பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் ! (Post No.3374)

Written by S Nagarajan

 

Date: 21 November 2016

 

Time uploaded in London:5-36 am

 

Post No.3374

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 10

இந்தக் கட்டூரையில் பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி  ஆகிய நூல்களில் வேதம், அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

  பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சியில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்

 

பட்டினப்பாலை

பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாட்டுடைத் தலைவன் பெரும் புகழ் பெற்ற கரிகால் சோழன். திருமாவளவன் என்ற இயற்பெயரைக் கொண்டவன். இதில் உள்ள அடிகள் 301.

பூம்புகாரின் பெருஞ்சிறப்பு அழகுற பட்டினப்பாலையில் விளக்கப்படுகிறது.

அங்குள்ள உழவர் பெருமக்கள் அந்தணர் பெருமையைப் பரப்புகின்றனர். இதை விளக்கமுற நூலில் காணலாம்.

 

நான்மறையோர் புகழ் பரப்பியும் (வரி 202)

 

சங்க காலத்திலேயே நான்கு மறைகளான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் புகழ் பெற்று விளங்கியமையும், அதை ஓதும் அந்தணர்கள் அனைவரிடமும் நன் மதிப்புப் பெற்றவர்கள் என்றும் இதனால் நன்கு தெரிய வருகிறது.

 

மதுரைக் காஞ்சி

பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி இருக்கின்ற பாடல்களிலெல்லாம் மிகப் பெரியது. 783 அடிகளைக் கொண்டது. இதைப் பாடியவர் மாங்குடி மருதனார். பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்.

இளைஞன் தானே என்று அவனைத் தலையாலங்கானத்தில் தாக்க வந்தனர் பகைவர்கள். அவர்களை ஒடுக்கித் தன் ஆற்றலைக் காட்டினான் அவன்.

அவனை வியந்து பாடினார் புலவர்.

மதுரையின் சிறப்பைத் தேர்ந்த தமிழ்ச் சொற்களால் கவினுறு கவிதை வடிவில் படிக்க வேண்டுமெனில் அதற்கென இருக்கும் அழகிய நூல் மதுரைக் காஞ்சியே. சங்க கால் மதுரையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் மாங்குடி மருதனார். இப்புலவரின் சிறப்பு சொல்லி  மாளாது.

மதுரையில் அந்தணர் பள்ளியை விவரிக்கிறார் புலவர் இப்படி :

 

சிறந்த வேதம் விளங்கப் பாடி

விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி

உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்

அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்

பெரியோர் மேஎய் இனிதின் உறையும்

குன்று குயின்றன்ன  அந்தணர் பள்ளியும்                               (வரிகள் 468 முதல் 474 முடிய)

குன்றையே குடைந்து செய்தது போல விளங்குகிறது அந்தணர் பள்ளி. (குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி).

அவர்கள் சிறந்த வேதத்தைப் பொருள் விளங்க ஓதுகின்றனர். (சிறந்த வேதம் விளங்கப் பாடி)

அவர்கள்  மிகச் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். (விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து)

வெவ்வேறு வகையான நிலங்களை உடைய உலகில் அவர்கள் ஒப்பற்றவராக வாழ்கின்றனர் இருந்த இடமான இங்கிருந்தே உயர் நிலை உலகத்தை எய்துபவர்கள் அவர்கள். (நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்)

 

இந்தப் பகுதியை விளக்க வந்த நச்சினார்க்கினியர், அவர்கள் இங்கேயே பிரம்மமாக விளங்குகின்றனர் என்று விளக்குகிறார்.

அவர்கள் அறநெறி வழுவாதவர்கள். அன்புடைய நெஞ்சத்தவர் (அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்)

அவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். எப்பொழுதும் இனிதாக வாழ்கின்றனர் (பெரியோர் மேஎய் இனிதின் உறையும்)

இப்படி அந்தணரின் சிறப்பும் வேதத்தின் சிறப்பும் மாங்குடி மருதனாரால் நன்கு விளக்கப்படுகிறது.

 

இனி மதுரையில் காலைப் பொழுது எப்படி மலர்கிறது என்பதைப் பார்ப்போம். இனிய காலைப் பொழுதை அவர் வர்ணிக்கிறார் இப்படி:

 

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்

தாது உண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாடி (வரிகள்  654 முதல் 656 முடிய)

பொய்கைகளில் போதுக்கள் நல்ல வாசனையோடு மலர்வதால் தேனை உண்ண வரும் வண்டுகள் அங்கு வந்து ரீங்கர்ரம் செய்கின்றன. (போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்

தாது உண் தும்பி போது முரன்றாங்கு)

அப்போது அந்த புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் பாடுகின்றனர்.( ஓதல் அந்தணர் வேதம் பாடி)

 

வேத கீதத்துடன் தினமும் மதுரையின் காலைப் பொழுது மலர்கிறது!

மதுரைக் காஞ்சியில் தொல் முது கடவுள் என்று சிவபிரான குறிப்பிடப்படுகிறார். (வ்ரி 41) அந்த சிவபிரானின் வழியில் வ்ந்த சான்றோன் நெடுஞ்செழியன் என்று புலவர் பிரான் அவனை அடையாளம் காட்டுகிறார்.

அத்துடன் பரந்த பாரத தேசம் ஒன்றே என்பதை விளக்கும் விதமாக

தென் குமரி வட பெருங்கல்

குணகுட க்டலா எல்லை

என்று தேசத்தின் பூகோளப் பரப்பு சுட்டிக் காட்டப் படுகிறது. தெற்கே குமரி (தென் குமரி) வடக்கே பெரிய இமயமலை ( வட பெருங்கல்) கிழக்கிலும்  மேற்கிலும் கடல் இவற்றை எல்லையாகக் கொண்ட நாடு( குண குட க்டலா எல்லை)

 

சிவனே தெய்வம். இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு. ஒரே பண்பாடு. இப்படி சொல்ப்வர் பாண்டியனின் புகழ் பாடும் சங்க காலப் பெரும் புலவர்!

ஆக இமயம் தோன்றிய நாளிலிருந்து வேதமும் அந்தணரும் புகழ் பெற்று இருந்தமை தெரிய வருகிறது.

வாழ்க வேதம்! வாழ்க அந்தணர்! வாழிய பாரத மணித் திருநாடு!

*************

 

.

 

 

சம்பாதி செய்த அற்புதம்: கம்பன் கூறும் செய்தி!! (Post No.3369)

Written by London Swaminathan

 

Date: 19 November 2016

 

Time uploaded in London: 7-23 am

 

Post No.3369

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்பாதி யார்?

கழுகுகளின் அரசன். ஜடாயுவின் அண்ணன்.

 

கம்பராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு அரிய செய்தி வருகிறது. எப்போது?

 

 

ராவணன் வீசிய வாளால் இறக்கைகள் அறுந்து ஜடாயு என்னும் கழுகுகளின் தலைவன் இறக்கிறான். இது கேட்டு ஜடாயுவின் அண்ணனான சம்பாதி அங்கே வருகிறான். அருகேயிருந்த வானரக் கூட்டம் பயந்து ஓடி விடுகிறது. ஆனால் மதியூகியான அனுமன் மட்டும் அங்கேயிருந்து அவனை யார் என வினவ அவன் ஜடாயுவின் தமையன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பின்னர் எல்லா வானரங்களும் வந்து குழுமின.

 

 

எல்லீரும் இராம நாமம் சொல்லீர்!

 

சம்பாதி அங்கே குழுமி இருந்த வானர வீரர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் இராம நாமம் சொல்லுங்கள் அவ்வாறு சொன்னால் என் சிறகுகள் வளரும் அந்த ராமனின் அருளும் எனக்குக் கிட்டும் என்று சொல்லுகிறான்:

 

எல்லீரும் அவ் இராம நாமமே

சொல்லீர் சொல்ல எனக்கோர் சோர்விலா

நல்லீரப் பயன் நண்ணும் நல்ல சொல்

வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர்

 

அதுகேட்ட வானர வீரர்களுக்கு ஒரு சந்தேகம். ராம நாமம் சொன்னால் இறக்கை வளருமா? —  எங்கே நாம் ஆராய்ச்சி செய்து பார்ப்போம். என்று எண்ணி இராமனின் திரு நாமத்தைச் சொல்லத் துவங்கின.. அப்போது சம்பாதியின் இறக்கைகள் வானளாவ வளர்ந்தன.  வலிமையாக பெரிதாக வளர்ந்தன.

 

என்றான் அன்னது காண்டும் யாம் எனா

நின்றார் நின்றுழி நீல மேனியான்

நன்றாம் நாமம் நவின்று நல்கினார்

வன்றோளான் சிறை வானம் தோயவே

 

(சிறை- இறக்கை, சிறகு)

 

எல்லா குரங்குகளுக்கும் ஒரே வியப்பு. சம்பாதி அங்கே வந்தபோது அவனது இறக்கைகள் கருகித் தேய்ந்திருந்தன. இப்போது அவை பளபளவென மின்னத்துவங்கின என்பான் கம்பன்:-

 

இந்தப் பாட்டின் மூலம் கம்பன், நமக்கு வேறு இரண்டு செய்திகளையும் அளிக்கிறான்:-

 

முதல் செய்தி:-

பிற்காலத்தில் இந்த வானர சேனைதான் இராமனுக்காக இலங்கை வரை அணைகட்டித் தரப்போகின்றன. இப்போதே ராம நாமத்தின் மகிமையை அவைகளின் மனதில் வேரூன்ற  வைக்கிறான் சம்பாதி மூலமாக. பிற்காலத்தில் அவை ஒவ்வொரு பாறை  பீதும் இராம, இராம என்று எழுதியவுடன் அவை மிதக்கத்துவங்கி பாலம் எழுந்த்ததை நாம் படிக்கிறோம்.

 

இரண்டாவது செய்தி மனிதர்களுக்கானது.

மானிடர்களே! இராம நாமத்தின் மகிமையை நான் பால காண்டத்திலேயே சொல்லி இருக்கிறேன். ஒருவேளை, மறந்து போயிருந்தால் இராம நாம மகிமையை இப்போது நினைவுபடுத்திக்  கொள்ளுங்கள் என்கிறான்.

 

பால காண்டத்தில் கம்பன் என்ன சொன்னான் நினைவு இருக்கிறதா?

 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

 

****

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

 

 

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜனன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

 

—SUBHAM—

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 17 (Post No.3368)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 19 November 2016

 

Time uploaded in London:6-27 AM

 

Post No.3368

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 17

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 76.

வசந்த காலம் வந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது.

முன்னாள் மஞ்சு வமிசத்தின் வழி வந்த ஒரு கல்வியாளர் டெஞ்சுகானில் வசித்து வந்தார். அவர் பெயர் டிங்.

அவருக்கு மண்மாகாத கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு வயது 18.

ஒரு நாள் திடீரென்று அவள் மயங்கி விழுந்தாள். குடும்பத்தினருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அவளுக்கு நினைவு திரும்பியபோது விசித்திரமான ஆண்குரலில் அவள் பேச ஆரம்பித்தாள்.

அவள் தனது தந்தையை நோக்கி, “ ஏ, டிங், உனது செல்வாக்கின் காரணமாக என்னை அநியாயமாகக் கொள்ளைக்காரன் என்று குற்றம் சுமத்திச் சாக அடித்தாய்! டாலியில் நான் வாழ்ந்து வந்தது உனக்கு நினைவிருக்கிறதா? நான் உன்னை மரண தேவனிடம் குற்றம் சுமத்தியுள்ளேன். எட்டு வருடங்களுக்கு  முன்னால் நீ இழைத்த கொடுமைக்காகப் பழி வாங்க இப்போது இங்கு வந்துள்ளேன்!” என்றாள்.

பின்னர் ஒரு கோடாலியை எடுத்துக் கொண்டு தந்தையைத் துரத்த ஆரம்பித்தாள்.

பயந்து போன டிங் வெளியில் ஓடி ஒளிந்து கொண்டார். வீட்டிற்கே திரும்பி வரவில்லை.

ஒவ்வொரு நாளும் அந்த ஆவி அவள் மீது ஆவிர்பித்தவுடன் அவள் போக்கே மாற ஆரம்பித்தது.

வீட்டில் உள்ள எல்லோரும் பயந்தனர். அண்டை அயலாரும் கூட தொந்தரவுக்குள்ளாயினர்.

அப்போது காக்ஃபுட் மவுண்டனிலிருந்து சூ சி மற்றும் சூ கின் என்ற இரண்டு பிட்சுக்கள் டெங்சுவானுக்கு வந்திருந்தனர். அவர்கள் டிங்கின் வீட்டின் பக்கமாகச் சென்ற போது அங்கே ஒரே கூட்டமாகக் குழுமி இருந்ததைக் கண்டு என்ன விஷயம் என்று விசாரித்தனர்.

 

அந்தப் பெண் அப்போது ஆவியினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

இரண்டு பிட்சுக்களும் ஆவியிடம் சென்று, “நீ இப்படி தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றனர்.

அந்த ஆவியோ, “ நீங்கள் துறவிகள். அடுத்தவர்கள் விஷயத்தில் அனாவசிய்மாக நீங்கள் தலையிடக் கூடாது” என்றது.

ஒரு துறவி கூறினார்: “உண்மை தான்! இது எனக்குச் சற்றும் சம்பந்தமில்லாத விஷயம் தான். ஆனால் என் குரு எப்போதுமே சொல்லி இருக்கிறார்- பகைக்குப் பகை என்பது எப்போதுமே நல்லதில்லை என்று! அதை உட்னடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இன்னும் எல்லாம் மோசமாகி விடும்!”

அந்த ஆவி சற்று யோசித்தது. பின்னர் கேட்டது: “உங்கள் குரு யார்?”

‘சூ செங் மடாலயத்தைச் சேர்ந்த ஸு யுன் தான் எங்கள் குரு”

“அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. அவர் என்னைக் கடைத்தேற்றுவாரா?”

“அவர் எல்லோர் மீதும்  மிகுந்த தயை உள்ளவர். எல்லோரையும் க்டைத்தேற்றுவது என்ற சங்கல்பம் பூண்டவர். உனது வேண்டுகோளை அவர் எப்படி மறுப்பார்?”

அந்தத் துறவி டிங்கை சிறிது பணம் செலவழித்து அந்த ஆவிக்காக பிரார்த்தனை செய்து அதை விடுவிக்குமாறு அறிவுரை கூறினார்.

ஆனால் அந்தப் பெண்ணோ, “டிங்கின் பணம் எனக்குத் தேவை இல்லை. அவன் ஒரு கொலைகாரன்” என்றாள்.

“சரி! இந்த நகரத்து மக்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து உன்னை விடுவிக்க முயன்றால் அது தப்பாகாதே” என்றார் பிட்சு.

 

அந்தப் பெண் கோபமான குரலில் கூவினாள் :”இந்த எனது துக்கம் தீர்க்கப்படவில்லையானால் நான் திருப்தி அடையவே மாட்டேன். ஆனால் பகைக்கு பகை என்பது தொடர்ந்து நீண்டு கொண்டே தான் இருக்கும். ஆகவே நான் மரண தேவனிடம் என்ன செய்வது என்று கேட்டு வருகிறேன். சில நிமிடங்கள் பொறுமையாக இருங்கள்”

அந்தப் பெண் குழுமியிருந்த கூட்டத்தினரைக் கண்டு சற்று வெட்கம் அடைந்தாள்.

மறு நாள் மீண்டும் வந்த அந்த ஆவி பிட்சுக்கள் காத்திருக்காமல் சென்று விட்டதைச் சொல்லி வருத்தப்பட்டது

பிட்சுக்கள் வருத்தம் தெரிவித்து தாங்கள் நகர அலுவலகத்திற்குச் சென்று தங்கள் வேலையை முடிக்க வேண்டியிருந்தது என்று விளக்கினர்.

ஆவி கூறியது: “நான் மரணதேவனிடம் ஆலோசனை கேட்டேன். சூ ஷெங் மடாலயம் புனிதமான் இடம் என்றும் அங்கு நான் செல்லலாம் என்று மரண தேவதை கூறியது. ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் என் கூட வரவேண்டும்”

அந்தப் பெண்ணுடன் துறவிகள் இருவரும் காக்ஃபுட் மவுண்டனுக்குத் திரும்பினர்.

கூடவே பத்துப் பேர்களும் வந்தனர். அவர்கள் நடந்தது அனைத்தையும் ஸு யுன்னுக்கு விளக்கினர்.

மறு நாள் ஒரு பெரிய பீடம் ஒன்று எழுப்பப்பட்டது. விசேஷமாக சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.

அந்த ஆவி கடைத்தேற பிரார்த்தனை செய்யப்பட்டது.

அந்த ஆவியும் திருப்தியுற்று அகன்றது.

அன்று முதல் டிங்கின் வீட்டில் அமைதி திரும்பியது.

இதைத் தொடர்ந்து அந்த நகரத்து மக்களுக்கு இந்தச் செய்தி பரவ அவர்கள் அனைவரும் அடிக்கடி ம்டாலயத்திற்கு வர ஆர்மபித்தனர். ஸு யுன்னைத் தரிசிக்க ஆரம்பித்தனர்.

***************

 

ஆற்றுப்படைகளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3364)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 November 2016

 

Time uploaded in London:5-53 AM

 

Post No.3364

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 9

 

இந்தக் கட்டூரையில் பெரும்பாணாற்றுப்படை மற்றும் சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் வேதம் அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படையில்

 

அந்தணரும் வேதமும் !

 

                        ச.நாகராஜன்

                            

பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,, கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.

 

ஆறு என்றால் வழி; படை என்றால் படுத்தல்.

 

குறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி  நெறிப்படுத்துவதே ஆற்றுப்படையாக அமைகிறது.

 

இந்த வழியில் சென்று இந்த தலைவனை அடைந்தால் நல்ல நன்கொடை பெறலாம் என புலவர் அறிவுறுத்தும் பாடலே ஆற்றுப்படையாக மலர்கிறது.

 

இந்த வகையில் பெரும்பாணாற்றுப்படையைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

 

பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.

500 அடிகள் கொண்டது பெரும்பாணாற்றுப்படை..

 

 

வறுமையான இசைக் குடும்பம் ஒன்று. அதன் தலைவனை விளிக்கும் புலவர் காஞ்சியை ஆண்டு வந்த  தொண்டைமான் இளந்திரையனை அடையும் வழியை விவரிக்கிறார்.

அந்த விவரணத்தில் நாம் பெறுவது அழகிய சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை!

 

காட்டின் வழியே சென்றால் காண்பது என்ன என்பதை விவரிக்கும் புலவர் அடுத்து பாலை வழி, முலலை நிலம் வழி,மருத நிலம் வழி ஆகியவற்றை விவரிக்கிறார்.

இதை அடுத்து வருவது அந்தணர் குடியிருப்பு.

 

அங்கே சிறிய  பந்தலில் கன்றைக் கட்டி இருப்பர். வீட்டின் முற்றமோ பசுஞ்சாணம் இடப்பட்டு மெழுகப்பட்டிருக்கும்.

அங்கு கோழியோ நாயோ வராது. அங்குள்ள பசுங்கிளிகள் வேத பாராயணம் செய்யும். அந்த வீட்டில் இருக்கும் பிராம்மணப் பெண்மணி அருந்ததி போன்ற கற்புடையவள்.

அங்கு சென்றால் நல்ல அரிசிச் சோறும், நல்ல மோரும், கொம்மட்டி மாதுளங்காயின் துண்டுகளை மிளகோடு கறிவேப்பிலல கலந்து மாவடுவோடு பெறுவீர்கள் என்று விவரமாகக் கூறுகிறார் புலவர்.

 

 

கவனிக்கவும்: அங்கே போனால், அது பிராம்மணரின் வீடு. உள்ளே விட மாட்டார்கள். ஒன்றும் கிடைக்காது என்று சொல்லவில்லை.

மாறாக வேதம் சொல்லும் கிளிகள் சூழ பசுஞ்சாணம் மெழுகிடப்பட்ட அழகிய இடத்தில் அரிசிச் சோறும் மோரும், மாதுளங்காய் கறி மற்றும் மாவடுவும் அந்தணர் தருவர் என்கிறார் புலவர்..

என்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. என்ன ஒரு அன்பு.

பாடல் வரிகளைப் பார்ப்போம்:,

 

செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல்நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும்
மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின்
பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்
வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்
சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து
கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்
நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த                                                                 தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் (வரிகள் 297-310)

செழுங்கன்று யாத்த – கொழுத்த கன்றுகள் கட்டப்பட்ட

சிறுதாள் பந்தர் – கால்கள் நடப்பட்ட பந்தல்

பைஞ்சேறு மெழுகிய – பசுஞ்சாணத்தினால் மெழுகிடப்பட்ட          படிவ நல்நகர் – பலவித சடங்குகள் நடக்கும் வீடு

உறி கோழியொடு ஞமலி துன்னாது – கோழி, நாய் அங்கு அண்டாது                                                          வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த மூக்குகள் கொண்ட கிளிகள் வேத பாராயணம் செய்யும்             மறை காப்பாளர் – வேதங்களைக் காத்து வரும் அந்தணர் உறைபதி சேப்பின் – (அவர்கள்) உறையும் இல்லம் சென்றால் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் –  வானத்தின் வடக்கே திகழும் அழகிய சிறு நட்சத்திரமான அருந்ததி போல

நறுநுதல் வளைக்கை மகடூஉ – நல்ல நெற்றியை உடைய வளையல்களை அணிந்த பெண்கள் இருப்பர்                    வயின் அறிந்து அட்ட – மிக நன்றாக சமைக்கப்பட்ட

சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம் – சூரியாஸ்தமனத்தில் உள்ள பறவையின் பெயர் கொண்ட பிரமாதமான உணவு (அரிசிச் சோறு)

 

 

சேதா நறுமோர் வெண்ணெயின் – பசுவினிடமிருந்து பெறப்பட்ட நறுமணமுடைய வெண்ணெயுடன் கடைந்தெடுக்கப்பட நறுமோர் மாதுளத்து உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – மாதுளங்காயை சுட வைத்துத் துண்டுகளாக்கி மிளகு தூவப்பட்ட கறியுடன்

கஞ்சக நறுமுறி அளை இ –  நறுமணமுடைய கறிவேப்பிலை கலந்த

பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த – புதிய பெரிய மாமரத்தினின்று எடுக்கப்பட்ட மாவடு                     விதிர்த்த – கலக்கப்பட்ட

தகைமாண் காடியின் – அருமையான ஊறுகாயுடன் கூட

வகைபடப் பெறுகுவீர் – பல வித வகை உணவைப் பெறுவீர்!

 

 

காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லாத ஒரு சமுதாயம். அந்தணரும் இசைக் குடும்பமும் இணைந்து உண்ணும் ஒரு அருமையான விருந்துச் சாப்பாடு!

 

அடுத்து 315, 316 அடிகளில் அந்தணரும் வேள்வியும் உரைக்கப்படுகிறது.

 

நீர்ப்பெயற்று என்று ஒரு ஊர். அந்த ஊரின் சிறப்போ சொல்லி  மாளாது. அங்குள்ள பெண்டிர் தங்களுக்குத் தெரிந்த நட்புடன் அதிகாலை நேரத்தில் நீரில் விளையாடுகின்றனர். அவர்கள் தங்களது தங்கக் காதணிகளை கரையிலே கழட்டி வைக்க அவ்ற்றை மீனொன்று தன் உணவென எடுத்து  தனியே பறவைகள் நிறைந்துள்ள் பனைமரம் அருகே செல்லாது வேதம் சொல்லும் அந்தணர்கள் யாகம் இயற்றும் வேள்வித் தூணத்து அருகில் கொண்டு வைக்கிறது.

 

 

 கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ         (வரிகள் 315-316)

 

 

எத்தகைய அற்புதமான நடைமுறை வாழ்க்கைச் சித்திரம். வேதத்தின் பெருமையும் அதை உரைக்கும் அந்தணரின் வாழ்க்கையும் விருந்தோம்பும் பண்பும் மாண்புறச் சித்தரிக்கப்படுகிறது!

 

சிறுபாணாற்றுப்படை

 

அடுத்து சிறுபாணாற்றுப்படையில் வரும் வரிகளைக் காண்போம்:

இது தொண்டை நாட்டு ஓவியர் குடியில் பிறந்த (ஒய்மான் நாட்டு) நல்லியக் கோடன் மேல் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்.

 

 

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன

அடையா வாயில்    (வரிகள் 204,205,206)

 

நல்லியக்கோடனின் அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் மூடப்படாத வாயில். அருமறையை நாவிலே கொண்டிருக்கும் அந்தணர்க்கும் கடவுளின் உயர் மலை கண் திறந்து இருத்தாற்போல மூடப்படாத வாயிலாகும்

 

ஆக சிறப்புடை ஒரு தலைவனுக்கு உள்ள நல்லிணக்கணத்தில் அந்தணரை அவன் வரவேற்று உபசரிப்பதும் ஒன்று என்பது இதிலிருந்து பெறப்படுகிறது! இந்த இரு ஆற்றுப்படை நூல்களிலும் அந்தணரும் அவர் நாவில் உச்சரிக்கும் வேதமும் பற்றிய அருமையான கருத்துக்கள் இடம் பெறுவதைக் காண்கிறோம்; சங்க காலத்தில் வேதம் மற்றும் அந்தணருக்கான சிறப்பான இடம் பற்றி அறிகிறோம்!

******

 

 

 

கம்பனில்,திருவாசகத்தில் ‘இயம் சீதா மம சுதா’! (Post No.3350)

Written by London Swaminathan

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 14-15

 

Post No.3350

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

இயம் சீதா மம சுதா

“இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள் கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல் போல தொடர்ந்து வரட்டும்” — என்று ஜனக மகாராஜன் சொன்ன சொற்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது பிற்காலத்தில், மகளைக் கொடுக்கும் எல்லா தந்தையரும் சொல்லும்  சொற்களாக, வாக்கியமாக மாறிவிட்டது.

இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!, ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம், க்ருண் ஹீஷ்வ பாணிநா”– பால காண்டம், வால்மீகி ராமாயணம்.

 

Siva and Uma kalyan

திருவாசகத்தில்

 

மாணிக்க வாசகரும் கூட இந்தச் சொற்ளை அப்படியே பயன்படுத்தியுள்ளர். அவருக்குப் பின்னர் வந்த கம்பன், பயன்படுத்தியதில் வியப்பில்லை. ஏனெனில் அவரே தான் வால்மீகி யைப் பின்பற்றி ராமாயணத்தை இயற்றியதாகக் கூறுகிறார்.

 

திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவெம்பாவையில் வரும் பாடல் இதோ:-

உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப் போங்ககேள்

 

-திருவெம்பாவை, 19

மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி (POSTED ON 15TH JANUARY 2012) என்ற எனது பழைய கற்பனைப் பேட்டியிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்

 

 

Siva and Parvati wedding, Ellora

கம்ப ராமாயணத்தில்

 

கம்பனும் இதை ராமன் வாயிலாக வெளிப்படுத்துகிறான் (கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம்)

 

நெய்யடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்

கைய்யடை என்ற அச் சனகன் கட்டுரை

பொய்யடை ஆக்கிய பொறி இலேனொடு

மெய்யடையாது இனி விளிதல் நன்றரோ

 

பொருள்:-

இராமன், இலக்குவனை நோக்கிச் சொன்னது:– நெய்வார்த்து உண்டாக்கப்பட்ட ஹோமத்தீயின்   முன்னால், சீதையைக் கொண்டுவந்து நிறுத்தி, இவள் உனக்கு அடைக்கலம் என்று என்னிடம் ஜனகன் கூறினான். அந்த சொற்களை இன்று பொய்யாக்கிவிட்டேனே. இனிமேல் நான் இதை மெய்யாக்க முடியாது. ஆகையால் நான் இறப்பதே மேல்.

 

இன்றும் கூடப் பெண்களைத் திருமணம் செய்து கொடுபோர், “ இனி இது உங்கள் வீட்டுப் (பெண்) பிள்ளை; உங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டாள்; கண்மணி போலக் காப்பாற்றுஙள்” -என்று சொல்லி (ஆனந்தக்) கண்ணீர் விடுவதைக் காணலாம்.

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜனகன் சொன்ன அந்த சத்திய வாக்கியம் “இயம் சீதா மம சுதா” — காலத்தால் என்றும் அழியாத கல்லெழுத்து ஆகிவிட்டது. இவள் உன்னை நிழல் போலப் பிந்தொடர்வாள் — என்று ஜனகன் சொன்ன சொல்லும் உண்மையானது. கானகம் என்பது கொடிய விலங்குகள் வாழும் இடம் என்ற போதும் அவன் பின்னால் நிழல் போலப் போனாளே அந்தப் பெண்ணரசி! ஒவ்வொரு கட்டத்திலும் யாரும் எதிர்பாராத அளவுக்கு நல்ல செயல்களைத் துணிந்து செய்த கதா பாத்திரங்களினால் என்றும் அழியாத காவியம் ஆகிவிட்டது இராமாயணம்!

 

–subham–

 

 

 

மீண்டும் திறக்கப்பட்ட ஏசு கிறிஸ்துவின் கல்லறை! (Post No3345)

புனித கல்லறை, ஜெருசலம்

 

WRITTEN by S NAGARAJAN

 

Date: 12 November 2016

 

Time uploaded in London: 4-59 AM

 

Post No.3345

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

 

பல  நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட ஏசு

 

கிறிஸ்துவின் கல்லறை!

 

ச.நாகராஜன்

 

புனிதர் ஏசு கிறிஸ்துவின் கல்லறை கி.பி.1555ஆம் ஆண்டுக்கு முன்னரே அதன் மூடப்பட்ட ஒரிஜினல் கல்லின் மீது புதிதாகச்  சலவைக் கற்கள் வைக்கப்பட்டு மூடப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி.

 

ஏசு கல்லறை,ஜெருசலம்

 

இந்தப் புனிதமான கல்லறையைப் பாதுகாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீஸ் நாட்டில் ஏதன்ஸ் நகரில் உள்ள நேஷனல் டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனித ஸ்தலத்தின் உட்பகுதிகளை அணுக வேண்டியது அவசியம் எனத் தீர்மானித்தனர். நேஷனல் ஜியாகிராபிக் சொஸைடியைச் சேர்ந்த ஃப்ரெடெரிக்  ஹைபெர்ட், “எங்களுக்குத் தெரிந்த வரையில் நாங்களே முதன்முறையாக இதைத் திறந்து பார்க்கப் போகிறோம்” என்று அறிவித்தார்.

 

 

பழைய புராணங்களை ஆய்கின்ற வரலாற்று ஆய்வாளர்கள், ஏசு உண்மையில் வாழ்ந்த ஒரு புனிதரே என்று சொல்வதோடு அவர் கி.பி. முதல் ஆண்டில் இப்போது பாலஸ்தீனம என்று அழைக்கப்படும் பெத்லஹேமில் பிறந்தார் என்றும் இஸ்ரேலில் உள்ள நாசரேத்திற்குப் பின்னர் சென்றதாகவும் கி.பி, 29ஆம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்ததாகவும் உறுதி படக் கூறுகின்றனர்.

ஹிப்ரூ பைபிளின் படி ஏசு ஒரு குகையில் கல் மேடை ஒன்றில் வைக்கப்பட்டு கற்களினால் மூடப்பட்டார்.

 

கான்ஸ்டண்டைன் என்ற முதல் கிறிஸ்தவ சக்கரவர்த்தி கி.பி, 326இல் தனது தாயான ஹெலினாவை தனது பிரதிநிதியாக ஜெருசலத்திற்கு அனுப்பினார். அங்குள்ளோர் ஒரு குகையைக் காண்பித்து இங்கு தான் ஏசுவின் கல்லறை உள்ளது என்று அவரிடம் குறிப்பிட்டனர். உடனே அந்தக் குகையில் ஒரு புனித

ஸ்தலத்தை கான்ஸ்டண்டைன் நிர்மாணித்தார். குகையின் மேல் மூடி அகற்றப்பட்டது. அங்கு வருகை புரிவோர் குனிந்து கீழே பார்க்கும் வண்ணம் அந்த புனித ஸ்தலம் அமைக்கப்பட்டது. அது ஹோலி எடிக்யூல் (Holy Edicule) என்று அழைக்கப்படலாயிற்று.

ஆயிரத்தி எண்ணூறுகளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தால் அதை  மீண்டும் புனருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதை மூன்று சர்ச்சுகளின் அமைப்புகள் கூட்டாக இப்போது நிர்வகித்து வருகின்றன..

 

Picture of Holy Edicule in Jerusalem

1958இல் இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரு மனதாக இதை உரிய முறையில் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்று தீர்மானித்தன. என்றபோதும் ஐம்பது ஆண்டுகள் கழிந்த பின்னரே இதை எப்படிச் செய்வது என்றும் இதற்கு எப்படி நிதி திரட்டுவது என்றும் தீர்மானித்தன. இதற்கு ஆகும் செலவு சுமார் 40 லட்சம் டாலர்கள் ஆகும்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் இரும்புக் கம்பிகளால் ஒரு தடுப்பு இங்கு அமைக்கப்பட்டது.

 

இதை உரிய முறையில் சீரமைக்கத் தீர்மானித்த புனரமைப்புக் குழுவினர் முதலில் 19ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக் கற்களை அகற்றினர். பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சலவைக்கற்களையும் அகற்றினர். அப்போது அவர்கள் கண்டது 12ஆம் நூற்றாண்டில் மூடப்பட்ட சலவைக் கற்களை. அவற்றையும் அகற்றிய பின்னர் முதன் முதலில் நிறுவப்பட்டிருந்த கல்லைக் கண்டனர்.

 

 

“இங்கு உள்ளே இருப்பதை ஆய்வு செய்வது எங்கள் நோக்கமல்ல. ஒரு டி என் ஏ (DNA) சோதனையும் நடைபெறாது வேறு எந்த ஒரு ஆய்வும் செய்யப்பட மாட்டாது” என்று உறுதிபடக் கூறிய குழுவினர் இது ஆய்வுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றனர்.

 

‘கடந்த பல நூற்றாண்டுகளாகப் புனிதமாகக் கருதப்பட்ட இந்த ஸ்தலத்தில் எந்த ஒரு ஆய்வும் எந்த  ஒரு புதிய விஷயத்தையும் தரப் போவதில்லை. இந்தத் திட்டதின் மூலமாக நீங்கள் குனிந்து பார்த்து, இது வரை பார்க்க முடியாம்ல இருந்த, முன்னர் அமைக்கப்பட்டிருந்த பழைய இடத்தை இப்போது நன்கு பார்க்க முடியும்’ என்கின்றனர் இதைப் பராமரிக்க இருக்கும் குழுவினர்.

 

ஏசுபிரானின் ஒரிஜினல் கல்லறை திறக்கப்பட்டதையொட்டி

உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த புனித ஸ்தலம் பற்றிய செய்தியே இப்போது பரபரப்பாகப் பேசப்படும் இன்றைய செய்தி!                  ஆதாரம் : லைவ் ஸயின்ஸ்

***********

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் – 4 (Post No.3339)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 10  November 2016

 

Time uploaded in London: 6-09 AM

 

Post No.3339

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 6 மற்றும் 122 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 4

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் புறநானூற்றின் 6வது பாடலாக அமைகிறது.

பாடலின் முதல் நான்கு அடிகளே பாரத தேச ஒருமைப்பாட்டை நன்கு விளக்குகிறது.

 

 

வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.

தெற்கிலோ உருகெழு குமரி முனை

கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்!

 

வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்”                                               (1 முதல் 4 வரிகள்)

 

அடுத்து புலவர் மன்னனின் தலை யாருக்கு மட்டும் தாழலாம் என்பதைக் குறிப்பிடுகிறார் இப்படி:-

 

 

அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே
வாடுக”
(வரிகள் 17 முதல் 21 முடிய)]

 

உனது குடை மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்;(முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே அத்தை நின் குடையே)  நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும்! (நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே இறைஞ்சுக)

 

 

சிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது!

என்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு!

வேள்வி பல நடத்திப் பெரும் புகழ் கொண்ட பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் போற்றிய அருமையான இப்பாடலில் சங்க காலச் சூழ்நிலை தெளிவாகத் தெரிகிறது.

 

 

அடுத்து பாடல் எண் 122ஐப் பார்ப்போம். இதைப் பாடியவர் கபிலர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் மலையமான் திருமுடிக்காரி.

காரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.

.இப்பாடலில் புலவர், காரியின் நாடு அக்கினி வளர்த்து யாகம் செய்யும் அந்தணரின் நாடு என்று சொல்கிறார்.தன் நாட்டையே ஈந்து உவந்த பெரும் வள்ளல் காரி என்பது இதனால் பெறப் படுகிறது!

 

நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே (வரிகள் 2  மற்றும் 3)

 

அடுத்து உன்னுடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்டு அதற்கு பதிலையும் தருகிறார் இப்படி: நின் மனைவி வடமீனான அருந்ததி அன்ன கற்புடையாள். மிக மிருதுவாகப் பேசும் இயல்பினள் (வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை). அவளது தோள் அல்லாது வேறு எதையும் உன்னுடையது என்று நினைக்காதவன் நீ; அதனாலேயே நீ பெரியோனாகிறாய்! (தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே)

 

 

வட மீன் புரையுங் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே. (வரிகள் 8 முதல் 10 முடிய)

 

 

பத்தே வரிகள் கொண்ட பாடலில் மனதை நெகிழ வைக்கிறார் கபிலர். உருக வைக்கும் சொற்கள். உன்னதமான கருத்துக்கள்!

கற்பில் அருந்ததி போன்ற மனைவியைத் தவிர வேறு எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாத மாமன்னன் காரியைப் போல உலகம் கண்டதுண்டா!

 

 

பெரும் ஈகையாளன் காரியைப் போல் வேறு ஒரு மன்னனைக் காண முடியுமா?

 

நாட்டையே அந்தணருக்கு ஈந்த் காரியின் பெருங்கொடை ஒரு புறம் இருக்க அதற்குத் தகுதியான பாத்திரமாகத் திகழ்ந்த அந்தணரின் புகழ் குறைவானதா என்ன?

 

அருந்ததி என்று சொல்லப்படும் கற்பில் சிறந்த ரிஷி பத்தினியை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் மணமகளுக்குக் காட்டுவது வழக்கம். வசிஷ்டர் – அருந்ததி போல வாழ்வோம் என்பது அவர்கள் அந்தச் சமயத்தில் எடுக்கும் உறுதி மொழி!

 

இப்படிப் பண்பாட்டாலும், சடங்காலும், வேத மந்திரத்தாலும், அதற்கு உரிய தெய்வத்தாலும் ஒன்றாக இணைந்த ஒரு உயரிய தேசத்தையே சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. சொற்களை அனுபவித்துப் படிக்க புறநானூறு நூலை எடுப்போம்! நாமே படிப்போம்!! தீய அர்த்தம் தரும் உரைகளைத் தீயில் போடுவோம்!!!

**********

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 16 (Post No.3335)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 9  November 2016

 

Time uploaded in London: 5-26 AM

 

Post No.3335

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 16

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 73.

 

யூனானுக்கு வந்த பின்னர் ஸு யுன் புத்த சங்கத்தை (Buddhist’s Association) விரிவு படுத்தலானார். ஏராளமான கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன.  தொலைதூரங்களிலிருந்து லாமாக்கள் அவரைப் பார்க்க வர ஆரம்பித்தனர். புத்த தர்மத்தின் சார்பில் பள்ளிகளும், மருத்துவ மனைகளும் ஆரம்பிக்கப்ப்ட்டன.

ஒரு விசித்திரமான சம்பவமும் நடைபெற்றது. புத்த சங்கத்திற்கு ஒரு கிராமத்தான் நன்கொடையாக ஒரு அண்ட்ங்காக்கையை அளித்தான்.

 

 

அது பறக்க முடியாத நொண்டிப் பறவை. முதலில் அதன் வழக்கப்படி அது மாமிச உணவை உண்டது. ஆனால் அமிதாப புத்தரின் நாமம் இடைவிடாது ஒலிப்பதைக் கேட்டவுடன் அதுவும் புத்த நாமத்தைச் சொல்லத்  தொடங்கியது. அதிலிருந்து மாமிச உணவு சாப்பிடுவதை அறவே நிறுத்தி விட்டது.

நாள் முழுவதும் புத்த நாமத்தை அது சொல்லிக் கொண்டே இருந்தது.

 

 

ஒரு நாள் அதை ஒரு பருந்து தூக்கிச் சென்றது. மேலே பறக்கும் போது கூட அது தீவிரமாக புத்தரின் நாமத்தைக் கூவிக் கொண்டிருந்தது.

 

சாதாரண ஒரு பறவை. ஆபத்துக் காலத்தில் புத்தரின் நாமத்தை அது கூவிக் கொண்டிருந்தது. ஆறறிவு படைத்த மனிதர்கள் அந்தப் பறவையை விட இழிந்தவர்களா? ஏன் அவர்கள் புத்த நாமத்தைச் சொல்லுவதில்லை? ஸு யுன் இப்படி சிந்திக்கலானார்!

ஸு யுன்னுக்கு இப்போது வயது 74.

 

 

புத்த சங்கத்தின் விரிவாக்க வேலைகள் யூனானில் ஜரூராக நடைபெற்று வந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த லோ யுங் ஜியான் என்ற அதிகாரி எதையும் செய்ய விடாமல் ஏதாவது தடைகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். கவர்னர் கெய் ஓ புத்த சங்கத்திற்கு ஆதரவாக அவ்வப்போது தலையிட வேண்டியிருந்தது.

ஸு யுன்னை அனைவரும் சந்தித்தனர்.. உடனே பீஜிங்கிற்கு சென்று இந்த விஷயத்தை சரி செய்யுங்கள் என்று கோரிக்கை வரவே ஸு யுன் பீஜிங் சென்றார். அங்கு பிரதம மந்திரி ஜியாங் ஜி லிங்கைச் சந்தித்து விவரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்.

 

 

உடனடியாக அவர் லோ யுங் ஜியானை பீஜிங்கிற்கு மாற்றி அங்கு வந்து சேருமாறு உத்தரவிட்டார். பிரச்சினை தீர்ந்தது. அவருக்குப் பதிலாக ரென் கி க்விங் சிவில் கவர்னராக யூனானுக்கு நியமிக்கப்பட்டார். ரென்னோ மிக நல்லவர். புத்த தர்மத்தின் பால் அதிக பற்றும் பக்தியும் கொண்டவர். தனது நல்லாதரவை அவர் நல்கி வரவே அனைத்தும் சுமுகமானது.

.

ஸு யுன்னுக்கு இப்போது வயது 75.

ஸு யுன் காக் ஃபுட் மவுண்டனுக்குத் திரும்பத் தீர்மானித்தார். புத்த சங்கத்தின் நிர்வாக வேலைகளை கமிட்டியிடம் ஒப்படைத்தார். அங்கு திரும்பிய அவர் மடாலய வேலைகளையும் புனருத்தாரண வேலைகளையும் செய்யலானார்.

அந்த வருடம் ஒரு துக்ககரமான சம்பவம் நிகழ்ந்தது. ஸு யுன் அப்போது லாங் ஹுவா மவுண்டனில் தங்கியிருந்தார்.

திடீரென  ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் அடியோடு இடிந்து தரைமட்டமாயின. தப்பித்தது  யூ பாவோ மடாலயம்  மட்டும் தான்!

 

 

பூமி இரண்டாகப் பிளக்கவே அங்கிருந்தோர் அதனுள் விழுங்கப்பட்டனர். தப்பித்து மேலே வரும் போது பூமி மூடியது. ஆகவே அவர்கள் உடல்கள் சிதைந்து போயின. சிலரின் தலைகள் மட்டும் கோரமாக பூமியின் மேல் காணப்பட்டன.

சொல்லமுடியாத இந்தத் துயரத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்.

 

 

அந்த சம்பவம் நடந்த போது அதிச்யம் ஒன்றும் நடைபெற்றது. அங்கு ஜில்டிங் ஷாப் என்று ஒரு கடை இருந்தது. அதை  மட்டும் பூகம்பம் ஒன்றும் செய்யவில்லை. அதை நடத்தி வந்தவர் பரம்பரை பரம்பரையாக புத்த தர்மத்தில் ஈடுபட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்.

 

அவரது இரண்டு குடும்பங்களில் தலா பத்து பேர் இருந்தனர். யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவர்களது தர்மப் பணியே அவர்களைக் காப்பாற்றியது என்பதை அறிந்த ஸு யுன் பெரிதும் மகிழ்ந்தார்.

 

பெரிய சோகத்தில் ஒரு சின்ன ஆறுதல்!

நாட்கள் நகரலாயின!

– தொடரும்.

.

 

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 3 (Post No.3331)

Picture of a Brahmin from a German book

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8  November 2016

 

Time uploaded in London: 5-16 AM

 

Post No.3331

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 6

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 224,361,362,400 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 3

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு சோழ மன்னன் கரிகாலன். இவனது அறிவுத் திறனும் சிறு வயதிலேயே நீதியை நிலை நாட்டிய நிகழ்வும் தமிழ் வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்கபட்டவை.

இவனைப் புகழ்ந்து கருங்குழல் ஆதனார் பாடிய பாடல் 224ஆம் பாடலாக புறநானூற்றில் இடம் பெறுகிறது. மன்னன் கரிகாலன் வேள்விகளை இயற்றி வேதமுறைப்படி அரசாண்டதை நினைவு கூர்கிறார் புலவர்.

பாடல் வரிகள் இதோ:

பருதி உருவின் பல் படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்  (வரிகள் 7 முதல் 9 முடிய)

 

சூரியனைப் போன்ற வட்ட வடிவமான (பருதி உருவின்) பல சுவர்களை அமைத்து (பல் படைப் புரிசை) பருந்துகள் நுகரும்படியான (எருவை நுகர்ச்சி) பல யூபத் தூண்களை நாட்டி (யூப நெடுந்தூண்) வேதம் அறைந்த வழியில் வேள்விகளைச் செய்தவன் (வேத வேள்வித் தொழில்  முடித்ததூஉம்) என்று புலவர் இவனைப் புகழ்கிறார்.

தூய்மையான மகளிர் சுற்றி இருத்தல், அறநெறி வழுவாத நடுநிலைமையுடன் கூடிய நீதி வழங்கு நெறிமுறை கொண்டிருத்தல், வேத வேள்வியை இயற்றுதல் ஆகியவை கொண்டவன் என புலவர் சொல்வதால் சங்க கால மக்களின் வாழ்வில்  மிகுந்த மேன்மையுடையவை என கற்பு, நீதி, வேத முறை ஆகியவை போற்றப்பட்டதை அறியலாம். வேள்வியை முறைப்படி செய்து முடிக்கும் அந்தணரும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றனர்.

 

அடுத்து 361, 362 ஆகிய இரு பாட்லகளைப் பார்ப்போம். க்யமனார் என்னும் புலவர் பாடிய பாடலாக இடம் பெறுகிறது பாடல் எண் 361.

பாட்டுடைத் தலைவன் யாரெனத் தெரியாவிட்டாலும் கூட, அவன் கூற்றுவனுக்கு அஞ்சா நல்லவன் என்பது புரிகிறது. அவன் தாயின் நல்லன்.

வேத வேள்வியைச் செய்யும் கேள்வி முற்றிய அந்தணருக்கு  தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப்படி கையில் நீர் வார்த்து ஏராளமான பொன்குவியலை அள்ளிக் கொடுத்தவன். அவன் பெருமையை அள்ளித் தெளிக்கிறார் இந்தப் பாடலில் பெரும் புலவர்.

நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகை (வரிகள் 3 முதல் 5 முடிய)

 

அடுத்து வரும் 362ஆம் பாடலைப் பாடியவர் சிறுவெண் தேரையார்.

பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ர்ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். (சந்திரனைப் போன்று திகழும் முத்து மாலை மார்பில் அணிந்தவன்.)

பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்: .

 

தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப    (வரிகள் 8 முதல் 12 முடிய)

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அதாவது materialism குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று.

அடுத்து வரும் வரி அற்புதமான வரி!

Brahmin doing Pranayama (Breathing exercise)

மருள் தீர மயக்கம் ஒழிய அந்தத் தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப”

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அடேயப்பா!எத்துணை பேருக்கு அவன் நீர் வார்த்திருந்தால் ஒரு கடல் உருவாகி இருக்கும்.!

தமிழர்களின் நெஞ்சங்களில் வேரூன்றி இருக்கும் நேர்மையான கற்பனைத் திறனைத் தூண்டி விடும் புலவர் அவன் அந்தணரை ஓம்பி அறம் காத்த பான்மையைச் சிறப்பாகச் சொல்லி விடுகிறார்!!

புலவர் ஒரு கோடிட்டுக் காட்டி அவன் அறம் வளர்த்த பான்மையைச் சொற்களால் சுற்றி வளைத்துக் காட்டுகிறார்.

வாழ்க அந்தணர்! வாழிய அறம் வளர்த்த மன்னர் குலம் !!

 

அடுத்து இறுதியாக 400ஆம் பாடலைப் பார்ப்போம்.

பாடலைப் பாடியவர் மிக அற்புதமான அரும் புலவரான கோவூர் கிழார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ புகழ் பெற்ற சோழன் நலங்கிள்ளி!

கேட்கவா வேண்டும். சொற்கள் கும்மாளம் போட்டுக் குதித்து வருகின்றன. பாடலைப் படிப்பதே ஒரு தனி சுகம்.

 

சோழன் நலங்கிள்ளி இருக்கிறானே அவன் உலகு காக்கும் உயர் கொள்கையாளன். பலர் துஞ்சும் போது (உறங்குகையில்) தான் துஞ்சான் அவன் தன் எதிரிகளை மட்டும் கடிதல் அல்லன்.

 

அவன் தன் எதிரிகளை வெல்வதோடு பசிப்ப்கையையும் வெல்பவன். அவனது நாட்டில் பசி என்று சொன்னால் அந்தப் பகைவனை உடனே அவன் வென்று விடுவான். பசியைக் கொன்று விடுவான்.

இத்துணை சிறப்புடைய அவனைப் பற்றி புறநானூற்றில் மட்டும் 12 பாடல்கள் இருப்பதில் வியப்பில்லையே!!

 

Pranayama step 2

அவன் கேள்வி மலிந்த வேள்வியையும் செய்பவன். பாடல் வரிகள் இதோ:

கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத்
துறை தொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர் நாடு கிழவோனே. (வரிகள் 19 முதல்23 முடிய)

கேள்வி மலிந்த வேள்விக்கான பல தூண்கள் நிறுவப்பட்டு யாகஙகள் நடை பெறும் நாடு.

ஆர்கலி கப்பல்கள் அகன்ற நீர்ப்பரப்பின் முகவாய் வழியே வருகின்ற நாடு.

அது தேறு நீர்ப்பரப்பை நனகு சுத்தம் செய்ய கடற்கரையில் அழகிய நகரங்கள் உள்ள நாடு.

அந்த நாட்டை ஆளும் அற்புதன் யார்?

யாணர் நாடு கிழவோன்! வளம் கொழிக்கும் நாட்டின் மன்னன் அவனே நலங்கிள்ளி!

இப்படிப்பட்ட பாடல்களை முழுதுமாக நாமே பாடிப் பொருளை நன்கு ஓர்ந்து உணர்ந்து அறிந்தால் தமிழ் நாடு வேத தேசமாக இருந்ததை நன்கு அறிந்திடுவோம்; மகிழ்ந்திடுவோம்.

இங்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நினைவு  கூர்ந்து மகிழலாம். தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரம் சேத்பதி மன்னர் முதல் கர்நாடகத்தில் இருக்கும் மைசூர் மஹாராஜாவிலிருந்து வடக்கே நெடும் தொலைவில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள மன்னர்கள் வரை இன்றும் வேத வேள்விகளை வளர்த்து அந்தணர்களைப் போற்றி வருகின்றனர்.

இது அழியாத பரம்பரையின் ஒரு தொடர்ச்சி அல்லவா!

இன்னும் சில புறநானூறுப் பாடல்கள் உள்ளன. (கட்டுரைத் தொடரில் சொல்லப்பட்டு இதுவரை விளக்கப்பட்ட ஒன்பது பாடல்களைத் தவிர) அவற்றையும் பார்க்காமல் விட்டு விட முடியுமா என்ன? தொடருவோம்!

-தொடரும்

 

 

வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!! (Post No.3321)

Written  by London Swaminathan

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 17-45

 

Post No.3321

 

 

Pictures are taken from various sources; they are only representational.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை.”

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம் உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

 

1957 ஆம் ஆண்டு மலேசிய தமிழ் முரசு பத்திரிக்கை மலரில் வெளியான ஒரு கட்டுரையில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் கலாசாரம் பற்றி தனது கருத்துகளைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிட்ட பத்திரிகையே இது எங்கள் பத்திரிக்கையின் கருத்து அல்ல என்று ஈ.வெ.ரா.வை கை கழுவிவிட்டது!

 

கட்டுரை நகலை இணத்துள்ளேன் அதை பெரிதாக்கி படிக்க இயலாதவர்களின் நலன் கருதி சில அம்சங்களை மட்டும் இங்கே மீண்டும் எழுதுகிறேன் (அவர் சொன்னபடியே)

 

இவர் தமிழ் துரோகியா? தமிழ் அன்பனா என்று வாசகர்களே  முடிவு செய்யலாம்.

தினமணியில் வந்த ஒரு பழைய செய்தி

 

திருச்சியில் பகுத்தறிவுப் பகலவர்களைப் பெற்றெடுத்த, “தாலி அறுத்த மாதர்” மகாநாட்டில் பேசிய  ஈ.வெ.ரா. திருவள்ளுவரைச் சாடியதை நாங்கள் தினமணியில் பெட்டிச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியிட்டோ . (40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தினமணி சீனியர் சப் எடிட்டராக வேலை பார்த்தபோது).

 

எங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் கரஸ்பாண்டன்ட் கோபால ஐயர், ஈ.வெ.ராவுக்கு மிகவும் பிடித்த ஐயர்களில் ஒருவர். திருச்சியில் நடந்த திராவிடக் கழக மாநாட்டு விஷயங்களை அப்படியே ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பவர்.

 

அவர் அனுப்பிய செய்தியைத்தான் நாங்கள் முதல்பக்கத்தில் பாக்ஸ் ஐயிட்டமாக BOX ITEM வெளியிட்டோம்.

 

தெய்வம் தொழாள் (குறள் 55) —– என்னும் திருக்குறளைச் சொல்லி முதல் வரிசையில் அமர்ந்த பெண்களைப் பார்த்து நிங்கள் எல்லாம் பத்தினிப் பெண்கள்தானே? என்று ஈ.வெ.ரா. கேட்டார். அதுகளும் மாடு மாதிரி தலை அசைத்து ஆமாம் சாமி போட்டன. எங்கே பார்ப்போம்; வள்ளுவன் சொல்றான்— பத்தினிப் பெண்கள் எல்லாம் பெய் என்றால் மழை பெய்யுமாம்; நீங்கள் எல்லோரும் “பெய்” என்று சொல்லுங்கள் என்றவுடன் அதுகளும் “பெய்” என்றன. மழை பெய்யவில்லை. பார்த்தீர்களா வள்ளுவனின் மூடநம்பிக்கை என்று சொல்லி ஈ.வெ.ர. உரையை முடிக்க அந்தப் பெண்கள் மூஞ்சியில் ஈ ஆடவிலை. இப்பொழுது வள்ளுவன் சொன்னது தப்பா? அல்லது அதுகள் எல்லாம் பத்தினிகள் இல்லையா– என்ற ஒரு தரும சங்கடமான நிலையில் மகளிரைத் தள்ளிவிட்டார் பெரியார்.

 

கீழே உள்ளதைப் படியுங்கள் இன்னும் வேடிக்கை பார்க்கலாம்:—

 

xxxxx

 

“மொழி என்பது மனிதனுக்கு அவ்வளவு ஒரு முக்கிய சாதனம் அல்ல. இயற்கையானதும் அல்ல. அதற்கு ஒரு கட்டாயமும் தேவை இல்லை”.

xxxxx

 

நமக்கு சொந்த மொழி என்பது பிறந்த ஜாதியின் காரணமாக. எனக்குக் கன்னடம். மற்றும் சிலருக்குத் தெலுங்கு. மற்ற தமிழ்நாட்டுப் பெரு ம்பாலான மக்களுக்குத் தமிழ்.

 

xxxxx

 

தமிழ்நாடு நம் சொந்த நாடு. ஆனாலும் அட்சி தமிழர்கள் அல்லாத அந்நியர்களுடைய ஆட்சியாக இருப்பதால் அந்த அந்நியர்கள் பலர் ஒன்று சேர்ந்து நம்முடைய நாட்டை அடக்கி ஆள்பவர்களாக இருப்பதனால் — இந்தி மொழிதான் அட்சி மொழியாகவும் போதனா மொழியாகவும்……………… இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதுமான சம்பவமுமாகும்.

xxxx

காலம்சென்ற ஐக்கோர்ட் ஜட்ஜ் சதாசிவ ஐய்யர் குமாரர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையில் மொழி என்னும் தலைப்பில்   (1939 ஆம் ஆண்டில் என்று ஞாபகம்) பேசியிருக்கிறேன். ஆங்கில எழுத்துக்களையே தமிழ் நெடுங்கணக்காக, தமிழ் அகரவரிசையாக எடுத்துக்கொள்ளலாமென்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாமென்றும் சொன்னதோடு மற்றும்,

ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாகும் காலம் ஏற்பட்டால்தான் மிகவும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.

 

xxx

“இங்கிலீஷ் மொழியே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நீங்கள் பேசியவுடன் எல்லோரும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் யாராவது இப்படிப் பேசியிருந்தால் கூட்டத்தில் பெரிய கலாட்ட செய்திருப்பார்கள் என்று 6,7 வருடங்களுக்கு முன் நடந்த இந்தி எதிர்ப்பு மகாநாட்டிற்குப் பிறகு சி.என். அண்ணாதுரை என்னிடம் கூறினார்.

xxx

 

நான் ஆங்கிலம் ஆட்சி மொழியாக வேண்டும் என்று சொன்னவுடம், மொழி வெறியர் சிலர், நீ யாருக்குப் பிறந்தாய்? என்று கேட்டனர்.

 

அந்த மொழியைப் பேசவேண்டும் என்று சொல்லுவது நாம் ஆங்கிலேயனுக்குப் பிறந்ததாகும் என்றால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு ரயில், ஆகாய விமானம், ரேடியோ, டெலிபோன் , மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையது என்று தெரிந்து அனுபவிக்கிறோம். இதனால் எத்தனை முறை ஆங்கிலேயனுக்குப் பிறந்தோம் என்பதை சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதனால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாக மாட்டோம் என்று சொல்லுவேன்.

 

தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம் பண்பாடு மூலமோ நாம்  உலக மக்கள் முன்னனி வரிசையில் ஒருநாளும்  இருக்கமுடியாது.

இன்றைய நிலமையைவிட வேகமாக முன்னேறவேண்டுமானால் ஆங்கிலம்தான் சிறந்த சாதனம்.

 

ஆங்கிலமே அரசியல் மொழியாகவும் போதனா மொழியாகவும் இருக்க வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங் கணக்காவது அவசியம்.

ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம்பயத்தக்கது

 

என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரமே இல்லை. அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை இல்லாமல் தமிழனுக்கு என்று ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது ஆரிய வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது மிகவும் அருமையாகதான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்துக்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பயனைக் கொடுத்திருக்கிறது. விஞ்ஞாநதிற்கு சிறிதும் பயன்படத்தக்கதாய் இல்லை. அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை.

 

தமிழனின் பேச்சு மொழி”, “தாய் மொழி தமிழ்” — என்பதைத் தவிர தமிழுக்கு வேறு உலக முக்கியத்துவம் எதும் இருப்பதாக எனக்குத் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்கால நிலச் சின்னங்களாகவே காணப்படுகின்றனர்.”

 

–SUBHAM–