and the untranslated Greek Bible in the British Library. If it is translated, they fear a Pandora’s Box will be opened. We also know that Moses , who is the foundation rock of three Semitic religions, has no archaeological or historical proof. Hindus have their proof in Sarasvati- Indus River Bank Civilization (Harappan) from 2500 -1700 BCE.

—subham–

  TAGS- REBIRTH , REINCARNATION , KARMA THEORY, RIG VEDA

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி! (10,162)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,162

Date uploaded in London – 2 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம். அண்ணலைப் போற்றுவோம்!

எளிமை, பிரஸ்னம், சேவை : கீதை காட்டும் வழி பற்றி காந்திஜி!

ச.நாகராஜன்

மஹாத்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கில் துணுக்குச் செய்திகள், குட்டிச் சம்பவங்கள் உண்டு. எதை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஒரு பொருள் புதைந்து இருக்கும்.மஹான்களை அவர்கள் அருகில் இருப்போர்கள், சிறு சம்பவங்களினாலும் அவர்கள் கூறும் சொற்கள் அவை ஒன்றிரண்டாக இருந்தாலும் சரி- அந்தச் சொற்கள் மூலமாகவும், அவர்களை மஹாத்மா என்று இனம் கண்டு கொள்ளலாம்.

ராம்நாராயண் சௌத்ரி என்ற காந்திஜியின் அணுக்கத் தொண்டர் தனது அனுபவங்களை BAPU, AS I SAW HIM என்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார்.

அவற்றில் சில இதோ:

உழையுங்கள் – நீரையும், உணவையும் பெறுங்கள்!

காந்திஜியின் ஆசிரமத்திற்குச் சில பேர் வருகை புரிந்திருந்தனர். நேரம் நண்பகல். அவர்களுக்கு ஒரே தாகம். ராம்நாராயண் சௌத்ரி அங்கிருந்தார். அவரிடம் அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டனர். உடனே கிணற்றிலிருந்து ஒரு பக்கெட் நீரை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார் ராம்நாராயண். உடனே அங்கிருந்த அவரது ஆசிரம சகாக்கள் அப்படிக் கொடுக்கக் கூடாது என்றும அது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்றும் கூறினர். ராம் நாராயணனுக்கோ அப்படி தாகம் கொண்டவர்களுக்கு நீர் வழங்குவது ஒரு சேவையாகவே தோன்றியது. இதில் என்ன முரண்பாடு?!- என்று அவருக்குத் தோன்றியது. மதியம் காந்திஜை வழக்கம் போல நடைப் பயிற்சிக்காக வெளியே சென்ற சமயம் அவருடன் ராம்நாராயணனும் கூடவே சென்றார்.

அப்போது இப்படி நீர் வழங்கக் கூடாது என்ற சட்டம் ஏன் என்றும் கேட்டார். உடனே மஹாத்மா பதில் கூறினார்: “ நாம் நம்மால் முடிந்த அளவு நம் உடலினால் ஆன சேவையை நோயுற்றவர்களுக்கும் ஒரு வேலையைச் செய்ய முடியாதபடி இருக்கும் செயலிழந்தவர்களுக்கும் தான் செய்ய வேண்டும். ஆனால் நல்ல உடல் வலிமை கொண்டவர்களுக்கு அப்படி இலவ்சமாக உணவையும் நீரையும் கொடுப்பது என்பது அவர்களிடம் சோம்பேறித்தனத்தை வளர்க்கும், பிச்சை எடுப்பதைத் தோற்றுவிக்கும், மனித கௌரவத்தைக் குறைப்பதாகவும் ஆகும். ஒவ்வொரு மனிதனையும் சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியவராக ஆக்க வேண்டும். ஆகவே தான் கிணற்றின் அருகே ஒரு பக்கட்டையும் கயிறையும் வைத்துள்ளேன். தேவையானோர், அதிலிருந்து நீரை எடுத்துத் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். உணவும் இங்கு அப்படித்தான்.  ஏதேனும் வேலை செய்தவருக்கே இங்கு உணவு – அவர் செய்த வேலைக்காக!

இன்று தமிழக அரசு இலவசமாக அள்ளிக் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக ஆக்குவதையும் காந்திஜி மிகவும் வலியுறுத்திய மது விலக்கை அமல் படுத்தாமல் குடிகார நாடாக தமிழ்நாட்டை ஆக்கியதையும் நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறதல்லவா!

*

ராம்நாராயண் ஆன்மீக சம்பந்தமான ஒரு கேள்வியை காந்திஜியிடம் கேட்டார். அதற்கு விரிவாக அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு வரியை முடித்தவுடனும் ‘ஜி’, ஜி என்று ராம்நாராயண் தான் கேட்பதை உறுதிப்படுத்தி மரியாதையாக சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆனது. காந்திஜி சொல்லிக் கொண்டிருந்ததை சிறிது கவனிக்கத் தவறி விட்டார் ராம்நாராயண் அல்லது காந்திஜி சொல்லியது அவருக்குப் புரியவில்லை. அவர் ஜி என்று சொல்லவில்லை. காந்திஜியும் பேச்சை நிறுத்தி விட்டார். “என்ன ஆச்சு?” என்று கேட்டார் அவர்.

“ஒரு சந்தேகம் உங்கள் மனதில் எழுந்தது என்றால் அல்லது நான் சொன்னதை  உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் நீங்கள் பேசாமல் இருக்கக் கூடாது. என்னைக் கேட்க வேண்டும். அறிவை அடைய கீதை மூன்று படிகளை வெளிப்படுத்தி இருக்கிறது. எளிமை, பிரஸ்னம் அதாவது கேள்விகள் கேட்பது, சேவை.

கேள்விகளைக் கேட்க ஒருவர் தயங்கவே கூடாது. விடையில் திருப்தி கொள்ளாத வரை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மௌனமாக இருப்பது கூட ஒருவகையில் பொய் தான். கவனமாக ஒருவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அது இங்கிதம் இல்லாமல் இருப்பதைக் காட்டுகிறது.”

பாபுஜி மிக்க பொறுமையுடன் ஒருவருக்கு அறிவைப் புகட்டுவார். அதே சமயம் கேட்கும் ஒருவர் கவனத்துடன் இருபப்தையும் வலியுறுத்துவார்.

நைமிசாரண்யத்தில் முனிவர்கள் சுகரை அணுகி கேள்விகளைக் கேட்கும் போது நடக்கும் சம்வாதத்தை மேற்படி சம்பவம் நினைவு படுத்துகிறது. கீதையும் பரிப்ரஸ்னம் என்பதை வலியுறுத்துகிறது – அதாவது மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுதல்!

அடடா! மஹாத்மாவின் வாழ்க்கை தான் எத்துணை எளிமையானது, அதில் தான் எத்தனை பேர் கேள்வி கேட்டுப் பதிலைப் பெற்று அறிவை அடைந்தனர். அவர் தான் எப்படிப்பட்ட சேவையை உலகினருக்கு அளித்தார்!

கீதை காட்டிய வழியை அவர் எப்படி அழகுற போதித்தார்.

அவரை வணங்குவோம்; போற்றுவோமாக!

***

tags –எளிமை, சேவை , கீதை,  காந்திஜி

Q & A WHERE ARE THE NAMES OF KRISHNA IN BHAGAVAD GITA ? MY REPLY (Post No.10,161)

KERALA MUSLIM WOMAN JASNA WITH HER KRISHNA PAINTINGS 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,161

Date uploaded in London – 1 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  • K K

To:swami_48@yahoo.com

Tue, Sep 28 at 9:09 AM

Hello sir, I am tamilnadu, 

One Question sir

ஆடு பழமொழி

November 4 ஆடு எட்டுதான் ஆனாலும் கோட்டைச்சுவர் குட்டி தான்,what is meaning 

Santhanam Swaminathan <swami_48@yahoo.com>

To:K K

Tue, Sep 28 at 11:05 AM

4 ஆடு எட்டுதான் ஆனாலும் கோட்டைச்சுவர் குட்டி தான்

நான் இதுவரை கேட்டதில்லை. யாரவது எழுத்தில் இதைப் பயன்படுத்தி  இருந்தால் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாம்.

பொதுவாக நானாக யூகம் செய்வது இதுதான்:-

சில பழமொழிகளை  , காலப்போ க்கில் அவரவர் இஷ்டப்பட்டி , ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்கின்றனர் .

கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்று கேட்டிருக்கிறோம்.

1. நாலு ஆடு உயரத்துக்கு எட்டினாலும், கோட்டைச் சுவர் குட்டிதான் (யாரும் எளிதில் செய்யாலாம்)

2.எட்டு ஆடுகள் இருக்கின்றன . சுவர் சின்னதுதான் . போய் எடுப்பது/ திருடுவது எளிதே.

3. எட்டே ஆடுகள் இருந்தாலும் ஆவை எளிதில் தப்பிக்கலாம். ஏனெனில் கோட்டைச் சுவர் மிகவும் சிறிதே .

எல்லாம் ஊகமே !

மறுஜென்மம் பற்றிய கேள்வி2

Yahoo/Inbox

R K

To:Santhanam Swaminathan

Wed, Sep 22 at 3:59 AM

தேவரீர்,
நான் தங்களுடைய மகத்தான ஞான விளக்கங்களை ஈமெயிலில் வாசித்து வருகிறேன். தங்களுடைய சேவை மிக போற்றுதலுக்குரியது. தங்களிடம் ஒரு வேண்டுகோள். ஒரு வலைத்தளத்தில் புத்த மதத்தைப் பின்பற்றும் ஒருவர் “மறு ஜென்மம் குறித்த வலியுறுத்தல் புத்த மதத்திலேயே தொடங்கியது. இந்து மத வேதங்களில் அவை கிடையாது. உபநிஷதங்களில் இருந்து தான் இக்கருத்து உட்கொள்ளப்பட்டது. அதுவும் பவுத்த சமயத்திற்கு சம காலத்திலேயோ அதற்குப் பிற்பாடோ தான்” என்று கூறுகிறார்.

ரிக் வேதத்தில் மறு பிறப்பு குறித்த வரிகள் உள்ளனவா? தெளிவு படுத்த வேண்டுகிறேன்.

Regards

R

Santhanam Swaminathan <swami_48@yahoo.com>

To:R.K

Wed, Sep 22 at 5:26 AM

DEAR R K

A SHORT REPLY.

YES, WE HAVE  REFERENCES TO REBIRTH, BRAHMAM, JEEVATMA, PARAMATMA ETC.

I AM FINISHING READING RIG VEDA.

READ 9000 MANTRAS, ONLY 1000 MORE TO GO.

I WILL WRITE ABOUT IT SOON.

THANKS FOR UR INTEREST IN THIS SUBJECT.

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

XXXXX

  • N K

Tue, Sep 21 at 9:19 AM

Pranam

I have gone through your article on google of yadnya yagadi inspired by his holiness jagdguru shankracharya chandrashekhar saraswati swamiji of kanchi Paramacharya.

Hence for my mother who is at 83 for her good health can you suggest any yadnya yaga for her good health? 

Recently we performed sahastra chandra darshan shanti for her good health. Regarding this, I would like to speak to you.Its my request to share your contact details with me.The details of mine are as follows

Name-N.K.

Thanking You

Regards

Santhanam Swaminathan <swami_48@yahoo.com>

To:N.K

Tue, Sep 21 at 9:27 AM

DEAR N K

AYUSH HOMAM IS THE HOMAM WE DO EVERY YEAR FOR GOOD HEALTH AND 100 YEAR HEALTHY LIFE.

THEY DO MRUTYUNJAYA JAPAM, NAKSHATRA HOMAM (ALSO KNOWN AS NAVAGRAHA HOMAM) 

IN SHORT , GANAPATHY HOMAM + AYUSH HOMAM/NAVAGRAHA HOMAM

SOUTH INDIANS DO THIS WAY.

I DONT KNOW WHERE YOU LIVE.

I DONT HAVE WHATSAPP

I WILL PASS ON YOUR NUMBER TO MY BROTHER IN BENGALURU.

IF YOU LIVE IN SOUTH INDIA, WE WILL GIVE YOU SOME NUMBERS.

IF YOU LIVE ANYWHERE ELSE WE AN ONLY SUGGEST..

REGARDS.

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

S G N

To:swami_48@yahoo.com

Mon, Aug 23 at 7:53 PM

Hare Krishna!

I read your blog…  https://www.speakingtree.in/blog/krishna-s-names-in-the-bhagavad-gita

Is it possible to give a reference to where each of these names are used?

Also… this reference talks about 40 names.   Is that a precise count… or an estimated number?

Thanks!

R-s d

MY REPLY:

Strictly speaking his names are 17 in the Bhagavad-Gita. Some are repeated more than once. Apart from these names Arjuna addresses him with various epithets such as Ananta= O Infinite One (11-37), ‘Oh you supreme of power’ = apratima prabhavah 11-43, sakah = Hi Comrade! 11-41; friend etc.

17 names of Krishna

ACHYUTA;1-21; one who does  not deviate from his divine form.( this name is used more than once)

ARISUDANA 2-4 ;Slayer of enemies

BHAGVAN;10-14; O Lord; one who has six attributes

GOVINDA;1-32; cow keeping; or one who is aware of the activities of the organs.

HRISHIKESA;11-36; Lord of the senses

JAGANNIVASA; 11-5; O Lord of Universe

JANARDHANA; 1-36; destroyed demon Jana; also one who rewards those who pray to him.

KESAVA; 1-30; one with luxurious hair

KESINISUDANA;18-1; killer of demon Kesi

KRISHNA; 1-28; black; one who scrapes sin/ pava

MADHAVA; 1-37; one of the 1000 names of Vishnu.

MADHUSUDANA;1-35; he killed demon Mdhu

PURUSHOTTAMA;8-1;O Best among Men

VARSHNEYA; 1-41; O Scion of Vrsni Dynasty

VISHNU; 10-21; the god who preserves universe

YADAVA;11-41; one who belongs to Yadu kula (Yadu dynasty)

YOGESWARA; 11-4; O Lord of Yoga

(Yogesurah;18-78;Lord of Yoga)

XXXX

Earlier I gave these names in my post

Krishna’s Names in the Bhagavad Gita | Tamil and Vedas

https://tamilandvedas.com › krishnas-…

  1.  

Translate this page

30 Mar 2014 — Krishna’s Names in the Bhagavad Gita · krishna green. Compiled by London Swaminathan Post No.944 Date: 30th March 2014.

Achyuta = One who never falls from his position, immovable 1-21
Arisudana = Slayer of enemies 2-4
Madhusudana = Slayer of Demon Madhu
Madhava = Lakshmi’s Husband
Purushottama = Supreme Person
Keshava = Having fine hair; slayer of Keshin
Keshi nishudana = Slayer of the demon Keshin
Bhagavan = One who possesses six kinds of Splendours
Bhuta Bhavan =Origin of all beings
Bhutesh = Lord of all beings
Deva Deva = God of all beings
Jagatpati = Ruler of the worlds
(Sloka 10-15 has got five names of Krishna!)
Janardana = Annihilator of ignorance, liberator of men
Visveshvara = Lord of the universe
Hrishikesha = Master of the senses
Krishna = Black
Yadava = Descendent of Yadu
Sakha = O comrade
Govinda = Herdsman or Giver of enlightenment
Vasudeva = Son of Vasudeva
Varshneyan = Born in Vrshni’s clan
Jaganivasa = Source of universe
Yogeswara = God of Yoga
Vishnu = Omnipresent

( MORE QUESTIONS WELCOME)

XXXX SUBHAM XXXX

 TAGS– Q&A, BHGAVAD GITA, KRISHNA’S NAME, GOAT, REBIRTH, AYUSH HOMA

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல் (Post No.10,160)

statue of Sherlock Holmes at Baker Street, London 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,160

Date uploaded in London – 1 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல் (Post No.10,160)

ஷெர்லக் ஹோம்ஸ் SHERLOCK HOLMES என்ற புகழ் பெற்ற கற்பனை கதாபாத்திரத்தைப் படைத்தவர்  சர் ஆர்தர் கானன் டாய்ல் SIR ARTHUR CONAN DOYLE என்ற ஆங்கில  டாக்டர் ஆவார். ஷெர்லாக் ஹோம்ஸ், உலகின் புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் ஆவார் . உண்மையில் எவரும் அப்படி இல்லை. இது கானன் டாயில் கற்பனையில் உருவான ஒரு ஆள்தான்.

ஆர்தர் கானன் டாய்ல் , ஸ்கட்லாந்திலுள்ள எடின்பரோவில் பிறந்தார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயின்றார். அங்கு பல்கலைக் கழகத்தில் பல்துறைப் பேராசிரியர்களைச் சந்தித்தார். அவர்களுடைய ஆராய்ச்சி மனப்பான்மையினயும் அணுகு முறைகளையும் ஒரு கதாபாத்திரத்தில் ஏற்றி ஷெர்லக் ஹோம்ஸ் என்ற கற்பனைத் துப்பறியும் நிபுணரை உருவாக்கினார். அதாவது எதையும் துப்புத் துலக்க, ஏன், எப்படி, எதற்காக , எவ்வாறு இதை செய்திருப்பார்கள் என்று சிந்தித்து அணுகும் முறை.

கானன் டாய்ல் படிப்பு முடிந்தவுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் டாக்டர் பணியை ஏற்று தென் ஆப்பிரிக்காவில் போயர் BOER WAR  யுத்தம் நடந்த போது அங்கே டாக்டராக இருந்தார். பின்னர் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து போயர் யுத்தம் பற்றி இரண்டு புஸ்தகங்கள் எழுதினார். இதற்காக அவருக்கு SIR ‘ஸர்’ பட்டம் வழங்கப்பட்டது .

கானன் டாய்ல் , இருபது , முப்பது வயது இருக்கும்போதே , டாக்டராகப் பணியாற்றும் போதே , ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தைப் படைத்தார். போலீஸார் வேறு ஒரு வழியைக் கடைப்பிடித்துத் துப்புத்  துலக்க முடியாமல் திணறும்போது அங்கே  ஷெர்லாக் ஹோம்ஸ் சென்று தர்க்கரீதியில் சிந்தித்து துப்புத் துலக்கி விடுவார். இதற்கு அவருக்கு உறுதுணையாக நிற்பது மற்றோரு கதாபாத்திரமான டாக்டர் வாட்ஸன் DR WATSON  ஆவார். டாக்டர் வாட்சன் வாய்மொழி மூலமாகவே கதைகள் வெளியாகும். இவ்விருவரும் இனிய நண்பர்கள் . மேலும் பணத்துக்காக துப்புத் துலக்காமல் பொழுது போக்கிற்காக, இந்தப் பணியைச் செய்வது போல கதைகள் எழுதப்பட்டிருக்கும் .

இவ்வகைக் கதைகளுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. இதனால் 32 வயதில் முழு நேர எழுத்தாளர் ஆனார். இவ்வளவு இளம் வயதில் வெற்றி பெற்ற ஒரு சிலரில் கானன் டாய்ல் முதலிடம் வகிக்கிறார். அவருடைய கதைகள் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. நாடகம், திரை ப்படங்கள் முதலியவற்றுக்கு மூலக் கதைகளாக அமைந்தன.

ஒரே கதா பாத்திரத்தை வைத்து நிறைய கதைகள் எழுதியவுடன் அவருக்கே BORE போர் அடித்துவிட்டது. ஒரு கதையில் ஷெர்லாக் இறக்கப் போவதாகக் காட்டியவுடன் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தனர் . உடனே கானன் டாய்ல் , அவருக்குப் புத்துயிர் கொடுத்து நடமாடவிட்டார்! அவருக்கு கதைகள் தவிர வேறு பல விஷயங்களிலும் ஈடுபாடு உண்டு. இதனால் ஆன்மிகம், வரலாறு, அரசியல் பற்றியும் நிறைய புஸ்தகங்களை எழுதினார். ஆயினும் அவருடைய துப்பறியும் கதைகளே அவருக்குப் புகழ் ஈட்டித்தந்தன

XXX

பேக்கர் ஸ்ட்ரீட் FAKE BAKER STREET ADDRESS

சர் ஆர்தர் கானன் டாய்ல் தன் கதாபாத்திரத்துக்கு பேக்கர் ஸ்ட்ரீட்டில் ஒரு வீடு இருப்பதாக முகவரியையும் கொடுத்து எழுதுவார். இதனால், லண்டனுக்கு வரும் பயணிகள் . அந்த வீட்டைத் தேடி , அலைவார்கள். ஆனால் அப்படி ஒரு இடம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள் (1987-ம் ஆண்டில் நான் லண்டனுக்கு வந்தபோது என் நண்பர்களுடன் இப்படி அலைந்ததுண்டு) இப்பொழுது பேக்கர் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் வாசலிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் சிலை வைத்துள்ளனர். அதற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வோர் ஏராளம். இது தவிர பல போலி மியூசியங்களும் அவர் பெயரில் உள்ளன. காசு கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள்

பிறந்த தேதி -மே 22,1859

இறந்த தேதி – ஜூலை 7, 1930

வாழ்ந்த ஆண்டுகள் – 71

கானன் டாய்ல் எழுதிய  முக்கியக் கதைகள், நூல்கள் :–

1887 – A STUDY IN SCARLET

1890 – THE SIGN OF FOUR

1892 – THE ADVENTURES OF SHERLOCK HOLMES

1894 – THE MEMOIRS OF SHERLOCK HOLMES

1902 – THE HOUND OF BASKERVILLES

1905 – THE  RETURN OF SHERLOCK HOLMES

1914 – THE VALLEY OF FEAR

XXX

6-1-2016ல் நான் எழுதி இந்த பிளாக்கில் பதிவான சுவையான சம்பவம் இதோ

துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465)

ஆங்கிலக் கதை படிக்கும் அனைவர்க்கும் தெரிந்த துப்பறியும் கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கற்பனைக் கதா பாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் கானன் டாய்ல். அப்பேற்பட்ட துப்பறியும் நிபுணரை ஒரு டாக்சி டிரைவர் பிரமிக்கவைத்த ஒரு சம்பவம்:-

நாவல் ஆசிரியர் ஆர்தர்,  பாரிஸில் வந்து இறங்கினார். ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வரிசையாக நிற்கும் ஒரு டாக்ஸியில் ஏறினார். ஹோட்டல் வாசல் வந்தவுடன் கட்டணத்தைக் கையில் கொடுத்தார் சர் ஆர்தர் கானன் டாயில்.

நன்றி, திரு.கானன் டாயில் – என்றார் டாக்சி ட்ரைவர்.

ஆர்தர்: ஏய், நில். என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?

டாக்ஸி டிரைவர்: அதுவா? இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அதில் நீங்கள் இன்று தென் பிரான்ஸ் பகுதியிலிருந்து பாரீஸ் மாநகரம் வரப்போவதை அறிந்தேன். நீங்கள் வந்தவுடன் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஆங்கிலேயன் என்று புரிந்துகொண்டேன். எங்களுக்கு உங்கள் நாட்டுக்காரர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் அத்துபடி. மேலும் உங்கள் தலையைப் பார்த்தேன். தென் பிரான்ஸ் பகுதி நாவிதர்கள் முடிவெட்டிய பாணி (ஸ்டைல்) அதில் தெரிந்தது. உடனே நீங்கள்தான் சர் ஆர்தர் கானன் டாயில் என்று நினைத்தேன்.

ஆர்தர்- பலே, பலே! இதைவைத்து மட்டும் கண்டுபிடித்த உன் மூளை அபார மூளை. சரி, அது எப்படி நான் தான் ஆர்தர் என்று உறுதி செய்தாய்?

டாக்ஸி டிரைவர்: ஓ, அதுவா? உங்கள் பெட்டியில் தொங்கும் அடையாள அட்டையில் உங்கள் பெயர் எழுதியிருக்கிறதே!!!!!!!

ஆர்தர்:- !!!!! ??? !!!!!! ???? !!!!!!!!!!!!!!

XXX SUBHAM XXX

 tags – ஷெர்லக் ஹோம்ஸ் , சர் ஆர்தர் கானன் டாய்ல் , Sherlock Holmes, Sir Arthur Conan Doyle 

ஸ்ரீ குமரகுருபரர்! – 3 (Post No.10159)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,159

Date uploaded in London – 1 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ குமரகுருபரர்! – 3

ஒரு பாட்டில், “கால தத்துவத்தைக் கடந்து நின்றவன் நீ. உனக்குக் காலம் என்றால் என்ன என்று தெரியாததால் தானோ என்னவோ எனக்கு விரைவில் நீ அருள் பாலிக்க மாட்டேன் என்கிறாய் என்று இறைவனை நோக்கிக் கூறுகிறார். (செய்யுட்கோவை 64ஆம் பாடல்).

கந்தர் கலி வெண்பாவில்

“கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக்

குருபரன் என்றோர் திருப்பேர் கொண்டு – திருநோக்கால்

ஊழ்வினையைப் போக்கி உடல் அறுபத்தெட்டு நிலம்

எழுமத் துவாக்களிரு மூன்றும் பாழாக என்கிறார்.

அறுபத்தெட்டு உடல் என்பதற்கு கணக்கு என்ன? தாத்துவிகங்கள் அறுபதையும் புரியட்டகப் பகுதி எட்டினையும் சேர்த்து அறுபத்தெட்டாகக் கூறுகிறார் இங்கு.

நிலத்தத்துவத்தின் கூறு தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர் ஆகிய 5

நீர்த் தத்துவத்தின் கூறு புனல், உதிரம், மஜ்ஜை, மூளை, சுக்கிலம் ஆகிய 5.

தீ தத்துவத்தின் கூறு உணவு செரித்தல், துயில், அச்சம், புணர்ச்சி, சோம்பல் ஆகிய 5

காற்று தத்துவத்தின் கூறு ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய 5.

வானின் துணை கொண்டு நிகழ்வன: வெகுளி, இவறல், விழைவு, பிடிப்பு, பொறாமை ஆகிய 5. சொல்லுதல், செல்லுதல், இடுதல், கழித்தல்,, இன்புறல், கழித்தல், என்ற ஐந்தினுக்கு ஏதுவாக உள்ளன வினைப்பொறிகள்.

நாடிகள் பத்து. வாயுக்கள் பத்து. உடல் உள்ளுறுப்பாகி இருப்பன உணவுப்பை,செரிமானப் பை, நீர்ப் பை, மலப் பை, சுக்கிலப் பை ஆகிய 5.

நெற்றி, கண்டம், நெஞ்சு, உந்தி, மூலம் ஆகிய அவத்தைகள் 5. இவை மொத்தம் சேர்த்தால் வருவது 60. இவைகள் தத்துவங்கள் என்பதால் தாத்துவிகங்கள் எனப்படும். பூத நுட்பம் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் கூடிய நுண்ணுடம்பு புரியட்டகம் எனப்படும். இந்த எட்டையும் அறுபதுடன் கூட்டினால் வருவது 68.

இப்படிப்பட்ட ஏராளமான நுணுக்கங்களை ஆங்காங்கே குமரகுருபரர் சொல்லிக் கொண்டே போவதால் அவரது நூல்களை அனுதினமும் படித்து உணர்ந்து கொள்ள வேண்டியவர்களாக ஆகிறோம்.

எமனை நுளையனாக -மீன் பிடிப்பவனாக – அவர் உருவகப்படுத்துகிறார். எமன் என்ற நுளையன், உப்பு நீர்க் கேணியாகிய உடலின் கண் சிற்றுயிர்களாகிய மீனைப் பிடிக்க வருகிறான். எப்படி வருகிறான்? கபம், வாதம், பித்தம் என்னும் மூன்று தலை கொண்ட தூண்டிலைக் கொண்டு வந்து இடுகிறான். மீன் அந்தத் தூண்டிலில் அகப்பட்டு விடுகிறது. அதாவது உயிர் அவன் தூண்டிலில் அகப்பட்டு விடுகிறது. வாழ்நாள் முடிவின் எல்லையை குறி கொண்டு பார்க்க சடைக் கருவி வைத்திருக்கிறான் அவன். மீனை எடுத்துத் தின்பதற்கு பல்லினை அசைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே இறைவனைத் தொழுது அவனிடம் ‘ஐய நின் கடைக்கண் அருளுதி என்று கேட்க வேண்டும் என்கிறார்.

காசிக் கலம்பகத்தில் காசியில் இறப்பவர்களுக்கு ஓங்காரத்தை இறைவன் ஓதுகிறான் என்கிறார். கலி வெண்பாவில் முருகனைப் பற்றிய அனைத்து அபூர்வ விவரங்களையும் காணலாம்.

தமிழின் சிறப்பை குமரகுருபரர் விளக்குகின்ற விதமே அலாதியானது. ‘எழுத்து முதலா ஐந்திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப் புலமையை அவர் இறைவனிடம் வேண்டுகிறார்.

‘உலகளித்தனை தமிழ் தெளித்தனை என்ற காசிக் கலம்பக அடியால் இறைவனிடம் சேரவும் உலகில் வாழவும் தமிழ் இன்றியமையாத ஒன்று என்பது பெறப்படுகிறது.

“நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமிழ் உண்டு நயந்த நில பா உண்டு என்று இப்படி மீனாட்சி அம்மை இரட்டை மணி மாலையில் அடுக்கிக் கொண்டே போகும அவர், பாமாலை தொடுக்க ஆசை தான்; ஆனால் நார் இல்லையே; அன்பு என்னும் நார் இருந்தால் அல்லவா இவற்றை எல்லாம் தொடுக்க முடியும் என்று கூறி உருகுகிறார்.

இன்னும் கற்பனை நயம், சிலேடை நயம் உள்ளிட்டவை அவர் பாடல்களில் ஏராளம் உள்ளன. ‘சொல்லாவது வேதமே என்கிறார், அதாவது சொல்லானது வேதமே என்று ஒரு அர்த்தம்; சொல்லாதது எதுவோ அந்த இரகசியமே – மறையே- வேதம் என்று இன்னொரு அர்த்தம். இறைவன் ஆணா, பெண்ணா அல்லது ஆண் பெண் இணைந்தவனா? எப்படி இருந்தால் என்ன? எனக்கு இருக்கிறது ஒரு தமிழ்ச் சொல் எல்லாவற்றையும் குறிக்க என்கிறார் அவர்! ஒரே சொல் எந்தாய் என்பது தான்! எம் தாய் என்றும் அதைப் பிரிக்கலாம், எந்தையே என்றும் அதைப் பொருள் கொள்ளலாம். ஆகவே உரிய சொல் எந்தாய் தான்! மொத்தத்தில் குமரகுருபரர் அகன்ற ஒரு பாற்கடல். அதில் மூழ்கி அமிர்தத்தைச் சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

இறுதியாக அவர் அருளிய சகலகலாவல்லி மாலையிலிருந்து இரு பாடல்களைக் கூறி ஞானமயம் அன்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி அருள் பாலிப்பாளாக என்று பிரார்த்தித்து என் உரையை முடிக்கிறேன்.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய், எழுதா மறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் ! சகல கலா வல்லியே!!

மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்

விண் கண்ட தெய்வ்ம் பல் கோடி உண்டேனும் விளம்பில் உன் போல்

கண் கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே!

நன்றி வணக்கம்!

***

tags- குமரகுருபரர்! – 3

Tamil and English Words 2700 Years Ago- Part 65 (Post No.10,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,158

Date uploaded in London – 30 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON 9TH  DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -65

Tamil and English Words 2700 Years Ago- Part 65

பாணினி சூத்திர எண்கள்:–

6-4-18

Krama – order, line, row, due order

Tamils use varisai krmam

கிரமம் , வரிசைக் கிரமம்

Xxx

6-4-20

Jwar – fever, increased body temperature

Tamils use juram

In the same sutra , Panini used sriv= dried

May be related to shrink; anything dried is shrunk

ஜுரம் ,சுருங்குதல்

Xxx

6-4-21

Commentators add murch= fainting, swoon

Tamils use murchai  adainthaan, மூர்ச்சை

Xxx

6-4-23

Anakti – smear

Anoint is derived from it.(English)

Xxx

6-4-26

Ranjayati – dying with colours

Ranga – colour ரங்க – கலர்

Xxx

6-4-30

Puja – give or pay respect

Tiruvalluvar used this Sanskrit word as poosanai

பூஜா = பூஜை = பூசனை (திருக்குறளில்

Xxxx

6-4-33

Bhanj – break

Abhanji- broken

Tamils use pangu =broken part, or one’s share

பஞ்ஜ் = உடை/பிரி = பங்கு

Xxx

6-4-37

Yam – control- yamakam in yoga

Ram – play; rummy, carom

Nam – bow, bend- namste

Han – kill- hunt

Man – think- mind

யமகம் – புலன் கட்டுப்பாடு

ரம் = விளையாட்டு ;கேரம்; ரம்மி

நம் = நமஸ்தே ; வணங்கு

மன் = நினை= மனது

Xxx

6-4-41

Commentators give apsu jayate- water born.

Abja, ambuja are common feminine names

Ambujam – lotus

Agrega – leader

Congress party presidents were called Agraasanar

அப்ஜம் – நீர் அம்புஜம் = தாமரை

அக்ரேகா = தலைவர் = அக்ராசனர்; காங்கிரஸ் கட்சித் தலைவர்

Xxx

6-4-53

Mantra

All Indian languages this word mantra

Xxx

6-4-66

Maa – measure

Tamils also use it maa kaani

Maa – area in paddy field

மா = அளவு; மா காணி ; நில அளவு

Xxx

6-4-68

Gla – become tired

Gla = kalaippu in Tamil

களைப்பு ,

Xxx

6-4-79

Sthri = woman ஸ்த்ரீ

Xxx

6-4-95

Prahladha – feeling happy

Masculine name

Xxx

6-4-122

Pal = fructify= in Tamil Pazu, Palan

பல் = பலன் = பழுத்தால் கிடைப்பது

Xxx

6-4-124

Bharam – wander, wander around

In Tamil Bambaram

பரம் = சுற்றித் திரி

பம்பரம்

To be continued……………………………

tags – Tamil in Panini 65

April 2021 London Swaminathan Articles, Index-101 (Post No.10,157)

KAMALA LAKSHMAN DANCE FROM TAMIL FILMS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,157

Date uploaded in London – 30 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10,000 PLUS POSTS.

APRIL 2021 ; INDEX 101

Tamil and English Words 2700 years Ago-43; 9446, April 1, 2021

Lyrics in Sanskrit – Talk by an IPS officer; 9449;2/4

More Lawyer Anecdotes, 9452; 3 / 4

It is not Mine; Idham na Mama in Yajna, 9460; 5/4

What Great Men said about Hindus; 9465;6/4

Tamil Hindus were Ahead of Darwin, 9464;6/4

Rama’s March to Egypt and Sumeria, 9468;7/4

Very Good Story about Parsis, 9471;8/4

The Beautiful Poetry of the Vedas; 9473;9/4

Machines and Mirrors in Bhagavad Gita ,9476, 10/4

No Thief, No Miser, No Illiterate in My Kingdom- Asvapati of Kekaya, 9482

Greek Gods- Roman Gods (Alphabetical List); 9485;12/4

Baseball Anecdotes; 9493;14/4

More Justice Anecdotes; 15/4; 9496

Vedic Language: Each Word has Many Meanings- Aurobindo; 9499; 16/4

Our Heritage- Sanskrit, 9502; 17/4

New Findings on Rig Veda; 9504;18/4

Stories about Shalivahana; 9514;20/4

Indian Origins of Diamonds; 9516;21/4

Sanskrit Inscription in Delhi Iron Pillar; 9519;22/4

Assembly Membership 2700 years Ago- Panini Titbits-1; 9527; 24/4

One Minister Cabinet 2700 Years Ago; Panini Titbits-2; 9535;26/4

How many Miles did Bharata Travel in 7 Days to reach Ayodhya?9541; 27/4 (Panini Titbits 3)

Salary of Hindu Queen 2400 years Ago- Panini Titbits 4; 9545; 28/4

May 2021 Good Thoughts Calendar; Quotes from Sri Ramakrishna; 29/4

Words from London Times; 9552;  30 April 2021

Tamil and English Words 2700 years Ago-44; 9470; 13/4

Tamil and English Words 2700 years Ago-45; 9501;17/4

Tamil and English Words 2700 years Ago-46; 9526;24/4

Index 62 of London Swaminathan articles posted in January 2018;9523;23/4

Index 63 of London Swaminathan articles ;9525; 24/4

Index 64 of London Swaminathan articles ;9450; 27/4

Index 65 of London Swaminathan articles ;9551; 30/4

London Calling (Tamils) 4-4-2021; 9461

London Calling (Tamils) 11-4-2021;9486

London Calling (Tamils) 18-4-2021; 9510

London Calling (Tamils) 25-4-2021

London Calling (Hindus) 5-4-2021; 9462

London Calling (Hindus) 12-4-2021, 9487

London Calling (Hindus) 19-4-2021; 9511

London Calling (Hindus) 26-4-2021

World Hindu News Roundup 4-4-2021; 9455;4/4

World Hindu News Roundup 11-4-2021; 9480

World Hindu News Roundup 18-4-2021; 9506

World Hindu News Roundup 25-4-2021; 9531

Xxxx

ஏப்ரல் 2021 கட்டுரைகள்

அக்கரைக்கனி அளித்த சக்கரைக்கட்டி, 9448, 2/4

சுமேரிய- இந்திய ஒற்றுமைகள்;9470;8/4

எலி கடி க்குது நெசவு நூலை, கவலை கடிக்குது என் மனதை, -ரிக்வேதம்;9474;9/4

பகவத் கீதையில் எந்திரங்கள்; 9477;10/4

சிந்து சமவெளியின் கொம்பன் யார்;9484;12/4

4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் ஆண்டு, 9492;14/4

பெண்கள் வாழ்க- பகுதி 6, புத்திசாலி தமிழ்ப் பெண்கள் ,9445, ஏப்ரல் 1, 2021

பெண்கள் வாழ்க- பகுதி 7; பெண்களின் வியத்தகு அறிவு, 9451, 3/4

பெண்கள் வாழ்க- பகுதி 8, உலகிலேயே அதிர்ஷ்டசாலிப்  பெண்கள், 9454,4/4

பெண்கள் வாழ்க- பகுதி 9; 33 காரணங்கள் , 9459,5/4

பெண்கள் வாழ்க- பகுதி 10; 33 காரணங்கள், 9466, 6/4

பெண்கள் வாழ்க – பகுதி 11; இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன் ;9489;13/4

பெண்கள் வாழ்க – பகுதி 12, காதல் திருமணம் தோல்வியே , 9495; 15/4

பெண்கள் வாழ்க – பகுதி 13, திருமண மந்திரம், நீயே மஹாராணி ,9498, 16/4

பெண்கள் வாழ்க – பகுதி 14; பெண்கள் பற்றி வராஹமிஹிரர்;9509;19/4

பெண்கள் வாழ்க – பகுதி 15; பெண் கொலை

பெரிய  பாவம் ; 9513;20/4

பெண்கள் வாழ்க – பகுதி 16; ராமாயண காலத்தில்

ஒரு பெண் துறவி 9529;25/4

பெண்கள் வாழ்க – பகுதி 17; வரதட்சிணை முறை தலைகீழாக

மாறியது எப்படி?9534;26/4

பெண்கள் வாழ்க – பகுதி 18; பெண்கள் பற்றி மேல்நாட்டு

அறிஞர்கள் ;9539;27/4

பெண்கள் வாழ்க – பகுதி 19; பூமி எனது தாய், நான் அவள் மகன் ,

9544; 28/4

பெண்கள் வாழ்க – பகுதி 20; பெண்களைப்  பற்றிய பொன்மொழிகள்

பெண்கள் வாழ்க – பகுதி 21; மனைவி பெயரே முதலில்  வரும் ; 9550

கரி என்னும் அற்புத மூலகம் -1, 9517, 21/4

கரி என்னும் அற்புத மூலகம் -2, 9520, 22/4

(CO  – உயிருக்கு ஆபத்து )

கரி என்னும் அற்புத மூலகம் -3, 9522, 23/4

(புறச்சூழலில் கார்பன் )

உலக இந்து சமய செய்திமடல் 4-4-2021 ,9456, 4/4

உலக இந்து சமய செய்திமடல் 11-4-2021 9481;11/4

உலக இந்து சமய செய்திமடல் 18-4-2021 9507;18/4

உலக இந்து சமய செய்திமடல் 25-4-2021; 9532; 25/4

–subham—

Tags – Index 101, April 2021 Index

SUO MOTU CASE PLEASE! SAVE OUR ANTIQUES! வரலாற்றை அழிக்கும் திராவிடர்களை எதிர்த்து வழக்குப் போடுங்கள் !(Post 10,156)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,156

Date uploaded in London – 30 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON SWAMINATHAN’S REQUEST TO MADRAS HIGH COURT AND SUPREME COURT TO TAKE SUO MOTU ACTION IN THE ISSUE OF TEMPLE GOLD JEWELS MELTING SCHEME OF THE TAMIL NADU GOVERNMENT. IT IS DONE BY WHO DOES NOT KNOW HISTORICAL VALUE OF ANTIQUES AND WHO DOES NOT BELIVE IN TEMPLE RITUALS. THE JEWELS ARE GIVEN BY INDIVIDUALS WITH A PURPOSE. THEY CANT VIOLATE THAT. IF WE DON’T USE THEM FOR THE PURPOSES MEANT BY THE DONORS, IT IS OUR FAULT. MOST OF THEM CARRY MORE ANTIQUE VALUE THAN FACE VALUE.

THANKS TO THE FRENCH INSTITUE OF PONDICHERY, WE RECOVERED LOT OF STOLEN ARTICLES WITH THEIR BLACK AND WHITE PICTURES OF OUR IDOLS. EVEN A COPPER COIN IN THE PADMANABHA SWAMI TEMPLE  VAULT OF THIRU ANANTHA PURAM WILL BE NOUGHT FOR A BIG PRICE BY FOREIGN MUSEUMS.

I PAID MONEY TO SEE JEWELS OF BRITISH QUEEN IN LONDON, NAPOLEON’S SHOES IN VERSAILLE IN FRANCE AND CROWNS OF SWEEDISH KINGS IN STOCKHOLM. EVEN ANTI GOD COMMUNIST GOVERNMENTS ARE KEEPING ALL BUDDHA STATUES AND THE JEWELS IN MUSEUMS. COURTS MUST CONSULT GREAT HISTORIANS AND ARCHEOLOGISTS LIKE DR R NAGASWAMY IN THIS MATTER. ARCHAEOLOGY DEPARTMENT SHOULD PHOTOGRAPH ALL GEMS AND GOLDS BEFORE TAKING ANY DECISION. THE PICTURES MUST BE MADE PUBLIC.

 QUEEN VICTORIA REQUESTED A GEM FROM MADURAI MEENAKSHI TEMPLE 200 YEARS AGO. THAT WAS SENT TO LONDON AND ‘RETURNED’. NOBODY KNEW WHETHER IT WAS THE ORIGINAL SHE SENT BACK . I DOUBT IT. IT IS IN MY ARTICLE WRITTEN 10 YEARS AGO ‘THE WONDER THAT IS MEENAKSHI TEMPLE’. COURTS MUST TAKE IMMEDIATE ACTION. HINDU ORGANISATIONS MUST TAKE ACTION IMMEDIATELY.

SEVERAL GEMS AND JEWELS OF TAMIL TEMPLES ARE ALREADY PLUNDERED AND FAKE GEMS ARE INSTALLED. THE BOOGOLAM AND KAGOLAM ORIGINAL MAPS IN CLOTH AT MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM WERE STOLEN AND TAKEN TO FOREIGN COUNTRY. SAVE OUR TEMPLES; SAVE OUR ANTIQUES.

The Wonder that is Madurai Meenakshi Temple – Tamil and …

https://tamilandvedas.com › 2013/09/29 › the-wonder-t…

29 Sept 2013 — Madurai Meenakshi Temple is an architectural wonder. When one climbs to the top of the South Tower to have a bird’s eye view of Madurai,

கோவில் தங்கத்தை உருக்குவோர் வரலாறு அறியாத முட்டாள்கள். சாபத்திற்கு உள்ளாகி அழியப்போகும் வஸ்துக்கள் . நாங்கள் இங்கு லண்டனில் 25 பவுன் கொடுத்து மஹாராணி நகைகளையும் மோதிரங்களையும் , கிரீடங்களையும் பார்க்கிறோம். பாரிசுக்கு வெளியே வெர்சாய் அரண் மனையில் நெப்போலியன் பயன்படுத்திய செருப்பு, மேஜை கூட காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து பார்த்தேன். சுவீடனில் ஸ்டாக்ஹோம்  மியூசியத்தில் மன்னர் கிரீடங்களை காசு கொடுத்து பார்த்தேன். மீனாட்சி கோவில் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. அவற்றின் பழங் கலைப் பொக்கிஷ மதிப்பு- அதாவது ஆன்ட்டிக் வால்யூ ANTIQUE VALUE – கோடி மடங் அதிகம்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தில் உள்ள செப்புக்காசுக்கும் ஆன்ட்டிக் வால்யூ அதிகம். கோவில் நகைகளில் பல மிகப்பழமையானவை . அவைகளை உருக்கக்கூடாது. தொல்பொருட் ததுறையினர் மூலம் விலைமதிப்பிட வேண்டும்.. பல நகைகள் சுவாமி, அம்மன், பெருமாள் மீது போடுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது சாபங்கள் உள்ளன. இதை எல்லா தமிழக கல்வெட்டுகளின் கடைசி வரியில் காணலாம். ஆக அந்த சாபங்கள திராவிடர்களை அடியோடு அழித்துவிடும். மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் நாடுகள்  கூட  தங்க புத்த விக்கிரகங்களையும் நகைகளையும் அப்படியே வைத்திருக்கின்றன. மீனாட்சி அம்மனின் நீலக்கல் லண்டன் வந்து அதை விட்ட்டோரியா மஹாராணி திருடி வைத்துக் கொண்டு  வேறு கல்லை அனுப்பிய செய்தியை 2011ல் எனது பிளாக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அதுபோல நகைகளில் உள்ள விலையுயர்ந்த ரத்தினங்களை திராவிடர்கள் கொள்ளையிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தயவு செய்து இதை கோர்ட்டாரே SUO MOTU வழக்காக எடுத்து மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் . புதுக் சேரியிலுள்ள பிரென்ச் இன்ஸ்டிட்யூட் பழைய கோவில் விக்ரகங்களை கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து வைத்திருந்ததால்தான் டாக்டர் நாக சாமி போன்ற அறிஞர்கள் அவைகளை வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து மீட்டார்கள் . ஆகையால் தொல்பொருட் துறை முதலில் எல்லாவற்றையும் வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து புகைப் படம் எடுக்கவேண்டும். அந்த நகைகளின் பழமை குறித்து மதிப்பிடவேண்டும்.

suo moto

(with reference to an action taken by a court) without any request by the parties involved.

“the court has, suo motu, decided to add the divisional commissioner as a respondent to the petition”

என் வேண்டுகோளை  சுவோ மோட்டோ வழக்காக சென்னை ஹைகோர்ட்டும் சுப் ரீம் கோர்ட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலகப் பேரறிஞர் , சிவபுரம் நடராஜர் சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா.நாகசாமி போன்றோர் கருத்தை முதலில் கேட்க வேண்டும்.

XXX SUBHAM XXX

tags –கோவில் நகை, தங்கம், உருக்கும் திட்டம், வரலாறு, திராவிடர் , வழக்கு, temple gold, melting, suo motu

ஸ்ரீ குமரகுருபரர்! – 2 (Post No.10,155)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,155

Date uploaded in London – 30 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ குமரகுருபரர்! – 2

ஒவ்வொரு ஊராகச் சென்ற குமரகுருபரர் அங்கு அவருடன் வாதுக்கு வந்தோரை வாதில் ஜெயித்து சைவ சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். வைத்தீஸ்வரன் கோவிலை அடைந்த குமரகுருபரரின் கனவிலே முருகப் பிரான் காட்சி அளித்து, “எம்மை பாடாமல் விட்டது ஏன்? என்று வினவினார். கண் விழித்தவுடன் குமரகுருபரர் ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்ற அரிய பிள்ளைத் தமிழ் நூலை இயற்றினார்.

பின்னர் யாத்திரையாக தர்மபுரம் நோக்கிச் சென்ற குமரகுருபரர் தர்மபுர மடத்தின் அதிபதியான மாசிலாமணி தேசிகரைச் சந்தித்து அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். அவர் குமரகுருபரரை காசிக்குச் சென்று அறப் பணிகளை மேற் கொள்ளுமாறு கூற காசி நோக்கிச் சென்றார் குமரகுருபரர்.

காசியை அப்போது முகலாய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஹிந்துஸ்தானி பாஷை மட்டுமே தெரியும். குமரகுருபரருக்கோ அந்த மொழி தெரியாது. அவனைத் தனது அறப்பணிகள் நிமித்தமாகச் சந்திக்க விரும்பிய குமரகுருபரர் சரஸ்வதி தேவியைத் துதித்தார். சகலகலாவல்லி மாலை என்ற அற்புதமான நூலை இயற்றினார். சரஸ்வதியின் அருளால் ஹிந்துஸ்தானி மொழியில் அவர் வல்லவரானார்.

அரசனைச் சந்திக்க அவர் கிளம்பினார். ஆனால் அரசனோ அவருக்கு உரிய ஆசனத்தைத் தந்து கௌரவிக்கவில்லை. ஆகவே குமரகுருபரர் ஒரு சிங்கத்தின் முதுகின் மீது அமர்ந்து அரசவைக்குச் சென்றார். இதனால் வியப்புற்ற மன்னன் அவரது பெருமையை உணர்ந்து அவரைத் தக்கபடி வரவேற்றான்.

சுல்தான் குமரகுருபரரைக் கௌரவிப்பதைக் கண்டு பொறாமை கொண்ட மகமதிய முல்லாக்கள் மன்னரிடம் அவருக்குப் பெரும் அவமதிப்பை உருவாக்க எண்ணினர். அரசனிடம் அவர்கள், குமரகுருபரர் கல்வி கேள்விகளில் வல்லவர் என்றாலும் கூட அவர் வணங்கும் தெய்வம் மெய்யான தெய்வம் இல்லை; அப்படி மெய்யான தெய்வம் என்று அவர் கூறினால் அதை அவர் நிரூபிக்க வேண்டும்“ என்றனர். அரசனும் அவரை அவைக்கு அழைத்தான். குமரகுருபரரிடம் அவர் வணங்கும் தெய்வம் மெய்யான தெய்வம் எனில் அவர் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் பிடித்துக் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர் முல்லாக்கள். குமரகுருபரரும் இதை ஏற்றார். பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையிலே பிடித்த குமரகுருபரர், “சிவனே முழு முதல் கடவுள் என்பது உண்மையெனில் இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்னைச் சுடாதிருக்கட்டும் என்று முழங்கினார். காய்ச்சிய இரும்பு அவரைச் சுடவில்லை. மகமதிய குருமார்கள் தலை கவிழ்ந்து நிற்க சுல்தானோ அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். குமரகுருபரர் கேட்டுக் கொண்ட படி மடம் ஒன்று நிறுவுவதற்கான சகல உதவிகளையும் செய்து மடத்திற்கான இடத்தையும் அளித்தான். ஆக இப்படித் தான் குமாரசாமி மடம் என்று அனைவராலும் அழைக்கப்படும் காசி மடம் உருவானது.

குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து அரசவைக்குச் சென்ற சம்பவம் உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் காசி மடத்தில் அவர் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் கற்சிலை இன்றும் காணக்கூடிய படி அங்கு உள்ளது. காசியில் குமரகுருபரர் வசித்த காலத்தில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

ஒரு நாள் சுல்தான் அவரைத் தன்னுடன் உணவருந்தும்படி அழைத்தான். குமரகுருபரரும் இசைந்தார். தனது பணியாளர் ஒருவரை ஒரு தட்டிலே செவ்வலரி  மலரை வைத்து அதைக் கொண்டு வரச் செய்து அரசனுடன் விருந்துண்ணச் சென்றார் அவர். “தட்டிலே என்ன? என்று அவன் கேட்க, “அது பன்றி மாமிசம் என்றார் குமரகுருபரர். இதனால் மிகுந்த வெறுப்புக்குள்ளானான் அவன். குமரகுருபரரோ, “இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் விருப்பு வெறுப்பு இன்றி நோக்க வேண்டும் என்று உபதேசித்ததோடு அரசன் தட்டிலே இருந்த புலால் உணவு அனைத்தையும் சைவ உணவாக மாற்றினார். அரசனுக்கு சைவ உணவின் மேன்மையைப் பற்றி புலப்படுத்தினார்.

கேதார் கட்டில் முகமதியர் மறைத்து வைத்திருந்த கேதார லிங்கத்தை வெளிப்படுத்தி முறையாக பூஜை நடத்த அவர் வழி வகுத்தார். நேபாளத்தில் முகரங்கி என்னுமிடத்தில் ஒரு திருமடத்தை நிர்மாணிக்க தனது அன்பரான வாகீச முனிவர் என்பவரிடம் சொல்லி அதை நிர்மாணிக்க வழி வகை செய்தார்.

காலம் செல்லச் செல்ல குமரகுருபரர் தனது இறுதி நெருங்குவதை உணர்ந்து தமக்குப் பின் பணிகளைத் தொடர்ந்து செய்ய தமது சீடர்களுள் ஒருவரான சொக்கநாத முனிவரை அதற்கெனத் தேர்ந்தெடுத்தார்.

வைகாசி மாதம் தேய்பிறை மூன்றாம் நாளில் அவர் காசி விஸ்வநாதருடன் கலந்தார். இன்னொரு வரலாற்றுச் செய்தி அவர் கங்காநதியில் சென்று மறைந்து கலந்தார் என்று தெரிவிக்கிறது.

தமிழுக்கு குமரகுருபரர் ஆற்றிய நற்பணி சொற்களினால் விளக்க முடியாதபடி எல்லையற்றுப் பரந்த ஒன்றாகும். அவர் தன் வாழ்நாளில் 16 நூல்களை இயற்றியருளினார். கந்தர் கலி வெண்பா, கைலைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை  மணி மாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரம் செய்யுட் கோவை, சிவகாமி அம்மை இரட்டை மணி மாலை, பண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகியவை அவர் இயற்றி அருளிய நூல்களாகும். இந்த நூல்கள் பலவற்றையும் www.projectmadurai.org  உள்ளிட்ட பல இணையதளங்களில் காணலாம்.

குமரகுருபரரைப் பற்றி திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 338 செய்யுள்களில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின்  சரித்திரம் என்ற நூலை இயற்றியுள்ளார். சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் என்பவர் 1001 பாடல்கள் அடங்கிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் புராணம் என்ற நூலை இயற்றியுள்ளார்.

குமரகுருபரரின் பக்தியையும் அவர் பா நயத்தையும் மேற்படி நூல்களில் காணலாம். சொல் நயம், கற்பனை நயம், பொருள் நயம் என அனைத்து நயங்களிலும் அவர் மேலோங்கி நிற்பதற்குச் சில உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம். இறைவனது எல்லையற்ற தன்மையை அவர் விளக்கும் பாங்கு அற்புதமாக உள்ளது:

“இலதென உளதென இலதுள தெனுமவை

அலதென அளவிட அரியதோர் அளவினை

குறியிலன் அலது ஒரு குணம் இலன் என நினை

அறிபவ ரறிவினும் அறிவரும் நெறியினை என மதுரைக் கலம்பகத்தில் வரும் பாடல் அருமையான ஒன்று.

தொடரும்

*

TAGS- குமரகுருபரர்! – 2

வள்ளலார் பொன் மொழிகள்- அக்டோபர் 2021 காலண்டர் (Post No.10,154)

compiled BY LONDON SWAMINATHAN

Post No. 10,154

Date uploaded in London – 29 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – அக்டோபர் 2- காந்தி ஜயந்தி , 6-மஹாளய அமாவாசை ,7- நவராத்ரி ஆரம்பம், 14-சரஸ்வதி பூஜை ,15- விஜய தசமி,தசரா ; 19-மிலாடி நபி.

அமாவசை -அக்.6, பவுர்ணமி- 20; ஏகாதசி – அக்.2, 16.

சுப முஹுர்த்த நாட்கள் – அக்.25,27

xxx

மகாதேவமாலை , அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அருளியது

xxx

அக்டோபர் 1 வெள்ளிக்கிழமை

36.ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே

தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே.

xxx

அக்டோபர்  2 சனிக்கிழமை

40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யே வான்

ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே

xxx

அக்டோபர்  3 ஞாயிற்றுக் கிழமை

41.நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்

கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே

xxx

அக்டோபர்  4 திங்கட் கிழமை

43.பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்

திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

xxx

அக்டோபர்  5 செவ்வாய்க் கிழமை

44. அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்

விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே

xxx

அக்டோபர்  6 புதன் கிழமை

46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே

கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே

xxx

அக்டோபர்  7 வியாழக் கிழமை

49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே

xxx

அக்டோபர் 8 வெள்ளிக்கிழமை

50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்

நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே

xxx

அக்டோபர்  9 சனிக்கிழமை

52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு

பெற்றறியாப் பெரும்பதமே

xxxx

அக்டோபர்  10 ஞாயிற்றுக் கிழமை

53. மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்

பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே

xxx

அக்டோபர்  11 திங்கட் கிழமை

54.ஆண்பெண்

அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே

xxx

அக்டோபர்  12 செவ்வாய்க் கிழமை

55.ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை

ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

xxx

அக்டோபர்  13 புதன் கிழமை

56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து

xxx

அக்டோபர்  14 வியாழக் கிழமை

58. உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற

ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே

இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்

கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே.

Xxx

அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை

61. உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்

மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்

கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று

வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே.

xxx

அக்டோபர் 16 சனிக்கிழமை

64.அதுகண்டோம் அப்பாலாம் அதுவும் கண்டோம்

ஏன்றஉப சாந்தநிலை கண்டோம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று

சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே.

xxx

அக்டோபர் 17 ஞாயிற்றுக் கிழமை

69.அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்

நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீ

xxx

அக்டோபர் 18 திங்கட் கிழமை

71. ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்

தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மே

xxx

அக்டோபர் 19 செவ்வாய்க் கிழமை

73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே

xxx

அக்டோபர் 20 புதன் கிழமை

74.பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல

நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ.

xxx

அக்டோபர் 21  வியாழக் கிழமை

75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு

பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்

Xxxx

அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை

76.பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்

துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

xxxx

அக்டோபர் 23 சனிக்கிழமை

77. என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே

xxxx

அக்டோபர் 24 ஞாயிற்றுக் கிழமை

83. அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்

கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்

xxx

அக்டோபர் 25 திங்கட் கிழமை

85.கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே

உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன்

xxxx

அக்டோபர் 26 செவ்வாய்க் கிழமை

87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே

xxx

அக்டோபர் 27 புதன் கிழமை

89.பன்னெறியில் எனைஇ ழுத்தே

பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை

xxx

அக்டோபர் 28  வியாழக் கிழமை

90. கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்

தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்

xxx

அக்டோபர் 29 வெள்ளிக்கிழமை

94.செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்

இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

Xxx

அக்டோபர் 30 சனிக்கிழமை

95. அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்

கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ

xxx

அக்டோபர் 31 ஞாயிற்றுக் கிழமை

97.உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்

பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே.

Xxxx subham xxxxx

Tags-  வள்ளலார் , பொன்மொழிகள், மகாதேவ மாலை , அக்டோபர் 2021, காலண்டர்