ருக்மிணீ விஜயம் மகா காவியம்-1 (Post No.10035)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,035

Date uploaded in London – 31 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ருக்மிணீஷ விஜய– ஆறாம் மகா காவியம்                                                                                                                              B.Kannan,Delhi

அன்பார்ந்த ஞானமயம் / தமிழ் முழக்கம் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் வணக்கம்.

இன்றைக்கு நாம் கேட்கப் போவது பிரபல கவி மாகா, மற்றும் மகான் ஶ்ரீவாதிராஜர் பற்றியது தான்….     

தென் கர்நாடக மாநிலம், கும்பாஸி ஜில்லா அருகே ஹூவினகரே என்னும் அழகிய கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் வசித்து வந்த ஸ்ரீ ராமாச்சார்யர் (தேவபட்டா) – ஸ்ரீமதி ஸரஸ்வதி(கௌரி) எனும் துளுவக்குலப் பிராமணத் தம்பதிகளுக்கு வெகு நாட்களாகப் புத்திரப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. உடுப்பி ஸோதே மடத்தின் 19-வது மடாதிபதியாக விளங்கிய ஶ்ரீவாகீஸ தீர்த்தரின் அருளால் அவர்களுக்கு இரண் டாவது மகனாக ஸ்ரீ வாதிராஜர், மாக மாத, சுத்த த்வாதஸி அன்று (1480 ) சுபநாளில் அவதரித்தார். இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் ஸ்ரீ பூவராஹன். குரு வாகீஸதீர்த்த ருக்குக் கொடுத்த வாக்குப்படி,8 வயதானவுடன் அவரை மடத்தில் சேர்த்து விட்டனர். அங்கு,ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் என்றச் சன்னியாச நாமத்துடன் துறவியாக நியமிக்கப் பட்டு, ஶ்ரீவித்யநிதி தீர்த்தரின் பராமரிப்பில் வைக்கப்பட்டார். பின்னர் குருவின் நேரடி பார்வையில் கல்விகற்றுப் புலமைப் பெற்றார்.பெயருக்கு ஏற்ப வாதத்தில் எதிரிகளை வென்று அவர்களின் கர்வம், அகங்காரத்தை அடக்குபவராக விளங்கினார்.                                                                                                                                                                                                     

வாதிராஜ தீர்த்தர் ஓரு துவைதத் தத்துவஞானியும், கவிஞரும் ஆன்மீகவாதியு மாவார். இவரது காலத்தில் ஒரு பன்மொழிப் புலமைக் கொண்டவரான இவர்,

மத்துவ இறையியல் மற்றும் தத்துவங்கள் குறித்துப் பல படைப்புகளை எழுதினார். கூடுதலாக, இவர் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். சோதே மடத்தின் தலைவராக,(வடகன்னட) உடுப்பியில் உள்ள கோயில் வளாகத்தைப் புதுப்பித்து, பரியாய வழிபாட்டு முறையை நிறுவினார். மத்துவரின் படைப்புகளில் உத்வேகம் கொண்டு கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததன் மூலம் அக்கால கன்னட இலக்கியங் களை வளப்படுத்தியப் பெருமையும் இவருக்கு உண்டு]. மேலும், ஹரிதாச பக்தி இயக்கத்திற்கும் பங்களிப்பு செய்தார். இவரது படைப்புகள் அவற்றின் கவிதை செழிப்பு, கூர்மையான அறிவு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன

ஒரு சிறந்த எழுத்தாளரான இவர், அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்குப் பெருமைச் சேர்த்துள்ளார். குறுகிய பாடல்கள் மற்றும் காவியக் கவிதைகள் முதல் துவைதத் தத்துவங்களிலுள்ளச் சிக்கல்களைப் பற்றியச் சுருக்கமான அறிவார்ந்தப் படைப்புகள் வரை இவரது சாயல் வேறுபட்டது. அயவதானா என்ற பெயரில் பல கவிதைகளை எழுதினார். யுக்திமாலிகா எனற படைப்பு இவரது மகத்தானப் பணியா கப் பரவலாகக் கருதப்படுகிறது. இவர் பல காவியக் காப்பியங்களையும் இயற்றினார்.

அவற்றில் குறிப்பிடத்தக்கது !9  காண்டங்கள் அடங்கிய ருக்மிணீஷ விஜயநூலாகும்.                                                                                                                                                                                             ஆஷாட சுக்ல தசமியிலிருந்து, கார்த்திகைச் சுக்ல பௌர்ணமி வரையிலான நான்கு மாதகாலம் சாதுர்மாஸ்யப் புண்ணியக் காலம் எனப்படும். இது  மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாகும். துறவிகள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்தவாறு, வேறு எங்கும் விஜய யாத்திரை மேற்கொள்ளாமல், அன்றாடப் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் மகான் ஶ்ரீவாதிராஜ தீர்த்தர் வாழ்வில் நடந்த ஓர் அற்புத நிகழ்வைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். இது அவரது வாழ்க்கைச் சரிதத்தைக் கூறும் ஶ்ரீராமசந்திராச்சாரியார் இயற்றிய “ஶ்ரீவாதிராஜ குருவர சரிதாம்ருதா” என்ற நூலில் (அத்தி.3, சுலோகம் 4–10) விவரிக்கப்படுகிறது. இவர் சார்வரி ஆண்டு பங்குனி மாதம் (1600) பகுள த்ருதியை அன்று பக்தர்கள் வேதகோஷம் முழங்க, ஜீவத்துடன் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்தார்.

ஒருசமயம் மகான் புண்ணியபுரி என்றழைக்கப்படும் புனே நகரில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சம்ஸ்க்ருதப் பண்டிதர்களின் வித்வத் சபை கூடி, எந்த மகாகாவியத்தை மிகச் சிறந்தப் படைப்பாகக் கருதலாம் என்பதைத் தீர்மானிக்க விவாதத்தில் ஆழ்ந்திருந்தது.முடிவில் அனைவரது ஒப்புத லுக்கு இணங்க கவி மாகாவின் “சிசுபால வதம்” அதற்கு ஏற்றது எனத் தேர்ந் தெடுத்தது. .

இதில் மாத்வர்களுக்குச் சற்றும் இணக்கமில்லை. மாகா என்னத்தான் விஷ்ணுவைப் போற்றியிருந்தாலும், கிருஷ்ணரைத் தாழ்த்தி, வில்லன் சிசுபாலனை உயர்த்திப் புகழ்ந்திருந்ததை ஏற்க மனமில்லை. மகான் ஶ்ரீவாதிராஜருக்கும் இதே மனநிலை தான். அன்றைக்கு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன் மாகாவால் இயற்றப்பட்டக் காவியத்துக்குச் சவால் விடவேண்டும் என்றால், அதைவிட மேண்மையான ஒரு காப்பியத்தை இயற்ற வேண்டும் என எண்ணம் கொண்டார். உடுப்பி மடத்தில் அதே பின்புலனை வைத்துத் தான் எழுதியக் காவியத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் மேல் விவரங்களை வைத்திருப்பதால், அவற்றைக் கொண்டு வந்துச்  சமர்ப்பிக்க மூன்றுவாரக் கால அவகாசம் தேவை, அதையும் பரிசீலித்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம் அதுவரைப் பொறுத்திருக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டார்…அவர்களும் சம்மதித்தனர்.

கவி மாகாவைப் பற்றி அறிந்துகொள்ளுவது இப்போது அவசியமாகிறது. 

மாகா பொ.ஆ.பின் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஶ்ரீமலாநகர் எனும் தற்போது ராஜஸ்தானிலுள்ள பின்மல் ஊரில்,செல்வந்தர் தத்தகா சர்வாச்சார்யாருக்கு மகனாகப் பிறந்தார். தனது தந்தை. பாட்டனார் சுப்ரபதிகா போன்று இவரும் பின்னாளில் வடமொழியில் பாண்டித்யம் பெற்று, அந்நாட்டு அரசன் வரமலதாவின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார். அவர் பல நூல்களை எழுதியதாகச் சொல்லப் பட்டாலும் அவையெல்லாம் வெளியுலகத்துக்கு வரவேயில்லை, ஒரேயொரு காவியத்தைத் தவிர. உலகெங்கும் பேசும்பொருளாக விளங்கும் சிசுபாலவதம் தான் அது! ஐந்துமகா காவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ( ரகுவம்சம், குமார சம்பவம், கிராட்டார்ஜுனீயம், சிசுபாலவதம், நைஷதீய சரிதம்)

இந்நூலைப் பற்றியப் பல சொலவடை அறிஞர்களிடையேப் புழக்கத்தில் உள்ளன. தருமி புலவர் தன்னை வம்புக்கிழுத்த நக்கீரரிடம் சொல்வது போல், “பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் (மாகா) இருக்கிறார்கள், அதில் குற்றம்,குறை கண்டுப் பிடித்து பேர் வாங்கும் புலவர்களும் (மல்லிநாதர்) இருக்கிறார்கள். ஆம், மல்லிநாத சூரியின் விமர்சனம், விளக்கவுரை அல்லது வியாக்கியானம் இல்லாமல் சிசுபால வதம் போன்ற காவியங்களைப் புரிந்துக் கொள்ள இயலாது! மல்லிநாதரே சொல்கிறார், “”माघे मेघे वयम् गत:”–மாக காவியம், மேகதூதம் நூல்களைப் படித்துப் புரிந்துக் கொள்வதிலேயே காலம் ஓடிவிடுகிறதே!” என்று வியக்கிறார்.    

எப்போதுவரை கவி மாகா இலக்கியத் தொடுவானில் எழும்பவில்லையோ, அதுவரைதான் பாரவியின் கவியாற்றல் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது மற்றொரு பழமொழி!

उपमा कालिदासस्य भारवेरर्थगौरवम् , दण्डिनः पदलालित्यं माघे सन्ति त्रयो गुणाः

உபமானத்துக்கு காளிதாஸன், பொறுள்செறிவுக்குப் பாரவி, வார்த்தை ஜாலங்களுக்கு தண்டின், இவையெல்லாவற்றையும் கொண்டவர் கவி மாகா என்பது பிறிதொன்று.

ஒரு மகா காவியத்துக்குரிய லட்சணங்களாக அந்த வித்வத் சபை எதிர்பார்த்தது: கதையின் கரு இந்திய இதிகாசத்திலிருந்தோ, வரலாற்று நிகழ்ச்சியை ஒட்டியோ இருக்க வேண்டும்

அர்த்த, காமம்,தர்மம், மோட்சம் ஆகியவற்றைச் சொல்வதாக இருக்க வேண்டும்

அதில், நகரம், கடல்,மலை, சூரிய-சந்திர உதய வர்ணனை, ஜலக்ரீடை, உல்லாச கேளிக்கை, காதலர் பிரிவு வேதனை, திருமண நிகழ்ச்சி, குழந்தை பிறப்பு, ராஜ சபை, படை அணிவகுப்பு,போர்க்களம், வெற்றி வாகைச் சூடுதல் ஆகியவை இடம் பெற வேண்டும். இவற்றை மாகா உபயோகித்திருந்தாலும், அவற்றைக் வெளிக்காட்டத் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றிக் கொண்டார்.

“முதல் 9 சர்கங்களிலேயே சொல்லகராதில் உள்ள எல்லா எழுத்துக்களையும் உபயோகித்து விட்டதால் பின்னால் வரும் அத்தியாயங்களில் வேறு எந்தப் புதுச் சொற்களையும் சேர்க்க முடியாமல் போனதாம்!” என்ற சொலவடையும் ஒன்றுண்டு.

தனது வீரரஸக் காவியத்துக்கானக் கதைக் கருவை, மகாபாரதம் சபாபர்வத்தில் (அத்.33-45) கூறப்பட்டுள்ளச் சம்பவங்களையே நிலைக்களனாக எடுத்துக் கொண்டுள் ளார். பாகவதத்தில் இதுவே 10-வது ஸ்காந்தம்அத்.74-ல் வருகிறது. அக்காலக் கட்டத்தில் ஆண்களும், மகளிரும் உபயோகித்த ஆடை, ஆபரணங்களை விவரிக் கிறார்–பரிதானா, அம்சுகா, வஸனா, வஸ்த்ரா, அம்பரா,உத்தரீயம் என்றும், மளிர் அணியை, நீவீ, வஸனா, அம்சுகா, கௌஷேயா, அதிவாசா, நிதாம்பர வஸ்த்ரா, இடையில் அணியும் கபந்தா(ஓட்டியாணம்) என்று. ரைய்வதகா (கிர்நார்) மலையின் ஒரு பக்கம்நிலவு உதிப்பதையும், மறுபக்கம் சூரியன் மறைவதையும் பார்க்கும்போது, அது ஒரு பெரிய யானையின் முதுகின் இருபுறமும் தொங்கி ஆடி அசையும் இரண்டு மணிகள் போல் காட்சியளிக்கிறதாம்!(4-20) இந்த உருவகம் பிரபலமடைந்து, “கண்டாமாகா”–மணிமாகா– என்றப் புனைப் பெயரால் அவர் அறியப்படலானார். கவி தண்டின் காவ்யாதர்சாவில் விவரிக்கும் அனைத்துச் சொல்லணிகளையும் திறம்படக் கையாண்டு மற்றப் புலவர்களைத் திணற வைத்துள்ளார்.

அவருடைய எழுத்துக்களில்,ஜோதிடம்,அரசியல், வேத கோஷம், வான சாஸ்திரம், யானை,குதிரை சாஸ்திரம் பற்றியச் செய்திகள்,சங்கீதம், தத்துவம் ஆகிய விஷயங் களைக் காணலாம். அவர் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்  என்றால் மிகையல்ல.

இப்படிப்பட்ட ஓர் அசகாயச் சூரரின் காவியத்தைத் தான் ஶ்ரீவாதிராஜர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக

மீண்டு வருவதில் தான் ஒரு கவிஞனின் படைப்புத் திறன் மேன்மை அடங்கியிருக்கிறது. அதுமாதிரி சிசுபாலவதம் மகா காவியத்துக்குச் சவால் விட ஶ்ரீவாதிராஜர் போன்ற மகான் வரவேண்டியிருந்தது. உடுப்பியிலிருந்துப் பிரதியை எடுத்து வர வேண்டும் என்றுச் சொன்னதெல்லாம் ஒரு சாக்குப் போக்கே! அந்தக் கால இடை வெளியில் ஒரு சாதனை நிகழ்த்தத் தயாராகி விட்டார். 

To be continued…………………………………………………..

tags- ருக்மிணீஷ விஜயம் ,  கவி மாகா, ,வாதிராஜ தீர்த்தர்

கோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்! (Post No.10034)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,034

Date uploaded in London –  31 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கோவில் கொள்ளைத் துறையும் ஒரு ராஜாவின் கதையும்!

ச.நாகராஜன்

1  

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் அனைவரும் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளைக் கொண்டு வெளிவரும் தமிழ் இதழாகும். இதன் ஆசிரியர் ஆர்.சி.ராஜா சிவன் பால் சித்தம் வைத்து வாழ்ந்து வருவதோடு அனைவரின் நலனையும் மனதில் கொண்டிருப்பவர் என்பது இந்த இதழைப் படிப்பவர்களுக்கு நன்கு புரியும். அவர் 2021, ஆகஸ்ட், 28ஆம் தேதியன்று ஒரு கதையை அனுப்பி இருந்தார் எனக்கு. நல்ல கதை. சிந்தனையைத் தூண்டி விடும் கதை. உடனே அவருக்கு இதை ஒரு கட்டுரையாக எழுதுங்களேன், ஏனெனில் இது இன்றைய ஆலய நிலையைச் சுட்டிக் காட்டுகிறது என்றேன். நீங்களே எழுதுங்கள் என்று பதில் அனுப்பி விட்டார் அவர். இதோ எழுதுகிறேன் – இந்தக் கதையை அனுப்பிய அவருக்கும் அவருக்கு இதை அனுப்பிய அவரது நண்பருக்கும் நன்றி கூறி!

2

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் தனது மந்திரியுடன் ஒரு நாள் மாலை நகர் வலம் சென்றார். ஆற்றங்கரை ஓரமாக அவர்கள் சென்ற போது ராஜா ஒரு வெள்ளரிக் கொடியைப் பார்த்தார். அதில் காய்கள் நன்கு காய்த்து அழகுறத் தொங்கின.

மந்திரியைப் பார்த்து ராஜா, “அதோ அந்தக் காய்களைப் பறித்து வாரும். உண்ணலாம்” என்றார்.

மந்திரி உடனே அதைப் பறிக்கப் போனார். அப்போது அங்கே ஒரு கண்பார்வையற்ற முதியவர் உட்கார்ந்திருந்தார்.

யாரோ ஒருவர் காயைப் பறிக்க முன் வருவதை உணர்ந்த அவர் கூறினார்:”ஐயா, காயைப் பறிக்காதீர்கள். அது வெள்ளரிக்காய் போலத் தோன்றும் குமட்டிக்காய். அதைத் தின்றால் வாந்தி தான் வரும்”.

கண்பார்வையற்ற ஒருவர் சொன்னதை நம்பாத ராஜா, “மந்திரி, எங்கே அதைப் பறித்துச் சாப்பிடும். உமக்கு வாந்தி வருகிறதா என்று பார்க்கலாம்” என்றார்.

அரச கட்டளை ஆயிற்றே! மந்திரி காய்களைப் பறித்துச் சாப்பிட்டார். உடனே ஒரே வாந்தியாக வந்தது. மந்திரி தொடர்ந்து வாந்தி எடுத்ததைப் பார்த்த ராஜா திகைத்துப் போனார்.

“அட, கபோதியே! நீ சொன்னது உண்மையாக அல்லவா இருக்கிறது. நான் அரசன். எனது மந்திரி வாந்தி எடுக்கிறாரே. இதை எப்படி நிறுத்துவது? வழி தெரியுமா உனக்கு?” என்றார் ராஜா.

“ராஜாவா! வணக்கம் ராஜா! ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அருகில் கை போலக் காட்சி அளிக்கும் ஒரு சிறிய செடியில் வளர்ந்துள்ள இலைகளைப் பறித்துக் கசக்கிச் சாப்பிடச் சொல்லுங்கள். வாந்தி உடனே நிற்கும் “ என்றார் அந்தக் குருடர்.

உடனே மந்திரி அப்படியே பச்சிலைகளைப் பறித்து வாயில் போட்டுக் கொண்டார். வாந்தியும் நின்றது.

ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. குருடரைப் பார்த்து, “அது சரி, உனக்குத் தான் கண் பார்வை இல்லையே, இதையெல்லாம் எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

குருடர் கூறினார்: “ அரசே! நாட்டில் எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுகிறது. அப்படி இருக்கும் போது வெள்ளரிப் பிஞ்சுகளை எவனாவது செடியில் விட்டு வைத்திருப்பானா? ஆகவே தான் அதை குமட்டிக்காய் என்று அறிந்தேன். அத்தோடு இறைவன் எப்போதுமே நோய் கொடுக்கும் காயை வைத்திருந்தால் அதற்குப் பக்கத்திலேயே அதைத் தீர்க்கும் மருந்தையும் வைத்திருப்பார் என்பதால் அந்த பச்சிலை பற்றிச் சொன்னேன்” என்றார்.

ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி. “அடடா! அற்புதம். என் பெயரைச் சொல்லிக் கிழக்கு வாயிலுக்குப் போ. அங்கே பட்டை சாதம் இலவசமாகத் தருவாங்க. வாங்கிச் சாப்பிடு” என்றார்.

நாட்கள் பல கழிந்தன.

அயல் தேசத்து வியாபாரி ஒருவர் அந்த அரசனிடம் வந்தார். “ராஜாவே, என்னிடம் வைரம் நிறைய இருக்கிறது. வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.

இந்த வைரங்கள் நிஜமானவையா அல்லது போலியானவையா என்று எப்படிக் கண்டு பிடிப்பது என்று ராஜாவுக்குக் குழப்பம் வந்து விட்டது. “மந்திரியைக்  கூப்பிட்டு இது பற்றி உனக்குத் தெரியுமா” என்றார்.

மந்திரிக்கு வாந்தி எடுத்த அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. வைரத்தைச் சாப்பிடச் சொன்னால் உயிர் அல்லவா போய்விடும்! அலறிப் போனார்.

“எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வல்லுநரை அழைத்துத் தான் கேட்க வேண்டும்” என்றார் அவர்.

ராஜாவுக்கு அந்தக் குருடரின் ஞாபகம் வந்தது.

மந்திரியைப் பார்த்து, “அந்த குருடர் கொஞ்சம் விஷயம் அறிந்தவராக இருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்’ என்றார்.

மந்திரியும் அப்பாடா பிழைத்தோம் என்று எண்ணி அந்தக் குருடரை அழைத்து வரச் செய்தார். குருடரும் வந்தார்.

அவரிடம் ராஜா, ” அப்பனே! இது நிஜமான வைரமா? போலியும் கலந்திருக்கிறதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது. சொல்லேன்” என்று கேட்டார்.

“அரசே, இது மிக சுலபம். கற்களை வெயிலில் வையுங்கள். கண்டு பிடித்து விடலாம்” என்றார் குருடர்.

ராஜா அசந்து போனார் – இது என்ன அற்புத உத்தியாக இருக்கிறதே என்று!

அப்படியே நல்ல வெயிலில் வியாபாரி கொண்டு வந்த வைரங்கள் வைக்கப்பட்டன. சிறிது நேரம் கழிந்தது. குருடர் அந்த வைரங்களைத் தடவிப்

பார்க்க ஆரம்பித்தார். சிலவற்றை ஒரு புறமாக வைத்து இவை நல்ல வைரங்கள் என்றார். இன்னும் சிலவற்றை வேறொரு பக்கம் வைத்து இவை போலி வைரங்கள் என்றார்.

ராஜா வியாபாரியைப் பார்த்து, “என்ன விஷயம்?” என்று அதட்ட, அந்த வியாபாரியும் குருடர் சொன்னது சரிதான் என்றும் அவர் தரம் பிரித்தது மிகவும் சரிதான் என்றும் உண்மையைக் கூறியதோடு அந்த வைரங்களை ராஜாவுக்கு இலவசப் பரிசாக அளித்து தண்டனையிலிருந்து தப்பித்தார்.

ராஜாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

“அப்பனே! எப்படி இப்படி எளிதாக கையால் தடவி கண்டு பிடித்தாய்? இரண்டு கண்களும் நன்றாக உள்ள எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே” என்று வியப்புடன் கேட்டார்.

“அரசே!இது மிகச் சுலபமான ஒன்று தான். வெயிலில் வைத்த போது கண்ணாடி என்றால் அது சுடும் இல்லையா? நல்ல வைரங்கள் சுடாது. அதை வைத்து கண்ணாடிக் கற்களை ஒதுக்கி வைத்தேன். அவ்வளவு தான்” என்றார் குருடர்.

ராஜா அவரது அறிவை மெச்சி ,”மேற்கு வாயிலுக்குச் செல்லுங்கள், உங்களுக்கு பட்டை சாதம் தயாராகக் காத்திருக்கும். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.

குருடரும் நகர்ந்தார்.

மாதங்கள் சில கழிந்தன. தன் குமாரனுக்கு நல்ல பெண்ணாகப் பார்க்க ராஜா விரும்பினார். பல தேச இளவரசிகளில் சிறப்பான ஒரு இளவரசியை எப்படித் தீர்மானிப்பது. யாரையும் அவர் நம்பத் தயாரில்லை. குருடரின் புத்தி கூர்மை அவருக்கு நினைவுக்கு வரவே அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராஜா. குருடரும் வந்தார்.

ராஜா தனது பிரச்சினையைச் சொன்னார்.

“நிறைய இளவரசிகள் இருக்கிறார்கள். எப்படி தேர்ந்தெடுப்பது மருமகளை?” என்று ராஜா கேட்டார்.

குருடர் ராஜகுமாரிகள் இருக்கும் இடங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் கேட்டார்.

“ராஜா! இது ரொம்ப சுலபம். உங்களது அடுத்த நாட்டிற்கு அடுத்த நாட்டில் உள்ள இளவரசியை நிச்சயம் செய்து மணத்தை முடித்து விடுங்கள்.

ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான பிரச்சினைக்கு இப்படி ஒரு வரியில் ஒரு தீர்வா?

சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் குருடரைப் பார்த்துக் கூறினார்’ “ஆஹா! அந்த இளவரசி அற்புதமான பெண் தான்! ஆனால் இவ்வளவு பேர் இருக்கும் போது அவளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? காரண காரியம் இல்லாமல் நீங்கள் தீர்மானிக்க மாட்டீர்களே. எப்படி தேர்வு செய்தீர்கள் என்று சொல்லுங்கள்” என்றார்.

“அரசே! அந்த ராஜாவை உங்க சம்பந்தி ஆக்கிக் கொண்டால் எல்லை பிரச்சினை வரவே வராது. இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பதால் நடு தேசத்து ராஜா அடங்கி இருப்பார். அத்துடன் நம் நாட்டில் நிலவும் பஞ்சம் ஒரேயடியாக ஒழிந்து விடும். நமது நாட்டில் மற்ற இரு தேசங்களின் நட்புறவால் வளம் கொழிக்கும். எல்லை பிரச்சினையும் என்றுமே இருக்காது” என்றார் குருடர்.

“அடடா! என்ன ஒரு அற்புதமான யோசனை. இதோ இப்போதே நம் வடக்கு வாயிலுக்குச் செல்லுங்கள் . அங்கு உங்களுக்கு பட்டை சாதம் தயாராக இருக்கும். அதை வாங்கிச் சாப்பிடுங்கள்’ என்று உபசரித்தார் ராஜா.

குருடரும் வடக்கு வாயிலை நோக்கிப் போனார்.

நாட்கள் சில கழிந்தன.

ராஜா ஒரு நாள் அந்தக் குருடரை தனது அந்தரங்க அறைக்கு வரச் சொன்னார். மற்ற அனைவரையும் உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிட்டார்.

குருடரைப் பார்த்து, “அப்பனே! நீண்ட காலமாக என் மனதை அரித்து வரும் விஷயத்தைப் பற்றி உன்னைக் கேட்க விரும்புகிறேன். இந்த தேசத்தில் பலரும் என்னை பிச்சைக்காரிக்குப் பிறந்தவன் என்கிறார்கள். இதைக் கேட்கவே சகிக்கவில்லை. இது உண்மையா? காரண காரியத்தோடு பதிலைச் சொல்லு” என்றார் ராஜா.

குருடர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். ராஜா அவரைப் பார்த்து, “பயப்படவே வேண்டாம். உம்மை ஒன்றும் செய்ய மாட்டேன். இது சத்தியம். உண்மையைச் சொல்லலாம்” என்றார்.

குருடர் ராஜாவைப் பார்த்து, “ராஜாவே! இதில் சந்தேகமே வேண்டாம். நீங்கள் பிச்சைக்காரிக்குப் பிறந்தவர் தான்!” என்றார்.

ராஜாவுக்கு ஒரே வருத்தம். குருடரைப் பார்த்து, “அடடா! எவ்வளவு சோகமான செய்தி! இருந்தாலும் சரி, எப்படி இதைச் சொல்கிறாய், அந்தக் காரணத்தைச் சொல்” என்றார்.

குருடர் கூறினார்: “ ராஜாவே! முதலில் நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். குமட்டிக்காயைப் பற்றிச் சொல்லி உங்கள் மந்திரியைக் காப்பாற்றினேன். அதற்காக எனக்கு கிழக்கு வாயில் பட்டை சாதத்தைக் கொடுத்தீர்கள். உண்மையான ராஜாவாக இருந்தால் தனது வைர மோதிரம், மாலை உள்ளிட்டவற்றை கழட்டிக் கொடுத்திருப்பார். அடுத்ததாக கோடிக் கணக்கான பெறுமானமுள்ள வைரங்களை தரம் பிரித்ததோடு அந்த வியாபாரி அதை இனாமாக உங்களுக்குக் கிடைக்கச் செய்தேன். அதற்கு மேற்கு வாயில் பட்டை சாதத்தை வழங்கினீர்கள். உண்மையான ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு அரண்மனை பொக்கிஷத்தை வாரி வழங்கி இருப்பார். அடுத்து ஒரு ராஜ்யத்தையே உங்கள் வசமாக்கியதோடு நடுவில் இருந்த நாட்டையும் நிரந்தர நட்பு நாடாக்கி ஒரேயடியாக நம் நாட்டின் பஞ்சத்தையும் ஒழிக்க வழி வகை கூறினேன். அதற்கு எனக்கு நீங்கள் அளித்தது வடக்கு வாயில் பட்டை சாதம். உண்மை ராஜாவாக இருந்திருந்தால் எனக்கு மாடமாளிகை கூட கோபுரம் கொடுத்து என்னை உச்சி மேல் வைத்துக் கொண்டாடி இருப்பார். பல கிராமங்களை மானியமாக அளித்து என்னை மேலே உயர்த்தி இருப்பார் அல்லவா! நீங்களோ என்ன செய்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு பட்டை சாதத்திற்கு மேலே போக உங்கள் புத்தி அனுமதிக்கவில்லை. வாயில் வாயிலாக கிழக்கு, மேற்கு, வடக்கு என்று அனுப்பிப் பட்டைச் சாதம் வழங்கினீர்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அலைந்து பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரிக்குத் தான் நீங்கள் பிறந்தீர்கள் என்பது” – இப்படி விளக்கமாகக் கூறி முடித்தார் அந்த முதியவரான குருடர்.

ராஜா வெட்கித் தலை குனிந்தார். குருடரின் மன்னிப்புக் கேட்டு விசும்பி விசும்பி அழுதார்.

இது தான் கதை!

இன்றைய தமிழகத்தின் நிலைமையும் இது தான்! மக்கள் கொடுத்த அரசுப் பொறுப்பைத் துஷ் பிரயோகம் செய்து  தமது “புத்திக்கு எட்டியவரை” கோவில்களை எப்படி எல்லாம் அழிக்கலாம், அந்தச் சொத்துக்களை எப்படி எல்லாம் சுரண்டலாம் என்று பார்க்கும் கோவில் கொள்ளையையும் பண்பாட்டை அழிக்கும் செயலையும் நன்கு விளக்கும் கதை இது தான்!

அனைவருக்கும் பரப்ப வேண்டிய கதை இது!

3

ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை நவீனமாக்கித் தருகிறேன் இங்கு.

நவீன அறிவியல் உத்தியின் படி ஒரு புது வித கார் வடிவமைக்கப்பட்டது.

அதை டிஸைன் செய்த பேரறிஞரின் மானேஜர் பத்திரிகைகாரர்கள், அறிஞர்கள்,சாமானிய மக்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு டெமோவுக்கு அழைத்தார்.

மைதானம் ஒன்றில் காரை நிறுத்தி அதன் வடிவமைப்பை விளக்கினார் மானேஜர்.

“அற்புதமான இந்தக் காரில் பிளாஸ்டிக் இல்லை. மாசுப் பொருள்களை ஏற்படுத்தும் எரிபொருள் இல்லை. பேரறிஞர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக இதைக் கொள்ளலாம். இதோ இந்த பட்டனை அமுக்கினால் ரிமோட் கண்ட்ரோலினால் இது ஓடும்! பாருங்கள் இதோ, ஓடப் போகிறது” என்று கூறியபடியே அவர் ஒரு பட்டனை அமுக்கினார்.

கார் வெகு விரைவாகப் பறந்தது. அனைவரும ஆஹா ஆஹா என்று வியந்தனர்.

ஆனால் திடீரென்று மைதானத்தில் ஒரு இடத்தில் அந்தக் கார் ஒரு குட்டிக் கரணம் போட்டது. அனைவரும் ஓவென்று கூவினர். இன்னும் சில இடங்களிலும் அந்தக் கார் குட்டிக் கரணம் போட்டது.

ஜனங்கள் வியந்தனர். டெமோ முடிந்தவுடன்வடிவமைப்பு பற்றி கூறி டெமோ செய்தவரிடம்  அனைவரும்  கேட்ட ஒரே கேள்வி இது தான்: “ பேரறிஞரின் வடிவமைப்பு பற்றி நீங்கள் அளந்த கதை வியக்கும் படியாகத் தான் இருக்கிறது. ஆனால் ஏன் சில இடங்களில் இது குட்டிக் கரணம் போடுகிறது? இதில் பயணிப்பது ஆபத்தாக அல்லவா இருக்கும். உயிர் போய் விடுமே. இது குட்டிக் கரணம் போடுவதன் காரணம் என்ன?”

எல்லோரும் பதிலுக்காக நெருக்கவே அந்த டெமோ செய்தவர் உண்மையைச் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்!

“அதுவா! வேறொன்றுமில்லை. இந்தக் கார் முற்றிலும் பன்றித் தோலினால் ஆனது. ஆகவே தான் மைதானத்தில் சகதியாக உள்ள இடங்களில் எல்லாம் அது குட்டிக் கரணம் போடுகிறது”

அடடா! என்ன அழகான ஜோக்! மலத்தைத் தின்று உயிர் வாழும் பன்றியின்

பிறவிக் குணத்தை நவீன தொழில்நுட்பம் கூடப் போக்க முடியாது!

உண்மை தான் இல்லையா!

சுரண்டுவது, அழிப்பது என்பதை பிறவிக் குணமாகக் கொண்டவர்களும் கூட சகதிகளில் குட்டிக் கரணம் போடுவது இயல்பே அல்லவா! கோவில்களை இறைவன் இருக்கும் இடம் புண்ய தீர்த்தமாக நினைப்பது பக்தர்கள். அதை சகதிகளாக நினைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

இந்த பன்றிக் காரில் யாராவது சவாரி செய்ய முடியுமா, சொல்லுங்கள்!

***

INDEX

காரண காரிய தொடர்பு விளக்கும் ராஜா-குருடர் கதை,

பன்றித் தோல் கார் குட்டிக்கரணம் அடிப்பது ஏன்?

ஹெல்த்கேர் ஆசிரியர் ராஜா அனுப்பிய கதை, நன்றி

tags-

 ராஜா-குருடர் கதை,,காரண காரியம், 

பிருந்தாவனம் திருத்தலம்! (Post No.10,033)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,033

Date uploaded in London – –   30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 29-8-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பிருந்தாவனம் திருத்தலம்!

அனைவருக்கும் ஜன்மாஷ்டமி நல் வாழ்த்துக்கள்!

கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே

தருமே நிதியும் பெருமை புகழும், கருமா மேனிப் பெருமான் இங்கே!

மகாகவி பாரதியார் வாழ்க!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது இந்து மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைகின்ற பிருந்தாவனம் ஆகும். இந்தத் தலமானது உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விருந்தா என்றால் துளஸி என்று பொருள் விருந்தாவனம் என்றால் துளஸிச் செடிகள் அதிகமுள்ள வனம் என்று பொருள். பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரமாக அமையும் கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணரின் இளமைக் காலம் கழிந்த இடம் இதுவே. இங்கே தான் கோகுலம் கோவர்த்தனம் ஆகிய புராண பிரசித்தி பெற்ற இடங்கள் உள்ளன. கிருஷ்ண பக்தையான ராதாவின் திருத்தலம் என்பதோடு இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்களும் ராதாதேவியுடன் தொடர்பு படுத்தப்படும் அழகிய இடங்களும் உள்ளன.

இங்கு ஓடும் அழகிய யமுனை ஆற்றில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு துறையில் ஸ்நானத்தைச் செய்து பக்தர்கள் இங்குள்ள கோவில்களைத் தரிசிக்கச் செல்வது மரபாக இருக்கிறது. மாலை நேரங்களிலோ வர்ணிக்க முடியாதபடி அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யமுனை ஆறும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஜெகஜோதியாக அன்றாடம் காட்சி தரும் அழகே

அழகு!

    கேசி காட் துறை முக்கியமான துறையாகும். இங்கு தான் கிருஷ்ணர் கேசி என்ற அசுரனை மாய்த்தபின் வந்து ஸ்நானம் செய்தார். இங்கு தான் மதன்மோகன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபாட்டுடன் அழகிய இந்தத் தலத்தைக் காணும் வகையில் படகிலும் செல்ல முடியும்.

    மிகப் பழம் பெரும் ஆலயமான ஸ்ரீராதா மதன் மோகன் ஆலயம் காலிதா கட் அருகே உள்ளது இந்த ஆலயம் சைதன்ய மஹாபிரபுவுடன் தொடர்பு கொண்ட ஆலயமாகும்.

விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிந்த தேவ் ஆலயம் 1590ஆம் ஆண்டில் அம்பரை ஆண்ட ராஜா மான் சிங்கினால் கட்டப்பட்ட ஒன்றாகும். கொடுங்கோலன் அவுரங்கசீப்பினால் இந்த ஆலயம் சேதப்படுத்தப்பட்டதால் இது மூன்றடுக்குடன் மட்டுமே இன்று காட்சி அளிக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள ஒரு சிறு கோவிலிலேயே இன்றைய பூஜைகளும் வழிபாடும் நடக்கின்றன. கர்பக்ருஹமானது வெள்ளியாலும் சலவைக் கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர்   பிறந்த ஜன்மாஷ்டமி அன்றும் ஹோலிப் பண்டிகையின் போதும் மக்கள் இங்கு திரளாகக் கூடுகின்றனர்.

விருந்தாவனத்தில் பெரிய ஆலயமாகத் திகழ்வது 54 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரேம் மந்திர் ஆகும்.

2012இல் திறக்கப்பட்ட இந்த இரண்டு அடுக்கு சலவைக் கல்லினால் ஆன ஆலயத்தில் ராதா கிருஷ்ணரைச் சித்தரிக்கும் எண்பதிற்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களை சுவரில் கண்டு மகிழலாம். முதல் தளத்தில் ராதையும் கிருஷ்ணரும் கோவில் கொண்டு அருள் பாலிக்க மேல் தளத்தில் ராமரும் சீதையும் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனர். அழகிய மலர்ச் செடிகளும் நீரூற்றுகளும் சுற்றி இருக்க ஒளி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர்ந்து கண் கொள்ளாக் காட்சியை அளிக்கிறது. ராஸ லீலையைச் சித்தரிக்கும் சிற்பங்கள் இந்தத் தோட்டங்களில் உள்ளன.

இங்குள்ள இன்னொரு ஆலயம் பங்கே பிஹாரி ஆலயமாகும். பங்கே என்றால் வளைந்திருப்பது என்று பொருள். ராஜஸ்தானிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் பால பருவத்தில் திரிபங்க கோலத்தில் அதாவது மூன்று இடங்களில் வளைந்து அமைந்துள்ள திருவுருவில் காட்சி அளிக்கிறார்.

சேவா குஞ்ஜ் அல்லது நிதி வன் என்று அழைக்கப்படும் அழகிய பெரிய தோட்டம் அனைவராலும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். ஏனெனில் இங்கு தான் ராஸ லீலை நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. இங்கு இன்றும், தினமும், ராதையும் கிருஷ்ணரும் வருகை புரிவதாக பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். இதற்கு மிக அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ ராதா தாமோதர் ஆலயம். 1542ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த ஆலயம். கிருஷ்ணரின் காலடித் தடங்கள் பதிக்கப்பட்ட கோவர்த்தன மலைப் பாறை ஒன்று இங்கு பக்தர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. இன்னொரு முக்கிய ஆலயம் ரங்காஜி ஆலயம் ஆகும். 1851ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. ரங்கநாதர் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயம் ஆறு நிலை கோபுரத்தையும் 50 அடி உயரமுள்ள த்வஜ ஸ்தம்பத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ரத மேளாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து ரதத்தை இழுத்துச் செல்கின்றனர்.    

                                           மிகப் பெரும் ஆசார்யரான வல்லபாசாரியர் தனது 11ஆம் வயதிலே இங்கு வந்து இதன் அழகில் லயித்தார். 84 இடங்களில் அவர் கீதை பேருரைகளை ஆற்றினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் நான்கு மாதங்கள் பிருந்தாவனத்தில் தங்குவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.                                                 300 கோடி ரூபாய் செலவில் 1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்கான் ஆலயமும் இங்கு முக்கிய ஆலயமாகத் திகழ்கிறது.  

                     பக்தர்கள் பார்த்து அனுபவிக்கும் இன்னும் ஒரு இடம் கோவர்த்தனம் ஆகும் இது விருந்தாவனத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. கிருஷ்ணர் எப்படி கோவர்த்தனமலையை தனது ஒரு விரலால் தூக்கினார் என்பதை இங்குள்ள மக்கள் ஆனந்தமாக இன்றும் விவரிக்கின்றனர்.      காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ கிருஷ்ணரும் ராதாதேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  மகாகவி பாரதியாரின் அருள் வேண்டுதல் இது:     

                                                      வருவாய் வருவாய் வருவாய் கண்ணா, வருவாய் வருவாய் வருவாய்! உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா, உயிரின் அமுதாய்ப் பொழிவாய் கண்ணா!   நன்றி வணக்கம்!          

                             

       

***

Tags- பிருந்தாவனம் , திருத்தலம்,

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 29-8 -2021 (Post No.10,032)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,032

Date uploaded in London – 30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by BRAHANNAYAKI SATHYANARAYANAN

Xxxx

Hindus, Sikhs and Afghan nationals airlifted from Kabul

While India’s evacuation efforts in Afghanistan continued to focus on its own nationals, among the close to 400 people flown to India on Sunday were also about 60 Afghans, including 23 Sikhs and Hindus. With an increasing number of people, including foreigners, seeking help from India in their bid to exit Afghanistan, the Centre has deployed a team of diplomats and defence ministry officials at the Kabul airport to coordinate evacuation efforts with the US and other countries who have been facilitating the exercise.

The 60 Afghans, including two lawmakers Anarkali Honaryar and Narender Singh Khalsa, were brought out amid reports that the Taliban were not allowing locals to leave the country. India had earlier assured Afghan nationals, including members of minority communities, with ties to it that it would prioritise visas for them and set up an emergency e-visa service for them.

A total of 168 people, including 107 Indians and 23 Afghan Sikhs and Hindus, were flown earlier from Kabul to the Hindon airbase near Delhi in a C-17 heavy-lift military transport aircraft of the Indian Air Force (IAF).

Another group of 87 Indians and two Nepalese nationals was brought back in a special Air India flight from Dushanbe, a day after they were evacuated to the Tajikistan capital in an IAF 130J transport aircraft, officials said.

XXXX

FIR against poet Munawwar Rana for comparing Maharshi Valmiki to Taliban

Madhya Pradesh police have registered an FIR against Urdu poet Munawwar Rana for allegedly hurting religious sentiments by comparing Maharshi Valmiki, who wrote the Ramayana, with the Taliban, an official said.

The case was registered against Rana in Guna on Monday following a complaint filed by Sunil Malviya, state secretary of the BJP’s Scheduled Caste cell, and other members of the Valmiki community.

Talking to a channel, Rana had said, “Valmiki became a God after he wrote the Ramayana, before that he was a dacoit. A person’s character can change. Similarly, the Taliban, for now, are terrorists, but people and characters change.”

Malviya alleged that Rana disrespected Maharshi Valmiki with his comments and hurt the feelings of the Valmiki community and Hindus.

“He compared Maharshi Valmiki with the Taliban and hurt the religious feelings of Hindus. So, we have filed a complaint against him,” he told reporters.

Guna Superintendent of Police Rajiv Mishra on Monday said, “A case was registered against Rana at the Kotwali police station. The case will be forwarded to the district concerned (Lucknow in Uttar Pradesh).”

XXXXXX

Sri-la-Sri Harihara anointed Madurai Adheenam pontiff

Sri-la-Sri Harihara Sri Gnanasambanda Desika Swamigal, 67, was anointed as the 293rd pontiff of the Madurai Adheenam at a ceremony on the mutt premises on Monday.


The anointment happened 10 days after Arunagirinatha Gnanasambantha Desika Paramacharya, who was the 292nd pontiff, died. Arunagirinatha died on August 13.


Many mutt heads including Kundrakudi, Thirupananthal, Siruvai, Kancheepuram South zone and Porur adheenams participated in the ceremony.

Joint commissioner of the Sri Meenakshi Sundareswarar temple K Chelladurai, HR and CE officials, were also present. Public stood in long queues and sought the blessing of the new Adheenam.

The new Adheenam also offered worship in the Sri Meenakshi temple and later went on a procession in the evening.


Madurai Adheenam is said to have been established by Saivite saint Thirugnanasambandar 1,500 years ago.

XXXXX

BIO DEGRADABLE LADDU BAGS IN BALAJI TEMPLE

The Defence research and development organization (DRDO) chairman G Sateesh Reddy along with Tirumala Tirupati Devasthanams executive officer Dr KS Jawahar Reddy inaugurated a biodegradable laddu bags counter at Tirumala on Sunday.


Speaking to reporters later, DRDO chief said “Our advanced systems laboratory located at Hyderabad has been doing a lot of research and inventing ways to find out the best environmentally friendly replacement options for the hazardous plastic. To minimise the usage of single-use plastic covers, DRDO has come out with eco-friendly biodegradable and compostable bags made of starch and corn which degrades naturally within 90 days and is also not harmful even if the stray cattle consume it,” added Sateesh Reddy.

A dedicated sale counter has been set up by the TTD near the Laddu counters adjacent to the Tirumala temple where the devotees can first buy these bags before heading to laddu counters to buy the prasadams.

XXXX

Xxxxx

14 ELEPHANTS SHORTLISTED FOR MYSURU DASARA JUMBO PARADE

KARNATAKA Forest department shortlists 14 elephants for Dasara Jumbo Savari

Though the State government is yet to decide on the scale of celebration of traditional Mysuru Dasara festival, the forest department has initiated the process of selecting ceremonial elephants for the world famous fete.

The preparation for Dasara begins two months earlier to prepare elephants for the grand procession. The forest department officials have written a letter to the Mysuru deputy commissioner to specify the number of jumbos needed for the procession. But the district administration is waiting for decision of State government. District in charge minister S T Somashekar recently said that the decision would be taken at a high-level meeting in Bengaluru. However, the forest department has started the process of selecting the elephants for the Jumboo Savari (Vijayadashami) on October 15.

The selected elephants include Golden Howdah carrier Abhimanyu from Mattigodu camp and Gopalaswamy, Lakshmana and Bhima.

XXXX

Indians in South Africa get threats

As uneasy calm settled over the troubled KwaZulu-Natal and Gauteng provinces of South Africa, worst affected in the July violence following the arrest of former president Jacob Zuma, cracks are beginning to show.

Their prime targets – Indian-origin South Africans in Durban and Johannesburg – say they have been receiving WhatsApp messages threatening renewed or ‘Part-II’ of the violence, asking “Indians to go back from where they came”.

A lot of Hindus live in South Africa.

Kimeshan Raman, a 33-year-old resident of Durban and social activist, who has recently applied for an OCI (Overseas Citizenship of India) card, said, “It’s a panic reaction. Messages and videos are being circulated targeting Indians. We want to protect our families.”

At least 330 people, many of them Indians, were killed in the riots that ravaged parts of South Africa for about two weeks, from July 9. It was four days after deadly arson and looting before President Cyril Ramaphosa deployed the army to quell the violence.

Mahatma Gandhi’s granddaughter Ela Gandhi, who resides in Durban, said, “We are trying to unite people across racial lines and build peace and goodwill.” But there’s a lot of uncertainty and insecurity because of threats from certain sections. “We don’t know where they are going to attack and when they are going to attack,” she said.

(NEWS FROM ASIAN VOICE.)

XXXXXX

Tomorrow is Janmashtami, Lord Krishna’s Birth Day

WE WISH YOU ALL A VERY HAPPY Janmashtmi !!

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY BRAHANNAYAKI SATHYANARAYANAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

TAGS–  hindunews, roundup29821, 

உலக இந்து சமய செய்தி மடல் 29-8-2021 (Post No.10,031)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,031

Date uploaded in London – 30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 29 ஆம் தேதி   ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது; கிருஷ்ணபிரேமி சுவாமிகள் காட்டம்

மக்கள் அனைவரையும் நாத்திகர்களாக மாற்ற நினைத்த அரசு, மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது என கிருஷ்ணபிரேமி சுவாமிகள் பேசினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற அரசின் திட்டம் குறித்து அவர் பேசியதாவது: கோயில் நடைமுறைகளை மாற்றுவதற்காகவே அரசு திட்டமிட்டுள்ளது. மூலவரை யார் தொட்டால் என்ன என்பது வீம்பா பக்தியா. மூலவரை தொடுவதற்கென்றே சிலர் உள்ளனர். மற்றவர்கள் தொட முடியாது. கடவுளை பாடிய ஆழ்வார்கள் கூட மூலவரை தொட்டதில்லை. ராமானுஜர் கூட தொட்டதில்லை. அரசர்கள், பீடாதிபதிகள் கூட மூலவர்களை தொட்டதில்லை.

அன்று மட்டும் அல்ல இன்றும் அதுவே நடைமுறை. வானமாமலை, அகோபிலம் ஜீயர்கள் மூலவர்களை தொட்டு அபிஷேகம் செய்கிறார்களா.. சங்கராச்சாரியார்கள் சிவன் சன்னதிக்குள் சென்று அபிஷேகம் செய்கிறார்களா… இல்லையே… இவை அனைத்துமே ஏற்கனவே நியமிக்கப்பட்ட சம்பிரதாயங்களின் படிதான் நடக்கிறது.

மக்களை நாத்திகர்களாக்கும் திட்டத்தில் இருக்கும் அரசு இவ்வாறு செய்து மக்களை பேதப்படுத்துகிறது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு அரசு தானாக கிடைக்கவில்லை. பெருமாள் தான் கொடுத்தார். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்க வேண்டாம். மக்களிடம் கேட்டுப்பாருங்கள். கடவுள் இல்லை என்பவர் எத்தனை பேர். தற்போதுள்ள வழக்கத்தை மாற்றக்கூடாது என்றுதான் பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.

கோயிலுக்கு உள்ள சட்டத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றக்கூடாது. எங்களை மிரட்டுவது என்பது உங்களுக்கு கரும்பு தின்பது போல. இதை சமாளிக்கும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு. ராமானுஜர் காலம் தொட்டு எவ்வளோ பிரச்னைகளை சமாளித்துள்ளோம். சர்வேஸ்வரன் எதையும் திருத்துவான்… இதையும் திருத்துவான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

XXXXX

கோவில் புறம்போக்கு நிலம்: வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ மாற்றவோ கூடாது

சென்னை,–‘கோவில் நலன்களுக்கு அல்லாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தை, வேறு எதற்கும் அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, வைப்பாமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலரான நந்தகுமார் தாக்கல் செய்த மனு:கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரிடம் இருந்து, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களை வகைப்படுத்தவோ, மற்றவர்களுக்கு பட்டா வழங்கவோ முடியாது.

இத்தகைய புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால், வருவாய் துறையின் ஒத்துழைப்பின்றி நேரடியாகவே அகற்ற முடியும்.இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை கமிஷனரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லாமல், அது போன்ற புறம்போக்கு நிலத்தில், 81 பேருக்கு, 2012 நவம்பரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்தும், அதை புறக்கணித்து விட்டு பட்டா வழங்கி உள்ளனர்.எனவே, எதிர்காலத்தில் எங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கூடாது என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:’அரசு நிலத்தில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளது; பங்குனி உத்திரம் மற்றும் தேர் திருவிழா நடத்த, அங்கு நிலம் இருக்கிறது’ என, திருச்செங்கோடு தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறிப்பிட்ட ‘சர்வே’ எண்ணில் உள்ள நிலம், கோவில் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, பதிவேட்டில் தெளிவாகிறது. அதனால், கோவில் வசம் உள்ள இந்த நிலத்துக்கான அனைத்து உரிமைகளும் அறநிலையத் துறைக்கு உள்ளது.

எனவே, கோவில் நலன் தவிர, வேறு எந்த காரணங்களுக்காகவும், இந்த நிலத்தை அரசு பயன்படுத்தவோ, மாற்றவோ, கட்டுமானங்கள் மேற்கொள்ளவோ கூடாது.அறநிலையத்துறை சட்டம் மற்றும் வருவாய் நிலை விதியின்படி, கோவில் புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தியதை பயன்படுத்த, அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என, மனுதாரரின் வழக்கறிஞர் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Xxxxxxx

திருப்பதியில் பசுமை லட்டு பைகள் விற்பனை துவக்கம்

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி  கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட போதிலும் லட்டு பிரசாதம் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் கவர்கள் 50 மைக்ரானுக்கு மேல் இருந்ததால் தேவஸ்தானம் அதை பயன்படுத்தி வந்தது.

மேலும் அதற்கு மாற்றாக பல்வேறு காகிதப் பைகள், சணல் பைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது. லட்டு பிரசாதத்தின் தரத்தை அப்படியே பாதுகாக்க தேவஸ்தானம் எளிதில் மக்கி உரமாகக்கூடிய காய்கறி கழிவுகளில் இருந்தும் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளுடன் பைகளை தயாரித்து அளிக்க முடிவு செய்தது.

இந்நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி. ஆர்.டி.ஓ ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொருட்களைக் கண்டறிந்து அதை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவன தயாரிப்பான எளிதில் மக்கும் தன்மை வாய்ந்த மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய லட்டு கவர்களை தயாரித்துள்ளது.

அதன் விற்பனை திருமலையில் நேற்று தொடங்கப்பட்டது. இதை டி.ஆர்.டி.ஓவின் தலைவர் சதீஷ் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-


இவற்றை கால்நடைகள் உட்கொண்டாலும் அதனால் அவற்றிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை. பல மாத பரிசோதனைக்கு பிறகு இந்த பையன்களின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

XXXXX

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் ஆக., 23ல்  பொறுப்பேற்றார்.

மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக, அருணகிரிநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார்.

பின் மடத்திற்கு வந்தவருக்கு தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இணை கமிஷனர்மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையில், ஆதீனங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

புதிய ஆதீனம், மீனாட்சி கோவிலில் விடுபட்ட உஷகால கட்டளை நிறைவேற்றுதல், மடத்தில் அன்னதானம் வழங்குதல், மடத்திற்கு சொந்தமான நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல் உட்பட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை மீனாட்சி கோவிலில் ஆதீனம் வழிபட்டார். பின், சித்திரை வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.

XXXX

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் கோவில் கட்டும் கமிட்டியின் பொதுச்செயலரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், ஆக.,23 காலை சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு வந்தார்.

அங்கு பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பக்ராய், நினைவு பரிசாக வழங்கினார்.

பக்தர்கள் அனைவருக்கும் கேரளா புகழ் பலாப்பழம் பாயாயசத்துடன் பல்வேறு பதார்த்தங்களுடன் கொண்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.

XXXX

மைசூரு தசரா விழா; ஊர்வலத்தில் பங்கேற்க 14 யானைகள் தேர்வு

  மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த மைசூரு தசரா விழா மைசூருவை ஆண்ட பண்டைய மன்னர்கள் காலத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மைசூரு தசரா விழாவில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மன்னர் தனியார் தர்பார் நடத்துவதும், 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க அதை யானைகள் புடைசூழ ஒரு யானை சுமந்து வரும் ஜம்பு சவாரி ஊர்வலமும் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்வுகளாகும்.

  அவற்றைக்காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டு மைசூரு தசரா விழா விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விஜயதசமியையொட்டி வருகிற அக்டோபர் மாதம் தசரா விழா நடைபெற இருக்கிறது.

14 யானைகள் தேர்வு

  இந்த நிலையில்  யானை சவாரி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக மத்திக்கோடு, தொடஹரவே, ஆனேகோடு, துபாரே ஆகிய 4 யானைகள் முகாம்களில் இருந்து 14 யானைகளை வனத்துறையினர் தேர்வு செய்துள்ளனர். தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும், அதற்கு மாற்றாக பீமா யானையும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

  இந்த ஆண்டும் ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

XXXX

நாளை ஜன்மாஷ்டமி தினம்; நேயர்கள் அனைவர்க்கும் ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

tags –Tamilhindunews2982021

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்! (Post No.10,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,030

Date uploaded in London –  30 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எந்தப் புலவருக்கு என்ன சிறப்பு! இதோ பட்டியல்!

ச.நாகராஜன்

தமிழ் கண்ட புலவர்கள் ஆயிரமாயிரம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிறப்பு!

தாம் மெய்யாக் கண்டவற்றுள் இவையே என உரைப்பது சில புலவர்களின் சிறப்பு!

அந்த வகையில் இன்ன புலவருக்கு இன்ன சிறப்பு என்று கூறும் பாடல்கள் நிறைய உண்டு.

அவற்றில் மூன்றை இங்கு பார்க்கலாம்.

  1. வாக்கிற் கருணகிரி வாதவூ ரர்கனிவில்

தாக்கிற் றிருஞான சம்பந்தர் – நோக்கிற்கு

நக்கீர தேவர் நயத்துக்குச் சுந்தரனார்

சொற்குறுதிக் கப்பரெனச் சொல்

இந்தப் பாடல் ஆறு பெரும் மகான்களைப் பற்றிப் பட்டியலிடுகிறது. இவர்கள் தேவார திருவாசகம் பாடியவர் நால்வர். சங்கப் புலவர் நக்கீரர் ஒருவர். திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

வாக்கிற்கு – அருணகிரி

கனிவிற்கு – மாணிக்கவாசகர்

தாக்கிற்கு – திருஞானசம்பந்தர்

நோக்கிற்கு – நக்கீர தேவர்

நயத்துக்குச் – வன் தொண்டர் எனப்படும் சுந்தரனார்

சொல் உறுதிக்கு – அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர்

  • அடுத்த பாடல் இது

காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி

ஆசுக்குக் காளமுகி லாவனே – தேசுபெறும்

ஊழுக்குக் கூத்த னுவக்கப் புகழேந்தி

கூழுக்கிங் கௌவையெனக் கூறு

காசுக்கு – கவிச் சக்கரவர்த்தி கம்பன்

கருணைக்கு – அருணகிரிநாதர்

தேசுள்ள ஊழுக்கு – ஒட்டக்கூத்தர்

உவக்கப் பாடுபவர் – புகழேந்தி

கூழுக்கோ – ஔவையார்

  • மூன்றாம் பாடல் இது:-

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

      செயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

   வந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

   வசைபாடக் காளமேகம்

பண்பாக வுயர் சந்தம் படிக்காசு

   லாதொருவர் பகரொ ணாதே

 வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி. நள வெண்பா பாடி வெண்பா வேந்தர் என்ற பெயரைப் பெற்றார் அவர்

பரணி பாடுவதில் வல்லவர் – ஜெயங்கொண்டான். அற்புதமான கலிங்கத்துப் பரணியை அழகுறப் பாடியுள்ளார்.

விருத்தமென்னும் ஒண்பா பாட வல்லவர் – கம்பர். நூறு வண்ணங்களைக் கொண்டுள்ள பத்தாயிரம் பாடல்களில் ராமாயணைத்தை இயற்றி உலகை வியக்க வைத்து கவிச்சக்கரவர்த்தி என்று பெரும் புகழ் பெற்று கவிச் சிகரத்தில் ஏறியவர் கம்பர்.

கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் பாட வல்லவர் – ஒட்டக்கூத்தர்

கண்பாய கலம்பம் பாட வல்லவர் – இரட்டையர்கள்

வசை பாடக் காளமேகம் – உடனடியாக வசை பாடுவதில் வல்லவர் காளமேகப் புலவர்

பண்பாக உயர் சந்தம் பாட வல்லவர் – படிக்காசுப் புலவர்.

இந்தக் கண்ணோட்டத்தில் இவர்களின் பாடல்களை ஒரு நோக்கு நோக்கினால் புலவர்களின் இந்தப் பார்வையை நாமும் ஆமோதிப்போம்!

ஆதாரம் : பெருந்தொகை பாடல்கள் 1802, 1803, 1804

***

INDEX

அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அப்பர், நக்கீரர், சுந்தரர், கம்பன், காளமேகப் புலவர், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, ஔவையார். ஜெயங்கொண்டான்,இரட்டையர்கள், படிக்காசுப் புலவர்

Tags – அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், சம்பந்தர், கம்பன், காளமேகப் புலவர்

PLEASE JOIN US ON MONDAY 30-8-2021

PLEASE JOIN US ON MONDAY 30-8-2021

30 -8– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -7  MTS

PRAYER –  MRS ANNAPURANI PANCHANATHAN

Talk by Sri Lakshmi from Singapore- 20 mts

Song  BY MRS DAYA NARAYANAN, LONDON- 5 MTS

TALK BY BENGALURU S NAGARAJAN ON SAINT Madhvacharya- 12 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

MANGALAM – 3 MTS

TOTAL TIME- APPR. 60 MINUTES

XXXXXXXXXXXXXXXXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity3082021

PLEASE JOIN US ON SUNDAY 29-8-2021

29-8-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 7 MTS

Prayer –

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON  Brindhavan of Lord Krishna10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  10 mts

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

Talk by Sri Thirukkudal Mukuntharajan on Life History of Alvars

DURATION-  Appr. 60 minutes 

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE ARE IN OUR SECOND YEAR OF BROADCASTING.

WE LAUNCHED GNANAMAYAM BROADCASTS FROM LONDON IN AUGUST 2020 ON SUNDAYS AND MONDAYS .

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME ; BST;

 6-30 PM INDIAN TIME.

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

XXXX

MONDAYS BROADCAST UNDER GNANAMAYAM AND GNANA SUDAR

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH DAYS.

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags – publicity2982021

சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா? (Post 10,029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,029

Date uploaded in London – 28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாமூலனார் என்ற சங்கப் புலவர் காலத்தினால் மிகவும் முந்தியவர் என்று கருதுவோரும் உண்டு. காரணம் என்னவெனில் இவர் தமிழ் நாட்டின் மீது மௌரியர் படையெடுத்து வந்ததைக் குறிப்பிடுகிறார். ஆயினும் இந்தக் கட்டுரையில் நாம் காணப்போவது வேறு விஷயம் ஆகும். அகநானூற்றுப் பாடலில் இவர் ஒரு அபூர்வ விஷயத்தை உவமையாகக் கையாள்கிறார் . இதை எகிப்திலும் ரிக் வேதத்திலும் காண முடிகிறது. இவர் பழங்காலப் புலவர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையலாம்.

அகநானூறு பாடல் 101

1. களிற்றியானை நிரை

பாடல்: 101 (அம்மவாழி)

அம்ம வாழி, தோழி! ‘இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதுஇல்’ என்னும்

தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல்?-

தகர்மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த

சுவல்மாய் பித்தைச் செங்கண் மழவர் 5

வாய்ப்பகை கடியும் மண்ணொடு கடுந்திறல்

தீப்படு சிறுகோல் வில்லொடு பற்றி,

நுரைதெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து,

அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்,

கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர், 10

இனம்தலை பெயர்க்கும் நனந்தலைப் பெருங்காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போலப்,

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு ஊரிய சுழன்றுவரு கோடைப்

புன்கான் முருங்கை ஊழ்கழி பன்மலர், 15

தண்கார் ஆலியின், தாவன உதிரும்,

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு,

முனிதகு பண்புயாம் செய்தன்றோ இலமே! 18

xxxxx

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல 

பகலிடை நின்ற பல்கதிர் ஞாயிற்று

என்பதன் பொருளை மட்டும் எடுத்துக் கொள்வோம்

4 முதல் 11 வரிகளில் மழவர்கள், இருமல் வராமல் இருப்பதற்காக,  வாயில் புற்று மண்ணை அடக்கிக்கொண்டு , தீ அம்புகளுடன் சென்று பசுமாடுகளைக் கவர்ந்து கொண்டுவந்து பங்கிட்டுக் கொள்ளுவர் என்ற பொருள் வருகிறது

இதையும் ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம்; மறைத்து வைக்கப்பட்ட ஆநிரைகளை மீட்க இந்திரன் உதவியதாகப் பல பாடல்களில் காண்கிறோம்

11 முதல் 15 வரிகளில்

அகன்ற வானமாகிய கடலில் இயங்கும் தோணி போல் பகற்போதில் நின்ற பல கதிர்களையுடைய  கதிரவனுடைய வெப்பம் விளங்கிப் பரவச்  சுழன்று வரும் மேல் காற்றால் முருங்கை மலர்ப் பூக்கள் உதிரும். அது கார் கால ஆலங்கட்டி மழை போல இருக்கும் . இந்த சூழ்நிலையில் பல மலைகளையும் தாண்டிச் சென்ற தலைவருக்கு நான் வெறுக்கத்தக்க செயல் எதையும் செய்யவில்லையே!

சூரியனை வானத்தில் செல்லும் படகு என்று வருணிப்பதை ரிக் வேதத்திலும் எகிப்திலும் மட்டுமே காணலாம். தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் ‘ஓராழித் தேருடையோன் , 7 குதிரைகள் பூட்டிய ஒரு சக்கர தேர் உடையவன்’ என்றே பெரும்பாலும் வருணிப்பர். இவ்வாறு ஆகாயத்தில் செல்லும் படகு என்பது, மாமூலனார் வேதம் கற்ற பார்ப்பான் என்பதைக் காட்டுகிறது.

xxxx

எகிப்தில்

எகிப்தில் சூரிய தேவனை ‘ரா’ (Ra, Re) என்ற பெயரில் வணங்குகின்றனர். இந்துக்களைப் போலவே மூன்று வடிவில் வணங்குகின்றனர். ரிக் வேதம் முழுதும் அக்கினியையும், சூரியனையும் மூன்று எண்ணுடன் தொடர்பு படுத்துகின்றனர். 1.மின்னல், 2.அக்கினி, 3.சூரியன் என்பது ஒரு விளக்கம் . எகிப்தில் காலையில் குழந்தை அல்லது கேப்ரி என்றும் பகலில் ரா ஹரக்தி என்றும் மாலையில் ரா ஆதம் என்றும் சூரிய தேவனை வழிபடுகின்றனர். பிராமணர்களும் இதே போல மூன்று வேளைகளில் சூரியனை தினமும் இன்றும் வழிபடுகின்றனர்.

‘ரா’ என்ற பெயரே சம்ஸ்க்ருத வேர்ச் சொல் – ‘ஒளி’- என்பதிலிருந்து வந்ததே .

இரவு  நேரத்தில் அது ஒரு படகில் பயணம் செய்து இறந்தோர் வாழும் உலகத்தைக் கடப்பதாகவும் அப்போது  தீய ஆவிகளிடமிருந்து சூரியனை நல்ல ஆவிகளும் சேத் (Seth)  என்னும் தெய்வமும் காப்பதாகவும் எகிப்திய புராணம் கூறும் .

xxxx

ரிக் வேதத்தில்

ரிக் வேதத்தில் பல கடவுளரைப் புகழும் போது வானத்தைக் கடலாகவும் அந்த தேவதையை படகு அல்லது கப்பலாலாவும் வருணிக்கின்றனர். வேதம் படித்த ,மாமூலனார் இந்த ‘ஐடியா’வை ரிக் வேதத்தில் இருந்து எடுத்து சூர்ய தேவனுக்குச் சூட்டினார் போலும் .

இதோ ரிக்வேதப் பாடல்:-

RV.1-46-7

துதிகளான கடலின் மீது எங்களைக் கடத்திச் செல்ல கப்பலைப் போல வாருங்கள் .

இது அஸ்வினி தேவர்களை நோக்கி ரிஷி பிரஸ் கண்வ காண்வன் பாடியது

திருவள்ளுவர் கடலை நீந்திக் கடப்பது பற்றிப் பாடுகிறார்.(பிறவிப்  பெருங்கடல்………..). வேதம் முழுதும் கப்பல் அல்லது படகில் கடப்பது பற்றியே வருகிறது. அதிலும் வானத்தை- ஆகாயத்தை — கடலாக வருணிப்பது வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

xxx

My old articles –

Tagged with எகிப்திய அதிசயங்கள் -14 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › எ…

  1.  

4 Mar 2017 — எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689) … மற்றொன்று சூரியனின் படகு என்றும் …


Tagged with வட திசை -2 – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

  1.  

2 Oct 2020 — சூரியன் மறையும் இருண்ட திசை; … சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற …

–subham—

tags-  மாமூலனார், அகநானூறு பாடல் 101,சூரியன், படகு, வானம், ரிக் வேதம் 

கேள்விகள்! ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!(Post.10,028)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,028

Date uploaded in London –  28 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கேள்விகள்! ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!

ச.நாகராஜன்

ஸ்வாமி விவேகானந்தர் கூறியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரி தான்! ஹிந்துக்களுக்கு Organizing திறன் அவ்வளவாக தற்காலத்தில் இல்லை என்றார்.

உண்மை தான்! அடிமேல் அடி அடித்து நம்மை மழுங்க வைத்து விட்டனர் முகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், வெள்ளைக்காரர்கள்!

சரி, சுதந்திரம் பெற்ற பின்னராவது நமது ஆலயங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என்று எண்ணிப் பார்த்தால், அது மிக மோசமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது! ஸ்வாமிஜி கூறியது போல நமக்கு அனைத்து ஹிந்துக்களையும் ஓரிழையில் இணைக்கு Organizing Capacity இல்லை என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.

இதைப் புரிந்து கொண்டுள்ள நாசகார சக்திகள் நம் ஆலயங்களையும் அதன் மூலம் வேர் விட்டு வளர்ந்த நம் பண்பாட்டிற்கும் குறி வைத்து அவற்றைச் சிதைக்க முயல்கின்றன; சிதைக்கின்றன!

இன்று ஹிந்து ஆலயங்கள் இருக்கும் நிலை பற்றி நம்மில் 99 சதவிகிதம் பேருக்கு உண்மை நிலை என்னவென்றே தெரியாது. (இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்)

சரி கேள்விகளாகவது தொகுத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் மளமளவென அருவியாகக் கொட்டுகிறது கேள்விகள்!

இந்த நேரத்தில் 1968 முதல் ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கி அதற்காக உழைத்து உயிரையும் ஈந்த சேலம் திரு எம்.ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். மானனீய கோபால்ஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்த்தின் சஹ பிராந்த ப்ரச்சாரகராக இருந்ததோடு ஆலயத்தின் மீது கொண்ட அக்கறையையும் அதற்காக இரவு பகலாக அவர் உழைத்ததையும் நினைத்து வியக்கிறேன். ஹிந்து முன்னணி இயக்கம் தொடங்கி இந்துக்களின் விழிப்புணர்ச்சிக்காக் அல்லும் பகலும் அனவரதமும் அவர் உழைத்த பான்மையை எண்ணிப் பார்க்கிறேன். அணில் போல மதுரை மாவட்ட ஆலயப் பாதுகாப்புக் கமிட்டிச் செயலாளராக இருந்து மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹாலில் மாபெரும் மதுரை மாவட்ட மாநாட்டை நடத்தியதை எண்ணிப் பார்க்கிறேன்.

என் மேல் திரு ராமசாமி, மானனீய கோபால்ஜி கொண்டிருந்த அன்பை நினைத்துப் பார்க்கிறேன்.

அவர்களின் ஆன்மா ஹிந்து ஆலயங்கள் விடுதலை அடையும் வரை நம்முடன் இருந்து வழி நடத்தும். இதில் ஐயமே இல்லை.

சரி இனி கேள்விகளுக்கு வருவோம். ஆயிரம் கேள்விகளையும் தொகுக்க ஆசை தான்.

முதலில் ஆரம்பத்தையாவது செய்வோமே!

பாரதத்தில் இருக்கும் கோவில்களை மொத்தமாகத் தொகுத்துப் பார்ப்பது இமாலய வேலை .ஆகவே முதலில் பிள்ளையார் சுழியாக தமிழகத்தைப் பற்றி மட்டும் நாத்திகர் கும்பல் செய்யும் நாசவேலைகளுக்கு இடையில் தமிழகக் கோவில்களைப் பற்றி சில கேள்விகளைக் கேட்போம்.

விடைகளைச் சேகரிக்க முயற்சிப்போம். குறைகளைப் போக்க எல்லோரும் இணைந்து ஆலோசித்து வழிகளைக் கண்டு அவற்றைக் கடைப்பிடிப்போம்.

பழைய மகோன்னதமான காலத்திற்கு ஆலயங்களைக் கொண்டு செல்வோம்.

கேள்விகள் இதோ:-

தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஆலயங்கள் உள்ளன?

இவற்றில் மன்னர்கள் கட்டியவை எத்தனை?

மன்னர்கள் ஆலயங்களுக்குக் கொடுத்த மானியங்கள், நகைகள், சொத்துக்கள் எவ்வளவு?

இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா?

அப்படியானால் ஆவணங்கள் எங்கே? கல்வெட்டுக்கள் முறையாகப் படி எடுக்கப்பட்டுள்ளனவா? அவை எங்கே?

மன்னர்கள் அல்லாமல் பின்னாளில் எழுந்த ஆலயங்கள் எத்தனை?

இவற்றை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்டதா?

இந்து அறநிலையத் துறை பற்றி அரசியல் சட்டமும், தமிழக அரசுச் சட்டங்களும் என்ன சொல்கின்றன?

அறங்காவலர் எத்தனை கோவில்களுக்கு உள்ளனர்.

150 கோவில்களுக்கும் மேலாக அறங்காவலர்கள் இல்லை என்று ஆலய ஆர்வலர்கள் சொல்வது தெரிகிறது. ஏன் இல்லை?

இதற்கு அரசு கூறும் பதில் என்ன?

ஒரே அறங்காவலர் இன்னொரு கோவிலில் தக்கார். ஒரே தக்கார் இன்னொரு கோவிலில் அறங்காவலர்! இந்த இழிநிலை ஏன்? (உதாரணம் சமயபுரம் – திருச்சி கோவில்)

திருநெல்வேலி நாதஸ்வரக்காரரை ஏன் வெளியில் போகச் சொல்ல வேண்டும். பத்து வருடங்களுக்கும் மேலாக வெறு 1500 ரூபாய் சம்பளம் பெறும் இந்த பக்தரை ஏன் வெளியில் அனுப்பி இன்னொருவரை அங்கு நியமிக்க முயல வேண்டும்? லஞ்சம் பெற்று இன்னொருவரை அதிக சம்பளத்தில் நிறுவ நடக்கும் முயற்சியா?

அறங்காவலரின் சம்பளம் கோவில் வாரியாக எவ்வளவு?

அதே சமயம் கோவில் அர்ச்சகரின் சம்பளம் எவ்வளவு?

கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு – கோவில் வாரியாக?

கோவிலின் அசையாச் சொத்துக்கள் எவ்வளவு? அது யார் வசம் இருக்கிறது? அதன் வருமானம் என்ன?

வந்தது என்றால் எவ்வளவு?

அதற்கு ஆடிடிங் உண்டா? (External Auditing இல்லவே இல்லை)

வரவில்லை என்றால் ஏன் வசூல் செய்யவில்லை?

ஆக்கிரமித்தோரை அகற்றினோம் என்றால்  அவர்கள் யார்? அவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனை என்ன? அவர்களால் ஆலயத்திற்கு ஏற்பட்ட இழப்பை அவர்கள் ஈடு செய்தார்களா? இல்லை எனில் அவர்களின் சொத்துக்களை முடக்க முடியுமா?

சுப்ரீம் கோர்ட் சேஷம்மாள் வழக்கிலும், சிதம்பரம் தீக்ஷிதர் வழக்கிலும் தீர்க்கமாக வழங்கிய தீர்ப்பு என்ன?

அவற்றை அனைவரும் அறியும் வகையில் வெளியிட அரசு முயற்சிகள் எடுத்தனவா?

அவற்றை மீறினால் மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.

அது அரசு எனில் தண்டனை என்ன? பாரத ஜனாதிபதியால் அரசு கலைக்கப்படலாமா – ஏனெனில் கோடானு கோடி மதிப்புள்ள ஆலயங்களை நிர்வகிக்காத குற்றத்தோடு, ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய பெரும் அவலமும் இதில் சேர்ந்துள்ளதே?

75க்கும் மேற்பட்ட வழி காட்டு நெறிகளை சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்ததா?

அவை என்ன? ஏன் ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும்படி அது விளம்பரப்படுத்தப்படவில்லை?

எந்த சைட்டில் அதைப் பார்க்கலாம்?

கோவில்களில் இந்த சட்ட நெறிகள் ஏன் போர்டுகளாக வைக்கப்படவில்லை?

தான் தோன்றித் தனமாக குருக்களையும் கோவில் பணியாளர்களையும் அற நெறிக்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாக வெளியில் தள்ளும் அல்லது ஒதுக்கும் அறங்காவலர்/ ஈ.ஓ.வை எந்தச் சட்டத்தின் படி போலீஸ் பிடிக்கும்? அவர்களிடம் பக்தர்கள் புகார் கொடுக்கலாமா?

திருவண்ணாமலைக்குச் சொந்தமாக சென்னையில் மலர் ஹாஸ்பிடல் எதிரே உள்ள அருணாசலம் காலனியில் எப்படி இரு சர்ச்சுகள் ஆலய நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளன? அதை அகற்ற யார் முயற்சிக்க வேண்டும்?

மயிலை ஆதி கேசவப் பெருமாள் கோவிலுக்கு உரிய கோடம்பாக்கம் அருகே உள்ள நிலத்தில் மசூதி எழுப்பப்பட்டுள்ளதா? எப்படி? ஏன்? யாரால்? எப்போது?

அதை அகற்ற யார் முயற்சி எடுக்க வேண்டும்? அரசா, அதிகாரிகளா? ஏன் செய்யவில்லை?

இப்படி தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் சட்ட விரோதமாக உள்ளன?

பட்டியலை தமிழக அரசு தயாரித்துள்ளதா? எப்போது வெளியிடும்? என்ன நடவடிக்கையை எப்போது எடுக்கும்?

கோவில்களில் உள்ள உண்டியலில் போடும் பணத்தைக் கொண்டு அண்ணாதுரை திவசத்திற்கு ஆலயங்களில் சோறு போடுவதா? இது என்ன நியாயம்? தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளப்பது எந்நாளோ என்று பாடிய இவர்களுக்கான தவச நாளில் பக்தர்கள் பணத்தில் சோறு போடுவதா? அப்படி எனில் கோவில்களைத் தகர்த்த மாலிக்காபூர் தினத்தையும் இவர்கள் கொண்டாடுவார்களோ? அறநிலையத் துறை அல்ல இது; கோவில் கொள்ளைத் துறை அல்லவா இது!

இப்படி கேள்விகள் சாமான்யனான ஹிந்து ஒருவரின் மனதில் எழுந்தால் அது இயல்பே!

விடைகளைக் காண தற்போது யூ டியூப் பதிவுகள் ஒரு அளவுக்கு உதவுகின்றன – முழுதுமாக இல்லாவிட்டாலும் கூட!

திரு சுப்ரமணியம் சுவாமி

திருமதி உமா ஆனந்த்

திரு ரங்கராஜன் நரசிம்மன்

திரு ஆர். குருராஜ்

திரு ரமேஷ்

திரு ரங்கராஜ் பாண்டே

திரு கார்த்திக் கோபிநாத்

திரு பிரபாகரன்

திரு ஓமாம்புலியூர் ஜெயராமன் Shree TV

Infomedia

உள்ளிட்டோரின் பதிவுகள் தெளிவானவை – மேலே உள்ள சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பவை!

இவர்களைப் பாராட்டுவோம். இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்! ஆலயம் அழிப்போரை நிந்தனை செய்வோம்.

ஆலயம் பாதுகாப்போரை வந்தனை செய்வோம்!

பழமையையும் பாரம்பரியத்தையும் கடைப்பிடிப்போம். அந்தப் பண்பாட்டை அழிக்க முயல்வோருக்கு அரசியல் சட்ட ரீதியாகப் பாடம் கற்பிப்போம்!

ஹிந்துக்களே எழுக! விழிப்புணர்வு பெறுக! ஓரணியில் திரள்க!

பல பல பல கோடி எண்ணிலடங்கா கோடி சொத்து உடைய ஆலயம் கொள்ளை அடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோமாக!

**

tags- கேள்விகள், ஆலயப் பாதுகாப்பு, ஆயிரம்,