மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்! (Post No.4379)

Written by S.NAGARAJAN

 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-17 am

 

 

Post No. 4379

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் தமிழ் மாத பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

வள்ளலார் காட்டும் ஆரோக்கிய நெறி

 

மரணமில்லாப் பெருவாழ்வு கண்ட மகான்!

 

ச.நாகராஜன்

1

இவ்வுல்கத்தில் ஆறறிவுள்ள உயிர் உடைத்தாகிய தேகத்தைப் பெற்ற வள்ளலார் தேகத்திற்கு இடையிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டு அந்த் தேகத்தையே நித்திய தேகமாக்கத் திருவுள்ளம் கொண்டார்.

அனைவரும் வியக்கும் வண்ணம் தான் அறிவித்தபடியே ஒளி உடலாக மாறி, நித்திய தேகியாக இருக்கிறார்.

சரித்திரம் அறிவியல் பூர்வமாகக் கண்ட உண்மை இது.

அவர் மரணமில்லாப் பெருவாழ்வைச் சித்திக்கலாம் என்று சொல்லில் மட்டும் சொல்லாது அதைச் செய்து காட்டிய மாபெரும் மகான்.

பசிப் பிணி நீக்குதல் முதல் தர்மம் என்றார் அவர்.

இந்த தேகத்தைப் பிணியிலிருந்து விடுவித்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழப் பல அறிவுரைகளையும், குறிப்புகளையும் அவர் தந்துள்ளார்.

ஆன்மீகத்தோடு ஆரோக்கியத்தையும் நீண்ட வாழ் நாளையும் பெற விரும்புவோர் நாட வேண்டிய ஒரே சந்நிதானம் வள்ளலார் சந்நிதானம் தான்.

 

2

அவரது ஏராளமான சிறு சிறு குறிப்புகள் ஒவ்வொன்றும் நீண்ட வாழ்நாளையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்கான இரகசியங்கள்.

ஏராளமானோரை பல்வேறு வியாதிகளிலிருந்து அவர் குணப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ள இரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

கருங்குழியில் இருந்த பாலு ரெட்டியார் என்பவர் குஷ்ட நோயினால் துன்பமுற்றார். அவர் சுவாமிகளை அணுகவே வள்ளலார் திருநீறு கொடுத்து அதைத் தீர்த்தார்.

முத்து நாராயண ரெட்டியார் என்பவருக்கு கண் பார்வை பாதிக்கப்படவே அவரது கண் மறைவினையும் தீர்த்தருளினார்.

இது போல அவர் நோய் தீர்த்த சம்பவங்கள் ஏராளம்.

அனைவரும் அனுசரிக்க வேண்டிய எளிய குறிப்புகளை அவர் தொடர்ந்து வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.

 

சூரியோதயத்திற்கு முன்னர் எழுந்திருப்பதை அவர் வெகுவாக வலியுறுத்தினார்.

“புத்தி அதற்குப் பொருந்தும் தெளிவளிக்கும்

சுத்த நரம்பினறற் றூய்மையுறும் – பித்தொழியும்

தாலவழி வாதபித்தம் தத்தநிலை மன்னுமதி

காலை விழிப்பின் குணம்”

என்று பதார்த்த குண சிந்தாமணி காலை எழுந்திருப்பதன் பலன்களைக் கூறுகிறது.

புத்தி மனதுடன் பொருந்தும்.

தெளிவு உண்டாகும்.

நரம்புகள் எல்லாம் தூய்மை அடையும்.

பித்தம் ஒழியும். வாத பித்த சிலேத்துமங்கள் தம் தம் நிலையில் சேரும்.

இது அதிகாலை எழுந்திருப்பதன் பலன்.

பகல் உணவுக்குப் பின் சிறிது துயில் கொள்ள வேண்டும். இந்த உறக்கம் ஆழ்ந்த உறக்கமாக இருக்கக் கூடாது. சற்றுப் படுத்து எழுந்திருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.

இரவு உணவுக்குப் பின்னர் சற்று உலாவ வேண்டும்.

சத பதம் என்று ஆயுர் வேதம் கூறும். உணவுக்குப் பின்னர் நூறு அடிகள் நட என்பது அறவுரை.

புலாலைப் புசிக்காதே – எந்நாளும்.

சன்மார்க்க உணவை எடுத்துக் கொள். (இதைப் பற்றி மிக விரிவாக அவர் எழுதியுள்ளார்)

இவையெல்லாம் அவரது அறிவுரைகள்.

 

3

சஞ்சீவி மூலிகைகளான கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகிய ஐந்து மூலிகைகளின் குணங்களை அவர் வரையறுத்துக் கூறியுள்ளார்.

முத்துப்பூண்டை பறவைகளின் காதில் சிறுகச் சிறுக விட்டால் அவை உயிர் பிழைக்கும் என்பது அவரது அருளுரை.

இருமல், தேகமெலிவு,நீர்க்கோவை, சரீர திடம் ஆகியவற்றிற்கான மருத்துவக் குறிப்புகளை அவர் மிகத் தெளிவாகத் தந்துள்ளார்.

 

4

வள்ளலாரின் மிக அற்புதமான் ஒரு சித்தி அவர் ஏராளமான மூலிகைகளை அறிந்திருந்ததோடு அவற்றின் பயனைப் பற்றி உலகத்திற்கு தீர்க்கமாக அறிவித்தது தான்.

 

இந்த மூலிகைகளைப் பயன்படுத்தி அவர் ஏராளமானோரைக் குணப்படுத்தியதை அவர் வாழ்க்கை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

485 மூலிகைகளின் பெயரைக் கூறி அதன் குணத்தை அவர் ஒரே வரியில் கூறி இருப்பது வியக்க வைக்கும் ஒரு மாபெரும் சாதனையாகும்.

எடுத்துக் காட்டாக ஒரு பத்து மூலிகைகளை மட்டும் இங்குக் குறிப்பிடலாம்.

மாகாளி – மயக்கம் போம்

நீர்விளா – பைத்தியம் போகும்

மாஞ்சரோணி – கண் புகைச்சல் தீரும்

தும்பை – ஜுரம் போகும். சில் விஷம் போகும்.

தாமரை – கண் குளிர்ச்சி

ஆலுக்கு – புழுக்கள் போகும்

அரசுக்கு – புத்தி வர்த்தினி

இச்சில் – குஷடம் போகும்

கீழாநெல்லி – காமாலை போகும்

திப்பிலி – தாது விருத்தி உண்டாகும்.

இப்படி 485 மூலிகைகளுக்கான குணத்தைப் படிக்கும் போது தன்வந்திரி நேரில் வந்து சொல்வது போல மருத்துவக் குறிப்புகளைக் கண்டு வியக்க முடிகிறது.

 

5

கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் ஆகிய ஐந்தும் சுலபமாகக் கிடைக்கக் கூடியவை. இவற்றை பஞ்ச கற்பம் என்கிறார் வள்ளலார். இவற்றைப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும் என்பது அவரது அறிவுரை.

நித்திய கரும விதி என்று 21 அறிவுரைகளை அவர் தருகிறார். எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது தூங்க வேண்டும் என்றெல்லாம் நுணுக்கமாகக் கூறுவது அவரது தனித்துவம் மிக்க சித்தர் பாணி.

“ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீ சம், பயம் பூஜ்யம் ஆகப் பெறுதல்”- ஆகிய இவை ஆரோக்கிய வாழ்வுக்கு அவர் காட்டும் வழி.

மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுதலை மனிதனின் குறிக்கோளாகச் செய்வதற்கென அபூர்வமாக தமிழகத்தில் அவதரித்த சித்தர் வள்ளலார்.

அதன் முதற்படியாக நீடித்த ஆயுளை ஆரோக்கிய வாழ்வுடன் பெற அவரது அருளுடன் கூடிய அறிவுரைகளைப் பின்பற்றுதல் அன்பர்களின் கடமை.

 

6

வள்ளலாரின் அற்புதமான வாழ்க்கை வரலாற்றை அவரது அணுக்க சீடரும் சென்னை பிரஸிதென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றியவருமான தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதியுள்ளார்.

 

இந்த நூலுடன் ஊரன் அடிகளார் எழுதியுள்ள திரு அருட்பா உரை நடைப் பகுதி நூலையும் இராமலிங்க அடிகள் திருவரலாறு நூலையும் வாங்கிப் படித்தால் அரிய இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 607303 தென்னார்க்காடு மாவட்டம் என்ற முகவரியில் நூலைப் பெறலாம்.

மேலே குறிப்பிட்ட மூன்று நூல்களும் முத்தான நூல்கள். ஆரோக்கிய அதிர்ஷ்டம் உள்ளவர்கள் அதை நிச்சயம் நாடுவர்.

 

***

 

 

வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது? (Post No 4370)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-03 am

 

 

Post No. 4370

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கிம் என ஆரம்பிக்கும் சுபாஷிதங்களைப் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4217 20-10-2017 அன்று வெளியானது.

அதைத் தொடர்ந்து இந்தக் கட்டுரை:-

 

 

வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?

ச.நாகராஜன்

 

கிம் என்று ஆரம்பிக்கும் நூற்றுக் கணக்கான சுபாஷிதங்கள் உள்ளன. ஆதி சங்கரர் அருளிய ப்ரஸ்னோத்தர ரத்னமாலாவில் கிம் என்று ஆரம்பிக்கும் பல கேள்விகளைக் கேட்டு அவர் பதில் அளிக்கிறார்.

 

அவற்றில் சில:-

கிம் ஷோச்யம் கார்பண்யம்

சதி விபவே கிம் ப்ரஷஸ்யமௌதார்யம் I

தனுதரவித்தஸ்ய ததா

ப்ரபவிஷ்னோர் யத்  சஹிஷ்ணுத்வம் II

 

வளமாக இருக்கும் போது எது பரிதாபத்திற்குரியது?

கஞ்சத்தனம்.

அப்போது எது புகழத்தக்கது?

கொடை

அதே போல ஒருவன் வறிய சூழ்நிலையில் இருந்தாலும் சரி  அதிகாரத்தில் இருந்தாலும்  சரி பொறுமையைக் கடைப்பிடிப்பது போற்றத்தக்கது.

இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் கே.வி.சர்மா.

 

 

What is to be pitied when in affluence. Niggardliness.

What is praiseworthy then? Generosity.

Patience is similarly to be commended both when  a  man is in very indigent circumstances as well as he is in power. (Translation by K.V. Sarma)

 

இதே போல கிம் என்று ஆரம்பித்துப் பல கேள்விகளைக் கேட்டு பதிலையும் தருகிறார் ஆதி சங்கரர், மனித குல நன்மைக்காக.

அவற்றைக் கீழே காணலாம்.

 

கிம் விஷம்?

எது விஷம்?

பதில்: அவதீரணா குருஷு

குருவின் கட்டளையை மீறுவது

 

What is poison?

Transgression of preceptor’s orders.

 

கிம் மனுஜேஷு இஷ்டதமம்?

எது மனிதர்களிடம் விரும்பத்தக்கது?

பதில் :ஸ்வ-பர ஹிதாய உத்யதம் ஜன்ம.

தனக்கு மற்றும் பிறர்க்கு என வாழ்க்கையை அர்ப்பணிப்பது.

 

 

What is most desirable for human beings?

Life dedicated to one’s and others welfare.

 

கிம் குருதாயா மூலம்?

எது மேன்மைக்குக் காரணம்?

பதில் : யத் ஏதத் அப்ரார்தனம் நாமம்

பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்காதிருத்தலே மேன்மைக்குக் காரணம்.

 

 

What is the cause of greatness?

That which is known as not asking favours.

 

கிம் துக்கம்?

எது துக்கம்?

பதில் : அசந்தோஷ:

சந்தோஷமற்றிருப்பது.

 

 

What is unhappiness?

Cheerlessness.

 

கிம் ஜாட்யம்?

எது  முட்டாள்தனம்?

பதில் : பாடதோபி அனப்யாஸ”

படித்ததைத் திருப்பிப் படிக்காமலிருப்பது.

 

What is unintelligence?

Not repeating what is learnt.

 

நளினி -தள – கத – ஜலவத் – தரளம் கிம்?

எது தாமரை இலத் தண்ணீ ர போன்று நிலையற்றது?

பதில் : யௌவனம்,தனம் ச ஆயு:

யௌவனம், தனம் மற்றும் ஆயுள்

 

What is transient like the water on the lotus leaf?

Youth, wealth and life.

 

கிம் ச அனர்கம்?

எது விலை மதிப்பற்றது?

பதில்: யதவஸரே தத்தம்

எது சரியான தருணத்தில் வழங்கப்பட்டதோ அது.

 

 

What is priceless?

That which is given at the right moment.

 

ஆமரணாத் கிம் ஷால்யம்?

அம்பு போல மரணம் வரை வருவது எது?

பதில் : ப்ரச்சன்னம் யத் க்ருதம் பாபம்.

ரகசியமாக செய்த பாவம்.

 

 

What paids like a shaft till death?

The sin committed in secrecy

 

இன்னும் பல ‘கிம்’ என்று ஆரம்பிக்கும் கேள்விகள் ப்ரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ளன. படித்துப் பயனடையலாம்.

***

கம்பனும் அப்பரும் செப்பியது ஒன்றே! (Post No.4369)

Written by London Swaminathan

 

Date: 5 NOVEMBER 2017

 

Time uploaded in London- 15-24

 

 

Post No. 4369

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இரணியனை வதம் செய்தவுடன் எதிரே நின்ற நரசிங்கப் பெருமான் சொன்னார்: உன் அப்பனையே கூரிய நகங்களால் கொன்ற பின்னரும் நிலைகுலையாமல் நின்றாய்; என் மீது கொண்ட பக்தி சிறிதும் குறைவில்லை; உன் பக்தியைக் கண்டு மெச்சுகிறேன் உனக்கு என்ன வேண்டும்? கேள்!

 

உடனே பிரஹலாதன், “என் அப்பா இருந்த அரியாசனத்தில் என்னையும் உடகார்த்தி வை என்று பதவியையோ, பெரும்புகழையோ, செல்வத்தையோ கேட்கவில்லை. நான் எலும்பற்ற உடல் கொண்ட புழுப் போன்ற உடல் எடுத்தாலும் உன்னை மறவாது இருக்க வரம் அருள்’ என்கிறான்.

 

என்ன ஆச்சர்யம்! இதுவே அப்பர் வாக்கில் கம்பனுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உள்ளது!

 

 

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவில்லை

பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்

–இரணியன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

 

உனது அருளால் நான் பெற்ற நன்மைகள் எல்லையற்றவை. இனியும் நான் பெறும் நன்மை யாதுளது? அப்படி இன்னும் நான் பெறக்கூடியது ஏதாவது ஒன்று உண்டென்றால், எலும்பு இல்லாத புழுவின் உடலை நான் பெற்றாலும் உன்னிடம் அன்பு செலுத்தும் பெறும் பேற்றை எனக்கு அருள வேண்டும் — என்று பிரஹலாதன் வேண்டுகிறான்.

இதை அப்பரின் தேவாரப் பாடலுடன் ஒப்பிடுவோம்:

 

 

புழுவாய்ப் பிறக்கினும்  புண்ணியா  வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே

தொழுவார்க் கிரங்கி  யிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச்

செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே—

நாலாம் திருமுறை

 

பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார்.

 

–Subham–

வேத காலத்தில் வாஸ்து சாஸ்திரம் (Post No.4363)

Written by London Swaminathan

 

Date: 3 NOVEMBER 2017

 

Time uploaded in London- 16-20

 

 

Post No. 4363

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பிரபஞ்ச வாணி வானொலி நிலயம்!

 

செய்திகள் வாசிப்பது லண்டன் சுவாமிநாதன்!

முதலில் தலைப்புச் செய்திகள்:–

 

1.வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றம் வேத காலத்தில் இருப்பது சில மந்திரங்கள் மூலம் தெரிகிறது.

 

2.வேத கால ரிஷிகள் மந்திரங்களுக்குள்ள அபூர்வ சக்தி பற்றிப் பாடி இருப்பது ரிக் வேதத்தில் உள்ளது.

3.மூன்று முக்கிய மந்திரங்கள், வேத மந்திரங்களின் சக்தி — அபூர்வ சக்தி பற்றி,  ரிஷிகள், பாடியதைக் காட்டுகின்றன.

 

4.மந்திரங்களை ரஹசிய மொழியில் பாடுவது பற்றிய செய்தி ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் உள்ளது.

 

5.கடவுள்கள் கிழக்கு திசையில் இருந்து வந்ததாகவும், மேற்கு திசை மூலமாக கடவுளர் சொர்கத்துக்குச் சென்றதாகவும் பிராமண நூல்கள் சொல்கின்றன.

 

 

இதோ விரிவான செய்திகள்

விஸ்வாத்ரஸ்ய ரக்ஷதி ப்ரஹ்ம இதம் பாரதம் ஜனம் – ரிக் வேதம் 3-53-12

 

ஏவன் நு கம் தாசராக்ஞே சுதாசம் ப்ராவத் இந்த்ரோ ப்ரஹ்மணா வோ வசிஷ்டாஹா- 7-33-3

 

வசிஷ்டஸ்ய ஸ்துவதஹ இந்த்ரஹ அஸ்நோத் உரும் த்ருத்சுத்ய அக்ருணோத் லோகம் 7-33-5

 

மூன்று மந்திரங்களின் சுருக்கமான பொருள்:-

 

வானத்தையும் பூமியையும் தாங்கும் இந்திரனே உன் புகழ் பாடுகிறேன் நான்; விஸ்வாமித்ரரின் துதிகள் பரத இனத்தைக் காப்பாற்றும்

 

அவன் இதன் உதவியால் (யமுனை) ஆற்றைக் கடந்தான்; இவர்களின் உதவியுடன் அவன் பேதாவைக் கொன்றான்.

 

 

தாகம் எடுத்தவர் போல, அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தனர். பத்து அரசர் போரின்போது வசிஷ்டரின் துதிகளை இந்திரன் கேட்டான். த்ருத்சுக்களை வெல்ல வைத்தான்.

 

 

இதிலுள்ள சில விஷயங்கள் வெளிநாட்டினருக்கும் வியப்பை ஏற்படுத்தின; ரிக் வேதத்தின் பழைய மண்டலத்திலும் யமுனை நதி பற்றிப்பேசப்படுவது ஆரியர்கள் மேற்கிலிருந்து குடியேறினர் என்பதைப் பொய்மைப்படுத்துகிறது

பத்து அரசர்கள் போர் என்பது (தச ராஜ யுத்தம்) வேத கால இந்துக்கள் இடையே நடந்த சஹோதர யுத்தம். சேர சோழ பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சஹோதர யுத்தம்  செய்தனர். உலகில் நீண்ட கால தொடர் யுத்தம் செய்தவர்கள் தமிழர்களே. நல்ல வேளை! வெள்ளைக்காரர்கள் தமிழைப் படிக்காததால் ஒரு மன்னரை ஆரியன் என்றும் மற்றவனை  திராவிடன், பழங்குடியினன் என்றும் முத்திரை குத்த வாய்ப்பிலாமல் போனது. வேதத்தில் யா ராவது இருவர் சண்டை பற்றி மந்திரம் வந்தால், ஒருவனை ஆரியன் என்றும் மற்றவனை திராவிடன் அல்லது பழங்குடி மன்னன் என்றும் முத்திரை குத்தி பிளவு படுத்துவது வெளிநாட்டினர் சூழ்ச்சி. கரிகால் சோழன் கூட 9 பேரின் முடிகளை (மணி முடி) வென்றான்; சேரன் செங்குட்டுவன் ஏழு பேரின் மணி முடிகளை வென்றான். இதே போல பத்து மன்னர் யுத்தம் நடந்தது. வெள்ளைக்கார சூழ்ச்சிவாதிகளும், மார்கஸீயங்களும் இதை எல்லாம் வர்கப் போராட்டம் என்றும் இரு வேறு இனங்களின் போராட்டம் என்றும் சித்தரித்து நாட்டைப் பிளவுபடுத்தினர்.

 

ரஹஸிய மொழி

ரிக் வேதத்தின் நாலாவது மண்டலத்தில் ரஹஸிய மொழியில் வேத கால ரிஷிகள் கவிபாடுவது வருகிறது:

” நான் ரஹஸிய மொழியில் பாடிய துதிகள், ஏ அக்னி தேவனே! உனக்குப் புரியும். என்னுடைய ஞான மொழிகளில் என் கருத்துகளையும் எண்ணங்களையும் உதிர்த்தேன்”

தமிழர்கள் ‘மறை’ என்று வேதங்களை அழைத்தது இந்த ரஹசிய மொழிகளால்தான்.

 

திசைகள் பற்றி பிராமண மந்திரங்கள்

 

கடவுள், கிழக்கு திசையில் இருந்து நகர்ந்து மேற்கு திசையிலுள்ள மனிதர்களை நோக்கி வந்தார். இதனால்தான் மனிதர்கள் கிழக்கு நோக்கி பிரார்த்தனை செய்கின்றனர்- சதபத பிராhமணம் 2-6-1-11

 

(இந்துக்கள் எப்போதும் கிழக்கு நோக்கியே வழிபாடு செய்வர்; இறந்தோருக்கான வழிபாடு மட்டும் தெற்கு திசையை நோக்கி இருக்கும்)

 

எவரும் மேற்கு திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது; ஏனெ னில் கால்கள் இறைவனை நோக்கி அமைந்துவிடும்! தெற்கு திசை இறந்து போன முன்னோர்களுக்கும் (பிதுர்கள்) மேற்கு திசை நாகர்களுக்கும் உரித்தாகும். அங்கே கடவுளர் சொர்கத்துக்கு ஏகினர். வட திசை மனிதர்களுக்குச் சொந்தம்; அதனால்தான் வீடுகளில் தெற்கு வடக்காக உத்திரங்கள் அமைக்கபடுகின்றன. ஏனெனில் வடக்கு திசை மனிதர்களுடையது.  புனிதமற்ற இடங்களில் உத்திரம் , கிழக்கு மேற்காக இருக்கும். (சதபத பிராமணம் 3-1-1-7)

 

அவன் ஆட்டின் மயிரைக் கத்தரித்து, அவைகளை வடகிழக்கு நோக்கி அனுப்புகிறான்.; வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. அவன் ஆடுமாடுகளை அத்திசைக்கு அனுப்புவதால்தான் மனிதர்களும் கடவுளும் கால்நடைகள் மூலம் ஜீவிக்கின்றனர். (சதபத பிராமணம் 6-4-4-22)

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா) உயிரினங்களைப் படைத்தார். மீண்டும் சொல்கிறேன். வடகிழக்குதான் மனிதர்களுக்கும் கடவுளருக்கும் உரிய திசை. சொர்கலோகக் கதவு அங்கேதான் இருக்கிறது. (6-6-2-4)

 

 

வடகிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுதான் பிரஜாப்தி (பிரம்மா), விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம், உயிரினங்களைப் படைத்தார். அவ்வாறே இப்போது யாகம் செய்பவன் வடகிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, விஷ்ணுவின் காலடிச் சுவடுகள் மூலம்,   உயிரினங்களைப் படைக்கிறான். (6-7-2-12)

 

அவன் எந்த திசையில் செல்வதானாலும் முதலில் கிழக்கு நோக்கிச் செல்லட்டும்; ஏனெனில் கிழக்குதான் அக்னி தேவன் பிரதேசம் –(6-8-1-8)

 

அவர்களுடன் அவர்கள் தென் மேற்கு திசை நோக்கிச் செல்கின்றனர். ஏனெனில் அது நிருதி (தீய தேவதை) யின் திசை (7-2-18

 

கிழக்கு என்பது கடவுளை நோக்கிய திசை– அக்னியை நோக்கிய திசை- 7-3-2-1

திசைகள், உத்திரங்கள், திசைக்குரிய தெய்வங்களின் குறிப்புகள் ஆகியன வாஸ்து சாஸ்திரத்தின் தோற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன.

 

வேத காலத்தில் துதிப்பாடல்கள் (சம்ஹிதை) தோன்றியவுடன் பிராமண நூல்கள் (கி.மு.1000 அல்லது அதற்கு முன்னர்) தோன்றின.

 

கிழக்கு திசை பறிய பிராமணக் குறிப்புகளும், வேதத்தில் கிழக்கு திசை இந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதும், ரிக் வேத நதிகள் துதி, கிழக்கிலுள்ள கங்கையிலிருந்து துவங்கி மேற்கிலுள்ள சரஸ்வதி செல்வதாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைச் சமவெளியில் புகழ் வாய்ந்த நாக ரீகம் மலர்ந்ததைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல, பகீரதன், சகரர் பற்றிய புராணக் குறிப்புகளும், உலகிலேயே பழமையான நகரமான காசி மாநகரம் கங்கையின் மீதமர்ந்ததும் கங்கைச் சமவெளியின் பழமையைக் காட்டுகின்றன; வெளி நாட்டுக்காரர்களின் வாதங்களில் உள்ள பொய்மைப் புனைந்துரையைக் காட்டுகின்றன.

 

ஆரியர் படை எடுப்பு பற்றிய கதைகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

TAGS:–வாஸ்து சாஸ்திரம், தோற்றம், மறை மொழி, ரகசிய மொழி, கிழக்கு திசை, கடவுள் திசை

–சுமம், சுபம் —

ஒரு குட்டிக் கதை: மனதுக்கும் சொல்லுக்கும் சண்டை! (Post No.4353)

Written by London Swaminathan

 

Date: 31 October 2017

 

Time uploaded in London- 6-43 am

 

 

Post No. 4353

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேதங்களின் துதிப்பாடல்களை அடுத்துத் தோன்றியவை பிராமணங்கள் என்னும் உரைநடை நூல்கள். கிரேக்கர்கள் புத்தகம் எழுதுவதற்கு முன்னரே தோன்றியவை இவை. எல்லாக் கதைகளும் உரையாடல்களும், சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கும். மொழி, சொல் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்கள் என்றால், இவர்கள் எவ்வளவு நாகரீக முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

யார் பெரியவர்? யார் சிறந்தவர் என்று மனதுக்கும் வாக்கிற்கும் (வாக்= சொல்) வாக்குவாதம் ஏற்பாட்டது. நானே சிறந்தவன் என்று இரண்டும் கூறின.

மனம் சொன்னது: ஏ, சொல்லே, நான் நினைப்பதைத்தானே நீ பேசுகிறாய். நான் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்ட பின்னர் தானே நீ அதைச் சொல்ல முடியும்; ஆகையால் நானே உன்னை விடச் சிறந்தவன்; உயர்ந்தவன் — என்றது.

 

வாக்கு சொல்லியது: நீ என்னதான் நினைத்தாலும் நான் சொன்னால்தானே மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகையால் தகவல் தரும் நானே உன்னைக் காட்டிலும் உயர்ந்தவன் என்றது.

 

 

இரண்டும் தொடர்ந்து வாதாடின; பின்னர் வா, நாம் பிரஜாபதியிடம் (பிரம்மா) முடிவு கேட்போம் என்று புறப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பிரஜாபதி செப்பினார்: “மனதே பெரியவன்; நீ அது நினைப்பதைச் சொன்னாலும், அதைப்போல, அதைப் பின்பற்றி நடக்கிறாய் அல்லவா? ஆகையால்நீ இரண்டாம் தரம்தான்-

BRAHMA—Picture sent by Lalgudi Veda

இப்படிப் பிரஜாபதி சொன்னவுடன் வாக்கிற்குக் கோபம் வந்தது. “அப்படியா சேதி! நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? உன்னையும் நான் நிராகரிப்பேன். எங்கு எங்கெல்லாம் யாக யக்ஞங்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உன் பெயர் வரும்போது அவர்கள் உச்சரிக்காமல் போகட்டும் -உன் பெயர் என் சொல்லால் பிரகாசிக்கக்கூடாது” என்றது.

 

ஆகையால்தான் வேத மந்திர உச்சாடனத்தில் பிரஜாபதி பெயர் வருகையில் மெல்லிய- சன்னமான குரலில் மந்திரம் சொல்லுகின்றனர்.

 

இந்தக் கதையை ஆழ்ந்து யோசித்தால் நிறைய தத்துவங்கள் விளங்கும்.

 

ஒருவர் சொல்லும் சொல், தேன் போல இருக்கலாம். ஆனால் மனதில் விஷம் வைத்திருக்கலாம். ஆகவே மனதளவில் சுத்தம் வேண்டும்; ஆகையால் மனதே உயர்ந்தது.

 

ஒருவர் பலர் அறிய அழகாக மந்திரங்களைச் சொல்லலாம். ஆனால் அவர் மனது காமம், க்ரோதம், பேராசையால் மூடப்பட்டிருக்கலாம். அவர் சொல்லும் மந்திரத்தை வைத்து அவரை எடைபோட முடியாது. ஆகையால் மனமே பெரியது.

 

இப்படி யோசிக்க யோசிக்க நிறைய விளக்கங்கள் கிடைக்கும்.

 

ஜபம் செய்யும்போதுகூட வாயால் மந்திரத்தைச் சொல்லுவதைவிட மனதால் சொல்லுவது பல மடங்கு பலன் தரும் என்பர் பெரியோர்.

 

ஆக மனமே பெரியது என்பதை நாமும் ஒப்புக்கொண்டு உதட்டளவில் பேசாமல் மனத்தளவில் பேசுவோமாக!

இந்தக் கதை சதபத பிராமணத்தில் உள்ளது.

TAGS:–சதபத, பிராமணம், சொல், வாக்கு, மனம், சண்டை

 

-Subham, Subham–

பிராமணங்களில் உள்ள சுவையான கதைகள் (Post No.4347)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 6-51 am

 

 

Post No. 4347

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு. சம்ஹிதை எனப்படும் துதிகள், தோத்திரங்கள் அடங்கியது முதல் பகுதி. இரண்டாவது பிராமணங்கள்; மூன்றாவது ஆரண்யகங்கள்; நாலாவது உபநிஷதங்கள். பொதுவாக கர்ம காண்டம், ஞான காண்டம் என்றும் பிரித்துப் பேசுவர்.

 

இந்த இலக்கியம் தோன்றிய பின்னரே உலகில் கிரேக்கம், லத்தீன், தமிழ் மொழி இலக்கியங்கள் தோன்றின. எபிரேய (ஹீப்ரூ) மொழியில் பைபிளின் சில பகுதிகள், சீன மொழியில் சில துண்டு இலக்கியங்கள் மட்டுமே அப்போது இருந்தன. மற்ற பழைய மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

 

பிராமணங்களிலும், வேத சம்ஹிதைகளிலும் மறை பொருளில்– ரஹசிய பாஷையில் — கவி மழை பொழிவர்- அல்லது உரையாற்றுவர்- இது புரியாத வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள் இதை சிறு ‘பிள்ளைத் தனமான பேச்சு’, ‘அபத்தம்’ என்றெல்லாம் எழுதிவைத்தனர். ஏனெனில் மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் இந்து சமயத்தைக் குறைகூற இவைகளைக் கற்றனரேயன்றி புகழ்பாட அல்ல. மேலும் நாங்கள் வெளிநாட்டிலுருந்து இன்று வந்தோம்; ஆரியர்களும், திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து அன்று வந்தனர் என்று சொல்லி, அவர்கள் ஆக்ரமிப்புக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் இப்போதைய ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் இருந்ததையும் அவர்கள் நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்ததையும் காட்டுகின்றன.

 

பிராமணங்கள் என்ற சொல் மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் சொல். குறிப்பாக இதை ஆங்கிலத்தில் எழுதும் போது ‘பிரம்மா’ என்னும் கடவுளா, ‘பிரம்மன்’ எனப்படும் இறைவன் என்ற பொதுவான சொல்லா, பிராமணங்கள் எனப்படும் வேதப் பகுதியா அல்லது பிராமணர்கள் எனப்படும் ஜாதியா என்று 4 விதக் குழப்பம் வரும். நாம் இங்கே சொல்ல வருவது வேத கால இலக்கியமான பிராமணங்கள் எனப்படும் பகுதியே..

“ஐயா, எனக்கு இதெல்லாம் புரியாது; மேலும் சம்ஸ்கிருதமும் தெரியாது; அது மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தில் உள்ள பழங்கால இலக்கியம், உலகத்திலுள்ள எல்லா பழைய இலக்கியங்களையும் சேர்த்து வைத்தாலும் அதை விடப் பெரியது; ஆகையால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று நான் எப்படி அறிவது? என்று கேட்பீர்களானால், நான் ஒன்று மட்டும் சொல்லுவேன். இதிலுள்ள விசயங்களின் அட்டவணையை மட்டும் பாருங்கள்; உலகிலேயே மிகப் பெரிய எண்கள், மொழி ஆராய்ச்சி, 27 நட்சத்திரங்களின் பட்டியல், வானத்தில் கிருத்திகா ரோஹிணி முதலிய நட்சத்திரங்களின் நிலைகள், பருவ காலங்கள், மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள்—- என்று பெரிய பட்டியல் வரும் இதிலுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மன்னர்களின், ரிஷிகளின் பெயர்கள் முதலியவற் றை எடுத்தால் இன்னும் புரியும்; மன்னரின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் வேண்டும் என்று பேசும்; இவை எல்லாம் சிறுபிள்ளத் தனமானவையா? அல்ல, அல்லவே அல்ல. அக்னிக்கு 7, பிரஜாபதிக்கு 17, இந்திரனுக்கு 100 என்று மர்மமான எண்களையும் கொடுக்கும். ரிக் வேதத்தின் கவிஞர்களின் பெயர்களே 450 பேர்! உலகில் இது போல எங்கும் காண முடியாது. தமிழில் சங்க காலத்தில் 450 புலவர் பட்டியலைப் பார்க்க, நாம் வேதங்கள் தோன்றியதற்குப் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆக வேத கால நாகரீகம் உயர்ந்த நிலயில் இருந்தது என்பதும், அவர்கள் உலகம் முழுதும் ஆரியத்தை (பண்பாட்டினை) பரப்பினர் என்பதும் வெள்ளிடை மலையென விளங்கும்.

 

ரிக் வேதத்தில் நான்கு ஜாதிகளும் தொழில் அடிப்படையிலான சொற்கள் என்றும் (10-90) அவர்கள் இறைவனின் அங்கங்கள் என்றும் துதி உள்ளது ஆனால் வெள்ளைக்கார பாதிரிகளும், திராவிட அசிங்கங்களும் சூத்திரர் என்பவர் திராவிடர் என்று பொய்யுரை உரைத்தனர். அசுரர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று பிராமண நூல்கள் பகர்கின்றன. ஆனால் வெள்ளைத் தோல்களும் மார்கஸீய வாந்திகளும் நேர்மாறாக பொய்யுரை பகன்றனர். நிற்க. ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.

பிராமண நூல்களில் பெரியது சதபத பிராமணம்; அதில் வரும் செய்தி:

“மனம் என்பது ஒரு பெரிய சமுத்திரம்;  அந்தப் பெருங்கடலில் இருந்து தேவர்கள், வாக்கு (சொல்) என்னும் மண்வெட்டியைக் கொண்டு, மூன்று வேதங்களைத் தோண்டி எடுத்தனர். ஆகையால்தான் இந்தத் துதியை இங்கே சொல்கிறோம் (7-5-2-52)

 

இது சிறுபிள்ளைகளுக்கும் புரியும் உவமை; சொல்லினால் ஆனது வேதம்; அதுவும் தேவர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்திய போது வானில் மிதந்த உண்மைகளைக் கேட்டனர். அதை நமக்கும் மொழிந்தனர்.

 

நல்லோரிடையே ஒற்றுமை வேண்டும் என்ற ஒரு கதை சதபத பிராமணத்திலும்,  ஐதரேய பிராமணத்திலும் உளது.

தேவர்களும் அசுரகளும் போட்டி போட்டனர்; தேவர்களுக்குள் போட்டி, பொறாமை மிகுந்திருந்தது. யார் பெரியவர்? நீயா நானா? என்று நினைத்ததால் தனித்தனி கூட்டணி அமைத்தனர்; அதுவும் ஐந்து கூட்டணிகள்! அக்னி தேவன் வசுக்களுடன் சென்றான்; சோம தேவன் ருத்ரர்களுடன் சென்றான்; இந்திரன் மருத்துகளுடன் போனான்; வருணன் ஆதித்யர்களுடன் சேர்ந்தான்; பிருஹஸ்பதியோ, விஸ்வே தேவர்களுடன் கூட்டணி போட்டான். பின்னர் அவர்கள் மனதில் ஒரு சிந்தனை மலர்ந்தது. அசுரர்கள் நம்மை வீழ்த்திவிடுவர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு– என்று கருதி நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக (ஓருடல்) இணைவோம் என்றனர். மாபெரும் கூட்டணி!!

நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவரை எதிர்த்தால் அவர், இந்த அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்படுவார். நாம் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தால் (உறுதிமொழி) கட்டப்பட்டுள்ளோம்; யாராவது இதை மீறினால்– இந்த ஒரே உடலைக் காயப்படுத்தினால், அவருக்கு அழிவு வரும்! எந்த மனிதன் இந்த ஓருடல் உடன்படிக்கையில் சேருகிறானோ அவன் வெற்றி பெறுவான்; எதிரிகளை ஒழிப்பான்.”

 

இந்த உடன்படிக்கைக்கு “தானனப்த்ரம்” என்று பிராமணங்கள் பெயர் கொடுத்துள்ளன; இதன் பொருள் “ஓர் உடல் (இணைந்த உடல்)”.

இன்றைய அரசியல் கட்சி ஒப்பந்தங்கள், ‘நாட்டோ’ போன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களிலும் இதே வாசகங்களைக் காணலாம். வெள்ளைக்காரர்கள் — கொள்ளைக்காரர்கள் — கணக்குப்படியே இந்த பிராமணங்கள் கி.மு 1000ல் தோன்றின. நமது கணக்குப் படியோ அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. எது எப்படியாகிலும் இதை ‘சிறுபிள்ளைத் தனமான’ இலக்கியம் என்று சொல்லும் கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் மெகாலேக்களையும் ‘அடு மடையர்கள்’, ‘மடத் தடியர்கள்’ என்று சொல்லுவது பொருத்தம்தானே?

மன்னர்களின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று சதபத பிராமணத்தில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. மன்னன் பிரஜாபதி (பிரம்மா); பிரஜாபதிக்கும் எண் 17; ஆகையால் 17 வகை நீர், மன்னனை அபிஷேகம் செய்யத் தேவை; அப்படிச் செய்தால் 17 வகை சக்தி அவன் உடலில் ஏறும் என்றும் பிராமணம் (for more details, please see my English version of this article) சொல்லும்.

 

இந்துக்கள் மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் வந்து குடி ஏறியதாகப் பிதற்றும் பேதைகளுக்கு அறிவிலிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பது வேத கால இலக்கியம்; இறப்பு முதல் பிறப்பு வரை சமயச் சடங்குகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது இந்துக்கள் மட்டுமே; ரிக் வேதத்தில் தண்ணீரைப் போற்றி  வரும் மந்திரங்களைப் பிராமணர்கள் இன்றும் தினசரி சந்தியாவந்தனத்தில் சொல்லுகின்றனர். தண்ணீரைக் கொது சந்தியா வந்தனம் செய்கின்றனர். ஆகையால் இவை எல்லாம் கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் தலையில் விழும் இடிகள் என்று சொன்னால் அதை மறுப்பாரிலை!!!

TAGS:–பிராமணங்கள், கதைகள், சதபத, ஐதரேய, ஒற்றுமை, கூட்டணி

— சுபம், சுபம் —

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

 

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 14-14

 

 

Post No. 4344

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.

இதோ ஓரிரு படல்கள் மட்டும்!

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

 

அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

 

பொருள்:-

இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்

 

இடர் ஆழி= துயரக் கடல்

 

ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.

உடம்பெனும் மனையகத்து  உள்ளமே தகளியாக

மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

–நாலாந் திருமுறை

 

பொருள்-

உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.

 

உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான   பொருளைக் காணலாம்.

கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை

 

திருமங்கை ஆழ்வார்

 

ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்

 

 

வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து

 

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி

 

 

ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து

 

நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்

என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.

சுபம்

 

 

நான் மறை என்றால் என்ன பொருள்? (Post No.4343)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 7-32 AM

 

 

Post No. 4343

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

2.நான் மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்

 

3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.

 

4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.

5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)

 

எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.

 

நான் மறைகளும் புரிந்துவிட்டதா?

 

–சுபம்-

சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4340

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘

அதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்!

1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே

சிவபெருமான் செய்த லீலைகள் என்ன? —-16 மதிப்பெண்கள்

 

2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?

அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?

அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?- 21 மதிப்பெண்கள்

 

3.பஞ்ச பூதத் தலங்கள் எவை? –5 மதிப்பெண்கள்

 

4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை? அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்

 

 

5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்

6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .—7 மதிப்பெண்கள்

 

7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்? –25 மதிப்பெண்கள்

8.நால்வர் யார்? – 4 மதிப்பெண்கள்

 

9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன? 10 மதிப்பெண்கள்

திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்குநாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்

 

 

ANSWERS

QUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது

திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது

திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது

திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது

திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது

வழுவூர்- யானையைத் தோலுரித்தது

திருக்குறுக்கை- காமனை எரித்தது

திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது

 

QUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்

திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்

திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்

திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்

திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்

திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்

 

QUESTION 3-

1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)

2.திருவானைக்கா – அப்பு (நீர்)

3.திருவண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காலத்தி -வாயு (காற்று)

  1. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)

 

QUESTION 4-

அசபா தாண்டவம்- திருவாரூர்,

ஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,

ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,

ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்

பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்

 

QUESTION 5-

சபாபதி ஆலயம்- சிதம்பரம்;

தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;

ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;

குமரனாலயம்-திருவேரகம்;

சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;

விடையினாலயம்-திருவாவடுதுறை;

வடுகனாலயம்-சீர்காழி.

 

QUESTION 6-

திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,

திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய் த்தானம்.

 

QUESTION 7-

1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்

4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்

7- சுந்தரர்

8- மாணிக்கவாசகர்

9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்

10-திருமூலர்

11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.

12- சேக்கிழார்

 

QUESTION 8-

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

 

QUESTION -9

திருவாலவாய்- மதுரை

கொடுங்குன்றம்- பிரான்மலை

திருக்கானப்பேர்- காளையார்கோயில்

கோயில்- சிதம்பரம், தில்லை

புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்

குடமூக்கு- கும்பகோணம்

நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்

திருமறைக்காடு–வேதாரண்யம்

கச்சி– காஞ்சீபுரம்

திருமுதுகுன்றம்- விருத்தாசலம்

–SUBHAM–

 

விதி கொடியது: ராம பிரானின் 16 பொன்மொழிகள் (Post No.4337)

Written by London Swaminathan

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 12-44

 

 

Post No. 4337

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமன் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள் வருகின்றன. அவற்றில் வள்ளுவர், இளங்கோ கூறிய ஊழ்வினை கருத்துக்களைக் காணலாம். அதாவது, வள்ளுவருக்கும், இளங்கோவுக்கும் முன்னதாக, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பாரத நாட்டில் உள்ள கருத்துக்கள்தான் இவை. சிலர் ஊழ்வினைக் கருத்துக்களை மட்டும் முன்வைத்து வள்ளுவனுக்கும் இளங்கோவுக்கும் மாற்று மதம் கற்பிப்பர்; சமணர் என்று புலம்புவர். அது தவறு என்பது ஒட்டுமொத்த நூலையும் படித்து எடை போட்டால் தெரியும்.

 

 

ராமாயணமும் மஹாபாரதமும் நமக்குத் தெரிந்த கதைகள்தாம். ஆயினும் அவைகளில் நிறைய நுட்பமான விஷயங்கள் உள்ளன. கதைப் போக்கை மறந்து விட்டு உவமைகளாகக் காணவேண்டும்; பொன் மொழிகளாகக் காணவேண்டும். அவை நல்ல இன்பம் பயக்கும். இதோ முதலில் சுருக்கமாக 16 பொன்மொழிகள், ஸ்லோகங்களுடன் கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும் போது வால்மீகி எழுதிய 24,000 ஸ்லோகங்களை, 48,000 வரிகளை ஊன்றிப் படியுங்கள்; தேன் ஊறும்; நாக்கில் அல்ல; மனதில், உள்ளத்தில். அதைத்தான் மாணிக்கவாசகர் ‘உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து’ என்று சொன்னார் போலும்.

சர்வே  க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:

சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்

सर्वे क्षय अन्ता निचयाः पतन अन्ताः समुग्च्छ्रयाः |
सम्योगा विप्रयोग अन्ता मरण अन्तम् च जीवितम् || २-१०५-१६

சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்.

xxxx

 

யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்

ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்

यथा फलानम् पक्वानाम् न अन्यत्र पतनाद् भयम् |
एवम् नरस्य जातस्य न अन्यत्र मरणाद् भयम् || २-१०५-१७

பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.

xxxx

யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி

ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

यथा अगारम् दृढ स्थूणम् जीर्णम् भूत्वा अवसीदति |
तथा अवसीदन्ति नरा जरा मृत्यु वशम् गताः || २-१०५-१८

உறுதியான கட்டிடங்கள் இடிந்து விழும்; அழிந்து போகும்அ. தைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்

xxxx

 

 

அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத

யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்

अत्येति रजनी या तु सा न प्रतिनिवर्तते |
यात्येव यमुना पूर्णा समुद्रमुदकाकुलम् || २-१०५-१९

இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.

xxxxx

அஹோராத்ராணி கச்சந்தி சர்வேஷாம் ப்ராணினாம் இஹ

ஆயும்ஷி  க்ஷபயந்த்ய ஆசு க்ரீஷ்மே ஜலம் இவ அம்சவ:

अहो रात्राणि गग्च्छन्ति सर्वेषाम् प्राणिनाम् इह |
आयूम्षि क्षपयन्त्य् आशु ग्रीष्मे जलम् इव अंशवः || २-१०५-२०

 

கோடை காலத்தில் தண்ணீரை சூரியன் வற்றச் செய்வதுபோல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உயிரினங்களை மாயச் செய்கின்றன.

xxxx

 

ஆத்மானம் அனுசோச த்வம் கிம் அன்யம் அனுசோசசி

ஆயு: தே ஹீயதே யஸ்ய ஸ்திதஸ்ய ச கதஸ்ய ச

आत्मानम् अनुशोच त्वम् किम् अन्यम् अनुशोचसि |
आयुः ते हीयते यस्य स्थितस्य च गतस्य च || २-१०५-२१

நீ நின்றாலும் நகர்ந்தாலும் வாழ்நாள் குறைந்துகொண்டே வரும்; ஆகைஅயால் உன்னைப் பற்றி வருதப்படு; மற்றவர்கள் குறித்து வருந்தாதே.

xxxx

 

சஹ ஏவ ம்ருத்யுர் வ்ரஜதி சஹ ம்ருத்யுர் நிஷீததி

கத்வா சுதீர்கம் அத்வானம்சஹ ம்ருத்யுர் நிவர்தத

सह एव मृत्युर् व्रजति सह मृत्युर् निषीदति |
गत्वा सुदीर्घम् अध्वानम् सह मृत्युर् निवर्तते || २-१०५-२२

 

நாம் நடந்தாலும் மரணம் நம்மைப் பிந்தொடரும்; உட்கார்ந்தாலும் அதுவும் அருகில் அமர்ந்து ஓய்வெடுக்கும்; எவ்வளவு தூரம் போனாலும் அதுவும் வரும்; நாம் திரும்பி வந்தால் நம்முடன் திரும்பியும் வரும்.

xxxx

 

காத்ரேஷு வலய ப்ராப்தா: ஸ்வேதாள் சைவ சிரோ ரஹா:

ஜரயா புருஷோ ஜீர்ண: கிம் ஹி க்ருத்வா ப்ரபாவயேத்

गात्रेषु वलयः प्राप्ताः श्वेताः चैव शिरो रुहाः |
जरया पुरुषो जीर्णः किम् हि कृत्वा प्रभावयेत् || २-१०५-२३

நம் அங்கங்களின் மீது சுருக்கம் விழுகிறது; முடி நரைத்து விடுகிறது;

முதிய வயது காரணமாக போன அழகு திரும்பி வருமா?

xxxx

 

நந்தந்த்ய உதித ஆதித்யேநந்தந்த்ய அஸ்தம் இதே ரவௌ

ஆத்மனோ அவபுத்யந்தே மனுஷ்யா ஜீவித க்ஷயம்

नन्दन्त्य् उदित आदित्ये नन्दन्त्य् अस्तम् इते रवौ |
आत्मनो न अवबुध्यन्ते मनुष्या जीवित क्षयम् || २-१०५-२४

காலையில் சூரியன் உதிக்கும்போதும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும்போதும் மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்; ஆனால் அவர்களின் ஆயுள் குறைந்து வருவதை அவர்கள் உணர்வதில்லை.

xxxx

ஹ்ரச்யந்த்ய ருது முகம் த்ருஷ்ட்வா நவம் நவம் இஹ ஆகதம்

ருதூணாம் பரிவர்தேன ப்ராணினாம் ப்ராண சம்க்ஷய:

हृष्यन्त्य् ऋतु मुखम् दृष्ट्वा नवम् नवम् इह आगतम् |
ऋतूनाम् परिवर्तेन प्राणिनाम् प्राण सम्क्षयः || २-१०५-२५

 

ஒவ்வொரு பருவம் வரும்போதும் ஏதோ புதிதாக வருவது போல மகிழ்கிறார்கள்; ஆனால் மாறி மாறி வரும் பருவங்களினால் அவன் ஆயுள் குறைந்துகொண்டே வரும்.

xxxx

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹா அர்ணவே

சமேத்ய ச வ்யபேயாதாம் காலம் ஆஸாத்ய கஞ்சன

 

ஏவம் பார்யா: புத்ரா: ச ஜ்நாதய: ச வசூனி ச

சமேத்ய வ்யவதாயந்தி  த்ருவோ ஹ்ய ஏஷாம் விநா பவ:

यथा काष्ठम् च काष्ठम् च समेयाताम् महा अर्णवे |
समेत्य च व्यपेयाताम् कालम् आसाद्य कंचन || २-१०५-२६
एवम् भार्याः च पुत्राः च ज्नातयः च वसूनि च |
समेत्य व्यवधावन्ति ध्रुवो ह्य् एषाम् विना भवः || २-१०५-२७

கடலில் மிதக்கும் இரண்டு மரக்கட்டைகள் சிறிது காலத்துக்கு ஒன்றாகப் பயணித்துப் பிரிந்து விடுகின்றன. அது போலத்தான் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், சொத்து, சுகம் ,செல்வம் எல்லாம் சிறிது காலத்துக்கு உடன் வரும். அவை பிரிவது தவிர்க்கமுடியாதது.

 

xxxxx

 

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே

தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |
तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८

 

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

xxxxx

 

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:

அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி

 

ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:

தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

यथा हि सार्थम् गग्च्छन्तम् ब्रूयात् कश्चित् पथि स्थितः |
अहम् अप्य् आगमिष्यामि पृष्ठतो भवताम् इति || २-१०५-२९
एवम् पूर्वैर् गतो मार्गः पितृ पैतामहो ध्रुवः |
तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத  பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

xxxx

 

 

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:

ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

वयसः पतमानस्य स्रोतसो वा अनिवर्तिनः |
आत्मा सुखे नियोक्तव्यः सुख भाजः प्रजाः स्मृताः || २-१०५-३१

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.

Slokas Source: valmikiramaan.net

Translated by London swaminathan

 

TAGS: ராமபிரான், விதி, பொன்மொழிகள், அயோத்யா காண்டம்

–SUBHAM–